செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

இஸ்லாமிய பேரரசரின் வரலாறு!!

சுமார் ஆறு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மூன்று கண்டங்களின் முக்கிய பிரதேசங்களை (ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா) கட்டி ஆண்ட இஸ்லாமிய கிலாஃபத் எனும் உஸ்மானிய சாம்ராஜ்யம் (Ottoman Empire), 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வரலாற்றின் பக்கங்களில் இருந்து மறையத் தொடங்கியது. 


1924-ல் இந்தப் பேரரசு உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்ட நிகழ்வு, நவீன உலக வரைபடத்தையே மாற்றியமைத்தது. இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தின் சிதறலிலிருந்து டஜன் கணக்கான புதிய நாடுகள் பிறந்தன. ஒவ்வொன்றும் தனக்கான எல்லைகளையும், இறையாண்மையையும், கொடியையும் பெற்றுக்கொண்டன. 

ஆனால், இந்த வரலாற்றுப் பிரிவினையில் ஒரு தேசம் மட்டும் அனாதையாக்கப்பட்டது. அதுதான் ஃபலஸ்தீனம் (Palestine). முதல் உலகப் போரின் (1914-1918) முடிவிலும், அதனைத் தொடர்ந்து 1924-ல் கிலாஃபத் முழுமையாகக் கலைக்கப்பட்ட பின்னரும், மத்திய கிழக்கின் நிலப்பரப்பு பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற காலனியாதிக்க சக்திகளால் கூறு போடப்பட்டது. உஸ்மானியரின் ஆளுகைக்குக் கீழ் ஒரே நிலப்பரப்பாக இருந்த பகுதிகள் தனித்தனி நாடுகளாக அறிவிக்கப்பட்டன.


 வரலாற்று ரீதியாக அந்தப் பிரிவினைக்குப் பின் உருவான நாடுகள் மற்றும் அவற்றின் சுதந்திரக் காலத்தை பார்ப்போம். 

1. துருக்கி (Turkey - 1923): உஸ்மானியப் பேரரசின் மையப்பகுதியாக இருந்த இடத்தில், முஸ்தபா கமால் அத்தாதுர்க் தலைமையில் நவீன குடியரசாகத் துருக்கி உருவானது. இதுவே உஸ்மானியரின் நேரடி வாரிசு நாடாகும்.

 2. ஷாம் பிரதேசம் (The Levant): சிரியா (1946): உஸ்மானிய ஆட்சிக்குப் பிறகு பிரான்ஸின் காலனித்துவக் கட்டுப்பாட்டில் இருந்தது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சுதந்திரம் பெற்றது.

லெபனான் (1943): சிரியாவிலிருந்து பிரிக்கப்பட்டு, பிரான்ஸ் ஆட்சியின் கீழ் நிர்வகிக்கப்பட்டு, பின்னர் தனி நாடானது. ஜோர்டான் (1946): முன்னதாக "டிரான்ஸ்ஜோர்டான்" என்று அழைக்கப்பட்ட இது, பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு ஹுசைனி வம்சத்தின் கீழ் தனி நாடானது. ஈராக் (1932): உஸ்மானியரின் மாகாணங்களாக இருந்த பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்து பின்னர் சுதந்திரம் பெற்றது. 

3. அரேபியத் தீபகற்பம் (The Arabian Peninsula): சவூதி அரேபியா (1932): உஸ்மானிய வீழ்ச்சிக்குப் பிறகு, நஜ்த் மற்றும் ஹிஜாஸ் பகுதிகளை இணைத்து இப்னு சவூத் தலைமையில் இன்றைய சவூதி அரேபியா உருவானது. யமன் (1918, 1967): வடக்கு யேமன் 1918-ல் உஸ்மானியர்களிடமிருந்து விடுதலை பெற்றது. தெற்கு யேமன் 1967-ல் பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. 

வளைகுடா நாடுகள்: குவைத் (1961), பஹ்ரைன் (1971), கத்தார் (1971), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (1971) ஆகியவை நீண்ட காலம் பிரிட்டிஷ் பாதுகாப்பில் இருந்து, பின்னர் தனித்தனி தேசங்களாக உருவெடுத்தன. 

