வெள்ளி, 17 ஜூலை, 2026

காணாமல் ஆக்கப்பட்டோரின் வலி எனக்கும் தெரியும்- டக்ளஸ்

ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பூர்வீகக் காணிகளை உத்தியோகபூர்வமாக விடுவித்திருந்தோம். 

தொடர்ந்தும் மேலதிகக் காணிகளை விடுவிக்க இருந்த சூழலில் திடீரெனத் தேர்தல் அறிவிக்கப்பட்டமையால், எம்மால் அந்தப் பணிகளை முழுமைப்படுத்த முடியாமல் போய்விட்டது” என முன்னாள் கடற்றொழில் அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) பொதுச்செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் பிரதான தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார். 

தற்போதைய புதிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் காணி விடுவிப்புக் கொள்கை குறித்து குற்றஞ்சாட்டிய டக்ளஸ் தேவானந்தா கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் சிவிலியன்களின் நடமாட்டமே இன்றி உயர் பாதுகாப்பு வலயங்களாக (High Security Zones) முடக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாமே அப்போதைய அரசாங்கங்களுடன் தொடர்ச்சியாகப் பேசி உத்தியோகபூர்வமாக விடுவித்து மக்கள் வசம் ஒப்படைத்திருந்தோம்.

” எனத் தொிவித்தாா். கடந்த ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகுதியில், ராணுவத்தினர் சிவில் மக்களிடம் மீள ஒப்படைப்பதற்கு முழுமையாகச் சம்மதம் தெரிவித்திருந்த குறிப்பிட்ட எல்லைக் காணிகளைக் கூட, ஆட்சிக்கு வந்துள்ள தற்போதைய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் இதுவரை மக்களிடம் மீளக் கையளிக்காமல் பாராமுகமாகவே உள்ளது என அவர் சாடினார். 

 காணாமல் ஆக்கப்பட்டோரின் உன்னதப் பிரச்சினைக்குத் தமிழ் அரசியல் தளத்தில் முதன்முதலில் தீர்வைத் தேடியது ஈ.பி.டி.பி (EPDP) மாத்திரமே எனத் தெரிவித்த அவர், அது குறித்த வரலாற்றுத் தரவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

மேலும், மிருசுவில் படுகொலை (Mirusuvil Massacre), கிருஷாந்தி படுகொலை மற்றும் சாரதாம்பாள் படுகொலை உள்ளிட்ட கொடூரச் சம்பவங்களின் உண்மைகளைத் தங்களது கட்சியே வெளிப்படுத்தியதுடன், சாட்சிகளைப் பாதுகாப்பாகக் கொழும்புக்கு அழைத்துச் சென்று நீதிமன்றங்களில் சாட்சியமளிக்க வைத்ததாகவும் குறிப்பிட்டார். 

 இத்தகைய மனித உரிமைச் செயற்பாடுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத விடுதலைப் புலிகள் அமைப்பினர், பின்நாட்களில் அரசியல் பழிவாங்கலுக்காகக் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு ஈ.பி.டி.பியே காரணம் எனப் பொய்களைப் பரப்பினர். 

இதில் உண்மை இருக்குமாயின் தாராளமாக நீதிமன்றங்களை நாடி நீதியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனச் சவால் விடுத்தார். காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினையைத் தீர்க்கத் தாம் முயன்ற காலத்தில், “கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிகொண்டது” போல, சில சுயநலத் தமிழ் அரசியல் தரப்புகள் இப்பிரச்சினையைத் தங்களது வாக்கு வங்கி அரசியலுக்காகக் கையாண்டு, இன்றுவரை தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையாகவே முடக்கி வைத்துள்ளனர் என டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

வளை​குடா நாடு​களின் உள்​கட்டமைப்​பை அழிப்போம்- ஈரான் ராணுவம்.

வளைகுடா நாடுகளின் உள்கட்டமைப்புகளை அழித்து தரைமட்டமாக்குவோம் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 ஓமன் கடல் வழியாக சென்ற எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதன்காரணமாக தற்காலிக அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 8-ம் தேதி அறிவித்தார். இதன்பிறகு அமெரிக்கா, ஈரான் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியின் இரு புறத்தையும் அமெரிக்க போர்க் கப்பல்கள் முற்றுகையிட்டு உள்ளன. 

ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் அந்நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ராணுவ தளங்கள், ஏவுகணை, ட்ரோன் உற்பத்தி ஆலைகள், துறைமுக பகுதிகளை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் நேற்று குண்டுமழை பொழிந்தன. 

