திங்கள், 10 ஆகஸ்ட், 2026

சீனாவில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

பலத்த மழையினால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்திற்கு மத்தியில், 'டால்பின்' (Dolphin) சூறாவளி கிழக்குச் சீனாவில் கரையைத் தொட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 

ஜெஜியாங் (Zhejiang) மாகாணத்தின் கடலோர நகரமான வென்ஜோ (Wenzhou), 9 லட்சத்திற்கும் அதிகமான மக்களை இடம்பெயரச் செய்ததாகவும், 1,500-க்கும் மேற்பட்ட அவசரக்கால முகாம்களைத் திறந்ததாகவும் தெரிவித்துள்ளது. அண்டை மாகாணமான ஃபுஜியானில் (Fujian), அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசித்த 98,900 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

ஷாங்காயில், ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, அபாயகரமானதாகக் கருதப்படும் பகுதிகளில் இருந்து 215,600 பேர் வெளியேற்றப்பட்டனர். 

இது முன்னர் அறிவிக்கப்பட்ட 30,300 என்ற எண்ணிக்கையை விட கணிசமாக அதிகமாகும். ஷாங்காயின் மையத்தில் உள்ள ஒரு வானிலை நிலையம், திங்கட்கிழமை காலை 7 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 313 மி.மீ மழையைப் பதிவு செய்தது. 

இது 150 ஆண்டுகளுக்கும் மேலான பதிவுகளில் பதிவான மிக அதிகபட்ச 24 மணி நேர மழையாகும். நகரில் உள்ள மற்றொரு நிலையம் கிட்டத்தட்ட 400 மி.மீ மழையைப் பதிவு செய்தது. நகரின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வுகாங் மாளிகையைச் சுற்றியுள்ள தெருக்களில் வெள்ளம் சூழ்ந்ததைக் காட்டும் காணொளிகள் பரவியதால், "ஷாங்காய் கடலாக மாறுகிறது" என்ற ஹேஷ்டேக் சீன சமூக ஊடக தளமான வெய்போவில் பிரபலமாகத் தொடங்கியது. 

வெள்ளிக்கிழமை மாலை முதல் திங்கட்கிழமை காலை வரை ஜெஜியாங் முழுவதும் பதிவான சராசரி மழையளவு 173 மி.மீ-ஐ எட்டியது. இது லெகிமா மற்றும் பாவி உள்ளிட்ட முந்தைய பெரிய புயல்களின் போது காணப்பட்ட அளவுகளை விட அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 

 டால்பின் புயல் திங்கட்கிழமை காலை 5 மணிக்குள் வெப்பமண்டல புயலாக வேகமாக வலுவிழந்தது. ஆனால், புயல் தொடர்ந்து வடக்கு நோக்கியும் மேலும் உள்நாட்டிற்குள்ளும் நகர்ந்ததால், கிழக்கு மற்றும் மத்திய சீனாவின் பெரும் பகுதிகளில் கனமழை பெய்யும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டது. 

இது வடக்கு நோக்கி ஷான்டாங் வரை பரவி, ஹெனான், ஹுபேய், அன்ஹுய், ஜியாங்சு, ஜெஜியாங் மற்றும் ஷாங்காய் ஆகிய மாகாணங்களையும் பாதிக்கும்.

உயர்தரப் பரீட்சை சிறப்பு போக்குவரத்து சேவை!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக இன்று முதல் சிறப்புப் போக்குவரத்து சேவைகள் இயக்கப்படவுள்ளன. 

இதற்காக சுமார் 1,700 “சிசு செரிய” பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரந்த தெரிவித்துள்ளார்.

 அதன்படி, உயர்தரப் பரீட்சை முடிவடையும் வரை பாடசாலைப் பேருந்து சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.அத்தோடு, பரீட்சை நடைபெறும் காலத்தில் பாடசாலைப் பேருந்து சேவைகள் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ச்சியாக இயங்குவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெஹிவளை துப்பாக்கிச் சூடு - துப்பாக்கிதாரி கைது

தெஹிவளை, கடவத்தை வீதிப் பகுதியில் நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். 

ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் அத்துருகிரிய, ஹபரக்கட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இச்சந்தேபர் கைது செய்யப்பட்டுள்ளார். 


 இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நபர் ஆவார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சாகர காரியவசம் கைது!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் தொடர்பாக ஒரு வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று (10) வந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார். 

 பொலிஸ்மா அதிபருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தது மற்றும் பொதுமக்களிடையே ஜனாதிபதியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் கருத்துக்களைத் தெரிவித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையான நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொலிஸ்மா அதிபர் தொடர்பாகத் தான் கூறிய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளதாகச் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் கடுமையான நிபந்தனை!!

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான ஒப்பந்தம் எட்டப்படாத நிலையில், அதைத் திறப்பதற்கு ஈரான் கடுமையான புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது; அதேவேளையில், தனது கப்பல் ஒன்று ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்கானதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்கா தனது "நடத்தையைச் சரிசெய்து கொள்ளும்" வரை ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது என்று ஈரானின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான 'உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில்' (Supreme National Security Council) அறிவித்துள்ளது. 

இந்த அமைப்பின் செயலாளரும், இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) தளபதியுமான முகமது பாகர் ஜோல்கதர் வெளியிட்ட அறிக்கை ஒன்றை ஈரானின் அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா இனி ஒருபோதும் ஈரானை அச்சுறுத்தக்கூடாது என்றும், ஈரானுடனும் அப்பகுதியில் உள்ள அதன் ஆயுதமேந்திய கூட்டாளிகளுடனும் நடத்தி வரும் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை அமெரிக்கா நீக்க வேண்டும் மற்றும் அப்பகுதியிலிருந்து தனது ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும். மேலும், போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரானுக்கு "முழுமையான இழப்பீடு" வழங்க வேண்டும், பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்களை "எந்த நிபந்தனையுமின்றி" விடுவிக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடல்வழிப் பாதையின் மீதான தடையை நீக்குவதற்கு முன்னதாக, அது தொடர்பான ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒப்பந்தம் ஒன்றை விரும்பும் அமெரிக்காவிடமிருந்து இது குறித்து உடனடி கருத்து எதுவும் வெளியாகவில்லை. 

ஜூன் மாதம் கையெழுத்தான இடைக்கால ஒப்பந்தத்தின்படி, பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கான கால அட்டவணை மற்றும் இழப்பீடு தொடர்பான திட்டம் ஆகியவை இறுதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமையும்; மேலும், முடக்கப்பட்ட சொத்துக்கள் குறித்தும் பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்படும். கப்பல் போக்குவரத்து, குறிப்பாக "கடந்து செல்லும் வழித்தடத்தை நிர்ணயிப்பது" தொடர்பான ஒப்பந்தத்தை எட்டுவதற்குத் தாங்கள் நெருங்கியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி சனிக்கிழமையன்று தெரிவித்தார். 

இருப்பினும், அந்த நீர்வழியை மீண்டும் திறப்பது என்பது பிற நிபந்தனைகளைப் பொறுத்தே அமையும் என்று சமூக ஊடகங்களில் அவர் குறிப்பிட்டார்; மேலும், இடைக்கால ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியதே தற்போதைய சூழலுக்குக் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். 

இந்தப் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகித்து வரும் ஓமன் நாடு, அது குறித்து மிகக் குறைந்த அளவிலேயே கருத்துக்களைத் தெரிவித்து வந்துள்ளது. இந்நிலையில், சனிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், பேச்சுவார்த்தைகள் "நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான சூழலில்" தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஓமன் தெரிவித்ததுடன், அப்பாதையில் உள்ள கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையும் கண்டித்தது.

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் 100 ஆவது நாளைக் கடந்து இன்றைய தினம் சனிக்கிழமை (2026 ஓகஸ்ட் 08) 101 ஆவது நாளாக நீதவான் நீதிமன்றக் கண்காணிப்பில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. 

இத் தொடர் அகழ்வுப் பணிகளில் இதுவரையில் மொத்தமாக 515 மனித என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 506 என்புக் கூடுகள் உத்தியோகபூர்வமாக முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கமைய, 47 ஆம் நாளான இன்றைய தின அகழ்வின் போது புதிதாக 08 மனித என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 05 என்புக் கூடுகள் சான்றுப் பொருட்களாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. 

