புதன், 16 செப்டம்பர், 2026

இந்தோனேசியாவின் கரிநிலப் பகுதிகளில் தீ,எல் நினோ'

போர்னியோ தீவின் இந்தோனேசியப் பகுதியிலுள்ள சுங்கை புத்ரி கிராமத்தில், தன்னார்வத் தீயணைப்புப் பணியில் ஈடுபடத் தயாராகும் இர்மா தனது கனமான ரப்பர் பூட்ஸ்களை (காலணிகளை) அணிந்துகொள்கிறார். முழுமையான பாதுகாப்பு உடை அணிந்து, நச்சுப் புகையால் சூழப்பட்ட தீ விபத்து நடைபெறும் பகுதிகளுக்கு அவர் தனது மோட்டார் சைக்கிளில் செல்கிறார். 

 பூமியின் மிக அதிக பல்லுயிர் வளம் கொண்ட பகுதிகளில் ஒன்றைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட, இந்தோனேசியாவின் முதல் பெண்கள் மட்டுமே கொண்ட தீயணைப்புக் குழுவான 'பவர் ஆஃப் மாமா' (Power of Mama) அமைப்பின் உறுப்பினராக 39 வயதான இவர் உள்ளார்."நாங்கள் இல்லத்தரசிகளாக இருப்பதால், இதன் பாதிப்புகளை அதிகம் உணர்வது நாங்கள்தான்; எனவே இது குறித்து ஏதேனும் செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேன்," என்று இதில் இணைவதற்கான தனது உந்துதல் குறித்து இர்மா கூறுகிறார். 

இந்தோனேசியாவின் போர்னியோ பகுதியில் உள்ள மேற்கு கலிமந்தன் (West Kalimantan) பிராந்தியத்தைச் சேர்ந்த 10 கிராமங்களைச் சேர்ந்த, 20 முதல் 58 வயதுக்குட்பட்ட 146 பெண்களைக் கொண்டு இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 'YIARI' என்ற அரசு சாரா அமைப்பால் 2022-ல் உருவாக்கப்பட்ட இக்குழுவின் உறுப்பினர்களுக்கு, தீயணைப்புப் பணிகள் முதல் கண்காணிப்பு ட்ரோன்களை இயக்குதல் மற்றும் அத்தியாவசியமான சமூக விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ளுதல் வரை பல்வேறு துறைகளில் தீவிரப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, குழுவின் தன்னார்வலர்கள் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் ரோந்து செல்கின்றனர். அவர்கள் அபாயப் பகுதிகளைக் கண்டறியும்போது, ​​இருப்பிடங்களைப் பதிவுசெய்து, வனத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சிறப்புப் படையான மங்களா அக்னி வனப் படைக்குத் தகவல் தெரிவிக்கின்றனர். 

 அவர்கள் தோட்ட மற்றும் வன எல்லைப் பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்து, இருப்பிடக் குறியீடுகளைப் பதிவுசெய்து, புகைப்படங்கள் எடுத்து, அந்தத் தகவல்களைச் சிறப்பு கண்காணிப்புச் செயலியில் உள்ளிடுகின்றனர். இது சில நேரங்களில் கடினமான சூழ்நிலைகளில் செய்யப்படும் சோர்வூட்டும் பணியாகும்.

எட்டு நாடுகளின் மூத்த இராணுவத் தலைவர்களை சந்தித்த CENTCOM!

கடந்த வாரம் ஜெர்மனியில் நடைபெற்ற திட்டமிடப்பட்ட மாநாட்டில் எட்டு நாடுகளைச் சேர்ந்த மூத்த இராணுவத் தலைவர்களைச் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) அதிகாரிகள் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய கிழக்கில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து குறித்த தரப்பினர் விவாதித்ததாக கூறப்படுகிறது. 

அமெரிக்காவைச் சேர்ந்த முக்கிய செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, “இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், கட்டார், ஜோர்தான் மற்றும் எகிப்து ஆகிய எட்டு நாடுகளின் இராணுவத் தலைமை அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக இஸ்ரேலிய அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஈரான், அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்கியிருந்தாலும், அமெரிக்க இராணுவப் படைகள் மத்திய கிழக்கில் இருந்து வெளியேறாது என்று பங்கேற்பாளர்களிடம் CENTCOM தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை விரிவுபடுத்துவதற்கான அமெரிக்காவின் திட்டங்கள் குறித்தும் அவர் மாநாட்டில் விளக்கமளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பதற்றம் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

மணிப்பூரில் மீண்டும் வன்முறை

மணிப்பூரில் மீண்டும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. தமன்லாங் மற்றும் நோனி மாவட்டங்களில் கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நாகா பயங்கரவாதிகள், 2 பெண்கள் உள்பட 4 பேரைக் கொலை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் ஆயுதக் குழுக்களின் தொடர்ச்சியான செயல்பாடுகள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு குகி-சோ கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மணிப்பூரை இந்த ஆண்டு முழுவதும் நாகா ஆயுதக் குழுக்கள்தான் இயக்கி வருவதாக குகி-சோ கவுன்சில் குற்றம் சாட்டியுள்ளது. 

