முல்லைத்தீவு: வட்டுவாகால் விகாரைக்குக் கீழே அகழ்வுப் பணிகளை மேற்கொண்டால், செம்மணி புதைகுழியை விடப் பல மடங்கு பெரியதொரு மனிதப் புதைகுழி அடையாளம் காணப்படும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழியில் பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் எனத் தமிழ்க் குடும்பங்கள் முழுவதுமாகக் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளனர்.
இது இலங்கையின் மிகப்பெரிய மனிதப் பேரவலத்திற்கான நிலையான சாட்சியாக விளங்கும் நிலையில், இதற்கு இலங்கை அரசும் சர்வதேச நாடுகளும் என்ன பதில் கூறப்போகின்றன என்று அவர் கேள்வி எழுப்பினார்.
செம்மணி புதைகுழி விவகாரம் மற்றும் வடக்கு, கிழக்கில் உள்ள ஏனைய சந்தேகத்திற்குரிய புதைகுழிகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“தமிழ் இனத்தின் மீதான திட்டமிட்ட அழிவை இலங்கை அரசின் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தொடர்ச்சியாகச் செய்து வந்துள்ளனர். முன்னாள் ஆட்சியாளர்கள் எமது இனத்தை வன்முறையாக அழித்தமைக்கான அசைக்க முடியாத சாட்சிகள் இயற்கையின் நீதியால் இப்போது ஒவ்வொன்றாக வெளிப்பட்டு வருகின்றன.
செம்மணியில் தற்போதைய அகழ்வுகள் மூலம் வெளிவரும் உண்மைகள் உலகத்தையே உலுக்கியுள்ளன. தமிழர் தாயகப் பகுதிகளில் இன்னும் எத்தனையோ இடங்களில் இதுபோன்ற மனிதப் புதைகுழிகள் இரகசியமாக மூடிமறைக்கப்பட்டுள்ளன.
அவற்றை முறையாகத் தோண்டத் தொடங்கினால், இன்னும் பேரதிர்ச்சியைத் தரும் வகையில் மனித எலும்புக் குவியல்கள் தொடர்ந்து கிடைக்கும்.
குறிப்பாக முல்லைத்தீவு வட்டுவாகாலில் உள்ள விகாரைக்குக் கீழே அகழ்வு செய்தால், செம்மணியை விடப் பெரிய புதைகுழி வெளிச்சத்துக்கு வரும். இதற்காக விகாரையை உடைக்க வேண்டிய அவசியமில்லை.
நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி நிலத்தடியை ஸ்கேன் செய்வதன் மூலமே அங்கு எத்தனை ஆயிரக்கணக்கான எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டுள்ளன என்பதைத் துல்லியமாக அறிய முடியும்.
இதேபோல் கேப்பாப்பிலவு போன்ற இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் பாரிய புதைகுழிகள் இருக்கலாம் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் இன்றும் வாழ்கின்றனர்.
வடக்கு-கிழக்கின் பல இடங்களில் அப்பாவிப் பொதுமக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கூட்டமாகப் புதைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகத்திற்குரிய அனைத்துப் புதைகுழிகளும் சர்வதேச கண்காணிப்பின் கீழ் முழுமையாகத் தோண்டப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
சர்வதேச சமூகம் நேரடியாகத் தலையிட்டு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குப் பாரபட்சமற்ற நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்பதே எங்கள் முக்கிய எதிர்பார்ப்பு!
இலங்கையில் குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத வழிகளில் ஈட்டப்பட்ட சொத்துக்களைக் கையகப்படுத்தும் அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கைகளின் கீழ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் அவரது முக்கிய நண்பரான கே. புஷ்பகுமார் (இனியபாரதி) ஆகியோரின் சொத்துக்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே பல்வேறு கடத்தல்கள், ஆள் கடத்தல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இவர்களின் சட்டவிரோத சொத்துக் குவிப்பு மற்றும் நிதிப் பரிமாற்றங்கள் குறித்து சி.ஐ.டி அதிகாரிகள் பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் இவர்களின் வங்கி கணக்குகளும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு முன்னதாக, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரஜீவ் எனப்படும் நபரின் பல கோடி ரூபாய் பெறுமதியான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள், சொகுசு வாகனங்கள் என்பன சட்டவிரோத பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டின் கீழ் காவற்துறையினரால் அதிரடியாக முடக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
ரஜீவின் சொத்துக்கள் முடக்கப்பட்டதைத் தொடர்ந்தே, தற்போது பிள்ளையான் மற்றும் இனியபாரதி ஆகியோரை நோக்கியும் இந்தச் சொத்து விசாரணைப் வலை விரிவடைந்துள்ளதாகத் பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிராம உத்தியோகத்தர்கள் இன்று (24) முதல் அனைத்து வகையான களப்பணிகளில் இருந்தும் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அக்கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க, தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிடில், எதிர்வரும் 30ஆம் திகதி சுகவீன விடுமுறையைப் பதிவு செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பல வருடங்களாக கிராம உத்தியோகத்தர்கள் கோரி வரும் பயணச் செலவுகளுக்கான போதிய எரிபொருள் கொடுப்பனவை வழங்குவது உள்ளிட்ட சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கிராம உத்தியோகத்தர்களின் உத்தியோகபூர்வ கடமைகளை மேற்கொள்வதற்குத் தேவையான வசதிகள் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அதிகாரிகள் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும் என்றும் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலன், அவரது மனைவி ஆகியோர் அவர்களது குழந்தையுடன் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (23) தம்பதியினர் வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம், சாவகச்சேரி நோக்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளும் வலான ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளும் இணைந்து இன்று (24) அதிகாலை நடத்திய கூட்டு நடவடிக்கையின் மூலம் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்படும் போது பிரதான சந்தேகநபர் முகக்கவசம் அணிந்திருந்ததுடன், அவரது மனைவி முஸ்லிம் பெண் போன்று வேடமணிந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, தான் வவுனியாவிலிருந்து குருநாகலுக்குச் சென்று, அங்குள்ள தனது மற்ற இரு பிள்ளைகளையும் பார்த்துவிட்டு பொலிஸாரிடம் சரணடையவிருந்ததாகக் கூறியுள்ளார்.
வலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படையின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல அவர்களின் முழுமையான மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சந்தேகநபர்கள் கடந்த சில நாட்களாக நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் தங்கியிருந்ததுடன், கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இவ்வாறு உயிரிழந்தவர் அம்பாறை பொது வைத்தியசாலையில் பணியாற்றி வந்த 34 வயதுடைய ஷம்யா தர்ஷனி என்ற இயல் வைத்தியர் ஆவார்.
இவருடைய காதலன் சடலத்தைக் காரில் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான காதலன் கன்னோருவ பகுதியைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியியலாளர் ஆவார். சம்பவம் நடந்த நேரத்தில் அவர் அப்பகுதியிலிருந்து தப்பியோடியிருந்தார்.
தனது சகோதரி நுவரெலியாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருப்பதாகவும், அவர் பல நாட்களாக உணவு உட்கொள்ளவில்லை என்பதால் அந்த இடத்தை சோதனையிட உதவி தேவை என்றும் கூறி, கொட்டவெவ, தலாவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 17ஆம் திகதி காலை நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதன்படி நுவரெலியா பொலிஸ் குழுவினர் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்று சோதனையிட்ட போது அங்கு யாரும் இருக்கவில்லை.