4. வட ஆப்பிரிக்கா: எகிப்து (1922): உஸ்மானியரின் முக்கிய மாகாணமாக இருந்த எகிப்து, பிரிட்டிஷ் காலனித்துவத்திலிருந்து விடுபட்டு தனி நாடானது.

 5. பால்கன் மற்றும் ஐரோப்பிய பகுதிகள்: உஸ்மானியப் பேரரசின் வீழ்ச்சிக்கு முன்னரே அல்லது வீழ்ச்சியின் போதே கிரேக்கம் (1830), செர்பியா, பல்கேரியா, ருமேனியா, அல்பேனியா மற்றும் போஸ்னியா போன்ற நாடுகள் ஐரோப்பியப் பகுதியில் தனித்தனியாகப் பிரிந்து சென்றன. 

ஆனால் ஃபலஸ்தீனம்? மேலே குறிப்பிடப்பட்ட பட்டியல் ஒரு கசப்பான உண்மையை உணர்த்துகிறது. உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்த எகிப்தியர்களுக்கும், ஈராக்கியர்களுக்கும், சிரியர்களுக்கும், துருக்கியர்களுக்கும் தனித்தனி நாடுகள் கிடைத்தன. (குர்துக்களுடயை போராட்டம் தனி நாடு போராட்டம் என்பன நீண்ட நெடிய வரலாறை கொண்டது. 

இன்னொரு நாளில் அதை பார்ப்போம்) அவர்கள் அனைவரும் இன்று ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசுகளாக (Nation States) உள்ளனர். ஆனால், ஃபலஸ்தீனம் (1948)? உஸ்மானிய ஆட்சிக்குப் பிறகு பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் (British Mandate) கீழ் சென்ற ஃபலஸ்தீனம், மற்ற அரபு நாடுகளைப் போல சுதந்திரம் பெறுவதற்குப் பதிலாக, ஒரு மாபெரும் துரோகத்தைச் சந்தித்தது.

1948-ல் ஃபலஸ்தீன மண்ணில், ஐரோப்பாவிலிருந்து வந்த யூதர்களுக்காக ஆக்கிரமிப்பு தேசம் என்ற புதிய நாடு உருவாக்கப்பட்டது. பூர்வீக ஃபலஸ்தீன மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் பறிக்கப்பட்டன. 1948-ல் தொடங்கிய அந்த ஆக்கிரமிப்பு இன்றும் தொடர்கிறது. 

எல்லோருக்கும் நாடு, ஃபலஸ்தீனர்களுக்கு மட்டும் அகதி முகாம் என்ற நிலை உருவாக்கப்பட்டது. இன்றுவரை ஃபலஸ்தீனம் ஒரு முழுமையான சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்படவில்லை. இன்று வரைபடத்தில் நாம் காணும் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் உஸ்மானியப் பேரரசின் சாம்பலில் இருந்து எழுந்தவையே. 

ஆனால், அந்த வரைபடத்தில் ஃபலஸ்தீனம் என்ற பெயர் மட்டும் அழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. காஸா, மேற்குக் கரை, அல்குத்ஸ் - ஜெருசலேம் என எஞ்சியிருக்கும் சிறு நிலப்பகுதிகளையும் ஆக்கிரமிப்பு தேசம் தொடர்ந்து அபகரித்து வருகிறது. வரலாறு பல நாடுகளை உருவாக்கியது, ஆனால் ஃபலஸ்தீனத்தை மட்டும் வஞ்சித்தது என்பதே நிதர்சனம்.

அப்துல்லா இப்னு நசீர்

அமெரிக்கா மீண்டும் ஒரு ரஷ்ய எண்ணெய் கப்பல் பிடிப்பு!

சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, தடைகளை மீறிச் சென்ற ரஷ்யாவின் ‘நிழல் கப்பல் படை’ (Shadow Fleet) சார்ந்த ‘அக்விலா II’ (Aquila II) என்ற எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் இந்தியப் பெருங்கடலில் இடைமறித்துக் கைப்பற்றியுள்ளன. 

