வியாழன், 5 பிப்ரவரி, 2026

இங்கிலாந்து நாடாளுமன்றம் வாரத்திற்கு £1.5 மில்லியன் பழுதுபார்ப்புக்காக செலவிடுகிறது!!

வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையை மீட்டெடுப்பதற்கு £40 பில்லியன் செலவாகும் மற்றும் 61 ஆண்டுகள் ஆகலாம். இங்கிலாந்து நாடாளுமன்றம் வாரத்திற்கு £1.5 மில்லியன் பழுதுபார்ப்புக்காக செலவிடுகிறது, 

ஆனால் மறுசீரமைப்பு திட்டங்களில் பொறுப்புணர்வு இல்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.இடிந்து விழும் நிலையில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையை மீட்டெடுப்பதற்கான திட்டங்களுக்கு £40 பில்லியன் செலவாகும் என்றும், 61 ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும், இந்த திட்டத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை ஆராய அமைக்கப்பட்ட அமைப்பின் அறிக்கை கண்டறிந்துள்ளது. 

விமர்சகர்கள் இந்த செலவை "கண்ணில் நீர் ஊறவைக்கும்" என்று முத்திரை குத்தினர், மேலும் இந்த திட்டத்திற்கு பொறுப்புக்கூறல் இல்லை என்றும் கூறினர். முன்னர் பரிசீலிக்கப்பட்ட நான்கு திட்டங்களுக்குப் பதிலாக, மறுசீரமைப்பு மற்றும் புதுப்பித்தல் வாடிக்கையாளர் வாரியத்தால் வரையப்பட்ட இரண்டு புதிய திட்டங்களில் ஒன்றை எம்.பி.க்கள் மற்றும் சகாக்கள் தேர்வு செய்ய வேண்டியிருக்கும். 

முதலாவது "முழுமையான டிகாண்ட்" ஆகும், அதில் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் மற்றும் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் வடக்கு எஸ்டேட்டிலிருந்து - அரண்மனைக்கு வெளியே ஆனால் அருகில் - வெளியேறும் மற்றும் லார்ட்ஸ் அருகிலுள்ள QEII மாநாட்டு மையத்திற்கு 2032 முதல் நகரும். இந்த விருப்பம் 19 முதல் 24 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்றும் £15.6 பில்லியன் வரை செலவாகும் என்றும் வாரியம் மதிப்பிடுகிறது. 

 லார்ட்ஸ் சபையை 8 முதல் 13 ஆண்டுகள் வரை காலி செய்யும் ஒரு "நிலைப்படுத்தப்பட்ட டிகண்ட்", அதே நேரத்தில் காமன்ஸ் இரண்டு ஆண்டுகள் வரை லார்ட்ஸ் அறைக்கு மாறும், இது 38 முதல் 61 ஆண்டுகள் வரை எடுக்கும் மற்றும் £39.2 பில்லியன் வரை செலவாகும். 

விக்டோரியா கோபுரத்தின் உட்புறத்தை புதுப்பித்தல், தேம்ஸில் ஒரு ஜெட்டியைக் கட்டுதல் மற்றும் நிலத்தடி சுரங்கப்பாதைத் தண்டுகளைத் தொடங்குதல் உள்ளிட்ட பாராளுமன்ற அவைகளில் ஆரம்ப £3 பில்லியன் மறுசீரமைப்பு பணிகளுக்கு எம்.பி.க்கள் மற்றும் சகாக்கள் ஒப்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

பணிகள் ஏழு ஆண்டுகள் நீடிக்கும், மேலும் ஒப்புதல் அளிக்கப்பட்டால் 2026 இல் தொடங்கலாம். பின்னர் 2030 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இறுதி இரண்டு விருப்பங்களில் ஒன்றைத் தேர்வு செய்ய வாரியம் அவர்களிடம் கேட்கும்.

யுனெஸ்கோ வெஸ்ட்மின்ஸ்டர் உலக பாரம்பரிய தளத்தில் பழங்கால வயரிங், கல்நார் மற்றும் பாதுகாப்பற்ற கொத்து வேலைகள் ஒரு பேரழிவு சம்பவத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற பரவலான சந்தேகங்கள் இருந்தபோதிலும், முக்கியமாக விக்டோரியன் கட்டிடத்திற்கு அவசரமாகத் தேவையான பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்கான சிறந்த வழி குறித்து எம்.பி.க்கள், சகாக்கள் மற்றும் மூத்த நாடாளுமன்ற அதிகாரிகள் பிரிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் 33 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கிளிநொச்சியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 33 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு பாதிப்படைந்துள்ளனர்.