எனினும், அங்குள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பரிசோதித்த போது, கடந்த 16ஆம் திகதி இரவு 9.50 மணியளவில் குறித்த யுவதியின் காதலன் அந்த வீட்டிற்கு வருவது பதிவாகியிருந்தது.
அங்கு சுமார் 40 நிமிடங்கள் தங்கியிருந்த அவர், பின்னர் இரவு 10.30 மணியளவில் மயக்கமடைந்திருந்த யுவதியைத் தூக்கிக்கொண்டு வெளியேறியுள்ளார். அதன் பின்னர் அவர் அந்த யுவதியைக் காரில் ஏற்றிச் சென்றுள்ளார்.
பிரிட்டிஷ் பிரதமரின் ராஜினாமா, அவருக்குப் பின்வருபவருக்கு வழிவகுத்துள்ள நிலையில், மேக்கர்ஃபீல்டின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் போட்டியின்றி எண் 10-இன் சாவிகளைப் பெறக்கூடும்.நாட்டை வழிநடத்த இனி தான் சரியான நபர் இல்லை என்பதை ஒப்புக்கொண்ட கெய்ர் ஸ்டார்மர், பிரிட்டிஷ் பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு வந்த கடுமையான அழுத்தத்திற்கு இறுதியாகப் பணிந்துள்ளார்.
இதனால், ஆண்டி பர்ன்ஹாம் அவருக்குப் பின் பிரதமராகப் பொறுப்பேற்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
வெஸ்ட்மின்ஸ்டரில் நடந்த ஒரு அசாதாரணமான நாளில், அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பு 'ரிஃபார்ம் யுகே' அமைப்பிடமிருந்து வரவிருந்த அச்சுறுத்தலால் பதற்றமடைந்திருந்த தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடையே பல மாதங்களாக வளர்ந்து வந்த அதிருப்திக்குப் பிறகு, ஸ்டார்மர் தனது பதவி விலகலுக்கான கால அட்டவணையை அறிவித்தார்.
மேக்கர்ஃபீல்டின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரயிலில் வெஸ்ட்மின்ஸ்டருக்குப் பயணித்தபோது, பர்ன்ஹாம் எந்தவொரு போட்டியையும் சந்திக்காமலேயே தொழிலாளர் கட்சித் தலைவராக முடிசூட்டப்படுவார் என்பது மேலும் உறுதியானது.
இது, அரசாங்கத்தை அமைப்பதற்குத் தயாராவதற்கு அவருக்கு மூன்று வாரங்களுக்கும் சற்று அதிகமான அவகாசத்தை அளித்தது.
வெஸ் ஸ்ட்ரீட்டிங் பிரதமர் பதவிக்கு அவரை எதிர்த்துப் போட்டியிடப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகு, மகிழ்ச்சி ஆரவாரம் செய்த தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனம், பர்ன்ஹாமின் கொள்கைத் திட்டம், நைஜல் ஃபராஜின் கட்சியை எதிர்கொள்வதற்கான அவரது திட்டங்கள் மற்றும் அவரது முதல் அமைச்சரவையில் யார் இடம்பெறக்கூடும் என்பவற்றின் மீது திரும்பியது.
யாழ்ப்பாணத்தில் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச கொழும்பில் உள்ள பிரதான நீதிமன்றம் ஒன்றில் நேரில் முன்னிலையாகி, அங்கிருந்து நிகழ்நிலையில் (Online) சாட்சியமளிக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அதிரடிக் கட்டளை பிறப்பித்துள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு அரங்கேறிய இக்கொடூரக் கடத்தல் சம்பவம் தொடர்பான ஆள்கொணர்வு மனு (Habeas Corpus), நேற்று (2026 ஜூன் 19, வெள்ளிக்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் திகதி மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைத் திரட்டிப் பாரிய போராட்டமொன்றை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
இதனை முன்னின்று ஒழுங்கமைத்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் அதற்கு முதல் நாள் (டிசம்பர் 9) யாழ். ஆவரங்கால் பகுதியில் வைத்து மர்மமான முறையில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டனர்.
வெல்லம்பிட்டி நகரில் உள்ள பேக்கரி ஒன்றில் இன்று மாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீப்பரவலை கட்டுப்படுத்த 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பேக்கரியில் இன்று மாலை 4.45 மணியளவிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை வௌியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர், பிரிட்டன் மீண்டும் அந்த அமைப்பில் இணைவதை ஆதரிப்பதாக ஒரு கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.தீவிர வலதுசாரி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு கட்சிகளின் வாக்காளர்கள் கூட நெருங்கிய உறவுகளை ஆதரிக்கின்றனர் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் பிரிட்டன் மீண்டும் அந்த கூட்டமைப்பில் இணைவதை ஆதரிப்பார்கள் என்றும், அதே நேரத்தில் பெரும்பாலான பிரிட்டன் வாக்காளர்கள், தாங்கள் அக்கறை கொள்ளும் விஷயங்களுக்கு பிரெக்ஸிட் தீங்கானது என்றும், நீண்ட காலமாக நச்சுத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் சுதந்திரமான நடமாட்டம் போன்ற ஒருங்கிணைப்பு நிலைகள் உட்பட, நெருங்கிய உறவுகளை விரும்புவதாகவும் ஒரு கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.
பிரெக்ஸிட் வாக்கெடுப்பு நடந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பிய வெளியுறவு கவுன்சில் (ECFR) என்ற சிந்தனைக் குழு நடத்திய கருத்துக் கணிப்பில், 15 நாடுகளில் உள்ள பதிலளித்தவர்களில் 66% பேர், பிரிட்டன் உறுப்புரிமை பெறுவது மிகவும் நல்லது, நல்லது அல்லது "நல்லதும் அல்ல, கெட்டதும் அல்ல" என்ற யோசனையாகக் கருதுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சராசரியானது, நெருங்கிய உறவை ஆதரிப்பவர்களை (59%) அல்லது தற்போதைய நிலையைத் தொடர விரும்புபவர்களை (46%) கணிசமாக விஞ்சியது. மீண்டும் இணைவதற்கான ஆதரவு பல்கேரியாவில் 56%, பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் 59% என்ற குறைந்த அளவிலிருந்து நெதர்லாந்து மற்றும் டென்மார்க்கில் 75% என்ற அதிக அளவு வரை இருந்தது.
தீவிர வலதுசாரி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை விமர்சிக்கும் கட்சிகளின் வாக்காளர்கள் கூட, அந்த கூட்டமைப்புக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே நெருங்கிய உறவுகளை ஆதரிப்பதாகக் கூறினர்.
போலந்தின் கூட்டமைப்பு (71%), ஜெர்மனியின் AfD (58%) மற்றும் பிரான்சின் தேசிய பேரணி (58%) ஆகியவற்றின் ஆதரவாளர்களில் பெரும்பான்மையானோர் இதில் அடங்குவர்.
பல ஐரோப்பியத் தலைவர்கள் இந்தக் கருத்தைப் பிரதிபலித்துள்ளனர். பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், கதவு "எப்போதும் திறந்தே இருக்கும்" என்று கூறியுள்ளார்.
