வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

லிங்கனுக்குப் பதிலாக அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மத்திய கிழக்குக்கு .

மோசமான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் மன உறுதி குறித்த கவலைகளுக்கு மத்தியில், சாதனை அளவிலான பணியில் இருந்து யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கனை விடுவிப்பதற்காக, யுஎஸ்எஸ் ஜார்ஜ் வாஷிங்டன் விமானம் தாங்கி கப்பல் மத்திய கிழக்குக்கு வந்துள்ளது.

வாஷிங்டன் புதன்கிழமை அப்பகுதிக்கு வந்தடைந்ததாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் வியாழக்கிழமை அறிவித்ததுடன், கப்பல் அரபிக்கடலைக் கடக்கும்போது விமானத் தளத்தில் மாலுமிகள் பணிபுரியும் படத்தையும் வெளியிட்டது. லிங்கன் அமெரிக்காவிற்குத் திரும்புவதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வாரம் கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கனில் உள்ள ஒரு மாலுமியின் மனைவி, கடந்த சில மாதங்களாக விமானம் தாங்கி கப்பலில் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய சிறு துணுக்குகளை, பெரும்பாலும் குறுஞ்செய்திகள் மூலமாகப் பெற்று வருவதாகக் கூறினார். 

மேலும், இந்தப் பணி நீண்டுகொண்டே செல்வதால்,இந்த வாரம் 'தி கார்டியன்' (The Guardian) இதழுக்கு அளித்த பேட்டியில், 'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' (USS Abraham Lincoln) போர்க்கப்பலில் பணியாற்றும் மாலுமி ஒருவரின் மனைவி, கடந்த சில மாதங்களாக அந்தக் கப்பலில் நிலவும் சூழல் குறித்துத் தனக்குக் கிடைத்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

பெரும்பாலும் குறுஞ்செய்திகள் மூலமாகவே அவருக்கு இந்த விவரங்கள் கிடைத்துள்ளன. கப்பலின் பணிப்பயணம் (deployment) நீண்டுகொண்டே சென்ற நிலையில், தனது கணவரின் செய்திகளில் ஒரு மாற்றத்தை அவர் கவனித்துள்ளார். "அவர் பேசும் விதத்தில் நம்பிக்கை குறைந்துள்ளதையும், நேர்மறையான விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது குறைந்திருப்பதையும் காண முடிகிறது," என்று அவர் கூறினார்.

 "சிறு சிறு விஷயங்கள் மூலமாகவே இதை உணர முடிகிறது." "அவர் மிகுந்த சோர்வில் இருக்கிறார்," என்று அவர் மேலும் கூறினார். "இது மிக நீண்ட பணிப்பயணம்; இது உடல் மற்றும் மன ரீதியாகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது." பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்தால் பெயர் வெளியிட விரும்பாத அந்தப் பெண், தனது கணவர் பொதுவாகப் புகார்கள் எதையும் கூறுவதில்லை என்று தெரிவித்தார். 

ஆனால், கப்பலில் அத்தியாவசியப் பொருட்கள் குறைந்ததால் சில சமயங்களில் அவருக்குக் கிடைத்த மிகக் குறைவான அளவிலான உணவின் புகைப்படங்களை அவர் அனுப்பியிருந்தது, இவரை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வேளை உணவை விவரிக்கும்போது, ​​"இரண்டு துண்டு பேக்கன் (bacon) மற்றும் மூன்று அல்லது நான்கு சிக்கன் விங்ஸ் (chicken wings) மட்டுமே இருந்தன" என்று அவர் குறிப்பிட்டார்.

யாழ். உள்ளிட்ட வடக்கில் காணிகளை உடனடியாக விடுவியுங்கள் -அநுர குமார

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கினார். கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளையே உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அநுர குமார தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று (20) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதுடன், தேசிய பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்கள் எங்கு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது முப்படையினர் மற்றும் பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்புடன் தொடர்புடையவர்களின் பொறுப்பாகும்.அதன் அடிப்படையில் எவ்வாறான காணிகளை விடுவிக்கலாம், எவ்வாறான காணிகளை விடுவிக்க முடியாது என்பது தொடர்பான இறுதித் தீர்மானத்திற்கு வருமாறும் அறிவுறுத்தினார்.

 அவசியமான காணி அளவைத் தீர்மானிக்கும் போது இயன்றவரை மக்களின் தரப்பிலிருந்து சிந்தித்து, விடுவிக்கக் கூடிய அதிகபட்ச காணிகளை விடுவிக்குமாறு மேலும் அறிவுறுத்திய ஜனாதிபதி, அவ்வாறு வழங்கப்படும் காணிகளுக்கு மேலதிகமாக அந்த மக்களின் வாழ்வாதார வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.

