சனி, 11 ஜூலை, 2026

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு - அறிக்கை

சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜாவினால் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ஆயிஷா ஜினசேனவிடம் நேற்று (10) கையளிக்கப்பட்டுள்ளது. 

கைதிகளை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு முறையான, நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட வழிமுறையொன்றை பேணுவதற்காக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையானது நேற்று நீதி அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூன் 25 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தற்போதுள்ள அரசியலமைப்பின் 34 (1) பிரிவின் தற்காலிக ஏற்பாடுகள் உட்பட ஏனைய சட்ட கட்டளைச் சட்டங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளை ஆராய்ந்து, சிறைச்சாலைத் துறையில் உள்ள நிர்வாக நடைமுறைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜாவின் தலைமையில் இக்குழு நியமிக்கப்பட்டது. 

 சிறைச்சாலைகளில் தற்போதுள்ள அதிகளவிலான நெரிசலைக் குறைப்பதற்கும், கைதிகளை புனர்வாழ்வளிக்கும் முறைகளில் உள்ள பல்வேறு குறைபாடுகளைத் தவிர்த்து, சர்வதேச தரத்திற்கு அமையக்கூடிய சிறைச்சாலை அமைப்பொன்றை உருவாக்குவதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்களின் ஒரு முதற்படியாக இது அடையாளப்படுத்தப்படுகிறது. 


இந்தப் பரிந்துரைகளை பரிசீலித்து, பொருத்தமான முறையில் செயல்படுத்துவது நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சினால் எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.

வர்த்தக கப்பல்கள் மீது நடத்தப்பட்ட சூடு ஈரான் அறிவிக்க வேண்டும் - அமெரிக்கா

ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது. அத்துடன் வர்த்தகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை நிறுத்த உறுதியளிக்க வேண்டும் என்றும் இன்றைய பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்கா வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

அமெரிக்க மற்றும் ஈரானுக்கு இடையிலான தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி முன்னதாக கூறியிருந்த போதிலும் அதனை மீண்டும் தொடருவதற்கான இணக்கத்தை நேற்று வௌியிட்டிருந்தார். 

 இதனடிப்படையிலேயே ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்க பிரதிநிதிகள் வலியுறுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. வர்த்தக கப்பல்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு ஒரு தவறு என்பதை ஈரான் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொண்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இருப்பினும், ஈரானுக்குள் இருக்கும் ஒரு முரண்பாடான குழுவே இதற்குப் பொறுப்பு என ஈரானியர்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் ஆன் விட்கோம்ப் அவர்களின் கொலை விசாரணை !!

ஆன் விட்கோம்ப் (Ann Widdecombe) அவர்களின் மரணம் தொடர்பாகக் கொலை விசாரணை தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது இல்லம் ஒரு முக்கியக் குற்றச் சம்பவ இடமாக மாறியுள்ளது. 

வியாழக்கிழமையன்று 78 வயதுடைய பெண்மணி ஒருவர் தனது வீட்டில் பலத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, 26 வயதுடைய வெள்ளையினத்தைச் சேர்ந்த பிரிட்டிஷ் ஆண் ஒருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக டெவோன் மற்றும் கார்ன்வால் காவல்துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் பயங்கரவாதச் செயலாகக் கருதப்படவில்லை; மேலும், இது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருப்பதைக் குறிக்கும் வகையிலான "எந்தத் தகவலும்" இல்லை என்று காவல்துறை கூறியுள்ளது.

வெள்ளி, 10 ஜூலை, 2026

மன்னாரில் கேள்விக்கு தவறான பதில் பிஞ்சுக் கன்னத்தில் வடுக்களை ஏற்படுத்திய ஆசிரியர்!


மன்னாரில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில், தரம் 5 இல் கல்வி கற்கும் சிறுமி ஒருவர் வகுப்பாசிரியரால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! 

 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விசேட வகுப்பின் போது, ஆசிரியர் கேட்ட கேள்விக்கு அந்த மாணவி தவறான பதிலை அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வகுப்பாசிரியர், சக மாணவர்கள் முன்னிலையிலேயே அந்தப் பிஞ்சுச் சிறுமியின் கன்னத்தில் பலமுறை பலமாக அறைந்துள்ளார். 

 ஆசிரியரின் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலால், சிறுமியின் கன்னத்தில் இரத்தக் கசிவு மற்றும் பலத்த காயங்கள் (இரத்தக் கண்டல்கள்) ஏற்பட்டுள்ளன. அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சிறுமியை மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தவறு செய்யும் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியர்களே, இப்படி மிருகத்தனமாக நடந்துகொள்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று! 

சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உறவினர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்பெயினின் பெடார் (Bedar) பகுதியில் காட்டுத்தீ 12 பேர் பலி!!

தெற்கு ஸ்பெயினில் ஒரு குக்கிராமத்தை நாசம் செய்துள்ள கொடூரமான காட்டுத்தீயை தீயணைப்பு வீரர்கள் அணைக்கப் போராடி வருகின்றனர். 

அல்மேரியா மாகாணத்தின் பெடார் பகுதியில் பன்னிரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், இறந்தவர்களில் சிலர் வாகனங்களில் கண்டெடுக்கப்பட்டனர் என்று பிராந்திய அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல்!!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு, மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கலவரத்தில் ஈடுபட்ட கைதிகளே இந்த மரண அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அச்சுறுத்தலில் "உன்னை எங்காவது கண்டால் கொன்றுவிடுவோம். வெளியே சிக்கும் போது உன்னை விடமாட்டோம், கொன்றுவிடுவோம்" என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகாரிக்குஎதிராக விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலைத் தொடர்ந்து, அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

குறித்த அதிகாரி, டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அன்று ஏற்பட்ட அவசர நிலைமையைக் கருத்திற்கொண்டு கடமைக்குச் சமூகமளித்திருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. 

 இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரியைப் பாதுகாக்குமாறு, சக அதிகாரிகள் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கதிர்காமம் சற்றுமுன் காட்டுக்குள் திறக்கப்பட்ட கதவு மயங்கிய மக்கள்!


Thank You Google

Thank You Google
Thanks