மேலும், ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், பிரிட்டன் உறுப்புரிமை பெறுவதை ஸ்பெயின் "முழுமையாக" ஆதரிக்கும் என்று கூறியுள்ளார்.
பின்லாந்தின் ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப், ஐக்கிய இராச்சியத்தை உறுப்புரிமைக்கான ஒரு வேட்பாளராக வெளிப்படையாகப் பெயரிட்டு, "ஐரோப்பாவில் எங்களுக்கு ஒரு ஐக்கிய இராச்சியத்தின் குரல் தேவை.
நாங்கள் உங்களை மிகவும் இழக்கிறோம்" என்று கூறியுள்ளார். மே மாதத்தில், ஐரோப்பிய பசுமைக் கட்சி, ஐக்கிய இராச்சியத்தை மீண்டும் சேருமாறு முறையாக அழைப்பு விடுத்தது.
ஐக்கிய இராச்சியத்தில், மே மாதம் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில், சீர்திருத்த ஐக்கிய இராச்சியத்தின் (Reform UK) ஆதரவாளர்கள் உட்பட, கட்சி வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு வாக்காளர்களும், பிரெக்ஸிட் நாட்டின் மீதும், ஒரு தசாப்தத்திற்கு முன்பு விவாதத்தின் மையமாக இருந்த பல முக்கியப் பிரச்சினைகள் மீதும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதாக நம்பினர்.
பிரிட்டிஷ் வாக்காளர்கள், வெளியேறுவது தங்களின் முக்கிய முன்னுரிமைகளான வாழ்க்கைச் செலவு (66%), பொருளாதாரம் (65%), இளைஞர்களுக்கான வாய்ப்பு (57%), சட்டவிரோதக் குடியேற்றம் (56%) மற்றும் வர்த்தகம் (56%) ஆகியவற்றைப் பாதித்ததாகக் கூறினர்.
வெளியேற வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர் (58%) கூட, பிரெக்ஸிட் சட்டவிரோதக் குடியேற்றத்தை மேலும் மோசமாக்கியதாகக் கூறினர்.பிரெக்சிட்டின் முதன்மைப் பலன்களைக் கண்டறியுமாறு கேட்கப்பட்டபோது, பெரும் வித்தியாசத்தில் மிகவும் பொதுவான பதில் "தெரியாது" என்பதாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து "மேற்கூறிய எதுவும் இல்லை" என்ற பதில் வந்தது. இது, பெரும்பாலான பிரிட்டிஷ் வாக்காளர்கள், வெளிப்படையான எந்த நன்மையும் இல்லாமல் பிரெக்சிட் உண்மையான பாதிப்பை ஏற்படுத்தியதாக இப்போது உணர்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
வெளியேறும் முடிவின் மீதான இந்த மிகப்பெரும் எதிர்மறையான தீர்ப்பு, கூட்டமைப்புடன் ஒரு நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வலுவான விருப்பமாக வெளிப்படுகிறது: இங்கிலாந்தில் பதிலளித்தவர்களில் 75% பேர் இதற்கு ஆதரவாக இருந்தனர். வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, 66% பேர் அவை மிகவும் அல்லது சற்றே நெருக்கமாக இருக்க வேண்டும் என்று கூறினர்.
ஒருவேளை மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பதிலளித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் (63%) – 2016-ல் வெளியேற வாக்களித்தவர்களில் 57% பேர் உட்பட – நெருங்கிய வர்த்தக உறவுகளுக்கு ஈடாக இப்போது சுதந்திரமான நடமாட்டத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறினர்.
வெறும் 18% பேர் மட்டுமே அதை நிராகரித்தனர்.
தங்களின் முதன்மையான கவலை குடியேற்றம் என்று கூறிய வாக்காளர்களிடையே கூட, 44% பேர் நெருங்கிய பொருளாதார உறவின் ஒரு பகுதியாக சுதந்திரமான நடமாட்டத்தை ஆதரிப்பதாகக் கூறினர்.
இது, பிரெக்சிட் வாக்கெடுப்பின் முக்கிய உந்து சக்திகளில் ஒன்று இனி இங்கிலாந்து விவாதத்தின் மையமாக இல்லை என்பதைக் காட்டுகிறது.
யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இன்று அர்ச்சுனா இராமநாதனின் படம் பொறித்த கட்டவுட் ஒன்று செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வு குறித்த படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஸ் காட்டம் தனது முகநூல் பக்கத்தில் கடுமையான விமர்சனப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“தயவுசெய்து செருப்பைக் கொச்சைப்படுத்தாதீர்கள் – ஏனெனில் செருப்பைவிடக் கீழான நிலையில்தான் இவர் இருக்கிறார்.
இவர் பைத்தியமுமில்லை, முட்டாளுமில்லை; மாறாக மக்களின் உளவியலைப் புரிந்துகொண்டு அரசியலை வணிகமாகச் செய்யும் வியாபாரியே ஆவார்.
இவர் சுயமாக இயங்கவில்லை; வேறு சக்திகளால் இயக்கப்படுகிறார். மிஞ்சியிருக்கும் தமிழ் இனத்தின் எதிர்காலத்தை அழிப்பதற்கும், இனப்படுகொலைக்கான நீதிக் கோரிக்கையை முறியடிப்பதற்குமே இவரது நடவடிக்கைகள் அமைகின்றன.
தமிழர்களை உலகுக்கு முன்னால் கோமாளிகளாகக் காட்டுவதில் இவர் வெற்றி பெற்றுவிட்டார்.
பொது வாழ்வில் அநாகரிகமான மொழியைப் பயன்படுத்துவது, ஒழுக்கக்குறைவான நடத்தைகளைக் காட்டுவது போன்றவற்றை எதிர்காலத் தலைமுறைக்கு முன்மாதிரியாகக் காட்டி தவறான பாடம் கற்பிக்கிறார்.
உயரிய சபைகளில் அவதூறும் அருவருப்பான பேச்சும் பேசியும் எந்தவித ஒழுக்காற்று விசாரணையும் இவருக்கு எதிராக மேற்கொள்ளப்படவில்லை.
ஏனெனில் இவரைப் போன்றவர்களால்தான் சர்வதேச விசாரணையைக் கோரும் தமிழ் சமூகம் மேலும் சீரழியும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.
இவரது நாடகம் இன்னும் முடியவில்லை.
மாகாண சபைத் தேர்தலுக்கு முன் மீண்டும் மக்களை ஏமாற்ற வருவார், ஆனால் அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு சேகரித்த செல்வத்துடன் ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு குடிபெயர்ந்துவிடுவார்.
மக்கள் விழிப்புடன் சிந்திக்காவிட்டால் இனத்தின் மீது எஞ்சியிருக்கும் மதிப்பும் கவுரவமும் முற்றிலும் அழிந்துவிடும். முடிந்தால் உண்மையான அரசியல் தலைவர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோரை அணுகி உண்மையை அறியுங்கள்.”
இந்த வலுவான கருத்துப் பதிவும் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே, வாய்வழியாக மட்டுமே உணவு உட்கொள்வதைத் தவிர்த்து வருவதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அவர் பிற வைத்திய முறைகள் மூலம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உட்கொள்ள மறுக்கவில்லை என்றும், அவ்வாறு இல்லாத பட்சத்தில் எவராலும் இவ்வளவு நீண்ட காலம் உண்ணாவிரதம் இருக்க முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர், முன்னாள் புலனாய்வுத் தலைவரின் இந்த முயற்சி ஒரு பயனற்ற செயல் என தெரிவித்துள்ளார்.
