எல்லாரும் அட்டுகுட்டியை மண் குடத்துக்குள்ளாலை எடுக்க ட்ரை பண்ணியும் எடுக்கேலாமல் போய் சின்னதம்பியரிட்டை போய் ஐடியா கேட்டினம். சின்னத்தம்பியர் எப்பவும் யானையிலை நேரை ஸ்பொட்டுக்கு போய் தான் ஐடியாக்களை குடுக்கிறது வழக்கம் . சின்னதம்பியரும் யானையிலை பிரச்னை நடந்த இடத்துக்கு போனார் . அவற்ரை கெட்டகாலம் அவர் வந்த யானை வீட்டு மதிலுக்குள்ளாலை போகேலாமல் போச்சுது .
உடனை சின்னதம்பியர் கீழை இருந்த ஆக்களை பாத்து மதிலை உடைக்க சொல்லி சொன்னார் . இப்ப அவற்றை யானை வலு கிளீனாய் ஆட்டுக்குட்டி பிரச்னை பட்ட இடத்துக்கு போச்சுது. அங்கை ஆட்டுக்குட்டி மண் குடத்துக்கை தலையை குடுத்த வேதனையிலை கத்திது . சனம் சினதம்பியரை என்ன செய்யலாம் எண்டு ஐடியா கேட்டுதுகள் . அப்ப வலு விலாசமாய் சினதம்பியர் சொன்னார் , " ஆட்டுக்குடியின்ரை தலையை வெட்டுங்கோ " எண்டு . சனமும் வெட்ட மண் குடமும் அட்டுகுட்டியின்ரை தலையும் தரையிலை விழுந்திது . ஐடியா கேட்ட சனம் குழம்பீட்டுதுகள். " இப்ப மண்குடத்தை எப்பிடி சின்னத்தம்பியர் குட்டியின்ரை தலையிலை இருந்து எடுக்கிறது "?? எண்டு சனம் கேக்க சின்னதம்பியர் பேந்தும் எடுப்புசாய்ப்பாய் சொன்னார் , " மண் குடத்தை உடைச்சு விடுங்கோடாப்பா " எண்டு . இது எப்பிடி இருக்கு நான் படிச்சு கொண்டிருக்கிற சோபா சக்தியின் " பஞ்சத்துக்கு புலி " எண்ட கதையிலை வந்த ஒரு பகுதி . அதை என்ரை வசன நடயிலை மாத்தியிருக்கிறன் . கோமகன் பாரதியாரின் கடைசி நாள்கள்.
|
வாய்ப் போர் ஓர் ஊரில் ஒரு பெண் இருந்தாள். அவளின் பெயர் முத்துலெட்சுமி. அவள் ஒரு வீட்டில் வசித்து வந்தாள். அவள் இரண்டு குழந்தைகளை வளர்த்து வந்தாள். முதாலாவது மகன். இரண்டாவது மகள். மகனின் பெயர் ராமு. மகளின் பெயர் பிரியா. முத்துலெட்சுமி தன் பிள்ளைகளை அடித்தும் திட்டிக் கொண்டும் தான் இருப்பாள். அவர்களும் பயங்கர சேட்டைக்காரர்கள். அந்த இரு குழந்தைகளும் முத்துலெட்சுமியின் தங்கை குழந்தைகள். தங்கை இறந்து விட்டதால் தங்கையின் குழந்தைகளை முத்து லெட்சுமி வளர்க்கிறாள். முத்துலெட்சுமிக்குக் குழந்தை இல்லை. கணவர் இறந்து விட்டார். காலையிலிருந்து இரவு தூங்கும் வரை முத்துலெட்சுமி அந்த இரு குழந்தைகளையும் அடித்தும், திட்டிக் கொண்டும் இருப்பார். அவர்களைத்தான் என்றில்லை, முத்துலெட்சுமி பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கூட எப்போதும் சண்டையிட்டுக் கொண்டேதான் இருப்பார். தண்ணீர் பிடிக்கப்போகும்போது தான் கடுமையாகச் சண்டையிடுவார். அதனால் மற்ற வீட்டுக்காரர்களுக்கு முத்துலெட்சுமியைச் சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் முத்துலெட்சுமி வாயைத் திறந்தாலே அந்தத் தெருவே அலறும். முத்துலெட்சுமியின் புகழும் இவ்வாறே பரவத் தொடங்கியது. சில நாட்கள் கழிந்துவிட்டன. அப்போது முத்துலெட்சுமி வசிக்கும் நாட்டுக்கும் பக்கத்து நாட்டுக்கும் சண்டை வந்தது. ஆனால் வழக்கமான முறையில் ஆயுதங்களால் போர் செய்து மனிதர்கள் செத்துப்போவதையும் இருநாட்டு அரசர்களும் விரும்பவில்லை. எதையும் பேசித் தீர்த்துக் கொள்வது போல, இருநாட்டுப் பக்கமிருந்தும் மிக அதிகமாகப் பேசியே சண்டை போட்டுக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தனர். இரு நாட்டு அரசர்களும், தன் நாட்டில் யார் காது கிழியப் பேசிக் கொண்டே இருப்பாரோ அவர் அரண்மனைக்கு வருமாறு அறிவித்தனர். ஊர் முழுக்க முரசு அறைந்து இதனை அறிவித்தனர். இதைக் கேள்விப்பட்டுத் தன் தேசபக்தி மேலிட முத்துலெட்சுமி முதலில் போய் நின்றாள். கடும் போட்டி. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடிவிட்டனர். அரசர் ஒவ்வொருவரையும் பேசவிட்டுத் தேர்ந்தெடுத்தார். இரு நாடுகளிலுமே பயங்கரமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தனர். பின் இருநாட்டு மன்னர்களும் தேர்ந்தெடுத்து முடித்தனர். முத்துலெட்சுமியின் பேச்சைக் கேட்டு அரசர் ஆச்சரியப்பட்டு, முத்துலெட்சுமியைப் படைத்தளபதி ஆக்கினார். அதாவது பேச்சுப் படைத்தளபதி. போர் ஆரம்பித்தது. எல்லோரும் வாய் கிழிய, காது கிழியப் பேசினர். என்றாலும் நம்ம முத்துலெட்சுமியை யாரும் மிஞ்ச முடியுமா? முத்து லெட்சுமியின் பேச்சைக் கேட்ட எதிரி நாட்டுக்காரர்கள் அலறி அடித்து ஓடினர். கடைசியில் முத்து லெட்சுமியின் நாடு வெற்றி பெற்றது. பின் அரசன் முத்து லெட்சுமியைக் கூப்பிட்டுப் பாராட்டி ஆயிரம் பொற்காசுகளை வழங்கினார். இது அனைத்தும் ஒரு சிறுமி தன் அப்பாவிடம் கூறிக் கொண்டிருந்தாள். தினமும் பக்கத்து வீட்டில் சண்டை போடும் அந்தப் பெண்ணை என்ன பண்ணலாம் என்று அந்தச் சிறுமி ஒரு கதை சொன்னாள். அதுதான் இந்தக் கதை. அந்தச் சிறுமி வேறு யாரும் இல்லை நான் தான். கலைமதி, எட்டாம் வகுப்பு (தமிழ்வழி) ஓ.சி.பி.எம்.மேல் நிலைப் பள்ளி, மதுரை | |
மஞ்சள் வெயில் - யூமா.வாசுகிக்கு ஒரு கடிதம்நலமா? தயவுசெய்து இந்த நலம் விசாரிப்பை மிக மிக மிக எளிதான சம்பிரதாயமான நலம் விசாரிப்பாகக் கருதிவிட வேண்டாம். பொழுது சாய்ந்த கடற்கரையில் அவ்வப்போது நம் கால்களை வருடிச் செல்லும் அலைகளுக்கு மத்தியில் நீங்களும் நானும் நெடுநேரம் கதை பேசிக் கொண்டிருந்தோமே, அப்போது நிகழ்ந்த நட்பின்பால், பாசத்தால் ஆன நலம் விசாரிப்பாக எடுத்துக் கொள்ளுங்கள். யூமா.வாசுகி என்ற உங்கள் பெயரைக் கேள்விப்பட்டபோது, சுஜாதாவை எப்படி ஒரு பெண்ணாக யூகித்திருந்தேனோ அப்படியே உங்களையும் நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் எழுதியிருக்கும் புத்தகத்தின் பின் அட்டையில் ஒரு ஆண்மகனின் படத்தைப் பார்த்ததும் லேசான அதிர்ச்சி. அந்த புகைப்படத்தில் உங்களை எதிர்பார்க்கவில்லை. அதுவும் ஒரு ஆணாக. சென்னையின் வெயில் நிறைந்த ஒரு காலைப் பொழுதில் அரசனின் அறையில் இருந்து கிளம்பும் போதுதான் தற்செயலாக அது நிகழ்ந்தது. நான் தற்செயலை பெரிதும் நம்புபவன். சமயங்களில் தற்செயலினுள் இறைவன் ஒளிந்து கொண்டுள்ளாரோ என்றெல்லாம் கூட யோசிப்பேன். அன்றைக்கு அரசனின் அறைக்கு நான் வண்டியில் சென்றிருக்கவில்லை. அங்கிருந்து மேடவாக்கம் செல்ல எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகும். அந்த நூற்றி இருபது நிமிடங்களையும் வெறுமனே சென்னை மாநகர நெரிசலை வேடிக்கைப் பார்த்தபடி கடப்பதில் உசிதம் இல்லை. அரசனின் அலமாரியில் எதாவாது புத்தகம் சிக்காதா என்று நெடுநேரம் தேடிக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட மூன்று நான்கு முறை அலசியிருப்பேன், என்னுடைய அப்போதைய மனநிலைக்குத் தகுந்த எந்தவொரு புத்தகத்தையும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இங்கு தான் தற்செயல் உள்ளே நுழைகிறது. மஞ்சள் வெயில் என் கையில் சிக்கியது. அதுவரையிலும் பேசாமல் இருந்த அரசனும் கூட 'தலைவரே செம புக்கு, அவசியம் படிங்க' என்றார். மறந்தே போனேன். கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் அவர் இந்தப் புத்தகத்தை வாங்கியபோது நான் உடன் இருந்தேன். அவர் கூறிய வார்த்தைகள் நன்றாக நினைவில் இருக்கின்றன 'இந்த புக்கு எப்படியோ என் கைக்கு வந்தது. படிச்சிட்டு குடுத்துட்டேன். இதெல்லாம் பாதுகாக்க வேண்டிய ரகம் தலைவரே' என்றபடி வாங்கினார். அப்போது கூட அவரிடம் இருந்து பிடுங்கிக் கொள்ளவில்லை. அல்லது வேறொரு பொழுதில் அவரோ இல்லை யாரேனுமோ என்னிடம் திணித்திருந்தாலும் கூட வாங்கியிருக்க மாட்டேன். காரணம் எனக்கான இவ்வருட வாசிப்புப் பட்டியல் நிரம்பி வழிகிறது. அதில் புதிய புத்தகங்களுக்கு நிச்சயமாய் இடமில்லை. அதனால் என்னளவில் மஞ்சள் வெயில் தற்செயலே. அந்த தற்செயலுக்கு அநேக நமஸ்காரங்கள். பேருந்தில் நமக்காக ஒரு இடம் கிடைத்த போதுதான் மெல்ல என் தோள்களில் கைபோட்டபடி கதை சொல்லத் தொடங்கினீர்கள். சில இடங்களில் நீங்கள் கூறுவது கதையா இல்லை கவிதையா என புரியாமல் விழித்தேன். ஒருவேளை கவிதையைத்தான் கதை போல் மாற்றிவிட்டீர்களோ என்ற ஐயம் கூட எழுந்தது. கேட்கலாம் என்றால் நீங்கள் கதை சொல்வதில் மும்மரமாய் இருந்தீர்கள். நானும் கேட்கும் ஆர்வத்தில் எல்லாவற்றையும் மறந்தேன். உங்கள் அருகில் அமர்ந்தபடி உங்களையே பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பூனைக்குட்டியாய் என்னை பாவித்துக் கொண்டேன். பேருந்து நகர நகர கதையும் நகர்ந்தது. உண்மையைச் சொல்வதென்றால் மஞ்சள் வெயிலின் ஆரம்பப் பக்கங்கள் எனக்கு பிடிக்கவில்லை. மிக முக்கியமாக உங்கள் கதையின் நாயகனான பிரபாகரை எனக்குப் பிடிக்கவில்லை. எனக்குத் தெரிந்த சில பிரபாகர்கள் இருக்கிறார்கள். மனதுக்கு மிக நெருக்கமானவர்கள், அவர்களோடு ஒப்பிடும் போது இந்த பிரபா ஒரு கோழை. வாழத்தெரியாதவன். ஒரு பெண்ணிடம் பேசத் தெரியாதவன். தன் காதலை வெளிபடுத்த தைரியமில்லாதவன். எதற்கெடுத்தாலும் பயந்து சாகிறவன். அவனிடம் இருக்கும் அந்த அதீத கற்பனை என்னை மூச்சு முட்டச் செய்கிறது. எனக்கே இப்படியென்றால் பிரபாவுக்கு எப்படி இருக்கும். ஆனால் பிரபா ஒரு தேர்ந்த எழுத்தாளன். பிரபாவின் வித்து நீங்கள் என்பதால் உங்களை சிலாகித்தால் என்ன பிரபாவைக் கொண்டாடினால் என்ன. பிரபா ஒரு தேர்ந்த எழுத்தாளன். இயல்பில் அவன் ஓவியன் என்றாலும் என்னைப் பொறுத்தவரை அவன் ஒரு தேர்ந்த எழுத்தாளன். தனக்கு ஏற்படும் உணர்ச்சிகளை இம்மி பிசகாமல் என்னுள் கடத்தியவன். அந்த ஒரே காரணத்திற்காக மட்டுமே பிரபா கூறிய கதையை கேட்கத் தொடங்கியிருந்தேன். பிரபாவுக்கு இன்னொன்றும் தெரிந்திருக்கிறது. அது கடிதம் எழுதுவது. அதனால் தானோ என்னவோ ஜீவிதாவின் மீது தான் கொண்ட பெருங்காதலை முழுக்க முழுக்க கடிதமாகவே எழுதிவிட்டான். அந்தக் கடிதம் ஜீவிதா கைகளில் கிடைத்ததா இல்லையா என்பது இல்லை என் கவலை. இப்போது பிரபா எப்படி இருக்கிறான். தொடர்ந்து ஓவியம் வரைகிறானா. தன்னை மறந்து போன தன்னுடைய ஜீவிதாவை மறந்துவிட்டு அவளுக்கு எழுதிய கடிதத்தைத் எரித்துவிட்டு வேறு துணையைத் தேடிக் கொண்டானா. இல்லை வழக்கம் போல கடற்கரை மணலில் புகையை ஊதிக் கொண்டு கடலோடு பேசிக்கொண்டு தனிமையில் போதையில் உழல்கிறானா. சில சமயங்களில் பிரபாகர் மீது பொறாமை வருகிறது. அவன் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் அந்த வார்த்தைகளின் பின் ஒளிந்திருக்கும் அதி அற்புதமான உவமைகள் ஒவ்வொன்றும் என்னை பொறாமை கொள்ளச் செய்கின்றன. எங்கிருந்து பிடிக்கிறான் இந்த உவமைகளை. சில சமயங்களில் அந்த உவமைகள் குமட்டலை ஏற்படுத்தினாலும் பல தருணங்களில் அந்த அதீத கற்பனையின் புள்ளிகளில் நானும் பிரபாவாகிப் போகிறேன். நான் பிரபாவகிப் போவதால் ஜீவிதாவின் வெறுமையை, அவள் இல்லாததால் ஏற்படும் தனிமையை உணர்கிறேன். இப்பொது பிரபா மீதான கோபம் குறைந்து என்னுடைய வேகம் முழுவதும் ஜீவிதாவை நோக்கிச் செலுத்தப்படுகிறது. பிரபா ஜீவிதாவுக்கு தொலைபேசச் செல்லும் தருணங்கள் அத்தனையும் ஒரு தேர்ந்த துப்பறிவாளன் கொலையாளியை கண்டுபிடித்தானா இல்லையா என்ற கோணத்திலேயே யோசிக்கச் சொல்கின்றன. என்னையும் அறியாமல் என்னுள் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. ஜீவிதா தைரியசாலி. பிரபாவை எளிதாக எதிர்கொள்வாள். ஆனால் இந்த பிரபா. சுத்தக் கோழை. ஐயோ எப்படியாவது தைரியத்தை வரவழைத்து ஜீவிதாவோடு பேசிவிடுடா என்று நாலு அறை அறைய வேண்டும் போல் இருக்கிறது. அவன் கையில் இருக்கும் தொலைபேசி ரிசிவரைப் பிடுங்கி தலையிலேயே அடிக்க வேண்டும் போல் இருக்கிறது. ஆனாலும் எப்போதும் நானும் பிரபாவின் பிரதிநியாகவே இருக்க விரும்புகிறேன். ஜீவிதாவோடு சேர்ந்துகொண்டு பிரபாவை காயப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. ஏனென்றால் பிரபா ஒரு அப்பாவி. சந்தர்ப்பங்களின் பின்னால் ஒளிந்துகொள்ளாத் தெரியாமல் எண்ணங்களின் மூலம் பகடையாடப்படுபவன். ஆம் பகடையாடப்படுபவன். என்ன தன்னையே பகடையாக்கிக் கொண்டு முன்னும் பின்னும் உருண்டு கொண்டிருக்கிறான். எல்லாம் ஜீவிதாவுக்காக. கருணையே இல்லாத,வேண்டாம் நான் ஜீவிதாவை திட்டவில்லை. அவளைத் திட்டுவது பிரபாவுக்குப் பிடிக்காது.
நல்லவேளை வாட்ச்மேன் பாலகிருஷ்ணன் பிரபாவுக்கு துணையாக இருக்கிறாரே என்ற ஆறுதல் பெறுத்த நிம்மதி தருகிறது. அவர் அவனோடு இல்லாவிட்டால் நான் இங்கு நிம்மதியாக இருக்க முடியாது. பிரபாவுக்கு உதவி செய்ய எல்லாருமே தயாராக இருக்கிறார்கள். டேனியல் மகேந்திரன் சந்திரன் என எல்லாருமே இந்த பிரபாவைத் தவிர. தன்னைப் பற்றி எதையுமே வாட்ச்மேனிடம் பிரபா பகிர்ந்துகொள்ளவில்லை என்றாலும் கூட பிரபாவுக்காக ஓடி ஓடி உதவுகிறார். அந்த நல்ல மனிதன் எப்படி இருக்கிறார் யூமா. கேட்டதாகச் சொல்லுங்கள். அந்த எஸ்டிடி பூத் பெண், பிரவுசிங் செண்டர் சிறுவன் எல்லாரையும். உங்களிடம் நிறைய பேச வேண்டும் யூமா. இல்லை நீங்கள் பேசி நான் கேட்க வேண்டும். பிரபாவையும் ஜீவிதாவையும் வாட்ச்மேனையும் மறக்கமுடியாதபடி ஒரு கதை கூறினீர்களே. யாராலும் எழுத முடியாத கதை அது. அதைப் போல வேறொரு கதை நீங்கள் கூறி நான் கேட்க வேண்டும் யூமா. அதுவரைக்கும் மீண்டும் ஒருமுறை பிரபாவின் கடிதத்தைப் படித்துவிட்டு வருகிறேன். அன்புடன் சீனு |
பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்இந்தப் புத்தகத்தை வாங்கியதற்கான மிக முக்கியமான காரணமாக நான் நினைப்பது ஜெயமோகன் என்பதையும் கடந்து புத்தகத்தின் தலைப்பு தான். ஆன்மீகக் கதைகள், சாமிக் கதைகளை விடவும் பேய்க்கதைகளின் மீது இயல்பாகவே நமக்கொரு ஈர்ப்பு இருக்கிறது. ஒன்று 'பேய் இருக்கிறதோ' என்ற பயமாக இருக்கலாம். இல்லையேல் 'பேய் இருந்துவிடுமோ' என்ற அச்சமாகவும் இருக்கலாம்.ஆனால் பேய் என்றால் உள்ளுக்குள் எங்கோ ஓர் மூலையில் நம்மையும் அறியாமல் ஏதோ ஒன்று எட்டி உதைக்கத் தான் செய்கிறது. அதுவும் பனி சூழ்ந்த நள்ளிரவுகளில் என்றால் கேட்கவே வேண்டாம். நம்முடைய முதுக்குப் பின்னால் யாரோ ஒருவர் அமர்ந்து கொண்டு நம்மையே வெறித்து நோக்குவது போல வெகு எளிதாக கற்பனை செய்ய முடிகிறது. அது பொய் என்பது பகுத்தறிவுக்குத் தெரிந்தாலும் ஆழ்மனம் நம்ப மறுக்கிறது. எதிர்பாராத ஒரு அச்சத்தை, புகை போன்ற உருவத்தை வெகு இயல்பாக எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.அந்த திகிலை இன்னொருவரின் அனுபவங்களின் வாயிலாக, கதைகளின் மூலமாகப் படிக்கும் போது ஒன்று இவன் என் இனம் என்று தோன்ற வைக்கிறது. இல்லையேல் பேய் பயம் நமக்கு மட்டும் இல்லை அது ஒரு பொதுச்சொத்து என அகமகிழத் தோன்றுகிறது. 'பேய் இருக்கு இல்ல' என்ற தர்க்க ரீதியான ஆராய்ச்சிகளையும் தாண்டி பேய்க்குள் ஒளிந்து கொண்டிருக்கும் கவர்ச்சி அது. பேய்க்கதைகளைப் படித்து வெகுநாட்கள் ஆகிறது. சிறுவர்மலரிலும், தங்கமலரிலும் அம்புலி மாமாவிலும் படித்த கதைகள் வளர்ந்து பெரியவனானதும் எங்குமே படிக்கக் கிடைக்கவில்லை. அதையும் மீறி பேய்க்கதை போன்ற ஒன்றைப் படித்தேன் என்றால் அது கொலையுதிர்க் காலம். சிற்சில இடங்களில் சுஜாதா மிரட்டியிருப்பார். அவ்வளவுதான் பேய்க்கதைகளுக்கும் எனக்குமான தொடர்பு. ஆனால் பேய் குறித்த அனுபவக் கதைகள் இன்னும் அலாதியானது. பள்ளிகாலங்களில் தொடங்கி இன்று வரைக்கும் என்னோடு பயணிப்பது. மாதத்தில் ஒருவராவது பேயைப் பற்றி பேசிவிடுகிறார்கள். ஆட்டோவில் பேய், இரவுக் கட்சி முடிந்து வீடு திரும்பும் போது வழி கேட்கும் பேய், வெள்ளிகிழமை எ,.ஆர். கிணத்துப் பேய் என்று பேய் சார்ந்த அனுபவங்கள் கதைகளை விட மிக சுவாரசியமானவை. எங்கே இந்த வரியை என்னோடு சேர்ந்து கூடவே ஒரு பேயும் வாசித்துக் கொண்டிருக்கிறதோ என்று நினைத்துப் பார்த்தால் அது கூட சுவாரசியமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு பேய்க்கதைகளின் பின்னணியிலும் ஒரு அநீதி ஒரு துரோகம் ஒரு அடங்காத மோகம் இருக்கும் என்கிறார் ஜெமோ. பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் சிறுகதைத் தொகுதி கூட அப்படியாகப் பின்னப்பட்ட ஒன்று தான். இத்தொகுதியில் மொத்தம் பத்து கதைகளை இருக்கின்றன. அவற்றில் சில உயிர்மை இதழிலும் இன்னும் சில வேறு இதழ்களிலும் வெளிவந்தவை. நிழல்வெளிக் கதைகள் என்ற தலைப்பில் உயிரமைப் பதிப்பகம் மூலம் வெளிவந்த புத்தகம் தற்போது மறுபதிப்பாக 'பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும்' என்ற தலைப்பில் கிழக்கு வெளியீடாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. இமையோன் - விடுமுறை தினத்தை மேற்குத் தொடர்ச்சி மலையில் களிக்கச் செல்லும் நாயகன், திடிரென அடித்துப் பெய்யும் பெரு மழையில் வழி தவறி ஒரு பாழடைந்த வீட்டினுள் தஞ்சம் புகுகிறான். அங்கு நடப்பது எல்லாமே இயல்பாக இருந்தாலும். 'என்ன இயல்பாகவே முடியப் போகிறது' என்று யோசிக்கும் நொடியில் கதையின் போக்கை மாற்றுகிறார் ஜெமோ. அகம் சார்ந்த வர்ணனைகள் ஜெமொவிடம் எப்போதும் இயல்பாகவும் ரசனை மிக்கதாகவும் வெளிப்படும். அவ்வகையில் இத்தொகுதியின் சிறந்த கதையாக இக்கதை முக்கியமானது. மலைகள், மலைகளில் நிகழும் கணங்கள் பற்றிய ஜெமோவின் விவரணை அழகானது. பாதைகள் - பேய் நடமாட்டம் உள்ளதாக அஞ்சப்படும் வீட்டிற்கு ஒரு ஓவியர் குடி வருகிறார். அந்த வீடு முழுவதும் தன் ஓவியத் திறமையின் மூலமும் வெறும் கதவுகளையும் ஜன்னல்களையும் தத்ரூபமாக வரைகிறார். அவை மாயக்கதவுகள். எங்கு நுழைந்தால் எங்கு வெளிப்படுவோம் என்பதை அறியமுடியாத மாயச் சுழலை உருவாக்கக் கூடியவை. அந்தச் சுழலினுள் நாயகன் சிக்கிக் கொள்கிறான். அந்த வீட்டில் பேயாக நடமாடுபவர்களை அச்சுழலினுள் சந்திக்க நேர்கிறது. அங்கிருந்து அவன் வெளிப்பட்டானா இல்லையா என்பது தான் கதை. இந்தத் தொகுதியை நள்ளிரவில் படித்தேன் என்பதால் பேய்க் கதைகளின் அதீத்தை இக்கைதையின் மூலம் உணர முடிந்தது. அறைகள் - கொஞ்சம் வித்தியாசமான கதை. வஞ்சம் தீர்த்துக் கொள்ள அவசியம் இல்லாமல், அடங்கா பாசத்தினை வெளிபடுத்தக் கூடிய கதை. ஆனால் இதன் முடிவு பின்நவீனத்துவத்தின் பாணி என்பதால். முடிவு அவரவர் அவதானிப்பில். யட்சி, ஏழுநிலைப் பந்தல் சுவாரசியமான வாசுப்பனுபவத்தைத் தரக்கூடியவை. தம்பி, ஐந்தாவது நபர் வழக்கமான பழிவாங்கும் கதைகள் என்றாலும் சுவாரசியமானவை. இவையல்லாமல் குரல், ரூபி இந்த இரு கதைகளும் மனிதர்கள் விலங்குகளின் மூலம் வேட்டையாடப்படுதலாக அமைந்த கதைகள். இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் பத்து கதைகளுமே ஆசிரியர் கதை கூறுவது போல் அல்லாமல் கதையின் நாயகன் தன்னிலையில் இருந்து கதையை விவரிப்பது போல் கூறப்பட்டவை. அதுவே இந்தக் கதைகளுக்கு கூடதல் சுவராசியத்தை அளிப்பதாக உணர்கிறேன். மேலும் ஒவ்வொரு கதையிலும் ஒரு கடந்தகாலம் இருக்கிறது. கடந்தகாலம் நிகழ்காலத்தோடு தொடர்பு கொள்ளும் போது அந்த ஒரு அநீதி ஒரு துரோகம் ஒரு அடங்காத மோகம் என்ற புள்ளியில் வந்து தன்னை இணைத்துக் கொள்கிறது. அங்கு பேய்களும் தேவதைகளும் உயிர்பெற்று உச்சம் அடைகிறார்கள்., பெரியவர்களுக்கு சிறப்பான வாசிப்பனுவத்தையும் குழந்தைகளுக்கு அட்டகாசமான பேய்க்கதைகளை கூற உகந்த கதைகளையும் கொண்ட தொகுதியாக இத்தொகுப்பைப் பார்க்கிறேன். மேலும் வெறும் பேய்கதைத் தொகுதியாக அல்லாமல், ஒவ்வொரு சிறுகதையிலும் ஜெமோ முன்வைக்கும் நுணுக்கமான விளக்கங்கள் விவரணைகள் ஒரு சிறுகதையின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துக்கூறுவதையும் உணர முடிகிறது. நஷ்டம்!! அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு "ஏன் சோகமாக இருக்கிறீர்கள்" என்று கேட்டார். அதற்குஇவர் "எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன்" என்றார். "எவ்வளவு ரூபாய் நஷ்டம்?" என்றால் அவர். "50 கோடி ரூபாய்" என்றார் இவர். "அப்படியா, நான் யார் தெரியுமா?" என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வேந்தரின் பெயரை சொன்னார். அசந்து போனார் இவர்... "சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா?" என்று கேட்டார் அவர். உடனே முகமலர்ச்சியுடன் இவர் "ஆமாம் எல்லாம் சரியாகி விடும்" என்றார். பின் அந்த செல்வேந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி "இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன்" என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார் அவர். பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர். இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். "நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம்500 கோடி ரூபாய் உள்ளது, ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது? எதனால் ஏதற்காக ஏற்பட்டது? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன . தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வேந்த கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே பெஞ்சில் அமர்ந்தார். காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வேந்தரை காணவில்லை. இவர் சென்று அந்த பெண்மணியிடம் "எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர்?" என்றார் அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் "உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா?" என்றார் இவர் "இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள்?" என்றார். அந்த பெண்மணி "இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார்" என்றார் ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார். நம்மால்எதையும் செய்ய முடியும் என்று முதலில் நாம் நம்பவேண்டும். அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும். குடும்பம் என்றால் கொஞ்சம் அனுசரித்து வாழுங்கள். ..... ஒரு திருமண மண்டப வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம்... கணவனை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த அந்த நவ யுக மனனவியை கவனித்த 60 வயது மதிக்கத்தக்க பாட்டி அப்பெண்ணை அணுகி," மகளே! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதே...!!! ஏன் உன் கணவனைக் கடிந்து கொண்டாய்? "ஒன்னுமில்லை ஆண்டி, இது என் கணவரது தங்கையின் திருமணம்.... நானும்கூட வந்து நிற்கணுமாம், எல்லா நிகழ்ச்சியிலும் பங்கெடுக்கணுமாம்.... வீட்டுக்கு ஒரே பையன் என்றாலும் இவரை இவர் வீட்டாரே மதிப்பதில்லை.... இதிலே என்னைய வேறு கூப்பிடுறார் ! . பெண் என்றால் அடிமையா என்ன..? கணவன் செல்லும் இடமெல்லாம் செல்வதற்கு.... ? எனக்கே அசதியா இருக்கு..... இந்த ஆம்பளைங்களே இப்படிதான் ஆண்டி தன்மானம் இல்லாதவர்கள். சும்மா கடுப்பேத்திகிட்டு".... முதியவள் சிறு புன்னகையோடு, "மகளே" முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் கணவனோடுதான் போவேன்.....!!! ஆனா இப்ப அவங்க இறந்து 8 மாசமாச்சி. எங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு.... ரெண்டு பேருமே விவசாயமே..தொழில். . வயதும் 65ஐ கடந்துவிட்டேன்..!!! காடு தோட்டமெல்லாம் இரு மகன்களுக்கும் பிரித்து கொடுத்து விட்டு... ஒரே மகளான தெய்வநாயகிக்கும் கொஞ்சம் காசு பணம் நகைன்னு கொடுத்துவிட்டு.... பிறகு ஒன்னாவே ஊர்லே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம்.... எங்களோட 2 பிள்ளைங்களும்,ஒரு மகளும் கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே,... நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம்... என் கணவனுக்கு துரதிஷ்டவசமா இனிப்புநீர், ரத்தக்கொதிப்புனு நோய்கள் இருந்திச்சி... தினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்....! இப்ப அவங்க இல்லை,....! நான் ரொம்ப தனிமையை உணர்கிறேன்... என் பகல்கள் ரொம்ப நீளமாயிடுச்சு, இரவுகள் ரொம்பவும் வெறுமையாயிடுச்சு..!! அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு....! அவங்க சாப்பிட்டு முடிக்காத மீதமுள்ள மருந்துங்கக் கூட என்னைக் கவலைப்படுத்துது....! அவங்க handphone நம்பர் இருக்கு,! ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க,...! Latter போட்டா படிக்க மாட்டாங்க...! முன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்...! இப்ப நான் அதே படுக்கையிலே நடுவில தனியா படுத்திருக்கேன்... ! சமையலறைக்குத் தனியா போறேன், ! சமையல்ன்னு பேர்ல எதையோ பண்றேன், ! வாய்க்கு ருசியா சமைச்சு பகிரஅவங்க இல்லை.!.. கோயிலுக்கு இப்ப ஒன்னா போக அவங்க இல்லை...! விழியோரம் நீர் தேங்க.., அதான் மகளே, அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும் ..,! அதிகமாக போற்றணும்....!!! கணவனின் வெற்றியோ தோல்வியோ,! பெருமையோ அவமானமோ...!!!. லாபமோ... நட்டமோ... மனைவிக்கு அனைத்திலும்.. சம பங்கு உண்டு...! தன் மனைவி தன்னுடன் தோளோடு தோள் கொடுத்து நிற்காத எந்த கணவனுக்கும் ஏற்படும் அவமானமும் தலை குனிவும்.... வேறெந்த அவமானத்தையும் விட அவனை அதிகம் காயப்படுத்தும்....! மிகவும் வேதனை படுத்தும்.! எங்கு போனாலும் என் கணவர் முன்னே சென்று எனக்கு இடம் பிடித்து தருவார்.. பஸ் இல் ஏறும் போது , விழாக்களில் விருந்துகளில் எனக்கு முன்பே ஓடி சென்று எனக்கு இடம் பிடித்து.... இல்லாவிட்டால் ஏதாவது எனக்கு வசதியாக ஏற்பாடு பண்ணி தருவார்.!!! பிரயாணம் செய்யும் போது நான் அசந்து தூங்கி விடுவேன்...!. அவரோ ஒரு நிமிடம் கூட கண் அசர மாட்டார்.! பல முறை 8 மணி நேரம் 12 மணி நேரம் அவசர பயணத்தின் போது..... பஸ்ஸில் இடம் கிடைக்காமல் என்னை மட்டும் உட்கார வைத்து பாதுகாப்பிற்காக... பக்கத்திலேயே கம்பியை பிடித்து நின்று வந்திருக்கிறார்....! இன்னிக்குத் தினமும் என் கணவனின் கல்லறைக்குப் போறேன்.....! எனக்காக எல்லாத்தையும் தயார் செய்த நீங்க முன்னாடி போயிட்டிங்களே...?" இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்.! சரி மகளே,! நான் வர்ரேன் என்று புறப்பட்ட முதியவளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் அந்த இளம் மனைவி்..... !. என்ன நினைத்தாளோ மண்டப திற்கு உள் சென்று தன் கணவனை தேட ஆரம்பித்தாள்.....!!!!!! ஆம், நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாயில்லை என கணவனும்,... நம்..கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாயில்லை என மனைவியும் எண்ண வேண்டும்.! புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடமே, hi sir how r u? Nice to meet u என்கிறோம்...! இடையில் இருமுகிறோம், தும்முகிறோம் I'm sorry sir என்கிறோம்...! பேச்சுக்கிடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது, உடனே excuse me sir சொல்றோம் ..! அந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம்தான் ஆகியிருக்கும்... அதன்பின் அவரைச் சந்திப்போமா என்றே தெரியாது.... ஆனாலும் எவ்வளவு மரியாதை தருகிறோம்?" வாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கிற கணவனை.... மனைவி மதிக்கிறாளா...? மனைவியை கணவன் மதிக்கிறானா...??? இல்லை பதில் 100 க்கு 50சதவீதம், இல்லைதான்... கணவனின் கரிசனையை, திறமைகளை பாராட்டுறதுமில்லை, அசதியாக தோட்டவேலை முடிந்து வீடு திரும்பும் கணவன்கிட்ட, ஏங்க, ரொம்ப வேலையா, காலையிலேர்ந்து நான் உங்களை ரொம்ப மிஸ் பன்னிட்டேனுங்கனு மனைவியும் சொல்றதில்லை... மனைவியும் ஓய்வாகவோ.. களைத்து அமர்ந்திருக்கையில்.. இன்று வீட்டு வேலை அதிகமா... என கனிவான பார்வையோடு கேட்கும் கணவன் மாணவர்களும் 50%மேல் இதெல்லாம் சொல்லணும்...!! அப்படி ஒருத்தரோட உணர்வை இன்னொருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பித்தால்..... வாழ்க்கை இனிக்கும்.. & ருசிக்கும்.!!!. அகம் முகம் மலர்ந்த நட்பே..!! குழுவிற்க்கு வந்த தகவல் பறிமாற்றப்பதிவு... கணவனோ.... மணைவியோ... மருத்துவ மனையிலோ.. படுக்கையிலோ... இருந்தால்... கூட இருந்து கவனிப்பவர்... கணவனோ... & மணைவியோ தான்... சுமார் ஒரு மாத காலம மருத்துவ மனையில் படுக்கையாக இருந்தால்.... முதல் ஒருவார காலம்.. பார்க்க வரும் உறவுகள் & சொந்தங்கள்.. பின்னர் படிப்படியாக குறைந்து விடும்.. பின்னர் மகளோ... மகனோ.... நெருங்கியவர்கள் மட்டுமே... வந்து போவார்கள்...... இறுதியில் கணவன் மனைவி மட்டுமே... ஒருவருக்கொருவர்.... துணையாக இருப்பர்.. இறுதியாக ஒன்றுங்க... நம்முடைய. உறவு..... நட்பு... குலம்.... சாதி... பங்காளி... பகையாளி... இனம்...சனம்.... பணம்... முதலாளி.... தொழிலாளி..... கட்சிக்காரன்.... எல்லாமே..... ஞாபகமிருக்கட்டும்..!!! கூடிக்கலையும் காக்கா கூட்டமே.... ஆக மனைவி... மகள்...மகன்... & இரத்த உறவுகளே... நம் வாழ்வின் இறுதிநாட்களில் துணையிருப்பார்... ஆசிரியர் : ஜெயமோகன் | |
வாழ்க்கையின் உண்மைஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான். அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான். அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள். ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள். ஒருநாள்... அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள். நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’ நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான். உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு. 1. நான்காவது மனைவி நமது உடம்பு. நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது. 2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான். நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது. 3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள். அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை. 4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா. நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான். |
இரண்டு தேவதை
அலுவலகம் முடித்து படுக்கைக்குள் நுழைந்தபோது இருந்த உறக்கம் எங்கே போனதெனத் தெரியவில்லை. எவ்வளவோ முயன்றும் தூக்கம் வரவில்லை. கண்களை மூட நினைக்கும் போதெல்லாம் மேலிருந்து கீழாக இடமிருந்து வலமாக ஓடத் தொடங்கும் எண்களின் ஓட்டம் மிரட்சியாக இருந்தது. எவ்வளவு நேரம் தான் முழித்துக் கொண்டே இருப்பது. மணி ஒன்றைக் கடந்து வெகுநேரம் ஆகியிருக்க வேண்டும். இருள் கண்களுக்குப் பழகியிருக்க, விட்டதையே வெறித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்த அதிசியம் நிகழ்ந்தது. திடிரென அறையினுள் நுழைந்த தேவதை என்னோடு பேசத் தொடங்கியது. 'உன்ன பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு. என்ன வேணும் கேளு' என்றது அந்தத் தேவதை. சோ இது வரம் கொடுக்க வந்த தேவதை. வெள்ளை உடை, முதுகுக்குப் பின்னால் வளர்ந்த சிறகுகள் எல்லாம் இல்லை. திடிரென அறையினுள் நுழைந்து உனக்கென்ன பிரச்சனை எனக்கேட்டால் யாரால் தான் நம்பாமல் இருக்க முடியும். ஆக வந்திருப்பது தேவதையே தான். நம்பி என் கதையைக் கூறலாம். கூறினேன்.
