திங்கள், 13 ஜூலை, 2026

இலங்கையின் 114 வயது பெண் காலமானார்!!

இலங்கையின் மிக வயது முதிர்ந்த பெண்களில் ஒருவராக அறியப்பட்ட பஞ்சகே கலுமெனிகேன்பவர் காலமானதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் இன்று தனது 114ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

பஞ்சகே கலுமெனிகே அனுராதபுரம் மாவட்டத்தின் சங்கிலி கனதரவாவைச் சேர்ந்தவர்.1912ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் திகதி பிறந்த அவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது 114ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார்.


அதன் பின்னர் கீழே விழுந்து காயமடைந்த கலுமெனிகே, அறுவை சிகிச்சை மேற்கொண்டார். சிகிச்சைக்குப் பிறகு சுமார் இரண்டு மாதங்கள் உயிர் வாழ்ந்த நிலையில், பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 கலுமெனிகே, 12 பிள்ளைகள் மற்றும் 325 கொள்ளுப்பேரக்குழந்தைகளை உள்ளடக்கிய பெரிய குடும்பப் பரம்பரையை விட்டுச் சென்றுள்ளாரென்பதும் குறிப்பிடத்தக்கது.

உரும்பிராய் கற்பகப் பிள்ளையார் கோவில் வீதி கையளிப்பு!

யாழ்ப்பாணத்தில் கிராமியப் பாதைகளை அபிவிருத்தி செய்யும் விசேட தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், முழுமையாகப் புனரமைக்கப்பட்ட உரும்பிராய் கற்பகப் பிள்ளையார் கோவில் வீதியானது (Urumpirai Karphaga Pillayar Temple Road) ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்களின் உத்தியோகபூர்வப் பயன்பாட்டிற்காகக் கோலாகலமாகக் கையளிக்கப்பட்டுள்ளது. 

குடாநாட்டின் கிராமியப் போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் நீண்டகாலமாக மக்கள் விடுத்து வந்த கோரிக்கைக்கு அமைய இவ் வீதி புனரமைக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாகப் போக்குவரத்துச் செய்ய முடியாதவாறு மிக மோசமாகச் சேதமடைந்திருந்த இக் கற்பகப் பிள்ளையார் கோவில் வீதியானது, சுமார் 1.5 கிலோமீட்டர் (1.5 km) நீளத்தைக் கொண்டதாகும்.

இவ் வீதியின் விரிவான புனரமைப்புப் பணிகள் மற்றும் வடிகாலமைப்புச் சீரமைப்புகள் யாவும் 74.5 மில்லியன் ரூபா அரச நிதி ஒதுக்கீட்டின் கீழ் மிக உன்னதத் தரத்துடன் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இவ் வீதி திறக்கப்பட்டதன் மூலம் உரும்பிராய் மற்றும் அதனை அண்டிய கிராமப்புற மக்கள், ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தங்களது அன்றாடப் போக்குவரத்துகளை எவ்வித அலைக்கழிப்புகளுமின்றி முன்னெடுக்க முடியும். 

இன்றைய தினம் நடைபெற்ற இவ் வீதி திறப்பு உத்தியோகபூர்வ விழாவில், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் மற்றும் க. இளங்குமரன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, நாடாவை வெட்டி வீதியைப் பொதுமக்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.

தாய்லாந்தில் களியாட்ட விடுதியில் தீ - 27 பேர் பலி

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றில் இன்று (13) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 9 ஆண்களும், 18 பெண்களும் அடங்குவதாக அந்த நாட்டின் பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் தெரிவித்துள்ளார். அதேநேரம் அங்கு தொடர்ந்தும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 இந்த சம்பவத்தில் 63 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சமீபத்திய ஆண்டுகளில் தாய்லாந்தில் நடைபெற்ற மிக மோசமான தீ விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சை இடம்பெற்று வருவதுடன், குறித்த களியாட்ட விடுதியில் அனர்த்தங்களின் போது வௌியேறுவதற்கான அவசர கதவுகள் இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

 இதன்காரணமாகவே அதிகளவான உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. தீப்பரவலுக்கான காரணம் தெரியவராத நிலையில், அது தொடர்பில் தாய்லாந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஈரான் நகரங்கள் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்

ஈரானின் தெற்கு நகரங்களான ஜாஸ்க், பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் ஆகிய 3 முக்கிய நகரங்களில் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஈரானுக்கு எதிராக புதிய இராணுவ தாக்குதல்களை அமெரிக்கா அதிகரித்து உள்ளது. 

 இதுபற்றி அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு பிரிவான ராணுவ அதிரடி படையான சென்ட்காம் வெளியிட்ட செய்தியில், ஹேர்முஸ் நீரிணையை எளிதில் கடந்து செல்லும் வகையில், வர்த்தக கப்பல்களின் போக்குவரத்து பாதுகாப்பிற்காகவும் மற்றும் கடல்சார் ஊழியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் நோக்கிலும் ஈரானுக்கு எதிராக அதிகளவிலான தாக்குதல்களை அமெரிக்க படை தொடங்கியுள்ளது. 