அதற்காக உயர் உற்பத்தித் திறனைப் பெற்றுக்கொள்ளக் கூடிய நவீன விவசாயத் தொழில்நுட்பத்துடன் கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளருக்கு இதன்போது பணிப்புரை விடுத்தார்.

மண்டல முதலமைச்சர்கள் மாநாடு விஜய் டி.கே.சிவகுமார் பங்கேற்பு.

அமித்ஷா தலைமையில் சென்னையில் இன்று மண்டல முதலமைச்சர்கள் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடக மாநில முதலமைச்சர் டி. கே சிவக்குமார் ஆகியோர் அருகருகே அமர்ந்து இருந்தனர். அமித்ஷா அவர்களின் வலது பக்கத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் அமர்ந்து இருந்தார். 

அவரது பக்கத்தில் கர்நாடக மாநில முதலமைச்சர் டி கே சிவக்குமார் அமர்ந்து இருந்தார். இருவரும் மேடையில் அவ்வப்போது பேசிக் கொண்டனர். தமிழக முதலமைச்சர் விஜய் பேசும் போது கர்நாடக முதலமைச்சர் அதை ஆர்வமுடன் கேட்பதையும் கர்நாடக முதலமைச்சர் பேசும்போது அதை தமிழக முதலமைச்சர் ஆர்வமுடன் கேட்பதையும் காண முடிந்தது. 

காவேரி நதிநீர் விவகாரம் மற்றும் மேகத்தாட் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக கர்நாடகம் தமிழ்நாடு இரு மாநிலங்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டு உள்ள நிலையில் இரண்டு மாநில முதல்வர்களும் அருகருகே அமர்ந்து இயல்பாக பேசிக் கொண்டு இருந்தனர். 

முதல்வர்கள் மாநாட்டில் பேசிய கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார், மேகதாது பிரச்சினை பற்றி பேசியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டினால் இரண்டு மாநிலங்கள் பயன் அடையும் என்று விஜய் முன்பாகவே டிகே சிவக்குமார் பேசியுள்ளார்.

தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாடு மாமல்லபுரம் அருகே உள்ள கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்குகிறார். தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் விடி சதிஷன் ஆகியோரும் தெலுங்கானா முதல்வர் சார்பில் துணை முதல்வரும், புதுவை சார்பில் துணை நிலை ஆளுநரும் பங்கேற்றுள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் விஜய் மற்றும் டிகே சிவக்குமார் அருகருகே அமர்ந்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார், மேகதாது அணை விவகாரம் குறித்து பேசியுள்ளார். டிகே சிவக்குமார் கூறும் போது, மேகதாது அணை கட்டினால் வறட்சியான காலங்களில் நீரை சேமித்து பயன்படுத்தலாம். மேகதாது அணை கட்டப்படாததால் உபரி நீர் கடலில் வீணாக கலக்கிறது. 

மேகதாது அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள் பலனடையும். ஆந்திராவின் எதிர்ப்பால் கிருஷ்ணா நீரை கர்நாடாகா முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கிருஷ்ணா நதி நீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சட்ட போரட்டம் நடைபெற்று வருகிறது” என்று பேசியுள்ளார்.

சோமாலியா இந்திய மாலுமிகள் 6 பேருடன் சென்ற சரக்கு கப்பல் கடத்தல்.

சோமாலியா கடற்பகுதியில் இந்திய மாலுமிகள் 6 பேருடன் சென்ற சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'போலார் மூவ்மென்ட் ஷிப்பிங்' நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பல், மொகடிஷுவில் உள்ள துருக்கிய இராணுவப் பயிற்சி மையத்திற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் செயற்கைக்கோள் உபகரணங்களை ஏற்றிச் சென்றதாக அந்த அதிகாரி தெரிவித்தார். 

10 பேர் கொண்ட அக்குழுவில் ஆறு இந்தியர்கள், ஒரு துருக்கியர், ஒரு ஜார்ஜியர் மற்றும் இரண்டு செர்பியப் பாதுகாப்புப் பணியாளர்கள் ஆகியோர் அடங்குவர். இந்த நிலையில், இந்த சரக்கு கப்பலை சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர். அந்த சரக்குக் கப்பலின் பணியாளர்கள் மற்றும் சரக்குகள் குறித்த தற்போதைய நிலவரம் பற்றி தெளிவான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. 