'உன் பிரச்சன பெரிய பிரச்சனையா இருக்கு. உனக்கு என்னால மட்டும் உதவ முடியாது. என்னோட பிரண்டு தேவதை ஒண்ணு இருக்கு. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தா அசால்ட்டு பண்ணுவோம் கொஞ்சம் பொறு' என்று கூறி மறைந்துவிட்டது. மறைந்த சிறிது நேரத்தில் இரண்டு பேருமாக அறைக்குள் நுழைய 'சரி இப்ப சொல்லு உன் பிரச்சனை என்ன' என்று கேட்க, 'அதான் சொன்னனேன. நீங்க என்ன என் கிளையன்ட் மாதிரி கேட்ட கேள்வியவே திரும்பத் திரும்ப கேட்கிறீங்க' என்றேன் கடுப்பில். 'ஓ இது தான் உன் பிரச்சனையா, சரி உனக்கு ரெண்டு நாள் லீவ் கிடைக்குமா என்றது இரண்டாவதாக வந்த தேவதை'. ' கிடைக்கும், ஆனா நான் வொர்க் பண்றது சப்போர்ட் ப்ராஜாக்ட். இப்படி திடிர்ன்னு கேட்டா கிடைக்காது. முன்னாடியே சொல்லணும். இல்ல பாஸ் கோச்சுப்பார்' என்றேன். 'சரி ரெண்டு நாள் லீவ் அப்ளை பண்ணு நான் பார்த்துகிறேன். ஆனா இதேமாதிரி அவதிக்குள்ளான வேறு சில நண்பர்களும் உன்கூட வருவாங்க பரவாயில்லையா' என்றது முதல் தேவதை. 'நண்பர்கள்ன்னா ஓகே, எதிரிகள் நாட் அலவுட். எனக்கு அவங்களை சமாளிக்கத் தெரியாது' என்றேன் சிரித்துக்கொண்டே. 'ஷட்' என்றது அந்த தேவதை. ஷட்டினேன் என்று எழுதிய என்னை சுஜாதா மன்னிப்பாராக!
| |
வாழும் விதி! (சிறுகதை)
மரக்கிளையின் உச்சியில் இருந்த அந்தச் சின்னஞ்சிறு பறவையின் கூட்டில் இரண்டு குஞ்சுகள் இருந்தன. தாய்ப்பறவை எங்கோ சென்று இறைதேடிக்கொண்டு தன் குஞ்சுகளுக்குப் புகட்ட திரும்பிவந்தபோது திடுக்கிட்டு அலறியது.ஒரு பாம்பு மெதுவாக ஊர்ந்தபடி அந்தக் கூட்டை நெருங்கியது. அந்தப் பறவைக் குஞ்சுகளை உண்பது அதன் நோக்கம்.
தாய்ப்பறவையால் அந்தப்பாம்பை என்னசெய்ய முடியும்? பாம்பண்ணா! பாம்பண்ணா! என்று அலறியது.பாம்பு சட்டை செய்யவில்லை.
பாம்பண்ணா! பாம்பண்ணா! ஒரு நிமிஷம் நான் சொல்றதக் கேளண்ணா! மீண்டும் மீண்டும் தாய்ப்பறவை அலறியது. திரும்பிப்பார்த்த பாம்பு,
ஏன் எதற்காகக் கத்துகிறாய்? என்றது
அண்ணா! நீங்க எவ்வளவு பெரியவங்க! உங்களக் கண்டு பயந்துட்டு இருக்கிற எங்கமேலெ நீங்க இரக்கப்படக் கூடாதா?
அப்படியா?
ஆமாங்க அண்ணா உட்டுடுங்க! நாங்க பொழைச்சுப் போறோம்
நான் ஒண்ணு கேக்கறேன் பதில் சொல்லுவியா?
சொல்லுங்க அண்ணா!
உன் வாயிலெ என்ன வெச்சிருக்கே?
என் குஞ்சுகளுக்கு கொஞ்சமா இரை கொண்டுவெந்தேன் அண்ணா! என்னது?
சின்னப் புழுக்கள் அண்ணா!
இப்பச் சொல்லு! நீ ஏன் அந்தப் புழுக்களுக்கு இரக்கங் காட்டலே?
அந்தப்பறவையால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.
இதுதான் நமது வாழ்க்கை விதி! உன்னைவிட பலங் குறைந்தது உனக்குத் தீனி! என்னைவிட பலங்குறைந்தது எனக்குத் தீனி! அப்படி இல்லாம வாழ வழி இருக்கிற மனுஷங்களே அப்படி வாழ்றது இல்லே! நம்மாலெ எப்படி வாழமுடியும்?
இருந்தாலும் என்னை அண்ணான்னு அன்போடு பலமுறை கூப்பிட்டெ இல்லே, அதனால உனக்கு என்னாலெ எந்த ஆபத்தும் இல்லெ. என் பசிக்கு நான் வேறெ வழி பாத்துக்கிறேன்!
பாம்பு போய்விட்டது. அந்தத் திசையையே பார்த்துக்கொண்டு திகைத்து நின்றது தாய்ப்பறவை!
- சுபாஷ் கிருஷ்ணசாமி
|
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு !
கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர்
சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் .
சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ? நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள் . சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ? கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் . அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் . அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம். | |
வரதட்சணை
நிறைமாத கர்பிணியான அவள் அக்கம் பக்கத்தினரால்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவளின்
கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலையை முடித்துவிட்டு வேக வேகமாக ஓடினான் கோவிலுக்கு, இறைவனிடம் கைகூப்பி வேண்டினான்.
இறைவன் அவன் முன் தோன்றி உன் பிரார்த்தனை என்னவென்று என்னிடம் சொல் நான் நிறைவேற்றி வைக்கிறேன் அதற்க்கு கைமாறாக நீ
நான் சொல்வதை கேட்க வேண்டும் என்றான் இறைவன்.
இறைவனின் கட்டளையை ஏற்றுக்கொண்டு அவன் வேண்டுதலை இறைவனிடம் கூறினான். எந்த வேண்டுதல் என்னவென்றால் " என் மனைவிக்கு
ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் பெண் குழந்தை வேண்டாம் " என்று வேண்டிக்கொண்டான்.
இறைவனும் அவனின் வேண்டுகோளை நிறைவேற்றினான். உங்களது வேண்டுகோள்
என்னவென்று கூறுங்கள் இறைவா என்று அவன் கேட்டான். எனது வேண்டுகோளை காலம் வரும்பொழுது கேட்கிறேன் என்றான் இறைவன்.
சுமார் இருபத்து ஐந்து வருடங்கள் கழித்து அவனின்
கனவில் இறைவன் தோன்றி தன் வேண்டுகோளை வைத்தான்.
அவன் மகன் திருமணத்தின் பொழுது பெண் வீட்டாரிடம் இருந்து எந்த வரதட்சனையும் கேட்கக் கூடாது அந்த பெண்ணுக்கு நீ வரதட்சணை
கொடுத்து உன் மருமகளாக ஏற்றுகொள்ள வேண்டும் என்றான் இறைவன்.
இதை கேட்டு அதிர்ந்து போனான் அவன்.
பெண் பிள்ளை பிறந்தால் வரதட்சணை தரவேண்டுமே
என்று தான் உன்னிடம் ஆண் பிள்ளை கேட்டேன், கேட்டது போல் ஆண் பிள்ளையை கொடுத்துவிட்டு இப்படி ஒரு பாரத்தை என் தலையில் சுமத்துகிறாயே இறைவா என்று கதறினான்.
" நீ வணங்க பெண் தெய்வம் வேண்டும்
உன்னை சுமக்க ஒரு பெண் வேண்டும் நீ திருமணம் செய்துகொள்ள ஒரு பெண் வேண்டும் உன்னை அரவணைக்க ஒரு பெண் வேண்டும் உன்னை நினைத்தே உனக்காக உருக ஒரு பெண் வேண்டும் உன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு பெண் வேண்டும் " உன் வாழ்க்கையில் பங்கு கொண்ட இத்தனை பெண்களும் உனக்கு பாரமாக தெரியவில்லை ஆனால் ஒன்றும் அறியா அந்த பெண் சிசு மட்டும் எப்படி பாரமானது ?
நீ எவளவு வரதட்சணை கேட்டாலும் பெண்ணை
பெற்றவர்கள் தரவேண்டும் ஆனால் உன்னிடம் யாரும் கேட்கக் கூடாது என்று நீ நினைப்பது எந்த விதத்தில் நியாயம் ?
"வரதட்சணை கேட்பதை நிறுத்தினாலே போதும் பெண் பிள்ளை பாரமாகதெரியாது ".
| |
யாரை இழக்க வேண்டும் !!
ஒரு உயர் நிலை பள்ளியில் டீச்சர் ஒரு மாணவனை கூப்பிட்டு போடுல உனக்கு பிடித்த உறவுமுறைகளை 30பேரை எழுது என்றார் ,,,
மாணவன் ,,, அப்பா, அம்மா , தாத்தா , பாட்டி ,மனைவி , மகன் ,மகள், அக்கா ,தங்கை, அண்ணன் ,தம்பி, சித்தப்பா , சித்தி ,மாமா , அத்தை , காதலி, நண்பன், ,இப்படியாக 30 பேர் எழுதினான்,,,
டீச்சர் ,,,கண்டிப்பாக இதில் மூன்று பெயரை அழிக்க ,வேண்டும் ,,,,யாரை இழக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அந்த பெயரை அழி என்றார் ,,.
மாணவன் ...காதலி, நண்பன் , பக்கத்து வீட்டுகாரர்,,,இவர்களை பெயரை அழித்தான்,,,
டீச்சர் ,,,மறுபடியும் மூன்று பெயரை அழிக்க சொன்னார்,,,
மாணவன் ,,., இப்படியாக ஒவ்வொருவராக அழித்தான்,..கடைசியாக அப்பா, அம்மா, மனைவி ,மகன்,மகள் என இவர்கள் பெயர் மட்டும் இருந்தது ,,,
டீச்சர் ,,,இதிலும் ரெண்டு பெயரை நீக்க வேண்டும் ,,,யார் நீக்குவாய் என்றார்,,,
மாணவர்கள் அனைவருக்கும் கோபம் ,,,,
மாணவன்,,,வருத்தத்துடன் அப்பா , அம்மா பெயரை அழித்தான்,,,
டீச்சர் ,,மறுபடியும் இன்னும் ரெண்டு பெயரை அழிக்க வேண்டும் என்றார் ,..
மாணவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம் ,,,யார் பெயரை அழிப்பான் என்று,,.
மாணவன் ,,, மிகுந்த சோகத்துடன் மகன், மகள் பெயரை அழித்தான்,..கடைசியாக மனைவி பெயர் மட்டும் இருந்தது ,,,
டீச்சரும்,,,மாணவர்களும் ,..ஆச்சரியமாக கேட்டார்கள் ,.மகன், மகள் பெயரை அழித்து விட்டு ,..எதற்காக மனைவி பெயர் மட்டும் அழிக்கவில்லை,..
அதற்கு மாணவன் ,,,, மகள் எப்படி இருந்தாலும் இன்னொரு வீட்டுக்கு போய் விடுவாள்,,,மகன் அவன் மனைவி குழந்தை என வாழ்வான்,,,
கடைசி காலம் வரை என்னோடு வாழ கூடியவள் மனைவிதான்,,,என்றான்,,,,
வாழ்க்கைத் துணை மனைவி மட்டும்தான் நாம் இறக்கும் வரை நம்முடன் வாழ கூடிய ஒரே உறவு,,,,,
இது மனைவிகள் அனைவருக்கும் சமர்ப்பனம்,,,
|
ஓர் இளைஞன் B.E பட்டதாரி! எங்கெங்கோ வேலை தேடினான் அவன் ஏறி இறங்காத நிறுவனங்களே இல்லை.எங்கும் வேலை கிடைக்க வில்லை.ஒரு நாள்அந்த ஊருக்கு ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்தது. அதிலாவது ஏதேனும் வேலை கிடைக்குமா? என்று அந்த சர்க்கஸ் கம்பெனி முதலாளியைப் பார்த்துக் கேட்டான்.அவனும் வேலை காலி இல்லை என்றான்.பிறகு இவன் எப்படியாவது ஒரு வேலை கொடுங்கள்
BA - MA பட்டதாரிகளுக்கு இந்த கதை சமர்ப்பணம் !
என்று கெஞ்சினான்.அந்த முதலாளி சொன்னான்.தம்பி கம்பெனியில் இருந்த குரங்கு ஒன்று நேற்று இறந்துவிட்டது.அந்த வேலையை நீ செய்வதாக இருந்தால்உன்னை சேர்த்துக் கொள்கிறேன் என்றார்.
சரி என்று அவனும் ஒப்புக்கொடு வேலைக்குச்சேர்ந்தான்.
குரங்கு செய்யும் வித்தைகளை எல்லாம்
கற்றுக்கொண்டு குரங்கு வேசம் போட்டு இவனும் செய்தான்.ஒரு நாள் சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது.பெருந்திரளாக கூட்டம் கூடியிருந்தது.
அரங்கில் உயரத்தில் தொங்கிய ஊஞ்சலில் இருந்து குரங்கு வித்தைகளை செய்யும்போது கைநழுவி கீழே விழுந்து விட்டான்.அடி அவ்வளவாக படவில்லை. ஆனால்இவன் கீழே விழுவதற்கும் அங்கே கூண்டிலிருந்த சிங்கத்தைத் திறந்து விடுவதற்கும் சரியாகஇருந்தது.நம்மாள் நடு நடுங்கிப் போனான்.
வயிற்றுப் பசியை போக்கவே வேலை தேடி இங்கு வந்தோம். இன்று சிங்கத்தின் வயிற்றுக்கு இரையாகப் போகிறோம் என்று அஞ்சி நடுங்கினான்.பேச நா கூட வரவில்லை. இவன் அஞ்சி நடுங்குவதை சிங்கம் பார்த்து. அவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தது.
சரி நம் கதை முடிந்தது என்று நினைத்தான். குரங்கு வேடத்தில் இருந்த B.E பட்டதாரி சிங்கம் மெல்ல வாயைத் திறந்து பேசியது “ஏ! B.A! பயப்படாதே நான் M.A, ”
என்றது. | |
கரடி வித்தைக் காரன்
ஒரு ஊர்ல்ல ஒரு கரடி வித்தைக் காரன் இருந்தான். அவன் கரடியை குட்டிக் கரணம் போட விட்டு காசு கேட்பான். காசு அவ்வளவாக வசூலாகாத நிலையில் அவனது அசிஸ்டண்ட் வேறு ஏதாவது ட்ரை செய்யலாம் என்றான். வித்தைக்காரனோ, பார்ப்பவர்களை சவாலுக்கு கூப்பிட்டு பெட் கட்ட வைக்கலாம் என்று முடிவு செய்து, "யாரேனும் என் கரடியை சிரிக்க வைத்தால் நீங்கள் ஆயிரம் ரூபாய் பரிசு பெறுவீர்கள். தோற்றால் நீங்கள் எனக்கு பத்து ரூபாய் கொடுத்தால் போதும்" என்றான். பலரும் முயன்று தோற்று பத்து பத்து ரூபாய் இழந்தனர். கரடிக் காரனிடம் பணம் குவிந்தது. இறுமாப்பில் இருந்தான். அவனை யாரும் ஜெயிக்க முடியவில்லை. ஒரு நாள் அந்தக் கூட்டத்தில் ஒருவன் வந்தான். "நான் உன் கரடியை சிரிக்க வைப்பேன்" என்றான். அவனை ஏளனமாகப் பார்த்த கரடிக்காரன், "செய்! பார்க்கலாம்!" என்றான். பார்வையாளன் மதுரைக் காரன். கரடியின் காதில் கிசுகிசுவென்று என்னவோ சொன்னான். கரடியும் பகபகவென்று சிரித்தது. அதிர்ச்சி அடைந்த கரடிக்காரன் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டி வந்தது. ஆனாலும் தோல்வியை ஏற்க விரும்பாமலும் விட்ட ஆயிரம் ரூபாயை மீண்டும் பிடிக்கவும் தந்திரமாய் " சரி! மீண்டும் சவால்! இந்தக் கரடியை அழ வைத்தால் உனக்கு பத்தாயிரம் ரூபாய். தோற்றால் நீ ஜெயித்த ஆயிரம் ரூபாய் தந்தால் போதும்" என்றான். மதுரைக்காரனும் சம்மதித்தான்! மீண்டும் அதே போல கரடியின் காதில் கிசு கிசுவென்று சொன்னான். கரடியும் ஓ என்று அழுதது. கிட்டத்தட்ட மயக்கமே வந்து விட்டது கரடிக் காரனுக்கு! பத்தாயிரம் ரூபாய் கைவிட்டுப் போனது! தோல்வி சகிக்காத கரடிக்காரன் எப்படியாவது கஷ்டமான ஒன்றைச் சொல்லி, இழந்த பத்தாயிரத்தை மீட்க வேண்டும் என்று உறுதி பூண்டான். "சவால்டா மதுரைக்காரா! என்னிடம் உள்ள மொத்த சேமிப்பு ஒரு லட்சம் ரூபாய். அதை முழுவதும் இந்த சவாலுக்காகக் கொடுக்கிறேன். நீ தோற்றால் எனக்கு பத்தாயிரம் கொடு போதும்" என்றான். மதுரை "சவாலுக்கு நான் ரெடி. என்ன செய்யணும்?" "இந்தக் கரடியை எந்த துன்புறுத்தலும் இன்றி இங்கேயிருந்து திரும்பிப் பார்க்காமல் ஓட வைக்க வேண்டும்! முடியுமா?" "இதென்ன பிரமாதம்? இதோ பார்" என்று வழக்கம் போல கரடியின் காதில் என்னவோ சொன்னான். கேட்ட மாத்திரத்தில் கரடி துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடியது! அதிர்ந்த கரடிக்காரன் " இந்தா பணம். முடியலை. எப்படிடா இதைச் செய்தே?" என்று கெஞ்சினான். மதுரைக் காரனோ அலட்டிக் கொள்ளாமல் சொன்னான். "அதுவா? முதல் கேள்வி, சிரிக்க வைக்க வேண்டும். அதன் காதில் சென்று 'தெரியுமா உனக்கு டேம் தண்ணீர் வீணாகாமல் இருக்க எங்க ஊர்ல்லே தெர்மகோல் போட்டு மூடினாங்க' என்றேன். கரடி கபகபவென்று சிரித்தது." "சரி ... எப்படி அழ வைத்தாய்?" "அதுவா! கரடிகிட்டே சொன்னேன், ' தெர்மகோல் போட்டதற்காக ஒரு PWD இஞ்சினியரை சஸ்பெண்ட் பண்ணாங்க' என்றேன். கரடி அழுது விட்டது" "அதெல்லாம் கூட சரி! கரடியை எப்படி இவ்வளவு வேகமாக ஓட வெச்சே?" "அதுவா? அது கொண்டே 'உன்னைப் பார்த்து ஆலோசனை கேட்க அந்த மந்திரி நாளைக்கு வரப் போறார்ன்னு சும்மா சொன்னேன்!" அருன்குமார் |
மனிதத்தை கொல்லும் கர்வம்!
சண்டையிட்டு சென்ற மனைவி அவளாக வருவாள் என காத்திருந்தான் நாகராஜ்.
வரவில்லை, போனில் அழைத்தும் தவிர்க்கப்பட்டான். வேற எண்ணில் இருந்து அழைத்தால் குரல் கேட்டதும் அணைக்கப்பட்டான். இறுதியாக நேரில் சென்றான்.
இப்பல்லாம் நான் குடிப்பதில்லை. இனியும் குடிக்கமாட்டேன். நீயும் சண்டையிடாதே. வா சேர்ந்து வாழலாம்.என்றான்.
நீயும் சண்டையிடாதே என்பதில் ஆரம்பித்தது சண்டை. நான் சண்டைகாரியா, நீ என்ன சொன்னாலும் பொத்திட்டு போகனுமா என பெரிதான சண்டை இறுதியில் வெளியே போடாவில் முடிந்தது.
வெளியே வந்தவன் நேராக போனது ஒயின்ஷாப். காலை வீட்டில் தூக்கில் இருந்து இறக்கப்பட்டான். அவன் மனைவி கத்தினாலும் கதறினாலும் இனி வருவானா?
அப்ப தானே மக்கா பார்த்துட்டு போனன்னு நாகராஜ் அம்மா அழும்பொழுது நம் ஈரக்கொலை அறுக்குது. சரியாக 2014 இதே நாள் அவனை பார்த்தேன்.
என்னை எப்போ பார்த்தாலும் பயங்கர மகிழ்வடைவான். சுறுசுறுப்பானவன். கடினமான வேலையா அது எப்படி இருக்கும் என்பான்.என் ஒரே மகவும் போயிருச்சே மக்கான்னு அம்மா அழும் பொழுது நானும் மகன் தான்மான்னு ஆறுதல் சொல்ல முடியுமே தவிர உடன் பயணிக்க முடியாதுன்னு எனக்கு தெரியும். இம்மாதிரி வரும்பொழுது எதாவது மானிட்டரி ஹெல்ப் பண்ணலாம். அவ்ளோ தான்
என்னை குடைவதெல்லாம் அவனை கொன்றது எது?
அவன் குடிப்பழக்கமா அல்லது அந்த பெண்ணின் ஈகோவா?
மாற்றிக்கொள்ளக்கூடியது எது?
யாரும் பிறக்கையில் குடிகாரன் இல்லை. அதே போல் கோவமும் எல்லாரிடமும் வராது. நமக்கு யார் உரிமை கொடுத்துள்ளாரோ அவர்கள் மீது கோவப்படலாம்.
என்னுடள் பயணிப்பவள். என்னில் பாதி, என் சுகதுக்கங்களில் பங்கெடுப்பவள், உடன் மகிழ்வது போலே சகிப்பதும் உறவில் ஒரு கடமை தானே, உரிமை கொடுப்பது உயிரை பறிக்கவா?
நட்பின் கதாபாத்திரங்கள் ஆயிரம் நம்மை கடந்துபோகும். நம்முடன் அவர்கள் ஒன்றும் ஒன்றும் ரெண்டு. நட்பிடன் காட்டும் அன்பை போல் ஆயிரம் மடங்கு பரிமாறிக்கொள்ளும் காதல் இணைவது ஒன்றும் ஒன்றும் பதினொன்று.
பரவாயில்ல நீ எடுத்துக்கோ என விட்டு கொடுத்து மகிழ்வது. நீ சந்தோசமா இருந்தியா என துணையின் மகிழ்வு கண்டு இன்பம் காண்பது வாழ்வை அர்த்தப்படுத்தும்.
கோவம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்துகொள்ளும் தண்டனை என புத்தர் கூறினார்.
நாகராஜின் அன்பு கோட்டையை கோபகல் எறிந்து தகர்த்த நாகராஜ் மனைவி ரெண்டு கைகுழந்தைகளுடன் இருக்கிறார். அது அவருக்கு தண்டனையா வரமா என்பதை காலம் அவருக்கு புரியவைக்கட்டும்.
இன்று அவள் அன்புக்காக ஏங்கலாம். அது போல் எத்தனையோ ஜீவன் பூமியில் வாழ்கிறது.
அதீத அன்பினால் வெறுத்து போகிறேன் என்பவர்களுக்கு, நீங்கள் அவர்கள் மனதில் நஞ்சை விதைத்து செல்கிறீர்கள். ஒன்று அது அவரை கொல்லும் அல்லது என்றேனும் ஒரு நாள் யாரோ ஒருவர் அந்த நஞ்சுக்கு பழியாவார்
உங்கள் ஈகோவினால் எதை வென்றீர்க்ள், யாரை வென்றீர்கள் என யோசித்துப்பாருங்கள். ஊரில் இன்னும் பல நாகராஜுக்கள் நடைபிணமாக திரிந்துகொண்டிருக்கிறார்கள்.
அன்பால் எதையும் வெல்லலாம் என்ற உலக கூற்றை மகாபொய்யாக்கிக் கொண்டுயிருக்கிறது உங்கள் ஈகோ.
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குங்கள்.
நன்றி தமிழ் மனம்
| |
குரங்குப்பிடி
ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது. . 🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்புகுரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன. 🌼ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை. 🌼"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். இவன் பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன . * 🌼தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன."ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது. * 🌼அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார். * 🌼சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார். 🌼குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா . * 🌼குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார். * 🌼நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம். 🌼கவலைகளை விட்டொழியுங்கள். 🌼மகிழ்ச்சியாய் இருங்கள், , , 🌼ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும் 🌼பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும் 🌼கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும் 🌼துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும் 🌼பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும் 🌼எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும் 🌼அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும். 🌼ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள். 🌼பசிக்கும் போது உணவருந்துங்கள். பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும். எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள். |
“எப்படி மைலார்ட்?”
ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.
வழக்கு விசாரணைக்கு வந்தது.
குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார்.
நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார்.
நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை.
இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.
“மைலார்ட்!
நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள்.
எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.
பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.
குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார்.
வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார்.
அதற்கு நீதிபதி சொன்னார்,
“அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை.!!!!
அன்பு
ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள்.
அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள்.
அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள்.
அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் .
அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள். மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார். அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள்.. அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள். ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள். அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார். அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள்.. அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் கூறுகிறார். அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள். ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள். இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? என்று அவள் தன் கருத்தை கூறுகிறாள். இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர். பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்கிறார். அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள். அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர். இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்? நான் அழைத்தது அன்பை மட்டும் தானே? என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறாள். அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!! அன்புதான் நம்மை அதிக சந்தோஷப்பட வைக்கும். நீதி : பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்
ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.
மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.
சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.
தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.
பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.
பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.
பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.
பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.
பூனை குத்துச்சண்டை
உலக அளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது!
அனைத்து நாட்டு பூனைகளையும் வீழ்த்தி அமெரிக்கா பூனை முன்னனியில் இருந்தது!
இந்தியா பூனை பாகிஸ்தான் பூனை ஜெர்மனிபூனை ஆஸ்திரேலியா பூனை
இப்படி அத்தனை நாட்டு பூனைகளும் அமெரிக்க பூனையிடம் அடிவாங்கி சுருண்டு கிடந்தன!
அமெரிக்கா பூனையல்லவா பாலும், இறைச்சியும் அளவிற்கு அதிகமாக உண்டு கொழுத்து கொழு,கொழுவென இருந்தது!
கடைசி இறுதி சுற்று....
இந்தச் சுற்றில் அமெரிக்க பூனையிடம் சோமாலியா நாட்டுப் பூனை மோதப்போவதாக அறிவித்தார்கள்!
பார்வையாளர்களுக்கு வியப்பு! சோமாலியா நாட்டு பூனை
நோஞ்சானாக மெலிந்து நடக்கவே தெம்பற்று தட்டுத்தடுமாறி முக்கி முணங்கி மேடையேறியது!
இதுவா அமெரிக்க பூனையிடம் மோதப்போகிறது!
பார்வையாளர்கள் கேலியும் கிண்டலுமாய் சிரித்தார்கள்!
போட்டித்துவங்கியது! அமெரிக்கா பூனை அலட்சியமாக
சோமாலியா பூனையின் அருகில் நெருங்கியது!
சோமாலியா பூனை முன்னங்காலை
சிரமப்பட்டு தூக்கி பறந்து ஒரேஅடி! அமெரிக்க பூனைக்கு மண்டைக்குள் ஒரு பல்பு பளீச் என்று எரிந்து படாரென வெடித்து சிதறியது!
கண்கள் இருண்டு மயங்கி சரிந்தது.பார்வையாளர்கள் அதிர்ச்சியில்
வாயடைத்து நின்றார்கள்!
சற்று நேரம் சென்றபின், மெதுவாக கண்விழித்து பார்த்த அமெரிக்கா பூனைக்கு
ஒன்றுமே புரியவில்லை!
சோமாலியா பூனையின் கழுத்தில் தங்கப்பதக்கம் தொங்கியது.!
போட்டியில் வென்றதற்காக சோமாலியா பூனையை
எல்லோரும் கைகுலுக்கி பாராட்டிக் கொண்டிருந்தார்கள்!
மெதுவாக எழுந்து சோமாலியா பூனையின்அருகில் சென்று
இத்தனை நாட்டு பூனைகளை வீழ்த்திய பலசாலியான என்னை நோஞ்சான் பூனையான நீ வீழ்த்தியது எப்படி? என்று கேட்டது அமெரிக்க பூனை!
அமெரிக்கா பூனையின் காதில் மெதுவாக சோமாலியா பூனை சொன்னது!நான் பூனையே இல்லை.!
புலி...டா...! என் நாட்டு பஞ்சத்தில் இப்படியாகி விட்டேன்!
பாலும்,கறியும் உண்டாலும் பூனை பூனைதான்!
பட்டினி கிடந்தாலும் புலி புலிதான்!. | |
வினை விதைத்தார்கள், அறுத்தார்கள்..!!
அவன் ராஜேஷ்.. கைநிறைய சம்பாதிப்பவன் வீடு கார் என்று நல்ல வாழ்க்கை.. மனைவி கோகிலவாணி. இரண்டு குழந்தைகள். மதுரையில் நல்ல வேலை.மனைவி பிள்ளைகளை நல்ல முறையில் தான் வைத்திருந்தான் ராஜேஷ். தண்ணீர் கேன் பையன் மூலம் வந்தது பிரச்னை.சகஜமாக அக்கா என்றபடி வாரம் இரு முறை தண்ணீர் போட்டுவிட்டு போன அந்த பையனுக்கு ஏன் அப்படி புத்தி போச்சு என்று தெரியவில்லை. அவன் பார்வை மாற ஆரம்பித்தது. வாணியும் குறும்பாக பேசக்கூடியவர். களங்கமின்றி பழகினாள் .அனால் அந்த தண்ணீர் பையன் கொஞ்சம் கொஞ்சமாக வாணியின் ஆசைகளைத் தூண்டி ஒரு நாள் தனிமையில் வசப்படுத்தி விட்டான். சொக்கிப் போனாள் வாணி. இதுவரை உடல் உறவு எனும் பெயரில் தான் எமாற்றப்பட்டுள்ளோம் என்று அறிந்து நொந்து போனாள். அந்த பையன் மேல் பைத்தியமாகிப் போனாள்.நினைத்த நேரம் எல்லாம் அவனை வரவைத்து சந்தோஷமாக இருந்தாள். ஒருநாள் கணவனுக்கு அக்கம் பக்கத்தினர் சொல்லி விட வீட்டில்பெரும் ரகளை. அதன் பின் கணவனை முடித்துவிட தீர்மானித்தாள். அந்த பையன் பாம்பு வாங்கி வந்து கணவன் பெட் ரூமில் போட்டு விட யோசனை சொல்லி ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு நாகம் ஒன்றை வாங்கி வந்து கூடையோடு கொடுத்தான். இரவு கணவனின் பெட் ரூமில் விட்டார்கள். ஆனால் அந்த பாம்பு காணாமல் போய் விட்டது. ஏமாந்து போனாள் மனைவி. வேறு ஐடியா என்ன என்று யோசித்தாள். ஒருவாரம் கடந்த நிலையில் ,கணவன் இன்று முழுவதும் வர மாட்டான் என்பதை அறிந்து கொண்டு அந்த தண்ணீர் கேன் பையனை வரவைத்தாள் வாணி. இருவரும் ஸ்டோர் ரூம் பக்கம் ஒதுங்கினர். சந்தோசமா இருந்த நேரத்தில் அந்த ஸ்டோர் ரூமில் பதுங்கி கிடந்த அந்த நாகம் இருவரையும் கொத்தியது. துடிதுடித்து நிர்வாண கோலத்திலேயே இறந்து கிடந்தனர்…! வினை விதைத்தார்கள், அறுத்தார்கள்..!! |
மூளை வளர்ச்சி கம்மி முருகேசு
முருகேசுவை அவரது மனைவி கீதா, ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் கூட்டிச் சென்றார். கீதா : “டாக்டர். இவுருதான் என் புருசன். பேரு முருகேசு. இவருக்கு கொஞ்சம் மூளை வளர்ச்சி கம்மியா இருக்கோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு டாக்டர். டாக்டர் : அப்படியா? உங்க புருசனைப்பற்றிய விபரங்களை சொல்லுங்க.....அவர் காலையில எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறாரு? கீதா :ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திடுவார் டாக்டர் டாக்டர் : எழுந்திரிச்சதும் என்ன பண்ணுவார்? கீதா :முதல்ல, குளிச்சிட்டு சாமி கும்பிடுவாரு டாக்டர் : அப்புறம்? கீதா :அப்புறம் காபி போட்டு வைச்சிட்டு என்னை வந்து எழுப்புவாரு….. டாக்டர் : அப்புறம்? கீதா :அப்புறம்…. அழுக்குத் துணியையெல்லாம் எடுத்து வாஷிங் மெஷின்ல போடுவாரு…. டாக்டர் : அப்புறம் அப்புறம்? கீதா :அப்புறம் என்ன? அப்புறமா, தோசை சுடுவாரு, சட்னி அரைப்பாரு, எனக்கும் பிள்ளைகளுக்கும் டிபன் பாக்ஸ் ரெடி பண்ணுவாரு….. டாக்டர் : சரி… அப்புறமா என்ன பண்ணுவாரு? கீதா : அப்புறமா என்னை ஆபீசுல ட்ராப் பண்ணிட்டு அவரோட ஆபீசுக்கு போவாரு டாக்டர் : ஏம்மா? அவுரு எல்லாம் ஒழுங்கா பொறுப்பாத்தானே நடந்துகிட்டு இருக்கிறமாதிரி இருக்கு? அப்புறம் என்ன? ஏன் அவருக்கு மூளை வளர்ச்சி கம்மின்னு நெனைக்கிறீங்க? கீதா : ஐயோ டாக்டர். அவர் பண்ணுற அட்டகாசத்தைப் பத்தி நான் இன்னும் சொல்லலை........ காலையில் நியூஸ் பேப்பர படிச்சிட்டு அத சோபாவுலேயே போட்டுடுவாரு. ஒழுங்கா மடிச்சி கப்போர்டுல வைக்கிறதில்லை. என் புடவைகளை காயப்போடும்போது, அப்பப்ப கிளிப் மாட்டாம உட்டுடுவாரு. அது பறந்துபோய் கீழ் ஃப்ளாட்டுல விழுந்து அவங்களுக்கும் எனக்கும் சண்டை வருது. அப்புறம் எப்ப பாத்தாலும், தோசை, இட்லி இல்லேன்னா உப்புமாதான்பண்ணுறாரு. ஒரு இடியாப்பம், பிரியாணின்னு எதுவும் பண்ணத் தெரியலே…. அதிலயும் நாலு தோசை சுட்டா ஒண்ணை கருக்கிடுராரு. இவர வச்சிக்கிட்டு எப்படி நான் குடும்பம் நடத்துறது? நீங்களே சொல்லுங்க
😃😃
| |
மனவியல் ரீதியிலான தீர்வு.வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேசை மீதிருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார். “இது எவ்வளவு வெயிட் இருக்கும்?” 100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள். “இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல” வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?” “ஒண்ணுமே ஆகாது சார்” ”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?” “உங்க கை வலிக்கும் சார்” “ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…” “உங்க கை அப்படியே மரத்துடும் சார்” “வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?” “இல்லை சார். அது வந்து…” “எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?” “கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்” ”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?” நம்ம எல்லாருக்குமே இது தான் மனவியல் ரீதியிலான தீர்வு.
குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம்.
பதிமூன்று வயதில் படிப்பு போச்சு! வீட்டில் ஏழ்மை! தொடர்ந்து பல நாட்களாக பசி! வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு! ஒருநாள், பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சொருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான் அந்த சிறுவன்.
ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார்.
பையனிடம்,””டேய்! இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்,” என்றார்.
'ஆஹா…இப்படி ஒரு வேலையா?’ பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார். வெளியே நிற்பது தன் குதிரை தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தை பளபளப்பாக துடைத்து வைத்திருந்தான் பையன்.
சற்று அதிகமாக பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர். சில்லரை கிடைக்குமென நினைத்தவனின் கையில் பணம், மகிழ்ந்தான்.
மறுநாள், நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, குதிரை லாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகி விட்டான்.
அதோடு விட்டானா! நாடகங்களையும் கவனித்தான். மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான். அந்தச் சிறுவன் தான், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாமேதை ஷேக்ஸ்பியர்.
மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நல்ல நேரம் வரும். வருகிற சந்தர்ப்பத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம்.
கல்ப்பாக்கம் ஜெகன் |
பறக்கும் கம்பளம்
சில வாரங்களுக்கு முன், எனக்கு நன்கு அறிமுகமாகிய ஒரு தம்பதியினருடன் அவர்களது மகளைக் காணக்கிடைத்தது. 2 வயதானஅவளுக்கு மாயா என்று அற்புதப் பெயர். முத்துப்போன்ற பற்கள். நிறைந்த சொக்கு, தீர்க்கமான கண்கள், நெளி நெளியான மினுங்கும் வாசனையான பட்டுப்போன்ற தலைமுடி.
ஒரு தேனீர்க்கடையினுள்தான் அவளைக் கண்டேன். குழந்தைகளின் அருகில் செல்லும்போது கிடைக்கும் பரிசுத்தமான அலைவரிசையை மனது உணர்ந்துகொண்டிருக்க அவளருகே இருந்து அவளுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். முன்னே உட்கார்ந்திருந்த அவளின் தாய் தந்தையர் மறைந்துபோனார்கள். அதன்பின் உலகமும் மறைந்துபோனது. எமக்கான ஒரு அற்புத உலகம் திறந்துகொண்டது. அப் புதிய உலகில் ஏறத்தாள 50 வயது வித்தியாசமுடைய அவளும் நானும் மட்டுமே இருந்தோம்.
இப்படியான ஒரு அனுபவம் அண்மையில் எனக்கு வாய்திருக்கவில்லை. அதனை அனுபவித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எனது குழந்தைகள் இருவரும் பெண்குழந்தைகளே. அவர்களுக்கிடையில் 4 வயது இடைவெளியுண்டு. மூத்தவளுக்கு 20 வயதாகிறது இப்போது.
எனது பால்யத்துக்காலம் தொடக்கம் குழந்தைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும் நான் தந்தையானபின்பே குழந்தைகளுடனான எனது உறவு முற்றிலும் வேறுபடத் தொடங்கியது. குழந்தைகளைப் பார்ப்பது, ரசிப்பது, அவர்களுடன் பழகுவது, அவர்களுடன் விளையாடுவது, அவர்களை தூக்குவது என்று அனைத்திலும் மனதினை அமைதிப்படுத்தும ஒரு மென்மையான குதூகலப்படுத்தும் ஒரு உணர்வு உண்டு என்பதை கண்டுகொண்டிருக்கிறேன். நான் என்னை முற்றிலும் மறந்துபோகும் நிலை அது.
எனது குழந்தைகளில் மட்டும இவற்றை நான் உணர்ந்ததில்லை. நான் பழகும் அனைத்துக் குழந்தைகளிலும் இந்த பரிசுத்தமான உணர்வினை அனுபவித்திருக்கிறேன். குழந்தைகளின் நம்பிக்கையை பெறுவது என்பது இலகு அல்ல. முதல் முறை அவர்களைக் காணும்போது நாம் எவ்வாறு அவர்களைக் கையாள்கிறோம் என்பதில் தங்கியிருக்கிறது எதிர்காலத்து உறவு. இதை நான் உணர்ந்தபோது ஒரு குழந்தை என்னைக் கண்டால் பயந்து ஓடத்தொடங்கியிருந்தது.
வடக்கு நோர்வேயில் கல்விகற்றுக்கொண்டிருந்த காலத்தில் எனது ஆசிரியர்கள் சிலரின் வீடுகளுக்கு அருகில் ஒரு வருடம் தங்கியிருந்தேன். அங்கிருந்த ஒரு ஆசிரியருக்கு ஒரு பெண் குழந்தை. அவளுக்கு 2 வயதிருக்கும் அப்போது. முதல் நாள் அவளைக்கண்டபோது அவளுக்கு பின்புறமாக நின்று “பாஆஆஆ” என்று சத்தமிட்டேன். பயந்து அழுதபடி வீரிட்டுக் கத்தியபடியே திரும்பிப்பார்த்தாள். அதன் பின் என்னைக் கண்டாலே அழத்தொடங்கினாள். அந்த ஒரு வருடமும் என்னைக் கண்டதும் அழுதாள். அங்கிருந்த ஏனைய ஆசிரியர்களுக்கும் சிறிய குழந்தைகள் இருந்தார்கள். அவர்களுடன் நான் நட்பாயிருந்தேன். ஆனால் அந்த பெண்குழந்தை மட்டும் என்னுடன் நட்பாகவே இல்லை. அதன்பின் நான் குழந்தைகளை பயமுறுத்துவதை விட்டுவிட்டேன்.
இப்போது என்னுடன் நட்பாகாத குழந்தைகளே இல்லை. குழந்தைகளுடனான நட்பு வாழ்வின் மிகவும் வலிமிகுந்த காலத்தை கடந்துகொள்ள உதவியது. உதவிக்கொண்டிருக்கிறது. வளர்ந்தோருடனான எனது நட்பு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. விரல்விட்டு எண்ணலாம் எனது நண்பர்களை. ஆனால் எனக்கு பல குழந்தைகள் நட்பாக இருக்கிறார்கள்.
அவர்களில் பலர் என்மீது காட்டும் நம்பிக்கை வாழ்வின் மீதான பிடிப்பினை தக்கவைத்துக்கொள்ள உதவியிருக்கிறது. எங்கு என்னைக் கண்டாலும் எதுவித முன் கற்பிதங்களும் இன்றி தூய்மையான அன்புகலந்த புன்னகையுடன் ஓடிவந்து “சஞ்சயன் மாமா” என்னும் அவர்களது அன்பின் கரைந்துபோகும் நேரங்கள் வாழ்க்கையின் மீது நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் தந்திருக்கின்றன.
குழந்தைகளுடனான உரையாடல்கள் எப்போதும் அழகானவை. கருப்பொருள்களும் அப்படியே. ஆண் குழந்தைகளின் கருப்பொருள்களும் பெண் குழந்தைகளின் கருப்பொருள்களும் வெவ்வேறானவையாகவே இருக்கும். ஆண் குழந்தைகள் விளையாட்டு, திரைப்படங்கள், கணிணி என்று உரையாட விரும்புவார்கள். இவர்களை மென்மையான மனித உறவு, இயற்கை, சூழல் என்று பேசவைப்பதற்கு முயற்சிப்பேன். ஆனால் பெண் குழந்தைகள் பொம்மைகள், நிறங்கள், சித்திரம், உணவு, நட்பு, புத்தகங்கள் என்று பேசினாலும் இயற்கை, சூழல் என்பவற்றில் அதிக கவனமாய் இருப்பார்கள்.
குழந்தைகளிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது அதிகம். பெரியவர்களிடம் இல்லாத மனிதநேயத்தை, உதவும் மனப்பான்மையை, மிருங்களிடம் அவர்கள் காட்டும் நட்பை, இயற்கையின் மீதான அவர்களது கவனம், விருப்பம் என்பவை என்னை சிந்திக்கவைத்திருக்கின்றன. வாழ்க்கை மீதான அயர்ச்சி வளர்ந்த மனிதர்களான எம்மை வாழ்க்கையின் மகிழ்ச்சியான பக்கங்களை அனுபவிப்பதை தடுக்கிறதோ என்று நான் எண்ணுவதுண்டு. அப்படியும் இருக்கலாம்.
குழந்தைகளிடம் நான் கண்டுகொண்டு இன்னுமொரு அழகிய பழக்கம் “சிரிப்பு”. ஒரு சம்பாசனையின்போது எத்தனை முறை அவர்கள் சிரிக்கிறார்கள், புன்னகைக்கிறார்கள் என்பதை அவதானியுங்கள். அதோபோல் வளர்ந்தவர்களுடனான உரையாடலில் அவர்கள் எத்தனை முறை சிரிக்கிறார்கள் என்று பாருங்கள். குழந்தைகள் ஒரு நாளைக்கு 400 முறையும் வளர்ந்தோர் 25 முறையும் சிரிக்கிறார்கள் என்று வாசித்திருக்கிறேன். சிரிக்கும்போது எமது மனமும் இலகுவாகின்றது. சுற்றாடலையும் நாம் மகிழ்வாக்குகிறோம். இங்கும் குழந்தைகள் எமக்கு கற்பிக்கிறார்கள். குழந்தைகளின் சிரிப்பின் ஒலிகூட மனதுக்கு அற்புதமானதொரு மருந்து. அந் நேரங்களில் அவர்களின் முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் வானவில்லைப்போன்று அழகாயிருக்கும்.
மனம் வருந்தியிருக்கும் குழந்தையை, அழும் குழந்தையை, ஏதோ ஒன்றிற்காகப் அச்சபபடும், ஏங்கித் தவிக்கும் குழந்தையை ஆறுதல்படுத்தியிருக்கிறீர்களா? குழந்தையின் மனதோடு ஒன்றிப்போய் அதன்வலியை உணாந்து அணைத்து, அறுதல்படுத்தி, நம்பிக்கையூட்டி அவர்களை அமைதிப்படுத்தும்போது அவர்களின் மனதில் ஏற்படும் ஆறுதலான அமைதியின் ஓசையை உணர்ந்திருக்கிறீர்களா? ஒரு மனிதனை உயிர்ப்பிப்பதற்கு ஒப்பான அற்புதமான உணர்வு அது. விக்கி விக்கி அழும் குழந்தை மூச்சை ஒவ்வொரு முறையும் விக்கி விக்கி உள்ளே இழுக்கும்போது உங்களின் மூச்சும் திணருகிறது எனில் நீங்கள் பெருவாழ்வு வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். குழந்தைகளை தேற்றுவது என்பது ஒரு கலை. தாய்மார்களுக்கு அது இயற்கையாக அமைந்திருக்கிறது. சில அப்பாக்களுக்கும்தான்.
குழந்தைகளின் முன்னால் எப்போதாவது முட்டாளாக நடித்திருக்கிறீர்களா? அது ஒரு பெரும் கலை. இந்தப் பெரிய மனிதனுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று அவர்களை நினைக்கவைக்கவேண்டும். உங்களுக்குத் தெரியாததை கற்பிக்க முனையும் அவர்களுடைய மனது மகிழ்ச்சியில் நிறைந்திருக்கும். தம்மை ஒரு பெரிய மனிதாக நினைத்தபடி எமக்கு கற்பிக்கும் அவர்களது சொல்லாடல்கள், செய்கைகள், முகபாவனைகள் என்று அந்த உலகம் பெரியது.
ஒரு முறை 5 வயதான ஒருத்தியிடம் ஒரு சிவப்புப் பூ ஒன்று இருந்தது. நான் அவளிடம் “ஏன் பச்சை நிறமான பூ” வைத்திருக்கிறீர்கள் என்றேன். தலையில் கையை வைத்தபடியே “உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றாள்.” அதன்பின்னான அந்த மாலைப்பொழுதில் நான் நிறங்களை அவளிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அந்த மாலைப்பொழுது அழகானதாய் மாறிப்போனது. கடந்துபோன காற்றும் சற்று நிதானித்து எங்களை பார்த்தபடியே கடந்துபோயிருக்கும்.
குழந்தைகளுக்கு கதை சொல்வது எனக்குப்பிடிக்கும். பெண்குழந்தைகளுக்கு ஒருவித கதைகளும், ஆண் குழந்தைகளுக்கு இன்னொருவித கதைகளுமே பிடிக்கின்றன. குடும்ப உறுப்பினர்கள், அமைதியான மிருகங்கள், நிறங்கள், இயற்கை, அமைதியான நீரோட்டம் போன்ற சம்பவங்கள் உள்ளடங்கிய கதைகளை பெண்குழந்தைகளக்கு பிடிக்கும். ஆனால் ஆண் குழந்தைகளுக்கு விறுவிறுப்பான கதைகள், அரக்கர்கள், மூர்க்கமான மிருகங்கள், ஓடுதல், பாய்தல், வேகம் என்ற கதைகளை; பிடிக்கும். என்னிடம் பெண்குழந்தைகளுக்கான கதைகள் அதிகம் உண்டு. அதில் பல என்னால் உருவாக்கப்பட்டவை. என் குழந்தைகளை அரக்கர்களிடம் இருந்தும் பூதகணங்களிடம் இருந்து பறக்கும் கம்பளத்தில் காப்பாற்றி அழைத்து வந்திருக்கிறேன். வாய்பிளந்திருந்து கதை கேட்டிருப்பாள்கள் என்னவள்கள்.
குழந்தைகளை உறங்கவைப்பது எனக்குப் பிடிக்கும். எந்தக் குழந்தையும் மனம் அமைதியில்லாதபோது அல்லது நம்பிக்கையில்லாதவர்களின் கையில் உறங்காது. உங்கள் கையில் ஒரு குழுந்தை உறங்கிப்போகிறது என்றால் நீங்கள் அதிஸ்டசாலி. மெதுவாய் தாலாட்டுப்பாடி அல்லது ஒரு ஆறுதலான ஒலியெழுப்பி குழந்தைகளை தூங்கவைக்கும்போது என் மனமும் ஒருநிலைப்படுவதை நான் உணர்ந்திருக்கிறேன். தூக்கத்தின் மயக்கத்தில் பாரமாகிப்போகும் இமைகளையும், தூங்கிப்போனபின் முகத்தில் வந்தமரும் பேரமைதியும், சீராக மூச்சும்… அப்பப்பா அது ஒரு அற்புதமான அனுபவம்.
குழந்தைகளின் உலகம் அற்புதமானது. அதற்குள் நுளையும் தகுதி எமக்கு உண்டா இல்லையா என்பதை குழந்தைகள் அறிவார்கள். நாம் அவர்களின் உலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டால் அதைவிட பேரதிஸ்டம் வேறெதுவும் இல்லை. இந்த விடயத்தில் நான் பெரும்பேறு பெற்றவன்.
பேரின்ப முக்தியடைய விரும்புபவரா நீங்கள். அப்படியாயின் நீங்கள் தேடும் முக்தி உங்கள் வழிபாட்டுத்தலங்களில் இல்லை.
சஞ்சயன்
| |
50 ரூபாய் நோட்டு - கேரளாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் மொழிபெயர்ப்பு !
போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்க விட பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய் படித்தேன்.
அதில் " என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கைலாவது கிடைத்தால் தயவுது செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டு கொள்கிறேன். எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது.
எனக்கும் பொழுது போகவில்லை, அந்த குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். "இந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்க தான் அந்த கண் தெரியாத அம்மா இருக்கு"
அங்கே ஓர் சிறிய கீத்து .கொட்டகை. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காது. வெளியில் , கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா . என் காலடி சத்தம் கேட்டதும், யாருப்பா நீ? அம்மா நான் இந்த வழியாக வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அது உங்களிடம் தரலாம் என்று வந்தேன். கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார். தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர் வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சது என்று சொல்லி குடுத்துட்டு போறாங்க.. அந்த கடிதம் நான் எழுதவில்லை.எனக்கு எழுத படிக்க தெரியாது. பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லி கொடுத்து திரும்பினேன். தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடிதத்தே மறக்காமல் கிழித்து போட்டு விடு என்று அறிவுரைத்தாள் அந்த தாய்.
என் மனதில் வித விதமான எண்ணங்கள். யார் அந்த கடிதத்தை எழுதி இருப்பார். அந்த கடித்ததே கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவொருவரிடமும் கூறி கொண்டுதான் இருப்பார். ஆனால் யாரும் அப்படி செய்யவில்லை. யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லி கொண்டேன். நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்க்கு ஆயிரம் வழி.
மனதில் யோசித்து கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம். " அண்ணே இந்த விலாசம் எங்கே என்று சொல்ல முடியுமா? கீழே இருந்து 50 ரூபாய் கிடைத்தது. அந்த அம்மா கிட்டே குடுக்கணும். வழி சொல்றீங்களா?
Arun Kumar
|
செவிட்டு மனைவி என்று நினைத்த கனவனுக்கு விழுந்த அறை ; ஒரு குட்டி கதை....!
ஒருத்தன் தன் மனைவி மேல்
அதீத அன்பு வைத்திருந்தான்... ஆனால் அவனுக்கு சிறு கவலை... கொஞ்சநாளகவே மனைவிக்கு காது சரிவர கேட்க்கவில்லை....அவளுக்கே தெரியாமல் அவளது குறையை போக்க நினைத்தான்....
ஒரு காது டாக்டரை அணுகி.... டாக்டர் சார்...
என்மனைவிக்கு காது கேட்கவில்லை.. எனவே அவளுக்கே தெரியாமல் அந்த குறையை.நீங்கள்தான் போக்கவேண்டும்...
டாக்டரும்..ஓகே...ஆனால்...உங்கள் மனைவிக்கு எவ்வளவு தூரத்தில் நின்று கூப்பிட்டால் காது கேட்க்க வில்லை என்பது தெரிஞ்சாதானே வைத்தியம் பாக்க வசதியா இருக்கும்....
சுத்தமா கேக்கலையா...?
100அடி தூரத்துல இருந்து கூப்பிட்டா கேட்கலையா...? 10அடி தூரத்திலிருந்தா....இப்படி....? அதை முதலில் தெரிந்து கொண்டு வா என்றார்...
அவனும்.... சரி என்று
வீட்டுக்கு போனான்....
அவன் மனைவி..கிச்சனில் ஏதோ சமையல்
செய்து கொண்டிருந்தாள்....
இவன் வாசலுக்கு வெளியே நின்று கொண்டு
தன் சோதனையை ஆரம்பித்தான்...
ஹே...ய்....மரகதம்...இன்னைக்கு என்ன டிபன்
காலையில.....
பதில் இல்லை....
சரி கொஞ்சம் பக்கத்துல போய் கேட்ப்போம்ணு...நெனைச்சிக்கிட்டு...
கிச்சனுக்கு வெளியில நின்னுக்கிட்டு...
அடியேய் மரகதம்...இன்னைக்கு என்ன காலை டிபன்.....?
அப்பவும் wife ta இருந்து....
No responce....! .. என்னடா இதுன்னு நெனைச்சுக்கிட்டு...
மனைவி பக்கத்துல போய்...
நேருக்கு நேர் நின்னுக்கிட்டு....
ஏன் டார்லிங்... நான் கேட்டது உன் காதுல விழலையா...இன்னைக்கு என்ன டிபன் செல்லம்...னு...?
கேட்டு முடிக்கும் முன்பு....அவன் கன்னத்தில்
பளார்னு...ஒரு அறை விழுந்தது....
யோவ்....நன்னாரிப்பயலே....
நீ மொதோவாட்டி கேட்டப்பயே.....இன்னைக்கு. உப்புமா.....உப்புமா...னு...நாயா..கத்தறேன்...
உன்காதுல..விழாம....ஏன்யா ஏன் உயிர எடுக்குற..ன்னு....
ஹாஹாஹாஹா........
நீதி.... மற்றவர் குறை காணும் முன்
உன்னை சரி செய்..
ஒரு வாலிபன் ஒரு பெண்ணை வெகு நாட்களாக பின் தொடர்ந்து வந்தான்.
"இவன் எதற்காக என் பின்னால் வரவேண்டும்! யாரு இவன். என்னை காதலிக்கிறானா..என யோசித்தாள் அந்த பெண். தன் தந்தையிடம் அவனை பற்றி கூற, அவன் என்னிடம் அனுமதி வாங்கிக் கொண்டுதான் உன்னைப் பார்க்க வருகிறான். நீ பயப்படாதே, அவன் உன்னை எந்த தொந்தரவும் செய்யமாட்டான். என்று தந்தை சொல்கிறார். என்னப்பா இது!
ஏன் இப்படி??? என்று அவள் கேட்க.
உனக்கு இருதய புற்றுநோய் இருந்ததே ஞாபகம் இருக்கிறதா! அவன் தாயார் தான் இறந்த பிறகு அவர் இதயத்தை உனக்கு தானமாக கொடுத்தார் என்று தந்தை சொல்ல, இதை கேட்டவள் அதிர்ந்து போய் விடுகிறாள். அவர்களுள் நட்பு ஏற்பட்டு 1 வருடத்தில் காதலாக மாறிவிட்டது.
அவர்களுக்கு ஒரு பெண் குழந்தைப் பிறந்தது... அந்த குழந்தைக்கு தன் தாயாருடைய பெயரை வைத்து "வாங்கம்மா"! "சாப்பிடுங்கம்மா"! என்று செல்லமாகவும், மரியாதையாகவும் கொஞ்சுவான். தன் தாயாரின் நினைவு தினம் அன்று இரவு அம்மாவின் கல்லறைக்கு சென்றுவிட்டு வீடு வருகிறான்.
அப்போது அந்த 2 வயது குழந்தை தூக்கத்தில் தேன் சிந்தும் குரலில் "எங்கப்பா போய்ட்டு வர" விஷப்பனி பெய்கிறதல்லவா!" சீக்கிரம் வீடு வரக்கூடாதா"! என்று சொல்கிறது. அந்த குழந்தையின் குரல் தன் தாயாரின் குரல் போல் இருப்பதை உணர்ந்தான். 2 வயது குழந்தை எப்படி பேசமுடியும் என்று உறைந்து பார்க்கிறான். அந்த குழந்தை மறுபடியும் தூக்கத்தில் உளறியது.. "சாப்டியாப்பா"! நான் வேணா ஊட்டி விடவா"!!! இதை கேட்டவன் "அம்மா" என்று அலறி தன் குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டு "என்ன பெத்த ஆத்தா! அம்மா" அம்மா" அம்மா!!! கதறி அழுகிறான். கணவனின் தாய் பாசத்தை பார்த்த அவன் மனைவியும் அழுகிறாள். ((நாம் எப்படி இருந்தாலும் நம்மை நேசிக்கும் ஒரே ஜீவன் நம் தாயார் மட்டும் தான் நண்பர்களே. பெற்ற தாயை தவிர வேற யாரிடமும் அதிக அன்பு வைத்து விடாதீர்கள், அதை போல ஒரு சுயநலமற்ற அன்பு வேறு எதுவும் இல்லை உலகில். Jagan G Kalpakkam
😴💤
| |
ஒரு பேருந்து நிலையத்தில் ஓர் பெண் தன்னுடையபையனுடன் பதற்றமாக நின்று கொண்டிருந்தாள்.பக்கத்தில் உள்ளவர்கள் என்னவென்று கேட்டனர்.
"இவன் காசை முழுங்கிட்டான்.என்ன செய்றதுன்னுதெரியலை''
ஆளாளுக்கு மருத்துவம் சொல்ல ஆரம்பித்தார்கள். ""நாலுவாழைப் பழத்தை ஊட்டிவிடு. தானா வெளியே வந்துடும்''
"ஆஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே எடுத்துப் பார்... ''
கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் பையனைத்தூக்கிக்குனிய வைத்து
முதுகில் தட்டிக் கொடுத்தார். பையன் விழுங்கிய காசுவெளியே வரவில்லை.
அப்போது டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர் வந்தார்.பையனைத்தூக்கி, தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி, ஒருதட்டுத் தட்டினார். காசு வெளியே வந்து விழுந்தது.
எல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அந்தப் பெண்நன்றியுடன் அவரைப் பார்த்தாள்.
"சார் நீங்க டாக்டருங்களா?''
"இல்லை இன்கம்டாக்ஸ் ஆபிஸர். எங்கே, எப்படித்தட்டினால் காசு விழும்னு எனக்குத் தெரியாதா?