அமெரிக்க தாக்குதலில் ஈரானில் இதுவரை 35 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கரீபியன் பகுதி நாடான கோர்சாவை சேர்ந்த எண்ணெய் கப்பல் நேற்று ஈரானின் கார்க் தீவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலின் இன்ஜின் பகுதியை குறிவைத்து அமெரிக்க போர் விமானம், ஏவுகணை தாக்குதலை நடத்தியது. 

இதனால் அந்த கப்பல் நடுவழியில் நின்றது. மேலும் ஈரான் துறைமுகம் நோக்கி சென்ற பல்வேறு எண்ணெய் கப்பல்களை அமெரிக்க போர்க்கப்பல்கள் இடைமறித்து திருப்பி அனுப்பின. அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்தை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசியது. 

மேலும் ஜோர்டான், பஹ்ரைன், இராக், குவைத் நாடுகளில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் இப்ராகிம் ஸோல்பகாரி, டெஹ்ரானில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஹார்முஸ் ஜலசந்தி ஈரானுக்கு சொந்தமானது. இந்த ஜலசந்தியை யாரும் உரிமை கொண்டாட முடியாது. 

இதை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம். ஈரானின் உள்கட்டமைப்புகளை அமெரிக்கா அழித்தால் வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளின் அனைத்து உள்கட்டமைப்புகளையும் அழித்து தரைமட்டமாக்குவோம். 

எங்களது முழு பலத்தையும் பயன்படுத்தி எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவோம். இவ்வாறு இப்ராகிம் ஸோல்பகாரி தெரிவித்தார். வளைகுடா நாடுகளின் எண்ணெய் வயல்கள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், சேமிப்பு கிடங்குகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் ராணுவம் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதனால் வளைகுடாவில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

விசா கட்டுப்பாடு மேலும் இறுக்கிய அமெரிக்கா.

அதற்கமைய, வெளிநாட்டு மாணவர்கள், கலாசார பரிமாற்ற விருந்தினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான விசாக்களின் கால எல்லையைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்தின் இந்த புதிய விதியானது, சர்வதேச மாணவர்களுக்கான 'F' விசாக்கள், கலாசார பரிமாற்றத் திட்டங்களில் வருகை தருவோர் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கும் 'J' விசாக்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான 'I' விசாக்கள் ஆகியவற்றிற்கு ஒரு நிலையான காலப்பகுதியை உருவாக்குவதாக அமைந்துள்ளது. 

இந்த விசாக்கள் தற்போது அந்தந்தப் பாடநெறித் திட்டங்களின் காலம் அல்லது அமெரிக்கா அடிப்படையிலான வேலைவாய்ப்புக் காலம் வரை வழங்கப்பட்டு வருகின்றன. 

காங்கிரஸின் மீளாய்வுக்கு உட்பட்டு, கூட்டாட்சிப் பதிவேட்டில் இது வெளியிடப்பட்ட 60 நாட்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது. 

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2025 ஜனவரியில் பதவியேற்ற பின்னர் பரந்த அளவிலான குடியேற்ற ஒடுக்குமுறையைத் தொடங்கினார். இதன் சமீபத்திய நடவடிக்கையாக சர்வதேச மாணவர்கள், பரிமாற்றப் பணியாளர்கள் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு புதிய தடைகளை ஏற்படுத்துகின்றது. 

சட்டப்பூர்வ குடியேற்றம் மீதான கண்காணிப்பை அதிகரித்துள்ள ட்ரம்ப் நிர்வாகம், பல்கலைக்கழக மாணவர்களின் கருத்தியல் பார்வைகள் காரணமாக அவர்களின் மாணவர் விசாக்கள் மற்றும் கிரீன் கார்டுகளை இரத்து செய்துள்ளதுடன், இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோரின் சட்டப்பூர்வ அந்தஸ்தையும் பறித்துள்ளது. 

புதிய ஒழுங்குமுறையின் கீழ், மாணவர் மற்றும் பரிமாற்ற விசா காலங்கள் நான்கு ஆண்டுகளுக்கு மேல் இருக்காது. தற்போது பல ஆண்டுகள் நீடிக்கக்கூடிய ஊடகவியலாளர்களுக்கான விசா, அதிகபட்சமாக 240 நாட்கள் வரையோ அல்லது சீனப் பிரஜைகளின் விஷயத்தில் 90 நாட்கள் வரையோ மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

முல்லேரியா - முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

 அவர் தமக்கு தாமே துப்பாக்கிச் சூட்டை ஏற்படுத்தி தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 1986ம் ஆண்டு உதவி பயிற்சி பொலிஸ் அத்தியட்சகராக, பொலிஸ் சேவையில் இணைந்துகொண்ட சி.டி.விக்ரமரத்ன், 34 வருடங்களுக்கும் அதிக காலம் பொலிஸ் சேவையில் ஈடுபட்டிருந்தார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து, பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட நிலையில் பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார். 