 அத்துடன், எழுமாறாகத் தோண்டப்பட்ட 2 சோதனைக்குழிகளில் ஒன்றிலிருந்து மனித என்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என 101 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது, அடையாளம் காணப்பட்ட 515 என்புக் கூடுகளில் 506 என்புக் கூடுகள் நீதிமன்றக் கட்டுக்காவலில் வைப்பதற்காக முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.


தலை இல்லாது, கைகள் கட்டியவாறான எலும்புக்கூடு செம்மணியில் அடையாளம்… செம்மணி - சித்துப்பாத்தி மனிப் புதைகுழியில் இன்று நடந்த அகழ்வின் போது கழுத்துடன் துண்டிக்கப்பட்டு, தலை (மண்டையோடு) இல்லாத நிலையில், கைகள் கட்டியாவாறான மனித எலும்புக்கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த எலும்புக்கூட்டு தொகுதியின் இரு கைகளும் கட்டியவாறு நெஞ்சோடு அணைத்த நிலையில் காணப்படுகின்றது.

தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கப்போகும் கிராம உத்தியோகத்தர்கள்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். 


 அதன்படி, பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) ஆகிய இரு தினங்களில் பணிக்கு சமூகமளிக்காமல் இருக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர்.

 கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்தார்.கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த 8 வருடங்களாக உயர்த்தப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

2024ஆம் ஆண்டில், குறித்த கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீற்றர் எரிபொருளுக்கு நிகரான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது. 

 இருப்பினும், இதுவரை அக்கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) சுகயீன விடுமுறை அறிவித்து பணிக்குச் சமூகமளிக்காது தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஈரோடு வஉசி பூங்காவில் 9 ஆண்டுகளாக அடைக்கப்பட்ட சாலைகள் திறப்பு

ஈரோடு வஉசி பூங்காவில் 9 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த சாலைகள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் வஉசி பொழுதுபோக்கு பூங்கா மற்றும் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா அருகே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் மாவட்ட விளையாட்டு மைதானமும், விளையாட்டு மாணவிகள் விடுதியும், அரசு அருங்காட்சியகமும், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பழமையான மகாவீர ஆஞ்சநேயர் கோயிலும் உள்ளது. 

நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. பூங்காவின் நுழைவாயில் பகுதியில் சத்தியமங்கலம் சாலையையும், பவானி சாலையையும் இணைக்கும் வகையில் பொது வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடத்தை பூங்காவிற்கு வரும் மக்களும், ஆஞ்சநேயர் கோயிலுக்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும் பயன்படுத்தி வந்தனர். 

நான்கு சக்கர வாகனங்களுக்கு இந்த வழியாக செல்ல தடை விதித்து, இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இதனால், பூங்காவின் சுற்றுப்புற பகுதிகளில் இருக்கும் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து இருந்தது. 

வஉசி பூங்காவின் மேம்பாட்டு பணி மற்றும் கொரோனாவை காரணம் காட்டி பூங்காவை இணைக்கும் 2 சாலைகளின் நுழைவு பகுதிகளிலும் இரு சக்கர வாகனங்களில் மக்கள் செல்ல மாநகராட்சி மூலம் தற்காலிக தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக, மேம்பாட்டு பணிகளின்போது, வாகனங்கள் உள்ளே வராமல் இருக்க பிரதான வழித்தடத்தில் படிக்கட்டுகள் கட்டப்பட்டன.

சத்தியமங்கலம் சாலையில் இருந்து வரும் நுழைவு பகுதியில் இரும்பு கம்பியால் தடுப்பு அமைத்தும், பவானி சாலையில் இரும்பு கதவு போட்டும் தடுத்தனர்.இது பொதுமக்களுக்கு மட்டுமின்றி பூங்காவுக்கு வரும் மக்களுக்கும், அருங்காட்சியகத்திற்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், ஆஞ்சநேயர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் பெரும் இடையூறாக இருந்து வந்தது. 

இந்த தடையை நீக்கி, பழையபடி இரு சக்கர வாகனங்களில் அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அந்த வார்டு கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார், மண்டல தலைவர் பழனிசாமி ஆகியோர் கோரிக்கை விடுத்து பேசினர். வஉசி பூங்கா வளாகத்தில் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மகாவீர ஆஞ்சநேயர் கோயில் சார்பில், பூங்கா நுழைவாயில் அடைக்கப்பட்டதற்கு மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் பெறப்பட்ட உத்தரவினை, மேற்கொள்காட்டி மாநகராட்சியில் மனு அளித்தனர்.

இந்த நிலையில், பல கட்ட கோரிக்கைக்கு பின், மாநகராட்சி நிர்வாகம் வஉசி பூங்காவில் தடை செய்யப்பட்ட இரண்டு சாலைகளின் தடையை நீக்கி முழுவதுமாக திறந்து விட முடிவு செய்து தற்போது சாலைகளை திறந்து விட்டுள்ளது. மேலும், வாகனங்கள் செல்லாமல் சாலைகளில் அமைக்கப்பட்ட படிக்கட்டுகளையும் பாதியாக இடித்து, வாகனங்கள் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சனி, 8 ஆகஸ்ட், 2026

உயர்தர மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்!!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 மத்திய நிலையங்களில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.


 பரீட்சைக்காக பாடசாலை விண்ணப்பதாரர்கள் 264,496 பேரும், தனியார் விண்ணப்பதாரர்கள் 107,814 பேரும் அடங்கலாக மொத்தம் 372,310 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளனர். பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் அந்தந்த அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். 

 பரீட்சை மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தங்களது கையொப்பத்தை முறைப்படி சான்றொப்பம் செய்து கொள்வது கட்டாயமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அனுமதி அட்டை தொலைந்து போயிருந்தால், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து அதை மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

பரீட்சையின் போது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த முடியும்.

தேசிய அடையாள அட்டை தொலைந்துபோயிருந்தால், தற்காலிக அடையாள அட்டையாக தபால் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் இரண்டு புகைப்படங்களை பாடசாலை விண்ணப்பதாரர்கள் அதிபர் மூலமும், தனியார் விண்ணப்பதாரர்கள் கிராம உத்தியோகத்தர் மூலமும் சான்றொப்பம் செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 பரீட்சை கால அட்டவணையை தீவிரமாகக் கவனத்திற் கொண்டு, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சைத் திணைக்களம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

 மேலும் கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது புளூடூத் உள்ளிட்ட எந்தவொரு இலத்திரனியல் சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வர முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பரீட்சை விதிகளுக்கு அமைவாகச் செயல்பட்டு பரீட்சை மோசடிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும், கடந்த ஆண்டுகளிலும் பரீட்சை மோசடிகள் காரணமாக பல மாணவர்களின் முடிவுகள் இடைநிறுத்தப்பட வேண்டியிருந்ததாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். 

 ஏதேனும் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்ப்பட்டால், அதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கவும் பரீட்சைத் திணைக்களம் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்க செனட்டில் அதிரடி சட்டமூலம் நிறைவேற்றம்!

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கும் சட்டமூலம் அமெரிக்க செனட் அவையில் (U.S. Senate) 86-11 என்ற பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 "லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026" என அழைக்கப்படும் இந்தச் சட்டம், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க வழிவகை செய்கிறது. 

இந்த நடவடிக்கை நிறைவேற்றப்பட்டால், சீனா மற்றும் இந்தியா உட்பட ரஷ்ய எரிபொருளை இறக்குமதி செய்யும் குறைந்தது ஐந்து முக்கிய நாடுகளைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கத்திய தடைகளில் இருந்து தப்பிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரகசிய கடல்சார் விநியோக வலையமைப்புகளையும் இந்த சட்டமூலம் குறிவைக்கிறது. செனட் சபையில் 86–11 என்ற வாக்குக் கணக்கில் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. 

இது அடுத்து பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்படும். பிரதிநிதிகள் சபையின் கோடைக்கால விடுமுறை காரணமாக, அங்கு ஓகஸ்ட் மாதத்திற்குப் பிறகு (செப்டம்பர் தொடக்கத்தில்) தான் வாக்கெடுப்பு நடைபெறும். 

 ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் போர் நடவடிக்கைகளுக்குச் செல்லும் பணப்புழக்கத்தைத் தடுப்பதே இதன் முதன்மை நோக்கம் என அமெரிக்க அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 

 உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி இந்த நடவடிக்கையை வரவேற்று அமெரிக்க செனட் சபைக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

சவூதி ரியாத்மீது ஹூதி தாக்குதல்!!

