தமிழர் வரலாறு






நோவாவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளம் உலக உரிணிங்களை வெள்ளம் அழித்ததாக வேதம் கூறுகிறது உண்மையே.

தம்பிரான் வணக்கம்

கால சுப்ரமணியம்

இந்தியாவில் அச்சிடப்பட்ட முதல் நூல், தமிழின் முதல் அச்சு நூல், அச்சில் வெளிவந்த முதல்தமிழாக்க மொழிபெயர்ப்பு நூல் என்ற பெருமைபெற்றது 1578 இல் அண்ட்ரிக் அடிகள் எழுதிப் பதிப்பித்து வெளியிட்ட தம்பிரான் வணக்கம் என்ற தமிழ்ப் புத்தகம்.

தம்பிரான் வணக்கம் 1578 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு தமிழ் அச்சு நூல்இந்த நூலை அண்ட்ரிக் (ஹென்றிக்கே ஹென்றிக்கஸ் – Henrique Henriques / Antrique Andriquez) என்ற போர்த்துக்கீசிய சேசு சபை கத்தோலிக்க பாதிரியார் மொழிபெயர்த்து எழுதி வெளியிட்டார்

தம்பிரான் வணக்கம், போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட Doctrina Christamஎன்ற கிறிஸ்துவ சமய போதனை நூலின் தமிழாக்கம். இதுதான் தமிழில் அச்சில் வெளிவந்த முதல் நூலாகக் கருதப்படுகிறது. இந்திய மொழிகளிலேயே தமிழ்மொழி தான் முதன் முதலாக அச்சு நூல் வெளியிடப்பட்டது. புத்தகம் பதிப்பிக்கப்பட்ட இடம் கொல்லம் என்றும், பதிப்பு நாள் 20.10.1578 என்றும் அந்நூலிலிருந்தே அறியமுடிகிறது.

கிறிஸ்தவம் தமிழ் மண்ணில் வேரூன்றக் காரணமாக அமைந்தவர் யேசு கிறித்துவின் சீடர்களுள் ஒருவரான புனித தோமா என்று  கருதுகிறார்கள். கிபி 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போர்த்துகீசியரின் ஆதரவின் கீழ் பல கிறிஸ்தவ மறைபரப்பாளர்கள் தமிழகம் வந்து கிறிஸ்தவ மறையைப் பரப்பினார்கள்

இவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவ சபையைச் சார்ந்தவர்கள்.அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர்கள் : புனித பிரான்சிஸ் சவேரியார் (1506-1552), அண்ட்ரிக் அண்ட்ரிக்கி (1520-1600),ராபர்ட் தெ நோபிலி (1577-1656), எப்ரேம் தெ நேவேர் (1603-1695), புனித அருளானந்தர் (1647-1693), வீரமாமுனிவர்(1680-1746).
கிபி 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து புரோட்டஸ்டண்டு சபைகளைச் சார்ந்த கிறிஸ்தவ மறைபரப்பாளர்கள் தமிழகம் வந்த்தார்கள்.

அவர்கள் ஹாலாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வந்து,தமிழகத்தில் கிறிஸ்தவ மறையைப் பரப்பினார்கள். அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர்கள் : பர்த்தலோடிமியு சீகன்பால்க்(1682-1719), ராபர்ட் கால்டுவெல் (1814-1891), ஜி. யூ. போப் (1820-1908).
காலனிய, உள்ளூர் அரசியல், மத காரணங்களாலும் 1547ஆம் ஆண்டில் சோழமண்டலக் கடற்கரையில் வந்திறங்கிய போர்த்துக்கீசிய யூதர் ஹென்றிக்கே ஹென்றிக்கஸ் (1520-1600) என்னும் சேசு சபை மறைபரப்பாளரின் முயற்சியாலும் ரோமானிய வரிவடிவிலும் தமிழ் வரிவடிவிலும் தமிழில் அச்சிடுவது நிறைவேறியது

தமிழகத்தில் தங்கிப் பணியாற்றிய காலத்தில் ஐந்து வெவ்வேறான தமிழ் நூல்களை மேற்கு கடற்கரையின் பல்வேறு சேசு சபை குடியிருப்புக்களிலிருந்து தமிழ் வரிவடிவில் அண்ட்ரிக் வெளியிட்டார். மேலும் தமிழின் இலக்கணம்,  அகராதி போன்றவற்றையும் தொகுத்திருந்தார். அச்சிடப்படாதபோதும் இந்நூல்கள் தொடக்க கால ஐரோப்பியர்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்ததன. அண்ட்ரிக் பற்றி, ‘இந்திய மொழி ஒன்றில் ஆழ்ந்த புலமை பெற்ற முதல் ஐரோப்பிய அறிஞர்,’ என கிரகாம் ஷா  குறிப்பிடுகிறார்.
அண்ட்ரிக் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தமிழ்நாட்டில் மதப்பரப்புப் பணிகளில் ஈடுபட்டவர். ஐரோப்பாவில் இருந்து தமிழ்நாடு வந்து முதன் முதலாகத் தமிழ் கற்றுக் கொண்டவர் இவரே. கிபி 1546 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த இவர் ஆரம்பக்காலத்தை கோவாவில் கழித்த பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்தார். இயேசு சபை சார்பில் தமக்கு மேலதிகாரியாக இருந்த புனித பிரான்சிஸ் சேவியரின் (Saint Francis Xavier, 1506-1552) அறிவுறுத்தலின் பேரில் தமிழ் கற்றுக் கொண்டார்.

தமிழில் எழுதவும் பேசவும் திறமை பெற்றார். தமிழ்மொழியைக் கற்றுக்கொண்ட அவர், முதல் தமிழ்  அச்சுப் புத்தகமானதம்பிரான் வணக்கம்என்னும் நூலை வெளியிட்டார். பாமர மொழியில் சமய மந்திரங்களை அனைத்து சாதியினரும் பயின்று உச்சரிக்கப்படும் மரபை மீறிய ஒரு எதிர் பண்பாட்டை உருவாக்கினார். இவர்தமிழ் அச்சுக்கலையின் தந்தைஎனப் போற்றப்படுகிறார்

அக்காலத்தில் தமிழ் மொழி எழுத்துகளுக்கான அச்சுகளையும் முதன்முதலாக உருவாக்க அவர் ஏற்பாடு செய்தார். கோன்சால்வசஸ் என்னும் அச்செழுத்துக்களை வெட்டுவதில் சிறந்த கருமானின் உதவியைப் பெற்று தமிழ் எழுத்துக்கள் வடிக்கப்பட்டன. அண்ட்ரிக் இறந்த பின்னர் இவரது உடல் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
1865ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆங்கிலநூலானதமிழில் அச்சிடப்பட்ட நூல்களில் வகைப்படுத்தப்பட்ட அட்டவணை’ (‘Classified catalogue of Tamil printed books’), 1865 வரை 1755 நூல்கள் தமிழில் அச்சிடப்பட்டதாகக் கூறுகிறது.  1867-1900 ஆண்டுகளில் 8578 புத்தகங்கள் அச்சில் வந்திருப்பதாகவும்நாற்பது ஆண்டுகளில் (1860-1900)சுமார் பத்தாயிரம் நூல்கள் தமிழில் அச்சிடப்பட்டிருப்பதாகவும் விபரங்கள் தெரிகின்றன.

முதல் தமிழ் புத்தகம் 1554ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் நாள் லிஸ்பனில் வெளியானது. அதை ஆக்கியோர் வின்சென்ட் தெ நாசரெத், ஹோர்கே கார்வாலோ, தோமா குருசு ஆகியோர்.   இம்மூவரும் தமிழ் அறிந்த இந்தியர்களே என்றும் அவர்களுடைய கிறித்தவப் பெயர்களே நமக்குத் தெரிந்துள்ளன என்றும்  கருதுகிறார்கள்.

கார்த்தீயா ஏங் லிங்குவா தமுல் போர்த்துகேஸ்’ (Cartilha ē lingoa Tamul e Portugues) (‘தமிழ் மொழியிலும் போர்த்துகீசியத்திலும் அமைந்த திருமறைச் சுவடிஎன்பது இதன் பொருள்) என்னும் தலைப்பில் வெளியான அந்நூலில் தமிழ்ச் சொற்கள் லத்தீன் எழுத்துக்களில் அச்சுக் கோக்கப்பட்டிருந்தன.
இந்த நூல்தான் வரலாற்றிலேயே முதலில் அச்சேற்றப்பட்ட தமிழ் நூல். ஐரோப்பிய மொழியிலிருந்து முதலில் மொழிபெயர்ப் பான  புத்தகம்

இந்திய மொழியொன்றிலிருந்து ஐரோப்பிய மொழிக்கு எழுத்துமாற்றம் செய்யப்பட்ட முதல் நூல் என்று இதை கமில் சுவலெபில் குறிப்பிடுகிறார்.
அன்றைய தமிழகத்தில் செப்புப் பட்டயங்களிலும் கற்களிலும் எழுதப்பட்டுவந்த காலகட்டத்தில்தான்தம்பிரான் வணக்கம்’ (1578) என்ற தமிழ்வரிவடிவ அச்சு வெளியீடு நிகழ்ந்தது. தமிழில் முதலாவதாக அச்சேறிய இந்தப் புத்தகம் ருஷ்யா (1563), ஆபிரிக்கா (1624), கிரீஸ் (1821) நாடுளின் முதல் அச்சு நூல்களை விட முந்தையது

இதன் ஆசிரியரான அண்ட்ரிக் அடிகள் கிறிஸ்தியானி வணக்கம் (1579) என்ற புத்தகத்தையும் வெளியிட்டார்.‘தம்பிரான் வணக்கம்’, 10X14 செ.மீ அளவில் அமைந்த  புத்தகம். தமிழ் நூலின் மேலட்டை முகப்புப் பக்கத்தில் மேலே ‘Doctrina Christam  en Lingua Malauar Tamul’ என்றுள்ளது. பக்கத்தின் நடுவில் திரித்துவக் கடவுள் (Trinity) வடிவம் மரச்செதுக்கு ஓவியமாக (8X10செ.மீ) பதிக்கப்பட்டுள்ளது. பக்க்த்தின் நான்கு ஓரங்களிலும் சிலுவைகளும் அலங்கார கோலங்களும் வரையப்பட்டுள்ளன.

கீழே அக்கால வழக்கிலிருந்த தமிழ் எழுதும் முறையில் தமிழ்த் தலைப்பு தரப்பட்டுள்ளதுபக்கத்துக்கு 24 வரிகள். இப்புத்தகத்தின் எழுத்துரு வடிவங்களில் புள்ளிகள் இடப்படாமல் சொற்களும் பிரிக்கப்படாமல் அச்சடிக்கப்பட்டுள்ளன. 18 உள்தலைப்புகள் போர்த்துகீசிய மொழியில் இருக்கின்றன. சீனக்காகித்த்தில் அச்சடிக்கப் பட்டுள்ளது. Doctrina Christam by Fr. Marcos Jorge அல்லது பிரான்சிஸ் சேவியர் வெளியிட்ட Doctrina Christam  என்ற போர்த்துக்கீசிய மொழி நூல்தான் அண்ட்ரிக்கால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
1575ஆம் ஆண்டுவாக்கில் தமது கிழக்குக் கடற்கரை சமயப் பணிகளிலிருந்து கோவாவிற்கு மாற்றப்பட்ட பிறகு,அண்ட்ரிக் தம் நூல்களைத் தொகுக்கத் தொடங்கினார். இதற்கு தமிழ்ப் பார்ப்பனராக இருந்து 1562ஆம் ஆண்டு சேசு சபையில் இணைந்த அருட்தந்தை பெரோ லூயிஸ் துணையாயிருந்தார். லூயிசின் துணையுடன் கொல்லத்தில் இருந்த அருட்தந்தை யோவான் ஃபாரியாவின் மேற்பார்வையில் கோவாவில் யோவான் கொன்சால்வசு முதல் தமிழ் அச்சுருக்களை வடித்தார்.

1577ஆம் ஆண்டு கோவாவில் அண்ட்ரிக் ஐந்து நூல்களில் முதலாவதானடாக்ட்ரினா கிறிஸ்டம் என் லிங்குவா மலபார் தமுல்தம்பிரான் வணக்கம்’ (Doctrina Christam en Lingua Malauar Tamul – Tampiran Vanakam) அச்சிடப்பட்டது. ‘மலபார் தமிழில் கிறிஸ்தவ போதனைஎன்பது இதன் பொருள். பதினாறு பக்கங்கள் உடையதாக இது இருந்தது. இந்திய வரிவுருவொன்றில் வெளியான முதல் நூல் இது. இது பற்றி சில ஆய்வாளர்கள் சந்தேகம் எழுப்பிய போதிலும், கிரகாம் ஷா அந்த அச்சிடல் நிகழ்ந்ததென்பதை உறுதியாகக் கூறுகிறார். இரண்டாவதாக வெளிவந்த நூல்கிரிசித்தியானி வணக்கம்’ (1578) பதினாறு பக்கங்களே உடையதாக இதுவும் இருந்தது

மூன்றாவது நூல் போர்த்துக்கலில் பரவலாகியிருந்த மார்கோசு (Fr. Marcos Jorge) என்பவர் உருவாக்கியகிறித்தவ சமயப் போதனை’ (Catechism) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 127 பக்கங்களாக வெளியானது. நவம்பர் 14, 1579ஆம் ஆண்டில் வெளியான இந்நூலுக்கான புதிய அச்சுகள் கொச்சியில் வார்த்தெடுக்கப்பட்டன. மூன்று கிறிஸ்தவ சமயப் போதனை நூல்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு அச்சுருக்களில் அடுத்த மூன்றாண்டுகளில் வெளியாயின.கொச்சியில் அச்சிடப்பட்ட அண்ட்ரிக்கின் மற்ற இரு நூல்கள்: பாவ அறிக்கை நூல் (Confessionario, 1580) (214பக்கங்கள்), அடியார் வரலாறு (Flos Sanctorum, 1586)  (669 பக்கங்கள்).

கர்ட் எர்சிங்கர் 1951 இல் ஹார்வார்டு பல்க்கைக்கழகத்துக்குதம்பிரான் வணக்கம்பிரதி ஒன்றை அன்பளிப்பாக அளித்தார். அது இன்றும் பார்வைக்கு உள்ளது. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்திலும் ஹைதராபாத் அமெரிக்க்க் கல்வி மையத்திலும் இதன் நகல் பிரதிகள் உள்ளன. லிஸ்பன்கார்டில்லாவை பாண்டிச்செரி பிரஞ்சு நிறுவனம் மறுபதிப்பு செய்துள்ளது. பிலியோசா இதன் பதிப்பில் பங்கேற்றவர். ‘தம்பிரான் வணக்கம்’, கிரிசித்தியானி வணக்கம் இரண்டையும் ஒரே நூலாக தூத்துக்குடி தமிழ் இலக்கியக் கழகம் வழியாக 1963இல் . இராசமாணிக்கம் பதிப்பித்து வெளியிட்டார். தமிழ்நாடன் மூல நூலின் படப்பிரதியாகதம்பிரான் வணக்கம்நூலை இருமுறை பதிப்பித்துள்ளார்.

கொல்லத்தில் வார்த்த அச்சு எழுத்துகளால்தம்பிரான் வணக்கம்அச்சடிக்கப்பட்டது. அதன் 15ஆம் பக்கத்தில் கோவா தமிழ் எழுத்துகள் மாதிரிக்காகத் தரப்பட்டுள்ளன. கோவாவில் 1576-77 இல் தமிழ் எழுத்துகள் ஆக்கப்பட்டதாகத் தெரிகிறது. கோவா அச்சுப் புத்தகங்களின் பட்டியல் பற்றி பியரி தெசாம்ப் கூறும்போது 1577இல் தமிழில் ஒரு புத்தகம் அங்கு அச்சிடப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்

அதன் பிரதி ஒன்று லெய்டன் பல்கலைக்கழகத்தில் இருந்ததாகக் கூறுகிறார். அண்ட்ரிக், வாலக்னானோ இருவருக்கும் நடந்த கடிதப் பரிவர்த்தனையில் இந்நூல் பற்றி உறுதிசெய்யப்படுவதாக விக்கி ஜோசபஸ்  கூறுகிறார். கிரஹாம் ஷா இந்நூல் பற்றி உறுதி செய்கிறார். ஜோசப் காலிகர் என்பவர் 1893இல் லெய்டன் பல்கலைக் கழகத்துக்கு அன்பளிப்பாக அளித்த நூல்களில் இதுவும் ஒன்று. லெய்டன் பல்கலைக்கழகத்தின் குறிப்புகள் கூறும் இத்தமிழ்நூல் 1716 முதல் அங்கிருந்து காணாமல் போய்விட்டது

அது கிடைத்தால் அதுவே முதல் அச்சுத் தமிழ் நூலாக அமையும். அதுவரைதம்பிரான் வணக்கம்தான் முதல் அச்சுத் தமிழ்நூலாக விளங்கிநிற்கும்.பின் குறிப்பு :தமிழின் முதல் அச்சு நூல், தற்போது மின் நூலாக ஆழி பதிப்பகம் வெளியிட உள்ளஉலக கிளாசிக் இலக்கியங்களின் மொழிபெயர்ப்பு நூல் வரிசையில் அடுத்த மாதம் வெளிவர உள்ளது.

துணை நூல்கள் :
Castets, J. 1929. Fr. Enrique Enriquez. Trichi : Indian catholic Truth Society.Rajamanickam, S. 1971. ‘Padre Henriwue Henriwues : The father of the Tamil Press’. Proeedings of the Second International Conference Seminar of Tamil Studies. Channai : International Association of the Tamil Research.
Thaninayagam, X. ‘Tamil Manuscripts in European Libraries’. Tamil Culture. Oct.1954.Thaninayagam, S. 1958. ‘The First Books Printed in Tamil’. Tamil Culture, Vol. VII. 1958.இராசமாணிக்கம், . (பதி.). 1967. அடியார் வரலாறு.தூத்துக்குடிதமிழ் இலக்கியக் கழகம்.சிவசுப்ரமணியன், . 2003. தமிழ் அச்சுத் தந்தை அண்ட்ரிக் அடிகளார், சென்னை: உலகத தமிழாராய்ச்சி நிறுவனம்.

தமிழ்நாடன். 1995. தமிழ்மொழியின் முதல் அச்சுப் புத்தகம். தஞ்சை : எட்டாம் உலகத் தமிழ் மாநாடு.தமிழ்நாடன். 2001.தமிழ்மொழியின் முதல் அச்சுப் புத்தகம். சேலம்: செட்டியார் பதிப்பகம்.


புத்தகத்தின்
 முகப்புப் பக்கம்



Doctrina Christam

en Lingua Malauar Tamul

கொம்பஞ்ஞிய தே சேசூ வகையில்

அண்டிறிக்கிப் பாதிரியார்

தமிழிலே பிறித்தெழுதின

தம்பிரான் வணக்கம்.








புதிய தொல்லியல் ஆய்வு இப்படி சொல்கின்றது ஆதிமனிதன் தோற்றம் ஆபிரிக்கா அல்ல இந்தியா தமிழ்நாடு.
ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு சான்று. 3.85.000 இலட்சம் ஆண்டு பழைய ஆதாரம் கண்டுபிடிப்பு!
22.01.2049-04.02.2018- சென்னையில் இருந்து அறுபது கிலோ மீட்டர் தொலையில் இருக்கும் அதிரம்பாக்கம் பகுதியில் 3,85,000 ஆண்டுகள் பழைமையான கற்கள் கண்டுபிடிப்பு. இதன் மூலமாக ஆதி மனிதன் ஆப்ரிக்காவில் இருந்து ஆசியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள் அல்ல என்பது உறுதி ஆகியுள்ளது. சமீபத்தில் தமிழகத்தின் அதிரம்பாக்கம் பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பழங்கால கற்களை வைத்து ஆராய்ந்த போது. இந்தியாவில் வாழும் மக்கள் இங்கேயே தோன்றி, வளர்ந்தவர்கள் என அறியப்பட்டுள்ளது. இதுநாள் வரை மானுடவியலாளர்கள் தெற்காசிய பகுதியில் வாழும் மக்கள், ஆப்ரிக்காவில் தோன்றி அங்கிருந்து, இங்கே புலம்பெயர்ந்தவர்கள் என்றே கூறியும், நம்பியும் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆங்கிலமும் தமிழிலிருந்து வந்தது !
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது.
Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்துவந்தது.
Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது.
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.
தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !
The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !
தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .
S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..
உருளை = roll
(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )கற்குவியல் = Calculation ; calculatrice .
கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )
" பொத்தல் " ல இருந்து பொத்தான் = Button
உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .
ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .
லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் எழுதிய எழுத்து மொழி .
2015 ஆய்வுகளின் படி :
( Germany ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள் germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் ( europe ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் )
- சமஸ்கிரம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி . )
சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி .
இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி
மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .
கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .
தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் .
1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !
" ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை !
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .
அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .
இன்று யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் ( ஒன்று மட்டுமே உள்ளது ) கி. முன் 2000 .
தமிழ் இனத்தில் உள்ள தொன்மையான பல நூல்கள் : கி. முன் 3000 ; கி.முன் 5000 ;
கி. முன் 7000 நூலான தொல்காப்பியமும் உள்ளது .
தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான் .
மரத்தை கட்டுவதால் கட்டு மரம் இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் " 
கட்டு மரம் " தான் .
நன்றி

தமிழர் – தமிழ் – தமிழகம் என்ற இணைவின் தொன்மை, வரலாறு. 

மானுடவியல், நிலம், அரசியல், பண்பாடு, மெய்யியல், கலைகள், பொற்காலம், இருண்ட காலம், அந்நியர் போன்ற பல்வேறு தளங்களில் நமக்கான தெளிவை உண்டாக்க வேண்டிய தேவையிருக்கிறது. தமிழர்களின் வரலாற்றை எங்கிருந்து தொடங்குவது? சிந்துவெளியிலிருந்தா அல்லது கீழடியிலிருந்தா? எதிலிருந்து தொடங்குவது சரியாக இருக்கும்?

 ஹரப்பா (பஞ்சாப்), மொகஞ்சதாரோ (சிந்து), ராகிகர்கி (அரியானா), தோலவிரா (கட்ச் – குஜராத்), கன்வேரிவாலா (சோலிஸ்தான் பாலைவனம்) போன்ற பல இடங்களில் சிந்துவெளி நகர நாகரிக எச்சங்கள் கிடைத்துள்ளன.  இங்கு கிடைத்த கரிம மாதிரிகளைக் கொண்டு இவற்றின் காலம் கி.மு.2600-1900 கால கட்டத்தைச் சேர்ந்தவை என நிருபிக்கப்பட்டுள்ளது. சிந்துவெளியில் கிடைத்த பல்வேறு பொருள்களையும் கட்டுமானங்களையும்  நாமறிவோம்.  

கீழடியில்   கிடைத்த கரிம மாதிரி ஆய்வுகள் கி.மு.6ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு.3ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட அதாவது இன்றைக்கு 2600 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் என்பதை உறுதிப்படுத்துகின்றன. செங்கல் கட்டுமானம், மிருதுவான மண் பூச்சு, தமிழி எழுத்துகள் (தமிழ் பிராமி), மணிகள், வட்டச்சில்லுகள், ஆட்டக்காய்கள், காதணிகள், வளையல்கள், இரும்புப் பொருள்கள், நூல் நூற்கும் தக்களி, கொம்புகள், சுடுமண் அச்சுகள், சுடுமண் உருவங்கள், உறை கிணறுகள், தங்க அணிகலன்கள் போன்ற பல்வேறு தடயங்கள் கிடைத்துள்ளன.   

கீழடியில் காணப்படும் சில குறியீடுகள் சிந்துவெளி முத்திரை எண்கள்: 225, 307, 318, 347, 365 ஆகியவற்றுடன் ஒப்பிடப்படுகின்றன. கொடுமணல், அழகன்குளம், பொருந்தல் ஆகிய இடங்களில் நடந்த அகழ்வாய்வு காலக்கணிப்பின்படி தமிழ் பிராமி எனப்படும் தமிழியின் காலம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு என்பதை கி.மு. 6 நூற்றாண்டு என்று முன்தள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அத்திரம்பாக்கம் முதல்கட்ட தொல்லியல் அகழ்வாய்வில் கிடைத்த கீழ் பழங்கற்காலக் கருவிகள் (Lower Palaeolithic) 15 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் இரண்டாம் கட்ட ஆய்வில் கிடைத்த இடைப் பழங்கற்காலக் கருவிகள் (Middle Palaeolithic)  3,85,000 ஆண்டுகள் பழமையானது எனவும் நிறுவப்பட்டன. இரும்புகாலத்தைச் சேர்ந்த சேலம் மாங்காடு, தெலுங்கனூர் போன்ற இடங்களிலுள்ள பெருங்கற்படை ஈமச்சின்ன மாதிரிகளிலிருந்து இரும்புக்காலம் கி.மு. 2000 என்ற முடிவும் பெறப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளில் எடுக்கப்பட்ட கரிமங்களின் காலக்கணக்கீடு கி.மு. 9 ஆம் நூற்றாண்டு என்று தெரிய வருகிறது.        சிந்துவெளி – கீழடி இரண்டிற்குமுள்ள தொடர்பு, தென்னிந்தியப் பகுதிகளில் நகரமயமாதல் தொடக்கம், தமிழ் பிராமி எழுத்துகளின் காலம் ஆகியன பற்றிய புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் பெற்றிருந்த கல்வியறிவும் எழுத்தறிவும் காணக் கிடைக்கிறது.

கரிமக் காலக்கணக்கீடுகள், மரபணு ஆய்வுகள்  போன்றவை அறிவியல் பூர்வமாக உலகளவிலான அங்கீகாரத்தைப் பெறுகின்றன. ஆனால் சிந்துவெளி சித்திர எழுத்துப் புதிர்களை ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா போன்றோர் ஓரளவிற்கு விடுவித்திருந்தாலும் இன்னும் பலரால் ஏற்கப்படவில்லை. ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகள் போன்று இன்னும் பல்வேறு வகையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான்  சிந்துவெளி புதிர்கள் முற்றிலுமாக விடுவிக்கப்படும். பூர்ண சந்திர ஜீவாவின் ‘சிந்துவெளியில் முந்துதமிழ்’ மற்றும் பேரா. இரா.மதிவாணன் சிந்துவெளி நாகரிக மற்றும் எழுத்தாய்வுகள் இங்கு எவ்வாறு அணுகப்படுகின்றன என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்படும் ஆய்வுகளுக்கு மட்டுமே ஆங்கீகாரம் கிடைக்கும் என்கிற நிலையும் உள்ளது.

இதுவரையிலான தொல்லியல் அகழ்வாய்வுகள் போதுமானவையா? தற்போதைய தமிழகம் தாண்டியும் ஆய்வுகள் நடைபெற வேண்டிய தேவை உள்ள நிலையில் தமிழகத் தொல்லியல் துறை மட்டும் செயல்படுவது போதுமானதல்ல. அறிவியல்பூர்வமான நிரூபணங்களை அகலிக்க வேண்டிய அவசியம் உள்ளது. கிரேக்க – ரோமானிய மற்றும் பன்னாட்டு வாணிகத் தொடர்புகளை இன்னும் விரிவாக ஆய்வு செய்ய  உலகளாவிய ஆய்வுத்தடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

மயிலாடுதுறை – செம்பியன் கண்டியூர், கோயம்புத்தூர் – ஆனைமலை, மதுரை – கோவலன்பொட்டல், ஈரோடு – கொடுமணல், கரூர் – நெடுங்கூர் போன்ற இடங்களில் பெருங்கற்காலப் பொருள்கள் கிடைத்தன.                                                                                                                                                                                         திருநெல்வேலி – மாங்குடி, இராமநாதபுரம் – தேரிருவேலி, விருதுநகர் – திருத்தங்கல் போன்றவற்றில் நுண்கற்கால அடையாளங்கள் காணப்பட்டன.   திருவள்ளூர் – பரிக்குளத்தில் பழையகற்கால அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.  

தூத்துக்குடி – கொற்கை, காஞ்சிபுரம் – வசவசமுத்திரம், கரூர், தருமபுரி – பனையகுளம், இராமநாதபுரம் – தொண்டி, கள்ளக்குறிச்சி  – திருக்கோவிலூர், மயிலாடுதுறை – பூம்புகார், கடலூர் – மாளிகைமேடு,  கோயம்புத்தூர் – பேரூர், திருவண்ணாமலை – ஆண்டிப்பட்டி, மதுரை – மாங்குளம் போன்ற இடங்களில் தொடக்க வரலாற்றுக்காலப் பொருள்கள் அகழ்வாய்வில் கிடைத்தன. கீழடியில் நடந்ததுபோல  அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர், பொருந்தல், அகழ்வாய்வுகளின்   அடுத்த கட்ட நிலை? ஆனால் இவ்விடங்களில் அடுத்தக்கட்ட ஆய்வுகள் நடைபெறவில்லை. தொல்லியல் ஆய்வுகள் இன்னும் அகலிக்க வேண்டும் என்பதையே இவை உணர்த்துகின்றன. பூம்புகார் போன்ற இடங்களில் கடலடி அகழ்வாய்வுகளும் விரிவான அளவில்  நடைபெற வேண்டும்.                                                                                                                                                                                                                                                                                                                                      சங்ககாலம் (கி.மு.300–கி.பி.300) பற்றிய சொல்லாடல்கள், கட்டமைப்புகள் பெரும்பாலும் இலக்கியச் சான்றுகளினடைப்படையில் அமைகின்றன. இவற்றை அறிவியல் பூர்வமாக நிருபிக்க தொல்லியல் சார்ந்த தரவுகள் தேவைப்படுகின்றன. இவற்றைப் பெற நாம் செய்ய வேண்டிய முன்னெடுப்புகள், நேர்மையான ஆய்வுகளின் திசைவழியைக் காணமுடிகிறதா? மேலும் இலக்கிய வழி ஆய்வியலிலும் புதிய முறையியலையும் அறிவியல் அணுகுமுறையையும் புகுத்தமுடியும். அக்கால இணைமொழி நூல்களை விரிவாக ஆய்வு செய்யவும் வேண்டும்.

தமிழர்களின் நிலம் எது? தொல்காப்பியம் சுட்டும் ஐவகை நிலம் எதில் அடங்குகிறது?  குமரிக்கண்டம் எனும் லெமூரியாவா? குமரிக்கண்டம் போன்ற அறிவியல் பூர்வமற்ற புனைவை இன்னும் எவ்வளவு காலம் தூக்கிச் சுமக்க முடியும்? தமிழர்களின் தொன்மையை மனித இனம் தோன்றியிராத டினோசர்கள் வாழ்ந்த காலத்திற்கு நீட்டிக்க வேண்டிய அரசியல் தற்போது தேவையில்லை.

குமரிக்கண்டம் (லெமூரியா) குறித்து ஆய்வாளர் சு.கி.ஜெயகரன் எழுதிய ‘குமரி நில நீட்சி’ நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள அறிஞர் எஸ்.வி.ராஜதுரை, “அறிவியல் நலன் கருதி லெமூரியா கருதுகோள்களை இனியேனும் கைவிட்டுவிடுவதுதான் அறிவுடைமை” என்கிறார். இந்நூலில் சு.கி.ஜெயகரன், ஆரியர்களின் மேன்மையை வலியுறுத்த பிரம்ம ஞான சபையினரால்  கண்டுபிடிக்கப்பட்ட ஓர் கற்பனைக் கோட்பாடு இது. இதற்கு அவர்கள் காட்டும் ஆதாரங்கள், கிழக்கத்திய மறைஞான நூற்கள், உள்ளுணர்வு (Intution), புலன் கடந்த உணர்வு (Extra sensor Perception) ஆகியன மட்டுமே, என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

கடல்கோள்கள் நிறைய நடைபெற்றுள்ளன. தமிழகத்தில் நிலப்பகுதிகள் கடலில் மூழ்கியிருக்கின்றன. இன்றிருக்கின்ற தமிழகத்தின் சிலபகுதிகள் கடலால் அழிபட்டிருக்கிறது. இது குமரிக்கண்டமல்ல; குமரி நிலநீட்சி என்பதை அறிஞர் சு.கி.ஜெயகரன் தெளிவான அறிவியல். நிலவியல், வரலாற்று ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.

மேலும் தமிழ் மொழிக்கு இருக்கின்ற தொன்மை போதுமானது. இன்றைக்கு முன் (இ.மு.) 35,000 ஆண்டுகளுக்கு முன்னதாக உலக அளவில் நடைபெற்ற நாகரிக வளர்ச்சியை இந்நூலில் ஆசிரியர் பட்டிலிட்டு அவற்றைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை வழங்குகிறார். அதைப்போல தமிழ்நாட்டு நாகரிக வளர்ச்சியை சங்காலியா பகுப்பில் அடிப்படையில் இ.மு. 50,000 – 75,000 முதல் ஆறுகட்டங்களாகப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.  

வரலாற்றில் பொற்காலங்களுக்கும் இருண்ட காலங்களுக்கும் என்றும் இடமில்லை. ஆனால் இத்தகைய கட்டமைப்புகள் தமிழின் பெருமிதங்களாகப் போற்றப்படுகின்றன. இதன் பின்னாலுள்ள அரசியல் சொல்லாடல்கள் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறதா? இடைக்காலத்தில் உற்பத்தியான பொற்காலச் சொல்லாடல் சங்ககாலத்தில் ஏன் இல்லை? பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள் மற்றும் பக்தியிலக்கிய காலகட்டம் தமிழர் – தமிழ் – தமிழகம் அடையாளமாக வலிந்து திணிக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் பிரம்மதேயங்களின் திருவுளச்சீட்டு முறையான ‘குடவோலை’ முறை மக்களாட்சியாக விதந்தோதப்படுகிறது. சங்ககாலத்திலேயே  ‘குடவோலை முறை’  இருந்ததாகச் சொல்லப்படும்  மருதன் இள நாகனாரின் அகநானூற்றுப் பாலைநிலப் பாடல் (77)  துணைக்கழைக்கப்படுகிறது. “குடத்திலிட்ட ஓலைகளை எடுப்பதைப் போல கழுகு போர்க்களத்தில் இறந்த வீரனது உடலிலிருந்து குடலை எடுக்கும்”, என்பதான உவமை இந்த அகப்பாடலில் சொல்லப்படுகிறது. இது சங்ககாலம் எனப்படும் கி.மு. 300 – கி.பி. 300 காலப்பகுதியைச் சேர்ந்த இந்த இலக்கியச் சான்றுக்கு உத்திரமேரூர் கல்வெட்டுகள் இரண்டையும் (காலம்: கி.பி. 916, 921) இணைத்துக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி வரலாறாக்கும் வேலையை பலர் செய்து வருகின்றனர். இதன் பின்னணிகளை அறியாது தமிழ் அறிவுலகம் இதை ஆய்வாகக் கொண்டாட இயலாது என்பதையும்  உணர வேண்டும்.

கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை, சதாசிவ பண்டாரத்தார், மு.அருணாசலம் பிள்ளை, ஒளவை துரைசாமிப் பிள்ளை, மா.இராசமாணிக்கனார் போன்ற வரலாற்று அறிஞராகட்டும், தமிழறிஞராகட்டும் களப்பிரர்கள் தவிர பிற யார் மீதும் இவ்வளவு வெறுப்பை உமிழ்ந்தததில்லை. களப்பிரர்களையும் அவ்வம்சத்து அரசர்களையும் இருண்ட குலம், இருண்ட காலம், இருள் படர்ந்த காலம், காட்டுமிராண்டிகள், கொள்ளைக்காரர்கள், கொடுங்கோலாட்சி செய்தவர்கள், நாகரீகத்தின் எதிரிகள், கலியரசர்கள், கொடிய அரசர்கள், நாடோடிகள், தமிழ் வாழ்வை – மொழியைச் சீரழித்தவர்கள், மக்களைக் கொன்று செல்வங்களைச் சூறையாடியவர்கள், தமிழ் மொழி – பண்பாட்டை அழித்தவர்கள், அரச பாரம்பரியமற்றவர்கள் என்றெல்லாம் வசைமாரி பொழிந்தனர். அந்நிலை இன்றும் தொடர்கிறது.

இந்தியாவில் நிலவும் கொடுமைகளுக்கு நேருவே காரணம் என்று பிரதமர் மோடியும் அவரது ஆதரவாளர்களும் அடிக்கடிக் கூறுவதைப்போல, கணியன் பாலன் என்ற ஆய்வாளர் எழுதிய பெருநூல் தமிழகத்தின் அனைத்து அழிவுகளுக்கும் களப்பிரரை  மட்டும்  காரணம் சொல்கிறது. இவர் கி.மு.50-கி.பி.250 காலகட்டத்தை சங்கம் மருவிய காலம் என்கிறார். இக்காலத்திலேயே அதாவது கி.பி. 150க்குப்பின் வைதீகச் சிந்தனைகளும், பிராமணீயமும் ஊடுருவிய, புரையோடிப்போன தமிழ்ச்சமூகமாக மாறிவிட்டதைப் பதிவு செய்கிறார். அடுத்த களப்பிரர் (கி.பி.250-கி.பி.550) காலத்தில் மொழி, இசை, இலக்கியம், கலை, அறிவியல், பண்பாடு, தொழில்நுட்பம், பொருளாதார அடித்தளம், உற்பத்தி உறவுகள், சங்ககால மதிப்பீடுகள்  எல்லாம் அழிந்தன என்கிறார். களப்பிரர் காலத்திற்கு முன்பே சீரழிவு; அதற்கும் அவர்களே காரணம் என்பது ‘களப்பிரப் போபியா’விற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். வைதீகத்தைவிட களப்பிரர் படையெடுப்பால் அழிந்தது என்பது புதிய பாணியாக உள்ளது. இதுபோன்ற ஆய்வுகள் வைதீகத்தை மேலும் வலுவூட்டவே பயன்படுகின்றன.   

களப்பிரர் காலத்தை மயிலை சீனி வேங்கடசாமி தனது ஆய்வுகளின் மூலம் அக்காலத்தை விடியற்காலம் ஆக்கினார். அதற்குப் பிந்தைய ஆய்வுகள் எவ்வழியில் பயணப்படுகின்றன?   களப்பிரரின் ‘இருண்டகாலம்’  இந்நூலினால் ‘விடியற்காலம்’ ஆகிறது. மேலும் புதைபொருள் சான்றுகள், பழங்காலச் சான்றுகள் கிடைக்குமானல் களப்பிரர் வரலாற்றில் பகற்காலத்தைக் காணக்கூடும், என்று மயிலை சீனி.வேங்கடசாமி ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ நூல் முகவுரையில் குறிப்பிடுகிறார். 

சங்க காலத்திற்கும் இடைக்காலத்திற்கும் உள்ள இடைவெளியை எப்படி நிரப்புவது? களப்பிரர் காலம்  இருண்ட காலம் அல்லது சங்கம் மருவிய காலம் என்று வெறுமனே கடந்துவிடுவது (skip) சரியாக இருக்குமா? இத்தடத்தில் உரிய, விரிவான ஆய்வுகள் நடைபெறவில்லை. சங்க இலக்கியம், பாலி, பிராகிருத மொழி மற்றும்  சமய இலக்கிய நூல்களை விரிவான ஆய்வுக்குட்படுத்த வேண்டும். அதுவரையில் பெருமிதங்களைப்போல இருண்ட காலங்களும் புனைவாகவே இருக்கும்.

தமிழர்களின் தத்துவம் – மெய்யியல் எத்தகையது? வைதீக மரபுகளான சைவ, வைணவ  சமயங்கள் தமிழர்களுடையதா? அல்லது அவைதீக சமயங்களான சமணம், பவுத்தம், ஆசீவகம் மட்டுமே நம்முடையதா? ஆசீவகம் மட்டுமே தமிழ் மரபு என்றும் மற்கலி கோசலர் தமிழர் என்றும் பேரா.க.நெடுஞ்செழியன் போன்றோர் கணிக்கின்றனர். சமயஞ்சாரத மரபு நம்மிடம் இல்லையா? தமிழர் தத்துவ மரபில் பகுத்தறிவின் இடம் என்ன?  பொருள்முதல்வாதத் தத்துவ மரபுகள் அனைத்தும் தமிழருடையது என்று உறவு கொண்டாடுவது சரியா இருக்க முடியுமா? “தீதும் நன்றும் பிறர்தர வாரா, யாதும் ஊரே யாவரும் கேளீர்”, போன்ற சொல்லாடல்களை மட்டும் வைத்துக்கொண்டு தமிழர்களின் மெய்யியலை அளவிட இயலுமா?  நல்லனவெல்லாம் தமிழுருடையதாகவும் தீயனவெல்லாம் பிறருடையதாகவும் கட்டமைப்பது தமிழரசியலுக்கு மட்டுமே பயன்படும்.

தமிழ் நிலத்தில் சாதிகள் எப்போது தோன்றின? தமிழ்ச் சமூகத்தில் சாதி எப்போது நுழைந்தது? மேல்-கீழ், உயர்வு-தாழ்வு சொல்லாடல்கள் எப்போது உருவாயின? அந்தணர் என்பது யாரைக் குறிக்கிறது? தொல்காப்பியத்திலுள்ள இழிசனர் யாரைச் சுட்டுகிறது? இழிசனன், சண்டாளன், புலையன் என்பது வெறும் தொழில்சார்ந்த பெயர்கள் மட்டுமா? இவை மேல்-கீழ், உயர்வு-தாழ்வு என்கிற மனப்பான்மையை உருவாக்கவில்லையா? சாதி என்பதைப் போன்று சங்கம் என்பது தமிழ்ச்சொல் அல்லவே! சங்கம் வைத்து தமிழை வளர்த்தன் பின்னணி என்னவாக இருக்கும்? தமிழ் மரபுகளில் அழிந்துபோனவை, நிலைத்திருப்பவை எவை? தமிழர்களின் தத்துவ மரபுத் தொடர்ச்சியை எங்கு காணமுடியும்? தமிழர்களின் தொல்கலை மரபுகள், இசை என்னவாயிற்று? எல்லாம் அழிந்தன என்றாலும் அவற்றின் எச்சங்கள் எங்காவது இருக்குமல்லவா? இதற்கான நடுநிலையான ஆய்வுகளுக்குப் பதிலாக ஒரு கருத்தைப் பிடித்துத் தொங்கும் ஆய்வுகளே தமிழ்ச்சூழலை ஆக்ரமித்துள்ளன.   

தொல்லியல், மானுடவியல், அறிவியல்பூர்வமான இலக்கிய ஆய்வுகள் என புதுவெளிச்சம் பாய்ச்ச பலர் முன்வரவேண்டும். அரசுகளும் துறைகளும் இதற்கு உரிய மதிப்பளிக்கவும் வேண்டும். நமது உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது செக்குமாட்டுத்தனத்தை விடுத்து இத்தகைய ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும். வெறும் போலிப் பெருமிதங்கள், புனைவுகள் வழி கட்டப்படும் வரலாறும் தொன்மையும் நிலைத்து நிற்காது.

பெண்ணின் பருவங்கள் ஏழு... 

  பேதை : 1 முதல் 8 வயது வரை

பெதும்பை : 9 முதல் 10 வயது வரை...

 மங்கை : 11 முதல் 14 வயது வரை...

 மடந்தை : 15 முதல் 18 வயது வரை...

 அரிவை : 19 முதல் 24 வயது வரை...

 தெரிவை : 25 முதல் 29 வயது வரை...

பேரிளம் : பெண் 30 வயது முதல்...
 பெண்மையை போற்றுவோம்...!

ஆய கலைகள் அறுபத்து நான்கும்!!!
பிதாகரஸ் தேற்றம் (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.
"ஓடும் நீளம் தனை ஒரே எட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே"
போதையனார்
விளக்கம்:
இவற்றின் பொருள் செங்கோண முக்கோணத்தின், நீளத்தில் (அடிப்பாகம்) 8 பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் என்பதாகும்.
இவ்வளவு எளிமையாக கர்ணத்தின் நீளம் காணும் வாய்ப்பட்டை விட்டுவிட்டு வர்க்கமூலம், பெருக்கல் என பிதார்கரஸ் தியரம் சொல்லிவருவதை நாம் பயன்படுத்துகிறோம் இன்று.
இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.
போதையனார் கோட்பாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் அதாவது Square root இல்லாமலேயே, நம்மால் இந்த கணிதமுறையை பயன்படுத்த முடியும். ✔
தமிழன் ஒருவேளை கற்றலையும் / கல்வியையும் பொதுவுடமையாக, உலகறியச் செய்து இருந்தால் .... அவர்கள் தரணி எங்கும் அறியப்பட்டு இருப்பார்கள்."
எவ்வளவு எளிமையாக உள்ளது.! தமிழின் பெருமைகளை தமிழர்களே உணர்வீர்களாக..!


தான தனத்தன தான தனத்தன
தான தந்தா னே

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!

ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!

எங்கள் தமிழ்மொரி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே! 


பாரதி

ஈழத்தின் யாழ்ப்பாண அரச வரலாறு!!



இலங்கையின் வடபகுதியில் உள்ளது யாழ்ப்பாணம். இப் பெயர் தற்காலத்தில் யாழ்ப்பாண நகரத்தையும், யாழ்ப்பாண மாவட்டத்தையும் குறிக்கப் பயன்படுவது என்றாலும், நாம்யாழ்ப்பாண அரசுஎன குறிப்பது இவற்றிலும் பெரிய ஒரு நிலப்பகுதியை ஆகும்.

அதாவது, இன்றைய வடமாகாணம் முழுவதையும், கிழக்கின் பகுதிகளையும், புத்தளம் வரையிலான மேற்குக் கரையோரங்களையும் உள்ளடக்கி இருந்தது. இதனுடைய எல்லை காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது ஆயினும், இதனுடைய தலைமை இடமும், மக்கட்செறிவும் யாழ்ப்பாணக் குடானாட்டிற்கு உள்ளேயே இருந்து வந்திருக்கிறது. இதனாலேயே யாழ்ப்பாண அரசு எனப்படுகிறது.

பல நூற்றாண்டு காலமாக மாறி மாறி அந்த அரசாட்சிகள் அனைத்தும் இவ்வாறே செயற்பட்டமைக்கான ஆதாரங்கள் பல உள்ளன.

யாழ்ப்பாண வரலாற்று மூல நூல்களில் ஒன்றானவையாபாடல்இவ்வரசின் ஆரம்பத்தைக் கி.மு. 101 என்று கூறுகிறது.

யாழ்ப்பாண வரலாற்றை வசதி கருதிப் பின்வரும் கட்டங்களாகப் பிரிக்கலாம்.

ஆரியச் சக்கரவர்த்திகளுக்கு முற்பட்டகாலம். (கி.பி 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்)
ஆரியச் சக்கரவர்த்திகளின் காலம் (கி.பி 12 ஆம் நூஆகி.பி 1620)
குடியேற்றவாத ஆட்சிக் காலம் (கி.பி 1620 – கி.பி 1948)
ஆங்கிலேயர் ஆட்சிகளுக்குப் பிற்பட்ட காலம். ( கி.பி 1948 க்குப் பின்)

 ஆட்சிக் காலம் (கி.பி 1972 – கி.பி 2009 வரையான தமிழீழ நிழல்ரசுக் காலம்)


இராவணன் இருந்ததற்கான ஆதாரங்கள் !

இலங்கைத் தமிழ் மண்ணில் பிறந்த எவரும் , இனிமேலாவது , இராவணன் என்ற ஒரு தமிழ் மன்னன் , வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை என்று கூறக்ககூடாது

கன்னியா_மலையில்_காணப்படும் இராவணனின்_தாயின்_சமாதி

அது தொடர்பான ஆய்வுகளும்ஆதாரங்களும்

என்.கே.எஸ்.திருச்செல்வம்

NKS/157

திருகோணமலையின் அருகில் உள்ள கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் உலகப் பிரசித்தி பெற்றவைஇவ்வெந்நீர்க் ஊற்றுகளைச் சுற்றி கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளனஇந்த வெந்நீர் ஊற்றுகள் சிவபக்தனான இராவணன் தன் தாயின் ஈமக் கிரிகைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கியவையாகும்.

இவ்வெந்நீர் கிணறுகளின் அருகில் ஓர் மலை உள்ளதுஇது கன்னியா மலை என அழைக்கப்படுகிறதுஇம்மலையின் உச்சியில் 60 அடி நீளமான சமாதி உள்ளது. 40 அடி என்றும் சொல்கிறார்கள்இது ஓர் இஸ்லாமியரின் சமாதி என்றே அண்மைக்காலமாக கூறப்பட்டு வருகிறது.

கன்னியா வெந்நீர் கிணறுகளையும்அங்குள்ள சமாதியையும் பார்ப்பதற்காக 1980 ஆம் ஆண்டு முதன் முதலாக கன்னியாவுக்கு சென்றேன்அப்போது அங்கு கடமையில் இருந்த காவலாளியிடம் கன்னியா மலையில் உள்ள சமாதியைப் பற்றி விசாரித்த போதுஅவர் கூறிய விபரங்கள் சற்று புதுமையாக இருந்ததுமலையில் 60 அடி நீளமான ஓர் பிரமாண்டமான சமாதி உள்ளதுஅதுதான் இந்த வெந்நீர் ஊற்றுக்களை உருவாக்கிய இராவணனின் தாயின் சமாதி,  நீங்கள் போய்ப் பார்க்கலாம் எனக் கூறிதனது பிள்ளைகள் இருவரை எனக்கு வழிகாட்டியாக என்னோடு மலைக்கு அனுப்பி வைத்தார்மலை உச்சிக்குச் சென்று பிரமாண்டமான அந்த சமாதியைப் பார்த்து வியப்படைந்தேன்அப்படி ஓர் நீளமான சமாதியை அன்று தான் முதல் முறையாகப் பார்த்தேன்மலையில் இருந்து இறங்கி வந்ததும் இது இராவணனின் தாயின் சமாதி தானாஎன மீண்டும் அவரிடம் கேட்டேன்ஆம்எனது மூதாதையர்கள் அப்படித்தான் என்னிடம் சொன்னார்கள் என்றார் காவலாளிவெந்நீர் ஊற்றுக்களில் நீராடியதும்மிகப்பெரிய சமாதியைப் பார்த்ததும் பெருமிதமாக இருந்தது.

அதன்பின் 2014 ஆம் ஆண்டு “யார் இந்த இராவணன்” எனும் தொடர் ஆய்வுக் கட்டுரையை நான் பத்திரிகையில் எழுதி வந்த போதுஇராவணனின் தாயாரின் சமாதி பற்றிக் குறிப்பிட வேண்டி இருந்ததுஅது பற்றிய ஆதாரங்களை ஆராய்ந்தபோது தான் இந்திய ஆய்வாளரான அசோக்காந்த் எழுதிய குறிப்பொன்றைப் படித்தேன்கன்னியா மலையில் இருப்பது இராவணனின் தாயின் சமாதி என அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்ஆனால் இதற்கான எந்த ஆதாரத்தையும் அவர் முன் வைத்திருக்கவில்லைஇராவணன் தனது தாய்க்கு ஈமக் கிரிகைகள் செய்த இடத்தில் தானே தாயின் சமாதியை அமைத்திருப்பான் எனும் யூகத்திலேயே அக்குறிப்பை எழுதியிருந்தார்இந்த ஆதாரத்தை வைத்து “யார் இந்த இராவணன்” கட்டுரையில் கன்னியா மலையிலுள்ள சமாதி இராவணனின் தாயின் சமாதி என முதன் முதலாக எழுதினேன். 2018 ஆம் ஆண்டு “யார் இந்த இராவணன்?” புத்தகமாக வெளிவந்தது.

இது இப்படி இருக்ககடந்த வருடம் கன்னியா வரலாறு பற்றிய ஓர் முழுமையான நூலை எழுத வேண்டிய ஓர் தேவை ஏற்பட்டதுஅப்போது கன்னியாவில் இருந்த சிவன் கோயில்பிள்ளையார் கோயில்இராவணனின் தொடர்புஇராவணனின் தாயின் சமாதி போன்றவை பற்றிய வாய்வழிச் செய்திகளும்ஐதீகங்களும் மட்டுமே இருந்தனஇவற்றிற்கான வலுவான பழமையான ஆதாரங்கள் இருக்கவில்லை.

இந்த சமயத்தில் கன்னியா மலையில் உள்ள சமாதி இராவணனின் தாயுடையது என்பதற்கு வலுவான ஆதாரங்களை இந்த நூலில் எழுத வேண்டும் என எண்ணினேன்ஏனெனின் எனது சந்தேகமும் இராவணன் தனது தாய்க்கு கிரிகைகள் செய்த இடத்தில் தானே தாய்க்கு ஓர் ஞாபகச் சின்னத்தை அமைத்திருக்க வேண்டும் என்பதே.

கொழும்புதிருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள நூலகங்களுக்குச் சென்று இவை பற்றி ஐரோப்பிய அறிஞர்கள் எழுதிய ஆதாரங்களைத் தேடினேன்கன்னியா பற்றிய நான்கு ஆதாரங்கள் கிடைத்தனஆனால் அவை எனக்கு திருப்தி அளிக்கவில்லைஅவை அவ்வளவு பழைய ஆதாரங்கள் அல்லஇருப்பினும் முயற்சியைக் கைவிடவில்லை.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள நூலகங்கள்பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் கன்னியா பற்றிய குறிப்புகள் கிடைக்குமா என இணைய தளங்கள் மூலம் தேடினேன்விடாமுயற்சியுடன் இரண்டு மாதங்கள் வரை தேடினேன்இறுதியில் இங்கிலாந்துகலிபோர்னியா(அமெரிக்கா), கனடாபோர்த்துக்கல் ஆகிய நாடுகளில் உள்ள நூலகங்களில் இருந்து கன்னியா பற்றிய பல நூல் குறிப்புகள் கிடைத்தனஇங்கு கிடைத்தவை 26 நூல் ஆதாரங்கள்மொத்தமாக இப்போது 30 ஆதாரங்கள் என் கையில் இருந்தனஇவை சுமார் 300 வருடங்களுக்கு முற்பட்ட ஆதாரங்களாகும்இவற்றில் கன்னியா மலையில் உள்ள சமாதி பற்றிய 5 ஆதாரங்கள் கிடைத்தன.

பிரமாண்டமான சமாதி காணப்படும் கன்னியா மலையின் உண்மையான பெயர் பெரிய கரடிமலை என்பதாகும்இம்மலையில் கரடிகள் அதிகமாக வாழ்வதால் இப்படி ஒரு பெயர் வைக்கப் பட்டுள்ளதுஇம்மலை இங்கிருந்து விளாங்குளம் வரை 5 கி.மீ தூரம் வரை ஒடுங்கிநீளமாகக் காணப்படும் தட்டையான மலையாகும்இம்மலைக்கு இரண்டு உச்சிகள் உள்ளனகன்னியாவில் உள்ள உச்சியில் சமாதி உள்ளதுஇவ்வுச்சி 50 மீற்றர் உயரம் கொண்டதுஅடுத்த உச்சி விளாங்குளத்தின் அருகில் உள்ளதுஇது 100 மீற்றர் உயரமானதுகன்னியா மலை அடர்ந்த காட்டுப் பகுதியின் ஆரம்பப் இடமாகும்இக்காடு கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் இருந்து தெற்குப்பக்கம் 6 கி.மீ வரையும்மேற்குப்பக்கம் 16 கி.மீ வரையும்தென்மேற்குப்பக்கம் ஹபரணை வரை 80 கி.மீ நீளம் கொண்ட மிகப்பெரிய காடாகும்.

கன்னியாவுடன் தொடர்புள்ள இராவணனின் தாய் பற்றிய விபரங்கள் பின்வருமாறு.

தீவிர சிவபக்தையான இராவணனின் தாய் கைகேசி சுகவீனமாக இருந்த வேளை தட்சிண கைலாயம் எனும் திருக்கோணேஸ்வரத்தில் இருக்கும் சிவனைத் தரிசிக்க விரும்பியதாகவும்தன் விருப்பத்தை மகன் இராவணனிடம் கூறியபோது இராவணன் தாயின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு சுவாமி மலையில் இருந்த சிவாலயத்தை மலையோடு சேர்த்து வாளால் வெட்டி எடுக்க முற்பட்டதாகவும்அப்போது சிவன் இராவணனின் கையில் வலியை உண்டாக்கி வாளை கீழே விழச் செய்ததாகவும் ஓர் ஐதீகம் உள்ளதுஇத்தனை முயற்சிகள் எடுத்தும் இராவணனின் தாய் கைகேசி இறுதிவரை தட்சிண கைலாயப் பெருமானை தரிசிக்காமலேயே உயிர் துறந்தாள்தாய் இறந்த பின்பு அவளின் ஈமக்கிரிகைகளை கன்னியா கங்கை தீர்த்தத்தில் செய்து முடித்த இராவணன் அவ்விடத்திலேயே தாயின் சமாதியையும் அமைத்தான்.

கன்னியா மலையில் உள்ள சமாதி இராவணனின் தாயின் சமாதி என்பது பலருக்குத் தெரியாத விடயமாகும்தாயின் சமாதியின் அருகிலேயே இராவணனின் சமாதியும் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதே சமயம் கன்னியா மலையில் உள்ள இராவணனின் தாயின் சமாதி இவ்வளவு நீளமாக ஏன் இருக்க வேண்டும்?

அதற்கும் ஓர் காரணம் உள்ளது.

கன்னியா மலையில் உள்ள சமாதி பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு இராவணன் தன் தாய்க்கு அமைத்த சமாதியாகும்இராவண னின் தாய் ஓர் யக்ஷ குலப்பெண் என்பது குறிப்பிடத்தக்கதுயக்ஷ குலத்தைச் சேர்ந்தவர்கள் பெரிய இராட்சத உடலமைப்பைக் கொண்ட வர்கள் எனும் அர்த்தத்திலேயே மலைமீது மனித உருவத்திற்கு அப்பாற்பட்ட வகையில் 60 அடி நீளத்தில் சமாதி அமைக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்மேலும் இராவணனின் சமாதியும் அவனது தலைநகருக்கருகில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறதுஇராமாயணத்தில் கூறப்பட்டுள்ள திரிகூடகிரி என்பது கோணசர் மலையாகும்எனவே இராவணனின் சமாதியும் அவனது தாயின் சமாதியின் அருகிலேயே அமைக்கப்பட்டிருக்க வேண்டும்இரண்டு யக்ஷர்களின் பெரிய இருவேறு சமாதிகள் பிற்காலத்தில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு 40 அல்லது 60 அடி நீளத்தில் அமைக்கப்பட்டன எனக் கூறப்படுகிறதுஎனவே இவ்வளவு நீளத்தில் காணப்படும் இப்பெரிய சமாதி இராட்சத அரக்கர்கள் எனக் கூறப்படும் இராவணனினதும்அவனின் தாயாரினதும் சமாதிகள் என ஆய்வாளர்கள் கூறுவது பொருத்தமாக உள்ளது.

இராவணன் தனது தாயின் சமாதியை வெந்நீர் கிணறுகளின் அருகில் அமைக்காமல் ஏன் மலை உச்சியில் அமைக்க வேண்டும்?

அதற்கும் ஓர் முக்கிய காரணம் உள்ளதுஇராவணனின் தாயான கைகேசியின் நெடுநாள் ஆசையானது தட்சிண கைலாசம் எனும் திருக்கோணேஸ்வரத்தில் வீற்றிருக்கும் சிவனை தரிசித்து வழிபடுவ தாகும்ஆனால் இராவணன் தன் தாயின் ஆசையை நிறைவேற்ற இரண்டு தடவைகள் முயற்சி செய்தும் அதை நிறைவு செய்ய முடியாமல் போய்விட்டதுதாயும் நிறைவேறாத ஆசையோடு உயிர் துறந்தார்அதன்பின் இராவணன் தாயின் கிரிகைகளை முடித்துவிட்டு கன்னியா மலை உச்சியில் சமாதியை அமைத்தான்இம்மலை உச்சியிலிருந்து திருக்கோணேஸ்வரத்தை அழகாகத் தரிசிக்கலாம்எனவே தனது தாயின் இறுதி ஆசையான திருக்கோணேஸ்வரப் பெருமானை தரிசிக்க வேண்டும் எனும் வேண்டுகோளை தாய் இறந்த பின்பாவது நிறைவேற்ற வேண்டும் எனும் எண்ணத்துடன் மலைமீது தாயின் சமாதியை இராவணன் அமைத்திருக்க வேண்டும்இச்சமாதி மீது இருந்து தன் தாயின் ஆன்மா என்றென்றும் திருக்கோணேஸ்வரப் பெருமானை நேரடியாகவே தரிசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே சிவ பக்தனான இராவணனின் ஆசையும்சிவன் மீது அதீத பற்று கொண்ட தாய்க்குச் செய்யும் கடமையும் ஆகும் என இராவணன் நினைத்திருக்க வேண்டும்.

இச்சமாதி ஓர் இஸ்லாமியப் பெரியவரின் சமாதி எனவும் சிலர் கூறுகின்றனர்இம்மலையில் இராவணன் காலத்துடன் தொடர்புடைய தொன்மை வரலாற்றை அறிந்திராத சிலரே இவ்வாறு கூறுகின்றனர். 200 வருடங்களுக்கு முன்பு இலங்கையை ஆராய்ந்து தமது நூல்களில் ஆவணப்படுத்திய ஐரோப்பிய அறிஞர்கள் யாரும் கன்னியா மலையில் உள்ள சமாதி இஸ்லாமிய பெரியாருடையது எனக் குறிப் பிடவில்லைமாறாக இது இராவணன் மற்றும் அவனின் தாயின் சமாதி எனும் பொருளில் ஓர் இராட்சதனினதும்அவனின் மகனி னதும் சமாதி என்றே குறிப்பிட்டுள்ளனர்.

கன்னியா மலையில் உள்ள சமாதி பற்றிய அறிஞர்களின் குறிப்புகள்.

ஜேம்ஸ் கோர்டினரின் குறிப்பு

கன்னியா மலையில் உள்ள சமாதி பற்றி ஜேம்ஸ் கோர்டினர் எனும் வரலாற்றறிஞர் 1798 ஆம் ஆண்டு அவர் எழுதிய “A Description of Ceylon” எனும் நூலில் பின்வருமாறு விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

“On the Summit of the above mentioned Hill are shewn two monumental piles of earth enclosed with loose stones, one thirty-six feet in length, and ten in breath, the other ten feet long, and three broad. They are said to be the dimensions of a giant and his son, who were buried there at a very remote period in the fabulous History of Ceylon.”

இக்குறிப்பில் கன்னியா மலையின் உச்சியில் இறுக்கமற்ற கற் களினால் சுற்றிவர கட்டப்பட்ட இரண்டு நினைவுச் சின்னக் குவிய ல்கள் காணப்படுவதாகவும்அவற்றில் ஒன்று 36 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டதாகவும்அடுத்தது 10 அடி நீளமும், 3 அடி அகலமும் கொண்டதாகவும் காணப்படுகிறதுஇவை இலங்கை வரலாற் றில் நம்பமுடியாத மிகமிகத் தொன்மையான காலத்தில் புதைக்கப்பட்ட ஓர் இராட்சதன் மற்றும் அவனின் மகன் ஆகியோரினது பரிமாண ங்கள் எனக் கூறப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.35 ஜேம்ஸ் கோர்டினரின் மேற்சொன்ன குறிப்பு இராவணன் மற்றும் அவனின் தாய் ஆகியோரின் சமாதியைக் குறிக்கிறது என்பதற்கு இவர் பயன்படுத்தியிருக்கும் “இலங்கை வரலாற்றில் நம்பமுடியாத மிகமிகத் தொன்மையான காலத்தில் புதைக்கப்பட்ட ஓர் இராட்சதன் மற்றும் அவனின் மகன்..” எனும் சில வரிகள் ஏதுவாக அமைகின்றன.

இவரின் குறிப்பின் படி இராவணனின் தாயின் சமாதி 36 அடி நீளமும்இராவணனின் சமாதி 10 அடி நீளமும் கொண்ட இரு வேறு சமாதிகளாக மொத்தமாக 46 அடி நீளமாக இருந்துள்ளனஅண் மைக்காலத்தில் இவ்விரு சமாதிகளையும் ஒன்றாக்கி கட்டியவர்கள் 60 அடி சமாதி எனப் பெயரிட்டுஇது ஓர் இஸ்லாமியப் பெரியாரின் சமாதி எனக் கதை கட்டி விட்டனர்.

சைமன் காசிச்செட்டியின் குறிப்பு

மேலே சொன்ன கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் சைமன் காசிச்செட்டி எனும் அறிஞர் 1833 ஆம் ஆண்டு அவர் எழுதிய “The Ceylon Gazetteer” எனும் நூலில் “Fasing the west side there are several hills, and on the Summit of one is shewn the remains of the Tombs of a Giant and his son.” எனக் கூறியுள்ளார்இக்குறிப்பில் சைமன் காசிச்செட்டி இங்குள்ள மலை உச்சியில் ஓர் இராட்சதனினதும்அவனின் மகனினதும் சமாதியின் சிதைவுகள் காணப்படுகின்றன என்றே குறிப்பிட்டுள்ளார்.

சார்லஸ் ப்ரிதாமின் குறிப்பு

இதே குறிப்பை சார்லஸ் ப்ரிதாம் எனும் ஆராய்ச்சியாளர் 1849 ஆம் ஆண்டு தான் எழுதிய “An Historical Political and Statistical of Ceylon” எனும் நூலில் “The Summit of one is shewn the remains of the Tombs of a Giant and his son.” எனக் குறிப்பிட்டுள்ளார்.37

மூன்று அறிஞர்களின் கூற்றுக்கும் வலு சேர்க்கும் ஹரி வில்லியம்ஸின் குறிப்பு

கன்னியா பற்றி ஹரி வில்லியம்ஸ் எனும் அறிஞர் 1950 ஆம் ஆண்டு எழுதிய “Ceylon Pearl of the East” எனும் நூலில் சில முக்கிய விபரங்களைக் கூறியுள்ளார்மேலே கன்னியா மலையில் உள்ள சமாதியை மூன்று அறிஞர்களும் “Tombs of a Giant and his Son” என்றே குறிப்பிட்டுள்ளனர்இது இராட்சதன் மற்றும் அவனின் மகன் எனப் பொருள்படும்இங்கே இராட்சதன் என்பது இராவ ணனையே குறிப்பதாகும்இக்கூற்றுக்கு வலு சேர்க்கும் வகையில் இந் நூலில் ஹரி வில்லியம்ஸின் குறிப்பு அமைந்துள்ளதுஅக்குறிப்பின் பின்பகுதி கீழ்வருமாறு.

“According to them King Ravanna, during his long war with Vishnu, was informed by that deity that Kanya virgin mother of the King of Ceylon, was dead. Ravanna naturally had to set about the task of performing the necessary obituary services for the beloved dead, and Vishnu to help him … and incidentally to accomplish his main design of delaying him … Caused hot springs to burst out of the ground for the Giant’s use. and there they remain.

மேலே கன்னியா பற்றி ஹரி வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ள விபரங்களில் இராவணன் தன் தாய்க்கு கிரிகைகள் செய்வதற்காக இவ்வெந் நீர் ஊற்றுகள் உருவாக்கப்பட்டன எனும் செய்தியே கூறப்பட்டுள்ளதுஇப்பந்தியின் கடைசி இரண்டு வரிகளும் மிக முக்கியமானவையாகும்.

இதில் “caused hot springs to burst out of the ground for the giant’s use. And there they remain.” எனக் கூறப்பட்டுள்ளதுஇது “வெந்நீர் ஊற்றுக்கள் இரட்சதனின் பாவனைக்காக நிலத்திலிருந்து திடீரெனத் தோன்றினஅங்கே அவை நிலைத்து இருக்கின்றன.”எனப் பொருள்படுகிறதுஇதில் இவர் நேரடியாகவே இராவணனை Giant எனக் கூறியுள்ளார்.

எனவே “Tombs of a Giant and his Son” என மேலே மூன்று அறிஞர்களும் குறிப்பிட்டிருப்பது இராவணன் மற் றும் அவனின் தாயின் சமாதியையே என்பது ஹரி வில்லியம்ஸின் குறிப்பு மூலம் உறுதியாகிறது.