யாழில் (Jaffna) தனது பாதகைக்கு செருப்பு மாலை அணிவித்ருந்த பதாகையை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அதனை கிழித்து தனது காரில் எடுத்து செல்லும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் இன்றைய தினம் (19.06.2026) வெள்ளிக்கிழமை அர்ச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை வைக்கப்பட்டு, அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தகாத வார்த்தை பிரயோகங்கள் , சபை நாகரீகமின்றி செயற்படுதல், கூட்டங்களை குழப்புதல் போன்ற செயல்களில் அர்ச்சுனா இராமநாதன் செயற்பட்டு வருவதாக பரவலாக நேற்றைய தினம் இடம்பெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் மிக மோசமான வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டு இருந்தமை தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.
குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் சில மர்ம நபர்களால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சில தரப்பினர் விமர்சித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் , அர்ச்சுனாவின் 10 அடி உயர பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு , பிரதான வீதியில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், காலை 10 மணியளவில் பதாகை வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு தனது காரில் வந்த அர்ச்சுனா இராமநாதன், பதாகையை கிழித்தெடுத்து தனது காரில் எடுத்து சென்றுள்ளார்.
திருகோணமலை கடற்படை முகாமிற்குள் ‘கன் சைட்’ (Gun Site) எனும் பெயரில் நீண்டகாலமாக இயங்கி வந்த மிகவும் இரகசியமான நிலத்தடி சிறைச்சாலை வளாகத்தை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சீல் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 60-க்கும் மேற்பட்ட நபர்களை இவ்விடத்தில் சட்டவிரோதமாக தடுத்து வைத்து, கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியதோடு, அவர்களிடம் கப்பம் வசூலித்ததாகவும் நீண்டகாலமாக நடைபெற்று வரும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தில் தற்போது விசாரிக்கப்பட்டு வரும் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தவிர, மேலும் பலர் இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான ஆதாரங்களும் இப்போது வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலரும், அதனுடன் தொடர்புடைய தரப்பினரும் நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலங்களை வழங்க முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலத்தடிச் சிறைச்சாலை வளாகத்தை திருகோணமலை நீதவான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
புலனாய்வுப் பிரிவினரின் இந்த நடவடிக்கை, போருக்குப் பிந்தைய இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்குத் தொடர்புடைய சித்திரவதை, கடத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் தீர்க்கமானதொரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
மேலும் பலர் இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான ஆதாரங்களுடன் கூடிய தகவல்கள் தொடர்ந்தும் வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் (UN) மனித உரிமைகள் குழுவினரும் முன்னதாக இந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை, சர்வதேச அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், இஸ்ரேலிய ராணுவத்தின் செயல்பாடுகளை அவர் விமர்சித்துள்ள விதம், இஸ்ரேலை ஒரு பயங்கரவாத அமைப்பிற்கு இணையாக அவர் மறைமுகமாகச் சித்தரித்துள்ளார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
டொனால்ட் ட்ரம்ப் தனது பேச்சில் மிக முக்கியமாகக் குறிப்பிட்ட விஷயம் இதுதான்:
நீங்கள் தேடும் ஒரு நபர் (Hiz*bollah அமைப்பினர்) இருக்கிறார் என்பதற்காக, ஒவ்வொரு முறையும் ஒட்டுமொத்த அடுக்குமாடி குடியிருப்பையும் (குண்டுத்தாக்குதல் மூலம்) இடித்துத் தள்ள வேண்டிய அவசியமில்லை."
பொதுவாக, பயங்கரவாத அமைப்புகள் தான் இலக்குகளைத் தாக்க முற்படும்போது அங்குள்ள பொதுமக்களின் உயிர்களைப் பற்றிக் கவலைப்படாமல் ஒட்டுமொத்த அழிவை ஏற்படுத்துவார்கள்.
இப்போது இஸ்ரேலும் அதையேதான் செய்கிறது என்பதை ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு பயங்கரவாதியை ஒழிப்பதற்காக, நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் வாழும் வீடுகளைத் குண்டு போட்டு தரைமட்டமாக்குவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியின் மூலம், இஸ்ரேலின் இந்தச் செயல்பாடு 'அரசு பயங்கரவாதம்' (State Terrorism) போன்றதே என்பதை ட்ரம்ப் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.
இஸ்ரேல் தனது தாக்குதல்களை 'பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை' (Counterterrorism Operation) என்று உலகிற்குச் சொல்லி வருகிறது. ஆனால், ட்ரம்பின் கருத்து இந்த வாதத்தை முற்றிலுமாக உடைக்கிறது.
தாக்குதலுக்குள்ளாகும் கட்டிடங்களில் இருப்பவர்கள் அனைவரும் ஆயுதம் ஏந்தியவர்கள் அல்ல, அவர்கள் அப்பாவி மக்கள் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஒரு தனிநபரைத் தேடுவதற்காக ஒட்டுமொத்தப் பகுதியையும் அழிப்பது என்பது, அந்தச் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் கொடுக்கும் ஒரு கூட்டுத் தண்டனையாகும். ( Collective Punishment)
சட்டத்திற்குப் புறம்பாக மக்களைக் கொன்று குவிக்கும் இத்தகைய உத்திகள், பொதுவாகப் பயங்கரவாத அமைப்புகளால் கையாளப்படுபவை ஆகும்.
இந்தக் கொடூரமான போர் உத்தி, சர்வதேச சமூகத்திற்கு "மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால்" கண்முன்னே அரங்கேறி வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
2009-ல் இலங்கையின் முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் கையாண்ட அதே "பாதுகாப்பு வலய" (No Fire Zone) ஏமாற்று உத்தியைத்தான் இன்று லெபனானிலும், காசாவிலும் இஸ்ரேல் அரங்கேற்றி வருகிறது.
அன்று விடுதலைப் புலிகளை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு, மக்கள் அடர்த்தியாக வாழ்ந்த முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயங்கள் மீது இலங்கை ராணுவம் கொத்துக் குண்டுகளையும் (Cluster Bombs), கனரக ஆயுதங்களையும் வீசி பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தது.
இன்று இஸ்ரேலும் லெபனானில் அதே பாணியில் ஒட்டுமொத்த குடியிருப்பு வளாகங்களையும் தகர்த்து வருகிறது.
முள்ளிவாய்க்காலில் தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் செஞ்சிலுவைச் சங்க வாகனங்கள் மீது இலங்கை ராணுவம் திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியது.
லெபனானிலும் தற்போது வரை 135-க்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் மீட்புப் பணியாளர்களை இஸ்ரேல் கொன்றுள்ளது.
முள்ளிவாய்க்காலில் பலியான லட்சக்கணக்கான தமிழர்களின் எண்ணிக்கையை இலங்கை அரசு மறைத்தது போல, லெபனானிலும் ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகளின் எச்சரிக்கைகளை மீறி இஸ்ரேல் எல்லையற்ற அழிவை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது வரை லெபனானில் 3,711-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் (இதில் 353 பெண்களும், 247 குழந்தைகளும் அடங்குவர்). மேலும் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
இன்று லெபனானில் நடப்பதைக் காட்டி, "இது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையா அல்லது கூட்டுத் தண்டனையா?" என ஐநாவை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டி உள்ளது.