மேலும், இந்த ஆண்டு மட்டும் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 22 குகி பழங்குடியின மக்கள் அந்தக் கும்பலால் கொல்லப்பட்டதாகவும் அந்தக் கவுன்சில் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக குகி-சோ கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து, மணிப்பூரில் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஆயுதக் குழுக்களின் தொடர்ச்சியான செயல்பாடு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன், மணிப்பூரை மற்றொரு முழு அளவிலான மோதலை நோக்கித் தள்ளும் அபாயத்தையும் கொண்டுள்ளது” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு போலி ஆவணங்களை தயாரித்து நிதி மோசடி செய்த நபர் கைது

கொழும்பு 07, பான்ஸ் வீதியில் அமைந்துள்ள சொத்து ஒன்றுக்கு தொடர்புடைய போலி ஆவணத்தை தயாரித்து ஒரு கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 


குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, அதன் நிதிப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நேற்றைய தினம் (15) களுத்துறை நகரப் பகுதியில் வைத்து இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறைப் பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவராவார். சந்தேகநபர் குறித்த சொத்து தொடர்பில் போலி ஆவணங்களைத் தயாரித்து, அவற்றை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகவும் சமர்ப்பித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

குறித்த சொத்தினை ஒரு கோடி ரூபாய் பணத்திற்கு விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன் பலத்த பாதுகாப்பு

கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றப் பகுதியைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் சந்தேகநபராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையிலேயே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த வழக்கு விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

செவ்வாய், 15 செப்டம்பர், 2026

யாழ், நல்லூர் தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் வெண்கல உருவச்சிலை !!

யாழ், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாகதீபம் தி*லீபனின் நினைவிடத்தில் அவரது வெண்கல உருவச்சிலை வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

தியாகதீபம் தி*லீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நல்லூரில் உணர்வுபூர்வமாகத் தொடங்கின. நினைவிடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அவரது வெண்கல உருவச்சிலைக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டும், மலர் தூவியும் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதேவேளை, தியாகதீபம் திலீபன் தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நல்லூர் வடக்கு வீதியிலும் சம நேரத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. 1987ஆம் ஆண்டு ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, இந்திய மற்றும் இலங்கை அரசுகளுக்கு எதிராக நல்லூர் வீதியில் நீராகாரமும் இன்றி சொட்டு நீரும் அருந்தாமல் தியாகதீபம் தி*லீபன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வீரச்சாவடைந்தார்.

 ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் இவரது நினைவேந்தல் வார நிகழ்வுகள் தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகின.

யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நேரமான காலை 9:45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகின.

மூத்த போராளியும், மாவீரர்களின் தந்தையுமான பஷீர் காக்கா பொதுச் சுடரினை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட பலரும் மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

மூவர்ணக் கொடியுடன் முதல்வர் விஜய், அஜித்

கார் பந்தயம் நிறைவடைந்த பின்னர், பந்தயக் களத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் ரேஸர் அஜித்குமார் இருவரும் மூவர்ணக் கொடியுடன் இணைந்து இருக்கும் காட்சிகள் மற்றும் முதல்வர் ரேஸ் டிராக்கில் ஓடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


தமிழக முதல்வர் விஜய் தமிழ்நாட்டில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரத்தை உருவாக்குவது, புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகிய நோக்கங்களுடன் நேற்று (செப்.,12) பிரிட்டன் சென்றார். அங்கு அவர் இந்த சில்வர்ஸ்டோன் கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அதை தொடர்ந்து, சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் நடைபெற்ற மிச்செலின் லே மான்ஸ் கப் கார் பந்தயத்தை நேரில் சென்று முறைப்படி கொடியசைத்து தொடங்கி வைத்தார். லண்டன் சில்வர்ஸ்டோன் ரேஸிங் சர்கியூட்டில் கார் ரேஸ் முடிந்த பிறகு மூவர்ணக் கொடியுடன் முதல்வர் விஜய் , அஜித்குமார் இருவரும் உள்ள காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகின.

Thank You Google

Thank You Google
Thanks