1919 ஆம் ஆண்டு திருகோணமலை தேசப்படத்தில் கன்னியாவில் ராட்ஷசன் இராவணனின் சமாதி

கன்னியா மலையில் இராவணனின் தாய் மற்றும் இராவணன் ஆகியோரின் சமாதியே உள்ளது என்பதற்குச் சான்றாக இன்னுமோர் ஆதாரமும் காணப்படுகிறதுஅது 1919 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட திருகோணமலையின் தேசப்படமாகும்இத்தேசப்படத்தின் இடது பக்க மேல் மூலையில் “Kannia-Giants Tombs” (கன்னியா இராட்ஷசன் சமாதிஎனக் குறிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேசப்படத்தின் விபரங்கள் “Description” என படத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் “This map shows the Giants Tombs near Kannia, possibly referring to the mythical King Ravana.” என கன்னியா சமாதி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதுஅதா வது இந்த தேசப்படத்தில் கன்னியா ராட்சசன் சமாதி எனக் குறிப்பிடப் பட்டிருப்பது புராண காலத்து மன்னன் இராவணனைக் குறிப்பதாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து அறிஞர்களும் இச்சமாதிகள் இராட்ச சர்களின் சமாதிகள் எனும் பொருள்படக் கூறியுள்ளனரேயன்றி இஸ்லாமியப் பெரியாருடையது எனக் கூறவில்லைஇவ் அறிஞர்கள் கன்னியா மலைக்கு சென்றபோது இப்பகுதியில் வசித்த மக்கள் இராவ ணன் மற்றும் அவனின் தாய் ஆகியோருடன் கன்னியாவுக்கு இருந்த தொடர்புகள் பற்றிக் கூறியுள்ளனர்அவர்களின் சமாதியே மலை உச்சி யில் இருப்பவை எனவும் கூறியுள்ளனர்.அறிஞர்களும் இக்கருத்தையே தமது நூலில் குறிப்பிட்டுள்ளனர்சுமார் 200 வருடங்களுக்கு முன்பும் இது இராட்சதர்களின் சமாதியாகவே காணப்பட்டுள்ளது.

இறுதியில் கன்னியா மலையில் உள்ள சமாதி ஓர் இஸ்லாமியப் பெரியவரின் சமாதி என இதுவரை கூறப்பட்டு வந்த கூற்றுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என்பதும்இச்சமாதி இராவணனனினதும்அவனின் தாயாரினதும் சமாதியே என்பதுக்கு 300 வருடங்களுக்கு முற்பட்ட ஐரோப்பிய அறிஞர்களின் குறிப்புகள் ஆதாரங்களாக இருக்கின்றன என்பதும் நிரூபணமாகியுள்ளது.

என்.கே.எஸ்.திருச்செல்வம்

வரலாற்று ஆய்வாளர்

இலங்கை



இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம்போற்றுதலுக்குரியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான்.. உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன்.
 அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாக இராமாயணம் கூறுகின்றது.
ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன். இராவணன்  இலங்கையை ஆட்சி செய்த 
வாரியபொல – “வானோடும் களம் இறங்குமிடம்” போன்ற ஊர் பெயர்களும்
இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவனாகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகிறன
இராமாயணத்தில் இராவணன்
இராமாயணத்தில் இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்தி சென்றதாகவும், இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய எத்தனித்ததாகவும். இவன் பல பெண்களை பலாத்கரமாக தன் மனைவிகளாக அடைந்ததாகவும் சித்தரித்தனர்.

மண்டோதரி, வேதவதி, ரம்பா ஆகியோர் இவர் மனைவியர்கள். இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன  நாட்டு நிலைமை பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்வது வழக்கம். 
அதாவது இராமன் ஆண்டால் நாடு நன்றாக இருக்கும் என்றும், இராவணன் ஆண்டால் நாடு மோசமாக இருக்கும் என்றும் கர்ண பரம்பரையாக சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், இராமன் ஆட்சி என்று சொல்லப்படுவது, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த செருப்பின் ஆட்சிதான்.

அந்த ஆட்சியின்போது இராமனும் சீதையுமே காட்டில் திரிய வேண்டியிருந்தது என்றால், அந்த நாட்டு மக்கள் எங்கெங்கே திரிந்திருப்பார்களோ! வனவாசம் முடிந்து நாடு திரும்பிப் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பிறகாவது ராமனால் சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்ததா? இல்லை…. யாரோ எதையோ சொன்னார்கள் என்று மனைவி சீதையை தீக்குளிக்கச் செய்த பெண்ணடிமைத்தனம் தான் அந்த ஆட்சியில் நிலவியது.

அதன்பிறகும் அவளைக் காட்டுக்கு அனுப்பிவிட்டான் மகாராசன் இராமன்.
இப்படியெல்லாம் சீதை என்ற பெண் தன்னந்தனியாக திரிய வேண்டியிருந்ததை மனத்தில் வைத்துத்தான், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியும், “நடு இரவில் ஒரு பெண் உடல் நிறைய நகைகளை அணிந்துகொண்டு தன்னந்தனியாக நடக்கும் சூழ்நிலை இந்த நாட்டில் எற்பட்டால் அதுவே இராமராஜ்ஜியம்” என்றார் போலும். இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? 
அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும் கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும்.

நல்லது நடப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்காரர்கள் அதைக் கெடுக்க நினைப்பது போல, ஓங்கியுயர்ந்த மாளிகைகளைக் கொண்ட இலங்கையை இராம பக்தனான அனுமன் தன் வாலில் பற்றிய தீக் கொண்டு அழித்ததையும் இராமாயணம் வர்ணிக்கிறது.

எப்படிப் பார்த்தாலும் இராமனின் அயோத்தியைவிட ஆயிரம் மடங்கு உயர்வானதாகவே இருந்திருக்கிறது இராவணன் ஆண்ட இலங்கை. அப்புறம் என், நல்ல ஆட்சியை இராமன் ஆட்சி என்றும் மோசமான ஆட்சியை இராவணன் ஆட்சி என்றும் சொல்கிறோம்? இந்தக் கேள்விக்கான விடையைத்தான் 60 ஆண்டுகளுக்கு முன்பு உரக்கச் சொல்லின திராவிட இயக்கங்கள். ஆரிய ஆதிக்கத்தின் விளைவால், தமிழ் மகாகவியான கம்பன் ஆரியத்தின் தாசானு தாசனாகி, வால்மீகியையும் மிஞ்சிடும் வகையில் கற்பனைப் பாத்திரங்களான இராமனைத் தெய்வம் என்றும் தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான்.

கவிச்சுவையிலும், பக்தி சொட்டும் தமிழிலும் கம்பன் பின்னி எடுத்திருந்த காரணத்தால் இராமனே நமக்கும் தெய்வமானான். தமிழ் மன்னனான இராவணன் ஆனான்.


கம்பராமாயணம் தமிழர்களை இழிவுபடுத்தும் காப்பியமே என்பதை நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும், அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும் மேடையில் வாதிட்டு வென்று காட்டினார் பேரறிஞர் அண்ணா. அடுத்தவன் எழுதியதைக் குற்றம் சொல்லத்தான் தெரியுமா? தமிழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் உங்களால் ஒரு காப்பியத்தை படைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பியவர்களும் அப்போது உண்டு. 
அத்தகையவர்களின் வாயை அடைக்கும் விதத்தில் புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்டதுதான் இராவண காவியம். வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மாற்றுக் காப்பியத்தைப் படைத்தார் புலவர் குழந்தை.

அவரது படைப்பு, கற்பனைப் பாத்திரமான இராவணனின் பழியை மட்டும் துடைக்கவில்லை. நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகளையும் மீட்டெடுத்தது.

இலக்கியத்தின் இலக்கு எதுவாக இருக்கவேண்டுமோ அதனை உணர்ந்து செய்யப்பட்டதே இராவண காவியம் எனும் பெருங்காப்பியம் குடும்பம் இராவணனது தந்தை வைச்ரவ மகரிஷி ஆவார். வீடணன், கும்பகர்ணன், சூர்ப்பணகை ஆகியோர் உடன் பிறப்புகளாவர்
வேத வித்தகன்
இராவணன் சாம வேதத்தில் நிபுணத்துவம் பெற்றவன். இதனை இராமாயணமே எடுத்தியம்புகிறது. இவன் தனது கை நரம்புகளால் சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது. கைலாயத்தைத் தூக்கும் இராவணன் (இராவணன், பத்துத் தலை கொண்ட இலங்கை அரசன். இராமனுக்கு எதிரியான இவன் மிகச் சிறந்த சிவபக்தன். புராணங்களில் இராட்சசனாகச் சித்தரிக்கப் படுபவன்.) கைலாயத்தை தன் நாட்டில் வைக்க விரும்பிய இராவணன் வடக்கே சென்று, எந்த வித கடினமும் இல்லாமல் இமயத்தைத் தூக்கி தன் நாடு நோக்கி நடந்தான்.

மலையில் திடீரென ஏற்பட்ட ஆட்டத்தை உணர்ந்த பார்வதி தேவி பாதுகாப்பு வேண்டி சிவனிடம் ஓட, நடந்ததை அறிந்த சிவன், இராவணனுக்கு ஒரு பாடம் புகட்ட விரும்பி தன் இடது கட்டைவிரலால் மலையை சற்று அழுத்த, தப்பிக்க வழியின்றி கீழே மாட்டிக் கொண்டான் இராவணன். 
ஆனால் சிவபக்தர்களுக்குத் தெரியும் சிவனை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று. தன் தொடை நரம்பினால் வீணை போன்ற ஏற்பாடு செய்து, சாம வேதப் பாடல்களைப் பாட, மனம் இரங்கினார் சிவ பெருமான், இராவணனைச் செல்ல அனுமதித்தார்.

மற்ற தெய்வங்களுக்கு சொல்லப்படாத சிறப்பு இதுவே. சிவபெருமானுக்கும் அவர்தம் அடியார்களுக்கும் மிகச் சிறந்த உறவு உண்டு. ஒருத்தரை யொருத்தர் மதிக்கும் பண்பு வந்துவிட்டார் ஏது இங்கே பிரச்சினைகள்?
இராவணன் நீர்வீழ்ச்சி
இராவணன் நீர்வீழ்ச்சி இலங்கையின் ஊவா மாகாணத்தில் கிரிந்தி ஆற்றில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும். இது எல்லை – வெள்ளவாயா பெருந்தெருவிற்கு அருகே அமைந்துள்ளது. பாதையில் இருந்தபடியே இதனை பார்வையிடமுடியும். இதன் நீர் ஊற்று வெவதன்னை மேட்டுநிலக்காடாகும். நீர்வீழ்ச்சி மூன்று படிநிலைகளில் பாய்கிறது. முக்கிய பாய்ச்சல் 9 மீட்டர் (30 அடி) மட்டுமேயாகும். நீர்வீழ்ச்சி சுண்ணாம்புக்கல் பறையில் அமைந்துள்ளது எனவே பாறை அறிப்பு துரிதமாக நடைபெறுகின்றது.
மானசரோவர் ஏரி கைலை மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி என்று கருதப்படுகின்றது. இதன் அருகே ராட்சதலம் ஏரியும் உள்ளது. இந்த ராட்சதலம் ஏரியில் இருந்து இராவணன் தவம் புரிந்ததாக ஒரு கதை உள்ளது. மானசரோவர் ஏரி கைலை மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி என்று கருதப்படுகின்றது. இதன் அருகே ராட்சதலம் ஏரியும் உள்ளது. 
இந்த ராட்சதலம் ஏரியில் இருந்து இராவணன் தவம் புரிந்ததாக ஒரு கதை உள்ளது. இராவணன் நீர் வீழ்ச்சி இராமாயணத்தோடு தொடர்புடையதாக நம்பப்படுகிறது. நீர்வீழ்ச்சிக்கு பின்னால் அமைந்துள்ள குகையில் சீதையை இராவணன் மறைத்து வைத்திருத்தார் என்பது தொன்மையான நம்பிக்கையாகும்.
இராவணன் காலத்து ஆலயங்கள் திருக்கேதீசுவரம் 1930களில்இந்தப்பதிவில் இராவணன் காலத்து ஆலயங்கள், இராவணனின் வேறு சில வரலாற்று எச்சங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். இராவணன் காலத்து ஆலயங்கள் என்று குறிப்பிடுவதனால் அவை இராவணனால் கட்டப்பட்டன என்று பொருள் இல்லை.

விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த சைவாலயங்கள் என்று இவற்றைக்கூறலாம். விஜயனின் வருகைக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த இயக்கர் நாகரின் ஆட்சியில் அக்காலத்து மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.

அக்கால மன்னர்களில் இராவணன் குறிப்பிடக்கூடிய ஒருவனாகையால் இவ்வாறு இராவணன் காலத்து சைவாலயங்கள் என்று குறிப்பிட்டேன். “வித்துசேசன் இருபத்தொன்பது வருடங்களும், மூன்று மாதங்களும் இலங்கையை ஆண்டான்.

இவனுக்குப் பின் இவனது மகன் சுகேசன் என்பவன் மணிபுரம் என்னும் கதிரவன் மலையைத் தலைநகராக்கி இலங்கையை ஆட்சி புரிந்தான். ஆதிகாலத்தில் மயனால் கட்டப்பட்ட திருக்கேதீசுவரம், முனீசுவரம், நகுலேசுவரம் என்னும் சிவாலயங்களை சுகேசன் பழுது பார்த்து அவற்றுக்கு அநேக நகைகளையும், நிலங்களையும் கொடுத்தான்.

இவ்வாறு கணபதிப்பிள்ளையின் இலங்கையில் புராதன சரித்திரம் என்ற நூலில் கூறப்படுகின்றது. சுகேசன் என்பவன் இராவணனுக்கு முன்னைய காலத்தில் இலங்கையில் ஆண்ட ஒரு மன்னன் என்பது பற்றி முந்தய பதிவில் பார்த்தோம்.
இதைவிட…..இலங்கையில் விஜயமன்னன் குடிகளை வசப்படுத்தும் நோக்குடன் சமய வழிமுறைகளை சரியாக கடைப்பிடித்தான். இலங்கையில் ஆட்சியை அமைக்கு முன்னரே நாலு திசைகளிலும் சிவாலயங்களை எழுப்பினான். கீழ்திசையில் கோணெசர் கோவிலையும், மேல்திசையில் கேதீச்சர கோவிலையும் பழுதுபார்த்து, அக்கோவில்களில் பூசை நடாத்தும் பொருட்டு காசிப் பிராமணர்களை அழைத்துவந்தான் எனக் யாழ்ப்பாண வைபமாலையில் கூறப்படுகின்றது. 

இதிலிருந்து விஜயனின் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த ஈழத்தின் பழமைவாய்ந்த சைவாலயங்கள் இவை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வாலயங்க்ள் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.

திருக்கேதீஸ்வரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள மன்னார் மாவட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிவன்கோவில். ஈழத்தின் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது.
இச்செய்தியால் சைவசமயிகளின் தொன்மையையும் பெருமையையும் இத்திருக்கோயில் இயம்புகின்றது. திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையில் திருகோணமலையில் உள்ள திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். 
இதுவும் இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன. சிவபக்தனாகிய இராவணனால் இங்குள்ள சிவலிங்கம் தாபிக்கப்பட்டதாக ஐதீகம். 
இதுதவிர புத்தள மாவட்டத்தில் சிலாபம் என்ற இடத்தில் காணப்படுகின்ற முன்னேஸ்வரம், வடபதியில் கீரிமலைப்பகுதியில் அமைந்துள்ள நகுலேஸ்வரம், தென்பகுதியில் காணப்படுகின்ற தொண்டீஸ்வரம் ( சரியாக தெரியவில்லை ) என்பன இலங்கையில் ஆதிக்குடிகளான இயக்கர் நாகர் என்ற இனத்தவர்கள் காலத்து ஆலயங்களாகும். இவ்வாலயங்கள் யாரால் கட்டப்பட்டன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை என்றே கருதுகிறேன்.

இவ்வாலயங்கள் பற்றிய பழைய புராணக் கதைகளை பற்றி அறிய முற்பட்ட போதிலும்.. அவை பற்றி எனக்கு ஏதும் தெரியவில்லை. வாசகர்கள் யாராவது தெரிந்திருப்பின் குறிப்பிடலாம். அல்லது அவைகள் பற்றி அறியும்போது அவற்றை இங்கு நான் இணைத்துவிடுகிறேன்.


இங்கு மிகவும் வேதனைப்படக்கூடிய விடயம் என்னவெண்றால்…. தமிழர்களின் தொன்மையைக்கூறும் இவ்வாலயங்கள் சில இன்று சிங்கள மயப்படுத்தப்பட்ட சிங்களவர்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ளன. 

உதாரணமாக கதிர்காம முருகன் ஆலையத்தையும், மாத்தறை மாவட்டத்தில் தேவேந்திர முனையில் அமைந்துள்ள தொண்டீஸ்வரர் ஆலையத்தையும் குறிப்பிடலாம். போத்துக்கீசரால் அழிக்கப்பட்ட இத்தொண்டீஸ்வரர் ஆலயம் சிங்கள மக்களால் விஸ்ணு ஆலயமாக மாற்றப்பட்டுள்ளது. இது தவிர திருமலை கோணேச்சரர் ஆலயம், கீரிமலை நகுலேஸ்வர ஆலயம், மாந்தோட்ட கேதீச்சர ஆலயம், சிலாபத்து முன்னீஸ்வரர் ஆலயம் என்பன நினைத்தவுடன் சென்றவர முடியாத, மக்களே இல்லாத சூனியப் பிரதேசங்களில் அமைந்துள்ள ஆலயங்களாகும்.

இவற்றுக்கு சென்றுவர பல கட்டுப்பாடுகள் இராணுவத்தினரால் விதிக்கப் பட்டுள்ளமையால் இக்கோவில்களுக்கு செல்லும் பக்தர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்த ஆலயங்கள் தவிர இராவணனுடன் தொடர்புடைய வேறு சில வரலாற்று எச்சங்களைப்பார்க்கலாம். திருக்கேதீசுவரம் இன்று
இராவணன் வெட்டு
படத்தில் காணப்படுவது இராவணன் வெட்டு என்று அழைக்கப்படுகின்றது. இது திருகோணமலையில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு அண்மையில் அமைந்திருக்கிறது. இதுமட்டுமல்ல திருக்கோணேச்சரம் ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் சிவ பக்தனாகிய இராவணனால் தான் ஸ்தாபிக்கப்பட்டதாக ஒரு ஐதீகமும் உள்ளது.
சிகிரியாக் குன்றம்
சிகிரியாக்குன்றமானது 6ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த காசியப்பனால் அமைக்கப்பட்டது என்றுதான் வரலாற்று நூல்களில் காணப்படுகின்றது. இருப்பினும்…. இராவணன் இறுதியாக ஆட்சி செய்த இடம் சிகிரியா, இராவணனின் மறைவுக்கு பின்னர் ஆட்சிப்பொறுப்பை பெற்றுக்கொண்ட விபீஸணன் தனது தலைநகரத்தை சிகிரியாவில் இருந்து களனிக்கு மாற்றினான். இன்றும் களனியில் உள்ள ஒரு விகாரையில் விபீஸணனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் இராவணனின் ஒலைச்சுவடியில் காணப்படுகின்றன இது பற்றிய மேலதிக விபரங்கள் தெரியவில்லை.
இராவணன் சிறியகோட்டை பெரிய கோட்டை
இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் கதிர்காமத்திலுள்ள கதிரைமலைமீது (ஏழுமலை) நின்று தென் கடலை நோக்கினால் குடா வடிவிலான கற்சிகரமும், கற்கொடியும் ஒன்று கடற்தளத்தின் மீது தெரிவதனை இன்றும் அவதானிக்கலாம். இந்த இரண்டு பாறைகளும் இராவணனின் சிறிய கோட்டை பெரிய கோட்டை என்று அழைக்கப்படுகின்றன.
இராவணன் ஆட்சி
மகாவம்சதின்படி இலங்கையின் வரலாறு விஜயன் வருகையோடுதான் ஆரம்பிக்கிறது. இருப்பினும் அதற்கு முதலில் இயக்கர் நாகர் என்ற ஆதிக்குடிகள் இலங்கையில் வாழ்ந்ததாக மகாவம்சத்தில் கூறப்படுகின்றது. இவ்வாறு இலங்கையின் ஆதிக்குடிகளாக கருதப்படும் இயக்கர் நாகர் பற்றியும், இவர்களோடு இராவணனுக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் பல ஐதீகங்கள் பல உள்ளன.

இவற்றுக்கு மேலாக இலங்கையானது முதலில் இந்தியத் துணை கண்டத்துடன் முதலில் இணைந்தே இருந்தது பின்னர் ஏற்பட்ட ஒரு கடற்கோள் அழிவின்போது நிலத்தின் பலபகுதிகள் நீரில் தாழ்ந்துபோக இந்திய துணைக் கண்டத்திலிருந்து இலங்கையானது தனிமையாக்கப்பட்டது என்ற ஒரு ஐதீகம் பலரால் கூறப்படுகின்றது. அதற்கு இன்னும் ஒரு படி மேலாக பைபிளில் கூறப்படுகின்ற நோவா காலத்தில் பூமியில் ஏற்பட்ட பேரழிவும் இந்நிகழ்வுடன் சேர்த்து கூறப்படுகின்றன.

இவைகள் எல்லாம் வெறும் ஐதீகங்களே தவிர இதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை.

இலங்கைத் தீவு உருவான கதை

புவிநிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன. அவற்றில் ஒரு கண்டமாக இப்போதைய இந்தியாவும் அதனை அண்டிய நிலப்பரப்புகளும் காணப்பட்டன. இக்கண்டங்களை ஆட்சி செய்தவர்களில் மனுச்சக்கரவர்த்தி என்பவனும் ஒருவன். இவனுக்கு சமன் என்று ஒரு மகனும், ஈழம் என்று ஒரு மகளும் இருந்தார்கள். மனுவின் பின்னர் இவ்விருவரும் இக்கண்டத்தை ஆண்டு வந்தனர். 
தென்பகுதியை சமனும், வடபகுதியை ஈழம் என்று அழைக்கப்பட்ட குமரியும் ஆண்டு வந்தனர். குமரி ஆட்சிசெய்த பகுதிகளை குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டு வந்தது. குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. 
இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரிகண்டத்துக்குச் சிலகாலம் தலை நகராகி விளங்கியது. இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன. ஈழம் என்னும் அரசி அட்சி புரிந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது. 

இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதைய இலங்கையை ஏனைய நிலப்பரப்புகளில் இருந்து பிரித்துவிட்டன. 
இக்கடல் கோள்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் வரலாற்றுச் சான்றுகள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது. சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்து விட்டது. மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் இலங்கை முதலிய பல தேசங்களாக பிரிந்தது.
குமரிக்கண்டம் பற்றிய சில ஆதாரங்கள்:- –
சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் குமரிக்கண்டம் பின்னர் அழிவுக்குட்பட்தாக கூறப்படுகின்றது. – ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஏர்ண்ஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel) கூற்றுப்படி இலேமுரியாக் கண்டத்திலிருந்தே மனித இனம் தோன்றொயிருக்கலாம் எனவும் மேலும் அவற்றின் தொல்லுயிர் எச்சங்கள்பல அக்கண்டம் கடற்கோளால் அழிக்கப்பட்டதனால் கிடைக்கப் பெற இயலவில்லையெனவும் கூறுவது குறிப்பிடத்தக்கது. 
மேலும் சில விஞ்ஞானிகள் இத்தகு கண்டம் பசிபிக் கடல்வரை இருக்கப்பெற்றிருக்கலாம் என்னும் கூற்றையும் தெரிவுபடுத்துகின்றனர். இந்த இலேமூரியாக் கண்டமே குமரிக்கண்டமாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றார்கள்.
அழிவுற்றது எனக்கருதப்பவும் குமரிக்கண்டம்
பின்னர் குமரியின் சந்ததிகளில் தோன்றிய அரசர்களில் பரதன் என்பவனும் ஒருவன். இவன் நாற்பது வருடங்களாக குமரிக்கண்டத்தை ஆண்டுவந்தான். இவனின் ஆட்சியில் இக்கண்டம் செழிப்பாக சிறப்புற்று விளங்கியமையால் பின்னாளில் இக்கண்டத்துக்கு பரதகண்டம் என்ற வழங்கப்பட்டது. அந்நாட்களில் இக்கண்டத்தில் வாழ்ந்தவர்களை பரதர், நாகர், இயக்கர், அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடிமபர், கருடர், முனிவர், சித்தர், கந்தருவர், வானரர் என பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தனர்.

இராமாயணத்தில் வாலி, சுக்கிரீவன் எனும் வீரர்கள் மேற்கூறப்பட்ட வானரர்  வகுப்பை சேர்ந்தவர்களெனக் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வேந்தனாக கூறப்படும் இராவணனும் அவனை சேர்ந்தவர்களையும் இயக்கர், நாகர் அல்லது ராட்சதர்கள் எனக்கூறப்பட்டுள்ளது. இவர்கள் அந்நாட்களில் நாகரீகம் அடைந்தவர்களாகவே காணப்பட்டார்கள்.

சமயவழிபாடுகளில் சிறப்பாக இருந்தார்கள். எனினும் இராமயணமானது வட இந்தியர்களான ஆரியர்களால் இயற்றப்பட்டமையாலும், அவர்களின் கதைகளுக்கு முக்கியத்துவமாக கொண்டு காணப்படுவதால் தென்பகுதியை சேர்ந்த இராவணனை ஒரு அரக்கனாக, காமுகனாக சித்தரித்துள்ளார்கள் என்பது சிலருடைய கருத்து.
இராவணன் சிவபக்தன், சமயவழிபாடுகளில் அக்கறை உள்ளவன் என்பதை இராமாயணம் கூறியுள்ளபோதிலும், அக்காலத்தில் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த இயக்கர் நாகர் போன்ற பூர்வீகக்குடிகளுடன் குடியேற்றவாசிகளான ஆரியர்களுக்கு பகை இருந்துள்ளது. 
இதன் காரணமாகவே இராவணனையும் அவனை சார்ந்தோரும் அவ்வாறு தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அவ்வாறில்லை என்று கூறுகிறார்கள். இலங்கையின் ஆதிக்குடிகளான, முக்கியமாக பேசப்படுகின்ற இயக்கர் நாகரின் ஆட்சிகள் பற்றிப் பார்ப்போமேயானால்… திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை, கலியாணி ஆகிய இடங்களை தலைநகராக் கொண்டு பல மன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது. 
இவற்றில் முக்கியமானவனான இராவணனின் ஆட்சிக்காலம் பற்றி பார்க்கலாம். இக்காலத்தில் ஆண்ட சில மன்னர்கள் – சயம்பன் – சயம்பனின் மருமகன் யாளிமுகன் – ஏதி – ஏதியின் மகன் வித்துகேசன் – வித்துகேசனின் மகன் சுகேசன் – சுகேசனின் மகன் மாலியவான் – மாலியவான் தம்பி சுமாலி – குபேரன்
இராவணன் ஆட்சி
அக்காலத்து நாகர் பரம்பரையில் வந்த (இவள் மேலே கூறப்பட்ட சுமாலியின் மகள் )கைகேகி - விச்சிரவாகுவின் பிள்ளைகள்!! 

இராவணன்(சிவதாசன்), கும்பகருணன்(பரமன்), விபீசணன் (பசுபதி)புதல்வர்களையும் சூர்ப்பனகை(உமையம்மை) என்ற புத்திரியையும் பெற்றாள். 

இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். குபேரன் என்பவன் இராவணனின் தந்தையாகிய வச்சிரவாகுவின் இயக்கசாதியை சேர்ந்த இன்னொரு மனைவியின் மகன். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டு  அழகாபுரியை ஆட்சி செய்தான். 
அக்காலத்தில் குபேரனின் ஆட்சியில் இயக்கர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். குபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். 
இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள்.
விஜயன் குவேனி காலத்திற்கு முன்பே இந் நாட்டில் மக்கள் வாழ்ந்து வந்தமை அகழ்வாராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வில்பத்து போன்ற பிரதேசங்களில் இதற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. சிங்களவர்களின் மூதாதையர்கள் ஆரியர்கள் இல்லை. இதனை வரலாற்று ஆய்வாளர்கள் விரைவில் நிரூபிப்பார்கள். 
ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டு பிடிப்பதற்கு முன்னதாகவே இலங்கையில் விமானம் போன்ற போக்குவரத்துச் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் இராமயணத்தில் புஷ்பக விமானம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். எமது வரலாற்று சின்னங்களை சிங்களவர்கள் தமது என்று உரிமை கொண்டாடுவதை பலவழிகளில் பார்த்து இருக்கின்றோம்.
கையில் பொ.மு 3ம் நூற்றாண்டில் அசோகப்பேரரசன் காலத்தில் பௌத்தம் பரப்பப்படுவதற்கு முன்னரே இந்த மதம் சிறப்பான நிலை பெற்று விளங்கியிருக்கிறது. 
இலங்கையில் பௌத்தம் வந்த போது ஆட்சி செய்தவன் தேவநம்பியதீசன். அவனது தந்தையின் பெயர் முடசிவ என்பது. அவனது முன்னோர்களில் பலருக்கும் கிரிகந்தசிவ, மஹாசிவ, போன்ற பெயர்களே அதிகளவில் வழங்கியிருக்கின்றன. 

இது அவர்களது சைவப்பற்றையும் சிவநெறி வாழ்வையும் உறுதி செய்கிறது பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே சிங்களம் என்கிற மொழி பெருவளர்ச்சியுற்றிருக்கிற இம்மொழி சமஸ்கிருதம், தமிழ், பாளி ஆகிய மொழிகளின் கலப்பில் உருவானதாகும் விஜயன் இலங்கைக்கு வர முன்னரே இலங்கையில் தமிழ் மக்களின் மூதாதையினர் நாகரியம் அடைந்த ஒரு இனமாக சிவ வழிபாடு செய்து வாழ்ந்து வந்து இருக்கின்றனர் பின் விஜயனோடு வந்த பிராமணர்கள் இலங்கையில் ஐந்து திசைக்கு சென்று அங்கிருந்த சிவ ஆலயங்களுக்கு பூசைகள் செய்ததாக அறியமுடிகிறது.

இராவணனைப் பற்றிய இரு சுவையான பாடல்கள்!
 ச.நாகராஜன்
 சம்ஸ்கிருதம் அகன்ற, ஆழ்ந்த ஒரு பெருங்கடல். அதில் மூழ்கி கோடானு கோடி நல்முத்துக்களை எடுக்கலாம். இராவணனைப் பற்றிய சுவையான இரண்டு கவிதைகளைப் பார்க்கலாம்.
 இராவணனின் இருபது கண்கள்
 இராவணனுக்கு பத்துத் தலைகள். ஆகவே இருபது கண்கள் உண்டு என்பதை அறிவோம்.
 அந்த இருபது கண்கள் என்ன செய்கின்றன – ஒரே சமயத்தில்? கவிஞர் தன் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டார். பிறந்தது பாடல்.
 இராவணனின் இருபது கண்களில் ஒன்று வளைந்து இருக்கிறது. இன்னொன்று குறுகி இருக்கிறது. அடுத்தது ஆவலுடையதாக இருக்கிறது. நான்காவது புன்சிரிப்புடன் இருக்கிறது. அடுத்ததோ ஏதோ அர்த்தத்துடன் ஒன்றைப் பிரதானமாகக் கொண்டுள்ளது. 
அடுத்ததோ அரைக் கண்ணாக முடியிருக்கிறது. அடுத்தது கறுப்பாக ஆகியுள்ளது ,அடுத்தது எதையோ தூரத்தில் பார்க்கிறது. ஒன்பதாவது கண்ணோ மகிழ்ச்சியுடன் திகழ்கிறது. பத்தாவது அரும்பு போல மூடியிருக்கிறது. அடுத்தது  நடுங்குகிறது. பன்னிரெண்டாவது கண்ணோ நிலையாக நேர் பார்வையைக் கொண்டுள்ளது. அடுத்தது சுழல்கிறது. பதிநான்காவது கண்ணோ இமையோரத்தில் நகர்ந்துள்ளது. அடுத்தது நீர்த்துள்ளது பதினாறாவது கண்ணோ சோர்வைக் காண்பிக்கிறது. அடுத்தது அலை போன்ற இயக்கத்தைக் காண்பிக்கிறது. கடைசி மூன்று கண்களும் கண்ணீரால் நிரம்பியிருக்கிறது.
 இப்படி ஒவ்வொரு கண்ணும் ஒரு குறிப்பிட்ட நிலைக்குத் தக்கபடி ஒவ்வொரு வித்தியாசமான விதத்தில் தன் நிலையைக் காண்பிக்கிறது!
 கவிஞர் ஸ்வபாவோக்தி என்ற அலங்காரத்தைக் காட்டுமாறு இதை அமைத்துள்ளார்.
குபேரபுரியில் கொண்டாட்டம்
 மஹா வீரனான இராவணன் இறந்து விட்டான். உடனே விழா எடுக்கப்பட்டு விட்டது.
 வானர சேனைகள் இருந்த இலங்கைக் கடற்கரையிலா? இல்லை! சுக்ரீவனின் கிஷ்கிந்தையிலா, அங்கும் இல்லை!
குபேர புரியில் கொண்டாட்டம்!
குபேரனின் அளகாபுரியில் ஒரே கொண்டாட்டமாம். யட்சர்கள் வசிக்கும் நகரில் மாதர்களுக்கு ஒரே மகிழ்ச்சி!
பாடலைப் பார்ப்போம்:
 கைலாஸாசகர்ணிகேயமளாகா நேத்ரைகபேயா புரோ
தேவஸ்ய த்ரவிணப்ரபோ: கிமபரம் ஸ்ருங்காரஸாரஸ்யம்: I
அஸ்யாமஸ்தமிதே ஹி ராக்ஷஸபதௌ யக்ஷாங்கநாநாமமீ
வர்தந்தே ப்ரதிசத்வரம் ப்ரதிக்ருஹம் ப்ரத்யாபணம் சோத்ஸதா: II
 இதன் பொருள் :- கண்களுக்கு விருந்தளிக்கும் அளகாபுரி,  செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் தலைநகர், மேலும் காமக்களியாட்டங்களின் மொத்த சாரத்தைக் கொண்டுள்ள நகர், கைலாஸத்தின் செவியில் உள்ள ஆபரணமாய் அமைந்துள்ளது. ராக்ஷஸர்களின் அதிபனான ராவணன் இறந்து விட்டான் என்று தெரிந்தவுட யட்ச பெண்மணிகள் ஒவ்வொரு நாற்சந்தியிலும் கூடிக் கொன்ண்டாடினர்.ஒவ்வொரு வீதியிலும் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாட்டம் தான்!
குபேரனின் புஷ்பக விமானத்தை அபகரித்ததிலிருந்து ராவணனின் ஒவ்வொரு செய்கையும் பாதித்தது அளகாபுரி மக்களைத் தான்! அவன் ஒழிந்தான் என்றவுடன் இன்ப புரியில் இன்ப லோகக் கொண்டாட்டம் தான்! குறிப்பாக மாதர்கள் ஸ்த்ரீலோலன் ஒழிந்தான் என்று மகிழ்ந்தனர்.
பெரும் வாழ்நாள் கொண்டிருந்தாலும், வேத விற்பன்னனாக இருந்தாலும், சிவ பக்தனாக இருந்தாலும் அடுத்தவர் மனைவி மீது ஆசைப்பட்டு அநியாயமாகத் தூக்கிக் கொண்டு வந்தவந் ஒழிவது தானே தர்மம்!
 கவிஞரின் கற்பனையை நாம் கொண்டாட வேண்டியது தான்.சார்த்தூலவிக்ரிதித சந்தத்தில் அமைந்துள்ள இதை பகதத்த ஜலஹணர் என்பவர் தொகுத்த சுக்திமுக்தாவளியில் காணலாம்.
ராவணனைப் பற்றி இப்படி ஏராளமான தனிப் பாடல்கள் உண்டு. ஒவ்வொன்றும் மிகச் சுவையானது!

இலங்கையின் ஆதிக்குடிகளான, முக்கியமாக பேசப்படுகின்ற இயக்கர் நாகரின் ஆட்சிகள் பற்றிப் பார்ப்போமேயானால்...திரிகோணமலை,இலங்காபுரம், சிங்கன்நகர்,பணிபுரம்,திருகோயில்,முருகன்துறை,கலியாணி ஆகிய இடங்களை தலைநகராக் கொண்டு பல மன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவனான இராவணனின் ஆட்சிக்காலம் பற்றி பார்க்கலாம்.

அதற்கான ஆதாரமாக நன் முன்வைக்கப்போகும் முதலாவது ஆதாரம் என்னவென்றால் இலங்கையைச் சுற்றி ஐந்து திசைகளிலும் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த சிவாலயங்கள் . இந்த சிவாலயங்கள் உருவாக்கப்பட்ட வரலாற்றை உற்றுநோக்கினால் , இவை அனைத்துமே சுமார் 3500-4500 ஆண்டுகாலப் பழமையானவை .

தமிழ் மன்னர்களான மூதசிவன் பரம்பரையில் வந்த ஐந்து மன்னர்கள் மற்றும் எல்லாளன் போன்றோர் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சைவர்கள் எனினும் அவர்கள் அனுராதபுரம் இராட்சியத்தையே ஆட்சி செய்தவர்கள் .
இராஜராஜ சோழனும் , பாண்டியர்களும் சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் ஆட்சி செய்தவர்கள் . இவர்களால் மேற்படி சிவாலயங்கள் புனர் நிர்மானம்தான் செய்யப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.


அப்படியாயின் முழு இலங்கையையும் ஆட்சிசெய்த யாரோ ஒரு சிவ பக்தனால்தான் இந்த ஐந்து சிவாலயங்களும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா ? அப்படியாயின் முழு இலங்கைத் தீவையும் நல் ஆட்சிசெய்த , அங்கு வாழ்ந்த மக்களை நேசித்த , அவர்கள் வழிபடவும் , அவர்களைக் காக்கவும்  தானும் வழிபாடு செய்யவும் அந்த சிவாலயங்களை நிறுவிய தமிழன் , சிவ பக்தன்.இராவணன் மனைவி பெயர் மண்டோதரி என்றுள்ளது. கதைகளிலும் அப்படித்தான். அவர்களது இயற்பெயர் வண்டார்குழலி.

மகா சோழ சாம்ராஜ்யம் பர்மாவில் (மியன்மார் )
கிபி 1024 இல் இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழனின் பேரன் சொக்கடே பெரும்படையுடன் (கப்பற்படை) தென் பர்மாவை (மியன்மாரை) வந்தடைந்தான் . 

இன்றைய இரங்கூன் நகரை அழித்தொழித்து தென்பர்மாவைக் கைப்பற்றினான்.
அவனுக்குப்பின்னர் அவனது இளைய சகோதரன் அனுருத்த அல்லது அனவர்த்த எனப்படுபவனால் 1079 வரை பர்மா ஆளுகைக்கு உட்படதாகப் பதிவுகள் காணப்படுகின்றன.ஆக அந்தக்கலப்பகுதிகளில் பர்மாவில் சைவ பௌத்த ஆலயங்கள் நிறுவப்பட்டன.
அதன்பின்னரும் தமிழர்கள் அல்லாத மன்னர்களாலும் பௌத்த ஆலயங்கள் நிறுவப்பட்டன.

1870 களில் ஆங்கிலேயர்களால் தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள் புகையிரதப் பாதைகள் , சுரங்கங்கள் அமைத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர் என்று சொல்லப்பட்டாலும் , உண்மையில் திட்டமிட்டு பஞ்சம் ஏற்படுத்தப்பட்டு , முகவர்குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களைப்பயன்படுத்தி ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டனர்.

அடிமைகள்போல் நடத்தப்பட்டு கடுமையான வேலை வாங்கப்பட்டு , ஒருவேளை மட்டுமே உணவு வழங்கப்பட்டு இலட்சக்கணக்கில் தமிழர்கள் மரணிக்க நேர்ந்தது.
எஞ்சியோர் பர்மாவில் குடியேறினார்கள்.

மேலும் சில தமிழர்கள் வியாபாரம் செய்யவெனவும் , வேலை செய்யவெனவும் பர்மாவில் வந்து குடியேறினார்கள்.ஆங்கிலேயர்களின் ஆட்சியில் பர்மா இருந்தவரை தமிழர்களின் நிலை அபரீதமாக உயர்வடைந்து வந்தது. பர்மாவின் பொருளாதாரம் தமிழர்களின் கையில் வந்தது.இந்த நிலை 1942 இல் ஜப்பான் உள்நுழையும் வரை நீடித்தது.1942 இல் பிரித்தானியா பர்மாவை விட்டு பின்வாங்கியது. 

ஜப்பான் படைகளின் பின்புலத்துடன் பர்மியர்களால் தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. ஒருநாளைக்கு 500-800 தமிழர்கள் கொல்லப்பட்டதாகப் பதிவுகள் காணப்படுகின்றன. தமிழர்கள் அகதிகள் ஆகினர் . இந்தியாவுக்கு சுமார் மூன்று இலட்சம் அகதிகள் தப்பி வந்தார்கள். சுமார் மூன்று நான்குமாத நடைப்பயணத்தில் காட்டு வழிகளில், மலைகளில் , ஆறுகளில் இறந்து போனவர்கள் இதைவிட அதிகம்.

மீண்டும் ஒருசில ஆண்டுகளில் பர்மிய இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. நாட்டு மக்களின் சொத்துக்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கியது. இதனால் உண்மையிலேயே இழந்தவர்கள் தமிழர்கள் . அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் ஒரே இரவில் நாட்டுடமை ஆனது.


இன்று தமிழர்கள் சாதாரண விவசாயிகள் அல்லது கூலித் தொழிளார்கள்.
சுமார் பத்து இலட்சம் ஏழைத் தமிழர்கள் பர்மாவில் வாழ்கிறார்கள். இவர்கள் கோயில்களில் தமிழ் வகுப்புக்களை நடத்தி தமிழ் வளர்க்க பாடுபடுகிறார்கள்.
1870 தொடக்கம் கட்டப்பட்ட கோயில்கள் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன.
வறுமை நிலையிலும் தமிழ் வளர்க்கப் படாதபாடு படுகிறார்கள் . அதுவே இவர்களின் சிறப்பு!

இராவணன் கோட்டை , இராவணன் குன்று , சிகிரியா குன்று என்று பலபெயர்களில் அழைக்கப்படும் 660 அடிகள் உயரமான இந்தக்குன்று இராவணின் கோட்டையாக இருந்ததாகவும் , இந்தக்குன்றின் மேற் தளத்தில்தான் இராவணனின் புஸ்பகவிமானம் தரையிறக்கப்பட்டதாகவும் அறியமுடிகிறது.இப்பாறையின் மேற்பரப்பில் நீர்த் தடாகம் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.


இந்தக் குகையின் அல்லது கோட்டையின் உட்புறத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. இந்த ஓவியங்களிலுள்ள பெண்கள் மேகத்தில் மிதப்பதுபோல வரையப்பட்டிருப்பதால், இவர்கள் தேவதைகளாகவோ ,அல்லது இறைவனின் பெண்களாகவோ இருக்கலாமென்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

உலகின் ஈர்ப்பு மையம் முழுவதும் ஒன்று குவியும் ஒரு அற்புதமான மைய இடத்தில் இந்தக் கோட்டை அமைக்கப்பட்டிருப்பதாகவும் , இதன்மூலம் இங்கு வாழ்ந்தவர்கள் இறை சக்தியோடு தொடர்பு கொள்ளத்தக்க வகையில் இந்தக்கோட்டையை திட்டமிட்டு அமைத்திருக்க வேண்டுமென்றும் மேலை நாட்டு அறிஞர்கள் கூறுகிறார்கள். 

சிகிரிய ஓவியங்களில் இருத்த அனைத்து தமிழர் மரபுக்கு உரிய " நெற்றிப் பொட்டுகளை ", சுரண்டி அழித்தது. 
இந்தக்கோட்டையை பிற்காலத்தில் கிபி 477-495 வரை காசியப்பன் என்ற அரசன் பாதுகாப்பாக ஒளிந்து கொள்வதற்க்காகப் பாவித்தான்.எனினும் எதிரிகள் கண்டுகொண்டதால் தனது தலையை தானே வெட்டிக்கொண்டு தற்க்கொலை செய்துகொண்டதாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. 

அதனால் இக்கோட்டை அவனால் அமைக்கப்பட்டதாக சில இடங்களில் பதியப்பட்டிருக்கின்றது.இந்தக்கோட்டையைப் பற்றி நிறைய எழுதலாம். 
இன்று தங்கத்தால் உடல் முழுவதும் பூசி அடக்கம் செய்த இலங்கை ராவணனின் அதிசயக் கல்லறை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாம் இதனால் பல தகவல்கள் புராதன அடையாளங்கள் கிடைத்துள்ளதாம்.

அதன் விளக்கங்கள்-

பரராசசேகரன் உலா
வையாபாடல் - 15ஆம் நூற்றாண்டு - வையாபுரி
கைலாயமாலை - 16ஆம் நூற்றாண்டு - முத்துராசக்கவிராசர்
வைபவமாலை - 18ஆம் நூற்றாண்டு -
மாதகல் மயில்வாகனப்புலவர்
பிரித்தானியர் கால நூல்கள்
History of Jaffna - 1884 - S.Kasishetty
Jaffna Today and Yesterday - 1907 - Duraiyappa Pillai
History of Jaffna - 1912 - Muththuthampy Pillai
யாழ்ப்பாண வைபவ கௌமுதி - 1918 - வேலுப்பிள்ளை
Ancient Jaffna - 1926 - Rajanagam
Critiques of Jaffna - 1928 - Njanappiragasar
Tha Jaffna Kingdom
The Ancient People of Sri Lanka are Tamils
யாழ்ப்பாண பூர்வீக வைபவம்
யாழ்ப்பாண குடியேற்றம்
புதிய நூல்கள்
இலங்கைவாழ் தமிழரின் வரலாறு - கே.கணபதிப்பிள்ளை
Tamils and Ceylon - நவரட்ணம்
Kingdom of Jaffna - 1978 - Pathmanathan
Early Settlements in Jaffna - Ragupathy
யாழ்ப்பாண இராட்சியம் - சிற்றம்பலம்
பூனகரி தொல்பொருள் - புஸ்பரத்தினம்
இவ்வளவு நூல்களையும் ஆராய்ந்து யாழறிவன் அவர்கள் இராவணனின் பூர்வீகம் பற்றிய கட்டுரையை எழுதியிருந்தார் . 

நான் அதைப்படித்து அதற்கு மேலும் தேடிப்படித்து எழுதியுள்ளேன் . சும்மா யாரோ சொன்னார்கள் என்பதற்க்காக எழுதவில்லை. இராவணன் பற்றிய எனது பதிவுகளை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படிப்பவர்களுக்கு இது நிச்சயம் புரியும். நடுவிலிருந்து தொடங்கியவர்களுக்கு புரியாமலிருக்கலாம் .
அவரவர் கருத்துக்களைத் தெரிவிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஒரு விசயத்தை நான் முன்வைக்கும்போது இயன்ற அளவுக்கு அதற்கான ஆதாரங்களை முன்வைக்க முயற்சி செய்கிறேன் . அதேபோல மறுப்பவர்கள் அததற்கான ஆதாரங்களை முன்வைத்தால் திருத்திக்கொள்ள இலகுவாக இருக்கும் . யாரோ சொன்னார்கள் என்பதுபோல சொல்லி ஒரு விஷயத்தை மறுத்து எழுதுவது ,கஷ்டப்பட்டு எழுதும் எங்கள் போன்றோரைக் காயப்படுத்துகிறது.மன்னன் இராவணனிடம் புட்பக விமானம் இருந்ததா ?
ஆம் என்றோ இல்லை என்றோ அவசரப்பட்டு முடிவெடுக்காமல் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கலாமென்று நினைக்கின்றேன் .
இராவணனிடம் புட்பக விமானம் இருந்ததாக

உண்மையில் கதாநாயகனிடம்தானே விமானம் இருந்திருக்க வேண்டும் ? ஆனால் இங்கு வில்லனாக சித்தரிக்கப்படும் இராவணனிடம் விமானம் இருந்ததாக அவனது எதிரிகளே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்களே ?
எங்கேயோ இடிக்கிறது அல்லவா ?

"இராவணன் ஒரு மிகச்சிறந்த சிவபக்தன் என்பதோடு அவனது காலத்தில் "ஈழம்" மிகச்சிறந்த தொழினுட்ப வசதிகளுடன் இருந்திருக்கிறது.

இன்று இருக்கும் "சிகிரியா" இராவணனின் காலத்தில் ராவணனின் "புஷ்பக விமானம்" இறங்கும் தளமாக பாவிக்கப்ட்ட இடமாக இருக்கலாம் என்று சில சிங்கள ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள்.

இராவணன் பாவித்த புஷ்பக விமானத்தின் சில எச்சங்களும் இராவணன் காலத்து சில எச்சங்களும் சிகிரியா குன்றின் நடுவில் இருக்கிறது என்று நம்பப்படும் சுரங்கத்திற்குள் இருந்ததாகவும் மேற்கத்தேய ஆட்சியாளர்களின் காலத்தில்தான் அவை திருடப்பட்டிருக்கலாம் எனவும் அந்த சிங்கள ஆய்வாளர்கள் நம்புவதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

சிகிரியா குன்றின் உச்சியில் இருந்து தரைக்கு குன்றின் நடுவில் சுரங்கம் இருக்கிறது என்று நம்புகிறார்கள். விமானம் வைத்திருந்த ராவணனால் சுரங்கம் அமைத்திருக்கமுடியும் என்ற நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான்.
தவிர எகிப்தில் இருக்க கூடிய பிரமிட்டுக்களின் கட்டுமானத்திற்கும் "பபிலோனா பூந்தோட்டம்" அமைப்பதற்கான கட்டுமானத்திற்கும் இராவணனின் காலத்தில் விமானம் மூலமாக ஆட்கள் அனுப்பபட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.


இது எகிப்து பிரமிட்டுகளில் காணப்படுவதாகவும் இதில் "லங்காபுர" என்று எழுதியிப்பதாகவும் சொல்கிறார்கள். ஆக எகிப்து பிரமிட்டு கட்டுமானங்களில் "ஈழத்தில்" இருந்து ஆட்கள் கொண்டு செல்லப்பட்டது அதுவும் விமானம் மூலம் கொண்டு செல்லபட்டார்கள் என்பது ஆய்வு.

இதை ஒத்த விமானம் பிரித்தானியாவில் லண்டன் கொலண்டல் பகுதியில் உள்ள பழைய விமான காட்ச்சியகத்தில் காண முடியும்.
Royal Air Force Museum London

முழு ஈழத்தையும் இராவணன் ஆண்டான் என்பதற்கு இன்றைய இலங்கையின் தெற்கில் இருந்து வடக்குவரை பாதிப்புகள் இருக்கின்றன. இராவணனை சார்ந்து நிற்கும் பெயர்கள் முக்கிய சின்னங்கள் என பல விடையங்கள் இன்னமும் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இராவணன் வாழ்ந்த அதே காலப்பகுதியில் தென் அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு மக்கள் கூட்டத்தினர் விமானங்களைப் பயன்படுத்தியதற்க்கான அல்லது கண்டு அறிந்து வைதிருந்தமைக்கான சான்றுகளாக அவர்கள் வரைந்து வைத்திருந்த ஓவியங்கள் , உருவாக்கியிருந்த சிலைகள் , கல்வெட்டுக்கள் , விமான மாதிரிகள் , விண்வெளி ஓடங்களின் ஓவியங்கள் , கல்வெட்டுக்கள் , விமான ஓடுபாதைகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவர்களே விமானத்தைப் பாவித்திருந்தால் இராவணனும் விமானத்தைப் பாவித்திருக்க வாய்ப்பிருக்கிறதல்லவா ?

கிட்டத் தட்ட இராவணன் வாழ்ந்த அதே காலப்பகுதிகளில் தென்னமெரிக்காவில் வாழ்ந்திருந்த ஒரு மக்கள் கூட்டத்தினர் (நாஸ்கா நாகரீகத்தினர் அல்லது நாஸ்கா மக்கள் ) விமானப் பாவனைகளோடு தொடர்புபட்டிருந்தது அண்மையில் ஆராட்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் , அந்த தென் அமெரிக்க மக்கள் கூட்டத்தினர் விமானங்களைப் பாவித்திருந்தால் , நமது இராவணனும் விமானத்தைப் பாவித்திருக்க வாய்ப்பிருக்கிறது  .

தென்னமெரிக்க நாடான இன்றைய பெரு நாட்டில் நாஸ்கா பாலைவனம் என்றொரு பாலைவனம் அமைந்துள்ளது. இந்தப் பாலைவனத்தின் நடுப்பகுதியில் சாதாரணத் தரைப்பகுதியில் இருந்து பலநூறு மயில்களுக்கு அப்பால் அதாவது இலகுவில் மனிதர்களால் சென்றடைய முடியாத பாலைவனத்தின் உள்ளே ஒரு பாறைகளால் ஆன மலைத்தொடர் காணப்படுகிறது .


இந்தப் பாறைகளால் ஆன நீண்ட மலையைச் சீர்செய்து அதாவது மட்டமாக வெட்டி 500 சதுர கி மீ பரப்பளவில் ஒரு இறங்குதளம் போன்ற சதுர வடிவிலான தளமொன்று அமைக்கப்பட்டுள்ளது . இத்தளத்தில் 23 கிமீ ஓடுதளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற ஒரு தளத்தை இன்றைய நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக்கூட அமைப்பது என்பது மிகவும் சவாலானது என்று கூறப்படுகிறது.
இந்த சதுர வடிவ 500 கிமீ பரப்பளவுள்ள தளத்தில் பல மையில்கள் நீளமான கோடுகள் வரையப்பட்டுள்ளது . இக்கோடுகள் பறையைத் துளையிட்டு சிலிக்கன் துகள்களால் நிரப்பி வரையப்பட்டுள்ளது . எனவே இக்கோடுகள் வானிலிருந்து பார்க்கும்போதும் தெளிவாகத் தெரியக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது. தவிர இக்கோடுகள் இன்றுவரை அப்படியே இருக்கிறது .

இங்கு கோடுகள் தவிர்த்து பலவிதமான வடிவங்களும், சித்திரங்களும் வரையப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் தொடங்கிய புள்ளியிலேயே முடியும்.
இவை விமானிகளுக்கு வழிகாட்டும் குறியீடுகளாக (signals ) இருக்கலாம்.
இந்தச் சித்திரங்களை மூன்று விதமான வகைகளில் நாம் பிரிக்கலாம்.
கேத்திர கணித (Geometry) முறையிலான வடிவங்கள் விலங்குகள், பறவைகள் போன்ற உருவங்கள்.

இந்த நாசுகா உருவங்களில் குரங்கு, நாய், சிலந்தி, பல்லி, திமிங்கலம், மீன், வானம்பாடி பறவை என்று தெரிந்த பல உருவங்கள் இருந்தாலும், தெரியாத உருவங்களும் பல இருக்கின்றன. இவற்றில் ஐம்பதுக்கும் மேலாக உள்ள உருவங்கள் மிகப் பிரமாண்டமானவை. மிகப் பெரிய உருவங்கள் கால் கிலோ மீட்டர் நீளத்துக்கும் நேர்கோடுகள் பல கிலோ மீட்டர் நீளத்துக்கும் வரையப்பட்டுள்ளன.

இந்தச் சித்திரங்களின் முழுமை எவருக்குமே தெரியாது.காரணம் இச்சித்திரங்கள் ஒவ்வொன்றும் ஓர் உதைப்பந்தாட்ட மைதானம் அளவுக்குப் பெரியவை . இவற்றைப் பார்க்க வேண்டும் என்றால் வானத்தில் உயரப் பறந்தால் மட்டுமே முடியும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இது சாத்தியம் இல்லை. இருந்தும் இந்தக் கோடுகள் எல்லாமே விமானத்தில் இருந்து எடுத்தாலும் தெளிவாகத் தெரியும் அளவிற்கு கீறப்பட்டிருக்கின்றன. எரிக் வான் டேனிகன் இவற்றை வேற்று கிரக வாசிகளின் விமானத்தளம் என்று கூறியது அறிவியலாளர்களால் ஏற்கப்படவில்லை.

ஆக இந்தத் தளம் நாஸ்கா மக்களின் விமானம் இறங்குதலமாகவே இருக்க சாத்தியமுள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள் .அப்படியாயின் அவர்களிடம் விமானமும் இருந்திருக்க வேண்டுமல்லவா ?

இந்தப்பகுதியை ஆய்வு செய்ய பெரு அரசாங்கம் தடை விதித்து விட்டது. . இந்தப் பகுதியை தங்கள் நாட்டு மக்கள் புனிதப் பிரதேசமாகப் பார்ப்பதால் ஆய்வுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக பேரு அரசு கூறினாலும், உண்மையில் மேலை நாட்டவர்கள் ஆய்வு என்று புகுந்து ஆய்வு செய்துவிட்டு , எவ்வளவு விசயங்களை வெளியிட வேண்டுமோ அவ்வளவை மட்டுமே வெளியிட்டு விட்டு , முக்கியமான இரகசியங்களை வெளியிடாமல் திருடிக்கொள்வது வழமை.

உதாரணமாக மாயன்களின் நாகரீகம் , சுமேரிய நாகரிகம் , எகிப்திய , பாபிலோனிய நாகரீகங்கள் , சிந்துவெளி நாகரீகம் , ஆரியர் நாகரிகம் , கிரேக்கர்களின் நாகரீகம் என்று எல்லா நாகரீகங்களையும் ஆராய்ந்து அங்கிருந்து திருடிய இரகசியங்களைக் கொண்டே இன்று இலுமனாட்டிகளால் உலகை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிந்தது.

தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில் கிட்டத்தட்ட இராவணன் வாழ்ந்ததாகக் கருதப்படும் அதே காலப் பகுதிகளில் வாழ்ந்திருந்த மக்களால் உலோகங்களைக்கொண்டு செய்யப்பட்ட விமானத்தின் உருவத்தை ஒத்த உருவங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

விமானம் மட்டுமின்றி விண்வெளி ஓடங்கள் கூட பாவனையில் இருந்தமைக்கான சந்தேகங்களை உண்டுபண்ணுமளவுக்கு ஆதாரங்கள் உலகில் பல்வேறு நாடுகளிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஓவியங்களாக ,சிலைகளாக இன்றைய விவெளி வீர்கள் அணியும் விசேட ஆடைகள் போன்ற ஆடைகளுடன் வடிக்கப்பட்ட மனித உருவங்கள் , இன்றைய விவெளி ஓடங்களை ஒத்த விவெளி ஓடங்களின் கல்வெட்டுக்கள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வுருவங்களை உருவாக்கிய மனிதர்கள் எதற்க்காக அல்லது எதனைப்பார்த்து இந்த மாதிரி உருவங்களை உருவாக்கினார்கள் என்று விஞ்ஞானிகள் குழப்பதில் இருக்கிறார்கள்.

ஆக அன்றைய காலப் பகுதிகளில் வாழ்ந்த மனிதர்கள் விமானங்களையும் , விண் வெளி ஒடங்களையும் உபயோகப் படுத்தியுள்ளனர். அல்லது அவற்றைக் கண்டுள்ளனர் என்ற முடிவுக்கு வரலாம் .

அப்படியாயின் " இராவணனிடம் ஏன் புட்பகவிமானம் இருந்திருக்க முடியாது ?" என்ற கேள்வி எழுகிறதல்லவா ?"இராவணனின் ஆட்சி அந்தக்காலப்பகுதியில் உலகிலேயே தலை சிறந்த நல்லாட்சியாக இருந்தது.
இராவணனிடம் பறக்கும் இயந்திரம் இருந்தபடியால் குன்றுகள் , மலைகள் தோறும் பறந்து சென்று தியானம் , தவம் போன்றவற்றைச் செய்து மிகுதியான நேர்மறைச் சக்திகளைப் பெற்றுக்கொள்வார்.அந்த சக்தியால்தான் அவர் இறை சக்தியை நெருங்க முடிந்தது. அந்த நேர்மறைச் சக்தியால்தான் அதிக சக்தி வாய்ந்தவராக பத்து பேரின் புத்திக்கூர்மையையும் பலத்தையும் தனியொருவராக பெற்று விளங்கினார். 

தனது விமானத்தின் மூலம் தென் அமெரிக்கா வரை பறந்து அந்த காலகட்டத்தில் வாழ்ந்திருந்த மாயன்களோடும் நட்பு கொண்டவராக இருந்தார் . அதனால்தான் சிகிரியாவில் அமைந்துள்ள அவரது கோட்டை மாயன்களின் கட்டுமானத்தை ஒத்ததாக அமைந்திருக்கிறது.

இராவணன் இறக்கவில்லை மாறாக அவர் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார் . தியானம் தவம் என்பவற்றினூடாக ஆயிரக்கணக்கான வருடங்கள் உறக்க நிலையில் இருக்கக்கூடிய சக்தியை இராவணன் பெற்றுள்ளார்.
இன்றைய உலகில் நாம் பயன்படுத்தும் எரிபொருள் சக்தி தீர்ந்து போன பின்னர் இராவணன் பாவித்த ,அதாவது புவியீர்ப்பு விசைக்கு எதிரான சக்தியை உபயோகப்படுத்தி பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். அதற்கான இரகசியங்களை மேலை நாட்டவர்கள் திருடிக்கொண்டு போய்விட்டார்கள்.
இலங்கையில் இராவணின் பல்வேறு குகைகள் கணப்படுகிற்றன . அவற்றில் ஓன்று
ராவண எல்ல குகை . இந்தக்குகை மனிதர்களின் நடமற்றமில்லாத காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ளது. அக்குகையானது உற்பகுதியில் பல பிரிவுகளைக் கொண்டது. அதோடு பலமாடிகளைக் கொண்ட மாளிகையைப்போல அடுக்கடுக்காக அமைந்துள்ளது. இந்தக் குகையினுள் சீதை நீராடுவதற்க்காக என நீர்த் தடாகம் ஒன்றும் இருக்கிறது.
இராவணன் வானில் மற்றுமின்றி பூமிக்கு அடியிலும் பயணம் செய்யக்கூடிய ஆற்றலைக் கொண்டிருந்தார்."
அவர்கள் வரலாறுகளில் மற்றும் புராணங்களில் படித்தவற்றை ஆதாரமாகக் கொண்டு மேற்க்கண்டவாறு கூறுகிறார்கள்.
இவர்களின் கூற்றுக்கள் உண்மைதானா என்று ஆராயவதற்க்காக இலங்கையின் NT தொலைகாட்சி ஒரு குழுவை ஒழுங்கு செய்து அனுப்பியது.இலங்கைத் தொல்பொருள் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, யாழ்ப்பாணத்தில் (இலங்கையின் வடபகுதி ) அமைந்துள்ள அடி முடியற்ற நிலவறை கிணற்றில் சுமார் நாற்பது மீற்றர்கள் ஆழம்வரையில் நன்நீரும் நாற்பது மீற்றர்கள் ஆழதிற்க்குக் கீழ் உவர்ப்பு நீரும் காணப்படுகிறதாம். 

10-20 மீற்றர்களுக்கு இடைப்பட்டப் பகுதியில் மண் கலந்ததெளிவில்லாத நீர் காணப்படுகிறதாம் . இதனால் சூரிய ஒளி உட்புக முடிவதில்லையாம் .
நிலவறை கிணறு என்று யாழ் மக்களால் அழைக்கப்படும் இந்தக் கிணறு போன்று இன்னொரு நிலவறைக்கிணறு யாழ்ப்பாணம்கீரிமலையில் காணப்படுகிறது. இந்த இரண்டு நிலவறைக் கிணறுகளுக்கும் இடையில் சுரங்கவழித் தொடர்பு காணப்படுவதாக முன்னோர்கள் கூறுகிறார்கள்.
சரி இந்தக் கிணறுகள் யாரால் எப்போது அமைக்கப்பட்டவை ?இதற்கு விடை காண்பது அவ்வளவு சிரமான ஒன்றல்ல.
ஏனெனில் கீரிமலையில் அமைந்துள்ள நிலவறைக் கிணற்றுக்கு மிகவும் அருகில்தான் கீரிமலை நகுலேஸ்வரம் சிவாலயம்.


இந்த சிவாலயம் இராவணனால் வழிபாடு செய்யப்பட்டதாக பதிவுகள் காணப்படுகின்றன. ஆனால் யாரால் கட்டப்பட்டது என்று தெளிவாகத் தெரியவில்லை. சிலவேளைகளில் இராவணனால் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆக இந்த நிலவறைக் கிணறுகளும் இராவணனால் அல்லது இராவணனின் காலத்தில் வாழ்ந்த சிவனடியார்களான நாகர்களால் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள்.

மிகப்பாரிய தோற்றதையுடயதாக அமைந்திருந்த இந்தக் கோவிலும் 1620 களில் போர்த்துக் கேசியர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டது. இன்று நாம் காணும் ஆலயமானது 1800 களுக்குபின்னர் நலன் விரும்பிகளால் அமைக்கப்பட்டது.இலங்கையில் இராவணன் காலத்து குகைகள் வடக்குமுதல் தெற்கு வரை பல இருப்பதாகவும் அவை ஒன்றோடு ஓன்று தொடர்புடையவை என்றும், அவற்றில் சில சிதைவடைந்த நிலையில் இருப்பதாகவும் முந்தைய பதிவொன்றில் பதிவிட்டிருந்தேன்.அதனால்தான் இராவணனை ஆகாயத்தில் மட்டுமின்றி பூமிக்கடியிலும் பயணம் செய்யக்கூடியவர் என்று பௌத்த பிக்குகள் கூறுகிறார்கள்.

பண்டாரவளையில் உள்ள மலைக்குன்றிலுள்ள குகையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது . இந்தக்குகையும் இராவணனுடன் தொடர்புடையதா என்று சந்தேகம் எழுகிறது.
பண்டாரவளை அம்பதண்டேகம பிரதேசத்தில் நிலத்துக்கு கீழ் 300 அடி ஆழத்தில் குகை ஒன்று காணப்படுவதாக கட்டிட ஆய்வு நிறுவகத்தின் புவியியல் ஆய்வாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த 15ம் திகதி 40 அடி பள்ளம் ஏற்பட்டிருந்தது.
இது குறித்து ஆய்வு செய்த போது இந்த விடயம் தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்துக்கு கீழே உள்ள குகையின் சுண்ணாம்பு சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் இந்த பள்ளம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து குறித்த பகுதியின் 500 மீற்றர் பிரதேசத்தை பொது மக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்குள்ள 26 குடும்பங்களின் 90 பேர் வேறு இடமொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த இடிபாட்டுக்கும், உமாஓய வேலைத்திட்டத்துக்கும் இடையில் சம்பந்தம் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இராவண மகாராஜாவுக்கும் அதே காலப் பகுதியில் தென் அமெரிக்காவில் வாழ்ந்திருந்த
நாகரீகத்தில் கொடிகட்டிப்பறந்த மாயன் இனத்தவர்களுக்கும் நெருக்கமான உறவுஇருந்ததாகவும் மாயன் இனத்துப் பெண்ணையே (மண்டோதரி ) இராவணன் திருமணம் செய்ததாகவும் பௌத்த பிக்குகள் கூறுகிறார்கள்.
 மாயன் இனத்தவர்கள் அடிக்கடி இலங்காபுரிக்கு வந்து போவதாகவும் அவர்களும் பறக்கும் இயந்திரங்களைப் வைத்திருந்ததாகவும் சிங்கள பிக்குகள் கூறுகிறார்கள். சிகிரியாவிலுள்ள இராவணன் கோட்டையானது மாயன் இனத்தவர்களாலேயே 
வடிவமைக்கப் பட்டதாகவும் கூறுகிறார்கள்.
மாயன் பண்டையத்தமிழர்கள். இது பற்றி சிலப்பதிகாரம் நூல்களில் கூறப்பட்டுள்ளது.முல்லைத்தீவு , குமுழமுனையில் உள்ள குருந்தனூர் மலை இராவணன் உடன் பிறந்த சகோதரர் ஆண்ட இடம் என்பது பல ஆக்கங்கள் கூறுகிறது , அந்த இடம் கொட்டுக்கிணற்று பிள்ளையார் கோவிலுக்கு பின்னால் காட்டில் உள்ளது , அங்கே முருகன் ஆலயம் உள்ளது .சிங்களவர்களின் பார்வையில் இராவணன் .......
சிங்களவர்கள் சொல்கிறார்கள்..... " இராவணன் எங்களது மகாராஜா . வால்மீகி எங்களது மகா ராஜாவைப்பற்றி தவறாக சித்தரித்துவிட்டார். எங்கள் மகராஜாவின் கீர்த்திக்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டார். இது எமக்கு கவலை தருகிறது. இராவணன் ஒரு மகான். அவர் மருத்துவம் , பொறியியல் போன்ற பல துறைகளில் வல்லமை பெற்றவர் ." என்கிறார்கள் .
விருதுகள் பல வென்ற ஆய்வாளர் மற்றும் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் உதயசிறி அவர்கள் ஒரு தொலைகாட்சி நேர்காணளில் ,
" இராவணனைப் பற்றி ஆராய்ந்தால் , கச்சதீவு முதல் முழு இலங்கையிலும் ஆட்சிபுரிந்தமைக்கான வாழ்ந்தமைக்கான சான்றுகள் அங்குலம் அங்குலமாகக் கொட்டிக் கிடக்கின்றன. தவிர அவர் பத்து தேசங்களை ஆட்சி செய்தமை தெரியவருகிறது .

