திங்கள், 24 ஆகஸ்ட், 2026

Starlink மூலம் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அனுமதி மறுப்பு

உக்ரைன், Elon Musk-ன் SpaceX நிறுவனத்தின் Starlink செயற்கைக்கோள் தொடர்பு சேவையைப் பயன்படுத்தி ரஷ்ய எல்லைக்குள் ஆழமான இராணுவத் தாக்குதல்களை மேற்கொள்ள அனுமதி கோரியிருந்த நிலையில், அந்தக் கோரிக்கையை Musk நிராகரித்ததாக உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy தெரிவித்துள்ளார். 

Zelenskyy வெளியிட்ட தகவலின்படி, உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் முன்னதாக Starlink-ஐ ரஷ்யப் பகுதிக்குள் பயன்படுத்த SpaceX ஒப்புதல் அளித்துள்ளதாக அவரிடம் தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில் அவர் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump-ிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார். 

ஆனால் பின்னர் Trump, Musk அந்தத் திட்டத்தை நிராகரித்துவிட்டதாக தமக்குத் தெரிவித்ததாக Zelenskyy கூறியுள்ளார்.

 Musk இந்த நடவடிக்கை போரை மேலும் தீவிரப்படுத்தக்கூடிய ஆபத்தான நடவடிக்கை எனக் கருதியதாகவும் Zelenskyy தெரிவித்துள்ளார். இந்த விவகாரம், உக்ரைன் போரில் Starlink தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும், ஒரு தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தின் செயற்கைக்கோள் வலையமைப்பு இராணுவ நடவடிக்கைகளில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. 

குறிப்பாக, 2022ஆம் ஆண்டிலும் ரஷ்ய ஆக்கிரமிப்பிலுள்ள கிரிமியா அருகே உக்ரைன் மேற்கொள்ளத் திட்டமிட்ட கடற்படை ட்ரோன் தாக்குதலுக்கு Starlink சேவையைச் செயல்படுத்துமாறு கேட்டபோது Musk மறுத்திருந்தார். 

அந்த நேரத்தில் தாக்குதல் போரை பெரிய அளவில் தீவிரப்படுத்தக்கூடும் என்ற கவலை அவருக்கு இருந்ததாக பின்னர் வெளியான தகவல்கள் தெரிவித்தன.

மேகமலையில் வசிக்கும்அரசு ஊழியர்கள் வெளியேற உத்தரவு.

மேகமலை வன விவசாயிகள் குடும்பத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க துறை தலைமை அதிகாரிகளுக்கு, தேனி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் கடமலை – மயிலை ஒன்றியத்தில் உள்ள வருசநாடு, மேகமலை, தும்மக்குண்டு, சிங்கராஜபுரம், நரியூத்து, முத்தாலம்பாறை, பொன்னம்படுகை, தங்கம்மாள்புரம், முருக்கோடை ஆகிய 9 ஊராட்சிகளுக்குட்பட்ட 98 மலைக் கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

 இந்நிலையில், 2021-ம் ஆண்டு பிப்.9-ம் தேதி இப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இங்கு வசிக்கும் 4,601 பேரை வெளியேற்ற வனத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, இவர்களை துணை ராணுவம் மூலம் அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் தொடர்ந்து போராடி வருகின்றன. 

தமிழக அரசும் மறுசீராய்வு மனு செய்யப்படும் என்று, இப்பகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளது. இந்நிலையில், வன விவசாயிகளின் குடும்பத்தில் உள்ள 118 அரசு ஊழியர்கள் அந்த நிலத்தை விட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில், துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்த விவரம்: வன விவசாயிகள் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் 118 பேர் ராணுவம், காவல் துறை, வேளாண்மை, கிராம நிர்வாக அலுவலர், சுகாதாரம், தபால் துறை, நியாய விலைக் கடை, விடுதி காப்பாளர், மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் குடும்பம் வனத்தை விட்டு வெளியேறாவிட்டால், இந்த 118 அலுவலர்கள் மீதும் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, துறை தலைமை அதிகாரிகளுக்கு தேனி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் ஊதியம், கவுரவ ஊதியம் பெறும் சத்துணவு ஊழியர்கள் எவரேனும் அப்பகுதியில் இருந்தால், அவர்கள் அங்கிருந்து வெளியேற மாவட்ட சத்துணவுத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பொதுமக்களும், பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அடுத்தடுத்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை சுற்றிவளைப்பில் 537 சந்தேகநபர்கள் கைது

நாடு முழுவதும் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள குற்ற மற்றும் போதைப்பொருள் தடுப்பு நாளாந்த தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் மேலும் 537 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


நேற்று (23) 27,001 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையிலேய​ே குறித்த சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேகநபர்களில் குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 147 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 அத்துடன், இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 50 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 89 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதேவேளை, ஏனைய வீதிப் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 4,126 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் 94000 டெங்கு நோயாளர்கள்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 94,037 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,962 ஆகும். அத்துடன், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஒகஸ்ட் மாதத்தில் இதுவரை 8,701 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.