ஆனால், ஈழத்தில் நடந்தது வெறும் கூட்டுத் தண்டனை அல்ல; அது திட்டமிட்ட இனவழிப்பு (Genocide) ஆகும்.
இவ்விரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும்:
கூட்டுத் தண்டனை (Collective Punishment) என்பது ஒரு குறிப்பிட்ட ஆயுதக் குழுவினரைத் தேடுவதற்காக, அந்தப் பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் மீதும் தாக்குதல் நடத்தி, அவர்களின் வாழ்விடங்களை அழிப்பது.
இனவழிப்பு (Genocide) என்பது ஒரு குறிப்பிட்ட தேசிய, இன, மத அல்லது மொழிச் சமூகத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழித்தொழிக்கும் நோக்கத்துடன் (Intent to destroy) திட்டமிட்டுச் செய்யப்படும் படுகொலைகள்.
முள்ளிவாய்க்காலில் நடந்தது பயங்கரவாதத்திற்கு எதிரான போரோ அல்லது தமிழர்களுக்கான கூட்டுத் தண்டனையோ அல்ல.
அது தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்களின் தேசிய அடையாளத்தையும், இனத்தையும் அழிப்பதற்காக ஸ்ரீலங்கா அரசு சர்வதேச நாடுகளின் துணையோடு நடத்திய இனவழிப்பு (Genocide) ஆகும்.
முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஈழத் தமிழர்களுக்கு இன்றுவரை சர்வதேச அரங்கில் நீதி கிடைக்காமல் இருப்பதற்கு முதன்மைக் காரணமே, இந்த கொடூரமான இனப்படுகொலையை சர்வதேச சமூகம் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" (War on Terror) என்றும், "கூட்டுத் தண்டனை" (Collective Punishment) என்றும் தவறாக வரையறுத்ததே ஆகும்.
காரணம் பாதுகாப்பு வலயங்களுக்குள் மக்களுடன் புலிகள் கலந்திருந்து போர் புரிந்தமை என்ற சாட்சிகளை முன்வைத்து கூட்டுத்தண்டனை ( collective punishment) என பூசி மெழுக முற்படுகின்றனர்.
சர்வதேச சட்டங்களின்படி, ஒரு போரில் நடக்கும் மனித உரிமை மீறல்களையோ அல்லது கூட்டுத் தண்டனைகளையோ "போர்க்குற்றங்கள்" (War Crimes) என்ற சாதாரணப் பிரிவின் கீழ் கொண்டுவந்து, சில தளர்வுகளுடன் கடந்து சென்றுவிட முடியும்.
இதைப் பயன்படுத்திக் கொண்டுதான், வல்லரசு நாடுகளும் ஐநாவும் முள்ளிவாய்க்காலை ஒரு 'இனப்படுகொலை' என்று அங்கீகரிக்கத் தயங்குகின்றன.
முள்ளிவாய்க்காலை வெறும் 'போர்க்குற்றம்' அல்லது 'கூட்டுத் தண்டனை' என்று சுருக்குவது, குற்றவாளிகளான இலங்கை ஆட்சியாளர்களையும், ராணுவ அதிகாரிகளையும் சர்வதேச நீதிமன்றத்தின் (ICC) கடுமையான தண்டனைகளில் இருந்து பாதுகாப்பதற்கே உதவும்.
இதுவே தமிழர்களுக்கான நீதி இன்னமும் கிடைக்காமல் இழுத்தடிக்கப்படுவதற்குக் பின்னணியில் உள்ள கசப்பான அரசியல் உண்மை.
லெபனானில் இன்று இஸ்ரேல் செய்யும் கொடூரங்களுக்கும், அன்று முள்ளிவாய்க்காலில் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கும் உள்ள ஒற்றுமை வெறும் தற்செயலானது அல்ல.
ஏனெனில், இலங்கை ராணுவத்திற்கு இத்தகைய கொடூரமான போர் உத்திகளையும், மனிதநேயமற்ற தாக்குதல் முறைகளையும் கற்றுக்கொடுத்ததே இதே இஸ்ரேல் தான் என்பது வரலாற்று உண்மை.
சுருக்கமாகக் கூறின், அன்று முள்ளிவாய்க்காலில் தமிழர்களைக் கொன்றுகுவிக்க இலங்கை ராணுவ பயங்கரவாதத்திற்குப் பயிற்சியும் ஆயுதமும் அளித்த அதே இஸ்ரேல், இன்று அதே உத்திகளை லெபனான் மக்கள் மீது பிரயோகித்து வருகிறது.
அன்று சர்வதேச சமூகம் முள்ளிவாய்க்காலை "பயங்கரவாத ஒழிப்பு" என்று நம்பி மௌனம் காத்ததன் விளைவைத்தான், இன்று லெபனான் மக்கள் "மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால்" வடிவில் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போதாவது டொனால்ட் ட்ரம்பின் கருத்துக்கள் மூலம் இஸ்ரேலின் கொடூர முகம் அம்பலமாகியிருப்பது உலகிற்கு ஒரு எச்சரிக்கையாகும்.
தொடர்ந்து வரும் ஆயுதக் களைவு கோரிக்கைகளை எதிர்த்து வரும் ஹமாஸ், தனது ஆயுதங்களை இப்போதைக்கு ஒப்படைக்கப் போவதில்லை என்றும், மற்ற பாலஸ்தீனியக் குழுக்களுடன் விரிவான கலந்துரையாடல்களுக்குப் பிறகே தனது இராணுவ ஆயுதக் கிடங்கின் இறுதி நிலை தீர்மானிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
அல் ஜசீராவுக்கு அளித்த ஒரு பிரத்யேக நேர்காணலில், ஹமாஸின் அரசியல் குழுவின் உறுப்பினரான ஹுசாம் பத்ரான், முடங்கிப்போன பேச்சுவார்த்தைகளுக்கு அந்த அமைப்பு முன்மொழிந்துள்ள தீர்வுகள் குறித்த ஒரு உள்நோக்குப் பார்வையை வழங்கினார்.
மேலும், நீண்டகால ஹுத்னா (போர்நிறுத்தம்) என்ற கருத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
"இந்த பாலஸ்தீனியக் குழு [காசா நிர்வாகத்திற்கான தேசியக் குழு (NCAG)] காசா பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் எடுக்க வரும்போது, அதிகாரப்பூர்வ பாலஸ்தீனியக் காவல்துறையான இந்தக் குழுவிற்குச் சொந்தமான அதிகாரப்பூர்வ ஆயுதங்களைத் தவிர, காசாவின் தெருக்களிலும் சந்துகளிலும் வேறு எந்த ஆயுதங்களும் வெளிப்படையாகத் தெரியாது," என்று பத்ரான் அல் ஜசீராவிடம் கூறினார். "காசா பகுதியில் நாம் பழகிப்போனதைப் போன்ற ஆயுதமேந்திய ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இருக்காது."
எபோலாவின் புண்டிபுக்யோ திரிபுக்கான மூன்று சோதனை சிகிச்சைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. இதில் மேப் பயோபார்மசூட்டிக்கல்ஸின் MBP134, ரீஜெனரானின் மாஃப்டிவிமாப் மற்றும் கிலியட் சயின்சஸின் வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவிர் ஆகியவை அடங்கும்.