அதில் இலங்கையைத் தவிர ஏனைய அனைத்து தேசங்களும் இந்து சமுத்திரத்தினுள்(இலங்கைக்குத் தேற்கே) மூழ்கிக் கிடக்கின்றன. இலங்கையில் இராவணனால் நிறுவப்பட்ட சிவாலயங்கள் ஆறு .
அவற்றில் ஓன்று (தென் திசையில் அமைக்கப்பட்டது )சமுத்திரத்தில் மூழ்கி இருக்கலாம் . சமுத்திரத்தில் இறங்கி ஆய்வுகள் செய்யும் வல்லமை எம்மிடம் இல்லை .
இராவணன் சூரியனையும் சிவலிங்கத்தையும் வழிபாடு செய்திருந்தார் . அவர் கடுமையான தியானங்கள் , மந்திரங்கள் மூலமாக அதீத சக்தியைப் பெற்றுக்கொண்டார் . இராவணன் தியானம் செய்வதற்க்கான இடங்களாக மலை உச்சிகள் , நீர்வீழ்ச்சிகள் ,குகைகள் போன்ற இடங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது வழக்கம்"
இவ்வாறு கூறினார் .
இவர் கூறியதைக் காணுற்ற சிங்களமக்கள் மேகங்களோடு உரசிக்கொண்டிருக்கும் அந்த மலைத் தொடருக்குப் படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள் .
" எங்கள் மகாராஜா இராவணன் வாழும் மலைக்குச் சென்று ஆசி பெற்று வருவோம் "
என்று ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு சுமார் 4000 அடிகள் செங்குத்தான பாறைகள் கொண்ட அந்த மலை உச்சிகளுக்குச் சென்று வழிபாடு செய்கிறார்கள்.
குறித்த மலையடிவாரத்தில் வாழும் மக்கள் இராவணத் திருவிழாவும் கொண்டாடுகிறார்கள் .
"இந்தக் காலத்திலும் இதையெல்லாம் நம்புகிறீர்களா ?" என்று ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் அந்த மக்களை நோக்கிக் கேட்டார் .
அதற்கு....
" புத்தரை நம்புகிறோம் . இயேசுவை நம்புகிறோம் . நபிகள் நாயகத்தை நம்புகிறோம் . இன்னும் எத்தனையோ பேரை நம்புகிறோம் . போற்றுகிறோம் . வணங்குகிறோம் . அவர்கள் எல்லோரும் எங்கள் தேசத்தோடும் , மண்ணோடும் , மொழியோடும் சம்பந்தமே இல்லாதவர்கள் . ஆனாலும் நம்புகிறோமே ?
அதுபோல இராவணனையும் நம்பிவிட்டுப் போகிறோம் .
இராவணன் உண்மையிலேயே வாழ்ந்தாரோ இல்லையோ அவர் எங்கள் தேசதோடும் ,மண்ணோடும் , மொழியோடும் சம்பந்தப் பட்டவர். அதனால் அவர்தான் எங்கள் ஹீரோ" என்றார் ஒரு சிங்கள இளைஞர்.
அந்த பதில் என்னையும் கொஞ்சம் சிந்திக்கவும் சிலிர்க்கவும் வைத்தது.
ஆனாலும் ஒரு வருத்தம் . அவர்கள் இராவணனைச் சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள். நாம் வழமை போல உறக்கத்தில் இருக்கிறோம் . அல்லது பகுத்தறிவு பேசுகிறோம் .
அவர்கள் கூறுவது உண்மையா என்று தேடியபோது .......
தென் அமெரிக்க மாயன்களின் கட்டிடக் கலை கண்ணில் பட்டது .அதோடு இலங்கையில் காணப்படும் இராவணின் கோட்டையையும், அதன் சிதைவுகளையும், அந்த கட்டிடக்கலையையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது.

(தென் அமெரிக்காவிலும் சூரிய வழிபாடு , ஆண்குறி வழிபாடு , சந்திர வழிபாடுகளைக் காணமுடிகிறது. அத்தோடு பாறைகளுக்கும் , குன்றுகளுக்கும் , மலைகளுக்கும் அவர்களும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இன்றிலிருந்து சுமார் 4500 -5000 ஆண்டுகளுக்கு முன்னர் இராவணன் இலங்காபுரியில் லிங்க வழிபாடு செய்திருந்தார் . அவரால் நடப்பட்டதாகக் கூறப்படும் லிங்கம் ஓன்று இன்றும் திருகோணமலையில் அமைந்துள்ள கோணேஸ்வரம் சிவாலயத்தில் காணப்படுகிறது. அதுபோல வட இந்தியாவில் வந்திறங்கிய இராவணன் அங்கும் சிவலிங்கங்களை நட்டமைக்கான பதிவுகள் காணப்படுகின்றன. 

இராவணன் வாழ்ந்திருந்த அதே காலப்பகுதிகளில் தென் அமெரிக்க நாடுகளில் வாழ்ந்திருந்த மக்கள் சூரிய ,சந்திர, இலிங்க வழிபாடுகளைக் கொண்டிருந்தமைக்கான தடயங்கள் கிடைத்துள்ளன.
இன்றும் லிங்க வழிபாடு தென் அமெரிக்க நாடுகளிலும் மற்றும் ஜப்பான் , தாய்லார்ந்து உட்பட்ட அனைத்துக் கிழக்காசிய நாடுகளிலும் உள்ளது .
(வடநாட்டவர்கள் லிங்க வழிபாட்டை கொஞ்சம் அதிகப்படுத்தி கொச்சைப்படுத்தி ,கேவலப்படுத்திவிட்டார்கள் என்பது வேறு விடயம் )
சிவலிங்கம் என்பது ஆண் பெண் பிறப்புறுப்புக்களைக் கொண்ட ஒரு அமைப்பு என்பதால் சிலர் விமர்சனம் செய்கிறார்கள். மதங்களைக் கடந்து தத்துவார்த்தமாக சிந்தித்துப் பார்த்தால் ,
நம் முன்னோர்கள் உயிரை உருவாக்கும் வல்லமை கொண்ட ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புக்களை போற்றி மரியாதை செய்திருக்கிறார்கள். அந்த உயிர்கள் வாழ மூலமாக சூரியன் விளங்குவதால் சூரியனையும் போற்றி மரியாதை செய்திருக்கிறார்கள் .
நம் முன்னோர்கள் செய்த வழிபாடு என்பது முழுக்க முழுக்க இயற்கை வழிபாடு .இயற்கையின் சக்தியை வழிபட்டுள்ளனர்.
அவற்றையெல்லாம் இன்று நாம் தவறுதலாக இறை வழிபாடாக மாற்றிவிட்டோம் .
அதாவது இறைவன் இருக்கிறாரா இல்லையா என்கிற விஷயத்தை நான் தேடவில்லை . அதாவது இறைவன் என்று நாம் எதை அல்லது எந்த சக்தியைச் சொல்கிறோம் என்றுதான் தேடுகிறேன் .
உண்மையில் இந்த பிரபஞ்சம் ஒரு சக்தி மட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. சூரியன் எவ்வாறு சக்தியை வெளியிடுகிறதோ அவ்வாறே ஒவ்வொரு அணுக்களும் சக்தியை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது . அணுவைப்பற்றியும் அதன் அமைப்பைப் பற்றியும் அதன் இயக்கம் பற்றியும் அணுவின் சக்தி மட்டங்கள் பற்றியும் நாமெல்லாம் அறிந்துள்ளோம் .
மனித உடலும் கோடிக்கணக்கான அணுக்களால் ஆனது . ஆகவே மனித உடலும் சக்தியை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது.
இந்த பிரபஞ்ச சக்தியோடு எவ்வாறு மனித சக்தியை சரியாக இணைத்துக் கொள்வது என்பதை நாம் அறிந்து கொண்டால் நாமும் இறை சக்தியைப் பெற்றவர்களாகிவிடுவோம் .
நாம் நினைப்பதுபோல இறைவன் என்றொருவன் வேறாக இல்லை.
அந்த சூட்சுமத்தை அறிந்தவர்கள்தான் சித்தர்கள் மற்றும் ஆதிகால மனிதர்கள் (இராவணனும் அவர்களில் ஒருவர்).
அவர்கள்தான் பிரமிடுகளையும் இன்றைய மனிதர்களாலும் , அறிவியலாலும் உருவாக்கப்பட முடியாத பலவற்றையும் உருவாக்கினார்கள்.
இன்றைய அறிவியல் தோன்றுவதற்க்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிரகங்கள் , கோள்கள் , அவற்றின் சுழற்சி பற்றியெல்லாம் அறிந்திருந்தார்கள்.
எந்த திகதியில் அம்மாவசை வரும் , பௌர்ணமி வரும் என்றெல்லாம் அன்றே பஞ்சாங்கம் எழுதி வைத்திருந்தார்கள்.
பிரபஞ்ச சக்தியோடு நமது சக்தியை இணைத்துக்கொள்ள வேண்டிய தேவை என்ன ?
புரியும்படியாக சொல்வதென்றால் , நாம் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு வண்டியில் பயணம் செய்கிறோம் . அமர்ந்திருந்தாலும் சரி , இறங்கினாலும் சரி அது இயங்கிக்கொண்டிருக்கும் திசையிலேயே நாமும் இயங்கினால் நாம் அடைய நினைக்கும் பலனைப் பெறுவோம் .

மாறாக அதற்கு எதிரான திசையில் இயங்கினால் நாம் விரும்பத் தகாத பலனை அடைவோம் .அதுபோலத்தான் எமது ஆன்மாவால் பிறப்பிக்கப்படும் சக்தியை பிரபஞ்சத்தால் பிறப்பிக்கப்படும் சக்தியோடு இணைத்துக்கொண்டால் நாம் பலனடைவோம்.
அதை அறியாத காரணத்தால்தான் இன்று மனிதர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள்.இன்றைய அறிவியல் ஒப்புக்கொள்ளத் தொடங்கியுள்ளது.
உலகில் தோன்றிய எல்லா மதக் கோட்பாடுகளும் இந்த பிரபஞ்ச சக்தியை அடிப்படையாக வைத்ததும் , இந்த பிரபஞ்ச சக்தியோடு நம் சக்தியை எவ்வாறு இணைத்துக்கொள்வது என்பதை நோக்காக வைத்துமே வழிமுறைகளை உருவாக்கியுள்ளன.
அந்த வழிமுறைகள் வெவ்வேறு மாதிரியாக அமைந்துள்ள போதும் எல்லாமே சரியானவை .
பின் தோன்றிய நாம் பிழை பிழையாக மொழிபெர்யர்த்து , வெவ்வேறு காரணங்களைக் கற்பித்து இன்றைய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகிவிட்டோம் .
இவற்றையெல்லாம் நம்மவர்கள் சொன்னபோது நான் நம்பியிருக்கவில்லை .
இன்று மேலை நாட்டவர்கள் புரியும்படியாகத் தெளிவாகச் சொல்கிறார்கள்.
நம்பாமல் இருக்க முடியவில்லை.ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தமிழின் பெருமை கூறும் தஞ்சை பெருவுடையார் கோவில்! 

தமிழை சிறப்பித்த மாமன்னன் இராசராசசோழன் !
"தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமானமும்
தமிழ் பேரரசர் இராஜராஜ சோழனின் தமிழ்பற்றும் ".....
கோவில் கோபுர உயரம் 216 அடி...
தமிழில் உயிர்மெய் எழுத்துக்கள் 216...
சிவலிங்க உயரம் 12 அடி...
தமிழில் உயிர் எழுத்துக்கள் 12..
சிவலிங்க பீடம் 18 அடி....
தமிழில் மெய் எழுத்துக்கள் 18......
சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் இடையே உள்ள தூரம் 247 அடி....
தமிழில் மொத்த எழுத்துக்கள் 247....
கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட அளவைகள் சிந்து சமவெளி நாகரீகத்தை ஒத்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. (wikipedia)
The temple was built using a measure of 1 3/8-inch called an angula (24 units equalling 33 inches called a hasta, muzam, or kishku). This is the same measure found in ancient Lothal and other sites in the Indus Valley dating back 4000 – 6000 years

இப்படி பல வழிகளில் நம் முன்னோர்கள் தமிழின் பெருமையை வளர்த்தார்கள் என்பது நமக்கு பெருமையே . இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தமிழின் பெருமையை இக்கோவில் பறைசாற்றும்.
சரி எவ்வாறு எமது ஆன்மா வெளிபடுத்தும் சக்தியை பிரபஞ்ச சக்தியோடு இணைத்துக்கொண்டு சந்தோசமாக வாழ்வது ?
இது பற்றி மேலை நாட்டு அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் ?
 உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு.

தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர்.


தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த ஆதிச்ச நல்லூர்… ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா?

..ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு[?]. கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது. தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

இந்தோனேசியா "பாலி"தீவில் "ஆயுங்" எனும் ஆற்றின் நடுவே உள்ள

குகைகளில் செதுக்கப்பட்ட"இராமாயணம்" பற்றிய காட்சிகள்

இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான். 1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது. பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்.

இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும். 1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.

இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா?

அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான். "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் .

பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும். மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

 மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது. 1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.


மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான். அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார்.

 எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 

பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங். ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.

ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார். ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன.

ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு. ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால். "எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்" எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான்.

இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை. இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது.







பறையர் சத்திரியரா?

சிலர், பறையர்கள் என்றாலே அவர்கள் சூத்திரர் என்று கண்ணையும், காதையும் , கட்டிக்கொண்டு பாடிய பாட்டையே பாடுகின்றனர். பறையர்கள் அரசராகவும் இருந்திருக்கின்றனர். அடிமையாகவும் இருந்திருக்கின்றனர். ஆதிக்க வெறி கொண்ட போலி வரலாற்று ஆசிரியர்கள், பறையர் தாழ்ந்தபட்டவர்கள் என்று சொல்லி வருகிறார்கள், ஆம், அனைவருக்கும் நல்லது செய்த பறையர் கீழ் சாதி என்றும் , திருடர்கள் , பிற உயிரை கொல்பவர்கள், ஏமாற்றுபவர்கள் போன்றோர்கள் இன்று மேல்சாதி என்று கூறி அலைகிறார்கள் .

 சிலப்பதிகாரம் தோன்றிய காலகட்டத்தில் சேரர் , சாக்கியர் என்பதை ஆதிக்க வெறி வரலாற்று ஆசிரியர்கள் ஏன் ? கூற தயங்குகிறார்கள் , கூறினால் பொறையர் என்பது பறையர் என மருவிய உண்மை தெரிந்துவிடும் அல்லவா!. பொறையர் என்றால் பொறுமையானவர்கள் என்று பொருள். அத்தகைய பொறுமை பறையர்களிடம் மிக அதிகமாகவே காணப்படுகிறது.

அதேபோல வீரமும் மிக அதிகமாக காணப்படுவது பறையர்களிடம் மட்டும்தான். சத்திரியர்களுக்கெல்லாம் சத்திரியர் பறையர் : வீரம் என்றால் என்னவென்றே தெரியாத மடையர்கள், * பிற மனிதனை கொல்வது, வீரம் * பிற மனிதர்களிடம் பொருள் பறிப்பது, வீரம் * ஐந்தாறு மனைவிகள் வைத்திருப்பது, வீரம் * கலவரங்களில் ஈடுபடுவது, வீரம் * ஆதரவுஅற்றவனை அடிப்பது, வீரம் என்கிறார்கள். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் வீரர்கள் அல்ல மனிதரிலும் கேடுகெட்ட மடையர்கள், சொல்லபோனால் அரக்கர்கள் .

உண்மையான வீரம் என்பது பிறரை துன்புறுத்தாமல் தன் உடல் மற்றும் மன திட்பத்தை வெளிப்படுத்துவதாகும். தன் மக்கள் நலத்திற்காக, அஞ்சாமல் தன் உயிரையும் கொடுக்க துணிபவனே வீரன். அவனே உண்மையான சத்திரியன் . பிற மனிதனை கொல்வது: பிற மனிதனை மனிதநேயமின்றி கொல்வது வீரமல்ல, அது கொலை.

எந்த ஒரு காரணமும் கேட்காமல் தன் நாட்டு அரசர் யாரை கொல்ல சொல்கிறாரோ அவர்களை கொன்று , கொலையுண்டவரின் குடும்பத்தை அனாதையாக்கி தவிக்கவிடும், ஈவு இரக்கமற்ற கொலையாளியை சத்திரியன் என்று கூற முடியாது. பிற மனிதர்களிடம் பொருள் பறிப்பது: வழிமறித்து பிறரின் பசுக்களையும், உடமைகளையும் பறிப்பவர்கள் சத்திரியர் அல்ல, அவர்கள் திருடர்கள்.

அது போன்று ஐந்தாறு மனைவிகள் வைத்திருப்பது, கலவரங்களில் ஈடுபடுவது, இத்தகைய ஈன செயலில் ஈடுபடுபவர்கள் கொடும் அரக்கர்கள் ஆவார்கள். சத்திரியருக்கான அனைத்து பண்புகளும் பறையரிடம் மட்டுமே உள்ளது. அவற்றை கீழே காண்போம். நாட்டை ஆள்பவன் அரையன் நாட்டை காப்பவன் பரையன் என்ற பழமொழிக்கேற்ப கடவுளை போன்று பறையர்கள் நாட்டையும், ஊரையும் பாதுகாத்து வந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டொன்று ஊரைப்பாதுகாக்கும் பணியில் பறையர் ஒருவர் நியமிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது. ஆதனமழகியான் என்பவருக்கு காரையூர்ப் பறையன் என்றுபட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை ஊரார் வழங்கியுள்ளனர். என்ற செய்தி வாயிலாக நாம் அறியலாம். இன்னும் பாண்டியமன்னனின் மெய்க்காப்பாளராகப் பறையர் ஒருவர் பணியாற்றியமையை அரையன் அணுக்க கூவன் பறையனேன் என்ற கல்வெட்டு வரிஉணர்த்துகிறது.

(தெ.இ.க. 14; க.எ. 56). . பறையர்கள் யாருக்கும் துன்பம் தராமல் நன்மை செய்து வாழ்ந்திருக்கிறார்கள். முன்னர் மழை நீரை கண்மாயில் சேமித்து தேவையானபோது கண்மாய் மடையை திறந்து வரும் நீரை பயன்படுத்தி விவசாயம் செய்வார்கள். இப்படி திறக்கும்போது சில தடவைகளில் பாம்பு தண்ணீர் வரும் பகுதியை அடைத்துகொள்ளும் இத்தகைய சமயங்களில் யாராவது ஒருவர் தண்ணீருக்குள் போய் அடைத்துகொண்டிருக்கும் பாம்பை தேடி தண்ணீருக்குள் வெட்டி கொல்ல வேண்டும்.

இத்தகைய உயிருக்கு அஞ்சாத வீர செயலை எந்த ஆண்ட பரம்பரையாவது அல்லது நாங்கள் சத்திரியர் என கூவி திரிபவர்கள் செய்திருக்கிறார்களா ? இப்படி உயிருக்கு பயந்தவர்களை எப்படி சத்திரியன் என்று அழைக்கலாம், பொட்டைகள் என்றுதானே அழைக்க வேண்டும். ஆனால் பறையர் தண்ணீருக்குள் போய் அடைத்துகொண்டிருக்கும் பாம்பை தேடி தண்ணீருக்குள் வெட்டி மடை திறந்து அனைவரையும் மகிழ செய்தனர்.

இத்தகைய யாரும் செய்ய அஞ்சும் செயல்களையே பறையர் அஞ்சாமல் செய்தனர். அதனாலேயே யாரும் செய்ய அஞ்சும் செயல்களை யாரேனும் செய்தால் அவர்களுக்கு "பறையன்" என்கிற பட்டம் கொடுக்கபட்டிருக்கிறது. அதனை கீழ்காணும் செய்தி உணர்த்துகிறது. விக்கிரம சோழன் காலத்தில் 1292ல் ஒருவன் தீபங்கொடுத்தான். "வெள்ளாளன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக்காமுண்டன்" என்பவன் குறிக்கப்பெறுகிறான்.

இவன் செய்த வீர செயலுக்கு பறையன் என்கிற பட்டம் கொடுத்திருக்கிறார்கள். எத்தகைய வீர செயலாய் இருந்தாலும், அச்செயலால் பிறருக்கு துன்பம் ஏற்படும் என தெரிந்தால், அச்செயலை பறையர்கள் செய்ய மாட்டார்கள். இவ்வாறு அனைவர்மேலும் அன்பு கொண்டவர்களாகவும், ஆழ்ந்த பொறுமை உடையவர்களாகவும், பறையர் இருந்திருக்கின்றனர்.தன் மக்கள் நலத்திற்காக, அஞ்சாமல் தன் உயிரையும் கொடுக்க துணிபவனே வீரன். அவனே உண்மையான சத்திரியன் .எனவே பறையர் சத்திரியரே.

தந்தை பெரியார்


பண்டைய இந்துக் கலாச்சாரம்
------------------------------------------------
கணவன் பாண்டுவை மணம் செய்து கொள்வதற்கும் முன்பே குந்தி தேவியைப் புணர்ந்து குழந்தை பெற்ற கடவுள் சூரிய பகவான்.
கணவன் பாண்டு ரோகத்தின் காரணமாகவும், போகத்தின் காரணமாகவும் இறந்த பின் எம தர்மன், வாயு பகவான், இந்திரன் ஆகியோர் கணவனற்ற குந்தியை வனத்தில் புணர்ந்து குழந்தை பெற்றனர்.

கணவனை இழந்த மாதுரியை வனத்தில் புணர்ந்து குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் அஸ்வினி குமாரர்கள்.
கணவன் பாண்டுவை மணம் செய்து கொள்வதற்கு முன்பு பிறந்த கர்ணன் குந்தியின் புதல்வன்.
கணவன் பாண்டுவை மணம் செய்து, அவன் இறந்ததற்குப் பின்பு மற்றவர்களைப் புணர்ந்து பாண்டுவின் இரு மனைவியர்களான குந்தியும், மாதுரியும் பெற்ற புதல்வகள் பாண்டு குமாரர்கள் என அழைக்கப்பட்டனர். அவர்கள்தான் பாண்டவர்கள்.
அவர்கள் திருமணத்தின் காரணமாகப் பிரிந்து விடக்கூடாது என ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவே குந்தி, துருபதன் மகள் பாஞ்சாலியை ஐவருக்கும் பத்தினியாக்குகிறாள். ஐவரும் பாஞ்சாலியை முறை வைத்துப் புணர்ந்து வாழ்ந்து வந்தனர்.
அதனால்தான் பிறருக்குப் பிறந்த பாண்டவர்களுக்குச் சொத்தின் ஒரு துண்டைக்கூட அதாவது ஐவருக்கும் ஐந்து வீடுகள் கூட வசிப்பதற்குத் தரத் தயாராக இல்லாத இறுதி நிலைமையில் குருச்சேத்திர யுத்தம் நடந்தது.

அர்ச்சுனன் பாஞ்சாலி தவிர்த்துப் பலரோடும் புணர்வாழ்க்கை வாழ்ந்து வந்தான். பீமனும் அதுபோலவே இடும்பி போன்ற பழங்குடிச் சமூகத்தின் பெண்ணோடு உறவு வைத்து வாழ்ந்து வந்தான். இவ்வாறு பிறந்த பிள்ளைகளின் உறவினர்கள் பின்னர் குருச்சேத்திர யுத்தத்த்தில் பாண்டவர்களின் அணியில் இருந்து சொத்து மீட்புப் போராட்டத்தில் போரிட்டு மடிந்தனர்.
-ஸ்ரீலஸ்ரீரசானந்தர்

இலங்கை


அக்காலத்தில் இலங்கையில் வாழ்ந்த மக்கள் தென்னிந்தியாவில் வாழ்ந்த திராவிட மொழி பேசிய மக்களின் இனத்தவரே என்னும் கருத்தைச் சில ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.[17] வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் பரவி வாழ்ந்த இடைக் கற்கால மக்களின் வழித் தோன்றல்களே இன்றைய இலங்கைத் தமிழரும், சிங்களவரும் என்பதும், தமிழ் பேசுவோரோ அல்லது பிராகிருத மொழி பேசுவோரோ பெருமளவில் இலங்கையில் குடியேறி அங்கிருந்த மக்களை அகற்றவில்லை என்பதும் இந்திரபாலாவின் கருத்து.[18] கிறித்தவ ஆண்டுக்கணக்கின் தொடக்கத்தை அண்டிய காலப் பகுதியில், தமிழ்நாடு, கேரளம், ஆந்திர, கர்நாடக மாநிலங்களின் தெற்குப் பகுதிகள், இலங்கை என்பன ஒரே பண்பாட்டு வலயமாக இருந்தன என்றும், தமிழும், பிராகிருதமும் மக்களின் இடப் பெயர்வினால் அன்றிப் பண்பாட்டுப் பரவலினாலேயே இலங்கைக்கு வந்தன என்றும் அவர் கூறுகிறார்.[19]

வரலாற்றுக் காலம்
வடக்கே பூநகரியில் இருந்து தெற்கே திசமகாராமை வரை எழுத்துக்களோடு கூடிய மட்பாண்டத் துண்டுகள் பல கிடைத்துள்ளன. இவற்றுள் குடிப்பெயரான வேள என்பதும் காணப்படுகின்றது. இது பண்டைத் தமிழ் நாட்டில் இருந்த வேளிர் குடியைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. பண்டைத் தலைநகரமான அனுராதபுரத்திலும், இலங்கையின் பிற பகுதிகளிலும், கிமு 2 ஆம் நூற்றாண்டில் இருந்தே தம்மை தமேலா அல்லது தமேதா (பிராகிருத மொழியில்) என அழைத்துக்கொண்டவர்கள் (தமிழர்) வாழ்ந்ததற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. 

இவ்வாறான ஐந்து கல்வெட்டுக்களில் இரண்டு வவுனியா மாவட்டத்தில் உள்ள பெரிய புளியங்குளத்திலும், ஒன்று திருகோணமலை மாவட்டத்தில்உள்ள சேருவிலையிலும், ஒன்று அம்பாறை மாவட்டத்தில் குடுவில் என்னும் இடத்திலும், இன்னொன்று பண்டைய தலைநகரமான அனுராதபுரத்திலும் கண்டெடுக்கப்பட்டவை. 

இலங்கையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள திசமகாராமையில் நடந்த அகழ்வாய்வுகளின்போது கிமு 2 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில் வெளியிடப்பட்ட உள்ளூர் நாணயங்கள் கிடைத்தன. இவற்றில் சிலவற்றில் தமிழர் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. 

இது அக்காலத்தில் இலங்கைத் தீவின் தெற்குக் கரையோரத்தில் தமிழ் வணிகர்கள் முனைப்பான வணிகத்தில் ஈடுபட்டிருந்தமைக்கான சான்றாகக் கருதப்படுகிறது. விசாகா என்னும் தமிழ் வணிகனின் பெயரும், உள்ளூரில் வாழ்ந்த சமன என்னும் தமிழன் ஒருவனின் பெயரும், கரவா என்னும் தமிழ் மாலுமிஒருவனின் பெயரும் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. 

கிமு இரண்டாம் நூற்றாண்டில் தமிழர் தோணிகளில் இலங்கைக்குக் குதிரைகளைக் கொண்டு வருவது குறித்த இலக்கியச் சான்றுகள் உள்ளன. பெரும்பாலும், இக்குதிரைகள் குதிரைமலை என இன்று அழைக்கப்படும் இடத்தில் இறக்கப்பட்டிருக்கலாம். வரலாற்றுப் பதிவுகளின்படி, கிமு இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே தமிழ் நாட்டில் இருந்த தமிழ் இராச்சியங்கள் இலங்கை விடயங்களில் நெருக்கமான ஈடுபாடு கொண்டிருந்தமை தெரிய வருகின்றது. 

கிறித்துவுக்கு முந்திய சில நூற்றாண்டுகள் இலங்கையின் வட பகுதியில் இருந்த குதிரைமலை, கந்தரோடை, வல்லிபுரம் ஆகிய நகரங்களுக்கும், தமிழ் நாட்டு நகரங்களுக்கும் இடையே தமிழ் வணிகர்கள் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். இவ்விடங்களில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலமும், தமிழ்க் காப்பியமான மணிமேகலையில் குறிப்பிடப்பட்டு இருப்பதில் இருந்தும், யாழ்ப்பாணக் குடாநாடு, முத்து, சங்கு போன்ற கடல்படு பொருட்களுக்கான பன்னாட்டுச் சந்தையாக இருந்ததும், தமிழ் வணிகர்கள் இங்கே வணிகத்தில் ஈடுபட்டிருந்ததும் தெரியவருகிறது.

சிங்களவர்களின் வரலாறு கூறும் நூலான மகாவம்சம், கிமு இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே பல தமிழர்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆண்டமை குறித்த தகவல்கள் காணப்படுகின்றன. சேன, குத்தக என்னும் இரு தமிழர்கள் கிமு 177 தொடக்கம் கிமு 155 வரை 22 ஆண்டுகால ஆட்சி புரிந்துள்ளனர். 

சோழநாட்டைச் சேர்ந்த எல்லாளன் என்பவன் கிமு 145 காலப்பகுதியில் இலங்கையைக் கைப்பற்றி 44 ஆண்டுக்காலம் சிறந்த முறையில் ஆட்சி செய்துள்ளான். பின்னர் கிமு 104ல் ஏழு தமிழர்கள் அநுராதபுரத்தைக் கைப்பற்றி 14 ஆண்டுகளுக்கும் மேலாக கிமு 87 வரை இலங்கையை ஆட்சி செய்துள்ளனர். கிமு 47ஐ அண்டிய காலத்திலும் இரண்டு தமிழர்கள் ஏறத்தாள இரண்டு ஆண்டுகாலம் இலங்கையை ஆண்டுள்ளனர். 

இவற்றை விட, கிபி முதலாம் நூற்றாண்டுன் பின்னர், சிங்கள அரச குடும்பங்களில் ஏற்பட்ட வாரிசுப் போட்டிகள் காரணமாக அரசிழந்தவர்கள் தமிழ் நாட்டில் இருந்து படை திரட்டி வந்து ஆட்சியைப் பிடித்தமை பற்றிய குறிப்புக்களும் உண்டு.மிகு தொன்மைக் காலத்திலிருந்தே இலங்கையில் தமிழர் வாழ்ந்ததற்கானசான்றுகள். அங்கு சைவமே தழைத்தோங்கி நின்றது. 

இதை மெய்பிக்கும் வகையில் தொன்மங்களில் குறித் இராவணன். தமிழ் மன்னனாகவே கருதப் படுகிறான். இன்றளவும் அவன் புகழை மக்கள் விரும்பியே உள்ளனர். குமரி கடற் கோளுக்கு முன்பு இலங்கை குமரியொடு இணைந்ததாகவே இருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன.இலங்கைத் தமிழரை நம்மினின்று பிரித்தல் இயலாது.


ஆடிப்பிறப்பு

ஆடிப்பிறப்பு என்பது தமிழ் இந்துக்கள் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு தினமாகும்.ஆடிப்பிறப்பு என்றவுடன் ஞாபகத்திற்க்கு வருவது ஆடிக்கூழும்,நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பாடலும் தான்..

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்பச்சை அரிசி இடித்துத் தள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் மணக்க மணக வாயூறிடுமே
குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை ஆடிப் பாடிப்பும் படைப்போமே
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக் கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
-நவாலியூர் சோமசுந்தரப் புலவர்-

ஈழத்தமிழர் போராட்டங்கள்!!

1948-02-04 இலங்கை  குடியுரிமைச்சட்டம்,பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்றது.தமிழ்நாட்டு மக்கள் குடியுரிமை இழந்தது.

1949 தமிழ்நாட்டு மக்கள் வாக்குரிமை இழந்தது.1956 தனிச் சிங்களச் சட்டம்.முழு தமிழர்களும் சட்டரீதியான பங்கை இழந்தது.எதிர்த்துப் போரடினர்.1948-1956 வரை ஐக்கிய தேசியக்கட்சி டி எஸ் சென நாயக்கா ஆட்சி.

1956 எஸ் டபிழ்யூ பண்டார நாயக்கா ஆட்ச்சி.1957 செல்வா உடன்படிக்கையும் அது கிழித்தெறிப்பட்டதும்.

1958 தனிச்சிங்களத்தை எதிர்த்த மக்கள் தாக்கப்பட்டனர்.1959-09-26 பண்டார நாயக்கா சிங்களவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1960 இல் சிறீமா ஆட்சி.1961 சா ஜே வே செல்வநாயம் சட்ட மறுப்பு ஒத்துளைமையாமை இயக்கம்,தமிழர் மண்ணில் சிங்கள ராணுவம்.

1965 நான்காம்  டட்லி செல்வா உடன்படிக்கை.டட்லி சென நாயக்கா யு என்பி ஆட்சி.1970 இல் சிறீமா ஆட்சி.மாணவர் தரப்படுத்தல் திட்டம்.தமிழ் மக்கள் பேரவை இயக்கம் ஆரம்பம்.1971 ஜெவிபி  சிங்கள அமைப்பு ஆரம்பம்.1972 புதிய முதலாம் யாப்பு  சிங்களவர்களால் அமுல்.

1973 தமிழர் பல்கலைக்கழகம் செல்ல கூடுதல் புள்ளிகள் தேவை என சிங்களம் கூறியது.1974 மாவட்ட ரீதியாக தமிழர் தரப்படுத்தல் செய்தது சிங்களம்.யாழ் உரும்பராய் தோழர் பொன் சிவகுமார் (மக்கள் பேரவை இயக்கம்)சயனட் அருந்தி வீரச்சாவு.

1974-10-03 அனைத்துலக தமிழராச்சி மகாநாடு யாழ் மாவட்டதில் நடைபெற்றது.1976 தமிழர் விடுதலைக்கூட்டனி தமிழீழமே தீர்ப்பு என முடிவு.வட்டுக்கோட்டை மாகாநாடும் தீர்மானமும்.

1977 ஜே ஆர் ஜெயவர்த்தனா ஆட்சி.தமிழர் கூட்டனி எதிர்க்கட்சியானது,இனக்கலவரம்.1978 இரண்டாவது யாப்பு.1979 தமிழருக்கு எதிரான பயங்கரவாதச் சட்டம் அமுல்.தமிழீழ விடுதலை இயக்கம் ஆரம்பம்.1979 தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பம்.1980 தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆரம்பம்,ஈழமக்கள் புரச்சிகர முன்னனி இயக்கம் ஆரம்பம்.1882 ஆயுதப் பயிற்சி ஆரம்பம்.

1981 ஆம்ஆண்டு இனக்கலவரம்.1983 கொழும்பில் யூலைக்கலவரம்.1984 தமிழ் தாயக பகுதி எங்கும் (மலக்கழிவு பீப்பா)குண்டு வீச்சு.

1985 திம்பு பேச்சு வார்த்தை.1987-05-26 ஒப்பறேசன் லிபறேசன் இராணுவ நடவடிக்கை,இலங்கை இந்திய உடன்படிக்கை,போராளிகள் தடை செய்வதாக சிறீமா பிரகடனம்.இந்திய இராணுவம் வருகை.

1988–1990 இந்திய வம்சாவழி அண்னாமலை வரதராஜப்பெருமாள்        வடக்கு கிழக்கு மாகாணசபை ஆட்சி.தமிழர் பலர் இந்திய இராணுவத்தால் கற்பளிப்பு,படுகொலைகள் செய்யப்பட்டது.


முசிறிபட்டணம் (இன்றைய கேரளா) 

மத அடையாளங்கள் இல்லாத பண்டைய தமிழக துறைமுக நகரம்...!
முசிறிப்பட்டணத்தில் வாழ்ந்தவர்கள் சிறந்த மனிதர்களாக இருந்திருக்ககூடும். ஏனெனில் நாங்கள் அங்கு கண்டெடுத்த பொருட்களில் ஒன்றில் கூட மத அடையாளங்கள் இல்லை.
உலகின் எந்த இடத்திலும், தொல்லியல் சார்ந்த ஆய்வு நடந்தாலும், அங்கு, தமிழகம் சார்ந்த அடையாளங்களை காண முடியும்.
தமிழகத்தில் அகழ்வாய்வு நடக்கும் கீழடி மற்றும் அழகன்குளம் போன்ற இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களுக்கும், முசிறிபட்டணத்தில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களுக்கும் ஒற்றுமை இருப்பதை உறுதி செய்யமுடிந்தது என்கிறார் 'பாமா' நிறுவன இயக்குனரும், தொல்லியல் ஆய்வாளருமான பி.ஜெ. செரியன்
சென்னை, தமிழ் இணைய கல்விக் கழகத்தில் (Tamil Virtual Academy), தொல்லியல் துறை சார்பிலான, மாதாந்திர கருத்தரங்கம் நேற்று (30-10-2018) நடந்தது. இதை, தமிழக தொல்லியல் துறை ஆணையர், உதயசந்திரன் துவங்கி வைத்தார்.
"தமிழகத்தின் பண்டைய துறைமுக நகரமான முசிறி பட்டணம் ஒரு மீள் பார்வை ["Re-Imagining Muciri-Pattinam/Muziris: The Ancient Port City of Tamilakam (300 BCE-500 CE)"]" என்ற தலைப்பில், கேரள தொல்லியல் துறை முனைவரும், "பாமா [http://www.pama.org.in/]" நிறுவன இயக்குனருமான, செரியன், "கேரள பட்டணம் என்ற இடத்தில் நடத்திய அகழாய்வில், செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியுடன் இருந்த, கடல் கடந்த தொடர்புக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அவை, முசிறி பட்டணமாக இருக்கலாம். இது, சீன, அரேபிய தொடர்புடைய மிகப்பெரிய வணிக மையமாக இருந்துள்ளது.முசிறி பட்டணத்தில், சுட்ட செங்கற்களாலான கட்டடங்கள், 'ரூலட்டட்' என்ற துண்டுகள், 'ஆம்போரா' ஜாடி துண்டுகள், ரோமானிய சிவப்பு வகை ஓடுகள், உயர்வகை கற்களாலான மணிகள் இருந்தன. இது, ஒரு நகரத்துக்கான சான்றுகள்.முசிறி துறைமுகம் வீடுகளும், ரோமானிய முறையில் கட்டப்பட்டு உள்ளன. இவற்றை, 2,000 ஆண்டுகளுக்கு முன் கட்டி உள்ளனர்.துறைமுக வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் திறன், முசிறி பட்டணத்திற்கு இருந்துள்ளது. உலகின் எந்த இடத்தில் தொல்லியல் சார்ந்த ஆய்வு நடந்தாலும், தமிழகம் சார்ந்த அடையாளங்களை காண முடியும்" என்றார்.
2,000 ஆண்டுகளுக்கு முந்திய பானைக் கழிவறைகள் கண்டுபிடிப்பு (கழிவுபானைகள்)
கேரளாவின் கடலோர நகரமான முசிறி பட்டணம் பகுதியில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் மத்தியில், தனிநபர் கழிவறைகள் பயன்பாட்டில் இருந்தன என்று தெரியவந்துள்ளது.
மனித இனம் பரிணாம வளர்ச்சி பெற்றுவந்த ஒவ்வொரு காலத்திலும் குறிப்பிட்ட அளவு தொழில்நுட்ப அறிவு உயர்ந்துகொண்டே வந்துள்ளது. கற்காலம் தொடங்கி இன்று வரை மனிதர்கள் பயன்படுத்திய பொருட்களை ஆய்வு செய்தால், அவர்கள் வாழ்ந்த காலத்தைப் பற்றி கணிக்கமுடியும். இந்த அடிப்படையில், கேரளாவில் உள்ள முசிறி அல்லது முசிறிப்பட்டினம் என்ற பகுதியில் ஆய்வு செய்த தொல்லியல்துறை நிபுணர்கள், 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் கழிவறைகள் கட்டி, பயன்படுத்தியுள்ளனர்.
''ஆறு பானைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, கடைசியாக வைக்கப்பட்ட பானை கூம்பு வடிவில் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்தது. இந்த கழிவறை வெஸ்டர்ன் டாய்லெட் என்று அறியப்படும் கழிவறையை ஒத்திருந்தது. இதே அமைப்பில் ஆறு கழிவறைகளை இதே இடத்தில் கண்டறிந்தோம்,''என்று விளக்கினார் செரியன்.
2006 முதல் 2016 வரை முசிறிபட்டணம் பகுதியில் "பாமா" நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. பட்டணம் துறைமுகத்திற்கு வந்து சென்ற வணிகர்கள் அரேபியா, சீனா, ஓமான், ஸ்பெயின், எகிப்து போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதால், அந்த நாடுகளைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர்களையும் இந்த ஆய்வில் பாமா ஈடுபடுத்தியுள்ளது.
2011-இல் முசிறி பாரம்பரியத் திட்டம் (Muziris Heritage Project) என்னும் திட்டத்தின் கீழ் கேரள வரலாற்று ஆய்வுக்கழகம் வரலாற்று (Kerala Council of Historical Research [KCHR]) ஆய்வினைத்தொடங்கியது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ரோம் பல்கலைக்கழகம், பர்ஹாம் பல்கலைக்கழகம், பிரிட்டிஷ் அருங்காட்சியகம் போன்ற அயல் நாட்டு அமைப்புகளும் மற்றும் இந்தியத்தொல்லியல் ஆய்வுக்கழகமும் (Archaeological Society of India [ASI]) இவ்வாய்வில் பங்குபெற்றன.
"முசிறிபட்டணத்தில் பகுதியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன. அதில் குறிப்பிடத்தக்க அளவு பானை ஓடுகள் கிடைத்தன. வீடுகளில் கூரை அமைக்க பயன்படுத்தப்பட்ட ஓடுகள் கிடைத்தன. சுமார் ஏழுரை கிலோ மிளகும் கிடைத்தது", என்றார் திரு. செரியன்.
"கடல் கடந்த வணிகம்"
பல்வேறு நாடுகளில் இருந்து வரும் வணிகர்களுக்கு பட்டினம் நகரம் எவ்வாறு ஒரு இணைப்பு நகரமாக இருந்தது என்பதை ஆதாரங்களுடன் பேசிய அவர், ''இரும்புக் காலம் முடிந்து, வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், இந்தியாவின் மேற்கில் உள்ள அரேபிய நாடுகள் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து வரும் வணிகர்கள் பட்டினம் நகரத்தில் வாணிபம் செய்ததற்கு அடையாளமாக பல வெளிநாட்டு ரத்தின கற்கள் அகழ்வாய்வில் கிடைத்தன. 146 நாணயங்களை கண்டறிந்தோம். விதவிதமான குடுவைகள் கிடைத்தன. அந்த குடுவைகளை கூர்ந்துநோக்கியபோது, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கொண்டுவந்த குடுவைகள் அவை என்று தெரிந்தது. அதற்கு சாட்சியாக மேல்பகுதியில் ஒவ்வொரு நாட்டின் பிரத்தேயேக அலங்கார வேலைப்பாடுகள் தெரிந்தன. அதேபோல படகுகளை கட்டிவைப்பதற்கான இரும்பு கம்பிகள் இருந்தன,''என்று கூறுகிறார் செரியன்.
''பட்டினம் நகரம் பல்வேறு நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு ஒரு நுழைவாயிலாக இருந்தது என்று நம்புகிறோம். எங்களுக்கு கிடைத்த எலும்புத் துண்டுகளை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தியபோது, அவை மேற்கு மற்றும் தெற்கு ஆசியப்பகுதி, மற்றும் ஐரோப்பியப் பகுதியில் இருந்து வந்தவர்களின் எலும்புகள் அவை என்று கண்டறிந்தோம்,''என்கிறார் செரியன்.
அதேபோல தமிழகத்தில் அகழ்வாய்வு நடக்கும் கீழடி மற்றும் அழகன்குளம் போன்ற இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களுக்கும், முசிறிபட்டணத்தில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களுக்கும் ஒற்றுமை இருப்பதை உறுதி செய்யமுடிந்தது என்கிறார் அவர்.
சங்க கால முசிறி பரதப்புழா ஆற்றங்கரை அருகே இருந்திருக்கலாம்.
பட்டணம் அகழ்வாராய்ச்சி என்பது தொல்லியல் மோசடி என திருவனந்தபுரத்தில் நடந்த இந்திய தொல்லியல் மாநாட்டில் தெளிவாக கூறப்பட்டது.
கொடுங்கல்லூர் சுற்றி 10க்கும் மேற்பட்ட ஊர்களில் 1969ல் இந்திய தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி அப்பகுதியில் மனிதக் குடியேற்றம் முதலில் பொஆ 9ம் நூற்றாண்டு தான் என நிருபித்து உள்ளது
நாவலன்தீவு""குமரிக்கண்டம்.

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக் செல்லவிருக்கிறேன், 

என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,

இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது, ஆம் இது தான் நாவலன்தீவு" என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!


இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை, மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்"

.
ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! 

பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது!

தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.
உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். 
தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில் "கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் "ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .

இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்கள்களுடன்" அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .

இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.

மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் "அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.

இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!

இந்திய அரசு வெளிக்கொண்டு வராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.

வரலாற்று தேடல் தொடரும்....!!

தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !

முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் !
நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம் ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் !




ஆதிச்சநல்லூரில் நெற்றிக்கண் மனிதன்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 2004-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற அகழாய்வின் அறிக்கை வெளியாகியுள்ளது. இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் "தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்படுகிறது.


இங்கு முதன்முதலாக 1876ஆம் ஆண்டும், பிறகு 1902ஆம் ஆண்டு வெளிநாட்டு ஆய்வாளர்களால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு கிடைக்கப்பெற்ற பொருட்கள் ஜெர்மனி மற்றும் சென்னைக்கு கொண்டுசெல்லப்பட்டன. 

அதைத்தொடர்ந்து 1920-ல் சிந்து சமவெளியை ஆய்வு செய்த வங்கதேசத்து அறிஞர் பானர்ஜி சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முந்தையது ஆதிச்சநல்லூர் நாகரீகம் என கூறினார். இதனால் உலகமே ஆதிச்சநல்லூரை வியந்து பார்த்தது. ஆனாலும் ஆதிச்சநல்லூர் தொடர்பான முறையான அகழாய்வு அறிக்கை வரவில்லை.

இந்நிலையில், இந்திய தொல்லியல் துறை மூலமாக 2004-ம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வை சத்திய மூர்த்தி தலைமையிலான தொல்லியல் துறையினர் செய்தனர். ஆனால் இந்த அகழாய்வின் அறிக்கை வெளியிடப்படவில்லை. 

இதுகுறித்து செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தொடர்ந்து பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.இந்நிலையில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற அகழாய்வின் அறிக்கையை மத்திய தொல்லியல் துறை தற்போது வெளியிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அறிக்கையை முறைப்படி வெளியிடாமல் இணையவழியில் வெளியிடப்பட்டுள்ளது. 

தொல்லியல் துறை அதிகாரி சத்தியபாமா பத்ரிநாத் தயாரித்த 293 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில் 2004-ல் ஆத்திச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வு பணிகள் குறித்த முழுமையான விபரங்கள், அகழாய்வின் போது கிடைக்கப்பெற்ற பொருட்களின் பட்டியல் படங்களுடன் இடம் பெற்றுள்ளன.


இந்த அறிக்கையில் ஆதிச்சநல்லூரில் நெற்றிக்கண் மனிதன் இருந்தானா என்பதற்கான பதிலும் கிடைத்துள்ளது. முத்துகுளிக்கும் மக்களுக்கு ஒருவித நோய் வரும். அந்த நோயால் பாதிக்கப்பட்டு புதைக்கப்பட்டவர்களே இந்த நெற்றிகண் மனிதர்கள் என சத்தியபாமா தனது அறிக்கையில் பதிவிட்டுள்ளார்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலுப்பிள்ளை பிரபாகரன் நவம்பர் 26, 1954 இல்பிறந்தார்.

இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். மே 5, 1976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.

உலகத் தமிழர்கள் அவரைத் தமிழ்த்தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் இராசிவ் காந்தி படுகொலையில், அவருக்கு தொடர்பு இருப்பதாக இந்திய அரசு கருதியதால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டியது. 

இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் செ. பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார்.


அத்துடன் அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள். பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படைத்துறையால் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும், அவரது உடலின் ஒளிப்படமும் கிடைக்கப் பெற்றது. மதிவதனியின் நிலையும், துவாரகாவின் நிலையும் புரியப்படவில்லை.

துவாரகா 
துவாரகா அமைதியான பிள்ளை. தெய்வீக ரோஜாபோல் எப்போதும் கள்ளமில்லா வெள்ளை முகம். 
“எனது தேவதை இந்தப் பிள்ளை’ என கடவுளே கனிந்துருகக்கூடிய அன்புள்ளம் கொண்ட அருட்கொழுந்து துவாரகா என்கிறார்கள்.
அயர்லாந்து டப்ளின் நகரில் 
மருத்துவ பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு, அங்கே தங்கி விடாமல் 
தமிழீழ மண்ணுக்குத் திரும்பி 
“மாலதி படையணி’யில் நின்று களமாடியது.
முல்லைத்தீவு இறுதி முற்றுகையின்போதும் 
கலங்காத காரிகையாய் அதே மாலதிப் படையணியில் முன்னணிப் போராளியாய் நின்று களமாடிய என் இனத்தின் காவியம் துவாரகா. 

விடுதலைப்புலிகளை இதற்காகத்தான் 30 நாடுகள் சேர்ந்து வீழ்த்தினார்கள்!

உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் தனக்கென தனியாக இராணுவச் சீருடைகளை அணிந்ததில்லை!
உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் தங்களது படை நடவடிக்கைகளுக்கு பெயர் சூட்டி அழைத்ததில்லை!

*உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் தங்களது படை நடவடிக்கைகளுக்கு பெயர் சூட்டி அழைத்ததில்லை!
உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் போரில் இறந்த தங்கள் வீரர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி கல்லறைகள் (துயிலும் இல்லங்கள்) கட்டியதில்லை!
உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பும் நாப்பதாயிரத்திற்கு மேற்பட்ட வீரர்களை இழந்ததில்லை!

உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினரையும் உலக அரங்கில் பேச்சுவார்த்தைகளுக்கு சர்வதேச நாடுகள் அழைத்ததில்லை !
உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினருக்கும் ஏராளமான சமூக, போராட்ட, செய்தி இணையத்தளங்கள் இருந்ததில்லை!


முகநூல்களிலும் வேறு சமூக, செய்தி இணையத்தளங்களிலும் தலைவர் பிரபாகரன் பற்றியும், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றியும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வந்தது போல், வேறு எந்த விடுதலை அமைப்பினர் பற்றியும் பரவலாக செய்திகள் வந்ததில்லை!


விடுதலைப் புலிகளுக்கு உலகினில் வாழும் அனைத்து தமிழர்களிடமும் இருந்து கிடைக்கப் பெற்ற பெரும் செல்வாக்கு போல், உலகினில் வாழும் வேறு எந்த விடுதலை அமைப்புக்கும் கிடைத்ததில்லை!

விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால் எப்படி முப்படைகளையும் கொண்ட மரபுவழி இராணுவமாக வளர முடிந்தது? அது எப்படி சாத்தியாமானது?
அவர்கள் தீவிரவாதிகள் என்றால், எப்படி மக்களின் பெரும்பலம் அவர்களுக்குக் கிடைத்தது ?
பிறகு ஏன் விடுதலைப் புலிகளை முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து அழிக்க வந்தனஸ?
அந்த சிறிய தேசத்தில் இருந்து அவர்கள் வளர்ந்த அசுர வளர்ச்சிதான் காரணம்! அவர்களின் வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாத இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அவர்களையும், அவர்களின் போராட்டத்தையும் அழித்து விட முடிவு செய்து, போர் தொடுத்து மக்களை துடிக்கத் துடிக்க கொன்று குவித்து, போராளிகளை கொன்றும், சில போராளிகளைக் கைது செய்தும் சகல இடங்களையும் கைப்பற்றினார்கள். 


ஆனால், அவர்களுக்குக் கிடைத்ததோ விடுதலைப் புலிகளின் சில ஆயுதங்கள் மட்டுமே! அவ்வாறெனில் சில நூற்றுக்கணக்கானதளபதிகளும், பல ஆயிரக்கணக்கான போராளிகளும் எங்கே போனார்கள்? அவர்கள் தான் அங்கிருந்த தமிழ் பேசும் மக்கள் என்பதை இன்று வரையும் விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று சொல்லும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை!

இன்று வரையும் சில சர்வதேச நாடுகளாலும், சில விசக்கிருமிகளாலும் “தீவிரவாதி” என்றழைக்கப்படும் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி, மக்களுக்கான பல நன்மைகளும், பயன் பெறக்கூடியதுமான பல உள்கட்டமைப்புக்களை உருவாக்கினார்.

அந்த உள்கட்டமைப்புக்கள் பின்வருமாறு:
* தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு.
* தமிழீழ வைப்பகம்.
* தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.
* தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.
* சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.
* கிராமிய அபிவிருத்தி வங்கி.
* அனைத்துலகச் செயலகம்.
* நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)
* சுங்க வரித்துறை.
* தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.
* அரசறிவியற் கல்லூரி.
* வன வளத்துறை.
* தமிழீழ நிதித்துறை.
* தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்.
* கலை பண்பாட்டுக்கழகம்.
* மருத்துவப் பிரிவு.
* திலீபன் சிறப்பு மருத்துவமனை.
* பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.
* மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.
* சுகாதாரப் பிரிவு.
* ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.
* போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.
* நிர்வாக சேவை.
* அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்.
* மீன்பிடி வளத்துறை.
* விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)
* தொழில் நுட்பக் கல்லூரி.
* சூழல் நல்லாட்சி ஆணையம்.
* தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.
* தமிழீழ விளையாட்டுத்துறை.
* தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.
* தமிழீழ போக்குவரவுக் கழகம்.
* மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு).
* வளங்கள் பகுதி.
* மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு)
* விலங்கியல் பண்ணைகள்.
* விவசாயத் திணைக்களம்.
* தமிழ்மொழி காப்பகம்.
* தமிழீழ சட்டக்கல்லூரி.
* தமிழீழ கல்விக் கழகம்.
* தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.
* காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).
* செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).
* செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).
* வெற்றிமனை (வலுவிழந்தோருக்கானது)
* அன்பு முதியோர் பேணலகம்.
* இனிய வாழ்வு இல்லம். (காது கேளாத, வாய் பேசாத, பார்வை இல்லாத ஊனமுற்ற சிறுவர் சிறுமிகளுக்கானது)
* சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது).
* நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)
* மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
* சீர்திருத்தப் பள்ளி.
* முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).
* புனிதபூமி மகளிர் காப்புத்திட்டம்
* உதயதாரகை (விதவைகளுக்கானது).
* பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.
* பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).
* எழுகை தையல் பயிற்சி மையம்.
* மாணவர் அமைப்பு.
* பொத்தகசாலை (அறிவு அமுது).
* ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.
* நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு).
* தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).
* விடுதலைப்புலிகள் செய்தி இதழ்.
* சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).
* ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை).
* வெளிச்சம் (மாத சஞ்சிகை).
* நாற்று (மாத சஞ்சிகை).
* பொற்காலம் வண்ணக் கலையகம்.
* அருச்சுனா புகைப்படக் கலையகம்.
* ஒளிநிலா திரையரங்கு.
* புலிகளின் குரல் வானொலி.
* தமிழீழ வானொலி.
* தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.
* பல சமூக செய்தி இணையத் தளங்கள்.
* தமிழீழ இசைக்குழு.
* காலணி (பாதணி உற்பத்தி மையம்)
* சேரன் உற்பத்திப் பிரிவு.
* சேரன் வாணிபம்.
* சேரன் சுவையகம்.
* சேரன் வெதுப்பகம்.
* சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).
* பாண்டியன் உற்பத்திப் பிரிவு.
* பாண்டியன் சுவையூற்று.
* பாண்டியன் பல்பொருள் வாணிபம்.
* சோழன் தயாரிப்புகள்.
* பொன்னம்மான் உரைவகை வாணிபம்.
* தென்றல் இலத்திரனியலகம்.
* தமிழ்மதி நகை மாடம்.
* தமிழ்நிலா நகை மாடம்.
* தமிழரசி நகை மாடம்.
* அந்திவானம் பதிப்பகம்.
* இளந்தென்றல் குடிவகைப் பிரிவு.
* இளவேனில் எரிபொருள் நிலையம்.
* இளந்தென்றல் தங்ககம் (ளொட்கெ).
* 1௯ தங்ககம் (ளொட்கெ)
* மருதம் வாணிபம்.
* மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்).
* மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி).
* கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை.
* மாவீரர் அரங்குகள்.
* மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.
* மாவீரர் நினைவு வீதிகள்.
* மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டஙஇ்கள்.
* மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.
* மாவீரர் நினைவுப் பூங்காக்கள்.
* மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.
* மாவீரர் நினைவு நூலகங்கள்.
* மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.
* மாமனிதர் விருதுகள் (சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)

இது தவிர இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக உருவாக்கப் பட்டுக் கொண்டிருந்த தமிழீழ பல்கலைக் கழகம் இறுதி யுத்தத்தினால் கைவிடப்பட்டுள்ளது. 


இன்னும் பெயர் தெரியாத நிறைய அமைப்புக்கள். உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் விடுதலைப் புலிகளைப் போல் தங்கள் தேசத்திற்கென “தேசிய மலர்”, “தேசிய மரம்”, “தேசியப் பறவை”, “தேசிய விலங்கு” போன்ற தேசியச் சின்னங்களை வைத்துக் கொண்டதில்லை.

சிங்கள அரசாங்கமானது ஒவ்வொன்றுக்கும் தடைபோஇட்டு நசுக்கிப் பறிக்கப் பறிக்கஸ தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒவ்வொன்றையும் பாதுகாக்க பல அமைப்புக்களை உருவாக்கினார். அவைகள் தான் மேற்குறிப்பிட்டமக்களுக்கான உள்கட்டுமான அமைப்புக்கள். இவர்தான் உங்கள் பார்வையில் தீவிரவாதியா ?
மக்களுக்கான கட்டமைப்புக்கள் ஒருபுறமிருக்க இராணுவக் கட்டமைப்புக்களைப் பாருங்கள்.

தரைப்படைகள்
* இம்ரான் பாண்டியன் படையணி.
* ஜெயந்தன் படையணி.
* சார்லஸ் அன்ரனி சிறப்புப் படையணி.
* கிட்டு பிரங்கிப் படையணி.
* குட்டிச்சிறி மோட்டார் படையணி.
* இராதா வான்காப்பு படையணி.
* சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணின்
* விக்டர் கவச எதிர்ப்புப் படையணி.
* சோதியா சிறப்புப் படையணி.
* மாலதி சிறப்புப் படையணி.
* அன்பரசி படையணி.
* ஈருடப் படையணி.
* குறி பார்த்துச் சுடும் படையணி.
* சிறுத்தைப் படையணி.
* எல்லைப்படை,
* துணைப்படை,
* பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு.
* ஆயுதக்களஞ்சிய சேர்க்கைப் பிரிவு.
* பாதுகாவலர் பிரிவு.
* முறியடிப்புப் பிரிவு.
* காப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு ரோந்து அணி.
* ஆழ ஊடுருவும் படையணி.
* உந்துருளிப் படையணி

கடற்படைகள்.
* கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு.
* கடல் வேவு அணி.
* சார்லஸ் சிறப்பு அணி.
* அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்).
* சுலோஜன் ஆழ்கடல் நீரடி நீச்சல் அணி (ஆண்கள்).
* கடற்சிறுத்தை சிறப்பு அணி.
* சங்கர் படையணி.
* வசந்தன் படையணி.
* சேரன் படையணி.
* பாக்கியன் ஆழ்கடல் தாக்கும் படையணி.
* வான்படை.
* கரும்புலிகள்.
* புலனாய்வுத்துறை.
* வெளியகப் புலனாய்வுப் பிரிவு.
* உள்ளகப் புலனாய்வுப் பிரிவு.
* படையப் புலனாய்வுப் பிரிவு (Mஈ)
* வேவுப் பிரிவு.
* களமுனை முறியடிப்புப் பிரிவு.
* களமுனை மருத்துவப் பிரிவு.
* கணினிப் பிரிவு.
* பொறியியல் பிரிவு.
* விசேட வரைபடப் பிரிவு.
* அரசியல் துறை, பரப்புரைப் பிரிவு, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு.
* தமிழீழ படைத்துறைப் பள்ளி.
* ஆயுத உற்பத்திப் பிரிவு.
* மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு.
* மாவீரர் பணிமனை

இப்படியானதொரு இராணுவக் கட்டமைப்பை உலகில் எந்த விடுதலை இயக்கமும் கொண்டு வந்ததில்லை!ஆரம்பத்தில் உருவாகும்போது “விடுதலைப் புலிகள்” என்ற அமைப்பாகத்தான் இருந்தார்கள். காலங்களாகி வளர வளர மக்களின் பேராதரவினாலும், மக்களின் முழு பலத்தினாலும் “தேசிய இராணுவமாக” வளர்ந்து, ஒரு தேசத்தையே உருவாக்கினார்கள். ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பாக இருந்தாலும், இடைப்பட்ட காலங்களில் முப்படைகளையும் கொண்டு ஒவ்வொரு படையணிகளுக்கும் தனித்தனி சீருடையுடன் ஒரு தேசிய இராணுவமாக உலக நாடுகளின் இராணுவங்களுக்குஒப்பாக இருந்தார்கள்.

எல்லா நாடுகளிடமும் முப்படைகள் இருந்தது, விடுதலைப் புலிகளிடம் ஒரு படை அதிகமாகவே இருந்தது; அந்த வீரமிக்க படைதான் “கரும்புலிகள்”! உலகில் எந்த நாடுகளிடமும் இல்லாத உயரிய ஆயுதமான, எந்தவிதமான ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளமுடியாத, எந்தவிதமான ஆயுதங்களோடும் ஒப்பிட முடியாத உயிராயுதமான “கரும்புலிகள்” விடுதலைப் புலிகளிடம் இருப்பது அவர்களுக்கு சிறப்பையும், அதிக பலத்தையும் கொடுத்திருந்தது.

அந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் படைகளுடன் மோத துணிச்சல் இல்லாத சிங்கள தேசம்தான், முப்பதிற்கு மேற்பட்ட உலக நாடுகளுடன் சேர்ந்து மோதி வெற்றி கண்டதென மார்தட்டிக் கொண்டு திரிகிறது! தமிழர்கள் கவலைப்பட வேண்டிய நேரம் இதுவல்லஸ. ஒரு சின்னஞ்சிறிய தேசத்தில் எந்தவித உதவிகளும் இல்லாதிருந்த ஒரு மக்கள் படையுடன் முப்பதிற்கும் மேற்பட்ட உலக நாடுகள் மோதுகின்றன என்றால் அங்கே தமிழனின் வீரம் எத்தகையது என்பதை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும். அங்கு தமிழனுக்குத்தான் வெற்றி கிடைத்துள்ளது !


இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் உலக அரங்கில் தமிழனின் உண்மையான வீரம்தான் முன்னிலை வகிக்கிறது. உலக சரித்திரத்தில் தமிழனுக்கென்று ஒரு குணம், தமிழனுக்கென்று ஒரு வீரம் அழியாமல் இடம் பிடித்துள்ளது! இதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது! இவ்வாறு தமிழர்களின் வீரத்தை உலக வரலாற்றில் பதிய வைத்த விடுதலைப் புலிகளாஸ தீவிரவாதிகள் ?

விடுதலைத்தீ என்பது அனைத்து தமிழ் பேசும் மக்கள் மனதிலும் எரிந்து கொண்டிருக்கிறது! எந்த, தமிழ் பேசும் மக்களின் மனதில் விடுதலைக்கான தீ எரிகிறதோ.. அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள்தான் என்பதை சிங்கள அரசும், சர்வதேசமும் மறந்து விடக்கூடாது! 


விடுதலைத் தீ என்பது எளிதில் அணைந்து விடாது! யாரும் அணைக்கவும் முடியாது! அந்தத் தீ எதற்காக எரிய ஆரம்பித்ததோ அதை அடையும் வரை எரிந்து கொண்டே இருக்கும். அதுவரையும் விடுதலைப் புலிகளும் வளர்ந்து கொண்டே இருப்பார்கள் ! 

யார் சொன்னது அவர்கள் அழிந்துவிட்டார்கள் என்று ?

