வெள்ளி, 24 ஜூலை, 2026

செம்மணியில் மழைக்கவசத்துடன் (Raincoat) சிறுவர் ஒருவரின் எலும்புக்கூடு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வாய்வில் மழைக் கவசத்துடன் (Raincoat) ஒரு சிறுவருடைய எலும்புக்கூட்டு அடையாளம் காணப்பட்டது.

நெதன்யாகுவின் கைது குறித்த சர்வதேசத்தின் பார்வை!

சர்வதேச மன்னிப்பு சபையின் ஆராய்ச்சி, ஆதரவு, கொள்கை மற்றும் பிரசாரப் பிரிவின் மூத்த இயக்குநரான எரிக்கா குவேரா ரோசாஸ், இஸ்ரேலிய பிரதமருக்கு எதிரான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

 இஸ்ரேல், பலஸ்தீனத்திற்கு எதிராக மேற்கொண்டு வரும் யுத்த குற்றங்களை மேற்கோள்காட்டி இந்த அழைப்பை அவர் விடுத்துள்ளார். சமீபத்தில் நியூயார்க் மேயர் சோஹ்ரான் மம்தானி, நெதன்யாகுவைக் கைது செய்து காவலில் வைக்க அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் இதனைத்தொடர்ந்து வந்துள்ள எரிக்கா குவேராவின் அறிக்கை, வெளிநாட்டு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.2024-ல் காசா மீது இஸ்ரேல் நடத்திய போரின்போது போர்க்குற்றங்களைச் செய்ததாக நெதன்யாகு மீது குற்றம் சாட்டி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு எதிராகக் கைது ஆணை பிறப்பித்துள்ளது.

பிரிட்டன் வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சராக உமா குமரன் !

பிரித்தானிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் (FCDO) நாடாளுமன்ற இராஜாங்க அமைச்சராகவும் (Parliamentary Under-Secretary of State), ஆளும்கட்சியின் உதவி கொறடாவாகவும் (Assistant Whip) தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

பிரித்தானிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, இந்த நியமனம் 2026 ஜூலை 22 ஆம் திகதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

கடந்த 2024 ஜூலை மாதம் நடைபெற்ற பிரித்தானிய பொதுத்தேர்தலில் ‘ஸ்ட்ராட்ஃபோர்ட் அண்ட் போ’ (Stratford and Bow) தொகுதியில் தொழிற் கட்சி (Labour Party) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உமா குமரன், பிரித்தானிய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் வம்சாவளி உறுப்பினர் என்ற வரலாற்றைப் படைத்தார். 

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிக் குடும்பத்தைச் சேர்ந்த இவரின் பெற்றோர்கள், பிரித்தானியாவில் தஞ்சமடைந்தவர்கள் ஆவர். 

அனுபவம்: அரசியல் மற்றும் பொதுக் கொள்கை துறைகளில் முதுகலை பட்டம் பெற்றுள்ள உமா குமரன், லண்டன் மேயரின் மூத்த ஆலோசகராகவும், சர்வதேச காலநிலை அமைப்புகளின் அரசதந்திர அதிகாரியாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 

வெளியுறவுத்துறையில் இவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த முக்கியப் பதவி, பிரித்தானிய வாழ் தமிழ் மக்களிடையே பெருமகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இணைய சேவை முடக்கம்.

டெல்லி ஜந்தர் மந்தர் சுற்றுவட்டார பகுதியில் இணைய சேவை முடக்கப்பட்டதற்கு எதிரான பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று அவசர வழக்காக விசாரிப்பதற்கு ஏற்றுக்கொண்டுள்ளது. 

 நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்களைக் கண்டித்து, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜூன் 20 முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இணைய சேவை மற்றும் மெட்ரோ சேவை முடக்கப்பட்டது. மூன்று நாட்களாக ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள 1.5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மொபைல் இணைய சேவைகளை முடக்கப்பட்டது. 

இணைய முடக்கத்தால் ஜந்தர் மந்தர் மற்றும் அதன் அருகிலுள்ள கன்னாட் பிளேஸ் போன்ற வணிகப் பகுதிகளில் கடைகள், உணவகங்கள் மற்றும் அலுவலகங்கள் மாலை 6:30 மணிக்கே மூடப்பட்டு வணிக நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வலியுறுத்தி இந்த மனுவை பொதுநல மனுவாக மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!!

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்துள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில், குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் முன்னிலையாகாத காரணத்தினாலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்பதுடன், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவரது பிணையாளர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. இதற்கமைவாக, குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

டெங்கு மரணங்கள் 59 ஆக உயர்வு!!

நாட்டில் டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அந்த பிரிவு வௌியிட்டுள்ள புதிய அறிக்கையில் 80,114 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஆண்டின் இதுவரையில் 16,950 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

அதற்கு அடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் 16,021 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதுதவிர ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5534 பேரும், கண்டியில் 5437 பேரும், களுத்துறையில் 5245 பேரும் இரத்தினபுரியில் 4482 பேரும், காலியில் 4430 பேரும் டெங்கு நோயினால் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர். 

 2026 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் 24,739 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வியாழன், 23 ஜூலை, 2026

மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் இன்று (23) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். 


குழந்தையொன்றின் பிறந்தநாள் விழா நடைபெற்ற மண்டபம் ஒன்றை நோக்கி இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Thank You Google

Thank You Google
Thanks