ஜனவரி மாதத்தில் 7,866 பேரும், பெப்ரவரி மாதத்தில் 5,721 பேரும், மார்ச் மாதத்தில் 6,013 பேரும், ஏப்ரல் மாதத்தில் 5,651 பேரும், மே மாதத்தில் 8,590 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். 

 நாட்டின் மொத்த டெங்கு நோயாளர்களில் 52.93 சதவீதமானோர், அதாவது 49,771 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். இதற்கு மேலதிகமாக, தென் மாகாணத்தில் 13,763 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,519 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

 மாவட்ட மட்டத்தில் நோக்கும் போது, அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 20,034 ஆகும். கொழும்பு மாவட்டத்தில் 18,652 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் மாத்திரம் 3,787 நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர். 

 மேலும், கண்டி மாவட்டத்தில் 6,818 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 6,093 பேரும், காலி மாவட்டத்தில் 6,079 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 5,160 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 5,003 பேரும், கேகாலை மாவட்டத்தில் 2,713 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 2,651 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2,510 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். 

நாடு முழுவதும் அதிக அபாயம் உள்ள 76 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. டெங்கு நுளம்பு பெருகும் இடங்களைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், காய்ச்சல் நிலை காணப்பட்டால் தகுதியான மருத்துவரிடம் தாமதமின்றி சிகிச்சை பெறுமாறும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களை அறிவுறுத்துகின்றனர்.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

யாழில் கோடிக்கணக்கில் தங்கநகை கொள்ளை - பெண் உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் பெண் உள்ளிட்ட மூவர் காவல்துறையினரால் அதிரடியாக செய்யப்பட்டுள்ளார். ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்தமை, உடைமையில் வைத்திருந்தமை மற்றும் உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


யாழ்ப்பாணத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த சாவகச்சேரி காவல்துறையினர் பொம்மை வெளி பகுதியை சேர்ந்த பிரதான சந்தேகநபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , பெண் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் . கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை, வெவ்வேறு இடங்களில் அடகு வைத்து பணம் பெற்றமை தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில் , அடகு வைக்கப்பட்ட நகைகளை மீள பெற விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை அடையாளம் கண்டுள்ள நிலையில் ,அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

50% இறக்குமதி வரி அமெரிக்கா - அதே அளவு வரி கனடா

அமெரிக்கா-கனடா இடையேயான இறுதிகட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ரூ.1.8 லட்சம் கோடி மதிப்பிலான கனடா பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத இறக்குமதி வரியை விதித்தது. இதற்கு பதிலடியாக அதே அளவுக்கான வரியை விதிப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். 

இதைத் தொடர்ந்து இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வடஅமெரிக்க நாடுகளான அமெரிக்காவும் கனடாவும் நீண்ட கால நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. கனடாவின் சரக்கு ஏற்றுமதியில் 72 சதவீதம் அமெரிக்காவுக்கே செல்கிறது. 

ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்குப் பிறகு அமெரிக்கா-கனடா வர்த்தக உறவில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இருதரப்பு வர்த்தக கவலைகளை தீர்க்க இறுதிகட்ட பேச்சுவார்த்தை கடந்த 3 நாட்களாக நடந்து வந்தது. இப்பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நள்ளிரவு தோல்வியில் முடிந்தது. 

இதைத் தொடர்ந்து, கனடாவின் ரூ.1.8 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத இறக்குமதி வரியை உடனடியாக அமல்படுத்தியது. இது கனடா ஆண்டுதோறும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 5 சதவீதத்தை பாதிக்கும். ஏற்கனவே இந்த வரி விதிப்பு 3 நாட்களுக்கு முன்பு அமல்படுத்த அதிபர் டிரம்ப் திட்டமிட்டிருந்தார். பேச்சுவார்த்தைக்காகவே இந்த அமலாக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

திருகோணமலை திறப்பு விழாவில் களம் இறங்கிய நடிகர்கள்!!

Thank You Google

Thank You Google
Thanks