ஈழத்திரு நாட்டில்!!
வட மாகாணம் என்றால் என்ன?
வட மாகாண ஆளுனர் பெயர் - சுரேன் ராகவன்.
வடக்கில் சிறிய மாவட்டம் – யாழ்ப்பாணம்.
வடக்கில் பெரிய மாவட்டம் – முல்லைத்தீவு.
வடக்கில் கடல்பரப்பில்லாத மாவட்டம் – வவுனியா.
வடக்கில் குளங்கள் அதிகமாக காணப்படும் மாவட்டம் – முல்லைத்தீவு.
வடக்கில் காணப்படும் பெரிய தீவு – நெடுந்தீவு.
வடக்கில் சிலிக்கன் மணல் காணப்படும் இடம் - நாகர்கோவில்.
வடக்கு மாகாணசபை அமைந்துள்ள இடம் – கைதடி.
வடமாகாணத்தில் சனத்தொகை அடர்த்தி கூடிய மாவட்டம் - யாழ்ப்பாணம்.
வடமாகாணத்தில் சனத்தொகை அடர்த்தி குறைந்த மாவட்டம் - முல்லைத்தீவு.
வடமாகாணத்தின் பரப்பளவு – 8884 சதுர கிலோமீட்டர்.
வடமாகாணத்தின் நிலப்பரப்பு 8290 சதுர கிலோமீட்டர்.
வடக்கில் எண்ணெய் வளம் உள்ள மாவட்டம் – மன்னார்.
வடக்கில் சிறுவர் நீதிமன்றம் அமைந்துள்ள இடம் – குருநகர், யாழ்ப்பாணம்.
வடக்கில் அல்லது இலங்கையில் நீளமான பாலம் – வேலணை – புங்குடுதீவு.
வடக்கில் காணப்படும் முனை – பருத்தித்துறை (பேதுறு).
வடக்கில் காணப்படும் நீரேரிகள் - கச்சாய் அல்லது கிளாலி, சுண்டிக்குளம், தொண்டமானாறு.
இலங்கையின் வடக்கின் புராதனபெயர் - நயினாதீவு (நாகதீவு).
வடக்கில் இருந்து பாராளுமன்றம் சென்ற முதலாவது பெண் - 15 February 1989 - 24 June 1994 – திருமதி புலேந்திரன் ராஜமனோகரி – வன்னி.
வடக்கில் ஓட்டு தொழிற்சாலை ஒட்டுசுட்டானிலும் உப்பளம் ஆனையிறவிலும் சீமேந்து தொழிற்சாலை காங்கேசன்துறையிலும் இரசாயன தொழிற்சாலை பரந்தனிலும் காணப்படுகிறது.
வட மாகாணத்தில் பாதுகாக்கப்பட்ட பறவைகள் விலங்குகள் காப்பகம் என அறிவிக்கப்ட்ட இடம் - சுண்டிக்குளம் (கிளிநொச்சி மாவட்டம்).
வேலணை தீவு அல்லது லைடன் தீவுகள் எனப்படுவது வடக்கில் பெரிய கூட்டிணைக்கப்பட்ட தீவாகும்.
யாழ்ப்பாணத்தில் காணப்படும் ஒரே ஆறு – வழுக்கை ஆறு (பருவகால ஆறு).
இலங்கையில் காணப்படும் குளங்களில் மூன்றாவது பெரிய குளம் - இரணைமடுக் குளம்.
"செங்கையாழியன்" என அழைக்கப்படும் வடமாகாணத்தின் எழுத்தாளர் - கலாநிதி க.குணராசா.
அண்மையில் வடக்கில் தொடங்கப்பட்ட கைத்தொழில் பேட்டை - அச்சுவேலி.
வவுனிக்குளத்தை கட்டுவித்தவன் - எல்லாளன்.
பனைமரத்தின் விஞ்ஞான பெயர் - Borassus flabellifer.
வடக்கிற்கான ரயில் சேவை 1989.01.19 பின் 13.10.2014 உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
வடக்கு ரயில் பாதையை புனரமைத்த இந்திய நிறுவனம் – இர்கொன்.
இரணைமடு நீர் விநியோக திட்டத்திற்கு உதவி வழங்குவது - ஆசிய அபிவிருத்தி வங்கி.
இரணமடு நீர் விநியோக திட்டத்திற்கு மாற்றீடான மற்றுமொரு திட்டம் - ஆறுமுகம் திட்டம்.
யாழ்ப்பான பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது - ஆகஸ்ட் 1, 1974
வடமாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் மரம் நடுகை தினம் நவம்பர் 01 – 30 வரை கொண்டாடப்படுகிறது.
மருத மரத்தின் விஞ்ஞான பெயர் – Terminalia elliptica.
வெண்டாமரை பூவின் விஞ்ஞான பெயர் – Nelumbo nucifera.
ஆண் மானின் விஞ்ஞான பெயர் – Axis axis.
சுன்னாகம் கழிவு ஒயில் தொடர்பான நிறுவனம் - நொதேர்ன் பவெர்.
யாழ்ப்பான நூல்நிலையம் எரிக்கப்பட்ட ஆண்டு - 31.05.1981.
யாழ்ப்பாண வரலாற்றை கூறும் நூல்கள் - வையாபாடல், யாழ் வைபவ மாலை.
யாழ்ப்பான பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் – சேர் பொன் இராமநாதன்.
முறிந்த பனை என்ற நூலை எழுதியவர்கள் – ராஜினி திராணகம, ராஜன் ஹூல், சிறிதரன், தயா சோமசுந்தரம்.
மன்னருக்கான ரயில் சேவைகள் 1914ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் யுத்தத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது - 14.03.2015.
மன்னார் – நாவற்குழி பிரதான பாதை A32.
பரந்தன் – முல்லைத்தீவு பிரதான பாதை A35.
மாங்குளம் – முல்லைத்தீவு பிரதான பாதை A34.
முல்லைத்தீவோடு இணைக்கப்பட்ட பிரதேசம் – மணலாறு (வெலிஓயா).
நயினாதீவின் தற்போதைய பெயர் – நாகதீப.
யாழ் நூலகம் ஆரம்பிக்கப்பட்டது – 1933 ஆம் ஆண்டு.
இலங்கையில் வறுமை கூடிய மாவட்டம் -கிளிநொச்சி.
மதுபான விற்பனை மற்றும் எய்ட்ஸ் பாதிப்பு அதிகரித்து காணப்படும் மாவட்டம் - யாழ்ப்பாணம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 1984 பெப்ரவரியில் கிளிநொச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டது.
யாழ் கோட்டை போர்த்துகேயரால் 1625ல் கட்டப்பட்டது.
தற்போது காணப்படும் யாழ் கோட்டை ஒல்லாந்தரால் உடைக்கப்பட்டு 1658 யூன் 23 ற்கு பின் கட்டப்பட்டதாகும்.
யாழ்ப்பாண அரசின் நாணயம் – சேது நாணயம்.
யாழ்ப்பாண அரசின் பழைய சின்னமாக விளங்குவது – நந்தி.
வன்னி இராட்சியம் வீழ்ச்சியடைந்தது - 1803ம் ஆண்டு.
ஒல்லாந்தரால் சொத்துரிமை தொடர்பாக யாழ்ப்பாணத்துக்கு மட்டும் உரித்தான சட்டம் – தேசவழமைச் சட்டம்.
யாழ் நூலை எழுதியவர் – சுவாமி விபுலானந்தர் 1947.
சுவாமி விபுலானந்தர் இயற்பெயர் – மயில்வாகனன் 1892.
சைவசமய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் - ஆறுமுகநாவலர் (1822 டிசம்பர் 18 ஆறுமுகம்பிள்ளை).
நாவலர் 1872 இல் முதல் உருவாகிய சைவ ஆங்கிலப் பாடசாலை - வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலை.
மன்னாரில் எண்ணெய் வள ஆய்வில் ஈடுபட்ட நிறுவனம் – கெய்ன் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான கெய்ன் லங்கா.


1983 ஜூலை 23 அன்று விடுதலைப் புலிகளால் ஈழம்- யாழ்  திருநெல்வேலி தாக்குதல் நடை பேற்ற போது முழுநேர இயக்க உறுப்பினர்கள்  30  பேர்கள் இதில் இத் தாக்குதலில் நேரடியாக பங்கு கொண்டவர்கள் .  19  பேர்கள் அவர்கள் விபரம் .


1.பிரபாகரன் முள்ளிவாய்கால் வரைப் பயணித்தவர் 1972 – 2009 
2.செல்லக்கிளி மாவீரர் 1975 - 1983
3.புலேந்திரன் மாவீரர் 1979 - 1987
4. பொன்னம்மான் மாவீரர் 1978 - 1987
5. ரெஜி மாவீரர் 1983 – 1985
6.ரஞ்சன்லாலா மாவீரர் 1979 -1984
7. கிட்டு மாவீரர்1978 -1993
8.சந்தோசம் மாவீரர்1980- 1987
9. விக்டர் மாவீரர் 1982 - 1986 
10அப்பையா மாவீரர் 1981. 1998
11.கணேஷ் மாவீரர் 1981 - 1986
12. லிங்கம் மாவீரர் 1982 - 1986
13. அல்பேட் வாகனம் மாவீரர் 1982- 1985
14. பசீர் முள்ளிவாய்க்கால் வரைப் பயணித்தவர்கள் 1981 – 2009 ,தற்போது உயிருடன் உள்ளனர்.
15.ராஜேஷ் 1982 – 1985 வெளியேறி தற்போது உயிருடன் உள்ளனர்.
16.சுப்பண்ணா 1982 - 1986 வெளியேறி தற்போது உயிருடன் உள்ளனர்.
17.ஞானம் 1983 – 1986 வெளியேறி இறந்து விட்டனர் .
18.ராமு  வெளியேறி இறந்து விட்டனர் 1978,    1985,   2015.
19. குண்டன்  வெளியேறி தற்போது உயிருடன் உள்ளனர் 1979 - 1988.


மிகுதிப் பேர்கள் பதினொன்று அவர்களில் ஆறு பேர்கள்  இந்தியாவில் இருந்தார்கள் அவர்களின் விபரம்
1.பேபி அண்ணா 1972 -2009 முள்ளிவாய்க்கால் வரைப் பயணித்தவர்.
2.ராகவன்1975 – 1985 வெளியேறி தற்போது உயிருடன் உள்ளனர்.
3..அன்ரன் 1979 -1987 வெளியேறி தற்போது உயிருடன் உள்ளனர்
4.தேவர் 1981- 1996 வெளியேறி தற்போது உயிருடன் உள்ளனர்.
5.கேபி 1981  தற்போது உயிருடன் உள்ளனர்.
6..நேசன் 1981 – 1986 வெளியேறி தற்போது உயிருடன் உள்ளனர்.


மிகுதி ஐந்து பேர்கள் நாட்டில் இருந்தார்கள் அவர்கள் விபரம்  
1.பண்டிதர் மாவீரர் 1977 – 1985 
 2.மாத்தையா 1978 – 1997 இறந்து விட்டார்
3.யோகன்  1977 – 2009  முள்ளிவாய்க்கால் வரைப் பயணித்தவர் தற்போது உயிருடன் உள்ளனர்.
4.பொட்டு 1983 – 2009 முள்ளிவாய்க்கால் வரைப் பயணித்தவர். 
5அருணா 1981 . 1987  வெளியேறி இறந்து விட்டார்.
தோழர்களே எமக்காய் எம் மக்களுக்காய் போராடிய நீங்கள் என்றும் உயர்வானவர்களாய் மரியாதை செலுத்துவோம்.தமிழரின் தாகம் தமிழீழத்தாகம்.

வடக்கில் தமிழர்கள் மட்டும் வாழவில்லை': இலங்கை காவல்துறை

இலங்கை அரசியலமைப்பின் 13-ம் திருத்தப்படி மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் உள்ளன. ஆனால் அவற்றை மாகாணசபைகளுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் இன்னும் முன்வரவில்லை.

இந்நிலையில், வடக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி.வி. விக்னேஸ்வரன், வடக்கு பிராந்திய மக்களின் மொழியையும் கலை, கலாசார, வாழ்க்கை முறையையும் புரியாத காவல்துறையினர் தொடர்ந்தும் அங்கு இருப்பது, அங்கு ஜனநாயகம் ஏற்பட தடையாக இருப்பதாக நேற்று வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்....

உள்ளூரில் உள்ள இளைஞர்களுக்கு பயிற்சியளித்து காவல்துறையில் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர்களை காவல்துறையில் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதுகுறித்து பிபிசி தமிழோசையிடம் பதிலளித்த இலங்கை காவல்துறையின் பேச்சாளர் எஸ்எஸ்பி அஜித் ரோஹண, முதலமைச்சர் கூறுவதற்கு முன்னரே காவல்துறை தமிழ் தெரிந்தவர் அதிகாரிகளை வடக்கில் போதுமான அளவுக்கு நியமித்துள்ளதாகக் கூறினார்.

'வடக்கு பிராந்தியத்தில் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் தமிழ் மக்கள் முறைப்பாடு செய்ய, தமிழில் குறிப்புகளைப் பெற தமிழில் நீதிமன்ற அறிக்கைகளைப் பெறக்கூடியதாகத்தான் இருக்கிறது' என்று அஜித் ரோஹண கூறினார்.

'அச்சுறுத்தல் எப்போதும் ஏற்படலாம்'
1970களின் முற்பகுதியில் ஆயுதப் போராட்டம் ஏற்பட்டது போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் எப்போதும் ஏற்படலாம் என்று இலங்கை காவல்துறை கூறுகிறது (படம்-யாழ் நகரில் இராணுவம் ரோந்து - செப்டெம்பர் 2013)

அதேபோல, 'காவல்துறையினருக்கு கொடுக்கப்படுகின்ற பயிற்சிநெறியின்போது பல்லின சமூகங்களின் கலசாரங்கள் பற்றியும் அவற்றுக்கு மதிப்பளிக்கும் முறை பற்றியும் அறிவூட்டலும் வழங்கப்படுகிறது. முதலமைச்சர் இப்போது சொல்லியுள்ளதை நாங்கள் யுத்தம் முடிய முன்னரே செய்துவிட்டோம். புதிதாக செய்வதற்கு ஒன்றுமில்லை' என்றும் இலங்கை காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

'வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் மட்டும்தான் வாழ்கிறார்கள் என்று கூறமுடியாது. வவுனியா மாவட்டத்தில் சிங்கள மக்கள் இருக்கிறார்கள். மன்னாரில் முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். அதேபோல எதிர்காலத்தில் இன்னும் குடியேறவும் மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். அனுராதபுர எல்லையில் சிங்கள மக்கள் கூடுதலாக வாழ்கிறார்கள். வடக்கிலிருந்து உருவான தமிழர்களையே பொலிஸில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை' என்றும் இலங்கை காவல்துறை சார்பில் பேசவல்ல அதிகாரியான அஜித் ரோஹண கூறினார்.

இதேவேளை, 'பிரபாகரன் இந்த யுத்தத்தை 1970களில் தொடங்கும் போதும் நிலைமை இப்படித் தான் இருந்தது. இப்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும் எப்போது ஏற்படும் என்று சொல்லமுடியாது' என்றும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
Chandrakanthan Rajendramete or hide this


ஈழம் -சிவபூமி

சிவபூமியின் சுவடுகளைத் தேடி இலங்கையின் பண்டைய தலைநகரான அனுராதபுரத்திற்குச் சென்றேன். அனுராதபுரத்தில் 40  இந்துக் கோயில்களின் சுவடுகள் உள்ளன என அறிந்தேன். அவற்றைக் கண்டறிய அனுராதபுரத்திற்கு இரண்டு தடவைகள் சென்று ஆய்வுகளை மேற்கொண்டேன். 

அப்போது ஜேதவனாராம விகாரை வளாகம், அபயகிரி விகாரை வளாகம் ஆகிய பகுதிகளில் யக்ஷ, யக்ஷி தெய்வங்களின் அழகிய சிற்பங்கள் பலவற்றைக் கண்டேன். அவை மட்டுமல்லாது
பலவித வடிவங்களில் நாகராஜரின் சிற்பங்களையும் காணக் கிடைத்தது. பேராசிரியர் சிற்றம்பலம் இவற்றில் சிலவற்றைப்  பற்றித் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

 இவற்றைக் கண்டவுடன் ஆய்வு செய்யும் ஆர்வம் அதிகரிக்க அடுத்தடுத்து பல தடவைகள் அனுராதபுரத்திற்கு சென்று பண்டைய நகரில் இருந்த எல்லா இடங்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டேன்.


இக்கால கட்டத்தில் 130 வருடங்களுக்கு முன்பு எச்.சி.பி.பெல் எனும் ஆங்கிலேய ஆராய்ச்சியாளர் எழுதியிருந்த ஆய்வுக் குறிப்புகளைத் தேடி இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்திற்கு சென்று அவை பற்றிய விபரங்களையும் குறிப்பெடுத்தேன். அதில் அனுராதபுரத்தின் வடக்கில் இருந்த ஆறு கோயில்களைப் பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

அவரது குறிப்பின் படி இந்த ஆறு கோயில்களும் ஒரே இடத்தில் உள்ளன. இவற்றை பெல் அவர்கள் தமிழர் இடிபாடுகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் மூன்றாவது தடவையாக அனுராதபுரத்திற்கு சென்றேன். அனுராதபுரம் பெளத்த யாத்திரீகர்களாலும், சுற்றுலாப் பயணிகளாலும் எப்பொழுதும் நிரம்பி வழியும் ஓர் சுற்றுலாத்தலம். அன்றும் அப்படித்தான். கூட்டம் களை கட்டியது. இந்தத்தடவை பெல் அவர்கள் குறிப்பிட்டிருந்த கோயில்களைத் தேடி அபயகிரி விகாரையின் வடக்குப் பக்கம் உள்ள பங்குளிய, பெருமியன் குளம், அசோகாராம, விஜேராம ஆகிய இடங்களுக்குச் சென்றேன். அங்கெல்லாம் பெல் குறிப்பிட்ட கோயில்களின் சுவடுகளைக் காண முடியவில்லை.
அப்போதுதான் இவ்விடங்களுக்கு நடுவில் இருந்த ஓர் காட்டுப்பகுதி என் கவனத்தை ஈர்த்தது. 

அக்காட்டுக்குள் சென்று பார்க்க வேண்டும் எனும் ஆவல் ஏற்பட்டது.
அப்பகுதியில் தற்செயலாக சந்தித்த இரு சிங்கள தம்பிமாரின் உதவியுடன் காட்டுப் பகுதிக்குள் நுழைந்தேன். சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்லாத இடம். பட்டப் பகலில் கூட ஆள் நடமாட்டம் இல்லாத இடம். பறவைகளும், காட்டு வண்டுகளும் கத்தும் ஓசை மட்டுமே காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது. சூரிய வெளிச்சமே படாமல் சற்று இருட்டாக அக்காட்டுப்பகுதி காணப்பட்டது.
காட்டுக்குள் சிறிது தூரம் நடந்து சென்று கொண்டிருந்த போது காலில் ஏதோ தடுக்கி விழப் பார்த்தேன். என் காலில் தடுக்கியது என்னவென்று பார்த்தபோது தான் தெரிந்தது, அது  சிற்பங்கள் செதுக்கப்பட்ட ஓர்  நாகக்கல். முக்கால்வாசி மண்ணுள் புதையுண்டு அக்கல் காணப்பட்டது. 

ஆர்வம் மேலிட அப்பகுதியில் இருந்த பற்றைகளையும், காய்ந்த சருகுகளையும் விலக்கிப் பார்த்த போது ஆச்சரியமும், ஆனந்தமும் அடைந்தேன். அவ்விடத்திலே காட்டுப் பற்றைகளுள் மறைந்தும், மண்ணுள் புதையுண்டும் ஏராளமான கோயில்களின் இடிபாடுகளும், பரந்த அளவில் நூற்றுக்காணக்கான கற்தூண்களின் துண்டங்களும், செங்கல் அத்திவாரங்களும், கட்டிடங்களின் சிதைவுகளும், ஓர் தீர்த்தக் கேணியின் இடிபாடுகளும், தீர்த்தக் கேணியின்   படிக்கட்டுகளும் காணப்பட்டன.  அதுதான் எச்.சி.பி.பெல் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் கோயில்களின் வளாகம் என்பதைப் புரிந்து கொண்டேன்.
என்னோடு வந்த தம்பிமார் இருவரும் இதுதான் "தமிழர்கள் அழித்த பெளத்த விகாரைகளின் சிதைவுகள்" எனக் கூறினார்கள்  அந்த சிறுவர்களுக்கு இப்படித்தான் உண்மைக்குப் புறம்பாக ஓர் பொய்யைக் கூறி வைத்துள்ளார்கள் என்பது புரிந்தது. சுமார் 400 மீற்றர் நீள, அகலம் கொண்ட இக்காட்டுக்குள் எல்லா இடத்தையும் சுற்றி வந்தேன். ஒரு மணி நேரத்தின் பின் வெளியே வந்தோம்.
இது போன்று பாதையின் அடுத்த பக்கத்தில் உள்ள காட்டிலும், விஜேராம விகாரைக்கு செல்லும் வீதியில் உள்ள காட்டிலும் அழிக்கப்பட்ட விகாரைகளின் சிதைவுகள் இருப்பதாகக் அவர்கள் கூறினர். 

சிங்களத் தம்பிமார்களின் உதவியோடு பாதையின் கிழக்குப் பக்கத்தில் உள்ள காட்டிற்கும் சென்று பார்த்தேன். அங்கும் கோயில்களின் சிதைவுகளைக் கண்டேன். பின்பு தம்பிமார் இருவரையும் அனுப்பிவிட்டு விஜேராம காட்டுப் பகுதிக்குச் சென்றேன். அங்கும் சிதைவுகள் பெருமளவில் காணப்பட்டன.1000 வருடங்களுக்கு முன் ஒரே கோயில் வளாகமாக இருந்த இப்பிரதேசம் இப்போது பாதைகள் அமைக்கப்பட்டு மூன்று துண்டுகளாகப் பிரிக்கப் பட்டு விட்டது.
சுமார் 700 மீற்றர் அகலமும், 1500 மீற்றர் நீளமும் கொண்ட அந்தக் காட்டுப்பகுதி முழுவதும் கோயில்களின் சிதைவுகள் பரந்து காணப்பட்டன. 

மொத்தமாக இக்காட்டுப் பகுதியில் சுமார் 20 கட்டிடங்களின் இடிபாடுகள் காணப்பட்டன. குறைந்தது ஆறு கோயில்கள் இவ்விடத்தில் இருந்தன. வரலாற்று ஆய்வாளர் எச்.சி.பி.பெல் அவர்களின் ஆய்வுக் குறிப்புகளில் இவற்றை “Tamil Ruins” (தமிழர் இடிபாடுகள்) எனக் குறிப்பிட்டுள்ளார். 1893 ஆம் ஆண்டு பெல் அவர்கள் இவ்விடத்தில் இருந்து இரண்டு சிவலிங்கங்கள், மூன்று அம்மன் சிலைகள், மூன்று சூரிய பகவான் சிலைகள் உட்பட பல தொல்பொருள் சின்னங்களைக் கண்டெடுத்தார். 

அக்குறிப்புகளில் பெல் குறிப்பிட்டுள்ள அத்தனை இடங்களும் இங்கே துல்லியமாகக் காணப்பட்டமை ஆச்சரியத்தையும், பெருமகிழ்ச்சியையும் உண்டாக்கியது.
1000 வருடங்களுக்கு முன்பு அனுராதபுரத்தில் ஓர் சைவ சாம்ராஜ்யம் செழிப்புடன் விளங்கிய இடம் இன்று மனிதர்கள் உற்புகக்கூட முடியாத அளவிற்கு அடர்ந்த காடு மண்டிப்போய் கிடக்கிறது. மந்திர முழக்கமும், மணி ஓசையும் இடை விடாமல் ஒலித்துக் கொண்டிருந்த ஓர் இடம் இன்று மயான அமைதியுடன் உறங்கிக் கொண்டிருந்தது. இந்துக் கோயில்கள் காணப்படும் இக்காட்டுப் பகுதியைச் சுற்றி இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தினால் “பெருமியன் குளம் ஒதுக்கப்பட்ட பிரதேசம்” என பெயர் பலகை போடப் பட்டுள்ளது.


பண்டைய அனுராதபுர நகரில் உள்ள பெளத்த வழிபாட்டிடங்கள் அனைத்தும் கலாசார முக்கோணத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு பெளத்த மக்கள் வழிபடும் வகையில் அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளன. ஆனால் சைவ மக்களின் மூதாதையர்களால் வழிபடப்பட்ட இந்துக் கோயில்கள் எதுவும் புனரமைக்கப்படாமல் தேடுவாரற்று காடுகளுக்குள் மறைந்து போய்க் கிடக்கின்றன. இதன் மூலம் புராதன அனுராதபுர இராச்சியத்தில் சைவசமயம் இருக்கவில்லை எனும் தோற்றப்பாட்டை எதிர்கால சந்ததியினர் நோக்கும் நிலை உருவாகியுள்ளது. அதேசமயம் இங்கிருந்து எடுக்கப்பட்ட அழகிய இந்து தெய்வச்சிலைகள் இலங்கையின் நூதன சாலைகளையும், தொல்பொருள் காட்சிச் சாலைகளையும் அழகு படுத்திக் கொண்டு, உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் வகையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இப்படிக்கு
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை


கல் தோன்றி மண் தோன்றா காலத்தே ! மூத்தக்குடி தமிழ் குடி என நம் இலக்கிய சான்றும், வரலாற்று சான்றும் மெய்பிக்கின்றன. கடல் கொண்ட குமரி கண்டத்தில் பல்வேறு திணை வாழ்வைக் கொண்டு, நாகரிகம் படைத்தது தமிழ் இனம். மொழியோடு, இசையும் சேர்ந்தே வளர்ந்தது தான் நமது நாகரிகம். ஐந்திணைகளின் பண்பாட்டின் இசையானது ஒருங்கே அமைந்ததுதான் பண்டைய தமிழ் இசையாகும்.


குமரி கண்டத்தில் மனித குலம் பேசிய மொழி தமிழ் மொழியாகும். தமிழன் குரலோசையுடன் அவன் பண்பாட்டு இசையும் சேர்ந்தே வளர்ந்தது. ஐவகை திணை வாழ்க்கையை கொண்டது தமிழ் இனம், ஐவகை பண் இசையின் தொகுப்பே தமிழ் இசையாகும். சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் குறிஞ்சிபாணி பண்ணின் இன்றைய பெயர் மத்தியமாவதி, முல்லை பாணி பண்ணின் இன்றைய பெயர் மோகனம் மருத பாணி பண்ணின் இன்றைய பெயர் சுத்த தன்யாசி நெய்தல் பாணி பண்ணின் இன்றைய பெயர் இந்தோளம், பாலை பாணி பண்ணின் இன்றைய பெயர் சுத்த சாவேரி என்றும் நம் தமிழ் இசை ஆய்வாளர்கள் நிருவுகின்றனர்.

இசை ஆய்வாளர்களில் முன்னோடியானவர் தஞ்சை திரு.ஆபிரகாம் பண்டிதர் ஆவார். இசை நுணுக்கங்களை பற்றி அரிய ஆரம்ப வயதிலிருந்தே தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்தவர். பழங்ககாலத்தின் பண் ஆளத்தி முறைதான், தற்போதைய இராக ஆலாபனை முறைக்கு ஆதாரம் என்பதை பல்வேறு ஆதாரங்களின் மூலம் நிருவியவர் திரு.ஆபிரகாம் பண்டிதர் ஆவார். 

அவர் எழுதிய கருணாமிருத சாகரம் என்ற நூலே, இன்றைய கர்நாடக இசை மரபுக்கு, மூலமே, தமிழ் இசைதான் என்பதை நிருவியிருக்கிறது.முதல் கழக நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை ஆயினும் ! நமக்கு கிடைத்த முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இடை கழகத்தில் தொகுக்கபட்ட இலக்கண நூல் ஆயினும், அதில் இருந்தே முதல் கழக வாழ்வியல், பண்பாடு, இசை ஆதாரங்களை அறிய முடிகிறது. 

தொல்காப்பியத்தில் தேர், வாழ், வில், வேல் ஆகிய படைக் கலன் பற்றியும், யானை, குதிரை ஆகிய விலங்குகளை பயன்படுத்தியதை பற்றியும், யாழ், முழவு போன்ற இசைக் கருவிகளை பற்றியும் குறிப்புகள் அறியப்படுகிறது.

தமிழர்களின் இசைக் கலை, கூத்து பற்றிய செய்திகளையும் இசை பற்றிய நுணுக்கங்களையும் அறிந்து கொள்ளும் சிறந்த காப்பிய நூல் சிலப்பதிகாரமாகும். பழங்காலத்து இசை கருவிகளையும், இசை நுணுக்கத்தையும் அறிந்து கொள்ள உதவும் சிறந்த காப்பியம் ஆகும். தமிழனை நான் தமிழன் என நெஞ்சை நிமிர்த்த செய்யும் மூல காப்பியம் சிலப்பதிகாரமாகும். எனவேதான் ஈ.வெ.ரா. சிலப்பதிகாரத்தின் மீது இளிவான தாக்குதலை தொடுத்தார்.

இலக்கு + இயம் = இலக்கியம் அதாவது ஒரு சமுகத்தின் வாழ்வியல் இலக்கு எதை நோக்கியது என்பதை இயம்புதல் (சொல்லுதல்) இலக்கியம் எனப்படுகிறது. கழக காலத்தில் தமிழ் இசை சிறப்புற்று விழங்கியதை கழக இலக்கியங்கள் ஊடாக அறிய முடிகிறது.

முதல் கழகம் கண்ட குமரிக்கண்டம் கடல் கொந்தளிப்பால் மூழ்கிய பின் கிழக்குக் கரையில் கபாடபுரத்தை தலைநகராக கொண்டு வென்தேர் செழியன் என்னும் பாண்டிய மன்னன் இடைத்தமிழ் கழகத்தை நிருவினான். அகத்தியம் மற்றும் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள் தொகுக்கப்பட்டன. கடல் கொந்தளிப்பால் குமரிக்கண்டம் மூழ்கியதையடுத்து இடம் பெயர்ந்த தமிழினம் புவியில் சிந்து வெளி, சுமேரிய, மாயன் மற்றும் எகிப்திய நாகரிகங்களை தோற்றுவித்தனர்.

கி.மு.2500-2000க்குள் மீண்டும் ஒரு கடல் கொந்தளிப்பு ஏற்பட கபாடபுரமும் அழிந்தது. ஈழம், நாவலந்தீவின் பெரும் நிலப்பரப்பில் இருந்து பிரிந்தது. அதன் பின் இன்றைய மதுரைக்கு கிழக்கே மணவூரில் பாண்டியர்கள் தலைநகரை நிருவி சில நூற்றாண்டுகள் ஆட்சி புரிந்து பின் இன்றைய மதுரைக்கு தலைநகரை மாற்றியதாக திரு.தேவநேய பாவாணர் இலக்கிய சான்று பகர்கிறார். 

அன்று அவர் பகர்ந்த இலக்கிய சான்று இன்று நிருபனம் ஆகி இருக்கிறது. மணவூர் என்பது மருவி இன்று மணலூர் ஆனது. இன்று மதுரையில் மணலூரை சேர்ந்த கீழடியில் தொல்லியல் துறை ஆய்வு செய்த போது சுமார் கி.மு.2500 ஆண்டுகளுக்கும் பழமையான பாண்டியனது தமிழர் நாகரீகம் கண்டறியப்பட்டுள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.

நம் இலக்கியங்களில் வரலாற்றின் உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அவை அனைத்தும் கண்டறியப்படும் பொழுது நிருபனம் ஆகின்றன.
ஆரிய பிராமணர்கள் தமிழகத்துக்குள் புகுந்து வேள்வி முறை வழிபாட்டை ஊக்குவித்து தமிழ் மன்னர்களை மடைமாற்றம் செய்து அரசிடமிருந்து நிலங்களை தானமாக பெற்றனர். இதனால் மக்கள் நிலமற்றவர்களாகும் நிலை ஏற்பட்டது. இந் நிலையில் தமிழகத்தின் எல்லைபுறங்களில் இருந்து வேளிர்களும், குறுநில மன்னர்களும் ஒன்று சேர்ந்து களப்பாலன் என்பவன் தலைமையில் போரிட்டு மூவேந்தர்களையும் வீழ்த்தி களப்பிரர் ஆட்சியை நிறுவி, தமிழகம் பல்வேறு பகுதிகளாக பிரித்து ஆளப்பட்டு வந்தது. 

களப்பிரர் ஆட்சியில் மக்களின் அரசியல், வாழ்வாதாரம் குறித்து அதிகம் அக்கறை காட்டப்பட்டது. ஊன் உண்பது, மது அருந்துவது, பரத்தையரோடு இன்புற்று கழித்திருப்பது, களவொழுக்கத்தில் ஈடுபடுவது போன்ற செயல்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டு ஒழுக்கம் பேணப்பட்டது. நல்லொழுக்கம் சார்ந்த இலக்கியங்கள் படைக்கப்பட்டன.

 நீதி நெறி, நன்னெறி நூல்கள் படைக்கப்பட்டன. ஆசிவகம் என்னும் சமணம் தமிழகத்தில் செல்வாக்கு பெற்றது. களப்பிரர்கள் காலம் தமிழர்களின் அரசியல் வாழ்வியலுக்கு பொற்க்காலம். ஆனால் பிராமணர்களுக்கு இருண்ட காலம். இந் நிலையில் இசை முக்கியத்துவம் இழந்தது.

அதன் பின் களப்பிரர் காலம், மங்க துவங்கிய பின் கி.பி.5-ம் நூற்றாண்டில் இசையானது பக்தி இயக்கங்களின் வாயிலாக வளர துவங்கியது. ஏறக்குறைய 7-ம் நூற்றாண்டுக்குள் சைவமும், வைணவமும் போட்டிப்போட்டு தமிழர்களிடையே செல்வாக்கு பெற்றன. ஆசிவகம் என்னும் சமணம் வீழ்ச்சியுற்றது. நாயன்மார்களின் தேவாரங்கள், ஆழ்வார்களின் பிரபந்தங்கள் ஊடாக தமிழ் இசை வளர்ச்சி பெற்றது.

கி.பி.14-ம் நூற்றாண்டில் டெல்லி சுல்த்தான் தமிழகத்தை ஆக்கிரமித்ததை தொடர்ந்து தமிழகத்தின் கோயில்கள் பல இடிக்கப்பட்டன. தமிழர்களின் கலைகள் நலிவுற்றன. இதுவும் தமிழ் இசைக்கு ஏற்பட்ட இரண்டாவது பின்னடைவு எனலாம்.

இந்நிலையில் வடுக விஜய நகர பேரரசு தமிழகத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. அது கோவில்களுக்கு ஆதரவு தந்தது, என்றாலும், தமிழிசைக்கு ஆதரவு தரவில்லை. அதற்கு மாறாக, தெலுங்கு மொழிக்கும், இசைக்கும் ஆதரவு தந்தார்கள். தமிழ் புலவர்கள் நாயக்க மன்னர்களால் ஆதரிக்கபடாத காரணத்தால், தமிழ் புலவர்களால் வளமான காப்பியங்களையோ, தரமான இலக்கியங்களையோ படைக்க முடியவில்லை வாழ்வுக்கு வழியின்றி துன்புற்ற நிலையில், தங்களின் வறுமையை போக்க, தனி மனிதர்களை பாராட்டி பரிசு பெறும் இலக்கியங்களை படைத்தனர். இன்றும் கூட அது தொடர்வதை பார்க்கிறோம்.

இந்நிலையில் நாயக்கர் ஆட்சியில் ஆலயங்கள் மறுமலர்ச்சி பெற்றமையால், ஆலயத்தை ஒட்டி வாழ்ந்து வந்த தமிழ் பண்ணிசையானது அன்றைய நாட்டார் அம்சங்களையும் கலந்து கொண்டு புது வடிவம் பெற்றது. இந்த புது பண்ணிசை மரபு கர்நாடக இசைக்கு ஒரு முன்னோடியாக அமைந்தது.கர்நாடக இசை என்பது பழந்தமிழ் பண்ணிசைக் கூறுகளின் நுணுக்கங்களை அடிப்படை வேர்களாக கொண்டு, இங்கிருந்த நாட்டார் இசைக் கூறுகளுடன் வட இந்திய இசைக் கூறுகளையும் கலந்து, உருவான இசை வடிவம் ஆகும். அதன் மொத்த அடிப்படையும் தமிழ் இசையே ஆகும். 

சிலப்பதிகாரத்தில் இடம் பெறும் இசை குறித்த செய்திகள் இன்றைய கர்நாடக இசையின் மூல இலக்கணமாக இருப்பதை திரு.ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் சுட்டிக் காட்டி உள்ளார்கள்.இன்றைய இராகங்கள் தான் அன்று பண்களாக இருந்தன என்று சுவர ஆய்வு மூலம் நிருபித்து இருக்கிறார். இராகங்கள் உண்டுபண்ணும் முறை, பாடும் முறை ஆகியவற்றை பழந்தமிழ் இசை இலக்கணத்தில் இருந்து ஆய்வு செய்து விளக்கிக் காட்டியுள்ளார். 

வடக்கே போற்றப்படும் இந்துஸ்தானி இசையும், தமிழ் இசையின் மூலத்தில் தோன்றிய தமிழ் இசையே என நிருபித்துக்காட்டியுள்ளார்.தமிழில் இசை பற்றி ஒன்றும் இல்லை என்றிருந்த காலத்தில் திரு.ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் உலகில் தோன்றிய இசைகளுக்கெல்லாம் முதலும், மூலமும் ஆனது தமிழ் இசை என நிருபித்துக் காட்டியுள்ளார். தற்கால இசை நூல்களிலேயே முதல் நூலாக பண்டிதர் இயற்றிய கர்ணாமிருத சாகரம் என்னும் நூலே போற்றபடுகிறது.

 தமிழ் இசையின் தொன்மையையும், அதன் மூலத்தையும் உலகிற்கு வெளிக் கொணர்ந்த திரு.ஆபிரகாம் பண்டிதரை போற்றுவோம் !கர்நாடக இசை என்பது தொன்மை இசை என்ற பொருளிலேயே வழங்கப்படுகிறது. இன்னும் விளக்கமாக சொல்வதானால் கரு என்றால் மறைந்த, அழிந்த, மங்கிய, இருண்ட என்ற பொருளில் கடலில் மூல்கிப் போன அல்லது மறைந்து போன நாடான குமரி நாட்டின் இசை எனலாம் அதாவது கடலில் மூழ்கி போன பாண்டிய நாட்டின் இசை என்ற பொருளில் பண்டைய நாட்டின் இசை, கருநாட்டின் இசையானது. 

அது சொல் வழக்கில் கருநாடக இசையானது. வட சொல்லில் கருநாடக சங்கீதமானது.தமிழர்களே ! கருநாட்டின் இசை நம் பாண்டிய நாட்டின் இசையான பண்டைய தமிழ் இசையே ! தமிழர்களாகிய நாம் இசையை கேட்டு ரசிக்கும் கூட்டமாக மட்டுமே இருந்து வருகிறோம். இசையின் அறிவியல் நம் முன்னோர்கள் நமக்கு அருளிய சொத்தாகும். அதை வரலாறு நெடுகிலும் ஏற்ப்பட்ட இயற்கை அழிவிலும், அயலான்களின் (குறிப்பாக வடுகர்களின்) ஆட்சி அதிகாரத்திலும் வந்தவர்களிடம் இழந்து விட்டு அடிமைகளாகவே வாழ்ந்து வருகிறோம்.

இனிமேல் ஆயினும் நம் வாரிசுகளையாவது, இசை நம் பாட்டன், முப்பாட்டன் சொத்து என உணரச் செய்து, இசை, பாடல், நடனம், நாட்டியம் என அனைத்தும் கற்றறியும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம். தமிழகத்தில் தமிழ் தேசிய உணர்வுள்ள தமிழனின் ஆட்சியை உருவாக்குவோம். குழந்தை பருவம் முதல் மேல்நிலை கல்வி வரை இசையை இலவசமாக ஒரு துணை பாடமாகக் கொண்டு படிக்கச் செய்து, இசை அறிவியல் உணர்ந்த மேம்பட்ட மனிதர்களாக்குவோம் ! மேதைகளாக்குவோம் !! இசையால் உலகை ஆள்வோம் !!!

தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை



ஈழம்-புடொட் அமைப்பின் வரலாறு.!!

எல்லோரும் தலைவர்கள் ஆக முடியாது என்பதற்கு அமரர் உமாமகேஸ்வரன் அவர்கள் ஒர் உதாரணம் அவரிடம் இருந்த ஆளுமை, ஆற்றல், துணிவு, பணிவு, பண்பு, சாணக்கியம் இவை எல்லாம் இன்று உள்ள தலைவர்கள் பலரிடத்திலும் இல்லை என்பதுவே வெளிப்படை.
தெல்லிப்பளை வறுத்தலைவிளானை பிறப்பிடமாக கொண்ட உமா அவர்கள் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் பழையமாணவனும், சிறந்த உதைபந்தாட்ட வீரரும் ஆவார். 



நில அளவையாளரான உமாமகேஸ்வரன், அரசின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளிற்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்ததுடன். இளைஞர் அணிய+டாக தனது அரசியல் பணிகளையும் முன்னெடுத்து வந்ததுடன், தென்னிலங்கையில் முற்போக்கு சக்திகளின் ஆதரவையும் தமிழ் மக்களின் விடுதலையின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த ஒர் உன்னத புருஸர்.

அரசின் கல்வி அடக்குமுறை, அரசியல் மறுப்புக்கு எதிராக போராடிய போராளிகளில் முதன்மையானவரும் ஆவார். வடபகுதியில் பல்வேறு குழுக்களாக செயற்பட்ட இளைஞர்களை ஒன்றுதிரட்டி விடுதலை புலிகள் என்ற விடுதலை இயக்கத்தை தோற்றுவித்து அந்த அமைப்புக்கு முதல் தலைவராகவும் இருந்து வழிநடாத்திய தீர்க்கமான தலைவரும் ஆவார்.

தமிழீழ விடுதலை புலிகளின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்த அமரர் உமாமகேஸ்வரன் அவர்கள் பலஸ்தீன விடுதலை இயக்கங்களினால் பயிற்றப்பட்ட போராளியும் ஆவார். இராணுவ தந்திரங்களையும், நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டு தாயகம் திரும்பியிருந்த வேளையில் அவர் மீது எண்ணற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி உமா தலைமையிலான முதலில் “புதிய தமிழ் புலிகள்” (NTT), பின்னர் “தமிழீழ விடுதலைப் புலிகள்”என்ற அந்த உன்னதமான போராட்ட அமைப்பை சீர்குலைத்து தமிழ்மக்களின் ஒன்றுபட்ட விடுதலைக்கு எட்டப்பர்கள் சிலர் குந்தகம் செய்தனர். இந்த எட்டப்பர்களின் நோக்கங்களை புரிந்து கொள்ள தவறிய வே.பிரபாகரனும் அந்த கோடாலி காம்புகளின் பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாந்து போனார்.

ஈற்றில் விடுதலைப் புலிகளின் பெயரையும் விட்டுதர வேண்டும் என்று பிரபாகரனும் அவருக்கு உசுப்பேத்திய கூட்டமும் முரண்டு பிடித்து கொண்ட நிலையில் தான் தமிழீழ விடுதலை புலிகள் என்ற பெயரை உமாமகேஸ்வரன் அவர்கள் விட்டு கொடுத்து விட்டு தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (PLOTE) என்ற மிகப்பெரும் மக்கள் சக்தியுடன் கூடிய மக்கள் போராட்ட அமைப்பினை புதியபாதை சுந்தரம் போன்றவர்களுடன் இணைந்து கட்டியமைத்து அந்த அமைப்புக்கு செயலதிபராகவும் இருந்தவர்.

அவரது ஆளுமை மிக்க தலைமை திறனால் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்திற்கு பக்கதுணையாக பல்வேறு மாணவர், தொழிசங்க அமைப்புக்களையும் அமைத்து மிகப்பெரும் மக்கள் போராட்டத்திற்கான தயாரிப்பு வேலையில் ஈடுபட்ட போது அவர் மீது மீண்டும் உட்கட்சி ஜனநாயகம் என்று கூறி மற்றுமொரு உடைவுக்கு வழியேற்படுத்தினர் ஜனநாயக விரும்பிகள் என்று கூறி கொள்ளும் சக்திகள். இன்றுவரை அந்த ஜனநாயக சக்திகள் பத்திரிகை வெளியிடுவதும், இணையத்தளங்களில்; அமரர் உமாமகேஸ்வரனை பற்றி எழுதி தூற்றுவதை விடுத்து தமிழ் மக்களின் விடியலுக்கு உரிய எந்தவொரு பணியையும் முன்னெடுக்கவும் இல்லை, முன்னெடுக்க போவதுமில்லை.

பல ஆயிரக்கணக்கான போராளிகளை இணைத்து பலஸ்தீன விடுதலை அமைப்புக்களினால் இராணுவ பயிற்சிகள் பெறுவதற்கு வழியேற்படுத்திய முகுந்தன், பெரியய்யா, பெரிசு என்று பல்வேறு பெயர்களில் பாசத்துடனும் பரிவுடனும் அழைக்கப்பட்ட “உமா” அவர்கள் தமிழ் மக்களின் விடுதலை குறித்து தெளிவான தூரநோக்க பார்வையை கொண்டிருந்தார்.

வெறும் இராணுவ சாகசங்களால் மட்டும் தமிழ்மக்களின் உரிமையை வென்றிட முடியாது என்பதில் திடமாக இருந்ததுடன், தென்னிலங்கையில் உள்ள முற்போக்கு சக்திகளையும் அரவணைத்து அவ் இளைஞர்களிற்கும் இராணுவ பயிற்சி வழங்கி ஒட்டுமொத்த அடக்குமுறைக்கு எதிராக போராட்டத்தை முன்நகர்த்தியவர்.
தற்காலிக இராணுவ வெற்றிகள் எமது மக்களை அழிவுக்கு உட்படுத்துமே தவிர வேறு எதனையும் பெற்று தராது என்பதில் உறுதியாக இருந்த செயலதிபர் உமா அவர்கள். ஓட்டு மொத்த மக்கள் போராட்டத்திற்கான தயாரிப்பில் ஈடுபட்டு அவற்றுக்கு தேவையான தயார்படுத்தலில் ஈடுபட்டிருந்தார். ஆதன் ஒர் அங்கமாகவே விடுதலை போராட்ட வரலாற்றில் முதன் முறையாக வெளிநாடு ஒன்றில் இருந்து எமது விடுதலைக்கான ஆயுத இறக்குமதியை மேற்கொண்டவர்.

இதனை சகித்து கொள்ளமுடியாத சக்திகள், அந்த ஆயுத இறக்குமதியை காட்டிக் கொடுத்து அதற்கு சாவுமணி அடித்தனர். இதனையும் மீறி மொறீசியஸ் நாட்டிற்க உத்தியோகபர்வ விஜயம் மேற்கொண்டு எமது விடுதலை போராட்டத்தை அவ்நாடு அங்கீகரிக்கவும் வழிகோலியவர்.

இவை மட்டுமல்ல தமிழ் மக்களின் உரிமை போராட்டத்திற்கு சவாலாக இருந்த பல சதிவலைகளை முறியடித்து எமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று எண்ணி அதற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டதே மாலைதீவு மீதான இராணுவ புரட்சியாகும்.

இவ்வாறாக பல முனைகளில் தமிழ்மக்களின் போராட்ட பாதையை முன்னெடுக்க முனைந்த மக்கள் தலைவனை அழிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்த ஏகாதிபத்திய சக்திகள் அவரை கொலை செய்து தமிழ் மக்களின் விடுதலைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இதற்கு துணைபோன எட்டப்பர் கூட்டம் அன்று தாம் விட்ட தவறை எண்ணி இன்று ஏப்பம் விடுவதாக தெரிய வருகின்றது.

எல்லோரும் தலைவர்கள் ஆக முடியாது என்பதற்கு அமரர் உமாமகேஸ்வரன் அவர்கள் ஒர் உதாரணம் அவரிடம் இருந்த ஆளுமை, ஆற்றல், துணிவு, பணிவு, பண்பு, சாணக்கியம் இவை எல்லாம் இன்று உள்ள தலைவர்கள் பலரிடத்திலும் இல்லை என்பதுவே வெளிப்படை..



ஈழம்-புடொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரன் கொலை!!

சிலர் இப்போதும் உள் பகை என்கிறார்கள். உள் பகையோடு அவரை நெருங்க முடியாது. அவரை நெருங்க நய வஞ்சகத்தால் மட்டுமே முடியும். அவரை நம்பியோரை மட்டுமே அருகே வைத்திருந்தார். அருமையான மூளைச் சலவை. கொலையின் பின் நாடு கடக்கிறார்கள்? அவரைக் கொன்றவர்கள் இந்தியாவுக்கு இலகுவாக செல்ல முடிகிறது? அங்கு தொடர்ந்து அவர்களால் எந்த ஆபத்தும் இல்லாமல் இருக்க முடிகிறது? ஒரு சிலர் வெளிநாடுகளுக்கு செல்ல முடிகிறது? இதுவெல்லாம் எப்படி சாத்தியம்? உட்பகையென்றால் கொலையாளிகளை யாரும் காப்பாற்ற மாட்டார்கள்? உமா தவறிழைக்காதவரல்ல. அவரைக் கொலை செய்யும் அளவுக்கு உட் பூசல் இருக்கவில்லை. புத்தி சீவிகள் இருந்தால் சிலருக்கு பிரச்சனை. அதற்கு முடிவு கட்டி விட்டார்கள்!

றோ தொடர்பு கொண்ட புளொட் தலைவர் யார்? றோ சாதாரமானவர்களை வைத்து உமாவை கொல்ல முடியாது. அடுத்த இயக்கங்களாலும் முடியாது. காரணம் உமாவை நன்கு தெரிந்தவர்களுக்கு அவரது திறன் தெரியும். ஒரு பார்வையில் சுற்றியுள்ள அனைவரையும் கணிக்கும் கண்கள் அவருடையது. எனவே வெளியாரால் உமாவை போடவே முடியாது. எனவே உமாவோடு இணைந்தே இருப்பவர்களை வைத்தே இக் காரியத்தை செய்ய வேண்டும். அவரோடு இணைந்திருக்கும் நபர்களை மன மாற்றம் செய்ய சாதாரமானவர்களால் முடியாது.


அதற்கும் நம்பும் தலைமைத்துவ குணம் வேண்டும். தவிர கொலையாளிகளை உடனடியாக நாட்டை விட்டு விமானத்தில் சென்னைக்கு அனுப்புவதற்காக றோவோடு பேசி செயல்படக் கூடிய அந்த நபர் நம்பகமான மொழி ஆற்றல் உள்ளவராக இருக்க வேண்டும். நம்பகமற்றவர்களோடு றோ டீல் பண்ணாது. றோ படுகொலை செய்ய சதி செய்தது என்கிறீர்கள். அந்த இடைப்பட்ட தரகர் யார்? இன்னும் வெள்ளை வேட்டியோடு திரிகிறார்களா? இல்லை இல்லையா? துரோகிகள் தூரத்தில் இல்லை....

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தோற்றம்!

இணையத்தில் வெளியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தொடர்பான நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள் எமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதி வரலாற்றை மிகச் சரியாகவே மீள் பரிசீலனைக்கும் மீளாய்வுக்கும் உட்படுத்தி உள்ளது. இன்று மூன்று தசாப்தங்கள் கடந்துவிட்ட போதும் அன்றைய தவறுகளில் இருந்து இன்று போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. அதனால் இந்த வரலாற்றுப் பதிவுகள் இன்றைய காலகட்டத்தின் மிக அவசியமான தேவையாக உள்ளது.

மே 18 2009ல் முடிவுக்கு வந்துள்ள தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் சரி பிழைகளை நின்று நிதானித்து ஆராயாமல் மீண்டும் எழுந்தமானமான கோசங்களின் அடிப்படையில் அடுத்த நகர்விற்கு தயாராகி உள்ளனர். இன்றைய மோசமான முடிவுக்கு பொறுப்பான அதே அரசியலும் அரசியல் சக்திகளுமே மீண்டும் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முற்பட்டு உள்ளனர். கடந்தகால தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டம் அவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக அவர்களுடைய உரிமைகளைப் பறிக்கவே வழிவகுத்தது.

போராட்டத்தை முன்னெடுத்த நான் உட்பட தற்போது எமது தாயக மக்களில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வந்து பாதுகாப்புப் பெற்றுக் கொண்டோம். அன்று எம்மை நம்பிய மக்கள், எம்மால் கைவிடப்பட்டனர். அன்று அந்த மக்களுடன் நின்று போராட்டத்தை சரியாக முன்னெடுக்கத் தவறிய நாம் (அதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்) இன்று ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து அந்நியப்பட்டு, எமது குற்ற உணர்வின் காரணமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்படுகிறோம் என்றே தோன்றுகிறது.

அன்று பக்கதில் இருக்கும்போதே மக்களைப் புரிந்துகொள்ளத் தவறிய நாம், இன்று ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் நின்று இணையத்தை வைத்துக் கொண்டு அவர்களுடைய உணர்வுகளைப் புரிவோம் என்ற, இணையக் காதலிலும் கீ போட் புரட்சியிலும் என்னால் நம்பிக்கை வைக்க முடியவில்லை. எமது நடவடிக்கைகளின் விளைவுகளை உணராமல் போராட்டத்தையும் புரட்சியையும் ஏற்றுமதி செய்ய எண்ணும் புதிய பிளாவில் பழைய கள்ளுண்ணும் முன்னாள்களின் சலசலப்புகள், இன்னுமொரு அரசியல் முள்ளிவாய்க்காலை நோக்கி எமது மக்கள் நகர்த்தப்படுகிறார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதனால் எமது கடந்தகால வரலாற்றை மிகத் துல்லியமாக ஆராய்ந்து வரலாற்றை சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இக்கட்டுரையைப் பதிவு செய்கிறேன். எனது பதிவு ஒரு சிறு முயற்சியே என்பதால் ஏனையவர்களது ஒத்துழைப்பையும் நாடுகிறேன். இப்பதிவினை நான் தேசம்நெற் பின்னூட்ட களத்தில் பதிவிட்ட அதே பெயரிலேயே பதிவிடுகிறேன். தேசம்நெற் ஆசிரியர் குழு என்னை அறியும். தகுந்த நேரம் வரும்போது என்னை அடையாளப்படுத்திக் கொள்வேன்.

முன்னுரை:
தமிழ்பேசும் மக்களின் போராட்டம், அகிம்சைப் போராட்டமாகத் தொடங்கி, ஆயுதப் போராட்டமாக பரிணமித்து, இன்று முள்ளிவாய்க்கால் வரை வந்து மூழ்கடிக்கப்பட்டது. இந்நிலையில் ஆயுதப் போராட்டம் நடத்திய ஒவ்வொரு இயக்கமும் தங்களின் உருவாக்கங்களில் இருந்து அழிந்தது அல்லது அழிக்கப்படும் வரை, இன்று சுயவிமர்சனம் செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் நான் சார்ந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (கழகம்) சார்பாக எனது வரலாற்றுக் கடமையை நிலைநிறுத்தி எம் உயிருடன் இருக்கும் சாட்சிகளைக் கொண்டும், தெரிந்த தகவல்களைக் கொண்டும் இப்பதிவினை மேற்கொள்கிறேன்.

எமது போராட்டத்தில் 1972 – 73ற்கு பின் வன்முறையோடு நடந்த ஆயுதக் கலாச்சாரமே இயக்கங்களாக சராசரி மக்களால் ஆரவாரிப்பாக (பெடியங்கள் தமிழீழம் பெற்றுத் தருவார்கள்) பேசப்பட்டது. இவ்வாறான இயக்கங்களில் ஒன்றான கழகம், ஆரம்பத்தில் அடித்தள மக்கள் மத்தியில் நின்று கட்டமைக்கப்பட்டது. காந்தீயம் என்ற அமைப்பின் வட கிழக்கிற்கான நிர்வாக கட்டமைப்பு வேலைத் திட்டங்களின் ஊடாக மக்களை மையப்படுத்திய இந்நகர்வு உள்மட்டத்தில் கழகத்தை உருவாக்கியது என்றால் மிகையில்லை. கழக உறுப்பினராக இருந்த சிலர் ஆரம்பத்தில் ஆயுதத்தை கையிலெடுத்தாலும்ஆரம்பகால உறுப்பினர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், மக்கள் மத்தியில் நின்று செயற்பட்டு உள்ளனர்.

பல சம்பவங்கள்நகர்வுகள்திட்டமிடல்கள்செயற்பாடுகள்தீர்வுகள்முடிவுகள் என வரலாறு ஓடிகொண்டிருக்கும் போது, இதில் சேகரிக்கப்படும் அல்லது பதியப்படும் ஆதாரப்படுத்தப்படக் கூடிய உண்மைகளும் நிகழ்வுகளும் தொகுக்கப்பட்டு, சமூகத்தில் பொதுவில் வைக்கப்படும் போதுதான் ஒரு வரலாறு முழுமையடைகின்றது. வரும் சந்ததிக்கும் நாம் கையளிக்கும் ஆவணமாகின்றது.

சமுதாயமானது ஆக்கத்தாலும்அழிவாலும் வரலாற்றில் நகர்த்தப்படுவது கண்கூடு. மனிதனின் உருவாக்கத்தில் வரலாறு முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றது. எனவே நாம் எமது அனுபவங்களை வரலாறாக்கி எமது அடுத்த சந்ததிக்கு கையளிப்பதுவே ஆரோக்கியமான அடுத்த கட்ட நகர்விற்கு இட்டுச்செல்லும். எனவே எமது இன்றைய வரலாற்றுப் பதிவுகள் நாளைய தமிழ் மனிதனின் உருவாக்கத்தில் மிக முக்கியமானது.

முளைவிட்ட எமது போராட்டம்:
தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டமானது 1948 ற்குப் பின்னால் குறுந்தேசியவாத தலைமைகளினால் அகிம்சை வழிகளால் வழிநடத்தப்பட்டமை நாம் அறிந்ததே. இத்தலைமைகள் பாராளுமன்ற ஆசனங்களை குறிக்கோளாக வைத்து வட கிழக்கில் வாக்கு வங்கிகளை நிரப்பி அமோகமான மக்கள் ஆதரவுடன் பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றின. இவர்கள் எதிர்க்கட்சி என்ற நிலைவரை தங்கள் பாராளுமன்ற அரசியலை முன்னெடுத்தனர். இந்த பாராளுமன்றக் கதிரைகளைக் கைப்பற்றுகின்ற விடயமே விடுதலைப் போராட்டம் என்ற வரையறைக்குள்ளேளே தமிழ் குறும்தேசியவாதக் கட்சிகள் தங்களை வளர்த்துக்கொண்டன.

இதனால் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அமைப்புகளில் சிலர்- பல மட்டத்திலும், பல மாவட்டத்திலும்- தன்னிச்சையாக செயற்படத் தொடங்கினர். இக்காலகட்டத்தில் இலங்கை பேரினவாத அரசு இனரீதியான தரப்படுத்தலை அறிமுகப்படுத்தியது. பின் அதனைப் பிரதேசரீதியான தரப்படுத்தலாக மாற்றியது. இதனால் யாழ் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே கட்டாய சிங்கள மொழிக் கொள்கையால் வேலைவாய்ப்பு தவிர்க்கப்படுதல், 1948லிருந்து திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் தமிழ் பிரதேச விகிதாசாரங்கள் மாற்றப்படல் போன்ற செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் இலங்கை அரசு மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் சமூக பொருளாதார கல்வி நிலைமைகளில் சீர்குலைவுகள் ஏற்படுவது தொடர்ந்தது.

போராட்டம் ஆயுதவடிவம் எடுத்தது:
1970 – 1971
காலகட்டத்தில் இலங்கையில் சிங்கள மாணவஇடதுசாரிகளின் சேகுவோரா போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணமித்தது. நாட்டில் ஆயுத கிளர்ச்சியாக வெடித்தது. அன்றைய உலகச் சூழலும் ஆயுதக் கிளர்ச்சிகளுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. இது தமிழ் இளைஞர்கள் மத்தியிலும் ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. இந்தக் காலகட்டத்தில் தமிழ் தலைமைகளை நம்பியிருந்ததமிழரசுக் கட்சி இளைஞர் அமைப்புக்களில் தீவிரமாக செயற்பட்ட இளைஞர்கள்தங்கள் தலைமைகளில் மெல்ல மெல்லமாக நம்பிக்கையிழந்தனர். அவர்கள் ஆயுதப் போராட்டங்களின் பக்கம் தங்கள் ஈடுபாடுகளை காட்டத் தொடங்கினர்.

இதில் தென்பகுதியின் ஆயுதப் போராட்டங்களின் சில தொடர்புகளின்நிமித்தம் யாழ் உரும்பிராயைச் சேர்ந்த சத்தியசீலனும் (தற்போது லண்டனில் வசிக்கின்றார்.) அவரைத் தொடர்ந்து உரும்பிராய் பொன்னுத்துரை சிவகுமாரனும் (இவர்தான் முதல் தற்கொலைப் போராளி. யூன் 05 1974ல் எதிரிப் படைகளிடம் மாட்டிக்கொள்ளாமல் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டார்) உட்பட சில இளைஞர்கள் ஆயுதப் போராட்ட வழிமுறையைத் தேர்ந்தெடுத்தனர்.

அரசியல் தலைவர்களை நோக்கி ஆயுதங்கள் திரும்பின:
தமிழ் தலைமைகளில் இருந்து நம்பிக்கை இழந்த இளைஞர்கள் புரட்சிக் கருத்துக்களைசெயற்பாடுகளை தத்தமது குணாதிசயங்களுக்கேற்ப உருவகப்படுத்திக் கொண்டனர். ஆரம்பத்தில் வெவ்வேறு குழுக்களாக செயற்பட்டனர். இத்தீவிர இளைஞர்கள் ஆரம்பத்தில் அரசு சார்பான தமிழ் மந்திரிகள், எம்.பி க்களுக்கு குண்டெறிதல், சிறு ஆயுதங்கள்காட்டுத் துவக்கு பாவித்து சுடுதல் எனச்செயற்பட்டனர்.

அடுத்து 1973ல் மந்திரி குமாரசூரியர் ஊர்காவற்துறையில் தபால் நிலையம் ஒன்றினைத் திறப்பதற்காகச் சென்று வரும் வழியில், பண்ணைப் பாலத்தைத் தகர்த்து கொலை செய்ய முயற்சித்தனர்.

யூலை 27, 1975ல் அப்போதைய யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலை செய்யப்பட்டார். இதுவே புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது இராணுவ நடவடிக்கையாக அமைந்தது.

இளைஞர்கள் கைது:
இவ்வாறான ஆயுத நடவடிக்கைகளின் எதிர்விளைவாக இலங்கை அரசு இளைஞர்களை இச்சம்பவங்களிலோ அன்றி சந்தேகங்களிலோ கைதுசெய்து சிறைக்கும் சித்திரைவதைக்கும் உட்படுத்தினர்.

குமாரசூரியர் கொலை முயற்சி தொடர்பாக ராஜன் (ஞானசேகரன்) மற்றும் கரையூரைச் சேர்ந்த ஆசீர்வாதம் தாசன் ஆகியோர் கைது செயப்பட்டனர். 1973ஆம் ஆண்டு தை 16ம் திகதி இச்சம்பவம் நிகழ்ந்தது.

இதில் குறிப்பிடத்தக்கதாக துரையப்பா கொலைக்கு பிரபாகரன் பண உதவியை கேட்க, சந்ததியார் (இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினுள் இடம்பெற்ற உட்படுகொலையில் படுகொலை செய்யப்பட்டார்.) தனது சகோதரியின் சங்கிலியை அடைவு வைத்து கொடுத்ததால் பிடிபட்டார். பற்குணராஜா, கலாபதி, கிருபாகரன் (தற்போது பிரான்ஸில் இருப்பவர்) பிடிபட்டு சிறையிருந்தனர். கொலையின் முக்கிய நபரான பிரபாகரன் தப்பிவிட்டார்.

இதுபோல் வெவ்வேறிடங்களிலும் சில சம்பவங்கள்தீவிரவாதங்கள்சந்தேகங்கள் என்று பரவலாக இளஞைர்கள் கைதாகியிருந்தனர்.

வட்டுக்கோட்டை தீர்மானத்தை (மே 14, 1976) கூட்டணியினர் அகிம்சை போராட்டமாக முன்னெடுத்த நிலையிலும், அதை முன்னின்று நடத்திய கூட்டணி இளைஞர்களும் பேரவையினரும் கைதாகினார்கள். இதில் உமா மகேஸ்வரனும் (1976) கைதாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசின் எந்த கைதின் போதும் பிரபாகரன் ஒருபோதும் பிடிபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட இளைஞர்களின் விடுதலை:
1976
ல் இலங்கையில் நடைபெறவிருந்த அணிசேரா நாடுகளின் உச்சி மகாநாட்டை காரணம் காட்டி இதற்கு முன்பே சிறையிலிருக்கும் போராட்டம் சம்பந்தமான அனைத்து தமிழ் இளைஞர்களும் விடுதலை செய்யப்பட வேண்டுமென தமிழர் விடுதலை கூட்டணியால் இலங்கை அரசுக்கு கோரிக்கைவிடப்பட்டு பலவழிகளில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் நிமித்தம் 1976 ஆவணியில் சகல தமிழ் இளைஞர்களும் விடுவிக்கப்பட்டனர்.

இதில் துரையப்பா கொலைவழக்கு மிக கடுமையாகப் பார்க்கப்பட்டு பலதடவை நீதிமன்றத்திற்கு விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்ட வண்ணமே இருந்தது. அதுபோல் குமாரசூரியர் கொலைமுயற்சி 3 வருடம் 8 மாதம் விசாரணைக்கு எடுக்கப்படாமலேயே கிடப்பில் கிடந்தது. எனவே இந்த இளைஞர்களின் ஒட்டுமொத்த விடுதலை கூட ஒரு திருப்பு முனையாக இருந்திருக்கலாம்.

படித்த வாலிபர் திட்டம்:
சிறையிலிருந்து வெளியே வந்த சந்ததியார், ராஜன், சிறிசபாரத்தினம் உட்பட்ட சில இளைஞர்கள் விசுவமடுபடித்த வாலிபர் திட்டம்அமைக்கப்பட்ட இடத்தில் முகாம் அமைத்து அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதம் மற்றும் அரசியல் பயிற்சிகள் வழங்கினர். இதில் யாழ்ப்பாணத்தில் இருந்தும் பல இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதன்போது 17 வயதில் படித்துக் கொண்டிருந்த யாழ் நகரப் பகுதியை சேர்ந்த மாணிக்கம்தாசன் இணைந்து கொண்டார். பின் தாயார் தேடிவந்து கட்டாயப்படுத்தி திருப்பி அழைத்துச் சென்றுவிட்டார். மேலும் இவ் வேலைத்திட்டத்தில் ஒபராய்தேவனும் (பின்நாளில் டெலா இயக்கத் தலைவர்) ஒரு மாதம்வரை பங்காற்றினார். இக்காலப்பகுதியில் இவர்கள் யாரும் ஒரு கட்டமைக்கப்பட்ட அமைப்பாகச் செயற்படவில்லை. ஒரு குழுவாகவே செயற்பட்டனர். அதற்கு பெயரோ தலைமைத்துவமோ இருக்கவில்லை.

படித்த வாலிபர் திட்டம், 1966 – 1970ல் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில், டட்லி சேனநாயக்கா பிரதமராக இருக்கும் போது, அறிமுகப்படுத்திய திட்டம். இலங்கையில் எல்லா மாகாணங்களுக்குமான இளைஞரை மையப்படுத்திலாண்ட் ஆமிதமிழில்விவசாய படைஎன்ற திட்டத்தின் அடிப்படையில் புதுகிராமங்கள் இளைஞர்களால் உருவாக்கப்பட்டது. அதில் உபஉணவுப் பயிர்களை உருவாக்குவதென்று, காணிவெட்டி களனி அமைக்கப்பட்டது. அதனை செய்வதற்கு ரக்ரர் முதல் கொண்டு எல்லா பொருளாதார வசதிகளும் இளைஞர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டது. மேலும் அந்த இளைஞர்களுக்கான சீருடையாக ராணுவ உடையின் வடிவமைப்பில் அமைக்கப்பட்ட உடையும் வழங்கப்பட்டது. இதன் மூலம் மண்வெட்டியுடன் ஒரு கிராமத்து ராணுவ கட்டமைப்பு ஒன்றை உருவாக்கினர்கள்.

இதன் அடிப்படையில் தமிழ் பிரதேசத்தில் விசுவமடு, முத்தையன்கட்டு, மிருசுவில் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் இளைஞர்கள் இந்த வேலைத்திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர்.

1970ல் சிறிலங்கா சுதந்திரகட்சி ஆட்சிக்கு வந்து சிறிமாவோ பிரதமராக வந்ததும் ஐக்கிய தேசிய கட்சியின் இந்த திட்டத்தை இலங்கை முழுதும் ரத்து செய்து, அதற்கு பதிலாக இந்தபடித்த வாலிபர் திட்டம்என்ற ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு ஒவ்வொரு இளைஞருக்கும் 2 ஏக்கர் காணி கொடுக்கப்பட்டு மற்றைய சலுகைகள் சீருடைகள் எல்லாம் நிறுத்தப்பட்டது.

தமிழ் குடியேற்றத்திட்டங்களும் பண்ணைகளும்:
இதே காலகட்டத்தில் மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து 20 மைல் தொலைவிலுள்ள மதுரு ஓயா அருகிலுள்ள புனானை என்ற எல்லைக் கிராமமொன்றில் சிங்களக் குடியேற்றத்தை தடுக்க மரியசிங்கம் இஞ்சினியர் அவர்களால் தமிழ் குடியேற்ற வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது. அது பாதியில் கைவிடப்பட்டதும், அதிலும் சந்ததியார், ராஜன், சிறி முதலானோர் இணைந்து கொண்டனர். இங்கு பல இளைஞர்களும் தொண்டராகினர். இதில் சந்திவெளியைச் சேர்ந்த சின்னத்துரை என்பவர் பின்னாளில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து கொண்டார். (மே 18ற்கு முற்பட்ட புலிகளின் கட்டமைப்பில் நீதியரசர் பதவியை வகித்தவர் ஃபாதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரைதான்.)

இந்தத் தமிழ் குடியேற்றத் திட்டத்தில் தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த பலரும் இணைந்தனர். இதில் பின்னாளில் கழகத்தின் உறுப்பினரான வாசுதேவாவும் இணைந்து செயற்பட்டார். இக்குடியேற்றத்திற்கு பட்டிருப்பு கணேசலிங்கம் (பாராளுமன்ற உறுப்பினர்) செங்கலடி, சம்பந்தமூர்த்தி என்போரும் நிறையவே ஒத்துழைப்புக் கொடுத்தனர். மேலும் குடத்தனையை சேர்ந்த அம்பன் என்ற மோகனசுந்தரம் என்பவரும் தொண்டராக வந்து இயங்கியமை குறிப்பிடத்தக்கது.

இப்படியாக பரவலாக குடியேற்றங்களும் விவசாய பண்ணைகளுமாக இளைஞர்கள் இயங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் 1977 இனக்கலவரம் உருவாகியது. இதன்போது கணிசமான மலையகத்து மக்கள் இடம்பெயர்ந்தனர். இதனை மையப்படுத்தி வவுனியாவை நோக்கி குடியேற்றங்கள் பரவலாக நடந்தன.

