செவ்வாய், 12 மே, 2026

முள்ளிவாய்க்கால்' என்பது ஒரு தீராத வடு.

இன்று தமிழ் சமூகத்தின் மத்தியில் 'முள்ளிவாய்க்கால்' என்பது ஒரு தீராத வடு. ஆனால், அந்த வடுவை அரசியலாக்கி, ஒரு புதிய அரசியல் சக்தியை (விஜய்) முடக்க நினைப்பவர்கள் வரலாற்றின் சில பக்கங்களை மறந்துவிடுகிறார்கள்.


 "காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால் விஜய் துரோகி" என்று முழங்குபவர்கள், ஈழப் போராட்ட வரலாற்றில் நடந்த நிழல் யுத்தங்களையும், சுயநல ஒப்பந்தங்களையும் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குக் காங்கிரஸ்தான் காரணம் என்பவர்கள், அந்தப் பழிவாங்கும் படலத்தைத் தூண்டிய புள்ளி எது என்பதை உணர வேண்டும்.

1991 ஸ்ரீபெரும்புதூர் நிகழ்ந்த அந்தப் படுகொலைதான் இந்தியாவிற்கும் புலிகளுக்குமான உறவை நிரந்தரமாகத் துண்டித்தது. அமெரிக்காவின் CIA மற்றும் இஸ்ரேலின் Mossad ஆகிய உளவு அமைப்புகள், தங்களுக்குப் பணியாத ராஜீவ் காந்தியை ஒழிக்கத் தீட்டிய திட்டத்தில், வி*டுதலைப் பு*லிகள் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டனர். "மீண்டும் ராஜீவ் ஆட்சிக்கு வந்தால் உங்களை அழித்துவிடுவார்" என்ற பொய்யான அச்சத்தை விதைத்து, பெரும் நிதி கொடுத்துத் தூண்டியதன் விளைவே அந்த “ முட்டாள்தனமான”படுகொலை. 

இந்தியாவின் இளம் பிரதமர் என்ற நம்பிக்கை நட்சத்திரத்தைச் சிதைத்ததன் மூலம், ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் அனுதாபத்தையும் புலிகள் இழந்தனர். அன்று அவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் எதை விதைத்தார்களோ, அதைவிட பலமடங்கை 2009-ல் முள்ளிவாய்க்காலில் அறுவடை செய்தனர். 

நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும் என்பதற்கமைய தமது தலைவரை கொன்றவர்களை 18 வருடங்கள் கழித்து காத்திருந்து பழி தீர்த்தது காங்கிரஸ். விஜய் காங்கிரஸுடன் சேருவது துரோகம் என்றால், ஈழப் போராட்ட வரலாற்றில் நடந்த பின்வரும் நிகழ்வுகளை என்னவென்று அழைப்பது? 

1984 முதல் 1987 வரை மன்னார், வல்வெட்டித்துறை, ஊரணி எனத் தமிழ் மக்களைக் கொன்று குவித்தது முதல் “லிபரேசன் ஒபரேசன் “ என்ற இராணுவ நடவடிக்கை வரை பல ஆயிரம் தமிழர்களை இனப்படு கொலை செய்து வெறியாட்டம் ஆடிய ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) இந்திய அமைதிப்படையை (IPKF) வெளியேற்றப் புலிகள் கைகோர்த்தனர்.

ரணசிங்க பிரேமதாச அரசு வழங்கிய T56 துப்பாக்கிகளும், வெடி மருந்துக்களும் , பெரும் தொகைப்பணங்களும் , Pick ups மற்றும் pajero வாகனங்களும் இந்தியாவிற்கு எதிராகப் பயன்படுத்த புலிகளிடம் கையளிக்கப்பட்டது. 

எதிரியான UNP கட்சியுடன் கைகோர்த்த இந்தச் செயல் தமிழ் மக்களுக்கு செய்த துரோகமா? இராஜ தந்திரமா? 1995ம் ஆண்டு சூரியக்கதிர் நடவடிக்கை மூலம் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து படை நடவடிக்கை மூலம் சுடுகாடாக்கிய இலங்கை சுதந்திரக்கட்சி( SLFP) . 

அந்த கட்சியே செம்மணிப்படுகொலைகளையும் நிகழ்த்தியது என்பது உலகிற்கே தெரியும்.