கல்ப்பாக்கம் ஜெகன்
|
ஐம்பது, அறுபதுகளில் பிறந்த எங்களைப் போன்றோர்,இப்போது அறுபது, எழுபதைத் தொட்டிருப்பார்கள். எங்களது இளமைக் காலங்களில் பெரிய செல்வ நிலையில் இல்லை என்றபோதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக ஞாபகம். மின் விசிறி, குளிர் பதனப்பெட்டி, கார், தொலைபேசி போன்ற மிக அத்தியாவசிய பொருட்கள் இல்லை என்ற போதிலும் பனை ஓலை, வெட்டிவேர் விசிறி, மண் பானை, சைக்கிள், தபால் போன்ற சிலவற்றை வைத்துக் கொண்டே சந்தோஷமாக இருந்தோம். உஷ்ணத்திலும், கொசுக்கடியிலும் கூட நிம்மதியாக உறங்குவோம். வீட்டில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்போம். 'உடம்புக்கு வரும்' என்ற அம்மாவின் அதட்டலையும் பொருட்படுத்தாமல், மழை வந்தால் நனைவோம். அம்மாவின் கஷாய வைத்தியத்தின் துணையோடு பல நோய்களிலிருந்து மீண்டு வருவோம். மாலை வேளைகளில் வீட்டுக்குள் இருப்பது என்பதை மிகப் பெரிய பாவமாகக் கருதுவோம். வெயில் மழை வித்தியாசமில்லாமல் தெருவில் விளையாடுவோம். 'ஊர்ப்பட்ட வெயில் எல்லாம் உன் தலையில்தான், என்ன நிலாவா காயிது, இப்படி உச்சியிலே ஆடுவதற்கு’ என திட்டிக்கொண்டே அம்மா ஞாயிற்றுக் கிழமைகளில் தலையில் அடித்து எண்ணெய் தேய்க்கும்போது வருத்தப்படவே மாட்டோம். அன்று அம்மா செய்யும் கறிக்குழம்பை சாப்பிட்டுவிட்டு மத்தியானம் வரும் சுகமான தூக்கத்தை அனுபவிக்கும்போது, 'எண்ணெய் குளியல் ஆனால் தூங்கக்கூடாது; உடல் உஷ்ணம் கண் வழியேதான் வெளியே போகணும்' என்ற அம்மாவின் விஞ்ஞானத்தைப் பொருட்படுத்தாமல் மாலை ஐந்து வரை உறங்கி எழுவோம்! ஓவ்வொரு பருவத்தில் கிடைக்கும் ஈச்சம்பழம், வெள்ளரி, இலந்தை, நாவல் பழங்கள், சீத்தாப்பழம், கொடுக்காப்புளி, நுங்கு போன்ற மலிவான பண்டங்களில் மனதைப் பறிகொடுப்போம். புளியம்பழங்களை, நாக்கு எரிந்தாலும் பரவாயில்லை என்று ஆசை ஆசையாய்த் தின்று தீர்ப்போம். கருப்பட்டி காபீயை சந்தோஷமாக அருந்துவோம். கடலை மிட்டாய், கமர்கட், ஜவ்வு மிட்டாய், பஞ்சுமிட்டாய் போன்ற மலிவான திண் பண்டங்களிலேயே, மன நிறைவு கொள்வோம். வற்றல் போடுவதற்காக அம்மா செய்யும் களி நடுவில் குழி செய்து, நாட்டு சர்க்கரை நிரப்பி உண்பதில் பரவசம் அடைவோம். மார்கழி மாதத்தில் பெருமாள் கோவிலில் கிடைக்கும் ருசியான பொங்கலுக்காக, கஷ்டப்பட்டு, அதிகாலையில் எழுந்து செல்வோம். நவராத்திரி சமயத்தில் மாமிகள் வீடுகளுக்குத் தவறாது விஜயம் செய்து விதவிதமான சுண்டல் வகைகளை ருசி பார்ப்போம். தெரு கிரிக்கெட் தொடங்கி பம்பரம், கோலி, கில்லி போன்ற எந்த ஒரு விளையாட்டையும் விட்டு வைக்காமல் ஆடுவோம். அடுத்த தெரு டீமுடன் போட்டியாக ஆடுவதை, ஒரு மானப் பிரச்சினை போல் எண்ணிக் கொண்டு வெறியுடன் விளையாடுவோம். வெற்றி பெற்றால் கொண்டாடுவோம். தோற்றால் எரிவோம். ஆனால் அதே டீமுடன் சேர்ந்து கொண்டு அடுத்த பேட்டை நபர்களுடன்,எங்கள் பேட்டை மனத்தைக் காக்க விளையாடுவோம். பள்ளிக்கு நண்பர்களுடன் சேர்ந்து ஆறு கி.மீ நடந்து செல்கையில் உலக அறிவை விருத்தி செய்வோம். வீட்டில் விருந்தினர் வந்தால் பன்னீர் சோடா வாங்கி வர கடைக்கு ஓடுவோம். உறவினர் பையன் விலையுயர்ந்த சட்டை போட்டு வந்தால், பொறாமையுடன் பார்த்து அடுத்த மூன்று நாட்களுக்கு உள்ளுக்குள் வெந்து புழுங்கி, நான்காம் நாள் அதை சுத்தமாக மறந்து இயல்புக்குத் திரும்புவோம். தபால் தலை, தீப்பெட்டி லேபிள் சேகரிக்கும் பொழுதுபோக்கில், நண்பர்களுடன் வர்த்தக பேரம் பேசி, பண்டம் மாற்றிக் கொள்வோம். எங்கள் பள்ளி உங்களுடையதை விட எவ்வகையில் உயர்ந்தது என்று வாதிடுவோம். சண்டை முற்றி, சிறிது நாட்கள் பேசாமல் இருந்து பிறகு ஒரு நடுநிலை நண்பன் மூலம் சமரசம் ஆகி மீண்டும் உயிர்த் தோழர்களாக மாறுவோம். பரீட்சையில் தோற்ற நண்பனுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றி, நட்பு மாறாமல் தொடர்ந்து செயல்படுவோம். எப்போதாவது ஒரு வார இறுதியில், சினிமா அல்லது சர்க்கஸ் போகப் போகிறோம் என்று வீட்டில் சொன்னால் இரண்டு நாட்கள் முன்னமே தயாராகி நிற்போம். பார்த்து வந்த சினிமா பற்றி அந்த வாரம் முழுதும் நண்பர்களுடன் பேசுவோம். வீட்டில் உள்ள பெரிய வானொலிப் பெட்டி அருகே காதை வைத்து கிரிக்கெட் வர்ணனையை, புரிந்தும் புரியாமலும் ஆங்கிலத்தில் கேட்டு ஆர்ப்பரிப்போம். சினிமா செய்திச்சுருளில் காட்டப்படும் நாற்பது நொடி கிரிக்கெட் ஒளிபரப்பைப் பரவசமாகப் பார்ப்போம். 'பட்டோடி என்னமாய் பௌண்டரி அடித்தான் பார்' என்று சிலாகிப்போம். அண்ணன்மார்கள் உபயோகித்த சட்டை, செருப்பு, புத்தகங்கள்தான் எங்களுக்குக் கிடைத்தாலும் (வேறு வழியில்லாமல்) சந்தோஷமாக ஏற்றுக்கொள்வோம். வருடத்திற்கு ஒருமுறைதான் கிடைக்கும் புது ஆடைகளுக்காக ஆவலுடன் காத்திருப்போம். ‘Pocket money’ என்றால் என்னவென்றே தெரியாதிருந்தோம். தீபாவளிப் பண்டிகைக்காக இரு வாரங்களுக்கு முன்னமே தயாராவோம். பட்டாசு மத்தாப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொளுத்தி மகிழ்வோம். பண்டிகை நாட்களில் அம்மா செய்து வைத்திருக்கும் பலகாரங்களை, நண்பர்கள் உறவினர் வீடுகளுக்குச் சென்று பட்டுவாடா செய்வோம் . ஆசிரியர்களிடம் நல்ல பெயர் வாங்கப் போட்டி போடுவோம். தப்பு செய்யும் மாணவர்களைப் பற்றி ஆசிரியரிடம் ‘போட்டுக் கொடுத்து' அதனால் அவர்களிடமிருந்து 'எட்டப்பன் பரம்பரை' என்று திட்டு வாங்குவோம் ஆசிரியர்களிடம் உண்மையான மரியாதையுடன் நடந்து கொள்வோம். பெற்றோர் பேச்சைக் கேட்காதவர் கூட ஆசிரியர் பேச்சைக் கேட்போம். காலாண்டு,அரையாண்டு மற்றும் முழுத் தேர்வுகளுக்குக் கூட்டாக நண்பர்களுடன் பழத் தோட்டத்துக்கு சென்று மாமரங்களில் அமர்ந்து, மாம்பழங்களை ருசித்தவாறே படித்து, வெற்றி பெறுவோம். விடுமுறை இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே என்று துக்கம் அனுஷ்டிப்போம். விடுமுறை நாட்களில் வெளியூர் சென்று வந்த விவரங்களை ஏதோ 'கங்கை கொண்ட சோழன்' பெற்ற வெற்றியைப் போல் பேசி, ஊருக்குப் போகாத நண்பர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வோம். புதுப் புத்தகங்களுக்கு சொந்தமாக அட்டை போட்டு, பெயர்த்தாள் ஓட்டுவதில் யார் சிறந்தவர் என்று போட்டியிட்டு மார் தட்டுவோம். பள்ளி விழாக்கள் அனைத்திலும் தவறாது கலந்து கொண்டு எங்கள் பங்களிப்பை வழங்குவோம். மொத்தத்தில் சிக்கனம் பொருளாதாரம் போன்ற நெருக்கடிகள் இருந்தாலும், இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்து, கிடைத்த இளமைப் பருவத்தை வீணாக்காமல் அனைவரிடமும் நட்பாக இருந்து நிறைவாகவே வாழ்ந்ததாக எண்ணுகிறோம். வீட்டுப் பெரியவர்கள் கொடுத்த 'கட்டுப்பாடான சுதந்திரம்' என்ற வட்டத்துக்குள் வாழ்ந்தோம். இன்றைக்கு உள்ள வசதிகளின் மூலம் கிடைக்கப் பெறும் அறிவாற்றல் அன்றைக்கு எங்களுக்கு இல்லை என்றாலும், இப்போது இருக்கும் புற அழுத்தங்களும் அப்போது எங்களுக்கு இல்லை என்பது உண்மை. எனினும், அன்றைய சூழலில் அருமையான, வாழ்க்கை நடைமுறை, அனுபவ அறிவைப் பெற்றோம் என்ற திருப்தி என்றும் எங்களுக்குண்டு. | |
தஞ்சை பெரிய கோயில் கட்டும் பணி வேகமாக நடந்து கொண்டிருந்தது. சோழப் பேரரசர் ராஜராஜ சோழன் அந்தப் பணியில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். ஒரு நாள், “கோயில் வேலை எப்படி நடைபெறுகிறது?” என்பதை அறிய விரும்பிய அவர், ஒரு வழிப்போக்கனைப் போல் மாறுவேடம் பூண்டு கோயில் பணி நடக்கும் இடத்துக்குச் சென்றார். அவரை அரசர் என்று எவரும் அறிந்து கொள்ளவில்லை. அப்பொழுது ஒரு பெரிய பாறையைச் சுவரின் மேல் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். வேலையாட்கள் பலர்ம் ஒன்று சேர்ந்து கயிறு போட்டு இழுத்தும் அந்தப் பாறை சிறிதும் நகரவில்லை. எல்லோரும் சோர்வு அடைந்தார்கள். அங்கிருந்த மேற்பார்வையாளரோ, “என்னை எல்லோரும் ஏமாற்றுகிறீர்கள். இந்தப் பாறையை மேலே ஏற்ற முடியவில்லையா?” என்று கோபத்துடன் கத்திக் கொண்டிருந்தான். அவனருகில் போன அரசர், “ஐயா! நீங்களும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாறையைத் தூக்க முயற்சி செய்யக் கூடாதா?” என்று கேட்டார். “நான் இங்கு மேற்பார்வையாளன் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா?” என்று ஆணவத்துடன் கேட்டான் அவன். “அப்படியா?” என்ற ராஜராஜசோழன் அங்கிருந்த வேலைக்காரர்களுடன் சேர்ந்து அந்தப் பாறையைத் தூக்க முயற்சி செய்தார். ஒரு வழியாக பாறை மேலே போய்ச் சேர்ந்தது. பெருஞ்செல்வந்தரைப் போலிருந்த அவர் வேலையாட்களுடன் சேர்ந்து வேலை செய்தது அந்த மேற்பார்வையாளனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. மறுநாள் பேரரசரிடமிருந்து அந்த மேற்பார்வையாளருக்கு ஒரு ஓலை வந்தது. அதில், “கோயில் திருப்பணிக்கு ஆட்கள் போதவில்லை என்றால் உடனே அரசருக்குச் சொல்லி அனுப்பவும். நேற்று வேலை செய்ததைப் போல் அவர் வந்து வேலை செய்வார்” என்று எழுதியிருந்தது. இதைப் படித்த மேற்பார்வையாளருக்கு ஆணவம் ஒழிந்தது. பின் அவனும் மற்ற வேலையாட்களுடன் சேர்ந்து வேலை செய்து அவர்களுக்கு ஊக்கமளித்தான். |
அன்பினால் மட்டுமே இரண்டு இதயங்கள் சேரும் .ஒரு குரு தன்னுடைய மாணவர்களைப் பார்த்துக் கேட்டார்...... "நாம் ஏன் கோபமாக இருக்கும் போது கத்திப் பேசுகிறோம்? " மாணவர்கள் சிறிது யோசித்துப் பார்த்தனர். அதில் ஒருவர், "நாம் நமது அமைதியை இழந்து விடுகிறோம். அதனால்தான் கத்துகிறோம்" அதற்கு அந்த குரு, "ஆனால் நமது அருகிலேயே நாம் கோபப்படும் நபர் இருக்கும் போது ஏன் கத்த வேண்டும்? நாம் மிகச் சாதரணமாக நமது அருகில் இருப்பவரிடம் பேசலாமே......... கத்த வேண்டிய அவசியம் இல்லையே……நாம் கோபமாக இருக்கும் போது ஏன் கத்த வேண்டும்?" மாணவர்கள் பல விடைகளைக் கூறினர். ஆனால் எதுவும் குருவுக்கு திருப்தியாக அமையவில்லை. அதற்கு மேலும் மாணவர்களை சோதிக்க விரும்பாமல் அவரே பதிலைக் கூறத் தொடங்கினார். "இரண்டு நபர்கள் ஒருவர் மேல் மற்றவர் கோபமாக இருக்கும் போது, அவர்களுடைய இதயங்களுக்கான இடைவெளி மிகவும் அதிகம். அப்பொழுது அந்த இரண்டு இதயங்களுக்கும் கேட்கும் விதத்தில் அவர்கள் கத்திப் பேசுகின்றனர். எவ்வளவுக்கெவ்வளவு அவர்கள் கோபமாக இருக்கின்றனரோ அந்த அளவுக்கு அவர்கள் இதயங்களின் தூரம் அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் இதயங்களுக்கு கேட்கும் விதமாக கத்துகின்றனர்." பிறகு, குரு தனது மாணவர்களைப் பார்த்து, "இரண்டு நபர்கள் காதலிக்கும் போது என்ன நடக்கிறது? அவர்களுக்குள் மிகவும் மெதுவாக பேசிக் கொள்வார்கள். ஏன்? அவர்களின் இதயம் நெருக்கமாக உள்ளது. அவைகளுக்கிடையேயான தூரம் மிகவும் குறைவு......... அவர்களின் காதல் அதிகமாக ஆகும் போது என்ன நடக்கும்? அவர்கள் பேசிக் கொள்ளவே மாட்டார்கள். வெறும் முணு முணுப்புதான் இருக்கும். இன்னும் அவர்களின் காதல் அதிகரிக்கும் போது அந்த முணு முணுப்பு கூட இருக்காது. வெறும் பார்வை பரிமாற்றம் மட்டுமே இருக்கும். அன்பினால் மட்டுமே இரண்டு இதயங்கள் சேரும். இது காதலுக்கு மட்டும் அல்ல.........நட்பிற்கும் தான்......." அன்பே சிவமும் அன்பே சக்தியும் அன்பே ஹரியும் அன்பே பிரமனும் அன்பே தேவரும் அன்பே மனிதரும் அன்பே நீயும் அன்பே நானும் அன்பே சத்தியம் அன்பே நித்தியம் அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் அன்பே மௌனம் அன்பே மோக்ஷம் அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்துமென்றாய்......-- | |
ஐடா ஸ்கடர் - வாழ்க்கை குறிப்பு நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் இந்தியாவை விட்டு வெளியேறுவதே நல்வாழ்வின் தொடக்காமென கருதினார் ஐடா ஸ்கடர். ஐடாவிடம் நல்வாழ்க்கையின் உதாரணம் கேட்போருக்கு அவரது மாறாத பதில், "அமெரிக்காவும், கோடீஸ்வரருடன் திருமணமும்" என்பது தான். இந்தியாவில் நிலவிய பஞ்சமும், தெருவோரம் கிடக்கும் பிணங்களும் தான் இந்தியாவை குறித்து ஐடாவின் நினைவில் நின்ற பின்பங்கள்.‘இந்தியா’ ஒருபோதும் தனக்கு ஏற்ற நாடல்ல என்பது ஐடாவின் கணிப்பு. அவளது கணிப்புகள் எல்லாம் பரமனின் அழைப்பில் மங்கி பின் மறைந்தது. அப்போது அவள் இந்தியாவில் தொண்டாற்றி வரும் தன் தந்தையோடு விடுமுறையை கழிக்க வந்திருந்தாள். அகல்கள் ஒளியை வீசிக்கொண்டிருக்கும் அறையில் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்த ஐடாவின் காதுகளில் சிலரது காலடியோசை வெளித் திண்ணையில் இருந்து வந்தெட்டியது. புத்தக பார்வையை கலைத்துவிட்டு கதவருகே வந்து எட்டிப் பார்த்தாள். அங்கு பிராமணர் ஒருவர் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருக்கும் தன் 14 வயது மனைவியை காப்பாற்ற வரும்படி வேண்டினார். “அம்மா! மருத்துவச்சிகள் கை விரித்து விட்டனர். எப்படியாவது என் மனைவியையும், பிள்ளையையும் காப்பாற்றுங்கள்” என்று கதறினார். ஐடா மகப்பேறுவில் அகரம் கூடா அரியாதவள், எனவே “என் தந்தை ஒரு சிறந்த மருத்துவர். அவர் வீட்டிற்கு வந்ததும் அவரை அழைத்து வருகிறேன்” என்றாள். “ஒரு அந்நியஆண் என் இல்லத்திற்குள் நுழைவதைக் காட்டிலும், அவள் இறப்பதே மேல்” என்று மறுத்து வெளியேறினார் பிராமணர். அந்த ஏழைப்பெண்ணுக்காக வருந்தினார் ஐடா. அவளால் வேறு என்ன செய்ய முடியும். கனத்த மனதுடன் புத்தகத்திற்குத் திரும்பினாள் ஐடா. சிறிது நேரத்தில் ஐடாவின் தந்தை வீடு திரும்பினார். நடந்ததை சொல்லி வருத்தமடைந்தாள் ஐடா. மீண்டும் காலடியோசை கேட்டது. பிராமணர் மறுபடியும் வந்திருப்பார் என்று நினைத்த ஐடா வாசலருகே ஓடோடி வந்தாள். ஆனால் அங்கோ ஒரு இஸ்லாமியர் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருக்கும் தன் மனைவிக்கு உதவி செய்ய வருமாறு ஐடாவை அழைத்தார். ஐடா ஒரு தேர்ச்சி பெற்ற மருத்துவரல்லாததால் ஐடாவின் தந்தை வந்து உதவுவதாக கூறினார். இதை கேட்ட இஸ்லாமியர் “என் மனைவியின் முகத்தை எனது குடும்பத்தாரைத் தவிர வேறு எந்த ஆணும் கண்டதில்லை. அப்படி இருக்க அயல்நாட்டவரான உங்களை என்னால் அனுமதிக்க முடியாது” சொல்லி மறுத்துவிட்டார். அவரது மனதை மாற்ற முயன்ற ஐடாவிற்கும் அவள் தந்தைக்கும் தோல்வியே மிஞ்சியது. வேறுவழியின்றி மறுபடியும் புத்தகத்தை தொடர்ந்த ஐடாவிற்கு மீண்டும் காலடியோசை கேட்கவே, திகிலோடும் குழப்பத்தோடும் சென்று பார்த்தாள். மூன்றாவதாக ஒரு உயர் குல இந்து மனிதர் தன் மனைவியின் பிரசவத்திற்கு ஐடாவை அழைத்தார். ஐடாவுக்கு அனுபவம் இல்லாததால் அவரது தந்தை வருவதாக தெரிவித்தார். “வேண்டாம்; என் மனைவி சாகட்டும்” என்ற அதே பதில் தான் இந்த முறையும் வந்தது. “அந்த இரவு என்னால் தூங்க முடியவில்லை... அது ஒரு பயங்கரமான இரவு. ஒரு பெண் உதவிக்கு இல்லாததால் இங்கே மூன்று பெண்களின் உயிர் பிரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் எனது அமெரிக்க தோழிகள் உல்லாச வாழ்விற்கு தொடர் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தனர். என்னால் அவர்களின் அழைப்பை நிராகரிக்க முடியவில்லை. அந்த இரவு வேண்டுதலிலும் வேதனையிலும் மட்டுமே நகர்ந்தது. அடுத்த நாள் காலை எனது எதிர்காலம் குறித்து தேவனுடைய விருப்பதை அறிந்து கொள்ள ஜெபத்தில் அமர்ந்தேன். என் வாழ்வில் முதல் முறையாக தேவனின் சத்தத்தை தெளிவாக உணர்ந்தேன். அந்த நேரமெல்லாம் தேவன் தமது ஊழியத்திற்கு என்னை அழைக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன் ஜெபத்தை முடித்து எழுந்த போது, தாரை தப்பட்டை சத்தம் கேட்க தொடங்கியது. உடனே எனது உள்ளத்தை திகில் தொற்றிக் கொண்டது. அது நிச்சயமாக யாரோ ஒருவருடைய மரண செய்தி என்பது எனக்கு தெரியும். வேலைக்காரர்களில் ஒருவனை கிராமத்திற்குள் அனுப்பி அந்த மூன்று பெண்களின் நிலையை விசாரித்து வருமாறு அனுப்பினேன். மூவருமே இறந்துவிட்டதாக விசாரித்து வந்தவன் கூறினான். எனது அறையை மறுமடியும் மூடிவிட்டு அழுதேன், இந்திய பெண்களின் நிலையை குறித்த பாரம் என் உள்ளத்தை ஆக்கிரமித்தது. நீண்ட நேர ஜெபத்திற்கு பின்னர் “நான் அமெரிக்கா செல்லவே தீர்மானித்தேன். ஆம்! அமெரிக்கா சென்று மருத்துவம் படித்து மீண்டும் இந்தியாவுக்கே வந்து அவல நிலையில் இருக்கும் பெண்களுக்கு தொண்டாற்றுவதே இறைவனின் நோக்கம் என்பதை புரிந்துகொண்டேன்.. ஐடா உயர்ந்த கல்லூரிகளில் பயிலும் வாய்ப்பை பெற்றார். நன்கு பயிற்சிபெற்ற மருத்துவராக ஐடா இந்தியா திரும்பினார். பெண்களுக்கான மருத்துவமனை ஒன்றை வேலூரில் நிறுவ வேண்டுமென விரும்பினார். எதிர்பாராத விதமாக ஐடாவிற்கு மருத்துவர் லூயிசா ஹர்ட்டிடமிருந்து கடிதம் வந்தது. அதில் வேலூரில் மருத்துவமனை அமைக்கப் பணம் தேவைப்படுகிறதா? பதில் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஐடாவிற்கு அந்த மூன்று பெண்களின் நினைவு வந்தது, இந்தியாவில் சுவர்களுக்கு பின்னால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்களின் அவலத்தை நினைத்தார். ஆம் பெண்களுக்கான மருத்துவமனை இங்கு உடனடி தேவை, நல்ல மருத்துவமனை கட்டுவதற்கு $50,000 தேவைப்படும் என்று பதில் எழுதினார். $50,000மா!! என்று பலரும் வாயைப் பிளந்தனர். அத்தொகையின் தற்போதைய மதிப்பு $500,000. $8000 திரட்டுவது சாத்தியமானது. ஆனால் உங்களால் அதில் பாதி பணத்தை கூட திரட்ட முடியுமா என்பது சந்தேகம் தான் இருந்தாலும் முயற்சி செய்யுங்கள் என்றனர். பலரும் தன்னை தாழ்வாக நினைப்பதை புரிந்து கொண்டார் ஐடா. அவர்களது எண்ணம் தவறு என்றும் பணம் தேவைப்பட்டால் அதைத் தர தேவனால் இயலும் என்றும் பதில் எழுதினார். ஐடா தானே நிதி திரட்ட முற்பட்டார். "யானை பசிக்கு சோழ பொறி" என்பதைப்போன்று சிறு துளியாய் டாலர்கள் வந்து சேர்ந்தன. இந்தியாவின் தேவை அதிகரித்துக்கொண்டே போனது. 10,000 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதம் தான் நிலவியது. பாரம்பரிய மருத்துவர்களிடம் சிறந்த மருந்துகள் இருந்தாலும் அதில் பெரும்பாலானவை பக்க விளைவை ஏற்படுத்தக் கூடியவை. இந்தியாவில் மருத்துவத்திற்கான அவசர தேவையை உணர்ந்தார். ஆனால மருத்துவமனை கட்டி முடிக்க குறைந்தது இரண்டாண்டுகள் பிடிக்கும். ஆகவே ஒரு சிறு அறையை தற்காலிக மருத்துவனை ஆக்கினார். திண்ணை காத்திருக்கும் அறையாக பயன்பட்டது. அவள் நோயாளிகளை நன்றாக கவனித்த போதிலும் சந்தேகம் தமிழ் இந்தியர்களை ஐடாவிடம் சிகிச்சை பெறுவதற்கு தடை செய்தது. அவளது முதல் சிகிச்சை தோல்வி அடைந்தது. ஐடாவிடம் சென்ற நோயாளி இறந்திவிட்டார் என்ற செய்தி வேகமாக பரவியது. பலரது சந்தேகம் வலுத்தது. இறுதியாக ஒரு உயர்ந்த ஜாதி இந்துப்பெண் கண் சிகிச்சைக்காக வந்திருந்தார். இம்முறை ஐடா வெற்றிகரமாக சிகிச்சை செய்து குணமாக்கினார். அதன்பின் அவளது சேவையின் தேவை அதிகரித்தது. சலொமி என்ற அவளது வீட்டு சமையல் பணிப்பெண் தான் ஐடா பயிற்சியளித்த முதல் செவிலியர். நாளொன்றுக்கு 100, 200, 300, 400, 500 என்று ஐடாவிடம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் உள்ள மொத்த மருத்துவர்களையும் கொண்டு வந்து சேவை செய்தாலும் “சமுத்திரத்தை காயத்தால் உரசியது” போலதான் இருந்தது அன்றைய தேவை. இந்தியப் பெண்களுக்கு சேவை செய்ய இந்திய பெண்களுக்கே பயிற்சி அளிக்கவேண்டுமென்று தீர்மானித்த ஐடா வேலூர் செவிலியர் பாடசாலையை உருவாக்கினார். செவிலியருக்கு பயிற்சியளிக்கத் தன்னால் கூடுமானால் மருத்துவருக்கும் பயிற்சி அளிக்கக் கூடுமென்று நம்பினார் ஐடா. மீண்டும் நம்பிக்கை ஜெயித்தது. வேலூர் மருத்துவக் கல்லூரி உருவானது. அது சுலபமாக நடக்கவில்லை. காலம் செல்லச் செல்ல நெருக்கடியின் விளிம்பிற்கு வந்தார் ஐடா. ஆனால் கடவுள் எப்பொழுதும் போலக் காப்பாற்றினார். இக்கட்டான நிலை ஒன்றில் ஐடா எழுதினார் “முதலில் நன்கு சிந்தனை செய்; பின்பு துணிந்து செய்; உண்மைகளை தெரிந்துகொள்; செலவை மதிப்பிடு; பணம் முக்கியம் அல்ல; நீ கட்டிக்கொண்டிருப்பது மருத்துவக் கல்லூரியல்ல; அது கடவுளின் ராஜாங்கம்” இது கடவுளின் விருப்பமென்றால் கடவுளே கல்லூரியைத் திறந்து வைப்பார் என்ற நம்பிக்கையின் பலனாய் கல்லூரி தொடங்கியது. தன் பாதத்தில் படிந்த இந்தியாவின் தூசியை தட்ட விரும்பிய அந்த பெண் பின்னாளில் இந்தியர்களின் இதய சிம்மாசனத்தில் இடம்பிடித்தார். பிரிட்டிஷ் மற்றும் இந்திய அரசாங்கம் அவருக்கு உயர்ந்த விருதுகளை வழங்கியது. காந்தியடிகள் அவரை தேடி சந்தித்தார். ஐடா சர்வதேச புகழ் பெற்றார். ஐடாவின் கடவுள் நம்பிக்கை அழிவில்லாதது. அதுவே அந்த மருத்துவச்சியின் மதிப்பிற்குரிய சான்றாக இன்றளவும் காலங்களை கடந்து நிலைநிற்கிறது, அவளது இறை நம்பிக்கையே அவளை விசித்திர மருத்துவச்சியாக்கி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. |
"என்னுடைய வெற்றிக்கான காரணம் ! “சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக்கொள்வேன். இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னைவிட்டு விலக ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை; மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள்தாம் வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன. ஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்… `கண்ணு… உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக்கொள்!’ என்றார். அந்த நாள்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது. புத்தாண்டின்போதோ, பண்டிகைகளின்போதோதான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். என்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக எனக்கு நானே என்னைப் பாராட்டிக்கொண்டேன். முட்டையை ஒரு வெட்டு வெட்டினேன். என் தந்தை அவருடைய கிண்ணத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தபோது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய கிண்ணத்தில் நூடுல்ஸுக்கு அடியே இரண்டு முட்டைகள் இருந்தன. அதைப் பார்த்துவிட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே திட்டிக்கொண்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி என்னிடம் சொன்னார்… `மகனே நினைவில்வைத்துக்கொள்… உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம். மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத்தான்.’’ அடுத்த நாளும் என் அப்பா இரண்டு பெரிய கிண்ணங்கள் நிறைய நூடுல்ஸ் சமைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸின் மேல் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார்… “மகனே… உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே தேர்ந்தெடுத்துக்கொள்!’ இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. நூடுல்ஸை அள்ளும் குச்சியால், கிண்ணத்துக்குள் அடிவரை எவ்வளவு துழாவிப் பார்த்தும் ஒரு முட்டைகூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்… `மகனே… எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பக் கூடாது. ஏனென்றால், சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக்கூடும், தந்திரத்தில் விழவைக்கும். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள். இதை எந்தப் பாடப்புத்தகங்களிலிருந்தும் கற்றுக்கொள்ள முடியாது.’ மூன்றாவது நாள், அப்பா மறுபடியும் இரு பெரிய கிண்ணங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். இரு கிண்ணங்களையும் மேஜையின் மேல் வைத்தார். வழக்கம்போல ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸில் முட்டை; மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார்… `மகனே நீயே தேர்ந்தெடுத்துக்கொள். உனக்கு இவற்றில் எது வேண்டும்?’ இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுத்துவிடாமல் நான் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன்… `அப்பா நீங்கள்தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள்தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களுக்கான கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக்கொள்கிறேன்’ என்றேன். அப்பா என் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. முட்டை இருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டார். நான் எனக்கான நூடுல்ஸைச் சாப்பிட ஆரம்பித்தேன். நிச்சயமாக இந்தப் பாத்திரத்தில் முட்டை இருக்காது என்றுதான் நினைத்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகளிருந்தன. அப்பா கண்களில் அன்பு கனிய என்னைப் பார்த்தார். பிறகு புன்முறுவலோடு சொன்னார்… மகனே, நினைவில் வைத்துக்கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும்போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும்!’ அப்பா சொன்ன இந்த மூன்று வாசகங்களை, வாழ்க்கை பாடங்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அதன்படிதான் நான் செயலாற்றுகிறேன். உண்மையைச் சொல்லப்போனால், நான் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறேன்…’’ | |
பல ஜாதி பல மதத்தை சேர்ந்த நாற்பது பேர்களை ஆளுக்கு பத்து பேராக தனி தனி அறைகளில் அடைத்து வைத்து ஒருநாள் வசிக்க சொன்னார் ஒருவர்.மறுநாள் காலை யில் சென்று ஒவ்வொரு அறையாக பார்த் தார். அந்த இடமே ரத்தகழனியாக கிடந்தது. பதறிய அவர் என்ன ஆச்சு என குற்றுயிராக கிடந்த ஒருவரிடம் விசாரித்தார். அதற்கு உயிருக்கு போராடியவர்சொன்னது, ஐயா எங்களை உள்ளே அனுப்பிய உடனே பூணூல் போட்டு அங்கே அமர்ந்திருக்க கூடியவர் ஒரு முஸ்லீமிடம் சொன்னார்,பாய் பாய் அதோ அந்த டேவிட்டை பாத்தீங்களா உங்களுக்கு சிலநூறு ஆண்டுகளுக்கு பின் வந்தவன் இன்று உங்களை விட ஜனத்தொ கையை பெருக்கி பெரிய ஆள் ஆகிவிட்டான். பாத்தீங்களா முஸ்லீம்னா அவனுக்கு சுத்தமா பிடிக்காதாம் அல்லாவை விட இயேசுதான் பெரியவராம் அவர்தான் உண்மையான கடவுளாம் நாமெல்லாம் போலியாம். என்னது என் அல்லாவையே குறை சொன் னானா இதோ அவனை ஓரே நொடியில் கொன்று காட்டுகிறேன் பாருங்கள், பாய் அடித்த ஒரே அடியில் டேவிட் காலி அந்த நிமிடத்தில் பாயை கைதட்டி ஊக்கப்படுத்திய பூணூல் ... சிறிது நேரம் சென்று மற்ற எட்டு பேரிடமும் மெதுவாக பேச்சு கொடுத்தது பார்த்தீங்களா சகோதர்களே நாம் எட்டுபேர் இந்துக்கள் இங்கே இருக்கும்போதே ஒரு பாய் ரவுடித்த னம் செய்யுறதை அப்புறம் நமக்கென்ன மரி யாதை இவனை இப்படியே விட்டால் நம்மில் அடுத்து யாரை கொல்ல போகிறானோ நீங் கள் யார் சாக போகிறீர்களோ நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம். யாருடா இவன் நம்மை கொல்லுவதற்க்கு வாங்கடா கொல்லுங்கடா பாயை (பாய் கதை முடிந்தது) இருப்பது இந்துக்கள் மட்டும். அனைவரையும் பாராட்டி தள்ளிய பூணூல் பத்து நிமிடம் சென்று மெதுவாக பேச்சை ஆரம்பித்தது தேவரே அங்க பாத்தீங்களா கொடுமையை பிரம்மனின் தொளில் இருந்து பிறந்த நீங்களே சும்மா இருக்கிறீர்கள் காலில் இருந்து பிறந்த அந்த ஆதிதிராவிடன் ரொம்ப நக்கலாக கால் மேல கால் போட்டிருக் கான் இதை இப்படியே விட்டால் உங்கள் தலையில் அமர்ந்து கால் மேல கால் போடு வான் பறவாயில்லையா,அடுத்த நொடியே இரு ஜாதியினருக்கும் கடுமையான சண்டை மூண்டது இது நடக்க ஆரம்பித்ததுமே வன்னி யர் பெருசா யாதவர்,பெருசா நாடார் பெருசா, செட்டியார் பெருசா என அனைவரையும் தூண்டி விட்டார் அறிவற்று அடித்து கொண்டு அனைவரும் உயிரற்று உள்ளனர். நானும் பிழைப்பது கடினம் இதுதான் நடந்தது. பார்ப்பணியம் விஷமாக மத,ஜாதிய வெறிகளை தூண்டுகிறது.எச்சரிக்கை! இரவிக்குமார் |
