யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட 44 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை (2026 ஓகஸ்ட் 05) நீதவான் நீதிமன்றக் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், புதிதாக 08 மனித என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 08 என்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தின் உத்தியோகபூர்வ உத்தரவுக்கு அமைய, தொல்லியல் மற்றும் மருத்துவ நிபுணர்களின் தீவிர கண்காணிப்பில் இப் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியிருந்தது.
அதற்கமைய, 44 ஆம் நாளான இன்றைய தின அகழ்வுப் பணியின் போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 8 என்புக் கூடுகள் சான்றுப் பொருட்களாக உத்தியோகபூர்வமாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், இன்றைய தின அகழ்வுச் நடவடிக்கைகளின் போது புதிதாக மேலும் 08 மனித என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றுக்கான அகழ்வுப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செம்மணிப் புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என இதுவரையில் மொத்தம் 98 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இக் காலப்பகுதியில் மொத்தமாக 491 மனித என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 489 என்புக் கூடுகள் உத்தியோகபூர்வமாக முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவின் மனைவி கனடாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தஹாம் சிறிசேன மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு எதிராக 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் மற்றொரு பிரபல அரசியல்வாதியின் மகனுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது.தஹாம் சிறிசேனவும் நாட்டை விட்டுத் தப்பியதாகச் செய்திகள் பரவிய நிலையில், அவர் தற்போது கொழும்பிலேயே இருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்செய்தியை வெளியிட்ட ஊடக நிறுவனத்துடன் மைத்திரிபால சிறிசேன தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
இவ்வழக்கில் பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்தத் தீர்ப்பினால் மைத்திரிபால சிறிசேன பெரும் கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகனின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட மைத்திரிபால சிறிசேன, மிகவும் மன உளைச்சலுடனும் கவலையுடனும் காணப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றி வரும் நிதியமைச்சர் மரிய வில்சன், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூக நலனை மையமாகக் கொண்டு பல்வேறு பிரம்மாண்டமான திட்டங்களை அறிவித்துள்ளார்.
தொழில்நுட்ப வளர்ச்சி, விளையாட்டுத் துறை மேம்பாடு மற்றும் உயர்கல்வி சீரமைப்பு என அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை பதிவு செய்யும் வகையில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
அண்ணன் சீராக 8 கிராம் தங்க நாணயம் & பட்டுப்புடவை இன்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில், திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மிக முக்கிய மகிழ்ச்சியான தருணம்.
பெண்கள் அனைவரையும் தன் குடும்பத்தில் ஒருவராகக் கருதி, அவர்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவையை அண்ணன் சீராக’நமது அரசு வழங்கவுள்ளது என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். இத்திட்டத்திற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளின் ஆரம்பகால பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்ய மாநிலம் முழுவதும் 500 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
கல்வி மற்றும் டிஜிட்டல் புரட்சி டிஜிட்டல் மாற்றத்திற்கு ஏற்ப தமிழகத்தை அதிநவீன மாநிலமாக உருவாக்கும் இலக்கின் கீழ், பள்ளி மற்றும் உயர்கல்வித் துறைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித் துறை: ஒட்டுமொத்தமாக ரூ.44,527 கோடி ஒதுக்கீடு. உயர்கல்வித் துறை: ரூ.8,393 கோடி ஒதுக்கீடு.
வெற்றி மடிக்கணினி திட்டம்: கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை உயர்த்த ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் மடிக்கணினிகள் வழங்கப்படும். AI பாடத்திட்டம்: உலகத் தரத்திலான செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை வடிவமைக்க கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை முன்னோடிகள் அடங்கிய ‘நிபுணர் குழு’ அமைக்கப்படும்.
பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு AI திறன் பயிற்சி அளிக்கப்படும். தொழிற்பயிற்சி நிலையங்கள்: ரூ.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் (ITI) நிறுவப்படும்.
கேரள எல்லைப் பகுதியில் உள்ள அட்டப்பாடி மலை உச்சியில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த சுமார் 1,400 கஞ்சா செடிகளை போலீசார் கண்டறிந்து பிடுங்கி அழித்தனர்.
தமிழ்நாடு–கேரள எல்லைப் பகுதியில் உள்ள புதூர் அருகேயுள்ள மலை உச்சியில், கூடாரம் அமைத்து தங்கி இருந்த ஒரு கும்பல் கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தது தெரியவந்துள்ளது.
கேரள மாநிலத்தில் தற்போது போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 'ஆபரேஷன் துபா' என்ற பெயரில் ரகசிய போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், பாலக்காடு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தமிழ்நாடு–கேரள எல்லைப் பகுதியில் உள்ள அட்டப்பாடி மலை உச்சியில் கஞ்சா தோட்டம் அமைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு, கஞ்சா தோட்டத்தை கண்டுபிடித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செடிகள் அனைத்தும் சுமார் ஐந்து மாதங்கள் வயதுடையவை என தெரியவந்துள்ளது. அவற்றை அறுவடை செய்வதற்காக சம்பந்தப்பட்ட கும்பல் அப்பகுதியிலேயே கூடாரம் அமைத்து தங்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீசார் அனைத்து கஞ்சா செடிகளையும் முழுமையாக பிடுங்கி, அங்கேயே தீ வைத்து எரித்து அழித்தனர்.
