சனி, 27 ஏப்ரல், 2024

சிறுவர்கள் மத்தியில் ஒரு புதிய வகை வைரஸ் பரவுகிறது!.

சிறுவர்கள் மத்தியில் ஒரு வகையான வைரஸ் பரவி வருவதாக சிறுபிள்ளை வைத்திய நிபுணர் வைத்தியர் விஷ்ணு சிவபாதம் தெரிவித்துள்ளார். 

இந்நோய் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இந்த நோய் மருத்துவத்துறையை பொறுத்த வரையில் Hand-Foot-Mouth Disease என அழைக்கப்படும். அதாவது கை - கால் -  வாய் நோய் எனப்படுகிறது.

இது ஒரு வகையான வைரஸால் (Coxsackie Virus) ஏற்படும் ஒரு மிருதுவான (இலேசான) நோயாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தற்போது ஏற்பட்டுள்ள அதிக வெப்பநிலை காரணமாக இந்நோய் அதிகமாக பரவி வருவதாகவும், இது பத்து வயதிற்குக் குறைந்த குழந்தைகளையே தாக்கும் என்றும் அதிலும் குறிப்பாக, ஐந்து வயதுக்குக் குறைவான முன்பள்ளி சிறுவர்களை அதிகமாக பாதிக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த நோய்க்கான அறிகுறிகள் 

* இலேசான காய்ச்சல்

* தொண்டை வலி

* சிறு கொப்பளங்கள் கை கால் (குறிப்பாக முழங்கால்) வாய் மற்றும் பின் பகுதிகளில் (Buttocks) தோன்றுதல்.

* இந்த கொப்பளங்கள் சிலவேளைகளில் சிறு வலியையும், கடியையும் ஏற்படுத்தும் (கீழுள்ள படங்களில் இந்த  கொப்பளங்களைப் பார்க்கலாம்)

 

பொதுவாக இந்தப் கொப்பளங்களை பார்த்து அம்மைநோய் (அம்மாள் நோய்) வந்துவிட்டதாக கருதினாலும், இது உண்மையில் அம்மை நோய் அல்ல.

 

இந்நோய் பரவும் வழிகள்

 

* குறிப்பாக பாதிக்கப்பட்ட மற்றைய சிறுவர்களிடமிருந்து பரவுகிறது.

* உமிழ் நீரின் மூலம்

* மூக்கில் இருந்து வழியும் நீர்மூலம்

* கொப்பளங்களில் இருந்து வரும் நீர்மூலம்

* இருமும் போது ஏற்படும் துகள்களின் மூலம்

 

இந்நோய்க்கான மருந்துகள்

 

இது ஒரு இலேசான நோய் என்றாலும் சில வேளைகளில் குழந்தைகளுக்கு சிக்கல் நிலைமையை ஏற்படுத்திவிடுகிறது. பொதுவாக வாயில் ஏற்படும் கொப்புளங்கள் காரணமாக அவர்கள் உணவு உண்பதை தவிர்ப்பதால் உடலிலிருந்து நீரிழப்பு (Dehydration) ஏற்படுகின்றது.

 

அதைவிட மிக மிக அரிதாக மூளைக் காய்ச்சல் போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம். இது வைரஸால் ஏற்படும் நோய் என்பதால் இதற்கென்று குறிப்பிட்ட மருந்துகள் ஏதுவுமில்லை. 

பொதுவாக 3 தொடக்கம் 5 நாட்களில் குழந்தை சாதாரண நிலைக்கு திரும்பிவிடும். குழந்தை அதிகமாக சாப்பிடாத இடத்தில் வைத்தியரின் உதவியை நாடுதல் நல்லது. மேலும் கடித்தல் தன்மை கூடுதலாக இருந்தால் அதற்கும் மருந்தை எடுக்கலாம்.

இதற்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் அவசியமில்லை. 