1960ம் ஆண்டு நீதிராஜா என்பவரின் தலைமையில் சில படித்த இளைஞர்கள் சேர்ந்து ஒரு பெரும் வேலைத்திட்டத்தில் இறங்கினர். அதாவது திருகோணமலையில் ஒரு மருத்துவபீட பல்கழைக்கழகமும், வவுனியாவில் விவசாய பீட பல்கலைக்கழகமும் உருவாக்குவதென உற்சாகமாக செயற்பட்டனர். இதன் முதற்கட்டமாக நெடுங்கேணியில் இருந்து 12 மைல் தொலைவில்வெடிவைத்த கல்என்ற கிராமத்தில் காணி வாங்கிவிடப்பட்டது. பின் அரசியல் தடைகள் ஏற்பட்டு அந்த முயற்சிகள் தடைப்பட்டது.

எனவே வெற்றிடமான அந்தக் காணியை 1977ல் சந்ததியார், ராஜன், சிறிசபாரட்ணம் ஆகியோர் சேர்ந்து பொறுப்பெடுத்து இடம்பெயர்ந்து வந்து கொண்டிருக்கும் மலையக மக்களுக்கான விவசாய குடியேற்ற திட்டமாக செயற்படுத்தினர். இந்தப் பண்ணை தான்நாவலர் பண்ணைஎனப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தில் வெளியே இருந்து வந்த இளைஞர்களுடன் வவுனியா இளைஞர்களும் இணைந்து தொண்டாற்றினர். இதில் வவுனியா கணேஸ் எனப்படும் குகன், உருத்திரபுரம் குஞ்சன், யாழ் ஆரியகுளத்தை சேர்ந்த இளைஞர் லோகநாதன் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். நவ்வி, பாலமோட்டை, கல்மடு என பரவலான கிராமங்களில் சிறப்பாக இப்பணி தொடர்ந்தது. இவ்வாறு மக்களுடன் மக்களாக நின்று செயற்பட்ட இவர்கள் கூட்டுப் பண்ணைத் திட்டம், பாலர் பாடசாலைகள், பல கிராம அபிவிருத்திகள் என சிறப்பாக இயங்கினர்.

தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம்:
தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம்” (ரி.ஆர்.ஆர்.) என்ற அமைப்பு உருவானது. இதற்கு தலைவராக (ரி.ஆர்.ஆர்.) கே.சி. நித்தியானந்தன் இருந்தார். இவர் ஒரு தொழிற்சங்கவாதி. சிங்கள இடதுசாரிகளின் மத்தியில் பிரபலமானவர் என்றபடியால் தனது பெயரை நித்தியானந்தா என பின்நாளில் மாற்றிக் கொண்டார். இவரின் தம்பியின் மகன் தான் டக்லஸ் தேவானந்தா என்ற தேவானந்தன். இவரும் அவ்வழியே தனது பெயரை மாற்றிக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரி.ஆர்.ஆர். செயலாளர் கந்தசாமி. இவர் சிட்டிசென் கொமிட்டி மற்றும் இன்டனெஷனல் அம்னஸ்டி என்பவற்றின் உறுப்பினராக இருந்தவர். சர்வதேசத்தில் இருந்து அகதிகளுக்கான அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதிகளை பெறும் பெறுமதிமிக்க தொடர்பாளர். பின்நாளில் ஈரோஸ் இயக்கத்தால் 1988ற்கு பின் அநியாயமாக கொலை செய்யப்பட்டார்.

மற்றும் மேர்ஜ் எனப்படும் மேர்ஜ் கந்தசாமி 2007வரையில் கூட நாட்டில் சில அரசுசாரா நிறுவனங்கள் ஊடாக சேவையாற்றியவர். பின்னர் ரவீந்திரன், நவம் (இருவரும் தற்போது அவுஸ்திரேலியாவில் இருக்கிறார்கள்.) என்பவருமாக இந்த நிறுவனத்தை நடத்தினர். இதில் முழுநேர பணியாளராக பேபி என்ற பரராஜசிங்கம் (கடந்த 30 வருடமாக பிரான்ஸில் இருப்பவர்) செயற்பட்டார். இவரால் நிர்வாகிக்கப்பட்டது தான் கென்ற்பாம், டொலர்பாம்.

1977 இனக்கலவரத்தின் பின்:
பண்ணை குடியேற்றத்திட்டங்களில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் 1977 இனக்கலவரத்தில் இடம்பெயர்ந்து வந்த கணிசமான மலையக மக்களையும் இரு கரம்நீட்டி வரவேற்றனர். இதன்மூலம் மலையக மக்களும் எம் தமிழ்பேசும் மக்களின் அலகுக்குள் உட்பட்டவர்கள்தான் என்பதுவும் நிரூபிக்கப்படுகின்றது. விடுதலைக்காக எல்லைக் கிராமங்களில் தமது இளமையை வாழ்க்கையை துறந்தும், இடம்பெயர்ந்திருந்து வந்தும் பங்காற்றிய இந்த இளைஞர்கள் தான் எமது விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பப் புள்ளிகள்.

இவர்களெல்லாம் தமிழ் தலைமைகளின் மேடைப் பேச்சுக்களில் மயங்கி புறப்பட்டு அன்றே சிறைக்கும் சித்திரவதைக்கும் தலைமறைவுக்கும் ஆளானவர்களே. ஆயினும் இந்தப் போராளிகளின் ஆரம்பங்கள் தியாகம் நிறைந்ததே. இப்படியாக இந்தப் பணியில் எட்டு மாதம் ஈடுபட்ட பின் சந்ததி, ராஜன் தமது வவுனியா வேலைத் திட்டங்களுக்கு திரும்பினர்.

1977 இனக்கலவரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்பு கிளை இளைஞர் பேரவையின் செயற்பாட்டாளார்கள் உமாமகேஸ்வரன், மண்டுர் மகேந்திரன், சிங்காரவேலன் உட்பட்ட இளைஞர்களும் மகளிர் பேரவையைச் சேர்ந்த ஊர்மிளா, மகேஸ்வரி வேலாயுதம் மற்றும் சில பெண்களுமாக கொழும்பிலிருந்து வந்து, தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தினருடன் இணைந்து தீவிரமாக செயற்பட்டனர். (மகேஸ்வரி வேலாயுதம் மூன்று வருடத்திற்கு முன் புலிகளால் கொலை செய்யப்பட்டவர். 1990 ற்குப் பின் .பி.டி.பின் முக்கியஸ்தராக இருந்தவர்.)

1977 இனக்கலவரத்திற்கு சில மாதங்களின் பின் உமாமகேஸ்வரன், ஊர்மிளா, மண்டுர் மகேந்திரன் போன்றோருக்கும் பிரபாகரனுக்கும் தொடர்புகள் ஏற்பட்டது. இவர்கள் ராணுவ விடயங்களில் தீவிரம் காட்டியதால் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டனர்.

இந்நிலையில் 1978 மட்டில் கே.சி நித்தியானந்தா அவர்களால் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் சந்ததியார், ராஜன் ஆகியோரிடம் அது ஒப்படைக்கப்பட்டது. இதில் கென்பாம் இல் இருந்த 25 குடும்பங்களுடன் டொலர்பாம் வேலைத் திட்டங்களும் இவர்களிடம் கைமாறியது. இங்கு பணியாற்றிய பேபி அவர்கள் அருகேயுள்ள கன்னியாஸ்திரிகள் பொறுப்பில் இருந்த ஒரு பண்ணைக்கு தொண்டராக செயற்படச் சென்றார்.

இந்நேரத்தில் கிளிநொச்சி உருத்திரபுரம் 7ம் வாய்க்கால் பகுதியில் அப்பு என்ற (குடுமிவைத்த வயதானவர்) காந்தீயக் கொள்கையை கடைப்பிடிக்கும் ஒருவர்குருகுலம்என்ற அமைப்பை உருவாக்கி பொதுப் பணியாற்றினார். இவர் ஆதரவற்ற பிள்ளைகள், பெண்களை மையப்படுத்தி ஒரு ஆச்சிரமத்தை உருவாக்கி நடாத்தி வந்தார். இவருடன் டொக்டர் ராஜசுந்தரம் உம், டேவிட் ஐயா வும் சில வெளிநாட்டு உதவிகளைப் பெறக்கூடியவிதமாகத் தொடர்புகளை வைத்திருந்தனர். இதேநேரம் வவுனியா கே சி நித்தியானந்தன் உடனும் சில தொடர்புகளுடன் ரி.ஆர்.ஆர். இன் செயற்பாட்டாளராக இருந்தார்.

1978 சூறாவளி அனர்த்தமும் தமிழ் இளைஞர்களின் நிவாரணப் பணியும்:
1978
சூறாவளி அனர்த்தம் நிகழ்ந்த காலப்பகுதி. மட்டக்களப்புக்கு சூறாவளி நிவாரணப் பணிகளுக்கு பல தமிழ் இளைஞர்கள் வந்திருந்தனர். இந்த காலகட்டத்தில் ராம்ராஜ் சிறியவயதில் இணைந்து கொண்டு, பின்னாளில் ஒரு சம்பவத்தில் கைதானார். இவருடன் இன்னும் சிலரும் அரசியல் காரணத்தால் கைதாகியிருந்தனர். எனவே சூறாவளி மீட்புப் பணியில் இவர்கள் பங்குகொள்ள முடியவில்லை.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் உடனடி நிவாரண வேலைத் திட்டத்தினை மேற்கொள்வதற்கு சந்ததியார், ராஜன் முதற்கொண்ட இளைஞர்கள் முடிவெடுத்தனர். இதன்படி யாழ்ப்பாணம் கிளிநொச்சி பிரதேசங்களுக்கு இவ்விருவரும் சென்று தம்முடன் அழைத்துச் செல்ல இளைஞர்களை திரட்டினர். உடனடியாக 160 இளைஞர்கள் ராஜன் தலைமையில் உணவுப் பொருட்களுடனும் நிவாரணப் பொருட்களுடனும் புறப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை ஊடாக புறப்பட்டு பின் இங்கிருந்து 14 படகுகளில் கடல்வழியாக மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தை அடைந்தனர்.

வரும் வழியில் உடைக்கப்பட்டிருந்த பாலத்தை இவ்இளைஞர்கள் சாப்பாடு, தண்ணி, நித்திரை இல்லாமல் நின்று சரிசெய்து வாகனங்களில் நிவாரணப் பணிக்கான இடத்தை நோக்கிச் சென்றனர். அங்கு உடனடியாக இவ் இளைஞர்கள் தங்குவதற்காக, வனசிங்கா மாஸ்டர் தலைமை ஆசிரியராக இருந்த அரசடி மகாவித்தியாலத்தில் இவ் ஆசிரியரால் இந்த 160 பேருக்கும் தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. பின் வாழைச்சேனைக்கு சென்றனர்.

இங்கிருந்த நிலையில் இவர்களால் நிவாரணப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், தொடர்ந்து சந்ததியார் அவர்களுடன் மேலும் வடக்கில் இருந்து இளைஞர்கள் அழைத்து வரப்பட்டனர். மொத்தமாக இப்பணிகளில் 600 வடமாகாண இளைஞர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதில் பிரான்ஸிலுள்ள கோவைந்தன் என்பவர் தானும் கலந்துகொண்டதாக சந்திப்பொன்றில் தெரிவித்தார். இவர் தற்போது யாழ்ப்பாணத்தில் வெளிவருகின்ற ஈபிடிபி இன் பத்திரிகையான தினமுரசு நாளிதளின் ஆசிரியராக இருக்கின்றார்.

இந்த நிவாரணப் பணிக்காக வந்த இளைஞர்கள் அனைவரும் பின் செல்வநாயகத்தின் மகன் ராஜன் (இவர் இலங்கை சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்) அவர்களின் ஏற்பாட்டில் இவரின் தந்தைக்காக கட்டப்பட்டசெல்வநாயகம் நினைவு மண்டபத்தில்தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் இலங்கை அரசால் கொழும்பிலிருந்து 20 லொறிகளில் அமெரிக்கன் மா மட்டக்களப்பு மக்களுக்காக வந்தது. ஆனால் அதனை இறக்கி வைப்பதற்கு மட்டக்களப்புப் பகுதியில் கட்டடம் எதுவும் கூரையுடன் இருக்கவில்லை. அனைத்தும் சூறாவளியில் பறந்து விட்டது. அம்பாறைக்கும் வாகனங்கள் போகமுடியாத நிலை. அரசு உத்தரவுடன் மாவினைத் திருப்பி அனுப்ப இருந்தனர். ஆனால் உடனே இந்த இளைஞர்கள் 4 மணி நேரத்தில் செயின்ற் மைக்கல் கல்லூரியின் கூரை ஓடுகள் வேயப்பட்டு சரிசெய்யப்பட்ட நிலையில் இந்த பொருட்கள் இறக்கப்பட்டன. அதாவது ஜி. . யின் ஏற்பாட்டில் புனித மைக்கல் பாடசாலையில் பாதுகாக்கப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

இந்நிலையிலும் ராஜதுரை எம்பி தலையிட்டு படுவான்கரை (தனது தேர்தல் பிரதேசம் ஆகையால்) பிரதேசத்திற்கு எல்லா லொறிகளையும் அனுப்பும்படி கேட்டார். ஆயினும் மட்டக்களப்பு இளைஞர்களும் தொண்டர்களாக பணியாற்றியவர்களும் தலையிட்டு படுவான்கரைக்கு 2 லொறிகளும் ஏனையவற்றை பரவலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க உதவிசெய்தனர்.

மேலும் இந்த சூறாவளி அனர்த்தத்தில் மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலை சீரழிந்த நிலையில் பாதிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள வைத்தியர்களோ தாதிகளோ இல்லாத நிலையில் இவ் வைத்தியசாலை இளைஞர்களின் கவனத்திற்கு வந்து 15 நாட்களாக பல இளைஞர்கள் நோயாளிகளை பராமரித்து பல உதவிகளும் செய்தனர்.

இந்த மறுசீரமைப்பு பணி ராஜன் உட்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களால் எட்டு மாதங்களாக செயற்படுத்தப்பட்ட விடயம் சாதாரணமானதல்ல. வடக்கு மாகாண இளைஞர்கள் அன்றே கிழக்கின் மக்களுக்காக தமது படிப்பு, வாழ்க்கை, வேலை, குடும்பம், ஏனைய பணிகள் என்பவற்றை விட்டுவிட்டு முழுநேரத் தொண்டர்களாக செயற்பட்டதை அந்த கிழக்கு மக்கள் மறக்கமாட்டார்கள்.

வடகிழக்கு முரண்பாடுகளுக்கு குறுந்தேசியவாத ஒரு சில தமிழ்த் தலைமைகள் (முழு வடக்குத் தலைமைகளும் அல்ல) காரணமாக இருக்கலாம். ஆனால் வட கிழக்கு இளைஞர்களோ, பெரும்பாலான வடகிழக்கு மக்களோ காரணம் என்றுகூறி தமது நலன்களுக்காக வடகிழக்கு பிரிவினைக்கு தூபம் போடுபவர்கள் வரலாறையும் புரட்டிப் பார்க்க வேண்டும்.

பிரபாகரனின் செயற்பாடுகள்:
இந்த மட்டக்களப்பு சூறாவளி நிவாரணத்தின் போது புலிகளோ, புதிய தமிழ் புலிகளோ பங்குபெறவில்லை. 1976ல் பிரபாகரனால் புலி உறுப்பினர் மட்டக்களப்பு மைக்கல் என்பவர் கொலை செய்யப்பட்டமை மட்டக்களப்பு மக்களிடையே பெரும் பதட்டத்தை உண்டுபண்ணி இருந்தது. அதனால் பிரபாகரன் ராஜனிடம் தங்கள் இயக்கத்திற்கு சில இளைஞர்களைக் கேட்டு இருந்தார். அதற்கிணங்க சில இளைஞர்கள் பிரபாகரனுடன் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

1)லோகநாதன் (தற்போது செக்-குடியரசில் இருப்பவர். அந்நாட்டு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.)
2)
தாமரைக்கேணியைச் சேர்ந்த பாரூக் என்ற புனைபெயரைக்கொண்ட தமிழ் இளைஞர்.
3)
மாணிக்கவாசகரின் மகன் (தற்போதும் கனடாவில் புலிகளின் முக்கிய உறுப்பினர்) உட்பட 5 பேர் ராஜனால் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

பின் பிரபாகரனால் பயிற்சிக்கான இடம் ஒன்று கேட்கப்பட்டது. ராஜனால் வவுனியா- இறம்பைக்குளம் அருகேபண்டிக்கெய்த குளம்என்ற இடத்தில் இடமும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது.

அதேபோல் குட்டிமணி உட்பட 35 இளைஞர்கள் சிறிசபாரத்தினம் மூலம் ராஜன் அவர்களிடம் இடஉதவி கேட்டதற்கிணங்க அவர்களுக்கான பகுதி ஒன்று நாவலர் பண்ணையில் ஒதுக்கப்பட்டது. 1978 பிற்பகுதியில் சிறி, குட்டிமணி உடன் தனியாக இயங்கத் தொடங்கியிருந்தார். அப்படி அன்றே ராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் அக்கம் பக்கம் இயங்கிய போதும் ஒருவரோடு ஒருவர் புரிந்துணர்வுடன்தான் இருந்தனர்.

காந்தீயம்:
இந்நிலையில் சந்ததியார், ராஜன் ஆகியோரின் வேலைத்திட்டங்களின் பொறுப்புணர்வை அறிந்த டாக்டர் இராஜசுந்தரம், அவர்களை தனது வீடான கொக்குவில் பொற்பதியில் வைத்து சந்தித்துகாந்தீயம்என்ற ஒரு அமைப்பு வேலைத்திட்டத்தில் ஒன்றிணைத்தார். இதன்படி பரவலாக சமூக, பொருளாதார குடியேற்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. காந்தீயக் கொள்கையில் கிராம மட்டத்தினாலான வேலைத் திட்டங்களின் தோற்றப்பாட்டுடன் வேலைகள் நடந்தது.

ஆனால் உள்ளே டாக்டர் ராஜசுந்தரம், சந்ததியார், ராஜன், சிறி போன்ற இளைஞர்களை மையப்படுத்தி ஒரு அரசியல் செயற்பாடும் நகர்ந்தது. ஆனால் இவ்அரசியல் செயற்பாடுகளில் காந்தீயவாதியான டேவிட் ஐயாவிற்கு பெரிதாக உடன்பாடும் இல்லை. பலவிடயங்கள் தெரியப்படுத்தப்படவுமில்லை. எனினும் இந்நகர்வு பல இளைஞர்களை உள்வாங்கிக் கொண்டிருந்தது.

இப்படியாக ஒருபக்கம் காந்தீய வேலைத் திட்டங்களோடு கிராம முன்னேற்றங்களும், பண்ணைகளும் விஸ்தரிக்கப்பட்டது. வெளிவேலைத் திட்டமாகவும் ஒரு வரையறுக்கப்பட்ட அரசியல் வளர்ச்சியும் உள்ளே நகர்ந்து கொண்டிருந்தது.

மறுபக்கம் உமா மகேஸ்வரன், பிரபாகரன், ஊர்மிளா, நாகராஜா, நிர்மலன் ரவி, சித்தப்பா, யோன், ராகவன் ஆகியோரைக் கொண்ட புலிகள் அமைப்பு சில தீவிரவாத செயற்பாடுகளுடன் இயங்கியது.

மட்டக்களப்பில் இளைஞர் பேரவை:
1979
ல் சந்ததியார்ராஜன் முயற்சியில் மட்டக்களப்பு அரசடி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இளைஞர் பேரவை என்ற பெயரில் அலுவலகம் திறக்கப்பட்டு முதன்முதல் கொடி ஒன்றும் உருவாக்கப்பட்டது. இதுதான் பின்நாளில் கழகக் கொடியாக அங்கீகரிக்கப்பட்டது. 1979ல் இக் கொடியுடன் இங்கு பெரும் மேதின ஊர்வலம் நடைபெற்றது வரலாற்று முக்கியத்துவமானது.

1978 சூறாவளியின் மீள்நிர்மாணப் பணிகளில் இந்த வட மாகாண இளைஞர்களின் ஈடுபாட்டால் கிழக்கு மாகாண இளைஞர் மட்டத்திலும் ஒரு வட கிழக்கிற்கான நல்லுறவை உருவாக்கியது. தமிழ்தேசிய தலைமைகளின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த பெரும்பான்மையோர் காசிவண்ணைசேனாதி போன்றவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் வட்டத்தை விட்டு பரவலாக வெளியே செயற்படத் தொடங்கினர். இதன் எதிரொலிப்பு இந்த மட்டக்களப்பு ஊர்வலத்தினதும் பொது கூட்டத்தினதும் பெரும் வெற்றியாக அமைந்தது.

பஸ்தியாம்பிள்ளை கொலை:
பஸ்தியாம்பிள்ளை கொலை உட்பட பல செயற்பாடுகளால் இலங்கை அரசினதும் ராணுவத்தினதும் பார்வை தமிழ் இளைஞர்கள் மீது திரும்பியது. பஸ்தியாம்பிள்ளை உட்பட்ட 4 பொலிஸாரின் உடல்கள் கிணற்றில் கிடந்து அழுகி சில நாட்களுக்குப் பின் ராணுவம் கைப்பற்றியது. பிரபாகரனும், அன்ரனியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியாமல் அங்கு சென்றனர். அந்த உடல்களை மூன்றாவது நாள் கிணற்றில் எட்டிப் பார்த்ததில் இந்த உடல்களின் அகோரநிலையால் பிரபாகரன் மிகக் கிலேசமடைந்ததாகவும் இதைத் தொடர்ந்து காய்ச்சல் வந்ததில் மூன்று நாட்கள் பரந்தனில் 5ம் வாய்க்காலிலுள்ள வீடொன்றில் தங்கி இருந்ததாகவும் அந்த வீட்டினர் சொன்ன தகவலும் ஒன்று உண்டு.

இதன் முக்கிய கட்டமாக வவுனியாவில் இன்பம், பாலேந்திரன் உட்பட 4 தமிழ் இளைஞர்கள் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர். மேலும் 1979ம் ஆண்டு அமுலுக்கு வந்த பயங்கரவாத தடைச்சட்ட அமுலும் பல தமிழ் இளைஞர்களை முக்கியமாக பண்ணைகளில் செயற்பட்டவர்களை தலைமறைவாக்கியது.

இந்நிலையில் புலிகள் அமைப்பினரும் சிதறி இந்தியா வரையில் சென்று தப்பினர். இந்நிலையில்தான் இந்தியாவில் வைத்து புலிகளின் உடைவு இடம்பெற்றது. ‘உணர்வுகுழுவாக ஒன்றும்புதியபாதைகுழுவாக ஒன்றுமாக பிரிந்தனர்.

காந்தீயப் பண்ணைகளில் இருந்தவர்கள் மிக கவனமாக குடியேற்றங்களிலும் வேலைத் திட்டங்களிலும் ஈடுபட்டதாலும் காந்தீயம் என்ற பெயர் ஒரு பாதுகாப்பை அளித்ததாலும் இவர்களுக்கு பெரிதாக அச்சுறுத்தல்கள் இருக்கவில்லை.

ஊர்மிளாவின் மரணம்:
முன் குறிப்பிட்டதுபோல் புலிகள் உடைந்து போனதில் இந்தியாவிலும் ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையில்லாத நிலையில் அவர்களுக்கு உள்ளும் தலைமறைவுகள் தவிர்க்க முடியாததொன்றாகியது. இந்நிலையில் மஞ்சட் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த ஊர்மிளா வவுனியாவிற்கு திரும்பி காந்தீய செயலாளர் டாக்டர் ராஜசுந்தரம் அவர்களின் மனைவியான சாந்தியின்சாந்தி கிளினிக்கில் வைத்தியம் பார்த்தார். ஊர்மிளா வருத்தம் மிக முற்றிய நிலையில் இங்கு வந்ததால் இவரை சுகப்படுத்த முடியாத நிலையில் மரணமானார். இவ் மரணத்தின்போது மண்டூர் மகேந்திரனும், டாக்டர் சாந்தியும் அருகில் இருந்தனர். இவரது மரணம் 1980 மே 17ம் திகதி என்பதுவும் இதையடுத்து மரண அடக்கம் வவுனியா மண்ணில் மே 19ல் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இதன்பின் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

தமிழீழ விடுதலைக் கழகம் தோற்றம்:
புலிகளின் உடைவில் உமாமகேஸ்வரன் புலிகளின் மரண தண்டனைக்கு தப்பி இந்தியாவில் தலைமறைவாகி இருந்தார். இந்நிலையில் சந்ததியும் ராஜனும் வவுனியாவில் பேசிமுடிவெடுத்து ராஜன் இந்தியாவிற்கு சென்று உமாவை சந்தித்து இங்கு அழைத்து வருவதாக இருந்தது. இந்த முடிவின்படி ராஜன் தலைமன்னாரினூடாக (ராஜன் தலைமன்னாரில் படகிற்காக காத்து நிற்கும் போது தான் ஊர்மிளா இறந்த செய்தி கிடைத்தது.) இந்தியா சென்று மற்றாஸ் மண்ணடி என்னும் இடத்தில் உமாவை சந்தித்து பல விடயங்கள் பேசி ஒரு புதுக்கட்டமைப்பில் செயற்படுவதற்கு உமாவும் உடன்பட்டார்.

இதன்பின் ராஜன் புறப்பட்டதும் உமா நாட்டிற்கு திரும்பிவரவும் ஒழுங்குகள் செய்யப்பட்டு உமாவும் வந்து சேர்ந்தார். இதை அடுத்து 1980 ஆண்டு ஆகஸ்ட் மாதம் சங்கானை தொண்டர் கந்தசாமி என்பவரின் வீட்டில்தமிழீழ விடுதலைக் கழகம்என்ற பெயருடன் ஏற்கனவே 1979ல் தெரிவு செய்யப்பட்ட கொடிநிறங்களுடன் முதலாவது கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் வசந்தன் என்ற சந்ததியார், ராஜன் என்ற ஞானசேகரன், முகுந்தன் என்ற உமாமகேஸ்வரன், சுந்தரம் என்ற சிவசண்முகமூர்த்தி, மாணிக்கம்தாசன், அவ்வீட்டு கந்தசாமியின் மகன் கண்ணன் (தற்போது ஜேர்மனில் இருப்பவர்) ஆகியோர் உறுப்பினர்களாயினர்.

இதற்குப் பின் சில வாரங்களில் இவ் உறுப்பினர்கள் சந்தித்து முதலாவது மத்திய குழு தெரிவு செய்யப்பட்டது. இதில் சந்ததியார், ராஜன், உமாமகேஸ்வரன், சுந்தரம், பாபுஜி தெரிவு செய்யப்பட்டனர்.

சுந்தரத்தால் மானிப்பாயைச் சேர்ந்த காத்தான் என்ற கிருஷ்ணகுமார் 1979ல் கழகத்திற்குள் கொண்டுவரப்பட்டார்.

கழகத்தின் இராணுவ நடவடிக்கைகள்:
இதன்பின் கழகத்தின் முதலாவது ராணுவ நடவடிக்கையாக 1980 செப்டம்பரில் ஒரு செயற்பாடு கழகத்தில் முடிவெடுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது. அந்த முடிவிற்கமையவே ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரான பாலசுப்பிரமணியம் என்பவர் கொலை செய்யப்பட்டார். வவுனியா, கிளிநொச்சி, பரந்தன் ஆகிய பகுதிகளில் .தே.கட்சி அலுவலகம் திறக்க ஒழுங்கு செய்யப்பட்டது. இதற்கு முதற்கட்டமாக காமினி திசநாயக்கா இங்கு வந்தவேளையில் இக்கொலை நடைபெற்றது.

அடுத்ததாக கிளிநொச்சி வங்கிக்கொள்ளை 1981ல் ஒக்டோபர் 20ம் திகதி நடைபெற்றது. இவ் வங்கிக் கொள்ளையில் 116 கிலோ தங்கம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டது. பணம் இருக்கவில்லை. இதில் ராஜன், சுந்தரம், நிரஞ்சன், உமா, பாருக் (பின் புலிகளால் கடத்தி இதுவரை இல்லாமல் போனவர்) அன்பழகன், (இவர் திருகோணமலை திரியாயை சேர்ந்தவர். வெலிகடைச் சிறையில் கொல்லப்பட்டவர்.) றொபேட் (தெல்லிப்பளையைச் சேர்ந்த இவரும் வெலிகடைச் சிறையில் கொல்லப்பட்டார்), பாபுஜி, சிவசுப்பிரமணியம் (பரந்தன்) உட்பட 12 பேர் பங்காற்றினர்.

சரியாக ஒருமாதத்தில் நவம்பர் 20ம் திகதி ராஜன் மடுப்பகுதி வீட்டில் தங்கியிருக்கும் போது எதிர்பாராத நேரத்தில் வீட்டில் ராணுவம் சுற்றிவளைத்ததில், மதில் சுவரால் குதித்து ஓட முற்பட்ட நிலையில் சுடப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்ததால், இறந்ததாக நினைத்து கொண்டு இராணுவம் சென்றுவிட்டது. ஆனால் ராணுவ வைத்தியசாலையில் சில நாட்களுக்குப்பின் கண்விளித்தார். தொடர்ந்து மாணிக்கம்தாசன், பாபுஜி, பாருக், றொபேட், அன்பழகன் ஆகியோர் ஓரு மாதத்தின் பின் அடுத்தடுத்து தமது கவனக் குறைவால் பிடிபட்டனர்.

இயக்க மோதல்கள்:
1982
ல் புலிகளால் தேடப்பட்ட சுந்தரம் தை 2ம் திகதி யாழ் சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகளால் கொல்லப்பட்டார். இதனையடுத்து இந்த சுந்தரத்தின் கொலைக்கு இறைகுமாரனே (இவரின் பொறுப்பில் தான் புலிகளின் உணர்வு பத்திரிகை இருந்தது) காரணம் என்று சந்ததியாரால் முடிவெடுக்கப்பட்டு இறைகுமாரன், உமைகுமாரன் ஆகிய இருவரும் பின்னால் கழகத்தில் இணைந்த வடலியடைப்பு கண்ணன் என்ற ஜோதீஸ்வரன் என்பவரால் கொலை செய்யப்பட்டனர். (இவர் 1984ல் கழக படைத்துறைச்செயலராக நியமிக்கப்பட்டார்.)

கழகத்தில் கந்தசாமி அல்லது சங்கிலி என்பவர் 1981ல் பண்ணை வேலைத் திட்டத்திற்காக சந்ததியாரால் (வவுனியாவில் ஒரு கடையில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில்) கொண்டு வரப்பட்டவர். சங்கிலி 1984ல் புலனாய்வு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர். புளொட் அமைப்பில் இடம்பெற்ற உட்படுகொலைகளில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. 1988ல் வவுனியா முள்ளிக்குளம் புளொட் முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் இலங்கை இராணுவத்தினாலும் இணைந்து தாக்கப்பட்ட போது கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் இருதரப்பிலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

உமா மகேஸ்வரன் செயலதிபரானார்:
கழகத்தை உருவாக்கிய அடிமட்டத் தோழர்களும், மத்திய குழு உறுப்பினர்கள் அதிகமானோரும் கைது செய்யப்பட சந்ததியாருடன் உமா முன்னணி அங்கமானார். இதில் உமாவின் கடந்தகால புலிகளின் தீவிர அரசியலும், உமாபிரபா இணைவுபிரிவு என்பது மட்டும்தான் சராசரி மக்களுக்கோ இலங்கை அரசுக்கோ பரவலாக தெரிந்து இருந்தது. உமாவின் தலைமைத்துவ ஆளுமைப் பண்புகளும், 1982ல் பாண்டி பஜார் உமாபிரபா சூடுபாடும் அதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதும் உமாமகேஸ்வரனுக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்தது. உமாமகேஸ்வரனை கழகத்தின் செயலதிபர் அந்தஸ்திற்கு உயர்த்தியது. கழகத்தை உருப்படுத்திய ராஜன் உள்ளேயும் சந்ததியாரின் அட்டகாசமில்லாத, அமைதியான, ஆழமான சுபாவமும் உமா மகேஸ்வரனை கழகத்தின் முதன்மையாக்கியதில் ஆச்சரியம் இல்லை.

ஆரம்பத்தில் இருந்து காந்தீயத்தினூடாக திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் எனக் காலற நடந்து தேடிக்கண்டு பிடித்த எத்தனையோ செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து ராஜசுந்தரம், டேவிற் ஜயா அவர்களின் பெரிய பொருளாதார வெளிநாட்டு நிதிகளுடன் கூடிய சமூகஸ்தாபன நகர்வுகளும் கழகத்தின் மத்திய குழுவிலிருந்து அடிமட்டம் வரை பெரியளவில் எமது போராட்டப் பாதைக்கு உரமிட்டது.

சந்ததியாரால் 1980, 1981, 1982 என்று ஒவ்வொரு கட்டமாக காந்தீய வேலைத்திட்டம் பண்ணைகளூடாக பிரதேச ரீதியாக பரவலாக உள்வாங்கப்பட்ட திருமலையில் ஜெயச்சந்திரன், ஜான், சலீம், கேசவன், மட்டக்களப்பு வாசுதேவா, ஈஸ்வரன், யோகன் கண்ணமுத்து, வவுனியா முரளி, ஆதவன், பொன்னுத்துரை, கந்தசாமி, சறோஜினி, பெரிய செந்தில் ஆகியோருமாக பின் மத்திய குழுவரை இவர்களின் பாத்திரம் நகர்ந்தது.

கழக மத்திய குழு உறுப்பினர்கள்:
1.
முகுந்தன் என்ற உமாமகேஸ்வரன்செயலதிபர். யாழ்ப்பாணம், புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்தவர். இயக்க உட்படுகொலையில் கொல்லப்பட்டவர்.

2. வசந்தன் என்ற சந்ததியார்அரசியல் துறைச் செயலாளர். யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்தவர். உட்படுகொலையில் கொல்லப்பட்டார்.

3. ராஜன் என்ற ஞானசேகரன்பாலஸ்தீனத்தில் பயிற்சி பெற்றவர். புளொட் உள்முரண்பாட்டில் அதிலிருந்து விலகி ஈஎன்டிஎல்எப் அமைப்பை உருவாக்கியவர். கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்தவர்.

4. வாசுதேவாமட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர். அம்மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு இவரும் இவருடன் சென்றவர்களும் தந்திரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.

5. கண்ணன் என்ற ஜோதீஸ்வரன்படைத்துறைச் செயலராக இருந்தவர். யாழ்ப்பாணம் வடலி அடைப்பைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டு கொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.

6. சுந்தரம் என்ற சிவசண்முகமூர்த்திபுதியபாதை பத்திரிகையை ஆரம்பித்து நடத்தியவர். தமிழீழ விடுதலைப் புலிகளால் முதன் முதலாகக் கொல்லப்பட்ட மாற்று இயக்கப் போராளி இவர். யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்.

7. காத்தான் என்ற கிருஸ்ணகுமார்யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்தவர்.

8. ஜக்கடையா என்ற ஆதவன்வவுனியாவைச் சேர்ந்தவர். உட்படுகொலையில் கொல்லப்பட்டவர்.

9. பெரியமுரளிவவுனியாவைச் சேர்ந்தவர். தற்போது மத்திய கிழக்கில் வாழ்கிறார்.

10. ஈஸ்வரன்மட்டக்களப்பைச் சேர்ந்தவர். ஹொலண்ட்க்கு புலம்பெயர்ந்து வாழ்ந்தவர். பின்னர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.

11. அசோக் என்ற யோகன் கண்ணமுத்துஅம்பாறைப் பொறுப்பாளராக இருந்தவர். புளொட் உள்முரண்பாட்டில் ஈஎன்டிஎல்எப் அமைப்புடன் இணைந்து பின்னர் அதிலிருந்தும் வெளியேறியவர். பிரான்ஸ்க்கு புலம்பெயர்ந்த இவர் தொடர்ந்தும் அரசியல், கலை இலக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர். மட்டக்களப்பைச் சேர்ந்தவர்.

12. பார்த்தன் என்ற ஜெயச்சந்திரன்தள இராணுவப் பொறுப்பாளர். பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் கூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்டார். திருகோணமலையைச் சேர்ந்தவர்.

13. காந்தன் என்ற ஜான்பாலஸ்தீனத்தில் பயிற்சி பெற்றவர். உள்முரண்பாட்டில் புளொட்டை விட்டு வெளியேறி தீப்பொறி குழு ஆகச் செயற்பட்டவர்களில் முக்கியமானவர். தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர். மே 18 இயக்கம் உருவாக்கப்பட்டதில் முக்கியமானவர். திருகோணமலையைச் சேர்ந்தவர்.

14. பாலன் என்ற சலீம்தள நிர்வாகப் பொறுப்பாளர். திருகோணமலையைச் சேர்ந்தவர். தீப்பொறிக் குழு உடன் வெளியேறியவர்.

15. கேசவன்தீப்பொறிக் குழுவைச் சேர்ந்தவர். புதியதோர் உலகம் நாவலின் ஆசிரியராக இவரது பெயரே குறிப்பிடப்பட்டு உள்ளது. திருகோணமலையைச் சேர்ந்தவர்.

16. பாபுஜிஅனைத்து முகாம் பொறுப்பாளராக இருந்தவர். பின்னர் ஈஎன்டிஎல்எப் இல் இணைந்து கொண்டவர். யாழ்ப்பாணம் மாதகலைச் சேர்ந்தவர். தற்போது கனடாவில் வாழ்கின்றார்.

17. செந்தில்அனைத்து முகாம் பின்தள பொறுப்பாளராக இருந்தவர். வவுனியாவைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலை இயக்கத்தினால் கொல்லப்பட்டார்.

18. மாணிக்கம் தாசன்இராணுவப் பிரிவுக்கு பொறுப்பாளராக இருந்தவர். உமா மகேஸ்வரன் கொலை செய்யப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது போது இவர் அதற்கு சம்மதம் தெரிவித்து இருந்தார். ஆனால் பின்னர் உமா மகேஸ்வரனின் கொலையை நிறைவேற்றிய ராபினையும் அவரது மனைவியையும் ஹொலண்டில் வைத்துப் படுகொலை செய்ததில் மாணிக்கம்தாசன் சம்பந்தப்பட்டு இருந்தார். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இறுதியில் இவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்.

19. குமரன் என்ற பொன்னுத்துரைதளப் பொறுப்பாளராக இருந்தவர். யாழ்ப்பாணம் மாதகலைச் சேர்ந்தவர். தற்போது பிரான்ஸில் வாழ்கிறார்.

20. சங்கிலி என்ற கந்தசாமிபுலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். இயக்கத்தினுள்ளும் வெளியேயும் நடந்த பல படுகொலைகளுக்கு இவரே பொறுப்பாக இருந்துள்ளார். யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்.

21. சறோஜினிஇவர் வவுனியாவைச் சேர்ந்தவர். தற்போது கனடாவில் வாழ்கின்றார். மத்திய குழுவில் இருந்த ஒரே பெண் உறுப்பினர் இவர்தான்.

22. நிரஞ்சன் அல்லது காக்கா என்ற சிவனேஸ்வரன்யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்தவர். உட்படுகொலை செய்யப்பட்டவர்.

23. சீசர்இவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர். தொழிலாளர் பாதை அமைப்பைச் சேர்ந்தவர்.

24. சேகர்இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இந்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரி. இவர் மத்திய குழு உறுப்பினரல்ல எனத் தெரிவிக்கப்பட்ட போதும் அனைத்து மத்திய குழு கூட்டங்களிலும் இவர் கலந்துகொண்டுள்ளார். அதனால் அவரது பெயரும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது.

தமிழீழ விடுதலைக் கழகம்தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆனது:
1983
ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் வவுனியாவிலுள்ள காந்தீய தலைமை அலுவலகம் இலங்கை ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. டாக்டர் ராஜந்தரமும் டேவிட் ஐயாவும் கைது செய்யப்பட்டு பதட்டமான சூழல் இருந்தது. இந்நிலையிலும் 1983ம் ஆண்டு மேதினம் திருகோணமலையில் சின்ன முற்றவெளியில் ஜெயச்சந்திரன் (பார்த்தன்) தலைமையில் தமிழீழ விடுதலை கழகம் என்ற பெயரிலேயே நடைபெற்றது. இதன்போது 3 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்ட கழகக் கொடியின் கீழ் இம் மேதினம் நடைபெற்றது.

இதற்கு எல்லா மாவட்டங்களில் இருந்தும் கழக உறுப்பினர்கள் வந்திருந்தனர். இதில் மட்டக்களப்பு பொறுப்பாளர் வாசுதேவா தலைமையிலும் அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் யோகன் கண்ணமுத்து தலைமையிலுமாக கிழக்கிலிருந்து உறுப்பினர்கள் கொண்டுவரப்பட்டனர். யாழ் மாவட்ட பொறுப்பாளர் பொன்னுத்துரை தலைமையில் ஒரு பேரூந்து நிறையவே உறுப்பினர்களும் முல்லைத்தீவு பொறுப்பாளர் சுந்தரம் என்ற நவம் தலைமையில் ஒரு குழுவும் கிளிநொச்சி மாவட்ட பொறுப்பாளர் கண்ணன் ஒரு குழுவுமாக கழக உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்களுமாக பலர் கலந்து கொண்டனர்.

இதில் விசேட பேச்சாளராக வாசுதேவா, யோகன் கண்ணமுத்து இன்னும் சிலரும் உரையாற்றியிருந்தனர். ஜான் மாஸ்ரர் மருத்துவபீட பல்கலைக்கழக நுழைவு கிடைத்த புதிதென்பதால் இதில் கலந்துகொள்ள முடியவில்லை. மற்றும் திருமலை முன்னணி இளைஞர்களான ஜெயகாந்தன், ராதாகிருஸ்ணன் (இவர்கள் தற்சமயம் லண்டனில் வசிப்பவர்கள்.) ஆகியோரும் மத்திய குழு உறுப்பினர் சலீம் உட்பட பல கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

தமிழீழ விடுதலைக் கழகம் என்ற பெயரும் 3 நட்சத்திரங்கள் அமைந்த கழக கொடியுடன் நடந்த கடைசி நிகழ்வும் ஆகும். இந்த மே தினக் கூட்டம் இலங்கை அரசின் உன்னிப்பான கண்காணிப்புக்கு உட்பட்டு புகைப்படங்களும் அவர்களால் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எல்லா மாவட்ட காந்தியமும் அரசின் விசாரணைக்குட்பட்டு மூடப்பட்டு கழககாந்தீய உறுப்பினர்கள் ராணுவ கெடுபிடிகளுக்கு உட்பட்டனர். இதனையடுத்துக் கூடிய மத்திய குழு தங்கள் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரால் அறியப்பட்டதனால் தங்கள் அமைப்புக்கு பெயரையும் கொடியையும் மாற்ற முடிவெடுத்தனர். தமிழீழ விடுதலைக் கழகம், ‘மக்கள் உள்வாங்கி தமிழீழ மக்கள் விடுதலை கழகம் ஆனது. கழகக் கொடியில் இருந்த மூன்று நட்சத்திரங்களில் இருண்டு நட்சத்திரங்கள் நீக்கப்பட்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் புதிய கொடியைப் பெற்றது.

1983 இனக்கலவரமும் அதன் பின்னரும்:
1983
யூலை வெலிக்கடைப் படுகொலையில் எமது மக்கள் விடுதலைப் பாதையின் அச்சாக சுழன்று திரிந்த டாக்டரின் இழப்பு பேரிழப்பாகியது. அதனைத் தொடர்ந்த 1983 இனக்கலவரம். இழப்புக்களுடனும் ஒரு வெறித்தனமான உத்வேகத்துடனும் எமது விடுதலைப் போராட்டத்தை அசாதாரண வளர்ச்சிக்கு இட்டுச்சென்றது. இதில் கழகத்தின் வளர்ச்சியானது வீங்கி முட்டி ஊதிப்பெருத்த நிலையில் 1983 பிற்பகுதியில் உள்முரண்பாடுகளுக்கு உட்பட்டது.

இதில் சில தனி நபர்களின் பலம்பலவீனம் தான் வரலாற்றுடன் நகர்ந்தது. உமா மகேஸ்வரன் தனது பாதுகாப்பிற்கென தனதருகில் வைத்திருக்கக் கூடியவர்கள் தன்னைச் சுற்றிய விசுவாசிகளாகவும் தனது சொல்பேச்சுக் கேட்பவர்களாக மட்டும் இருந்தால் போதும் என்ற எண்ணத்திலேயே இருந்துள்ளார். இந்தத் தகுதியின் அடிப்படையில் பதவிகள் நிர்வாகங்கள் தெரிவு செய்யப்பட்டமையும் மூத்த உறுப்பினர்களை ஓரம்கட்டி அதுவும் சந்ததியார், ராஜன் ஆகியோரின் பாத்திரங்களையும் பதவிகளையும் முடக்கி அரசியலின் அரிச்சுவடு தெரியாத வாசுதேவாவை அரசியற் துறைச்செயலராகவும், எதற்கும் தலையாட்டும், ராணுவம் என்பது என்னவென தெரியாத கண்ணனை படைத்துறை செயலாளராகவும், புலனாய்வுத்துறையின் செயற்பாடுகளை உமா தன் கைவசப்படுத்தியும் வைத்திருந்தார். அதற்காக தனிநபர் விசுவாசத்தை மட்டுமே தகுதியாக கொண்டோரை கொண்ட ஒரு புலனாய்விற்கே சம்பந்தம் இல்லாதோரை தனது கைக்குள் வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை காலமும் வரையறுக்கப்பட்ட அரசியலை ஒழுங்குபடுத்தி செய்து வந்த நிலையில் சந்ததியாரின் 1983ற்கு பின்பான நிகழ்வுகள் அவரை நெருக்கடிக்குள் தள்ளியது. கழகத்தின் இந்த அபரீத வளர்ச்சி கட்டுக்கடங்காமல் போனதும் நாட்டை விட்டு அந்நிய தேசத்தில் போராட்டம் திசை திரும்பிய நிலையுமாக பல எதிர்கால கேள்விகளையும் குழப்பத்தையும் இவருக்கும் இவரை சுற்றியிருந்த அல்லது இவரை மையப்படுத்தியவர்கள் மத்தியிலும் ஏற்படுத்தியது. முடிவு தெரியாதமுடிவெடுக்க முடியாத சூழல் இவர்களை இறுகியது. இவரின் சூட்சுமமான பேச்சு, நிதானமான போக்கு இவரை இந்த வேகமான வளர்ச்சிக் கட்டத்தில் காலத்தின் கைதியாக்கியது.

மேலும் இதற்கு பின்வந்த வரலாறு பின்னால் எல்லோருக்கும் தெரியப்பட்டதே. காந்தீயத்தினூடு கழகம் கட்டமைக்கப்பட்ட சம்பவங்களிற்கு முன்னால் காந்தீயத்திற்கான ஒவ்வொரு மாவட்டத்திற்கான செயற்பாடுகளும் அதில் டாக்டர் ராஜசுந்தரம், டேவிட் ஐயாவின் நகர்த்தல்களும் தனி ஒருபதிவிற்கானது.

கழகத்தின் உட்படுகொலைகளில் உயிரிழந்த போராளிகளுக்கு இக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.
நிலா(முன்னாள் கழகப் போராளி)

 

 



(EPRLF)பத்மநாபா வரலாறு
பத்மநாபா (ரஞ்சன்)19 நவம்பர் 1951 இல் பிறந்தார்.அவர் வடக்கு இலங்கையில் உள்ள காங்கேசந்துரையைச் சேர்ந்தவர்.

பத்மநாபா 1960 களின் பிற்பகுதியில் தீவிர அரசியலில் ஆர்வம் காட்டினார். தரநிலைப்படுத்தலின் பாரபட்சமான கொள்கையின் எதிர்வினையாக 1972 இல் உருவாக்கப்பட்ட தமிழ் மாணவர் கூட்டமைப்பு / தமிழ் மாணவர் கழகத்தின் உறுப்பினர்களில் ஒருவராக அவர் இருந்தார்.1974 தமிழ் மாநாட்டு சம்பவம் பத்மநாபத்தை மேலும் தீவிரப்படுத்தியது.
ELO
1974/75 ஆம் ஆண்டில் பத்மநாபாவும் மற்றவர்களும் ஈழம் விடுதலை அமைப்பை (ஈழ விடுதலை இயக்கம்) (ELO) நிறுவினர். மே 10, 1976 அன்று, புலோலியில் உள்ள புலோலி பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் வங்கியை ELO அமைப்பு கொள்ளையடித்தது.
பத்மநாபா தனிப்பட்ட முறையில் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருந்தார்.இந்த கொள்ளையில் ஈடுபட்ட மற்றவர்களில் வரதராஜ பெருமாள் (பின்னர் வட கிழக்கு மாகாண முதலமைச்சர்) வி. பாலகுமாரன் (பின்னர் மாணவர்களின் ஈழம் புரட்சிகர அமைப்பின் தலைவர்) மற்றும் எஸ்.தவராஜா (பின்னர் ஈழம் மக்கள் ஜனநாயகக் கட்சி எம்.பி. மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்) வடக்கு மாகாண சபை).கொள்ளைக்குப் பிறகு பத்மநாபா இந்தியா ஓடிவந்தார்.
அதே நேரத்தில் பாதுகாப்பு ஒடுக்குமுறை காரணமாக ELO அமைப்பு சிதைந்தது.
GUES / EROS
கணக்கியல் படிப்பதற்காக பத்மநாபா 1976 இல் லண்டனுக்கு குடிபெயர்ந்தார்.இங்கே அவர் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட மற்ற தமிழர்களை சந்தித்தார். அவர்கள் ஒன்றாக ஈழம் மாணவர்களின் பொது ஒன்றியம் (GUES) மற்றும் மாணவர்களின் ஈழம் புரட்சிகர அமைப்பு (EROS) ஆகியவற்றை உருவாக்கினர். 
லண்டனில் உள்ள பாலஸ்தீன விடுதலை அமைப்பின் பிரதிநிதியான ஹம்மாமி உதவியுடன் பத்மநாபா உள்ளிட்ட ஒரு சிறிய குழு லெபனானில் இராணுவப் பயிற்சி பெற உதவினார்.1978 ஆம் ஆண்டில் அவர் GUES / EROS க்கான ஒரு தளத்தை நிறுவ இந்தியா சென்றார்.பின்னர் அவர் இலங்கைக்குத் திரும்பினார் ஆனால் பாதுகாப்புப் படையினர் அவரைத் தேடிக்கொண்டிருந்தனர் எனவே அவர் மாறுவேடத்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எவ்
பத்மநாபா மற்றும் டக்ளஸ் தேவானந்தா, வரதராஜ பெருமாள் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட உறுப்பினர்கள் 1981 இல் ஈரோஸை விட்டு வெளியேறி தங்கள் சொந்த போராளிக்குழுவை உருவாக்கி ஈள மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எவ்) என்று அழைக்கப்படுவார்கள்.புதிய குழுவை நிறுவுவதற்காக பத்மநாபா 1981 ஆம் ஆண்டில் இந்தியாவின் மெட்ராஸில் உள்ள கோடம்பகம் சென்றார்.
1982 ஆம் ஆண்டில் ஈபிஆர்எல்எஃப் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மக்கள் விடுதலை இராணுவத்தை உருவாக்கியது. பாலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணியால் பி.எல்.ஏ இராணுவப் பயிற்சி ஆரம்பம்.அதனைத் தொடர்ந்து ஈழத்திலும் வடக்குக்கு கிழக்கில் தற்கொடைப் பயிற்சி மற்றும் இரானுவப் பயிற்சிகள் தொடர்ந்தன.
1986 ஆம் ஆண்டின் முற்பகுதியில், ஈபிஆர்எல்எவ் தலைமைக்கு இடையிலான மோதல்கள் ஈபிஆர்எல்எஃப் (ரஞ்சன்) மற்றும் ஈபிஆர்எல்எஃப் (டக்ளஸ்) என இரு பிரிவுகளாகப் பிரிந்தன.

டிசம்பர் 1986 இல், போட்டியாளர்களான தமிழீழ விடுதலை புலிகள் இலங்கையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் மீது தாக்குதல் நடத்தியது, பெரும் இழப்பை ஏற்படுத்தியது மற்றும் சாவகச்சேரி நுனாவிலில் ஈபிஆர்எல்எவ் இன் இராணுவத் தளபதியான கபூரைக்  கொன்றது.பல ஈபிஆர்எல்எவ் தோழர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர் மற்றும் ஈபிஆர்எல்எஃப் முகாம்கள் மற்றும் ஆயுதங்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

தோல்விக்கு தோழர் டக்லஸ் தேவானந்தா குற்றம் சாட்டப்பட்டார்.
1987 ஆம் ஆண்டில் ஈபிஆர்எல்எவ் (டக்ளஸ்) பிரிவு முறையாக ஈபிஆர்எல்எப்பிலிருந்து பிரிந்தது. இது ஆரம்பத்தில் பரந்தன் ராஜன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பின் பிரிந்த பிரிவைக் கொண்டு ஈம் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியை உருவாக்கியது, ஆனால் பின்னர் தன்னை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாக மாற்றியது.

அரசியல் கட்சி
இராணுவ தோல்வியின் பின்னர், ஈபிஆர்எல்எவ் தன்னை அரசியல் கட்சியாக மாற்றிக் கொண்டு, வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த இந்திய அமைதி காக்கும் படையுடன் (ஐ.பி.கே.எஃப்) தன்னை இணைத்துக் கொண்டது.

ஈபிஆர்எல்எஃப் அரசியலில் முதன் முதலில் நுழைந்தது 1988 மாகாண சபை தேர்தல்களில் குறைபாடுடையது. ஐ.பி.கே.எஃப் உதவியுடன் ஈபிஆர்எல்எவ் வடகிழக்கு மாகாண சபையின் 71 இடங்களில் 41 இடங்களைப் பெற்றது. [4] டிசம்பர் 10, 1988 அன்று வரதராஜா பெருமாள் வடகிழக்கு மாகாண சபையின் முதல் முதல்வரானார்.

ஈபிஆர்எல்எஃப் 1989 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஈம் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை அமைப்பு மற்றும் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்தது. கூட்டணி 188,593 வாக்குகளை (3.40%) வென்றது, பாராளுமன்றத்தில் 225 இடங்களில் 10 இடங்களைப் பிடித்தது. 10 கூட்டணி எம்.பி.க்களில் 7 பேர் ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

அக்டோபர் 1987 இல் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் இந்திய அமைதி காக்கும் படை (ஐ.பி.கே.எஃப்) இடையே சண்டை வெடித்ததைத் தொடர்ந்து, இந்தியா சார்புடையதாகக் கருதப்பட்ட ஈபிஆர்எல்எவ்க்கு எதிரான புலிகளின் விரோதப் போக்கு அதிகரித்தது.எல்.ரீ.ரீ.ஈ 1998 வடகிழக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்தது.

போட்டியிடும் எவரும் துரோகி என்று முத்திரை குத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்கள்.ஆயினும்கூட ஈ.பி.ஆர்.எல்.எஃப் போட்டியிட்டது இந்திய இராணுவமான ஐ.பி.கே.எஃப் ஒத்துழைப்புடன் வடகிழக்கு மாகாண சபையின் 71 இடங்களில் 41 இடங்களைப் பெற்றது. 
தோழர் வரதராஜ பெருமாள் வடகிழக்கு மாகாணத்தின் முதல்வரானார். மார்ச் 1, 1990 அன்று ஐ.பி.கே.எஃப் இலங்கையிலிருந்து விலகத் தயாராகி கொண்டிருந்தபோது தோழர் வரதராஜப் ​​பெருமாள் வட கிழக்கு மாகாண சபையில் ஒரு சுயாதீன ஈழம் என்று அறிவித்து ஒரு தீர்மானத்தை முன்வைத்தார்.

ஐ.பி.கே.எஃப் வெளியேறியவுடன் மீண்டும் புலிகளால் ஏற்படும் விளைவுகளுக்கு பயந்து, ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைமை இந்தியாவுக்கு தப்பி ஓடியது.மார்ச் 11 1990 அன்று பத்மநாபா திருகோணமலையில் இருந்து புவனேஸ்வரிற்கு ஒரு இந்திய இராணுவ விமானத்தில் பறக்கவிடப்பட்டார்.ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா மார்ச் 25, 1990 அன்று வடகிழக்கு மாகாணத்தில் நேரடி ஆட்சியை விதித்தார்

ஜூன் 19, 1990 மாலை, ஈ.டி.ஆர்.எல்.எஃப் மத்திய குழு கோடம்பாக்கத்தில் உள்ள சாக்ரியா காலனியில் ஒரு பிளாட்டில் சந்தித்தது.இரவு 7 மணியளவில் துப்பாக்கி ஏந்தியவர்கள் பிளாட்டுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். 

தோழர் பத்மநாபா, நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.யோகசங்கரி, மாகாண அமைச்சர் பி.கிருபகரன் உள்ளிட்ட எட்டு பேர் கொல்லப்பட்டனர். குடியிருப்புகளின் தொகுதிக்கு வெளியே காத்திருந்த ஐந்து ஈபிஆர்எல்எஃப் காவலாளிகளும் கொல்லப்பட்டனர்.இந்த படுகொலை  தமிழீழ விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

தோழர்களே எமக்காய் எம் மக்களுக்காய் போராடிய நீங்கள் என்றும் உயர்வானவர்களாய் மரியாதை செலுத்துவோம்.தமிழரின் தாகம் தமிழீழத்தாகம்.

ஸ்ரீ" ரெலோ சபாரத்னம் 

28 ஆகஸ்ட் 1952 இல் பிறந்தார்.1972 மற்றும் 1975 க்கு இடையில் அரசாங்கக் காவலில் இருந்தபோது, அவரது சிறைச்சாலை அவரை "உயரமான ஸ்ரீ" என்று அழைத்தார், அவரை காவலில் உள்ள மற்றொரு ஸ்ரீயிலிருந்து வேறுபடுத்தினார்கள். 
வங்கி கொள்ளை
மார்ச் 25, 1981 அன்று வடமராச்சியில் பணம் சேகரித்த பின்னர் யாழ்ப்பாணம் திரும்பிய மக்கள் வங்கி வேன் நீர்லியில் உள்ள யாழ்ப்பாண  பருத்தித்துறை சாலையில் 8 மில்லியன் பணம் கொள்ளையடுக்கப்பட்டது. என்.தங்கவேலு (மாற்று தங்கதுரை), எஸ்.யோகச்சந்திரன் (மாற்று குட்டிமானி), செல்வதுரை சிவசுப்பிரமணியம் (மாற்றுத் தேவன்), நவரத்னரா (நடராஜா) சிவபதம் (அல்லது சிவபாலன் மாஸ்டர்) மற்றும் வைதிலிங்கம் நடேசதன் ஆகியோருடன் கைது செய்யப்பட்டனர்.
சபாரத்னம் இல்லாத நிலையில் குற்றம் சாட்டப்பட்டது.கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நவம்பர் 2, 1982 அன்று தொடங்கியது, 1983 பிப்ரவரி 24 அன்று ஆறு பிரதிவாதிகளும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர்.
ஜூலை 1983 இல் வெலிடை சிறை படுகொலையின் போது தங்கத்துரை மற்றும் குட்டிமானி கொல்லப்பட்ட பின்னர் ஸ்ரீ சபாரத்னம் டெலோவின் தலைவரானார்.
இறப்பு
ஏப்ரல் 1986 இல், தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.இ) டெலோவை தடைசெய்து அதன் தலைவர் ஸ்ரீ சபரத்தினத்தை கொலை செய்யத் தொடங்கினர்.கல்வியங்காட்டில் உள்ள டெலோவின் பிரதான தளத்திலிருந்து நீர்வெலி வழியாக பின்னர் கோபாய் மற்றும் இறுதியாக கொண்டவில் வரை தப்பி ஓடினார்.அவர் கொண்டவிலில் இருப்பதை எல்.ரீ.ரீ.ஈ கண்டுபிடித்தது.
அவர்கள் கிட்டு தலைமையில் அந்த பகுதியை சுற்றி வளைத்து வீடு வீடாக தேடலைத் தொடங்கினர். உரத்த ஹெயிலர்களைப் பயன்படுத்தி உள்ளூர்வாசிகளுக்கு சபாரத்னத்தை பாதுகாப்பவர்களுக்கு மரண தன்டனை என எச்சரித்தனர்.மே 6, 1986 அன்று எல்.ரீ.ரீ.ஈ உரும்பராய் புகையிலைத் தோட்டத்தில் சபாரத்னத்தை கண்டு பிடித்து அவர் தப்பிப்பதைத் தடுக்க கிட்டு அவரை காலில் சுட்டார்.
சபாரத்னம் தனது வாழ்க்கைக்காக கிட்டுவிடம் மன்றாடினார் ஆனால் கிட்டு ஒரு இயந்திர துப்பாக்கியைப் பயன்படுத்தி அவரை சுட்டுக் கொன்றார்.சபாரத்னத்தின்  உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு கோண்டவில் பஸ் ஸ்டாண்டில் மக்கள் முன் காட்டப்பட்டது.
தோழர்களே எமக்காய் எம் மக்களுக்காய் போராடிய நீங்கள் என்றும் உயர்வானவர்களாய் மரியாதை செலுத்துவோம்.தமிழரின் தாகம் தமிழீழத்தாகம்.

ஈழம்- 48 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்த வில் அம்புகளின் பயன்பாடு !

 48 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வில் மற்றும் அம்பு பயன்பாட்டிற்கான பழமையான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இது, ஆபிரிக்காவிற்கு வெளியே வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் வில் மற்றும் அம்புகளை பழமையான முறையில் பயன்படுத்தியதற்கான தொழில்நுட்பத்தின் ஆரம்ப சான்றுகளைக் குறிக்கிறது.பன்றி, மான், விலங்கினங்கள் மற்றும் பிற உயிரினங்களின் எலும்பிலிருந்து தயாரிக்கப்பட்ட அம்புகளின் துண்டுகள் குறைந்தது 48 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்டன.

கடந்த ஆண்டு, இலங்கையில் பாஹியன் லென குகையில் காணப்பட்ட குரங்கு மற்றும் அணில் ஆகியவற்றின் எலும்புகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், ஆரம்பகால மனிதர்கள் அவற்றை வேட்டையாடினர் என ஆராய்ச்சியில் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த குகை தெற்காசியாவில் ஹோமோ சேப்பியன்களின் ஆரம்பகால புதைபடிவ தோற்றத்தின் இடமாகும்.4,000 முதல் 48,000 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வெவ்வேறு காலகட்டங்களில் மனிதர்கள் இப்பகுதியை ஆக்கிரமித்தனர்.குகையில் உள்ள சில எலும்புகள் கருவிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன, எனவே மழைக்காடுகளில் விரைவாக நகரும் இத்தகைய சிறிய விலங்குகளை நம் ஆரம்பகால மூதாதையர்கள் எவ்வாறு வெற்றிகரமாக வேட்டையாட முடிந்தது என்பதைப் புரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் அவற்றை பகுப்பாய்வு செய்தனர்.

இதேவேளை குறித்த அம்புகளின் துண்டுகள் ஐரோப்பாவில் காணப்படும் தொழில்நுட்பத்தின் ஆதாரத்தையும் விட பழமையானவை என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் சர்வதேச குழு கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


.தமிழரை கொன்ற பார்ப்பனர்களின் வெற்றியை தமிழர்களே கொண்டாடுவது எத்தனை இழிவு????*

பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் மகாவீரர் இறந்ததை தான் நரகாசுரன் அழிந்ததாக கொண்டாடப்படுகிறது என வரலாற்று வழி ஆதாரங்கள் மற்றும் மரபு வழிப்பட்டும் விளக்குகிறார்

தீபாவளி

இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப்பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம் சார்ந்ததாகவும் துணி என்ணெய் மாவு பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தகவல் தொடர்புச் சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால் இது தமிழர்களின் ‘தேசிய திருவிழா’ போலக் காட்டப்படுகிறது. ஆயினும் தைப்பொங்கல் திருவிழா போல மரபுவழிப் பொருளாதாரம் சார்ந்ததாகவும் ஒரு திருவிழாவிற்குரிய உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் சடங்குகளோடும் கொண்டாடப் பெறுவதாகவும் தீபாவளி அமையவில்லை. தைப்பொங்கல் சமய எல்லையினைக் கடந்து நிற்கும் திருவிழா. இது பழந்தமிழரின் அறுவடைத் திருவிழா. எனவே தான் இன்று ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்களில் கூடத் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஆனால் தீபாவளி தமிழரின் திருவிழாவாக அமையாமல் இந்துக்களின் திருவிழாவாக அமைகிறது.



தமிழர் திருவிழா – இந்துக்களின் திருவிழா என்ற வேறுபாட்டினை எவ்வாறு பிரித்தறிவது? பழைய வழிபாட்டு முறைகளோடு கூடிய தொல் சமய வழிபாடுகள் இவற்றின் சாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு வளர்ந்த சைவம் வைணவம் ஆகியவையே தமிழர்களின் பழைய மதங்களாகும். இவை காட்டும் திருவிழாக்களான கார்த்திகைத் திருவிழா திருவாதிரைத் திருவிழா தைப்பூசத் திருவிழா மாசிக்களரி எனப்படும் சிவராத்திரித் திருவிழா பங்குனி உத்திரம் சித்திரைப் பிறப்பு வைகாசி விசாகம் ஆடிப் பதினெட்டாம் பெருக்கு ஆகியன சைவமும் வைணவமும் பெருஞ்சமயங்களாக நிலைபெறுவதற்கு முன்னரே தமிழர்கள் கொண்டாடிய திருவிழாக்களாகும். பக்தி இயக்கத்தின் வளர்ச்சியில் இவை சைவ வைணவ மதங்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.


தீபாவளி தமிழ்நாட்டின் மரபுவழிப் பொருளாதாரத்தோடும் பருவ நிலைகளோடும் சடங்குகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழா. பார்ப்பனியத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. தீபாவளியின் அடையாளமான வெடி அதன் மூலப்பொருளான வெடிமருந்து ஆகியவை தமிழ்நாட்டிற்குப் பதினைந்தாம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீபூஆவளீ) என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை. தமிழர்களின் விளக்குத் திருவிழா என்பது திருகார்த்திகைத் திருவிழாவே. உண்மையில் இத்திருவிழா பார்ப்பனிய மதத்தின் திருவிழாவேயன்றித் தமிழர் திருவிழா ஆகாது.



‘நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா’ என்று பாரதி தாசன் பாடுவதும் இங்கே நினைவுக்குரியது.


மானமில்லா மக்களே தீபாவளி கொண்டாடுகிறார்கள்

இன்றளவும் மானமில்லா மக்களே தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். தீபாவளி என்பது பார்ப்பனர்களின் பண்டிகை தமிழர் திருவிழா அல்ல என பல தமிழ் அறிஞர்களும் தலைவர்களும் சொன்னவற்றின் சில குறிப்புகள் பின்வருமாறு:

மறைமலை அடிகள் சொன்னது:

1. ‘ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி’ – ‘தமிழர் மதம்’ என்ற நூலில்

2. ‘ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன் இராவணனன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படு வராயினர்.’

இராமகிருஷ்ண பரமகம்சரின் சீடர் விவேகானந்தர் சொன்னது:

1.தென்னிந்தியாவில் இருந்த மக்களே இராமாயாணத்தில் குரங்குகள் என்றும் அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்’

பி.டி.சி சீனிவாசய்யங்கார் சொன்னது:

இராமன் காலத்தில் தென் இந்தியா தஸ்யூக்கள் இராட்சதர்களுக்குச் சொந்தமாயிருந்தது. இவர்கள் ஆரிய முனிவர்கள் செய்து வந்த யாகத்தை எதிர்த்தார்கள். இருந்தாலும் வட இந்தியாவிலிருந்து வந்த ஆரியர்களைப் போலவே இந்த இராட்சதர்கள் என்பவர்களும் நாகரிகமடைந்திருந்தார்கள்.’

முனைவர் தொ.பரமசிவன் ‘அறியப்படாத தமிழகம்’ நூலில்:

1. தீபாவளி தமிழ் நாட்டின் மரபு வழிப் பொருளாதாரத்தோடும் பருவநிலைகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழாவாகும்.

2. தீபாவளியைக் குறிக்கும் வெடி அதன் மூலப்பொருளான வெடி மருந்து ஆகியவை தமிழ் நாட்டிற்கு 15ஆம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

3. நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ்ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று. மாறாக இன்று பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும்.

4. இந்த நாள் பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் 24ஆம் தீர்த்தகாரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த(இறந்த) நாளாகும்.தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுக் கொண்டார். ஆகவே பிராமணிய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளிச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மகாவீரர் இறந்த நாளையே ஆகும்

5. விஜய நகரப் பேரரசான இந்து சாம்ராஜ்யம் தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. 15ஆம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது

பெரியார் சொன்னது:

இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை அவனது தலைமைக்கு அடிமை மீட்சி பெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.

“மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன் அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

 

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கல்வி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.

8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும் வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால் எப்படி – யார் – எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!

தீவாளியா? – பாரதிதாசன் பாடல்:

நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?

நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?

நரகன் என்பவன் நல்லனா? தீயனா?

அசுரன்என்றவனை அறைகின் றாரே?

இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?

இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?

இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்

சேட்டை பன்னுகின்றனர் என்பது பொய்யா?

இவைகளைநாம் எண்ண வேண்டும்.

எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது

படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?

வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்

கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.

ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்

தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!

‘உனக்கெது தெரியும் உள்ளநா ளெல்லாம்

நினத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?’

என்று கேட்பவனை ‘ஏனடா குழந்தாய்!

உனக்கெது தெரியும் உரைப்பாய்’ என்று

கேட்கும்நாள் மடமை கிழிக்கும்நாள் அறிவை

ஊட்டும்நாள் மானம் உணருநாள் இந்நாள்.

தீவா வளியும் மானத் துக்குத்

தீ-வாளி ஆயின் சீஎன்று விடுவிரே!

தமிழரை கொன்ற வடவரின் வெற்றியை தமிழர்களே கொண்டாடுவது எத்துணை இழிவு. இறப்பை தமிழர்கள் ஒருபோதுமே கொண்டாடுபவர்கள் இல்லை.

எதற்காக தீபாவளியை கொண்டாடுகின்றீர்கள்? என கேட்டால் எம் முன்னோர் கொண்டாடினார்கள் அதனால் கொண்டாடுகின்றோம் என கூறுகிறார்கள்.

பண்டை தமிழர்கள் தீபாவளி கொண்டாடிய வரலாறு இல்லை. சுமார் சில நூறு ஆண்டுகள் மட்டுமே தெள்ளு தமிழுக்கு ஏற்பட்ட தாழ்ச்சியின் விளைவாக கொண்டாடுகிறோம்.


கார்த்திகை விளக்கீடு வேறு. தீபாவளி வேறு.63 நாயன்மார் காலத்திலும் 12 ஆழ்வார் காலத்திலும் கொண்டாடப்படாத தீபாவளி இன்று தமிழர்களால் கொண்டாடப்படுவது ஏன்?

தமிழர்களின் திரு நாள் தை திரு நாள். தீபாவளி தமிழர் பண்டிகை அல்ல என்பதற்கும் அப்பால் தீபாவளி தமிழர்களை இழிவு படுத்தும் ஒரு விழா என்ற உண்மையை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். விழாக்களை கொண்டாடுவதற்கு முன்பு எதற்கு கொண்டாடுகின்றோம் என ஆய்ந்து அறிந்து கொண்டாட வேண்டும்.

அன்புடன்- தமிழவன்


 

தமிழ்நாட்டின் பல இடங்களில் மாநில தொல்லியல் துறை ஆய்வுகளை செய்துவருகிறது. நீண்ட வாள், வெள்ளிக்காசு, முதுமக்கள் தாழி என புதைந்துகிடந்த வரலாற்றின் எச்சங்கள் மாநிலத்தின் பல இடங்களிலிருந்தும் மேலெழ ஆரம்பித்துள்ளன.


2015ஆம் ஆண்டில் மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் நடந்த அகழாய்வில் பெரும் கட்டடத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டின் தொல்லியல் வரலாறு மற்றும் அகழாய்வுப் பணிகள் மீதான ஆர்வம் வெகுவாக அதிகரித்தது. ஆனால், கீழடி அகழாய்வை நடத்திவந்த இந்தியத் தொல்லியல் துறை, மூன்றாம் கட்ட அகழாய்வுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் வேறு அகழாய்வுகளை நடத்தவில்லை. நடத்தப்பட்ட அகழாய்வின் முடிவுகளையும் வெளியிடவில்லை.இதற்குப் பிறகு எழுந்த கோரிக்கைகளால், நான்காம், ஐந்தாம், ஆறாம் கட்ட அகழாய்வுகளை மாநிலத் தொல்லியல் துறையே நடத்தி முடித்தது. இதற்குப் பின் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வை நடத்த முடிவுசெய்தபோது, கீழடி மட்டுமல்லாமல் ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட தமிழ்நாட்டின் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த வேறு பல இடங்களிலும் அகழாய்வுகளை நடத்த மாநில தொல்லியல் துறை முடிவெடுத்தது.கடந்த ஆண்டே கீழடி மட்டுமல்லாமல், அதன் அருகில் உள்ள சில ஊர்களிலும் அகழாய்வு நடத்தப்பட்டது. அதன்படி கீழடி தொகுப்பு (கீழடி, அகரம், கொந்தகை, மணலூர்), ஆதிச்சநல்லூர், கொற்கை, கங்கை கொண்ட சோழபுரம், கொடுமணல், மயிலாடும்பாறை ஆகிய ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மார்ச் மாதத்தில் துவங்கிய அகழாய்வு கொரோனா ஊரடங்கு காரணமாக மே 10ஆம் தேதி நிறுத்தப்பட்டது.

ஊரடங்கு காலகட்டம் முடிந்த பிறகு, ஜூன் மாத இறுதியில் இருந்து மீண்டும் அகழாய்வுப் பணிகள் நடந்துவருகின்றன. மழைக் காலம் துவங்குவதற்கு முன்பாக அகழாய்வுப் பணிகள் நிறைவடைய வேண்டும் என்பதால் தற்போது பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கீழடியைப் பொறுத்தவரை தொடர்ந்து தொல்லியல் பொருட்கள் கிடைத்துவரும் பகுதியாக இருந்து வருகிறது. 2019 -20ல் நடந்த அகழாய்வில் 25க்கும் மேற்பட்ட தாழிகள் உட்பட பல தொல்லியல் பொருட்களும் கலைப் பொருட்களும் கிடைத்தன.இந்த முறை நடந்த அகழாய்வில் பல மணிகள், பானை ஓடுகள், கூரை ஓடுகள் போன்றவை கிடைத்திருக்கின்றன. இங்குள்ள தரைகள் செங்கல் கற்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன. இரு கற்களை இணைக்க களிமண்ணும் சுண்ணாம்பும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அகரம் தளத்தில் நடந்த அகழாய்வில் சில நாட்களுக்கு முன்பாக சுடுமண்ணால் ஆன அடையாளம் தெரியாத ஒரு விலங்கின் உடல் பாகத்தின் உருவ பொம்மை கிடைத்தது. பத்து சென்டிமீட்டர் அலகமும் நான்கு சென்டிமீட்டர் உயரமும் கொண்ட அந்த பொம்மை எந்த விலங்கைக் குறிக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை. மேலும் இதே அகரம் பகுதியில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரராயன் காசுகளும் கிடைத்தன.

இந்த ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் மட்டும் விலங்கு உருவ பொம்மை, சுடுமண்ணால் ஆன பெண் முகம், செம்பு நாணயங்கள், புகைப்போக்கி குழாய் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. கண்ணாடி, யானை தந்தம், சங்கு ஆகியவற்றால் ஆண அணிகலன்களும் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.

ஆதிச்சநல்லூர்
ஆதிச்சநல்லூரில் அலெக்ஸாண்டர் ரீ ஆய்வு நடத்திய புதைமேடு சுமார் 114 ஏக்கர் பரப்பளவுடையது. அந்தப் பகுதி தற்போது பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆய்வுகள் நடத்த அனுமதியில்லை. ஆகவே அதற்கு அருகில் உள்ள பகுதியில் ஆய்வு நடத்த மாநில தொல்லியல் துறை அனுமதி பெற்றுள்ளது.

ஆதிச்சநல்லூர் புதைமேடு என்பது இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடமாகப் பயன்படுத்தப்பட்டுவந்த பகுதி. இதற்கு அருகில் மக்கள் வசித்த இடமாக கருதக்கூடிய பகுதியில் ஆய்வை நடத்த தொல்லியல் துறை விரும்பியது. அதில் பெரும்பகுதியில் மத்திய கால ஏரி ஒன்று இருக்கிறது. ஆகவே அருகில் உள்ள கிராமத்தில் அகழாய்வு நடந்துவருகிறது.இவை தவிர, நூல் நூற்க உதவும் தக்கிளி, புகைப்பான், கருப்பு - சிவப்பு மண்பாண்டங்கள், பழங்கால மற்றும் இடைக்கால கருவிகள், எலும்புகள், நடுகற்கள் உள்ளிட்டவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூரைப் போலவே இங்கும் மூன்று பண்பாட்டு அடுக்குகள் காணப்படுகிறன. இங்கு கிடைத்த ஈமத் தாழிகளில் கிடைத்த பொருட்களை ஓஎஸ்எல், டிஎல் டேட்டிங் செய்து பார்க்கும்போது ஒவ்வொரு பண்பாட்டு அடுக்கின் காலமும் தெளிவாகத் தெரியவருமெனத் தொல்லியல் துறை நம்புகிறது.கொற்கை
பாண்டிய நாட்டின் துறைமுக நகரமாக இருந்ததாகக் கருதப்படும் கொற்கையில் 1968ல் முதல்முதலாக ஆய்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை 1961ல் உருவாக்கப்பட்ட நிலையில் அந்தத் துறையின் சார்பில் முதல்முதலில் நடந்த அகழாய்வே இங்குதான் நடத்தப்பட்டது. இங்கு கிடைத்த பொருட்களை வைத்து, இந்த இடத்தின் காலம் என்பது கி.மு. 785 என கணிக்கப்பட்டிருக்கிறது. இடைச் சங்ககால பாண்டியர்களின் துறைமுக நகரமாக கொற்கை இருந்ததாகக் கருதப்படுகிறது.

இங்கு இப்போது நடத்தப்பட்டுவரும் அகழாய்வில், பல பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன. மேலும் கடந்த வாரம் துளையிடப்பட்ட குழாய்கள் ஒன்பது அடுக்குகளாகக் கிடைத்திருக்கின்றன. இதற்குள் உள்ள பொருட்களை ஆய்வுசெய்த பிறகு, இவை எதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்பது தெரியவரக்கூடும்.

கீரிபாறை, காளிகேசம் வனபகுதி கன்னியாகுமரி...!

கன்னியாகுமரி மிகவும் அழகிய சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு கீரிபாறை மிகச்சிறந்த சுற்றுலா தலமாக பார்க்க முடியும். கீரிபாறையை இந்தியாவின் செழிப்பான காடுகள் பார்க்க விரும்பும் சர்வதேச பார்வையாளர்களுக்கான இயற்கை மலையேற்ற இடமாக மாறியுள்ளது.அதை பற்றி பார்ப்போம் ..

கீரிபாறை வன பகுதி :

பெருஞ்சாணி அணையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் கீரிப்பாறை இருக்கிறது. இது வரை பேருந்து செல்லும். கீரிப்பாறையின் கொடுமுடி காளிகேசம் என்ற இடத்தில் சிறு அம்மன் கோவில் உள்ளது.கீரிப்பாறையிலிருந்து மேலே செல்வதற்கு நல்ல வண்டித்தார்ச்சாலை உள்ளது. சிற்றுந்துகள் மூலம் போகலாம். இங்குள்ள ஆறு மலைச் சரிவுகளில் விழுந்தோடி வருவதைத்தான் காளிகேசம் என்கின்றனர். சிறுசிறு சரிவுகளில் அருவிகள் காட்சியளிக்கிறது. பாறைகளைக் குடைந்தும், அறுத்துக் கொண்டும் ஓடுவது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகும். ஆறு அறுத்த பாறை ஒன்றில் பழங்குடியினர் இருந்ததற்கான ஆதாரங்கள் தென்படுகின்றன.

கீரிபாறையில் பலவிதமான தாவரங்கள் மற்றும் மூலிகைகள் உள்ளன, அவை உலகில் உள்ள வேறு இயற்கை மலையேற்றங்கள் மற்றும் வாழ்விடங்களில் ஒப்பிடுகையில் இணையற்றவை. கீரிபாறையின் சமவெளிகளில் பெரிய யானைகளை பார்ப்பது மிகவும் எளிது. கூடுதலாக, பல மிருகங்களும் சுலபமாக காணில் படும் மேலும் மூலிகை மற்றும் மருத்துவ தாவரங்கள் உள்ளன ...

கீரிபாறை வனத் துறையால் கண்காணிக்கபட்டுவருகிறது இப்பகுதியில் சில சிறிய நீர்வீழ்ச்சிகளும் உள்ளன - பிரபலமான வட்டப்பாறை நீர்வீழ்ச்சி. கீரிபாறையின் மலைகளில் மேல் உள்ளது இது காட்டு யானைகளுக்கு பிரபலமானது.

தென்னிந்திய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பழையற்றில் பூதப்பாண்டி கிராமத்திற்கு அருகே கீரிபாறை ரிசர்வ் வனத்தில் வட்டப்பாறை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த 20 கிமீ பரப்பளவானது வனவிலங்கு சரணாலயமாக உள்ளது.

இந்த காட்டில் காணப்படும் பல்வேறு தாவர வகைகள் இயற்கை கட்சிகளும் வனப்பகுதிகளுக்கும், மலையேற்றங்களுக்கும் இந்த வனம் ஒரு கடவுளின் வரப்பிரசாதமாக உள்ளது. பல சிறிய நீரோடைகள் மற்றும் ஆறுகள் காட்டுப்பகுதிகளில் ஓடுகின்றன. கூடுதலாக, இயற்கை ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த இடம். ஒட்டுமொத்தமாக தென்னிந்தியாவின் சில பாதுகாக்கப்பட்ட காடுகளில் கீரிபாறையும் ஒன்று.

காடுகளில் வன விலங்குகள் சிறிய மரங்கள் பூக்கும் குன்று, புதர்கள், மதிப்புமிக்க மூலிகைகள், பல்வேறு வகையான மரங்களைக் கொண்டிருக்கின்றன. தேக்கு, ரோஸ்வூட், வேங்கை மற்றும் ஐனி ஆகியவை முக்கியமான மரங்களும் உள்ளன. இந்த இடத்தில் குறைந்தபட்சம் 25 வகையான பாலூட்டிகளால் நிறைந்திருக்கிறது, சுமார் 60 வகையான பறவைகள், 14 வகையான புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் பல வகையான மீன்கள், ஊர்வன மற்றும் புலி, யானை, மான், மற்றும் காட்டுப்பன்றி ஆகியவை அடங்கும் பார்ப்பதற்கு அருமையான இந்த பகுதியை கன்னியாகுமரி வந்தால் மிஸ் பண்ணாதிங்கள் நண்பர்களே

 


இலங்கைத் தமிழர்களுக்கு ஆங்கிலப் பெயர்கள் எப்படி வந்தது?

பல இலங்கைத் தமிழர்கள் ஆங்கிலம் அல்லது ஐரோப்பிய பெயர்களைக் கொண்டுள்ளனர், மேலும் பெரும்பாலும் பர்கர்கள் அல்லது யூரேசியர்களுடன் குழப்பமடைந்துள்ளனர். இது எவ்வாறு உருவானது என்பது நவீன இலங்கையின் பரிணாம வளர்ச்சியின் ஒரு முக்கிய அங்கமாகும். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீவின் மீது பிரிட்டிஷ் படையெடுப்பு மற்றும் இதுவரை டச்சுக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட தாழ்நிலங்களைக் கைப்பற்றியதில் இருந்து கதை தொடங்குகிறது. 

முந்தைய ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களைப் போலல்லாமல், பிரித்தானியர்கள் இந்தியா தொடர்பான சிலோனின் மூலோபாய நிலைப்பாட்டில் அதிக அக்கறை கொண்டிருந்தனர், எனவே தீவின் மீது அவர்களின் முடிவெடுப்பதில் விருப்பமும் வரவு செலவுக் கட்டுப்பாடுகளும் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன. 


 1796 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நாட்டை ஆக்கிரமித்த பிறகு, முன்னாள் காலனித்துவ சக்தியால் பணியமர்த்தப்பட்ட ஐரோப்பியர்களின் வழித்தோன்றல்களான டச்சு பர்கர்களை நிர்வாகத்தில் பதவிகளில் அமர்த்தினார்கள், அவர்களுக்கும் பூர்வீக மக்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்தனர். 

வரலாற்றாசிரியர், வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி கொல்வின் ஆர் டி சில்வா, பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பின் கீழ் பிரிட்டிஷ் ஆட்சி இலங்கையின் ஆரம்ப காலகட்டம் (பக்205-208) பற்றிய தனது நினைவுச்சின்ன ஆய்வில், ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனி எந்திரங்களை, பெரும்பாலும் தென்னிந்திய பூர்வீகக் குடிமக்களைக் கொண்டு வந்தனர் என்று குறிப்பிட்டார். முட்லியார் மற்றும் ஆராச்சி வகுப்புகளின் சொந்த "தலைவர்களை" மாற்றவும். இது 1797 இல் ஒரு கிளர்ச்சிக்கு வழிவகுத்தது, அதைத் தொடர்ந்து பிரித்தானியர்கள் சமூகத்தின் உயரமான இடங்களில் பர்கர்களுக்கு துணையாக சலுகை பெற்ற சிறுபான்மையினரான "பூர்வீக மக்களை" உருவாக்கினர். 

இந்த சலுகை பெற்ற உயரடுக்கு சமூகத்தின் மிகவும் படித்த உறுப்பினர்களிடமிருந்து வந்தது, அவர்களில் விகிதாசார எண்ணிக்கையில் தமிழர்கள், வரலாற்றின் ஒரு விசித்திரமான சூழ்நிலையின் காரணமாக. அமெரிக்க மிஷனரிகள் டி சில்வாவின் சிலோன் பிரித்தானிய ஆக்கிரமிப்பின் படி, வரவு செலவுத் திட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக தீவின் கல்விக்கான செலவீனங்களை பிரித்தானிய அரசாங்கம் குறைத்தபோது, ​​கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கிறிஸ்தவ மிஷனரிகளையே பெரிதும் நம்பியிருந்தது. இந்த முயற்சியின் கணிசமான பகுதியானது, 

அமெரிக்க ஆணையாளர் சபையின் சுவிசேஷ முயற்சியின் ஒரு பகுதியாக, இலங்கையின் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கே யாழ்ப்பாணத்தில், 1813 இல், ரெவ. சாமுவேல் நியூவெல் அவர்களால் நிறுவப்பட்ட அமெரிக்கன் சிலோன் மிஷன் (ACM) மூலம் செய்யப்பட்டது. வெளிநாட்டு பணிகளுக்காக. 1788 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கர்கள் தீவுக்கு மசாலா வியாபாரிகள் மற்றும் திமிங்கல வியாபாரிகளாக வருகை தந்தாலும், பிரான்சுடன் நடந்து வரும் போரைக் காரணம் காட்டி, ஆங்கிலேயர்கள் அமெரிக்கர்களை வேறு இடங்களில் மதமாற்றம் செய்ய அனுமதிக்க மறுத்தனர் - இது 1809-1814 போரை விட நீண்ட காலம் நீடித்தது. 

உலகம் முழுவதும் நடத்தப்பட்ட நெப்போலியன் போர்களின் இறுதிக் கட்டம். விக்கிபீடியா வழியாக அமெரிக்க சிலோன் மிஷன் படத்தை நிறுவிய ரெவ் சாமுவேல் நியூவெல் 1816 ஆம் ஆண்டில், தமிழ் ஆதிக்கம் நிறைந்த வடக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள ‘தில்லிப்பள்ளி’யில் (தெல்லிப்பள்ளை நகரம் என்று அவர்கள் அழைக்கிறார்கள்), இன்றைய யூனியன் கல்லூரியில் ஒரு பள்ளியை ACM நிறுவினார். 

1823 ஆம் ஆண்டில், இலங்கையின் முதல் நவீன பல்கலைக்கழக அளவிலான கல்வி நிறுவனமான மட்டக்கோட்டை செமினரியை (இது யாழ்ப்பாணக் கல்லூரியாக உருவானது) வடக்கிலும் வட்டுக்கோட்டையில் திறந்து வைத்தார். அடுத்த ஆண்டு, பிரபல ஏசிஎம் மிஷனரி ஹாரியட் வின்ஸ்லோ (பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் ஃபோஸ்டர் டல்லெஸ் மற்றும் சிஐஏ தலைவர் ஆலன் வெல்ஷ் டல்லஸ் ஆகியோரின் மூதாதையர்) உடுவில் பெண்கள் கல்லூரி, ஆசியாவின் முதல் பெண்கள் உறைவிடப் பள்ளியான வடக்கில், தமிழ் ஆதிக்கம் செலுத்தினார். 

 1848 ஆம் ஆண்டில், அமெரிக்க மருத்துவரும் மிஷனரியுமான டாக்டர் சாமுவேல் ஃபிஸ்கே கிரீன் சிலோனில், மானிப்பாய்வில் முதல் நவீன மருத்துவப் பள்ளி மற்றும் போதனா மருத்துவமனையை (தெற்காசியாவின் இரண்டாவது நவீன போதனா மருத்துவமனை, பின்னர் பசுமை நினைவு மருத்துவமனை என்று அறியப்பட்டது) - மீண்டும், தீவின் வடக்கு பகுதி. ACM 1820 இல் வடக்கில் முதல் அச்சகத்தை நிறுவியது மற்றும் 1841 இல் தீவின் இரண்டாவது பழமையான செய்தித்தாள், மார்னிங் ஸ்டார், அங்கும் தொடங்கியது.
11உதிரம் படிந்த பாதங்கள் 26

மறக்க மறுக்கும் அந்த இரவு.........!

உஷ் ....... உஷ்....... ஆமி வந்திட்டான்!

ஈழமணியை பாதுகாத்தாரா குணமணி?

2 படைகளின் முற்றுகைக்குள் டேவிற்சன்!

சரணடைந்தாரா? சமாளித்தாரா?

இயக்க கட்டமைப்பு வேலைகள், அன்று ஆரம்ப காலகட்டமாக இருந்தமையால், தோழர்கள் இரண்டு பிரதான பிரிவுகளாக செயற்பட்டார்கள் .மக்கள் மத்தியில் பகிரங்க அரசியல் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு, முன்னணி அமைப்புகளை கட்டும் தோழர்கள் ஒரு பிரிவாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக தம்மை இயலுமானவரை பகிரங்க படுத்தாமல், முழுமையான ஆயுத போராட்ட இயக்கத்தை கட்டியமைக்க வேண்டிய பணிகளை மேற்கொண்ட தோழர்கள் இன்னொரு பிரிவாகவும் செயற்பட்டனர். ஆரம்ப காலங்கள் என்ற காரணத்தால் இவ்விரு பிரிவினருக்குமிடையேயான தொடர்புகள் தவிர்க்க முடியாததானதாக இருந்தது


தம்மை பகிரங்க படுத்தாமல் அமைப்பு வேலைகள் செய்த தோழர்கள், பொது இடங்களில் டேவிற்சனை சந்திக்கும் சந்தர்ப்பங்களில், கண்டும் காணாதவர்கள் போல் சென்று விடுவார்கள். அவ்வப்போது மூடிய அறைகளுக்குள் ஒன்றாக பழகும் தோழர்கள் அவ்வாறு கண்டும் காணாதது போல் செல்லும் தருணங்கள் அன்று முழுவதும் டேவிற்சனின் மனதை நோகடித்து, விரக்தியில் உற்சாகம் இழக்க செய்துவிடும். ஒன்றாக படித்தவர்கள், உறவினர்கள் தான் (பயம் காரணமாக) இப்படியெண்டால், இவர்களுமா

என டேவிற்சனுக்கு எண்ணத் தோன்றும். அன்றய கால கட்ட, தவிர்க்க முடியாத இந்த யதார்த்தத்தை மெல்ல... மெல்ல….டேவிற்சன் ஜீரணிக்கப் பழகிக்கொண்டார்…..அரச உளவுப்பிரிவினரின் கழுகுப் பார்வையில் இருந்து தப்ப, இந்த யதார்த்தத்துக்கு பழகித்தான் ஆக வேண்டும், என்தை டேவிற்சன் போகப் போகப் புரிந்து கொண்டதுமல்லாமல் தன்னை அந்த யதார்தத்திற்கு பழக்கப் படுத்தியும் கொண்டார்.

டேவிற்சன், தான் தனது வீட்டுக்கு செல்லும் நாட்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் தன்னை தேடி வருவது ஓர் எதிர்பாராத, ஆனால் பொருந்திப் போகின்ற சம்பவங்களாக இருக்கின்றதே? என டேவிற்சனின் மனதில் அன்றய காலகட்டத்தில் கேள்வி எழுந்திருந்தது. அதைப் பற்றி டேவிற்சன் ஆழமாக ஆராயவில்லை. அரச உளவுப்படைகளின் தகவல்கள் தான், இந்த எதிர்பாராத சம்பவப் பொருத்தங்கள் என்பதை போகப் போக டேவிற்சன் புரிந்து கொண்டார். டேவிற்சனிடம் உதவி கேட்பவர்களாக வறிய வாலிபர்கள் போல் வேடமிட்டு சிலர் டேவிற்சனின் வீடு தேடி வந்தார்கள் .வெளி மாவட்டங்களில் இருந்து வேலை தேடி வரும் வாலிபர்களை அரச உளவுப்பிரிவினர் இதற்காககப் பயன்படுத்திக் கொண்டார்கள். டேவிற்சன் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டிருந்த வேளையில் டேவிட்சனின் மாமிமார்களில் ஒருவர் யாழ்ப்பாண போலீஸ் உயரதிகாரி திரு ஆனந்தராஜாவை சந்திக்க, அவருக்கு வேண்டப்பட்ட ஒருவருடன் அவரின் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு நின்றிருந்த நபர் ஒருவரை அவர் அடையாளம் கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தார். ஆம் அந்த நபர் தான் சில வாரங்களுக்கு முன்னர் டேவிட்சனிடம் உதவி கேட்டு அவரின் வீட்டுக்கு வந்தவர். அங்கு வீட்டு வேலைக் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இப்படியான சில நபர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் நையப் புடைக்கப்பட்ட சம்பவங்களும் அன்றய கால கட்டத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத் தக்கது.

அன்றாடம் மக்கள் மத்தியில் அமைப்பு வேலைகளில் ஈடுபட்டுவிட்டு, இரவில் வெவ்வேறு மறைவிடங்களுக்கு நித்திரைக்காகச் செல்வது, ஈழ மாணவர் பொது மன்ற (GUES) உறுப்பினர்களாக மக்கள் பணியாற்றிய தோழர்களின் நாளாந்த வாழ்க்கையாகிவிட்டது

டேவிற்சனும் இவ்வாறு பொது நூலகங்கள், கோவில்கள், ஆதரவாளர் வீடுகளில் பாதுகாப்பான நித்திரைக்குச் செல்வது வழமை.

80களில் நீருக்குள் (மக்கள்) வாழ்ந்த மீன்கள் (போராளிகள்)

1980 களின் ஆரம்பகாலச் சூழ்நிலையில், வில்லங்கத்தை விரும்பி வரவழைக்கின்றோம் என்று தெரிந்தும், போராளிகளுக்கு பாதுகாப்பளிக்க முன்வந்த நூற்றுக் கணக்கான ஆதரவாளர்களையும் இக் கணத்தில் நன்றியோடு நினைவு கூரத்தான் வேண்டும். பகிரங்கமாக தேடப்படுபவர் எனத் தெரிந்து கொண்டு டேவிற்சனுக்கும் தோழர்களுக்கும் உதவியவர்கள் பலர்.

திரு. நேசராஜா: காலம்சென்ற நேசராஜா அவர்கள், பெயரில் மட்டுமல்ல நியத்திலும் இவர் நேசத்திற்கு ராஜா தான். நவாலி ஊரையும், உதை பந்தாட்டத்தையும் இவர் அளவுக்கு அதிகமாக நேசித்தார். நிம்மதியான நித்திரைக்கு டேவிற்சன் கஸ்டப்படுகின்றார் என அறிந்ததும், தனது வீட்டில் ஓர் அறையை டேவிற்சனுக்காக ஒதுக்கிவிட்டார். டேவிற்சன் வீட்டின் பின்புறமாக செல்லன் வளவுக்கூடாக சென்று குச்சொழுங்கைகளுக்கூடாக இவரின் வீட்டிற்க்குச் சென்றுவிடலாம். எந்த நாளும், எந்த நேரத்திலும் இங்கு வந்து படுத்துறாங்கலாம் என டேவிற்சனுக்கு அவர் சொல்லிவிட்டார். அவரும் அவரின் அன்பு மனைவியும் அதிகாலையில் தேநீரும் கொடுத்து டேவிற்சனை, வழியனுப்புவார்கள். டேவிற்சன் இந்தியா சென்ற பின்னரும் டேவிற்சனின் தோழர்களுக்கும் இவரின் குடும்பத்தினர் பாதுகாப்பளித்திருக்கின்றனர். கடமையில் இருந்தபோது விபத்தில் மரணமடைந்த தோழர் வினோத்திற்கும் (நுணாவில்) பாதுகாப்பளித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தோழர் திலக் குடும்பத்தினர்: EPDP யில் தற்போது செயல்பட்டு வரும் தோழர் திலக் பற்றி குறிப்பிட்ட பின் தான் அவரின் குடும்பத்தவர்கள் பற்றி கூறமுடியும். தோழர் திலக், இவரை, வாலிப வயதில், மானிப்பாய் சந்தியில் மாலை வேளைகளில், நாளாந்தம் பல்வேறு நவ நாகரீக உடைகளுடன் காணலாம். நண்பர்களுடன் கூடி, வாலிப குறும்புகளுட ன் நாட்களை போக்கிக்கொண்டிருந்த திலக்கை அமைப்பு, பிரச்சாரத்தின் மூலம் உள்வாங்கிவிட்டது. அன்று தொடக்கம் அவர் சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த ஓர் மனிதராக மாறி, மக்கள் மத்தியில் வேலைகள் செய்ய ஆரம்பித்துவிட்டார். ஆரம்பத்தில் தோழர் டேவிற்சனின் பாதுகாப்புக்கு, தானும், தனது அம்மா, அக்கா, தங்கைமார்களும் ((திருமதி நாகமுத்து, திருமதி புவனேஸ்வரி சின்னத்தம்பி, திரு திருமதி சின்னராசா, தோழர் மஞ்சு) கூட்டு குடும்பமாக வாழும் தனது இல்லத்தை உபயோகிக்க அனுமதித்தார். டேவிற்சனுடன் 2, 3 என தோழர்கள் இணைந்து சென்று இரவிலே படுத்துறங்குவார்கள். பொருளாதார ரீதியில் பெரிய வசதி வாய்ப்புக்கள் உள்ள குடும்பமாக இல்லாது இருந்தாலும், அவரின் அம்மா, அக்கா தங்கைமார்களின் உபசரிப்புகளை விபரிக்க வார்த்தைகளே இல்லை. அந்த நேரத்தில் குடும்பங்களில் இருந்த, பொருளாதாரப் பிரற்ச்சனைகள் பற்றிய முழுமையான புரிதல்கள் இளம் வயது போராளிகளான, டேவிற்சனுக்கும் ஏனைய தோழர்களுக்கும் இருக்கவில்லை. இப்போது அந்த நாட்களைப் பற்றியும், போராளிகளைப் பராமரிக்க அவர்கள் செய்த செலவுகள் பற்றியும் இப்போது எண்ணிப் பார்க்கின்றபோது வியப்பாக இருக்கிறது. இப்படி வளர்ந்த உறவு பின்னர், திலக் தோழரின் கூட்டுக் குடும்ப வீடு, ஒரு முகாம் போலவே மாறிவிட்ட உறவாகிவிட்டது என்றால் அது மிகையாகாது. சுற்றுவட்டாரமும் போராளிகளுக்கு பாதுகாப்பளித்துக்கொண்டிருந்தார்கள். நூற்றுக் கணக்கான தோழர்கள் அங்கு பாதுகாப்பாக படுத்துறங்கிய அந்த நாட்களை எப்படி மறக்க முடியும். இவர்களின் குடும்பத்தாரின் பங்களிப்புகளுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை மட்டும் போதாது.

வதனா நடராஜா: தோழர் அசோக் ((மானிப்பாய்) அவர்களின் சகோதரர். கட்சித் தோழர்களுக்கு எந்த நேரமும் அவரின் வீடு திறந்தே இருக்கும். அவரின் விருந்தோம்பலை போராளிகள் என்றும் மறக்க மாட்டார்கள். அவரையும் அவரின் குடும்பத்தினரையம் நன்றியோடு நாம் நினைவு கூரவேண்டும்.

மறைந்த தோழர் செழியன் (சிவகுமாரன் -உரும்பிராய்) புலிகளால் கொல்லப்பட் தோழர் றொபேர்ட் (சுபத்திரன் நுணாவில்-முன்னாள் மாநகரசபை உறுப்பினர்) தோழர் கி பி (கிருஷ்ணபிள்ளை - சிறுப்பிட்டி - ஈபிடிபி தேசிய அமைப்பாளர்) ஆகிய தோழர்களின் குடும்பத்தவர்களும் அமைப்பின் வளர்ச்சிக்கும், போராளிகளுக்கும் செய்த உதவிகளை எப்படி மறக்கமுடியும். நன்றி! நன்றி! நன்றி!

இராசமணி அக்கா: குணமணி அக்காவின் சகோதரர். ஆரம்பகால கட்டத்தில் ஈழ மாணவர் பொது மன்றம் (GUES), பென்னாம் பெரிய பிரச்சாரச் சுவரொட்டிகளை யாழ் குடாநாடு எங்கும் இரவிரவாக ஓட்டுவது வழக்கம். அந்தச் சுவரொட்டிகளை தயாரிப்பதற்கு தனது முழு வீட்டையுமே தந்துதவியவர்.அவரின் பங்களிப்புகளை நன்றியோடு நினைவு கூரவேண்டும்.

கந்தசாமி ஐயா: நுணாவிலில் வீட்டோடு கடை வைத்திருந்தார். நுணாவில் தோழர்கள் இவரின் வீட்டிலும், நாவற்குழியிலும், டேவிற்சனை மறைத்து வைத்து பாதுகாத்தார்கள். கந்தசாமி ஐயாவின் துணிவையும், விருந்தோம்பலையும் எப்படி மறக்க முடியும். கந்தசாமி ஐயாவிற்கும் குடும்பத்தினருக்கும் நன்றிகள்

நண்பர் ஜோதிலிங்கம்: விரிவுரையாளர், சட்டத்தரணியாக பணியாற்றி வருபவர். பல்கலைக் கழகத்தில் படிக்கும் காலத்தில் அமைப்பின் நடவடிக்கைகளில் முன்னணியில் நின்று பங்களித்தவர். நண்பரும், தனது குப்பிளான் வீட்டில் டேவிட்சனுக்கு பாதுகாப்பளித்தார். நண்பர் ஜோதிலிங்கம் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நன்றிகள்

சின்னராசா அண்ணை: எல்லா தோழர்களுடனும் பாசமாக இருக்கும் சின்னராசா அண்ணர், ஆரம்பகால அமைப்பின் தாக்குதல் நடவடிக்கைகளின் தயாரிப்பு வேலைகளுக்கு இவரின் வீட்டை தாராள மனதுடன் தந்தும் உதவினார். தோழர்களின் கடின உழைப்பைப் பார்த்து, அவர்களை உற்சாகமூட்டுவதுடன், தனது வீட்டில் சுவையாக சமைத்து தோழர்களுக்கு விருந்தோம்புவார். பொருளாதார ரீதியில் வசதியானவர் இல்லையென்றாலும், போராளிகளை பராமரிக்கவேண்டும் என்னும் அவரின் உணர்வை பாராட்டியே ஆக வேண்டும் அவருக்கும் குடும்பத்தினருக்கும் நன்றிகள்

நவாலியூர் தோழர் மில்ஸ் மற்றும் அவரின் குடும்பத்தினர், சுன்னாகம், கல்லாக் கட்டுவான் ஊரைச் சேர்ந்த சின்னத்துரை அண்ணை குடும்பத்தினர் (தோழர் பவானின் குடும்பத்தினர்) வட்டுக்கோட்டை தோழர் ராஜு குடும்பத்தினர், மானிப்பாய் கண்ணன் (புவனேஸ்வரன்) குடும்பத்தினர் அனைவரும் எமது அமைப்பின் ஆரம்ப கால செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்து பங்களித்தார்கள். இவர்களின் விருந்தோம்பல்களை எப்படி மறக்க முடியும்? குடும்பத்தினர் அனைவர்க்கும் எமது நன்றிகள்! தோழர் மில்ஸ், சின்னத்துரை அண்ணை இருவரும் புலிகள் பிரேமதாசா தேன் நிலவுக் காலத்தில் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களுக்கு எமது இதய அஞ்சலிகள்!

திரு. சண்முகநாதன் (மானிப்பாய்): அங்கிள் என போராளிகளால் அன்பாக அழைக்கப்படுபவர். தோழர்களை என்றும் அன்போடு உபசரித்து ஆலோசனைகளுடன் ஆதரவும் நல்குபவர். அங்கிளுக்கும் குடும்பத்தினருக்கும் நன்றிகள்

மானிப்பாய் ஸ்ரீ அண்ணா: ஆரம்ப காலத்தில் அவரும் அவரின் குடும்பத்தினர்கள் அனைவரும் அமைப்புக்கு சகலவிதமான உதவிகளும் நல்கியவர்கள் என்பதை நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றோம். இவரின் தீவிரமான ஆதரவை பொறுக்கமுடியாத புலிகள், இந்திய இராணுவ பிரசன்ன கால கட்டத்தில் இவரை இரக்கமின்றி சுட்டுக் கொன்றனர். இவரின் மகள் திருமதி சுஜி சர்மா (EPDP), தற்போது மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினராக மக்கள் பணியாற்றிவருகின்றார்.

தோழர் மித்திரன் குடும்பத்தினர்: மன்னாரிலும், யாழ்ப்பாணத்திலும், ஆரம்ப காலத்தில் அமைப்பின் வளர்ச்சிக்கு உதவிகள் செய்தவர் தோழர் மித்திரன். துவிச்சக்கர வண்டிகளையே மற்றவர்களின் உபயோகத்திற்கு தர முகம் சுளிக்கும் அந்தக் காலத்தில் தனது மோட்டார் சைக்கிளையே அமைப்பின் வளர்ச்சிக்காக தந்துதவியவர். பாதயாத்திரை முன்னேற்பாடுகளுக்காக, அவர் தந்துதவிய மோட்டார் சைக்கிளிலேயே குடாநாடு எங்கும் சுற்றிவரக் கூடியதாகவிருந்தது. சில வருடங்களின் பின்னர் அமைப்புடன் இணைத்து, முழுநேர உறுப்பினராக பங்களித்தவர். தற்போழுது ஈபிடிபி யின் தவிசாளராக செயல்பட்டு வருகின்றார். இவரின் அன்னை காலம் சென்ற லூர்தம்மா மரியம்பிள்ளை (டேவிற்சனின் மாமியார்) அந்த ஆரம்ப கால கட்ட ங்களில் பல போராளிகளுக்கு விருந்தோம்பல் செய்ததுமல்லாமல், தான் நடத்திய சிறிய கடையில் அடைக்கலமும் கொடுத்து பங்களித்தவர். நன்றி! நன்றி! நன்றி!

மொணிக்கா முடியப்பு: டேவிட்சனின் தாயார்: இராணுத்தினரின் தேடுதல் நடவடிக்கைகளின் போது துணிவோடு வாதிடுபவர். டேவிற்சன் இந்தியா சென்ற பின்னர் பல போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன், விருந்தோம்பலும் செய்து பங்களித்தவர். ஈழவிடுதலைப் போராட்த்தின் முதல் பெண் போராளி தோழர் ஷோபா, புலிகளால் கொல்லப்பட்ட தோழர்கள் பெஞ்சமின், பிரேம், இப்ராஹிம் போன்ற பல போராளிகள் இவரின் வீட்டை ஓர் சிறு முகாம் போல் பாவிக்க இடமளித்ததுடன் பல பங்களிப்புகளையும் ம் செய்தவர். இவரின் சகோதரர்களும் (டேவிர்சனின் தாய் வழி, பெரியம்மா-யாழ் பெரியகோயிலடிசின்னம்மா-கொழும்புத்துறை) டேவிற்சனுக்கு அடைக்கலம் கொடுத்து பங்களிப்பு செய்துள்ளனர். நன்றி! நன்றி! நன்றி!

தோழர் ரவி குடும்பத்தினர்: தோழர் லைப்ரரி ரவி (மானிப்பாய்) பற்றி முன்னைய பதிவில் விரிவாக எழுதப் பட்டுள்ளது. அவரின் குடும்பத்தினரும் அந்த ஆரம்ப நாட்களில் செய்த மறக்க முடியாத பங்களிப்புகளையும் நன்றியோடு பதிவிடவேண்டும்.

பத்மா அன்டி /அரவிந்தன்: சங்கானையில் வசித்து வந்த டேவிற்சனின் வகுப்புத் தோழனும் அவரின் அம்மாவும் ((திருமதி .பத்மா விமலதாசன்-ஆங்கில ஆசிரியர்) டேவிட்சனுக்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்தனர். அதே ஊரில் வசித்து வந்த திரு.நாகேஸ்வரன் குடும்பத்தினரும் டேவிற்சனுக்கு பாதுகாப்பளித்தார்கள். இவர்களுக்கெல்லாம் நன்றிகள்.

திரு.லோகேஸ்வரன்: பெருமாள் கோவிலடியை சேர்ந்தவர். யாழ். பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் கணக்காளராக பதவி வகித்தவர். 1981 ம் ஆண்டு "மாணவர் ஒன்றியம்" என்ற அமைப்பின் மூலம் யாழ் திறந்த வெளி அரங்கில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட மாணவர் எழுச்சிக் கூட்டதின் முன் னேற்பாடுகளை கவனிக்க தனது வீட் டைத் தந்து உதவியதுடன் விருந்தோம்பலும் செய்தார். அவருக்கும் குடும்பத்தினருக்கும் நன்றிகள்

சிறுப்பிட்டி, மத்தாளோடை, உரும்பிராய், நுணாவில், தீவகத்தில் பல கிராம மக்களுக்கும் பல உதவிகளை அந்த ஆரம்பநாட்களில் நல்கினர், அவர்கள் எல்லோருக்கும் எமது நன்றிகள்

இடதுசாரிகளின் கோட்டையாக விளங்கிய வடமராட்சியிலும் நியூட்டன்,நிவாஷ்,விந்தன்,கபூர்,நாபா,பிரதீப் போன்ற பல தோழர்கள் ...... இணைந்து அமைப்பைக் கட்டியெழுப்ப பங்களித்தார்கள் . இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து அன்று ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்குகளையும் , கூட்ட்ங்களையும், விருந்தோம்பல் செய்த தோழர்களையும் , குடும்பத்தினரையும் நினைவுறுத்திப் பார்க்கின்றோம்!

விடுதலைப் போராளிகளை கௌரவப் படுத்தும் எம்மில் பலர் விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கு உணர்வுடன் பங்களித்த ஆதரவாளர்களை கௌரவப்படுத்துவதற்கும், நினைவுறுதிப் பார்ப்பதற்கும் தவறி விடுகின்றோம். விடுதலை இயக்கங்கள் முளை விட்ட அந்த ஆரம்பகாலத்தில் இவர்களின் பங்களிப்புகள் காத்திரமானவை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். அச்சுறுத்தல்கள் மிகுந்த அந்தக் கால கட்டத்தில் துணிவுடன் பங்களித்தவர்கள் இவர்கள். 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இவர்களையும் நன்றியோடு நினைவுறுதிப் பார்க்கின்றோம். 40 ஆண்டுகளின் பின்னர் இப்பதிவை எழுதுகின்றபோது, சிலரை தவறவிட்டு விடுவோமோ என பயப்பட வேண்டியுள்ளது. அப்படி யாரையாவது இப் பதிவில் பதிவிட தவறிவிட்டோமெனின் தயவு செய்து மன்னித்து விடுங்கள்.

தனியொரு தோழரால் எழுதப்படும் தொடர் என்பதால், எல்லாப் பிரதேசங்களிலும், ஆரம்ப கால கட்டங்களில் ஆதரவளித்துச் செயல்பட்ட அனைவரையும் இப்பதிவில் முழுமைப்படுத்துவது சாத்தியமானதல்ல என்பதை கருத்தில் கொண்டு, தோழர்களே! நண்பர்களே! உங்களின் நினைவில் நிற்கும், அனைத்து ஆதரவாளர்களையும் உங்கள் கருத்துக்களில் நினைவுபடுத்தி அவர்களையும் கௌரவியுங்கள்.

1985 ம் ஆண்டுகளில் டேவிற்சன் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய போது ஆச்சரியப்படத்தக்க விதத்தில் நிலைமைகள் மாறியிருந்தன. முகாம்களை விட்டு வெளியேறாதவாறு போராளிகள், இராணுவத்தினரை முடக்கியிருந்தனர். விடுதலைப் போராட்ட இயக்கங்கள் ஆங்காங்கே தமக்கென முகாம்களை அமைத்துக் கொண்டிருந்தனர். எல்லா வீடுகளிலும் விடுதலைப் போராளிகளை வலிந்து, வலிந்து அழைத்து மக்கள் விருந்தோம்பினார்கள். சிலர் தமது பெண் பிள்ளைகளுக்கு, விடுதலைப் போராளிகளை திருமணம் முடித்து வைப்பதற்குகூட, இயக்கங்களின் பொறுப்பாளர்களுடன் சம்மந்தமும் பேசினார்கள்.

மக்கள் மத்தியில் வேலை செய்வதில் உள்ள பலம் இது தான். பரந்துபட்ட மக்கள், போராளிகளை பராமரித்ததுமல்லாமல் துணிந்து பாதுகாத்தும் இருக்கின்றார்கள்.

மக்களை நேசிக்கும் போராளிகள் என்றாலும், குடும்ப பந்த, பாசங்களை இலகுவில் தூக்கியெறிந்துவிட முடியாது என்பதையும் நாம் புரிந்து கொள்ளவது கடிதமானதாக இருக்க முடியாது. டேவிட்சனும் இதற்கு விதிவிலக்கல்ல. அமைப்பு வேலைகளுக்கு மத்தியில் இடையிடையே வீட்டுக்குச் செல்வதும் அம்மாவினதும், உறவினர்களினதும் உணவை உண்ணும் வழக்கத்தையும் டேவிற்சனால் முற்றாக நிறுத்திவிட முடியவில்லை. ஆபத்தை விலைக்கு வாங்கும் நிலைமையை நன்றாக புரிந்து கொண்டும், டேவிற்சன் இடையிடையே இந்த தவறை மேற் கொண்டார்.

அழகிய நவாலியின் மாப்பான வளவு

டேவிற்சன் வாழ்ந்து வந்த கிராமத்தின் பெயர் நவாலி. அந்த அழகிய கிராமத்தின் ஓர் மூலையில்" மாப்பானர் வளவு" என்னும் ஓர் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஓர் பகுதியில் தான் டேவிற்சனின் வீடு அமைந்திருந்தது.

1970களின் ஆரம்ப காலத்தில் அக் கிராமத்திலிருந்து பலர் விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள். 1979 ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டம் அமூலாக்கப்பட்ட மறு நாள் இன்பம் என்ற இளைஞர் கடத்தப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டு, நடு வீதியில் வீசப்பட்டார். பாலேந்திரா இராமலிங்கம் (தோழர் பாலா)) என்ற இளைஞர் காணாமலாக்கப்பட்டார். (காணாமலாக்கப்பட்ட முதல் ஈழப் போராளி) இச் சம்பவங்கள் இக் கிராமத்தில் இரவோடு இரவாக அரங்கேறியிருந்தது. இச் சம்பவங்கள் இக் கிராமத்திலிருந்தும், தமிழ் பிரதேசங்களில் இருந்தும் இளைஞர்கள் விடுதலைப் போராடத்தில் உத்வேகத்துடன் செயல் படுவதற்கு ஓர் காரணமாகவும் அமைந்திருந்தது. ஆரம்பத்தில் போலீஸ் படைகள் தேடுதல்களையும், கைதுகளையும் மேற்கொண்டனர். போராளிகளின் தாக்குதல்களுக்கு போலீஸ் படைகள் ஈடு கொடுக்க முடியாத திருப்புமுனையான நிலை ஏற்பட்ட போது பெருமளவினரான இராணுவத்தினர் இக் கடைமைகளை தமது கைகளில் எடுத்துக்கொண்டனர்.

அக் காலகட்டத்தில் பெருமளவிலான போலீஸ் படைகள், இன்பம், பாலா போன்ற இளைஞர்களை தேடி கிராமத்துக்குள் நுழைவது அடிக்கடி நிகழும் நிகழ்வுகளாயிருந்தது. போராளிகளை நேசித்த கிராம மக்கள், படையினரின் தேடுதல் வேட்டைகளின்போது, போராளிகளுக்கு தகவல் கொடுக்கும் நடைமுறைகளுக்கு, நவாலிக் கிராம மக்கள், தாமாகவே தன்னெழுற்சியாக தம்மை பரீட்சயப் படுத்திக் கொண்டுவிட்டனர். டேவிற்சன் பலமுறை தப்புவதற்கும், இக் கிராம மக்கள் தன்னெழுற்சியாகவே இவ்வாறான உதவிகளை செய்தார்கள்.

இராணுவம் நவாலி பிரதான வீதிக்கு வரும் பொழுதே, கிராம மக்கள், படைகள் வரும் செய்தியை கிடுகு வேலிகளுக்கூடாக கடத்தி, டேவிற்சன் வீட்டுக்கு தகவல் தெரிவித்துவிடுவார்கள். படைகள் குச்சொழுங்கையூடாக டேவிற்சன் வீட்டிற்கு வந்து சேர்வதற்க்குள், டேவிற்சன் தனது வீட்டின் பின்னாலுள்ள செல்லன் வளவு பற்றைக் காணிக்குள்ளால், முள்வேலி பாய்ந்து ஓடி மானிப்பாய்க்கு தப்பித்து சென்றுவிடுவார். இதனால் படையினர் பலமுறை ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டனர். அதனாலேயே "மாப்பானர் வளவு" என்னும் ஓர் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஓர் பகுதியில் தான் டேவிற்சனின் வீடு அமைந்திருந்தது என முன்னரே குறிப்பிட்டிருந்தேன்.

இச்சந்தர்ப்பதில், திரு செல்லன் பற்றியும், செல்லன் வளவு பற்றியும் குறிப்பிட்டேயாகவேண்டும்.

திரு செல்லன்: பார்க்கும் போது கொஞ்சம் பயப்படக்கூடிய தோற்றம் கொண்ட மனிதர். கூரிய பார்வையுடைய கண்கள்….. பழுப்பு நிற நீண்ட தலைமுடி…..சற்று வயதான கட்டுடல் கொண்ட மனிதர்…... மேலாடையின்றி அரிவாளுடனும் , கொடுக்கு கட்டுடனும், அந்த பற்றைக் காட்டு வளவுக்குள் நடமாடும் மனிதர்…..கடின உழைப்பாளி

செல்லன் வளவு: மாமரங்களும், கொய்யா மரங்களும், பயனற்ற செடி கொடிகளும் கொண்ட ஓர் பற்றைக் காடு…….

டேவிற்சன் தனது பள்ளிப் பருவத்தில், மாங்காய், மரத்திலேயே பழுத்த மாம்பழம், கொய்யாக்காய் போன்றவற்றைச் சுவைப்பதற்கு இவ் வளவிற்கு இடைக்கிடை செல்வதுண்டு. சில வேளைகளில் வேலி பாய்ந்து டேவிற்சன் வருவதை பற்றைக்குள் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்துவிட்டு டேவிற்சன் பழங்களை பிடுங்கும் நேரத்தில் “...அடோய்என கத்திக்கொண்டு செல்லன் அரிவாளுடன் கலைப்பார், தலை தெறிக்க ஓடி வேலி பாய்ந்து வீட்டுக்குள் ஓடிவிடுவார் டேவிட்சன். கோபத்துடன் வேலி ஓரத்திற்கு வரும் செல்லன், டேவிற்சனின் பெற்றோரிடம் முறைப்பாடு செய்து விடுவார்… .....பின்னர் என்ன நடக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா?

சிறு வயதில் செல்லன் மீதிருந்த பயம் காரணமாக, படைகளிடமிருந்து தப்பியோடும் போது, செல்லன் வந்துவிடுவாரோ? என்ற பயமும், இடையிடையே டேவிற்சனுக்கு வந்து போகும்.

1982 அக்டோபர் மாதத்தில் விடுதலை செய்யப்பட்ட டேவிற்சன், மீண்டும் வெகுஜன இயக்கத்தை கட்டும் பணிகளில் தொடர்ந்தும் தோழர்களளோடு இணைந்து தீவிரமாக உழைத்தார். கொடிய பயங்கவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுப்பதென அமைப்பு முடிவெடுத்தது. 1983 ம் ஆண்டு சித்திரை மாதம் 5ம் 6ம் 7 ம் திகதிகளில் குடாநாடு தழுவிய பாதயாத்திரை ஒன்றை நடத்துவதெனத் தீர்மானிக்கப் பட்டது.

மறக்க முடியாத அந்த ஆபத்தான இரவு.........

சரணடைந்தாரா?? சாணக்யமாக சமாளித்தாரா???

பாதயாத்திரை நெருங்கும் நாளொன்றில் (பங்குனி 1983) பல கிராமங்களுக்கு சென்று முன்னேற்பாடுகளை கவனித்துவிட்டு இரவு நேரம், காலதாமதமாக வந்த டேவிற்சன், குளித்துவிட்டு அம்மாவின் சமையலை சுவைத்த பின்னர் இடையிடையே பாதுகாப்பான நித்திரைக்கு செல்லும் ஆதரவாளர் திரு. நேசராஜா வீட்டுக்கு நித்திரைக்குச் செல்லலாம் எனத் தீர்மானித்திருந்தார். நேரத்தையும், களைப்படைந்திருந்த டேவிற்சனையும் கணக்கிலெடுத்த, அவரின் மாமியும் (மறைந்த திருமதி லூர்த்தம்மா), குடும்பத்தினரும், டேவிற்சனை தமது வீட்டிலேயே அன்றிரவு நித்திரைக்குச் செல்லுமாறு அன்புடன் வலியுறுத்தினர் .அவர்களின் அன்றைய அன்பு கலந்த வலியுறுத்தலை ஏற்று மாமியார் வீட்டின் மூலையில் அமைந்திருந்த அறையொன்றில் நித்திரைக்குச் சென்றார் டேவிற்சன். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், நாளாந்தம் இராணுவம் தன்னை கைது செய்வது போன்ற கனவுகள், அடிக்கடி வருவது போன்ற மனரீதியான சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருந்தார் டேவிற்சன். அன்றும் கண்களை மூடுவதற்கு முன்னர் எதோ ஒருவிதமான உள்மன உணர்வு, இன்று கட்டாயம் இராணுவம் வரும் என்று டேவிற்சனுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தது.

மாப்பான வளவு மின்விளக்குகள் ஒவ்வொன்றாக அணைக்கப் பட்டுக்கொண்டிருந்தன. அந்த வளவில் இருள் சூழ்ந்திருந்தது.

டேவிற்சனும் களைப்பு மிகுதியால் அயர்ந்து தூக்கத்தில் தன் கண்களை மூடும் அந்தக் கணத்தில், திடீரென இருளைக் கிழித்துக்கொண்டு, அந்த அறைக்குள் மோட்டார் வாகன ஒலியுடன் பிரகாசமான ஓர் மின் ஒளி பாய்ச்சப்பட்டதை உணர்ந்த டேவிற்சன், கட்டிலிருந்து துள்ளி எழுந்து, செல்லன் வளவை நோக்கி ஒட்டமெடுத்தார். இதனால் மாமியாரின் வீடு அல்லோல கல்லோலப் பட்டது. பக்கத்துக் குடிசையில் படுத்திருந்த சித்தப்பாவும் சின்னம்மாவும் (திரு, திருமதி ஆரோக்கியநாதன்) எழுந்து வந்து மாப்பானர் வளவுக்குள் வந்த மோட்டார் வாகனத்தை பற்றிய விபரத்தை அறிய முயற்சித்தனர். கிராமத்து வாடகை வாகனம் என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது. செல்லன் வளவுக்குள் இருந்த டேவிற்சனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த எச்சரிக்கை சம்பவத்தின் பின்னர் மீண்டும் உறவினர்கள் அனைவரும் ஆலோசனைக் கூட்டம் போட்டு சித்தப்பாவின் குடிலுக்குள் பாய் போட்டு, டேவிற்சனை நித்திரைக்கு அனுப்பினார்கள். டேவிற்சனும் அயர்ந்து தூங்கிவிட்டார்.

எல்லோரும் மீண்டும் நித்திரைக்குச் சென்றுவிட்டனர். சித்தப்பாவும் சின்னம்மாவும் தமது குழந்தைகளுடன் குடிலின் முன் விறாந்தையில், கட்டிலில் படுத்துறங்கிவிட்டனர். சில மணி நேரங்கள் சென்றிருக்கும்,

டக் கிரீச், டக் கிரீச், டக் கிரீச் டக் கிரீச் ......என்ற சத்தம் முதலில் சிறிதாகவும் பின்னர் அதிகரித்தும் சென்றது ...இந்த இராணுவ பூட்சுகளின் சத்தத்தைக் கேட்டு டேவிற்சனின் சின்னம்மா (குணமணி அக்கா) திடுக்கிட்டு எழுந்து விட்டார் ....டக் கிரீச், டக் கிரீச்இந்த சத்தம் இப்போது பலமடங்காகவும் கேட்டது ....நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் இப்போது டேவிற்சன் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்தக் காலத்தில் ஆங்காங்கே இராணுவத்தினர் மீது தாக்குதல்கள் நடக்கும் காலமாகையால், ரோந்து செல்லும் போதோ, தேடுதல் வேட்டையின் போதோ இராணுவத்தினர் இவ்வாறு அதிகளவானவர்களாகவே செல்வார்கள். இராணுவத்தினர் முதலில் சிறிதளவினர் வந்து நிலை எடுத்துக் கொண்ட பின்னர், இன்னுமொரு பிரிவினர் அவர்களைத் தொடர்ந்து வருவார்கள், பின்னர் அதிகளவினர் வருவார்கள். ....சிலர் மாமியார் வீட்டையும் சுற்றி வளைத்தனர் ....சில இராணுவத்தினர் மதில்கள் மீது ஏறி நின்று நிலை எடுத்துக்கொண்டனர்.

திடுக்கிட்டு எழுந்த டேவிற்சனின் சின்னம்மா, திரேசம்மா ஆரோக்கியநாதன் (சின்னம்மாவை குணமணி அக்கா என்றே டேவிற்சன் அழைப்பார்) உஷ்…..உஷ் ...என்றவாறு தனது கணவரின் வாயை மூடியபடி, அவர்கள் வந்து விட்ட செய்தியை சொல்லி என்ன செய்யலாம் என இருவரும் ஓர் அவசர ஆலோசனை நடாத்தினர் ....நேரம் தாழ்த்துவது நல்லதல்ல ….. ..தான் கேட்டுத் தானே அவன் இங்கு வந்து படுத்தவன் …. அவனை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என பதபதைத்தார் டேவிற்சனின் சித்தப்பா. குடிலுக்குள் இருந்த அனைவரும், இப்போது காலம் தாழ்த்தாது தாமும் நிலையெடுத்தாக வேண்டும். தவழ்ந்து தவழ்ந்து…. டேவிற்சன் படுத்திருந்த அந்த குடிசைக்குள் இருந்த சிறிய அறைக்குள் வந்த சின்னம்மா

உஷ்....உஷ் ...என்றவாறு டேவிற்சனின் வாயை பொத்தியபடி, இரகசியமாக கதை கொடுத்தார்.

அவங்கள் வந்திட்டாங்கள்பயப்படாதே, உடனடியாக தவழ்ந்து தவழ்ந்து வந்து எமது கட்டிலுக்கடியில் படு"

டேவிற்சனும் காலம் தாழ்த்தாது கட்டளையை நிறைவேற்றினார். சின்னம்மா அப்போது நிறைமாத கர்பிணி பெண்ணாக இருந்தார். அவர்கள் முன்னரே திட்டமிட்டபடி, கட்டிலின் அடிப்பாகம் மறைந்திருக்குமாறு, போர்வையால் போத்துக்கொண்டு மல்லாக்காக படுத்துவிட்டார் டேவிற்சனின் சின்னம்மா. சித்தப்பாவும் குடிலுக்கு வெளியே நிலையெடுத்துவிட்டார்.

டேவிற்சனின் வீட்டில் சோதனைகள் ஆரம்பித்துவிட்டன. வீட்டின் முகடு, குளியலறை, கட்டில்களின் கீழ், புகைக் கூடு ...இவ்வாறு சல்லடை போட்டு தேடுதல் நடத்தினார்கள் படையினர். அடிக்கடி இராணுவம் வந்து போனதால் அவர்களோடு வாதிட்டுப் பழக்கப்பட்டுப் போன, டேவிற்சனின் அம்மா திருமதி. மொணிக்கா முடியப்பு, அவர்களுடன் தர்கித்துக்கொண்டிருந்தார். சகோதரர்களும், தந்தையார் டேவிட் முடியப்புவும், எல்லா வீடுகளிலும் சோதனைகள் நடப்பதை அவதானித்தபடி, தப்ப முடியாது என்ற பயத்தோடு அமைதியாக இருந்தனர்.

மாமி வீட்டு திறந்த வெளி விறாந்தையில் படுத்திருந்த, பூமாமி என டேவிற்சன் அழைக்கும் மறைந்த திருமதி லூர்தம்மா மரியாம்பிள்ளை, பூட்ஸ் சத்தங்கள் கேட்டு திடுக்கிட்டு எழுந்த கணத்தில் முன் மதிலின் மேல் இயந்திர துப்பாக்கியுடன் நிலையெடுத்திருந்த இராணுவ வீரனைப் பார்த்ததும் நடு நடுங்கிவிட்டார். படுக்கைக்குப் போகும்போது எப்போதும் தனது தலையணையின் கீழ் வைத்திருக்கும் செப மாலையை எடுத்தவர், எழுந்து நின்று

"பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் ......."

கைகள் கும்பிட்டவாறு, கண்களை மூடியவாறு ஜெபிக்கத் தொடங்கிவிட்டார்.....

மாமியார் வீட்டில், டேவிற்சன் முதலில் படுத்திருந்த அந்தக் கட்டிலின் படுக்கை விரிப்புகள் கலைந்திருப்பதைக் கண்ட படையினர், இங்கு படுத்திருந்த டேவிற்சன் எங்கோ மறைந்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்துடன் சல்லடை போட்டு தேடுதல் நடத்தி களைப்படைந்துவிட்டனர்.

மச்சாள்மாரை கேள்வி கேட்டபோது, அது விருந்தினர்கள் வந்தால் பாவிக்கும் அறை எனக் கூறிவிட்டார்கள்.

சித்தப்பா வீட்டுக் குடிலுக்குள் மறைந்திருந்த டேவிற்சன், இரண்டு படைகளின் முற்றுகைக்கு முகம் கொடுத்துக்கொண்டிருந்தார்.

அடோய் என்ன….. .. என்னஏன் வெளிய வந்தது ...... உள்ள போ….... உள்ள போ….. ...

சித்தப்பாவை அதட்டினான் ஓர் இராணுவ சிப்பாய்…...

இல்லை ஐயா ... வயிற்றிலே பிள்ளை…... அவ நித்திரை கொள்ளுறா ..... குழந்தைகளும் நித்திரை கொள்ளுகின்றார்கள் ஐயா ...கெஞ்சிக் கேக்குறன்…..

மன்றாடும் தொனியில் வேண்டுகோள் விடுத்தார் சித்தப்பா.

நம்ப மறுத்த அந்த இராணுவச் சிப்பாய்.உள்ளே சென்று பார்த்தான், டேவிற்சனின் சின்னம்மா கட்டிலை விட்டு எழும்ப முயற்சிப்பது போல் பாசாங்கு செய்தார்.

படுங்கோ அம்மே, படுங்கோஅம்மே, எழும்ப வேண்டாம்

என்று சொன்ன அந்தச் சிப்பாய் சோதனை செய்தது போல் பாசாங்கு செய்து கொண்டு வெளியே சென்றுவிட்டான்

அந்தச் சிப்பாயின் மனது அந்த கட்டிலைப் பார்த்ததும் இளகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

குடிலுக்குள் செல்ல, கூட்டமாக வந்த தனது சக சிப்பாய்களையும் தனது முடிவை ஏற்றுக் கொள்ள வைத்து, அவர்களை குடிலுக்குள் போகவிடாமல் தடுத்து விட்டான். மற்ற இராணுவத்தினர் உள்ளே சென்றுவிடுவார்களோ என்று எண்ணிய அந்தச் சிப்பாய் ஓர் காவலாளி போலவே நீண்ட நேரம் குடிலுக்கு முன் நின்றிருந்தான். எதிர்பார்த்ததை விடவும் எல்லாம் நன்றாகவே சென்றுகொண்டிருந்தது ...ஆனால் பொறுத்துப் பொறுத்துப் பொறுமையிழந்த டேவிற்சன், இந்த எதிரியை விட அந்த எதிரியிடம் (இராணுவத்திடம்) சரணடைவதே மேல் என முடிவு செய்து கட்டிலுக்கடியிலிருந்து வெளியே வரத் தீர்மானித்தார்.

சரணடைந்தாரா?? சாணக்யமாக சமாளித்தாரா???

பாதங்கள் தொடர்ந்து பதியும்.

 




சரி
யான சூழல் அமைந்தால், ஒரு மரத்துண்டு கல்லாக மாறிவிடும். தமிழகத்திலேயே "கல் மரங்கள்" உள்ளன. சில சமயங்களில் மரம் புதைந்து கரியாகி, அந்தக்கரி அழுத்தம், வெப்பம் காரணமாக பல லட்சம் ஆண்டுகள் கழித்து வைரமாகவும் மாறும்.

படத்தில் உள்ள ஓபெல் கல்மரம், க்வார்ட்ஸ் கல்லாக மாறியுள்ளது. இந்த மரக்கல்லின் வயது, கம்மிதான், 225 மில்லியன் வருடங்கள்...! ஒரு மில்லியன்னா பத்து லட்சம் வருடங்கள், கணக்கு போட்டுக்கோங்க...!


வடுகன் திருமலை நாயக்கனிடம் தளவாயாக இருந்த வடுகப்பார்ப்பான் ராமப்பய்யன் தமிழினப் பகைவன் எனபது தமிழர்கள் அறிந்ததே.இப்போது இந்த ராமப்பய்யன் எனது மூதாதை என்று சுப்ரமணியசாமி டுவிட்டரில் தெரிவித்திருப்பதன் மூலம் இந்த சுப்ரமண்யசாமி தமிழர்களின் பரம்பரைப் பகைவன் எனபது உறுதியாகி விட்டது.

டுவிட்டரில் சுப்ரமணியசாமி வெளியிட்ட தகவல்:

"எனது மூதாதை ராமப்பய்யர் என்பவர் மதுரை மன்னர் திருமலை நாயக்கரிடம் பிரதானியாகவும் தளபதியாகவும் இருந்தார். அவர்தான் ராமநாதபுரத்திலிருந்து மைசூர் வரை பரவியிருந்த இசுலாமிய ஆட்சிகளை அகற்றினார். அவர்தான் யாழ்ப்பாணத்தில் இருந்து மைசூர் வரை இந்து சாம்ராஜ்யத்தை மீள் உருவாக்கம் செய்தார்."

தனது முப்பாட்டன் ராமப்பையனைப் பற்றி சுப்ரமணியசாமி சொன்ன மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் சுத்தப் பொய். ராமப்பய்யனைப் பற்றி உண்மையான, ஆதாரபூர்வமான, வரலாற்றுத் தகவல்களை கீழே தந்துள்ளேன்.

தகவல் 1

பீஜப்பூர் சுல்தானிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு விஜய நகர அரசை வேலூரிலிருந்து அகற்றியவன் இந்த ராமப்பய்யன்.

ராமப்பய்யன் தளபதியாயிருந்த திருமலை நாயக்கனின் முப்பாட்டன் விஸ்வநாத நாயக்கனை கி.பி. 1530 ஆம் ஆண்டு மதுரை மன்னனாக்கி அழகு பார்த்தவன் விஜய நகரத்தை ஆண்ட துளுவ வம்சத்தை சேர்ந்த காப்பு பலீஜாவான கிருஷ்ணதேவராயன். இந்த கிருஷ்ண தேவராயனின் தம்பி மகனான சதாசிவ ராயர் விஜய நகர மன்னனாக இருந்தபோது அஹமது நகர், பீறார், பீஜப்பூர், கோல்கொண்டா, பீடார் ஆகிய 5 சுல்தான்களும் விஜய நகரின்மீது படை எடுத்தார்கள். 1565 ஜனவரி 23ல் இப்போரில் சதாசிவராயர் தோற்கடிக்கப்பட்டார். விஜய நகரம் முற்றுமாக தீயிட்டு கொளுத்தப்பட்டது.