கரீபியன் கடலில் இருந்து இந்தியப் பெருங்கடல் வரை நீண்ட தூரம் இந்த கப்பலைப் பின்தொடர்ந்துச் சென்ற அமெரிக்க ராணுவம், வெற்றிகரமாக அதன் கட்டுப்பாட்டைத் தன்வசம் கொண்டு வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து அமெரிக்கத் தரப்பு வெளியிட்ட அறிக்கையில், “அது தப்பியோடியது, நாங்கள் பின்தொடர்ந்தோம்… 

எங்களை விட வேகமாக உங்களால் ஓட முடியாது, அதற்குள் உங்கள் எரிபொருள் தீர்ந்துவிடும்” என அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், வெனிசுலா மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில் முன்னெடுத்துள்ள ‘மரைடைம் குவாரன்டைன்’ (Maritime Quarantine) நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது. 

இக்கப்பல் சட்டவிரோதமாக எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டதாகவும், சர்வதேசப் பாதுகாப்பு விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் ‘மரைனேரா’ (Marinera) என்ற மற்றொரு ரஷ்யக் கொடி ஏந்திய கப்பல் அட்லாண்டிக் பகுதியில் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 இந்த நடவடிக்கை சர்வதேச எரிபொருள் சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதோடு, உலக நாடுகளுக்கிடையிலான அரசியல் உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

103 குற்றவாளிகளை இலங்கைக்கு இன்டர்போல் அறிவிப்பு!!

வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் 103 குற்றவாளிகளை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வருவதற்காக, இன்டர்போல் (Interpol) மூலம் சிவப்பு அறிவிப்புகள் (Red Notices) பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு. வூட்லர் (ASP F.U. Wootler) இன்று (பெப்ரவரி 9, 2026) தெரிவித்துள்ளார். 


 வெளிநாடுகளில் இருந்து கொண்டு இலங்கையில் பாதாள உலகக் குழுக்களை இயக்குபவர்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்களைக் இலக்கு வைத்து இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 103 சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த விசேட சர்வதேச பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 

இந்த 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும், தேடப்பட்டு வந்தவர்களில் மூன்று பேர் ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்களுக்குச் சொந்தமான சுமார் 50 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் (காணிகள், வாகனங்கள் மற்றும் பணம்) காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன . 

துபாயில் இருந்து கொண்டு திட்டமிட்ட குற்றங்களை வழிநடத்தும் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கண்டறிய சர்வதேச காவல்துறை யினருடன் (Interpol) இணைந்து இலங்கை காவல்துறையினா் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகின்றனர். 

தப்பிச் சென்றவர்களின் எஞ்சிய சொத்துக்களையும் சட்ட ரீதியாக அரசுடைமையாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தொிவித்தாா். 

 103 பேரில் 30-க்கும் மேற்பட்ட முக்கிய குற்றவாளிகள் துபாயில் இருந்தே தங்களது பாதாள உலகக் குழுக்களை வழிநடத்துகின்றனர். நிதி மோசடி மற்றும் சில பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் பிரான்ஸில் தஞ்சம் புகுந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

எஞ்சியவர்கள் இந்தியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் போலி அடையாளங்களுடன் வசித்து வருகின்றனர் என தொிவிக்கப்படுகின்றது இந்த ஆண்டின் தொடக்கத்தில் துபாயிலிருந்து 3 முக்கிய குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். 

அவர்களில் கந்தானை (Kandana) நபர் (30 வயது) 2025 ஜூலை மாதம் வாகனத்திற்குள் வைத்து ஒருவரைச் சுட்டுக் கொலை செய்த வழக்கின் முக்கிய குற்றவாளி. எல்பிட்டிய (Elpitiya) நபர் (52 வயது) தென் மாகாணத்தில் ‘ஒப்பந்தக் கொலைகள்’ (Contract Killings) மற்றும் ஆயுதக் கடத்தல்களில் ஈடுபட்ட பாதாள உலகத் தலைவன். கல்கிஸ்சை (Mount Lavinia) பெண் (56 வயது) வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றில் பணிபுரிந்தபோது அரசாங்க நிதியை மோசடி செய்த குற்றத்திற்காகத் தேடப்பட்டவர். 