இந்த நோயை தடுக்கும் முறைகள் 

* இதற்கென்று எந்த விதமான தடுப்பு மருந்துகளும் இல்லை.

* பொதுவான சுகாதார நிலைமைகளைப் பேணுவதன் மூலம் நோயை தவித்துக் கொள்ளலாம்.

* ஒழுங்கான கை சுகாதாரத்தைப் பேணுதல்.

* மலசல கூடத்தை உபயோகித்தபின் அல்லது குழந்தையின் மலசல தேவைகளை நிறைவேற்றிய பின் கைகளை நன்றாக சவர்க்காரம் இட்டுக் கழுவுதல்.

* குழந்தைகளுக்கும் இவ்வாறான நல்ல சுகாதார பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுத்தல்.

* இயலுமானவரை இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையை மற்ற குழந்தைகளிடமிருந்து தனிமைப்படுத்தி வைத்தல்.

* முன்பள்ளி செல்லும் சிறுவர்களை இந்நோய் ஏற்பட்ட காலங்களில் வீட்டிலேயே வைத்து பராமரித்தல். 

இந்த Hand-Foot-Mouth Disease வைரஸால் ஏற்படும், ஒரு மிருதுவான, தானாகவே சுகப்படும் ஒரு நோயாகும். மிக மிக அரிதாகவே சிக்கல் நிலைமைகளை ஏற்படுத்தும்.

 

Dr. விஷ்ணு சிவபாதம்

கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்கள் மீட்பு!

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் நேற்று (25) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளது. 

 சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து பொலிஸார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று (26) காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். 

தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார்.

 அத்துடன் கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். -

கிளிநொச்சி நிருபர்

17 சிறுவா்களை ஐரோப்பாவிற்கு கடத்தியவா் கைது

இலங்கையைச் சொ்ந்த 17 சிறுவா்களை மலேசியா ஊடாக ஐரோப்பாவிற்கு அனுப்பி ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவா் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை குறித்த நபர் கைது

செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் விசாரணை அதிகாரி எம்.ஜி.வி. காரியவசம் தெரிவித்துள்ளார். தெஹிவளையை சேர்ந்த 76 வயதான ஒருவரே இவ்வாறுகைது செய்யப்பட்டுள்ளார்.

காஷ்மீரில் திடீரென உள்வாங்கிய பூமி

-

வெள்ளி, 26 ஏப்ரல், 2024

பிரித்தானியா வோல்சிங்கம் திருத்தல திருயாத்திரை மே 2024.

இம்முறை மே மாத வோல்சிங்கம் அன்னையின் திருத்தல யாத்திரையில் பங்குபெற விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

முதலில் வருவோருக்கு முதலிடம் என்ற அடிப்படையில் முதலில் வரும் 2500 பேருக்கு திருத்தல வளாகத்தினுள் நடைபெறும் வழிபாடுகளில் பங்கெடுக்க அனுமதி வழங்கப்படுவார்கள். நண்பகல் 12 மணிக்கு பின்னர் வருகை தருபவர்கள் வழிபாடுகள் முடியும் வரை திருத்தல வளாகத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

ஏனையவர்கள் வயல் வெளிகளில் வரிசையில் நின்று மெழுகுவத்தி கொளு த்தவும் நேர்த்தி செலுத்தவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. வரிசையில் நின்றவாறு திருப்பலி மற்றும் வழிபாடுகளை பெரிய திரைகளில் நீங்கள் காண்பதற்கு வசதியாக பெரிய திரைகள் வயல் வெளிகளில் நிறுவப்பட்டிருக்கும். வயல் வெளிகளில் வரிசையில் காத்திருக்கும் கத்தோலிக்கர்களுக்கு நற்கருணை வழங்கப்படும். 

