வியாழன், 10 செப்டம்பர், 2026

நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு திரும்பியவர் மீது வாள்வெட்டு!

ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் வழக்கொன்றில் சாட்சியமளித்துவிட்டு வெளியேறிய நபர் மீது மர்ம கும்பலொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

நெடுந்தீவைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெடுந்தீவு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக நேற்று நீதிமன்றத்திற்கு வந்தவர்கள், சாட்சியம் அளித்த பின்னர் நெடுந்தீவுக்குச் செல்வதற்காகப் பயணித்துக் கொண்டிருந்தபோது, முகங்களை மூடிய நிலையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பலொன்று அவர்களை வழிமறித்து வாள்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்குப் பின்னர் குறித்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்கு இலக்கான இளைஞர், தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அது தொடர்பில் காவல்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றில் சாட்சியமளித்த பின்னர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், சாட்சிகளின் பாதுகாப்பு மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளில் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படாதிருப்பது தொடர்பில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

சாட்சிகளை அச்சுறுத்துதல் அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்துதல் போன்ற நடவடிக்கைகள் நீதியின் செயற்பாட்டை பாதிக்கக்கூடியவை என்பதால், சம்பவம் தொடர்பில் விரைவான விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஓஸ்லோவில் நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்டுக்கு விடை அளிப்பு!

நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்டு தனது 89-வது வயதில் காலமானார் என நார்வே அரச அரண்மனை அறிவித்துள்ளது. 

அவர் வெள்ளிக்கிழமை காலை 6:35 மணிக்கு ஓஸ்லோவில் உள்ள தேசிய மருத்துவமனையில் காலமானதாக அரச அரண்மனை தெரிவித்தது. ஹரால்டு ஐரோப்பாவின் மிகவும் வயதான மன்னராக இருந்தார். பிரபலமான அந்த மன்னர் அரச குடும்பத்தை நவீனமயமாக்கினார்,

ஆனால் சமீப காலங்களில் பதவி துறந்த மற்ற வயதான மன்னர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற மறுத்துவிட்டார். அவரது மகன் இப்போது தானாகவே எட்டாம் ஹாக்கான் மன்னராகிறார். 

ஹரால்டு ஆகஸ்ட் 17 முதல் இரத்தக் கோளாறுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

முதலமைச்சர் விஜய் தலைமையில்தவெக கூட்டணி கட்சிகள்!!

தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் பனையூரில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த ஜூலை 1-ம் தேதி கோவளத்தில் முதல்வர் விஜய் தலைமையில் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் பங்கேற்றன. இப்போது 2-ம் கட்ட கூட்டம் பனையூர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 

இதற்காக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் அடங்கிய குழு ஆதரவு கட்சியினரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர். 

இந்த கூட்டத்தில் கூட்டணியின் பெயர், ஒருங்கிணைப்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைப் பற்றியும் கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பண்டாரவளை முன்னாள் மாநகர மேயர் ஜனக நிஷாந்த கைது

பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

 மாநகரசபையில் இடம்பெற்ற நிதி மோசடி மற்றும் போலியான ஆவணங்களைத் தயாரித்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இணங்கவே இந்த கைது இடம்பெற்றுள்ளது. 

இது தொடர்பாகச் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த சபையின் இரண்டு வருமான பரிசோதகர்கள் உள்ளிட்ட சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் மேயர் நேற்று (09) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதன், 9 செப்டம்பர், 2026

சிரியாவில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 14 பேர் பலி

சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் உள்ள சர்மாடா (Sarmada) நகருக்கு அருகே ஆயுதங்கள் மற்றும் போர்க் கழிவுகளைச் சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட தற்காலிக இடம் ஒன்றில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சுமார் 14 பேர் உயிரிழந்ததுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. 

 அந்த ஆயுதங்களும் போர்க் கழிவுகளும் வேறொரு இடத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்னர் குறித்த இடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகப் பாதுகாப்பு சிரியாவின் அமைச்சு தெரிவித்துள்ளது.

சிவில் பாதுகாப்பு மற்றும் தீயணைப்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், அடுத்தடுத்து ஏற்பட்ட வெடிப்புகள் தீயை அணைக்கும் முயற்சிகளுக்குத் தடையை ஏற்படுத்தியதுடன், பல மணிநேரமாக அப்பகுதியிலிருந்து அடர்ந்த புகையும் வெளியேறியது.