 ஆனால் அந்த கட்சியில் இருந்த மகிந்த ராஜபக்சேவுடன் மில்லியன் கணக்கான டாலர்கள் பேரம் பேசப்பட்டு ரணில் விக்ரமசிங்கவைத் தோற்கடிக்கத் தேர்தலைப் புறக்கணித்து, மகிந்தாவை அரியணையில் ஏற்றியது யார்? 

 அது தமிழ் மக்களுக்கு செய்த துரோகம் இல்லையா? தங்கள் தேவைக்காக எதிரியுடன் கைகோர்ப்பது இவர்களுக்கு 'ராஜதந்திரம்', ஆனால் விஜய் ஒரு கூட்டணியை முன்னெடுப்பது மட்டும் 'துரோகமா'? அதே மகிந்தாதானே இறுதியில் முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தை நடத்தி தமிழர்களை கொன்றொழித்தான். தமிழர்களின் எதிரிகளுடன் பு+லிகள் கைகோர்த்ததை ஏன் எவரும் தட்டிக் கேட்கவில்லை? 

காரணம் பயம். தண்டனைக்குட்படுத்தப்படுவோம் என்ற பயம், துரோகி முத்திரை குத்தப்படுவோம் என்ற பயம். முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்ததில் காங்கிரஸ் அரசு இலங்கைக்கு உதவியது உண்மைதான்.

ஆனால், இறுதி யுத்தத்தில் பாதுகாப்பாக மக்கள் வெளியேற முடியாமல் தடுத்தது யார்? போர் முனையில் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாவதற்குப் புலிகளும் ஒரு காரணம் என்பதை ஐநா சபை (UN) தனது அறிக்கைகளில் சுட்டிக்காட்டியுள்ளது.

 காங்கிரஸ் யாழ்ப்பாணத்திலோ அல்லது கிழக்கிலோ அல்லது கொழும்பிலோ உள்ள பொதுமக்களைக் தேடித்தேடி குறிவைக்கவில்லை; அவர்கள் இலக்கு புலிகளாக மட்டுமே இருந்தது. ஆனால் பொதுமக்கள் கொல்லப்பட காரணமாக இருந்தவர்கள் சிங்கள அரசு… 

ஒரு இந்தியக் குடிமகனாக, ஒரு அரசியல் தலைவராக விஜய்க்கு காங்கிரஸ் என்பது தனது நாட்டின் முன்னாள் பிரதமரைக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான ஒரு பழம்பெரும் கட்சி மட்டுமே. ஒரு தமிழனாகத் துயரப்படும் அதே வேளையில், ஒரு இந்தியனாகத் தனது நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க வேண்டிய கடமை அவருக்கு உண்டு. ஏனெனில் விஜய் ஒரு இந்தியன். இலங்கைத் தமிழன் இல்லை. 

 ஒரு நல்ல குடிமகனுக்கு “முதலில் நாடு... அப்புறம் தான் இனம், மதம், மொழி அனைத்தும்." யாரையும் துரோகி என்று முத்திரை குத்துவதற்கு முன், கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள். உணர்ச்சிகளால் உந்தப்பட்டு முட்டாள்த்தனமாக எடுக்கப்பட்ட தவறான முடிவுகளே இன்று ஈழத்தமிழர்களை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது. 

 1941-ல் Pearl Harbour மீது ஜப்பான் தாக்குதல் நடத்தியபோது, அது ஒரு ராணுவ வெற்றியாகக் கருதப்பட்டது. ஆனால், பலம் பொருந்திய ஒரு நாட்டின் 'ஈகோவை' சீண்டியதன் விளைவு, இரண்டு அணு குண்டுகளாக ஜப்பான் மீது விழுந்தது. பலம் பொருந்திய ஒருவனை அவனது எல்லைக்கு அப்பாற்பட்டுச் சீண்டும்போது, அதன் எதிர்விளைவு தர்ம நியாயங்களுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும் என்பதற்கு இதுவே சாட்சி.

ஈழப் போராட்டத்திலும் இதே தவறுதான் நிகழ்ந்தது. 1991-ல் இந்தியப் பிரதமராக வரவிருந்த ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்ததன் மூலம், இந்தியா என்ற மாபெரும் சக்தியின் ஈகோவை விடுதலைப் புலிகள் உரசிப் பார்த்தனர். 

அதன் விளைவு? 2009-ல் முள்ளிவாய்க்காலில் ஒட்டுமொத்தமாக அறுவடை செய்யப்பட்டது. ஒரு நாட்டின் தலைவனை அந்நிய நாட்டு பயங்கரவாதக் குழு கொல்வதை எந்த ஒரு இறையாண்மை கொண்ட நாடும் வேடிக்கை பார்க்காது. ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகே, ஈழப்போராட்டம் தொடர்பான இந்தியாவின் பார்வை மாறியது. 

