நீண்டகாலமாக இழுபறியில் இருந்த செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் அகழ்வுத் தளத்தை நேரில் பார்வையிடவுள்ளனர்.இந்த நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த ஏப்ரல் ஏழாம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது அகழ்வுப் பணிகளுக்கான நிதிச் செலவினங்களுக்கு நீதி அமைச்சு அனுமதி வழங்காததால் பணிகள் தாமதமடைந்தன.எனினும், கடந்த வாரம் இதற்கான நிதி நீதி அமைச்சால் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நிதி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டபடி எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி செம்மணிப் பகுதியில் அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பது குறித்து இன்றைய நீதிமன்ற அமர்வில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு சுரேஷ் சலே மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவிலுள்ள சிலர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடுகள் ஐந்து வருடத்திற்கு பின்னர் நேற்று(20) குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்தில் வாக்கு மூலம் பதிவு செய்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரந்த அமரசிங்க சிவில் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்திற்கு சென்று வெளியில் வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். தொடரந்துரையாற்றிய அவர்.உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு சுரேஷ் சலே மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவிலுள்ள ஒரு குழு சம்பந்தப்பட்டுள்ளது என 2021.11.15 நான் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தேன்.
ஆனால் அது தொடர்பில் எவ்வித விசாரணைகளும் கோட்டாபய ஆட்சியிலும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் நடத்தவில்லை.
அது தொடர்பில் என்பிபி அரசாங்கம் வாக்கு மூலம் பதிவு செய்வதற்கு ஆரம்பித்துள்ளமை பாராட்டத்தக்கது.
கடந்த அரசாங்கங்கள் இது தொடர்பில் எதுவும் செய்யவில்லை.
சாட்சியங்கள் உறுதியானதால் விசாரணை நடத்தி இந்த சம்பவத்தை முடிவுறுத்த முடியாது என்பதால் கண்டுகொள்ளவில்லை.இதற்கு இராணுவ புலனாய்வு பிரிவினர் அனைவரும் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதல்ல.சுரேஷ் சலேவுடன் இருந்த சிறு குழுவினரே சம்பந்தப்பட்டுள்ளனர்.
இது புலனாய்வு பிரிவில் உத்தியோகப்பூர்வமற்ற செயற்பாடா? என கேட்க விரும்புகிறோம்.
சுரேஷ் சலேவுக்கு எதிராக சாட்சியங்கள் சொல்வோருக்கு இராணுவ புலனாய்வு பிரிவினர் என சொல்லிக் கொள்பவர்கள் அச்சுறுத்தல் செய்ய முயற்சிக்கின்றனர்.
சுரேஷ் சலேவை கைது செய்த பின்னர் ஏன் புலனாய்வு பிரிவினர் இவ்வளவு பதற்றத்திற்குள்ளாகியுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - இரான் பேச்சுவார்த்தைக்கான குழுவை அமெரிக்கா அனுப்பியுள்ள நிலையில், பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் திட்டம் இல்லை என இரான் கூறியுள்ளது.
இந்தநிலையில் இரானியக் கொடி ஏந்திய சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கா சிறைபிடித்ததை அடுத்து, ஓமன் வளைகுடாவில் அமெரிக்க ராணுவக் கப்பல்கள் மீது இரான் டிரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இரானின் அரசாங்கத்துடன் தொடர்புடைய செய்தி நிறுவனமான தஸ்னிம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்த டிரோன் தாக்குதல்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை.
அமெரிக்க கடற்படையின் இந்த நடவடிக்கை போர் நிறுத்தத்தை மீறுகிறது எனக் கூறி, இரானின் உயர்மட்ட ராணுவக் கட்டளைப் பிரிவான கத்தம் அல்-அன்பியா மத்தியத் தலைமையகம் ஏற்கனவே பதிலடி கொடுக்கப்போவதாக எச்சரித்திருந்தது.
தனது கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக வளைகுடா பகுதியில் இரானியக் கொடி ஏந்திய சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
பயணத்தை நிறுத்துவதற்கான எச்சரிக்கைகளுக்குப் பதிலளிக்காதபோது 'டோஸ்கா' என்ற பெயருடைய அந்தக் கப்பல் அமெரிக்க கடற்படையால் கைப்பற்றப்பட்டதாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
"இன்று, இரானியக் கொடி ஏந்திய டோஸ்கா கப்பல் கடற்படை முற்றுகையை மீற முயன்று தோல்வியடைந்தது. அந்தக் கப்பல் 900 அடி நீளமும், கிட்டத்தட்ட ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கு இணையான எடையும் கொண்டது" என்று டிரம்ப் எழுதியிருந்தார்.
மேலும் , கப்பலை நிறுத்த அமெரிக்கா எச்சரித்ததாகவும், அது புறக்கணிக்கப்பட்டதால், "எங்கள் கடற்படைக் கப்பல் அதன் எஞ்சின் அறையைத் தாக்கி அங்கே அதை நிறுத்தியது" என்றும் அவர் கூறினார்.
இங்கிலாந்து தனது பழைய காற்றாலை மற்றும் சூரிய மின் பண்ணைகளை நிலையான விலை ஒப்பந்தங்களுக்கு மாற்றுகிறது.