அதன்பின்னர் ஒரு வருடமும் 7 மாதங்களும் குறித்த பதவியை வகித்து வந்ததுடன் பின்னர் 35 வது பொலிஸ் மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றிருந்தார். இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதியுடன் அவர் தமது கடமைகளில் இருந்து உத்தியோகப்பூர்வமாக ஓய்வுப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வியாழன், 16 ஜூலை, 2026

இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆற்றல் பானங்களை விற்பனை தடை!!

அதிக அளவு காஃபின் (caffeine) கொண்ட ஆற்றல் பானங்கள் "குழந்தைகளின் கைகளில் இருக்கவே கூடாது" என்று கருதப்படுவதால், இளைஞர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்படும் புதிய சட்டங்களின் கீழ், இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு இவற்றை விற்பனை செய்வது தடை செய்யப்படவுள்ளது. 

நாடு முழுவதும் சுமார் 1,00,000 குழந்தைகள் தற்போது தினமும் அதிக காஃபின் கொண்ட ஆற்றல் பானங்களை அருந்துகின்றனர் என்றும், குறிப்பாகப் பின்தங்கிய பகுதிகள் மற்றும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இவற்றை அதிகம் உட்கொள்வதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. விளையாட்டு மைதானங்களில் பெருகிவரும் பிரபலத்தன்மை மற்றும் இணையவழித் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களால் (online influencers) ஊக்குவிக்கப்படுதல் ஆகியவற்றின் காரணமாக இவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

 அதேவேளையில், இவற்றின் நுகர்வு உடல் மற்றும் மனநலப் பாதிப்புகள் மற்றும் கல்வியில் பின்தங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீய விளைவுகளுடன் தொடர்புடையது என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தடை கடைகள், தானியங்கி விற்பனை இயந்திரங்கள் (vending machines) மற்றும் இணையவழி விற்பனை ஆகியவற்றுக்குப் பொருந்தும். வணிக நிறுவனங்கள், பொது சுகாதார அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் நடத்தப்பட்ட கலந்தாய்வில், வயது வரம்பை அறிமுகப்படுத்துவதற்கு வலுவான ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சட்டம் குறிப்பாக, ஒரு லிட்டருக்கு 150 மில்லிகிராமிற்கும் அதிகமான காஃபின் (caffeine) கொண்ட பானங்களுக்குப் பொருந்தும்; இதில் தேநீர் அல்லது காபி ஆகியவை அடங்காது. 

 இது குறித்துப் பொது சுகாதாரத் துறை அமைச்சர் ஷரோன் ஹாட்ஜ்சன் கூறுகையில், "அதிக அளவு காஃபின் கொண்ட 'எனர்ஜி ட்ரிங்க்ஸ்' (ஆற்றல் பானங்கள்) எனப்படும் பானங்கள் குழந்தைகளின் கைகளுக்குச் செல்லக் கூடாது. 

இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இவற்றைத் தினமும் அருந்துகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்; ஆனால், இவை பதற்றத்தை ஏற்படுத்துவதோடு, தூக்கம் மற்றும் கவனத்தைச் சிதைத்து, குழந்தைகளின் கல்வியிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன. 

 "இந்தத் தடை, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் தீங்கு விளைவிக்கும் பானங்களை அவர்கள் வாங்கும் வாய்ப்பைக் குறைக்கும்; அத்துடன், ஆரோக்கியமான குழந்தைத் தலைமுறையை உருவாக்குவதில் எங்களின் உறுதியான அர்ப்பணிப்பையும் இது வெளிப்படுத்துகிறது," என்று தெரிவித்தார். 

இத்தடை நடைமுறைக்கு வரும்போது, ​​16 வயதுக்குட்பட்டவர்களுக்கு இப்பானங்கள் விற்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் பொறுப்பு சில்லறை விற்பனையாளர்களுடையதாகும்; அதேவேளையில், சட்ட அமலாக்கப் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும். சட்டத்தை மீறும் வணிக நிறுவனங்களுக்கு 2,500 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

யாழின் மூன்று தீவுகளில் எரிசக்தி திட்டங்கள்!