 தாங்கள் வளர்த்த புலிகளை தாங்களே அழிக்க வேண்டும் என முடிவெடுத்தது. ஆகவே அனுதாபம் தேடும் 'Victim Card' அரசியலை விடுத்து, வரலாற்றுப் பிழைகளை ஒப்புக்கொண்டு முன்னேறுவதே அறிவார்ந்த செயல்.

வல்லவனைச் சீண்டினால் அழிவு நிச்சயம் என்ற வரலாற்றை இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள். விஜய் காங்கிரசுடன் கூட்டணி வைத்ததில் எந்தத் தவறும் இருப்பதாக தெரியவில்லை.

முகின்தன் துரைராஜசிங்கம்

தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட விஜய் உத்தரவு!!

தமிழ்நாட்டில் 4,829 'டாஸ்மாக்' மதுகடைகள் இயங்கி வருகின்றன. மாதம் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது.

குறித்த அனைத்து கடைகளும் இரண்டு வாரங்களுக்குள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் தனது தேர்தல் வாக்குறுதியில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதையில்லா தமிழ்நாடு என்ற விடயங்களைத் தெரிவித்தார். இதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை அதிகாரிகளால் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தொடர்ச்சியாகச் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படும் மதுபான சாலைகள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் 717 மதுபானக் கடைகளை மூட முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் “தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. 

 அதில் வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டார்.

அம்பலாந்தோட்டை தலை துண்டிக்கப்பட்டு கொலை!!

அம்பலாந்தோட்ட மாமடல தெற்கு போகுடுயாய பகுதியில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை மற்றும் மற்றொருவருக்கு பாரிய காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


 இவ்வாறு கொல்லப்பட்டவர் 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், காயமடைந்தவர் அவரது மனைவியின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

 குறித்த நபரை கொலை செய்வதற்காக மூவர் அவரது வீட்டிற்கு வந்துள்ளதுடன், அவரை கொலை செய்த பின்னர், அவரது தலை துண்டிக்கப்பட்டு மாமடல சந்தியில் உள்ள ஒரு சிலைக்கு அடியில் வைத்து விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 கொல்லப்பட்ட நபர், கடந்த ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி அம்பலாந்தோட்டை, அலேகொட மேற்கு பகுதியில் இடம்பெற்ற முக்கொலை சம்பவத்தின் சந்தேகநபர் ஆவார். 

 இது தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த மார்ச் 30ஆம் திகதி பிணையில் வெளிவந்திருந்தார். அந்தக் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலையாளிகளால் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றையும் அவ்விடத்தில் விட்டுச் சென்ற நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்பெயின் வெறும் பதட்டம்தான் பிரெஞ்சுப் பெண்ணிடம் கூறினர்.

சொகுசுக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பிறகு ஹன்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பிரெஞ்சுப் பெண் ஒருவர், கப்பலில் இருந்த மருத்துவர்களிடம் தனது அறிகுறிகளைத் தெரிவித்தபோது,அது ஒருவேளை வெறும் பதட்டமாக இருக்கலாம் என்று அவரிடம் கூறப்பட்டதாக ஸ்பெயின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 கொடிய ஹன்டா வைரஸ் பரவலின் மையமாக இருந்த கப்பலில் பயணம் செய்த அந்தப் பெண், சளி போன்ற அறிகுறிகளால் அவதிப்பட்டு வந்ததாகவும், ஆனால் அவை குணமடைந்து வருவதாகவும், அவருக்குக் காய்ச்சல் இல்லை என்றும் ஜேவியர் படில்லா பெர்னால்டெஸ் கூறினார். பின்னர், அந்தப் பெண் "மிகவும் கவலைக்கிடமான" நிலையில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

ஸ்பானிய அதிகாரிகளால் "சிக்கலான" மற்றும் "முன்னெப்போதும் இல்லாத" நடவடிக்கை என விவரிக்கப்பட்ட ஒரு நிகழ்வில், 48 மணி நேரத்தில் 23 நாடுகளைச் சேர்ந்த 120 பேர் தாயகம் திரும்பியதைத் தொடர்ந்து, எம்வி ஹோண்டியஸ் கப்பல் திங்கள்கிழமை மாலை கேனரி தீவான டெனெரிஃபில் உள்ள துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டது. 