இன்டர்போல் கண்காணிப்பில் உள்ள மற்றவர்களின் பெயா்களை இலங்கை காவல்துறையினா் பகிரங்கப்படுத்தாவிட்டாலும், பிரமிட் திட்டங்கள் மற்றும் வங்கி மோசடிகளில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியவர்கள், இலங்கையில் கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் திட்டமிடுபவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு இணைய பண மோசடிகளில் ஈடுபடுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குருநாகலில் பற்றி எரிந்த தலைக்கவசத் தொழிற்சாலை!!

இந்தத் தீ பரவலால் தொழிற்சாலை முழுமையாக அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

திங்கள், 9 பிப்ரவரி, 2026

அம்பலாங்கொடை பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற கள்ள மாடு லொறி !!

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆந்தாதொல பிரதேசத்தில், பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற லொறி ஒன்றின் மீது இன்று (09) பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர். 

அம்பலாங்கொடை திசை நோக்கிப் பயணித்த சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றினைப் பரிசோதிப்பதற்காக பொலிஸார் நிறுத்துமாறு சைகை செய்தபோது, அந்த லொறி பொலிஸாரின் கட்டளையை மீறி நிறுத்தாமல் முன்னோக்கிச் சென்றுள்ளது. 

இதன் போது பொலிஸ் அதிகாரிகள் லொறியைப் பின்தொடர்ந்து சென்று நிறுத்த முயற்சித்த வேளையில், லொறி தொடர்ந்து தப்பியோட முயன்றதால் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. குறித்த லொறியைப் பரிசோதித்த போது, அதில் 10 பசுக்களும் 4 எருமை மாடுகளும் இருந்துள்ளதுடன், அவற்றில் ஒரு பசு கழுத்து அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. 

லொறியில் இருந்த இரு சந்தேகநபர்களை 5,200 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் லொறியுடன் பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அக்குரஸ்ஸ மற்றும் பேருவளை பிரதேசங்களைச் சேர்ந்த 42 மற்றும் 46 வயதுடையவர்களாவர். லொறியின் சாரதி மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் தப்பியோடியுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கு அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இங்கிலாந்துக்குச் செல்லும் விசா டிஜிட்டல் அனுமதி 02,12, 2026 அன்று நள்ளிரவில் முடிவடைகிறது.


இங்கிலாந்துக்குச் செல்லும் விசா நாட்டினருக்கான டிஜிட்டல் அனுமதியில் செய்யப்பட்ட சமீபத்திய மாற்றங்களை நாங்கள் சுருக்கமாகக் கூறுகிறோம், மின்னணு பயண அங்கீகார (ETA) தேவைகளை அமல்படுத்துவதில் கூர்மையான கவனம் செலுத்துகிறோம் மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான சில எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்களை எடுத்துக்காட்டுகிறோம். 

 1. விசா தேசிய பார்வையாளர்களுக்கான இங்கிலாந்துக்குள் நுழைவதற்கான டிஜிட்டல் அனுமதி பிப்ரவரி 25, 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு பணம் செலுத்தப்பட்ட இங்கிலாந்து வருகையாளர் விசா விண்ணப்பங்களுக்கு, வெற்றிகரமான விண்ணப்பதாரர்கள் விசா விக்னெட் ஸ்டிக்கரைப் பெறாமல் போகலாம், அதற்கு பதிலாக ஒரு eVisaவைப் பெறுவார்கள். 

தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, ஏனெனில் விசா விக்னெட்டைப் பெற முடியாது, மேலும் யதார்த்தமாக 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உடல் விசா விக்னெட் படிப்படியாக நிறுத்தப்படும். நடைமுறையில் புதிய செயல்முறை மிகவும் நெறிப்படுத்தப்பட்ட அமைப்பை வழங்குகிறது, 

இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த ஒரு முறை மட்டுமே விசா விண்ணப்ப மையத்தில் (VAC) கலந்துகொள்கிறார்கள், மேலும் அவர்களின் பாஸ்போர்ட் அவர்களின் நியமனத்தின் முடிவில் திருப்பி அனுப்பப்படும். 