சவூதி அரேபியா மீது ஏமனின் ஹூதி அமைப்பு நேற்று (ஆகஸ்ட் 6) நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 11 பேர் காயமடைந்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதோடு, ஹூதியுடன் ஈரானின் ஆதரவுடன் இயங்கும் மற்ற ஈராக்கிய அமைப்புகள் ஒன்றாகத் திட்டமிட்டுத் தங்கள்மீது தாக்குதல் நடத்தவிருப்பது கிட்டத்தட்ட உறுதி என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இரத்தினபுரி - குருவிட்ட சிறையில் பதற்றம்!

குறைந்தபட்ச அதிகாரத்தை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குருவிட்ட சிறைச்சாலையில் நிலவிய பதற்றமான சூழ்நிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். 

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் இன்று (7) காலை இடம்பெற்ற மோதலில் 2 பேர் பலியான நிலையில் 4 கைதிகள் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு குறித்த சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இன்று (7) காலை மீண்டும் அந்த சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸாரினால் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த சம்பவத்தில் 4 கைதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 இந்த சம்பவத்தின் போது குருவிட்ட சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கைதிகளால் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பல்லன்சேன சிறைச்சாலை கைதிகள் போராட்டம்!

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கைதிகள் சிலர் கூரையின் மீது ஏறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலையைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் சிலர் பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி!!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட 44 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை (2026 ஓகஸ்ட் 05) நீதவான் நீதிமன்றக் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், புதிதாக 08 மனித என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 08 என்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தின் உத்தியோகபூர்வ உத்தரவுக்கு அமைய, தொல்லியல் மற்றும் மருத்துவ நிபுணர்களின் தீவிர கண்காணிப்பில் இப் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியிருந்தது.

 அதற்கமைய, 44 ஆம் நாளான இன்றைய தின அகழ்வுப் பணியின் போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 8 என்புக் கூடுகள் சான்றுப் பொருட்களாக உத்தியோகபூர்வமாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், இன்றைய தின அகழ்வுச் நடவடிக்கைகளின் போது புதிதாக மேலும் 08 மனித என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றுக்கான அகழ்வுப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 செம்மணிப் புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என இதுவரையில் மொத்தம் 98 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இக் காலப்பகுதியில் மொத்தமாக 491 மனித என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 489 என்புக் கூடுகள் உத்தியோகபூர்வமாக முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உளைச்சலில் மைத்திரி கனடாவுக்குத் தப்பியோடிய மருமகள்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவின் மனைவி கனடாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தஹாம் சிறிசேன மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு எதிராக 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

 இந்த விவகாரத்தில் மற்றொரு பிரபல அரசியல்வாதியின் மகனுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது.தஹாம் சிறிசேனவும் நாட்டை விட்டுத் தப்பியதாகச் செய்திகள் பரவிய நிலையில், அவர் தற்போது கொழும்பிலேயே இருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்செய்தியை வெளியிட்ட ஊடக நிறுவனத்துடன் மைத்திரிபால சிறிசேன தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். 

 இவ்வழக்கில் பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்தத் தீர்ப்பினால் மைத்திரிபால சிறிசேன பெரும் கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

 பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகனின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட மைத்திரிபால சிறிசேன, மிகவும் மன உளைச்சலுடனும் கவலையுடனும் காணப்பட்டுள்ளார்.

அண்ணன் சீராக 8 கிராம் தங்கம் பட்டுப்புடவை !!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றி வரும் நிதியமைச்சர் மரிய வில்சன், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூக நலனை மையமாகக் கொண்டு பல்வேறு பிரம்மாண்டமான திட்டங்களை அறிவித்துள்ளார். 

தொழில்நுட்ப வளர்ச்சி, விளையாட்டுத் துறை மேம்பாடு மற்றும் உயர்கல்வி சீரமைப்பு என அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை பதிவு செய்யும் வகையில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

அண்ணன் சீராக 8 கிராம் தங்க நாணயம் & பட்டுப்புடவை இன்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில், திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மிக முக்கிய மகிழ்ச்சியான தருணம். 