ஒரு அழகான பெரிய பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண். ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள், அவரிடம் "என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு.. எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணர்கிறேன். அர்த்தமே இல்லாமல் , இலக்கே இல்லாமல் வாழ்க்கை இழுக்கிறது , என்னிடம் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே என் சந்தோஷத்திற்கு வழி சொல்லுங்கள் என்றாள்." கவுன்சிலிங் செய்பவர் அவரின் அலுவலக தரையை கூட்டிக்கொண்டிருந்த ஒரு பணி பெண்ணை அழைத்தார். அவர் அந்த பணக்கார பெண்ணிடம், " நான் இப்பொழுது பணி பெண்ணிடம் எப்படி மகிழ்ச்சியை வரவழைப்பது என்று சொல்ல சொல்கிறேன்.. நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் " என்றார். பணி பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கினாள்.. " என் கணவர் மலேரியாவில் இறந்த மூன்றாவது மாதம் என் மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. சாப்பிட முடியவில்ல.யாரிடமும் சிரிக்க முடியவில்ல். என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன். இப்படி இருக்கையில் ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் பொழது ஒரு பூனை என்னை பின் தொடர்ந்தது. வெளியே சில்லென்று மழை பெய்துக்கொண்டு இருந்தது , எனக்கு பூனையை பார்க்க பாவமாக இருந்தது. அதை நான் என் வீட்டில் உள்ளே வர செய்தேன். மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன். அது அத்தனை பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக வருடிக்கொடுத்தது. கடந்து போன 3 மாதத்தில் நான் முதல் முதலாக புன்னகைத்தேன். நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு விஷய்ம் என்னை சந்தோஷிக்கிறது எனில், ஏன் இதை பலருக்கு செய்து நான் என் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது என யோசித்தேன். அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு கஞ்சி கொடுத்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை மகிழ வைத்து நான் மகிழ்ந்தேன். இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி உதவி அவர்தம் மகிழ நானும் பெரு மகிழ்வுற்றேன். இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம். மகிழ்ச்சி என்பது , அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை கண்டு கொண்டேன்." இதை கேட்ட அந்த பணக்கார பெண் ஓலமிட்டு கத்தி அழுதாள். அவளால் பச்சை காகிதம் கொண்டு வாங்கக்கூடிய எல்லாம் இருந்தது. ஆனால் பணத்தால் வாங்க முடியாத விஷயம் அவளிடம் இல்லை. வாழ்க்கையின் அழகு என்பது நீ எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்பதில் இல்லை... உன்னால் அடுத்தவர் எவ்வளவு மகிழ்ச்சி ஆகின்றார்க்ள் என்பதிலேயே இருக்கிறது... மகிழ்ச்சி என்பது போய் சேரும் இடம் அல்ல அது ஒரு பயணம்... மகிழ்ச்சி என்பது எதிர்காலம் இல்லை அது நிகழ்காலம்... மகிழ்ச்சி என்பது ஏற்றுக்கொள்வது அல்ல அது ஒரு முடிவு... நீ என்ன வைத்திருக்கிறாய் என்பதில் இல்லை மகிழ்ச்சி... நீ யார் என்பதில் தான் மகிழ்ச்சி !!! " மகிழ வைத்து மகிழுங்கள்.. உலகமும் இறையும் உன்னை கண்டு மகிழும்". பாக்கியநாதன் சசிக்குமார் |
பிறரின் கண்ணீரைத் துடைப்போம். படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார். பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை கவனித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார். வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு மதிப்பு மிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும் பன் மடங்கு அதிகமானது. பெயின்டருக்கோ அதிர்ச்சி. " நீங்கள் தான் ஏற்கனவே பேசிய கூலியைத் தந்துவிட்டீர்களே? எதற்காக மீண்டும் இவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று கேட்டார் பெயின்டர். " இல்லை. இது பெயின்ட் அடித்ததற்கான கூலி அல்ல. படகில் இருந்த ஓட்டையை அடைத்ததற்கான பரிசு" என்றார் படகின் உரிமையாளர். " இல்லை, சார்... அது ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை தருவதெல்லாம் நியாயமாகாது. தயவு செய்து காசோலையை கொண்டு செல்லுங்கள்" என்றார் பெயின்டர். " நண்பரே... உங்களுக்கு விஷயம் புரியவில்லை. நடந்த விஷயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று சொல்லி விட்டு படகு உரிமையாளர் தொடர்ந்தார். " நான் உங்களை படகுக்கு பெயின்ட் அடிக்கச் சொல்லும் போது அதில் இருந்த ஓட்டையைப் பற்றிச் சொல்ல மறத்துவிட்டேன். பெயின்ட் அடித்துவிட்டு நீங்களும் போய்விட்டீர்கள். அது காய்ந்த பிறகு எனது பிள்ளைகள் படகை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள். படகில் ஓட்டை இருந்த விஷயம் அவர்களுக்குத் தெரியாது. நான் அந்த நேரத்தில் அங்கு இருக்கவுமில்லை. நான் வந்து பார்த்த போது படகைக் காணவில்லை. படகில் ஓட்டை இருந்த விஷயம் அப்போதுதான் நினைவுக்கு வர நான் பதறிப் போய்விட்டேன். கரையை நோக்கி ஓடினேன். ஆனால் எனது பிள்ளைகளோ மீன் பிடித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கணம் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவேயில்லை. உடனே படகில் ஏறி ஓட்டையைப் பார்த்தேன். அது நேர்த்தியாக அடைக்கப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள். நீங்கள் செய்தது பெறுமதியற்ற சிறியதொரு வேலையா? நீங்கள் என்னுடைய பிள்ளைகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையல்லவா காப்பாற்றியிருக்கிறீர்கள்? உங்களது இந்தச் 'சிறிய' நற்செயலுக்காக நான் எவ்வளவுதான் பணம் தந்தாலும் ஈடாகாது." என்றார். நண்பர்களே... இதிலிருந்து என்ன புரிகிறது. யாருக்கு எங்கே எப்போது எப்படி என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதிபலன் பாராது உதவுவோம். பிறரின் கண்ணீரைத் துடைப்போம். நம் கண் முன்னே தெரியும் ஓட்டைகளை கவனமாக அடைப்போம். அப்போதுதான் நமது ஓட்டைகளை அடைப்பதற்கான மனிதர்களை இறைவன் அறியாப் புறத்திலிருந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பார். | |
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும்(3) கடந்த வாரம் பதிவுசெய்யப்பட்ட ‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும்’ என்ற கட்டுரையின் தொடர்ச்சி. பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா ஆகியோரின் ஆய்வான இக்கட்டுரை யாழ்ப்பாணச் சமூகத்தின் சாதி அமைப்பு முறையை அறிந்துகொள்வதற்கான புதிய தகவல்களைக் கொண்ட நுண்ணாய்வு. இலங்கைத் தமிழர்களிடையே அறுபத்தைந்திற்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளதென ‘சாதிகள், வழக்கங்கள், நடத்தைகள் மற்றும் தமிழ் இலக்கியம்’ எனத் தலைப்பிடப்பட்ட தனது நூலில் குறிப்பிடுகின்றார். இத்தகைய சாதிக் குழுக்கள் பெரும் சாதிக் குழுமத் தோற்றத்தோடு (Formation of Mega Caste Groups) எண்ணிக்கையில் குறைந்து செல்கின்றது (Sivathamby, 2005). டேவிட் (1974அ, 1974ஆ) மற்றும் ஃபாபன்பேகர் (1982) ஆகியோரது கற்கைகள் யாழ்ப்பாணச் சமூகத்தில் இருபது, பெரும் சாதிக் குழுக்கள் இருப்பதாக அடையாளம் காண்கின்றன. வெள்ளாளர், பிராமணர், சைவக் குருக்கள், பண்டாரி, சிப்பாச்சாரி, கோவியர், தட்டார், கரையார், தச்சர், கொல்லர், நட்டுவர், கைக்குழார், சாண்டார், குயவர், முக்குவர், வண்ணார், அம்பட்டர், பள்ளர், நளவர் மற்றும் பறையர் ஆகியோரே இவ்விருபது சாதிக்குழுக்களுமாகும். இச்சாதிக் குழுக்களின் மரபுரீதியான தொழில்கள் மற்றும் அவர்களது அடிமை, குடிமை அந்தஸ்து ஆகியன அட்டவணை-1 இல் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வேறுபல பகுதிகளைப் போன்று யாழ்ப்பாணத்திலும் ஒவ்வொரு சாதிகளும் கொண்டுள்ள சனத்தொகை தொடர்பான மிகச் சரியான தகவல்கள் இல்லை. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருவேறு மானிடவியலாளர்களால் (கெனத் டேவிட் மற்றும் மைக்கல் பாங்ஸ்) மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி யாழ்ப்பாணக் குடாநாட்டின் சனத்தொகையில் 50 வீதமானோர் ‘உயர் சாதி’ வெள்ளாளராய் இருந்தனர் எனக் கணிப்பிடப்பட்டது. அத்தோடு கரையார் 10% மாகவும், கோவியர் 7% மாகவும், பள்ளர் 9% மாகவும், நளவர் 9% மாகவும் கணிப்பிடப்பட்டனர். யாழ். குடாநாட்டின் சனத்தொகையில் ஏனைய பெயர்குறிப்பிடப்பட்ட பதின்மூன்று சாதிகளில் எதுவும் 3% துக்கும் மேலான இடத்தினைப் பெறவில்லை. யாழ்ப்பாணச் சமூகத்தைப்பற்றி எழுதிய டேவிட் (1973அ, 1973ஆ, 1974அ, 1974ஆ), ஃபாபன்பேகர் (1982, 1990), பாங்ஸ் (1960), அருமை நாயகம் (1979, 2000) மற்றும் சிவத்தம்பி (2005) போன்ற புலமையாளர்கள் சாதிகளை வெவ்வேறு முறைகளில் பாகுபடுத்தினர். உதாரணமாக, டேவிட் (1973:36) யாழ்ப்பாணச் சாதிகளை ‘உயர் சாதி’, ‘நல்ல சாதி’, மற்றும் ‘கீழ்ச் சாதி’ எனப் பாகுபடுத்துகின்றார். சிவத்தம்பி (2000:10) ‘உயர் சாதியினர்’, ‘உயர் சாதி அல்லாதோர்’ மற்றும் ‘குடிமக்கள்’ என வேறுபடுத்துகின்றார். வெள்ளாளர், பிராமணர், சைவக் குருக்கள், கோவியர் மற்றும் சைவச் செட்டி ஆகிய சாதிக் குழுக்களை டேவிட் உயர் சாதியாகக் கருத, சிவத்தம்பி வெள்ளாளர் மற்றும் பிராமணர்களை உயர் சாதி எனக் கருதுகின்றார். யாழ்ப்பாணச் சாதி அடுக்கமைவிலிருந்த குடிமக்கள் மற்றும் அடிமைகள் என்ற பாகுபாடுகளும் முக்கிய விடயங்களாகும். வேறுபட்ட அளவீடுகளைப் பயன்படுத்தி பல்வேறு புலமையாளர்களும் சில சாதிக் குழுக்களை அடிமைகள் என்ற வகைக்குள்ளும் உட்படுத்துகின்றனர். உதாரணமாக, ஒல்லாந்தரின் கணிப்பீட்டின்படி கோவியர், நளவர், பள்ளர், சாண்டார் மற்றும் சிவியார் ஆகியோர் ‘குடிமைகள்’ என்ற குழுவினுள் உள்ளடங்குவர் எனச் சிவத்தம்பி குறிப்பிடுகின்றார். இன்னொரு பக்கத்தில், டேவிட் (1974) மற்றும் ஃபாபன்பேகர் (1982) ஆகியோர் கோவியர், பள்ளர் மற்றும் நளவர் ஆகிய சாதிக் குழுக்களை ‘அடிமைகள்’ என்ற வகுப்பினுள்ளும் தட்டார், தச்சர், கொல்லர், குயவர், வண்ணார், அம்பட்டர் மற்றும் பறையர் ஆகிய சாதிக் குழுக்களை குடிமைகள் என்ற வகுப்பினுள்ளும் உள்ளடக்குகின்றனர். அதேபோன்று ‘தீண்டத்தக்கவர்’ (Touchables), தீண்டத்தகாதோர் (Untouchables) ஆகிய சாதிக்குழுக்களும் யாழ்ப்பாணச் சாதியமைப்பில் முக்கியமானதொன்றாக இருந்தன. அட்டவணை-1 இன் அடிப்படையில், அம்பட்டர், பள்ளர், நளவர் மற்றும் பறையர் ‘தீண்டத்தகாதவர்கள்’ எனக் கருதப்பட்டனர். வண்ணார் சாதியினைச் சேர்ந்தோர் மரபுரீதியாக கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டமையால் (வெள்ளை கட்டும் நோக்கத்திற்காக) அச்சாதியினைச் சேர்ந்தோர் ‘தீண்டத்தக்கவராகக்’ கருதப்பட்டனர். இவ்விடயத்தினை பாங்ஸ் (1960:65) பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: ‘வண்ணார் கோயில்களுக்குள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டமையால், அவர்கள் தீண்டத்தக்கவராயும் அம்பட்டருக்கு கோயில்களின் உட்புறம் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதனால், அவர்கள் தீண்டத்தகாதவராயும் கணிக்கப்பட்டனர். இவ்விடயம் தென்னிந்திய சாதி அமைப்புமுறையின் சில பண்புகள் யாழ்ப்பாணச் சாதியிலும் காணப்படுவதை தெளிவுபடுத்துகின்றது. தற்கால யாழ்ப்பாணச் சமூகத்தில் ‘தீண்டாமை’ என்ற விடயம் வழக்கத்திலில்லை என்பது பொதுவாக விவாதிக்கப்படும் விடயமாகும். தற்காலச் சமூகத்தில் வெளிப்படையானதாகவோ அல்லது வலிமை மிக்கதாகவோ ‘தீண்டாமை’ என்ற விடயம் இல்லை என்ற கருத்துடன் நாமும் உடன்படுகின்றோம். சாதி நடைமுறைகள், சாதி தொடர்பான திறந்த கலந்துரையாடல் என்பவற்றின் மீது LTTE யினால் ஏற்படுத்தப்பட்ட தடைகள், பாரியளவிலான சனத் தொகை இடப்பெயர்வு மற்றும் யுத்தம் போன்ற விடயங்களால் கடந்த பல தசாப்தங்களாக யாழ்ப்பாணத்தில் சாதி பல்வேறு மாற்றங்களுக்குள்ளாகி வருகின்ற அதேநேரம், மக்களின் சமூக, கலாசார மற்றும் பொருளாதார வாழ்க்கையின் சில விடயங்களில் சாதி தொடர்ச்சியான புழக்கத்திலிருந்து வருகின்றது. |
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்கப்போகும் கடைசி தருணம். தலைநகர் பெர்லினுக்குள் நேச நாடுகளின் படைகள் புகுந்துவிட்டன. ஹிட்லர் தற்கொலை செய்துகொள்ளப் போகிறார். கடைசி முயற்சியாக அமெரிக்க, ரஷ்ய படைகளை எதிர்கொள்ள ஒரு ஜெர்மன் படையணி அனுப்பப்படுகிறது. அதில் ஆயுதமேந்தி நடை போட்டவர்கள், 14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள்...! ஜப்பானின் விமானப்படை, முத்துத் துறைமுகத்தில் இருந்த அமெரிக்க கப்பற்படையின்மீது தாக்குதல் நடத்தி, 2400 அமெரிக்கர்களைக் கொன்றபோது, அமெரிக்க அதிபர் ஐஷனோவர் ஒரு சபதம் செய்தார். "நூறு மடங்காக திருப்பிக் கொடுப்போம்...!" என்று. ஜப்பான் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டன. மன்னர் சரணடைந்தார். இன்றைக்கும் ஜப்பானுக்கு பெரிய ராணுவம் இல்லை. அந்த நாடு, முழுக்க முழுக்க அமெரிக்க பாதுகாப்பில் இருக்கிறது. மன்னராட்சி மேட்டிமை, இனத் தூய்மைவாதம் பேசும் தலைவர்கள் முதலில் ஆயுதங்களை நம்புவார்கள். ஆயுதங்கள் தோற்றபின்னர், யுத்தத்தின் கடைசி நாட்களில் பலியாடுகளைப்போல தங்கள் குழந்தைப் போராளிகளை அனுப்புவார்கள்...! உயர்ந்தவள். ஜானகி வீட்டு வாசலில் இருந்தாள். அப்போது அஸ்வினி வந்தாள். "என்ன அத்தை உக்காந்துட்டீங்க?..." "ஒண்ணுமில்லம்மா... கால்ல லேசா சுளுக்கு மாதி இருக்கு..." "இருங்க அத்தை... நான் புடிச்சி விடுறேன்..." "உனக்கு எதுக்கும்மா இதெல்லாம்?... உனக்கு நெறைய வேலை இருக்கும்... அஞ்சு நிமிசம் உக்காந்தா சரி ஆயுரும்மா..." "பரவால்ல அத்தை..." சொல்லிக்கொண்டே ஜானகியின் காலை அஸ்வினி பிடித்து விட்டாள். அதை பார்த்த ஜானகியின் கண்கள் கலங்கியது. "முருகா... எப்பேர்ப்பட்ட ஒருத்திய எனக்கு மருமகளாவும், என் பையனுக்கு பொண்டாட்டியாவும் கொடுத்துருக்கே..." சொல்லிக்கொண்டே அஸ்வினியை பார்த்தாள் ஜானகி. "அஸ்வினி..." "சொல்லுங்க அத்தை..." "நீ ஏற்கனவே என் தம்பி பொண்ணுன்னு எனக்கு தெரியும்மா... இருந்தாலும், நான் அந்த உரிமையோட என் தம்பிகிட்ட உன் பொண்ண என் பையனுக்கு தாடான்னு சொன்னா மறுக்காம தந்துருவான். ஆனா, என் தம்பி மட்டுமா சரின்னு சொல்லணும்?... தம்பி பொண்டாட்டி வசந்தா சம்மதிக்கணும்... இதுக்கு எல்லாத்துக்கும் மேல கட்டிக்கப்போற நீ சரின்னு சொல்லணும். இதெல்லாம் சரின்னு வந்தாலும், நீ ரொம்பவும் படிச்ச பொண்ணு. அதுவும் வேலைக்கி போற பொண்ணு. எப்படி என் பையனுக்கு சரிப்பட்டு வரும்னு குழம்பி கிட்டு இருந்தேன்மா. ஆனா, நம்ம அஸ்வினி உங்க வீட்டு மருமகளா வர உங்களுக்கு சம்மதமா அண்ணின்னு உன் அம்மா தான் இதுக்கு முதல்ல பிள்ளையார் சுழி போட்டா. இது எனக்கு சந்தோஷமா இருந்தாலும், அப்போவும் எனக்கு சரின்னு சொல்ல முடியல. நம்ம ஜெகன் கிட்ட ஒரு வார்த்தை சம்மதம் கேக்கணும்னு சொல்லி வச்சேன். ஒருநாள் ராத்திரி ஜெகன் தூங்கும்போது, அசு அசுன்னு தூக்கத்துல உளறுனான். எனக்கு ஒண்ணும் புரியல. அடுத்த நாளும் அதே மாதிரி, அசு அசுன்னு விடாம உளறுனான். எனக்கு அவன் கிட்ட கேக்கவும் முடியல. அடுத்த நாள் உன் அம்மா வசந்தா போன் பண்ணி என்ன முடிவு பண்ணுனீங்க அண்ணின்னு கேட்டா. நானும் டக்னு நம்ம ஜெகன் அசு அசுன்னு உளறுறான் வசந்தா. அது என்னன்னு தெரிஞ்சி கிட்டு அஸ்வினி பத்தி கேக்கணும்னு சொன்னேன். உடனே அதுக்கு உன் அம்மா ஹாஹாஹானு மூச்சு விடாம சிரிச்சா. எனக்கு அவா சிரிப்புக்கு அர்த்தம் புரியல. அய்யோ அண்ணி... அசு அசுன்னா நம்ம அஸ்வினிய தான் என் மாப்பிள்ளை சொல்றாருன்னா பாரு. எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து போச்சும்மா. உடனே நம்ம அஸ்வினிய கட்டிக்கிறியான்னு ஜெகன் கிட்ட கேட்டேன். மறுவார்த்தை சொல்லாம உடனே சரின்னு சொல்லிட்டான். அவன் சரின்னு சொன்னாலும், உன் மனைவி அஸ்வினி, வேலைக்கி போவேன்னு சொன்னா என்னப்பா பண்ணுவேன்னு சொன்னேன். அட அதெல்லாம் நம்ம அசுக்கு எல்லாம் தெரியும்மான்னாம் பாரு. நான் வாய் அடைச்சி போயிட்டேன். முருகா... நல்லவேளை நீயே வசந்தா வாயில வந்து எல்லாம் தொடங்கி வச்சிட்டேன்னு கும்பிட்டேன். உடனே மளமளன்னு நினைச்சபடி கல்யாணமும் நல்லபடியா முடிஞ்சுது. ஆனா நீ இனி நான் வேலைக்கி போவலன்னு முடிவு பண்ணுனே பாரும்மா... அந்த முடிவுல தான் நீ ரொம்ப உசந்துட்டேம்மா..." ஜானகி இப்படி சொல்லியதும், மீதியை அஸ்வினி தொடர்ந்தாள். "அத்தை... வேலைக்கி போனா சம்பளம் வரும் தான்... ஆனா, புருசன் வீட்டுக்கு வரும்போது, அவனோட பொண்டாட்டி அவனை அன்போட வாங்கன்னு சொல்ல அவா வாசல்ல ரெடியா இருக்கணும் அத்தை... அதைத்தான் நான் ஒரு நல்ல மனைவியா இப்போவரை செஞ்சுகிட்டு இருக்கேன்... உங்க பையனை உங்களுக்கு ஒரு மகனா வயித்துல சுமந்ததுல இருந்து பல வருசமா பாத்து இருப்பீங்க. ஆனா, எனக்கு ஒரு புருசனா கிட்டத்தட்ட ஒரு வருசமாத்தான் தெரியும். அவரோட மறுபக்கம் உங்களுக்கு தெரியாது அத்தை. என்கிட்ட எந்த ஈகோவும் இல்லாதவரு. என்னை ஒரு மகாராணி மாதிரி வச்சிருக்காரு... அவர் தினமும் என் கிட்ட அடிக்கடி சொல்ற வார்த்தை என்ன தெரியுமா?... நான் கடைசி வரைக்கும் உன் முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்டி... அந்த சிரிப்புக்கு நான் மட்டும் தான் சொந்தக்காரனா காரணமா இருக்கணும்டி... உன்னோட சந்தோஷத்துக்காக நான் எந்த எல்லைக்கும் போவேன்டி... நீ என்னை சுமக்கும்போது என் மனைவி... நான் உன்னை சுமக்கும்போது நான் உனக்கு ஒரு தாய்னு சொல்வாரு... வெக்கத்தை விட்டு சொல்றேன் அத்தை. என்னை சந்தோஷமா பாத்துக்க உங்க பையனால மட்டும் தான் முடியும் அத்தை. இதுக்கு மேலயும் ஒரு பெண்ணுக்கு என்ன வேணும் அத்தை?... என்னை உங்க பையன் கிட்ட நல்லபடியா ஒப்படைச்சது அந்த முருகன். இப்போ உங்க காலை பிடிச்சி விடுறதுகூட ஒரு மாமியாருக்கு மருமகள் செய்ற சாதாரணமான கடமை தான். ஆனா, இதை விட முக்கியமா ஒண்ணு இருக்கு. என் புருசனை சுமந்தது உங்க வயிறா இருந்தாலும், உங்களையும், என் புருசனையும் மொத்தமா சுமந்தது நான் பிடிச்சி விடுற இந்த கால் தானே?..." வார்த்தை வர வில்லை ஜானகிக்கு. "அம்மாடி... நீ வயசுல மட்டும் தாம்மா என்னை விட குறைஞ்சவா... உன் குணத்துலயும், உன் சிந்தனையிலயும் நீ ரொம்ப ரொம்ப உயர்ந்துட்டேம்மா..." மளமளவென்று எழுந்தாள் ஜானகி. ஜானகி எழுந்ததும் அஸ்வினி எழுந்தாள். தன் மருமகளை அணைத்துக்கொண்டாள். இருவர் கண்களிலும் ஆனந்த கண்ணீர். "அஸ்வினி..." "சொல்லுங்க அத்தை..." "ஜெகன் இனி என் பையன் மட்டும் இல்லம்மா. உன் புருசனுக்கு பிறகு தான், அவன் என் மகன். நிறைய வீட்டுல மாமியார்,மருமகளுக்குள்ள சண்டை வர்றதே என் மகன்னு மாமியார் நினைக்கிறதும், என் புருசன்னு மருமகள் நினைக்கிறதும் தாம்மா இதுக்கெல்லாம் காரணம். நல்லவேளையா உனக்கும், எனக்கும் அந்த சோதனையை முருகன் நமக்கு கொடுக்கல. என்னை விட என் பையனை நீ தாம்மா என்னைக்கும் நல்லா பாத்துப்பே. இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். எனக்கு கல்யாணம் ஆனதும், உன் மாமாவோட முருகன் கோவிலுக்கு போய், நான் முருகன் கிட்ட எனக்கு ஒரு ஆண் குழந்தை வேணும்னு வேண்டிக்கிட்டதால தான் உன் புருசன் எனக்கு பிறந்தான்மா. இன்னைக்கு மாசி மகம். நம்ம ஊரு முருகன் கோவிலுக்கு நீயும், ஜெகனும் போய் நல்லா முருகனை வேண்டிக்குங்கம்மா..." "சரி அத்தை. அவர் ரெடியானதும் நாங்க கோவிலுக்கு போயிட்டு வரோம்..." என்று சொல்லிக்கொண்டே தன் கணவன் ஜெகனை கோவிலுக்கு கிளம்ப சொல்ல வீட்டுக்குள் நுழைந்தாள் அஸ்வினி. வைத்த கண் வாங்காமல், தன் மருமகள் அஸ்வினியை, பெருமிதத்தோடு பார்த்தாள் ஜானகி. (சுபம்) |
|
|
எல்லா வெளி நாட்டு மாணவர்களின் கட்டணம் மாதம் 2000 ரூபாயாக கட்ட வேண்டும். மருத்துவ கனவு நொறுங்கிய உணர்வு. சோத்துக்கே வழியில்லை இதில... DME அலுவலகம் போல பல இடங்கள் ஏறி இறங்கியும் எந்த பயனும் இல்லை. சரி மூட்டையைக் கட்டிக்கிட்டு வேற ஏதாவது படிக்கலாம் என்று நாயர் கடைல சிங்கிள் டீ கிளாசோட யோசனை. அப்போ ஒரு சீனியர் வேடிக்கையா ஒன்று சொன்னார். கோட்டையில போய் CM கிட்ட ஒரு மனு குடுத்து பாருங்களேன். சிரிப்பதா அழுவதா தெரியவில்லை. இருந்தாலும் கடைசி அஸ்திரமாக கோட்டைக்கு போனா என்ன காசா பணமா. வந்தா மலை போனா மயி... ஒரு ஆறு ஏழு பேர் சேர்ந்து சென்னைல இருந்த ஒரு இலங்கைப் பெரியவரை சந்தித்தோம். அவரும் அழகா ஒரு மனு டைப் பண்ணி கொடுத்தார். அடுத்த நாள் காலையில் கோட்டை. CM மனு வாங்கும் இடம். கூட்டத்தோடு நாமும். CM வரவில்லை ஆனால் யாரோ உதவியாளர் மனுக்களை வாங்கிக் கொண்டிருந்தார். கொண்டு வந்த மனுவை கொடுத்து விட்டு அந்த வளாகத்தின் உள்ள டீக்கடையில் ஆளுக்கொரு டீ சொல்லி விட்டு சும்மா பேசிக் கொண்டிருந்தோம். ஒரு மணிநேரம் ஓடியிருக்கும். ஒரு போலீஸ்காரரும் இன்னொருவரும் யாரையோ தேடி வந்து கொண்டிருந்தார்கள். இங்க மெடிக்கல் காலேஜ் சிலோன் பசங்க யாருப்பா. ஆகா நம்மைத்தான் தேடுகிறார்கள். டீ கிளாசை வைத்து விட்டு அவர்கள் பின்னால் ஒரே ஓட்டம். முதலில் ஒரு அறைக்குள் கூட்டிச் சென்று எல்லோருடைய பெயர்களையும் எழுதி வாங்கிக் கொண்டார்கள். அப்புறம் இன்னொரு அறைக்கு வெளியே காத்திருக்கச் சொன்னார்கள். ஒன்றும் புரியவில்லை. சில நிமிடங்களில் அந்த அறையிலிருந்து கரை வேட்டி கட்டிய சிலர் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். அப்போ ஒருவர் தம்பிகளா உள்ள வாங்க என்று அழைத்து பின்னால் கதவை சாத்தினார். அங்கு நாம் கண்டது, ஒரு தடவை என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். ஆமாம். பல திரைகளில் பார்த்து, சிறு வயது முதலு நம் மனதில் ஒரு பிரம்மாண்டமாக குடிகொண்ட நாயகன் மக்கள் திலகம் MGR அங்கே அமர்ந்திருந்தார். சுற்றியிருந்த அதிகாரிகள் ஏதோ உரையாட அவர் தலை அசைத்துக் கொண்டிருந்தார். எங்களைப் பார்த்தவுடன் அவரின் அந்த அக் மார்க் புன் சிரிப்பு. சாப்பிட்டார்களா என்று சைகையாலே கேள்வி. அதன் பின்னால் நல்ல படியாக போய் வாருங்கள் என்ற தொனியில் இன்னொரு சைகை. எல்லாமே மொத்தம் ஒரு ஐந்து நிமிடங்கள் இருக்கும். வெளியே வந்த நமக்கோ கனவுலகில் இருந்து மீண்ட நிலை. எண்ணி ஒரு மாதம். GO வருகிறது. இலங்கை மாணவர்கள் செமஸ்டருக்கு முந்நூறு ருபா செலுத்தினால் போதும். அந்த உன்னதமான பெரிய மனிதரை நினைப்பதா அல்லது வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தை நினைப்பதா ? நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு பகை வந்த போது துணை ஒன்று உண்டு இருள் வந்த போது விளக்கொன்று உண்டு எதிர்காலம் ஒன்று எல்லோருக்கும் உண்டு |
94 வயது முதியவர் ஒருவர் வாடகை வீட்டில் இருந்து வாடகை செலுத்தாததால் வீட்டு உரிமையாளரால் வெளியேற்றப்பட்டார். பழைய கட்டில், சில அலுமினிய பாத்திரங்கள், ஒரு பிளாஸ்டிக் வாளி மற்றும் ஒரு குவளை போன்றவற்றைத் தவிர வேறு எந்தப் பொருட்களும் அந்த முதியவரிடம் இல்லை. வாடகையைச் செலுத்த சிறிது நேரம் தருமாறு உரிமையாளரிடம் முதியவர் கோரினார். அக்கம்பக்கத்தினரும் அந்த முதியவரைப் பார்த்து இரக்கப்பட்டு, வீட்டு உரிமையாளரை சமாதானப்படுத்தி, வாடகை செலுத்துவதற்கு அவருக்கு சிறிது கால அவகாசம் வழங்கினர். வீட்டு உரிமையாளர் தயக்கத்துடன் வாடகை செலுத்த சிறிது கால அவகாசம் கொடுத்தார். முதியவர் தனது பொருட்களை உள்ளே எடுத்தார். அவ்வழியாகச் சென்ற பத்திரிகையாளர் ஒருவர் நின்று முழுக்காட்சியையும் பார்த்தார். இந்த விஷயத்தை தன் நாளிதழில் வெளியிடுவது பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தார். "பணத்திற்காக வாடகை வீட்டிலிருந்து முதியவரை வெளியேற்றிய கொடூரமான வீட்டு உரிமையாளர்" என்ற தலைப்பைக்கூட அவர் நினைத்தார். அப்போது பழைய குத்தகைதாரரின் சில படங்களை எடுத்ததுடன், வாடகை வீட்டின் சில படங்களையும் எடுத்தார். பத்திரிகையாளர் சென்று தனது பத்திரிகை உரிமையாளரிடம் நடந்த சம்பவத்தை கூறினார். அச்சக உரிமையாளர் படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த முதியவரைத் தெரியுமா என்று பத்திரிகையாளரிடம் கேட்டார். பத்திரிகையாளர் இல்லை என்றார். மறுநாள் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் பெரிய செய்தி வந்தது. "இந்தியாவின் முன்னாள் பிரதமர் குல்சாரிலால் நந்தா, துன்பகரமான வாழ்க்கையை நடத்துகிறார்" என்பதுதான் தலைப்பு. முன்னாள் பிரதமர் எப்படி வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் போனார், எப்படி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் என்று அந்த செய்தியில் மேலும் எழுதப்பட்டிருந்தது. அதேசமயம், இரண்டு முறை முன்னாள் பிரதமராக இருந்து, நீண்ட காலம் மத்திய அமைச்சராக இருந்தவருக்கு, சொந்த வீடு கூட இல்லை. உண்மையில் குல்சாரிலால் நந்தாவுக்கு ரூ. 500/- மாத உதவித்தொகை கிடைத்தது. ஆனால், சுதந்திரப் போராட்ட வீரர்களின் உதவித் தொகைக்காக தாம் போராடவில்லை என்று கூறி இந்தப் பணத்தை நிராகரித்திருந்தார். பின்னர் நண்பர்கள் அவருக்கு வேறு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி அவரை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தினர். இந்த பணத்தை வைத்து வாடகைக்கு பணம் கொடுத்து வாழ்ந்து வந்தார். மறுநாள் தற்போதைய பிரதமர் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் வாகனங்களுடன் அவர்களது வீடுகளுக்கு அனுப்பினார். பல விஐபி வாகனங்களின் கூட்டத்தைக் கண்டு வீட்டு உரிமையாளர் திகைத்துப் போனார். அப்போதுதான் அவருடைய வீட்டில் குடியிருப்பவர் திரு.குல்சாரிலால் நந்தா இந்தியாவின் முன்னாள் பிரதமர் என்பது அவருக்குத் தெரியவந்தது. குல்சாரிலால் நந்தாவிடம் தன் தவறான நடத்தைக்காக வீட்டுக்காரர் உடனடியாக அவரது காலில் விழுந்து மன்னிப்பு கோரினார். அதிகாரிகள் மற்றும் விஐபிக்கள் குல்சாரிலால் நந்தாவிடம் அரசு தங்குமிடம் மற்றும் இதர வசதிகளை ஏற்குமாறு கேட்டுக் கொண்டனர். இந்த முதுமையில் இப்படிப்பட்ட வசதிகளால் என்ன பயன் என்று திரு.குல்சாரிலால் நந்தா கூறியதை ஏற்கவில்லை. கடைசி மூச்சு வரை ஒரு சாதாரண குடிமகனைப் போல உண்மையான காந்தியவாதியாக வாழ்ந்தார். 1997 ஆம் ஆண்டு, அரசாங்கம் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது. இப்படிப்பட்ட உன்னதமனவர்களின தியாகத்திற்கு ஈடு இணை கிடையாது. | |