புதிய கட்டமைப்பு ETA க்கு முற்றிலும் தனித்துவமானது, இதற்காக விசா நாட்டினர் தகுதியற்றவர்களாக உள்ளனர், மேலும் UK குடிவரவு விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளின் கட்டமைப்பின் கீழ் விண்ணப்பங்கள் தொடர்ந்து மதிப்பிடப்படும். 

பிப்ரவரி 25, 2026 க்குப் பிறகும் சிலருக்கு உடனடி குறுகிய காலத்திற்கு விசா விக்னெட்டுகள் வழங்கப்படலாம் என்றாலும், UK க்குச் செல்லும் அனைவரும் தங்கள் eVisa-வைச் சரிபார்க்கவும், பாஸ்போர்ட் விவரங்களைப் புதுப்பிக்கவும், தங்கள் நிலையைப் பகிர்ந்து கொள்ளவும் UKVI கணக்கை உருவாக்கியுள்ளதை உறுதி செய்ய வேண்டும். 

எந்தவொரு தாமதங்கள் அல்லது கூடுதல் சோதனைகளைத் தவிர்க்க அவர்கள் தங்கள் தற்போதைய பாஸ்போர்ட்டை eVisa-வுடன் இணைக்க வேண்டும். UK க்குச் செல்வதற்கு முன் eVisa புதுப்பிப்புகள் செய்யப்பட வேண்டிய இடங்களில், அவை இந்த வலைத்தளம் வழியாகச் செய்யப்படும். 

தங்கள் பெயர், பிறந்த தேதி அல்லது தேசியத்தைப் புதுப்பித்தால், தனிநபர்கள் மாற்றத்தை நிரூபிக்கும் இணக்கமான அடையாள ஆவணத்தைப் பதிவேற்ற வேண்டும். 

 2. ETA தேவைகள் / இரட்டை பிரிட்டிஷ் மற்றும் ETA தகுதியுள்ள நாட்டினரை இன்னும் வலுவாக அமல்படுத்துதல் ETA அளவுகோல்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லை, ஆனால் கேரியர்களால் கட்டாயத் தேவையை அமல்படுத்துவதும், ETA இல்லாதவர்களுக்கு UK நுழைவுத் துறைமுகத்திற்கு வருபவர்களுக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையும் இருக்கும். 

UK மற்றும் ஐரிஷ் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக, பிரிட்டிஷ் வெளிநாட்டு பிரதேச குடிமக்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பிரிட்டிஷ் நாட்டினர் ETA தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். தற்போது லண்டன் மற்றும் மான்செஸ்டர் விமான நிலையங்களுக்கு "வெளிப்புற போக்குவரத்தில்" UK வருபவர்களுக்கு ETA விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இரட்டை பிரிட்டிஷ் / ஐரிஷ் மற்றும் ETA தகுதியுள்ள நாட்டினர் பிப்ரவரி 25, 2026 முதல், எந்தவொரு UK மற்றும் ஐரிஷ் குடிமக்களும் அவர்களின் இரட்டை தகுதியுள்ள தேசியத்தின் அடிப்படையில் ETA க்கு தகுதி பெற மாட்டார்கள், மேலும் UK க்கு பயணம் செய்ய அவர்கள் செல்லுபடியாகும் UK / ஐரிஷ் பாஸ்போர்ட்டுகள் அல்லது வசிக்கும் உரிமைக்கான உரிமைச் சான்றிதழுடன் அங்கீகரிக்கப்பட்ட பிற தேசிய பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும்.

விலக்கு அளிக்கும் சூழ்நிலைகளில், எடுத்துக்காட்டாக, UK / ஐரிஷ் பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் பாஸ்போர்ட்டுகள் வெளிநாட்டில் தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ, வேறு எந்த வழியும் இல்லாதபோது - சிறந்ததாக இல்லாவிட்டாலும், போர்டிங் நோக்கங்களுக்காக அவர்களின் இரட்டை தகுதியுள்ள பாஸ்போர்ட்டின் அடிப்படையில் ETA க்கு விண்ணப்பிக்க வேண்டும். இருப்பினும், UK க்குள் நுழைந்ததும், அவர்களின் UK அல்லது ஐரிஷ் தேசியம் சரிபார்க்கப்படும் வரை அவர்கள் கூடுதல் அடையாள சோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும், இது தாமதங்களை ஏற்படுத்தக்கூடும். 