செவ்வாய்க்கிழமை இரவு, ஹோண்டியஸ் கப்பலில் இருந்து பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற கடைசி இரண்டு மீட்பு விமானங்கள் நெதர்லாந்தில் தரையிறங்கின.

கிருமி நீக்கம் செய்வதற்காக ராட்டர்டாமில் நிறுத்தப்படவுள்ள அந்தக் கப்பலில், இருபத்தாறு பணியாளர்களும் இரண்டு சுகாதாரப் பணியாளர்களும் தங்கியுள்ளனர். 

பயணத்தின் போது உயிரிழந்த ஒரு ஜெர்மானியப் பயணியின் உடலையும் அந்தக் கப்பல் கொண்டு செல்கிறது. கப்பலில் இருந்த மூன்று பேர் உயிரிழந்திருந்த போதிலும், மேலும் எட்டு பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த போதிலும், ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஸ்பானிய வெளிநாட்டு சுகாதார சேவையைச் சேர்ந்த மருத்துவர்கள் அந்த பிரெஞ்சுப் பெண்ணைப் பரிசோதித்து, அவரது அறிகுறிகளைப் பதட்டம் அல்லது மன அழுத்தம் என்று நிராகரித்துவிட்டனர் என படில்லா கூறினார்.

 "இந்த அறிகுறிகள் ஹன்டா வைரஸுடன் ஒத்துப்போகும் என்று அவர்கள் நினைக்கவில்லை. ஏன்? ஏனென்றால், சில நாட்களுக்கு முன்பு தனக்கு இருமல் ஏற்பட்டு அது மறைந்துவிட்டதாகவும், அந்த நேரத்தில் தனக்கு இருந்தது ஒருவித மன அழுத்தம், பதட்டம் அல்லது நரம்புத் தளர்ச்சி போன்றது என்றும் அவர் அவர்களிடம் கூறினார். எனவே அது (ஹன்டா வைரஸாக) வகைப்படுத்தப்படவில்லை," என்று படில்லா கூறினார். 

 டெனெரிஃபேயிலிருந்து கப்பல் புறப்பட்டபோது பேசிய உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயெசஸ், கப்பலில் இருந்தவர்களுக்கு உதவிக்கு வந்ததற்காக ஸ்பெயினுக்கு நன்றி தெரிவித்தார். 

மேலும், பிரெஞ்சுப் பயணி தற்போது "மிகவும் கவலைக்கிடமான" நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார். "அவர் இன்னும் சிறிது காலம் கப்பலிலேயே தங்கியிருந்தால் என்னவாகியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

திங்கள், 11 மே, 2026

இங்கிலாந்து 5 ஐந்து மணி நேரத்திற்கு ஒரு லித்தியம் பேட்டரி தீ விபத்தில்!!

காப்பீட்டாளரால் சேகரிக்கப்பட்ட தகவல் அறியும் உரிமை பதில்களின்படி, தீயணைப்புப் படைகள் 2025-ஆம் ஆண்டில் 1,760 பேட்டரி தொடர்பான தீ விபத்துக்களைக் கையாண்டன, இது மூன்று ஆண்டுகளில் 147% அதிகமாகும்.

ஐக்கிய இராச்சியம் முழுவதும் உள்ள தீயணைப்புப் படைகள், ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்கும் ஒரு லித்தியம்-அயன் பேட்டரி தீ விபத்தைக் கையாண்டு வருவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அதே நேரத்தில், இந்தப் புதிய அபாயத்தின் பரவலான தன்மைக்கு ஏற்ப பொது விழிப்புணர்வும் அரசாங்க ஒழுங்குமுறைகளும் மேம்படுத்தப்படவில்லை என்று தீயணைப்புத் துறைத் தலைவர்கள் எச்சரிக்கின்றனர். 

 லித்தியம்-அயன் பேட்டரிகள், கைபேசிகள், மின்சாரப் பல் துலக்கிகள், பொம்மைகள் மற்றும் வேப்கள் உள்ளிட்ட பெரும்பாலான ரீசார்ஜ் செய்யக்கூடிய சாதனங்களுக்கும், அத்துடன் இ-பைக்குகள், இ-ஸ்கூட்டர்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கும் ஆற்றலை வழங்குகின்றன. 