துப்பறியும் சாம்புநீங்கள் சிறுவயதில் துப்பறியும் சாம்பு படித்திருக்கிறீர்களா? குழந்தைப் பருவத்தில் துப்பறியும் சாம்பு படிக்காதவர்கள் உண்டா? ஹாலிவுட்டில் நகைச்சுவைக் கதாபாத்திரம் என்றால், நமக்கு உடனே ‘சார்லி சாப்ளின்’தான் நினைவுக்கு வருவார். அதே மாதிரி, தமிழில் ‘நகைச்சுவை’ என்றதுமே சட்டென்று நம் நினைவுக்கு வரும் கதாபாத்திரம் ‘துப்பறியும் சாம்பு’. தமிழர் நெஞ்சங்களில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்திருக்கும் இந்தச் சிரஞ்சீவிக் கதாபாத்திரத்தை உருவாக்கிய பிரம்மா, ‘தேவன்’ என்கிற ஆர்.மகாதேவன். அந்த துப்பறியும் சாம்பு எழுதியவர் தேவன் அல்லது ஆர். மகாதேவன் ( செப்டம்பர் 8 , 1913 – மே 5 , 1957 ) என்ற பிரபல எழுத்தாளர். பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் தேவன் என்ற புனைபெயரில் எழுதியவர். துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான படைப்பாகும். தமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் செப்டம்பர் 8, 1913 அன்று பிறந்தார். அவ்வூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளியில் படித்தார். கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். சிறிது காலம் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றியபின் தனது 21ஆவது வயதில் ஆனந்த விகடன் வார இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1942 முதல் 1957 வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார். 23 ஆண்டுக் காலம் விகடனில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், இருபதுக்கும் மேற்பட்ட தொடர்கள் எழுதினார். துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான பாத்திரப் படைப்பு; இது சின்னத் திரையில் தொடராக வந்திருக்கிறது. கோமதியின் காதலன் திரைப்படமாக வெளியாயிற்று. இவர் எழுதிய மிஸ் ஜானகி, மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், கல்யாணி, மைதிலி, துப்பறியும் சாம்பு முதலிய நாவல்கள், மேடை நாடகங்களாகவும் பல இடங்களில் நடிக்கப்பட்டன. மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான் சுதர்சனம் இரண்டு நாவல்களும் இயக்குநர் ஸ்ரீதர் தயாரிப்பில் சின்னத்திரையிலும் வழங்கப் பட்டன. நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய மிக விரிவான புதினம் ஜஸ்டிஸ் ஜகந்நாதன். இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. 50 களில் இவர் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டபோது எழுதிய ஐந்து நாடுகளில் அறுபது நாள் புத்தகமாக வெளியாகியுள்ளது. தேவன் சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இரு முறை பதவி வகித்திருக்கிறார். துப்பறியும் சாம்பு உட்பட தேவன் எழுதிய அத்தனைக் கதைகளிலும் கட்டுரைகளிலும் நகைச்சுவை தெறிக்கும். ‘ராஜத்தின் மனோரதம்’ ‘மல்லாரி ராவ் கதைகள்’ போன்ற நகைச்சுவைக் கதைகளையும், ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ போன்ற அற்புதமான குடும்ப நாவல்களையும் இவர் எழுதியுள்ளார். பொதுவாகவே, துயரமான, துக்கமான நிகழ்வுகளையும் மெல்லிய நகைச்சுவையோடு வாசகர்களுக்குப் படைப்பது தேவனின் பாணி. ‘ஸ்ரீமான் சுதர்சனம்’ நாவல் ஓர் உதாரணம். எழுத்தில் பல உத்திகளைப் புகுத்தியவர் தேவன். தொடர்கதை அத்தியாயங்கள் விகடனில் ஏழெட்டுப் பக்கங்கள் வெளியாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் நறுக்கென்று ஒரே பக்கத்தில் ‘மாலதி’ எனும் சஸ்பென்ஸ் தொடர்கதையை எழுதினார் தேவன். தேவன், எழுத்துலகில் மட்டும் ஜாம்பவான் அல்ல; பத்திரிகை நிர்வாகம், எழுத்தாளர் சங்கத் தலைவர், பயணக் கட்டுரையாளர், நாடக வசனகர்த்தா எனப் பல முகங்கள் கொண்டவர். தமிழ் எழுத்துலகத்துக்குப் பெரிய பங்களிப்பைச் செய்து, பெருமை சேர்த்தவர். தேவன் எழுதிய இலங்கைத் தமிழர்களின் நிலை பற்றிய கட்டுரைகள் அனைவரும் படிக்க வேண்டியவை. தமிழில் பயண இலக்கியம் பற்றி ஆய்வு செய்ய நினைக்கும் எம்.ஏ அல்லது எம்.பில் மானவர்கள் தேவனின் பயண நூலை ஆய்வு செய்யலாம். 1930களிலேயே இலங்கைக்குப் பயணம் செய்து, அங்குள்ள தமிழர்களின் நிலை பற்றியெல்லாம் நேரடியாகக் கண்டு, அங்குள்ள தமிழ்ச் சங்கங்களைப் பார்வையிட்டு, தமிழறிஞர்களைப் பார்த்துப் பேசி, தமிழர்களின் நிலையை உலகுக்கு வெட்டவெளிச்சமாக்கியவர் தேவன். ஆனந்த விகடனில் தேவனின் முக்கியப் பங்களிப்பு ‘தென்னாட்டுக் கோவில்கள் பற்றி அவர் எழுதியதுதான். தென்னாட்டுச் செல்வங்கள்’ என்ற பெயரில் இதனை அவர் எழுதினார் என்பது பலருக்குத் தெரியாது. 1948ஆம் ஆண்டில், விகடனில் முழு நேர ஓவியராகப் பணிபுரிந்து வந்த சீனிவாசன் என்னும் ‘சில்பி’யைக் கொண்டு தமிழகத்தில் உள்ள கோயில்களையும் தெய்வத் திருவுருவங்களையும் அப்படியே சித்திரமாக வரையச் செய்து, வெளியிட்டார். தஞ்சை, தாராசுரம், திரிபுவனம், ஸ்ரீரங்கம், பேரூர் என ஏறத்தாழ, தமிழ்நாட்டில் சிற்ப எழில் கொஞ்சும் எல்லாக் கோயில்களையுமே ‘தென்னாட்டுச் செல்வங்’களில் காணலாம். ஓவியர் சில்பியின் திறமை பெரிதும் பேசப்பட்டது. 1957 மே 5-ம் தேதி, தமது 44-வது வயதில் தேவன் மறைந்தார். |
சங்கிலி முருகன் மதுரையிலேருந்து நாடகம் போடணும், சினிமாவில் நடிக்கணும் என்று சென்னைக்கு வந்துவிட்டேன். பாலமுருகன் குழுவில் நடித்துக்கொண்டிருந்தேன். ஆனால் எதிர்பார்த்தபடி சினிமா வாய்ப்பெல்லாம் வரவில்லை. அப்போது என் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர், உனக்கு 40 வயசுக்குப் பிறகுதான் யோகம் இருக்கு. அப்பதான் நடிகரா வெளியே தெரிவே'ன்னு சொன்னார். அப்போ எனக்கு 19 வயது. அப்பல்லாம், நாடகம் போடுவதற்கென்றால், கொஞ்சமாவது பிரபலமான நடிகர் நடிக்க வேண்டும். நான் ஓ.ஏ.கே.தேவரிடம் சென்று நடித்து உதவும்படி கேட்டேன். அவரும் சரியென்று சம்மதித்தார். திருச்சி பொருட்காட்சியில் இரண்டு நாடகங்கள் போடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி, அட்வான்ஸ் வாங்கிவிட்டு, அறைக்கு வந்து உட்காரக்கூட இல்லை. அப்போது இரண்டு பேர் வந்தார்கள். அவர்களை பார்க்கும் பொழுது வித்தியாசமான தோற்றம் மட்டும் அல்ல. கலை தாகம் கொண்டு ஏதோ வாய்ப்பு கேட்க போகிறார்கள், என்று நினைத்தேன், அது இசை சார்ந்த வாய்ப்பு என்று பிறகு தான் தெரிந்தது. யாருப்பா என்று கேட்டேன். பாவலர் வரதராஜன் இருக்கார்ல, என்றார்கள். ஆமாம், வரதராஜன், நமக்கு நல்லாத் தெரியுமே, என்றேன். அவரோட தம்பிங்க நாங்க. நான் பாஸ்கரன். இவன் ராஜா என்று அறிமுகம் செய்து கொண்டார்கள். என்ன விஷயம், என்றேன். நாடகத்துக்கு மியூஸிக் போடணும்ங்கறதுதான் ஆசை என்றார்கள். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. இப்பதான் அட்வான்ஸ் வாங்கிட்டு வந்திருக்கோம். சரியான நேரத்துக்கு வந்திருக்காங்களேன்னு யோசிச்சேன். அட்வான்ஸ் வாங்கினதுக்கு முதல் நாளோ, மறுநாளோ வந்திருந்தாக் கூட தெரியாது. வாங்கின கையோட, இவங்களும் வந்திருக்காங்களேனு பிரமிப்பா இருந்துச்சு. கடவுள் இப்படித்தான் நல்லவங்களை நமக்கு அனுப்பி வைச்சிருக்கார் என்று நினைத்துக் கொண்டேன். ஆர்மோனியமும் தபேலாவும் வைச்சிருந்தாங்க. நான் உடனே, கமலா என்பவரிடம் இந்தப் பசங்க எப்படி வாசிக்கிறாங்கன்னு கேட்டு சொல்லுங்கன்னு அனுப்பிவைச்சேன். அவங்களும் போய் வாசிச்சாங்க. அப்புறம் கமலா, நல்லா வாசிக்கிறாங்க. பிரமாதமா வருவாங்கன்னு தோணுது. தங்குறதுக்கு கூட இடமில்லையாம். நம்ம வீடு ஒண்ணு சும்மாதானே இருக்கு. அங்கே தங்கிக்கச் சொல்லிருக்கேன்' என்று கமலா தெரிவித்தார். அப்புறம் வரிசையா நிறைய நாடகங்கள். ராஜாவோட இசை. விருதுநகர் பொருட்காட்சியில் நாடகம் போடும் போது, அண்ணே, புதுசா ஒண்ணு முயற்சி செஞ்சிருக்கோம். கேளுங்கண்ணே என்றார்கள். ஓ.ஏ.கே.தேவர், நான், இன்னும் எல்லாரும் உக்கார்ந்து கேட்டோம். கேட்டு முடிச்சதும் இதான்யா இப்போ லேட்டஸ்ட். பசங்க பின்றாங்கய்யா என்று ஓ.ஏ.கே.தேவர் சொன்னாரு. பின்னாடி இளையராஜா பத்ரகாளி மாதிரி படங்களுக்கு பாட்டு போட்டப்ப, தம்பி, நம்ம நாடகத்துக்கு அப்பவே இதைப் போட்டுருக்கீங்க, என்று சொல்லுவேன். ஒவ்வொன்றையும் நினைத்து பார்க்கும் போது அவ்வளவு மகிழ்ச்சி. அப்புறம் பல வருஷங்கள் கழிச்சு, சொந்தமா படம் எடுக்க முடிவு செய்து, தட்டு நிறைய கல்கண்டும் பணமுமா எடுத்துக்கிட்டுப் போனேன் என்னண்ணே. படம் தயாரிக்கிறேன்னு இறங்கியிருக்கீங்க. எனக்கு பயமா இருக்குண்ணே என்றார் இளையராஜா. ஜெயிச்சிருவேன் தம்பி, நம்பிக்கை இருக்கு என்று சொன்னேன். சரிண்ணே, என்று சொன்ன இளையராஜா, தட்டில் இருந்த கல்கண்டை மட்டும் எடுத்துக்கொண்டார். பணத்தைத் தொடவே இல்லை. தம்பி, சம்பளத்தை எடுத்துக்கோங்க என்றேன். சம்பளம்லாம் வேணாம்ணே. நீங்க நல்லா இருக்கணும். நல்லா வரணும். நான் பண்ணித்தரேன். ஆனா சம்பளம் எல்லாம் வேணாம்ணே என்று திரும்ப திரும்ப சொல்விட்டு, பணம் வாங்க மறுத்துவிட்டார். நான் நெகிழ்ந்து போனேன். என்னுடைய முதல் இரண்டு படங்களுக்கும் இளையராஜா சம்பளமே வாங்காமல் தான் இசையமைத்துக் கொடுத்தார். இதையெல்லாம் என்னால் மறக்கவே முடியாது, என்று கூறியிருக்கிறார் சங்கில் முருகன். இப்போ தான் புரியுது, இளையராஜா எப்படி இசை ஞானி ஆனாருனு. நல்லதை செய்தல் நல்லதே நடக்கும். நடந்தே தீரும் என்பதுக்கு இளையராஜா ஒரு எடுத்துக்காட்டு. விடா முயற்சி மட்டுமே விஸ்வரூப வெற்றியை தரும் என்பதுக்கு இத்தகைய பதிவுகள் இன்றைய இளைய சமுதாயத்துக்கு பெரிதும் உதவும். | |
தகுதிக்கான பதக்கம் ***
எங்கள் வீட்டில் ஒரு பெரிய மரப்பெட்டி இருந்தது. நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது அதனுள்ளிருந்த காக்கி சீருடையை எடுத்து அடிக்கடி அணிந்து பார்ப்பேன். அதனோடு தொப்பி விசில் எல்லாம் இருந்ததனால் அதை போலீஸ் சீருடை என்று நினைத்திருந்தேன். அப்பாவிடம் கேட்டபோது அது அவரின் சாரணர் சீருடை என்று தெரிந்தது. அப்பா சாரண ஆசிரியராகப் பயிற்சி பெற்றவர். நாமும் இதுபோல் சாரணர் இயக்கத்தில் சேர்ந்து சீருடை அணிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பள்ளிப் பருவத்தில் அதற்கான வாய்ப்பு கிட்டவில்லை. கடலூர் பேராயர் பேதுரு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 1988 ஆம் ஆண்டு அடிப்படை சாரணாசிரியர் பயிற்சியினை வழங்கியபோது தான் எனது எண்ணம் ஈடேறியது. ஆசிரியராக பணியில் சேர்ந்தது ஒரு தொடக்கப்பள்ளி என்பதனால் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இயலவில்லை. 1999 ஆம் ஆண்டு கார்குடல் நடுநிலைப் பள்ளிக்கு பணிமாறுதலில் சென்றதும் மாணவர்களுக்கு பயிற்சியளித்து ஆளுனரால் வழங்கப்படும் ராஜ்யபுரஸ்கார் விருது பெறச் செய்தேன். அங்கு பணியாற்றிய போதுதான் முன்னோடி சாரணாசிரியர் பயிற்சியும் பெற்றேன். தற்போது பணியாற்றும் மன்னம்பாடி பள்ளியில் மாணவர்களிடையே இயக்க ஈடுபாட்டை ஏற்படுத்தி பல்வேறு சேவைகளைச் செய்தோம். கடந்த ஆண்டில்தான் மத்தியப் பிரதேச மாநிலம் பச்மாரியில் அமைந்துள்ள தேசிய பயிற்சி மையத்தில் இமய வனக்கலை பயிற்சி பெற்றேன். இந்த நெடிய பயணத்திற்கான ஒரு அங்கீகாரமாக நேற்று தகுதிக்கான பதக்கம் கிடைத்தது. மெடல் ஆஃப் மெரிட் எனும் சான்றிதழையும் பதக்கத்தையும் சாரணர் இயக்கத்தின் தமிழ்நாடு தலைவரும் கல்வி அமைச்சருமான திரு. அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்கள் வழங்கினார். அவரும் பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் இயக்குநர்கள் அனைவரும் சீருடையில் வந்து அசத்தினார்கள். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அமைச்சர் தன் சீருடையை தானே சலவை செய்து அணிந்து வந்ததாகக் கூறினார். எங்களோடு முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்களும் விருது பெற்றனர். அவர்களிலும் ஒரு சிலர் சீருடையில் வந்திருந்தனர். வீட்டுக்கு ஒரு சாரணர் வேண்டும் என்று விரும்பினார் மகாத்மா அந்த விருப்பத்தை மூன்று தலைமுறையாக நிறைவேற்றியுள்ளோம். என் மகன் இளவேனிலும் ராஜ்ய புரஸ்கார் சாரணர். அப்பா இருந்திருந்தால் அப்படி மகிழ்ந்திருப்பார். |
காகம் விழுந்து கரைந்தது! யாராவது கதை சொல்ல வேண்டும். நான் ஐம்புலன்களையும் ஒன்றுகூட்டி, ஏழுலகங்களையும் மறந்து கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். அதிலும் நம்பமுடியாத உண்மைக்கதைகளை சம்பந்தப்பட்டவர்களது வாயாலேயே கேட்பதென்றால் அது தரும் பேரின்பம் விபரிக்கமுடியாதது! அது ஒரு போதை நிலை! எழுபதுகளின் ஆரம்பகாலம்அது! எந்நேரமும் சின்னச் சின்னக் கனவுகளில் மிதந்தபடியே திரியும் பதின்ம வயதைத் தொடுகிற பருவம். எல்லாப் புதினங்களையும் அறிந்து விட வேண்டுமென்கிற அங்கலாய்ப்புடன் அலைந்தபடியேயிருக்கும் மனசு! எல்லாவற்றையும் இருத்தி வைத்துப் போதிக்கும் காலம்;! கதை கேட்;பதற்காகவே நான்; பெத்தம்மா, பாட்டா வீட்டிற்கு எப்பவும் ஓடியோடிப்போவேன். அடைமழை என்றாலும், அம்மா தடுத்தாலும் ஏதாவதொரு அலுவலை சாட்டிக்கொண்டு மழைவெள்ளத்திற்குள்ளால் சட்டையை தூக்கிப்பிடித்தபடி, கால்களால் நீரை எத்தியெத்தி அளைந்தபடி, அவர்களின் வீட்டிற்கு எப்படியோ போய்ச்சேர்ந்து விடுவேன். பெத்தம்மாவும் பாட்டாவும் வசிக்கும் வீட்டிற்கு வெள்ளவாய்க்கால் வழியாகத்தான் போகவேண்டும். மழைக்காலங்களில் வரும் பெருவெள்ளம் ஊராவீட்டுக் குப்பைகள், பிசுங்கான்கள், கற்கள், உடைந்த மரத்துண்டுகள் எல்லாவற்றையும் உருட்டியெடுத்துக்கொண்டு வருவது வழமை. வெறும்காலோடு வெள்ளவாய்க்கால் வழியாக நடக்கும் போது அவை காலைப் பதம் பார்த்து, மாதக்கணக்காக, பின் வருடக்கணக்காக காலுக்குக் கட்டுப் போட்டுக்கொண்டு திரிவது வேறு கதை. அவர்கள் தமக்காக கல்வீடொன்றைக் கட்டி வைத்துவிட்டு, அங்கு சில கட்டுவேலைகள் முற்றுப்பெறாததால் அந்த வீட்டிலிருந்து சில யார்கள் தள்ளியிருக்கும் அவர்களது சற்சதுரமான ஒரு சிறிய காணிக்குள் ஒரு அழகான குடிசைவீடு கட்டி, அங்கு தான் அப்போது வசித்து வந்தார்கள். அந்தக் குடிசை வீட்டைச்சுற்றி பாட்டா அழகாக, கச்சிதமாக, கதியால்கள் நாட்டி, பனம் மட்டைகளால் வரிச்சுக்கட்டி, அரைவாசி உயரத்திற்குக் கிடுகு கட்டி எந்நேரமும் சுத்தமாக வைத்திருப்பார். எப்பவும் தன் கையாலேயே விதம் விதமாக படலை செய்து முற்றத்து வாசலுக்கு பொருத்தி விட்டிருப்பார். வீட்டு முற்றத்திலிருந்து ஒழுங்கைத் தெருவிற்குள் இறங்குவதற்கு ஒரு நீளமான பளிங்குக் கல்லும் சில கொங்கிறீற் கற்களும் சேர்த்து படிகளாக பதித்து வைத்திருந்தார். நான் பாட்டா வீட்டிற்குப் போனால் முதலில் முற்றமெல்லாம் சுற்றி ஒரு ரவுண்ட் அடித்து வேவு பார்த்துவிட்டுத்தான் உள்ளுக்குள் நுழைவேன். வீட்டைச் சுற்றி வகைவகையான முருங்கை மரங்கள், செவ்வரத்தம்பூ மரங்கள், பொன்னலரி மரம், வேலி நீளத்திற்கும் கள்ளி மரங்கள், சண்டி மரம் என முற்றம் பசுமையில் நிறைந்திருக்கும். முருங்கை மரங்கள் ஒவ்வொன்றும் குலைகுலையாகக் காய்க்கும். ஒவ்வொரு மரத்தின் காய்களும் ஒவ்வொரு விதமான சுவை. பெத்தம்மா அவற்றில் சமைக்கும் கறிகளை நினைத்தால் இப்பவும் எனக்கு வாய் ஊறும். ஒரு மரத்தின் காய்கள் நல்ல கழிப்பிடிப்பாக, சதைப்பிடிப்பாக குட்டையான காய்களாக இருக்கும். இன்னொரு மரத்தின் காய்களை நறுக்கும் போது அவற்றின் சாறு சீறிப்பாயும். இன்னொரு மரத்தின் காய்களில் விதைகளே இருக்காது சதை மட்டும் தான். இன்னொன்று தோல் மெலிதாக இருக்கும். இன்னொன்று தோல் தடிப்பாகவும், மெல்லிய நீளமான காய்களாகவுமிருக்கும். பெத்தம்மா ஒவ்வொரு வகைக் காய்களுக்குமேற்ப அவற்றை சுவைபடச் சமைப்பா. சதைப்பிடிப்பான காய்களில் சதையை வழித்தெடுத்து, சின்ன றாள், வெங்காயம், பச்சைமிளகாய், மஞ்சள் யாவும் சேர்த்து ஒரு வறை செய்வா. அதன் மணமும் சுவையும் ஒரு மாதத்திற்கு உதடுகளில் ஒட்டிக்கிடக்கும். அவ முருங்கைக் காய்களில் சமைக்கும்; அரைத்த சரக்குக்கறி உலகத்தில் எங்குமே எப்போதும் கிடைக்காதது. பெத்தம்மா செய்யும் சிவப்புப் பச்சையரிசிப் பாற்சோற்றுடன் அந்தக் கறியை சேர்த்துச் சாப்பிட்டவர்கள் காலமெல்லாம் அவவின் காலடியில் விழுந்து கிடக்க ஆசைப்படுவார்கள். அவ எங்கள் வீட்டுக்கு வந்து, அம்மிக்கல்லில் கொண்டுவந்த சரக்குப்பொருட்களை சேர்த்து அரைக்கும் போதே எனக்கு விளங்கிவிடும், அன்றைக்கு பெத்தம்மாவின் வீட்டில் மீன் அல்லது முருங்கைக்காய் சரக்குக்கறி தான் என்று. அம்மியில் அவற்றை அரைத்துக்கொண்டிருக்கும் போதே வாசனை ஊரெல்லாம் பரவத்தொடங்கிவிடும். அரைத்த கூட்டை அம்மியிலிருந்து வழித்தள்ளியெடுத்து ஒரு வெள்ளிக் கிண்ணத்திற்குள் போட்டு எடுத்துக்கொண்டு போகும் போது நானும் அவவின் பின்னால் இழுபட்டுக்கொண்டு போய்விடுவேன். அப்படியொரு நாள் போன பொழுது தான் பெத்தம்மா அவித்த சிவப்பரிசி மா இடியப்பமும், அம்மியில் அரைத்து வைத்த மீன் குழம்பும், தக்காளிச் சொதியும், நல்லெண்ணெய்யில் வறுத்த முட்டைப்பொரியலும் சேர்த்துக் குழைத்து, பாட்டா எனக்கு கவளம் கவளமாக ஊட்டி விட்டுக்கொண்டிருந்தார். பெத்தம்மா சமைத்த உணவை, பாட்டா பக்குவமாகப் பிசைந்து, குழைத்து, உருட்டியுருட்டி ஊட்டி விடும் போது கிடைக்கும் சுவை இருக்கிறதே, அது வார்த்தைகளில் அடங்காதது! ஜென்மத்திற்கும் என்னோடு ஒட்டிக்கிடப்பது! வயிறு நிறையச் சாப்பிட்ட பின்னர் கறுத்தக்கொழும்பு மாம்பழமொன்றை எடுத்து, நிதானமாக தோல் சீவி, ஒரு துண்டை பாட்டா என் கையில் வைப்பார். அடுத்த துண்டை தன் வாயில் வைப்பார். மறு துண்டை பெத்தம்மாவின் கையில் வைப்பார். அந்தத் தித்திப்புடனேயே விறாந்தாவிலிருக்கும் நீளமான வாங்கில் தனது சால்வையை விரித்துவிட்டு ஒரு தலையணையைப் போட்டு; அப்படியே சரிந்துவிடுவார். பெத்தம்மா வெறும்சீமெந்துத் தரையில் ஒரு சீலையைப் போட்டுவிட்டு அதன் மேல் சரிந்து விடுவா. இருவரும் நித்திரை கொள்ள மாட்டார்கள் சரிந்து கிடந்தபடி ஏதாவது பேசிக்கொண்டிருப்பார்கள். அந்தச் சின்னஞ்சிறு அழகான குடிசை வீட்டிற்கு முன்னாலிருக்கும் ஒழுங்கையின் மறுபுறம் நேரெதிரே, நெடுநெடுவென உயர்ந்து நிற்கும் பனைமரங்கள். அதனால் பனங்காற்று எப்பவும் வேலிக்கு மேலால் வந்து, அவர்களின் வீட்டிற்குள் உலாவியபடியே இருக்கும். பனம்பூக்களும் அவ்வப்போது அவர்களின் வீட்டுமுற்றத்தில் பறந்துவந்து விழுவதுண்டு. பனைமரங்கள் வீட்டிற்கு எதிரே இருப்பதால் பெத்தம்மா அடிக்கடி பனங்காய் பணியாரம் சுடுவதும், பாணிப்பனாட்டு போடுவதும், அவற்றை சுவைப்பதற்காக நான் தவம் கிடப்பதும் இன்னுமொரு கதை. அப்படியொரு நாள் மதிய உணவு அருந்திவிட்டு பாட்டாவும் பெத்தம்மாவும் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது தான், காகம் ஒன்று வந்து அவர்களது முருங்கை மரத்தில் குந்தியிருந்து அடித்தொண்டையால் கரைந்து கொண்டிருந்தது. "தம்பி குமாரசாமி கொழும்பிலையிருந்து வரப்போறான் போலையிருக்கு" என்று பெத்தம்மா சொன்னா. "எப்பிடித் தெரியும்?" என்று கேட்டேன். காகம் கரைவதால் நிகழும் சம்பவங்களும், அதனால் வாழ்வில் அவ தரிசித்த சில உண்மைச் சம்பவங்களுமென பல கதைகளை அப்போது தான், பெத்தம்மா எனக்குச் சொல்லத் தொடங்கினா. காகங்கள் திடீரென்று வீட்டு முற்றத்தில் விழுந்து புரண்டு சண்டைபிடிப்பது, அலறலுடன் கரைவது, ஒருவர் வீட்டைவிட்டுப் புறப்படும் போது அவரின் பின்னால் சென்று கூட்டிப்பெருக்கித் தள்ளுவது என செய்யக்கூடாத, நிகழக்கூடாத, பலவிடயங்கள் பற்றி அதன் காரணகாரியங்களுடனும் அனுபவங்களுடனும் கதைகதையாகச் சொல்லிக்கொண்டிருந்தா. வழமையாகவே இப்படியான கதைகளை அவ சொல்லும் போது நான் வாயைப் பிளந்தபடி அவற்றை ரசித்துக் கேட்டுக்கொண்டே ஒரு தருணத்தில் தூங்கிவிடுவேன். அன்றைக்கும் அது போலவே தான். ஆனால் அவ சொல்லும் அத்தனை கதைகளும் என் நெஞ்சுக்கூட்டிற்குள் அச்சடித்தது போல் அப்படியே பதிந்து போய்விடும். 'காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாக இவை இருக்குமோ' என்றும் நான் எனக்குள் யோசிப்பதுண்டு. ஆனால் நினைவுகளுக்கும், உணர்வலைகளுக்கும், சம்பவங்களிற்கும், இந்த பிரபஞ்சத்திற்கும் இருக்கும் தொடர்புகள் போல் அந்த மாயவலைக்குள் இருக்கும் பிரித்தறிய முடியாத ஒரு பாகம் இதுவாக இருக்கலாம் என எண்ணத் தோன்றிய ஒரு சம்பவம் பின்னாளில் நடந்தேறியது! இதே காலத்தில் தான் சண்முகக்குஞ்சையா எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்தார். அவர் என் அப்பாவின் ஒன்றுவிட்ட தம்பி. என் இளைய அப்பாச்சியின் மகன். அவர் எங்கள் மேல் சொரியும் அன்பும் பாசமும் அளவில்லாதது. அவர் அப்போது பருத்தித்துறை மின்சாரசபையில் ஊழியராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். எப்போதும் நல்லெண்ணெய் தேய்த்து தலைமுடியை படிய வாரி மினுங்க மினுங்க வைத்திருப்பார். அருகில் நின்றால் நல்லெண்ணெய் வாசம் வீசும். வாரிய சீப்பின் ஒழுங்கான கீறல்கள் வரிவரியாகத் தெரியும். நெற்றியில் எப்போதும் ஒரு திருநீற்றுக் குறி இருக்கும். மீசையை எப்போதும் மூக்கிற்குக் கீழ் சிறிய தூரிகை போல் நறுக்கி ஒரேயளவாக வைத்திருப்பார். அவர் நீளக்காற்சட்டை அணிந்ததை நான் வாழ்நாளில் கண்டதில்லை. எப்போதும் தோய்த்து அயர்ன் செய்த அரைக்காற்சட்டை தான் அணிந்திருப்பார். அவர் அதிர்ந்து பேசி ஒருபோதும் நானறியேன். முகம் எப்போதும் ஆழ்ந்த சாந்தத்தில் மூழ்கிக்கிடக்கும். அவர்களின் வீட்டுக்குப் போனால் எப்போதும் ஏதாவது செய்து கொண்டேயிருக்கும் அவரைத்தான் முதலில் முற்றத்தில் காண்பேன். வீட்டைச்சுற்றி அழகாக வேலிகட்டி, வேலி நீளத்திற்கும் சதுரக்கள்ளிச்செடிகள், செவ்வரத்தை மரங்கள், விதம்விதமான குறோட்டன் மரங்கள்; எல்லாம் வைத்து அவற்றைப் பராமரித்துக் கொண்டிருப்பது அவர் தான். பின்வளவில் மாதுளை, அகத்தி, முருங்கை, விலாட் மா, தென்னை, விளாத்தி என்று பல்வகை மரங்கள் மதாளித்துச் செழித்துக் கிடப்பதற்கு அவரின் பராமரிப்புத்தான் காரணம். வீட்டில் நிற்கும் நேரங்களில் மரங்களிற்கு பத்தியம் பார்ப்பது அல்லது வேலியை சீர்ப்படுத்துவது அல்லது கதியால்கள் வெட்டி நாட்டுவது அல்லது கிணற்றடியை தேய்த்துக் கழுவுவது அல்லது பெரிய முற்றத்தை கூட்டித் துப்பரவு செய்வது என ஏதாவதொன்றை செய்து கொண்டேயிருக்கும் சண்முகக் குஞ்சையாவைத் தான் நான் எப்போதும் கண்டிருக்கிறேன். அம்மாவுக்கு ஏதாவது வெளியில் செல்ல வேண்டிய வேலையிருந்தால் என்னைத்தான் அநேகமாக அவரின் வீட்டுக்கு அனுப்பி அவரை வரச்சொல்லிவிடுவா. அவர் தன் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு குளித்து, உடைகள் மாற்றி ‘டாண்’ என்று அம்மாவின் முன்னால் வந்து நிற்பார். எங்கள் வீட்டிற்கு அவர் வந்தால் அநேகமாக எங்கள் எல்லோருக்கும் குளிக்கவார்த்து, துடைத்து, உடைகள் மாற்றி, தலை சீவி அலங்கரித்து விடுவார். வேலி அடைக்க வேண்டிய காலங்களில் நான் உட்புறம் நின்று குத்தூசியில் கயிறு கோர்க்க அவர் வெளிப்புறம் நின்று பாட்டுப் பாடியவாறே கயிறிழுத்து கிடுகுகளைக் கட்டுவார். கட்டும் போது நொடிக்கேள்விகள் கேட்டு பதில் தெரியாமல் என்னை திக்குமுக்காட வைப்பார். பின்னர் சந்தைக்குப் போய், அம்மா கொடுத்தனுப்பும் பட்டியலில் இருக்கும் அத்தனை பொருட்களையும் கொள்வனவு செய்து வந்து தருவார். தென்னைகளுக்கு பாத்திகட்டி, மண்வாரி நீரோடச் செய்வார். தொட்டியில் நீரிறைத்து நிரப்பி விடுவார். எங்களின் தோய்த்துலர்ந்த உடைகளை அயர்ன் செய்து தருவார். என்ன வேலை செய்யும் போதும் அவரின் முகத்திலிருக்கும் அமைதியும் மெல்லிய புன்னகையும் எப்போதும் கலைந்து போனதை நான் கண்டதில்லை. வேலையில் நிதானம், செய்நேர்த்தி, செய்வதை மனதார விரும்பி பொறுமையுடன் செய்து முடித்தல், எப்போதும் முகமலர்ச்சியுடனேயே இருத்தல், நேர்மை, ஒழுக்கம், பண்பு, நல்ல பழக்கவழக்கம் என அவரிடம் இருந்த அரிய குணங்கள் அப்போது பெரிதாக எனக்குத் தெரியவில்லை. இப்போது நினைத்தால் புல்லரிக்கிறது. அன்றைக்கு நான் வழமை போல் எங்கள் வீட்டுப் பெரிய விறாந்தாவை தும்புத்தடியால் கூட்டிப் பெருக்கிக் கொண்டிருந்தேன். சீமென்ற் தரைகளில் சிறுதுகள் மண் இருப்பதும் எனக்குப் பிடிக்காது. அப்படியிருந்தால் நேரகாலம் பார்க்காமல் முதல் வேலையாக அவற்றைக் கூட்டித்தள்ளி விடுவது என் வழக்கம். சில சமயம் மாலைப்பொழுதில் அதனை செய்யும் போது அப்பாச்சி அலறுவதுண்டு. 'மம்மலுக்குள் தும்புத்தடி தூக்காதே' என்று கூச்சலிடுவா. நானோ எதற்கும் செவிசாய்க்காமல் துள்ளியோடிப்போய் கூட்டித்தள்ளி விடுவேன். ஆனால் அன்றைக்கு நான் கூட்டிப் பெருக்கும் போது அது ஒரு மதிய நேரம். சண்முகக்குஞ்சையா பலசரக்குச் சாமான்களை அம்மாவிடம் கொடுத்துவிட்டு வேலைக்குப் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தார். போகும் போது "போட்டுவாறன்.." என்று சத்தமாக அவர் சொல்வது எல்லோருக்கும் கேட்டது. அவர் பெரியவிறாந்தாவைக் கடந்து, நடசாலை வாசலைக் கடக்க முனையும் போது பிச்சிமரத்தில் குந்தியிருந்த இரண்டு காகங்கள் திடீரென்று அலறியடித்துக் கொண்டு வந்து, பொத்தென்று அவரின் பின்னால் விறாந்தாவின் நடுவில் விழுந்து இறக்கைகளை அடித்து, அலகுகளினால் ஒன்றையொன்று பிராண்டி அடிவயிற்றால் கரைந்து அலறிவிட்டு சடசடவெனப் பறந்து போயின! சண்முகக் குஞ்சையா நடந்து சென்றவாறே திரும்பிப் பார்த்துவிட்டு தெருவில் இறங்கி சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்படுவது தெரிந்தது. நான் தும்புத்தடியைப் பிடித்தபடி வெலவெலத்து, வெருண்டு போய் நின்றிருந்தேன். காகங்கள் விழுந்து புரண்ட இடத்தில் விறாந்தாவில் மண்துகள்கள் பறந்து கிடந்தன. மெதுவாகப் போய் அவற்றைக் கூட்டி முற்றத்தில்; தள்ளி விட்டேன். அவை விழுந்து புரண்டதும் அலறியதும் என் கண்களையும் செவியையும் விட்டுப் போகாமலிருந்தன. ஏனோ எனக்கு பெத்தம்மா சொன்ன கதைகள் அச்சமயம் ஞாபகத்தில் வந்து போயின. 'ஏதோ துர்ச்சம்பவம் நடக்கப் போகிறதோ?' என உள்ளுக்குள் மனம் துணுக்குற்றது. ஆனால் நான் யாரிடமும் அதனை சொல்லவில்லை. அந்தக் காட்சியைக் கண்டது இருவர்தான். ஒன்று நான். மற்றது சண்முகக்குஞ்சையா. ஆனால் காகங்களின் அலறல் ஓசை சமையலறைக்குள் நின்ற அம்மாவுக்கும் கேட்டதாக பின்னர் அம்மா ஒருவித பதைப்போடு கூறினா. அதுபற்றி யோசித்தவாறே இருந்த நான் சில மணிநேரங்களின் பின்னர் அவற்றை மறந்து வேறு வேலைகளில் இறங்கி விட்டேன். அன்றைக்கு பின்னேரம் ரியூசன் வகுப்பிற்காக வெளியில் சென்றிருந்த என் மூத்த அண்ணன் வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போது பதகளித்தவாறே உள்நுழைந்தார். அவரின் முகம் அதிர்ச்சியில் உறைந்து கிடந்தது. "அம்மா...அம்மா.." என்று விறாந்தாவில் நின்றவாறே பதறிப்பதறி அழைத்தார். நான் எதுவும் புரியாமல் அவரையே பார்த்தபடி நின்றிருந்தேன். அம்மா அவரின் குரலில் இருந்த பதற்றம் கண்டு யோசித்தவாறே விறாந்தாவுக்கு அவசரமாக ஓடிவந்தா. "சண்முகக்குஞ்சையா லைற் போஸ்ற்றிலை ஏறி வேலை செய்யேக்கை கரண்ட் அடிச்சு... கீழை விழுந்து அப்பிடியே போயிட்டார்..." அண்ணனின் குரல் நடுங்கியது. அம்மா "ஐயோ..." என்று அலறிய ஓசை பல வீடுகளிற்குக் கேட்டிருக்கும். அடுத்த கணமே வீட்டு வாசலில் ஊரவர்கள் கூடிவிட்டார்கள். நான் அப்படியே விழி பிதுங்கியவளாய் நின்றிருந்தேன். எனக்கு உதடுகள் நடுங்கியபடியே இருந்தன. இதயம் உள்ளுக்குள் டமார் டமாரென அடிப்பது எனக்கே கேட்பது போலிருந்தது. "உலகநாயகிப்பாட்டி வீட்டுச் சந்தியிலை இருக்கிற லைற் போஸ்ற்றிலை ஏறி திருத்த வேலை செய்யேக்கை தான் இது நடந்ததாம். இப்ப எல்லாம் முடிஞ்சுது.." அண்ணன் இப்போது அழத்தொடங்கிவிட்டார். எனக்கு மண்டையெல்லாம் விறைத்துக்கொண்டு வருவது போலிருந்தது! நெஞ்சுக்கூடு நொருங்கிவிடுவது போலிருந்தது. அழுகை வராமல் கண்களெல்லாம் காய்ந்து போனது போல் இழுத்துக்கொண்டு கிடந்தன! எதையும் யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத பதற்றம் என்னை ஆட்கொண்டு கிடந்தது! பிறகென்ன? மறுநாள் அவரது வீட்டில் நடந்த மரணச்சடங்கில் அமைதியாக தூங்குவது போலிருந்த அவரின் வலது கையை மெதுவாகப் பற்றித் தூக்கினேன். அது இரும்புக்கனமாக இருந்தது. பெருவிரலின் மேற்புறம் சிறிய வட்டமாக தோலும் சதையும் கருகிச் சுருண்டு போயிருந்தது. "அதிலை தான் கரண்ட் அடிச்சது" அருகில் நின்றிருந்த அவரின் தங்கை- என் மாமி அழுதவாறே தலையில் அடித்துக் கதறினா. அம்மாவும் அப்பாச்சியும் கதறியழும் ஓசை தொடர்ந்து அங்கு கேட்டுக்கொண்டேயிருந்தது. காலம் எத்தனையோ சம்பவங்களை தூக்கியெறிந்தபடியும், சேர்த்து வைத்தபடியும் தன் கதியில் நகர்ந்து போய்க்கொண்டேயிருக்கிறது! நாங்கள் தான் அடிக்கடி நின்று அதனை திரும்பிப் பார்க்கிறோம்! வாழும் காலம்வரை எங்கள் மீது அன்பும் பாசமும் பொழிந்த சண்முகக் குஞ்சையாவை இன்றுவரை எப்படி என்னால் மறந்து விட முடியாதோ, அது போல் காகம் விழுந்து கரைந்ததையும், கண்டம் வந்து சேர்ந்ததையும்; கூட என்னால் என்றைக்கும் மறந்து விட முடிவதில்லை!