 ஈரானிய படைகளின் திறனை குறைக்கும் வகையில், பாதுகாப்பு படை தளபதியின் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது என தெரிவித்து உள்ளது. இதன்படி, ஈரானின் தெற்கு நகரங்களான ஜாஸ்க், பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் ஆகிய 3 முக்கிய நகரங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கான சத்தம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரானுக்கு எதிராக நேற்று முன்தினம் 3-வது சுற்று தாக்குதல்களை அமெரிக்கா நடத்தி முடித்துள்ளது. ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் வர்த்தக கப்பல் ஒன்றை தாக்கியதற்கு பொறுப்பேற்க செய்யும் வகையில் ஈரானிய படைகளுக்கு எதிராக இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதன்படி, ஈரானின் 140 இராணுவ இலக்குகள் மீது துல்லிய தாக்குதல் நடந்தது. 

நிலம் மற்றும் கடல்வழி போர் விமானம், டிரோன்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் உதவியுடன் இந்த தாக்குதல் நடந்துள்ளது என அமெரிக்காவின் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது. இந்த சூழலில், நேற்று மற்றொரு தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை திறந்தே உள்ளது. 

ஞாயிறு, 12 ஜூலை, 2026

முன்னணி பாடகி எஸ்.ஜானகி மறைவு.

தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி பாடகி எஸ்.ஜானகி (88) வயது முதிர் காரணமாக காலமானார். 

தமிழ், மலையாளம், தெலுங்கு மட்டுமல்லாது உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளிலும் பாடியவர் ஜானகி. தன் கலை திறமைக்காக பல விருதுகளையும் பெற்றவர்.

 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் சேர்த்து 40,000 க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கும் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி.

 ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பல்லேபட்லா என்கிற கிராமத்தில் 1938-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி பிறந்தவர் எஸ்.ஜானகி. தனது 3 வயது முதல் பாடல்கள் பாடி வரும் இவர் 17 மொழிகளில் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். 

நடிகை ஸ்ரீதேவிக்கு மட்டும் 5 மொழிகளில் பின்னணி பாடியுள்ள இவர் 5 தலைமுறை கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்துள்ளார். சிங்கார வேலனே தேவா பாடலின் மூலம் ஜானகியின் புகழ் எங்கும் பரவியது. இந்த பாடலை தொடர்ந்து எக்கச்சக்கமான பாடல் வாய்ப்புகள் இவருக்கு வந்து குவிந்தது.

 இளையராஜாவின் இசையில் எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார் ஜானகி. இளையராஜா, எம்.எஸ்.வி, ஏ.ஆர்.ரஹ்மான், அன்று தொடங்கி இன்றைய அனிருத் என தலைமுறை இசையமைப்பாளர் வரை பாடியுள்ளார்.

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி குழந்தைகள் உள்பட 44 பேர் !!

நைஜீரியாவில் ஆயுதமேந்திய பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 44 பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை நைஜீரிய ராணுவம் அதிரடி நடவடிக்கை மூலம் பத்திரமாக மீட்டுள்ளது.

 நைஜீரியாவின் ஓயோ (Oyo) மாகாணத்தில் உள்ள மூன்று பள்ளிகளுக்குள் கடந்த மே மாதம் 15-ம் தேதி புகுந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். 

இச்சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. குழந்தைகளை மீட்க நைஜீரிய ராணுவமும் பாதுகாப்புப் படைகளும் இணைந்து கடந்த 56 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தன. இந்த நிலையில், பயங்கரவாதிகளின் பதுங்குவிடத்தைக் கண்டறிந்த ராணுவத்தினர், அங்கு அதிரடித் தாக்குதல் நடத்தினர். 

இந்த கூட்டு ராணுவ நடவடிக்கையின் முடிவில், கடத்தப்பட்ட 44 பேரும் எவ்வித காயமுமின்றி, பத்திரமாக மீட்கப்பட்டதாக நைஜீரிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

துரதிர்ஷ்டவசமாக, இந்த மீட்புப் பணியின் போது பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர்கள் சிலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தற்போது உரிய மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு, அவர்களின் குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டு வருகின்றனர். 

56 நாட்கள் தொடர் பதற்றத்திற்குப் பிறகு குழந்தைகள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது அவர்களது பெற்றோர் மத்தியிலும் உலக நாடுகள் மத்தியிலும் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மிகப்பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தியது.

ஜலசந்தி பற்றிய கூடுதல் தகவல்கள்: வாஷிங்டனும் தெஹ்ரானும் இந்த நீர்வழியின் நிலை குறித்து முரண்பட்ட கூற்றுகளை முன்வைக்கின்றன.   

"நேற்று இரவு அமெரிக்கா ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கியது" என்று கூறிய அதிபர் டொனால்ட் டிரம்ப், சிஎன்என் உடனான ஒரு நேர்காணலில் ஜலசந்தி திறந்தே இருப்பதாக வலியுறுத்தினார். பேச்சுவார்த்தைகளில் தெஹ்ரானின் செல்வாக்கிற்கு முக்கியமாக விளங்கும் இந்த முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடம் தொடர்பாக இது ஒரு பழக்கமான முட்டுக்கட்டையாகும். 

 பிராந்தியம் முழுவதும்: கப்பல் தாக்குதலுக்குப் பிறகு ஒரு இந்தியர் காணாமல் போயுள்ளார். சமீபத்திய ஈரானிய தாக்குதலில் ஆளில்லா விமானத் தாக்குதல்களை இடைமறித்ததில், ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்ததாக கத்தார் கூறியது. ஓமன், ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவையும் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறின.

Thank You Google

Thank You Google
Thanks