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி, குறித்த மூன்று தீவுகளையும் பசுமை சக்தித் தீவுகளாக (Green Energy Islands) மேம்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 


 எரிசக்தி அமைச்சுக்கான 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளில் தற்போது நடைமுறையில் உள்ள கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (HRES) திட்டங்களை மையமாக வைத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடியின் போது இடைநிறுத்தப்பட்ட, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட எரிசக்தித் திட்டங்களை விரைவாக மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

ரஷ்ய தடை மசோதாவில் பெரும் மாற்றம்!!

புடின் அரசுக்கு பெரும் நெருக்கடி கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ரஷ்ய தடை மசோதாவில் பெரும் மாற்றத்தை அமெரிக்க செனேட்டர்கள் கொண்டு வந்துள்ளனர். இந்த மாற்றம் மூலம் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் இந்சியாவுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். 

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு கட்சிகளாலும் ஒப்புதல் பெற்ற Russia sanctions bill-ல் சில முக்கியமான தளர்வுகள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த மசோதா கொண்டு வர முக்கிய காரணம் ரஷ்ய அதிகாரிகள், தலைவர்கள், ரஷ்யா உடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கடுமையான வரி விதிப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. 

இந்த மசோதாவில் அறிவிக்கப்பட்ட முக்கியமான விஷயம் என்னவென்றால் ரஷ்யா எண்ணெய் மற்றும் எரிபொருள் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்கப்பட்டும் என நிலைப்பாடு உருவாக்கப்பட்டது. தற்போது அமெரிக்க செனேட்டர்கள் இந்த விதியை தளர்த்த முடிவு செய்து 500 சதவீத வரியை 100 சதவீதமாக குறைத்துள்ளனர். 

அதுவும் இந்த 100 சதவீத வரி என்பது ரஷ்யாவுடன் அதிக எண்ணெய் வாங்கும் டாப் 5 நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் இந்த Russia sanctions மசோதா திருத்தப்பட்டு உள்ளது. இந்த மசோதாவை உருவாக்கியவர் Lindsey Graham, இவர் கடந்த 11 ஆம் தேதி திடிரென மறைந்த நிலையில் இந்த திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர் இறப்பதற்கு முன்பே அமெரிக்க அதிபர் டிரம்ப்-யிடம் திருத்திற்கான ஒப்புதலை பெற்றதாக கூறினார் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. 

இந்த புதிய திருத்தம் மூலம் அதிகளவில் பயன் பெறப்போவது யாரென்றால் ரஷ்யாவுடன் அதிகம் கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்யும் டாப் 5 நாடுகள் தான், இதில் சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அசர்பைஜான். இதேபோல் அதிக எரிவாயு வாங்கும் நாடுகளில் சீனா, பிரான்ஸ், ஜப்பான், ஹங்கேரி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் உள்ளது.

அமெரிக்க அரசு இந்த திருத்தம் கொண்டு வர முக்கியமான காரணம் என்னவென்றால் இந்த 500 சதவீத வரியால் அமெரிக்காவின் நடப்பு நாடுகளும் பாதிக்கப்படுகிறது. 

இதை சரி செய்யவே அமெரிக்க செனேட்டர்கள் இந்த மாற்றத்தை கொண்டு வர டிரம்பிம் ஒப்புதல் பெற்றனர். ஆனால் இது bipartisan legislation என்பதால் இதற்கு இரு கட்சிகளும் மீண்டும் ஒப்புதல் அளிக்க வேண்டும். அடுத்த கட்டமாக இந்த மசோதாவில் ஈரான் மற்றும் ஹிபுல்லாவை சேர்க்கவும் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது ஒருபக்கம் ரஷ்யா மீதான கிடுக்குபிடியை அமெரிக்கா தளர்த்துவதாக கூறப்பட்டாலும், உலகளாவிய வர்த்தகத்தில் ரஷ்யாவின் பங்கு அதிகமாக இருக்கும் காரணத்தால் இது முறைமுகமாக அமெரிக்காவையும் பாதிக்கிறது.

இந்த Russia sanctions bill மூலம் ரஷ்யாவின் வர்த்தகத்தையும், ஏற்றுமதியை முடக்கி அந்நாட்டுக்கான நிதி ஆதாரத்தை குறைத்து உக்ரைன் போரில் இருந்து பின்வாங்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோள் உடன் கொண்டு வரப்பட்டாலும், 4 ஆண்டுகளாக தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் உடன் போரிட்டு வருகிறது.

Thank You Google

Thank You Google
Thanks