அமெரிக்காவின் பிடியிலிருந்து உலக நாடுகள் மெல்ல நழுவுகின்றன

இன்றைய உலக நிதிச் சந்தையில் அரசியல் தலைவர்களின் வார்த்தைகளை விட, மத்திய வங்கிகளின் ரகசிய நகர்வுகள்தான் உண்மையான பொருளாதார உண்மைகளை நமக்கு உரக்கச் சொல்கின்றன. 

 அமெரிக்காவின் பிடியிலிருந்து உலக நாடுகள் எப்படி மெல்ல நழுவுகின்றன என்பதை விளக்கும் ஒரு விரிவான பார்வை இது. சமீபத்தில் நெதர்லாந்து நாடு அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்த தனது தங்கத்தை மிக அமைதியாக வெளியேற்றி லண்டனுக்கு மாற்றியுள்ளது. சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள 86 டன் தங்கம் எந்தவித ஆரவாரமும் இன்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

பல தசாப்தங்களாக, உலக நாடுகள் தங்கள் நாட்டு தங்கத்தை அமெரிக்காவின் நியூயார்க் Federal Reserve வங்கியிலும் கனடாவிலும் பாதுகாப்பாக வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக (குறிப்பாக உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவின் வெளிநாட்டுச் சொத்துக்கள் அமெரிக்காவால் முடக்கப்பட்ட நிகழ்வுக்குப் பிறகு) உலக நாடுகளின் பார்வை முற்றிலும் மாறியது. 

அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படும் நாடுகளின் நிதிச் சொத்துக்களை ஒரே கிளிக்கில் முடக்க முடியும் (Sanctions and Asset Freezes) என்ற நிலை உருவாக்கப்பட்டபோது, அமெரிக்காவின் federal reserve ல் இருக்கும் தங்களுடைய தங்கம் கூட இனி முற்றிலும் பாதுகாப்பானதல்ல” என்ற சந்தேகம் ஐரோப்பிய நாடுகளுக்குள் எழுந்தது. 

நெதர்லாந்து 86 டன் தங்கத்தையும், பிரான்ஸ் 129 டன் தங்கத்தையும் நியூயார்க்கிலிருந்து ரகசியமாகத் திரும்பப் பெற்றமை இதற்கு சிறந்த சான்றாகும். அதிகாரப்பூர்வமாக இது "தளவாடப் பாதுகாப்பு" (Crisis preparedness & Logistics) என்று கூறப்பட்டாலும், உண்மை என்னவென்றால், அமெரிக்க அதிகார வரம்பிலிருந்து தங்கள் நாட்டின் மிக மதிப்புமிக்க சொத்தை வெளியே கொண்டு செல்வதே இதன் பிரதான நோக்கமாகும்.

 டச்சு மத்திய வங்கியான DNB (De Nederlandsche Bank) கடந்த செப்டம்பர் 2-ம் தேதி ஒரு பெரிய உண்மையை ஒப்புக்கொண்டது. இந்த ஆண்டின் மார்ச் முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள், அது 86 மெட்ரிக் Ton தங்கத்தை இடம் மாற்றியுள்ளது. மதிப்பீட்டின்படி, 86 டன் தங்கத்தின் மதிப்பு சுமார் 12 பில்லியன் டாலர்கள் என்பதே அந்த செய்தி. 

இதில் வியப்பு என்னவென்றால், சுமார் 21 Ton தங்கம் விமானம் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து Zeist என்ற சிறிய நகருக்கு அருகில் உள்ள இரகசிய இராணுவ தளத்திற்கு முதலில் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து லண்டனுக்கு மாற்றப்பட்டது. 

மீதமுள்ள 65 டன் தங்கம் நியூயார்க்கிலேயே விற்கப்பட்டு, அந்தப் பணத்தைக் கொண்டு லண்டனில் புதிய தங்கம் வாங்கப்பட்டது. இதை ஏன் இவர்கள் இவ்வாறு இரகசியமாக செய்யவேண்டும் ? டச்சு மத்திய வங்கியின் ஆளுநர் Olaf Sleijpen இதற்கு விளக்கம் அளித்தார். அவருன் கூற்றுப்படி, லண்டனில் உள்ள தங்கம்தான் உலகிலேயே மிக எளிதாக வணிகம் செய்யக்கூடியது (Most easily tradable gold).

