செவ்வாய், 14 ஜூலை, 2026

யோஷித ராஜபக்ஷவின் பணமோசடி வழக்கு-காதலி யசரா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள பணமோசடி வழக்கு விசாரணையில், முன்னாள் CSN ஊடக நிறுவனத்தின் தலைவியும் அவருடைய முன்னாள் காதலியுமான யசரா அபேநாயக்க கொழும்பு உயர் நீதிமன்றில் முக்கிய சாட்சியமளித்துள்ளார். 

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி உதேஷ ரணதுங்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். நீதிமன்றில் யசரா அபேநாயக்க அளித்த சாட்சியம்: “யோஷித ராஜபக்ஷ கடற்படை அதிகாரியாகப் பணியாற்றிய காலப்பகுதியில், 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை அவருடன் காதல் உறவில் இருந்தேன். திருமண நோக்கத்திற்காக நாங்கள் மோதிரமும் மாற்றிக்கொண்டோம். எனினும், ஜாதகப் பொருத்தம் இல்லை என சோதிடர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த உறவு முடிவுக்கு வந்தது. நாங்கள் திருமணத்திற்குப் பின்னர் குடியேறுவதற்காக, மவுன்ட் லவீனியா / தெஹிவளையில் அமைந்த மிஹிந்து மாவத்தையிலுள்ள சொகுசு வீடு தொடர்பாகத் திட்டமிட்டிருந்தோம். அந்த வீட்டின் உள்துறை அலங்கார வேலைகள் தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

எனினும், அந்த வீடு தனது பேத்திக்குச் சொந்தமானது என யோஷிதவின் பாட்டி (டெய்ஸி பொரஸ்ட்) என்னிடம் கூறியிருந்தார்.” 

இந்த வழக்கு விசாரணையின் போது, காணி உரிமையாளரான லூசியன் ரத்நாயக்க மற்றும் யசராவின் மாமாவான வசந்த குமார ஜயசூரிய உள்ளிட்ட மேலும் மூன்று சாட்சிகள் ஆஜராகி சாட்சியமளித்தனர். 

குறிப்பாக, ரத்மலானை மற்றும் தெஹிவளைப் பகுதிகளில் அமைந்துள்ள காணிகளைக் கொள்வனவு செய்வதற்காக, பாதுகாப்புப் பணியாளர்கள் போன்ற தோற்றம் கொண்ட நபர்களால் பைகளில் பெருமளவிலான பணம் கொண்டு வரப்பட்டதாக வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் சொத்துக் கொள்வனவு தொடர்பான விபரங்களுடன் சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டன. 

2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில், தமது வருமான ஆதாரங்களை வெளிப்படுத்தாமல், ரத்மலானை மற்றும் தெஹிவளைப் பகுதிகளில் ரூபாய் 73.499 மில்லியன் மதிப்பிலான 5 காணி மற்றும் சொத்துக்களைக் கையகப்படுத்தியமை மற்றும் CSN ஊடக நிறுவன முதலீடுகள் ஊடாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சட்டமா அதிபரினால் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

இவ்வழக்கின் மேலதிக விசாரணைகளை வரும் ஜூலை 17 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய திகதியில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேலும் 13 சாட்சிகளுக்கு அழைப்பாணை (Summons) விடுத்து உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் பயணிகளை ஏற்றிச் செல்ல ட்ரோன் விமான சேவை!!

நாட்டில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ட்ரோன் விமான சேவையை சோதனை முறையில் அறிமுகப்படுத்துவதற்குச் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 

இலங்கையின் வான்வழிப் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், ஆரம்பத்தில் இதுவொரு சோதனைத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் என சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்தச் சேவையில் பயன்படுத்தப்படவுள்ள ஒவ்வொரு ட்ரோன் விமானமும் ஒரே நேரத்தில் 6 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இத்தகைய பயணிகள் ட்ரோன் போக்குவரத்துச் சேவைகள் ஏற்கனவே வெற்றிகரமாகச் செயற்பாட்டில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் அந்த நாடுகளின் வெற்றிகரமான மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டே இலங்கையிலும் இத்திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஒரே படுக்கையில் 3 நோயாளிகள்!!

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அரசு மருத்துவமனைகளையும், அதை நம்பியிருக்கும் ஏழை மக்களையும் அலட்சியப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

 இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் மிக முக்கியமான அரசு மருத்துவமனையான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், இடநெருக்கடியின் காரணமாக ஒரே படுக்கையில் கிட்டத்தட்ட 3 நோயாளிகள் வரை அனுமதிக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி கடும் கண்டனத்திற்குரியது. 