- சந்திரா இரவீந்திரன் |
அலிகான். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வடபழனியில் இவர் எங்கள் வீட்டுப் பக்கத்து வீட்டுக்காரராக வந்தபோது, அவ்வளவாக இவரைப் பற்றித் தெரியாது. காலையில் வேலைக்குப் போகும் வேளையில் சந்திக்க நேர்ந்தால் - பரஸ்பரம் ஸலாம் சொல்வோம். புன்னகையித்துக்கொள்வோம். அவ்வளவுதான். கொஞ்ச காலம் சென்ற பிறகு அவர்கள் குடும்பத்தினரும் எங்கள் குடும்பத்தோடு நெருங்கிய நட்பு கொண்டிருந்தனர். நான் ஜெயா தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கிறேன் என்று தெரிந்துகொண்ட பிறகு அங்கிருக்கும் சில நண்பர்களைப் பற்றி விசாரிப்பார். ”தெரியுமா அவர்களை?” என்று கேட்டால், ”ஜெயா டிவி காலை மலர் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறேன்.” என்பார். அதன் பிறகுதான் அவரைப் பற்றி முழுமையாக அறிந்து ஆச்சரியப்பட்டேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கவிஞர் வைரமுத்து, இலங்கை வானொலி புகழ் பி.ஹெச். அப்துல் ஹமீது, நடிகர் சிவகுமார் போன்ற பிரபலங்களெல்லாம் இவரது விசிறிகள். இவர் சேர்த்து வைத்திருக்கும் பொக்கிஷம் தமிழ்த் திரையுலகின் விலைமதிப்பில்லா வைரங்கள்... ஆனால், அவையனைத்தையும் பாதுகாக்க, பொருளாதார வசதியில்லாமல் இருந்த நிலையால், அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் அவையனைத்தையும் அரசு ஆவணக் காப்பகத்தில் சேர்க்கக் கோரினார். அவரும் உதவுவதாக அறிவித்திருந்தார். ஆனால், எதிர்பாராதநிலையில் ஜெயலலிதா நோயுற்று மரணமடைந்தார். கடந்த ஆண்டு இவரது உடல்நிலையிலும் சரிவு ஏற்பட, சொந்த ஊரான முத்துப்பேட்டைக்குச் சென்றுவிட்டார். இன்று அவர் முத்துப்பேட்டையையும் விட்டு முதலோன்பேட்டைக்குள் சென்றுவிட்டார் எனும் செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (இறைவனிடமிருந்தே வந்தோம். இன்னும் அவனிடமே மீளவிருக்கிறோம்.) அவர் - மெஹ்பூப் அலிகான். இணைத்திருக்கும் வீடியோவில் அவர் குரலில் அவரது சாதனைகள். தமிழ்த் திரையுலகில், பாடல்கள் என்று உருவான முதல் பாடல் தொட்டு, தற்காலப் பாடல்கள் வரையிலான லட்சக்கணக்கான பாடல்களை, வெளியான அதே இசைத்தட்டு, காஸெட்டு, சிடி, டிவிடி என அனைத்தையும் அலைந்து திரிந்து சேகரித்து வைத்துள்ளார் அலிகான். அவரது பொக்கிஷங்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனும் ஆசை இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. அரசு ஆவண செய்யவேண்டு மென்பது அவரது மகன்களின் கோரிக்கை. -ரஃபீக் சுலைமான். | |
1 | கவிஞர் மாயவநாதன்...... பெயரைக் கேட்டதும் இந்தப் பெயரில் கவிஞர் ஒருவரா? தெரியாதே, யாரவர்? என்று கூடப் பலருக்கும் கேட்கத் தோன்றும். அவரைப் பற்றித் தெரிந்து கொண்டபின் விழிகள் வியப்பினால் விரியக் கூடும் ஓ! 1936 ஆம் ஆண்டு இன்றைய தென்காசி மாவட்டத்தில் பூலாங்குளம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் கவிஞர் மாயவநாதன். சினிமாவில் நடிகர், அறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், கலைஞர், மேதையர் தமிழ்நாட்டில் வாழ்ந்ததுண்டு. அப்பட்டியலில் மாயவநாதன் என்ற இந்த ஏழை அப்பாவிக் கவிஞனும் ஒருவன் என்பதுதான் வேதனையான உண்மை. சிறுவயதிலேயே ஏராளமான திறமைகளைச் சுமந்துகொண்டு சென்னை நோக்கிப் பயணம் செய்த மாயவநாதனுக்கு அடைக்கலம் கொடுத்தது சந்திரகாந்தா நாடகக் கம்பெனி. மாயவநாதன் மிகச்சிறந்த காளி பக்தர். மகாகவி காளிதாசன் போல, அன்னை காளிக்கு மட்டுமே தன்னை அடிமைப்படுத்திக் கொண்டவர். கரம்பைச் சித்தர், கரூர் சித்தர் போன்ற உயர்ந்தோர் நட்பு இவருக்கு உண்டு. மருதமலைக் கோவிலைச் சீரமைத்துக் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த திரைப்படத் தயாரிப்பாளர் திரு.சாண்டோ சின்னப்பா தேவர், மருதமலைக் கோவில் மலையில் முருகன் புகழைப் பாடல் வடிவத்தில் கல்வெட்டுகளாக எழுதி வடித்து வைக்க ஆசைப்பட்டார். அந்தப் பாடல்களை எல்லாம் எழுதியவர் கவிஞர் மாயவநாதன்தான். என்றென்றும் மாயவநாதனின் புகழை நிலைத்து நிற்கச் செய்யும் அக்கல்வெட்டுகளை முருகன் துதிப் பாடல்களாக நிலைத்து நிற்பதை இன்றும் மருதமலையில் காணலாம். பணம் எவ்வளவு தந்தாலும் அது பெரிதல்ல தன் மானமும் கவிதையும் பெரிது என்று முழக்கமிட்ட கவிஞர் இவர். படித்தால் மட்டும் போதுமா, என்ற திரைப்படத்தில் இடம்பெறும், தண்ணிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்று சென்றாள். இளம் காதலனைக் கண்டு நாணி நின்றாள்… என்ற பாடல் எவ்வளவு இதமான இனிமையான பாடல். விண்ணளந்த மனம் இருக்க. மண்ணளந்த நடை எடுக்க பொன் அளந்த உடல் நடுங்க வந்தாள்…. ஒரு பூவளந்த முகத்தைக் கண்டு நின்றாள்… பந்த பாசம் என்ற திரைப்படத்தில் இவர் எழுதிய, நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ? நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ? கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ கொண்ட குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ?. என்ற பாடல் ஆகா அருமை அருமை என்ன உணர்ச்சி என்ன ஆழமான கருத்து.. பூமாலை எனும் திரைப்படத்தில் கயவன் ஒருவனால் தன் கற்பிழந்த பெண் பாடுவதாக அமைந்த பாடல்.. கற்பூர காட்டினிலே கனல் விழுந்துவிட்டதம்மா… உவமை.. பாருங்கள்.. அவள் நிலை.. கற்பூரத்தால் அமைந்த ஒரு காட்டில் ஒரு சிறு கனல் விழுந்தால் என்னவாகும்? கண்மூடித் திறக்குமுன் யாரும் அணைக்க முடியாமல் முற்றிலும் எரிந்து காற்றில் கரைந்து காணாமல் தானே போகும். பந்தபாசம் படத்தில் கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு . என்ற இவரது பாடலைக் கேட்டால் எந்தக் கவலையும் படாமல்.. காரியம் நடக்கட்டும் என்று குறைந்தபட்சம் ஒருநாள் நம்மால் இருக்க முடியும். அந்த அளவிற்கு தன்னம்பிக்கை தரும் ஒரு பாடல். பாலும் பழமும் படத்தில் பழுத்துவிட்ட பழம் அல்ல… உதிர்வதற்கு…. என்னும் பாடலைக் கேட்டுப்பாருங்கள். அந்த இளம் மனைவி திடீரென இறந்து போன செய்தியைக் கேட்ட கணவனின் நிலையை நாம் உணரக்கூடும். இதயத்தில் ஒரு கனம் ஏற்பட்டு எல்லோ கண்களும் கலங்குவது நிச்சயம். “என்னதான் முடிவு?” என்று ஒரு திரைப்படம். அதில் இடம்பெறும் ஒரு பாடல், 'பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே. செய்த பாவம் தீரும் முன்னே இறக்க வைக்காதே'. இந்தப் பாடல் என்ன முயற்சி செய்தாலும் வேறு எவரும் எழுதியிருக்க முடியாது என்றுதான் இன்றும் தோன்றுகிறது. இப்படி எழுதுவதற்கு அசாதாரணமான தைரியமும் வேண்டும். இதயத்தில் நீ படத்தில் இடம்பெற்ற சுசீலா,ஈஸ்வரி பாடிய “சித்திரை பூவிழி வந்து யார் நின்றவரோ “ என்ற பாடல் அவரது கவிதை சந்தத்தின் அழகை சொல்லும் பாடல் இவரது கவிதைத் திறமையை கண்டு மகிழ்ந்தவர் கலைஞர் மு.கருணாநிதி, அதனால் தான் அதிக பாடல்கள் எழுதுவதற்கு வாய்ப்புகளை வழங்கினார் மாயவநாதனுக்கு. பூமாலை என்ற படம் ,கலைஞரின் வசனத்தில் உருவான படம், அதில் இடம்பெற்ற பெண்ணே உன் கதி இது தான என்று மனதை உருக்கும் வகையில் இசைச்சித்தர் சி.எஸ்.ஜெயராமனின் குரலில் ஒலிக்கும் பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரர் இவரே. இதன் வரிகளை கவனித்தவர்கள் இதன் வலிமையை உணர்வார்கள். இதே படத்தில் "உலகமே எதிர்த்தாலும் “ என்ற பாடலையும் மறக்க முடியாத ஒன்று. கலைஞர் பூம்புகார் படத்தில் மாயவநாதனுக்கு 6 பாடல்களை எழுதும் வாய்ப்பை கொடுத்தார். காவிரி பெண்ணே வாழ்க, தமிழ் எங்கள் உயிரானது, தப்பித்து வந்ததம்மா, துன்பமெல்லாம் என இவரது கவி ஆளுமை சொல்லும் பாடல்கள் இன்றும் நம் சிந்தயை மயக்கும் பாடல்கள் மாயவநாதன் யாருக்கும் அஞ்சாதவர். முகத்திற்கு நேரே பேசிவிடுபவர். ஒரு முறை கலைஞரின் மறக்கமுடியுமா படத்திற்கு பாடல் எழுத வந்த இவர் என்ன மெட்டு என்று ராமமூர்த்தியை கேட்க அதற்கு அவர் “மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்” என்று சொல்ல கோபம் கொண்ட இவர் பாடல் எழுதாமல் சென்று விட்டார் . பின் கலைஞர் அந்த பாடலை எழுத அது தான் “காகித ஓடம் கடலலை மீது “ என்ற பாடல் இவர் முழுக்க முழுக்க பாடல்கள் எழுதிய ஒரே படம் பீம்சிங்கின் “பந்த பாசம்”.திரைப்படம் எப்பொழுதும் கண்ணதாசனே எழுதும் பீம்சிங் -மெல்லிசை மன்னர்களின் கூட்டணியில் இந்த படத்தில் மட்டும் பெரும்பாலான பாடல்களையும் எழுதியது மாயவநாதனே.. இதில் இவர் எழுதிய அத்தனை பாடல்களும் அருமை இதழ் மொட்டு விரித்திட - காதல் கனிரசம் சொட்டும் வரிகள் கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு - தத்துவம் முத்தாய்ப்பாய் சீர்காழியாரின் குரலில் ஒலித்த என்னதான் முடிவு திரைப்படத்தில் மனதை உருகவைக்கும் "பாவியென்னை மறுபடியும் பிறக்க வைக்காதே - செய்த பாவமெல்லாம் தீருமுன்னே இறக்க வைக்காதே'' என்ற மிகச்சிறந்த தத்துவப் பாடலல் ஒன்றை எழுதினார். தொழிலாளி திரைப்படத்தில் இடம்பெற்ற என்ன கொடுப்பாய் என்ற பாடல் வித்தியாசமான வார்த்தைகளால் அமைத்திருப்பார். தென்றல் வீசும் திரையில் பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் அழகான மலரே அறிவான பொருளே என்ற அழகான பாடலை எழுதியதும் இவரே. 1971’ல் வெளிவந்த ஜெய் - ஸ்ரீவித்யா நடித்த “டெல்லி டூ மெட்ராஸ் “ படத்தில் ஒலித்த புன்னகையோ பூமழையோ” என்ற பாடல் இவர் எழுதியது தான். இது தான் கடைசி பாடலும் கூட. 1971 ஆம் ஆண்டு சென்னையில் திடீரென மறைந்தவர். 35 வயது மட்டுமே பூவுலகில் வாழும் பேறு பெற்று தன் பாடல்களால் நம்மை மயக்கி விட்டு,மறைந்து மாயமாகி போனவர் மாயவநாதன் . வறுமையில் வாடிய இந்த தமிழ் கவிஞர் நடு வீதியில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். பணத்தை பெரிதாக நினைக்கவில்லை, வறுமையில் வெருமையாக இருந்தாலும் யாருக்கும் பணிவதில்லை என்ற கொள்கையை கைப்பிடித்தவர். கடவுள் எப்பொழுதும் இதுபோன்ற திறமைசாலிகளை பிடித்துப்போகிறது, சீக்கிரமே தன்னிடம் அழைத்துக்கொள்கிறார் இவர்களது தமிழை இன்னும் கொஞ்சம் கேட்க முடியாமல் போனது நமது துரதிர்ஷடம் அவருடைய மறைவுக்குப்பின் அவருடைய மனைவி மக்கள் ஓலைக்குடிசை ஒன்றில் வாழும் அளவிற்குத்தான் வசதி இருந்தது. இன்னும் அவருடைய பிள்ளைகள் பேரக் குழந்தைகள் மிகச் சாதாரணமான வேலை செய்து, விவசாயக் கூலிகளாகக் குடும்பம் நடத்துகிறார்கள். சொந்த ஊரில் அவருடைய உடல் எரியூட்டம் நடந்த இடம் கூட கேட்பாரற்றுக் கிடக்கிறது. |
திரை உலகை மிரள வைத்த சிவாஜி இன்றுவரை சிவாஜியின் இடத்தை எந்த நடிகராலும் பிடிக்க முடியவில்லை. ஏன் ஏன்றால் அவருடைய நடிப்பை யாராலும் ஈடு கொடுக்க முடியாது. இவருடைய நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 'தங்கப்பதக்கம்'. 1974 ஆம் ஆண்டு P. மாதவன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், கே ஆர் விஜயா ஆகியோர் நடித்திருந்தனர். |π| இப்படத்தில் கண்டிப்பான, உறுதியான போலீஸ் அதிகாரியாக எஸ் பி சௌத்ரி கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடித்து இருந்தார். ஒரு போலீஸ் அதிகாரி எப்படி நடந்து கொள்ள வேண்டு ம், எப்படி வாழ வேண்டும், என்பதை தனது அற்புதமான நடிப்பின் மூலம் சிவாஜிகணேசன் காட்டியிருந்தார். |π| இப்படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்து இருந்தார். அப்படத்தில் இடம் பெற்ற 'சோதனை மேல் சோதனை', 'நல்ல தொரு குடும்பம்' பாடல்கள் வரவேற்பு பெற்று வந்தது. 1974 ம் ஆண்டு வெளியான படங்களில் தங்கப்பதக்க ம் படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கண்டது. அதுமட்டுமல்லாமல் அந்த ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையும் தங்கப் பதக்கம் படத்திற்கு கிடைத்தது. இப்படத்திற்கு முந்தைய ஆண்டான 1973 வரை வந்த எல்லா படங்களின் வசூலையும் தங்கப்பதக்கம் முறியடித் துள்ளது. தங்கப்பதக்கம் படம் சாந்தி தியேட்டரில் மட்டும் 103 நாட்கள் ஹவுஸ்புல்லாக ஓடியது. சாந்தி தியேட்டரில் உள்ள 1200 இருக்கைகளிலும் ஹவுஸ் ஃபுல்லாக இருக்கும் அளவுக்கு மக்கள் கூட்டம் திரளாக வந்து இப்படத்தை பார்த்து மகிழ்ந்தனர். மகேந்திரன் எழுதிய தங்கபதக்கம் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. தங்கப்பதக்கம். நாடகமும் மக்கள் மத்தியில் சாதனை படைத்த பெருமை தங்கப்பதக்கம் படத்திற்கு உண்டு. |π| தங்கப்பதக்கம்
படம் பங்காரு பதக்கம் என 1976 இல் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. அதன்பிறகு இப்படம் கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியா னது. ஓரு படம் இவ்வள வு சாதனை படைக்க
முடியும் என்றால் அது சிவாஜி படமாக மட்டுமே இருக்க முடியும். |
|
வ வே சு அய்யர், திருக்குர் ஆன். மதச்சார்பின்மை: ஒரு முக்கிய குறிப்பு. <><><><><><> இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி குறித்துச் சரியாக அறிந்துகொள்ள இக்கட்டுரையை அவசியம் படியுங்கள். <><><><><><> படத்திலுள்ள இக்குறு நூலை எனக்குக் கையொப்பம் இட்டு அன்பளித்துள்ளது வ.வே.சு அய்யரின் மகன் மருத்துவர் வ.வே.சு இராதா கிருஷ்ணன். என்னுடன் கூட இருந்தவர்கள் அப்போது தஞ்சை சரபோஜி கல்லூரியில் உடன் பணியாற்றிய பேராசிரியர்களான கே.என் ராமச்சந்திரன் (அறிவியல் நூல்கள் பல எழுதி விருதுகள் பெற்றவர். எனக்கு ஆசிரியராக இருந்து பின் என்னுடன் நெருங்கிய நண்பராகப் பணியாற்றியவர்.) மற்றும் பேரா. முஸ்தபா (ஒரு மிகச் சிறந்த ஆசிரியர். விரிவாகப் படிக்கக் கூடியவர்). அப்போது நாங்கள் திருச்சி ரீஜனல் எஞ்சினீயரிங் கல்லூரியில் பகுதி நேர M.Phil படித்துக் கொண்டிருந்தோம். இது சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. வ.வே.சு அய்யர் சேரன்மாதேவியில் தொடங்கியிருந்த குருகுலத்தில் பார்ப்பன மாணவர்களுக்கு மட்டும் தனியாக அமர்த்தி உணவு பரிமாரப்பட்ட நிகழ்வு சென்ற நூற்றாண்டுத் தமிழக அரசியலில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய ஒன்று. பார்ப்பன மாணவர்கள் எல்லோரையும் அப்படித் தனியாக அமர்த்தி உணவு பரிமாறவில்லை எனவும் புகழ்பெற்ற வாவிலா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தெலுங்குப் பார்ப்பனர் வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டும்தான், அப்படி அவர்கள் வீட்டில் நிபந்தனை விதித்திருந்ததால், தனியாக உணவு பரிமாறப்பட்டது என்பதும் வ.வே.சு தரப்பில் சொல்லப்பட்ட சமாதானம். அடுத்த சில ஆண்டுகளில் வ.வே.சு இறந்து போனார். அவரது மகன் திருச்சி திருவானைக்கோவிலில் மருத்துவராக இருந்தார். அந்த நிகழ்ச்சி குறித்த விவரங்களை அறியத்தான் சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நாங்கள் அங்கு சென்றிருந்தோம். அந்த ஒரு குடும்பத்துக் குழந்தைகள் தவிர தாங்கள் உட்பட எலோரும் ஒன்றாக அமர்ந்துதான் உணவு அருந்தியதாக வ.வெ.சு அவர்களின் மகன் இராதாகிருஷ்ணன் கூறினார். நாங்கள் புறப்படும்போது அவர் இந்த நூலைக் கையொப்பமிட்டு எனக்கு அன்பளித்தார், நேற்று வேறு ஒரு நூலைத் தேடிக் கொண்டிருந்தபோது இது கண்ணில் பட்டது. இது ஔரங்கசீப்பிற்கு எதிராகப் போராடிய குரு கோவிந்தசிங் குறித்து வ.வே.சு அய்யர் எழுதிய ஒரு குறு நூல். 1925ல் இதன் முதற்பதிப்பு வந்துள்ளது. பின் 1934ல் ‘சுதந்திரச் சங்கு’ சர்பாக ஒரு பதிப்பு வந்துள்ளது. இது அதற்குப் பின் வந்த ஒரு பதிப்பு. வ.வே.சு அவர்களின் 80வது பிறந்த நாளில் (02.04.1961) இது வெளியிடப்பட்டுள்ளது. குரு கோவிந்த சிங். ஔரங்கசீப்பிற்கு எதிராகப் போராடியவர். தனை எதிர்த்துத் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தாலும் குரு கோவிந்தரின் வீரத்தை மெச்சி மொகலாயர்கள் சார்பாக அவர் நட்பு பேண அழைக்கப் பட்டததாகவும், ஆனால் இஸ்லாமாக மாறவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதை கோவிந்தரின் மகன்கள் ஏற்காது போராடி மாண்டதாகவும் இந்நூலில் வ.வே.சு குறிப்பிடுகிறார். அதன் பிறகும் ஒளரங்கசீப் கோவிந்தரை சமாதானத்திற்கு அழைத்ததாகவும் மொகலாயர்களுடனான போர்களில் நான்கு மகந்களை இழந்திருந்த அவர் ஒளரங்கசீப்பின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டதாகவும் வ.வே.சு எழுதுகிறார். ஔரங்கசீப் இறந்த பின்னர் அவரது மகன் தேஜ்பகதூரும் கோவிந்தரை மதித்து அவருடன் நட்பு பாராட்ட அழைக்கிறார். போரில் பல இழப்புகளைச் சந்தித்திருந்த குரு கோவிந்தசிங் இப்போது சமாதானத்துக்குத் தயாராகி தேஜ்பகதூர் வேண்டிக் கொண்டபடி கோதாவரிக் கரையிலிருந்த கலகக்காரர்களை அடக்கச் சென்றார். ஆனால் அங்கு விதி வேறு வகையில் விளையாடியது. இங்கு ஒன்றைக் குறிப்பிடுவது அவசியம். மொகலாயப் படை எடுப்புகளுக்கும் பின் வந்த ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சிக்கும் இடையில் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. ஆங்கிலேயர்களைப் போல இங்கு வணிகத்தின் மூலமாகவும், பிற வழிகளிலும் கொள்ளை அடித்தும் அவற்றைத் தம் நாடுகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற நோக்கம் முகலாயர்களுக்கு இல்லை. அக்பர் அல்லது ஔரங்கசீப் போன்ற மொகலாயர்கள் இங்குள்ள செல்வத்தைக் கொள்ளை அடித்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டவர்கள் அல்ல. எனவே அவர்கள் கூடியவரை இங்கு அமைதியான ஒரு ஆட்சியை நிலை நிறுத்தவே முனைந்தனர். இங்குள்ள சமூகங்களுடன் சமாதானமாக வாழ்வதே அவர்களுக்குத் தேவையாக இருந்தது. பெரிய அளவில் இந்துக்கள் இவர்களின் அவைகளில் முக்கிய பொறுப்புக்களிலும் பதவிகளிலும் இருந்தனர். இங்குள்ள இந்து ஆலயங்கள் முதலியவற்றை இடிப்பதும் அவர்களின் நோக்கமல்ல. கூடியவரை அமைதியாக ஆட்சியை நடத்துவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. மதமாற்றம் செய்வதும் அவர்களின் நோக்கங்களாக இல்லை. ரிச்சர்ட் ஈட்டன் போன்ற முகலாய கால வரலாற்று அறிஞர்கள் இதை விரிவாக விளக்குகின்றனர். இன்றளவும் இந்தியத் துணைக் கண்டத்தில் அதிக அளவில் முஸ்லிம் மதமாற்றங்கள் நடந்து இன்று முஸ்லிம் நாடுகளாகவே உள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகியவற்றில் எந்நாளும் வலிமையான முஸ்லிம் அரசுகள் இருந்ததில்லை என்பதை நாம் மறந்துவிடல் ஆகாது. பின் எப்படி அங்கு மிகப் பெரிய அளவு மதமாற்றங்கள் நடந்தன? சுஃபி ஞாநிகளின் பங்கு இதில் முதன்மையாக இருந்தது என ஈட்டன் சொல்கிறார். பெரும் நதிகள் இல்லாத இப்பகுதிகளில் கிணற்றுப் பாசனம் முதலானவற்றை பாரசீகம் முதலான நாடுகளில் பயிலப்படும் நீர்ப்பாசன முறை (Persian Wheel) கொண்டு இங்கெல்லாம் விவசாயப் பாசன முறைகளை இவர்கள் உள்ளூர் மக்களுக்கு கற்பித்ததை அவர் விளக்குகிறார். அந்த வகையில் சுஃபிகளின் பங்கு இதில் முக்கிய பங்கு வகித்தது என்கிறார் அவர். அப்படியானால் சில இந்து ஆலயங்கள் முகலாயர்களால் இடிக்கப்பட்டதற்கு வரலாற்று ஆதாரங்களும் உள்ளனவே, சில கட்டாய மதமாற்றங்களும் நிகழ்ந்தனவே என்கிற கேள்விகளுக்குச் சில சமீப கால ஆய்வாளர்களான ஆந்த்ரே ட்றூசெக் போன்றோர் விளக்கங்கள் அளிக்கின்றனர். இப்படியான சம்பவங்கள் எண்ணிக்கையில் மிக மிகக் குறைவு. சில குறிப்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தண்டனையாக அவர்கள் வசம் இருந்த ஆலயங்கள் அவ்வாறு தகர்க்கப்பட்டன என அவர்கள் ஆதாரங்களுடன் நிறுவுகின்றனர். ஔரங்கசீப்பின் ஆட்சியில் அவ்வாறு இடிக்கப்பட்ட இந்துக் கோவில்கள் மிக மிகச் சில. அதே ஔரங்கசீப் காலத்தில்தான் நமது குமரகுருபரர் காசியில் மடம் கட்டுவதற்கும் நன்கொடை அளித்தார். இன்றும் காசியில் அந்த மடம் உள்ளதை நாம் அறிவோம். இந்த அளவிற்கு விரிவான ஆய்வுகள் எல்லாம் அப்போது இல்லாவிட்டாலும், கட்டாய மதமாற்றம், இந்து மத அழிப்பு, பசுவதை முதலான சொல்லாடல்கள் மேலோங்கி வந்த ஒரு கால கட்டத்தில் வ.வே.சு அய்யரின் அணுகல்முறை அவ்வழியில் இல்லை என்பது இங்கே கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது. குருகோவிந்தசிங் படையில் இருந்த இரு பட்டாணியர்கள்தான் அவரது கோதாவரிப் படைஎடுப்பின்போது அங்கு அவரைக் கொன்றனர் என வ.வேசு எழுதுகிறார். அது ஏன்? ஒரு சமயத்தில் தன்னை அவமதித்த ஒரு பட்டாணியக் குதிரை வியாபாரியை கோவிந்தர் கொன்று விடுகிறார். ஆனால் அந்த வியாபாரிக்கு இரு மகன்கள் இருந்ததை அறிந்து அவர்களைத் தன் மகன்கள் போலவே அவர் வளர்க்கிறார். எனினும் பின்னாளில் உண்மை அறிந்த அவர்களே அந்தப் போரின்போது அவரைக் கொன்றதாகவும் இந்நூலில் வ,வே.சு அவர்கள் குறிப்பிடுகிறார். தன்னால் வளர்க்கப்பட்டவர்கள் ஏன் தன்னைக் கொன்றார்கள் என மரணத் தறுவாயில் கோவிந்தர் கேட்டபோது தந்தையைக் கொன்றதற்குப் பழி வாங்கவே தாங்கள் அவரைக் கொன்றதாகவும், எனினும் சொந்தத் தந்தையைப்போல் தன்னை இதுகாறும் வளர்த்த அவரை இப்படித் தாக்கியதற்காகத் தங்களைக் கொல்லுமாறும் அவர்கள் வேண்டிக் கொண்டதாகவும், குரு கோவிந்தர் அவர்களை மன்னித்து இறந்ததாகவும் வ.வே.சு கோவிந்தரின் வரலாற்றை முடிக்கிறார். வ.வே.சு அவர்கள் தன் கதைப் போக்கில் ஔரங்கசீப்பை இந்துத்துவவாதிகள் வழக்கமாகச் சித்திரிப்பதுபோலச் சித்திரிக்கவும் இல்லை. வளர்ந்து கொண்டிருந்த ஒரு பெரும் பேரரசுக்கும் எதிர்த்து நின்ற ஒரு குழுமத்திற்கும் இடையிலான போராகவே அதைக் காட்டுகிறார். மொகலாயர்கள் அவரை மதம் மாறச் சொல்லிக் கட்டாயப்படுத்த ஒரு கட்டத்தில் நேர்ந்தாலும் தொடர்ந்து அப்படியான மதமாற்ற நிபந்தனையின்றி அக்குழுமத்தைத் தன் படை பலத்தால் தங்களின் ஆளுகைக்குள் கொண்டுவந்ததாகவுமே குறிப்பிடும் வ.வே.சு அவர்களின் இந்தச் சித்திரிப்பில் மதவெறுப்பு கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது. அது மட்டுமல்ல அவர் இஸ்லாமியத்தை அவதூறு செய்யவும் இல்லை. மிக்க மரியாதையுடனும், அம் மதத்தினரின் நெறிகளுக்கு உட்பட்டும் அதை அறிமுகம் செய்கிறார். மொகலாய ஆட்சியை ஒரு விரிவாக்க 'ஏகாதிபத்தியம்' என்று மட்டுமே குறிப்பிடுகிறார். ‘ஏகாதிபத்தியம்’ என்கிற கருத்தாக்கம் இங்கே மார்க்சீயப் பொருளிலும் சொல்லப்படவில்லை. அந்நிய விரிவாக்கம் என்கிற பொருளிலேயே சொல்லப்படுகிறது. குருவின் இரு மகன்கள் ஒளரங்கசீப்புடனான போரில் கொல்லப்பட்டதைச் சொல்ல வரும்போது, “(அவர்கள்) குருவின் கண்ணெதிரிலேயே ஷஹீதாயினர்” எனக் குறிப்பிட்டுப் பின் “ஷஹீது – தர்மத்துக்காகப் பிராணனைக் கொடுக்கிறவன்’’ என அடிக்குறிப்பில் அதற்கு விளக்கமும் தருகிறார் வ,வேசு அவர்கள். ஒரு கட்டத்தில் ஒளரங்கசீப்பிடமிருத்து தப்பி வந்த குரு கோவிந்தசிங் பட்டாணியர்கள் கையில் சிக்குகிறார். ஆனால் அந்தப் பட்டாணியர்கள் அவரது வீரத்தை மெச்சி “உபசாரங்கள் செய்து” போலால்பூர் எனும் ஊரில் கொண்டு சென்று விட்டதாகவும், அங்கேயும் குருகோவிந்தரும் அவரோடு தப்பி வந்த படைகளும், “பீர்முகம்மது என்ற ஒர் முஸ்லிமினாலேயே ரஷிக்கப்பட்டார்கள்” எனவும் வ.வே.சு அய்யர் குறிப்பிடுகிறார். அது மட்டுமல்ல. “குரு கோவிந்தன் குரான் படிக்கும் காலத்தில் இந்தப் பீர்முகம்மது அவனுக்குச் சகபாடியாக இருந்தான். அவன் சிறந்த முஸ்லிமாயும் இருந்தான்” என்கிறார். குரு கோவிந்தர் “முஸ்லிம்கள் சமைத்த அன்னத்தை” உண்டதையும் குறிப்பிட்டுப் பாராட்டுகிறார். இறுதியாக முடிக்கும்போது, “..இவ்வாறு தனது ஆத்ம சக்தியனைத்தையும் தன் சிஷ்யரிடத்தில் வியாபிக்கும்படி செய்த வன்மை சரித்திரத்தில் முகம்மது நபி – ஸல்லாஹூ அலைஹிவஸ்ஸல்லம்- ஒருவருக்குத்தான் நமக்குத் தெரிந்த மட்டில் உண்டு….” என முடிப்பதை வாசித்தபோது நான் மெய்சிலிர்த்தேன். இறுதியில் “ஸத் ஸ்ரீ அகால்!” – எனச் சீக்கியர்களின் வழியில் வணக்கம் சொல்லி முடிக்கிறார் வ.வே.சு அய்யரவர்கள். வ.வே.சு (1881- 1925) அவர்களின் இறுதிக் காலத்தில் எழுதப்பட்டது இந்நூல். ஒருவேளை இதுவே அவரது இறுதி நூலாகவும் இருக்கக் கூடும். அவர் இறந்த ஆண்டில்தான் இந்நூலும் வெளிவந்துள்ளது. அது காந்தி சகாப்தம் தொடங்கிய காலம். பாரதி, வ.வேசு, வ.உ.சி, சாவர்கர் ஆகியோரெல்லாம் காந்தி சகாப்தம் தொடங்குவதற்கு முன் தமிழகத்தில் பிரிட்டிஷ் எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்தவர்கள். 1905 வங்கப் பிரிவினையை ஒட்டி எழுந்த அரசியல் எழுச்சியில் வெளிப்போந்த முதல் கட்டத்தினர். வெள்ளை அதிகாரிகளைக் கொன்று கையில் பகவத் கீதையுடன் தூக்கு மேடை ஏறிய மேற்சாதி இளைஞர்களின் காலத்தவர்கள். அரவிந்தர், திலகர் முதலானோரைத் தலைவர்களாக ஏற்றுத் தம் அரசியலைத் துவங்கியவர்கள். வ.வேசு சாவர்கரின் நெருங்கிய நண்பரும் கூட. ஆனால் 1916க்குப் பின் காந்தி சகாப்தம் இங்கு தொடங்குகிறது. அப்போது இந்த எழுச்சி வெகு மக்களை உள்ளடக்கியதாக உருப்பெறுகிறது. காந்தி கிலாஃபத் இயக்கத்தோடு இந்திய அரசியலில் நுழைகிறார். பாரதியும் வ.வே.சுவும் முந்தைய வழியிலிருந்து விலகி காந்தியத் தலைமையை ஏற்ற தருணத்தில் மறைய நேரிட்டவர்கள் என நான் முன்னொரு முறை எழுதியது நினைவிருக்கலாம். திருக்குர் ஆன் முதல் தமிழ் மொழியாக்கம் வந்தபோது அதைப் படித்து வியந்த வ.வே.சு அவர்கள் அதை வியந்து எழுதியதோடு, “ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் இருக்கவேண்டிய நூல்” என அதைப் பாராட்டி எழுதியது குறித்து மீனா எழுதியுள்ள கட்டுரை ஒன்றும் இங்கே நினைவுக்குரியது. | |||
|
முன்பு ஜெர்மனி நாடு பிளவுபட்டிருந்தபோதுபெர்லின் நகரத்தை கிழக்காகவும் மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது. ஒருநாள் கிழக்கு பெர்லினை சேர்ந்த சிலர் ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டுவந்து மதில் தாண்டி மேற்கு பெர்லின் பக்கம் கொட்டினார்கள்.(அவ்வளவு குரோதம் !) மேற்கு பெர்லினை சேர்ந்த மக்களும் அதே,மாதிரி செய்திருக்கலாம்.
ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. மாறாக ஒரு லாரி நிறைய உணவு பொருட்கள், ரொட்டிகள், பால் பொருட்கள் மற்றும் மளிகை சாமான்களை கொண்டுவந்து மதில் தாண்டி இந்த கிழக்கு பெர்லின் பக்கம் அழகாக அடுக்கி வைத்துவிட்டு போனார்கள். மேலும் அதன் மீது இவ்வாறு எழுதி வைத்து விட்டு போனார்கள் .ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள். (“EACH GIVES WHAT HE HAS"),,,,எவ்வளவு நிதர்சனமான உண்மை....! உங்களிடம் இருப்பதைதான் உங்களால் கொடுக்க முடியும். உங்களுக்கு 'உள்ளே' என்ன இருக்கிறது ? அன்பா - பகையா ? அமைதியா - வன்முறையா ? வாழ்வா - சாவா ? உங்கள் திறமை, பலம் அழிவுப்பாதையை நோக்கியா - வளர்ச்சிப்பாதையை நோக்கியா ? இத்தனை காலங்களில் நீங்கள் அடைந்தது என்ன ? ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்,,,, அன்பை_விதைப்போம்... விதைத்ததையே ...அறுவடை_செய்வோம். கோபத்தின் கதை ! ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார். ”இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்”. முதல்நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது. ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன். இனி கோபம் வராது என அவன் அப்பாவிடம் கூறினான். இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார். 45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான். உடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய், சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்? உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா ?