ஒருவேளை அவசர காலம் (Crisis) ஏற்பட்டால், அதை உடனடியாக விற்றுப் பயன்படுத்த முடியும் என்றார். நெதர்லாந்து மட்டுமா இந்தச் செயலில் ஈடுபட்டது என்றால் அதுதான் இல்லை. பிரான்சின் மத்திய வங்கியும் கிட்டத்தட்ட இதே போன்றதொரு காரியத்தை மிக அமைதியாகச் செய்துள்ளது. 2025 ஜூலைக்கும் 2026 ஜனவரிக்கும் இடைப்பட்ட காலத்தில், பிரான்ஸ் தனது 129 டன் தங்கத்தை நியூயார்க்கிலிருந்து ரகசியமாகத் திரும்பப் பெற்றது. 

இது பிரான்சின் மொத்த தங்க இருப்பில் 5 சதவீதமாகும். ஐரோப்பாவின் மிகவும் எச்சரிக்கையான இந்த இரண்டு நிதி நிறுவனங்களும் அடுத்தடுத்து ஒரே மாதிரியான முடிவை எடுத்திருப்பது வெறும் சாதாரண நிகழ்வு அல்ல. இதுவொரு தெளிவான பாரிய உலக பொருளாதார மாற்றம் தொடர்பான Signal ஆகும். ஏன் திடீரென இவ்விரு நாடுகளும் தங்கள் தங்கங்களை மீள பெற்றுக் கொள்கின்றன என நீங்கள் நினைக்கலாம்.

சமீப கால உலக அரசியல் நிகழ்வுகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளன: உக்ரைன் போரைத் தொடர்ந்து, ரஷ்யாவின் பல நூறு பில்லியன் டாலர் மதிப்புள்ள வெளிநாட்டுச் சொத்துக்களை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஒரே நொடியில் முடக்கின, 

எந்தவொரு நாடாவது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டால், அமெரிக்காவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் சொத்துக்களும் தங்கமும் பாதுகாப்பாக இருக்காது என்ற கடுமையான அச்சம் ஐரோப்பிய நாடுகளுக்குள் எழுந்துள்ளது.

நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் பாரம்பரியமாக அமெரிக்காவுடன் நட்பில் இருந்தாலும், "எங்கள் நாட்டின் இறுதிப் பாதுகாப்பு அரணான தங்கத்தை மற்றொரு நாட்டின் கட்டுப்பாட்டில் வைப்பது ஆபத்தானது" என்ற எச்சரிக்கை உணர்வின் காரணமாகவே இந்த மீட்கும் படலத்தை ரகசியமாக அரங்கேற்றின. 

உலகளாவிய பொருளாதார நிலையற்ற தன்மையும், போர்ச் சூழல்களும் அதிகரித்து வரும் தற்காலத்தில், தங்கத்தைத் தங்களுக்கு மிக அருகில் அல்லது எளிதில் கையாளக் கூடிய லண்டன் போன்ற பாதுகாப்பான மையங்களுக்கு மாற்ற வேண்டிய அவசியத்தை இந்தச் சூழல் ஏற்படுத்தியது. ஐரோப்பிய நாடுகள் பகிரங்கமாக அமெரிக்க டாலரை எதிர்க்காவிட்டாலும், அமெரிக்க டாலர் மற்றும் நியூயார்க் நிதிச் சந்தையை மட்டும் முழுமையாக நம்பியிருக்கும் நிலையை மாற்ற விரும்புகின்றன. 

தங்கள் நாட்டின் சொத்துக்களை அமெரிக்காவின் பிடியிலிருந்து சிறிது சிறிதாக வெளியேற்றுவதன் மூலம், தங்களது பொருளாதாரச் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ள முயல்கின்றன. ஐரோப்பாவின் மிகவும் பழமைவாத மற்றும் கவனமாகச் செயல்படக்கூடிய இரண்டு மத்திய வங்கிகள் (நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ்) ஒரே காலகட்டத்தில் இந்த முடிவை எடுப்பது என்பது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. 