மொத்த எரிவாயு விலைகளின் உயர்வால் மின்சாரச் செலவுகளில் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் மிகவும் தீவிரமான முயற்சியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
எதிர்கால எரிவாயு சந்தை அதிர்ச்சிகளிலிருந்து வீடுகளையும் வணிகங்களையும் பாதுகாக்க உதவும் வகையில், கிரேட் பிரிட்டனின் மின்சார சந்தையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ள பழைய காற்றாலை மற்றும் சூரிய மின் பண்ணைகளை நிலையான விலை ஒப்பந்தங்களுக்கு மாற்றும் திட்டங்களை அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
கார்டியன் பத்திரிகையால் முதலில் வெளியிடப்பட்ட இந்தத் திட்டங்களின்படி, "மின்சாரத்தின் விலையை எரிவாயுவின் விலையிலிருந்து பிரிக்கும்" அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக, சந்தை விலைக்கு மேல் மானியங்களைப் பெறும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள், மின்சாரத்திற்கு ஒரு நிலையான விலையை வழங்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படும்.
இந்தத் தன்னார்வ மாற்றம், எந்தவொரு வளர்ந்த பொருளாதாரத்திலும் மிக உயர்ந்ததாக இருக்கும் இங்கிலாந்தின் மின்சாரக் கட்டணங்களில், விண்ணை முட்டும் மொத்த எரிவாயு விலைகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் மிகவும் தீவிரமான முயற்சியாக அமையும்.
"எரிசக்திப் பாதுகாப்பிற்கான ஒரே வழி மற்றும் கட்டணங்களை நிரந்தரமாகக் குறைப்பதற்கு" தூய்மையான எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்துவதற்கும், புதைபடிவ எரிபொருள்களுக்கு மாற்றாக மின்சாரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும் ஆன திட்டங்களுடன் இந்த சந்தைத் தலையீட்டையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
எரிசக்தித் துறைச் செயலாளர் எட் மிலிபான்ட் செவ்வாயன்று ஆற்றவிருக்கும் உரைக்கு முன்னதாக இந்த நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. அந்த உரையில், ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் ஏற்பட்ட இரண்டாவது புதைபடிவ எரிபொருள் அதிர்ச்சியிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம், "தூய்மையான எரிசக்திக்கான நமது இலக்கில் பின்வாங்காமல், மேலும் தீவிரமாகச் செயல்பட வேண்டும்" என்பதுதான் என்று அவர் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2017 முதல் குறைந்த கார்பன் திட்டங்களால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களைப் போன்ற இந்த புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட, "பாரம்பரிய மின் உற்பத்தியாளர்கள்" என்று அழைக்கப்படுபவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் அல்லது அவர்களின் இலாபங்கள் மீது அதிக எதிர்பாராத வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று கடந்த வாரம் தி கார்டியன் செய்தி வெளியிட்டது.
பிரிட்டனின் பெரும்பாலான மின்சாரத்தை நிலையான விலை ஒப்பந்தங்கள் மூலம் பெறுவதால், மின்சாரக் கட்டணங்கள் குறையும் மற்றும் கட்டணம் செலுத்துவோர் திடீர் சந்தை விலை அதிர்ச்சிகளால் குறைவாகவே பாதிக்கப்படுவார்கள்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உயரும் எரிவாயு விலைகளிலிருந்து பாதுகாப்பதற்காக, இந்த முன்மொழிவு முதன்முதலில் ஏப்ரல் 2022-ல் பிரிட்டன் எரிசக்தி ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டது.
இதன் பொருள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், உயிரி எரிபொருள் மற்றும் அணு உலைகளுக்கு உயர்ந்த சந்தை விலைகள் ஒரு எதிர்பாராத ஆதாயத்தை வழங்குகின்றன; ஆனால், அவை தொழில்துறையில் 'வேறுபாட்டிற்கான ஒப்பந்தம்' (contract for difference) என்று அழைக்கப்படும்,
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமெரிக்காவின் கடற்படைத் தடையை மீறிச் செல்ல முற்பட்ட ஈரானியக் சரக்குக் கப்பலை அமெரிக்கப் படைகள் சிறைபிடித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
தூஸ்கா' என்ற பெயருடைய அந்தப் கப்பலை ஓமன் வளைகுடாவில் அமெரிக்க கடற்படை பலமுறை எச்சரித்ததாகவும், அதனை குறித்த கப்பலின் மாலுமிகள் பொருட்படுத்தாது சென்றமையினால் தாக்குதல் நடத்தி சிறைபிடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கைப்பற்றிய அந்தப் கப்பலில் என்ன இருக்கிறது என்பதைச் சோதித்து வருகின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஈரானின் துறைமுகத்தை நோக்கிச் சென்ற அந்த கப்பலுக்கு அங்கு பயணிக்க வேண்டாம் என 6 மணிநேரமாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பெந்தோட்டை கடற்பரப்பில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.
இவர் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர் என்பதும், ஏனைய மாணவர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரிமலை கடற்பரப்பில் நீராடிக்கொண்டிருந்த ஒருவரும் நேற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் மற்றுமொருவருடன் இணைந்து நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை மற்றும் காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
வடமராட்சி பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு திருமணமாகி 10 வருடங்கள் கடந்தும் குழந்தை பெறு கிடைக்காத நிலையில் , 10 வருடங்களின் பின் கர்ப்பமடைந்துள்ளார்.
கடந்த 17ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரசவம் நடைபெற்ற போது , இரண்டு ஆண் குழந்தைகளையும் , இரண்டு பெண் குழந்தைகளையும் பிரசவித்துள்ளார். இந்நிலையில் தற்போது தாய் மற்றும் சேய்கள் ஆரோக்கியமான உள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.