துருக்கி தரப்பும் இதுகுறித்து உடனடியாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.மொகடிஷுவில் உள்ள ஒரு இராணுவப் பயிற்சி மையத்திற்கு வழங்கப்பட வேண்டிய துருக்கிய ஆயுதங்கள், தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் செயற்கைக்கோள் கருவிகளை அந்தக் கப்பல் ஏற்றிச் சென்றது. 

கப்பலைக் கைப்பற்றிய பிறகு, கடற்கொள்ளையர்கள் அதை சோமாலியாவின் டங்கோரோயோ மாவட்டத்தில் உள்ள கர்மால் அருகே உள்ள நுகல் கடற்கரையை நோக்கி எடுத்துச் சென்றனர்.ஏமன் கடற்கரையிலிருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் உள்ள ஏடன் வளைகுடாவில், ஆகஸ்ட் 20 அன்று, எரித்திரியா கொடியுடன் கூடிய 'எம் டி சிபு 1' என்ற எண்ணெய் பொருட்கள் ஏற்றிச் செல்லும் கப்பல், 16 இந்தியர்கள் உட்பட 20 பணியாளர்களுடன் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. 

சோமாலியாவின் புன்ட்லாந்து கடற்கரைக்கு அருகே கேமரூன் கொடியுடன் கூடிய மற்றொரு சரக்குக் கப்பல், அதன் 10 பணியாளர்களில் ஆறு இந்தியர்களுடன் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது சரக்குக் கப்பலின் தற்போதைய நிலை தெளிவாகத் தெரியவில்லை. கடத்தலைத் தொடர்ந்து, துருக்கிக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் அக்கப்பலை அணுகின.

கண்காணிப்புக்காக துருக்கி ஹெலிகாப்டர்களையும் ட்ரோன்களையும் பயன்படுத்தியுள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, செவ்வாயன்று இரண்டு பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய ஒரு சிறிய படகு, கடத்தப்பட்ட கப்பலை அணுகி, அதற்கு போதைப்பொருட்களை வழங்கியுள்ளது. 

அந்தப் படகு கரைக்குத் திரும்பிய பிறகு, அது வான்வழித் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தத் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் காயமடைந்தனர்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடி துப்பாக்கி சூடு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீதான நடவடிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய பொதுமக்களில் 13 பேர் துப்பாக்கிச் சுட்டில் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். 

இதற்கு காரணமானோர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கோரி மதுரை பீபிகுளம் கதிரேசன் உள்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர். மனுக்களை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதா என கேள்வி எழுப்பினர். 

அதற்கு அரசுத் தரப்பில், விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் பரிந்துரைகள் பகுதியளவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதிகள், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதா என்றனர்.

மனுதாரர் தரப்பில், இந்த வழக்கில் 8 ஆண்டுகளாக நிவாரணம் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், ‘பொறுமை கடலினும் பெரிது’ என பதிலளித்தனர். 

தொடர்ந்து நீதிபதிகள், அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளின் தற்போதைய நிலை என்ன, எந்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டன, எந்த நடவடிக்கைகள் தொடர்கின்றன என்பது குறித்து அரசுத் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை என்றனர்.

சமித்புர சத்து வௌிப்படுத்திய தகவலால் மீட்கப்பட்ட பொருள்

கடந்த 18 ஆம் திகதி ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 'சமித்புர சத்து' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல தகவல்கள் வௌிவந்துள்ளன. 


இதற்கமைய, வெளிநாடொன்றிலிருந்து இந்நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு தயாரிப்பிலான கைத்துப்பாக்கி ஒன்று மற்றும் 12 தோட்டாக்கள் மட்டக்குளி பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 கடந்த தினம் சமித்புர சத்து எனப்படுபவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார். 

கொழும்பு 15, மட்டக்குளி, சமித்புர பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய திமுத்து சதுரங்க பெரேரா, 2025 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஓமானுக்குத் தப்பிச் சென்றிருந்தார். 

 அவர் கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேக நபர்களில் ஒருவராவார் என்பதுடன், நாட்டில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியாகவும் கருதப்படுகிறார்.

குற்றவாளியான வனாதே சத்து டுபாயில் கைது!!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கஞ்சிபானை இம்ரான் என்பவரின் நெருங்கிய சகாவாகக் கருதப்படும் வனாதே சது என்ற அவிஷ்க மதுஷான் அபேகுணவர்தன என்பவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். 


டுபாய் பாதுகாப்புத் தரப்பினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான பாணந்துறை சலிந்து மற்றும் தருன் ஆகியோர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thank You Google

Thank You Google
Thanks