இது அமெரிக்க டாலர் மையப்படுத்தப்பட்ட உலக அமைப்பின் மீதான மறைமுக எதிர்ப்பும், தங்கத்தை மையமாகக் கொண்ட பாதுகாப்பான மாற்று ஏற்பாட்டை நோக்கிய நகர்வும் ஆகும். சுருக்கமாக சொன்னால் உலகம் Dedollarisation நோக்கியே செல்கிறது. Dedollarisation என்பது ஒரே இரவில் அமெரிக்க டாலரைத் தூக்கி எறிந்துவிட்டு வேறு ஒரு கரன்சியை ஏற்பது அல்ல.

மாறாக, உலக நாடுகள் டாலர் மீதான தங்களது பல தசாப்த கால குருட்டு நம்பிக்கையைக் கைவிட்டு, எந்தவொரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லாத ‘தங்கத்தை’ (Gold) தங்களது இறுதிப் பாதுகாப்பு அரணாக மாற்றுவதே உண்மையான Dedollarisation ஆகும். நெதர்லாந்து (86 டன்) மற்றும் பிரான்ஸ் (129 டன்) நாடுகள் தங்களுடைய கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கத்தை நியூயார்க்கிலிருந்து ரகசியமாகத் திரும்பப் பெற்றது இந்த Dedollarisation துரிதப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை தெளிவாக காட்டுகிறது. 

இந்த ஐரோப்பிய நாடுகள் தற்போது வெளியேற்றக் காரணம் வெறும் தற்செயல் அல்ல, இது டாலர் சார்ந்த அமைப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் ஒரு வியூகம் . இதன் மூலம், அமெரிக்காவின் நேரடி நிதி அதிகாரத்திலிருந்து தங்கள் நாட்டின் மிக மதிப்புமிக்க சொத்தை அவர்கள் விடுவித்துக் கொண்டுள்ளனர். 

இது டாலர் கட்டமைப்பின் மீதான நேரடியான அவநம்பிக்கையை தெளிவாக காட்டுகிறது. ஐரோப்பாவின் மிகவும் எச்சரிக்கையான இந்த இரண்டு மத்திய வங்கிகள் ஒரே காலகட்டத்தில் இந்த முடிவை எடுப்பது, "அமெரிக்க டாலர் மையப்படுத்தப்பட்ட தற்போதைய நிதி அமைப்பு இனி பாதுகாப்பானதல்ல" என்பதை உலகிற்குச் சொல்லாமல் சொல்லும் Signalலாகவே பார்க்க வேண்டும்.

 மத்திய வங்கிகள் டாலரை விடுத்து தங்கத்தைக் குவிப்பதன் மூலமும், அதனைச் சொந்தக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதன் மூலமும் என்ன உணர்த்துகின்றனவெனில்…

தங்கம் என்பது எந்தவொரு தனிப்பட்ட அரசாங்கத்திற்கும் கட்டுப்படாத, எவராலும் முடக்க முடியாத (Sanctions மூலம் முடக்கம் செய்ய முடியாத) ஒரே சொத்து என்பதையும் உலகம் இனி ஒற்றை டாலர் நாணயத்தின் கீழ் இயங்காது என்றும் பலமுனை நிதி உலகத்தின் (Multi-polar Financial System) படியே இயங்கும் என்பதையும் இந்த இரு நாட்டு மத்திய வங்கிகளின் இந்தப் பயணம் திட்டவட்டமாக நிரூபிக்கிறது. 

அமெரிக்க அரசியல்வாதிகள் டாலரின் பலத்தைப் பற்றியும் பேசலாம் ஆனால் மத்திய வங்கிகளின் ‘தங்கம் மீளப்பெறுதல்கள்” உலகப் பொருளாதாரம் எவ்வளவு வேகமாக அதலபாதாளத்திற்கு செல்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. 

டாலரின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த அமைதியான De-Dollarisation புரட்சி, உலக நிதி வரலாற்றின் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.

இது ஒரு முகப்புத்தகத்தின் பிரதியாக்கம்.

இங்கிலாந்தின் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட கோளாறு.