 தகவல் அறியும் உரிமை கோரிக்கைகள் மூலம் உலகளாவிய வணிகக் காப்பீட்டு நிறுவனமான QBE சேகரித்த தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் லித்தியம்-அயன் பேட்டரிகளுடன் தொடர்புடைய 1,760 தீ விபத்துகளுக்குத் தீயணைப்புப் படைகள் அழைக்கப்பட்டன. 

இது ஒரு நாளைக்கு 4.8 தீ விபத்துகளுக்குச் சமமாகும். இது கடந்த மூன்று ஆண்டுகளில் 147% அதிகரிப்பாகும். அதே காலகட்டத்தில் மின்சார வாகனத் தீ விபத்துகள் 133% அதிகரித்துள்ளன, அதே நேரத்தில் ஐக்கிய இராச்சியத்தின் சாலைகளில் உள்ள மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அந்த காலகட்டத்தில் மும்மடங்காகியுள்ளது.

தேசிய அளவில் நிகழும் அனைத்து லித்தியம்-அயன் பேட்டரி தீ விபத்துக்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இ-பைக் தீ விபத்துக்கள் என்பதை QBE ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். 

மேலும், சான்றளிக்கப்பட்ட மாடல்களுடன் ஒப்பிடும்போது, ​​மாற்றியமைக்கப்பட்ட மற்றும் மாற்றியமைக்கப்பட்ட இ-பைக்குகள் விகிதாசாரத்திற்கு அதிகமாக சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். 2022-ல் 149 ஆக இருந்த இ-பைக்குகள் சம்பந்தப்பட்ட தீ விபத்துக்களுக்கான அழைப்புகளின் எண்ணிக்கை, 2025-ல் 520 ஆக உயர்ந்தது. இவற்றில் 44%-ஐ லண்டன் தீயணைப்புப் படை (LFB) கையாண்டது.

 கடந்த ஆண்டு தலைநகரில் 230 இ-பைக் தீ விபத்துக்கள் நிகழ்ந்தன, மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் இது தொடர்பான ஐந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டன. LFB-யின் தடுப்புப் பிரிவு துணை ஆணையர் ஸ்பென்சர் சட்க்ளிஃப், இ-பைக் மற்றும் இ-ஸ்கூட்டர் தீ விபத்துக்கள் குறித்து தீயணைப்புப் படை "மிகுந்த கவலை" கொண்டுள்ளதாகவும், பொது விழிப்புணர்வு மிகவும் அவசியம் என்றும் கூறினார். 

"ஒழுங்குமுறையானது தயாரிப்புப் பாதுகாப்பை மேம்படுத்தவும், இ-பைக் பேட்டரிகள், சார்ஜர்கள் மற்றும் மாற்று கருவிகள் போன்ற குறைபாடுள்ள அல்லது போலியான தயாரிப்புகளுக்கு நுகர்வோர் ஆன்லைன் சந்தைகளில் ஆளாகும் வாய்ப்பைக் குறைக்கவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார். 

கிளாஸ்கோவில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தை நாசமாக்கியதும், ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய ரயில் நிலையமான சென்ட்ரல் ஸ்டேஷனை இரண்டு வாரங்களுக்கு மூட வைத்ததுமான தீ விபத்து, லித்தியம்-அயன் பேட்டரிகளால் இயங்கும் வேப்களை விற்கும் ஒரு கடையில் தொடங்கியதாக நம்பப்படுகிறது. 

தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, இந்த பேட்டரிகள் 'தெர்மல் ரன்அவே' எனப்படும் ஒரு அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். இது ஒரு அபாயகரமான தொடர் வினையாகும், இதில் பேட்டரியின் உள்ளே வெப்பநிலை கட்டுப்பாடின்றி உயர்ந்து, ஒரு நச்சு வாயுவை உருவாக்குகிறது.

 அந்த வாயு அதிக அழுத்தத்தில் வெளியேறி, ஊதுவிளக்கு போன்ற சுடரை உருவாக்கி, வெடிக்கிறது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் தொடர்பு கொள்ளப்பட்ட 52 தீயணைப்புப் படைகளில் 46 படைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளைத் தொகுத்ததில், அனைத்து லித்தியம்-அயன் தீ விபத்துகளில் கிட்டத்தட்ட பாதி (46%) மக்களின் வீடுகளில் நிகழ்ந்தன என்பதையும் QBE ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இந்த பேட்டரிகளை தவறான முறையில் அப்புறப்படுத்துவதால் - இவற்றை சாதாரண குப்பைத் தொட்டியில் வீசக்கூடாது, ஆனால் பல பல்பொருள் அங்காடிகளில் உள்ள தொட்டிகள் மூலம் மறுசுழற்சி செய்யலாம் - இங்கிலாந்து முழுவதும் குப்பை லாரிகளிலும் மறுசுழற்சி ஆலைகளிலும் கடுமையான தீ விபத்துகள் ஏற்படுகின்றன. 