தப்பியோடிய சதாசிவ ராயர் வடபெண்ணை நதிக்கரையிலிருந்த பெனுகொன்டாவை தலைநகராக்கி அங்கிருந்து ஆண்டார்.

கி.பி. 1601ல் பெனுகொன்டாவை தலை நகராகக் கொண்டு ஆண்ட விஜய நகர மன்னன் இரண்டாம் வேங்கடவன் மீது பீஜப்பூர் சுல்தான் படையெடுத்து தோற்கடித்தான். பெனுகொன்டாவை விட்டு வெளியேறிய இரண்டாம் வேங்கடவன் வேலூருக்கு வந்து வேலூரை தலை நகராகக் கொண்டு ஆளத் தொடங்கினான்.


 

அன்று முதல் வேலூர் ராயர்வேலூர் ஆனது. விஜய நகர அரசின் தலை நகராகவும் ஆனது. கி.பி. 1649ல் வேலூரை தலை நகராகக் கொண்டு ஆண்ட விஜய நகர மன்னன் ஸ்ரீரங்கன் மீது மீண்டும் பீஜப்பூர் சுல்தான் படையெடுத்து வந்து அவனை வென்று வெளியேற்றினான். அதோடு விஜய நகர சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது. கடைசி விஜய நகர மன்னன் ஸ்ரீரங்கன் நிற்க நிழல் இன்றி அனாதையாக அலைந்து தெரிந்து இறந்து போனான். ஆற்காடு துருக்கியர் வசமாயிற்று. இம்முறைதான் துருக்கியர் தமிழகத்தில் வலுவாக காலூன்றினர்.

அந்த சமயத்தில் மதுரையை ஆண்டவன் திருமலை நாயக்கன். அவனது தளபதி ராமப்பய்யன். கிருஷ்ண தேவராயனிடம் அடப்பக்காரனாய் இருந்த தன் முப்பாட்டன் விஸ்வநாதனை மதுரை மன்னனாக்கிய கிருஷ்ண தேவராயனின் வழித்தோன்றல் ஸ்ரீரங்கனுக்கு ஆபத்து என்றவுடன் திருமலை நாயக்கன் ஓடிப்போய் உதவியிருக்க வேண்டாமா? உதவி செய்யவில்லை என்பதோடு இதில் கொடுமை என்னவென்றால் பீஜப்பூர் சுல்தானிடம் கையூட்டு பெற்றுக்கொண்ட வடுகப் பார்ப்பான் ராமப்பய்யாவின் பேச்சை கேட்டு பீஜப்பூர் சுல்தானை வேலூரின்மீது படையெடுக்க செய்து விஜய நகர பேரரசை முடிவுக்கு கொண்டு வந்தவனே இந்த திருமலை நாயக்கன்தான்.

இவ்வாறு பீஜப்பூர் சுல்தானிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு திருமலை நாயக்கர் மூலம் விஜய நகர இந்து அரசை முடிவுக்கு கொண்டு வந்த இந்த ராமப்பய்யன்தான் ராமநாதபுரத்திலிருந்து மைசூர் வரை இஸ்லாமிய அரசுகளை அகற்றினான் என சுப்ரமணியசாமி அண்டப்புளுகை ஆகாசப்புளுகை டுவிட்டர் மூலமாக புளுகியுள்ளார்.

தகவல் 2

கோவாவிலிருந்த போர்த்துகீசியரிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு திருமலை நாயக்கனை தூண்டி விட்டு ராமநாதபுரம் சேதுபதி மீது படைஎடுக்கச் செய்து சேது சீமையை பலவீனப்படுத்தி தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கிறிஸ்துவ மதம் பரவ காரனமாயிருந்தவனும் இந்த ராமப்பய்யனே.

இந்த ராமப்பய்யன் திருமலை நாயக்கனிடம் தளபதியாக யிருந்தபோது ராமநாதபுரத்தை ஆண்ட தமிழ் மன்னர் தளவாய் சேதுபதி என்ற இரண்டாம் சடைக்கண் சேதுபதி. இந்த சேதுபதிகள் சைவ வைணவ கோயில்கள் மட்டுமின்றி நூற்றுக்கணக்கில் ஐயனார் கோயில்களையும், புதுப்பித்தும் புதிதாக கட்டியும் சைவ, வணைவ ஆகம வழிபாடுகளோடு ஐயனார் வழிபாடும் ராமநாதபுரம் சீமை எங்கும் சிறந்து விளங்கச் செய்தனர். வட நாட்டிலிருந்து ராமேஸ்வரத்திற்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபட்டு பாதுகாப்போடு திரும்புவதற்கு ராமநாதபுரம் சேதுபதியின் ஆட்சியே காரணமாக இருந்தது. மேலும் தென்னிந்தியாவின் மேற்கு கரையில் கோவாவில் காலூன்றிவிட்ட போர்த்துகீசியர்கள் தமிழக கடற்கரை ஓரங்களில் காலூன்ற விடாமல் சேது நாடுதான் தடுத்து வந்தது.

சுப்ரமணிய சாமியின் மூதாதை ஆன இந்த வடுகப் பார்ப்பான் ராமப்பய்யன் என்ன செய்தான் தெரியுமா? கோவா சென்று அங்குள்ள போர்துகீசியருடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, அவர்களிடம் கணிசமான தொகையையும் கையூட்டாகப் பெற்றுக்கொண்டு மதுரை திரும்பி மறவர் சீமை வலுவடைந்து விட்டால் அது மதுரை நாயக்கர் அரசுக்கு எதிர்காலத்தில் பேராபத்தாகி விடும் என திருமலை மன்னனுக்கு தூபம் போட்டு ராமநாதபுரம் சேதுபதிமீது திருமலை நாயக்கனை படைஎடுக்கச் செய்தான்.

 

தமிழ்நாட்டிலுள்ள 72 பாளையங்களையும் சேர்ந்த பெரும் படையோடு இந்த ராமப்பய்யன் தலைமையில் சேது நாட்டிற்கு படையெடுத்து சென்றது. இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத மறவர் படை தோற்றது. தளவாய் சேதுபதி சிறை பிடிக்கப்பட்டு மதுரையில் 4 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டார். ராமநாதபுரம் மறவர் குல மக்கள் கிளர்ந்து எழுந்தனர். அவர்களின் எழுசியைக் கண்டு பயந்த திருமலை நாயக்கன் தளவாய் சேதுபதியை மீண்டும் ராமநாதபுரம் மன்னனாக்கினான்.

 

ஆனால் வடுகப் பார்ப்பான் ராமப்பய்யனின் சூழ்ச்சியின் காரணமாக சேதுச் சீமையில் வாரிசுப் போட்டி ஏற்படுத்தப்பட்டு சேது சீமை மூன்றாகப் பிரிக்கப்பட்டு அதன் ஆட்சியுரிமை மூன்று பேரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு ராமப்பய்யனால் ராமநாதபுரம் மறவர் சீமை திட்டமிட்டு பலவீனப்படுத்தப் பட்டது.

 

அதன் காரணமாக கீழைக் கடல் எங்கும் போர்த்துக்கீசியர்களின் ஆதிக்கம் மேலோங்கி கரையோர மக்கள் கிறித்துவத்தை தழுவினார்கள். இவ்வகையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் போர்த்துக்கீசியர் ஆதிக்கமும் , கிறித்துவமும் வேரூன்ற காரணமாயிருந்தவன் மறவர் சீமையை பலவீனப் படுத்திய இந்த வடுகப் பார்ப்பான் ராமப்பய்யன்தான்!

தகவல் 3

ராமப்பய்யன் திருமலை மன்னனுக்கும் துரோகம் செய்தவன்.

இந்த வடுகப் பார்ப்பான் ராமப்பய்யன் மன்னன் திருமலை நாயக்கனுக்காவது விசுவாசமாக இருந்தானா என்றால் அதுவுமில்லை. மைசூர் உடையாருடன் திருமலை நாயக்கன் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது ஒருமுறை மைசூர் உடையாரிடம் திருமலை நாயக்கனை காட்டிக்கொடுக்க ஒரு பெருந்தொகையை பேரம் பேசிக்கொண்டிருந்தபோது, விருப்பாச்சி பாளையக்காரர் சின்னப்ப நாயக்கரிடம் கையும் களவுமாக பிடிபட்டு, அப்போது மதுரைப்படைக்கு தலைவராயிருந்த கன்னிவாடி பாளையக்காரர் ரங்கன்னாவினால் அடித்து உதைத்து விரட்டப்பட்டான்.

 

அதன் பிறகு இரண்டாண்டுகள் கழித்து திருமலை நாயக்கனிடம் மீண்டும் போய் ஒட்டிக் கொண்டான். அந்த மடையன் திருமலை நாயக்கனும் இந்த ராமப்பய்யனை மீண்டும் மதுரை பிரதானியாக்கிக் கொண்டான்.

காசுக்காக எதையும் செய்யும் காதகன் தான் இந்த ராமப்பய்யன். அப்படியே அச்சுப் பிசகாமல் அவனைப் போலவே வந்திருக்கிறான் அவன் வழி வந்த இந்த சுப்ரமணிய சாமி.

அன்று வடுகப் பார்ப்பான் ராமப்பய்யன் அரவா வடுகன் திருமலை நாயக்கனோடு சேர்ந்து கொட்டமடித்தது போலவே அவன் வாரிசான இந்த வடுகப் பார்ப்பான் சுப்ரமணிய சாமி ஸ்ரீலங்கா வடுகன் ராஜபக்சேவுடன் சேர்ந்து கொட்டமடித்தான். புதிய அதிபர் சிறிசேனாவுடனும் சேர்ந்து இனி கொட்டமடிப்பான் இந்த சுப்ரமணிய சாமி. ஏனென்றால் சிறிசேனாவும் இன்னொரு ஸ்ரீலங்கா வடுகந்தானே?

துரோக தோலுரிப்பு இனியும் தொடரும்

(நன்றி : வரலாற்று அறிஞர்கள் எஸ்.எம் .கமால், சு. வெங்கடேசன், யுவபாரதி மற்றும் பலர்.)

 

 

தை-பொங்கல் தமிழா் திருநாள்.
தமிழர் எழுச்சி - நாள்!
தைப்பொங்கலுக்கென சில சமய சார்பு, கடவுள் சார்பு கதைகள் உள்ளன.
சில வரலாற்றுக் கதைகளும் உள்ளன.
ஆனால், தைப்பொங்கலானது, உன்மையில் மனித உளவியல் சார்ந்த ஒரு திருநாள் ஆகும்.
இங்கு பொங்கல் என்பது வெறும் "பொங்கல்" அல்லது "புக்கை" எனப்படும் உணவைக் குறிப்பதல்ல.
வருடம் முழுவதும் உழைத்தும், சுமந்தும், களைத்தும் போன மனிதா்கள் தம் வாழக்கையை ”மீண்டும் தொடங்கு மிடுக்கு” போல ஒரு எழுச்சியுடன், ஒரு பாய்ச்சலுடன், ஒரு புத்துணா்ச்சியுடன் தொடங்கும் வகையில்...
வானவியல், உளவியல் மற்றும் சமூகவியல் சாத்திரங்களுக்கமைய வடிவமைக்கப்பட்டு...
அந்த வகையில் பெயரும் இடப்பட்ட ஒரு திருநாள் அல்லது சடங்கே,
தை - பொங்கல்!
இந்த தை – பொங்கல் அல்லது தை-எழுச்சி நாளானது 4 நாட்களைக் கொண்டது அல்லது 4 சடங்குகளை உள்ளடக்கியது அல்லது 4 கட்ட ஆற்றுப்படுத்தல்களைக் கொண்டது.
நாள் 1 - போகி (தை 1 க்கு முதல்நாள்)
"போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு" என பழையதை எல்லாம் மறக்க வைத்து வரும் வருடத்தை புதிதாக, ப்ஃரெஷாக ஆரம்பிப்பதற்கு மனதைத் தயார்ப்படுத்தும் நாள்.
நாள் 2 – பொங்கல்
வீட்டின் முற்றத்தில் பானை வைத்து, குடும்ப அங்கத்தவா் எல்லோரும் சோ்ந்து நெருப்பு மூட்டி, ஊதி, தீச் சுவாலை பற்றியெரிய வைத்து…
அந்தப் பானையிலிருந்து பால் பொங்கி எழும் அந்தக் கணம்!
குடும்பம் முழுவதுக்கும் கூட்டாக புத்தெழுச்சியும், நம்பிக்கையும் பொங்கி எழும்…
அந்தப் பொழுது… அதுதான் பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
நாள் 3 – மாட்டுப் பொங்கல் அல்லது பட்டிப் பொங்கல்
எல்லாரும் நினைக்கிற மாதிரி இது மாடு வைத்திருக்கிறவா்கள் கொண்டாடுகிற நாள் அல்ல.
பட்டி என்றால் ”இனவிருத்தி” (Reproduction)
இது இனவிருத்தியைக் கொண்டாடுகிற அல்லது இன விருத்தியை ஊக்கிவிக்கிற சடங்கு!
ஆதியில் மனிதா்கள் இரண்டு விடயங்களைக் கொண்டாடினா். ஒன்று தமது உணவு. மற்றது இன விருத்தி.
அந்த வகையில் நாள் 2 உணவுக் கொணடாட்டம்.
நாள் 3 இனவிருத்திக் கொண்டாட்டம் எனவும் கொள்ள முடியும்.
நாள் 4 – காணும் பொங்கல்
இது குடும்பத் தளத்தில் இருந்து வெளியே வந்து சமூக வெள்ளத்தில் கலக்கும் நாள்.
பரஸ்பரம் வீடுகளுக்குச் செல்லுதல், ஒன்றாக விளையாடுதல், சாகசங்கள் செய்தல்…
சமூகமாக ஒன்று சோ்தலை ஊக்கிவிக்கும் சடங்கு இது.
தமிழா்களாகிய நாம் தமிழா்கள் என்ற உணா்வில் இந்த நான்கு நாட்களையும் உள்ளடக்கிய,
தை – பொங்கலை (தை – எழுச்சியை)
முழு ஈடுபாட்டுடன் ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வரும் பட்சத்தில்….
நாம்,தனியாட்களாகவும்...சமூகமாகவும்...ஒரு இனமாகவும்...
ஆளுமை மிக்கவா்களாகவும், பலம் கொண்டவா்களாகவும், பண்பாடு மிக்கவா்களாகவும் மிளிர்வோம்… எழுவோம் என்பது உறுதி.
ஆகவே....கொண்டாடுவோம்... உரக்கக் கொண்டாடுவோம், சத்தமிட்டே கொண்டாடுவோம், முழு மூச்சுடன் கொண்டாடுவோம், மூச்சு உள்ளவரை கொண்டாடுவோம்!

 உலகம் முழுவதும் பரந்து வாழும் 8 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக உள்ளது பொங்கல் திருநாள்மார்கழி மாதத்தின் இறுதிநாளில் போகிப் பண்டிகையுடன் தொடங்கும் பொங்கல் திருவிழா அடுத்தடுத்த நாட்களில் பெரும் பொங்கல்மாட்டுப் பொங்கல்காணும் பொங்கல் என தமிழர் இல்லங்களில் களைகட்டும்.

இந்தியாஇலங்கை மட்டுமின்றி புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களும் தங்களது பண்பாட்டு விழுமியங்களை மீண்டும் ஒருமுறை இறுகப்பற்றிக்கொள்வதற்கான வாய்ப்பாக அமைகிறது பொங்கல் திருவிழாஜாதிமதம் கடந்து கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை எவ்வளவு தொன்மையானது?

பொங்கல் பண்டிகையின் தொன்மை

சங்க காலங்களில் அறுவடைத் திருநாளாக அறியப்பட்டதுசமகாலத்தில் பொங்கல் திருநாளாக அறியப்படுகிறது.

தை மாதம் என்பது சங்ககாலந்தொட்டே தமிழர்களின் வரலாற்றில் கொண்டாட்டத்திற்கு உரிய மாதமாக இருந்து வந்துள்ளது.

தைஇத் திங்கள் தண்கயம் படியும்’ என்று நற்றினையிலும், ‘நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண்கயம் போலப் பலர்படிந்து’ என்று ஐங்குறுநூறிலும், ‘வையெயிற்றவர் நாப்பண் வகையணிப் பொலிந்து நீ தையினீ ராடிய தவந்தலைப் படுவயோஎன்று கலித்தொகையிலும், ‘தைஇத் திங்கள் தண்ணிய தரினும்’ என்று குறுந்தொகையிலும், ‘தைஇத் திங்கள் தண்கயம் போல்’ என்று புறநானூற்றிலும் தை மாதத்தை கொண்டாட்டத்திற்குரிய மாதமாக சித்தரிக்கும் வகையில் பல குறிப்புகள் உள்ளன.

சங்க இலக்கியங்களில் பொங்கல் பண்டிகை குறித்து நேரடிக் குறிப்பு இல்லை என்றாலும் இன்று நாம் கொண்டாடும் பொங்கல் பண்டிகையோடு அதைத் தொடர்புபடுத்துவதற்கான கூறுகள் இருப்பதாகக் கூறுகிறார் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் அறவேந்தன்.

``சங்க இலக்கியங்களில் அறுவடைத் திருநாள்தைநீராடல்தை மாதத்தை உயர்வாகக் கருதும் பதிவுகளை அதிகம் பார்க்க முடிகிறதுஅதேபோலத் திருக்குறளில் மழையைப் போற்றுதல்உழவைப் போற்றுதல் பற்றி தனி அதிகாரங்களே உள்ளனஉழவைப் போற்றுதல் என்பதுதான் இன்று நாம் கொண்டாடும் பொங்கல் பண்டிகைக்கான அடிப்படைஇதிலிருந்தே பொங்கல் பண்டிகை என்பது தொல்தமிழரின் பண்டிகை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்`` என்கிறார் பேராசிரியர் அறவேந்தன்.

வேளாண்பெருங்குடி மக்கள் பயிர் செய்ததை அறுவடை செய்யும் காலகட்டமான தை மாதத்தின் முதல்நாளில் தங்கள் வேளாண்மைக்கு உதவிய சூரியனுக்கும் மாட்டிற்கும் நன்றி செலுத்துவதே பொங்கல் பண்டிகையின் நோக்கமாகும்.

``இன்றைக்கு தேங்க்ஸ் கிவ்விங் டே என்று மேற்கத்திய நாடுகளில் நடத்துகிறார்களே அது போன்ற ஒரு நிகழ்வுதான் பொங்கலும்அன்றைக்கு இருந்த பிரதான தொழில் உழவுதான்ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள்ஆடி மாதம் விதைப்புக்கு என்றால் தை மாதம் அறுவடைக்குரியதுஅறுவடை வெற்றிக்கு யார் யாரெல்லாம் காரணமோ அவர்களுக்கு நன்றி சொல்லும் நிகழ்வுதான் பொங்கல்அறுவடை வெற்றிக்கு பிரதான காரணம் சூரியனும் மாடும்அதற்காக இவை இரண்டுக்கும் நன்றி சொல்லும் வகையில் இந்த நாளைக் கொண்டாடுகிறோம்`` என்கிறார் புலவர் செந்தலை .கவுதமன்.

வீட்டில் தேவையற்றதாக கருதும் பொருட்கள் மார்கழி இறுதிநாளான போகி தினத்தன்று தீயிலோ அல்லது நீரிலோ தூக்கியெறிப்படும்தேவையற்றதாக கருதும் பொருட்களை நம் வீட்டில் இருந்தும் வாழ்க்கையில் இருந்தும் போக்குவதுதான் போகிப் பண்டிகையின் நோக்கம்பழைய கழிதலும் புதியன புகுதலும் என்பதோடு புத்தொளியுடன் தொடங்கும் பொங்கல் திருநாளில் மேல்த்தோல் நீக்காத பச்சரிசியில் சர்க்கரைப் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைக்கப்படும்.

மறுநாள் உழவுக்கு உதவிய மாட்டினை சிறப்பிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும்மேற்கண்ட மூன்று தினங்கள் இன்றும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தாலும்காணும் பொங்கல் கொண்டாட்டங்கள் அரிதாகிவருவதாகக் கூறுகிறார் புலவர் செந்தலை .கவுதமன்.

அரிதாகிவரும் காணும் பொங்கல்

``காணும் பொங்கல் என்பது நம்முடைய வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் உதவியாக இருந்தவர்களை நேரில் சென்று சந்திக்கும் நாள்இது உறவுகளை வலுப்படுத்துவதற்கான நாள்அன்றைய காலங்களில் காணும் பொங்கல் என்பது ஆணும் பெண்ணும் காணும் பொங்கலாகவும் இருந்திருக்கிறதுதிருமணம் தொடர்பான பேச்சுகள்கூட காணும் பொங்கல் நாளில் நடந்துள்ளன.

அந்தக் காலத்தில் காணும் பொங்கல் தினத்தில் ஆற்றங்கரைகுளத்தங்கரைஏரிக்கரை போன்ற பகுதிகளுக்குத் தங்கள் உறவினர்களுடன் சென்று நேரத்தைக் கழிப்பதுகிராமிய விளையாட்டுகளில் ஈடுபடுவது வழக்கம்ஆனால் இன்று காணும் பொங்கல் அரிதாகிவருகிறது`` என்கிறார் புலவர் செந்தலை .கவுதமன்.

இந்தியாவில் அனைத்து பண்பாட்டு அடையாளங்களையும் இந்துத்துவ மயப்படுத்தும் வேலைகள் நடந்துவருவதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்பொங்கல் பண்டிகையும் அதிலிருந்து தப்பவில்லைபொங்கல் பண்டிகை இந்துக்களின் பண்டிகை என்ற கருத்தை அண்மைக்காலங்களில் அதிகம் கேட்க முடியும் நிலையில்பொங்கல் என்பது மதத்தைக் கடந்து தமிழர்களின் கூட்டுப் பண்பாட்டு நிகழ்வு என்கிறார் செந்தலை .கவுதமன்.

 



 


8

9





10





முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் உள்ள குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட சின்னம் 2ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை சின்னத்தில் உள்ள தமிழ் வரிவடிவ எழுத்துக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன என்று யாழ்.பல்கலைக்கழக வேந்தரும் மூத்த வரலாற்றுத்துறை பேராசியருமான சி.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்தமை வருமாறு,


குருந்தூர் மலையில் உள்ள இப்பொழுது பேசப்படுகின்ற சின்னங்கள் சிலர் பல்லவர் காலத்துக்கு உரியன என்று சொல்கின்றனர். பல்லவர் காலத்துக்கும் இந்தச் சின்னங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.


இவை அந்தக் காலத்துக்கு மிக முற்பட்டனவாகும்.


அங்கு செங்கட்டிகளால் அமைக்கப்பட்ட ஒரு சிறிய கட்டிடத்தின் இடிபாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. பார்ப்பவர்கள் எவருக்கும் இது புலனாகும். அந்தக் கட்டடத்தினுள் சற்று முன்புறமாக ஒரு வெள்ளைக் கல்லில் அமைந்த ஒரு உருவம் தெரிகிறது. அதில் பௌத்த படிமம் போல எதுவும் காணப்படவில்லை. ஆதி காலத்து தொல்பொருள் சின்னங்களில் அனேகமானவை நாகர்களோடு தொடர்புடையவையாகும்.


நாகர்கள் வழிபட்ட சிவலிங்க வடிவங்கள் பனங்காமம் தொடக்கம் ஓமந்தை போன்ற இடங்களிலே பெருமளவிலே காணப்படுகின்றன.



 

இங்கே காணப்படுவது சிவலிங்க வடிவம் என்று கொள்வது சாலவும் பொருந்தும். இதைத்தான் வேறு ஆய்வாளர்களும் சொல்லியுள்ளார்கள். அது சிறிய கட்டிடத்தில் அமைந்திருப்பது இந்தக் கருத்தை வலியுறுத்துகிறது.


அதில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. நாகர்களுடைய கடவுள் பெயர் அதிலே காணப்படுகின்றது.


அந்த லிங்கத்திலே மணி நாகன் என்ற பெயர் தெளிவாகத் தெரிகின்றது. அது மட்டுமன்றி வேள் நாகன் என்ற பெயரும் அதிலே காணப்படுகின்றது. வழமையாக கடவுள் சின்னங்களிலும் கடவுள் பெயரை எழுதுவதோடு அதை தாபனம் பண்ணியவர்கள் அல்லது நன்கொடை செய்பவர்களுடைய பெயரை எழுதுவது வழமை நாகர்களுடைய வழமைப்படி வேள் நாகன் என்று தான் அது எழுதப்பட்டிருக்கிறது.


வழிபாட்டிச் சின்னங்கள் எல்லாவற்றிலும் அவர்கள், கடவுள் பெயர்களை தமிழ்ப் பிராமி வடிவங்களிலே பொறித்தார்கள். சிவலிங்கம், புத்தர் படிமம், நந்தி, மயூரம், பூசகம் முதலிய எல்லாவற்றிலும் இந்தக் கடவுள்ப் பெயர் காணப்படும்.


சின்னத்தின் அடிப்படையிலே தான் அது எந்த வழிபாட்டு மரபுக்கு உரியது என்பது நிர்ணயிக்கப்படும்.


இங்கு காணப்படுவது சிவலிங்கம். அதிலே காணப்படுகின்ற எழுத்துக்களைக் கொண்டு பார்க்குமிடத்து இது கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகக் கொள்ளத் தக்கது. சில சமயங்களில் இலங்கையில் வட்டெழுத்து மரபு பரவியிருக்காததனாலே தமிழ்ப் பிராமி வரி வடிவங்கள் தொடர்ந்தும் சில நூற்றாண்டுகளாக நிலைபெற்றிருந்திருக்கின்றன.



 

ஆனால் இந்த வடிவத்தைப் பொறுத்தவரையில் இது சர்ச்சைக்குரிய வடிவமன்று. உறுதியாகச் சொல்லக்கூடியது என்னவென்றால் இது ஒரு பழங்காலத்து லிங்க உருவம். லிங்க உருவத்தின் ஆரம்பகால வடிவமைப்பினை பிரதிபலிக்கின்ற வடிவம். நாகர்களின் கடவுள் பெயர் எழுதப்பட்டுள்ள வடிவம், சைவ சமய சின்னமாக அது அமைகின்றது.


தேசியத் தலைவர் பிரபாகரனை ,உமாமகேஸ்வரன் முதன் முதல் சந்தித்து உரையாடிய சம்பவம் பற்றி  
எழுத்தாளர் சிவா சின்னப்போடி அவருடைய முகநூலில் பதிவு செய்துள்ளார்  அப்  பதிவுதான் இது .

தலைவர் பிரபாகரனால் அமைப்பு ரீதியாக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் புளொட் இயக்கத்தின் தலைவர் உமா மகேஸ்வரன்;.

இருவரும் ஒருவரை ஒருவர் கொலை செய்வதற்கு சென்னை பாண்டி பஜாரில் துப்பாக்கி சூடு நடத்தியது கடந்த கால வரலாறு.  

தலைவர் பிரபாகரனுடனான முதலாவது சந்திப்பு பற்றி புளொட் தலைவர் உமா மகேஸ்வரன் தெரிவித்த தகவலை இங்கு பதிவு செய்கிறேன்

'அப்போது தம்பி துரையப்பா கொலையில்  தேடப்படும் ஒருவராக இருந்தார்.நான் ஏற்கனவே புதிய புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் பலரையும் சந்திருந்தேன்.அவர்கள் மூலம் தம்பியை பற்றியும் அவரது துடிப்பான செயற்பாடுகள் பற்றியும் நான் நிறைய தெரிந்து கொண்டேன்.

'16 வயதில் நாங்கள் எல்லாம் நன்றாகப் படித்து  டொக்டர் ஆக வேண்டும் இஞ்சினியர் ஆகவேண்டும் வசதியான வாழ்வு வாழவேண்டும்' என்று கனவு கண்டுகொண்டிருந்த காலத்தில் ,அதே 16 வயதில்  யாழ்ப்பாண சமூகத்தை சேர்ந்த ஒரு பொடியன் இனவிடுதலைக்காக ஆயுதம் ஏந்தினான் என்று மற்றவர்கள் சொன்ன போது எனக்கு அது பிரமிப்பாக இருந்தது.அந்தப் பொடியனை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு அதிகமாக இருந்தது.

தம்பி எப்பவும்; தன்னுடைய பாதுகாப்பிலும் மற்றவர்களுடைய பாதுகாப்பிலும் மிக கவனமாக இருப்பவர்.ஒருவரால் தனக்கும் தன்னைச் சேரந்தவர்களுக்கும் ஆபத்து வரும் என்று உணர்ந்தால் அவரை தண்டிக்கவும் அவர் தயங்குவதில்லை என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறன்.

நான் அவரை சந்திக்கப் போகிறேன் என்று தெரிந்தவுடன் அப்போது புதிய புலிகள் அமைப்பில் இருந்த சிலர்,அவருடன் கதைக்கும் பொது கவனமாக கதையுங்கோ என்று சொன்னார்கள்.(அவர்கள் யார் என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை.)

நான் அதை பெரிதாக  எடுத்துக்கொள்ளவில்லை.தமிழீழ விடுதலைக்கு ஒரே வழி ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பது தான் என்று நான் நம்பினேன்.தம்பி பிரபாகரனுடைய முடிவும் அதுதான். ஒத்த கருத்துள்ள நாங்கள் சந்திக்கும் பொது  ஒளிவு மறைவு தேவையில்லை என்பது  தான் என்னுடைய முடிவாக இருந்தது.

ஒருவரை முதன் முதலாக சந்திக்கும் போது, அவரைப்பற்றி முன்கூட்டியே ஒரு கணிப்பை மனதில் வைத்துக்கொண்டு அவருக்கு ஏற்ற மாதிரி அவர் முன்னால் நடிப்பதிலும் வேசம் போடுவதிலும் எனக்கு விரும்பமில்லை.
நான் நானாகவே இருக்க விரும்பினேன்.

நாங்கள் சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருந்த வீட்டுக்கு நான் சென்ற போது நான் அவரை விட வயதில் மூத்தவன் என்ற வகையில் தம்பி எழுந்து வந்து என்னை வரவேற்றார்.

'வாங்கோ....' என்ற ஒரு ஒரு சொல்தான் அவரது வாயிலிருந்து வந்தது.
அடுத்த கணம் என்னை நோக்கி தம்பி ஒரு தீர்க்கமான பார்வையை பார்த்தார்.

அந்த பார்வை எனது மனக்கட்டமைப்புக்குள் ஆளமாக இறங்கியது.

ஒருவரை சந்திக்கும் போது அபூர்வமாக ஏற்படும் பரவச நிலையை குறிப்பதற்கு சைவசமயத்திலே 'தடுத்தாட்கொள்ளப்பட்டார்' என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துவார்கள்.

தம்பியை சந்தித்த அந்த முதற்கணம் எனக்கும் அப்படித்தான் இருந்தது.

ஏனக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது.தம்பிக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால்; தம்பி ஒருவரை இலகுவில் நம்பி விடமாட்டார் என்றும், மற்றவர்களுடன் அதிகம் பேசமாட்டார் என்றும், எப்போதும் தனிமையையே விரும்புவார் என்றும் அவருடன் இருந்த மற்றவர்கள் கூறக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால் என்னுடைய விடயத்தில் அவர் அப்படி இருக்கவில்லை.மனம் திறந்து கதைத்தார்.என்னை அடிக்கடி தொடர்பு கொண்டு கதைத்தார் என்னிடம் நிறைய கருத்துக்கள் கேட்டார்.குறிப்பாக சொல்வதானால் என்னுடன் அவர் மிக நெருக்கமாக பழகினார்.பாசமுள்ள ஒரு அண்ணனுக்கும் தம்பிக்குமான உறவு போலவே எங்களுடைய உறவு இருந்தது.

எங்களுடைய முதலாவது சந்திப்பிலே சோழர்கள் பற்றிய பேச்சுத்தான் அதிக நேரம் இடம்பெற்றது.
'
தமிழ் அரசர்களான இராஜராஜசோழனாலும் அவர் மகன் இராஜேந்திரசோழனாலும் எப்படி பல நாடுகளைப் பிடித்து ஆட்சி செய்ய முடிந்தது.? என்று தம்பி என்னிடம் கேட்டார்.

'அவர்களிடம் சிறந்த கடற்படை இருந்தது.சிறந்த தளபதிகள் இருந்தார்கள்.பயிற்றப்பட்ட சிறந்த போர் வீரர்கள் இருந்தார்கள்.அவர்களது கடற்படையில் அப்போது ஒரு இலட்சம் பேர் இருந்ததாக சொல்கிறார்கள்.இது எந்தவுளக்கு உண்மையோ தெரியாது. நான் அறிந்த வகையில் அந்தக் காலகட்டத்தில் இந்தளவு கடற்படை பலத்தை எந்த நாடும் கொண்டிருக்கவில்லை.அதனாலே தான் இவர்களால் பல நாடுகளை பிடிக்க முடிந்தது' என்று அதற்கு நான் பதில் சொன்னேன்.

'அப்போ போர்த்துக்கேயர்; ஒல்லாந்தர் பிரித்தானியர் எல்லாம் தங்களுடைய கடற்படை பலத்தால் தானே எங்களுடைய நாட்டை பிடித்து எங்களை அடிமைப்படுத்தினார்களா? எங்களிடம் கடற்படை பலம் இருந்திருந்தால் நாங்கள் அடிமைப்பட்டிருக்கமாட்டோம் தானே?' என்று தம்பி கேட்க,

 'உண்மை தான் எங்களுடைய அரசுகளிடம் கடற்படை பலம் இருந்திருந்தால் ஐரோப்பியர்கள் எங்களை அடிமைப்படுத்தியிருக்க முடியாது.சோழ சாம்ராட்சியம் வீழ்ச்சியடையாமல் இருந்திருந்தால் ஐரோப்பியர்கள் மட்டுமல்ல சிங்கள ஆட்சியாளர்களும் எங்களை அடிமைப்படுத்தியிருக்க முடியாது' என்றேன் நான்.

'சோழ சாம்ராட்சியம் ஏன் அழிந்து போனது? ஏன்ற அடுத்த கேள்வி தம்பியிடமிருந்து வந்தது.
சோழர்களுக்கு தமிழர்களான பாண்டியர்களும் சேரர்களும் எதிரிகளாக இருந்தார்கள்.இவர்கள் ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு அவ்வப் போது,தமிழினத்தை கருவறுப்பதை குறிக்கோளாக கொண்ட ஆரியர்களுடன் கூட்டுவைத்துக்கொண்டார்கள்.தமிழர்களை நேரடியாக போரில் வெல்ல முடியாத ஆரியர்கள் உட்பகையை தூண்டிவிட்டு ஒருவரை ஒருவர் மோதவிட்டு அழித்தார்கள். சோழ சாம்ராட்சியம் ஆரிய மற்றும் சிங்கள துணையுடன் இடம்பெற்ற பாண்டியர்களது படையெடுப்பாலேயே அழிந்து போனது.பின்னர் அதே பாண்டியர்களும் ஆரிய சதியால் அழிந்து போனர்கள்.சேரர்களுக்கும் இது தான் நடந்தது.

தமிழர்களான சேரர்களை உட்பகையை தூண்டி வஞ்சகமாக வெற்றி கொண்ட ஆரியர்களான நம்பூதிரிகள் சேரநாட்டை மகாபலி என்பவர் தங்களுக்காக கடலுக்குள் இருந்து புதிதாக உருவாக்கித்தந்த புனித நாடு என்றும் அதன் பெயர் மலையாள பூமி என்றும் மாற்றிவிட்டார்கள்' என்றும் இதற்கு ஒரு நீண்ட பதிலை நான் தம்பியிடம் தெரிவித்தேன்.
இதைக் கேட்டு சிறிது நேரம் யோசித்த தம்பி

'தமிழர்கள் பிளவு படாமல் ஒன்றாக ஒரே அரசாக இருந்திருந்தால் இன்றைக்கு யாராலும் அசைக்க முடியாத பெரிய வல்லரசாக இருந்திருப்பார்கள் தானே?' என்று கேட்க நான் அதை ஆமோதித்தேன்.எனக்கு அந்தக் கருத்தில் உடன்பாடிருந்தது.





1

2

3

4


5

6


7


8

9


அவனியாபுரம்

பல நாட்களாக மதுரையில் நான் பிறந்த அவனியாபுரம் கிராமத்தின் பெயர் காரணத்தை அறிய முற்பட்டுக் கொண்டே இருந்தேன். இந்த பெயர் காரணத்தை அறிய முற்பட்டதன் காரணம் . சில நாட்களுக்கு முன்னர் நான் பகிர்ந்த எனது இரண்டு ஆய்வு கட்டுரைகளான அவனியாபுரம் - மதுரையின் பூர்வகுடி கிராம்ம என்ற கட்டுரையும் . பழைய மதுரையின் புதிய கோட்டையும் , நீர் நிலைகளும் ஆகும் . இனி அவனியாபுரம் கிராமத்தின் பெயர் காரணத்தை அறிய முற்படுவோம் . மதுரையின் மிகவும் முக்கிய தாய் கிராமமான அவனியாபுரம் குறித்து வரலாற்று ஆய்வு மாணவர் உதயகுமார் தரும் தரவுகளை பார்ப்போம். பாண்டியர் காலத்தில் (அவனிப சேகரன்) என்ற மன்னன் இருந்தான்

 அவன் பெயரில் இன்றைய அவனியாபுரம் - அவனிபசேகரசதூர் வேதிமங்கலம் என்பது பழைய பெயராக இருந்தது . பின் நாயக்கர் காலத்தில் அவனி நாராயணபுரம் என்றும் அதன் பின் மங்கமாள் காலத்தில் அவனியாபுரம் என்றும் அவனியாபுரத்தில் கிடைத்த கல்வெட்டுகள் வழியாக தரவை வெளிக்கொணர்கிறார் . இனி ஆய்வாளர் தரும் தரவின் காரணத்தை ஆராய்வு செய்வோம். பாண்டிய நாட்டில் மட்டுமே தமிழ்நாட்டின் பிறபகுதிகளைக் காட்டிலும் சங்க காலத்தில் சமணம் மக்களிடையே பேராதரவை பெற்று வளர்ந்துள்ளது என்பதை உணரலாம் என்று மாமதுரை நூலில் ஆசிரியர் சொ.சந்தலிங்கம் கூறுகிறார் 

இதில் இருந்து அவனிபசேகர என்ற பாண்டிய மன்னன் சமண நெறியை ஏற்றிருந்தான் . அவன் மட்டும் அல்ல மாமதுரையை ஆண்ட பாண்டிய அரசர்களும் ,மக்களும் பௌத்தம் , சமணமும் ஏற்றிருந்தார்கள் என உறுதி செய்ய முடிகிறது . இப்படி இருக்க அவனியாபுரத்திற்கு அவனிபசேகர சதூர்வேதி மங்கலம் என்ற பெயர் எப்படி வந்திருக்க முடியும் . சில நாட்களுக்கு முன்னர் .தமிழக அளவில் பெயர் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தின் பின்புறமாக இருக்கும் ஈஸ்வரன் கோவிலுக்கு சைவ சமய பரப்புரையாளர் திருஞான சம்பந்தர் விஜயமா|கியிருக்கிறார் என்ற தகவலை அக்கோவில் பூசாரியிடம் கேட்டு உறுதி செய்துக்கொண்டேன் 

பெரும்பாலும் திருஞானசம்பந்தர் கட்டமைக்கப்பட்டு இருக்கும் சமண | பௌத்த தளங்களுக்கு பயணம் செய்வது மட்டுமே வழக்கமாக வைத்திருந்தார். அதன் பின்னரே சமண -பௌத்த தளங்கள் சைவ தளமாக மாற்றம் கொண்டது . சதூர்வேதி மங்கலம் என்பது பார்ப்பனர்களுக்கு தானமாக கொடுக்கப்பட்ட இடம். சமண பௌத்தர்களுக்கு தானமாக கொடுக்கப்படும் இடத்தின் பெயர் பள்ளிச்சந்தை . அதாவது குகை பள்ளி நடத்துபவர்களுக்கு கொடுக்கப்பட்ட இடம் என்பதே அதன் பொருள். அப்படி இருக்க சதூர்வேதி வழியாக நிலம் தானம் பெற்ற சைவ பார்ப்பனர்கள். அன்றுதொட்டு இன்றும் சந்ததி சந்த்தியாக. ஈஷ்வரன் கோவில் பின்னே வாழந்து வருகிறார்கள்

 

இன்றும் அதை அக்கிரகாரம் என அழைத்து வருகிறோம். இக்காரணங்களால் அவனியாபுரம் கிராமத்துக்கு அவனிபசேகர சதூர்வேதி மங்கலம் என பெயர் பெற்று இருக்கிறது . திருஞானசம்பந்தர் சைவ கோவிலாக மாற்றிய புத்த கோவில். சமண பௌத்த கோவில்கள் தான் சைவ , வைணவ கோவில்களாக மாற்றம் கண்டுள்ளது என்பது ஆய்வாளர்களின் பொது கூற்று. புகைப்படத்தில் குறிக்கப்பட்ட இடமே முன்னொரு காலத்தில் புத்த கோவிலாக இருந்திருக்கிறது.அதற்கான தரவை பின்னே பார்ப்போம் 

இந்த இடத்தில் இருந்த புத்த| சமண கோவிலே பின்னாளில் . பார்ப்பனர்கள் குடியிருப்பின் அருகில் நகர்ந்து . சதூர்வேதி மங்கலத்தின் அடையாளமாக திகழ்ந்த ஈஷ்வரன் கோவில் ஆகும் . சம்பந்தர் வருகைக்கு முன் இருந்த பௌத்த கோவிலை பற்றி அறிந்துக்கொள்ள எனது முந்தைய ஆய்வு கட்டுரையை வாசிக்கவும். http://forefatherapporach.blogspot.in/2017/12/blog-post.html .கோவில் சுவற்றின் அருகே எனது புகைப்படத்தை பார்க்க முடியும் . அதன் பின்னர் வந்த நாயக்கரின் வருகை அவனியாபுரத்திற்கு . அவனி நாராயணபுரம் என பெயர் வைத்தது சைவ சமயத்திற்கு நிகராக அவனியாபுரத்தில் வைணவம் எழுச்சி அடைய தொடங்கியது.

 

சதூர்வேதி மங்கலம் என்னும் அவனி நாராயணபுரம் என பெயர் மாற்றம் கொண்டது. அதன் பின்னர் வந்த ராணி மங்கம்மாள் அவனி நாராயணபுரத்திற்கு அவனியாபுரம் என பெயர் வைத்தது மட்டும் அல்லாமல் சைவ தளத்திற்கு நிகராக கி.பி 1693இல் வைணவ தளம் அமைத்து அங்கு அனுமார் ஆழ்வார் என்ற அனுமார் கோவிலை கட்டி, அதை சுற்றி பல வைணவ அடையாளம் பொறிக்கப்பட்டும், அலங்காரப்பிள்ளயார் கோவிலையும் கட்டியிருக்கிறார். 

ஆனால் பிள்ளையார் கோவில் தற்போது அங்கு இல்லை. எனது கள-ஆய்வின் வழியாக கிடைக்கும் தகவல் ஆனது .அனுமார் கோவிலின் அருகே ஒரு ஊரணி இருக்கிறது அதன் பெயர் சாது ஊரணி. என கல்வெட்டு சான்று கிடைக்கப்பெறுகிறது. சமண பௌத்த துறவிகளை சாதுகள் என அழைப்பது வழக்கம்.சமண பௌத்த பிக்குகள் பயன்படுத்தும் ஊரணியின் பெயர் சாது ஊரணி ஆகும். இனி மயிலை சீனி வேங்கடசாமி சாமி அவர்களின் தரவை பார்ப்போம். 

 அனுமார் கோவில் கட்டப்பட்டு இருந்தால் அது பௌத்த தளத்தை கைபற்றியதன் சான்றாகவும், நரசிம்மர் கோவில் கட்டப்பட்டு இருந்தால் அது சமண தளத்தை கைப்பற்றியதன் சான்றாதாரங்கள் ஆகும் என கூறுகிறார். அதன் பொருட்டு அனுமார் கோவில் கட்டியதன் வழியாக முன்பு அங்கு இருந்த பௌத்த தளத்தை கைப்பற்றி இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய முடிகிறது . மேலும் ராணி மங்கம்மாள் அவர்களால் கி.பி 1693 இல் கட்டப்பட்ட அனுமார் ஆழ்வார் என்ற அனுமார் கோவிலுக்கு ஆனந்த அனுமார் என்னும் பெயரும் இருக்கிறது .

 

இதன் வழியாக ஆனந்தர் என்பது புத்தரின் தலைமை சிடரின் பெயர் ஆகும். புத்தரின் இறுதி சடங்கை தலைமையேற்றி நடத்தியவரும் . புத்தருக்கு பின் சங்கத்தை தலைமையேற்று நடத்தியவர் ஆனந்தரே ஆவார். அவனியாபுரம் பெயர் காரணம் அறிவோம்.

 இனி அவனியாபுரம் பெயர் வந்த காரணத்தை ஆராய முற்படுவோம். பாண்டிய அரசன் சைவ பார்பனர்களுக்கு நில தானம் வழங்கியதன் பெருட்டு அவனிபசேகர சதூர்வேதி மங்களம் என்றும் அவனி நாராயணபுரம் என்றும் அவனியாபுரம் என்றும் நடைமுறையில் இருக்கிறது .கல்வெட்டுகளில் சொல்லிவந்த அனைத்து பெயர்களிலும் அவனி என்ற சொல் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கிறது என்பதை அறிந்துக்கொள்ள முடியும்.

 அவனி என்றால் உலகம் () லோகம் என்பது பொருளை உணர்த்துகிறது. நான் முன்னர் வெளியிட்ட புகைப்பட்டத்தில் கோவிலில் இருந்த குளத்தின் பெயர் செண்பகம் குளம் , கோவில் சிதைவுக்கு உள்ளான பின்னர் இன்று அக்குளம் ஊரணியாக மாற்றம் கண்டு செண்பக ஊரணியாக என்னும் பெயர் பெற்றிருக்கிறது

 தமிழ் பௌத்தம் பொருத்தவரை பகவான் புத்தருக்கு பல பெயர்கள் உள்ளன அதில் இந்திரன் , அவலோகிதேஷ்வரா , மைத்ராயா , வஜ்ரபாணி என மொத்த 8 போதிசத்துவர் உள்ளனர் . அந்த போதிசத்துவர்களில் தலைமையானவர் அவலோகிதேஷ்வரர் ஆவார். சித்தார்த் கௌதமர் என்ற புத்தரின் வருகையை () பிறப்பை மகாமாயாவின் கனவில் வெள்ளையானை தனது தும்பிக்கையில் தாமரை மலரோடு உருவத்தில் தோன்றி உணர்த்தியது அவலோகிதேஷ்வரர் என்ற போதிசத்துவார் ஆவார் .

 அந்த அவலோகிதேஷ்வரர் உரைவிடமாக போதலோகா என்ற பொதிகை மலை இருக்கிறது .அந்த உரைவிடத்தில் இருந்தே செண்பக அருவி தனது போக்கை தொடங்குகிறது . இன்று குற்றாலத்தில் இருக்கு செண்பக அருவியே ஆகும். ஆக அவலோகிதேஷ்வரர் அருகே செண்பக அருவி இருக்கிறது போல செண்பக ஊரணியன் அருகே அவலோகிதேஷ்வரர் இருக்கிறார். அவலோகிதேஷ்வரர் என்ற சொல்லை பிரித்து பார்க்கும் போது அவலோ+ கிதேஷ்வரா (ஈஷ்வரா) . இன்றும் நாம் புகைப்படத்தில் இருந்து மாற்று இடத்தில் உள்ள கோவிலின் பெயர் ஈஷ்வரன் கோவில் தவிர சிவன் கோவில் என்று கூறும் பேச்சு வழக்கில் இல்லை

 மேலும் அக்கோவில் மீனாட்சி அம்மனுக்கே முக்கியமான அங்கீகாரம் தரக்கூடிய கோவிலாக இருக்கிறது.அந்த அம்மனின் கைகளில் வெள்ளை யானை கைகளில் இருந்த அதே தாமரை பூவோடு கருவறையில் மீனாட்சி சிற்பம் இருக்கிறது . ஆக அவனி என்றால் உலகம், அவலோகிதேஷ்வரர் என்றால் உலகத்தை () லோகத்தை காப்பவர் , ஆள்பவர் என்பது பொருள். (#அவ|னியாபுரம் ...,#அவ|லோகிதேஷ்வரா) இந்த இரண்டுமே சொல்லும் உலகை குறிக்கும் சொல்லாக பார்க்கமுடியும் ...

 இதன் வழியாக இன்றைய அவனியாபுரம் என்ற சொல் அவலோகிதேஷ்வரர் என்ற புத்தரின் பெயரில் இருந்தே மறுவி வந்திருக்க வேண்டும் . மேலும் மாமதுரையில் அவனியாபுரம் மிகவும் முக்கியமான பௌத்த நிலமாகவும் திகழ்ந்து இருந்திருக்கிறது என்பதை உறுதிசெய்ய முடிகிறது.

இந்த  ஆய்வு கட்டுரையை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது பாண்டியர் பௌத்த சங்கம்.



 




கீரிபாறைகாளிகேசம் வனபகுதி கன்னியாகுமரி...!

 

கன்னியாகுமரி மிகவும் அழகிய சுற்றுலா தலமாக உள்ளதுஇங்கு கீரிபாறை மிகச்சிறந்த சுற்றுலா தலமாக பார்க்க முடியும்கீரிபாறையை இந்தியாவின் செழிப்பான காடுகள் பார்க்க விரும்பும் சர்வதேச பார்வையாளர்களுக்கான இயற்கை மலையேற்ற இடமாக மாறியுள்ளது.அதை பற்றி பார்ப்போம் ..
 
கீரிபாறை வன பகுதி :
பெருஞ்சாணி அணையிலிருந்து 10 கி.மீதொலைவில் கீரிப்பாறை இருக்கிறதுஇது வரை பேருந்து செல்லும்கீரிப்பாறையின் கொடுமுடி காளிகேசம் என்ற இடத்தில் சிறு அம்மன் கோவில் உள்ளது.கீரிப்பாறையிலிருந்து மேலே செல்வதற்கு நல்ல வண்டித்தார்ச்சாலை உள்ளதுசிற்றுந்துகள் மூலம் போகலாம்.
 
இங்குள்ள ஆறு மலைச் சரிவுகளில் விழுந்தோடி வருவதைத்தான் காளிகேசம் என்கின்றனர்சிறுசிறு சரிவுகளில் அருவிகள் காட்சியளிக்கிறதுபாறைகளைக் குடைந்தும்அறுத்துக் கொண்டும் ஓடுவது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகும்ஆறு அறுத்த பாறை ஒன்றில் பழங்குடியினர் இருந்ததற்கான ஆதாரங்கள் தென்படுகின்றன.
 
கீரிபாறையில் பலவிதமான தாவரங்கள் மற்றும் மூலிகைகள் உள்ளனஅவை உலகில் உள்ள வேறு இயற்கை மலையேற்றங்கள் மற்றும் வாழ்விடங்களில் ஒப்பிடுகையில் இணையற்றவைகீரிபாறையின் சமவெளிகளில் பெரிய யானைகளை பார்ப்பது மிகவும் எளிதுகூடுதலாகபல மிருகங்களும் சுலபமாக காணில் படும் மேலும் மூலிகை மற்றும் மருத்துவ தாவரங்கள் உள்ளன ...
 
கீரிபாறை வனத் துறையால் கண்காணிக்கபட்டுவருகிறது இப்பகுதியில் சில சிறிய நீர்வீழ்ச்சிகளும் உள்ளன - பிரபலமான வட்டப்பாறை நீர்வீழ்ச்சிகீரிபாறையின் மலைகளில் மேல் உள்ளது இது காட்டு யானைகளுக்கு பிரபலமானது.
 
தென்னிந்திய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பழையற்றில் பூதப்பாண்டி கிராமத்திற்கு அருகே கீரிபாறை ரிசர்வ் வனத்தில் வட்டப்பாறை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதுஇந்த 20 கிமீ பரப்பளவானது வனவிலங்கு சரணாலயமாக உள்ளது.
இந்த காட்டில் காணப்படும் பல்வேறு தாவர வகைகள் இயற்கை கட்சிகளும் வனப்பகுதிகளுக்கும்மலையேற்றங்களுக்கும் இந்த வனம் ஒரு கடவுளின் வரப்பிரசாதமாக உள்ளது.
பல சிறிய நீரோடைகள் மற்றும் ஆறுகள் காட்டுப்பகுதிகளில் ஓடுகின்றனகூடுதலாகஇயற்கை ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த இடம்ஒட்டுமொத்தமாக தென்னிந்தியாவின் சில பாதுகாக்கப்பட்ட காடுகளில் கீரிபாறையும் ஒன்று.
 

காடுகளில் வன விலங்குகள் சிறிய மரங்கள் பூக்கும் குன்றுபுதர்கள்மதிப்புமிக்க மூலிகைகள்பல்வேறு வகையான மரங்களைக் கொண்டிருக்கின்றனதேக்குரோஸ்வூட்வேங்கை மற்றும் ஐனி ஆகியவை முக்கியமான மரங்களும் உள்ளனஇந்த இடத்தில் குறைந்தபட்சம் 25 வகையான பாலூட்டிகளால் நிறைந்திருக்கிறதுசுமார் 60 வகையான பறவைகள், 14 வகையான புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் பல வகையான மீன்கள்ஊர்வன மற்றும் புலியானைமான்மற்றும் காட்டுப்பன்றி ஆகியவை அடங்கும் பார்ப்பதற்கு அருமையான இந்த பகுதியை கன்னியாகுமரி வந்தால் மிஸ் பண்ணாதிங்கள் நண்பர்களே




சந்திரிகா கணவர் ரணதுங்கா சுட்டுக்கொலை!!

  ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவின் இளைய மகள் சந்திரிகா சந்திரிகாவுக்கும், விஜயகுமார ரணதுங்காவுக்கும் திருமணம் நடந்தது. ரணதுங்கா பிரபல நடிகர்.   1969 ம் ஆண்டில் ரணதுங்கா நடித்த முதல் சினிமா படமான "அந்தனே கதரேலி" வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து அவர் 100 க்கும் அதிகமான படங்களில் கதாநாயகனாக நடித்தார்.   1978 ம் ஆண்டில் ரணதுங்கா அரசியலில் நுழைந்தார். 

முதலில் தனது மாமியார் ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவின் "ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். பிறகு மாமியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு லங்கா மகாஜன கட்சியை தொடங்கினார், ரணதுங்கா. அவருடைய கட்சியே பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. இந்த புதிய கட்சியின் தலைவராக ரணதுங்காவும், பொதுச்செயலாளராக சந்திரிகாவும் இருந்தார்கள். 

இந்த நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிபராக (ஜனாதிபதி) ஜெயவர்த்தனா பதவி வகித்தார்.   1988 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரணதுங்கா புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கினார். ரஷிய ஆதரவு கம்யூனிஸ்டு கட்சி, டிராப்ஸ்கிய சமசமாஜ கட்சி ஆகிய கட்சிகளை சேர்த்து சோசலிச கூட்டணி அமைத்தார். இந்த கூட்டணியின் சார்பில் அதிபர் பதவிக்கு ரணதுங்கா நிறுத்தப்பட்டார். 

சுட்டுக்கொலை ரணதுங்கா கொழும்பில் இருந்து 9 மைல் தூரத்தில் இருக்கும் `பொலங் கொடா' என்ற இடத்தில் வசித்து வந்தார். 16.2.1988 அன்று காலை 11.30 மணி அளவில் வீட்டு வராண்டாவில் அமர்ந்து கட்சிப் பிரமுகர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ரணதுங்காவை நோக்கி இயந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். 

குண்டுகள் ரணதுங்கா உடலை சல்லடை போல துளைத்தன. 9 குண்டுகள் உடலில் பாய்ந்தன. அடையாளம் தெரியாதபடி அவரது முகம் சிதைந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். டாக்டர்கள் உடலை பரிசோதித்துவிட்டு, ரணதுங்கா ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். ரணதுங்காவை சுட்டவர்கள் அதே மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர். 

ஆனால் அவர்கள் கொண்டு வந்த ஒரு சூட்கேஸ், தலையில் அணியும் "டோபா" (விக்) ஆகியவை தரையில் விழுந்து கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். கொலையாளிகள் மாறுவேடத்தில் வந்தது ஊர்ஜிதமானது. ரணதுங்கா சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி, ரேடியோவில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இலங்கை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. 

ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அவரது வீட்டில் கூடினார்கள். சம்பவம் நடந்தபோது ரணதுங்காவின் மாமியாரான ஸ்ரீமாவோ பண்டாரநாயகா கிராமத்தில் உள்ள தன் வீட்டில் இருந்தார். மருமகன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் தெரிந்ததும், அவர் கொழும்புக்கு விரைந்து வந்தார். சுட்டுக் கொல்லப்பட்டபோது ரணதுங்காவுக்கு வயது 43. 

மனைவி சந்திரிகாவும், 2 குழந்தைகளும் இருந்தார்கள்.   ரணதுங்கா இடதுசாரி கொள்கையில் தீவிர ஈடுபாடு கொண்டவர். ரணதுங்கா சிங்களவராக இருந்தாலும், இலங்கை தமிழர்கள் மீது அனுதாபம் உடையவர். இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை தீவிரமாக ஆதரித்து வந்தார். இலங்கை ராணுவமும், விடுதலைப்புலிகளும் போரை நிறுத்தவேண்டும். 

ராணுவ நடவடிக்கைகளை கைவிட்டு பேச்சு நடத்தவேண்டும் என்று ரணதுங்கா தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். அவர் பலமுறை யாழ்ப்பாணம் சென்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களையும், மற்ற இலங்கை தமிழர் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். தேர்தலில் தனது கூட்டணியில் சேரும்படி ஈழம் மக்கள் புரட்சி முன்னணி (.பி.ஆர்.எல்.எப்) மக்கள் விடுதலை தமிழ் ஈழ அமைப்பு (பிளாட்) ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.   

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு சமரசத் தீர்வு ஏற்பட தனிப்பட்ட முறையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக மனைவி சந்திரிகாவுடன் 1986 ம் ஆண்டு ஜுன் மாதம் தமிழ்நாட்டுக்கு வந்தார். 3 நாட்கள் சென் னையில் தங்கி தமிழக தலைவர்கள், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்கள் ஆகியோரை சந்தித்துப் பேசினார். 

இங்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் ரணதுங்கா பேசுகையில், "மனிதாபிமான அடிப்படையில் நல்லெண்ண தூதுவனாக வந்து இருக்கிறேன். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும்படி அதிபர் ஜெயவர்த்தனாவை வற்புறுத்திக்கொண்டே இருப்பேன்" என்று கூறினார்.   மறைந்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரை ரணதுங்கா சந்தித்துப் பேசினார். 

இருவரும் 1 மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். சென்னை ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. இலங்கை தமிழர் பிரச்சினை பற்றியும், ஜெயவர்த்தனாவுடன் நடத்த இருக்கும் பேச்சு பற்றியும் எம்.ஜி.ஆரிடம் ரணதுங்கா கூறினார். 

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்க ஆலோசகர் பாலசிங்கம், தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்க தலைவர் உமாமகேசுவரன், ஈழபுரட்சிகர அமைப்பு (ஈராஸ்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (.பி.ஆர்.எல்.எப்) தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) ஆகியவற்றை சேர்ந்த தலைவர்களை சந்தித்துப் பேசினார். "மீண்டும் இந்தியா வருவேன். 

பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்து பேசுவேன்" என்று ரணதுங்கா கூறிவிட்டு இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்றார். ஆனால், சமரச முயற்சியை தொடரும்முன், துப்பாக்கி குண்டுக்கு இரையாகிவிட்டார். ரணதுங்கா தமிழர்களை ஆதரிப்பது சிங்கள வெறியர்களுக்கு பிடிக்கவில்லை. அவருடைய கொலைக்கு இதுவும் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.

 

இலங்கை போராளிகள் இயக்க தலைவர் பத்மநாபா உள்பட 15 பேர் சுட்டுக்கொலை

இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைக்காக போராடிய இயக்கங்களில் "ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி" (.பி.ஆர். எல்.எப்.) என்ற போராளிகள் இயக்கம் ஒன்று. இந்த அமைப்பின் பொதுச்செயலாளராக பத்மநாபா இருந்து வந்தார்.   இலங்கையில் வடகிழக்கு பகுதியில் அமைக்கப்பட்ட தமிழ் மாநிலத்தில் ஆளும் கட்சியாக .பி.ஆர்.எல்.எப். இருந்து வந்தது. அந்த இயக்கத்தைச் சேர்ந்த வரதராஜபெருமாள் முதல் அமைச்சரானார்.

பத்மநாபா போராளி இயக்கப் பணிகளை கவனித்து வந்தார்.   பத்மநாபாவின் ".பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், சென்னை கோடம்பாக்கம் ஜக்ரியா காலனியில் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் வசித்து வந்தனர். இலங்கையில் இருந்து அமைதிப்படை வாபஸ் ஆனதும், .பி.ஆர். எல்.எப். இயக்கத்தின் தலைவர்கள் இலங்கையை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு சென்றனர்.

பத்மநாபாவும், அவருக்கு நெருக்கமானவர்களும் இந்தியாவுக்கு வந்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் பத்மநாபா டெல்லி சென்றுவிட்டு, சென்னைக்கு திரும்பினார். கோடம்பாக்கம் ஜக்ரியா காலனியில் உள்ள வீட்டில் தங்கினார். தாக்குதல் 19.61990 அன்று இரவு 7 மணி அளவில் ஜக்ரியா காலனிக்கு 2 அம்பாசிடர் கார்களில் 6 பேர் வந்தனர்.

அவர்கள் நவீன ரக துப்பாக்கிகளுடன் காரில் இருந்து இறங்கி, 2 வது மாடியில் பத்மநாபா தங்கி இருந்த வீட்டுக்கு சென்றனர். அப்போது பத்மனாபாவுடன், இலங்கை தமிழ் மாநில நிதி மந்திரியாக இருந்த கிருபாகரன் உள்பட பலர் பேசிக்கொண்டிருந்தனர். மூடப்பட்டிருந்த கதவை மர்ம மனிதர்கள் தட்டினார்கள்.

கதவு திறக்கப்பட்டதும் அவர்களை நோக்கி மர்ம மனிதர்கள் இயந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். வெடிகுண்டுகளையும் வீசினார்கள். இந்த சத்தத்தைக் கேட்டு, .பி.ஆர்.எல்.எப். அலுவலகத்தில் இருந்த போராளிகள் மாடிக்கு ஓடி வந்தனர். அவர்கள் மீதும் மர்ம மனிதர்கள் சரமாரியாக சுட்டனர். 10 நிமிட நேரத்தில் இந்த தாக்குதலை நடத்தி விட்டு அவர்கள் காரில் தப்பி ஓடி விட்டனர்.  

இந்த தாக்குதலில் பத்மநாபா உள்பட 13 பேர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் உயிரிழந்தார்கள். மேலும் 2 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 15 ஆனது. சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் 13 பேர் போராளிகள். 2 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. பத்மநாபா (வயது 40)  .பி.ஆர். எல்.எப். தலைவர், யாழ்ப்பாணம்.

2. கிருபாகரன் (36)  இலங்கை தமிழ் மாநில நிதி அமைச்சர். காரைத்தீவு, மட்டக்களப்பு.

3. யோகசங்கரி (38)  பாராளுமன்ற உறுப்பினர், யாழ்ப்பாணம்.

4. கமலன் (25)  அலுவலக பொறுப் பாளர், மருதமுனை, மட்டக்களப்பு.

5. ரவி (29)  மாகாண சபை உறுப்பினர், மட்டக்களப்பு.

6. அன்பு முகுந்தன் (28) மாகாணசபை உறுப்பினர், அன்புவழிபுரம், திரி கோணமலை.

7. கோமளராஜா (39)  மாகாணசபை உறுப்பினர், சூரியாலேன், மட்டக் களப்பு.

8. லிங்கன் (27)  மெய்க்காப்பாளர், தம்பலகாமம், திருகோணமலை.

9. புவிநாதன் (19)  .பி.ஆர்.எல்.எப். உறுப்பினர், 10ம் வட்டாரம், திரி கோணமலை.

10. ஜெசிந்தா (28)  .பி.ஆர்.எல்.எப். உறுப்பினர், காரைத்தீவு, மட்டக்களப்பு.

11. கவிதா (24)  .பி.ஆர்.எல்.எப். உறுப்பினர், சேனைகுடியிருப்பு, கல்முனை, மட்டக்களப்பு.

12. தருமன் (25)  .பி.ஆர்.எல்.எப். உறுப்பினர், காரைத்தீவு, மட்டக்களப்பு.

13. ரமேஷ் (32)  .பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்.

14. ரமேஷ், சென்னையைச் சேர்ந்த வட்டிக்கடை அதிபர்.

15. நீலகண்டன் (22)  சென்னை வேளச்சேரி. டூரிஸ்ட் கார் டிரைவர்.

இவர் பத்மநாபாவுக்கு வாடகை கார் ஓட்டினார். பத்மநாபா தங்கி இருந்த மாடியில் இவரும் நின்று கொண்டிருந்தார். தாக்குதலில் குண்டு பாய்ந்து நீலகண்டனும் உயிர் இழந்தார். மேலும் 20 பேர் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.   தாக்குதலில் ஈடுபட்டவர்கள் "டி 56" ரக நவீன துப்பாக்கியை பயன்படுத்தினார்கள். சம்பவம் நடந்த பகுதி முழுவதும் போர்க் களம் போல காட்சி அளித்தது.

பத்மநாபா தங்கி இருந்த அறையில் அவரையும் சேர்த்து 7 பேர்களின் உடல்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தன. மற்ற உடல்கள் மெயின் ரோட்டில் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. 400 துப்பாக்கி குண்டுகளும், வெடிகுண்டுகளும் கிடந்தன.   இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தபோது முதல் அமைச்சர் கருணாநிதி டெல்லியில் இருந்தார்.

முதல் அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்த கருணாநிதிக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் இருந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது:-

"எந்த சகோதர யுத்தம் தமிழ் ஈழத்தில் நடைபெற கூடாது என கடந்த ஆண்டு சுமார் 70 நாட்கள் போராளி குழுக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினேனோ அந்த சகோதர யுத்தத்தை தமிழ்நாட்டிலேயே அவர்கள் நடத்தி சென்னை நகரில் ரத்த ஆறு பெருக்கெடுக்க செய்து விட்டார்கள். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

எந்த இயக்கத்தை சேர்ந்த போராளியாக இருப்பினும் அவர்கள் தமிழ்நாட்டில் உலவிக் கொண்டு இருந்தால் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்கிற நிலை, இதனை ஒட்டி உருவாகும் என்பதால் முன் எச்சரிக்கையாக அவர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கு மாறு காவல் துறைக்கு ஆணையிடப்பட்டுள்ளது."

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியிருந்தார்.  

இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போராளிகளை போலீசார் தீவிரமாக தேடி கைது செய்தனர். மொத்தம் 396 பேர் பிடிபட்டார்கள். பின்னர் அவர்களில் பெண்களும், குழந்தைகளும் விடுதலை செய்யப்பட்டனர். மீதி இருந்த 181 போராளிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.   பத்மநாபாவை சுட்டுக்கொன்ற விடுதலைப்புலிகள் வெள்ளை நிற அம்பாசிடர் காரில் தப்பியதாக கருதப்பட்டது.

இதுபற்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன. போராளிகள் வரும் காரை மடக்கி பிடிக்க உத்தரவிடப்பட்டது. சம்பவம் நடந்த 1 மணி நேரத்தில் அதாவது இரவு 8.45 மணி அளவில், தாம்பரத்தை அடுத்த கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) வேகமாக வந்த வெள்ளை நிற அம்பாசிடர் கார் ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனை போட்டனர்.