இந்த மருந்துகளையும் மற்ற சாத்தியமான தடுப்பூசிகளையும் மருத்துவப் பரிசோதனைகளில் மதிப்பீடு செய்து, அவற்றின் பயன்பாடு குறித்த தரவுகளை உருவாக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வியாழக்கிழமை கூறியது. அந்த அமைப்பும் வெளி நிபுணர்களும் பல சாத்தியமான மருந்துகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் நோய் பரவல் தொடர்வதாலும், உகாண்டாவிலும் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புண்டிபுக்யோ வைரஸ் நோய்க்கென பிரத்யேகமாக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ தற்போது இல்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறியது.
உடனடி சிகிச்சைக்காகவோ அல்லது ஆய்வின் ஒரு கூடுதல் அங்கமாகவோ உலக சுகாதார அமைப்பு பயன்படுத்த விரும்பினால், மாஃப்டிவிமாப் மருந்து ஏற்கனவே காங்கோ ஜனநாயகக் குடியரசில் கையிருப்பில் உள்ளது என்று ரீஜெனரான் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தடுப்பு நடவடிக்கையாக, உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு, நோய்த்தொற்றுக்குப் பிந்தைய பயன்பாட்டிற்காக கிலியட்டின் சோதனைக்குட்பட்ட வாய்வழி வைரஸ் எதிர்ப்பு மருந்தான ஒபெல்டெசிவிர் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இருப்பினும், அதன் செயல்திறன் வலுவான தொடர்புத் தடமறிதலைச் சார்ந்திருக்கும்.
தடுப்பூசிகளில், சர்வதேச எய்ட்ஸ் தடுப்பூசி முயற்சியால் உருவாக்கப்பட்டு வரும் rVSV பண்டிபுக்யோ எனப்படும் ஒற்றை டோஸ் தடுப்பூசி மிகவும் நம்பிக்கைக்குரியதாகக் கருதப்பட்டது.
இருப்பினும், இது சோதனைகளுக்குத் தயாராவதற்கு இன்னும் ஏழு முதல் ஒன்பது மாதங்கள் ஆகும் என அந்த அமைப்பு கூறியது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா இணைந்து உருவாக்கிய மற்றொரு தடுப்பூசியான ChAdOx1 பண்டிபுக்யோ, இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் சோதனைக்குக் கிடைக்கக்கூடும், இருப்பினும் கூடுதல் விலங்கு தரவுகள் இன்னும் தேவைப்படுகின்றன.
உலக சுகாதார அமைப்பு, உரிமம் பெற்ற ஒரே எபோலா தடுப்பூசியான மெர்க்கின் (MRK.N) எர்வெபோவின் சாத்தியமான பயன்பாட்டையும் ஆய்வு செய்தது, ஆனால் பண்டிபுக்யோ வைரஸுக்கு எதிரான பாதுகாப்பிற்கான சான்றுகள் குறைவாகவும் உறுதியற்றதாகவும் இருப்பதால், அதை ஆராய்ச்சி அமைப்புகளுக்கு வெளியே பயன்படுத்தக்கூடாது என்று கூறியது.
ரெம்டெசிவிர் உடன் ஒரு மோனோக்ளோனல் ஆன்டிபாடியைப் பயன்படுத்தி கூட்டு சிகிச்சையை மதிப்பீடு செய்யுமாறு உலக சுகாதார அமைப்பின் ஆலோசகர்கள் பரிந்துரைத்தனர்.
கடுமையான நெறிமுறைத் தரங்களின் கீழ் மருத்துவப் பரிசோதனைகளை வடிவமைத்துச் செயல்படுத்த, காங்கோ மற்றும் உகாண்டா அதிகாரிகளுடனும், ஆப்பிரிக்கா சிடிசி உள்ளிட்ட கூட்டாளர்களுடனும் இணைந்து பணியாற்றி வருவதாக அந்த அமைப்பு கூறியது.
40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை 30 நாள் இலவச வருகைப் பயண நேரத்தை அறிமுகப்படுத்துகிறது.இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், 25 மே 2026 முதல், குறிப்பிடப்பட்ட 40 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள், சுற்றுலா நோக்கங்களுக்காக 30 நாட்கள் செல்லுபடியாகும் கட்டணமில்லா மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெறத் தகுதி பெறுவார்கள் என்று அறிவித்துள்ளது.
தகுதிபெறும் நாடுகள்:
ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பஹ்ரைன், பெலாரஸ், பெல்ஜியம், கனடா, சீனா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கஜகஸ்தான், குவைத், மலேசியா, நேபாளம், நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, ஓமன், பாகிஸ்தான், போலந்து, கத்தார், ரஷ்யா, சவூதி அரேபியா, தென் கொரியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்த, தூதரக, உத்தியோகபூர்வ, சேவை அல்லது சாதாரண கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் குடிமக்கள், இத்திட்டத்தின் கீழ் இலவச மின்னணு பயண அங்கீகாரத்தைப் (ETA) பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்றும் திணைக்களம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், மேற்கூறிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் இலங்கையுடன் இருதரப்பு பரஸ்பர ஒப்பந்தங்களைக் கொண்டுள்ள மாலத்தீவுகள், செஷல்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டுப் பிரஜைகளும் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் மின்னணு பயண அங்கீகாரத்தைப் (ETA) பெற வேண்டும்.
தற்போதுள்ள இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ், மாலத்தீவு நாட்டினர் ETA அமைப்பு மூலம் 90 நாள் சுற்றுலா விசாவைத் தொடர்ந்து பெறுவார்கள் என்று அது கூறியது.
இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ETA, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணமின்றி வழங்கப்படும். இருப்பினும், 25 மே 2026-க்கு முன்னர் செலுத்தப்பட்ட எந்த ETA கட்டணமும் திருப்பித் தரப்படாது.
இந்தத் திட்டத்தின் கீழ், சுற்றுலாப் பயணிகள் 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும் சுற்றுலா விசாவை (ETA) கட்டணமின்றிப் பெறத் தகுதியுடையவர்கள் (மாலத்தீவு நாட்டினர் 90 நாட்கள் பெறுவார்கள்). மேலும், 30 நாள் செல்லுபடியாகும் காலத்திற்குள் இலங்கைக்கு முதன்முதலில் வரும் நாளிலிருந்து இரட்டை நுழைவு வசதி அனுமதிக்கப்படும் என்றும் அது குறிப்பிட்டது.
தங்கள் தங்குதலை 30 நாட்களுக்கு மேல் நீட்டிக்க விரும்பும் பார்வையாளர்கள், பொருந்தக்கூடிய விசா கட்டணத்தைச் செலுத்தி, நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட பட்டியலில் இடம்பெறாத நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள், இலங்கையின் வழக்கமான ETA விசா விதிமுறைகளுக்கு உட்பட்டே தொடர்ந்து செயல்படுவார்கள் என்றும் அந்தத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
உலக வரைபடத்தில் ஒரு சிறிய நிலப்பரப்பை மீட்டெடுக்கப் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம், ஏன் ஒட்டுமொத்த உலக நாடுகளாலும் வளைத்து வளைத்துத் தாக்கி அழிக்கப்பட்டனர்?