மேலும், தமிழ்நாடு–கேரள எல்லைப் பகுதியில் உள்ள மலைத் தொடர்களில் வேறு எங்காவது கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளனவா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குளவி கொட்டுக்கு இலக்காகி திருகோணமலை பாடசாலை ஒன்றின் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை திவுல்வெவ மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலைக் கட்டடத்தில் இருந்த குளவிக் கூடு கலைந்தமையினால் மாணவர்கள் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் சிகிச்சைக்காக மஹதிவுல்வெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் மூன்று மாணவிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பிரான்ஸிலிருந்து சுமார் 160 அகதிகளை ஏற்றிக்கொண்டு எல்லை கடக்க முயன்ற அதிகளவிலான பயணிகளையுடைய சிறிய ரப்பர் படகொன்று (Dinghy) ஆங்கிலக் கால்வாயில் (English Channel) திடீரெனத் தீப்பற்றி மூழ்கியதில் பாரிய உயிர்ச்சேதத்தைத் தடுக்கும் நோக்கில் பிரெஞ்சு மற்றும் பிரித்தானியக் கடலோரக் காவல் படையினர் அவசர மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பிரான்ஸின் புலோம்-சுர்-மேர் (Boulogne-sur-Mer) கடற்கரைக்கு அப்பால் செவ்வாய்க்கிழமை (2026 ஓகஸ்ட் 04) அதிகாலை 6.00 மணியளவில் இச் சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரெஞ்சு எல்லைப் பகுதியில் சுமார் 160 அகதிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த படகின் இயந்திரம் (Engine) எதிர்பாராதவிதமாகத் திடீரென வெடித்துத் தீப்பற்றியுள்ளது. தீப் பிளம்புகள் படகு முழுவதும் பரவியதால் ரப்பர் படகு சேதமடைந்து கடலுக்குள் மூழ்கத் தொடங்கியது.
அதில் பயணித்த குழந்தைகள், பெண்கள் உட்பட அனைத்து அகதிகளும் கடும் குளிர்கொண்ட கட நீரில் தூக்கி வீசப்பட்டுக் மூழ்கியுள்ளனர்.
தகவல் அறிந்தவுடனேயே பிரித்தானியாவின் அரச தேசிய படகு மீட்பு நிறுவனம் (RNLI), பிரித்தானியக் கடலோரக் காவல் படை (UK Coastguard) மற்றும் பிரெஞ்சு கடலோரக் காவல் படை என்பன இணைந்து கூட்டு மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் ஹெலிகொப்டர்கள் மற்றும் மீட்புப் படகுகள் மூலம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.தலைநகர் சென்னையில் மின்பகிர்மான திறன் ரூ.1,390 கோடியில் வலுப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் பொருத்தப்படும்.
மாநிலத்தின் பிற பகுதிகளில் 50 லட்சம் தொழில், வணிக நுகர்வோருக்கு ஸ்மார்ட் மின்மீட்டர் பொருத்தப்படும். ரூ.16 கோடி நிதியுடன் தமிழ்நாடு பனை மேம்பாட்டு கழகம் நிறுவப்படும். சென்னையை உலக் தரத்திற்கு உய்த்தும் ஆய்வு பணிகளுக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் மரிய வில்சன்.
நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு பட்ஜெட்டில் ரூ.8,252 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் 20 ஸ்மார்ட் பார்க்கிங் அமைக்கப்படும். முதல்வரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாசென்னையில் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், பொது இடங்கள் பசுமையாக்கப்படும். சென்னையில் 5 ஆண்டுகளில் சமமான மற்றும் தடையற்ற குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும். மேலும் கூவம், அடையாறு ஆறுகளை தூய்மைப்படுத்தி மேம்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்படும்.
தொடர்ந்து இந்த 2 ஆறுகளிலும் படகு சவாரி, நதிக்கரை நடைபாதை மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்றார் நிதி அமைச்சர். மேலும் திட்டங்களுக்கு AI மூலம் விரைவாக அனுமதி தர ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்புகளில் EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மானியம் வழங்கப்படும், இதற்கு ரூ.5 கோடி ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கப்ட்டுள்ளது.
நகர்ப்புற மேம்பாட்டுதிட்டத்திற்கு ரூ.2,117 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குறைந்த குடும்ப வருமானம் மற்றும் இளைஞர்களுக்கு தரமான வீடுகள் கட்டி தரப்படும்.
சென்னையில் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், பொது இடங்கள் பசுமையாக்கப்படும். சென்னையில் 5 ஆண்டுகளில் சமமான மற்றும் தடையற்ற குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும்.
மேலும் கூவம், அடையாறு ஆறுகளை தூய்மைப்படுத்தி மேம்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்படும். தொடர்ந்து இந்த 2 ஆறுகளிலும் படகு சவாரி, நதிக்கரை நடைபாதை மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்றார் நிதி அமைச்சர்.
மேலும் திட்டங்களுக்கு AI மூலம் விரைவாக அனுமதி தர ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளில் EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மானியம் வழங்கப்படும், இதற்கு ரூ.5 கோடி ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கப்ட்டுள்ளது.