சிட்டிபாபு என்ற போலீஸ்காரர் காருக்குள் எட்டிப்பார்த்தார். அப்போது காரில் 4 பேர் துப்பாக்கியுடன் இருந்தனர். காரை மெதுவாக நகர்த்தி போலீஸ்காரர் சிட்டிபாபுவை தாக்கி கீழே தள்ளிவிட்டு காரை வேகமாக ஓட்டிச்சென்று தப்பிவிட்டனர்.   தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சின்னமனை கிராமத்தில் ஒரு வெள்ளை நிற மாருதி வேன் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சுப்பையா பிள்ளை என்பவரின் தோட்டத்தில் வைக்கோலால் மூடி மறைக்கப்பட்ட நிலையில் வெள்ளை நிற மாருதி வேன் நின்று கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். "ஏர் கண்டிஷன்" வசதி செய்யப்பட்டிருந்த அந்த வேனை போலீசார் கைப்பற்றினார்கள். சுப்பையா பிள்ளையிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அதிகாலையில் அந்த காரில் இயந்திர துப்பாக்கி களுடன் 6 பேர் வந்ததாகவும், பகல் 2 மணி வரை தோட்டத்தில் தங்கி இருந்துவிட்டு, இலங்கையில் இருந்து7 பேருடன் வந்த விசைப்படகு ஒன்றில் தப்பி சென்றனர் என்றும் தெரியவந்தது.

எனவே சென்னையில் நடந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அவர்களாகவே இருக்கும் என்று கூறப்பட்டது.   டெல்லிக்கு சென்றிருந்த கருணாநிதி விமானம் மூலம் 20 ந்தேதி பிற்பகல் 3.40 மணிக்கு சென்னைக்கு திரும்பினார். விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு நேராக ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு வந்தார். துப்பாக்கி சூட்டில் பலியான .பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்ம நாபா, இலங்கை வடகிழக்கு மாநில கவுன்சில் மந்திரி கிருபாகரன் முதலியவர்களின் உடல்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்தன.

அந்த உடல்கள் மீது கருணாநிதி மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தினார். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களையும் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர், கருணாநிதி கூறும்போது, "இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவிப்பணம் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

பத்மநாபா உள்பட 13 போராளிகளின் உடல்களும், 22 ந்தேதி காலை பெரிய ஆஸ்பத்திரியில் இருந்து வேன் மூலம் சென்னை அரசினர் தோட்டத்துக்கு கொண்டு வரப்பட்டன. ராஜாஜி மண்டபத்துக்கு அருகே உள்ள பழைய கவர்னர் மாளிகை முகப்பில் 13 பேரின் உடல்களும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்தன.

பத்மநாபாவின் மனைவி ஆனந்தி போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். கதறி அழுதபடியே சென்று கணவரின் காலைத்தொட்டு வணங்கினார்.   சுட்டுக் கொல்லப்பட்டபோது பத்மநாபாவுக்கு வயது 40. என்ஜினீயரிங் பட்டதாரியான அவர் முதலில் ஈழம் போராளிகள் அமைப்பான "ஈராஸ்" இயக்கத்தில் சேர்ந்தார்.

பின்னர் அந்த இயக்கத்தில் இருந்து பிரிந்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை தொடங்கினார். இலங்கை தமிழ் பகுதியில் இனக்கலவரம் ஏற்பட்டபோது போராளிகள் குழு தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தன. பத்மநாபாவும் சென்னை வந்தார். பிறகு அவர் இலங்கை திரும்பவில்லை. அப்போது சென்னையில் கல்லூரி மாணவியாக இருந்த ஆனந்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

1989ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ந்தேதி இவர்கள் திருமணம் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. பத்மநாபா கொல்லப்பட்ட போது ஆனந்தி வீட்டில் இல்லை. கடைக்குச் சென்றிருந்தார். இதனால் ஆனந்தி உயிர் தப்பினார்.

 


யாழ்ப்பாணப் பொது நூலகம்

ஆசியக் கண்டத்திலேயே தலைசிறந்த நூலகங்களில் ஒன்றாக யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது.

எரிக்கப்பட்ட நூலகத்தில் இருந்த அரிய புத்தகங்கள் சில:

1660ல் றொபெர்ட் க்னொக்ச் எழுதிய History of Ceylon,

ஆனந்த கே.குமாரசாமி நூல் தொகுதியில்உள்ள 700 நூல்கள்

சி.வன்னியசிங்கம் நூல் தொகுதி (100 நூல்கள்)

ஐசக் தம்பையா நூல் தொகுதி (சமயம்,தத்துவம் பற்றிய நூல்கள் 250)

கதிரவேற்பிள்ளை நூல் தொகுதி (600 நூல்கள்)

ஆறுமுக நாவலர் நூல் தொகுதி

பைபிள் - முதன்முதலாக தமிழில் எழுதப்பட்ட கையெழுத்துப் படி

சமயங்கள் பற்றிய கலைக்களஞ்சியம்

பிரிட்டானியா கலைக்களஞ்சியம்

அமெரிக்க கலைக்களஞ்சியம்

கொல்லியர்ஸ் கலைக்களஞ்சியம்

மாக்மில்லன் கலைக்களஞ்சியம்

தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள் எழுதிய அரிய நூல்கள்

யாழ்ப்பாண வரலாற்று நூலான முதலியார் ராஜநாயகத்தின் பண்டைய யாழ்ப்பாணம்

,

தமிழில் முதல் முதலாக வெளிவந்த இலக்கிய கலைக்களஞ்சியமான முத்துத்தம்பிப்பிள்ளையின் அபிதான கோசம்,

அதன் பின் வந்த சிங்காரவேலு முதலியாரால் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியமான அபிதான சிந்தாமணி,

சித்த வைத்தியம் சம்பந்தமான பனையோலையில் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் என்பன இருந்தன..

அங்கிருந்த ஓலைச்சுவடிகளில் தமிழினத்தின் கலை கலாச்சாரம், நாகரீகம், பண்பாடு, பண்டைய ஈழத்தை ஆண்ட தமிழரசர்களின் வரலாறு என்பன எழுதப்பட்டிருந்தன.

மேலும் சீர் வளர் சீர் ஆறுமுகநாவலர் அவர்களால் அங்கிருந்த ஓலைசுவடிகளின் மூலம்தான் சைவத்தையும் தமிழையும் வளர்த்தெடுத்தார்

.

மிக முக்கியமாக சீர் வளர் சீர் ஆறுமுகநாவலர் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு தற்கால தமிழில் எழுதப்பட்ட பல ஓலைசுவடிகள் அவற்றுள் அடங்கும்

.

பண்டைய புவியியல் நிலவரைகள்(geo. maps)

பண்டைய நிலவரை நூல்கள்(map books)

அது மட்டுமா எமது அரசர்கள் ஈழதேசத்திற்காய் கட்டுவித்த குளங்கள், மேற்கொண்ட நீர்ப் பாசன முறைகள், வழங்கிய வயல் நிலங்ககள் , கோவில்களுக்கு ஆற்றிய பணிகளின் ஆவணங்கள் என்பன அங்கிருந்தன

நன்றி -தகவல் - நன்ணிச் சோழன்.



மாவீரர் நாள்
மரபாகி வந்த கதை


வைமன் வீதியில் அமைந்திருந்த ஈழநாதம் நாளிதழின் பணிமனைக்கு ஒருமுறை பொ.பாலசுந்தரம் பிள்ளை (பின்னாளில் யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தராக விளங்கியவர்), வந்திருந்தார். இந்நாளிதழின் ஆசிரியர் பொ.ஜெயராஜைச் சந்தித்த அவர் நாள்தோறும் வெளிவந்த நினைவு­கூருகின்றோம்` என்ற தலைப்பிலான விளம்பரம் பற்றிக்  குறிப்பிட்டார். முன்­னைய ஆண்டுகளில் இதே நாளில் வீரச்சாவெய் திய மாவீரர்களின் பெயர்,முகவரி, சம்பவம் முதலான விடயங்கள் அந்தந்த நாளிதழில் வெளிவந்­துகொண்டிருந்தன.


அத்துடன் இலங்கைத்­தீவில் தமிழராகப் பிறந்ததனால் சிங்களக்காடையர், படையினர் முதலானோரால் கொல்லப்பட்டோர் பற்றிய விபரங்களும் வெளி­யாகின. இதில் இரண்டாவது விடயம் குறித்தே பேராசிரியர் குறிப் பிட்டார். உலகில் வெவ்­வேறு நாடுகளில்  யூதர்கள் என்ற காரணத்­துக்காக கொல்லப்­பட்ட அனைவரது பெயர், சம்பவங்கள் அனைத்தையுமே இஸ்ரேலில் பதிவுக்­குள்ளாக்கி வைத்துள்ளனர்  எனக் குறிப்பிட்ட அவர் ஒடடு­மொத்தமாக யூத இனம் தாம் சந்­தித்த இன அழி­வு­களை வர­லா­றா­கப் பதிவு செய்­வ­தில் காட்­டிய அக்­க­றையை விலா­வா­ரி­யாக விப­ரித்­தார். அத­னைப் போலவே ஈழ­நா­தம் காட்­டும் அக்­க ­றையை குறிப்­பி­டத்­தக்க விட­யம் எனப் பாராட்­டி­னார்.
இறுதி யுத்­தம் முடிந்து பதி­னோரு ஆண்­டு­கள் கழிந்து விட்­டன. 
இன்­ன­மும் இனப்­ப­டு­கொ­லைக்­குள்­ளாக்­கப்­பட்ட தமது உற­வு­கள் பற்­றிய பதி­வு­களை எம்­மி­னம் பூர­ணப்­ப­டுத்­த­ வில்லை. இறுதி நாட்­க­ளில் நடை­பெற்ற வீரச்­சாவு விப­ரங்­கள் கூட முழு­மைப்­ப­டுத்­தப் ப­ட­வில்லை. 

இந்த விட­யங்­க­ளில் யாரா­வது அக்­கறை காட்ட முனைந்­தால் தலை­யில் குட்டி அம­ர­ வைக்­கும் போக்­கி­னையே சிலர் தொடர்ந்­து­கொண்­டி­ருக்­கின்­ற­னர். வர­லாற்றை மாற்றி எழு­தும் பிர­கி­ரு­தி­கள் தமது கற்­ப­னை­களை ஓரிரு சம்­ப­வங்­க­ளில் சோடித்து இணை­யத்­த­ளங்­கள், முக­நூல்­க­ளில் உலாவ விடு­கின்­ற­னர். லூக்­காஸ் சாள்ஸ் அன்­ரனி என்ற இயற்­பெ­ய­ரைக்­கொண்ட மாவீ­ர­ருக்கு சீலன் எனப் பெயர் வைத்­த­வன் தானே என்­றும் தான் ஒரு மூத்த உறுப்­பி­னர் என்­றும் அண்­மை­யில் ஒரு­வர் இணை­யத்­தில் பதி­விட்­டி­ருந்­தார்.

மூத்த உறுப்­பி­னர் என்று சொல்­வ­தற்கு அவர் தலை நரைக்­கும் வரை காத்­தி­ருந்­தார்  போலும்.
வர­லாற்­றில் நடை­பெ­றும் திணிப்­புக்­கள் என்ற விட­யத்­தில் நாம் எச்­ச­ரிக்­கை­யா­கத் தான் இருக்­க­வேண்­டும். அந்த விட­யத்­தில் மாவீ­ரர் துயி­லு­மில்­லங்­கள் பற்­றி­யும் குறிப்­பிட்­டா­க­வேண்­டும். 

ஏனெ­னில் இன்­றைய நிலை­யில் மாவீ­ரர் துயி­லு­மில்­லங்­க­ளின் செயற்­பா­டு­கள்,முடி­வு­கள் தொடர்­பாக தீர்­மா­னிக்­கும்  
உரிமை தமக்கே உள்­ளது என்ற நினைப்பு சில­ரி­டம்
ஊறி­விட்­டது போல் உள்­ளது.
விடு­த­லைப்­பு­லி­க­ளின் முதல் மாவீ­ரர் சங்­க­ரின் வித்­து­டல் தமி­ழ­கத்­தில் எரி­யூட்­டப்­பட்­டது. (கொள்ளி வைத்­த­வர் அப்­பையா அண்­ணர்) இரண்­டா­வது,மூன்­றா­வது மாவீ­ரர்­க­ளான லெப்.சீலன் மற்­றும் ஆனந்­தின் உட­லங்­கள் யாழ்.போத­னா­வைத்­தி­ய­சா­லை­யில் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. எப்­ப­டியோ தக­வல் அறிந்த சீல­னின் தாயார் தனது மக­னின் உடலை தன்­னி­டமே கைய­ளிக்­க­வேண்­டு­மென பொலி­ஸா­ரி­டம்

வேண்­டிக்­கொண்­டார். அவ் வேண்­டு­கோளை
பொலி­ஸார் நிரா­க­ரித்­த­னர். ஊர்­கா­வற்­து­றைப் பகு­தி­யி­லேயே பொலி­ஸா­ரால் இவ்­விரு உடல்­க­ளும் எரி­யூட்­டப்­பட்­டன. வர­லாற்­றுச் சம­ரான 1983 ஜூலை  திரு­நெல்­வே­லி­யில் வீரச்­சா­வெய்­திய லெப். செல்­லக்­கிளி அம்­மா­னின் வித்­து­ட­லைப்  புலி­களே கொண்டு சென்­ற­னர். நீர்­வே­லிப் பகு­தி­யில் இவ் வித்­து­டல் விதைக்­கப்­பட்­டது. அன்­றைய கால­கட்­டத்­தில் இவ் விட­யம் பகி­ரங்­கப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக இருக்­க­வில்லை. சுவ­ரொட்­டி­கள் மூலமே இவ்­வி­ட­யம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது. முதல் மாவீ­ர­ரான சங்­க­ரின் ஓராண்டு நினைவு நாளை யொட்­டியே அவ­ரது வீரச்­சா­வுச் சம்­ப­வ­மும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது .
முதல் மாவீ­ரர் சங்­கர்
அன்­றைய கால­கட்­டத்­தில் இரு­வ­ரின்  பாது­காப்­புக் கருதி சங்­க­ரின் வீரச்­சாவை உட­ன­டி­யாக வெளிப்­ப­டுத்த முடி­ய­வில்லை. பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ள­ ரான நித்­தி­யா­ னந்­த­னை­யும், அவ­ரது துணை­வி­யார் நிர்­ம­லா­வை­ யும் கைது செய்ய இரா­ணு­வத்­தி­னர் யாழ். நாவ­லர் வீதி­யி­லுள்ள அவர்­க­ளது வீட்­டுக்­குச் சென்­ற­னர்.
”27.10 1982 அன்று இடம்­பெற்ற சாவ­கச்­சேரி பொலி­ஸ் நிலை­யத் தாக்­கு­த­லில் காய­ம­டைந்த சீலன்,புலேந்­தி­ரன். ரகு (குண்­டப்பா) ஆகி­யோர்  இவர்­க­ளது வீட்­டி­லேயே  தங்­க­வைத்து சிகிச்­சை­ ய­ளிக்­கப்­பட்­ட­னர்” என்ற தக­வல் படை­யி­ன­ருக்­குக் கிடைத்­தி­ருந் தது. படை­யி­னர் இவர்­க­ளது வீட்டை முற்­று­கை­ யி­டச்  சென்ற போது அங்­கி­ருந்த சங்­கர் அந்த முற்­று­கை­யி­லி­ருந்து தப்ப முயன்­றார்.படை­யி­ன­ரின் துப்­பாக்­கிப் பிர­யோ­கத்­தில் வயிற்­றில் காய­ம­டைந்த அவர் கைலா­ச­பிள்­ளை­யார்  கோவி­ல­டிக்கு ஓடி வந்து சேர்ந்த போது துவிச்­சக்­கர வண்­டி­யில் வந்­து­கொண்­டி­ருந்­தார் அப்­போது  யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வ­னும் பின்­னா­ளில் 18 ஆண்­டு­க­ளுக்கு மேலாக ஈழநாதம் நாளிதழின்  பிரதம ஆசிரியராக விளங்கிய வருமான பொ .ஜெயராஜ் . அவர் சங்­க­ரைக்­கண்­டார். 
ஏற்­க­னவே அறி­மு­க­மா­யி­ருந்த சங்­கரை தனது துவிச்­சக்­கர வண்­டி­ யில் ஏற்­றிக்­கொண்டு சென்­றார். யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு எதிரே உள்ள குமா­ர­சாமி வீதி­யி­லுள்ள 41 எண்­ணு­டைய வீட்­டுக் குக்­கொண்­டு­போ­னார். இந்­தப்­போ­ராட்­டத்­து­டன் சம்­பந்­த­மு­டைய பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் பலர் பழகி வந்த இந்த வீட்­டில் இருந்த ஏனை­யோ­ரு­டன் இணைந்து சங்கரைக் காப்­பாற்­றும் முயற்­சி­யில் ஈடு­பட்­ட­னர்.  
அன்­றைய கால­கட்­டத்­தில் பொது வைத்­தி­ய­சா­லை­யில் சிகிச்சை பெறு­வது முடி­யாத விட­யம். எனவே மேல­திக சிகிச்­சைக்­காக சங்­கர் தமி­ழ­கத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­டார். சிவ­கு­மார் என்­னும் இயற்­பெ­ய­ரைக் கொண்ட அன்­ரனே இவ­ரைத் தமி­ழ­கத்­துக்குக் கொண்டு சென்­றார்.
சங்­க­ருக்­காக
உண்­ணா­வி­ர­த­மி­ருந்த தலை­வர்
பொது­வாக எவ­ருமே நினைவு தப்பி வலி­யில் துடிக்­கும் போது “அம்மா ..... அம்மா .. „ என்றே அரற்­று­வ­துண்டு . ஆனால் சிகிச்­சைக்­காக கொண்டு செல்­லப்­பட்ட அந்­தச் சம­யத்­தில் சங்­கர் “ தம்பி ... தம்பி “ என்றே அரற்­றி­னார். 

தலை­வர் சங்­க­ரின் மன­தில் எந்­த­ள­வுக்கு ஆழ­மாக உறைந்­தி­ருந்­தார் என்­ப­தற்கு இது­வோர் சிறந்த உதா­ர­ணம். தமி­ழர்­க­ளின் விடு­த­லைக்­காக இது­வரை  36 ஆயு­தப்­போ­ராட்ட இயக்­கங்­கள் தோன்­றிய போதும் அதில் புலி­கள் மட்­டுமே வித்­தி­யா­ச­மா­கத் தெரிந்­தார்­கள் என்­றால் அதற்கு இது போன்ற உதா­ர­ணங்­களை சுட்­டிக் காட்­ட­லாம். வேறு எங்­கும் காண முடி­யாத விட­யம் இது . 

அந்­தப் பாசப்­பி­ணைப்பே வர­லாற்­றில் முதல் மாவீ­ர­னாக (விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தின்) பெயர்  பதித்த சங்­க­ரின் நினைவு நாளின் போது 1983 இருந்து 2008 வரை நீர் கூட அருந்­தா­மல் உண்­ணா­வி­ர­த­மி­ருக்­கும் எண்­ணத்­தைக் தலை­வ­ருக்கு ஏற்­ப­டுத்­தி­யது


மாவீ­ரர் நாள் அறி­விப்பு
இதன் அடுத்­த­கட்­டம் தான் மாவீ­ரர் நாள் பற்­றிய அறி­விப்பு.இந்­திய இரா­ணுவம் செயற்பட்ட காலத்­தில் 1989 ம் ஆண்­டில் இந்த அறி­விப்பு மண­லாற்­றுக் காட்­டில் இருந்த( ’14’முகாம் ) மூலம் சகல பிராந்­திய தள­ப­தி­க­ளுக்­கும்   தெரி­விக்­கப்­பட்­டது. முத­லாம் உல­கப்­போ­ரின்போது போர்க்­க­ளத்­தில் உயிர் நீத்த வீரர்­களை நினை­வு­கூ­ரும் வகை­யில் முதன் முத­லாக ஆரம்­பிக்­கப்­பட்ட பொப்பி மலர் நினைவு நாள் பற்றி சங்­கர் என்ற மூத்­த­போ­ராளி உரை­யா­ட­லொன்­றின்­போது  தலை­வ­ரி­டம் குறிப்­பிட்­டார் (இவரே பின்­னா­ளில்  விமா­னப் படை­யின் உரு­வாக்­கத்­தில் பெரும்பங்கு வகித்­த­து­டன் அதனை வழி­ந­டத்­தி­ய­வர். (இயற்­பெ­யர் வை.சொர்­ண­லிங்­கம்)
இந்த பொப்பி மலர் உதா­ர­ணமே இலங்­கை­யில் ‘சூரி­ய­மல்’ எனப்­ப­டும் சூரி­ய­காந்தி இயக்­கத்­துக்கு வழி
­வ­குத்­தது.
அந்­தப்­பொ­றியை சங்­கர் தட்­டியபோதே எங்­க­ளது தேசிய விடு­த­லைப் போராட்­டத்­தில் ஆகு­தி­யா­கிய போரா­ளி­க­ளுக்­கும் ஒரு நாளைப் பிர­க­ட­னப்­ப­டுத்த வேண்­டு­மென்ற சிந்­தனை தலை­வர் மன­தில் உரு­வா­னது  . அந்­த­வ­கை­யி­லேயே புலி­க­ளின் முதல் மாவீ­ர­ரான சங்­க­ரின் (சத்­தி­ய­நா­தன் ) நினைவு நாளை மாவீ­ரர் நாளா­கப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­னார் அவர். இது பற்றி குறிப்­பினை தேவர் அண்­ணா­வும் வெளி­யிட்­டி­ருந்­தார் .
கிழக்­கில்...!
மட்­டக்­க­ளப்­புக்­கு இந்த அறி­விப்பு  வந்­த­போது வடக்கு,கிழக்­கில் நிலை­கொண்­டி­ருந்த இந்­திய இரா­ணு­வம் கட்­டம்­கட்­ட­மாக வெளி­யே­றும் நிலை­யில் இருந்­தது .முத­லா­வது தொகு­தி­யி­னர் அம்­பாறை மாவட்­டத்தை விட்டு 30.10.1989 அன்று முற்­றாக வெளி­யே­றி­விட்­ட­னர் ஈ.பிஆர்.எல்.எப் ,ஈ.என்.டி.எல். எப்,டெலோ இயக்­கங்­க­ளுக்கு கூடு­த­லான ஆயு­தங்­க­ளை­யும் அவர்­க­ளால் பிடிக்­கப்­பட்ட இளை­ஞர்­க­ளுக்கு பயிற்­சி­யும் வழங்­கி­விட்டே  இம் மாவட்­டத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­னர்.இந்­தி­யப்­ப­டை­யி­னர். இவர்­க­ளால் பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்­டோர் திருக்­கோ­வில் மற்­றும் தம்­பி­லு­வில் ஆகிய இடங்­க­ளில் இரு பெரும் முகாம்­களை  அமைத்­தி­ருந்­த­னர்.
இந்­த­நி­லை­யில்  அன்­றைய அம்­பாறை மாவட்டத்  தள­ப­தி­யாக விளங்­கிய  அன்­ரனி தலை­மை­யில் ஒரு முகா­மை­யும்   இன்­னொன்றை  அன்­றைய மட்­டக்­க­ளப்பு மாவட்ட தள­பதியாக விளங்­கிய ரீகன் தலை­மை­யி­லும்   05.11.1989 அன்று    தாக்கி கைப்­பற்­றி­னர்­பு­லி­கள்.
இந்த நிலை­யில் அம்­பா­றை­யில் அன்­ரனி முதல் மாவீ­ரர் நாளை திறம்­பட நடத்­தி­னார். திருக்­கோ­யில்  பகு­தி­யில் தள­பதி அன்­ரனி தலை­மை­யில்   போரா­ளி­கள் பாது­காப்பு வழங்க  அம்­பாறை மாவட்ட அர­சி­யல் துறை­யி­னர் நிகழ்வை நடத்­தி­னர்.
ஆனால் மட­டக்­க­ளப்பு மாவ­ட­டத்­தில் இந்­திய இரா­ணு­வம் நிலை கொண்­டி­ருந்­த­தால் பெரும்­பா­லான கிரா­மங்­க­ளில்  மாவீ­ரர்­க­ளின் படங்­கள் வைத்து தீபம் ஏற்­றப்­பட்­டது.
வந்­தா­று­மூ­லை­யில் புலி­க­ளும் மக்­க­ளும் கூடி­யி­ருந்த இடத்­துக்கு எதிர்­பா­ராத வித­மாக இந்­தி­யப்­ப­டை­யி­னர் வந்­த­போ­தும் அசம்­பா­வி­தம் எது­வும் நடக்­க­வில்லை.
திரு­கோ­ண­ம­லை­யைப் பொறுத்­த­வரை இந்­திய இரா­ணு­வத்­தின் நெருக்­கடி அதி­க­மாக இருந்­தது. அவ்­வா­றி­ருந்­தும் சாம்­பல்­தீவு மகா­வித்­தி­யா­ல­யத்­தில் நிகழ்­வுக்­கென ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. 150 க்கு மேற்­பட்ட பொதுமக்­கள் இந் நிகழ்­வில் கலந்­து­கொண்­ட­னர். நிகழ்­வுக்­கான ஏற்­பா­டு­க­ளின்  பாது­காப்­புக்­காக ஒரு அணி அனுப்­பப்­பட்­டி­ருந்­தது. இந்த அணிக்கு மேஜர் தர நிலை­யி­லான சுரேஷ் என்ற போரா­ளி­யை­யும்  (பின்­னர் படகு விபத்­தில் ஆகு­தி­யா­னார் ) நிகழ்­வைப் பொறுப்­பேற்று நடந்த அர­சி­யல் பொறுப்பை ஏற்­றி­ருந்த ரூப­னை­யும் அனுப்­பி­யி­ருந்­தார் பது­மன். 
அன்­றைய கால­கட்­டத்­தில் சங்­க­ரின் புகைப்­ப­டம் கூட இவர்­க­ளின்  கைவ­சம் இருக்­க­வில்லை.
நிகழ்வு நடை­பெ­றும் தக­வல் அறிந்து இந்­தி­யப்­ப­டை­யி­னர் அங்கு விரைந்­த­னர். அவர்­களை எதிர்த்து புலி­கள் போரிட்­ட­னர். ஒரு பக்­கம் மோத­லில் ஈடு­பட்­டுக்­கொண்டே நிகழ்­வை­யும் நடத்­தி­மு­டித்­த­னர் .மாவீ­ரர்­க­ளின் பெற்­றோ­ரின் பாது­காப்­பைக் கருத்­திற்­கொண்டு சுருக்­க­மாக நிகழ்வு நடந்­தன. ரூபன் சுட­ரேற்றி வைத்­தார்.அதே­வேளை இந்­தி­யப்­ப­டை­யி­ன­ரைத் தடுக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்ட  லெப்.ரிச்­சாட்  (இரா­ம­சாமி குண­ராசா, இறக்­கண்டி, திரு­கோ­ண­மலை.)என்ற போராளி களப்­ப­லி­யா­னார். இன்­னு­மொரு போரா­ளி­யும் இந்­தச் சம­ரில் காய­ம­டைந்­தார்.மாவீ­ரர் நாளின் மாண்­பைப் பேண­வும்  மாவீ­ர­ரின் பெற்­ரோ­ரைக்­காக்­கும் முயற்­சி­யி­ லும் தன்னை ஆகு­தி­யாக்­கிய முதல்­மா­வீ­ர­னாக ரிச்­சாட்டின்  வர­லாறு அமைந்­தது.
வடக்­கில்..!
கிளி­நொச்சி மாவட்­டத்­தின்  நிகழ்வு பிர­தே­சப் பொறுப்­பா­ள­ராக இருந்த அத்­தா­ரின் ஏற்­பாட்­டில் நடை­பெற்­றது. உருத்­தி­ர­பு­ரம் சிவன்­கோ­யி­ லடி, அக்­க­ரா­யன்,கிளி­நொச்சி ஆகிய இடங்­க­ளில் இந்­திய இரா­ணுவ முகாம்­கள் இருந்­த­போ­தும் இவற்­றுக்கு நடு­வில் இருந்த கோணா­வில் அ.த.க பாட­சா­லை­யில் நிகழ்­வு­கள் நடை­பெற்­றன. வாடகை மோட்­டார் வண்­டி­யில் ஒலி­ பெ­ருக்கி பூட்டி நிகழ்வு பற்றி அறி­விப்­புச் செய்­யப்­பட்­டது. 
சில வேளை இவர்­க­ளுக்கு இந்­தி­யப்­ப­டை­யி­ன­ரால் தொந்­த­ரவு ஏற்­ப­ட­லாம் எனக்­க­ருதி, நக­ரில் இருந்த சகல ஒலி­பெ­ருக்கி மற்­றும் வாடகை மோட்­டோர் வண்டிக­ளின் உரி­மை­யா­ளர்­கள் நிகழ்­விடத்­துக்கு அழைக்கப்­பட்­ட­னர்.
“வானம்  பூமி­யா­னது பூமி ­வா­ன­மா­னது” என்ற பெரு­மாள் கணே­ச­னின் பாடலை பின்­னா­ளில் பிர­பல எழுச்­சி­பா­ட­க­ராக விளங்­கிய S .G சாந்­தன் பாடி­னார். அடி­மைத்­த­னத்­துக்கு எதி­ரான சினி­மாப் பாடல்­களை மாண­வர்­கள் பாடி­னர்.  (சத்­தி­யமே இலட்­சி­ய­மாய் கொள்­ளடா , உள்­ளத்­திலே உரம் வேண்­டு­மடா போன்ற) “ஓநா­யும் ,சேவல்­க­ளும்” என்ற நவீன குறி­யீட்டு நாட­க­மும் மேடை­யேற்­றப்­பட்­டது.வன்­னி­யில் முதன்­மு­தல் மேடை­யேற்­றப்­பட்ட இக் குறி­யீட்டு நாட­கத்தை நா. யோகேந்­தி­ர­நா­தன் எழு­தி­யி­ருந்­தார். 
அன்­ரன் அன்­ப­ழ­கன் முக்­கிய கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றி­ருந்­தார். மாவீ­ரர் நாளுக்­கான சுட­ரேற்­றல் முத­லான நிகழ்­வு­க­ளு­டன் மிகச் சிறப்­பான முறை­யில் அனைத்­தும் நடை­பெற்­றன.மூன்று முகாம் களி­லி­ருந்­தும் இந்­தி­யப்­ப­டை­யி­னர் வந்­தால் எதிர்­கொள்­ளத் தேவை­யான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டி­ருந்த போதும் அசம்­பா­வி­தம் ஏது­மின்றி அனைத்­தும் நடை­பெற்­றன.
மன்­னார்ப் பிராந்­தி ­யத்­தின்  சகல மாவீ­ரர் விப­ரங்­க­ளை ­யும் மாவட்ட அர­சி­யல் துறைப் பொறுப்­பா­ளர் அமு­தன் (சுரேஷ் ) தலை­வ­ரி­டம் சமர்ப்­பித்­தி­ருந்­தார். 
பண்­டி­வி­ரிச்­சான் , நானாட்­டான், கறுக்­காய்க் குளம், முழங்­கா­வில் ஆகிய இடங்­க­ளில் நினை­வேந்­தல் நிகழ்­வு­கள் நடை­பெற்­றன. பண்­டி­வி­ரிச்­சான் பாட­சா­லை­யில் பிர­தே­சப்­பொ­றுப் பா­ளர் கணே­ஷின் ஏற்­பாட்­டில் நிகழ்வு நடை­பெற்­றது. கவிதை, பேச்சு, நாட­கம் என பல்­வேறு நிகழ்­வு­க­ளின் போட்­டி­க­ளும் முன்­கூட்­டியே ஏற்­பாடு செயப்­பட்­டி­ருந்­தன. நானாட்­டான் நெல் களஞ்­சி­யத்­தில் பிர­தே­சப் பொறுப்­பா­ளர் ஞானி­யின் ஏற்­பாட்­டில் நிகழ்­வு­கள் நடந்­தன. 
பின்­னா­ளில் தமி­ழீழ நிர்­வாக சேவை­யில் பிர­மு­க­ராக விளங்­கிய சின்­னப்பா மாஸ்­டர் இந் நிகழ்வை திறம்­ப­டச் செய்­வ­தற்­கான ஒத்­து­ழைப்பை வழங்­கி­யி­ருந்­தார்.
கறுக்­காய்க் குளத்­தி­லும் நெற்­க­ளஞ்­சி­யத்­தி­லேயே நிகழ்­வு­கள் நடை­பெற்­றன. பிர­தே­சப்­பொ­றுப்­பா­ளர் பாரதி இதற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்­தார்.பூந­கரி பிர­தே­சத்­துக்­கான நிகழ்வு முழங்­கா­வில் மகா வித்­தி­யா­யத்­தில் நடை­பெற்­றது. 
பிர­தே­சப் பொறுப்­பா­ளர் சாம் இதற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்­தார். யாழ்.மாவட்­டப் பொறுப்­பா­ள­ராக  பொட்­டுவே செயற்­பட்­டார். அவர் தன்­னு­டன் பணி­யாற்­றிக் கொண்­டி­ருந்த ராஜன் (பின்­னா­ளில் யாழ்.மாவட்ட அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ள­ராக விளங்­கி­ய­வர்) சூட் ( தவளை நட­வ­டிக்­கை­யின் போது வீரச்­சா­வெய்­தி­ ய­வர்) ஜக்­சன் (தற்­போது  புலம்­பெ­யர் நாடொன்­றில் வசிப்­ப­வர்) முத­லா­னோ­ரி­டம் மாவீ­ரர் நாள் அறி­விப்பு பற்­றிக் குறிப்­பிட்­டார். இந்­தி­யப் படை­யி­ன­ரின் நட­வ­டிக்கை தீவி­ர­மா­யி­ருந்­த­தால் சிறு சிறு குழுக்­க­ளாக காலத்­துக்­கேற்ப செயற்­பட்­டுக் கொண்­டி­ருந்­த­னர் புலி­கள். நீர்­வேலி வாத­ர­வத்தை, குப்­பி­ளான், மாத­கல் போன்ற இடங்­க­ளில் இந்த நக­ரும் குழுக்­கள் பெரும்­பா­லும் தங்­கி­யி­ருந்­தன. பகி­ரங்க நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­வது சிர­ம­மென்­ப­தால்,  சுவ­ரொட்­டி­கள் அடித்து சாத்­தி­ய­மான இடங்­க­ளில் ஒட்­டு­வோம் என ராஜ­னி­டம் தெரி­வித்­தார் பொட்டு.
முதல் சுவ­ரொட்டி
திலீ­பன் காலத்­தில் அர­சி­யற் பணி­களை மேற்­கொண்­ட­வர் என்ற வகை­யில் நடை­மு­றைச் சாத்­தி­ய­மான விட­யங்­கள் பற்றி ராஜ­னின் அபிப்­பி­ரா­யங்­கள் கவ­னத்­திற் கொள்­ளப்­பட்­டன. ‘‘உங்­கள் சுவ­டு­க­ளில் தொட­ ரும் பாதங்­கள்’’ என்­றொரு வச­னத்தை (சுலோ­கம் என்­றும்  சொல்­ல­லாம்) எழு­திக் கொண்­டு­போய் பொட்­டு­வி­ டம் காட்­டப்­பட்­டது. அவர் அதை ஏற்­றுக் கொண்­டார். எனி­னும் மக்­கள் மன­தில் இன்­னும் ஆழ­மா­கப் பதிய வைப்­பது எப்­படி என்று சிந்­தித்­த­ வாறே தொடர்ந்து செய­லில் இறங்­கி­னார்.
எங்­கே­யா­வது கறுப்பு வர்­ணம் (பெயின்ற்) எடுத்து வரும்­படி சொன்­னார். வெளியே சென்­ற­வர்­கள் ஒரு வாளி­யில் அத­னைக் கொண்டு வந்­த­னர். வெள்­ளைத் தாள் ஒன்றை எடுத்த பொட்டு அரு­கில் நின்ற சூட்டை அழைத்து அவ­ரது காலின் அடிப்­பா­தத்­தில் பெயின்றை அடித்து அத்­தா­ளில் பதிய வைத்­தார். அச்­சொட்­டாக கால் பதிந்­தது. எனி­னும் அங்கு நின்ற அன்­னை­யொ­ரு­வர் இவ­ரது கால் சிறி­ய­தாக உள்­ளது; வேறொ­ரு­வ­ரின் கால் பெரி­தாக இருக்­கு­மா­யின் நன்­றாக இருக்­கும் எனத் தனது அபிப்­பி­ரா­யத்தை வெளி­யிட்­டார். 
அது சரி­யா­கவே இருந்­தது பொட்­டு­வுக்கு. உடனே அரு­கில் நின்ற ஜக்­ச­னின் காலில் மை பூசப்­பட்­டது. அது மிகப் பொருத்­த­மாக இருந்­தது. ராஜன் எழு­திய வச­னத்­தில் பாதங்­கள் என்ற சொல்லை நீக்­கி­விட்டு அதற்­குப் பதி­லாக .... (டொட் டொட்) என குறிப்­பிட்­டார் பொட்டு.
அந்த வகை­யில் தயா­ரிக்­கப்­பட்ட சுவ­ரொட்­டியே முதன் முத­லில் மாவீ­ரர் நாளுக்­கென மக்­க­ளின் பார்­வைக்கு வந்­தது. துவிச்­சக்­க­ர­வண்டி மூல­மாக பல்­வேறு இடங்­க­ளுக்­கும் கொண்டு சென்று ஒட்­டி­னர் புலி­கள்.
ஒதுங்­கிய இரா­ணு­வம்
புத்­தூர் முகா­மி­லி­ருந்து புறப்­பட்ட இந்­திய இரா­ணு­வத்­தி­னரை   நாட­கக் கலை­ஞர் செல்­வம் மற்­றும் பாலன் முத­லா­னோர் வழி மறித்­த­னர். மாவீ­ரர் நாள் தொடர்­பான விட­யங்­கள் இருப்­ப­தால் வெளியே வரா­ம­லி­ருக்­கு­மாறு அவர்­கள் இரா­ணு­வத்­தி­டம் கூறி­னர். தாங்­கள் எப்­ப­டி­யும் வெளி­யேற வேண்­டி­ய­வர்­கள் தானே என்ற நினைப்­பிலோ என்­னவோ மக்­க­ளின் கருத்­துக்கு மதிப்­ப­ளித்து திரும்­பிச் சென்­ற­னர் இந்­தி­யப் படை­யி­னர்.
புலி­க­ளின் கட்­ட­ளைப் பணி­ய­க­மான மண­லாறு’ 14: முகா­மில் தேவர் அண்­ணா­வோடு இணைந்து ஏற்­பா­டு­களை கவ­னிக்­கு­மாறு தலை­வர் அறி­வு­றுத்­தி­யி­ருந்­தார்.
அந்த வகை­யில் பெண் போரா­ளி­கள் உட்­பட அனை­வ­ரும் உணர்­வு­பூர்­வ­மாக பணி­க­ளில் ஈடு­பட்­ட­னர். புலி­க­ளைத் தவிர வேறு எந்த விடு­தலை இயக்­க­மும் காட்­டுக்­குள் இருந்து ஒலி­பெ­ருக்கி மூலம் பாடல்­களை இசைக்க விட்டு தமது தோழர்­களை நினைவுகூர்ந்­தி­ருக்­காது.
இந்­நி­கழ்­வு­கள் நடை­பெ­றும்­போ­தும் இந்­தி­யப் படை வந்­தால் எதிர்­கொள்­வ­தற்­கான பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளில் தளர்ச்சி ஏதும் இருக்­க­வில்லை.
நிகழ்­வு­களை கார்த்­திக்  மாஸ்­டர் புகைப்­ப­டம் எடுத்­துக் கொண்­டி­ருந்­தார். இவ­ருக்கு ஏற்­க­னவே காட்­டுக்­குள் வைத்தே புகைப்­ப­டக் கரு­வி­யைக் கையாள்­வது, அதன் நுணுக்­கங்­கள் என்­ப­வற்­றைக் கிட்டு கற்­பித்­தி­ருந்­தார். தலை­வ­ரின் உரை முத­லான விட­யங்­கள் அடங்­கிய நிகழ்ச்சி நிரலை சங்­கர் மற்­றும் தேவர் அண்ணா திட்­ட­மிட்­டி­ருந்­த­னர்.
1990 ஆம் ஆண்டு நள்­ளி­ரவு 12 மணிக்கு மாவீ­ரர் நாள் நிகழ்­வு­கள் ஆரம்­ப­மா­கின. 12 மணி இரு நிமி­டத்­துக்கு  சுட­ரேற்­று­மாறு விடுத்த அழைப்­புக்கு மதிப்­ப­ளித்­தி­ருந்­த­னர் மக்­கள். ஆல­யங்­க­ளில் மணி­கள் ஒலிக்க வைக்­கப்­பட்­டன. அத­னைத் தொடர்ந்து மக்­கள் சுட­ரேற்ற தலை­வ­ரின் உரை வானொ­லி­யில் ஒலி­ப­ரப்­பா­னது. வீட்டு வாச­லில் சுட­ரேற்­றிய சம­யம் மழை பெய்­தது. அத­னால் சுடர் அணைந்து விடா­ம­லி­ருக்க குடை பிடித்­த­னர். இந்­தக் காட்சி ஒரு ஓவி­ய­ரின் மன­தில் தைத்­தது. அவர் இக்­காட்­சி­யைத் தத்­ரூ­ப­மாக வரைந்­தி­ருந்­தார். தீப­மேற்­றல், மணி­யோசை ஒலிக்­கச் செய்­தல் முத­லான விட­யங்­க­ ளெல்­லாம் கவி­ஞர் புது­வை­ அண்­ணா­வின் ஆலோ­ச­னையே. 
அத­னைத் தலை­வர் ஏற்­றி­ருந்­தார். மாவீ­ர­ரின் பெயரை வீதி­க­ளுக்கு சூட்­டு­வ­தும் நடை­பெற்­றது.
மாவீ­ரர் பெற்­றோ­ரைக் கெள­ர­வித்­தல் நிகழ்­வும் இந்த ஆண்­டி­லேயே ஆரம்­ப­மா­கி­விட்­டது. வலி­கா­மம் பகுதி மாவீ­ரர்களது பெற்­றோர் கோப்­பாய் ஆசி­ரிய கலா­சா­லை­யி­லும் வட­ம­ராட்­சி­யைச் சேர்ந்­தோர் நெல்­லி­யடி மத்­திய கல்­லூ­ரி­யி­லும் தென்­ம­ராட்­சி­யைச் சேர்ந்­தோர் டிறி­பேர்க் கல்­லூ­ரி­யி­லும் தீவ­கத்­தைச் சேர்ந்­தோர் வேல­ணை­யி­லும் கெள­ர­விக்­கப்­பட்­ட­னர். புதிய உடை­கள், அன்­ப­ளிப்­பு­கள் வழங்­கல், விருந்­தோம்­பல் முத­லான விட­யங்­கள் பெற்­றோரை நெகிழ வைத்­தன. 
தாங்­கள் இழந்த பிள்­ளை­களை அங்­கி­ருந்த போரா­ளி­க­ளின் வடி­வில் கண்­ட­னர். இந்­திய இரா­ணுவ காலத்­தில் ஒரு போராளி வீரச்­சா­டைந்­தார். அவ­ரது உடல் ஓரி­டத்­தில் எரி­யூட்­டப்­பட்­டது. ஏதோ அனா­தை­கள் போல எங்­கள் சகாவை எரிப்­பது ஒரு போரா­ளி­யின் மன­தைத் தைத்­தது. விடு­த­லைக்­கா­கப் புறப்­பட்­ட­ வர்­கள் என்­றா­லும் அவர்­க­ளுக்­கான நிகழ்வு கெள­ர­வ­மாக நடத்­தப்­பட வேண்­டும்– எங்­கள் கட்­டுப்­பாட்­டில் ஒரு நிலம் இருக்­கு­மா­யின் தனிப் போரா­ளி­க­ளுக்­கென ஒரு சுடலை அமைக்க வேண்­டும் என ராஜன்  நினைத்­தார்.
துயி­மில்­லங்­க­ளின் உரு­வாக்­கம்
நெருக்­க­டி­கள் தானே புதிய சிந்­த­னை­களை தோற்­று­விக்­கும். எம்.ஜி.ஆர். இள­மை­யில் வறுமை கார­ண­மாக பட்­டினி கிடக்க வேண்­டி­யேற்­பட்­டது. அந்த வலி மன­தில் ஆழ­மா­கப் பதிந்­தி­ருந்­த­தால் தான், தாம் முத­ல­மைச்­ச­ராக வந்­த­போது சத்­து­ண­வுத் திட்­டத்­தைக் கொண்டு வந்­தார். தான் சாப்­பி­டக் கூடிய நிலை­யில் இருந்­தி­ருந்­தால் நிச்­ச­யம் கல்­வியை இடை­நி­றுத்­தி­யி­ருக்க மாட்­டார். இந்த நிலை தனது ஆட்­சி­யில் குழந்­தை­க­ளுக்கு ஏற்­ப­டக்கூடாது .  முத­லில் உண­வுக்­கா­க­வே­னும் பாட­சா­லை­க­ளுக்­குப் பிள்­ளை­கள் வரட்­டும் என நினைத்­தார்.
அது­போல் வாழைத்­தோட்­டத்­தில்  சேரி வாழ்க்­கையை அனு­ப­வித்­த­தால்­தான் ஒவ்­வொரு குடும்­பத்­துக்குத் தனித்­தனி வீடு­கள் அமைக்­கப்­பட வேண்­டு­மென்று பிரே­ம­தாஸ நினைத்­த­ப­டி­யால்­தான் வீட்­டுத் திட்­டத்­தில் அதீத அக்­கறை காட்­டி­னார். 10 லட்­சம் வீட்­டுத் திட்­டத்தை நிறை­வேற்­றி­னார். 
அதைப் போன்­றதே போரா­ளி­க­ளுக்­கான தனிச் சுடலை என்ற சிந்­த­னை­யும். ராஜன் யாழ்.மாவட்ட அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ள­ரா­ன­தும் தனது எண்­ணத்­தைச் செயற்­ப­டுத்த முனைந்­தார். முத­லில் நிலம் வேண்­டுமே? சிறைச்­சா­லைத் திணைக்­க­ ளத்­துக்கு சொந்­த­மான நிலம் கோப்பாய்– இரா­ச­பா­தை­யில் உள்­ளது என்ற தக­வலை ஒரு போராளி தெரி­வித்­தார். அத­னையே போரா­ளி­க­ளின் சுட­லை­யாக்­கு­வோம் என முடி­வெ­டுத்­தார் மாவட்ட அர­சி­யல் துறைப் பொறுப்­பா­ளர் ராஜன். காணி­யைத் துப்­பு­ர­வாக்­கு­தல் போன்ற பணி­க­ளில் பொ.ஐங்­க­ர­நே­ச­னின் ‘தேனீக்­கள்’ அமைப்­பைச் சேர்ந்த மாண­வர்­க­ளும் ஈடு­பட்­ட­னர். அடுத்து சுட­ லை­யை­யும் வடி­வ­மைக்க வேண்­டும்.
யாழ்.நக­ரப் பொறுப்­பா­ள­ராக இருந்த கமல் மாஸ்­டர் (வீரச்­சா­வ­டைந்­து­விட்­டார்) தனது பணி­ம­னைக்கு முன்­னால் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்த கட்­டட வடி­வ­மைப்­பா­ளர் ஒரு­ வர் இருக்­கி­றார் என்று தெரி­வித்­தார். அவ­ரையே வர­வ­ழைத்து சுட­லைக்­கான வடி­வம் அமைக்­கப்­பட்­டது. வடி­வ­மைப்­பா­ளர் கோரி­ய­படி கந்­தர்­ம­டத்­தி­லி­ருந்த பொறி­யி­ய­லா­ளர் பங்­க­ளிப்­பும் கிடைத்­தது. ஏற்­க­னவே அறி­மு­கம் இல்­லா­த­போ­தும் இரு­வ­ரும் ஆர்­வ­மு­டன் இப்­ப­ணி­யில் ஈடு­பட்­ட­னர். பொற்­பதி வீதி­யி­லுள்ள கட்­ட­டத் தொழி­லா­ளி­க­ளின் பங்­க­ளிப்­பில் நடந்த பணி­க­ளில் உடலை எரிப்­ப­தற்­கான மேடை­யும் அடங்­கி­யி­ருந்­தது.
இதன்­பின்­னர் வீரச்­செய்­தி­ய­வர் ஒரு கிறிஸ்­த­வர். அவரை எப்­படி எரிப்­பது என்ற பிரச்­சினை. அது­வும் தனிச் சுட­லை­யில் ஏன் எரிப்­பான் என்­பது அடுத்த கேள்வி. விவ­கா­ரம் எழுந்­த­தும் ராஜன் அங்கு சென்­றார். ‘‘பொதுச் சுட­லை­யில் கண்ட காவாலி, கழி­ச­றை­க­ளை­யும் எரித்­தி­ருப்­பா­ர்­கள்.
எங்­கள் மகனோ புனி­த­மான மாவீ­ரர். காவா­லி­களை எரித்த இடத்­தில் இவ­ரை­யும் எரிப்­பதை ஏற்­க­மாட்­டார்­கள் தானே?” எனக் கேட்­டார். யதார்த்­தத்­தைப் புரிந்­த­னர் பெற்­றோர். மேடை­யில் இவ­ரது சட­லம் எரிப்­பதை ஒளிப்­ப­ட­மாக எடுத்து தலை­வ­ருக்­குக் காண்­பிக்­கப்­பட்­டது. ‘‘தனி மயா­னம் நல்­ல­து­தான்; நாங்­கள் ஏன் எரிக்க வேண்­டும்? புதைக்­க­லாமே?’’ இந்­தக் கேள்வி  தான் வித்­து­டல்­க­ளைப் புதைக்­கும் வழக்­குக்கு அத்­தி­பா­ரம். அடுத்­த­தாக வீரச்­சா­வெய்­து­ப­வ­ரின் வீட்­டுக்கு சென்­ற­போது அங்­கும் பிரச்­சினை எழுந்­தது. 
ஏன் எங்­கள் பிள்­ளை­யைச் சுட­லை­யில் எரிக்­கா­மல் புதைக்க வேண்­டும்? என்று கேட்­ட­னர். நீங்­கள் மக­னின் நினைவு எழும் போதெல்­லாம் அந்த இடத்துக்­குச் சென்று கும்­பி­ட­லாம். அழ­லாம். பூப்­போ­ட­லாம் என்று விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது.
வர­லாற்­றில் துயி­லு­மில்­லத்­தில் முதன் முத­லாக விதைக்­கப்­பட்­ட­வர் என்ற வர­லாறு சோலை என்ற மாவீ­ர­ருக்­குக் கிடைத்­தது. மாவீ­ரரை விதைக்­கு­முன் வாசிக்­கப்­ப­டும் வாச­கங்­க­ளை­யும் (மாவீ­ரர் பெயர் தவிர்த்­தது )புதுவை அண்­ணாவே எழு­தி­னார்.
மாவீ­ரர் பதி­வு­கள்
இந்­தக்­கா­லப் பகு­தி­க­ளிலே மாவீ­ரர் பணி­மனை முழு அள­வில் செயற்­பட ஆரம்­பித்­தது. இந்­தி­யப் படை­யி­ன­ரின் வரு­கைக்கு முன்­னர் மாவீ­ரர்­க­ளின் விப­ரம் பேணப்­பட்­டி­ருந்­தது.  எனி­னும் இந்­தி­யப் படை­யி­ன­ரின் காலத்­தில் புதி­தாக இணைந்து கொண்­டோர் பற்­றிய விவ­ரம் தலை­மைக்­குத் தெரிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை. அந்­தக் காலத்­தி­லேயே இணைந்து அக்­கா­லப் பகு­தி­யி­லேயே சிலர் மாவீ­ர­ரா­கி­யும் இருந்­த­னர். எனவே இவ்­வா­றான விட­யங்­க­ளைத் தெரி­விக்­கும்­படி பகி­ரங்க அறி­விப்பு விடுக்­கப்­பட்­டது. இதற்கு பொன்.பூலோ­க­சிங்­கம் என்ற சட்­டத்­த­ர­ணி­யின் பங்­க­ளிப்பு காத்­தி­ர­மா­ன­தாக இருந்­தது.  
அவர் நாள்­தோ­றும் தினக்­கு­றிப்பு (டயரி) எழு­தும் பழக்­க­மு­டை­ய­வர். பத்­தி­ரி­கை­க­ளில் வரும் மாவீ­ரர் இழப்பு,  பொது­மக்­கள் இழப்பு (படையினர் மற்­றும் இன­வா­தி­க­ளால் ஏற்­ப­டுத்­தப்­பட்­டவை) குறித்து அவர் எழு­திய குறிப்­பு­களே மாவீ­ரர் பட்­டி­யலை கணி­ச­மான அளவு சரி­யாக்க உத­விற்று.  தாவ­டி­யில் தும்­புத் தொழிற்­சா­லை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட விமா­னக் குண்­டு­ வீச்­சில்  லூக்­காஸ் என்­ப­வர் மாவீ­ர­ரா­னார். ஆனால் இந்த மாவீ­ரர் பற்­றிய விவ­ரம் எவ­ருக்­கும் தெரி­யாது. நாவ­லப்­பிட்­டி­யைச் சேர்ந்­த­வர் என்று மட்­டுமே தெரி­யும்.
1990 இல் ஈழ­நா­தம் நாளி­தழ் ஆரம்­பிக்­கப்­பட்­ட­போது வீர­வ­ணக்க விளம்­ப­ரங்­கள் வெளி­வந்­தன. 
தங்­கள் பிள்­ளை­களை, உற­வு­களை, நட்­பு­களை நினை­வு­கூர வச­தி­யான சில­ரால் மட்­டுமே முடிந்­தது. அதே­சம்­ப­வங்­க­ளில் வீரச்­சா­வெய்­திய ஏனைய மாவீ­ரர்­களை எவ­ரும் நினை­வு­கூ­ர­வில்லை. இத­னைக் கண்­ணுற்ற ஒரு போராளி அப்­போ­தைய அர­சி­யல் தலை­மையை வகித்த மாத்­த­யா­வி­டம் இவ்­வி­ட­யம் பற்­றிக் குறிப்­பிட்­டார். நாளாந்­தம் அதே நாளில் வீரச்­சா­வெய்­தி­யோர் விவ­ரம் வெளி­யி­டப்­பட வேண்­டும் என்ற ஆதங்­கத்­தைத் தெரி­வித்­தார். வரு­டம் 365 நாளில் மட்­டு­மல்ல 4 வரு­டங்­க­ளுக்கு ஒரு­மு­றை­வ­ரும் (லீப்­வ­ரு­டம் ) பெப்­ர­வரி 29 இல் கூட  மாவீ­ரர் விவ­ரம் உண்டு என்­ப­தும் தெரி­ய­வந்­தது. 
இதற்­கென இயங்­கி­வந்த பணி­மனை இரண்டு மாவீ­ரர்­க­ளின்  தந்­தை­யான பொன்.தியா­கம் அப்­பா­வின் பொறுப்­பில் ஆரம்­பிக்­கப்­பட்டு மாவீ­ரர் பணி­ம­னை­யு­டன் இணைக்­கப்­பட்­டது. (பின்­னர் இவர் மூன்று மாவீ­ரர்­க­ளின் தந்­தை­யா­னார். பள்­ள­ம­டு­வில் இவ­ரது மக­ளும் வீரச்­சா­வ­டைந்­தார்) பெய­ரில், திக­தி­யில், முக­வ­ரி­யில் என பல்­வேறு தவ­று­க­ளு­டன் இருந்த பட்­டி­யல்­கள் தியா­கம் அப்­பா­வின் முயற்­சி­யால் திருத்­தப்­பட்­டன. 
மாவீ­ரர் நிகழ்­வு­கள் பற்­றிய சுற்­று­நி­ரு­பங்­கள் இந்­தப் பணி­ம­னை­யி­னால் விடுக்­கப்­பட்­டன. இந்­தப்­ப­ணி­மனை கோரும் விவ­ரங்­களை உட­ன­டி­யாக வழங்க வேண்­டும் என பிராந்­தி­யத் தள­ப­தி­க­ளுக்­கும் தலை­வ­ரும் உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்­தார். எந்­தெந்­தத் துயி­லு­மில்­லங்­க­ளில் யார் ,யார் விதைக்­கப்­பட்­டார்­கள், வித்­து­டல் கிடைக்­காத யார் யாருக்கு எங்­கெங்கு நினை­வுக்­கல் உள்­ளன போன்ற முழு விவ­ரங்­க­ளும் இந்­தப்­ப­ணி­ம­னை­யில் இருந்­தது.இதன் மூலம் மிக­வும் காத்­தி­ர­மான பணியை செய்­து­வந்­தார் பொன் தியா­கம் அப்பா.
‘‘தாயகக் கனவுடன்..”
1992 ஆம் ஆண்­டுக்­கான மாவீ­ரர் நாள் ஏற்­பா­டு­கள் குறித்த ஆலோ­ச­னைக் கூட்­டம் தலை­வர் தலை­மை­யில் நடந்­தது. அப்­போது மக­ளிர் அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ள­ராக விளங்­கிய ஜெயா ஒரு  ஆலோ­ச­னையை முன்­வைத்­தார். மாவீ­ரர் பெற்­றோ­ரும் போரா­ளி­க­ளும் இணைந்து பாடக் கூடிய ஒரு பாடல் உரு­வாக்­கப்­பட வேண்­டும் என்­றார். உடனே தலை­வர் புது­வை­ யண்­ணா­ வைப் பார்க்க கையைப் பொத்தி பெரு­வி­ரலை உயர்த்­திக் காட்­டி­னார் புதுவையண்ணா.
ஈழ­நா­தம், விடு­த­லைப் புலி­கள், சுதந்­தி­ரப் பறவை வெளி­வந்த மாவீ­ரர்­கள் பற்­றிய கட்­டு­ரை­களை தனி­யான நூல்­க­ளாக வெளி­யிட வேண்­டும் என்ற அறி­வ­னின் யோச­னை­யும் ஏற்­றுக் கொள்­ளப்­பட்­டது. துயி­லு­ மில்­லத்­துக்கு வரு­வோர் தமது பிள்­ளை­க­ளின் நினை­வாக வீடு­க­ளில் நாட்­டு­வ­தற்கு அவர்­க­ளின் கல்­ல­றை­கள் மற்­றும் நினை­வுக் கற்­க­ளுக்கு முன்­னால் தென்னை போன்ற பயன்­தரு மரங்­களை வைக்க வேண்­டும் என்று பொருண்­மிய மேம்­பாட்டு நிறு­வ­னத்­தி­ன­ரால் வைக்­கப்­பட்ட யோச­னை­யும் ஏற்­கப்­பட்­டது. இந்த யோசனை இன்று பல்­வேறு வகை­யி­லும் பின்­பற்­றப்­ப­டு­வது ஆரோக்­கி­ய­மான விட­யம்.
ஜெயா­வின் கருத்தை உட­ன­டி­யாக செய­லாக்­கி­னார் புது­வை­யண்ணா. அது­தான் ‘‘தாய­கக் கன­வு­டன்’’ என்று ஆரம்­பிக்­கும் மாவீ­ரர் பாடல். மன­தைப் பிழி­யும்  இப்­பா­டல் இன்­று­வரை மாவீ­ரர் குடும்­பத்­தி­னர், முன்­னாள் போரா­ளி­கள்­மற்­றும் தமிழ் மக்­கள் மன­தில் நிலைத்து நிற்­கி­றது. கண்­ணன் இசை­ய­மைக்க வர்­ண­ரா­மேஸ்­வ­ரன் குர­லில் ஒலித்த பாடல் இது. கோப்­பாய் துயி­லு­மில்­லத்­தில் தனக்­குப் பக்­கத்­தில் நின்று நேரில் அத­னைப் பாட­வேண்­டும் என்று அப்­போ­தைய அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ளர் தமிழ்ச் செல்­வன் வர்­ண­ரா­மேஸ்­வ­ர­னின் வேண்­டிக் கொண்­டார். ஒலி­பெ­ருக்­கி­யி­லும் இந்­தப்­பா­டல் இசை­யு­டன் ஒலித்­தது.
முதன்­மு­த­லாக இவ்­வ­ரி­க­ளைக் கேட்ட மாவீ­ரர் குடும்­பத்­தி­னர் கதறி அழு­த­னர். இப்­பா­ட­லின் ஒலி­நா­டாவை ஒரு போரா­ளி­யி­டம் (கரும்­ப­றவை) வழங்­கிய புது­வை­யண்ணை முதன் வரி­க­ளைக் கேட்­கும்­போது உங்­க­ளுக்கு நினை­வில் வரும் சம்­ப­வங்­க­ளை­யும் கருத்­துக்­க­ளை­யும் எழு­தித் தாருங்­கள் என்­றார். அந்த விட­யம் வெளிச்­சம் இத­ழில் வெளி­வந்­தது. ஒரு மாவீ­ர­னின் தாயா­ரான மல­ரன்­னை­யும் அன்­றைய மாவீ­ரர் நாள் குறித்து கட்­டுரை எழு­தி­யி­ருந்­தார்.
மாறிய நேரம்
1992 மாவீரர் நாள் பொதுச்­சு­டரை தமிழ்ச்­செல்­வன் ஏற்­றி­னார்.1991 இல்  இதனை மாத்­தயா ஏற்­றி­யி­ருந்­தார். மாவீ­ரர் பாட­லில் வரும் ‘‘நள்­ளிரா வேளை­யில் நெய் விளக்­கேற்­றியே நாமுமை வணங்­கு­கி­றோம்’’ என்ற வரி ‘‘வல்­லமை தாரு­மென்­றுங்­க­ளின் வாச­லில் வந்­துமே வணங்­கு­கின்­றோம்’’ எனப் பின்­னா­ளில் மாற்­றப்­பட்­டது.
 ஏனெ­னில் முன்­னர் நள்­ளி­ர­வி­லேயே மாவீ­ரர் நாள் நினைவுகூரப்­பட்­டது. பின்­னரே தற்­போதுள்ள மாலை 6.05 க்கு மாவீ­ரர் சுடர் ஏற்­றும் முறை வழக்­கத்­துக்கு வந்­தது . தற்­போ­தைய நேரமே முதல் மாவீ­ர­ரான சங்­கர் வீரச்­சா­வெய்­திய கணம்,
2009 மே 15 ஆம் நாள் வரை 35 ஆயி­ரம் அள­வில் மாவீ­ரர்­க­ளின்  விவ­ரம் கிடைத்­தன. இதன் பின்­னர் தர­வு­க­ளைப் பேணவோ வழங்­கவோ இய­லக் கூடிய நிலை­யில் சூழல் அமை­ய­வில்லை.


கம்போடியா நாட்டின் சியாம் ரீப் நகரத்துக்கு அருகே பான்டிஸ்ரீ என்ற சிவாலயம் அமைந்துள்ளதுதற்பொழுது இது பந்தியாய் சிரே என அழைக்கப்படுகின்றதுஅங்கோர்வாட் ஸ்ரீமஹாவிஷ்ணு கோயிலிருந்து 20 கி.மீதூரத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.


காரைக்கால் அம்மையாரின் புகழ் இந்தியா மட்டுமின்றிகடல் கடந்தும் பரவியுள்ளது என்பது பல ஆய்வுகளின் உண்மை. 9ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பேரரசர்கள்தங்களது இறைப்பணியை இந்தியா மட்டுமின்றிகடல் கடந்துஅதாவதுசோழபேரரசு எங்கெல்லாம் ஆட்சி அமைத்ததோ அங்கெல்லாம் காரைக்கால் அம்மையாரின் சிந்தாந்த நெறிகளை பரப்பிசிவவழிப்பாட்டு முறைகளை பிரபலப்படுத்திகாரைக்கால் அம்மையாரின் புகழ் என்றும் அழியாதிருக்கபாறைகளில் அம்மையாரின் சிற்பங்களை வடித்து அம்மையாரின் புகழை பரப்பியுள்ளனர்

குறிப்பாக சொல்லப்போனால்தெற்கு கம்போடியாவின் டாக்கியோ என்ற இடத்தில் சிற்றரசர்களால் உருவாக்கப்பட்ட ஆலயங்களில் சிவபெருமான் வலது புறத்தில் பிரம்மன்இடது புறத்தில் காரைக்கால் அம்மையார் இசைக்கலைஞர்களுடன் அமர்ந்திருப்பது போல் சிலைகள் அமைந்துள்ளது.

கம்போடியா பாட்டி என்ற பகுதியில் போனம் தீமாடோ என்ற மலைப்பகுதியில் உள்ள சிவாலயங்களில் காரைக்கால் அம்மையார் உருவச்சிலைகள்சிவபெருமானோடு இணைந்து காட்சியளிப்பது போல செதுக்கப்பட்டுள்ளதுஅதுமட்டுமல்லாதுஇளம்வயதினிலேயே காரைக்கால் அம்மையார் சிவபெருமான் மீது கொண்ட பற்றின் காரணமாக உலக வாழ்க்கையை துறந்துஉருவத்தை தொலைத்துசிறப்பு மிகு தவத்தினால்காரைக்கால் அம்மையார் இறைவனின் நிழலில் நிலைத்து நிற்கிறார் என கம்போடியா மக்கள் பெருமையுடன் சொல்லி வணங்கி வருவதை இன்றும் வரலாற்று பதிவுகளில் உள்ளது

இதேபோல்தாய்லாந்திலும் அம்மையாரின் புகழ் கடல் கடந்து பரவியுள்ளதுஅதாவது 11ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை உருவாக்கப்பட்ட தாய்லாந்து நாட்டின் நினைவு சின்னமாக உள்ள ஆலயங்களில் நாட்டிய கோலத்திலான சிவபெருமான் சிலை அருகே தோலுரித்த நிலையில் பெண் உருவம் காணப்படுவதாகவும்அது காரைக்கால் அம்மையாரே என அந்நாட்டின் துறவிகள் போற்றி வணங்கிவருகின்றனர்.

தாய்லாந்தில் உள்ள 2ம் சூரியவர்ம அரசன் அங்கூரில் அமைத்த ஆலயங்களின் நுழைவு வாயிலில்காரைக்கால் அம்மையார் சிவபெருமானை புகழ்ந்து பாடிய பாடல்கள் கல்வெட்டில் செதுக்கிவைத்துள்ளனர்


கம்போடியா மற்றும் தாய்லாந்து மக்கள் இணைந்து உருவாக்கிய ஹேமர் கலையை மையமாகக்கொண்டு பல சிவாலயங்களும்நடராஜர்அருகில் காரைக்கால் அம்மையாரும் அமர்ந்திருப்பது போன்ற கல்வெட்டுகள் பல உள்ளதுஇப்படி மலேசியாஇலங்கைபர்மா தாய்லாந்துகம்போடியா உள்ளிட்ட பல நாடுகளில் காரைக்கால் அம்மையார் புகழ் பரவியுள்ளது என வராலாற்று சிந்தனையாளர்கள்ஆன்மீக ஆராய்ச்சியாளர்கள் பலர் தங்கள் கருத்துக்களை இன்றும் வெளியிட்டு நம்மை வியப்பில் ஆழ்த்திவருகின்றனர்.

வரலாற்று புகழ்மிக்க காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றையும்இறைபக்தி குறித்தும்சைவ சிந்தாந்த நெறிகள் குறித்தும்இன்றைய இளம் தலைமுறையினரும் அவசியம் தெரிந்துவைத்திருக்கும் வகையில்காரைக்கால் அம்மையார் கோயில் சார்பில் ஆண்டுதோறும் ஒரு மாதக்காலம் காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா நடத்தப்படுகிறது


இந்தவேளையில்ஸ்ரீ கயிலாசநாதர் கோயில் புதிய அறங்காவலர் குழுகாரைக்காலில் உள்ள தமிழ்ச்சங்கங்கள்சமூக அமைப்புகள்அரசியல் தலைவர்கள் காரைக்கால் அம்மையாரின் புகழை உலகறிய செய்ய அவரின் தமிழ் நூல்களையும்வாழ்க்கை வரலாற்றையும்உலகமெங்கும் உள்ள அவரது கலைபொக்கிஷங்களையும் ஒன்றிணைத்துஉலகறிய செய்யவேண்டும்குறிப்பாக சொல்லப் போனால்காரைக்கால் அம்மையார் கோவில் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்று பொக்கிஷங்களை உலக நாடுகள்தோறும் திரட்டி சிறப்பு மியூசியம் அமைக்க முன்வரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.



எங்கள் உயிர்காத்து உயர்வடைந்த அத்தனை தமிழினத்தின் தோழர்களே!!
 உங்களுக்காக என்றும் இது அனையா விழக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழ்ப்பாணம் இளவாலை தாய், மகளை வாளால் வெட்டி நபரொருவர் தற்கொலை!

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாய் மற்றும் மகள் மீது வீடுபுகுந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு இளைஞரொருவர் தற்கொ...