மற்றொரு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுச் செயலிழப்பு காரணமாக விமானங்கள் பல மணிநேரம் தரையிறக்கப்பட்டதால், இங்கிலாந்து விமான நிலையங்களில் புதன்கிழமை வரையிலும் விமானத் தாமதங்களும் ரத்துகளும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இதனால் லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். புதன்கிழமை இங்கிலாந்து விமான நிலையங்களுக்குச் செல்லவும் அங்கிருந்து வரவும் திட்டமிடப்பட்டிருந்த குறைந்தது 177 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமானங்களைக் கண்காணிக்கும் தளமான Flightradar24 தெரிவித்துள்ளது. "ஏறக்குறைய அனைத்தும் லண்டன் ஹீத்ரோவில் இருந்து ரத்து செய்யப்பட்டன". செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 8 மணிக்குள் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுச் சேவைகளை வழங்கும் நிறுவனமான Nats-இல் ஏற்பட்ட "தொழில்நுட்பச் சிக்கல்", கடந்த மூன்றே ஆண்டுகளில் பிரிட்டனில் ஏற்பட்ட மூன்றாவது பெரிய விமான நிறுத்தத்திற்குக் காரணமாக அமைந்தது. 

செவ்வாய்க்கிழமை மாலை Nats நிறுவனம், "இது மிகவும் சிக்கலான ஒரு மீட்புப் பணியாகும். இது முழு விமானப் போக்குவரத்து வலையமைப்புக்கும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. 

இதிலிருந்து மீண்டுவர நேரம் எடுக்கும்" என்று கூறியது. இந்தச் செயலிழப்பு செவ்வாய்க்கிழமை மதியம் சுமார் 1 மணியளவில் தொடங்கியது. இது ஹீத்ரோ, கேட்விக், மான்செஸ்டர் மற்றும் ஸ்டான்ஸ்டெட் உள்ளிட்ட பிரிட்டனின் பல பெரிய விமான நிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்களைப் பாதித்தது. 

கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் கழித்து, தனது விமானச் செயலாக்க அமைப்பைச் சரிசெய்துவிட்டதாக Nats நிறுவனம் அறிவித்தபோது, புறப்படத் திட்டமிடப்பட்டிருந்த பெரும்பாலான விமானங்கள் இன்னும் புறப்படவில்லை. இந்த இடையூறு, தெற்கு இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு வரும் விமானங்களையும் பாதித்தது.செவ்வாய்க்கிழமை மாலை முழுவதும் விமான ரத்துகளும் தாமதங்களும் தொடர்ந்தன. 

இந்த இடையூறுகள் குறைந்தபட்சம் புதன்கிழமை வரையிலும் விமானச் சேவைகளைப் பாதிக்கும் என்றும், பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை வரை இலவசமாக மீண்டும் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி வழங்கப்படும் என்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் கூறியது. நாட்ஸ் (Nats) நிறுவனம், இங்கிலாந்தின் 15 விமான நிலையங்களுக்கு வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு சேவைகளை வழங்குகிறது. 65,000-க்கும் மேற்பட்ட பயணிகள் தாமதப்படுத்தப்பட்டதாகவும், 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் ரயன்ஏர் (Ryanair) கூறியது. 

இதன் தொடர் விளைவுகள் ஐரோப்பா முழுவதும் உள்ள விமானங்களைப் பாதித்ததாக ஈஸிஜெட் (easyJet) நிறுவனம் தெரிவித்தது. சில உள்வரும் விமானங்கள் வெளிநாடுகளில் உள்ள விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட வேண்டியிருந்தது என்று ஐரோப்பிய வான்வெளி ஒருங்கிணைப்பாளரான யூரோகண்ட்ரோல் (Eurocontrol) கூறியது. லண்டன் விமான நிலையங்கள், அத்துடன் மான்செஸ்டர் மற்றும் பர்மிங்காம் ஆகியவை மிகவும் நேரடியாகப் பாதிக்கப்பட்ட விமான நிலையங்களில் அடங்கும்.

எடின்பர்க் மற்றும் பெல்ஃபாஸ்ட் உட்பட இங்கிலாந்தைச் சுற்றியுள்ள பிற விமான நிலையங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்களும் பாதிக்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில், புறப்பாடுகள் இடையூறுகளுடன் மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், ஆனால் வருகை விமானங்கள் இரவு முழுவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஹீத்ரோ (Heathrow) விமான நிலையம் தெரிவித்தது.

Thank You Google

Thank You Google
Thanks