குறித்த சம்பவம் இன்று (05-02-2026) காலை இடம்பெற்றுள்ளது.இந்தநிலையில், தொடர்ந்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதுடன், மேலதிக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக கிளிநொச்சி உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகும் சம்பவங்கள் அதிகமாகப் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பாடசாலைகளை மூடுவது குறித்த அரசின் திட்டம்!

3000 அரச பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்கள்.குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் கருத்து வெளியிட்டுள்ளது. 

 அதன்படி, குறித்த தீர்மானத்தினால் மலையக மாணவர்களின் இலவச கல்வி உரிமை பாதிக்கப்படலாம் என அந்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நாடு முழுவதும் 10 க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3,000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள் உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் 10,047 பாடசாலைகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  


 நுவரெலியாவில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அந்தச் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் வேலு இந்திரச்செல்வன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 1,500 பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 


எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை 3,000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.தற்போது மாணவர்கள் 3 கிலோமீற்றர் சுற்றளவிற்குள் கல்வி கற்கும் வகையில் பாடசாலைகள் அமைந்துள்ளன. எனினும், புதிய சுற்றுநிரூபத்தின் ஊடாக இந்தத் தூரத்தை 5 கிலோமீற்றராக அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது ஒரு திட்டமிட்ட செயல், முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மலையக மாணவர்கள் மீண்டும் பழைய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.


இலங்கையின் 2025 அரச பாடசாலைகள் தொடர்பான மக்கள் தொகை கணக்கெடுப்பு நாடு முழுவதும் ஆசிரியர்கள் எவ்வாறு பரவியுள்ளனர் என்பதில் பெரிய வித்தியாசத்தைக் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் (DCS) புள்ளிவிபரங்களின்படி, தேசிய சராசரி 16 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றாலும், ஒரு வகுப்பறையில் உண்மையான அனுபவம் பெரும்பாலும் ஒரு பிள்ளை கற்கும் பாடசாலை வகையைப் பொறுத்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 இந்தப் பிரச்சினை ஆரம்பப்பிரிவு பாடசாலைகளில் அதிகம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.5 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டுமே கற்பிக்கின்ற பாடசாலைகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் "வகை 3" பாடசாலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒப்பீட்டளவில் இங்கு 34,000 ஆசிரியர்கள் 580,000க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கையாளுகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதன், 4 பிப்ரவரி, 2026

டிரம்பின் மத்திய கிழக்குப் படைகளை ஈரான் கடுமையான ட்ரோன் தாக்குதல்!!


ஜப்பானில் பனி 30 பேர் பலி – 300-க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானில் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் வரலாறு காணாத பனிப்பொழிவு ஒரு பாரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் வடக்கு மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளில் கடந்த ஜனவரி 20 முதல் பெய்து வரும் அதீத பனிப்பொழிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (பெப்ரவரி 4, 2026) 35 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சுமார் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது . ஆமோரி (Aomori) போன்ற பகுதிகளில் பனியின் அளவு 4.5 மீற்றர் (14 அடி) வரை உயர்ந்துள்ளது. 

இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத உச்சபட்ச அளவாகும். வீடுகள் மற்றும் வீதிகளில் குவிந்துள்ள பனியை அகற்றவும், தனிமைப்படுத்தப்பட்ட முதியவர்களைக் காக்கவும் ஜப்பானிய தற்காப்புப் படைகள் (SDF) களமிறக்கப்பட்டுள்ளன. 

 பலியானவர்களில் பெரும்பாலானோர் கூரைகளில் படிந்துள்ள பனியை அகற்ற முற்பட்டபோது கீழே விழுந்தும், பனிச்சரிவில் சிக்கியும் அல்லது அதிகப்படியான உடல் உழைப்பால் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர் எனத் தொிவிக்கப்படுகின்றது. பனிப்புயல் மற்றும் மிகக் குறைந்த பார்வைத்திறன் (Low Visibility) காரணமாக, ஜப்பானின் முக்கிய நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்துச் சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜப்பான் ஏர்லைன்ஸ் (JAL) மற்றும் ஆல் நிப்பான் ஏர்வேஸ் (ANA) ஆகிய நிறுவனங்கள் இதுவரை 100-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன. குறிப்பாக ஹொக்கைடோ (Hokkaido), ஆமோரி மற்றும் நீகாட்டா ஆகிய பகுதிகளில் உள்ள விமான நிலையங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்கள் முற்றாக முடங்கியுள்ளன.

இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களிலேயே தங்கியுள்ளனர். அதேபோன்று ஜப்பானின் அதிவேக புகையிதங்களான தோகைடோ ஷிங்கான்சென் (Tokaido Shinkansen) மற்றும் அகிதா ஷிங்கான்சென் ஆகிய சேவைகள் பனியை அகற்றும் பணிகளுக்காக ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன அல்லது மிக மெதுவாக இயக்கப்படுகின்றன. 

வடக்கு ஜப்பானில் பல உள்ளூர் புகையிதப் பாதைகள் தண்டவாளங்களில் பனி மூடியிருப்பதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஜப்பானிய பிரதமர் சானே தாகைச்சி (Sanae Takaichi) அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, மேலதிக உயிரிழப்புகளைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும் இந்தப் பனிப்பொழிவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சுதந்திர தின கரிநாள் பேரணியில் பதற்றம்! இடைமறித்த அதிரடிப்படை

சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படும் பேரணியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்ற இடத்தை கடந்து ஆர்ப்பாட்டகாரர்கள் செல்லுகின்ற போது குறித்த பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

 இதன்போது காவல்துறையினர் ஆர்ப்பாட்டகாரர்களை அடக்க முயன்ற நிலையில் இவ்வாறன நிலை ஏற்பட்டதாக செய்தியாளர் தெரிவித்தார்.<இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி கிளிநொச்சி - கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

அங்கு ஆரம்பமான போராட்டம் தற்போது பேரணியாக கிளிநொச்சி நகரத்தை நோக்கி நகர்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியவாதிகள், இளைஞர் - யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினமான இன்றைய தினத்தை தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கில் கரிநாளாக அறிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்கள - பௌத்த மயமாக்கப்படுதல், இந்தப் பகுதிகளில் தமிழர்களைச் சிறுபான்மையினராக்கும் நோக்கில் திட்டமிட்ட குடியேற்றங்கள், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி, இறுதிப் போரின்போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைக்கு நீதி, தமிழ் மக்களுக்கான நிலையான அரசியல் தீர்வு என்பவற்றை வலியுறுத்தியே வடக்கு - கிழக்கில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

தமிழக அமளியில் ஈடுபட்ட 8 எம்பிக்கள் மீது நடவடிக்கை!!

மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் உட்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 


இதில் பங்கேற்று உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட மோதல் குறித்து, முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம்.நரவனேவின் நினைவுக் குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்டு வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி பேச முயன்றார். 

அப்போது, ராகுல் காந்தி அவையைத் தவறாக வழிநடத்துவதாகக் கூறி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையடுத்து, ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது. விவாதத்துக்காகப் பட்டியலிடப்பட்ட தலைப்பில் இந்தியாவோ அல்லது சீனாவோ இடம்பெறவில்லை, எனவே, கொடுக்கப்பட்டுள்ள தலைப்பின் கீழ் பேசும்படி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார். அதைக் கேட்காமல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மக்களவை நேற்று கூடியதும், ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவரின் இருக்கை அருகில் சென்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். 

அவர்கள் காகிதங்களை கிழித்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனையடுத்து, மக்களவையில் அத்துமீறி நடந்து கொண்ட காரணத்துக்காக 374-வது பிரிவின் கீழ் இந்த அமர்வில் இருந்து 8 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்ய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு தீர்மானம் கொண்டு வந்தார்.

குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஹிபி ஈடன், அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங், தமிழக எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் மற்றும் குர்ஜித் சிங் அவுஜ்லா, கிரண் குமார் ரெட்டி, பிரசாந்த் படோல், டீன் குரியகோஸ் உள்ளிட்ட 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அவையில் அறிவிக்கப்பட்டது. 

ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட கடும் அமளியால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

Thank You Google

Thank You Google
Thanks