 3. நடந்துகொண்டிருக்கும் ஆலோசனைகள் (i) ஈட்டிய தீர்வு இந்த ஆலோசனை பிப்ரவரி 12, 2026 அன்று நள்ளிரவில் முடிவடைகிறது, 

மேலும் எந்தவொரு புதிய சட்டமும் ஏப்ரல் 2026 முதல் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் தாமதத்திற்கு உட்பட்டது. ILR-க்கான தகுதி காலங்கள் குறித்து ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான தற்போதைய "செய்தி அனுப்புதல்" குறித்த எங்கள் ஆலோசனை எங்கள் அக்டோபர் 2025 குடியேற்ற புதுப்பிப்பைப் போலவே உள்ளது (இங்கே). (ii) தற்காலிக பற்றாக்குறை பட்டியல் (TSL) தற்போதைய TSL, டிசம்பர் 31, 2026 அன்று அல்லது அதற்கு முன்னர் ஒதுக்கப்பட்ட CoSகளுக்கு செல்லுபடியாகும்.

 இடம்பெயர்வு ஆலோசனைக் குழு தற்போது TSL-ஐ மதிப்பாய்வு செய்து வருகிறது, மேலும் ஏதேனும் மாற்றங்கள் ஜூலை 2026 இல் வெளியிடப்படும். தற்போதைய TSL-ன் கீழ் ஒதுக்கப்பட்ட CoS-களைக் கொண்ட நபர்கள், டிசம்பர் 31, 2026 க்குப் பிறகும் இடைக்கால ஏற்பாடுகளிலிருந்து தொடர்ந்து பயனடைவார்கள். 

 4. பணியாளர்கள் அல்லாதவர்களின் வேலை செய்யும் உரிமைக்கான (RTW) முதலாளிகளின் சிவில் மற்றும் குற்றவியல் பொறுப்புகள் எல்லைப் பாதுகாப்பு, புகலிடம் மற்றும் குடியேற்றச் சட்டம் 2025 டிசம்பர் 2025 இல் அரச ஒப்புதலைப் பெற்றது, இது "பணியாளர் அல்லாத" வேலை மாதிரிகளின் பரந்த வரம்பிற்கு வேலை செய்யும் உரிமைத் தேவைகளை விரிவுபடுத்துகிறது. 

இவற்றில் இப்போது ஏஜென்சி மற்றும் ஜிக்-எகானமி தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள், ஒரு தொழிலாளியின் ஒப்பந்தத்தின் கீழ் சாதாரண அல்லது தற்காலிக தொழிலாளர்கள், தனிப்பட்ட துணை ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சேவை வழங்குநர்களை ஊதியத்திற்காக வாடிக்கையாளர்கள் அல்லது வாடிக்கையாளர்களுடன் இணைக்கும் ஆன்லைன் பொருத்துதல் சேவைகள் ஆகியவை அடங்கும். 

இருப்பினும், இந்த மாற்றங்கள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை, மேலும் யதார்த்தமாக முதலில் சட்டவிரோத வேலை தொடர்பான நடைமுறைக் குறியீடு மற்றும் குடியேற்ற (வேலைவாய்ப்பு மீதான கட்டுப்பாடுகள்) ஆணை 2007 இன் கீழ் விதிகளில் திருத்தம் தேவைப்படும்.

மின்னணு விசா தனியார் நிறுவனங்களுக்கு விசாரணைக்கு!!

மின்னணு விசா வழங்கும் செயல்முறையை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதற்கான முந்தைய அரசாங்கத்தின் முடிவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனுக்கள் மார்ச் 25 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு முன் இன்று இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டதாக செய்தியாளர் தெரிவித்தார். 

 முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பின்னர், மேலும் ஆதரவு மற்றும் உண்மைகளை சரிபார்ப்பதற்காக மார்ச் 25 ஆம் தேதி மனுக்களை திரும்பப் பெறுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

 மின்னணு விசா வழங்குவதை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதற்கான முந்தைய அரசாங்கத்தின் முடிவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பலர் இந்த மனுக்களை தாக்கல் செய்தனர்.

Thank You Google

Thank You Google
Thanks