பெண்கள் அனைவரையும் தன் குடும்பத்தில் ஒருவராகக் கருதி, அவர்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவையை அண்ணன் சீராக’நமது அரசு வழங்கவுள்ளது என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். இத்திட்டத்திற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளின் ஆரம்பகால பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்ய மாநிலம் முழுவதும் 500 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

கல்வி மற்றும் டிஜிட்டல் புரட்சி டிஜிட்டல் மாற்றத்திற்கு ஏற்ப தமிழகத்தை அதிநவீன மாநிலமாக உருவாக்கும் இலக்கின் கீழ், பள்ளி மற்றும் உயர்கல்வித் துறைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித் துறை: ஒட்டுமொத்தமாக ரூ.44,527 கோடி ஒதுக்கீடு. உயர்கல்வித் துறை: ரூ.8,393 கோடி ஒதுக்கீடு. 

வெற்றி மடிக்கணினி திட்டம்: கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை உயர்த்த ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் மடிக்கணினிகள் வழங்கப்படும். AI பாடத்திட்டம்: உலகத் தரத்திலான செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை வடிவமைக்க கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை முன்னோடிகள் அடங்கிய ‘நிபுணர் குழு’ அமைக்கப்படும். 

பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு AI திறன் பயிற்சி அளிக்கப்படும். தொழிற்பயிற்சி நிலையங்கள்: ரூ.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் (ITI) நிறுவப்படும்.

கேரள எல்லை-அட்டப்பாடி மலை உச்சியில் 1,400 கஞ்சா செடிகள் அழிப்பு!

கேரள எல்லைப் பகுதியில் உள்ள அட்டப்பாடி மலை உச்சியில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த சுமார் 1,400 கஞ்சா செடிகளை போலீசார் கண்டறிந்து பிடுங்கி அழித்தனர். தமிழ்நாடு–கேரள எல்லைப் பகுதியில் உள்ள புதூர் அருகேயுள்ள மலை உச்சியில், கூடாரம் அமைத்து தங்கி இருந்த ஒரு கும்பல் கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தது தெரியவந்துள்ளது. 

கேரள மாநிலத்தில் தற்போது போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 'ஆபரேஷன் துபா' என்ற பெயரில் ரகசிய போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், பாலக்காடு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தமிழ்நாடு–கேரள எல்லைப் பகுதியில் உள்ள அட்டப்பாடி மலை உச்சியில் கஞ்சா தோட்டம் அமைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு, கஞ்சா தோட்டத்தை கண்டுபிடித்தனர். 

 பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செடிகள் அனைத்தும் சுமார் ஐந்து மாதங்கள் வயதுடையவை என தெரியவந்துள்ளது. அவற்றை அறுவடை செய்வதற்காக சம்பந்தப்பட்ட கும்பல் அப்பகுதியிலேயே கூடாரம் அமைத்து தங்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் அனைத்து கஞ்சா செடிகளையும் முழுமையாக பிடுங்கி, அங்கேயே தீ வைத்து எரித்து அழித்தனர். 

 மேலும், தமிழ்நாடு–கேரள எல்லைப் பகுதியில் உள்ள மலைத் தொடர்களில் வேறு எங்காவது கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளனவா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலை குளவி- 50 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

குளவி கொட்டுக்கு இலக்காகி திருகோணமலை பாடசாலை ஒன்றின் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

திருகோணமலை திவுல்வெவ மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைக் கட்டடத்தில் இருந்த குளவிக் கூடு கலைந்தமையினால் மாணவர்கள் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த மாணவர்கள் சிகிச்சைக்காக மஹதிவுல்வெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் மூன்று மாணவிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

புதன், 5 ஆகஸ்ட், 2026

ஆங்கிலக் கால்வாயில் 160 அகதிகளுடன் பயணித்த படகு தீயில்.