மருத்துவமனையில் நடைபெறும் புனரமைப்பு பணிகளின் காரணமாக, நோயாளிகள் அனைவரையும் ஒரே பிளாக்கில் இடம் மாற்றியதன் விளைவு தான், இந்த இட நெருக்கடிக்கு காரணம் என்று சொல்லப்படுவது , தமிழக சுகாதாரத் துறை அமைச்சகத்தின் நிர்வாகக் குளறுபடிக்கான சான்று. தலைமைச் செயலகத்தில் ஏதாவது புனரமைப்பு பணிகள் நடந்தால், அரசு அமைச்சர்களை எல்லாம் இப்படித்தான் ஒரே அறையில் அடைத்து, ஒரே சீட்டில் இடித்துக் கொண்டு அமர வைப்பார்களா.உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்களுக்கு நல்ல காற்றோட்டமான, வசதியான படுக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற அடிப்படை கூட திரு. ஜோசப் விஜய் அரசுக்கு தெரியவில்லையா? 

அல்லது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் எல்லாம் விளிம்புநிலை மக்கள் தானே என்ற இளக்காரமா? அரசு மருத்துவமனைகளையும், அதை நம்பியிருக்கும் ஏழை மக்களையும் அலட்சியப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.

 எனவே, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தரமான படுக்கைகள், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போதிய அளவில் ஏற்பாடு செய்து தர வேண்டுமென சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜையும், முதல்வர் விஜய்யையும் வலியுறுத்துகிறேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கம்பளை பொலிஸார் போல் நடித்து பல கோடி மோசடி!!

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் எனத் தங்களைக் காட்டிக்கொண்டு, மூன்று வருடங்களுக்கும் மேலாக நாட்டின் 15 பொலிஸ் பிரிவுகளில் உள்ள மக்களை ஏமாற்றி, பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கம், பணம் மற்றும் சொத்துக்களை மோசடி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 சந்தேகநபர்கள் மூவரும் உடுநுவர, தவுலகல பகுதியைச் சேர்ந்தவர்களாவர். 40, 44 மற்றும் 45 வயதுடைய இவர்கள், பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தனியாகச் செல்லும் நபர்கள் மற்றும் வாகனங்களை நிறுத்தி வைத்து, இவ்வாறு பொலிஸ் அதிகாரிகள் அல்லது சி.ஐ.டி அதிகாரிகள் எனத் தங்களைக் காட்டிக்கொண்டு, அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி சோதனையிடுவது போல நடித்து, அந்த மக்களிடமும் அவர்களின் வீடுகளிலும் இருந்த தங்க நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துள்ளமை தெரியவந்துள்ளது. 

 இவ்வாறாக 2023ஆம் ஆண்டு முதல் இவர்கள் பேராதனை, கண்டி, கொழும்பு கொம்பனித்தெரு, கிராண்ட்பாஸ், மாவனெல்லை, நாரம்மல, பிலிமத்தலாவை, தவுலகல, கம்பளை, கலஹா, கேகாலை, கடுகன்னாவை உள்ளிட்ட பல பகுதிகளில் இந்தக் கொள்ளைச் சம்பவங்களை நடத்தியுள்ளனர். 

ஒரு சந்தர்ப்பத்தில், கேகாலை பகுதியில் இவர்களால் பிடிக்கப்பட்ட நபர்களுக்குக் கேட்கும் வகையில் " சேர் இவர்களை பொலிஸ் நிலையத்திற்கு கூட்டிவரச் சொன்னார்" என்று பேசி, அவர்களை கேகாலை பொலிஸ் நிலையத்திற்கு அருகிலேயே அழைத்து வந்து, அவர்களிடம் இருந்த பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

 மேலும், வீடுகளைச் சோதனையிடுவது போல நடித்து, அந்த வீட்டில் உள்ளவர்களை ஒரே இடத்தில் இருக்கச் செய்து, வீடுகளில் இருந்த பணம் மற்றும் சொத்துக்களையும் இவ்வாறே கொள்ளையடித்துள்ளனர். 

கம்பளை பகுதியில் இடம்பெற்ற இவ்வாறானதொரு கொள்ளைச் சம்பவத்தின் பின்னர் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், பேராதனை நகரில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஏனைய இருவரும் பிலிமத்தலாவை நகரில் இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

 ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுக்கு பலத்த அடிமையாக இருந்த இம்மூவரும், கொள்ளையடித்த பணம் முழுவதையும் அதற்காகவே செலவிட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. 

 கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் உருக்கப்பட்டு பல்வேறு நகரங்களில் விற்கப்பட்டுள்ளதுடன், கண்டி நகரில் உள்ள ஒரு இடத்தில் அவ்வாறு விற்கப்பட்ட ஒரு தொகுதி தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. 

 இவர்களிடமிருந்த முச்சக்கரவண்டி ஒன்று, கத்தி, போதை மாத்திரைகள் மற்றும் உருக்கப்பட்ட தங்க நகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திங்கள், 13 ஜூலை, 2026

இலங்கையின் 114 வயது பெண் காலமானார்!!

இலங்கையின் மிக வயது முதிர்ந்த பெண்களில் ஒருவராக அறியப்பட்ட பஞ்சகே கலுமெனிகேன்பவர் காலமானதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் இன்று தனது 114ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

பஞ்சகே கலுமெனிகே அனுராதபுரம் மாவட்டத்தின் சங்கிலி கனதரவாவைச் சேர்ந்தவர்.1912ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் திகதி பிறந்த அவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது 114ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார்.


அதன் பின்னர் கீழே விழுந்து காயமடைந்த கலுமெனிகே, அறுவை சிகிச்சை மேற்கொண்டார். சிகிச்சைக்குப் பிறகு சுமார் இரண்டு மாதங்கள் உயிர் வாழ்ந்த நிலையில், பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 கலுமெனிகே, 12 பிள்ளைகள் மற்றும் 325 கொள்ளுப்பேரக்குழந்தைகளை உள்ளடக்கிய பெரிய குடும்பப் பரம்பரையை விட்டுச் சென்றுள்ளாரென்பதும் குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 12 ஜூலை, 2026

முன்னணி பாடகி எஸ்.ஜானகி மறைவு.

தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி பாடகி எஸ்.ஜானகி (88) வயது முதிர் காரணமாக காலமானார். 

தமிழ், மலையாளம், தெலுங்கு மட்டுமல்லாது உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளிலும் பாடியவர் ஜானகி. தன் கலை திறமைக்காக பல விருதுகளையும் பெற்றவர்.

 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் சேர்த்து 40,000 க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கும் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி.

 ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பல்லேபட்லா என்கிற கிராமத்தில் 1938-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி பிறந்தவர் எஸ்.ஜானகி. தனது 3 வயது முதல் பாடல்கள் பாடி வரும் இவர் 17 மொழிகளில் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். 

நடிகை ஸ்ரீதேவிக்கு மட்டும் 5 மொழிகளில் பின்னணி பாடியுள்ள இவர் 5 தலைமுறை கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்துள்ளார். சிங்கார வேலனே தேவா பாடலின் மூலம் ஜானகியின் புகழ் எங்கும் பரவியது. இந்த பாடலை தொடர்ந்து எக்கச்சக்கமான பாடல் வாய்ப்புகள் இவருக்கு வந்து குவிந்தது.

 இளையராஜாவின் இசையில் எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார் ஜானகி. இளையராஜா, எம்.எஸ்.வி, ஏ.ஆர்.ரஹ்மான், அன்று தொடங்கி இன்றைய அனிருத் என தலைமுறை இசையமைப்பாளர் வரை பாடியுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா மிகப்பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தியது.

ஜலசந்தி பற்றிய கூடுதல் தகவல்கள்: வாஷிங்டனும் தெஹ்ரானும் இந்த நீர்வழியின் நிலை குறித்து முரண்பட்ட கூற்றுகளை முன்வைக்கின்றன.   

"நேற்று இரவு அமெரிக்கா ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கியது" என்று கூறிய அதிபர் டொனால்ட் டிரம்ப், சிஎன்என் உடனான ஒரு நேர்காணலில் ஜலசந்தி திறந்தே இருப்பதாக வலியுறுத்தினார். பேச்சுவார்த்தைகளில் தெஹ்ரானின் செல்வாக்கிற்கு முக்கியமாக விளங்கும் இந்த முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடம் தொடர்பாக இது ஒரு பழக்கமான முட்டுக்கட்டையாகும். 

 பிராந்தியம் முழுவதும்: கப்பல் தாக்குதலுக்குப் பிறகு ஒரு இந்தியர் காணாமல் போயுள்ளார். சமீபத்திய ஈரானிய தாக்குதலில் ஆளில்லா விமானத் தாக்குதல்களை இடைமறித்ததில், ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்ததாக கத்தார் கூறியது. ஓமன், ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவையும் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறின.

Thank You Google

Thank You Google
Thanks