அன்னையின் திருச்சுரூப ஆசீர்வாதத்தின் பின்னர் எல்லோருக்கும் அன்னையின் திருச்சுரூபத்தை தரிசிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும். கார் மட்டும் வான்களில் வருபவர்களுக்கு முன்பதிவு தேவையில்லை. கோச் வண்டிகளில் வருபவர்கள் தமிழ் பணியகத்துடன் தொடர்பு கொண்டு உரிய அனுமதியை (பாஸ்) பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

 நாங்கள் வழங்கும் பதாதையை உங்களது கோச் வண்டியின் முன் காட்சிப்படுத்தும்படி மிகத்தாழ்மையாக கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். வயோதிபர்கள் மட்டும் மாற்று வலுவுள்ளவர்கள் கோச் வண்டியில் வருகை தர இருந்தால் எமக்குத் தெரியப்படுத்தவும். காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரை திருத்தலத்திற் கான நுழைவாயில் திறந்திருக்கும். திருச்சுரூப ஆசீரின் பின்னரே மீண்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 

பிரதான வீதி பிற்பகல் 3.45 ற்கு மூடப்படும். அதன் பின்னர் எந்த வாகனமும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

 வழமை போல குப்பைகளை அதற்குரிய தொட்டிகளில் போடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். அனைவருக்கும் அன்னையின் பரிந்துரை நிறைவாக கிடைப்பதாக. 

நன்றி

QR CODE உடன் புதிய தேசிய அடையாள அட்டை!.

தற்போதுள்ள தேசிய அடையாள அட்டையை விட சிறந்த தேசிய அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். 


 நுவரெலியாவில் ஆட்பதிவு திணைக்களத்தின் புதிய மத்திய மாகாண அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். .......தற்கான டெண்டர் திறக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதுள்ள தேசிய அடையாள அட்டையின் பார்கோடு நீக்கப்பட்டு, QR Code கொண்ட புதிய அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்கு 340 இடங்கள் உள்ளதாகவும், அரசாங்கத்திற்கு நிதிப் பிரச்சினைகள் இருந்தாலும், நாடு முழுவதும் அதிகளவான அலுவலகங்கள் திறக்கப்பட்டு மக்களுக்கு சேவைகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் அங்கு வலியுறுத்தினார்.

 

மத்தள விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா, ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் கைப்பற்ற உள்ளன.

மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை தெரிவு செய்யப்பட்ட தனியார் துறை நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதன்படி, மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை ஷௌரியா ஏரோநாட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

லிமிடெட் ஆஃப் இந்தியா மற்றும் ஏர்போர்ட்ஸ் ஆஃப் ரீஜியன்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி ஆஃப் ரஷ்யா அல்லது அதனுடன் இணைந்த நிறுவனம் 30 வருட காலத்திற்கு. முன்னதாக 09 ஜனவரி 2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளைப் பயன்படுத்த ஆர்வமுள்ள தரப்பினரிடமிருந்து EOI களை அழைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 அதன்படி, EOI கள் அழைக்கப்பட்டுள்ளன, இதற்காக 05 நிறுவனங்கள் இந்த நோக்கத்திற்காக சலுகைகளை சமர்ப்பித்துள்ளன. இதனால், மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை ஷௌரியா ஏரோநாட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு விமான போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 

அமைச்சர்கள் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட ஒருமித்த பேச்சுவார்த்தைக் குழுவின் பரிந்துரையின்படி, இந்தியாவின் லிமிடெட் மற்றும் ரஷ்யாவின் பிராந்திய மேலாண்மை நிறுவனம் அல்லது அதனுடன் இணைந்த நிறுவனம் 30 வருட காலத்திற்கு.

சிறுவர்கள் மத்தியில் ஒரு புதிய வகை வைரஸ் பரவுகிறது!.

சிறுவர்கள் மத்தியில் ஒரு வகையான வைரஸ் பரவி வருவதாக சிறுபிள்ளை வைத்திய நிபுணர் வைத்தியர் விஷ்ணு சிவபாதம் தெரிவித்துள்ளார் .   ...