பிரான்ஸிலிருந்து சுமார் 160 அகதிகளை ஏற்றிக்கொண்டு எல்லை கடக்க முயன்ற அதிகளவிலான பயணிகளையுடைய சிறிய ரப்பர் படகொன்று (Dinghy) ஆங்கிலக் கால்வாயில் (English Channel) திடீரெனத் தீப்பற்றி மூழ்கியதில் பாரிய உயிர்ச்சேதத்தைத் தடுக்கும் நோக்கில் பிரெஞ்சு மற்றும் பிரித்தானியக் கடலோரக் காவல் படையினர் அவசர மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


பிரான்ஸின் புலோம்-சுர்-மேர் (Boulogne-sur-Mer) கடற்கரைக்கு அப்பால் செவ்வாய்க்கிழமை (2026 ஓகஸ்ட் 04) அதிகாலை 6.00 மணியளவில் இச் சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரெஞ்சு எல்லைப் பகுதியில் சுமார் 160 அகதிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த படகின் இயந்திரம் (Engine) எதிர்பாராதவிதமாகத் திடீரென வெடித்துத் தீப்பற்றியுள்ளது. தீப் பிளம்புகள் படகு முழுவதும் பரவியதால் ரப்பர் படகு சேதமடைந்து கடலுக்குள் மூழ்கத் தொடங்கியது. 


அதில் பயணித்த குழந்தைகள், பெண்கள் உட்பட அனைத்து அகதிகளும் கடும் குளிர்கொண்ட கட நீரில் தூக்கி வீசப்பட்டுக் மூழ்கியுள்ளனர். தகவல் அறிந்தவுடனேயே பிரித்தானியாவின் அரச தேசிய படகு மீட்பு நிறுவனம் (RNLI), பிரித்தானியக் கடலோரக் காவல் படை (UK Coastguard) மற்றும் பிரெஞ்சு கடலோரக் காவல் படை என்பன இணைந்து கூட்டு மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் ஹெலிகொப்டர்கள் மற்றும் மீட்புப் படகுகள் மூலம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.தலைநகர் சென்னையில் மின்பகிர்மான திறன் ரூ.1,390 கோடியில் வலுப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் பொருத்தப்படும்.

 மாநிலத்தின் பிற பகுதிகளில் 50 லட்சம் தொழில், வணிக நுகர்வோருக்கு ஸ்மார்ட் மின்மீட்டர் பொருத்தப்படும். ரூ.16 கோடி நிதியுடன் தமிழ்நாடு பனை மேம்பாட்டு கழகம் நிறுவப்படும். சென்னையை உலக் தரத்திற்கு உய்த்தும் ஆய்வு பணிகளுக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் மரிய வில்சன். நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு பட்ஜெட்டில் ரூ.8,252 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

சென்னை நகரில் 20 ஸ்மார்ட் பார்க்கிங் அமைக்கப்படும். முதல்வரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாசென்னையில் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், பொது இடங்கள் பசுமையாக்கப்படும். சென்னையில் 5 ஆண்டுகளில் சமமான மற்றும் தடையற்ற குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும். மேலும் கூவம், அடையாறு ஆறுகளை தூய்மைப்படுத்தி மேம்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்படும். 

தொடர்ந்து இந்த 2 ஆறுகளிலும் படகு சவாரி, நதிக்கரை நடைபாதை மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்றார் நிதி அமைச்சர். மேலும் திட்டங்களுக்கு AI மூலம் விரைவாக அனுமதி தர ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புகளில் EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மானியம் வழங்கப்படும், இதற்கு ரூ.5 கோடி ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கப்ட்டுள்ளது.

 நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.2,117 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குறைந்த குடும்ப வருமானம் மற்றும் இளைஞர்களுக்கு தரமான வீடுகள் கட்டி தரப்படும்.

சென்னையில் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், பொது இடங்கள் பசுமையாக்கப்படும். சென்னையில் 5 ஆண்டுகளில் சமமான மற்றும் தடையற்ற குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும். 

மேலும் கூவம், அடையாறு ஆறுகளை தூய்மைப்படுத்தி மேம்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்படும். தொடர்ந்து இந்த 2 ஆறுகளிலும் படகு சவாரி, நதிக்கரை நடைபாதை மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்றார் நிதி அமைச்சர். 

மேலும் திட்டங்களுக்கு AI மூலம் விரைவாக அனுமதி தர ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளில் EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மானியம் வழங்கப்படும், இதற்கு ரூ.5 கோடி ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கப்ட்டுள்ளது.

Thank You Google

Thank You Google
Thanks