அதற்கான விடை ‘தமிழீழ வைப்பகத்தில்’ (Bank of Tamil Eelam) ஒளிந்திருந்தது.
இலங்கையில் விடுதலைப் புலிகள் ஒரு தனி தேசத்திற்கே உரிய (De-facto State) அனைத்துக் கட்டமைப்புகளையும் கொண்டிருந்தனர்.
குறிப்பாக, அவர்கள் உருவாக்கிய ‘தமிழீழ வைப்பகம்’ (Bank of Tamil Eelam) மற்றும் அவர்களின் தன்னாட்சிப் பொருளாதாரம் உலக வங்கியியல் ஒழுங்கிற்கு (Central Banking System) பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது.
இன்று உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளின் மத்திய வங்கிகள் ஒரு குறிப்பிட்ட வங்கியியல் முறையின் கீழேயே (Central Banking System) இயங்குகின்றன. உலக வர்த்தகம் என்பது Petro-Dollar எனப்படும் அமெரிக்க டாலரிலேயே நடக்க வேண்டும்.
யாராவது ஒரு தலைவர் தனது நாட்டு வளங்களை டாலருக்கு மாற்றாகத் தங்கம் (Gold Standard) அல்லது வேறு ஒரு பொது நாணயத்தில் வர்த்தகம் செய்ய முயன்றால், அவர் உலக வங்கியியல் கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறார்.
அவர்கள் உடனடியாக ‘மனிதகுல எதிரியாக’ ஊடகங்கள் மூலமாக சித்தரிக்கப்படுவார்கள்.
டாலருக்கு மிரட்டலாகவும் அல்லது தடையாக யாராவது இருந்தாலும் அவர்கள் ‘சர்வாதிகாரிகள்’ என்றும் ‘பயங்கரவாதிகள்’ என்றும் முத்திரை குத்தப்பட்டு அழிக்கப்படுவார்கள்.
ஈராக்கிய எண்ணெயை டாலருக்குப் பதிலாக ‘யூரோ’ (Euro) நாணயத்தில் விற்பனை செய்யத் துணிந்தார் சதாம். விளைவு? பேரழிவு ஆயுதங்கள் (WMD) வைத்திருப்பதாகப் பொய் சொல்லி ஈராக் தரைமட்டமாக்கப்பட்டது.
ஆப்பிரிக்கக் கண்டம் முழுமைக்கும் தங்கம் மற்றும் வெள்ளியை அடிப்படையாகக் கொண்ட Gold Dinar என்ற பொது நாணயத்தைக் கொண்டுவர முயன்றார் கடாபி. இது டாலரின் உலகளாவிய ஆதிக்கத்திற்குச் சவப்பெட்டி அடிக்கும் செயல் என்பதால், லிபியா சிதைக்கப்பட்டு அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
வெனிசுலாவின் அபரிமிதமான எண்ணெய் வளங்களை அமெரிக்க டாலர் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து,
‘பெட்ரோ’ (Petro) போன்ற மாற்று வழிகளைத் தேடுவதால், இன்று மதுரோ குறிவைக்கப்பட்டுள்ளார்.
அவர் விரைவில் தூக்கிலிடப்படலாம் அல்லது மின்சாரக்கதிர் ஏற்றப்படலாம் என்ற அச்சுறுத்தல் நீடிக்கிறது.
விடுதலைப் புலிகள் உருவாக்கிய தமிழீழ வைப்பகம் (Bank of Tamil Eelam) உலக வங்கியின் கட்டுப்பாடுகள் இன்றி இயங்கியது.
டாலரின் ஆதிக்கத்தைப் புறக்கணித்துத் தமக்கென ஒரு நாணய முறையையோ அல்லது பண்டமாற்று முறையையோ புலிகள் முன்னெடுத்திருந்தால், அது ஆசியாவில் ஒரு ‘பொருளாதார முன்னுதாரணமாக’ மாறிவிடும் என சர்வதேச சக்திகள் அஞ்சின.
குறிப்பாக, மத்திய வங்கிகளின் (Central Banks) வட்டி மற்றும் கடன் பிடிக்குள் சிக்காத ஒரு நிர்வாகம் உருவாவதை டாலர் ஏகாதிபத்தியம் ஒருபோதும் விரும்பாது.
டாலருக்கு அச்சுறுத்தலாக வளரும் எந்த ஒரு ‘நிழல் பொருளாதாரத்தையும்’ முளையிலேயே கிள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது.
சிங்கள ராணுவம் மட்டும் புலிகளை அழித்தது என்பது வெறும் புறத்தோற்றம் மட்டுமே.
உண்மை என்னவென்றால், Rothschilds வங்கியியல் முறையை மீறிச் செயல்பட்ட ஒரு அமைப்பை வேரோடு பிடுங்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது.
அதனாலேயே அமெரிக்காவின் உத்தரவின் பேரில், ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியுடன், இந்தியா, சீனா, பாகிஸ்தான், பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ஆயுதம், தொழில்நுட்பம் மற்றும் இராணுவ உதவிகளை வழங்கி விடுதலைப் புலிகளை அழித்தொழித்தனர்.
விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு உண்மையான காரணம் அவர்களின் ராணுவ பலவீனம் அல்ல, அவர்களின் பொருளாதாரத் தன்னுரிமை. ‘தமிழீழ வைப்பகம்’ என்ற அமைப்பு, சர்வதேச வங்கி மேலாதிக்கத்திற்கு (Rothschilds Control) எதிராக டாலர் கட்டமைப்பிற்கு வெளியே இயங்கியதே புலிகளின் அழிவுக்கு முக்கிய காரணியாக அமைந்தது.
யாரெல்லாம் டாலரின் ஆதிக்கத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறார்களோ, அவர்கள் அனைவரும் அழித்து ஒழிக்கப்படுவார்கள் என்பதே தற்போதைய கசப்பான உலக நியதி.
மதுரோவின் தற்போதைய நிலைமையும் இதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.
அமெரிக்கா எப்போதுமே தங்களின் ‘டாலர்’ நிலைத்தன்மைக்காக (Stability) எந்தவொரு இனத்தையும் காவு கொடுக்கத் தயங்காது.
எங்கள் இனத்தின் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்காததற்குக் காரணம்,
நீதிபதிகளே குற்றவாளிகளுடன் கைகோர்த்திருப்பதுதான்.
விடுதலைப் புலிகளின் ‘தமிழீழ வைப்பகம்’ முதல் மதுரோவின் ‘பெட்ரோ’ வர்த்தகம் வரை அனைத்தும் இந்த அதிகாரப் போட்டிக்கு இரையானவையே.