இதன் வருடாந்திர செலவு £1 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது ஊழியர்களுக்கு காயங்களையும் ஏற்படுத்துகிறது. QBE இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இடர் மேலாளரான ஏட்ரியன் சிம்மண்ட்ஸ், அதிகரித்து வரும் இந்த அபாயத்தை நிர்வகிக்க தனிநபர்களும் வணிக நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

 "இந்த வகை பேட்டரிகளால் ஏற்படும் வெப்பத் தப்பித்தல் (Thermal runaway) வித்தியாசமாக எரிகிறது, இதைச் சமாளிக்க அதிக நேரம் எடுக்கும், மேலும் இதைக் கட்டுப்படுத்த 10 மடங்கு அதிக தண்ணீர் தேவைப்படலாம்," என்று அவர் கூறினார். 

"பாதுகாப்பான மின்னேற்றம், சேமிப்பு மற்றும் அப்புறப்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு, மக்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க அவசியம். மக்கள் சான்றளிக்கப்பட்ட மின்சார பைக்குகள் மற்றும் பேட்டரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும், தப்பிக்கும் வழிகளிலிருந்து விலகி அவற்றை மின்னேற்றம் செய்ய வேண்டும், 

மேலும் இரவு முழுவதும் பொருட்களை மின்னேற்றம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்." தேசிய தீயணைப்புத் தலைவர்கள் கவுன்சிலின் (NFCC) செய்தித் தொடர்பாளர் ஒருவர், இந்த கண்டுபிடிப்புகள் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் களத்தில் காண்பவற்றைப் பிரதிபலிப்பதாகக் கூறினார்.

மலையகம் தொடர்ந்து மூடப்படும் சில பாடசாலைகள்...!

தெனியாய கல்வி வலயத்துக்குட்பட்ட நான்கு பாடசாலைகளை தொடர்ந்தும் மூடி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொட தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, தெனியாய மத்திய கல்லூரி, தெனியாய ராஜபக்ச மகா வித்தியாலயம், தெனியாய புனித மத்தேயு இரு மொழிக் கல்லூரி மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகியவை இன்று மற்றும் நாளை மூடப்பட்டிருக்கும் என என அவர் தெரிவித்துள்ளார். 

 இந்த நான்கு பாடசாலைகளும் 7 மற்றும் 8 ஆம் திகதிகளிலும் நோய் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாடசாலை மாணவர்களிடையே நோய் பரவுவது குறித்து சந்தேகம் கொண்டுள்ள சுகாதார அதிகாரிகள், இது Meningitis எனப்படும் மூளைக்காய்ச்சல் மூளைக் காய்ச்சலாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

 அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், தங்கள் பிள்ளைகளை எவ்வித தாமதமுமின்றி உடனடி மருத்துவ சிகிச்சைக்கு அனுப்புமாறு பெற்றோர்களுக்கு சிறப்பு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன

தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் தொடங்கியது.

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய திருப்பமாக, சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி வரிசையில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அருகருகே அமர்ந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழகத்தில் 1967-ல் திமுக-வும், 1977-ல் அதிமுக-வும் முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றன. 

அன்று முதல் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரு கட்சிகளும் மாறி மாறி ஆளுங்கட்சியாகவும், பிரதான எதிர்க்கட்சியாகவும் மட்டுமே இருந்து வந்துள்ளன. ஆனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசியல் சூழலில் இன்று இந்த இரு கட்சிகளும் எதிர்க்கட்சியாக, ஒரே வரிசையில் அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. 

அதிமுக் தொடர்ந்து இரண்டாவது முறையாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதும் இதுவே முதல்முறை ஆகும். மேலும், ஆளுங்கட்சி இருக்கைகளில் புதிய முகங்களும், நீண்டகாலம் ஆட்சி செய்த பாரம்பரியக் கட்சிகள் இரண்டும் எதிர்க்கட்சி வரிசையிலும் அமர்ந்திருப்பது தமிழக தேர்தல் வரலாற்றின் மிகப்பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.அதன் பிறகு எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றதற்கான பதிவேட்டில் விஜய் கையெழுத்திட்டார்.

Thank You Google

Thank You Google
Thanks