ஈரானால் ஹோர்முஸ் நீரிணை ஊடாக மேற்கொள்ளப்படும் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா தற்போது அந்தப் பகுதியில் கடற்படை முற்றுகையை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இது குறித்து ஈரான் அரச தொலைக்காட்சி ஒன்றுக்குக் கருத்து தெரிவித்த மொஹ்சன் ரெசாய், ட்ரம்ப் ஹோர்முஸ் நீரிணையின் காவல்துறையாக மாற விரும்புகிறார்.
இது உண்மையிலேயே உங்கள் வேலையா? அமெரிக்கா போன்ற ஒரு வலிமையான இராணுவத்தின் வேலை இதுதானா?" எனக் கேள்வி எழுப்பினார்.அமெரிக்காவின் இந்தப் போர்க்கப்பல்கள் ஈரானின் முதல் ஏவுகணைத் தாக்குதலுக்கே மூழ்கடிக்கப்படும் என்றும், இவை அமெரிக்க இராணுவத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கக் கப்பல்கள் ஈரானின் ஏவுகணை இலக்குகளுக்கு மிக அருகில் இருப்பதாகவும், அவற்றை அழிக்கும் திறன் ஈரானிடம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரானின் புரட்சிகர இராணுவப் படையின் முன்னாள் தலைமைத் தளபதியான (1981 - 1997) மொஹ்சன் ரெசாய், ஈரானின் மூத்த இராணுவ நிபுணர்களில் ஒருவராவார். கடந்த மாதம் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியினால் இவர் இராணுவ ஆலோசகராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஈரானுடனான தற்போதைய மோதலின் போது, தனது மிகவும் விலையுயர்ந்த கண்காணிப்பு ட்ரோன்களில் ஒன்றை இழந்ததை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் 9 அன்று பாரசீக வளைகுடாவின் மீது ஒரு பணியில் ஈடுபட்டிருந்த MQ-4C டிரைட்டன் ட்ரோன் திடீரெனக் கீழே இறங்கி, விமானப் பயணத்தைக் கண்காணிக்கும் தளங்களிலிருந்து மறைந்து போனது. இந்த விபத்து அறிக்கை குறிப்பில்,
யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், செயல்பாட்டுப் பாதுகாப்பு காரணங்களுக்காக விபத்து நடந்த இடம் வெளியிடப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேதாரமானது 2.5 மில்லியன் டாலர்களைத் தாண்டும்போதோ அல்லது ஒரு விமானம் முற்றிலுமாக அழிக்கப்படும்போதோ அது "வகுப்பு A" விபத்தாக இந்தச் சம்பவம் வகைப்படுத்தப்படும்.
அந்த வகையில் சுமார் 240 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள MQ-4C டிரைட்டன் ட்ரோனின் இழப்பு A வகுப்பு விபத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