ஐரோப்பிய ஒன்றியத்தின் எராஸ்மஸ் மாணவர் பரிமாற்றத் திட்டத்தில் இங்கிலாந்து மீண்டும் இணைய உள்ளது
பிரத்தியேக: ஜனவரி 2027 முதல் பிரிட்டிஷ் மாணவர்கள் ஐரோப்பிய ஒன்றிய அளவிலான திட்டத்தில் பங்கேற்க முடியும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மாணவர் பரிமாற்றத் திட்டமான எராஸ்மஸில் மீண்டும் இணைவதற்கான ஒப்பந்தம், பிரஸ்ஸல்ஸுடனான நெருக்கமான உறவுகளை நோக்கிய இங்கிலாந்து அரசாங்கத்தின் உந்துதலின் ஒரு பகுதியாக புதன்கிழமை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பின் இறுதி விவரங்கள் இப்போது இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன,
ஜனவரி 2027 முதல் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தாமல் இங்கிலாந்து மாணவர்கள் ஐரோப்பிய ஒன்றிய அளவிலான திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கும் திட்டம் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
கெய்ர் ஸ்டார்மர் கடந்த மாதம் "நாங்கள் கூட்டணியுடன் நெருங்கி வர வேண்டும்" என்று அறிவித்த பிறகு, பொதுக் கருத்து மென்மையாக்கப்படுவதால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை மேம்படுத்துவதில் இங்கிலாந்து அரசாங்கம் முன்னேற்றத்தைக் காட்ட எராஸ்மஸில் ஏற்பட்ட முன்னேற்றம் உதவும்.
பிரிட்டிஷ் மாணவர்கள் எராஸ்மஸ்+ திட்டத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் தொழில் பயிற்சி வேலைவாய்ப்புகள் மற்றும் விளையாட்டு பரிமாற்றங்களிலும், மேலும் கல்வி கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அடிப்படையிலான படிப்பு பரிமாற்றங்களிலும் பங்கேற்க முடியும் என்பதை கார்டியன் புரிந்துகொள்கிறது.
இளங்கலை பட்டதாரிகளின் பாரம்பரிய கல்வி பரிமாற்றங்களுக்கு அப்பால், விடுப்பு வாக்களிக்கும் பகுதிகள் உட்பட, மக்கள்தொகையின் பரந்த பகுதிக்கு திட்டத்தின் நன்மைகளை விரிவுபடுத்த இங்கிலாந்து அமைச்சர்கள் ஆர்வமாக இருப்பதாக நம்பப்படுகிறது.
Erasmus திட்டத்தின் கீழ் UK பல்கலைக்கழகங்களில் படிக்கும் EU மாணவர்களுக்கு சர்வதேச கட்டண விலக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது அவர்கள் வருடத்திற்கு £9,535 என வரையறுக்கப்பட்ட உள்நாட்டு கட்டணத்திற்கு சமமான தொகையை செலுத்துவார்கள் என்று கார்டியனிடம் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு ஈடாக, UK மாணவர்கள் தங்கள் UK பட்டப்படிப்புகளின் ஒரு பகுதியாக ஐரோப்பாவில் படிக்கும் ஆண்டில் தங்கள் சொந்த பல்கலைக்கழகத்தில் தங்கள் நிலையான உள்நாட்டு கட்டணத்தை தொடர்ந்து செலுத்துவார்கள். வெளிநாட்டில் வாழ்வதற்கான கூடுதல் செலவுகளுக்கு உதவ அவர்கள் மானியம் பெற தகுதியுடையவர்கள்.
இந்தத் திட்டத்திற்கு வெளியே EUவில் படிக்கும் எந்தவொரு பிரிட்டனும் அதிக சர்வதேச விகிதங்களைச் செலுத்துவார்கள், அதே நேரத்தில் UK பல்கலைக்கழகங்களில் ஐரோப்பிய மாணவர்கள் ஆண்டுக்கு £38,000 வரை கட்டணம் செலுத்துவார்கள்.
EU உறவுகள் அமைச்சர் நிக் தாமஸ்-சைமண்ட்ஸ் மற்றும் அவரது EU இணை அமைச்சர் மரோஸ் செஃப்கோவிச் ஆகியோர் கடந்த புதன்கிழமை பிரஸ்ஸல்ஸில் சந்தித்து இன்றுவரை நடந்த பேச்சுவார்த்தைகளை மதிப்பாய்வு செய்தனர் - மேலும் Erasmus-ஐ எல்லை மீறச் செய்ததாக நம்பப்படுகிறது.
Brexitக்குப் பிறகு, போரிஸ் ஜான்சன் இந்தத் திட்டம் பணத்திற்கு மதிப்பை வழங்கவில்லை என்று கூறியபோது, UK Erasmus-ஐ விட்டு வெளியேறியது. கடந்த மே மாதம் நடைபெற்ற இங்கிலாந்து-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க தொழிற்கட்சி அரசாங்கம் ஒப்புக்கொண்டது,
மேலும் இங்கிலாந்து பங்கேற்புக்கான செலவைக் குறைக்க முயன்று வருகிறது.
பிரெக்ஸிட்டுக்கு முன்பு, இங்கிலாந்து இந்தத் திட்டத்தில் நிகர பங்களிப்பாளராக இருந்தது, வெளிநாட்டில் படிக்கும் இங்கிலாந்து மாணவர்களை விட அதிகமான ஐரோப்பிய மாணவர்கள் பிரிட்டனுக்கு வருகிறார்கள்.
ஈராஸ்மஸ் திட்டம் 1987 இல் ஒரு பல்கலைக்கழக பரிமாற்றத் திட்டமாகத் தொடங்கியது, ஆனால் கடந்த பத்தாண்டுகளில் வேலை மற்றும் பயிற்சி வேலைவாய்ப்புகளை உள்ளடக்கியதாக விரிவடைந்துள்ளது, மேலும் இது மென்மையான சக்தி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பின் ஒரு முக்கிய கருவியாகக் கருதப்படுகிறது.
"மீட்டமை" பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, £23 பில்லியன் ஈராஸ்மஸ் திட்டத்தில் இங்கிலாந்து மீண்டும் இணைவது ஐரோப்பிய ஒன்றிய தலைநகரங்களிடமிருந்து ஒரு முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது, மேலும் இளம் ஐரோப்பியர்கள் பல ஆண்டுகளாக இங்கிலாந்தில் வாழவும் வேலை செய்யவும் உரிமையை வழங்கும் ஒரு இயக்கம் ஒப்பந்தத்துடன், பிரிட்டன்களும் ஐரோப்பாவில் அதையே செய்ய வேண்டும்.
தேசிய மாணவர் சங்கத்தின் (NUS) உயர்கல்வி துணைத் தலைவர் அலெக்ஸ் ஸ்டான்லி கூறினார்: “வதந்திகள் உண்மையாக இருந்தால், மற்றொரு தலைமுறை மாணவர்கள் எராஸ்மஸ் திட்டத்தில் சேர முடியும் என்பது அற்புதமானது. நாங்கள் வெளியேறிய நாளிலிருந்து மாணவர்கள் எராஸ்மஸில் மீண்டும் சேர பிரச்சாரம் செய்து வருகின்றனர்,
எனவே நாளை அறிவிக்கப்பட்டால், அது மாணவர் இயக்கத்திற்கு மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.”
பிரிட்டிஷ் பாதுகாப்பு நிறுவனங்கள் ஒப்பந்தங்களுக்கு ஏலம் எடுக்க இங்கிலாந்து £5.7 பில்லியன் பங்களிக்க வேண்டும் என்று பிரான்ஸ் கோரியபோது, கடந்த மாதம் கூட்டமைப்பின் £131 பில்லியன் பாதுகாப்பு நிதியில் சேருவதற்கான பேச்சுவார்த்தைகள் முறிந்த பின்னர், எராஸ்மஸ் அறிவிப்பு அரசாங்கத்திற்கு ஒரு ஊக்கமாக இருக்கும்.