| |
மாமி சொன்ன கதைகள் - சந்திரா இரவீந்திரன்: ஆசிரியர் குறிப்பு: வடமராட்சி, பருத்தித்துறை, மேலைப்புலோலி, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது இலண்டனில் வசிக்கிறார். ஏற்கனவே இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. இது அனுபவப் பகிர்வுகளின் தொகுப்பு. மாமியார்- மருமகள் உறவு என்பது love-hate relationship. Hate எத்தனை சதவீதம் என்பதைப் பொறுத்தே அவர்கள் பேசுவது இருக்கும். மேலைநாடுகளில் கூட இந்த உறவு சொல்லிக் கொள்ளும் வகையில் கிடையாது. முதன்முறையாக, சந்திரா, தனது மாமியார் கூறிய கதைகளை நினைவுறுத்திப் புத்தகமாக்கியதன் மூலம் அந்த உறவின் நெருக்கத்தைச் சொல்கிறார். நாற்பதுகளுக்கு முந்தைய இருபாலை கிராமம். நம்மிடத்தில் இருந்து கொண்டு விநாயகர் சிலையை பிரதிஷ்டம் செய்யக்கூடாது, இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி கட்ட வேண்டும் என்று சட்டமிடுகிறார்கள் ஆங்கிலேயர். குழந்தைகள் உட்பட எல்லோருக்கும் கூப்பன் இருந்தால் உணவுப்பொருட்கள் சங்கத்தில் வழங்கும் நடைமுறை (ஏன் இப்படி? யாருக்கேனும் தெரியுமா?) . சென்னையில் பயந்தது போலவே இருபாலையிலும் ஜப்பான்காரன் குண்டு போடுவான் என்று பயப்படுகிறார்கள். கிராமத்தின் உணவுகள், பழங்கள் பற்றிய குறிப்புகள் ஏராளம். இலுப்பை நெய்யில் பொரித்த மீன், வேப்பம்பூ வடகம், பனங்காய் பணியாரம், பனங்கழி+கோதுமை+சீனி கலந்த உருண்டை, ஈச்சங்குருத்தின் இனிப்பு, பயற்றங் கொழுக்கட்டை, ஆடிக்கூழ் என்று நாம் சாப்பிட்டுப் பார்க்காமல் எத்தனை உணவுகள்! கிராமத்தில் பெண்களுக்கு ஏராளமான சட்டதிட்டங்கள். தெரிந்தவர்களுடன் கூட வெளியில் அனுப்பாத கட்டுப்பாடு, வெளியூரில் படிக்கப் போனால் கெட்டுப் போவாள் என்ற கருத்து, பெண் என்பதற்காகவே சமையல் தெரிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பெண்கள் அதிகம் படிக்க வேண்டாம் என்ற மனநிலை என்று தளைகள் நிறைந்த உலகம். 1956லேயே சிங்களம் எழுதப்பேசத் தெரிந்தால் மட்டுமே அரசுவேலையில் தொடர முடியும் என்று சட்டம் வருகிறது. ஒரு பெண் கதை சொல்கின்ற போது, அவள் சார்ந்த உலகம் கண்முன் விரிகிறது. முப்பத்தைந்து வயதில், ஒன்பது குழந்தைகளுடன் கணவனை இழந்து நிர்கதியாக நின்ற பெண். வைராக்கியமாக குழந்தைகள் எல்லோரையும் வளர்த்து, திருமணம் செய்து கொடுத்து, பேரன் பேத்திகள் என்று நிறைவானதொரு வாழ்வு. காது கேட்காததால் அதிகம் பேசமுடியவில்லை, கடைசி காலத்தில் எழுதித் தரக் கேட்கும்போது, ஞாபகமறதியும் வந்து சேர்கிறது. இது போல் எத்தனை வாழ்க்கைகள் சொல்லப்படாமலேயே, வெளியுலகுக்குத் தெரியாமலேயே மறைந்து போயிருக்கின்றன. தெரிவதற்கு, எல்லோருக்கும் சந்திரா போல் ஒரு மருமகள் கிடைக்க வேண்டுமே. பிரதிக்கு: காலச்சுவடு 4652-278525 முதல்பதிப்பு டிசம்பர் 2022 விலை ரூ. 150. |
"அமெரிக்காவில் மிகப்பெரிய பணக்காரர்
அவர்..... தன் தாயின் பிறந்தநாளுக்கு
பரிசளிக்க ....ஒரு பெரிய கடையின்
முன், தன் காரை நிறுத்துகிறார். பிரபலமான பூக்கடை அது ,..." எவ்வளவு விலை சார் இது" " 250 டாலர்"!!. " இதைவிட அருமையான 'பூ 'காண்பிக்க முடியுமா? "வந்தவர் மிகப்பெரிய பணக்காரர் என கடைக்காரருக்கு தெரிகிறது.... " இது "ஆர்கிட்"வகைப் பூ...மிகஅருமையா இருக்கும்.... ஒரு வாரம் வரை வாடாது" "500 டாலர்"!! சரி, இதையே , 'பேக் செய்யுங்க... "உங்களிடம், "கொரியர்" சர்வீஸ் இருக்கா? கொரியர் சர்வீஸ்'சும், செய்கிறோம் ...அதற்கு ஒரு 100 டாலராகும். "வேண்டாம்... இந்த பூங்கொத்து இன்று என் தாயிடம் போய் சேர வேண்டும் இன்று என் தாயின் பிறந்தநாள் கொரியர் சர்வீஸ்' பல காரணங்களுக்காக தாமதமாகலாம் எனக்கு இன்றே போகணும்.... ஒன்று செய்யுங்க.....' ஒரு காரும் டிரைவரும், ஏற்பாடு செய்து ...இந்த பூங்கொத்தை,இன்றே என் தாயிடம் ,இந்த அட்ரஸ் சில் சேர்த்திடுங்க. "ஓகே சார், இப்பவே ஏற்பாடு செய்கிறேன் இன்றே போய் சேர்ந்துவிடும்.... அதற்கும் சேர்த்து 500 டாலர். " நோ ப்ராப்ளம் பணத்தையும், அம்மாவின்,வீட்டு அட்ரஸ் கொடுத்து விட்டு நகர்ந்தார் அந்த பணக்காரர். மனம் முழுக்க மகிழ்ச்சி, தன் பிஸி நேரத்திலும், தன் அம்மாவின் பிறந்தநாளை மறக்காமல் ,பூங்கொத்து அனுப்பி விடுகிறோம் என சந்தோஷத்துடன் காரை காரில் ஏறப் போக..... ஒரு சின்ன சிறுமி ஒரு ஐந்து ஆறு வயது இருக்கும் அழுதபடி இருக்கிறாள்....." குழந்தை ஏன் அழறே? " அங்கிள் , எனக்கு ஒரு டாலர் பணம் தர முடியுமா ? ஓகே, ஒரு டாலர் தானே தரேன் எதற்குப் பணம்? ஏன் அழுகிறாய்? ஏதாவது தொலைத்து விட்டாயா? 'நோ அங்கிள் " எங்க அம்மாவின் பிறந்தநாள் அங்கிள் இன்று ... நான் வருடா,வருடம் அம்மாவின் பர்த்டே க்கு, அம்மாவுக்கு பிடித்த ஒரு ரோஜா பூ வாங்கித் தருவேன் என்று அம்மாவின் பிறந்தநாள்...என்னிடம் பணம் இல்லை......நீங்க ஒரு டாலர் கொடுத்தால் ஒரு ரோஜா பூ வாங்கி அம்மாவிற்கு கொடுப்பேன். அம்மா எனக்காக வெயிட் டிங்'.... ப்ளீஸ் அங்கிள் ஒரு டாலர் தரமுடியுமா? " பாவம் ஏழை பெண் அவள்....." ஒரு டாலர் என்னமா!.... 10 டாலர் தரேன் எடுத்துக்கோ ... "வேண்டாம் அங்கிள், ஒரே ஒரு டாலர் போதும்.... என ஒரு டாலரை மட்டும் எடுத்துக்கொண்டு 'சிட்'டாக பறந்தாள் அச் சிறுமி. ஏதோ சாக்லேட் வாங்க தான் அப்படி ஒரு டாலர் கேட்கிறாளோ? என நினைத்து அந்த பணக்காரர் மெதுவாக காரை அவள் செல்லும் இடம் நோக்கிச் செலுத்த சொன்னார் டிரைவரிடம். .ஒரு சின்ன பூக்கடையில் ஒரு டாலர் கொடுத்து ஒரு சிகப்பு ரோஜா பூ வாங்க .....கடைக்காரர் அதை அழகாக பேக் செய்து கொடுக்கிறார். மிகுந்த சந்தோஷத்துடன், அச்சிறுமி' பூ வை எடுத்தபடி ஓட ....அச் சிறுமி எங்கு போகிறாள்?... எந்த வீடு?.. தாய் யார்? என அறிய டிரைவரிடம் காரை சிறுமியின் பின்னால் போக சொல்லுகிறார். சிறுமி, பல தெருக்களைக் கடந்து ஓடுகிறாள்.... அவளுக்கு தெரியாமல் அவளைப் பின் தொடர்கிறது கார்.. பல வளைவுகளை,தெருக்களை கடந்து,ஓடும் அவள்......போய் நிற்கும் இடம் சமாதி........ ஒரு கல்லறையின் அருகில் போய் நின்று, ரோஜா பூவை வைத்து.... "அம்மா, 'ஹாப்பி பர்த்டே' உனக்கு மிகப் பிடித்த ரோஜா பூ நான் வாங்கிட்டு வந்துட்டேன் மா ....என கூறி அம்மாவின் கல்லறையில் முத்தமிட ,....பார்த்துக்கொண்டிருந்த பணக்காரர்களில் கரகரவென நீர் சுரந்தது . "சார் , 'மீட்டிங்கிற்கு, நேரமாச்சு... டிரைவர் அவசரப்படுத்த, கண்ணை துடைத்த படி அவசர அவசரமாக காரில் ஏறி, கடைக்கு போய், தான் வாங்கி வைத்த பூங்கொத்ததை, எடுத்துக்கொண்டு வண்டியை,வீட்டிற்கு போக சொன்னார். "பெரிய கார் ,தன் வீட்டின் முன் நிற்பதை பார்த்த .....92 வயதுடைய தாய் கண்ணை சுருக்கி," யாரது ?என பார்க்க .... "அம்மா என அழைத்தபடி பூங்கொத்தை கொடுத்து.... "பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா "என காலில் விழுந்த, மகனை ஆரத் தழுவிய தாய்...... " உனக்கு இருக்கும் எக்கச்சக்க வேலையில், ஏம்பா நீ வந்தே!!!! " அம்மா ,"அன்பை எப்படி வெளிப் படுத்துவது, என ஒரு சிறுமியிடம் நான் கற்றேன். " உயிரோடு இல்லாத தன் தாய்க்கு அச் சிறுமி எப்படி பூங்கொத்தை கொடுத்து அன்பை வெளிப்படுத்தினாள்.....நெகிழ்ந்து விட்டேன்... ஆனால் நான்?...அச் சிறுமியின் மூலமாக அன்பை, எப்படி வெளிப் படுத்துவது என அறிந்தேன் "உயிரோடு இருக்கும், என் தாய்க்கு நேரில் வந்து வாழ்த்து,பார்த்து, வாழ்த்து பெறுவதை விட பெரும் பாக்கியம் எனக்கு ஏது?...மகனை கட்டி அணைத்து முத்தமிட்டாள் அத் தாய். " தாய், தந்தை இருப்பவர்கள்.....அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை, அன்பை, வாரி வழங்க தவறாதீர்கள்....அன்பை வெளிப்படுத்த மறக்காதீர்கள். உங்களின்,உங்கள் பண்பின்,அன்பை நினைத்து,மகிழ்ந்து.... ஒரு சொட்டு கண்ணீர் உங்கள் தாயின் கண்களில் இருந்து வந்தால்.....உங்கள் வாழ்க்கை சிறக்கும்..... எல்லா தாய்க்கும் தன் பிள்ளைகளின் மகிழ்ச்சி,உயர்வு என்றும் சந்தோஷம் "சந்தோஷத்தில்,...மகிழ்ச்சியில், எல்லா தாயின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் தான் சுரக்கும்...... | |
|
அறியப்படாத யாழ்ப்பாணம் ஒரு பெயர் தெரியாத யாழ்ப்பாண முதியவரின் நாட்குறிப்பில் 1841 ஆண்டிலிருந்து 1933 ஆண்டு வரை நடந்த முக்கியமான சம்பவங்களை பதிவு செய்து இருந்தார். 1841 'உதயதாரகை" (Morning S அமெரிக்கன் மிஷனாரால் வெளியிடப்பட்டது . 1842. யாழ்ப்பாண வாசிகசாலை திறக்கப்பட்டது. 1847. மானிப்பாய் 'கிறீன்' வைத்தியசாலை ஆரம்பம். 1850. யாழ்ப்பாணத்தில் F.N.S. வைத்தியசாவை ஆரம்பம் 1853.(]) திரு. வைமன் கதிரவேற்பிள்ளை அவர்கள் "Literary wirror" என்னும் பத்திரிகை வெளியிடபட்டது. இப்பத்திரிகை பின்னர் "இலங்கைத் தேசா டானி" (The Ceylon Patriot) யாக மாற்றப்பட்டது. (2) யாழ்ப்பாணத்தில் நிழலுருவப்படம் பிடிக்கும் அமெரிக்கன் மிஷனாராற் காட்டப்பட்டது. 1858. பேதிப் பிரளயம் 1868, இலங்கைத் தேசாபிமானி' (The Ceylon Patriot) வெளியிடப்பட்டது. 1866. யாழ்ப்பாணத்தில் பொலிஸ்தானம் ஸ்தாபிக்கப்பட்டது. 1876. "சத்தியவேதபாது காவலன்"(The Catholic Guardian) என்னும் பத்திரிகை வெளியிடப்பட்டது. 1879. ஆறுமுகநாவலரின் பிரிவு 1880. (1) நாயன்மார்சட்டு ஆயுள்வேதவைத்தியசாலை ஆரம்பம் ( 2) யாழ்ப்பாணம் சுப்பிறீங் கோட்டில் மாகாணத்தலைவர் சேர். வில்லியம் துவைனம் அவர்களின் பரிபாலனத்தை தூஷித்து "Ceylon Examiner" என்னும் பத்திரிகையில் எழுதியதற்காக திரு. லூடோவிக்கி என்னும் பத்திராசிரியருக்கு ரூபா. 1000 அபராதம் விதிக்கப்பட்டது. 1884. (1) கிறீஸ்த வாலிப சங்கம் (Y.M.C.A.) வட்டுக் கோட்டையில் நிறுவப்பட்டது. (2) யாழ்ப்பாணத்தில் புயல்காற்றால் பெருஞ் சேதம். 1889. சைவபரிபாலன சபையாரால் "இந்துசாதனம்" (The Hindu Organ) பத்திரிகை வெளியிடப்பட்டது. 1894 (மாசிமீ 3உ) யாழ்ப்பாணத்தில் பூகம்பம். ல் 1895. "இந்து சாதன" (Hindu Organ) பத்திராசிரியர் சத்திய தவேதபாதுகாவலன்' (Catholic Guardian) பத்திரா சிரியர்மீது வைத்த மானநஷ்டத்தாட்சி சுப்பிறீங்கோட் டில் விசாரணை செய்யப்பட்டு விடுதலையடைந்தது. 1898, இணுவில் பெண் வைத்தியசாலை ஆரம்பம். 1902. (1) யாழ்ப்பாண புகையிரத வீதி சேர்.றிச்வே தேசாதிபதி யவர்களால் திறக்கப்பட்டது. (2) சுன்னாகத்தில் சுண்ணாம்பால் செய்யப்பட்ட புத்தரின் உருவம் Dr. போல் ஈ பீரிஸ் அவர்களால் புதைக்கப்பட்ட விடத்திலிருந்து கிளறி எடுக்கப்பட்டது, 1903. இந்துவாலிபர் சங்கம் வண்ணார்பண்ணையில் பட்டது. 1906. "யாழ்ப்பாணச் சங்கம்" நிறுவப்பட்டது. 1907. 'யாழ்ப்பாண F.N. S. வைத்தியசாலை அரசின சிவில் வைத்தியசாலையாக மாற்றப்பட்டது. 1912. திரு. அலன் எபிரகாம் என்னும் யாழ்ப்பாண தமிழ் கணிதவிற்பன்னர் லண்டனில் F. R. A. S. ஆக தெரியப்பட்டது. 1916. புதைக்கப்பட்டிருந்த திரவியமெடுப்பதற்காக வண்ணாபண்ணையில் மனித பலி (1917.சுன்னாகத்தில் பாழாயிருந்த புத்தகோயிலின் அடிக்கட்டிடம் Dr.போல் ஈ.பீரிஸ் அவர்களால்கண்டுபிடிக்கப்பட்டது. 1918. யாழ்ப்பாணத்தில் புயல்காற்றும் பெருவெள்ளமும். 1922.(1) ஸ்ரீமதி. சரோஜினி தேவியின் யாழ்ப்பாண விஜயம் (2) சுன்னாகம் அ. குமாரசாமிப்புலவரின் பிரிவு. 1925. மாணவ மகாநாடு (பின்னர் வாலிபமகாநாடு) நிறுவப்பட் டது. 1920: மதுப்பானக்கடைகள் மூடப்பட்டன. 1931. (1) 'வலிகாமம் வடக்கு வாலிபர் சங்கம்' நிறுவப்பட்டது (2) கமலாதேவியின் யாழ்ப்பாண விஜயம். (3) வாலிபமகாநாட்டாரால் அரசாங்கசபை பகிஸ்கரிக்கப்பட்டது (4) பண்டிதர் ஜவகர்லால்நேரு, கமலா நேரு,இந்திரா நேரு யாழ்ப்பாண விஜயம். 1932 யாழ்ப்பாணத்துக்கு மின்சார வெளிச்சம். 1933. (1) வடமாகாணத்துக்கு முதன் முறை இலங்கை (திரு. எட்மன்ட் றோட்றிக்கோ) மாகாணத் தலை வரலாற்றில் முதன் முதலாக அச்சில் வந்த முதல் தமிழ் பத்திரிகையின் பெயர் உதயதாரகை அது வெளிவந்தது யாழ்ப்பாணத்தில் இருந்துதான் வெளி வந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விசயமாகும் அச்சு யந்திரத்தை அமெரிக்க மிசனரிகள் அச்சு கூடத்தை 1820 ஆண்டளவில் இங்கு இறக்குமதி செய்து இருந்தாலும் ஆங்கிலேய காலனித்துவ அரசாங்கம் அதை பாவனை செய்ய அனுமதிக்கவில்லை 1834 ஆண்டளவில் தான் அனுமதித்தார்கள் 1841 ஆண்டு உலகின் முதல் தமிழ் பத்திரிகை இந்த அச்சு யந்திரத்தில் அச்சடிக்கப்பட்டு தெல்லிப்பளை யூனியன் (கல்லூரி)வளாகத்தி்ல் இருந்து வெளி வந்தது புகைப்படம் -உலகின் முதல் தமிழ் பத்திரிகை உதயதாரகை அச்சடிக்கப்பட்ட அச்சு யந்திரம் (2) “பிப் பிரஸ் ' பத்திரிகை வெளியிடப்பட்டது. (3) யாழ்ப்பாணப் பெரிய கோட்டு நீதிபதியாக முதல் முறையாக யாழ்ப்பாணத் தமிழர் திரு.சி. குமாரசாமி நியமிக்கப்பட்டார். | |
நேர்மையை
விதையுங்கள்
ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் ஒனர்க்கு வயதான காரணத்தால் அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை CEO அந்த கம்பெனியிலேயே வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தார். So அந்த Company-ல் வேலை செய்யும் Workers தன்னுடைய ரூம்க்கு வருமாறு கட்டளையிட்டார். உங்களில் ஒருவர் தான் நம் கம்பெனியின் CEO-வாக ஏற்றுக் கொண்டு நிர்வாகிக்க போகிறீர்கள் என்று சொன்னார். So, உங்கள் எல்லோருக்கும் ஒரு Competition ஒன்று நடத்தப் போகிறேன் என்றார். அதில் யார் வெற்றி அடைகிறார்களோ?. அவர் தான் நம் கம்பெனியின் அடுத்த CEO என்று கூறினார். Workers எல்லோரும் அந்த Competition என்னவென்று தெரிந்துக் கொள்ள மிக ஆர்வமாக இருந்தார்கள். அதற்கு அந்த Company Owner அனைவரையும் பார்த்து சொன்னார். என் கையில் கொஞ்சம் விதைகள் (Seeds) இருக்கிறது. இதை ஆளுக்கொன்று நான் தரப்போகிறேன். இந்த விதையை (Seeds) நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள மண்தொட்டியில் வைத்து நடுங்கள். தண்ணீர் ஊற்றி உரமிட்டு நன்றாக வளர்த்து எடுக்க வேண்டும்.
யார் செடியை Plant மிக நன்றாக வளர்த்து உள்ளீர்கள். Next Year கொண்டு வந்து என்னிடம் காண்பிக்க Show வேண்டும் என்று சொன்னார். யார் செடியை நல்ல வளர்த்து உள்ளீர்களோ அவர் தான் இந்த நிறுவனத்தின் CEO என்று சொன்னார். ஒரு வழியாக 6 மாதம் கடந்து விட்டது. Still அவன் தொட்டியில் செடி முளைக்கவே இல்லை. ஒருவேளை நான் விதையை வீணாக்கிவிட்டேனோ? என்று சொல்லி புலம்பிக் கொண்டியிருந்தான். But டெய்லியும் அந்த செடிக்கு வாட்டர் ஊற்றுவதை மட்டும் அவன் நிறுத்தவே இல்லை. அவனுடைய மண் தொட்டியில் செடி வளரவே இல்லை என்ற விஷயத்தை Matter அவன் யாரிடமும் சொல்லவில்லை. இப்படியே ஒரு வருடம் சென்று விட்டது. All Workers செடிகளை ஓனரிடம் காட்டுவதற்காக கொண்டு வந்தார்கள். ராமு செடியே இல்லாத Empty தொட்டியை எடுத்துக் கொண்டு போக மாட்டேன் என்று கூறினான். அதற்கு இராமுவின் Wife அவரை சமாதானப்படுத்தினார். நீங்கள் One Year முழுவதும் ஓனர் சொன்ன மாதிரியே செய்து உள்ளீர்கள். But தொட்டியில் செடி தான் முளைக்கவே இல்லை. இந்த விஷயத்திற்கு நீங்கள் என்ன தான் செய்ய முடியும். எனவே நீங்கள் Always நேர்மையாகவே நடந்துக் கொள்ளுங்கள். மண்தொட்டியை எடுத்துக் கொண்டு போங்கள். உங்கள் முதலாளியிடம் காட்டுங்கள் என்று கூறினாள். இராமுவும் செடி இல்லாத Empty தொட்டியை எடுத்துக் கொண்டு ஆபீஸ்க்கு சென்றான். எல்லோருடைய தொட்டியையும் பார்த்தான். விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் நல்ல உயரத்தில் இருந்தது. இவன் தொட்டியை பார்த்த எல்லாரும் சிரித்தார்கள். அந்த Company Owner அனைவரையும் தன் ரூம்க்கு செடிகளை எடுத்து வருமாறு கூறினார். எல்லாத்தையும் பார்த்து விட்டு சொன்னார். All Workers செம்மையாக செடியை வளர்த்து கொண்டு வந்து இருக்கிறீர்கள். உங்களில் இருந்து ஒருவர் தான் Today நம் Company CEO பொறுப்பினை ஏற்றுக்கொள்ள உள்ளீர்கள் என்று சொன்னார். எல்லோருடைய செடியையும் பார்த்துக் கொண்டே சென்றார். Ramu தன் கொண்டு வந்த Empty மண்தொட்டியை வைத்துக் கொண்டு Last வரிசையில் நின்று கொண்டியிருந்தான். இராமுவை பக்கத்தில் வருமாறு கூறுகிறார். ராமுவும் பயந்துக் கொண்டே சென்றான். அவன் மனதில் நினைத்துக் கொண்டே சென்றான். நான் வேற ஒழுங்காக Plant வளர்க்கவில்லை. So, நம்மை ஒர்க்கிலிருந்து நில் என்று சொல்ல போகிறார் என்று அவனே Think பண்ணிக் கொண்டே அங்கேச் சென்றான். முதலாளி கேட்டார் உன் செடி எங்கே? என்று கேட்டார். Past One Year அந்த விதையை நட்டு, இயற்கை உரமிட்டு வாட்டர் விட்டு வந்தார். இது போன்ற All விஷயத்தையும் தெளிவாக எடுத்து சொன்னான். ஓனர், இராமுவை தவிர எல்லாரும் உட்கார சொன்னார். இராமுவின் தோளில் ஓனர் கையை போட்டு இவர் தான் நம் Company CEO என்று சொன்னார். நிர்வாகத்தை ஏற்று நடத்த போகின்றார் என்று சொன்னார். இதை கேட்ட Ramu-க்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. Ramu கொண்டு வந்த ஜாடியில் தான் செடியே வளரவே இல்லை. எதற்கு அப்புறம் Company CEO பொறுப்பை என்னிடம் கொடுக்கிறார் என்று சற்று Mesh பார்த்தான். அதற்கான பதிலையும் முதலாளி சொன்னார். Last Year நான் உங்கள் அனைவருக்கும் ஒவ்வொரு Seeds கொடுத்தேன். அந்த விதைகள் அனைத்தும் சுடு தண்ணீரில் அவிக்கப்பட்ட விதைகள். அது ஒருநாளும் முளைக்கவே முளைக்காது. உங்கள் அனைவர்க்கும் நான் கொடுத்த விதை முளைக்காமல் இருந்திருக்கும். அந்த காரணத்தினால் Instead of வேற ஒரு விதையை வளர்த்துள்ளீர்கள். அதை இங்கேச் செடியாக கொண்டு வந்து உள்ளீர்கள். But இராமு மட்டுமே Honest நடந்து இருக்கின்றான். அதனால் தான் இராமுக்கு மட்டும் தான் நம் Companyயை நிர்வாகிக்கும் CEO இருக்கின்றது என்று சொன்னார். இதனை கேட்ட Ramu-க்கு ரொம்பவே பெருமையாக இருந்தது. ஓனர்
இராமுவின் நேர்மையினைப் பாராட்டி அந்த கம்பெனி CEO பொறுப்பை கொடுத்தார். நாம் சொல்கின்ற சொல்லும், பயணிக்கின்ற வழி நேர்மையாக இருந்தால் Success நம்மைத் தேடி வரும். வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வது ஒரு போராட்டம் தான். உண்மையும், நேர்மையும் தர்மத்தை பாதுகாக்கும். நேர்மை ஒருபோதும் வீண் போகாது. நம் வாழ்வில் நேர்மை தவறாமல் கடைபிடித்து வாழுகின்ற போது Money, பதவியும் நம்மைத் தேடி வரும். |
|
பனாட்டு பனாட்டு என்ற தின்பண்டம் தொல்காப்பியத்தில் பேசுகிறாதாம் அதை பற்றி அவர் கூறுவதை கீழே பார்க்கலாம் பல்கலைக்கழக நிகழ்வுகள் தவிர மீதமிருந்த நாட்களையும் நேரத்தையும் இலக்கிய நண்பர்களைச் சந்திக்கவும் யாழ்ப்பாணப் பகுதிகளைச் சுற்றிப் பார்க்கவும் பயன்படுத்திக்கொண்டோம். யாழ்ப்பாணப் பகுதிகளின் வீடுகள் கேரளத்தை நினைவுபடுத்தின. சுற்றிலும் வேலியும் மரங்கள் நிறைந்த தோட்டமும் கொண்ட தனிவீடுகள். பனையோலை, தென்னங்கீற்றுகளால் ஆன வேலிகளுடன் தற்போதைய தகர அட்டைகள் கட்டியவையும் கணிசமாக இருந்தன. நெரிசலற்ற சாலைகள். வாகனங்கள் குறைவு. மக்கள்தொகையும் குறைவு. கடற்கரைப் பகுதிகள் மிக அழகானவை. அங்குள்ள கிராமங்களில் பனைத் தொகுதிகள் நிறைந்திருந்தன. பனை சார்ந்த பண்பாடும் மிகுதி. தமிழ் இலக்கணத்தில் 'பனாட்டு' என்னும் சொல்லைப் பற்றித் தனி நூற்பாவே உண்டு. அப்பகுதியை நடத்தும்போது 'பனை வெல்லம் என்னும் கருப்பட்டிதான் அது என்று ஆசிரியர்கள் சொல்வது வழக்கம். பனம்பழச் சாறு பிழிந்து செய்யும் இனிப்புப் பண்டம் என்பதையும் அது இலங்கையில் இப்போதும் இருக்கிறது என்பதையும் சில ஆண்டுகளுக்கு முன் அறிந்தேன். அந்தப் 'பனாட்டு' எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்ற எனது ஆவல் யாழ்ப்பாணச் சந்தையில் தீர்ந்தது . உண்டு பார்த்துக் கொஞ்சம் விலைக்கும் வாங்கிக்கொண்டோம். பனம்பழத்தைச் சுரண்டிப் பழக்கூழ் போன்ற அதன் சாறெடுத்து ஓலைத் தடுக்கில் ஊற்றிக் காயவைத்தால் அடை போல ஆகிறது. துண்டுகளாக நறுக்கி அதைப் பொட்டலம் கட்டி விற்பனை செய்கிறார்கள். அதைச் செய்வதில் அங்கங்கே சிறுசிறு வித்தியாசங்கள் உள்ளன. பனைகள் மிகுந்த எங்கள் ஊரிலோ தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலோ இல்லாத இந்தப் பதார்த்தம் இலங்கையில் இப்போதும் பரவலாக இருப்பது வியப்பான செய்தி. தொல்காப்பியம் இந்தச் சொல்லைப் பதிவு செய்திருக்கிறது என்றால் இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட உணவு இது எனத்தெரிகிறது. அக்காலத்தில் தமிழ்நாட்டில் இது வழக்கில் இருந்து பின்னர் மறைந்து போய்விட்டதா? பனைகள் இப்போதும் நிறைந்திருக்கும் நாட்டில் எப்படி ஓர் பண்டம் மறைந்து போகும்? இலங்கை வழக்கைக் கருத்தில் கொண்டே இந்நூற்பாவைத் தொல்காப்பியம் இந்தச் சொல்லைப் பதிவு செய்திருக்கிறது என்றால் இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட உணவு இது எனத் தெரிகிறது. அக்காலத்தில் தமிழ்நாட்டில் இது வழக்கில் இருந்து பின்னர் மறைந்து போய்விட்டதா? பனைகள் இப்போதும் நிறைந்திருக்கும் நாட்டில் எப்படி ஓர் பண்டம் மறைந்து போகும்? இலங்கை வழக்கைக் கருத்தில் கொண்டே இந்நூற்பாவைத் தொல்காப்பியர் எழுதியிருக்க வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்களின் தொன்மைக்கு இச்சொல்லும் ஒரு சான்றாகக் கூடும் எனத் தோன்றியது. கேரளத்தைப் போல வீடுகள் மட்டுமல்ல, சில உணவு வகைகளும் அங்குள்ளன. குறிப்பாகப் புட்டு, புட்டு அவிப்பதற்கான தனிவகைப் பாத்திரங்களையும் கண்டோம். அரிசியிலும் கேரளத்துச் சாயல், செந்நிறத்தில் கொட்டை அரிசிச் சோற்றின் சுவை அருமை. வெறுஞ்சோற்றை அள்ளி உண்டாலே வாய் மணக்கிறது. தேங்காய் எண்ணெய் சமையலுக்குப் பயன்படுகிறது. மீன் குழம்பும் பொரித்த மீனும் நன்றாகக் கிடைக்கின்றன. நல்ல தேநீரைத்தான் எங்குமே குடிக்க இயலவில்லை. எத்தனை சொன்னாலும் பால் வண்ணத்திலேயே தேநீர் தருகிறார்கள் யாழ்ப்பாணத்தை சுற்றி செல்கையில் வல்வெட்டித்துறையில் பிரபாகரனது ஊர் கரவெட்டியில்
இது கா.சிவத்தம்பியின் ஊர்
என்று காட்டினார்கள் |
கருநாடக இசைக்கு மொழியில்லை ஜாதி இருக்கிறது அதுதான் சுருதி சேர்க்கிறது லயமாகவும் பின் தொடர்கிறது. தியாகராஜ சுவாமிகள் சக்கிலியராகவோ, நாயுடுவாகவோ இருந்திருந்தால்…?கேள்வி - பாடல்களில் மொழியை விட இசையே சிறப்பு. இசை தான் வார்த்தைகளைத் தாண்டிய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் என்று அடிக்கடி எழுதுகிறீர்கள். அதைத்தான் பார்ப்பனர்களும் சொல்கிறார்கள். “கர்நாடக சங்கீதத்தைத் தமிழில் பாடு” என்றால், “இசைக்கு மொழியில்லை. மொழிகளைக் கடந்தது இசை” என்கிறார்கள். உங்களின் இசை பற்றிய கருத்து தமிழ் விரோதமும் பார்ப்பன தன்மையும் உள்ளதாக இருக்கிறது. அவர்களுக்கும், இசை பற்றிய உங்களின் புரிதலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை? -வீரபாண்டியன். வார்த்தைகளால் பாடுவதைவிட வாத்தியக் கருவிகளால் இசைக்கப்படுகிற இசையே உன்னதம். அது தருகிற உணர்வுகளை ஒரு போதும் மொழியால் முடியவே முடியாது, என்பதை இன்னும் கூடுதலாக அழுத்திச் சொல்கிறேன். பாடலில் கூட ‘சந்தம்’ தான் உங்களை முதலில் ஈர்க்கிறது. மொழி இரண்டாம் பட்சம்தான். இதை நீங்கள் திரை இசை, கருநாடக சங்கீதம், மேற்கத்திய இசை இவற்றோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதல்ல, தமிழர்களின் வாழ்க்கையோடு கலந்த பறை, தவில், நாதஸ்வரம் இவையே அதற்குச் சாட்சி. இவற்றில் குரலிசை என்பதே இல்லை. இசை மட்டும்தான். பறையும் நாதஸ்வரமும் தவிலும்; துக்கம், மகிழ்ச்சி, எழுச்சி இன்னும் பல உணர்வுகளை நம் உள்ளமெங்கும் அள்ளித் தெளிக்கும். பறை இசைக் கலைஞர், நாதஸ்வரம்-தவில் கலைஞர்கள் சொல்லலாம், “இசைக்கு மொழியில்லை. மொழிகளைக் கடந்தது இசை” என்று. ஆனால், கருநாடக சங்கீத வித்துவான்கள் அப்படிச் சொல்வதற்குத் தகுதியற்றவர்கள், அருகதையற்றவர்கள். கருநாடக சங்கீதத்தில் பிரதானமே குரல் தான். அங்கு வாத்தியங்களுக்குப் பெயரே பக்க வாத்தியம். கருநாடக சங்கீதத்தில் உள்ள பிரச்சினை, மொழியல்ல; அதில் ஜாதிய கண்ணோட்டம் நிறைந்த அரசியல் இருக்கிறது. ‘தமிழை விடச் சமஸ்கிருதம் உயர்ந்தது’ என்பது போலவே ‘கருநாடக இசைக்குத் தெலுங்குதான் பொருத்தமானது’ என்கிற எண்ணமும். அதற்குக் காரணம் அவர்களுக்குத் தெலுங்கு மேல் உள்ள ஈடுபாடல்ல; தியாகராஜர் ஒரு தெலுங்கு பார்ப்பனர். அவர் கீர்த்தனைகளைத் தெலுங்கில்தான் பாடியிருக்கிறார். தியாகராஜர் மீது உள்ள ஈடுபாடுதான் தெலுங்கின் மீது உள்ள ஈடுபாடு போல் பிரதிபலிக்கிறது. தியாகராஜர் தெலுங்கு பேசிய நாயுடுவாகவோ, இன்னும் குறிப்பாக சக்கிலியராகவோ இருந்திருந்தால்…? ‘அப்படி ஒருத்தர் இருந்தாரா?’ என்ற நிலை ஏற்பட்டிருக்கும். தியாகராஜர் நம்பூதிரியாக இருந்து மலையாளத்தில் பாடியிருந்தால் இவர்களுக்கும் மலையாள உணர்வு பொங்கி வழிந்திருக்கும். அதனால்தான் தெலுங்கு கீர்த்தனைகளுக்கு முன்பே தமிழில் கீர்த்தனைகள் பாடிய அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை இவர்களை விட தியாகய்யர், சியாமா சாஸ்திரிகள், முத்துச்சாமி தீட்சிதர் இவர்களின் தெலுங்கு, சமஸ்கிருத கீர்த்தனைகள் ‘அவர்களுக்கு’ பிடிக்கிறது என்பது மட்டுமல்ல உயர்வாகவும் தெரிகிறது. காரணம் ‘அவர்கள் தமிழில் பாடினார்கள்’ என்பதினால் அல்ல, அவர்கள் பெயருக்குப் பின் ஐயர், சாஸ்திரிகள், தீட்சிதர் என்ற பெயர் இல்லாததினால்தான். இருந்திருந்தால், தெலுங்கு கீர்த்தனைகளை மட்டும் விரும்பி பாடுகிற ‘தமிழர்களான இவர்களுக்கு’ தமிழ் உணர்வும் நிறைந்திருக்கும். ‘தியாகராஜருக்கு முன்பே கீர்த்தனைகளைப் பாடியவர்கள் இவர்கள்தான்’ என்று அவர்களுக்குரிய மரியாதையும் முறையாகக் கிடைத்திருக்கும். இன்னும் நெருக்கிப் பார்த்தோமானால், அதை நிரூபிப்பது போல் இன்றைய சாட்சியாகவும், அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை இவர்களின் கீர்த்தனைகளை, தமிழ்ப் பாடல்கள் பாடும்போது கூட ‘அவர்கள்’ பாடுவதில்லை. மாறாக, கோபால கிருஷ்ண பாரதியார், பாவநாசம் சிவன், சுப்பிரமணிய பாரதியார் பாடல்களைத் தான் உணர்ந்து, உருகி தமிழ் உணர்வாக வெளிப்படுத்துகிறார்கள். காரணம் ‘இவர்கள்’ பெயருக்குப் பின்னால் ‘அது’ இல்லாவிட்டாலும் பெயருக்குள் ‘அது’ தானே இருக்கிறது. ‘நாதஸ்வர-தவில்’ இசை மிக துல்லியமான செவ்வியல் இசை வடிவம். அது தியாகராஜர் காலத்துக்கு முன்பிருந்தே அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை காலத்துக்கு முந்தைய காலத்திலிருந்தே இருக்கிறது. ‘இவர்கள்’ பாடுகிற எல்லா கீர்த்தனைகளையும் நாதஸ்வர இசையில் வாசிக்கிறார்கள். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலையோடு வளர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து இசைப் பாடலையும் நாட்டியத்தையும் தங்களின் கண்டுபிடிப்பாக, தகுதி திறமையாக அடையாளப்படுத்திக் கொண்ட ‘இவர்கள்’, ஏன் ‘நாதஸ்வர-தவில்’ வாசிப்பில் இன்றுவரை ஒருவர்கூட பங்கெடுக்கவில்லை? தோளில் வைத்து வாசிக்க வேண்டிய மேற்கத்திய வாத்தியக் கருவியான, வெள்ளைக்காரனின் violin – னை குழந்தையைப் போல் மடியில் வைத்து கர்நாடக சங்கீதத்திற்குப் பயன்படுத்துகிற இவர்கள் ஏன் நாதஸ்வரம்-தவில் வாசிப்பதில்லை? இந்தக் கேள்வியோடு தமிழ் இசை-கருநாடக சங்கீதம் இவற்றுக்குள்ள அரசியல் பிரச்சினையைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ‘கருநாடக சங்கீதத்தைத் தமிழில் பாடு’ என்றால், ‘இசைக்கு மொழி முக்கியமில்லை. மொழிகளைக் கடந்தது இசை’ என்கிறார்கள், பல நேரங்களில் அவர்களாகவும் சில நேரங்களில் இவர்களாகவும் திடீரென்று சிவலிங்கத்தைப் போல் ‘அரூபமாக’வும் காட்சி தருகிற ‘அவர்கள்-இவர்கள்’. அதையே நான் இப்படிக் கேட்கிறேன், ‘இசைக்கு மொழி முக்கியமில்லை. மொழிகளைக் கடந்தது இசை. அப்போ தெலுங்கில் மட்டும் எதற்கு பாடனும்? -வே. மதிமாறன்- 2013. ஆகஸ்ட் 17 அன்று எழுதியது. | |
10 |
12 | |
13 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக