சித்தர் மருத்துவம்

அகத்தி 

அகத்தி என்றாலே முதன்மை, முக்கியம் என்று பொருளாகும். நமது அகத்தில் உள்ள கழிவுகளை அகற்றுவதால் இது அகத்தி என்று பெயர் பெற்றுள்ளதாம். தமிழ்நாட்டில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மறுநாள் துவாதசி அன்று இறைவனை வணங்கி உண்ணும் உணவில் அகத்திக்கீரை முக்கிய உணவாக இடம் பெறுகிறது. இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. பெரும்பாலும் அகத்திச்செடி நீர் தாங்கிய பூமிகளில் பயிர் செய்யப்படுகிறது.

சத்துக்கள் அகத்திக் கீரையில் 73 சதவிகிதம் நீரும், 8.4 சதவிகிதம் புரதமும், 1.4 சதவிகிதம் கொழுப்பும், 2.1 சதவிகிதம் தாது உப்புகளும் இருக்கின்றன. இதில் 2.2 சதவிகிதம் நார்சத்தும் இருக்கிறது. மாவுச்சத்து 11.8 சதவிகிதமும் உள்ளது. சுண்ணாம்புச்சத்து இக்கீரையில் அதிக அளவில் உள்ளது. இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.இக்கீரை உயிர்ச்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். 100 கிராம் கீரையில், 9 ஆயிரம் உயிர் சத்தான வைட்டமின்கள் உள்ளது. தயாமின் சத்து 0.21 மில்லி கிராமும், ரைபோம் ஃப்ளோவின் சத்து 0.09 மில்லிகிராமும், நிக்கோடினிக் அமிலம் 1.2 மில்லிகிராமும், வைட்டமின் ‘சி‘ 169 மில்லி கிராம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.பயன்கள்அகத்திக்கீரையில் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றன. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது. குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு, தொண்டைப்புண் மற்றும் தொண்டைவலி, தோல் நோய்கள் போன்றவற்றிற்கு இக்கீரையை சாப்பிடுவதன் மூலம் குணமாகும்.
மருத்துவ பயன்கள்
அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்கும்போது தொண்டைப் புண், தொண்டை வலி ஆகிய நோய்கள் நீங்கும். ரத்த பித்தம், ரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை சாப்பிடுவதால் அகலும்.
பித்தம்: அகத்திக்கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ, ஆகியவற்றைக் குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.அரிப்பு: அகத்தி மரப்பட்டை, வேர்ப்பட்டை வகைகளை கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு சுண்டக்காய்ச்சி அதனை வடிகட்டி 100 மி.லி. அளவு என 2 வேளை குடித்து வர காய்ச்சல், கை கால், மார்பு, உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைக் காய்ச்சல் குணமாகும்.காய்ச்சல்: இக்கீரையைப் பிழிந்து அதன் சாறை 2 துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி, சளி, ஜலதோஷம் போன்றவை நீங்கும்.

பால் சுரக்க: இக்கீரையில் சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ அதிகளவு உள்ளது. பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும். இக்கீரை சமைக்கும்போது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும். 

வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. இதன்மூலம் மலச்சிக்கல் நீங்கும். குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை 5க்கு ஒரு பங்கு வீதம் தேன் கலந்து தலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும்.
காயம்: அகத்தி கீரையை வேக வைத்து அரைத்துக் காயங்களுக்கு கட்ட விரைவில் ஆறும். அகத்திப் பூச்சாறை கண்களில் பிழிய கண்நோய் குணமாகும்.
அல்சர்: அகத்தி கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும். இதற்கு அகத்திக்கீரையை நன்றாக கழுவி இதில் 4 பங்கு சின்ன வெங்காயத்தை சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினமும்  1 வேளை குடிக்கலாம்.

கால்வெடிப்பு: அகத்தி கீரையையும், மருதாணி இலையையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப்போட்டால் வெடிப்புகள் மறையும்.
தேமல்:உடம்பில் காணப்படும் தேமலுக்கு அகத்தி கீரையின் இலையை தேங்கா எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும். அகத்தி கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.

குறிப்பு: அகத்திக்கீரை மருந்து முறிவு கீரையாகும். பிற நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் அகத்திக்கீரையை சாப்பிடக்கூடாது. மேலும் இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்தம் கெட்டுப்போகும் வாய்ப்புண்டு. இதனால் சொறி, சிரங்கும் தோன்றலாம். ரத்தம் குறைந்து ரத்த சோகை ஏற்பட்டு, வயிற்று வலியும் உண்டாகும். இக்கீரையை வாரத்துக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால், நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

காய்ச்சல்/சளிக்காய்ச்சல்

காய்ச்சல்/சளிக்காய்ச்சல் என்பது எரிச்சலை உண்டாக்கும் ஒரு நோய். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு குமட்டல்கள் உண்டாகி, சில காலம் படுக்கையில் இருக்க கூட வாய்ப்புகளை ஏற்படுத்தி விடும்.

அதிக காய்ச்சலோடு நாள் முழுவதும் கட்டிலில் படுத்திருந்தால் கோபம் ஏற்படும் தானே? சோர்வு மற்றும் குமட்டல் போன்ற காரணங்களாலேயே ஃபுளு காய்ச்சல் உங்களை கோபப்படுத்தும்.ஃபுளு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், எண்ணெய் மற்றும் மசாலா பொருட்கள் குறைவாக சேர்க்கப்பட்டுள்ள நேர்த்தியான உணவுகளையே உட்கொள்ள வேண்டும். 

அவை வீட்டில் தயார் செய்யப்பட ஆரோக்கியமான உணவுகளாக இருக்க வேண்டும். நல்ல உணவுகளை உண்ணும் போது விரைவிலேயே நோய் பறந்தோடும். ஃபுளு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், காய்ச்சலுக்கு பிறகு சத்து குறைவுடன் சோர்வாக காணப்படுவார்கள்.

அதனால் சரியாக உணவருந்தினால், போதுமான ஆற்றல் திறனை மீதும் பெறலாம். ஃபுளு காய்ச்சல் சிகிச்சைக்கு உணவுகள் உதவி புரியும். ஃபுளு காய்ச்சலுக்கான உணவுகள், ஃபுளு காய்ச்சலுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, விரைவிலேயே குணப்படுத்தும். ஃபுளு காய்ச்சல் சிகிச்சைக்கு உதவியாக இருக்கும் சில உணவுகள் பற்றி பார்க்கலாமா? 

பழங்களில் வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் இயற்கையாகவே உள்ளது. மிதமான, சுலபத்தில் செரிமானம் ஆகக்கூடிய பழங்களான ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள் மற்றும் இதர பழங்களே அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் உடலுக்கு மீண்டும் நீர்ச்சத்தை பெற்று தரவும் பழங்கள் உதவுகிறது. அதனால் இது ஃபுளு காய்ச்சலை எதிர்த்தும் போராடும். நாள் முழுவதும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வருவது, ஃபுளு காய்ச்சலுக்கு சிறந்த சிகிச்சையாக இருக்கும். பழங்கள் என்பது இயற்கையாக கிடைக்க கூடிய ஃபுளு காய்ச்சலுக்கான உணவாகும்.

 அரச இலை

 

இதன் இலைகளில் அதிகளவு டானிக் அமிலம், அஸ்பார்டிக் அமிலம், ஸ்டெராய்டு, வைட்டமின்கள், மெத்தயோனின், கிளைசின் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இவையெல்லாம் அரசமர இலைகளை மிகச்சிறந்த ஆயுர்வேத மருந்தாக மாற்றியுள்ளது

மஞ்சள் காமாலை

இளஞ்சிவப்பான அரசமர இலைகளை எடுத்துக்கொண்டு அதனை சாறாக்கி அதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து தினமும் மூன்று முறை குடிக்க வேண்டும். இது மஞ்சள் காமாலையை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தக்கூடியது

கல்லீரல் பாதுகாப்பு

சில இலைகளை எடுத்துக்கொண்டு அவற்றுடன் கற்கண்டை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். இதனை நீருடன் நன்கு கலந்து பின் வடிகட்டி கொள்ளவும். இந்த நீரை தினமும் குடித்து வந்தால் கல்லீரல் பாதுகாப்பாய் இருக்கும். அதிக குடிப்பழக்கம் உள்ளவர்கள் இதனை செய்வது மிகச்சிறந்த பலனையளிக்கும்.

இதய ஆரோக்கியம்

சில மென்மையான இலைகளை எடுத்துக்கொண்டு அதனை இரவில் தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். காலையில் தண்ணீரை வடிகட்டி தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் அது இதயம் படபடப்பாய் உணர்வதை குறைப்பதோடு இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் செய்யும்.


ஆல இலை

ஆல் அல்லது ஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகின்றன.

மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அகல் என்னும் சொல் ஆல் என மருவி வழங்கப்படுகிறது.அகன்ற அதன் கிளைகளைத் தாங்குவதற்கு அதன் விழுதுகள் பயன்படுகின்றன. கிளைகளிலிருந்து இவை கீழ்நோக்கி இறங்குவதால் (வீழ்வதால்) இதனை வீழ் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

இந்தியாவில் ஆலமரம் இல்லாத கிராமமே பார்க்க இயலாது .அதுவும் ஒவ்வரு ஆலமரமும் மிகப்பழமையாக பாரம்பரிய தொடர்ச்சியும் கொண்டவை.

பெரிய மரமாக அடர்ந்து படர்ந்து இருப்பதினால் மட்டுமே ஆலமரத்தடியில் ஊர்க்கூட்டம்நடத்தபடுவதில்லை , மாறாக ஆலமரத்தடியில் சென்று அமர்ந்தாலே அமைதி வந்துவிடும் .

ஆல மரத்துப் பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும்மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகின்றன.

கனிகளை உலர வைத்து அரைத்து 12 கிராம் அளவு எடுத்துப் பாலுடன் கலந்து குடித்தால் இந்திரியம்திடப்படும். ஞாபகமறதி நீங்கும்.உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது பழம் மொழி. ஆலமரக் குச்சிகளில் பற்களைத் தேய்த்து வந்தால்பற்களும் ஈறுகளும் வலிமை பெறும்.

பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரைசேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கைகூடும்

ஆலம் இலைகளை நிழலில் உலர வைத்து நன்றாக அரைத்துச் சம அளவு கலந்து, மாதவிலக்குப்பிரச்னைகளுக்கும், வெள்ளைப்படு நோய்க்கும் தரப்படும் சிறந்த மருந்தாகும்.

பொதுவாக சில முக்கிய பொருட்களிலே இளமையை காக்கும் தன்மை இருக்கும். அந்த வகையில் ஆலம்பழத்தில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருக்கிறதாம். இதனை சாப்பிட்டு வந்தால் செல்களை புதுப்பித்து சுறுசுறுப்பாக இருக்க வைக்கும். இதனால், முக சருமம் நீண்ட காலம் இளமையாக இருக்கும்.

இந்த ஆலமரத்தில் சில முக்கிய பயன்கள் உள்ளன. இவற்றின் இலைகள் முடி பிரச்சினைக்கு தீர்வு தருகிறது. முடி உதிர்வு இருக்கும் பலருக்கு இது ஒரு நல்ல மருந்தாகும்.

உலர்ந்த அல்லது இளைய ஆல இலைகளை எடுத்து நன்கு அரைத்து கொண்டு, அவற்றுடன் ஆளி விதை எண்ணெய் சேர்த்து தலைக்கு தடவி மசாஜ் செய்யவும். பின் தலையை வெதுவெதுப்பான நீரில் அலசவும். அல்லது ஆளி விதை எண்ணெய்யில் ஆல இலைகளை போட்டு, இந்த ஊறிய எண்ணெய்யை தலைக்கு தடவி வரலாம். இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வு நின்று வழுக்கை பிரச்சினை தீரும்.

ஆல இலைகளை எரித்து அதன் சாம்பலை வெற்றிலையுடன் சேர்த்துச் சாப்பிடுவது வெட்டை நோய்க்கு நிவாரணமாக அமைகிறது.

ஆல மரத்தின் ஒவ்வொரு பாகத்திலும் பால் வடியும். இதைச் சேகரித்து மருந்தாகப் பயன்படுத்தலாம். இதுகாது, மூக்கு, பல் நோய்கள், சீக்கிரத்தில் இந்திரியம் வெளியாகுதல், மூல நோய், கட்டிகள், வலிகள் நீங்கபயன் தருகிறது.

இப்படி தலை முதல் பாதம் வரை கணக்கில் அடங்கா குணங்களை கொண்டுள்ள ஆல மரத்தை போற்றுவோம்!



அக்ரோட்டு 

தாவரப்பெயர்‌ *:சுக்வன்ஸ்ரிஜியா (பெறிய regia L.) தாவரக்குடும்பம்‌ : சுக்வாண்டேசியே


 

தாவர அமைப்பு இது ஒரு பெரிய இவையுதிர்மரம்‌. இலையும்‌, பட்டையும்நறுமணம்கொண்டவை. வயது முதிர்ந்த மரத்தின்பட்டையில்செங்குத்தான இணை மடிப்புகள்காணப்படும்‌, பட்டை சாம்பல்நிறமானது. இலை 15-88 செ.மீ. நீளமான 2-9 சிறறிலைகளைக்கொண்ட இணையில்லாத கட்டிலை; சிற்றிலையின்வடிவம்நீள்வட்ட வடி.வம்முதல்ஈட்டி. வடிவம்வரை வேறுபட்டது. இலை நுனி குறுகியது. பக்கச்சிற்றிலைகள்எதிரடுக்கில்அமைந்தவை. இவைக்காம்பு இல்வாதவை. நுனிச்சிற்றிலை மற்ற சிற்றிலைகளை விடப்பெரியது

ஆண்மற்றும்பெண்பூக்கள்தனித்தனி கதிர்மஞ்சரிகளில்காணப்படும்‌. ஆண்மஞ்சரி தண்டின்பக்கவாட்டில்இவைத்தமும்புக்கு மேலே பெரும்பாலும்இரண்டிரண்டாகக்காணப்படும்‌. பூவடி.ச்செதில்சிறியது. மகரந்தக்கேசரங்கள்‌ 10-20 நுனிப்பக்கம்திறப்பவை. 1-2 பூக்களுடைய பெண்பூ மஞ்சரி தண்டின்நுனியில்காணப்படும்‌. அவ்லிகள்பச்சை நிறத்துடன்ஈட்டி வடி.வத்தில்மிகச்சிறியதாக இருக்கும்‌, புல்லிக்குழுல்‌ 6 மி.மி, நீளத்தில்‌ 4 பற்களுடன்மயிர்களுடன்காணப்படும்‌. 

கனி, கொட்டைத்தசைக்கனி (ஸாயு6), 2 செமி. நீளம்‌, நீள்வட்ட வடிவம்‌, பச்சை நிறம்‌, நறுமணம்கொண்டது; கனியுறை தோவல்போன்ற கடினமுடையது. கொட்டை வெளிப்புறமாக இரண்டாகப்பிளவு பட்டது. வளரும்இடம்மித வெட்ப இமாலய மவையில்‌ 8000-10000 அடி. வரையில்‌ . தன்னிச்சையாகவும்பயிரிடப்பட்டும்காணப்படுகிறது. காசியா. மலையில்பயிரிடப்படுகிறது. பயன்படும்உறுப்பு மரப்பட்டை, இலை மற்றம்கொட்டையின்பருப்பு, மருத்துவ குணம்பட்டை - புழுக்கொல்லி, அழுக்ககற்றி 4 தமிழ்நாட்டு மூவிகைகள்இலை - துவர்ப்பி, உரமாக்கி, புழுக்கொல்லி பருப்பு - உடற்றேற்றி, மலமிளக்கி அறிவியல்சோதனைகள்விதைப்பரப்பிலிருந்து, கக்லன்சின்‌ (1மஹ18ஊட1) என்ற சத்தும்‌, வைட்டமின்‌ "' மற்றம்‌ "பி' சத்தும்பிரித்தெடுக்கப்பட்டது. முதிராத கனியில்அதிக அளவு வைட்டமின்‌ "சி' சத்து (அஸ்கார்பிக்அமிலம்‌) உள்ளது

இலையின்நீர்ச்சாரமானது நுண்ணியிர்க்கொல்லியாகச்செயல்படுகிறது. இலையும்‌, முதிராக்கனியின்கனியுரையும்களைக்கொல்லிப்பண்புகளைப்பெற்றுள்ளன. நாட்டு அக்ரோட்டுக்‌ ance (country walnut) eer து அலூரைட்ஸ்‌ Nong»véanern (Aleurites molucana Willd) என்று மரத்தின்கொட்டையாகும்‌. இதன்மருத்துவப்பண்புகளும்ஏறக்குறைய இதன்பண்பை ஒத்திருக்கும்‌. 

அசோகு

 

மாதவிடாய் கோளாறுகளும்   எளிய மருத்துவ முறைகளும்

பொதுவாக 10 வயது முதல் 17 வயதுக்குள் பெண்கள் பருவமடைதல் (பூப்பெய்தல்) நிகழ்வு  நடைபெறுகிறது.    இந்த மாற்த்திற்கு பின்னர் 21 நாட்கள் முதல் 35 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு ஏற்படுகிறது. கருவுற்ற காலங்கள் மற்றும் குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு மாதவிடாய்  சுழற்சி நடைபெறுவதில்லை. மாதவிடாய் என்பதுமுதல் 5 நாட்களுக்கு வெளிப்படுவதே சரியான சுழற்சியா கூறப்படுகிறது.


 ஆனால்  இன்றைய இயந்திர மயமான வாழ்க்கை முறையில்  மாறுபட்ட உணவு பழக்கங்கள்,அதிக ஜங்புட் , இரவுப்பணி, மணஅழுத்தம், பணிச்சுமை இப்படி பல்வேறு காரணங்களால் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பருவம் எய்தியது முதல் மாதவிடாய் நிற்கும் காலம் வரை   பெண்கள் இதனால்  சந்திக்கும் பிரச்சனைகள்  ஏராளம்.

 பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கிய காரணமாக இருக்கும். குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும். ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடுகள், உடற் பருமன், நரம்புத் தளர்ச்சி நோய் போன்றவற்றால் மாதவிலக்கு தள்ளி போகும்.ஆகவே மாதவிலக்கு நின்றுவிட்டது என்று தாங்களாகவே முடிவுக்கு வந்துவிடக்கூடாது. சரியான மருத்துவரை அணுகி காரணத்தை அறிந்து சரிசெய்துகொள்ள வேண்டும்.

பொதுவாக தமிழகத்தில் பெண்களுக்கு  45- வயதுக்கு மேற்பட்ட காலகட்டத்தில் மாதவிடாய் இயற்கையாகவே நின்றுவிடும்.சிலருக்கு 40 வயதுக்குள்ளாகவே மாதவிலக்கு நின்று போகும்.

அதிக ரத்த போக்கு, சீரற்ற முறையில்  மாதவிலக்கு,   வெள்ளை படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது தகுந்த மருத்தவ ஆலோசனை பெறுவது நல்லது.

மாதத்திற்கு ஒருமுறை அல்லது மாறுபட்ட சுழற்சியில் மாதவிடாய் ஏற்படுவது, மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை மாதவிடாய் வராமல் இருப்பது,மாதவிடாய்  காலத்தில் அதிகமான அடிவயிற்று வலி ஏற்படுவது,உடல் அசதி, வாந்தி, குமட்டல், தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், அவர்களுக்கு கருப்பைக் கோளாறுகள், கருப்பைக் கட்டிகள் ருக்க கூடும். இதை கவணிக்காமல் விட்டால் கருப்பை  புற்று நோய் உள்ளிட்ட  உடல் நல பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.

  மாதவிடாய்  பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் அசோகு

கருப்பைக் கோளாறுகளை சரிசெய்யும் அசோக மரப்பட்டை

அசோக மரத்தின் பட்டை கால் கிலோ, கருப்பு எள் 50 கிராம் இரண்டையும் அரைத்து தூள் செய்து கொள்ளுங்கள். இதில் ஒரு ஸ்பூன் எடுத்து 2 டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாக சுண்ட வைத்து காலைமாலை இருவேளை உண்டுவர வேண்டும்.

 அதி மதுரம்

 

தாவரப்பெயர்‌ : கிளைசிரைசா க்ளாப்ரா (Glycyrrhiza glabra L.) ஆங்கிலப்பெயர்‌ : Liquorice தாவரக்குடும்பம்‌ : ெகுமினோசே


 தாவர அமைப்பு இது அதிக வருடங்கள்வாழக்கூடிய 1.5 மீ. உயரம்வரை வளரக்கூடிய குற்றுச்செடியாகும்‌. இலை: ஒற்றைச்சிறகமைப்பைக்கொண்ட கூட்டிலை, பூ: வெண்மையான அவ்வது இளஞ்சிவப்பு நிறப்பூக்கள்இலைக்கோண கதிர்மஞ்சரி (501106) ல்அமைந்திருக்கும்‌.

கனி: 1-2 செ.மீ. நீளமுடைய தட்டை வடிவமுள்ள சிறிய முட்டைகளைப்போன்றவற்றால்முழுதும்சூழப்பட்ட கனி. (காண்க: படம்‌-2), £4//ன்படும்உறுப்பு தரைகீழ்த்தண்டும்‌ (510101) வேரும்‌. வேரின்அடையாள குணங்கள்வேரின்வெளிப்குதி கரிய சிவப்பு கலந்த மர வண்ணத்தில்இருக்கும்‌. நீளவாட்டில்சுருக்கங்கள்காணப்படும்‌. தரைகீழ்த்தண்டில்சிறிய முண்டுகளும்‌, செதில்கள்மற்றும்சிறிய வேர்இருந்த தழும்புகளும்காணப்படும்‌.

தண்டின்குறுக்கு வெட்டுத்தோற்றத்தில்‌, பட்டைக்கருகில்வெளிர்மஞ்சன்நிறத்தில்கார்க்‌ ()கும்‌, அதையடுத்து மெல்லிய கேம்பியம்‌ (வோ) வட்டமும்நடுவில்வெள்ளை நிற உட்சோஜறும்‌ (210) காணப்படும்‌. வேரினைச்சுவைத்துப்பார்த்தால்நன்கு இனிக்கும்‌. மேற்கண்ட குணங்களை வைத்து அதிமதுரத்தை இதன்‌₹கலப்படப்பொருளான குன்றீமணி வேரிலிருந்து பிரித்தரியலாம்‌. 

வளரும்இடம்மேற்கு தொடர்ச்சி மலை, பஞ்சாப்மற்றம்இமயமயவை, மற்றும்உத்திரப்பிரதேச மாநிலங்களில்பயிரிடப்படுகிறுது. 12 மருத்துவ குணம்கோழையகற்றி, மலம்இளக்கி, சிறுநீர்ப்பெருக்கி, ஆண்மை பெருக்கி மற்றும நரம்பு உரமாக்கி, இருமல்‌, சளி, தொண்டைப்புண்‌, வயிற்றுப்புண்‌, மற்றும்சுவாசகாசத்திற்கு மருந்தாகப்பயன்படுகிறது.

தமிழ்நாட்டு மூலிகைகள்இதன்வேரிலிருந்து கிளைசிரைசின்‌ (0137017101) என்ற அல்கலாய்டு பிரித்தெடுக்கப்பட்டது. மேலும்வேரில்சர்க்கரை, ஸ்டார்ச்‌, அமில ரெசின்‌, அஸ்பார்ஜின்என்ற கசப்புப்பொருள்‌, மேலிக்அமிலம்மற்றும்புரதக்கொழுப்பு போன்ற பொருட்கள்அடங்கியுள்ளன. கிளைசிரைசின்எலிகளில்உண்டாக்கப்பட்ட கீல்வாத நோயினைக்குணப்படுத்தியது.

கிளைசிரைசினை நொதி கொண்டு சிதைத்தால்கிடைக்கும்கிளைசிரெடிக்அமிலம்எலிகளிலும்‌, மூயல்களிலும்சுரத்தைக்குறைப்பது கண்டறியப்பட்டது

அதிவிடயம்

 

தாவரப்பெயர்‌ : அகோனளிட்டம்ஹெட்டிரோபில்வம்‌ (Aconitum heterophyllum) தாவரக்குடும்பம்‌ : இரணன்குலேசியே (Ranunculaceae) தாவர அமைப்பு பல்லாண்டு வாழக்கூடிய நிமிர்ந்த சிறு பூண்டு, 30-90 Ned, வரை வளரக்கூடிய தண்டு, சிளைகள்அதிகம்இல்லாதது. தண்டின்கீழுள்ள இவைகள்நீண்ட இலைக்காம்புகளையும்‌, துனியிலுள்ள இலைகள்இவைக்காம்பு அற்றும்இருக்கும்‌. 


இலைகள்நுனி கு Mud, இவை ஓரங்கள்பல்அமைப்பும்கொண்டவை. முக்கள்ஊதா நிறமும்‌, பச்சை கலந்த ஊதா நிறமும்கொண்டவை. நுனிவளர்கூட்டு மஞ்சரியில்அமைந்தவை; ூவடிச்செதில்கள்பல்அமைப்பு கொண்டவை. கனி ஐந்தறைகளைக்கொண்ட (வெடி கனி, பயன்படும்உறுப்பு: வேற்சிற்றினங்களின்அதிவிடய வேர்‌ 1 என்று கடைகளில்விற்பதில்இரண்டு மூன்று வேர்கள்கலந்து காணப்படும்‌, 

1. 4. சர்மா அறிவியல்ஆய்வுகள்‌ 13 stapf. ex. Holmefs, 2. 4. deinorrhizum Holmes ex.stapf என்ற இரண்டு சிற்றினங்களின்வேர்கள்மிக அதிகமாக அதிலிடய வேர்களில்கலப்படமாக விற்கப்படுகிறது. கீழ்க்கண்ட அதிவிடய வோர்களில்சிறப்பு இயல்புகள்இதன்கலப்படப்பொருட்களிலிருந்து பிரித்தறிய உதவும்‌. 2-8 செ.மீ., நீளமும்‌, 0. 4-1.5 செ.மீ. கனமும்கொண்ட சங்கு போன்ற அமைப்பை உடையது; வெளிரிய உமி நிறமும்செதில்களையுடைய சிறிய பள்ளங்களையும்‌, (01015) உடையது

உட்புறம்வெள்ளை நிறமானது குறுக்கு வெட்டுத்தோற்றத்தில்‌, ஓரங்களில்‌ 4-9 ஸைலம்முடிச்சுக்கள்இரண்டாவது தோன்றிய புளோயத்தில்புதைந்து காணப்படும்‌. அதிவிடயத்திலிருந்து அகோனிடின்என்ற அல்கலாய்டு பிரித்தெடுக்கப்பட்டது. வேறு பல நச்சு வாய்ந்த அவ்கலாய்டுகளும்அதிவிடய வேரில்உண்டு. எனவே அளவுக்கு அதிகமாக இம்மருந்தை உட்கொண்டால்தீய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்‌. மருத்துவ குணங்கள்புழுக்கொல்லி, சுரமகற்றி, ஆண்மை பெருக்கி, துவர்ப்பி மற்றும்செரிவுண்டாக்கி. குழந்தைகளுக்கு உண்டாகும்கழித்தல்‌, சுரம்மற்‌.றும்வாந்தி போன்றவற்றிற்கு மருந்தாகப்பயன்படுத்தப்படுகிற து. வளரும்இடங்கள்மத்திய மற்றும்மேற்கு இமாலய மலைகளில்‌ 2600-2900 மி. கடல்மட்ட உயரங்களில்வளர்கின்றன.

அத்திக்காய்

அத்திக்காய் தேவையான அளவு வாங்கி வந்து அவற்றை நான்கு துண்டுகளாக நறுக்கி அதிலுள்ள விதைப் பகுதியை சுரண்டி எடுத்துவிட வேண்டும். அதிக்காயின் நடுவில் பூச்சு மற்றும் பூழு இருக்கலாம். அதை நன்கு கவனித்து சுத்தப்படுத்த வேண்டும். நறுக்கிய பின் தண்ணீரில் போட்டு நன்கு கழுவ வேண்டும்.   




அத்திக்காய் துவர்ப்பு சுவையுடையது. அத்திக்காயையும் பருப்பையும் சேர்த்து குழம்பு வைக்கலாம். அத்திக்காயில் பொரியல் செய்யலாம். இதில் வைட்டமின் A யும் சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்பு சத்தும் அதிக அளவில் இருக்கின்றன. அத்திக்காயைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். வெள்ளை ஒழுக்கை நிறுத்தும். 

சீதபேதியை குணமாக்கும். வாயுவைப் போக்கும். இரத்த மூலத்தை குணப்படுத்தும் வல்லமை உடையது. உடலிலுள்ள இரணங்களை ஆற்றக் கூடியது. வெட்டை நோயை குணப்படுத்தும் (ஆணுக்கும் பெண்ணுக்கும் தோன்றும் ஒரு வகை பால்வினை நோய்). அத்திக்காய் வயிற்று புண்ணுக்கு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. 

வயிற்றில் புண் இருக்கும் காலங்களில் இதை உணவுகளில் சேர்த்துக்கொண்டாலே போதும் நல்ல பலனை உணரலாம். அமர்ந்து தியானம் செய்வதற்கு இந்த அத்தி மரத்திலிருந்து பலகைகளை செய்வார்களாம். இந்த மரப்பலகைகள் தியானத்தின் சக்தியையும் மன ஒருமைப்பாட்டையும் நமக்கு அளிக்கவல்லது என்று சொல்லவார்கள். இந்த மரத்தின் பூக்களை யாரும் பார்க்கமுடியாது என்று சொல்வார்கள்.
இரத்த மூலத்தை குணப்படுத்தும் அத்திக்காய்!! 

 அத்திக்காய் தேவையான அளவு வாங்கி வந்து அவற்றை நான்கு துண்டுகளாக நறுக்கி அதிலுள்ள விதைப் பகுதியை சுரண்டி எடுத்துவிட வேண்டும்.

அத்திக்காயின் நடுவில் பூச்சு மற்றும் பூழு இருக்கலாம். அதை நன்கு கவனித்து சுத்தப்படுத்த வேண்டும். நறுக்கிய பின் தண்ணீரில் போட்டு நன்கு கழுவ வேண்டும். அத்திக்காய் துவர்ப்பு சுவையுடையது. அத்திக்காயையும் பருப்பையும் சேர்த்து குழம்பு வைக்கலாம். அத்திக்காயில் பொரியல் செய்யலாம். இதில் வைட்டமின் A யும் சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்பு சத்தும் அதிக அளவில் இருக்கின்றன.

அத்திக்காயைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். வெள்ளை ஒழுக்கை நிறுத்தும். சீதபேதியை குணமாக்கும். வாயுவைப் போக்கும். இரத்த மூலத்தை குணப்படுத்தும் வல்லமை உடையது. உடலிலுள்ள இரணங்களை ஆற்றக் கூடியது. வெட்டை நோயை குணப்படுத்தும் (ஆணுக்கும் பெண்ணுக்கும் தோன்றும் ஒரு வகை பால்வினை நோய்). அத்திக்காய் வயிற்று புண்ணுக்கு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

 வயிற்றில் புண் இருக்கும் காலங்களில் இதை உணவுகளில் சேர்த்துக்கொண்டாலே போதும் நல்ல பலனை உணரலாம். அமர்ந்து தியானம் செய்வதற்கு இந்த அத்தி மரத்திலிருந்து பலகைகளை செய்வார்களாம். இந்த மரப்பலகைகள் தியானத்தின் சக்தியையும் மன ஒருமைப்பாட்டையும் நமக்கு அளிக்கவல்லது என்று சொல்லவார்கள். இந்த மரத்தின் பூக்களை யாரும் பார்க்கமுடியாது என்று சொல்வார்கள்.

அத்திப்பழம்

பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது, அத்திப்பழம். 8 மீட்டர் வரை உயரமாக வளரும் அத்தி மரத்தின் இலையை வாழை இலை போல் உணவு உண்ண பயன்படுத்துகின்றனர். அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும். பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும். விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும் கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை வைத்து பதப்படுத்தலாம்.

புத்தம் புதிய அத்தி பழத்தில் புரத சத்து 4 கிராம், சுண்ணாம்பு சத்து 200 மிலி கிராம், இரும்பு சத்து 4 மில்லி கிராம், வைட்டமின் ஏ, தயாமின் 0.10 மிலி கிராம் மற்றும் 260 கலோரி சத்துகள் உள்ளன. அத்தி பழத்தில் வைட்டமின் சி குறைந்த அளவில் உள்ளது. ஆனால் அதிக அளவு சர்க்கரை சுண்ணாம்பு சத்து, இரும்பு, தாமிர சத்து உள்ளது. அத்தி பழம் உலர வைக்கப்பட்டு டின்களில் அடைத்து ஏற்றுமதி செய்யலாம். அத்தி பழத்தில் ஜாம் தயாரிக்கலாம். உலர்ந்த பழத்தை பொடிபொடியாக்கி காபி பொடிக்கு பதில் உபயோகப்படுத்தலாம். காயில் இருந்து பால் எடுக்கப்பட்டு மருந்து பொருளாக பயன்படுகிறது.

அத்தி, ஜீரணத்தை எளிதாக்கும், சிறுநீர் கற்களை கரைக்கும். மண்ணீரல், கல்லீரல் குறைபாடுகளை தீர்க்கும். மூல நோயை குணப்படுத்தும். காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். அத்தி பழத்தை சர்க்கரையுடன் கலந்து இரவு பனியில் படும்படி வைத்து காலையில் எடுத்து சாப்பிட 15 நாட்களில் உடம்பில் உள்ள வெப்பத்தன்மை குறைந்து குளிர்ச்சி ஏற்படும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப் படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும். அடுத்ததாக ஏழைகளின் ஆப்பிள் எனப்படும் கொய்யா, இந்திய பழ வகைகளில் 4வது இடத்தை பெற்றுள்ளது.

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது

1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,
2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,
3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.

பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள்.
பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன.
இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள் சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது.
அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள்,
வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்துவெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.

மூட்டுவலி, எலும்புத் தேய்மானம், மூலம் குணம் பெற அத்திப் பழங்கள் சாப்பிடுங்கள் என்று
இறைத் தூதர் நபிபெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

* தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
* மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
* நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
* போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க
அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.* இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.
* உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும்.வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.
* மரத்தின் பட்டையை இரவில் ஊற வைத்துக் காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய்,
மூட்டுவலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவ லோஷனாகப் பயன்படுத்தலாம்.பயன்கள்: அத்திப் பழம் மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும். குறிப்பாக, சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள் நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.

சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள்.
மேலும் இவை கல்லீரல் – மண்ணீரல் அடைப்புகள், வீக்கங்களைப் போக்கப் பயன்படுகிறது.

கண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப் பழத்தில் பெருமளவில் அடங்கியிருக்கின்றன. மற்ற பழங்ளைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இரும்புச் சத்து அத்திப் பழத்தில் அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தச் சோகை நோய் வராது.
இரத்த உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலும் உடலில் அதிகரிக்கும்.
குறிப்பு:அத்தி நல்ல மணத்துடன் இருந்தாலும் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். பொதுவாக பதப்படுத்தாமல் உண்ண முடியாது.
 அரத்தை

அரத்தை பல நூற்றாண்டுகளாக இந்திய மருத்துவத்தில் சிறப்பிடம் பெற்று வந்துள்ளது. குடும்ப வைத்திய முறையிலும் அரத்தை மிக உயர்ந்த இடத்தை வகிக்கின்றது. வேர்க்கிழங்குகளே அதிகமாக மருத்துவத்தில் பயன்படுபவை.அரத்தை வேர்கிழங்குள் காரச் சுவையும், வெப்பத் தன்மையும், கொண்டவை. முடக்குவாதம், சிறுவர்களுக்கான சுவாச நோய்கள், வாத நோய்கள், குடல் வாயு, தொண்டை நோய்களைக் கட்டுப்படுத்த உபயோகமாகின்றது. மேலும், வயிற்று நோய்களுக்கு மருந்தாகவும், கிருமிநாசினியாகவும், குடல் புழுக்களை வெளியேற்றுதற்கும் பயன்படுகின்றது.


அரத்தை செடி வகையைச் சார்ந்தது; 2மீ வரை உயரமாக வளரக்கூடியது. அரத்தை இலைகள் நீளமானவை, அகலத்தில் குறுகியவை, மேல்பக்கம் அடர்த்தியான பச்சையாகவும், கீழ்ப்பக்கம் சாம்பல் பச்சையாகவும், ஓரங்கள் வெண்மையாகவும் காணப்படும். இலையின் நடுநரம்பு வலிமையானது.அரத்தை மலர்கள் 3 செ.மீ. வரை நீளமானவை. பச்சை கலந்த வெண்மை நிறமானவை, தொகுப்பானவை. பழங்கள் சிறியவை, ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறமானவை. 

பூ இதழ் வெண்மையாக, சிவந்த கீற்றுகளுடன் காணப்படும். அரத்தை வேர்க்கிழங்குகள் மணமுள்ளவை. அரத்தை இயற்கையாக மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் இமயமலையின் கிழக்குச் சரிவுகளில் விளைகின்றது. இந்தியா முழுவதும் பயிர் செய்யப்படுகின்றது. அரத்தை பேரரத்தை, காலங்கல் மற்றும் தும்ரஷ்டகம் ஆகிய பெயர்களிலும் வழங்கப்படுகிறது. 

அரத்தை வேர்க்கிழங்குகள் காய்ந்த நிலையில் நாட்டு மருத்துக் கடைகளில் கிடைக்கும்.தொண்டைக்கட்டு, இருமல், சளி குணமாக அரத்தையை வெயிலில் நன்கு காயவைத்து, தூள் செய்து கொள்ள வேண்டும். ரு தேக்கரண்டி தூளை, 1 தேக்கரண்டி அளவு தேனுடன் கலந்து, தினமும் காலை, மாலை வேகைளில் சாப்பிட்டு வரவேண்டும்.அல்லது ஒரு சிறு துண்டு அரத்தையை வாயிலிட்டு நன்கு மென்று சுவைக்க காரமும் விறுவிறுப்பும் உண்டாகி உமிழ்நீர் அதிகமாகச் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்க வேண்டும்.

அடிபட்ட வீக்கம், வலி குறைய அரத்தையை வெந்நீர் விட்டு அரைத்து பசைபோல செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.பல்வலி, ஈறுவீக்கம் குணமாக அரத்தைத் தூளை சம அளவு பற்பொடியுடன் கலந்து காலை, மாலை வேளைகளில் பல் துலக்கி வர வேண்டும்.சித்தரத்தை என்கிற வகையும் அரத்தையில் உண்டு. 
சிற்றரத்தை என்றும் கூறப்படும். இதன் வேர்க்கிழங்கும் நாட்டு மருந்துக் கடைகளில் காய்ந்த நிலையில் கிடைக்கும். இது சீனாவில் பெருமளவு வளர்க்கப்படுகின்றது.இதற்கு அரத்தையைவிட அதிக மணமும் காரச்சுவையும் உண்டு. இதனுடைய மருத்துவப் பயன்களுக்காக வங்காள தேசத்திலும், வட இந்தியாவிலும் பெருமளவு வாணிக ரீதியாக பயிர் செய்யப்படுகின்றது. சித்தரத்தை காய்ந்த வேர்க்கிழங்குகள், மார்புச்சளி, இருமல், பல்நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் தன்மையையும், பசி அதிகரிக்கும் பண்பினையும் கொண்டவை.



அருவதா

 


1)
மூலிகையின் பெயர் -: அருவதா. 

2) தாவரப்பெயர் -: RUTA GRAVEOLENS. 

3) தாவரக்குடும்பம் -: RUTAEAE. 


4) வேறு பெயர்கள் -: சதாப்பு இலை. 


5) 
தாவர அமைப்பு -: இப்பயிர் மலைப் பிரதேசங்களில்செளிப்பான காடுகளில் இயற்கையாக வளர்கிறதுஇதன் பூர்வீகம் தெற்கு ஐரோப்பாவட அமரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதிகமாகக் காணப்படும் இது வரட்சியைத்தாங்கக் கூடியதுஅருவதா செடிகளை எல்லா வகையான மண்ணிலும் வளர்க்கலாம் செடிகள் 2 - 3 அடி உயரம் வரை வளரும்இலைகள் சாம்பல் நிரத்தில் இருக்கும்இலைகள் 3 - 5 அங்குல நீழமுள்ளவை இலை நீலம் கலந்த பச்சையாக இருக்கும்இதன் பூக்கள் மஞ்சள் நிரத்தில் அரை அங்குலம் நீளத்தில் நான்கு இதழ்களைக் கொண்டிருக்கும்இது ஜூன்ஜூலை மாத்ததில் பூக்கும்செடிகள் விதை,வேர் விட்ட தண்டுக்குச்சிகள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகின்றனநட்ட 2 முதல் 3 மாதங்களில் இலைகளை அறுவடை செய்து நேரடியாகவோ அல்லது பதப்படுத்தியோ பயன் படுத்தலாம்இதை வீட்டு அலங்காரச் செடியாகவும் வளர்க்கிறார்கள்இந்தச்செடிஅருகே நாய்பூனைபாம்புமுதலியன வராது.


6) 
பயன்படும் பாகம் -: சதாப்பு இலை மற்றும் வேர்.


7) 
மருத்துவப் பயன்கள் -: இதன் இலைகள் வாதம் மற்றும் மூட்டு வலியைப் போக்கவும்குடல் புழுக்களை அகற்றவும்பயன் படுகின்றனநரம்புக் கோளாறுகளை நிவரத்தி செய்வதற்கும்ரத்தப்போக்கைக் குணப்படுத்தவும் இவற்றைப்பயன் படுத்தலாம்இதன் இலையிலிருந்து கிடைக்கும் எண்ணெய் கர்பப்பை கோளாறுகளைக் குணப் படுத்த உதவுகிறது.

சதாபலை என்னும் சதாப்பு இலையினால் பால் மந்தம் முதலிய வற்றால் விளைகின்ற சுரம்,கரைபேதிகபவனம்பிரசவ மாதர்களின் வேதனை இவை நீங்கும்.


இது கண் வலியைப் போக்கும்வாந்தியைக குணமாக்கும்வயிற்று வலியைப்போக்கும்காதில் சீழ் வடிதல் காதுப் புண் குணமாக்கும்மூத்திரக் குழாயில் ஏற்படும் அடைப்புக்களை நீக்கும்இருதயத்தில் ஏற்படும் மூச்சுத் திணரலைப் போக்கும்,முதுகு வலிமுதுகு வடத்தில் ஏற்படும் வலியைப் போக்கும்கை கால் வலிகள்இவைகளைப் போக்கும்விபத்தில் ஏற்படும் எலும்பு முறிவுகளைச் சரி செய்யும்,ஞாபகசத்தியைத் தூண்டும்மன அழுத்தம் குறைக்கும்பல் வலியைப் போக்கும்பல் துலக்கும் போது எகிரில் ரத்தம் வருவதை குணமாக்கும்நாக்கிற்கு உணவின் சுவை அறிய உதவும்தொண்டையில் ஏற்படும் வலியைப் போக்கும்முகத்தில் ஏற்படும் வீக்கம்உதட்டு வலிஉதடு பிளவு இவைகளைப் போக்கும்பெண்களுக்கான மாதவிடாய் விட்டு விட்டு வரும் உதிரப் போக்குவலி இவைகள் குணமாகும்வெள்ளை படுதல்மூத்திர எறிச்சலைப் போக்கும்எலும்பு வலிஉடலில் ஏற்படும் தினவுஇவைகளைப் போக்கும்மூலத்தைப் போக்கும்ஆஸ்த்துமாவைப் போக்கும்வாய்தொண்டையில் ஏற்படும் புற்று நோயைக் குணப் படுத்தும்.


உபயொகிக்கும் முறை -: இதன் இலையுடன் சிறிது மிளகுசேர்த்து வெண்ணெய் போல் அரைத்து வேளைக்கு 2 - 3 குன்றி எடை தாய்ப் பாலில் கலக்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்க மார்பில் உள்ள கோழையைக் கரைக்கும்சுரம்வலி (இசிவுஇவற்றைப் போக்கும்அல்லது இதன் இலைச்சாற்றில் 10 - 15 துளி தாய்ப் பாலுடன் கலந்து கொடுக்க முற் கூறப் பட்ட பிணிகளைக் குண்ப்படுத்தும்இதன் இலையுடன் மஞ்சள் சேர்த்தரைத்து குழந்தைகளுக்குத் தேகத்தில் பூசி ஸ்நானம் செய்விக்கச் சீதள சம்பந்தமான பல பிணிகளையும் வர வொட்டாமல் தடுக்கும்.


இன்னும் இதனை இதர சரக்குகளுடன் கூட்டி சூரணமாகவும்மாத்திரை களாகவும் செய்வதுண்டுஅவற்றுள் சில முக்கிய முறைகளாவன. 


சதாப்பிலைச் சூரணம் - நிழலில் உலர்த்திச் சதாப்பு இலை,சீரகம்அதிமதுரம்கருஞ்சீரகம்சன்ன லவங்கப்பட்டை,சதகுப்பை விசைக்குப் பலம்தனியா பலம் 6 இவற்றை ஒருமிக்க கல்லுரலில் போட்டு கடப்பாறையால் நன்றாய் இடித்துச் சூரணம் செய்து வேளைக்கு திரிகடி பிரமாணம் சமனெடை கற்கண்டு சூரணம் சேர்த்து தினம் 2 - 3 வேளை கொடுத்து வர வாயுவை கண்டிக்கும்சீதளத்தை விரைவில் அகற்றும் ஸ்தூரிகளுக்கு உண்டான உதிரச்சிக்கலையும் வயிற்றில் மரித்துப போன கருவையும் வெளியாக்கும்இன்னும் இதன் பெருமையைக் கூறமிடத்துச் சூதக சந்நி வாயுவினால் காணுகின்ற வயிற்றுவலிஇசிவு முதலிய ரோகங்களுக்கு சிறந்த அவிழ்தமாகும்.


சதாப்பிலை மாத்திரை-:பச்சை சதாப்பு இலை விராகனெடை 8,கோரோசனை விராகனெடை 1, உரித்த வெள்ளைப் பூண்டுவிராகனெடை 2, இவற்றை கல்வத்திலிட்டுக் கையோயாமல் ஒரு சாமம் அரைத்து வருக ஒரு சமயம் மெழுகு பதத்துக்குப் போதிய ஈரமில்லாவிட்டால் சிறிது தாய்ப் பால் கூட்டியரைத்து பச்சைப் பயிறுஉழுது பிரமாணம் மாத்திரைகளாகச் செய்து நிழலிறுலர்த்திச் சீசாவில் பத்திரப்படுத்துகஇதனை ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகட்கு வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தினம் 2 வேளை தாய்ப் பாலில் கொடுக்க சுரம்வலிமாந்தம்,இருமல் முதலிய பிணிகள் தீரும். 

அல்லி

அல்லிக்கிழங்கை வேகவைத்து மேற்தோலை நீக்கிப் பால், சர்க்கரை சேர்த்து உண்டுவர உடல் குளிர்ச்சி அடையும். ரத்தக்கழிச்சல், மூலம், வயிற்றுப் புண்கள், பித்த எரிச்சல் ஆகியவை குணமாகும். நீலநிறப் பூக்களையுடைய அல்லியின் கிழங்கை, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட சித்த மருத்துவ நூல்கள் ‘நெய்தல் கிழங்கு’ எனப் பதிவு செய்து வைத்துள்ளது. 



ஆனால், இது தவறு. சங்க இலக்கியங்களில் நெய்தல் கிழங்குக்குக் கொடுக்கப்பட்ட விளக்கங்களின் அடிப்படையிலும், குமரி மாவட்ட சித்த மருத்துவர்களின் பயன்பாட்டின் அடிப்படையிலும் இக்கட்டுரையில் படத்தில் குறிப்பிடப்பட்ட தாவரமே, ‘நெய்தல்’ என்று சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, அரசு சித்த மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் குமாரசாமி நிரூபித்துள்ளார்.


அல்லிக்கிழங்கை வேகவைத்து மேற்தோலை நீக்கிப் பால், சர்க்கரை சேர்த்து உண்டுவர உடல் குளிர்ச்சி அடையும். ரத்தக்கழிச்சல், மூலம், வயிற்றுப் புண்கள், பித்த எரிச்சல் ஆகியவை குணமாகும். நீலநிறப் பூக்களையுடைய அல்லியின் கிழங்கை, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட சித்த மருத்துவ நூல்கள் ‘நெய்தல் கிழங்கு’ எனப் பதிவு செய்து வைத்துள்ளது. 

வெள்ளை அல்லி

இத்தாவரம், கடற்கரையையொட்டிய நீர்நி நீர்நிலைகளிலும் பார்ப்பதற்கு ‘வெங்காயத்தாமரை’ போலக் காணப்படும். இதன் வேரில் கிழங்குகள் இல்லை. ஆனால், இதன் தண்டில் உள்ள ‘குமிழ்’ போன்ற அமைப்பையே கிழங்காக எடுத்துக்கொள்ள வேண்டும்.


 இதன் பூக்களைக் குளிர்ந்த நீரில் 12 மணி நேரம் ஊறப்போட்டு, வடிகட்டி அந்நீரைக் குடித்துவர அதிகமான தாகம் அடங்கி, உடல் குளிரும். இக்கிழங்கை நன்றாகத் தண்ணீரில் கழுவி, பசும்பால் விட்டு அரைத்து 2 முதல் 3 கிராம் அளவுக் காலை, மாலை என இருவேளை பாலில் கலந்து உட்கொண்டு வர, நீர்த்துப்போன விந்து கெட்டியாகும்.

 தொடர்ந்து உண்டுவர உடலில் பிறநோய்கள் வராது. ஏனெனில், மனித உடலைக் கட்டமைக்கும் கடைசி ஏழாம் தாதாகிய விந்துவைப் பலப்படுத்தினால், உடல் முழுமையாகப் பலமாகும் என்பது சித்த மருத்துவத்தின் அடிப்படை மெய்மக் கோட்பாடாகும். இதைச் சில சித்த மருத்துவர்கள், ‘செங்கழுநீர்க்கிழங்கு’ எனவும் குறிப்பிட்டுள்ளனர். 

ஆனால், உண்மையான செங்கழுநீர்க்கிழங்கை படத்தில் காணலாம்.லைகளில் அதிகமாகக் காணப்படும். தண்ணீர், எப்போதும் தேங்கிக் கிடக்கும் நெல் வயல்களிலும் ஆழமற்ற என்றே அழைக்கிறார்கள். தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள குளத்துப்புழா என்ற ஊரில், கேரள வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் ‘சஞ்சீவி வனம்’ என்ற இயற்கை மூலிகைக்காட்டில், இந்தச் செங்கழுநீர்த் தாவரங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. 

கண் நோய்களுக்குச் சொல்லப்பட்டுள்ள தைலங்கள் மற்றும் நெய் வகைகளில் இக்கிழங்கு அதிகமாகச் சேர்க்கப்படுகிறது. இத்தாவரம், கடற்கரையையொட்டிய நீர்நிலைகளில் அதிகமாகக் காணப்படும். தண்ணீர், எப்போதும் தேங்கிக் கிடக்கும் நெல் வயல்களிலும் ஆழமற்ற நீர்நிலைகளிலும் பார்ப்பதற்கு ‘வெங்காயத்தாமரை’ போலக் காணப்படும். 

இதன் வேரில் கிழங்குகள் இல்லை. ஆனால், இதன் தண்டில் உள்ள ‘குமிழ்’ போன்ற அமைப்பையே கிழங்காக எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் பூக்களைக் குளிர்ந்த நீரில் 12 மணி நேரம் ஊறப்போட்டு, வடிகட்டி அந்நீரைக் குடித்துவர அதிகமான தாகம் அடங்கி, உடல் குளிரும். இக்கிழங்கை நன்றாகத் தண்ணீரில் கழுவி, பசும்பால் விட்டு அரைத்து 2 முதல் 3 கிராம் அளவுக் காலை, மாலை என இருவேளை பாலில் கலந்து உட்கொண்டு வர, நீர்த்துப்போன விந்து கெட்டியாகும். 

தொடர்ந்து உண்டுவர உடலில் பிறநோய்கள் வராது. ஏனெனில், மனித உடலைக் கட்டமைக்கும் கடைசி ஏழாம் தாதாகிய விந்துவைப் பலப்படுத்தினால், உடல் முழுமையாகப் பலமாகும் என்பது சித்த மருத்துவத்தின் அடிப்படை மெய்மக் கோட்பாடாகும். இதைச் சில சித்த மருத்துவர்கள், ‘செங்கழுநீர்க்கிழங்கு’ எனவும் குறிப்பிட்டுள்ளனர். 


அவுரிநெல்லி(Blueberries)


வுரிநெல்லிகளின் முதல் 7 சுகாதார நன்மைகள்!!

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம்.


 புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும்.

 எடை இழப்பு/

 மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

 அழற்சியை நீக்கு.

செரிமானத்தை ஆதரிக்கவும்.

 இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கவும்.

இந்த துடிப்பான பழம் சிறியதாக இருக்கலாம், ஆனால் ஒவ்வொரு பரிமாறும் ஊட்டச்சத்து வரும்போது ஒரு தீவிரமான பஞ்சைக் கட்டுகிறது. பெரும்பாலும் கவர்ச்சியான வகை பெர்ரிகளால் கவனிக்கப்படுவதும், மறைக்கப்படுவதும், அவுரிநெல்லிகள் உலகில் மிகவும் சத்தான, ஆக்ஸிஜனேற்ற நிறைந்த பழ வகைகளில் ஒன்றாக இருக்கின்றன, மேலும் உங்கள் இதயத்தை வலுவாக வைத்திருக்க மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலிருந்து எல்லாவற்றையும் செய்வதாகக் காட்டப்பட்டுள்ளது.

கூடுதலாக, அவுரிநெல்லிகளின் ஆரோக்கிய நன்மைகளின் நீண்ட பட்டியலுடன் கூடுதலாக, இந்த பழங்களும் சூப்பர் இனிப்பு, குறைந்த கலோரி மற்றும் சுவையானவை. 1. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம்

ஆக்ஸிஜனேற்றங்கள் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிகல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் எண்ணற்ற சுகாதார நன்மைகளை வழங்கும் கலவைகள். உண்மையில், ஆக்ஸிஜனேற்றிகள் உயிரணு சேதத்தைத் தடுப்பது மட்டுமல்லாமல், புற்றுநோய், இதய நோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல வகையான நாட்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.

(1)ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த ஆதாரங்களில் அவுரிநெல்லிகள் ஒன்றாகும். சீனாவில் ஒரு ஆய்வில் அவுரிநெல்லிகள், ப்ளாக்பெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரிகளின் ஆக்ஸிஜனேற்ற திறனை ஒப்பிட்டு, அவுரிநெல்லிகளில் அதிக மொத்த ஆக்ஸிஜனேற்ற திறன் இருப்பதோடு மட்டுமல்லாமல், பினோல்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் அந்தோசயினின்கள் உள்ளிட்ட பல குறிப்பிட்ட வகை ஆக்ஸிஜனேற்றங்களும் உள்ளன.

(2)காட்டு அவுரிநெல்லிகள் குறிப்பாக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம். (3) எடுத்துக்காட்டாக, பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் ஒரு ஆய்வில், பங்கேற்பாளர்களை காட்டு புளுபெர்ரி பொடியுடன் கூடுதலாக சேர்ப்பது சீரம் ஆக்ஸிஜனேற்ற நிலையை ஒரு மணி நேரத்திற்குப் பிறகு 8.5 சதவீதம் அதிகரித்துள்ளது. (4) ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு நன்றி, அவுரிநெல்லிகள் பெரும்பாலும் கண் ஆரோக்கியத்தையும் ஆதரிக்க லுடீனுடன் சூத்திரங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

 

டார்க் சாக்லேட், கோஜி பெர்ரி, பெக்கன்ஸ், கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவை பிற சிறந்த ஆக்ஸிஜனேற்ற உணவுகளில் அடங்கும்.

 அபின்

தாவரப்பெயர்‌ : பப்பாவர்சாம்னிபெரம்‌ (Papaver somniferum) தாவரக்குடும்பம்‌ : பப்பாவரேசியே (1ஹ௨220226) தாவர அமைப்பு இது ஒரு பளபளப்பான சிறிய ஓராண்டுத்தாவரம்‌. இவைகள்நீள்வட்ட வடிவத்துடனும்‌, பலவாறு பிளவுப்பட்டும்‌, பல்முனை ஓரங்களையும்கொண்டது. .வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிறப்பூக்களையுடையது. கனி 0வடி.யாக்கனி; காம்புடன்கூடியது; 14 தமிழ்நாட்டு மூலிகைகள்‌ 2. செ.மீ. விட்டமுடையது,


முட்டை வடிவமுடையது,; கனியின்மேற்புரம்‌ 5-12 சூலகக்கதிரமைப்பு கொண்டது. விதைகள்வெள்ளை அல்லது கறுப்பு நிறமானவை. பயன்படும்உறுப்பு முற்றாத கனியிலிருந்து வடியும்பால்போன்ற சாறு. அபின்என்பது காய்ந்த இச்சாறே ஆகும்‌. இது எண்ணெய்போன்று மிசுபிசுக்கும்‌. வளரும்இடங்கள்இந்தியாவில்பஞ்சாப்‌, இராஜஸ்தான்‌, ஐம்மு காஜமீர்‌, மேற்கு வங்காளம்மற்றும்தமிழ்நாடு ஆகிய மாவட்டங்களில்பயிரிடப்படுகிறது,

மருத்துவ குணங்கள்இசிவகற்றி, பசித்தாண்டி, ஆண்மை பெருக்கி, தாக்கமுண்டாக்கி, மயக்கமுண்டாக்கி, வயிற்றுவலி, நீரிழிவு, வயிற்றுக்கழிச்சல்‌, ஆண்மைமைக்குறைவு, நுரையீரல்சீர்கெடுதல்போன்ற நோய்களுக்கு மருந்தாகப்பயன்படுகிறது.

(அமுக்குரா)

 காட்டுத்தக்காளி


1)மூலிகையின் பெயர் -: அஸ்வகந்தா.
2)
தாவரப்பெயர் -: WITHANIA SOMNIFERA DUNAL.
3)
தாவரக் குடும்பம் -: SOLANACEAE.



4)
வேறு பெயர்கள் -: அமுக்குரா, இருளிச்செவி, வராககர்ணி, இடிச்செவி.
5)
வகைகள் -: ஜவகர் அஸ்காந்த்-20
6)
பயன் தரும் பாகங்கள் -: வேர் மற்றும் விதைகள்.

அது 2-4 அடி வரை வல்ல குறுகிய சாம்பல் நிறமுடைய ஒரு குற்று மரம். இதனை பஞ்சாப், சிந்து மற்றும் இதனை ஒட்டிய பிற மாநிலங்களிலும் காணலாம். விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. விதைத்த 150-170 நாட்களில் பயிர் அறுவடைக்குத் தயாராகிவிடும். பிடுங்கி வேர், தண்டுப் பாகத்தைப் பிரித்தெடுக்க வேண்டும். வேர்கள் உலர வைத்து 4 ரகங்களாகப் பிறிப்பார்கள்.

 

முதிர்ந்த காய்களிலிருந்து விதைகளைப் பிறித்தெடுப்பார்கள். இவைகள் மருத்துவ குணமுடையவை.
8)
மருத்துவப் பயன்கள் -: இதன் வேர்கள் மூட்டுவலி, வாதம், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப் புண் இவைகளைக் குணப்படுத்தும். வேர், இலை, விதை மற்றும் பழமென அனைத்திலும் ஆல்கலாய்டுகள் இருப்பதால் இதனை சித்தா, யுனானி, அலோபதி உட்பட மருந்துக் கெனபயன் படுத்தப் படுகின்றன. பாலுணர்வை அதிகரிக்கப்பதற்குப் பயன் படுகிறது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் உடல் பலவீனம், கை, கால், சோர்வு இவைகளை நீக்கி, அதிக வலிமையையும் சக்தியினையும் தருகிறது.

சிறிது துவர்ப்புள்ள அசுவகந்திக் கிழங்கினால் க்ஷயம், வாதசூலை, வாத கரப்பான், பாண்டு, சுரம், வீக்கம், சலதோஷம் இவை நீங்கும், மற்றும் மாதர்மேல் இச்சையும், பசியும் உண்டாகும் என்று உணர்க.
முறை -: அசுவகந்திக் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கிப் பசுவின் பாலில் அவித்து உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து சமனெடை சர்க்கரை கூட்டிப் புட்டியில் பத்திரப் படுத்துக. வேண்டும் போது இச்சூரணத்தை வேளைக்கு ஒரு வராகனெடை வீதம் தினம் இரண்டு வேளை பசுவின் பாலில் கலக்கிக் கொடுக்கத் தேக வனப்பை உண்டாக்குவதுடன் தேகத்திலுள்ள துர் நீர், கபம், சூலை, கரப்பான், பாண்டு, மேக அழலை, வெட்டை, வீக்கம், கட்டி, பித்த மயக்கம் முதலியவற்றை நீக்கும். இன்னும் அசுவகந்திக் கிழங்குடன் சுக்கு சேர்த்து அரைத்துக் கட்டி வீக்கும் முதலியவற்றுக்குப் பத்துப் போடக் கரையும். இவையுமன்றி இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டிச் சில அவிழ்தங்கள் செய்வதுண்டு.


அசுவகந்திச் சூரணம் -: கிராம்பு 1, சிறு நாகப்பூ 2, ஏலம் 3, இலவங்கப் பட்டை 4, இலவங்கப் பத்திரி 5, சீரகம் 6, தனியா 7, மிளகு 8, திப்பிலி 16, சுக்கு 32, பாலில் அவித்து சுத்தி செய்த அசுவகந்திக் கிழங்கு 64, ஆகிய இவற்றை வராகனெடையாக நிறுத்துக் கொண்டு கல்லுரலில் இட்டுக் கடப்பாறையால் நன்கு இடித்து வஸ்திரகாயஞ்செய்து இவற்றின் மொத்தெடைக்கு நிகரான வெள்ளைச் சர்க்கரை கூட்டிப் புட்டியில் பத்திரப் படுத்துக.

 

வேண்டும் போது வேளைக்கு கால் அரைத் தோலா வீதம் தினம் இரு வேளை 20-40 நாள் கொடுக்க மேகம், அஸ்திசுரம், அஸ்திவெட்டை சுவாசம், ஈளை, பாண்டு, மேக ஊறல் முதலியவை நீங்கும்.
அசுவகந்தித் தைலம் -: சுத்தி செய்த அசுவகந்திக் கிழங்கு பலம் 10, சற்றாமுட்டி வேர் பலம் 10, இவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கி, இடித்து ஒரு பழகிய தைல பாண்டத்தில் போட்டு 12 படி சலம் விட்டு அதற்குள் 10 பலம் கொம்பரக்குத் தூளைத் தளர்ச்சியாக சீலையில் முடிந்து பாண்டத்தின் அடி மட்டத்திற்கு மேலே 4 விரல் உயரத்தில் நிற்கும் படி தோலாந்திரமாகக்கட்டி அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரிக்கவும்.

 

இந்த மண் பாண்டத்தில் விட்ட சலமானது நன்றாய்ச் சுண்டி மூன்று படி நிதானத்திற்கு வரும் சமயம் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விட்டு மறு பாண்டத்தில் வடித்து வைத்துக் கொள்க. அப்பால் முன் கியாழமிட்ட பாத்திரத்தைச் சுத்தப்படுத்தி அதனில் நல்லெண்ணெய் படி 2 ததிமஸ்து (பசுவின் தயிரைச் சீலையில் முடிச்சுக் கட்டி வடித்தெடுத்த சலம்) படி 1 முன் சித்திப் படுத்திய கியாழம் விட்டு உறவாகும் படி கலக்கி அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரிக்குந் தறுவாயில் சிற்றரத்தை, நன்னாரி, தேவதாரம், பூலாங்கிழங்கு, பூஞ்சாத்துப் பட்டை, கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல், கண்டந்திப்பிலி வகைக்கு பலம் அரைக்கால் வீதம் இடித்து வஸ்திரகாயம் செயுது பால் விட்டு அரைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறிக் கொடுக்கவும்.

 

தைலமானது நன்றாய் கொதித்து வண்டல் மெழுகு பதம் வருஞ்சமயம் கீளே இறக்கி ஆற விட்டு வடித்து சீசாவில் அடைத்துத் தானிய புடம் வைத்து எடுத்துக் கொள்க. வாரம் ஒரு முறை தலைக்கிட்டுக் குழிக்க கப சம்பந்தமான ரோகம், சுர, குணமாகும், தேகம் இறுகும், கண் தெளிவடையும். இதற்குப் பத்தியம் பகல் நித்திரை, அலைச்சல், தேக உழைப்புக் கூடாது.


ஆடு தீண்டா பாலை


விஷக்கடியை அறிவது எப்படி? 
தீண்டிய நச்சுயிர்கள் காணாவிடின் கடியுண்டவனுக்கு சில பொருட்கள் கொடுத்து அதன் சுவை மாற்றத்தின் மூலம் தீண்டியவற்றை அறியலாம். பாம்புக்கடி பட்டவனுக்கு ஆடுதீண்டாப்பாளை வேரை உண்ணும்படி கொடுக்க அதன் சுவை மாறி தித்திப்பின்நல்லப்பாம்பு ,


முதலில் இனித்து பின் துவர்த்தால்மூக்கன்,  

மிகவும் புளித்தால்வழலைசாதி

வளவளுத்து புளித்தால்கருவழலை

மயக்கத்துடன் காரமாயிருப்பின்மயக்கரவு 

நினைத்த சுவை தோன்றின்புடையன்

 முட்கீரை சுவையிருப்பின்மண்டலி 

 புளித்து பின் காரமாயிருப்பின்பெரு விரியன் 

தலை நடுக்கினால்விரியன் சாதி

நா கடுகடுத்தால்கொம்பேறி மூக்கன் 

நாவு சுருட்டினால்சுருட்டை


உள்நாவு சர சரத்தால்சாரை 

கண்மறைத்து நெஞ்சடைப்பின்கல்நெஞ்சன்

தூக்கமின்றி நெஞ்சு படபடப்பின்சவடி

சுரனயற்று இருப்பின்இரு தலை மணியன் 

 பல் கடுத்தால்செய்யான் 

சல சலவென மூக்கு எறிந்தால்எலிச்சாதி

மேல் நாவு நொந்தால்நச்செலி

வாந்தியானால்அரணை

 கண் காது அடைத்தால்சில்விடம் 

முதலியன முறையே தீண்டியுள்ளன எனவும் :: கசந்தால்ஒருவித நஞ்சுமில்லை எனவும் உணரலாம் .

ஆடுதீண்டாபாளைஆகாசக்கருடன்நாகதாளிக்கிழங்கு ஆகியவை இருக்கும் ( வைத்திருக்கும் ) இடங்களில் நச்சுயிரிகள் அண்டாதுஉடல் வலுப்பெற
உடல் உழைப்பு குறைந்து போனதாலும், இயற்கையான ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளை உண்பதாலும் இன்று பலருக்கும் உடல் வலு குறைந்து வருகிறது. இவர்கள் சிறிது கடினமான வேலையை செய்தாலும் உடனே சோர்ந்துவிடுவார்கள்.



இவர்கள் ஆடுதீண்டாப் பாளை இலையை காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும்.

வயிற்றுப் பூச்சிகள் நீங்க
வயிற்றுப் பூச்சிகள் உடலில் பல தொந்தரவுகளை உண்டுபண்ணுகின்றன. இவற்றால் வயிற்றில் புண்கள் உருவாகின்றன. சிறு குழந்தைகள் இந்த வயிற்றுப் பூச்சியினால் அடிக்கடி வாந்தி பேதிக்கு ஆளாக நேரிடுகிறது.
இவர்களுக்கு ஆடுதீண்டாப் பாளையை நிழலில் உலர்த்தி நன்றாக பொடி செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் தேன் கலந்து கொடுத்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் விரைவில் நீங்கும்.
நீர்மலம் நீங்க
மலமானது நீராக வெளியேறுவதால் உடலில் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டாகிறது. இந்த நீர் மலம் நீங்க ஆடுதீண்டாப் பாளை இலைகளை உலர்த்தி கஷாயம் செய்து அருந்தி வருவது நல்லது.

பூச்சி கடிகளுக்கு
சில சமயங்களில் வண்டுகள், பூச்சிகள் கடிப்பதால் விஷமுண்டாகி சருமத்தில் தடிப்பு, கொப்புளம் போன்று உண்டாகும்.
இதற்கு ஆடுதீண்டாப்பாளை இலைகளை எடுத்து அரைத்து பூச்சி கடித்த இடத்தில் பற்று போட்டால் விஷம் முறியும். தடிப்புகள் மேலும் சருமத்தில் பரவாமல் தடுக்கும்.

கரும்படை கரப்பான் நீங்க
ஆடுதீண்டாப் பாளை இலைகளை அரைத்து தோலில் ஏற்படும் கரும்படை கரப்பான் இருக்கும் இடங்களில் பூசி வந்தால் விரைவில் குணமாகும்.

தலைமுடி உதிர்வதைத் தடுக்க
தலையில் முடி கொட்டுகிறது என்ற கவலை உள்ளவர்கள் ஆடுதீண்டாப் பாளை இலைகளை எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி சீயக்காய் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி கொட்டுவது உடனே நிற்கும்.பெண்களுக்கு

சில பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் சூதக வலி, வயிற்று வலி, ஓழுங்கற்ற இரத்தப் போக்கு போன்றவற்றால் பெரிதும் அவதியுறுவார்கள். இவர்கள் ஆடு தீண்டாப் பாளை இலைகளை கஷாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட பாதிப்புகளிலிருந்து எளிதில் விடுபடலாம்.

மேலும் ஆடுதீண்டாப் பாளை விதைகளை எடுத்து அரைத்து வெந்நீரில் கலந்து கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொடுத்தால் பிரசவ நேரத்தில் உண்டாகும் வேதனை குறையும்.

ஆடுதீண்டாப்பாளை இலையை பொடி செய்து வெந்நீரில் கலந்து குடித்தால் விஷக்கடி குறையும்.

 ஆடுதீண்டாப்பாளை வேர் 2 கிராம் எடுத்து பொடி செய்து வெந்நீரில் குடித்து வந்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.
சரும கரப்பான் மற்றும் புஞ்சைத் தொற்று நிவாரணி
 1 சிறிது சுக்கு, ஆடுதீண்டாப்பாளை மற்றும்  கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் வைத்து நன்றாக அரைக்கவும்.

 2 . உணவிற்கு பிறகு 2 கிராம் வீதம் உட்கொள்ளவும்.

கை மேல் பலன் விரைவில்
ஆடுதீண்டாப்பாளை விதையை பொடி செய்து விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்து வந்தால் மலக்குடல் கிருமிகள் குறையும்.

 ஆடுதொடா இலை 


மூச்சுத்திணறலை சரி செய்ய:
ஆடு தொடா இலை சாறை பிழிந்து, அதனுடன் தேனை சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு இதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து தினமும் நான்கு வேளை குடித்து வந்தால், நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்தம் கலந்த கோழை போன்ற பல விதமான நோய்கள் குணமடையும்.




சீத பேதியை குணப்படுத்த:

ஆடு தொடா இலையின் சாறு2 தேக்கரண்டி மற்றும் அதனுடன் எருமைப்பால் 1 டம்ளர் சேர்த்து
நன்கு கலக்கிக் கொள்ளவும். இதை சீத பேதி மற்றும் இரத்த பேதி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் 2 வேளை குடித்து வந்தால், இந்தப் பிரச்சனை விரைவில் குணமடைந்து விடும்.

சளி, காய்ச்சல் நீங்க:

ஆடு தொடா இலைகளை 10 எடுத்துக் கொள்ளுங்கள். இதை 1 லிட்டர் தண்ணீரில் நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு இதை வடிகட்டி சிறிதளவு தேனை இதனுடன் சேர்த்து தினமும் 2 வேளை குடித்து வந்தால் சளி பிரச்சனை காணாமல் போய்விடும். என்புருக்கி காசம், இரத்த காசம், சளிக் காய்ச்சல், சீதளவலி, விலாவலி போன்ற நாள்பட்ட நோய்களை குணப்படுத்த இதன் சாற்றை தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் தீராத வலியும் குறைந்து விடும்.

பல விதமான காய்ச்சலுக்கு:

ஆடு தொடா இலை,கோரைக் கிழங்கு,பற்பாடகம்,விஷ்ணு காந்தி
துளசி,பேய்ப்புடல்,கஞ்சாங் கோரை,சீந்தில்
மேலே குறிப்பிட்ட உணவு பொருட்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.இதை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்ச வேண்டும். பின்பு வடிகட்டி எடுத்து தினமும் 4 வேளைகள், 50 மிலி அளவு குடித்து வந்தால், அனைத்து விதமான காய்ச்சலும் காணாமல் போய்விடும்.

விஷம் முறிய:

ஆடு தொடா இலை துளசி,குப்பைமேனி
ஆகிய மூன்று இலைகளையும் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்பு இதிலிருந்து 200 மிலி எடுத்து குடித்து வந்தால், விஷ தொற்று நமக்கு ஏற்பட்டிருந்தால் அது விரைவில் முறியும்.

சொறி சிரங்கு பிரச்சனைக்கு:

ஆடு தொடா இலைகள் மற்றும் சிவனார் வேம்பு இலைகள் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதை அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவில் சாப்பிட்டு, வெந்நீர் குடிக்க கட்டி போன்ற உள் இரணங்களும், நமைச்சல், சொறி, சிரங்கு, பூச்சிக்கடி, விஷம் முதலிய பல விதமான நோய்கள் குணமடைந்து விடும்.
புண்கள் குணமடைய:
குப்பை மேனி இலை மற்றும் ஆடு தொடா இலை ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதை அரைத்து இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பற்று போல போட்டு வந்தால், இடுப்பை சுற்றியுள்ள தழும்புகள் மற்றும் புண்கள் குணமடையும். கருமை நிறம் மறைந்து, தோல் சாதாரண நிறத்திற்கு மாறி விடும்.

 ஆம்பல்

 


1. ஆம்பல் இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வந்தால் எளிதில் புண்கள் ஆறும்.

2. 200 கிராம் உலர்ந்த வெள்ளை இதழ்களை 6 லிட்டர் நீரில் ஊறவைத்து வடித்த நீரை 30 மி.லி. யாகக் காலை மாலை குடித்து வர சிறுநீரில் இரத்தம், சிறுநீர்ப்பாதைப்புண், சிறுநீர் மிகுதியாகக் கழிதல், தாகம், உட்காய்ச்சல் ஆகியவை தீரும்.




3. ஆம்பல் கிழங்கை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு 5 கிராம் பாலில் கலந்து காலை மாலையாகச் சாப்பிட்டு வர குடல்புண், வயிற்றுப்போக்கு, மூலம் ஆகியவை குணமாகும்.

4. ஆம்பல்பூ 50 கிராம் 250 மி.லி. நீரிலிட்டு 125 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டியதில் 30 கிராம் சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி காலை மாலை 15 மி.லி யாகச் சாப்பிட்டு வர மூளைக்கொதிப்பு தணியும். கண் குளிர்ச்சியடையும். இதயப்படபடப்பைத் தணிக்கும்.

5ஆம்பல் மலரில் உள்ள மகரந்தப் பொடியை உலர்த்தி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிக்க உடல் எரிச்சல், இரத்த மூலம், பெரும்பாடு ஆகியவை தணியும்.

6. ஆம்பல் பூ‌வி‌ற்கு நீரிழிவை ‌சீரா‌க்கு‌ம் குண‌ம் உ‌ள்ளது. இது புண்களை ஆற்றும். வெப்பச் சூட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீ‌ர்‌க்கும். அ‌ல்‌லி‌ப் பூவை அரை‌த்து சர்பத் செய்து சாப்பிடலாம்.

7. கோடை காலத்தில் வெப்பத்தில் குழந்தைகளுக்கு சூடு கட்டி வரும். அல்லி இலையையும், அவுரி இலையையும் சம அளவில் எடுத்து அரிசி கழுவிய நீரில் அரைத்து பூசினால் கட்டி உடைந்து குணமடையும்.

8. சிவப்பு ஆம்பல் இதழ்களுடன், செம்பருத்தி பூ இதழையும் சேர்த்து காய்ச்சி கசாயம் செய்து குடித்து வந்தால் இதயம் பலமடையும், இதய படபடப்பு வராது, உடலில் ரத்தம் பெருகும்.

ஆவாரம் பூ

 

நன்மைகள் நிறைந்துள்ளது. இதனை ரசமாக வைத்து உண்பது மிகுந்த நன்மை என்று சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகிறது.


ஒரு கைப்பிடி அளவு ஆவாரம் பூவை எடுத்து அரைத்து சாறெடுத்து சுண்டக்காய்ச்சி அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் தடவினால் தலையில் ஏற்படும் வழுக்கை மற்றும் முடி உதிர்வை தடுப்பது மட்டுமல்லாமல் முடி நன்கு வளர தொடங்கும். 

ஆவாரம்பூ வேகவைத்த தண்ணீர் வடிகட்டி ஆறவைத்து முடி அலசும்போது அந்த தண்ணீர் சேர்த்து முடி அலசினாள் முடி பலபல வென்று இருக்கும் மற்றும் உடல்  புத்துணர்ச்சியாகவும் உடல் நிறமும் மாறும்..

 

பெண்களுக்கு உடல் வறட்சியை நீக்குவதற்கு ஆவாரம் பூவுடன் வெள்ளரி விதை, கசகசா, மற்றும் பால், சேர்த்து உடலில் தேய்த்து நன்கு உலர்ந்த பின் கடலை மாவுடன் தண்ணீர் சேர்த்து முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள வறண்ட சருமம் மற்றும் முகம் மென்மையாகவும் மற்றும் பளிச்சென்று இருக்கும்.

 

பெண்களுக்கு வறண்ட சருமம் இல்லாமல் இருக்க ஆவாரம்பூ மாற்றும், பனங்கற்கண்டு, விளாமிச்சை ஆகிய வற்றை சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும் அதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வறண்ட சருமம் இல்லாமல் இருக்கும்.

 

முடி கொட்டுவதை தடுக்க மற்றும் வளர முடி கொட்டுவதை நிறுத்தவும் தினமும் ஆவாரம்பூ, செம்பருத்தி மற்றும் தேங்காய் பால் சமஅளவு எடுத்து அரைத்து வாரம் ஒரு தடவை தலைக்கு தேய்த்து குளித்தால் முடி கொட்டுவதை தடுக்கும் மற்றும் கூந்தல் நன்கு வளரும்.

 முக அழகு 

தங்கமான நிறம் ஆவாரம் பூ பொடியை மேனிக்கு பயன்படுத்தினால் மேனி பொன் நிறமாகும். இதனை குளியல் பொடியுடன் சேர்த்து பயன்படுத்தலாம். அல்லது ஆவாரம் பூ தேநீர் குடித்தாலும் இரத்தம் சுத்தமாகி மேனி தங்க நிறம் பெரும்.

 முகம் பொலிவு பெற 

ரசாயனங்கள் கொண்ட பசைகள் போன்றவற்றை முகத்திற்கு பூசுவதை விட காய்ந்த ஆவாரம் பூக்களை சிறிதளவு எடுத்து, பசுந்தயிரில் போட்டு அரைத்து முகத்திற்கு பூசி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள், எண்ணெய் தன்மை போன்றவை நீங்கி முகம் அழகு பெரும். 

உடல் துர்நாற்றம் 

கொழுப்பு நிறைந்த உணவுகள் அதிகம் உண்பவர்களுக்கு உடல் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். ஆவாரம் பூக்களை சிறிதளவு எடுத்து, அதை நன்கு அரைத்து உடல் முழுவதும் பூசி காய்ந்த பின்பு குளித்து வந்தால் உடலில் துர்நாற்றம் நீங்கும். அதோடு சொறி, அரிப்பு போன்றவற்றையும் நீக்கும். 

பெண்களுக்கு முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க, 

கோரைக்கிழங்கு, மற்றும் ஆவாரம் பூ, பூலான் கிழங்கு, இம்மூன்றையும் சம அளவு எடுத்து பசை போன்று அரைத்து தினமும் முகத்தில் தேய்த்து குளித்து வர முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் அனைத்தும் உதிர்ந்து போகும். 

மாதவிடாய் சில பெண்களுக்கு

மாத விடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு, அடிவயிற்றில் வலி மிகுந்து அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. இச்சமயங்களில் ஆவாரம் பூக்களை கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது நிற்கும். அடிவயிற்றில் ஏற்படும் வலி குறையும். 

 அதோடு கருப்பையில் இருக்கும் நட்சுக்களையும் இது போக்கும். கண்கள் மழைக்காலங்களில் சிலருக்கு கஞ்சைக்டிவிட்டீஸ் சுருக்கமாக கூறினால் மெட்ராஸ் எனப்படும் கண் சம்பந்தமான வியாதி ஏற்படுகிறது. இப்பாதிப்பு ஏற்பட்ட காலங்களில் ஆவாரம் பூக்களை நன்கு அரைத்து, அதன் சாற்றின் சில துளிகளை அவ்வப்போது கண்களில் விட்டு வந்தால் கண்ணில் இருக்கும் கிருமிகள் அழிந்து, கண்கள் மீண்டும் பழைய நிலையை விரைவில் அடையும். 

கல்லீரல், வயிறு 

ஆவாரம் பூக்களை பச்சையாக சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களில் நிறைந்திருக்கும் நச்சுக்கள் முழுவதும் வெளியேறும். அதோடு வயிறு சம்மந்தமான நோய்களும் குணமாகும். ஆவாரம் பூ தேநீர் பருகுவதால் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களும் நீங்கி, கல்லீரல் பலப்படும். மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் காக்கும். கிருமி நாசினி ஆவாரம் பூக்களை அரைத்து அவ்வப்போது, உடலில் ஆறி வரும் புண்கள், காயங்கள் மீது தடவி வந்தால் அவை சீக்கிரம் ஆறும்


ஆவாரம் பூ இயற்கையிலேயே கிருமி நாசினி தன்மை அதிகம் கொண்டது. இப்பூக்களை அவ்வப்போது பக்குவப்படுத்தி சாப்பிட்டு வருவதால் உடலில் தொற்று கிருமிகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்த ஆவாரம் பூ சிறந்த இயற்கை மருந்தாக இருக்கிறது. 

நீரிழிவு 

ஆவாரம் பூ நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் சிறந்த பணியாற்றுகிறது. ஆவாரம் பூக்களை பறித்து காயவைத்து, பின்பு சிறிது சுத்தமான நீரை அடுப்பில் வைத்து, அதில் நிழலில் உலர்த்தப்பட்ட்ட ஆவாரம் பூக்களை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி பனங்கற்கண்டை சிறிதளவு சேர்த்தால் ஆவாரம் பூ தேநீர் தயார். இத் தேநீரை தினமும் நீரிழிவு நோயாளிகள் பருகி வந்தால் நீரிழவு நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்

உடலுக்கும் பலத்தை கொடுக்கும். பனங்கற்கண்டு மற்றும் வேறு எந்த இனிப்புகளும் சேர்க்காமலும் இத்தேனீரை பருகலாம். நீர் வறட்சி வெப்பம் அதிகம் உள்ள காலங்கள் மற்றும் உடலுக்கு சில வகை நோய் பாதிப்புகள் ஏற்படும் காலங்களில் உடலில் நீர் சத்து வறண்டு நீர் வறட்சி ஏற்படும். இக்காலங்களில் ஆவாரம் பூ ஊற வைக்கப்பட்ட நீர் அல்லது ஆவாரம் பூ போட்டு காய்ச்சி வடிகட்டி ஆறிய நீரை பருகி வந்தால் உடலில் ஏற்படும் நீர் வறட்சியை போக்கலாம். 

காய்ச்சல் 

பெரும்பாலான காய்ச்சல் வகைகள் ஏதாவது ஒரு வகை நுண்ணுயிரி தொற்றுகள் மூலமே ஏற்படுகிறது. எப்படிப்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஆவாரம் பூக்களை போட்டு வேக வைத்த தண்ணீரை காய்ச்சல் ஏற்பட்ட காலங்களில் அவ்வப்போது பருகி வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காய்ச்சல் வெகு விரைவில் நீங்கும்.

 சிறுநீரக தொற்று 

பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் அந்தரங்க உறுப்புகளின் சுகாதாரமின்மை போன்ற காரணங்களால் சிறுநீரக தோற்று நோய் ஏற்படுகிறது. இந்த பாதிப்புகள் உடலில் இருந்து அவ்வளவு சுலபத்தில் நீங்காது. ஆனால் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவாரம் பூவிலிருந்து செய்யப்படும் ஆவாரம் பூ ஜூசை அருந்தி வந்தால் சிறுநீரக தொற்று நோய்கள் விரைவில் நீங்கும்.

பூவை உலர்த்தி வேளைக்கு 10 கிராம் கியாழமிட்டு பால் சர்க்கரை கூட்டி  காப்பி போல் சாப்பிட நீரிழிவு,உட்சூடு,நீர்க்கடுப்பு,முதலியவை குணமாகும். 

பூவை உலர்த்தி நலுங்கு மாவுடன் கூட்டி தேய்த்து ஸ்நானம் செய்து வர கற்றாழை நாற்றம்,உடம்பில் உப்பு பூத்தலை நீக்கும்.உடல் மினுமினுக்கும். 

ஆவாரம் பட்டை 20 கிராம் நன்றாய் இடித்து ஒரு மட்கலயத்தில் போட்டு முக்கால் படி நீர்விட்டு அடுப்பில் வைத்து சிறுக எரித்து, வீசம் படியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி, தினம் இரு வேளை 50 மிலி வீதம் கொடுத்து வர மதுமேகம் (சர்க்கரை நோய் ),ரத்தமூத்திரம்(ரத்த வெட்டை), பெரும்பாடு,தாகம் இவைகள் போகும் .

 

ஆவாரைப் பஞ்சாங்க சூரணம்(இலை,பூ,பட்டை,வேர்,காய் வகைக்குசமன்) 250 கிராம், கடலழிஞ்சில்பட்டை,மருத மரப்பட்டை,நாவல் மரப்பட்டை,தண்ணீர் விட்டான் கிழங்கு,பாதிரி வேர்,வகைக்கு 80 கிராம்,மரமஞ்சள்,கல்நார் வகைக்கு 40கிராம்,குரோசாணி ஓமம் 10கிராம்,இடித்துச் சூரணம் செய்து வைத்துக் கொண்டு,வேண்டும் போது வேளைக்கு 20 கிராம் சூரணத்தை கால் படி நீரில் அரைக்கால் படியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் 2 வேளை சிறிது சர்க்கரை கூட்டிப் பருகி வர மதுமேகம்(சர்க்கரை நோய்),தேககாங்கை (சர்க்கரை நோயாளர்களுக்கான உடல் , கை கால்களில் ஏற்படும் எரிச்சல்),தாகம், முதலியவை நீங்கும்.தேவை என்றால் பசும் பால் கூட்டிக் கொள்ளலாம்.

 

நன்கு சுத்தம் செய்த எள் 400கிராம்,வேர் பட்டை சூரணம்,வறுத்த கடலை மாவு வகைக்கு 200கிராம்,கலந்து தேவையான அளவு தேன் அல்லது சர்க்கரை சேர்த்து இடித்து இலேகியம் செய்து நெல்லிக்காயளவு,காலைமாலை சாப்பிட்டு வர தாகம்,அழலை,நீரிழிவு போன்ற பல பிணிகள் தீரும். 

 பிசின் 2-3 குன்றி எடை தினம் 2 வேளை 20-40 நாள் பசும்பாலில் சாப்பிட்டுவர விந்து நஷ்டம்,மதுமேகம்,தாகம்,உட்காங்கை தீரும்.

பட்டையை உலர்த்திப் பொடித்து 20கிராம்,1 லிட்டர் நீரிலிட்டு 200மி.லியாகக் காய்ச்சி அந்தி சந்தி குடித்து வர மதுமேகம்,சிறுநீருடன் ரத்தம் போதல், பெரும்பாடு தீரும்.

ஆவாரைப் பஞ்சாங்க சூரணம் 10கிராம் தினம் காலை மதியம்,மாலை  வெந்நீருடன் சாப்பிட மதுமேகம்,பிரமேகம்,உடல் மெலிவு, உடல் எரிச்சல், வேதனை,மூச்சுத் திணறல் ஆகியன குணமாகும்.1-3 மண்டலம் சாப்பிட வேண்டும்.பூவை இரவு ஒரு தம்ளர் நீரில் போட்டு காலை வெறும் வயிற்றில் அதன் தெளிவைக் குடித்து வர சொறி, சிரங்கு, தேமல் போன்ற துன்பங்கள் போகும்

பிசின் 3 கிராம் 1 தம்ளர் நீரில் இட்டு சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கலந்து தினம் இருவேளை குடித்து வர வெள்ளைப் போக்கு குணமாகும். வயிற்று வலி, இடுப்பு வலி ஆகியவை குணமாகும். 

 

பட்டை,கஸ்தூரிமஞ்சள்,1 மிளகாய்,சிறிது சாம்பிராணி,நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி(ஆவாரைத் தைலம்) தலைமுழுகிவர மதுமேகத்தாலுண்டான தோல் வெடிப்பு,தோல்வறட்சி,எரிச்சல் குணமாகும்.

இலையோடு உளுந்த மாவை சேர்த்து அரைத்து மூட்டு வீக்கம், வலி ஆகியவற்றுக்குப் பற்றாகப் போட வீக்கம் தணிந்து வலியும் போகும்.

 20கிராம்  ஆவாரம் பட்டையை  பொடித்து  5ல்1ன்றாய்க் காய்ச்சி,50மிலி தினமிருவேளை  பருகிவர  பெரும்பாடு  கட்டுப்படும்

 ஆவாரையில் "சென்னா பிக்ரின்'' எனப்படும் "கார்டியாக் குளூகோசைட் மற்றும் "ஆன்த்ரா குனைன்ஸ்'', "டேனின்ஸ்'' ஆகிய வேதிப் பொருள்களை உள்ளடங்கி உள்ளது.

 

பல்வேறு நோய்களுக்கும் காரணமான "ஸ்டேப்பிலோகக்கஸ் ஆரியஸ்'', "என்டரோ காக்கஸ் "பீக்காலிஸ்'', "பேச்சிலஸ் சப்டிலிஸ்''.சால்மோனில்லா டைபி'', "சால் மோனில்லா பேரா டைப்பி'', "விப்ரியோ காலரே'', "சைஜில்லா டிசன்ட்ரோ'' போன்ற நோய்க் கிருமிகளுக்கு எதிராகச் செயல்படும் மருத்துவ வேதிப் பொருள்கள் உள்ளன.

 

 ஆட்டு இறைச்சி

  

மருத்துவ தகவல்:விட்டமின்களான B1, B2, B3, B9, B12, E, K, கோலைன், புரோட்டீன், அமினோ அமிலங்கள், மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் போன்றவை உள்ளது.


இத்தகைய ஆட்டிறைச்சியை தினசரி உணவில் அதிகமாக சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
ஆட்டிறைச்சியில் சாச்சுரேட்டட் கொழுப்பு குறைவாகவும், அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளதால், அது இதய நோய் வரும் வாய்ப்புகளை குறைக்கும்.

ஆட்டிறைச்சியில் உடலில் உள்ள நல்ல கொழுப்புக்கள், நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்களை நீக்கி, கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கிறது.ஆட்டிறைச்சியில் உள்ள புரோட்டீன் பசியைக் கட்டுப்படுத்துவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதோடு, உடல் எடை அதிகரிப்பதையும் தடுக்க உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் ஆட்டிறைச்சி சாப்பிட்டால் அது ரத்தச்சோகை வராமல் தடுப்பதோடு, உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.
ஆட்டிறைச்சி சாப்பிட்டால், அதில் உள்ள விட்டமின்கள், செலினியம் மற்றம் கோலைன் போன்றவை, எந்த வகையான புற்றுநோயும் வராமல் பாதுகாக்கிறது.

ஆட்டிறைச்சி டோர்பிடோ மற்றும் பித்த நீரைக் கொண்டுள்ளதால், அவை ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
ஆட்டிறைச்சியில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், அது உடலில் ரத்தத்தை மேம்படுத்தி, உள்காயங்களை தடுப்பதுடன், மாதவிடாய் கால வலியையும் தடுக்கிறது.

ஆட்டிறைச்சியை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், அதில் உள்ள சத்துக்கள் டைப்-2 நீரிழிவு மற்றும் நீரிழிவு நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது.

வாரத்தில் 2 முறை ஆட்டிறைச்சியை உட்கொண்டு வந்தால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

 இஞ்சி

விட்டமின் , சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன. நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராக வைக்கவும் உதவுகிறது.


உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள். இஞ்சியை காலையில் சாப்பிட்டால் உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். பசியுணர்வு அதிகரிக்கும். சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவினால், ஒற்றைத் தலைவலி நீங்கும்.

 

ஆஸ்துமா நோயாளிகள் தினமும் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர, ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

 

நீரில் சிறிது இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க, நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள சளி  முறிந்து, விரைவில் நிவாரணம் கிடைக்கும். 

பல்வலி இருக்கும்போது, இஞ்சி துண்டை ஈறுகளில் மசாஜ் செய்தால், நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால், நீரில் இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க  வைத்து, அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

 

இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை  நீங்கும்.

 

இஞ்சி குமட்டல் மற்றும் வாந்தி வருவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, காலையில் ஏற்படும் சோர்வையும் இஞ்சி தடுக்கும். இஞ்சியைத் தட்டி நீரில் போட்டு  கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து பருக செரிமான பிரச்சனைகள் அகலும். அதிலும் காலையில் பருகினால், உங்கள் செரிமான மண்டலம் சுத்தமாகி, அதன்  செயல்பாடு அதிகரிக்கும்.


1 பிரபல ஜீரண மருந்து:

வயிற்றுக் கோளாறுகளுக்கு நிவாரணம்..

தொன்மையான கலாச்சாரத்தின் தொடர்ச்சியாக, பல்லாண்டு காலமாகவே இஞ்சி சிறந்த ஜீரண ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குடலிறக்க பிரச்சனையில் வயிற்றுப்பகுதி தசைகளுக்கு வலுசேர்த்து உதவுவதுடன், வாயு சம்பந்தமான பிரச்சனைகளை களைந்து வயிற்று மந்தம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.

உணவிற்கு முன் இஞ்சித் துண்டுகளுடன் உப்பு சேர்த்து சாப்பிடும்போது உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கப்பட்டு ஜீரணத்திற்கு உறுதுணையாக அமைவதோடு வயிறு தொடர்பான பிரச்சனைகளும் தவிர்க்கப்படுகின்றன. முழு உணவிற்குப் பின், இஞ்சி டீ குடிப்பதன் மூலம் வாயுத் தொந்தரவுகள் குறைகிறது. வயிறு தொடர்பான பிரச்சனைகள் தீவிரமாக இருக்கும்போது இஞ்சி சாப்பிட்டு வருவதால் ஃபுட் பாய்சனிங் தவிர்க்கப்படுகிறது.

நாட்பட்ட அஜீரணக் கோளாறான டைஸ்பெப்ஸ்யாவிற்கு (dyspepsia) பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலியை குணமாக்குவதோடு, பாக்டீரியாவால் உண்டாகும் வயிற்றுப்போக்கையும் குணமாக்குகிறது.

2 குமட்டலுக்கான சிகிச்சை:

பயண வாந்திக்கு நிவாரணம்...

குமட்டல், வாந்தி போன்ற அஜீரணக் கோளாறுகளுக்கு நல்ல மருந்தாக இஞ்சி உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் காலைநேர உபாதை, பயணத்தினால் உண்டாகும் மலச்சிக்கல் மற்றும் புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையின்போது உண்டாகும் குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கும் குணமளிக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி கீமோதெரபிக்கு முன்னதாக தினமும் 0.5 முதல் 1 கிராம் அளவிற்கு இஞ்சி சேர்த்துக் கொண்டு வரும் நோயாளிகளில் 91% பேருக்கு குமட்டல் வாந்தி போன்ற பாதிப்புகள் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்திருப்பதைக் காண முடிந்தது.

அதோடு அஜீரணக் கோளாறுடன் தொடர்புடைய தலைசுற்றல், மயக்கம் ஆகியவையும் குறைகிறது.

இஞ்சியிலுள்ள வேதிப்பொருட்கள் மூளையில் செயல்பட்டு நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தி குமட்டல் வாந்தி மயக்கத்தை கட்டுப்படுத்துகிறது என்பதை சில ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

3 மூட்டு வலி, மூட்டு சவ்வு பிரச்சனைகளுக்கு தீர்வு

இஞ்சியில் உள்ளஜிஞ்சரால்எனப்படும் பொருள் மூட்டு மற்றும் தசைவலிகளுக்கு நல்ல நிவாரணத்தை வழங்கும் தன்மை படைத்ததாக உள்ளது. மெடிசினல் ஃபுட் எனும் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள ஆராய்ச்சிப்படி, இஞ்சி செல்லுலர் நிலையில் குறிப்பிட்ட தூண்டுதலை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

மேலும், பல அறிவியல் ஆய்வின்படி, மூட்டுகளில், குறிப்பாக ருமட்டாய்ட் மூட்டு பிரச்சனைகளின் ஆரம்பநிலைகளில் சிறந்த வலி நிவாரணியாக இஞ்சி செயல்புரிவதை குறிப்பிடுகிறது. இஞ்சியை தொடர்ந்து எடுத்து வரும் ஆஸ்டியோஆர்திரிட்டிஸ் மூட்டு பிரச்சனையுள்ள பல நோயாளிகளிடம் பரிசோதித்து பார்த்ததில் அவர்களின் வலி வெகுவாக குறைந்து, கால்களின் இயக்கமும் மேம்பாடு அடைந்துள்ளது.

ஹாங்காங்கில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், மூட்டு வலியுள்ள நோயாளிகளுக்கு தசை இறுக்கத்தை சரிசெய்யவும் வலியைக் குறைக்கவும் மசாஜ் தெரப்பியில் இஞ்சி எண்ணெயும் ஆரஞ்சும் உபயோகப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

உடற்பயிற்சியின்போது ஏற்படும் சுளுக்கு, தசைவலி போன்றவற்றை குறைக்க இஞ்சி உதவுகிறது. ஜார்ஜியா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு ஆய்வில், 34 மற்றும் 40 தன்னார்வத் தொண்டர்கள் அடங்கிய இரு குழுக்களுக்கு பச்சையாகவும் வறுத்தும் இஞ்சியை தொடர்ந்து 11 நாட்களுக்கு வழங்கி, அவர்களை கவனித்தனர். ஜேர்னல் ஆஃப் பெய்னில் வெளியான முடிவுகளின்படி, உடற்பயிற்சியால் விளைந்த தசைவலியை 25% அளவிற்கு குறைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

4 வலி நிவாரணி: மைக்ரேன் தலைவலி, மாதவிடாய் வலிக்கு நிவாரணம்

மைக்ரேன் தலைவலியை போக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு என்பதை ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ‘பைட்டோ ரீசர்ச்பத்திரிக்கையில் வெளியாகியுள்ள ஈரானில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, இஞ்சி பொடியாலானசுமாட்ரிப்டன்எனும் மருந்து மைக்ரேன் தலைவலியின் அறிகுறிகளுக்கு நல்ல பலனை வழங்குகிறது என்பதுதான்.

ஒரு மருத்துவ ஆய்வில், கடுமையான அறிகுறிகள் கொண்ட 100 மைக்ரேன் பாதிப்பாளர்களை பொதுவாக தேர்ந்தெடுத்து அவர்களுக்குசுமாட்ரிப்டன் அல்லது இஞ்சிப் பொடி வழங்கப்பட்டது. இரண்டுமே ஒரேபோல் திறமிக்கதாக இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இஞ்சி ப்ராஸ்டாக்ளான்டின்ஸை தடுப்பதன் மூலம் மைக்ரேனில் செயல்புரிகிறது. தசை இறுக்கத்தை தளர்த்தி, இரத்த குழாய்களில் பாதிப்பை கட்டுப்படுத்துவதோடு சில ஹார்மோன்களிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மைக்ரேன் தலைவலியால் பாதிப்புக்குள்ளாக ஆரம்பிக்கும்போது இஞ்சி டீ குடிப்பதால் தீவிர வலியைத் தடுக்க முடிவதோடு அதன் பக்கவிளைவுகளான குமட்டல் மற்றும் தலைசுற்றல் போன்றவற்றை தடுக்கமுடியும்.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உண்டாகும் வலியை குறைக்க இஞ்சி உதவுகிறது. ஈரானில், 70 மாணவிகளிடத்தில் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட ஆய்வில், மாதவிலக்கின் முதல் 3 நாட்களில், ஒரு குழுவினருக்கு இஞ்சி வில்லைகளும், இன்னொரு குழுவினருக்கு ப்ளாசிபோவும் கொடுக்கப்பட்டது. 47.05% ப்ளாசிபோ எடுத்துக் கொண்டவர்களைக் காட்டிலும் 82.85% இஞ்சி வில்லைகளை எடுத்துக்கொண்டவர்களிடம் வலிக்கான அறிகுறிகள் குறைந்திருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

பல கலாச்சாரங்களில், தீப்புண்களின் மேல் இஞ்சிச் சாறை தெளிக்கும் வழக்கம் இருக்கிறது. மூட்டுவலி, முதுகுவலி போன்ற பிரச்சனைகளுக்கு இஞ்சி எண்ணெயை உபயோகிக்கும் வழக்கம் நிலவுகிறது.

5 புற்றுநோய்க்கு எதிரி: புற்றுநோய் செல்களை திறம்பட அழிக்கிறது

நவீன விஞ்ஞானத்தில் பலவித புற்றுநோய்களுக்கு இஞ்சி ஒரு நல்ல தீர்வாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

மிஷிகன் காம்ப்ரிஹென்ஸைவ் புற்றுநோய் மையத்தில் (University of Michigan Comprehensive Cancer Center) மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் இஞ்சி, கர்ப்பப்பை புற்றுநோய் செல்களை அழிப்பது மட்டுமல்லாமல், இந்தப் புற்றுநோய் நோயாளிகளிடம் பொதுவாகக் காணப்படும் பிரச்சனையான, கீமோதெரப்பி சிகிச்சைக்குப்பின் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது.

இஞ்சி பொடியையும் தண்ணீரையும் கலந்து கர்ப்பப்பை புற்றுநோய் செல்களில் ஆராய்ச்சியாளர்கள் உபயோகித்து சோதனை செய்தனர். அவர்கள் செய்த ஒவ்வொரு சோதனையிலும் இஞ்சிப் பொடி கலந்து நீருடன் புற்றுநோய் செல்கள் தொடர்புக்கு உள்ளாகும்போது அவை அழிவதைக் கண்டனர். அல்லது, அவைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டோ (autophagy) அல்லது தற்கொலை செய்துகொண்டோ (apoptosis) மடிகின்றன.

பயோமெடிசின் மற்றும் பயோ டெக்னாலஜி பத்திரிக்கையில் வெளியாகியுள்ள ஆராய்ச்சி முடிவின்படி, இஞ்சி தாவரத்திலிருந்து பெறப்படும் வேதிப்பொருள், சாதாரண செல்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் மார்பகப் புற்றுநோய் செல்கள் பெருகுவதை தடுக்கிறது. இந்தப் பொருட்கள் சைட்டோடாக்சிட்டி எனப்படும் தனித்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. கீமோதெரப்பி மூலம் மேற்கொள்ளப்படும் மற்ற பல புற்றுநோய் கட்டிகளுக்கான சிகிச்சை கடினமானதாக உள்ளது. அவை சிகிச்சையை எதிர்த்து தாக்குப்பிடித்து நீடித்து இருப்பதாக உள்ளன.

மார்பகப் புற்றுநோய் செல்கள் வளர்வது மட்டுப்படுகிறது. மேலும், இஞ்சி எளிதில் மாத்திரை வடிவத்தில் உபயோகப்படுத்தும் வகையில் இருப்பதுடன், அவற்றால் மிகக் குறைவான பக்கவிளைவுகளே உண்டாகின்றன. மேலும், இதன் மருத்துவ செலவும் மிகக் குறைவு.

2011ல் ஜியார்ஜியா பல்கலைக்கழகம் மூலிகையின் புற்றுநோய் எதிர்ப்பு, வலி நிவாரணி மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் கூறுகளின் அடிப்படையில் இஞ்சியின் மீது மேற்கொண்ட பரிசோதனையில் பராஸ்டேட் புற்றுநோயில் இஞ்சி செயல்புரிவதாக கண்டறிந்தது. தி பிரிட்டிஷ் ஜேர்னல் ஆஃப் நியூட்ரிசன் எனும் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள அந்த ஆராய்ச்சியின் முடிவுகளின்படி இஞ்சி சாறு நலம்தரும் செல்களை பாதிக்காமல், ப்ராஸ்டேட்டில் உள்ள புற்றுநோய் செல்களைக் கொல்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.

இன்றைய நவீன அறிவியலில் இஞ்சி பெருங்குடலிலுள்ள வீக்கங்கள் மற்றும் புற்றுநோயின் மீது செயல்பட்டு பாதிப்பைக் குறைக்கிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது. மிசிகன் பல்கலைக்கழகத்தின் ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் 2 கிராம் இஞ்சித் துண்டு வேர்களை அல்லது ப்ளாசிபோவை 30 பேர் அடங்கிய நோயாளிகள் குழுவிற்கு 28 நாட்களுக்கு கொடுத்து வந்தனர். 28 நாட்கள் கழித்து அவர்கள் பெருங்குடல் வீக்கங்கள் உள்ள நோயாளிகளிடம் மாறுதல்களைக் கண்டதோடு, பெருங்குடல் புற்றுநோய் தடுப்புமுறையில் இயற்கையான வழிமுறையாகவும் இருக்கிறது.

இஞ்சியிலுள்ள மூலப்பொருட்கள் மலக்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கட்டிகள் மற்றும் கணையப் புற்றுநோய் ஆகியவற்றிலும் நல்ல பலனை அளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. Beta-Elemene எனப்படும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துப்பொருள்தான் இதற்குக் காரணம்.

6. நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் என்ற வியாதியில் ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைத்து, இன்சுலினின் சுரப்பை அதிகரிக்கும் குணம் உள்ளது.

இஞ்சியில் சர்க்கரை நோயை தடுக்க மட்டுமல்லாமல் அதை குணப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளும் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி பல்கலைக் கழகத்தில் செய்த ஆராய்ச்சியில், 2ம் தர சர்க்கரை நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் கலக்கும் க்ளைசெமிக்கை(Glycemic) சமநிலைப்படுத்தும் குணம் உள்ளது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ப்லான்டா மெடிக்கா என்ற பத்திரிக்கையில் வெளியான இந்த ஆய்வின்படி இஞ்சிச் சாற்றினால் இன்சுலினின் உதவியில்லாமலே, தசை அணுக்கள் க்ளுக்கோசை உறியக்கூடிய தன்மையை பெறுகிறது என்றும் இத்தன்மை இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் என்றும் வெளியிட்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து 30 நாட்கள் காய வைத்த இஞ்சியைப் பொடியை 3 கிராம் அளவு உட்கொண்டால், ரத்தத்தில் க்ளுகோசின் அளவு, ட்ரைக்ளிசரைட் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளையும் கணிசமாக கட்டுப்படுத்தலாம் என்று மற்றொரு மருத்துவ ஆராய்ச்சி கூறுகிறது.

சுருக்காமாகச் சொன்னால் கணைய நீரை இரத்தத்தில் விடுத்து, கார்போஹைட்ரேட்டுகளை ஜீரணித்து வளர்ச்சிதை மாற்றங்களை சரிவர நடத்தி, கொழுப்புச் சத்தை உபயோகிக்க இஞ்சி உதவுகிறது. இஞ்சி க்ளுகோசை சிறிது சிறிதாக பிரித்து, ரத்தத்தில் கலக்க விடுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகமாகாமல் பாதுகாக்கிறது.

இஞ்சிக்கு சர்க்கரை வியாதியை தடுக்கும் குணமும் இருப்பதாக மேலும் பல ஆய்வுகளும் கூறுகின்றன. சர்க்கரை வியாதி உள்ளவரின் ஈரல், சிறுநீரகம், நரம்பு மண்டலம் போன்ற எல்லா உறுப்புகளையும் பாதுகாக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு. கண்ணில் உண்டாகும் புரை என்ற சர்க்கரை நோயால் உண்டாகும் ஒரு வித வியாதியையும் வராமல் தடுக்கும் குணம் இஞ்சிக்கு உண்டு.

7. இதயத்தை குணப்படுத்தும் - பல விதமான இதய சம்பந்தப்பட்ட சூழ்நிலைகளை குணமாக்கும்.

அதிகப்படியான பொட்டாசியம், மாங்கனீசு, குரோமியம், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற கனிமத் தன்மைகளை கொண்ட இஞ்சி, அழற்ச்சிகளை நீக்கும் குணம் மிகுந்தது. பல காலமாக இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் தன்மை மிக்கது இஞ்சி.

சீன மருத்துவத்தில், இதயத்தை பலப்படுத்தும் மருத்துவ குணம் இஞ்சிக்கு உண்டு என்பதால் இஞ்சியிலிருந்து எடுத்த ஒருவித எண்ணையை இருதய நோய்களை குணப்படுத்த உபயோகிக்கின்றனர்.

இந்த மூலிகையில் உள்ள ஒரு வித கணிமம் கொழுப்புத்தன்மையை குறைக்க, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த, ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த, ரத்த நாளத்தில் உள்ள அடைப்புகளை நீக்க என்று பல இருதய நோய்களை குறைக்கும் மற்றும் நீக்கும் தன்மை கொண்டுள்ளதாக நவீன ஆய்வுகளும் கூறுகின்றன.

8.மூச்சு சீரின்மையை குணமாக்கும் தன்மை - ஆஸ்துமா போன்ற வியாதிகள் குணமடையும்.

இஞ்சியிலுள்ள தன்மைகள் மூச்சு சீரின்மையை சரி செய்யக் கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், காச நோய் உள்ளவர்களுக்கு உகந்த மருந்து என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. நுரையீரலில் ப்ராண வாயுவை எடுத்துச் செல்லும் தசைகள் அழற்சியுற்று, எதிர்ப்பு சக்தியை இழந்து, மூச்சு விட சிரமமாக இருக்கும் நிலையை காச நோய் என்று சொல்லுவார்கள்.

சமீபத்தில் அமெரிக்க பத்திரிக்கையான ரெஸ்பிரேட்டரி ஸெல் அண்ட் மாலிகுலார் பையாலாஜியில் வெளியான ஒரு விஷயம் இஞ்சி இரண்டு விதமாக காச நோயை குணப்படுத்துகிறது என்று விளக்கியது. முதலில் ஜவ்வு போல இருக்கும் காற்றோட்டமான தசைகளில் அடைத்து இருக்கும் என்சைம்களை நீக்கவும், இரண்டாவதாக காற்று வழிகளை தளர்த்தும் மற்ற என்சைம்களை தூண்டிவிடவும் செய்கிறது.

ஊக்கமருந்திலோ அல்லது நோய் எதிர்ப்பு மருந்துகளிலோ இருக்கும் சில குணங்கள் இஞ்சியில் உள்ளது. அதாவது ஆன்டி-ஆக்ஸிடன்ட், நோய்-எதிர்ப்பு சக்தி மற்றும் வலி நிவாரண குணங்கள்தான் இஞ்சியை ஒரு இயற்கை மருந்தாக பார்க்கத் தூண்டுகிறது.

9. தடுப்பாற்றல் - இருமல் மற்றும் ஜலதோஷத்தை தடுக்கும்.

ஜலதோஷம் மற்றும் ஜுரத்திலிருந்து தடுக்கும் அற்புதமான ஆற்றல் கொண்டது இஞ்சி. மூச்சுத் திணறல் மற்றும் மூச்சுக் குழாய் அழற்சிகளை ஆற்றும் குணம் கொண்ட இஞ்சி, இருமல், தொண்டை அழற்சி மற்றும் ப்ரொங்கைடிஸ் போன்ற உபாதைகளை குணமாக்கும்.

ஜலதோஷத்தினால் உண்டாகும் சைனஸ் போன்ற அடைப்புகளிலிருந்தும், நுண்ணிய பல ரத்த நாளங்களையும் தூய்மைப்படுத்துகிறது இஞ்சி. இஞ்சிச் சாறுடன் எலுமிச்சம் பழச்சாறும் தேனும் கலந்து குடிப்பதால் ஜலதோஷம் மற்றும் ஜுரம் போன்ற அன்றாடம் வரும் நோய்களிருந்து விடுதலை என்று கீழை மற்றும் மேலை நாடுகளில் காலம் காலமாக வழங்கப்படுகிறது.

இஞ்சியில் தெர்மோஜெனிக் எனும் வெப்ப ஆக்க குணம் இருப்பதால், உடலை சூடாக வைத்திருப்பதில் இது உதவுகிறது. முக்கியமாக வேர்வை நாளங்களை திறந்து வேர்வையை வெளியேற்றுவதனால், இது உடலை டி-டாக்ஸிஃபை (detoxify) செய்து, ஜலதோஷத்துக்குண்டான குணக்கேடுகளை நீக்கி, பாக்டீரியா மற்றும் பல தொற்று நோய்களிலிருந்து விடுதலை அளிக்கிறது.

சமீபத்திய ஜெர்மானிய ஆய்வு ஒன்று வேர்வையில் வீரியமான கிருமிநாசினி ஒன்று இருப்பதாகவும் அதைடெர்மிஸைடின்என்றும் பெயரிட்டனர். இது வேர்வை சுரப்பிகளில் உருவாகிறது என்றும், வேர்வை மூலமாக தோல் வழியே வெளியேற்றப்பட்டு, -கோலி மற்றும்கேண்டிடா அல்பிகன்ஸ்போன்ற கிருமிகளிலிருந்து காப்பாற்றுகிறது என்று வெளியிடப்பட்டுள்ளது.

எல்லாவற்றையும் விட, இஞ்சியில் உள்ள இந்த தன்மைகள் அடர்ந்த நிலையில் இருப்பதால், உடல் அதை இலகுவாக உறிஞ்சிக் கொள்ளுகிற படியால், அதை அதிக அளவில் எடுத்துக் கொள்ள தேவையில்லை.

10. வீரியமான ஆன்டி-ஆக்ஸிடென்ட் - டிஎன்ஏ சிதைவை தாமதமாக்கும்

ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ் என்பது சில அடிப்படை மூலக்கூறுகளிலிருந்து - அதாவது மூப்பு மற்றும் பல வயதினால் ஏற்படும் சிதைவுகள், புற்று நோய், இருதய நோய், சர்க்கரை வியாதி, மூட்டு வியாதி, அல்ஜெமெர் - போன்ற வியாதிகளிலிருந்து காப்பதற்கு மிக முக்கியமான ஒரு கனிமம்.

எல்லாவிதமான இயற்கை திரவியங்களுக்குள்ளும் ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ் உள்ளது என்றாலும், இஞ்சியில் கூடுதலாக அதன் வீரியம் உள்ளதாகத் தெரிகிறது. 25 வெவ்வேறு வகையான ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ் இஞ்சியில் உள்ளது. இதனாலேயே பல மூலக் கூறுகளிலிருந்தும், பல உடல் உறுப்புகளை இஞ்சி பாதுகாக்கிறது.

 

 இம்பூரல்

வேறு பெயர்கள்இம்பூராவேர், சிறுவேர், சாய வேர் இம்பூரல் இரத்தத்தை வெளிப்படுத்தும் நோய்களான இரத்த வாந்தி, இளைப்பு, இருமல், குருதியழல் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும். இலையை இரண்டு பங்கு அரிசி மாவுடன் கலந்து அடையாகச் செய்து சாப்பிட்டால் இரைப்பு, ஈளை நோய் தீரும். 




இலை மற்றும் வேரைக் குடிநீரிட்டு சுரத்தால் உண்டான கை, கால் எரிச்சலுக்குப் பூசலாம். இம்பூரல் இலை, முசுமுசுக்கை இலை, கல்யாண முருங்கை இலை இவற்றை ஊற வைத்த புழுங்கல் அரிசியுடன் சேர்த்து அரைத்து அடை அல்லது தோசையாகச் சாப்பிட ஆரம்பக் கட்ட காச நோய் தீரும்.

இம்பூரல் வேர்ப்பட்டையுடன் மிளகுப் பொடியைச் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரைகளாக உருட்டி 2 மாத்திரை வீதம் காலை, மாலை சாப்பிட இடைவிடாத இருமல் தீரும்.

 இலுப்பை

 

மரங்கள் நிழலை மட்டும் தருவதில்லை. மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் சுவாசிக்கக்கூடிய பிராண வாயுவை உற்பத்தி செய்கின்றன. இதுமட்டுமா, புவி வெப்பத்தைக் குறைத்து மழையைத் தருவிக்கின்றன. இயற்கையின் படைப்பில் இத்தகைய அற்புதங்களைக் கொண்ட மரங்கள் மனிதனுக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. காய்ந்த மரம் விறகாகவும், வெட்டிய மரம் வீட்டு உபயோகப் பொருளாகவும் பயன்படுகின்றன. இப்படி மரங்களின் பயன்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவுக்கு மனித வாழ்வில் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.


இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் இலுப்பை மரமும் ஒன்று. கண்மாய், ஏரி, குளம், கரைகளிலும், பூங்கா போன்ற இடங்களிலும் சாலை ஓரங்களிலும் பரந்து விரிந்து காணப்படும் மரம்தான் இலுப்பை.

இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்கிறது. இதன் இலை, பூ, காய், பழம், வித்து, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டது. இலுப்பை மரத்திற்கு இருப்பை, சூலிகம், மதூகம் என்ற பெயர்கள் உண்டு.
பால் சுரக்க


தாய்ப்பால் சரிவர சுரக்காத பெண்கள் பலவகையான மருந்து மாத்திரைகளை உட்கொள்வார்கள். இவை சில சமயங்களில் தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்புகளை உண்டு பண்ணும். இந்த இன்னலைப் போக்க இலுப்பை உதவுகிறது. இலுப்பை இலையை மார்பில் வைத்துக் கட்டிவர தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
இலுப்பைக் காய்
இலுப்பைக் காயை கீறினால் பால் வெளிப்படும். அந்த பாலை உடலில் தோன்றும் வெண் படலங்களின் மீது தடவினால் வெண்படலம் விரைவில் குணமாகும்.
இலுப்பைப் பழம்
இலுப்பைப்பழம் நல்ல இனிப்புச் சுவை உடையது. மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது.

விதை
இலுப்பை விதையின் ஓட்டை நீக்கி உள்ளே உள்ள பருப்பை வதக்கி அரைத்து வீக்கங்களுக்கு கட்டினால் வீக்கம் விரைவில் குணமாகும்.

நெய்(எண்ணெய்)-பிண்ணாக்கு
இலுப்பையின் விதையில் எடுக்கப்படும் எண்ணெய் உடலுக்கு வன்மையும் வனப்பையும் கொடுக்கும்.
எண்ணெய் நீக்கப்பட்ட சக்கையே பிண்ணாக்கு எனப்படும். இதை ஊறவைத்து நன்றாக அரைத்து வடிகஞ்சியுடன் சேர்த்து உடலில் தேய்த்துக் குளித்தால் சரும வியாதிகள் நீங்கும். பழங் காலங்களில் இதனையே நம் முன்னோர்கள் பலர் சோப்பிற்குப் பதிலாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

வேர்
இலுப்பையின் வேரை இடித்து நீரில் கலந்து கொதிக்கவைத்து குடிநீராக அருந்தி வந்தால் மேற்கண்ட நோய்கள் குணமாகும்.

இசப்கோல்


2தாவரப் பெயர் -: PLANTAGO OVATA.
3. 
தாவரக் குடும்பப் பெயர் -: PLANTAGINACEAE.
4. 
வேறு பெயர்கள் -: இஸ்கால்ஆங்கிலத்தல் ‘PSYLLIUM’ என்று பெயர்.
5. 
வகைகள் -: ப்ளேன்டகோ சில்லியம்ப்ளேன்டகோ இன்சுல்லாரிஸ்ஜிஐ 1,
ஜிஐ 2, மற்றும் நிஹாரிக்கர் போன்றவை.
6. 
பயன்தரும் பாகங்கள் -: விதைவிதையின் மேல் தோல் முதலியன.
7. 
வளரியல்பு -: இசப்கோல் ஒரு சிறு செடி வகையைச் சேர்ந்தது.
இது ஒரு அடி முதல் 1.5 அடி வரை உயரம் வளர்க்கூடியதுஇதற்கு மணல் பாங்கான களிமண் நிலங்களில் பயிரிட ஏற்றதுவடிகால் வசதி வேண்டும்இதற்கு 7.2 - 7.9 கார அமிலத் தன்மையுள்ள நிலமாக இருத்தல் வேண்டும்நிலத்தைப் பண்படுத்தி உரமிட்டு பாத்திகள் அமைத்து நிலத்தைப் பண்படுத்த வேண்டும்இந்தியாவில் அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் நடவுக்கு ஏற்ற பருவங்கள்விதையை மணலுடன் சேர்த்து மேலாக வதைத்து தண்ணீர் பாச்ச வேண்டும்
ஒரு ஹெக்டருக்கு 7-12 கிலோ விதை தேவைப்படும்பின் 15-20 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாச்ச வேண்டும்சுமார் 7 நீர் பாச்சல் தேவைப்படும்விதைத்த 5-6 நாட்களில் விதை முளைக்கும். 3 வாரம் கழித்து 20 செ.மீ. X 20 செ.மீ செடிகள் இருக்குமாறு களை எடுத்துகலைப்பித்து விட வைண்டும். 2-3 முறை களை எடுக்க வேண்டும்பின் 3 வாரம் கழித்து மேலுரமிட்டு பயிர் பாதுகாப்பு செய்ய வேண்டும்விதைத்து 2 மாதங்களில் பூக்க ஆரம்பிக்கும்பூக்க அரம்பிச்சவுடன் நீர் பாச்சக் கூடாதுபின் 4 மாதம் கழித்து அறுவடை செய்ய வேண்டும்அடிப்பகுதியிலிருந்து நீண்ட காம்புகள் பூக்கும்

விதைகள் மெல்லியதாகவும்இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும்விதைகள் முதிர்ச்சி அடையும் போது செடிகளின் அடிபாக இலைகள் மஞ்சள் நிறமாகும்பழங்கள் லேசாக அமுக்கினால் 2 விதைகள் வெளிவந்து விடும்காலை 10 மணிக்கு மேல் அறுவடை சிறந்ததுசெடிகளை வேறுடன் பிடுங்கி பெரிய துணிகளில் கட்டி எடுத்து களத்திற்குக் கொண்டு வத்து விரித்துப் பரப்பிகாயவைக்க வேண்டும். 2 நாட்கள் கழித்து டிராக்டர் அல்லது மாடுகள் கொண்டு தாம்பு அடிக்க வேண்டும்

விதைகளைப் பிரித்தெடுத்த பின்பு செடிகள் மாட்டுத் தீவனமாகப் பயன் படுத்தலாம்பின் இயந்திரங்கள் மூலம் விதையின் மேல் தோலைப் பிரித்தெடுக்க வேண்டும்.
இந்தச் செடியின் விதைகளின் மேல் தோல்கள் தான் மருந்துக் குணம் அதிகமுடையது

விதையின் மேல் தோலுக்குப் பிசுபிசுப்புத் தன்மை உண்டுஇந்த விதையின் ஒரு வித எண்ணெய் மற்றும் சிறுய அளவில் அக்யுபின் மற்றும் டானின் என்ற க்ளோக்கோஸைடுகள் உள்ளதுஇதன் தோல் தண்ணீரை உறிஞ்சி தன்னிடத்தில் நிறுத்திக் கொள்ளும் தன்மை உடையதுகுஜராத்திலும்ராஜஸ்தானில் அதிகமாக விளைகிறதுஇது இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி மருந்துப் பொருளாகும்விதைகளின் மூலம் இனப் பெருக்கும் செய்யப்படுகிறது.
8. 
மருத்துவப் பயன்கள் -: இசப்கோல் விதைகள் குடல்புண்மலச்சிக்கலை நீக்கப் பயன்படுகிறதுமேல்தோல் வயிற்றுப் போக்குசிறுநீரக கோளாறுகள் நீக்கப் பயன்படுகிறதுதொண்டை மற்றும் நுரையீரல் நோய்களைக் குணப்படுத்ததேனுடன் உபயோகப்படுத்தப்படுகிறதுஇம்மூலிகைச் சாயங்கள்அச்சு ஐஸ்கிரீம் மற்றும் அழகு சாதனங்கள் தயாரிக்கப் பயன்படுகிறதுதோல் நீக்கப்பட்ட விதைகளில் 17-19 சதம் வரை புரதச் சத்து உள்ளதால் கால் நடைத் தீவனமாகப் பயன் படுகிறது.

கடுக்காய்!

இஞ்சிச்சாறு, பகலில் (மாலை) சுக்குக் காபி, இரவில் உறங்கப்போவதற்கு முன்னர் விதை நீக்கிய கடுக்காயைத் தண்ணீர்விட்டு, கொதிக்கவைத்து அருந்த வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் அனைத்தும் நீங்கிவிடும். அதாவது மலச்சிக்கல் நீங்கும்; கபம் சமநிலைப்படும். இப்படி நோய்கள் நீங்குவதன் மூலம் கிழவனும் குமரனாகலாம் என்பதே அதன் பொருள். இதில் கடுக்காயின் பங்கு அதிகம்.

சித்தர்களின் கூற்றுப்படி கல்பங்கள் உடலுக்கு வலுவூட்டி, நீண்ட ஆயுளைத் தரக்கூடியவை. மொத்தம் 108 கல்பங்கள் உள்ளதாகவும், அவற்றைச் சாப்பிடுவதால் நோய் விலகும், பிற்காலத்தில் நோய் வராமல் தடுக்கும் என்கிறார்கள் சித்தர்கள். மேலும், உடல் செல்களைப் புதுப்பித்து, உடலை வலுவாக்கி, இளமையாக இருக்கச் செய்யும். இந்தப் பழமொழியில் சொல்லப்பட்ட கல்பங்களில் இஞ்சி, சுக்கு, கடுக்காய் ஆகியவற்றில் கல்பங்கள் செய்து 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரைநோய், இதயநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் கட்டுப்படும்; உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும்


இஞ்சி, சுக்கு, கடுக்காயில் செய்யப்படும் கல்பங்கள் ஆண்-பெண் உறவைப் பலப்படுத்தி, குழந்தைப்பேறு தரக்கூடியவை. மணிக்கணக்கில் கம்ப்யூட்டரே கதி என்று ஒரே இருக்கையில் அமர்ந்து பணி செய்வதால், சிலர் ஆண்மைத்தன்மை குறைவதாகச் சொல்கிறார்கள். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மூன்று கல்பங்களும் அருமருந்து. ஆண்களுக்கும் பெண்களுக்கும் உயிர் சக்தியை மீட்டுத்தந்து, குழந்தைப்பேறு கிடைக்கச் செய்யும். காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி கல்பம், மதிய உணவு உண்டபிறகு சுக்கு கல்பம், இரவில் கடுக்காய் கல்பம் என 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால், அடுத்த சில மாதங்களில் குழந்தைப்பேறு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த 48 நாள்களில் கருமுட்டை உடையும் நாள்களில் மட்டும் தம்பதிகள் சேரலாம். மற்றபடி ஃபாஸ்ட்ஃபுட் உணவுகளைச் சாப்பிடாமல் கம்பு, கேழ்வரகு, வெங்காயம், முருங்கைப்பூ போன்றவற்றை சேர்த்துக்கொள்வது நல்லது.

இஞ்சி கல்பம்
இஞ்சி கல்பம் செய்ய அரை கிலோ இஞ்சியும் கால் லிட்டர் சுத்தமான தேனும் தேவை. இஞ்சியை நன்றாகக் கழுவி, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக்கி மையாக அரைக்கவும். அப்படி அரைத்த விழுதைப் பிழிந்து, சாறு எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிப் படியவிடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து தெளிந்த நீரை மட்டும் வடிகட்டிக்கொள்ள வேண்டும். பாத்திரத்தின் அடியில் படிந்திருக்கும் வெள்ளை நிற நச்சுப்பொருளை அகற்றிவிட வேண்டும்

தெளிந்த இஞ்சிச் சாற்றில் நன்றாகப் பழுத்த இரும்புக்கம்பியை ஒரு நிமிடம் முக்கி எடுக்க வேண்டும். மீண்டும் வடிகட்டி அந்த இஞ்சிச் சாற்றுடன் தேனைக் கலந்து, கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, ஃபிரிட்ஜில் வைத்துவிட வேண்டும். இதுதான் நச்சு நீக்கிய இஞ்சி கல்பம். இதில் இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி தண்ணீருடன் கலந்து அதிகாலையில் குடிக்க வேண்டும். (ஃபிரிட்ஜில் வைத்திருப்பதால் தேவையான கல்பத்தை மட்டும் வெளியே எடுத்துவைத்து பயன்படுத்தவும்.)

இஞ்சி கல்பம், பித்தத்தைச் சமப்படுத்தும். செரிமானக் கோளாறுகள், வயிற்றுக்கோளாறுகள், தலை கிறுகிறுப்பு போன்றவற்றைப் போக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும். மாரடைப்பு மற்றும் இதயநோய்களைக் கட்டுப்படுத்தும்


சுக்கு கல்பம்
சுக்கு கல்பம் செய்ய கால் கிலோ சுக்கு, 25 கிராம் சுண்ணாம்பு, ஒரு லிட்டர் தண்ணீர் தேவை. தண்ணீரில் சுண்ணாம்பைக் கரைத்து, அதில் சுக்கை ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு வெயிலில் நன்றாக உலரவைக்க வேண்டும். சுக்கின் மீது படிந்திருக்கும் சுண்ணாம்பை அகற்றிவிட்டு, அதைச் சிறு சிறு துண்டுகளாக்கி, மிக்ஸியில் பொடியாக அரைத்து, பாட்டிலில் போட்டுவைக்கவும். இதுதான் சுக்கு கல்பம். மதிய உணவுக்குப் பிறகு, இதில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து பருகலாம். தேவைப்பட்டால் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துப் பருகலாம்.

இது சுரப்பிகளைச் சமநிலைப்படுத்தும்; வாய்வுத் தொல்லைகளைப் போக்கும். வாதம் தொடர்பான நோய்களையும் போக்கும்.

கடுக்காய் கல்பம்
கடுக்காய் கல்பம் செய்ய அரை கிலோ (மஞ்சள் நிற) கடுக்காய், அரை லிட்டர் பசும்பால் தேவை. பாலில் கடுக்காயைப் போட்டு, அடுப்பில்வைத்து கால் மணி நேரம் காய்ச்சவும். சூடு ஆறியதும் இறக்கி, கடுக்காயை மட்டும் வெயிலில் உலரவைக்கவும். மூன்று நாள்கள் உலரவைத்த பிறகு, இதை விதையுடன் மிக்ஸியில் அரைத்து, கண்ணாடி பாட்டிலில் எடுத்துவைக்கவும். கடுக்காயின் விதை நச்சு. ஆனால், அதைப் பால் ஊற்றிக் காய்ச்சியதன் மூலம் நச்சு விலகி, கல்பமாகிவிடும்
இந்தக் கடுக்காய் கல்பத்தை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து, இரவு உணவுக்குப் பின்னர் அருந்தலாம். மற்ற கல்பங்களைப்போல அல்லாமல் கடுக்காய் கல்பத்தை மட்டும் பல ஆண்டுகளுக்குச் சாப்பிடலாம்


கடுக்காய் லேகியம்
கடுக்காய் லேகியம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதைச் சிலர் கிண்டலாகச் சொல்வதும் உண்டு. உண்மையில் கடுக்காய் லேகியம் சாப்பிடுவதால், நரைத்த தலைமுடிகூட கருகருவென வளரும். முற்காலங்களில் கட்டப்பட்ட கட்டடங்கள் உறுதியாக இருக்க ,கடுக்காய் சேர்த்துக் கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை விதையை நீக்கிவிட்டுப் பயன்படுத்த வேண்டும்

கடுக்காயில் பலவகைகள் உள்ளன. அதில் பிஞ்சுக் கடுக்காய் மலச்சிக்கலைப் போக்கும். மலத்தை இளக்கும்; உடலுக்கு அழகூட்டி, மெருகூட்டும். செங்கடுக்காய் காசநோயைப் (டி.பி) போக்கி மெலிந்த உடலைத் தேற்றி அழகாக்கும். வரிக்கடுக்காய் பல்வேறு நோய்களை விரட்டும்; விந்தணுக்களை அதிகரிக்கச் செய்யும்.

இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் ஐந்து கிராம் கடுக்காய்த் தூளை எடுத்து, வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். இஞ்சி, சுக்கு, கடுக்காயை ஒரு மண்டலம் (48 நாள்கள்) சாப்பிட்டுவந்தால் செரிமானக் கோளாறுகள் விலகும்; மலச்சிக்கல் குணமாகும்.
கடுக்காய்த்தூளுடன் சிறிதளவு சோம்பு (பெருஞ்சீரகம்) சேர்த்து மண் சட்டியில் தண்ணீர்விட்டு நன்றாகக் காய்ச்சி, வடிகட்ட வேண்டும். அதனுடன் சுத்தமான தேன் கலந்து தினமும் இரண்டு வேளை குடித்துவந்தால் உடல் எடை குறையும்

மூன்று கடுக்காய்த் தோல்களுடன் தேவையான அளவு இஞ்சி, மிளகாய், புளி, உளுந்து சேர்த்து நெய்யில் வதக்கி உப்பு சேர்த்து துவையலாக அரைக்கவும். இதைச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டுவந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும்; மலச்சிக்கல் விலகும்; உடல் பலம் பெறும்.
இப்படிப் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் கடுக்காய், உடல் பலவீனத்தைப் போக்கும்; ஆண்களின் உயிரணு குறைபாடுகளை நீக்கி என்றும் இளமையான தோற்றத்தைத் தரும்

பொதுவாகமலச்சிக்கல் இல்லாமல் இருந்தாலே மனிதனின் அத்தனை செயல்பாடுகளும் சரியாக இருக்கும். தாம்பத்யக் குறைபாடு இல்லாமல் இருந்தாலே போதும்தம்பதியரின் வாழ்வு சிறப்பாக இருக்கும். இந்த அற்புதமானப் பணிகளை மிகச் சிறப்பாகச் செய்யக்கூடியது கடுக்காய்!

 

இன்சுலின் கீரை

 

இந்த இன்சுலின் கீரை வளமான ஈரப் பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக் கூடியது. இந்தத் தாவரம் ஈஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகா நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் தாயகம் அமரிக்காவின் புளோரிடா மாகாணம்.

இதை இனப் பெருக்கம் செய்ய 3 கணுவுகளை உடைய முதிர்ந்த குச்சிகளை கரும்பு நடுவது போல் நட்டால் வளர்ந்து விடும்

சர்க்கரைநோயாளிகளுக்கு இன்சுலின் இலை அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன் படுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2 ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக் கூடிய சூழிநிலைதற்போது ஏற்பட்டுள்ளது

இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள். இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப் படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்க வில்லை

ஊசிமட்டுமே ஒரே வழியாகும்ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு இக்கீரைஅதிக பலன்களைத் தருகிறது ..

 பாம்பு கடித்த உடன் என்ன செய்ய வேண்டும்?

நாக பாம்பு, கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன். இந்த நான்கு வகைப் பாம்புகளே இந்தியாவில் அதிக பாம்புக்கடி மரணத்துக்கு காரணமாக உள்ளன.

ஒருவருக்கு பாம்பு கடித்தது தெரியவந்தாலோ அது கடித்து இருப்பது போல உணர்ந்தாலோ என்ன செய்ய வேண்டும் என்ற சில வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ளது.


  • எந்த இடத்தில் அந்த நபரை பாம்பு கடித்ததோ அங்கிருந்து உடனடியாக அவர் வெளியேற வேண்டும்.
  • பாம்பு கடித்த உடல் பாகத்தின் அருகே மோதிரம், வளையல், காப்பு, பிரேஸ்லெட் உள்ளிட்ட எதையேனும் அணிந்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். ஏனென்றால் கடிபட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டால் இவற்றின் காரணமாக அபாயம் ஏற்படலாம்.
  • பாம்பு கடித்த உடல் பாகம் அருகே இறுக்கமாகக் கட்டக் கூடாது. அப்படி இறுக்கமாக இருந்தால் ரத்த ஓட்டம் தடைபடும்.
  • பாம்பு கடித்த இடத்தில் வீக்கத்தை உண்டாக்காமல் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் தன்மையுள்ள பாம்புகளின் கடிகளுக்கு மட்டும் கை அல்லது கால் விரல்களில் இருந்து கடிபட்ட இடம் மற்றும் அதற்கும் மேல் பேண்டேஜ் அல்லது எலாஸ்டிக் சுற்றி (Pressure immobilisation technique) நச்சு உடலின் பிற பாகங்களுக்கு பரவாமல் தடுக்கலாம். ஆனால், ரத்த ஓட்டம் தடைபடும் அளவுக்கு மிகவும் இறுக்கமாக இருக்கக் கூடாது. தசைப் பிடிப்புக்கு ஒட்டப்படும் பேண்டேஜின் இறுக்கமே போதுமானது.
  • கடிபட்டவர் இயன்றவரை உடலை அசைக்காமல் இருக்க வேண்டும்.
  • பாரம்பரிய மருத்துவ முறை எனும் பெயரில் அறிவியல்பூர்வமாக அங்கீகரிக்கக்கப்படாத அல்லது ஆபத்தை விளைவிக்கக் கூடிய எந்த வகையான முதலுதவி சிகிச்சையையும் செய்யக்கூடாது.
  • மருத்துவ வசதி கிடைக்கும் வரை பாதிக்கப்பட்டவரை இடது பக்கமாக ரெக்கவரி பொசிஷன்-இல் படுக்க வைக்கவும்.
  • மூச்சுப்பாதை தடைபடாமல் இருப்பதை உறுதி செய்ய தலையும் கழுத்தும் நேராக இருக்கும் வகையில் படுக்க வைக்க வேண்டும்.
  • ஒரு கையை பக்கவாட்டில் மேல்நோக்கியும் இன்னொரு கையை மடித்து கன்னத்தின் அருகிலும் வைக்க வேண்டும்.
  • முதலுதவி செய்பவரின் எதிர் திசையில் இருக்கும் பாதிக்கப்பட்டவரின் முழங்காலை 90 டிகிரிக்கு மடிக்க வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட நபர் முதலுதவி செய்யும் நபரை நோக்கி இருக்கும் திசையில், அவரது உடலைத் திருப்ப வேண்டும்.
  • மடித்துக் கன்னத்தில் வைக்கப்பட்ட கை தலைக்கு ஆதரவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

  மலைப்பாம்பு

 மலைப்பாம்பு அல்லது வெங்குநாத்திப்பம்பு இது அதிகமாக பறவை ,விலங்கை விழுங்கும்.

இதன் கொழுப்பை கடும் வெய்யிலில் காயவைக்க எண்ணை உருகிவரும்.அதை மண் சட்டியில் ஏந்தி பின் கண்னாடிப் போத்தலில் விடவும்.உங்கள் 


உடலில் எங்காவது வெட்டப்பட்டு அதிகளவு ரத்தப்பெருக்கு ஏற்படுகிதா அதாவது நரம்புப்பகுதி வெட்டப்படாதிருந்தால் வெட்டப்பட்ட பகுதியை சுத்தமாக கழுவி அதன் மேல் எண்ணையை பூசி இரண்டு நிமிடம் காயம் பட்ட இடத்தில் விரலால் அமத்திப் பிடிக்க இரத்த ஓட்டம் நின்று தசை ஒட்டிக் கொள்வதை்காணலாம்.


மேலும் நோவுள்ள இடத்தில் இரண்டு சொட்டு எண்ணை விட்டு நண்றாக இரண்டு வாரம் தடவி வர நோ நீங்கும்.

உசில மரம்


அரப்பு, ஊஞ்ச மரம், கருவாகை) - ArappuArappu 

இலை மற்றும் பூ அல்சர் மற்றும் வயிற்று புண்களை குணமாக்கும்..

பூவில் சாறு எடுத்து, கருப்பு மிளகு மற்றும் சர்க்கரை சேர்த்து பாம்பு விஷத்தை போக்க கொடுக்கபடுகிறது.

குளிர், காய்ச்சல் மற்றும் இருமல் தீர பயன்படுத்தபடுகிறது. ஆஸ்துமா நோயை குணமாக்குகிறது.

தலைமுடி நன்கு வளர உதவுகிறது. தோல் நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

அரப்பு மரம்

அறிவியல் பெயர் : Albizia Amara

வேறு பெயர்கள் : உசிலை மரம் , கருவாகை, ஊஞ்ச மரம் , சீக்கிரி மரம், துரிஞ்சில் மரம்

குளியலுக்காகவும், கேசப் பராமரிப்புக்காகவும் இயற்கை செய்து கொடுத்துள்ள அற்புத ஏற்பாடுதான், ‘உசிலை மரம்’ என்று அழைக்கப்படும் ‘அரப்பு மரம்’. இந்த மரத்தின் இலைகளைக் குளியலுக்காக மனிதர்கள் பயன்படுத்திய காலத்தில், இத்தனை வழுக்கை மனிதர்கள் இருந்ததில்லை. 


நாகரிகம் என்ற பெயரில் அனைத்துப் பொருள்களிலும் நுழைந்து மனித வாழ்வையே மருத்துவத்துக்குள் முடக்கி வைத்திருக்கும் ரசாயனங்கள், நம் மண்ணை மட்டுமல்ல; தலையையும் வழுக்கையாக்கி வைத்திருக்கின்றன. தற்போது ஷாம்பூ போடாமல் யாரும் குளியலை நிறைவு செய்வதில்லை.


இயற்கை ஷாம்பான அரப்பும், சீகைக்காயும் இருந்த இடத்தில் கார்ப்பரேட் கம்பெனிகளின் பொருள்கள் கம்பீரமாக அமர்ந்திருக்கின்றன. ‘அரப்பு, சீகைக்காய்த் தேய்த்துக் குளிப்பது, மனித இனத்துக்கே ஒவ்வாத செயல்’ என்ற நாகரிக மனநிலைதான் இதற்குக் காரணம்.

சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்து, சீகைக்காய்த் தூள், அரப்புத்தூள் போட்டு முடியை அலசிவிட்டுத் தலையைத் துவட்டினால் உடல் குளிர்ந்து ஜிலுஜிலுவெனப் புத்துணர்ச்சி தோன்றும். கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்கு முன்பு அனைவரும் கடைப்பிடித்த பழக்கம்தான் இது. 


குளியலறைக்குள் சோப்பும் ஷாம்பும் நுழைந்த பிறகு, சனி நீராடுவது என்பதே வழக்கொழிந்துவிட்டது. தீபாவளி பண்டிகையின்போது மட்டும் சிலர் எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறார்கள். எண்ணெய்க் குளியலை மறந்த பிறகு, உடல் சூடு அதிகமாகிவிட்டது. ரசாயன ஷாம்பூகளால் முடி உதிர்தல் உள்பட பல இன்னல்களுக்கு ஆளாகிவருகிறோம்.

அரப்பு, நம் மண்ணுக்கே உரிய அற்புதமான மரமாகும். வேறெந்த மரங்களும் வளராத இடங்களிலும் அரப்பு வளரும். கடுமையான வறட்சியையும் தாங்கி வளரும் தன்மை வாய்ந்தது.

ஆண்டுக்கு 600 மில்லிமீட்டர் மழையளவே உள்ள பகுதிகளிலும்கூட இது வளரும். நடுத்தரமான உயரம் கொண்ட இந்த மரம், அதிக கிளைகளுடன் அடர்ந்து வளர்வதால் நிழல் தரக்கூடிய மரமாகவும் விளங்குகிறது. அதோடு, காற்றுத் தடுப்பானாகவும், மண் அரிமானத்தைத் தடுக்கும் மரமாகவும் பயன்படுகிறது. இம்மரத்தின் கிளைகளை விறகாகப் பயன்படுத்தலாம்.

அரப்பு, மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், கால்நடைகளுக்குத் தீவனமாகவும் பயன்படுகிறது. இதன் இலைகள் சிறந்த தழைச்சத்து உரமாகவும் பயன்படும். இயற்கை விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அரப்பு மோர் கரைசல், இந்த மரத்தின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தக் கரைசலில் ஜிப்ராலிக் அமிலம் உள்ளது. 

இது சிறந்த வளர்ச்சி ஊக்கி என்பதால், இந்தக் கரைசல் தெளித்த பயிர்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பூக்கள் பிடிக்கும் சமயத்தில் இதைத் தெளித்தால், அதிகப் பூக்கள் பிடிக்கும். உசிலை மரங்கள், ஆப்பிரிக்க மணல் காடுகளில் அதிகளவு உள்ளன. 

இந்தியாவில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகள், கிழக்குத்தொடர்ச்சி மலைக் குன்றுகள் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சின்னச் சின்ன கரடுகள் உள்ள பகுதிகளில் இது அதிகளவில் தானாகவே வளர்ந்து காணப்படுகிறது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் இந்த மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. அதன் காரணமாகவே ‘உசிலம்பட்டி’ என்று அந்த ஊருக்குப் பெயர் உருவாகியதாகக் கூறுகிறார்கள். ஏப்ரல் மாதத்தில் இந்த மரத்தில் நிறைய இலைகள் இருக்கும். மே மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும்.


உசிலை மரத்தின் முற்றிய நெற்றுகள் காற்று மூலமாகப் பரவுகின்றன. அவை சென்று விழும் இடங்களில் விதைகள் முளைத்து மரமாகின்றன. இதை அதிகளவு பரப்ப நினைப்பவர்கள், கோடைக்காலங்களில் சாணத்தில் இதன் விதைகளை வைத்து, விதை உருண்டைகள் செய்து கரடுகளில், வேலி ஓரங்கள், தரிசு நிலங்களில் வீசி எறியலாம். உசிலை மரத்தின் முற்றிய நெற்றுகளைச் சேகரித்து, உலர்த்தி அடித்துத் தூற்றி எடுத்தால் விதைகள் கிடைக்கும். இந்த விதைகள் மூலம் நாற்று உற்பத்தி செய்தும் நடவு செய்யலாம். நாற்றாக நடும்போது, ஆறு மாத வயதான செடிகளைதான் நடவு செய்ய வேண்டும்.

அரப்பு மோர் கரைசல்:

உசிலை எனப்படும் அரப்பு மரத்தின் இலையை 2 கிலோ அளவுக்குப் பறித்துக் கொள்ள வேண்டும். இதை, நன்றாகத் தண்ணீர்விட்டு அரைத்து 5 லிட்டர் கரைசலாக மாற்றி, அத்துடன் 5 லிட்டர் புளித்த மோர் சேர்த்துக் கலக்கிக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஊற்றி வைத்து, ஒரு வாரம் புளிக்க விட வேண்டும். பிறகு, பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் கரைசலைச் சேர்த்துப் பயிர்களில் தெளிக்கலாம்.

அரப்புப் பொடி:

அரப்பு இலையை நிழலில் உலர்த்தி, தூசுகளை அகற்றிப் பொடியாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியை அப்படியே தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். ஆவாரம் பொடியுடன் அரப்புப் பொடியைச் சேர்த்துக் குளித்தால் பேன், பொடுகு பிரச்னை தீரும். இதன் இலை, பூக்கள் தீக்காயங்கள் மற்றும் புண்களைக் குணப்படுத்தப் பயன்படுகின்றன.

உள்ளி

பூண்டினை அடிக்கடி சாப்பிடுவது உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். பூண்டினை உணவில் சேர்த்துக் கொள்வது புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறுபட்ட நோய்களையும், ஆரோக்கிய குறைபாடுகளையும் தடுத்து, அவற்றை போக்க உதவுகிறது. மேற்கூறிய பழமொழிக்கு வேண்டுமானால் சான்றுகள் இல்லாமல் போகலாம்; ஆனால், பூண்டின் இம்மருத்துவ குணங்களுக்கு போதிய சான்றுகள் உள்ளன.


உணவில் பூண்டினை வறுத்தோ, நறுக்கியோ, நசுக்கியோ, அரைத்தோ, பாதியாகவோ அல்லது முழுதாகவோ சேர்த்தால், சுவை குறைந்த உணவும் கூட அட்டகாசமானதாகி விடும்; ஆகையால், பூண்டினால் ஏற்படும் சரும, ஆரோக்கிய, கூந்தல் நன்மைகள், பயன்கள் பற்றி படித்தறிந்து பயன்படுத்துங்கள்.

 

பூண்டின் மருத்துவ பண்புகள் – Medicinal Properties of Garlic in Tamil

பூண்டில் அல்லிசின், சல்ஃபர், ஜிங்க் மற்றும் கால்சியம் போன்ற அத்யாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன; இவை ஆன்டி பையாட்டிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்தி, ஆரோக்கிய நன்மைகளையும் அழகு நன்மைகளையும் வழங்குகின்றன. பூண்டினில் செலினியம் எனும் தாதுச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளது; இந்த செலினியம் சத்து புற்றுநோய்க்கு எதிராக போராடவும், வைட்டமின் சத்துடன் இணைந்து உடலின் ஆன்டி ஆக்சிடென்ட் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இரத்தத்தை மெலிதாக்க உதவும் சாலிசிகேட் சத்து பூண்டில் அடங்கியுள்ளது; இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதய சுற்றோட்ட ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது.

இன்றைய நாட்களில், பூண்டின் மருத்துவ மூலிகை குணம், மேலும் மேலும் வளர்ந்து கொண்டே தான் செல்கிறது; பரந்த அளவிலான ஆரோக்கிய குறைபாடுகளை, அதிக மற்றும் பயனுள்ள வகையில் சரி செய்ய பூண்டு உதவும் என பல ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் (1). உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பூண்டினை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் மற்றும் பூண்டினை ஒரு இயற்கை மருத்துவ பொருளாக பயன்படுத்தலாம் என பல பத்தாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கூறிச்சென்றுள்ளனர். இப்பொழுது, பூண்டு எத்துணை சக்தி வாய்ந்த ஒரு இயற்கை மூலிகை என்றும், அதனால் ஏற்படக்கூடிய பயன்கள் என்னென்ன என்றும் தெளிவாக பார்க்கலாம்.

 

பச்சை பூண்டை சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும்பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். எனவே அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள், தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.

இதய அடைப்பை நீக்கும், நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும், ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியை பெருக்கி, வீரியம் அதிகரிக்கச் செய்யும். பூண்டில் உள்ள ஈதர், நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றி விடும். தொண்டை சதையை நீக்கும்.

மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும். மாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்யும். நோய்க்கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும். மூட்டு வலியைப் போக்கும். வாயுப்பிடிப்பை நீக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

உள்நாக்கு வளர்தலுக்கு: வெள்ளை பூண்டை இஞ்சி சாறுவிட்டு அரைத்து கொஞ்சம் தேனும் கலந்து காலை, மாலை என இரண்டு வேளையும் உணவுக்கு முன், இரண்டு தேக்கரண்டி சாப்பிட்டு வரவும். இவ்விழுதை தொண்டையின் வெளியே பூசி வர வேண்டும்.

பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்தம் அதிகரிப்பது குறைந்து, இதய நோய் வருவது தடுக்கப்படும்.ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும்.

ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும். பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.

வயிற்றில் புழுக்கள் இருந்தால், அதனை வெளியேற்ற, தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, புழுக்களும் வெளியேறிவிடும்.

பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அதுவும் உடலில் கொப்புளங்கள் வருவது, உடலின் வெப்பநிலை அதிகரிப்பது, தலை வலி ஏற்படுவது போன்றவை இருந்தால், உடனே பூண்டை பச்சையாக சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

ஒரு நாளைக்கு 1-2 பல் பூண்டு சாப்பிடுவது நல்லது.ஆனால் இந்த பூண்டை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக மென்று சாப்பிட்டால், அதன் முழுமையான பலனையும் நாம் பெறலாம்.
மேலும் இந்த பூண்டானது, நமது உடம்பில் உள்ள ஆன்ஜியோடென்சின் என்னும் ஹார்மோன் உற்பத்தியைத் தடுத்து, ரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்கிறது.

 

உப்பிலாங் கொடி

தோட்டத்தில், சாலையோரம் உள்ள மரங்களில் படர்ந்திருக்கும் உப்பிலாங் கொடி, தடிமனான முட்டை வடிவில் இருக்கும். தமிழில், ‘உப்பிலிஎன்று  அழைக்கப்படும். உப்பு, உப்புசம் இல்லாத கொடி என்று இதற்கு பெயர் உண்டு. குழந்தைகளுக்கு மந்தம் இருக்கும்போது, குழந்தையின் இடுப்பை சுற்றி கட்டி வைப்பதால், உப்புசம் இல்லாமல் போகும்.


இது நோய் எதிர்ப்பு சக்திமிக்கது.

உடைத்தால் உடையக் கூடிய இந்த உப்பிலாங் கொடியில் நீர்சத்து அதிகம். குழந்தைகளுக்கு ஏற்படும் மந்தத்தை போக்கும். உப்பிலாங் கொடியை வதக்கி பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் சாற்றில், காய்ச்சிய பசும்பால் ஒரு ஸ்பூன் சேர்க்க வேண்டும். அதனுடன் கற்கண்டு பொடி சேர்க்கவும். ஒரு ஸ்பூன் அளவுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் குழந்தைக்கு கொடுத்துவந்தால் மந்தத்தினால் ஏற்படும் கழிசல், உப்புசம் சரியாகும்.

உப்பிலாங் கொடி இலை, ஒரு சிட்டிகை சுக்குப்பொடி, கொஞ்சம் பெருங்காயப் பொடி சேர்த்து வதக்கி கொதிக்க வைக்க வேண்டும். இதை சாப்பிட்டால் உப்பினால் ஏற்படும் கை, கால்களில் வீக்கம், உடல் சோர்வு சரியாகும். சாலையோரம் கிடைக்கும் உப்பிலாங்கொடியை சேகரித்து வைத்து கொண்டு அதை பயன்படுத்தலாம். கொடியை உலர்த்தி வைத்துக் கொள்ளலாம். உப்பிலாங்கொடி நுண் கிருமிகளை அழிக்க கூடியது.

பூஞ்சை காளான் போக்கவல்லது. சீழ் பிடிக்காமல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். வயிற்றுப்போக்கை சரிசெய்யும் மருந்துகள் பெரும்பாலும் பக்கவிளைவை ஏற்படுத்த கூடியவை. ஆனால் இதில் பக்கவிளைவு கிடையாது. வயிற்றுப்போக்கை சரி செய்யும், உடல் வலியை போக்கும் தன்மை கொண்டதுஉப்பிலாங்கொடி இலையுடன் பெருங்காயம், சுக்கு சேர்த்து தேனீராக்கி இனிப்பு சேர்த்து குடித்தால் கை கால் வலி, வீக்கம், உடல் சோர்வு சரியாகும். மூட்டுவலி குறையும். அதிகளவிலான உடல்சோர்வு, காய்ச்சலுக்கு இது நல்ல மருந்து.

மூட்டுவலிக்கு மேல்பத்தாகவும் இதை பயன்படுத்தலாம். விளக்கெண்ணெய்யுடன் இலையை வதக்கி வலி, வீக்கம் இருக்கும் இடத்தில் கட்டி வைத்தால் வலி சரியாகும்.கால் ஆணி, மருக்களை போக்கும் தன்மை கொண்டது. உப்பிலாங் கொடி இலைசாறு, சம அளவு நல்லெண்ணை, மஞ்சள் பொடி சேர்த்து தைலபதத்தில் காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும். இதை பாட்டிலில் வைத்துகொண்டு கால் ஆணி, மருக்கள் உள்ள இடங்களில் பூசலாம். தோலின் மேல் பகுதியில் ஏற்படும் தொல்லைகள், மருக்கள் ஆகியவற்றை சரிசெய்யும் உப்பிலாங்கொடி, வேர்க்குருவை போக்கும் தன்மை கொண்டது.

 

 

உடும்பு கறி

1.    சரும சூடு,

2.    துர்ப்பலம்,

3.    கண் பார்வை குறைபாடு,

4.    காது நோய்,


5.    மூலம்,

6.    வெட்டைம் தலைநோய்,

7.    சோம்பல்,

8.    பிரமேகம்,

9.    விரணம்,

10.   குஷ்டம்,

11.   மங்கு,

12.   சீதபேதி,

13.   இரத்தபேதி,

14.   குடல்வாதம்,

15.   காமத்தை பெருக்கும்

16.   பேதி இவைகள் குணமாகும்

உடும்பு கறி பயன்படுத்தும் முறை.

உடும்பு இருதயம்

உடும்பு இருதயத்தை முறைப்படி சமைத்து உண்ண மார்புத் துடிப்பு குணமாகும்.

உடும்பு இரத்தம்

உடும்பு இரத்தத்தை பிடித்து வைத்து அதில் நெய்யில் பொரித்து எடுத்து வெங்காரத்தை கலந்து நன்றாக பிசைந்து முகத்தில் தோன்றும் கருப்பு படைகளான மங்குவிற்க்கு தடவிவர அந்நிறம் மாறும்.

உடும்பு பலன்கள்

நெடுநாள் வியாதியால் அவதியுற்று உடல் பலிகீனம் ஆனவர்கள் உடும்புகறி பாகப்படி சமைத்து உண்ணலாம் அல்லது லேகியத்தில் ஒருபாக மாக சேர்த்து உண்ண அதிக சக்தியை கொடுக்கும். நெடுநாள் இழந்த உடல் ஆரோக்கியம் புத்துயிர் பெறும். அத்தோடு மேற்கூறிய நோய்கள் யாவும் கட்டுபடும்.

உடும்பு கொழுப்பு

உடும்பு உடலில் உள்ள கொழுப்பை தனியாக எடுத்து நெய்யை போல் உருக்கி வைத்துக் கொண்டு குறி மீது ரவியில் தடவி கொண்டு வர ஆண்மை மிகுதியாகும்.

உடும்பு தோல்

உடும்பு தோலை ஓட்டை இல்லாமல் பிரித்து எடுத்து உறை போல் தைத்து அதில் கொம்பு தேன் ஊற்றி இறுக கட்டி வைத்து விடவேண்டும். நோய்க்கு சித்த மருந்துகள் உண்ணும் காலத்தில் அணுபானமாக கொடுக்க நோய் விரைந்து குணமாகும்.

உடும்பு புழுக்கை

உடும்பின் புழுக்கைகளை ஒன்று சேர சோகரித்து சுத்து நீர் (மழை நீர்)விட்டு அரைத்து முகத்தில் பூசிவர கண்ணை சுற்றி தோன்றும் கருவளையம், கருப்பு, மங்கு, வெண்குட்டம் ஆகியன குணமாகும்.

உடும்பு எண்ணெய் பயன்

உடும்பில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் எந்த விலங்கிலும் இல்லதா மருத்துவ தன்மை நிறைந்து இருப்பதாக கருதப்படுகிறது. இந்த எண்ணெய் ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மை குறைபாட்டை சரி செய்யவும். கால் எலும்புகளில் ஏற்படும் சவ்வு தேய்மான பிரச்சனையை குணப்படுத்த பயன்படுகிறது.

உடும்பு எண்ணெய் ஆண்மை அதிகரிக்க

இரத்த ஓட்ட குறைப்பாட்டால் உண்டாகும் விரைப்பு இன்மை, போதிய எழுச்சி இன்மையை, அதிக சூட்டினால் உண்டாகும் துரித கலிதம் இவைகள் குணமாக இதன் எண்ணெய் பயன்படுத்த படுகிறது.

விரைப்பு தன்மை அதிகரிக்க

உடும்பு எண்ணெய் எடுத்து ஆண் குறியின் மீது தடவி வர அதில் உள்ள சத்துக்கள் தோல் வலியே ஊடுருவி சென்று குறிக்கு தேவையான இரத்து ஓட்டத்தை மேம்படுத்து நல்ல விரைப்பு தன்மை, எழுச்சியின்மையை குணமாக்குகிறது.

குறி பெரிதாக

உடும்பு எண்ணெய் லேபனமாக பயன் படுத்தும் போது இரத்த நாளங்களை விரிவடைய செய்து குறி பெரிதாக உதவுகிறது. உடும்பு எண்ணெய் தெடர்ந்து தடவி வர குறி மற்றும் விதை பையின் வெப்ப தன்மையை குறைத்து துரித கலிதம் ஏற்படு தடுத்து விந்துவை கெட்டி படுத்தும்.

உடும்பு எண்ணெய் எங்கு கிடைக்கும்.

உடும்பு எண்ணெய் வெளி நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது இதை வாங்க அதிக பேர் போட்டி போடுவதால் இதன் விலையும் சற்று கூடுதல் என்பதில் மாற்றம் இல்லை.

உடும்பு எண்ணெய் செய்வது எப்படி

உடும்பு உடலில் உள்ள கொழுப்பை எடுத்து உருக்கி அதில் சில மூலிகைகளை சேர்த்து தைல பதமாக காய்ச்சி பயன் படுத்தப்படுகிறது.

இந்திய அரசு தடை

உடும்பு இனம் அழிந்து வருவதால் அவ்வினத்தை பாதுகாக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. உடும்பு பிடிக்க, கொல்ல, உண்ண, அல்லது விற்பனை செய்ய தடை விதித்து உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். அரசின் விதி முறைகளை மீறி தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கி கொள்ளாதீர்கள்.

தேவைபடுபவர்கள் உரிய சட்ட வழி முறைகளின் படி வெளி நாடுகளில் இருந்து வாங்கி பயன்படுத்தலாம்.


ஊமத்தை

 

ஊமத்தை காரத்தன்மையும்,கைப்புச் சுவையும் கொண்ட தாவரம்; வாந்தி உண்டாக்கும்; இசிவைப் போக்கும்; உமிழ் நீரைக் கட்டுப்படுத்தும்; பசியைக்குறைக்கும்.ஊமத்தை தூக்கத்தைத் தூண்டும். வாத நோய்களைக் கட்டுப்படுத்தும்;நரம்புகளைப் பலப்படுத்தும். வெளிப் பூச்சுத் தைலங்களில் இது சேர்க்கப்படுகின்றது.


ஊமத்தை 1மீட்டர் வரை உயரமாக வளரும்செடி வகையைச் சார்ந்தது. அகன்ற பசுமையான இலைகள், நீள்வட்ட வடிவில் காணப்படும். வாயகன்று, நீண்ட குழலுள்ள புனல்போன்ற அமைப்பில் வெள்ளை நிறமான மலர்கள் காணப்படும்.ஊமத்தை காய் உருண்டையாகவும் பசுமையான முட்கள் அடர்ந்ததாகவும் இருக்கும். இலை, பூ, காய் விதை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

ஊமத்தை தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும், சாலை ஓரங்கள், தரிசு நிலங்களில் விளைகின்றது. உம்மத்தை, ஊமத்தான், வெள்ளுமத்தை, காட்டு ஊமத்தை ஆகிய பெயர்களும் உண்டு.மலைப்பாங்கான பகுதிகளில் வளரும் ஊமத்தை நீலநிறமான இதழ்களுடன் காணப்படுவதுண்டு (நீல ஊமத்தை/கரு ஊமத்தை).அரிதாக அடுக்கு இதழ்களால் ஆன மலர்களும் உண்டு (அடுக்கு ஊமத்தை).மருத்துவப் பயன் பொதுவாக அனைத்திற்கும் ஒன்றே ஆகும். பழங்கால இந்திய மருத்துவம் மற்றும் இலக்கிய நூல்களில் ஊமத்தை சிவசேகரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது; ஊமத்தை பூ சிவபெருமான் வழிபாட்டில் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

ஊமத்தை கெட்ட மணத்தையும், உட்கொண்டால் மயக்கத்தையும்,வெறியையும் கொடுக்கும் பண்பினைக் கொண்டுள்ளது. சாராயம் போன்ற போதைப் பொருட்களில் இது சேர்க்கப்படுகின்றது.
இலை அல்லது பூவை அல்லது இரண்டையுமே உலர்த்தி சுருட்டு போலச் செய்து புகை பிடிப்பது போல புகையை உள்ளிழுத்து வெளியிடுவதால் சுவாச காச நோய் குணமாகும். ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் இவ்வாறு செய்யலாம். தலைச்சுற்றல், வாய்க் குமட்டல் போன்றவை ஏற்பட்டால் உடனே மேற்கூறியவாறு செய்வதை நிறுத்திவிட வேண்டும். புண்கள், அழுகிய புண்கள் குணமாக லு லிட்டர் தேங்காய் எண்ணெயில் லு லிட்டர் ஊமத்தை இலைச் சாற்றைக் கலந்து அடுப்பில் நீர் வற்றும் வரை காய்ச்சி, குளிர்ந்த பின்னர், சீசாவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இதனைப் பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் வெளிப்பூச்சாக பயன்படுத்தி வரவேண்டும்.

ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கி ஒற்றமிடகீல்வாயு குணமாகும்.தேள், பூரான், வண்டு கடியால் ஏற்படும் வீக்கத்திற்கு ஊமத்தை இலையை அரைத்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்துப் பிசைந்து பற்றுப் போடலாம்.வீக்கம் கட்டிகள் கரைய, ஊமத்தை இலையை அரைத்து சம அளவு அரிசி மாவு சேர்த்து ஒரு விரல் கனத்திற்கு பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப் போட வேண்டும்.

பிஞ்சு ஊமத்தங்காயை உமிழ் நீர் சிறிதளவு சேர்த்து, அரைத்து, தலையில் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் வரை செய்து வர, தலைப்பேன்கள் குறையும். முடி வளரத் தொடங்கும். இது ஒரு பாரம்பரிய வைத்தியமாகும்.கரு ஊமத்தை மலைப் பகுதிகளிலுள்ள புறம் போக்கு நிலங்கள், பாழ் நிலங்களில் அரிதாகப் காணப்படுவதாகும். மிக அரிதாகச் சமவெளிப் பகுதியிலும் வளர்கின்றது.கரு ஊமத்தை பூக்கள் ஊதா நிறமானவை. பழங்கள் நீலம் படர்ந்தவை. குறு முட்களுடன் கூடியவை.

இது இதன் மருத்துவக் குணங்களுக்காகப் பயிர் செய்யப்படுகின்றது. இலை அல்லது பூவை அல்லது இரண்டையுமே உலர்த்தி சுருட்டு போலச் செய்து புகை பிடிப்பது போல புகையை உள்ளிழுத்து  வெளியிடுவதால் சுவாச காச நோய் குணமாகும். ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் இவ்வாறு செய்யலாம். தலைச்சுற்றல், வாய்க் குமட்டல்  போன்றவை ஏற்பட்டால் உடனே மேற்கூறியவாறு செய்வதை நிறுத்திவிட வேண்டும்.

 

ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கி ஒற்றமிடகீல்வாயு குணமாகும். தேள், பூரான், வண்டு கடியால் ஏற்படும் வீக்கத்திற்கு  ஊமத்தை இலையை அரைத்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்துப் பிசைந்து பற்றுப் போடலாம்.

 

வீக்கம் கட்டிகள் கரைய, ஊமத்தை இலையை அரைத்து சம அளவு அரிசி மாவு சேர்த்து ஒரு விரல் கனத்திற்கு பாதிக்கப்பட்ட இடத்தில்  பற்றுப் போட வேண்டும். பிஞ்சு ஊமத்தங்காயை உமிழ் நீர் சிறிதளவு சேர்த்து, அரைத்து, தலையில் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து  ஒரு மாதம் வரை செய்து வர, தலைப்பேன்கள் குறையும். முடி வளரத் தொடங்கும்.

 எருக்கன்எருக்கு

 

வேறு பெயர்கள் -: அருக்கன்.ஆள்மிரட்டி என்பன.

 

எருக்கன் செடி வகையைச் சேர்ந்ததுவறண்ட பிரதேசத்திலும் வளரும்.ஒரு ஆள் உயரத்திற்குக் கூட உயர்ந்து அடர்த்தியாக படர்ந்து வளரும்நிறைய கிளைகள் விட்டு நுனியில் கொத்துக் கொத்தாக மொட்டு விட்டு மலர்ந்து காய்க்கும்.


 

அடியிலை பழுத்து மஞ்சள் நிறமாக மாறி கீழே விழுந்து விடும்.எருக்கன் செடியின் நுனி முதல் அடிவேர் வரை பால் போன்று நீரோட்டமிருக்கும்எருக்கன் செடியின் எந்த பாகத்தை ஒடித்தாலும் பால் போல் வெளிப்படும்.சில துளிகள் வெளிவந்தவுடன் தானே நின்று விடும்.


இதன் இலை சாம்பல் நிறத்தில் இருக்கும். 3 செ.மீகனமும் 10 செ.மீநீளமும் சுமார் 5 - 6 செ .மீஅகலமும் முட்டை வடிவத்தில் இருக்கும்.
வெள்ளெருக்கனை மாந்தீரீக சம்பந்தமான காரியங்களுக்கும் பயன்படுத்துகின்றனர் .எல்லாமே மருத்துவ குணம் உடையனவெள்ளெருக்கன் வேர் அதிசயமாக சில வினாயகர் உருவில் இருப்பதுண்டு.வினாயகர்சிலை இந்த வேரில் செய்து வைத்து வழிபட்டால் சிறந்த பலன் உண்டு.

 வெள்ளை மலர்களையுடைய வெள்ளெருக்கு சிறந்தது. 

 

இலை நஞ்சு நீக்கல்வாந்தியுண்டாக்கல்பித்தம் பெருக்குதல்வீக்கம்கட்டிகளைக் கரைத்து வேதனை குறைத்தல் ஆகிய குணங்களை உடையதுபூபட்டை ஆகியவை கோழையகற்றுதல்பசியுண்டாக்களல்முறை நோய் நீக்குதல் ஆகிய பண்புகளை உடையது.

 


1. இலையை அரைத்துப் புன்னைக் காயளவு பாம்பு கடித்தவருக்கு உடனே கொடுக்க விஷம் நீங்கும்.

 

2. தேள் கடிக்குச் சுண்டைக்காயளவு கொடுத்து கடிவாயில் வைத்துக் கட்டலாம்.

 

3. இலைச்சாறு மூன்று துளி, 10 துளி த் தேனில் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.

 

4. 200 மி.லிஉலர்ந்த பூவின் போடி சிறிது சர்க்கரையுடன் 2 வேலை சாப்பிட்டு வர வெள்ளைபால்வினை நோய்தொழுநோய் ஆகியவை தீரும்.

 

5. வேரைக் கரியாக்கிப் பொடித்து விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்த கரப்பான்பால்வினை நோய்ப் புண்கள்ஆறாத காயங்கள் ஆகியவை தீரும்.


மலர் பூத்துப் பிஞ்சாகிகாயாகி கொத்தாக இருக்கும்சுமார் 7 - 9 செ.மீநீளத்துடன் 3 - 4 செ.மீகனமுள்ளதாக இருக்கும்நன்கு முற்றிய பின் வெடித்து பஞ்சாக மாறி காற்றில் பறந்து சென்று விழுந்த இடத்தில் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றதுதமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் தானே வளர்கிறது.

 

எருக்கம்பூவினால் செய்த மருந்து -சுவாசகுடாரி மாத்திரை -சளி ,இளைப்பு ,சுவாசம் போன்ற நோய்களை தீர்க்கும்.

 

இலைகள்​ : எருக்கன் செடியின் இலைகளை எரித்து,​​ அதன் புகையை முகர்ந்தால்,​​ வாய் வழியாகச் சுவாசித்தால்,​​மார்புச் சளி வெளியேறும்.​ ஆஸ்துமா,​​ இருமல் கட்டுப்படும்.
இதன் இலைகள்,​​ பூக்கள்,​​ வேர்,​​ பட்டைகள்,​​ எண்ணெய் அனைத்துமே நச்சுக் கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்தவை.

மொட்டுகள் : இதன் மொட்டுகள்,​​ சுக்கு,​​ ஓமம்,​​ கறுப்பு உப்பு ஆகியவற்றை மெல்லியதாகப் பொடியாக்கி,​​ சிறிதளவு தண்ணீர் கலந்து பட்டாணி அளவிற்கு மாத்திரைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.​ தினசரி இரண்டு மாத்திரைகள் வீதம் காலை,​​ மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் அஜீரணம்,​​பசியின்மை,​​ வாயு கோளாறு,​​ வயிறு உப்புசம் ஆகியவை கட்டுப்படும்.பூக்கள்​ காலரா,​​ வயிற்றுப் போக்கு,​​ வாந்தி,​​ குமட்டல் போன்றவற்றால் உடல் பலவீனம் அடைவதிலிருந்து காக்க இரண்டு எருக்கம் பூக்களை வாயில் போட்டு நன்றாக மெல்ல வேண்டும்.பால்​ : எருக்கம் பால் தலைப் பொடுகு,​​ படை,​​ மூட்டு வலிகள்,​​ மூட்டு வீக்கம்,​​ மூலநோய்க்கு மருந்தாகப் பயன்தருகிறது.

கிராமப்புறங்களில் காலில் முள் குத்தி ஒடிந்து உள்ளே இருந்தால் அந்த இடத்தில் எருக்கம் பாலைத் தடவுவர்இதனால் வலி குறைவதுடன் முள் குத்திய இடம் விரைவில் பழுத்துச் சீழ் வெளியே வரும்அத்துடன் முள்ளும் வந்துவிடும்குதிகாலில் வலி வந்தால்செங்கல்லைச் சூடாக்கி அதன்மீது பழுத்த எருக்கிலையை வைத்து அதன்மேல் சூடு தாங்கும் அளவுக்குக் குதிகாலை வைத்து எடுத்தால் வலி குணமாகும்உடம்பில் கட்டிகள் தோன்றி உடையாமல் வேதனை கொடுத்தால் எருக்கு இலையை நெருப்பில் வாட்டிதாங்கும் சூட்டுடன் கட்டியின் மீது வைத்துக் கட்டினால் கட்டி உடையும்எருக்கஞ் செடியின் குச்சியைகருப்பைக்குள் செலுத்துவது கொடூரமான கருச்சிதைவு முறைகளில் ஒன்றாக உள்ளது. 

வெள்ளெருக்கம்பூ Bronchitis, asthma ஆகியவற்றுக்குச் சிறந்தது. 

தேவ மூலிகை அல்லது விருட்சம் என்று கூறப்படும் வெள்ளெருக்கு அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதுபுதையல்ரத்தினங்கள்சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடம் ஆகிய இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நூல்களில் கூறப்பட்டுள்ளதுஆனால் குப்பை மேடுகளிலும்தரிசு நிலங்களிலும் காணப்படும் எருக்கன் செடியை விஷ செடி என்று நாம் ஒதுக்கி விடுகிறோம்எருக்கன் செடியில் பூக்கும் பூக்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டுள்ளனவிஷக்கடிக்கு மருந்தாக பயன்படும் இந்த பூக்கள் சிறுநீரக கோளாறுகளை மூன்று நாட்களில் குணமடையும்.

ஆஸ்துமா குணமடையும்
வெண்மை நிற எருக்கன் பூக்கள் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகும்வெண்ணிற எருக்கன் பூக்களை அவற்றில் உள்ள நடு நரம்புகளை நீக்கிவிட்டு வெள்ளை இதழ்களை மட்டும் எடுத்து அதனுடன் சம அளவு மிளகுகிராம்புசேர்த்து மை போல அரைத்து கிடைத்த விழுதை மிளகு அளவு மாத்திரைகளாக உருட்டிநிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தி கொள்ளவும்இதனால் இரைப்பு நோய் அதிகரிக்கும் சமயம் ஒரு உருண்டை சாப்பிட்டு நீர் அருந்த உடனே தணியும்.

10 
கிராம் இஞ்சி,3வெள்ளெருக்கன் பூ,6 மிளகு இவற்றை நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி தினம் இருவேளை பருகி வர இரைப்பு குணமாகிவிடும்.

வாதவலி வீக்கம் 

எருக்கன் பூவை தேவையான அளவு எடுத்து வதக்கி வீக்கம்கட்டிகள் மீது வைத்துக்கட்ட வீக்கம்கட்டி குறையும்ஆறாத புண்கள் இருந்தால் எருக்கன் பூக்களை உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு அந்த பொடியை புண்களின் மீது மருந்தாக போட்டு வர சீக்கிரத்தில் புண்கள் ஆறிவிடும்.

பாம்பு கடி விஷமருந்து 

நல்ல பாம்பு கடித்து விட்டால் உடனே எருக்கன் பூ மொட்டு 5 எடுத்து அதனை வெற்றிலையில் வைத்து நன்றாக மென்று சாப்பிட சொல்ல வேண்டும்இதனால் விஷம் இறங்கிவிடும்இதன்பின்னர் மருந்துவரிடம் சென்று சிகிச்சை அளிக்கவேண்டும்.

மருத்துவப் பயன்கள்.

இதன் பால் தீ போல சுடும்பட்ட இடம் புண்ணாகும்புழுக்களைக் கொல்லும்விஷக்கடிகளை குணமாக்கும்பயிர்களுக்கு எதிர்ப் பாற்றலைத் தரும்.இலை நஞ்சு நீக்கல் வாந்தியுண்டாக்குதல் பித்தம் பெருக்குதல் வீக்கம் கட்டிகளைக் கரைத்து வேதனை குறைதல் ஆகிய குணங்களை உடையதுபூபட்டைஆகியவை கோழையகற்றுதல் பசியுண்டாக்குதல்முறை நோய் நீக்குதல் ஆகிய பண்புகளையுடையது.


பாம்பு - தேள் கடி -: இதன் இலையை அரைத்து 5 கிராம் அளவு பாலில் சாப்பிடவும்அரைத்து கடிவாயில் கட்டவும்விஷம் இறங்கும்எலிக் கடிக்குக் கொடுக்கலாம்.


குதிங்கால் வலி - :பழுத்த இலையை குதிங்கால் வீக்கத்தின் மீது வைத்துசுட்ட செங்கல்லை அதன் மீது வைத்துஒத்தடம் கொடுத்துவர குணமடையும்.


மலக்கட்டு - 20 மி.லிசிற்றாமணக்ககு எண்ணெயில் 3 - 5 துளி எருக்கன் பால் விட்டுக் கொடுக்க மலர்ச்சிக்கல் தீரும்.


வயிற்றுப் பூச்சி -: சிறு குழந்தைகளுக்கு வயிற்றில் கீரிப்பூச்சிகொக்கிப் புழு இருந்து கொண்டு வயிற்று வலியை உண்டாக்கும். 5 கிராம் தேனில் 3 துளி இதன் இலைச் சாறு விட்டு மத்தித்துக் கொடுக்க புழுக்கள் வெளியேறும்.


காது நோய் - : எருக்கன் இலைச் சாறு 50 மி.லி.கலந்து வைக்கவும்இதில் வசம்புபெருங்காயம்இலவங்கம்பூண்டு வகைக்கு 5 கிராம் அளவு போட்டு காய்ச்சி வடித்து வைக்கவும்இதனைச் சொட்டு மருந்தாகக்காதில் விட காதில் சீழ் வடிதல்குருதி கசிதல்காதில் எழுச்சியினால் வரும் வலி ஆகியன குணமாகும்.


குட்டநோய் -: இதன் இலையும்வேர் பட்டையும் சம அளவில் உலர்த்திய பொடி 2-3 கிராம் ஆளவு பசு எண்ணெயில் கலந்து நாளும் இரு வேளை 48-96 நாள் சாப்பிட குட்ட நோய் குணமாகும்யானைக்கால் வியாதியும் குணமாகும்உப்பில்லாமல பத்தியம் இருத்தல் வேண்டும்.புளி காரம் எதுவும் கூடாதுதயிர் பால் மோரில்தான் சாப்பிடவேண்டும்இப்பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து புண்ணுக்குத் தடவ குணமடையும்.


காக்கை வலிப்பு -: எருக்கன் இலையில் வெட்டுக்கிளி எச்சமிட்டிருக்கும்அத்துடன் இலையை எடுத்து உலர்த்திய பொடி 30 கிராம்மிளகுத்தூள் 30 கிராம்உந்தாமணி இலைத்தூள் 30 கிராம் சேர்த்து வைக்கவும்இந்த சூரணத்தை மூக்கில் நசியமிட பொடி போடுவது போல் உறிஞ்ச காக்கை வலிப்பு வராது.

பல்வலி -: எருக்கன் பூ 100 கிராம் , உப்பு 10 கிராம் சேர்த்து அரைத்து வடைபோல் தட்டி உலர்த்தி புடமிட்டு சாம்பலாக்கி அரைத்தால் சிறந்த பற்பொடி கிடைக்கும்இதில் பல் துலக்கினால் பல்சொத்தைபுழுபல்லரணைபல் கூச்சம் யாவும் குணமடையும்.


ஆஸ்த்துமா -: வெள்ளெருக்கன் பூ 100 கிராம்மிளகு 50 கிராம்இலவங்கம்குங்கும்ப்பூகோரோசனை வகைக்கு 10 கிராம் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாகச் செய்து உலர்த்தி வைக்கவும்காலை,மாலை ஒரு மாத்திரை தேனில் சாப்பிட்டு வந்தால் 48-96 நாளில் ஆஸ்த்துமாஇழப்புஇரைப்புஇருமல்காசம்ஜன்னி குணமடையும்.


சிற்றின்பம் -: இதே மாத்திரை இரண்டையும், 5 கிராம் ஜாதிக்காய்த் தூளையும் பாலில் கலந்து தினமும் இரவில் சாப்பிட்டு வர சிற்றின்பம் பெருகும்.


வாதவலிவீக்கம் - : எருக்கம் பால் வாதக்கடிகளைக் கரைப்பதன்றி வாத நோய்சந்நிபாதம் ஐவகைவலி இவற்றைப் போக்கும்.


ஒரு தேக்கரண்டி அளவு நல்லெண்ணெயில் 7 துளி எருக்கம் பாலை விட்டு நன்றாய்க் குலுக்கி நாசிக்குள் 2-3 துளி விட அளவு கடந்த தும்மல் உண்டாகும்சிரசிலுண்டான நீரையெல்லாம் வெளிப்படுத்தும்காக்கை வலிக்குச் சிகிச்சை செய்யும் போது முதலில் இச்சிகிச்சை செய்வதினால் மூளையை அனுசரித்த சீதளத்தை அகற்றும் அந்தத் தும்மலை நிறுத்த வேண்டுமாயின் முகத்தில் சலத்தால் அடித்துக் குளிர்ந்த சலத்தைக் கொண்டு நாசியைச் சுத்தப் படுத்த வேண்டியது.


எருக்கன் பூவால் முறை சுரம் ,போகா நீர் பிநசம் சுவாசகாசம்கழுத்து நரம்பின் இசிவு ஆகியவை நீங்கும்.


எருக்கன் பூவிற்குச் சமனெடை மிளகு சேர்த்து மெழுகு வண்ணம் அரைத்து இரண்டு குன்றிப் பிரமாணம் மாத்திரைகள் செய்து நிழலில் உலர்த்திக் கொண்டு தினம் 2 வேளை ஒவ்வொரு மாத்திரை வீதம் கொடுத்துவர முரைசுரம் நீங்கும்.

பலம் ஆவின் நெய்யில் 10-12 எருக்கம் பூவைப்போட்டுக் காய்ச்சி வடித்தெடுத்து வேளைக்கு அரை அல்லது ஒரு தோலா வீதம் கொடுக்க சுவாச காசம்நீர்ப்பீநசம் போம். 

10 மில்லி விளக்கெண்ணெயில் 3  துளி எருக்கு இலைச்சாறு விட்டு சாப்பிட்டு ந்தால் மலச்சிக்கல் குறைந்து ம் இளகும். 

 குறிப்பு : எருக்கு மருந்து சிறுவர்களுக்கு ஆகாதுஏதேனும் வேதனை இருப்பின் நல்லெண்ணெய் முறிப்பாகும். 

எருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந்தது வெள்ளெருக்கு.நீல எருக்கு,ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன என சித்தவைத்தியர்கள் கூறுகின்றனர்.எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழையில்லாமல் இருந்தாலும் கூட,சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது.

 அதன் பருவகாலத்தில் பூத்து,காய்த்து,வளர்ந்துவிடும்.இதில் விஷேச அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு.இதை வீட்டிலும் வளர்க்கலாம்.இதன் பூவை வைத்து விநாயகருக்கும்,சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம்.வெள்ளெருக்கம் பூ சங்கை பஸ்மமாக்கப் பயன்படுகிறது.வெள்ளெருக்கு பட்டையை நூலுக்குப் பதில் விளக்குத்திரியாக போட்டு வீட்டில் எரிக்க சகல பூதங்களும் விலகி ஓடும்.வெள்ளெருக்கு வடவேரில் மணிமாலை செய்யலாம்.விநாயகர் செய்து வழிபடலாம்.ஆகர்ஷணம் எட்டு வகைப்படும்.இதில் தன ஆகர்ஷணம் பண வரவை அள்ளிக் கொடுக்கக் கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர்.

எலும்பு முறிவை குணமாக்கும் எலும்பொட்டி செடி!! 



 எலும்பொட்டி செடி வகையைச் சேர்ந்தது. இது வளமான மண்ணில் நன்கு வளரும். மிதமான சீதோஸ்ணம் போதுமானது. இது பற்றி பழங்காலத்தில் கிராமங்களில் எலும்பு முறிவை குணமாக்கும் என்று தெறிந்து வைத்து அதை இரகசியமாக வைத்திருந்தனர். இந்தச் செடி எப்போதும் பச்சையாக இருக்கும். இதன் தண்டுகள் முதிர்ந்தால் கெட்டியாகிவிடும்.

 பூக்கள் மஞ்சள் அல்லது வெண்மையாக இருக்கும். பூக்கள் வாடினால் பசை போன்று இருக்கும். இதில் கால்சியம் அதிகமாக இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் மாதத்தில் பூக்கும். மருத்துவப் பயன்கள் :– எலும்பொட்டி செடியில் கால்சியம் அதிகமாக இருப்பதை தற்போது கண்டறிந்துள்ளார்கள். அதை எலிகளுக்குக் கொடுத்து அதன் எலும்பு முறிவை விரைவில் குணமாவதைக் கண்டறிந்தார்கள்.

அந்தக் காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் இதன் இலையை நன்கு அரைத்து அதை அடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டி விரைவில் குணமாவதைக் கண்டறிந்தனர்.

 இதனால் இதற்குக் காரணப்பெயராக அமைந்தது. இதன் சமூலத்தில் சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீர் விட்டு நன்கு சுண்ட வைத்து அதன் ‘எக்ஸ்ட்ராக்’ எடுத்து வடிகட்டி, அதில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையில் கலந்து பாட்டிலில் வைத்துக் கொண்டு எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் இரு லேசான மூங்கில் தப்பையில் வெள்ளைத் துணிசுத்தி கட்டுப்போடுவார்கள்.

பின் அதன் மீது இந்த மருந்தை நனைத்துக் கொண்டிருப்பர். இப்படி செய்யும் போது ஒரு சில மாதங்களில் அடிபட்ட இடம் குணமடைந்து விடும். இது கேராளாவில் முட்டிகுளக்கரையில் செய்து வருகிறார்கள்.

பாம்பு கடிக்கு மருந்தாகும் கவிழ்தும்பை வேர்!! 


தும்பை (Leucas Aspera) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். தும்பை நாடெங்கும் வயல்வெளிகளில் தானே விளைந்து கிடக்கும் ஓர் அரிய மூலிகைத் தாவரமாகும். தும்பையில் பெருந்தும்பை, சிறுதும்பை,கருந்தும்பை, மலைத்தும்பை, கவிழ்தும்பை, காசித் தும்பை என்று பல வகைகளுண்டு. தும்பையை ஆயுர்வேதத்தில் இதனை துரோன புஸ்பி என்று சொல்வோம்.

 விஷம ஜூரம், பசி இன்மை, காமாலை என்னும் மஞ்சள் காமாலைக்கு பக்ஷாகாதம் என்னும் பக்கவாதத்திற்கு, சர்க்கரை நோய்க்கு, விஷ ரோகங்களுக்கு, மூல நோய்க்கும் நல்ல பலனை தரும். காரணம் தெரியாத அரிப்பு அதனுடன் மறைந்து விடும். தடிப்புக்கும் நல்ல பலனை தரும். மஞ்சள் காமாலைக்கு இந்த தும்பை பூவில் செய்யும் கண் மை நல்ல பலன் தரும்.


தும்பைப் பூவையும், பெருங்காயத்தையும் அரைத்து சுத்தமான எண்ணெயில் கலந்து காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு சொட்டு மருந்தாகக் காதிற்கு விட்டு வரக் காதில் சீழ்வடிதல் குணமாகும். தும்பை இலையை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூசினால் பூரான் கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும். பாம்புக்கடிகளுக்கும் தும்பையும் மிளகும் சேர்த்து முதலுதவியாக அளிக்கலாம்.

தும்பையிலைச் சாறு 25 மில்லியளவு பாம்பு தீண்டியவருக்குக் கொடுக்க இரண்டு மூன்று முறை பேதியாகும். கபத்துடன் வாந்தியாகும். குளிர்ந்த உடல் சூடு அடையும். புதுப்பானையில் பச்சரிசி, பாசிப்பயறு பொங்கி உப்பில்லாமல் சாப்பிட வேண்டும். 

ஒருநாள் முழுவதும் பாம்பு தீண்டியவரைத் தூங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் உப்பில்லாமல் பொங்கல் செய்து கொடுக்க நஞ்சு இறங்கும். மயங்கிய நிலையில் இருந்தால் சாற்றினை நசியமிடலாம். நசியத்தில் தெளியவில்லையென்றால் இறப்பது உறுதி. நச்சு முறிவில் தும்பை தனித்த ஒரு இடம் பெறுகிறது. 

தும்பை இலை, கீழா நெல்லி இலை இரண்டையும் சம அளவாக எடுத்து அரைத்துச் சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர மாதவிலக்கு ஒழுங்காக வராமல் இருப்பவர்களுக்கு முறையான மாதவிலக்கு ஏற்படும்.


  எலுமிச்சை

 

எலுமிச்சை மரம் இந்தியாவடக்கு பர்மாசீனா ஆகிய பகுதிகளிலேயே தோன்றியிருக்கலாம் என நம்பப்பட்டாலும்இதன் தோற்றம் பற்றிய சரியான தகவல்கள் தெரியவில்லைதெற்காசியாவிலும்தென்கிழக்காசியாவிலும்இது ஒரு தொற்றுநீக்கியாகப் பயன்பட்டு வந்ததுஅத்துடன் பல வகை நச்சுப் பொருட்களுக்கான நஞ்சு முறிப்பு மருந்தாகவும் பயன்பட்டது.


இது முதலில் பாரசீகத்துக்கும் அங்கிருந்து ஈராக் பின்னர் கிபி 700 அளவில் எகிப்துக்கும் அறிமுகமானதுஇது பற்றிய பதிவுகள் முதன் முதலில் கிபி பத்தாம் நூற்றாண்டின் வேளாண்மை தொடர்பான நூல்களில் காணப்படுகின்றனஇது தொடக்க கால இஸ்லாமியப் பூங்காக்களில் அழகூட்டல் தாவரங்களாகவும் பயன்பட்டனகிபி 1000க்கும் 1150க்கும் இடைப்பட்ட காலத்தில் இது அரபு உலகிலும்நடுநிலக்கடல் பகுதிகளிலும் இது பரவியிருந்தது.

 

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம்புளியங்குடி நகரில் தனியான எலுமிச்சைக்கான தினசரி சந்தை நடைபெறுகிறதுபுளியங்குடி அருகிலுள்ள புன்னையாபுரம் கிராமம் எலுமிச்சை விளைவிப்பதில் சிறந்த இடம் வகிக்கின்றதுஇப்பகுதி எலுமிச்சை பழத்தில் சாறு (நீர்ப்பதம்குறைவதற்கு மற்ற எலுமிச்சைகளைவிட அதிக நாட்களாகும் என்பதே இதன் சிறப்பாகும்.

எலுமிச்சை (lemon) புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப் பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத் தாவரம்இது சிட்ரஸ் லிமன் (Citrus limon) என்னும் அறிவியல் பெயர் கொண்டதுஇது தேசிக்காய் (lime), தோடம்பழம் ஆகியவற்றையும் உள்ளடக்கிய பூக்கும் தாவரக் குடும்பத்தை சேர்ந்ததுஇதன் பழம் பொதுவாக அதன் சாற்றுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது.எலுமிச்சை மருத்துவ குணம் கொண்டதுஎலுமிச்சைச் சாற்றை தண்ணீருடன் கலந்துவிருப்பத்துக்கேற்ப சீனி (சர்க்கரைஅல்லது உப்புடன் சேர்த்துப் பருகுவது உண்டுஇது சமையலில்உணவுகளுக்குச் சுவை சேர்ப்பதற்காகப் பயன்படுகிறது.

எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டுஇதனால் இது புளிப்புச் சுவை தருகிறதுஇதன் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும்இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப் பயன்படுத்துகிறார்கள்இதன் தனித்துவமான சுவை காரணமாக இதனை அடிப்படியாகக் கொண்டு பல வகையான பானங்களும்இனிப்பு வகைகளும் ஆக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

தினமும் எலுமிச்சைப் பழச்சாறு அருந்துவது தோலைப் பளபளப்பாக்கி உடலுக்கு நல்ல மெருகை அளிக்கிறதுதோலிலுள்ள சுருக்கங்களை மாற்றவும்கரும் புள்ளிகளை மறையச் செய்யவும் எலுமிச்சைப் பழச்சாறு பயன்படும்.

மொத்தத்தில் மேனி அழகிற்கு தேவையான ஒரு இயற்கை உணவாகவும் இதைக் கொள்ளலாம்.. குளிக்கும் போது எலுமிச்சை தோலை உடலில் தேய்த்து குளிக்கலாம் .உடம்பும் சுத்தமாகும் .கிருமிகளும் நீங்கும் . சந்தையில் எலுமிச்சைசோப்புகளும் ஷாம்புகளும் ஏராளம் உள்ளன .

குறைந்த விலையில் நிறைந்த பயனைத் தரக்கூடிய பழவகைகளில் ஈடு இணையற்றது எலுமிச்சைஆகும் . எலுமிச்சை, . பித்தத்தைப் போக்கும்தலைவலி தீர்க்கும்மலச்சிக்கல் விலக்கும்தொண்டை வலியைப் போக்கும்வாந்தியை நிறுத்தும்காலராக் கிருமிகளை ஒழிக்கும்பல் நோய் போக்கும்வாய் நாற்றம் போகும்சர்ம நோய்கள் விலகும்.

எலுமிச்சை தென்கிழக்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டதுஇமையமலை அடிவாரத்திலிருந்து பரவி மேற்குத் தொடர்ச்சி மலை வரை கடந்ததுஎலுமிச்சை முள்ளுள்ள சிறு மர வகுப்பைச் சார்ந்ததுசுமார் 15 அடிவரை வளரும்தமிகம் முழுதும் வீட்டுத்தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.

செம்மண்ணில் நன்கு வளரும்இதில் பலவகையுண்டு நாட்டு எலுமிச்சைகொடி எலுமிச்சை மலை எலுமிச்சை எனப் பலவகையுண்டுஎல்லாவற்றிக்கும் குணம் ஒன்று தான்எதிர் அடுக்கில் இலைகள் அமைந்திருக்கும்பூ விட்டுக் காய்கள் உருண்டை மற்றும் ஓவல் வடிவத்திலும் இருக்கும்முற்றினால் மஞ்சள் நிறத்தில் இருக்கும்எலுமிச்சையை அரச கனி என்பர்இதன் பயன்பாடு கருதியும் மஞ்சள் நிற மங்களம் கருதியும் இப்பெயர் வைத்தனர்கடவுளுக்கு மிக உகந்ததுவழிபாட்டில் வரவெற்பிலும் முதன்மை வகிப்பதுவிதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

 மருத்துவப்பயன்கள் :

 பொதுகுணமாக பித்தம் போக்கும்சித்தம் ஆக்கும்அறிவை வளர்க்கும்மந்திரம் செய்ய பில்லிசூனியம் எடுக்க பேய் விரட்டஇறையருள் கூட்ட ஏற்றதுவாந்திவிக்கல்வயிற்றோட்டம்ஆகியவற்றைக் குணமாக்கும்பைத்தியம் தெளிவிக்கும்சித்த மருந்துகளில் துணை மருந்தாகப் பயன்படும்பிற மருந்துகள் கெடமல் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும்அதிகமாகப் பயன்படுத்தினால் சுண்ணாம்புச் சத்தைக் கரைத்து எலும்பை ஆற்றல் இழக்க வைக்கும்விந்தை நீர்த்துப்கோக வைக்கும்இதன் சாறு டீயுடன் சேர்த்தால் தனி சுவையுண்டு.

 

பழச்சாறுகரிசலாங்கண்ணிச் சாறுபால் வகைக்கு அரைலிட்டர் ஒன்றரை லிட்டர் நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி வடித்துத் தலைமுடிக்குத் (6 மாதம்தடவி வர நரைக்காமல் நீண்டு அடர்ந்து வளரும்.

 பழச்சாற்றை கண்காதுவலிக்கு 2 துளிகள் விட்டுவரக் குணமாகும்.

 பழச்சாற்றில் சீரகத்தை ஊறவைத்து பின் காயவைத்துதேவையான போது சுவைத்து வரப் பித்த மயக்கம்குமட்டல்பித்தவாந்திநாவில் சுவையின்மைவயிற்றுப்போக்கு ஆகியவை தீரும்.

 நகச்சுற்றுக் விரலில் செருகி வைக்கப் பழுத்து உடையும்.

 வயிற்றோட்டம்வாந்திக்கு எலுமிச்சம்பழம் நல்ல மருந்தாகும்சர்கரைசேர்த்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் ஒரு கிராம் அளவு உப்பு சேர்த்து இருவேளை கொடுக்க வாந்திவயிற்றோட்டம் குணமாகும்வைரஸ் தொற்று இருந்தால் இது குணமளிக்காது.

 பிற கேடு தரும் மருந்துகளைச் சாப்பிட்டவர்களுக்கு 30 மி.லிசாறு 20 நாள் காலையில் கொடுக்க குணமடைவர்.

 இதன் சாறு 30 மி..லிஇந்துப்பு-15 கிராம்சீரகம் 5 கிராம் சேர்த்து நீரில் கலந்து 20 நாள் கொடுக்க பித்த நோய்வயிற்றுக்கோளாறுபக்க சூதக வாதம்கப நோய் குணமாகும்.

 

இதன் சாற்றை வாயிலிட்டுச் சுவைக்க பித்த மயக்கம்குமட்டல்பித்த வாந்திசூடு குணமாகும்.

 பற்பம் என்பது சுண்ணாம்பு சத்துடையதாம்எலும்புசுண்ணாம்பு இதன் சாற்றில் கரையும்சங்குபவளம்முத்து ஆகியன இச்சாற்றில் பற்பமாகும்.

 இலையைப்புளித்த மோருடன் ஊறவைத்து பழைய சோற்றில் ஊற்றி உப்பிட்டு காலையில் உண்டுவர உடல் வெப்பம் குறையும்பித்த சூடு தீரும் தழும்புகள் குணமாகும்.

 படைகருமையாகத் தடிப்பாகப் படர்தல்இச்சாற்றில் நிலாவரை வேரை இழைத்துப் பூசவேண்டும். 5-6 நாள் பூச குணமாகும்.

 வெறும் வயிற்றில் காலை 3-4 மண்டலம் இச்சாற்றைத் தேனுடன் அருந்த கற்பகுணம் உண்டுமூப்பு நீங்கும்நரைதிரை படராதுஆயுள் பெருகும்உடல் ஊட்டம் பெறும்ஆனால் புளிகாரம்புலால்புகை ஆகாது.

 எலுமிச்சம் பழச்சாறு அளவோடு மருந்தாகத்தான் பயன்படுத்த வேண்டும்நாளும் தவராது சாப்பிட்டால் உடல் எலும்புச் சத்தை இழந்து விடும்விந்து நீர்த்து விடும்தாது நட்டம் எற்படும்.

 இப்பழச்சாற்றைத் தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் சென்று குளிக்க வேண்டும்சீரகத்தை இச்சாற்றில் ஊறவைத்து உலர்த்திசூரணம் செய்து 5 கிராம் அளவு கொடுத்து வர 48 நாளில் பைத்தியம் குணமாகும்பிதற்றல் மயக்கம் தீரும்.

 குடற்புண்காச்சல்டைப்பாய்டு சுரம் எனப்படும்இதற்கு எலுமிச்சம் பழச்சாற்றில் பாலைக் கலந்தால் அது திரிந்து நீர்த்து விடும்இதனை வடிகட்டிக் கொடுக்கலாம்பிற மருந்துஊசி போட்டாலும் இதனை துணை மருந்தாகக் கொடுக்கலாம்.


ஏலக்காய்

ஏலக்காய் வாசனை பொருளாக பார்க்கப்படும் நிலையில், அதில் பல இயற்கை நன்மைகள் உள்ளனநன்மைகளை பற்றி இங்கு காண்போம்...




1 ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா நோயாளி களுக்கும் ஏற்றது. சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு உள்ளது.
2 வாகனங்களில் பயணிக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுபவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் இந்த தொல்லை ஏதும் ஏற்படாது.
3 ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
4 சூயிங்கம், ‌சிக்லெட், சாக்லேட் என எதையாவது வாயில் போட்டு அசை போடுவதால் ந்தப் பலனும் ல்லை. அதற்கு‌‌ப் திலாக ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடுவது நல்லது.
5 ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காய் கஷாயம் பருகவேண்டும்.
6 ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம்.
7 அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
8 சியே ற்படுவதில்லை, சாப்பிட ‌‌பிடிக்கவில்லை ன்று கூறுபவர்கள், ‌தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், சி எடுக்கும். ‌ஜீரண உறுப்புள்சீராக இயங்கும்.
9 நெஞ்சில் ளி ட்டிக் கொண்டு மூச்சுவிடசிரமப்படுபவர்களும், ளியால் இருமல் ந்து, அடிக்கடி இருமி யிற்றுவலி ந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் ல்ல மருந்தாக அமையும். நெஞ்சில் ளி ட்டிக் கொண்டு மூச்சுவிடசிரமப்படுபவர்களும், ளியால் இருமல் ந்து, அடிக்கடி இருமி யிற்றுவலி ந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் ல்ல மருந்தாக அமையும்.

ஏலக்காயை மென்று சாப்பி‌‌ட்டாலே தொடர் இருல் குறையும்

சியே ற்படுவதில்லை, சாப்பிட ‌‌பிடிக்கவில்லை ன்று கூறுபவர்கள், ‌தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், சி எடுக்கும்.  ‌ஜீரண உறுப்புள்சீராக இயங்கும்.

 வா‌‌ய் துர்நாற்றம் ‌‌ற்படுவதற்கும்ஜீரண றுப்புகளில் ற்படும்பிச்சினை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம். சாப்பிடும் உணவு வகைகளில்சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது ல்லது. திகமாக சேர்த்துக் கொள்ளக்  கூடாது

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

ஏலக்காயில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய்தான் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது.

 ஏலக்காயை தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்துப் பருகினால் இதில் உள்ள மனம் கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு  முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது.எனவே காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது  நல்லது.

ஏலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

 நெல்லிக்காய்ச் சாறில் ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளைச் சேர்த்துத் தினம் மூன்று வேளை அருந்தி வந்தால் மேகவெட்டை நோய்க்கு இது அருமருந்தாகும். இத்துடன் சிறுநீர்ப்பை சுழற்சியும் சிறுநீர்க் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலும் குணமாகும்.

 

அடிக்கடி விக்கல் எடுத்தால் ஒரு கப் தண்ணீரில் இரண்டு மூன்று ஏலக்காயைத் தட்டி உள்ளே போடவும். பிறகு புதினாக் கீரையில் 5, 6 இலைகள் மட்டும் இதில் போட்டுக் கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி அருந்தினால் விக்கல் எடுப்பது குறையும்.

 ஓரிதழ் தாமரை

 

ஆண்மை குறைவு மற்றும் குழந்தையின்மை பிரச்சனைக்கு உடனடி பலன் பெற இந்த இலையை யூஸ் பண்ணுங்க! 

ஓரிதழ் தாமரை ஆண்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.. இந்த ஓரிதழ் நிலப்பரப்புகளில் படர்ந்து காணப்படும். 


இது ஒரு மருத்துவ செடி என்பது பலருக்கு தெரியாதுஇது வயல்வெளி மற்றும் சதுப்பு நிலங்களில் வளரக்கூடிய இந்த மூலிகைக்கு ரத்தின புருஷ்’ என்ற வேறு பெயரும் உள்ளது. 

ஓரிதழ் தாமரையின் இலைதண்டுபூவேர்காய் மட்டுமன்றி முழுச் செடியுமே மருத்துவக்குணம் வாய்ந்தது. 

இது தாமரையை போல நீரில் எல்லாம் வளராது.. இது நிலத்தில் வளரக்கூடிய ஒரு செடிவகையாகும்இதன் பூ சிவந்த நிறமும் நடுவில் நாமம் போன்றும் காணப்படும்இந்த ஓரிதழ் தாமரை தன்னுள் எண்ணிலடங்காத மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.. 

தூக்கமின்மை இரவு பகல் பாராமலும் தூக்கத்தைத் தொலைத்து உழைப்பவர்களும்சரியாக உணவு உண்ணாமை போன்ற காரணங்களால் பலரது உடல்நிலை பாதிக்கப்படும்இதற்கு ஓரிதழ் தாமரை மருந்தாக பயன்படுகிறது. 

பருவ கோளாறுகள் இளம் வயதில் கட்டுக்கடங்காத பருவ உணர்ச்சி வெளிப்பாடுகளால் உடல்ரீதியாக அவர்கள் செய்யும் சில செயல்களால் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகும்இதனால் உடல் மெலிந்து காணப்படுவார்கள். 

இப்படிப்பட்டவர்களில் சிலர் திருமண வயதை எட்டும்போது அவர்களால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியாத ஒரு நிலை ஏற்படும்இப்படிப்பட்டவர்களுக்கு ஓரிதழ் தாமரை மூலிகை நல்ல பலன் தரும். 

மென்று சாப்பிடவும் ஓரிதழ்தாமரையின் இலையை அதிகாலையில் மென்று சாப்பிட்டுபால் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்இதேபோல்ஓரிதழ் தாமரையின் சமூலத்தையும் (வேர் முதல் பூ வரைஉண்டு வரலாம்இதனால் உங்களுக்கு நல்ல பலன் விரைவிலேயே கிடைக்கும். 

உடல் வலிமைக்கு ஏதாவது நோய்களால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து விடுபட்டவர்கள்உடலைத் தேற்ற ஓரிதழ்தாமரை சமூலத்தை உண்பதன்மூலம் நிவாரணம் பெறலாம்இதே சமூலத்தை கஷாயம் செய்து குடித்து வந்தால் விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறலாம். 

ஆஸ்துமா ஆஸ்துமா நோயாளிகளுக்கும் இந்த கஷாயம் நல்லதொரு மருந்தாகும்உடல் எடையை குறைக்க சிகிச்சை எடுப்பவர்கள் இதே கஷாயத்தை அருந்தி கைமேல் பலன் பெறலாம். 

கீழாநெல்லியுடன்… கீழாநெல்லியும் கூட ஒரு சிறந்த மருத்துவ குணம் நிறைந்த பொருளாகும்ஓரிதழ்தாமரையுடன் சம அளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து சிறு உருண்டையாக்கி தினமும் அதிகாலை சாப்பிட்டு வந்தாலும் மேலே சொன்ன பிரச்னைகள் அனைத்தும் தீரும். 

முதுமை தோற்றம் மாற உணவுசூழல்பொருளாதாரம் காரணமாக சில இளைஞர்கள் இளம்வயதிலேயே முதியவர்கள்போல காணப்படுவார்கள்அப்படிப்பட்டவர்கள் இதே ஓரிதழ் தாமரைகீழாநெல்லி உருண்டைகளைச் சாப்பிட்டு வந்தால் பலன் பெறலாம். 

பாலியல் கோளாறுகள் பாதுகாப்பற்ற உறவு கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்களை பாடாய்ப்படுத்தும் நோய்களில் ஒன்று மேகவெட்டை (பாலியல் நோய்). பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய்ப் பகுதிகளில் வரக்கூடிய இந்த மேகவெட்டை நோய்க்கு ஓரிதழ்தாமரை சமூலம் பலன் தரும். 

ஓரிதழ்தாமரை சமூலத்துடன் பச்சைக் கற்பூரம்கோரோஜனை (நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்சம அளவு எடுத்து அரைத்து அதனுடன் பசு நெய் சேர்த்து பாதிக்கப்பட்ட பகுதியில் பூசி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். 

ஆண்மை குறைபாடு ஆண்மைக்குறைபாடுகுழந்தையின்மை பிரச்னைதாம்பத்யத்தில் ஈடுபட இயலாமை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு இந்த ஓரிதழ்தாமரை பலனளிக்கும். 

இலைதண்டுவேர்பூகாய் என ஓரிதழ் தாமரையின் முழு சமூலத்தை நிழலில் உலர்த்திப் பொடி செய்து இரவு தூங்கச்செல்வதற்குமுன் பாலில் கலந்து சாப்பிட வேண்டும்இதைத் தொடர்ந்து ஒரு மண்டலம் செய்து வந்தால் உடனடி பலன் கிடைக்கும். 

ஆண்மை அதிகரிக்க இதே சமூலத்தை (வேர் முதல் பூ வரைஅரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து பசும்பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளை ஒழுக்குஅடி வயிறு வலி போன்றவை சரியாகும். 

சமூலத்தை 21 நாட்கள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு 50 மில்லி ஆட்டுப்பால் குடித்து வருவதன்மூலம் இழந்தை ஆண்மை சக்தி திரும்பக் கிடைக்கும்.

ஓரிதழ்தாமரையின் இலையை அதிகாலையில் மென்று சாப்பிட்டுபால் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்இதேபோல்ஓரிதழ் தாமரையின் சமூலத்தையும் (வேர் முதல் பூ வரைஉண்டு வரலாம் 

ஏதாவது நோய்களால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து விடுபட்டவர்கள்உடலைத் தேற்ற ஓரிதழ்தாமரை சமூலத்தை உண்பதன்மூலம் நிவாரணம் பெறலாம்இதே சமூலத்தை கஷாயம் செய்து குடித்து வந்தால் விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறலாம்

*ஆஸ்துமா நோயாளிகளுக்கும் இந்த கஷாயம் நல்லதொரு மருந்தாகும்உடல் எடையை குறைக்க சிகிச்சை எடுப்பவர்கள் இதே கஷாயத்தை அருந்தி கைமேல் பலன் பெறலாம்.

ஓரிதழ்தாமரையுடன் சமஅளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து சிறு உருண்டையாக்கி தினமும் அதிகாலை சாப்பிட்டு வந்தாலும் மேலே சொன்ன பிரச்னைகள் தீரும்

உணவுசூழல்பொருளாதாரம் காரணமாக சில இளைஞர்கள் இளம்வயதிலேயே முதியவர்கள்போல காணப்படுவார்கள்அப்படிப்பட்டவர்கள் இதே ஓரிதழ் தாமரைகீழாநெல்லி உருண்டைகளைச் சாப்பிட்டு வந்தால் பலன் பெறலாம்

பாதுகாப்பற்ற உறவு கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்களை பாடாய்ப்படுத்தும் நோய்களில் ஒன்று மேகவெட்டை (பாலியல் நோய்). பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய்ப் பகுதிகளில் வரக்கூடிய இந்த மேகவெட்டை நோய்க்கு ஓரிதழ்தாமரை சமூலம் பலன் தரும்

ஓரிதழ்தாமரை சமூலத்துடன் பச்சைக் கற்பூரம்கோரோஜனை (நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்சம அளவு எடுத்து அரைத்து அதனுடன் பசு நெய் சேர்த்து பாதிக்கப்பட்ட பகுதியில் பூசி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.


 மாதுளை

மாதுளை பழத்தின் 35 வகையான மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்:

மாதுளம் பழத்தின் ஒவ்வொரும் பகுதியும் எண்ணற்ற நன்மைகளை நமக்குத் தருகின்றன. அவை சரும அழகைக் கூட்டக்கூடிய பழமாகவும், கூந்தல் மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் வழங்கும் பழமாகவுக் இந்த மாதுளைப் பழம் விளங்குகிறது. இந்த 35 விதமான மருத்துவ குணங்களையும் பயன்களையும் கீழே காணலாம்.

மாதுளை: ‍சருமத்திற்கானப் பயன்கள்:


ஒரு ஆரோக்கியமான சருமம் என்பது அழகாக இருப்பது மட்டுமல்லாமல் தொற்றுநோய்க் காரணிகளை எதிர்த்துப் பாதுகாப்பு அடுக்கினை வழங்குவதும் ஆகும். மாதுளைப் பழமானதுஉயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்” (Antioxidants), நுண்ணுயிர் எதிர்ப்பு (Antimicrobial) மற்றும் அழற்சி எதிர்ப்புகளைக் (Anti-inflammatory) கொண்டிருப்பதனால் பிரகாசமான மற்றும் பொலிவான சருமத்தினை ஊக்குவிக்கிறது. பல ஒப்பனை மற்றும் தோல் பராமரிப்பு பொருட்களின் உற்பத்தியாளர்கள் இப்போது தங்கள் பொருட்களில் மாதுளைச் சாற்றினைச் சேர்த்து தயாரிக்கின்றனர். உலர் சருமம் வயதானப் பகுதிகள் மற்றும் உயர் நிறப்பிரிகை போன்ற சருமப் பிரச்சினைகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகத் தோல் பராமரிப்பு பொருட்களில் மாதுளைப் பழத்தின் சாறு சேர்க்கப்பட்டுள்ளது. மாதுளை பழச் சாறு அல்லது ஒரு நடுத்தர மாதுளையானது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை நிறைந்த அளவில் வழங்குகின்றன.

1. தோல் அழற்சி பிரச்சனையிலிருந்து விடுதலை:

மாதுளைப் பழம் தோல் அழற்சிக்காக மேற் கொள்ளப்படும் சிகிச்சையில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மாதுளையானது எந்தவொரு மருந்தகங்களிலும் கிடைக்கும் களிம்புகளை விடத் தோல் அழற்சிக்கு மேலான பயன்களைத் தருகிறது. பழத்தில் பாலிபினால்கள் மற்றும் பல சேர்மங்கள் உள்ளன. இவை சிறிய வெட்டுக்கள் மற்றும் காயங்களைக் குணப்படுத்த உதவுகின்றன. மாதுளைப் பழங்களை உட்கொள்ளுதல் அல்லது பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவாகக் குணமைடையச் செய்வதை உறுதிப்படுத்துவதற்காக மாதுளைப் பழத்தின் சாற்றினை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஏற்பட்ட காயங்கள் சிறிய வெட்டுக்களை மிக விரைவில் குணப்படுத்துகின்றன. எனவே தோல் அழற்சியினைக் குணப்படுத்துவதில் மாதுளைப் பழத்தின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது ஆகும்.

2. உலர் சரும பிரச்சனைக்குத் தீர்வு:

உலர் சருமத்தைக் கொண்டுள்ளப் பெண்களுக்கு மாதுளைப் பழம் ஒரு வரமாக் அமைகிறது. மாதுளைப் பழத்தின் விதைகள் ஒரு சிறு மூலக்கூறு அமைப்பினைக் கொண்டிருக்கின்றன. இத்தகைய மூலக்கூறு அமைப்பானது தோலில் ஊடுருவி எளிதில் ஆக்சிஜனேற்றம் அடைய வழிவகை செய்கிறது. எனவே இப்பழம் உலர்ந்த மற்றும் சீரற்ற தோலுக்கு அழகு சேர்க்கிறது. மேலும் சருமத்திலிருந்து ஈரப்பதம் வெளியேறுவதைத் தடுத்து ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

3. பாக்டீரியா எதிர்ப்பு:

மாதுளைப் பழத்தில் ப்யூனிசிக் அமிலம் (Punicic acid) உள்ளது. இந்த அமிலமானது பாக்டீரியாவைத் தொடர்ந்து நீக்கி விடும். மேலும் நாள் முழுவதும் ஈரமான மற்றும் ஆரோக்கியமான சருமம் இருபதை உறுதி செய்கிறது. இப்பழத்தில் பாக்டீரியா எதிர்ப்பு (Antibacterial) இருப்பதால் பாக்டீரியாவின் தொற்றிலிருந்து முழுமையாகச் சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது.

4. வயதான தோற்றத்திற்கான எதிர்ப்பு:

மாதுளை வயதான தோற்றத்திற்கானப் பண்புகளை, தோலின் உட்புறமும், வெளிப்புறமும் புத்துணர்ச்சி ஊட்டுவதின் மூலம் எதிர்க்கிறது. சூரிய ஒளியில் நமது உடலின் தொடர்ந்து வெளிப்படுவதன் காரணமாக ஏற்படும் வயதான தோற்றாத்திற்கான அறிகுறிகளைக் குறைப்பதன் மூலம் முன்கூட்டிய வயதான தோற்றத்திலிருந்து நம்மை நல்ல உணவுகள் பாதுகாக்கின்றன. எனவே மாதுளை சருமத்திற்கு அழகு சேர்க்கும் கொலஜனை பராமரிக்க உதவுகிறது


மேலும் நம்முடைய சருமத்தினை நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வைக்கிறது. கொலாஜன் என்பது சருமத்தின் நெகிழ்ச்சி மற்றும் நிலைத்தன்மையையும் பராமரிக்கும் அடிப்படைக்கூறு ஆகும். மாதுளைப் பழங்களில் சில கலைவைகல் உள்ளன. இக்கலவைகள் கொலாஜன் உடைக்கப்படுவதைத் தடுத்து தோலினை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது. மேலும் இந்த மாதுளம் பழத்தில் உள்ள கலவைகள் ஃபைப்ரோபிளஸ்ட்ஸ், எலாஸ்டின் மற்றும் கொலாஜனை உற்பத்தி செய்யும் செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது

இதன் மூலம் தோல் மென்மையாக மற்றும் மிருதுவாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது. எனவே தோலின் மீது மாதுளை எண்ணெய் தடுவுவதன் மூலம் சுருக்கங்கள் உருவாகுதல் மற்றும் விரைவில் முதுமையடைவதல் தொடர்பான அறிகுறிகளையும் குறைக்கிறது.

5. உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் அதிகமுள்ள பழம் மாதுளை பழம்:

உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் (Antioxidants) இயற்கையாகவே இலவச மூலக்கூறுகளின் விளைவுகளிலிருந்து பாதுகாக்கும் அனைத்துத் தாவரங்களிலும் காணப்படுகின்றன. இத்தகைய உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் உடலின் உள்ளிருந்து வேலை செய்கின்றன. மேலும் நாம் பயன்படுத்தப்படும் எந்த உலர்தன்மை நீக்கிகள் (Moisturizer) அல்லது சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கும் களிம்புகளை (Creams) விட மிகவும் பயனுள்ளதாக அமைகிறது

இலவச அடிப்படைக் கூறுகள் தோல் ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவைக் கொண்டிருக்கும் சாதாரன உயுரணுக்களின் செயல்பாடுகளைத் தடுக்கின்றன. மாதுளைப் பழங்களில் உள்ள அந்தொசியனின் (Anthocyanin) மற்றும் நீரோட்டங்கள் சருமத்திற்கு எதிரான அடிப்படைக் கூறுகளை எந்தவொரு அறையில் வளர்வதையும் தடுக்கின்றன. இதன்மூலம் சருமம் மென்மையாகவும் உறுதியாகவும் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் சருமத்தின் ஆரோக்கியமான செல்களை அழிப்பதிலிருந்து வயதாவற்கான அடிப்படை மூலக்கூறுகளைத் தடுக்கின்றன. மேலும் மாதுளைப் பழத்தில் உள்ள உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து சருமத்தினைப் பாதுகாக்கின்றன.

6. இயற்கையான முகத் தேய்ப்பான்:

முகத்தின் தோலிற்கு மாதுளைப் பழத்தினை முகத் தேப்பானாகக் (Facial Scrub) கூடப் பயன்படுத்தலாம். செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட முகத்தேய்பான்களை விட மாதுளம் பழத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட முகத் தேய்ப்பான் மிக நல்ல பயன்களைக் கொடுப்பதோடு எந்தவித பக்கவிளைவுகளையும் தருவதில்லை.

செய்முறை: ஒரு தேக்கரண்டி மாதுளைப் பழ விதைகள், பழுப்பு சர்க்கரை ஒரு தேக்கரண்டி, இரண்டு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி ஆனைக்கொய்யா எணணெய் (Avocado oil) பயன்படுத்தி முதக் தேப்பானை உருவாக்கலாம்.

இந்த முதக் தேய்ப்பானைத் தினமும் பயன்படுத்துவதன் மூலம் இறந்த செல்கள் நீக்கப்பட்டு சுத்தமான மற்றும் ஒளிரும் சருமத்தினை ஒரு சில நிமிடங்களில் பெறலாம். உடற்சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயைப் போக்குவதற்கு மாதுளம் பழத்தின் விதைகளை அரைத்து உடல் தேய்ப்பானாகப் (Body scrub) பயன்பத்தலாம்.  

7. சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு:

சூரியக் கதிர்களிலிருந்து வெளிப்படும் புற ஊதாபிகதிர்வீச்சு (Ultraviolet B) புகைப்பட வயதாகுதல் மற்றும் தோல் புற்றுநோய் போன்ற தோல் நிலைமைகளுக்கான முக்கியக் காரணம் என்று அறியப்படுகிறது. கடுமையான சூரியக் கதிர்களின் விளைவுகளை மாற்றியமைப்பதற்கு மாதுளைப் பழங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. மாதுளைப் பழம் சூரியனிலிருந்து பாதுகாக்கும் கலவைகளைக் கொண்டுள்ளது.

இதனால் சருமத்தின் தீவிரமான சேத்த்திலிருந்து பாதுகாக்கிறது. இவற்றில் எலியாகிக் அமிலம் (Ellagic acid), உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளான பாலிபினோல் (Polyphenol) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் மூலம் தோல் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கிறது. தோலி நிலைகளான் நிறமி மற்றும் வயதான இடங்கள் போன்றவற்றைத் தடுப்பதில் மாதுளை மிகுந்த பயனளிக்கிறது. மேலும் இது சூரியனால் ஏற்படும் எரிச்சல் மற்றும் சூரியனால் ஏற்படும் சேதத்திற்கான அறிகுறிகளையும் குறைக்கப் பயன்படுகிறது.

8. மாதுளை பழத்தின் மூலம் மென்மையான சருமம்:

மாதுளைப் பழத்தில் இரும்புச் சத்து அதிக அளவு செறிவுடையதாக‌ உள்ளது. எனவே இப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபினின் பகுதிப் பொருளாக இருப்பதால் ஆக்சிஜனின் போக்குவரத்திற்கு உதவுகிறது. ஆக்சிஜன் அனைத்து சரும உயிரணுக்களையும் சென்றடைவதினால் சருமம் மிகவும் புத்துணர்ச்சியுடனும், இளைமையாகவும் இருக்கச் செய்கிறது. மாதுளை பழச் சாற்றில் ஒரு பருத்திப் பந்தினை தோய்த்து முகம் முழுவதும் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதின் மூலம் தோலில் உள்ள கரும்புள்ளிகள் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் மாதுளைபழச்சாறு கரும்புள்ளிகளைக் கட்டுப்படுதுகிற மிகச் சிறந்த டோனர் (முக்ப்பூச்சு) (Facial Toner) ஆகச் செயல்படுகிறது.

9. காயங்களை ஆற்றுதல்:

மாதுளம் பழம் புண்கள் மற்றும் காயங்களைத் துரிதமாகக் குணப்படுத்துவதற்கு உதவுகிறது என்று பல ஆய்சு முடிவுகள் தெரிவிக்கின்றன. மாதுளையின் விதைகள் காயங்களைக் குணப்படுத்தும் மருத்துவ பண்புகள் சிறந்த அளவில் பெற்றுள்ளன. இத்தகைய குணப்படுத்தும் பண்புகள் சருமத்தின் வெளிப்புற அடுக்கினைப் பாதுகாக்கவும் மற்றும் உயிரணுக்களின் மருஉருவாக்கத்திலும் உதவி செய்கிறது. இவ்வாறு காயங்களின்போது இறந்த உயிரணுக்களுக்குப் பதிலாகப் புதிய உயிரணுக்கள் உருவாகுவதின் மூலம் காயங்கள் மற்றும் புண்கள் விரைவில் குணமடைகின்றன.

10) முகப்பரு பிரச்சினைக்குத் தீர்வு:

உடலில் உள்ள ஹார்மோன்களின் ஏற்றாத்தாழ்வின் காரணமாகத் தான் முகப்பரு ஏற்படுகின்றது. மாதுளைப் பழமானது முகப்பரு ஏற்படுவதன் மூலக்காரணத்தை அகற்றுவதன் மூலம் முகப்பருவினைக் குறைக்கிறது. மேலும் இப்பழம் உடலில் உள்ள செரிமானப் பிரச்சினைகளைச் சரிசெய்து இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது. சருமத்தில் உள்ள செபேசியஸ் சுரப்பியானது எண்ணெய் சுரப்பியான சீபம் என்ற பொருள் சுரப்பதற்குத் தேவையான வைட்டமின் சி, மாதுளைப் பழத்தில் அதிக அளவில் உள்ளது. மாதுளை வடுக்களின் தோற்றத்தைக் குறைப்பதற்காகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திசுக்களை உருவாக்குகிறது. நீங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாதுளை பழச்சாற்றினைத் தேய்ப்பதன் மூலம் முகப்படுக்களை அகற்றலாம்.

11) 15% துத்தநாகம் உள்ள பழம்:

மாதுளை துத்தநாகத்திற்கு (Zinc) ஒரு நல்ல ஆதாரமாக விளங்குகின்றது. இந்தத் துத்தநாகம் தோலின் ஆரொக்கியமான செயல்பாட்டிற்கு மிகவும் தேவைப்படுகிறது. துத்தநாகம் முதிர்ந்த தோல் திசு வளர்ச்சி மற்றும் காயத்தினைக் குணப்படுத்துதல் போன்றவற்றிற்கு உதவும் முன்னோடி உயிரணுக்கள் மற்றும் அடிப்படை உயிரணுக்களின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துகிறது. மேலும் துத்தநாகம், சருமத்தின் சேதத்திலிருந்துப் பாதுகாக்கும் ஒரு ஆக்சிஜனேற்ற எதிர்ப்பொருளை செயல்படுத்துவதற்கு உதவி செய்கிறது. ஒரு நடுத்தர அளவுள்ள மாதுளை 1.1 மில்லிகிராம் அல்லது தினசரி பரிந்துரைக்கப்படும் அளவுகளில் சுமார் 15 சதவீதம் துத்தநாகத்தினைக் கொண்டுள்ளது.

12) வைட்டமின்’:

சருமத்தின் ஆரோக்கியத்தைப் பரமரிக்கக்கூடிய ஊட்டச்சத்துகளில் மிகவும் பயனளிக்கக்கூடிய வைட்டமின்மாதுளைப் பழங்களில் அதிக அளவில் காணப்படுகிறது. ஒரு குவளை புதிய மாதுளைப் பழச்ச்சாற்றில் 1.8 மில்லிகிராம் அல்லது தினசரி பரிந்துரைக்கப்படும் மதிப்புகளில் 14 சதவீதம் வைட்டமின்யினைக் கொண்டுள்ளது.

13) செம்பு:

மாதுளை ஓரளவு செம்பினைக் கொண்டுள்ளது. செம்பானது (Copper) மெலனின் எனப்படும் தோல் நிறமியினை உற்பத்தி செய்வதற்குத் தேவையானக் கனிமங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மெலனின் எனப்படுவது ஒரு வகையான நிறமி ஆகும். இந்நிறமி தான் கண்கள், தோல் மற்றும் முடிகளுக்கு நிறத்தினைக் கொடுக்கிறது. மேலும் இது சருமத்திற்கு இயற்கையான சூரிய ஒளி பாதுகாப்பினை வழங்குகிறது. ஒரு குவளை மாதுளைப் பழச்சாறு செம்பு உட்கொள்ளுதலை ஏறத்தாழ 500 மைக்ரோ கிராம்கள் வரை ஊக்கபடுத்துகிறது. அல்லது தினசரி பரிந்துரைக்கப்படும் அளவுகளில் சுமார் 53 சதவீத்தினை அளிக்கிறது.

மாதுளையின் கூந்தலுக்கானப் பயன்கள்:

இந்த இனிமையான மாதுளை பழம் பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. மேலும் இப்பழம் உங்கள் முடிக்குப் பல வழிகளில் பயன்படுகிறது. மாதுளைப் பழம் முடிக்கு வழங்கும் நன்மைகள் சில பின்வருமாறு:

14) முடிவளர்ச்சி மற்றும் உறுதிக்கான வைட்டமின்கள்:

மாதுளைப்பழம் வைட்டமின்மற்றும் வைட்டமின்கேஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் முடிக்கு உகந்த ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளன. இவை முடி வளர்ச்சிக்கு மிகுந்த பயனளிக்கின்றன. வைட்டமின்கேமுடியின் வேர்க்கால்களை வலிமை அடையச் செய்கிறது. மேலும் வைட்டமின்உச்சந்தலையினை அதிக முடியினைத் தயாரிப்பதற்காக ஊக்குவிக்கிறது.

15) இள நரைக்குத் தீர்வு:

திசுக்களின் ஆக்சிஜனேற்றம் அடிக்கடி தடைபடுவது முன்கூட்டியே தலைமுடி சாம்பல் நிறமாவது அல்லது இளநரையை ஏற்படுத்துகிறது. மாதுளையில் உள்ள‌ உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் ஆக்சிஜனேற்றத்தைத் தூண்டுகிறது. இதனால் மாதுளை திசுக்களின் அரிப்பைத் தடுக்கிறது. மேலும் மாதுளம் பழம் இந்த ஆக்சிஜனேற்றத்தின் காரணமாக முன்கூட்டியே முடி சாம்பல் நிறமாவது அல்லது இளநரை ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கிறது.

16) பொடுகு மற்றும் பூஞ்சை தொல்லைக்குத் தீர்வு:

உச்சந்தலையிலிருந்து உலர் மற்றும் சீரற்ற துண்டுகளை உருவாக்கும் மாலசீசியா (Malassezia) எனப்படும் ஒரு வகைப் பூஞ்சையை ஏற்படுத்துகிறது. மாதுளைப் பழங்களில் உள்ள செலினியம் இந்தப் பூஞ்சையைக் கொல்ல உதவுகிறது. தலையில் உள்ளப் பொடுகினை அகற்றி முடி வளர்ச்சியைத் தூண்டுகிறாது. மேலும் தலையின் மேற்பகுதியில் உள்ள குப்பைப் போன்றப் பொருட்களை அகற்றுவதற்கும் உதவுகிறது.

17) அழற்சி மற்றும் வலுக்கைத் தலைக்குத் தீர்வு:

மாதுளையில் உள்ள மெக்னீசியம் தலையில் ஏற்படும் அழற்சியினைத் தடுக்கிறது. மேலும் உச்சந்தலையில் ஏற்படும் நிலைமைகளானப் பொடுகு, எக்ஸ்மோ மற்றும் சோரியாசிஸ் போன்றவற்றிற்கு மெக்னீசியம் ஒரு சிகிச்சைப் பொருளாக அமைகிறது. மேலும் மாதுளையில் உள்ள மெக்னீசியம் வளர்சிதை மாற்ற நோய்த்தாக்கத்தினை மேம்படுத்துவற்கு உதவுகிறது. மேலும் இது மனிதர்களுக்கு முன்கூட்டியே தலையில் வழுக்கை ஏற்படுவதனைத் தடுக்கிறது. கடுமையான முடி உதிர்வதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று மன அழுத்தம் ஆகும். மாதுளையில் மெக்னீசியம் எனப்படும் ஒரு கனிமத்தைக் கொண்டுள்ளது. இக்கனிமம் உடலின் கார்டிசோல் அளவினைக் குறைக்கப் பயன்படுகிறது.

18) துத்தநாகம் ஊட்டச்சத்து கிடைக்கிறது:

மாதுளையில் துத்தநாகம் எனப்படும் ஒரு ஊட்டச்சத்து உள்ளது. இவை உச்சந்தலையில் சீபம் என்றப் பொருளிற்கான உற்பத்தியில் தேவையான ஒன்றாக உள்ளது. மேலும் துத்தநாகம் உச்சந்தலையின் உயிரணுக்களை மீளுருவாக்கம் அடைவதை ஊக்குவிக்கிறது. முடிக்கற்றை மற்றும் முடியின் வேர் நீரேற்றமடைவதற்கு உதவி செய்கிறது.

19) வைட்டமின்சிபயன்:

மாதுளைப் பழத்தில் உள்ள வைட்டமின்சிமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவி செய்கிறது. மேலும் உச்சந்தலைக்கு ஊட்டமளிப்பதன் மூலம் முடியின் இயற்கையான நிறத்தினைப் பாதுகாக்க உதவுகிறது. முடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகக் கொலாஜன் என்று அழைக்கப்படும் இணைப்புத் திசுக்களின் ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது. மேலும் வைட்டமின்சிமுடி உதிர்தல், முடி பலவீனமாதல் அல்லது மெலிதாகுவதற்குக் காரணமான அடிப்படைக் கூறினை முற்றிலும் அழிக்கிறது.

20) இரும்புச் சத்து:

முடியின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்குத் தேவைப்படும் ஊட்டச்சத்தினை இரும்புச்சத்து மாதுளையில் அதிக அளவில் உள்ளன. முடிக்குத் தேவையான அளவு இரும்புச்சத்துக் கிடைக்கவில்லை என்றால் முடியானது வலுவிழந்து முடி இழப்பு ஏற்படுகிறது. இரும்புச்சத்துக் குறைபாடு பெரிய அளவில் ஏற்படுவதன் மூலம் தலைமுடியில் மந்தமான மற்றும் உயிரற்றா நிலை ஏற்படலாம். இதனால் கடுமையான முடி இழப்பு ஏற்படலாம். உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தினை அதிகரிப்பதன் மூலம், இரும்புச்சத்து முடி வளர்ச்சியினை அதிகரிக்கிறது.

21) முடி நுண்குமிழை வலிமைப்படுத்துகிறது:

மாதுளைப் பழத்தை உணவில் எடுத்துக் கொள்வது முடி நுண்குமிழை (Hair follicle) வலுவூட்டுவதற்குப் பயன்படுகிறது. மாதுளை விதை எண்ணெய் பீயூனிக் அமிலத்தைக் கொண்டுள்ளது. இதன்மூலம் முடி ஆரோக்கியமானதாகவும் வலுவானதாகவும் உள்ளது. மேலும் இது முடி வளர்ச்சியினை ஊக்குவிக்கிறது. உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தினை அதிகப்படுத்துகிறது.

மாதுளையின் உடல் ஆரோக்கியத்திற்கானப் பயன்கள்:

ஊட்டச்சத்து இயக்கங்களின் முன்னனியில் மாதுளை ஒருஅதிசயப்பழம்என்று அழைக்கப்படுகிறது. இப்பழமானது ஆரோக்கியமான மற்றும் உகந்த வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்களை உள்ளடக்கியது. மாதுளையின் மூலம் ஆரோக்கியத்திற்குக் கிடைக்கும் பலன்கள் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

22) நல்ல செரிமானம்:

செரிமானத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் என்சைம்களை உற்பத்தி செய்வதில் மாதுளை முக்கியப் பங்கினைக் கொண்டுள்ளது. மாதுளைப் பழச்ச்சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் அஜீரணம், தலைசுற்று களைப்பு மற்றும் சோரிவினைக் குணப்படுத்துகிறது. மேலும் இப்பழம் அதிகப்படியான அமிலத்தன்மைக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இப்பழத்தில் காரத்தன்மை நிறைந்துள்ளதால், அமிலத்தன்மையை சீராக்க உதவுகிறது. மாதுளைப் பழம் அல்லது மதுளம் பழச்சாற்றினை ஒரு நாளைக்கு ஒரு வேளை வீதம் ஒரு மாதத்திற்குச் சாப்பிட்டு வந்தால் நேர்மறையான முடிவுகளை எதிர்பார்க்கலாம்.

23) மூலம் நோய்க்கு இயற்கை மருந்து மாதுளம் பழம்:

மூல வியாதிக்கான சிகிச்சையில் மாதுளை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிச்சயமாகத் தினமும் காலையில் மாதுளைப் பழச்சாற்றுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துப் பருகி வர வேண்டும். இவ்வாறு மூன்று மாதங்களுக்குத் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் பழச்சாற்றில் உப்பிற்குப் பதிலாகத் தேனும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு எடுத்துக் கொள்ளுவதன் வழியாக மூல நோயின் தீவிரம் குறையலாம். உலர்ந்த மாதுளைப் பட்டையின் தூளினை ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொண்டு அதனுடன் மோர் கலந்து தடவுவதன் வழையாக மூல நோயினால் இரத்தப்போக்கு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. எனவே மூல நோயின் தீவிரத்தைக் குறைக்க மாதுளைப் பழத்தினை நாடுவதே நலம் பயக்கும்.

24) உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் மிகுதியாக உள்ள மாதுளை பழம்:

மாதுளைப் பழத்தின் நன்மைகளில் ஒன்று இந்தப் பழத்தில் உள்ள நம்பமுடியாத அளவில் காணப்படும் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் (Antioxidants) தான். மாதுளைப் பழமானது பச்சைத் தேநீர் அல்லது பசும் தேநீர் (Green tea) மற்றும் சிவப்புத் திராட்சை மதுவை (Red Wine) விட மூன்று மடங்கு உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளைக் கொண்டுள்ளது. இவற்றில் மூன்று வகையான பாலிபினால்களைக் கொண்டுள்ளது. அவை நோயெதிர்ப்பு மண்டல அமைப்புக்கு ஆதரவளிக்கக் கூடியதும் மேலும் பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கக் கூடியதுமான அந்தொசியனின் (Anthocyanin), எல்லாஜிக் அமிலம் (Ellagic acid), மற்றும் டானின் (Tannin) போன்றவையாகும். அதிக அளவு உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் மற்றும் பாலிபினால்கள் உடலில் நோய்கள் ஏற்படுத்துவதற்கான அடிப்படைக் கூறுகளைக் குறைக்கப் பயன்படுகிறது. எனவே மாதுளைப் பழத்தின் மூலம் எண்ணற்ற உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் மற்றும் பாலிபினால்கள் நம் உடலுக்கு நேரடியாகக் கிடைக்கின்றன.

25) நார்ச்சத்து அதிகம்:

மாதுளையான கரையத் தக்க மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுக்கு மிகப்பெரிய நிறைவான ஆதாரமாக உள்ளது. இவை மென்மையான செரிமானத்திற்கும் குடல் இயக்கங்களை எளிமையாக்குவதற்கும் உதவுகிறது. 100 கிராம் மாதுளை பழம் 4 கிராம் நார்ச்சத்தினை வழங்குகிறது. இப்பழத்தில் நிறைந்துள்ள நார்ச்சத்தின் காரணமாக எடை குறைப்புத் திட்டங்களில் ஊட்டச்சத்து நிபுணர்களால் இப்பழம் பரிந்துரைக்கப்படுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உங்கள் உடலைப் போதுமான அளவில் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. ஆரோக்கியமான நன்மைகளை அனுபவிப்பதற்கு ஒரு நாளைக்கு ஒரு குவளை மாதுளைப் பழச்சாறு அல்லது நடுத்தர அளவிலான மாதுளைப் பழத்தைச் சாப்பிட்டு வர வேண்டும்.

26) மார்பகப் புற்றுநோய்க்குத் தீர்வு:

மாதுளைப் பழத்தில் உயிர்வளி ஏற்ற எதிர்ப்பொருளான எல்லாஜிட்டனின் (Ellagitannin) உள்ளது. இந்த உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்குக் காரணமான ஈஸ்ட்ரோஜனைத் தடுக்கிறது. மேலும் ஈஸ்ட்ரோஜன் உருவாகுவதற்குப் பயன்படும் அரோமடேசைத் (Aromatase) தடுக்கிறது. இதன் மூலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபயாத்தைக் குறைக்கிறது.

27) கர்ப்பத்தில் உதவி:

மாதுளை பழமானது பொட்டாசியம், கால்சியம், வைட்டமின்சி’, ஃபோலேட், இரும்புச் சத்து மற்றும் நார்ச்சத்துப் போன்றவற்றிற்கு மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது. எனவே இப்பழம் கருவுற்றப் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், உயிரணுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மாதுளைப்பழம் பயன்படுகிறது. கர்ப்பகாலத்தின்போது பருகப்படும் மாதுளைச் சாறு தசைப்பிடிப்புகள் மற்றும் தூக்கத்தில் ஏற்படும் சிக்கல்களைக் குறைக்கப் பயன்படுகிறது. மேலும் மாதுளைப் பழமானது குழந்தையின் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் குழந்தைக்கு ஏற்படும் மூளை சேதத்தின் அபாயத்தைக் குறைப்பதாக அறியப்படுகிறது. எனவே கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் மாதுளை பழத்தை உண்பது தாய்க்கும் குழந்தைக்கும் நன்மை பயக்கும்.

28) இரத்த சோகையிலிருந்து விடுதலை:

மாதுளைப் பழங்களில் உள்ள அதிக அளவிலான இரும்புச்சத்துக்கள் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவினை அதிகரிக்கச் செய்து இரத்த சோகையினைக் குணப்படுத்துகிறது. வழக்கமான முறையில் மாதுளைப் பழங்களை உண்பது இரத்தக் குழாய்களில் இரத்த உறைக் கட்டிகள் உருவாகுவதைத் தடைசெய்கிறது. எனவே மாதுளைப் பழங்களை உண்டு இரத்தசோகையிலிருந்து விடுபடலாம்.

29) செரிமான மண்டலம்:

மாதுளை பழச்சாற்றில் செரிமானத்திற்கு உதவக்கூடிய, நுண்ணுயிர்ப் பண்புகள் கொண்ட என்சைம்கள் உள்ளன. மேலும் இப்பழம் மூலநோய், குமட்டல், வயிற்றுப் போக்கு மற்றும் குடல் புழுக்கள் ஆகியவற்றை எதிர்த்துப் போராட உதவுகிறாது. மாதுளைப் பழச்சாற்றினை அருந்துவதன் மூலம் மலச்சிக்கலைக் குணப்படுத்தலாம். மாதுளைப் பழத்தை உண்பதனால் செரிமான மண்டலம் வழுவடைகிறது.

30) புரோஸ்டேட் புற்றுநோய்:

மாதுளைப் பழஙக்ள் குறிப்பிட்ட புரோஸ்டேட் ஆன்டிஜென்களைக் குறைப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது. மாதுளைப் பழச்சாறு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. மற்றும் புற்றுநோய் செல்கள் பரவுவதற்கான ஆபத்தையும் குறைக்கிறது. மாதுளைச் சாற்றில் உள்ள உயர் பைட்டோகெமிக்கல் (Phytochemical) ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

31) பல் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வு:

குறிப்பிட்ட பல் நிலைமைகளின் சிகிச்சையில் மாதுளை சிறந்த பயனளிக்கிறது. மாதுளைப் பழச்சாற்றில் உள்ள அதிக அளவு பாலிபினோல் மற்றும் பிளவனாய்டுகள் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளுடன் கூடிய கலவையாக இருப்பதால் வாய் துர்நாற்றத்தினை நீக்குகிறது. மேலும் சிறந்த வாய் கழுவியாகப் (Mouthwash) பயன்படுகிறது. மாதுளைப் பழச்சாற்றினைத் தொடர்ந்து குடித்து வருவதனால் பல் தகடு (Dental Plaque) உருவாகுவது தடுக்கப்படுகிறது. மேலும் மாதுளைச் சாறு பாக்டீரியாவினால் பற்களில் ஏற்படும் துவாரங்கள் மற்றும் ஈறு அழற்சியினை குணப்படுத்த உதவுகிறது. எனவே மாதுளையையும், மாதுளைச் சாற்றினையும் தினமும் பருகி, வாய் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.

32) இதயக் குழலிய நோயிலிருந்து பாதுகாப்பு:

இதயக் குழலிய நோய் (Cardiovascular disease) அல்லது இதய நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குவதுதான் இந்த அற்புதமான மாதுளைப் பழத்தின் ஆரோக்கிய நன்மைகளில் மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். தினமும் ஒரு குவளை மாதுளைப் பழச்சாறு குடிப்பது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து இதயத்தின் பணிச்சுமையைக் குறைக்கிறது. மாதுளை இரத்தத்தை மெலிதாக்கி தமனிகளில் தகடு ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் பெருந்தமனி தடிப்பு (Atherosclerosis) ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது. மாதுளைப் பழச்சாறு அருந்துவதனால் உடலில் உள்ள குறையடர்த்தி லிப்போ புரதக் கொழுப்பின் (கெட்ட கொழுப்பு) அளவினை மிகையடர்த்தி லிப்போ புரதக் கொழுப்பினை (நல்ல கொழுப்பு) பாதிக்காத வகையில் குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மாதுளைச் சாறு மற்றும் விதைகள் சாப்பிடுவதனால் இதயத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது.

33) அல்சீமர் நோயின் எதிரி:

அல்சீமர் நோய் வளர்வதைத் தடுப்பதில் மாதுளை மிகுந்த பயனளிக்கிறது. ஒரு ஆய்வகத்தில் சில எலிகள் அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான மரபணுச் சோதனைக்கு உட்படுத்தப் பட்டன. பாதி எலிகளுக்கு மாதுளைப் பழச்சாறு வழக்கமான அளவில் வழங்கப்பட்டது. மீதி எலிகளுக்குச் சாதாரண உணவு வழங்கப்பட்டது. மாதுளைச் சாறு உணவாக அளிக்கப்பட்ட எலிகள் அல்சீமர் நோய்க்கு முக்கிய பங்களிப்பாளராகக் கருதப்படும் அமிலாய்டு பிளாக்கைக் குறைந்த அளவில் உருவாக்கி இருந்தனர். மேலும் இந்த எலிகள் மனநலப் பணிகளைச் செய்வதைல் மேம்பட்ட திறனுடனும் மனபுதிர்களுக்கு சிறப்பான முறையில் பதிலளிக்கவும் செய்கிறது.

34) எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:

ஆஸ்டியோபோரசிஸ் எனப்படும் எலும்புருக்கி நோயினால் பதிக்கப்பட்டவர்களுக்கு மாதுளை உதவி செய்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள் வெளியிடுகின்றன. மாதுளையில் உள்ள நொதிகள் குருத்தெலும்புகள் சேதமடைவதையும் இதனால் கீழ்வாதம் ஏற்படுவதையும் தடுக்கின்றன. மேலும் உடலில் உள்ள அழற்சியின் எதிர் விளைவுகளைத் தடுக்கிறது. இதனால் மாதுளைப் பழம் எலும்புப் புரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயன் அளிக்கிறது.

35) புற்றுநோயை விரட்டும் மாதுளம் பழம்:

மாதுளைப் பழமானது புரோஸ்டேட் தோல் மற்றும் மார்பகப் புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான புற்று நோய்களுக்கு உதவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மாதுளையில் உள்ள உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்கள், புற்றுநோய்க்குக் காரணமான அடிப்படைக் கூறுகளை அழிப்பதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கிறது.

மாதுளையின் வகைகள்:

கண்டதாரி, மஸ்கட் ரெட், தோல்கா, ஸ்பேனிஷ் ரூபி, பிடானா, ஆலந்தி, காபூல், மற்றும் வெள்ளோடு போன்றவை மதுளைப் பழ வகைகளின் பெயர்கள் ஆகும்.

இந்த ரகங்கள் அனைத்தும் தனக்கென்று ஒரு தனிப்பட்ட சுவையினையும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளன. மாதுளை பெனிகேஸஸ் குடிம்பத்தைச் சேர்ந்த பெர்ரி வைகையின் உறுப்பினராக உள்ளது. உணவு, சாறு, சுவை மற்றும் வண்ணம் போன்றவற்றிற்காகப் பயிரிடப்படும் மிகவும் பிரபலமானப் பழங்களில் மாதுளையும் ஒன்று. பொமேகிரனட் என்று அழைக்கப்படும் ஆங்கில வார்த்தையானது பிரெஞ்சு வார்த்தைகளானபொம்மே கர்னேட்டேஎன்பதிலிருந்து பெறப்பட்டதாகும். அதாவது இதற்கு விதையுள்ள ஆப்பிள் என்று பொருள்.


மாதுளைப் பழமானது கிமு 1600ல் எகிப்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு இப்பழத்தினை ஒரு முக்கிய உணவு ஆதாரமாக் மட்டுமில்லாமல் இதன் மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாதுளைப் பழம் ஓவியங்கள் மற்றும் எகிப்திய கல்லறைகள் ஆகியவற்றிலும் சித்தரிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு சித்தரிக்கப்படுபவை மரணத்திற்குப் பிறகு வாழ்க்கைக்கு அடையாளமாக இருந்து வருகிறது. நிறமுள்ள விதைகள் சில கலாச்சாரங்களில் கருவுறுதல், சுகாதாரம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மாதுளைப் பழம் பல கலாச்சாரங்களில் திருமண சடங்குகலில் பயன்படுத்தப்படுகிறது. சீனர்களின் குறியீட்டில் மாதுளையானது அதன் பிரகாசமான தோல் மற்றும் சுவையான விதைகளின் மூலம் கருவுறுதல் மற்றும் செழுமையின் சின்னமாக விளங்குகிறது.

ஒவ்வொரு மாதுளைப்பழமும் ஏறத்தாழ 840 விதைகளைக் கொண்டுள்ளன. மாதுளையின் உட்புற சவ்வுகள் மற்றும் தோல் பகுதிகள் அவற்றில் நிறைந்துள்ள அமைலத்தன்மையின் காரணமாக யாரும் உட்கொள்வதில்லை. ஆனால் மாதுளைப் பழத்தின் தோல் மற்றும் உட்புற சடைப்பகுதி தோல் பராமரிப்புப் பொருட்களின் முக்கிய மூலப் பொருளாக ஒப்பனை நிறுவனங்கள் பலவற்றில் பெரும்பாலும் பயன்படுத்தப் படுகின்றன

மாதுளைப் பழத்தின் உள்ளே வெள்ளையான பஞ்சு போன்ற சவ்வுகளால் பிரிக்கப்பட்டுள்ளன. பழத்தின் ஒவ்வொரு பிரிவும் இனிப்பான சாறு நிறைந்த உண்ணக்கூடிய இளஞ்சிவப்பு அரைகளுடன் நிரம்பியுள்ளது. மாதுளையின் சக்தியுள்ள விதைகள் மட்டுமல்லாது இலை, பழம், பட்டை, மற்றும் வேர் ஆகியவைக்கூட உண்ணக்கூடியதும் மற்றும் மருத்துவ நலன்களைக் கொண்டதாகவும் இருக்கின்றன.

மாதுளம் பூ

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்




மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்படுதல் நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். 

மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும். 

முள்ளி

அனைத்து ஏரிகுளங்களிலும் வளரும் ஒருவகைத் தண்ணீர்க் கொடியின் காய்களில் காணப்படும் பருப்பு ஆகும்இக்கொடியின் காய்களில் முட்கள் காணப்படுவதால்இது ‘முள்ளிக்காய்’ எனவும் அழைக்கப்படுகிறதுநீர்நிலை ஓரங்களில் பன்றிகள் இரைதேடும்போதுஇதன் கிழங்குகளை நுகர்ந்து பார்த்துவிட்டு முட்கள் இருப்பதால்உண்ணாமல் ஓடிவிடும்இதனால்இதற்கு ‘பன்னிமோந்தான் கிழங்கு’ என்ற பெயரும் உண்டுவடமாநிலங்களில் இக்கிழங்கு சிங்கடாப்பருப்புசிங்காரிசிம்காரா எனவும் சொல்லப்படுகிறது



இப்பருப்பின் மேல் ஓட்டுப் பகுதி பச்சையாக இருக்கும்போது மெல்லியதாகவும் முதிரும்போது கடினமாகவும் இருக்கும்இதன் இளந்தண்டை அரைத்துஉடலில் ஆங்காங்கே ஏற்படும் பாலுண்ணிமருகரணைக்கட்டிகள் மீது வைத்துக் கட்டிவர அவை தழும்பின்றி மறையும்இதன் காய்களை உப்பிட்டு வேகவைத்துமேற்தோலை நீக்கி உண்டால் மிகுந்த சுவையாய் இருக்கும்உடற்சூடும் குறையும்



இதன் உலர்ந்த காய்களை மேல் ஓட்டை நீக்கிப் பருப்பை எடுத்து மாவாக அரைத்து வைத்துக்கொண்டுஅரை முதல் ஒரு தேக்கரண்டி பசும்பாலில் கலந்து சர்க்கரை சேர்த்து உண்டுவரஉடல் செழுமை அடைவதுடன் விந்துவும் பெருகும்இப்பக்குவத்தை வடநாட்டில் வாழும் ‘ஜைனர்கள்’ அதிகமாக எடுத்துக்கொள்கின்றனர்அவர்களின் விரத நாள்களில் விரதத்தைத் துறக்கும்போதுஇப்பருப்பு மாவைப் பசும்பாலுடன் கலந்து உண்கின்றனர்.

 முடவாட்டுக்கால்

 

முடவாட்டுக்கால் கிழங்கு பயன்கள்: முடக்கு வாதம் , மூட்டு வாதம் , சர்க்கரை நோய் , வயிற்றுப் புழு , காய்ச்சல் , மனசோர்வு , வீக்கம் , சிறுநீர் எரிச்சல் , நீர் கோர்வை , கொழுப்பை குறைக்கும் , தோல் நோய் குணமாகும். முடவாட்டுக்கால் சைவ ஆட்டுக்கால் சூப் என்று அழைக்கிறார்கள்.


முடவன் ஆட்டுக்கால் தான் முடவாட்டுக்கால் என்றழைக்கப்படுகீறது. இது தாவரத்தின் கிழங்கு ஆகும். மலைப்பகுதிகளில் மட்டும் விளையக்கூடியது. மலைக்காடுகளில் உள்ள பாறைகள், மரங்களின் மீது மட்டுமே வளரக்கூடியது.

இது கொல்லிமலையிலும் சேர்வராயன் மலையிலும் கிடைக்கிறது. இந்த முடவாட்டுக்கால் கிழங்குங்கு வேர்கள் கிடையாது. பாறைகளில் விளையக்கூடிய இவை செம்பு, தங்கம், இரும்பு, கால்சியம் மற்றும் பாறைகளில் இருக்கும் சிலிக்காவை உறிஞ்சும் தன்மை கொண்டது.

சித்தர்கள் வாதம், பித்தம், கபம் என்னும் நோயை விரட்டை இதை ஒரு மண்டலம் வீதம் சாப்பிட்டு வர வேண்டும் என்கிறார்கள். ஒரு கிலோ கிழங்கு 300 ருபாய்க்கு கிடைக்கும் இதை ஆறுமாதங்கள் வரை பக்குவமாக வைத்திருந்து பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் முடவாட்டுக்கால் சூப் செய்முறை குறித்து பார்க்கலாம். தேவை
முடவாட்டுக்கால் - 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 5 டீஸ்பூன்
மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன் ( தேவையெனில்)
தேங்காய்த்துருவல் - 3 டீஸ்பூன் ( தேவையெனில்)
சின்ன வெங்காயம் - பொடியாக நறுக்கியது அரை கப்
தக்காளி - பொடியாக நறுக்கியது அரை கப்
இலவங்கப்பட்டை - சிறு துண்டு
பூண்டு - 3 பல்
உப்பு, மிளகுத்தூள், நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப

பகலிலும் நட்சத்திரம் தெரியும் கண்பார்வைக்கு சித்தர்கள் சொன்ன பஞ்ச கல்பம் பொடி, தயாரிப்பும் பயன்களும்!

செய்முறை:

முடவாட்டுக்கால் ஆட்டுக்கால் போன்று இருக்கும். இதை நன்றாக கழுவி மேல் தோலில் இருக்கும் ரோமங்களையும் அதன் புறணியையும் நீக்கி சுத்தம் செய்யவும். பிறகு சிறு துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.

இஞ்சி, பூண்டு, கசகசா, தேங்காய்த்துருவல் அனைத்தையும் சேர்த்து மைய அரைக்கவும். சின்ன வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு இலவங்கப்பட்டை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு சாம்பார் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும். இவை வதங்கியதும் முடவாட்டுக்கால், அரைத்த மசாலா சேர்த்து ஒரு லிட்டர் நீர்விட்டு கொதிக்க விடவும். இது 20 நிமிடங்கள் வரை கொதிக்க வேண்டும். பிறகு இறக்கி பூண்டு தட்டி போட்டு இதை சூப் போல் டம்ளரில் விட்டு உப்பு, மிளகுத்தூள் தூவி குடிக்கவும். தொடர்ந்து 10 முதல் 15 நாட்கள் வரை தினமும் ஒரு டம்ளர் வீதம் குடித்துவந்தால் முடக்குவாதம், மூட்டுவலி பலன் கிடைக்கும்.


எலும்புக்கு நன்மைகள்

குழந்தைகளுக்கு வாதம் தாக்கினால் இந்த கிழங்கு போட்டு கொதிக்க வைத்த நீரில் குளிக்க வைத்தால் வாத நோய் குணமாகும். கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி போன்றவற்றை குணப்படுத்தும்.

இதன் பெயரே சொல்லும் நோய் தீர்க்கும் தன்மையை . முடவன் ஆட்டும் கால் என்பதாகும். முடக்குவாதம் வந்து முடங்கியவர்கள் இந்த சூப் குடித்துவந்தால் முடக்குவாதம் குணமாகும்.

முடவாட்டுக்கால் மூலிகையைப் பதப்படுத்தி மருந்தாகச் செய்யத் தெரியாத வர்கள் இதை சூப் செய்து சாப்பிடலாம். முடவாட்டுக்கால் மேல்தோலைச் சீவி பொடிப் பொடியாக நறுக்கிச் சிறிது மஞ்சள் பொடியும் உப்பும் போட்டு வேகவைத்து பிறகு வடிகட்டி அந்த மூலிகைச் சாறை (சூப்பாக) தினசரி இரண்டு வேளை குடித்து வந்தால் அனைத்து நோய்களும் நீங்கிவிடும். ராஜ உருப்புகள் பலப்பட்டு ஆயுள் விருத்தியாகும். 
இந்த முடவாட்டுக்கால் மூலிகையை குறுக்கில் கால் இஞ்சு அளவிற்கு சிறு துண்டு வெட்டி தோலை சீவி நசுக்கி சிதைத்து தக்காளி மற்றும்புளி சேர்க்காமல் மிளகு,சீரகம்,பூண்டு,சின்னவெங்காயம்,கறிவேப்பிலை,சோம்பு,இஞ்சி,பட்டை,,கிராம்பு கசகசாதேங்காய் துருவல் மற்றும் ஆட்டுக்கால் சூப்பிற்கு சேர்க்கும் பொருட்களை சேர்த்து லேசாக எண்ணெய் விட்டு வதக்க வேண்டும்.

 

பின்பு இதை லிட்டர் நீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்துபின் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்சூப்பாக இதை தினம் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் தொடர்ந்து குடித்துவரகடுமையான முழங்கால் வலிகுதிகால் வலிமுழங்கால் சவ்வு பலவீனம்தசை பிறழ்சி ஆகியன நீங்கும். குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல்உடல் முழுவதும் தோன்றும் வலிஅசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்.

 

சிகப்பு தண்டு கொடிபசலை

 

பசலைக்கீரையில் பல ரகங்கள் உண்டு..குத்துசெடி, கொடிவகை, தரைபசலை..அதிலும் கொடி வகையில் சிகப்பு, பச்சை என இரண்டு ரகங்கள் உள்ளதுசிகப்பு தண்டு கொடிபசலை கீரை சிகப்பு நிறத்தில் தண்டு இலை இதய வடிவில் காணப்படும்இதை ஒடித்து வைத்தாலேயே நன்கு வளர்ந்து விடும்..விதைகள் மூலமும் வளரும்..விதைகள் சிகப்பு நிறத்தில் மிளகு போல இருக்கும்இந்த கீரையில் என்னற்ற மருத்துவ குணங்கள் உள்ளது

கொடி பசலைக் கீரையை நீரில் போட்டு அலசினால் கொழகொழப்பான திரவம் கிடைக்கும். இதை தலை அல்லது நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும். நல்ல தூக்கமும் வரும்.

கொடி பசலைக் கீரைச் சாறு எடுத்து அவற்றில் பாதாம் பருப்பை ஊறவைத்து ஊலர்த்திப் பொடியாக்கி , பசும் பாலில் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டு வந்தால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கொடி பசலைக் கீரைச் சாறு  ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதில் சிறிது கற்கண்டு சேர்த்துக் கொடுத்தால்  குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு குணமாகும்.

கொடி பசலைக் கீரையுடன் விளக்கெண்ணெய் , மஞ்சள் சேர்த்து வதக்கிக் கட்டினால், வீக்கம், கட்டிகள் போன்றவை கரையும்.

கொடி பசலைக் கீரை, கொத்தமல்லி விதை , சீரகம் மூன்றையும் கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

கொடி பசலைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால்  தீராத தாகமும் தீரும்.

கொடி பசலைக் கீரையை உளுந்து ஊறவைத்த தண்ணீர் சேர்த்து அரைத்துக் குடித்து வந்தால் , உடல் சூடு , வெட்டைச் சூடு , வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.

 

நொச்சி இலை

புதர்செடியாகவும், சிறிய மரமாகவும் வளரும் இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை மற்றும் முழுத்தாவரமும் பயன்படுபவை. கிராமப்புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது நொச்சித்தழைகளை உடன் வைத்து விடுவர். இது பூச்சிகள் தோன்றுவதை தடுக்கும்.

உடல் உறுப்புகளின் செயலியல் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரி செய்ய வல்லது. பால்வினை நோய்களை குணப்படுத்துகிறது. நோய்க்கிருமிகளை ஒழிக்க வல்லது. மேல்பூச்சாக பெரிதும் பயன்படுகிறது. வீக்கம் மற்றும் மூட்டுவலி போக்க உதவும். மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர். காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும். நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாறு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது. இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற வல்லது.

நொச்சி இலையோட வெல்லம் சேத்து கசாயம் செஞ்சு குடிச்சு வந்தா உடல் சூடு தணிஞ்சு, உடல் பலம் பெருகும். 1/2 ஸ்பூன் நொச்சி இலைச் சாறோட 1/2 ஸ்பூன் தேன் கலந்து குடிச்சு வந்தா காய்ச்சல் தீரும். கொஞ்சம் நொச்சி, மிளகு, பூண்டு, இலவங்கம் எல்லாம் சேத்து மென்னு தின்னா இரைப்பு நோய் தீவிரம் குறையும்

சக்கிரவர்த்தி

 

சக்கிரவர்த்தி என்னால் அரசன் காப்பவன் என்று பொருள்..உடலின் நோய்களிருந்து காப்பதால் சக்கரவர்த்தி கீரை என்றழைக்கப்படுகிறது.

சக்கரவர்த்தி கீரையில் இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. நார்சத்து மிகுந்த இக்கீரை சரிவிகித  உணவாகிறது.

ரத்த சோகை சரியாவதுடன், மலச்சிக்கல் மறைகிறது. வயிற்றுப் புண்ணை சரி செய்யும் தன்மை சக்கரவர்த்தி கீரைக்கு உண்டு. புற்றுநோயை  தடுக்கவல்ல இந்த கீரை, எலும்பை பலமடைய செய்கிறது.

சிறுநீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. சக்கரவர்த்தி கீரையை பயன்படுத்தி ரத்த சோகை, மாதவிலக்கு கோளாறுக்கான மருந்து  தயாரிக்கலாம்

ஒரு கைப்பிடி சக்கரவர்த்தி கீரை இலையை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு சுக்குப்பொடி, ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து நீர்விட்டு  நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடிப்பதன் மூலம், ரத்தசோகை குணமாகும். மாதவிலக்கு கோளாறு சரியாகும்.

சக்கரவர்த்தி கீரையின் இலையை அரைத்து பசையாக்கி மேல்பூச்சாக பூசலாம். இவ்வாறு செய்தால் வெயிலால் ஏற்படும் தோல் சுருக்கங்கள் மறையும். சிராய்ப்பு காயங்கள் ஆறும்.சக்கரவர்த்தி கீரையை பயன்படுத்தி மூட்டுவலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் உடன் சக்கரவர்த்தி கீரையை சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். இளஞ்சூட்டுடன் மூட்டுவலி உள்ள  இடத்தில் சக்கரவர்த்தி கீரையை கட்டி வைத்தால் வலி குறையும். வலி இருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுக்கலாம். அவ்வாறு செய்தால்  வலி மறையும்.

சிறுநீரக கற்கள், தொற்றுக்களை போக்க கூடியதும், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியதும், வயிற்று புண்ணை குணமாக்க கூடியதும்ரத்த சோகையை சரிசெய்ய கூடியது.

புண்ணாக்கு கீரை

நாம் சாப்பிடும் உணவுகளில் கீரை வகைகள் எப்போதுமே நமக்கு நன்மைகளை தருவதாகவும் நோய்களை நீக்கும் அருமருந்தாகவும் இருக்கின்றன பலவகையான கீரைகள் இருந்தாலும் ஒருசில கீரைகளை நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம் கிராமப்புறங்களில் பல வகை கீரைகள் விளைகின்றன அதில் ஒன்றுதான் பிண்ணாக்குக் கீரை பிண்ணாக்குக் கீரை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்..

பிண்ணாக்குக் கீரை பயன்கள்

புற்று நோய் 

பிண்ணாக்கு கீரை ஒரு சித்த மருத்துவ மூலிகையாகும். மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்களை இக்கீரை தன்னுள்ளே கொண்டுள்ளது. இதை உணவில் தொடர்ந்து சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிறு சம்பந்தமான புற்று நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறைகிறது. உள்ளுக்கு சிறிதளவு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடலின் உள்ளுறுப்புகளில் எத்தகைய புற்று நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது

விஷ கடி

நமது வீடு மற்றும் சுற்றுபுற பகுதிகளில் இருக்கும் தோட்டங்கள், புதர்களில் தேள், பூரான்,தேனீ, விஷ வண்டுகள் போன்றவை அதிகம் இருக்கின்றன. அவற்றினால் கடிபட்ட நபர்கள் அந்த பூச்சிகளின் நச்சு ரத்தத்தில் கலந்து ஒவ்வாமை ஏற்படுத்தலாம். இத்தகைய ஒவ்வாமை பிரச்சனை நீக்கவும், விடம் பரவாமல் தடுக்கவும் பிண்ணாக்கு கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டால் நமது உடலில் பரவும் விஷ பூச்சிகளின் நச்சு முறியும்.

கல்லீரல்

அதிகம் மது, போதை பொருட்களை பயன்படுத்துதல், தவறான உணவு பழக்கம் கொண்டவர்களின் கல்லீரலின் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டு உடல் நலத்திற்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்த கூடும். இப்படிப்பட்டவர்கள் மேற்கண்ட பழக்கங்களை நிறுத்துவதோடு அடிக்கடி பிண்ணாக்கு கீரையை பக்குவம் செய்து சாப்பிடுவதால் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளை போக்கலாம்.

மூலம்

இன்றைய காலத்தில் அதிகம் பேரை பாதிக்கும் ஒரு நோயாக மூலம் நோய் இருக்கிறது. அதிகம் காரமான உணவுகளை உண்பது, நாட்பட்ட மலச்சிக்கல் போன்றவற்றால் மூலம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது. இந்த மூல நோயை விரைவில் போக்குவதிலும், அந்த மூலத்தினால் ஏற்பட்ட புண்களை ஆற்றுவதிலும் பிண்ணாக்கு கீரை சிறப்பாக செயல்படுகிறது. எனவே மூல பாதிப்புள்ளவர்கள் பிண்ணாக்கு கீரையை அடிக்கடி உண்ண வேண்டும்.

வாயு தொந்தரவுகள்

வாதம் தன்மை அதிகம் கொண்ட உணவுகளை உண்பதால், வயிற்றில் வாயுவின் தன்மை அதிகம் ஆகி சிலருக்கு வாயுக்கோளாறுகள் ஏற்படுகின்றது. பிண்ணாக்கு கீரை உடலின் வாத தன்மையை சீராக்கி வாயு கோளாறுகளை சீர் செய்து உடலை ஆரோக்கியம் பெற செய்கிறது.

நோய் எதிர்ப்பு

உடலின் நோய் எதிர்ப்பு திறன் வயது கூடிக்கொண்டு செல்லும் போது குறைந்து கொண்டே வரும். பிண்ணாக்கு கீரை சாப்பிடுவதால் அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களை உண்டாகும் ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாத வாறு காக்கிறது.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போதுபிண்ணாக்கு கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்ததால் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும். எனவே வாரத்திற்கு குறைந்தது ஒரு முறையாவது பிண்ணாக்கு கீரை சாப்பிடுவதை வழக்கமாக வைத்து கொள்வது நல்லது

 

 

 சிவக்கரந்தை

 

சிவக்கரந்தை மிகுந்த மருத்துவ குணமுள்ள அரியவகை மூலிகைச்சடி. இது நல்ல வாசனையுடையது. இந்த மூலிகையை தினமும் பயன்படுத்தினால் நமது சரும அழகையும் மேம்படுத்த உதவுகிறது.


 

இந்த மூலிகை செடியை பூக்கும் முன்பே கொண்டுவந்து மண்ணில்லாமல் சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி வேரோடு எல்லா பாகங்களையும் இடித்து சூரணம் செய்து ஒரு புதிய மட்கலயத்தில் இட்டு கலாயவாயை கட்டி வைத்து கொள்ள வேண்டும்.

 

மருத்துவ பயன்கள்:

 

சிவக்கரந்தை மூலிகை செடி இரத்தத்திலுள்ள மாசுக்களை நீக்குகிறது. சொறி, சிரங்கு, கரப்பான் முதலிய தோல் நோய்கள் போகும். கபத்தை கரைக்கும்.நாற்பது நாட்கள் உட்கொண்டால் மேனி அழகு கூடும்.

 

சிவக்கரந்தையின் சாறு கல்லீரல், மண்ணீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்த வல்லது. சிவகரந்தையின் வேர் கஷாயம் மூலநோயை  குணப்படுத்தும்.சிவக்கரந்தை போடி மஞ்சள் காமாலையை முற்றிலும் குணப்படுத்தக் கூடியது.

 

சிவக்கரந்தை பொடி சிறுநீரக நோய்களை போக்க வல்லது. மேலும் இது உஷ்ணத்தால் ஏற்படும் வாந்தியை போக்கும். சிவகரந்தை பொடி நல்ல பசியை  தூண்டக்கூடிய ஒரு சிறந்த மூலிகை. அத்துடன் இது இரத்தத்தில் உள்ள மாசுக்களை நீக்கும்.

சிவகரந்தை மூலிகைகள் பயன்கள் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறேன்.



அதன் சாற்றில் சாரணை கொடுத்து முடிப்பது மிகுந்த காயகல்பம் மற்றும் வியாபார தொழில் வசியமாகும். படத்தில் இருப்தில் 16 கிராம்  20 கிராம்
35 கிராம்  175 கிராம் மற்றும்
280 கிராம் என்ற வகையில் சிவகரந்தை சத்தின் மூலம் சாரணை நடந்து கொண்டு இருக்கிறது.

சுடு பாலில் ஒரு நிமிடம் ரசமணியை போட்டு பின் அந்த பாலை அருந்தி வர கம்பம்.

வாயில் வைத்துக் கொண்டு தியானம் செய்யலாம். அப்போது வரும்உமிழ்நீரரை அருந்த கம்பம்.

280 கிராம் மணியை தலையில் வைத்து சுமார் 20 நிமிடம் செய்தாலே அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். மற்ற நேரம் பூஜை அறையில் வைத்துக் கொள்ள ஜன வசியம் தொழில் வசியமாகும்.

மணி கருப்படிக்காது. வெள்ளை துணியில் உரசினானும் சிறிது கூட கருப்பு வராது. கீழே போட்டாலும் உடையாது.
நெருப்பிற்கு நிற்கும்.
இதன் குணங்கள் பல பல. சாதாரண கட்டியின் மேல் 280 கிராம் மணியின் அடிப்பாகத்தை சிறிது நேரம் வைத்து எடுக்க கட்டி கரைகிறது. வலி உள்ள இடத்தில் சிறிது நேரம் அக்கு பிரஷர் போல் செய்ய வலி குறைகிறது.

சிவக்கரந்தை பொடி சிறுநீரக நோய்களை போக்க வல்லது. மேலும் இது உஷ்ணத்தால் ஏற்படும் வாந்தியை போக்கும். சிவகரந்தை பொடி நல்ல பசியை தூண்டக்கூடிய ஒரு சிறந்த மூலிகை. அத்துடன் இது இரத்தத்தில் உள்ள மாசுக்களை நீக்கும்.

சிவக்கரந்தையின் சாறு கல்லீரல், மண்ணீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்த வல்லது. சிவகரந்தையின் வேர் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.சிவக்கரந்தை போடி மஞ்சள் காமாலையை முற்றிலும் குணப்படுத்தக் கூடியது.

 

சிறியாநங்கை



சிறியாநங்கை(Nilavembu) மருத்துவ குணம் நிறைந்த ஒரு தாவரம். இதன் தாவர பெயர் (siriyanangai botanical name) Andrographis paniculata. பாம்பு, தேள் போன்ற விஷக்கடிக்கு சிறியாநங்கை நல்ல மருந்து.

அரசு மருத்துவமனைகளில் தினமும் குடிக்க வைத்திறுக்கும் நிலவேம்பு கசாயமும் சிறியாநங்கையும் ஒன்று என்பது பலருக்கு தெரியாது.மிளகாய் செடி இலையைப்போலவே இருக்கும் சிறியாநங்கை செடி (siriyanangai plant) முழுவதும் மருத்துவ குணம் நிறைந்தது. செடி முழுவதையும் காய வைத்து இடித்து சலித்து பொடியக்கி வைத்து கொள்ள வேண்டும் (nilavembu powder).



இடித்து வைத்த பொடியை தொடர்ந்து 48 நாள் கால் ஸ்பூன் அளவு காலை, மாலை குடித்து வந்தால் நம்மை கடிக்கும் பாம்பு, தேள் போன்ற விஷ பூச்சிகள் இறந்துபோகும். இதை போல் தினமும் காலையில் சிறியாநங்கை பொடியை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் மற்றும் அலர்ஜி குணமாகும்.

கல்லீரல் நோய்கள், மஞ்சள்காமாலை, சைனஸ், மலேரியா போன்ற நோய்களை விரட்டும் தன்மை இதற்கு உள்ளது. சிறியாநங்கை இலைகளை, எலுமிச்சை சாறு போட்டு அரைத்து வீக்கம் மேல் பற்று போட்டால் வீக்கம் குறையும்.சிறியாநங்கை செடியின் (Siriyanangai Plant) இலையை தொட்டு பார்த்த பின் கையை கழுவினாலும் அதன் கசப்புத்தன்மை போகாது. சாப்பாட்டை வாயில் வைக்க முடியாத அளவு கசப்பாக இருக்கும்.

வீடுகளின் சிறியாநங்கை செடி வளர்த்து வந்தால் பாம்பு வராது. இதன் மீது வரும் காற்று பாம்பின் மீது பட்டால் செதில்கள் சுருங்கி விரியாது. இதனால் பாம்புகள் வராது.நாம் நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் (nilavembu powder) மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர்.

 டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் பிளேட்லெட் செல்கள் (platelets cells) வேகமாக குறையும். இதை கட்டுப்படுத்தவில்லை என்றால் மரணம் அடைவர்கள். நிலவேம்பு கசாயம் குடிக்கும் போது பிளேட்லெட் செல்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் குறையாமல் தடுக்கவும் nilavembu kashayam உதவுகிறது.

nilavembu kashayam குடிப்பதால் தற்போது டெங்கு காய்ச்சல் கட்டுப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நிலவேம்பு இலையை நன்கு கொதிக்க வைத்து 30 மிலி 3 நாட்கள் காலை மாலை சாப்பிட்டு வந்தால் காய்ச்சலைக் குறையும்,

பசி உண்டாக்கும். நிலவேம்பு வேர் எடுத்து கஷாயம் தயாரித்து காலை மாலை வேளைகளில் 2 வாரங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.குடற்புழுக்கள் மனித உடலில் உள்ள சத்துக்களை உறிஞ்சி விடுகிறது.

நோய் எதிர்ப்பு சத்தியை குறைந்து உடலில் நோய் தொற்று ஏற்பட காரணமாக அமைகிறது. நிலவேம்பு செடி இலையை நன்கு கொதிக்க வைத்து காலை வேளையில் தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் உடல் சக்தி பெறும்.

கருணை

 

 

ஜீரண மண்டல உறுப்புகளில் சிறப்பு வேலை செய்ய வல்லது காரும் கருணை. சீரண சக்தியைத் துரிதப்படுத்தும்; அதோடு அந்த உறுப்புகளுக்கும் பலத்தைக் கொடுக்கும்.

 


உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் இருந்தாலும் நீங்கும். மலச்சிக்கலையும் போக்கும். நாட்பட்ட காய்ச்சல் இருந்தாலும் குணமாகும். 

பெண்களுக்குத் தொல்லை கொடுக்கும் நோய்களில் வெள்ளைப்பாடு என்ற நோய்க்குக் கைகண்ட மருந்தாக உதவுகிறது இந்தக் கிழங்கு. உடல்வலி இருந்தால் கூடப் போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. 

சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கருணைக் கிழங்கு லேகியம் பிரசித்தி பெற்றது. மூல நோய்க்கு மருந்தாகும் இந்த லேகியம் தயாரிக்க,இந்தக் கிழங்கு தான் பிரதானமாகப் பயன்படுகிறது. 

உடல் எடை அதிகமாகி, பார்வைக்கு அசிங்கமாகி, மூட்டுவலி, முள்ளந்தண்டு வலி போன்ற பல்வேறு கோளாறுகளால் அவதிப்படும் குண்டுடல் உள்ளோர் தினசரி அவசியம் சாப்பிட வேண்டியது கருணைக் கிழங்கு ஆகும் 

நோயில் கருணை காட்டுவதில் கருணைக் கிழங்கு மிகவும் சிறந்தது. ஆசன வாயில் ஏற்பட்டுள்ள முளைகளைச் சிறிது சிறிதாகக் கரைத்து மூலத்தை வேரோடு களைந்து குணப்படுத்தும். ஒருமாதம் வரை வேறு உணவு ஒன்றையும் சாப்பிடாமல் கருணைக் கிழங்கை மாத்திரம் வேக வைத்து அப்படியே உணவாக எடுத்து கொள்ளவேண்டும். நா வறட்சி மாற மோர் மட்டுமே சாப்பிட்டு வர மூலம் பூரணமாகக் குணமாகிவிடும் என்று அனுபவமுள்ளவர்கள் கூறுவதுண்டு. உணவில் பெருமளவில் கருணைக் கிழங்கை புட்டவியலாக வேக வைத்து, எண்ணெய்யும் உப்பும் மட்டும் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வருவது சற்றுக் கடுமை குறைந்த பத்தியமுறை. 

இதன் சுவை காரணமாக, சூடான வீர்யமுள்ளது, அதில் துவர்ப்புச் சுவையுமுள்ளதால் ரத்தக் குழாய்களைச் சுருங்க வைக்கும். கிழங்குகளில் இது சுலபமாக ஜீரணமாவதும் கபத்தையோ வயிற்றில் வாயுக் கட்டையோ செய்யாமலிருப்பதுடன் வாயு கபக் கட்டுகளைப் போக்குவதுமாகும். ருசி, பசி, ஜீரண சக்தி, கீழ் வாயுவைத் தன் வழியே வெளிப்படுத்தும்.

 குடலில் கிருமி சேராமல் உணவு அழுகாமல் வெளியேற்றுவது, மூல முளையைச் சுருங்க வைத்து வேதனையையும், தடையையும் குறைப்பது, உடலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதைக் குறைப்பதுகல்லீரலுக்குச் சுறுசுறுப்பூட்டுவது இவை எல்லாம் இதன் குணங்கள். “வன சூரணாதிஎன்ற பெயரில் லேகிய மருந்தாக விற்கப்படும் ஆயுர்வேத மருந்தில், கருணைக் கிழங்கு முக்கிய மூலப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது.

Playvolume00:01/02:07அற்புத

 கருமஞ்சள்

குபேரரை வசியம் செய்ய இந்த ஒரு பொருள் போதும். பணத்தை ஈர்க்கும் சக்தியானது எந்த பொருளில் எல்லாம் இருக்கின்றதோ அந்த பொருளில் எல்லாம் நிச்சயமாக குபேரர் வாசம் செய்வார் என்பது உறுதி.

மஞ்சள் வகையில் அரியதாக கிடைக்கப்படும்கருமஞ்சள்தான் அது. வடநாடுகளில் பல ஆண்டுகளாக இதை பண வருகைக்காக பயன்படுத்தி தான் வருகிறார்கள். ஆனால் அந்த ரகசியம் நமக்கு இதுநாள்வரை தெரியவில்லை. இப்போதெல்லாம் நம் தமிழ்நாட்டிலேயே இந்த கரு மஞ்சளானது நாட்டு மருந்து  கடைகளில் சுலபமாக கிடைக்கிறது. சற்று விலை அதிகம் தான்

 


இந்த கரு மஞ்சளை, மஞ்சள் இழைக்கும் கல்லில் நன்றாக இழைத்து நெற்றியில் திலகமாக பூசிக் கொண்டு சென்றால் நாம் எதிர்பார்க்கும் பணவரவு கிடைக்கும்  என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கருமஞ்சள் காளிக்கும் மிகவும் பிடித்ததாக கூறப்பட்டுள்ளது.

ஜாதகரீதியாக ராகுவினால் உண்டாகும் பிரச்சினைக்கும், சனி பகவானால் உண்டாகும் பிரச்சினைக்கும் பரிகாரமாக கூட இந்தக் கரு மஞ்சளானது பயன்படுத்தப்படுகிறது. இந்த மஞ்சளை  கருப்பு கயிறு அல்லது சிகப்பு கயிறை கொண்டு கட்டி கழுத்தில் அணிந்து கொண்டால், கிரக தோஷங்கள் விலகும்.

 வசூலாகாத பணம் வசூலாக வேண்டும் என்றாலும், இதை நம் கையோடு எடுத்துச் செல்லலாம். நீண்ட நாட்களாக வசூல் ஆகாமல் இருக்கும் கடன் தொகை கூட  வசூலாகிவிடும். நீண்ட நாட்களாக இருந்து வரும் கடன் பிரச்சனைகள் தீர, இதை பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்

 

இந்தக் கரு மஞ்சளை சிகப்பு பட்டு துணியில் கட்டி கழுத்தில் அணிந்து கொண்டால், எதிர்பாராத வெற்றிகள் நம்மை வந்து சேரும் என்றும் சாஸ்திரத்தில்  கூறப்பட்டுள்ளது. இந்த கரு மஞ்சளை சிவப்பு பச்சை கலந்த பட்டுத் துணியால் கட்டி பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பண வரவு அதிகரிக்கும் என்றும்  கூறப்பட்டுள்ளது.

 

இந்த கரும் மஞ்சளை பச்சையாக வாங்கி களிமண் மணல் சேர்த்து அந்த தொட்டியில் நட்டு வைக்க முளைத்து வரும் ஆறு மாதத்தில் மஞ்சள் வளர்ச்சி அதிகமாகும் இதை மற்றவர்களுக்கு தரலாம் இந்த கருமஞ்சள் காய்ந்தது வாங்க வேண்டாம் பச்சையாக வாங்குவது மிகவும் நல்லது.


கரும்பு

பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவதாக பெரிய அளவில் கரும்பு உற்பத்தி செய்வது இந்தியாதான். இந்தியாவில் வளர்க்கப்படும் பெரும்பாலான கரும்பு குர் (வெல்லம்) ஐத் தொடர்ந்து கந்த்சாரி (சுத்திகரிக்கப்படாத அல்லது பழுப்பு சர்க்கரை) தயாரிக்கப் பயன்படுகிறது, இறுதியாக, ரசாயனங்கள் மற்றும் கந்தகத்தைப் பயன்படுத்தி பதப்படுத்தப்பட்ட சர்க்கரை. மீதமுள்ள சக்கைப் பொருள் எரிபொருளாகப் பயன்படுத்தலாம் அல்லது காகிதம் மற்றும் ஒலி இன்சுலேடிங் போர்டுகளை உருவாக்கலாம். உண்மையில், ஒரு சில நாடுகளும் இதைப் பயன்படுத்துகின்றன. ஒரு தம்ளர் கரும்பு சாறில் பல நன்மைகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.




1. கரும்பு சாறு: ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன
2. கரும்பு சாறு: மஞ்சள் காமாலை குணப்படுத்தும்
3. கரும்பு சாறு: ஒருவரை இளமையாக வைத்திருக்கிறது
4. கரும்பு சாறு: புற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது.
5. கரும்பு சாறு: டி.என்.ஏ சேதத்தைத் தடுக்கிறது, உடல் உறுப்புகளை பலப்படுத்துகிறது
6. கரும்பு சாறு: காயங்களை குணப்படுத்துகிறது, தொண்டை புண் சிகிச்சை அளிக்கிறது
7. கரும்பு சாறு: பாதுகாப்பான கர்ப்பத்திற்கு உதவுகிறது
8. கரும்பு சாறு: வீட்டில் முயற்சி செய்ய வேண்டிய சமையல் வகைகள்
9. கரும்பு சாறு: ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது

கரும்பின் சாறு, பிரித்தெடுக்கும்போது, ​​பதினைந்து விழுக்காடு மூல சர்க்கரைகளை மட்டுமே கொண்டுள்ளது - இது உங்கள் வழக்கமான பழச்சாறுகள் அல்லது மிருதுவாக்கிகள் சிலவற்றை விட குறைவாகும். இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டை (ஜிஐ) கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது, ஆகவே, நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. சாற்றில் கால்சியம், தாமிரம், மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற முக்கிய தாதுக்களும் உள்ளன. இது வைட்டமின் ஏ, பி 1, பி 2, பி 3 மற்றும் சி ஆகியவற்றின் வளமான மூலமாகும்.

உதவிக்குறிப்பு: கரும்பு சாறு குடிப்பதால் நீரிழிவு நோயாளிகளின் இரத்த குளுக்கோஸ் அளவை கடுமையாக மாற்றவில்லை என்று ஒரு ஆய்வு காட்டுகிறது.

கரும்பு சாறு: மஞ்சள் காமாலை தீர்வு

கரும்பு சாறு ஒரு சிறந்த கல்லீரல் போதைப்பொருள், பித்த அளவை சமநிலைப்படுத்துகிறது மற்றும் பெரும்பாலும் மஞ்சள் காமாலை மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது என்று ஆயுர்வேத கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. அது என்னவென்றால், உங்கள் உடலை இழந்த புரதங்கள் மற்றும் விரைவாக மீட்க வேண்டிய ஊட்டச்சத்துக்களால் உங்கள் உடலை நிரப்புகிறது. தவிர, இது சிறுநீரகங்களுக்கும் நல்லது மற்றும் சிறுநீரக கற்கள் மற்றும் பிற சிறுநீரக பிரச்சினைகள், அத்துடன் யுடிஐக்கள் (சிறுநீர் பாதை நோய்த்தொற்று) சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது. குடல் இயக்கம் செல்வது மிகவும் நல்லது, மேலும் அதிக காரத்தன்மை கொண்டது.
உதவிக்குறிப்பு: ஒவ்வொரு நாளும் ஒரு தம்ளர் கரும்புச்சாறை எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுங்கள்.

 கருங்காலி

கருங்காலி (என்பது ஒருவகை மரமாகும். இம்மரம் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. இம்மரத்தில் இருந்து மிகவும் உறுதியான பலகைகள் பெறப்படுகின்றன.  அற்புதமான மருத்துவக் குணங்கள் கொண்ட அபூர்வமான மரம்.. உடல், தண்டு, கிளை, இலை எங்கும் முட்கள் கொண்ட மரம் அது. முட்கள் பார்க்கவே அழகாக இருந்தன.


கருங்காலியின் முட்கள் அதன் தற்காப்பு
இது பச்சை, மஞ்சள் நிறமலர்களையும், செறிந்த சாம்பல் நிறப் பட்டையையும், செந்நிற கடினமான கட்டையையும் உடைய இலையுதிர் மரமாகும்.

 

இந்த கருங்காலி மரத்தில் இருந்து பெறப்படும் பலகைகளை, கருங்காலி பலகை என்பர். இவை மிகவும் பெறுமதிமிக்க பலகை வகையாகும். இப்பலகை கருப்பு நிறம் கொண்டவை. நூற்றாண்டுகளாக இரும்பை ஒத்த உறுதியுடன் கூடிய பலகைகள் இம்மரத்தில் இருந்து பெறப்படுகின்றன. குறிப்பாக இந்த மரத்தின் நடுப்பாகமான கருமை நிறம் கொண்டப் பகுதியை வைரம் என்பர். அநேகமாக கருங்காலி மரத்தில் இருந்தே "உலக்கை" செய்யப்படுகிறது. சில இடங்களில் கருங்காலி அல்லாத பலகைகளில் இருந்து உலக்கை செய்யப்பட்டாலும், கருங்காலி உலக்கைகளுக்கான பெறுமதியை மற்றையப் பலகைகள் பெறுவதில்லை.

மரங்கள்தான் மனித இனத்தை வாழ வைக்கும் சக்திகளாக விளங்குகின்றன. இதனால் தான் நம் முன்னோர்கள் கோவில்களில் தல விருட்சமாக மரங்களை வளர்த்து வணங்கினர். மரங்களின் மருத்துவப் பயன்கள் அளவற்றவை. எதிர்விளைவு களை ஏற்படுத் தாதவை. இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் கருங்காலி மரமும் ஒன்று.


கருங்காலி மரம் இந்தியா முழுவதும் மட்டுமல்லாது மியான்மர், மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் அதிகம் காணப்படுகிறது. கருங்காலி கட்டைக்குக் கோணாத கோடாலி என்று கருங்காலியைப் பற்றி பழந்தமிழ் பாடலில் ஔவையார் பாடியுள்ளார். இதிலிருந்து கருங்காலி கட்டையின் தன்மை நமக்கு விளங்கும்.


இதன் பட்டை, பிசின், வேர் அதிக மருத்துவப் பயன் கொண்டவை. துவர்ப்புத் தன்மை மிக்கது. நீரிழிவு நோய், பெருவயிறு, வயிற்றுப்புழு நோய் ரத்தக் குறைவால் உருவாகும் திமிர் வாதம், பெருநோய், அழல் குன்மம் போன்றவை நீங்கும்.


கொழுப்பை குறைக்கும்


கருங்காலி வேரை எடுத்து சுத்தப்படுத்தி நீரில் ஊறவைக்க வேண்டும். பின்பு அந்த நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.


இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். பித்தத்தைக் குறைக்கும். நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இருவேளை இதைக் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள

உடல் பலமடையும்


கருங்காலி மரத்தின் பிசினை எடுத்து காயவைத்து பொடிசெய்து அதை பாலுடன் கலந்து அருந்தி வந்தால் உடல் பலமடையும். கரப்பான் நோயினை போக்கவல்லது.


பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும். பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும். மலட்டுத் தன்மையைப் போக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் குறைக்கும்.


கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும் நீங்கும்.


விஷ நீரை வெளியேற்றும்


கருங்காலி மரப்பட்டை அல்லது மரக்கட்டை 1 பங்கு எடுத்து 8 பங்கு நீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சி அதனுடன் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து மீண்டும் காய்ச்சி வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால், ஈளை, இருமல் நீங்கும். சுவாச காச நோய்கள் அகலும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றும்.


வாய்ப்புண்ணை அகற்றி வாய் நாற்றத்தைப் போக்கும். நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோயாளிகள் இதைஅருந்துவது நல்லது.


இதுபோல் கருங்காலிப்பட்டை, வேப்பம் பட்டை, நாவல்பட்டை இம்மூன்றையும் ஓர் எடை எடுத்து இடித்து நாள்பட்ட புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் ஆறும்.

கல்பிரமி

கல்பிரமி உடலை கருங்கல் போல் மாற்றும் சக்தி , கல் பிரமி மூலிகைக்கு உண்டு.இந்த கல் பிரமி ஓரு மலை மூலிகையாகும்.இந்த கல் பிரமி மூலிகையை பிடுங்கி காயவைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும் .

அதன் பிறகு இந்த கல் பிரமி பொடியை 3 கிராம் அளவு எடுத்து தேனில் குழைத்து உண்டு வர உடல் கருங்கல் போல மாறும். இது ஓரு காயகல்ப மூலிகையாகும்.காயகல்ப முறைபடி தான் உண்ண வேண்டும் .இந்த மூலிகை உண்டு உடல் காயகல்பமான பின்பு இரும்பால் உடலை தட்டினால் கூட உடலுக்கு ஓன்றுமாகாது.மேலும் ஓரு இரும்பு இன்னொரு இரும்புடன் தட்டும் போது சத்தம் வருமோ அதை போல் சத்தம் வருமாம் என்று சித்தர் பெருமக்கள் கூறுகிறார்கள்.


மூளைக்கு பலம் அளிக்கும் நீர் பிரம்மி மூளைக்கு பலம் அளித்து, வயோதிகத்தினால் ஏற்படும் மறதியை போக்கக் கூடிய நீர் பிரம்மி என்ற மூலிகையின் மருத்துவ குணங்களை பற்றி இன்று காண்போம்.பிரம்மனின் மறுபாதி என்று ஐதீகமாக நம்பப்படும் இந்த மூலிகையானது எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் மூளைக்கு பலத்தை கொடுத்து, மறதியை போக்கக் கூடியதாக உள்ளது.

மேலும் மன அழுத்தத்தை குறைக்கக் கூடியதாக உள்ளது. புற்று நோய்கள் உண்டாவதற்கான உடலில் உள்ள கிருமிகள் தோன்றாத வண்ணம் தடுப்பதால், இது புற்று நோயை தடுக்கும் ஆற்றல் உடையதாக விளங்குகிறது. வேபாபா முன்னேரி என்று இதன் தாவர பெயரை குறிப்பிடுகின்றனர்.

நீர் பிரம்மி செடி என்பது நீர் நிலைகளின் கரையோரங்களில் வளரக் கூடிய சிறிய செடியாகும். பார்ப்பதற்கு பருப்பு கீரை என்று சொல்லக் கூடிய கீரையைப் போன்று தோன்ற கூடிய, ஆனால் அதை விட சற்று சிறியதான தோற்றத்தில் காண கிடைக்கிறது.

இதன் இலைகள் நிறைய நீர் சத்து நிரம்பி காணப்படும்.நீர் பிரம்மி இலைகளை நரம்புகளை பலப்படுத்தும் ஒரு டானிக் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். நீர் பிரம்மி இலைகளை பயன்படுத்தி மருந்து ஒன்றை தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள் நீர் பிரம்மி இலைகள், நெய், சிற்றரத்தை பொடி, தேன். ஒரு பாத்திரத்தில் அரைஸ்பூன் அளவு நெய் எடுத்துக் கொள்ள வேண்டும்

தண்ணீரில் நன்றாக கழுவிய ஒரு பிடி அளவு நீர் பிரம்மி இலைகளை அதனுடன் சேர்க்க வேண்டும். இலைகள் நெய்யில் நன்றாக பொரிந்து வரும் வரையில் வதக்க வேண்டும். இதனுடன் ஒரு சிட்டிகை அளவு சிற்றரத்தை பொடி சேர்க்க வேண்டும்.

சிற்றரத்தை பொடி அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் பரவலாக கிடைக்கக் கூடிய ஒன்றுதான். இலைகள் நெய்யில் பொரிந்தவுடன் சிறிதளவு நீர் விட்டு அதை கொதிக்க விட வேண்டும். பின்னர் நன்றாக கொதித்த பின் இதை இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதை வடி கட்ட வேண்டும். இதோடு தேன் சேர்த்து ஒரு தேநீரைப் போல பருகுவதன் மூலம், மூளைக்கு பலம் அளிப்பதோடு மட்டும் அல்லாமல், நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது. மேலும் சளித் தொல்லை, ஆஸ்துமா போன்றவற்றிற்கும் நிவாரணத்தை தரக் கூடியதாக உள்ளது. மேலும் அஜீரணத்தால் ஏற்படக் கூடிய புளித்த ஏப்பத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.

இதை பருகுவதன் மூலம் நுரையீரல் கோளாறுகளுக்கும் அற்புதமான மருந்தாகவும் இந்த கஷாயம் விளங்குகிறது. சிற்றரத்தையுடன் சேர்த்து தயார் செய்யப்பட்ட இதை பருகுவதால் சளி, இருமலை போக்குகிறது. சிற்றரத்தையும், நீர் பிரம்மியும் ஆஸ்துமா, மூச்சு திணறல், சளித் தொல்லை போன்றவற்றை கட்டுப்படுத்தும் நிவாரணிகளாக நன்றாக செயல்படக் கூடியவையாகும்.

நீர் பிரம்மியின் இலைகளை காய வைத்து எடுத்து பொடி செய்த மருந்தை ஒரு நாளைக்கு ஒரு டோஸ் என்ற முறையில் 750 மிலி கிராம் முதல் 1500 மிலி கிராம் வரை கூட தினமும் எடுத்துக் கொள்ளலாம். இதனால் நரம்புகள் பலம் பெறுகின்றன. மூளைக்கு இதம் கிடைக்கிறது. நீர் பிரம்மி நரம்பு கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக உபயோகிக்கப்படுகிறது. வலிப்பு, மனநோய், இவைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.

சிறுநீர்ப் பெருக்கியாக மற்றும் மூட்டு வலிகளுக்கு, ஆஸ்துமா பிரச்சனைக்கு மருந்தாக பயன்படுகிறது. இதனுடன் நீர் பிரம்மி இருமல், காய்ச்சல் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதன் பாரம்பரிய குணம் ஞாபக சக்தியை அதிகப்படுத்துவது.சித்த மருத்துவத்தில் இவை, மூட்டு வலி, இணைப்புகளில் வீக்கம், மற்றும் மலச்சிக்கலுக்கு மருந்தாக பயன் படுத்தப்படுகிறது

இவை குரல்வளை அழற்சி, நெஞ்சு எரிச்சல்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. சாம்பிராணி பூண்டு, பிரமிய வழுக்கை, நீர்ப்பிரம்மி சப்தலை, வாடிகம், சருமம், விவிதம் ஆகிய முக்கியமான மாற்றுப் பெயர்களும் இந்த தாவரத்திற்கு உண்டு. முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. வீக்கம் கட்டிகள் கரைய முழுதாவரத்தை ஆமணக்கு எண்ணெயில் வதக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் ஒற்றடமிட்டு அவற்றின் மீது பொறுக்கும் சூட்டில் வைத்துக் கட்ட வேண்டும்.

தொண்டை கரகரப்பு குணமாக முழுத் தாவரத்தை நீரில் கழுவி சுத்தம் செய்து, அரைத்து, பிழிந்த சாறு 4 தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். அல்லது ஒரு பிடி அளவு தாவரத்தை வெண்ணெயில் பொரித்து சாப்பிட வேண்டும். தினமும் ஒரு வேளை 5 நாள்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். கோழை கட்டு குணமாக முழுதாவரத்தையும் அரைத்து பசையாக்கி நெஞ்சுப் பகுதியில் பூசி வர வேண்டும்

நீர் பிரம்மியின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பண்பு சமீபத்திய உயர்நிலை மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நரம்பு தளர்ச்சியைக் குணமாக்கும் பல மருந்துத் தயாரிப்பிலும் நீர் பிரம்மி சேர்கின்றது. குழந்தைகளுக்கான ஞாபக சக்தியை அதிகரிக்கும் பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள் நீர்ப்பிரம்மியிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

.

 கழற்சிக்காய்

 

தாவரங்களில் மரம், செடி, கொடி, கிழங்கு என பலவகைகள் உள்ளன. இதில் பிற மரங்களையோ அல்லது பிற பொருட்களை பற்றி வளரும் தாவரங்களை கொடிகள் எனப்படும். இந்த கொடி

வகை தாவரங்களில் பல மூலிகை வகைகளை சேர்ந்ததாக இருக்கின்றன. அந்த வகையில் நமது நாட்டில் சில இடங்களில் அதிகளவில் காணப்படும் ஒரு வகை கொடி தாவரம் தான் கழற்சிக்காய். இந்த கழற்சிக்காயை தென்மாவட்டங்களில் தெலுக்காய் என்றும் அழைப்பர். இந்த கழற்சிக்காயின் இலைகள், காம்புகள், விதைகள், வேர்கள் என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்த கழற்சிக்காய் பயன்பாடுகளை குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.


கழற்சிக்காய் பயன்கள்
நமது உடலில் நீண்ட நாட்களாக ஆறாத புண்கள் மற்றும் காயங்கள் சமயங்களில் புரையோடிப்போய் நமக்கு வலுவுடன் மிகுந்த வேதனையை தரும். புதிதாக அரைத்து தூளாக்கப்பட்ட கழற்சிக்காய் தூளை தினமும் சிறிதளவு நீர் விட்டு குழைத்து ஆறாத புண்கள், காயங்கள் மீது பற்றிட்டு வர அவை சீக்கிரம் குணமாகும். தழும்புகளேற்படுவதையும் தடுக்கும். வீக்கம் அடிபடுதல் மற்றும் உடலின் சில பாகங்களில் சுளுக்கு ஏற்படுவதாலும் அப்பகுதியில் அதிகளவில் வீக்கம் ஏற்படுகிறது. கழற்சிக்காய் இலைகள், விதைகள் போன்றவற்றை மைய அரைத்து வீக்கம் ஏற்பட்ட இடங்களில் மேற்பூச்சாக தொடர்ந்து பூசி வந்தால் வீக்கங்கள் விரைவில் குறையும். வயிற்று பிரச்சனைகள் பலருக்கும் அவர்களின் வயிற்றில் வாயு கோளாறுகள், மலச்சிக்கல், குடற்புழு மற்றும் இதர வயிறு சார்ந்த பிரச்சனைகளால் அவதியுறுகின்றனர். இப்படியான நிலையிலிருப்பவர்களுக்கு கழற்சிக்காய் சிறந்த நிவாரணியாக இருக்கிறது.

கழற்சிக்காயின் இலைகள் மற்றும் விதைகளை அரைத்து செய்யப்பட்ட தூளை சிறிதளவு நீரில் கலந்து பருகி வர வயிற்று கோளாறுகள் நீங்கும். ஈரல் நமது உடலுக்கு நோய்களை எதிர்த்து நிற்கும் நோய் எதிர்ப்பு திறன் மற்றும் நாம் உண்ணும் உணவுகளில் இருக்கும் நச்சுத்தன்மையை அழிப்பது போன்ற செயல்களை நமது ஈரல் செய்து வருகிறது. கழற்சி கொடியின் காம்புகளை பக்குவம் செய்து சாப்பிடும் போது நமது ஈரல் பலம் பெறும். அதன் செயல்பாடுகளும் மேம்பாட்டு உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். ஆண்கள் உடல்நலம் ஒரு சில ஆண்களுக்கு சமயங்களில் அடிபடுவதாலோ அல்லது வேறு ஏதாவது காரணங்களாலோஅவர்களின் விரைகள் வீங்கிவிடும். இப்படியான சமயங்களில் விளக்கெண்ணெயில் கழற்சி சூரணத்தை போட்டு காய்ச்சி, வடிகட்டப்பட்ட தைலத்தை வீக்கம் ஏற்பட்டுள்ள விரைகள் மீது மேல்பூச்சு மருந்தாக தடவி வந்தால் விரைவீக்கம் நீங்கும்.

மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இது மிகவும் முக்கிய மருந்தாகும்.

 

4 பங்கு அளவு கழற்சிக்காய் விதைப்பொடி 1 பங்கு மிளகுப்பொடி எடுத்து நன்கு கலந்து ஒரு புட்டியில் போட்டு வைத்துக்கொள்ளவும். இதிலிருந்து தினமும் 1 தேக்கரண்டி அளவு 48 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும். கர்ப்பப்பை பிரச்சனைகளையும் குணமாக்கும் வல்லமை உடையது.

 

யானைக்கால் நோயுக்கும் இந்த மருந்தை பயன்படுத்தலாம். உடம்பில் எதிர்ப்பு சக்தியை வளர்க்கக் கூடியது.


கறுவா

இலவங்கப்பட்டை ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்டது. பாட்டி வைத்தியமாக, பட்டையை இருமலுக்கு தற்காலிக மருந்தாகத் தருகின்றனர். இதனுடைய மணம் மற்றும் தசையை இறுக்கும் குணம், கபத்தை வெளியேற்றும் தன்மையால் தலைசுற்றல் மற்றும் வாந்தியைத் தடுக்கும் மருந்துப் பொருளாக ஆதிகாலத்திலிருந்தே மக்கள் லவங்கத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். வயிற்றுப் பொருமல் மற்றும் வயிற்று வலிக்கும் கூட இலவங்கப்பட்டையைத் தருகின்றனர். 


மூட்டுவலியின் மருந்தாகக் கூட பட்டை பயன்படுத்தப்படுகின்றது. இந்தப் பட்டையிலிருந்து எடுக்கப்படும் இலவங்க தைலமும் இனிப்புப் பொருள், மது பானம், மருந்து, சோப், பற்களுக்கான பொருள்களில் கலக்கப்படுகிறது. இலவங்கத்தைலம்/எண்ணெய், கிரம்புத் தைலத்தின் நிறத்தை ஒத்திருக்கும். இலவங்க மரத்தின் விதையிலிருந்தும் எண்ணெய் எடுக்கின்றனர்.
இதிலுள்ள பினால் என்ற வேதிப் பொருளால் பட்டை வாய்துர்நாற்றம் நீக்கும் பொருளாகவும் பயன்படுகிறது. இது வெப்பம் தரும் நறுமணப் பொருளாக உள்ளதால் பட்டையை சளி மற்றும் ப்ளூ காய்ச்சலின்போது மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். 

இலவங்கப் பட்டை, வயிறு சம்பந்தமான வயிற்றுப் பொருமல், அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று வலி என அனைத்துவித நோய்களுக்கும் நிவாரணியாக கருதப்படுகிறது. பூஞ்சைக் காளானால் வரும் நோய்களையும் குணப்படுத்துகிறது என்று ஆராய்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தும். இலவங்கம் கீல்வாதம், மூட்டுவலி, தசைவலியை சரி செய்யும். அதுமட்டுமல்ல மூளையின் நினைவுப் பெட்டகத்தை நன்கு பணி புரிய வைக்குமாம். உடல் கொழுப்பைக் குறைக்குமாம்.

இலவங்கப் பட்டை, மனவழுத்தம், மன இறுக்கம், பதட்டம் போன்றவற்றை அமைதிப்படுத்தும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்; மாதவிடாயை சீராக்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கும். இலவங்கத்தைச் சுவைத்தால் பல்வலி குணமாகும்; வாயை புத்துணர்வுடன் வைத்திருக்கும். இரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்து பட்டைதான். இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க இலவங்கப் பட்டை உதவுகிறது. 

மேலும் இது இன்சுலினுக்கு துணையாகவும், தூண்டுதலாகவும் இருந்து செயல் புரிகிறது. இலவங்கத்தில் ஒரு நல்ல உடல் நலத்திற்கு தேவையான அளவு, மாங்கனீஸ், இரும்பு, கால்சியம் மற்றும் முக்கியமான தாது உப்புக்கள் உள்ளன. ஒருவர் தினம் 1/2 தேக்கரண்டி பட்டை பொடி சாப்பிட்டால், அது கொழுப்பைக் கட்டுப் படுத்தும். அமெரிக்கா, மேரிலாந்தில் சமீபத்தில்(2005 ல்) நடத்திய ஆராய்ச்சியில், பட்டை, இரத்த புற்றுநோய், குடல் புற்று மற்றும் தசை புற்றுநோயைக் குறைக்கிறது எனவும், இரத்த கொலஸ்டிரால், சர்க்கரை நோயினைக் குறைப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். தினம் காலை 1/2 தேக்கரண்டி பட்டை பொடி + 1 தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் , அது நாள்பட்ட மூட்டு வலியை நன்கு குணப்படுத்துமாம்.

 கட்டுக்கொடி

1. மூலிகையின் பெயர் :- கட்டுக்கொடி
2. தாவரப்பெயர் :- COCUTUS HIRSUTUS.
3.
3. தாவரக்குடும்பம் :- MENISPERMACEAE.
4.
4. பயன்தரும் பாகங்கள் :- இலை மற்றும் வேர் ஆகியன.
5.
5. வளரியல்பு :- கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம்முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும்புதர்களிலும்மானாவாரிவிவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியதுதமிழகத்தில் எல்லாப்பகுதிகளிலும் வளர்கிறதுஇதன் தாயகம்


வட அமரிக்காஆசியாமற்றும் ஆப்பிரிக்கா ஆகும். 45 அடி நீளம் வரை படரக்கூடியதுபூத்துக் காய்காய்க்கும்தன் மகரந்தச் சேர்க்கையால் பழம் விடும்பழம் நீல நிறமாக 4 எம்.எம்உருண்டையானதுஇலைச் சாற்றை நீரில் கலந்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும்இதில் சிறு கட்டுக்கொடி பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டுஇரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றேஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும்மண்ணில் பதிந்தால் வேர் விட்டு இன விருத்தியாகும்விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும்.
6.
6. மருத்துவப் பயன்கள் :- இது குளிர்ச்சியுட்டாக்கியாகவும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயற்படும்.
பாக்களவு இலையை மென்று தின்ன இரத்த பேதிசீதபேதிமூலக்கடுப்பு எரிச்சல் தீரும்.
இலைவேப்பங்கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவுகளைப்புஆயாசம்தேக எரிவுஅதிதாகம்பகு மூத்திரம் தீரும்சிறுநீர்ச் சர்கரையும் தீரும்சூரணமாக்கியும் சாப்பிடலாம்.
பெருங்கட்டுக் கொடி இலை அரை எலுமிச்சை அளவு அரைத்து எருமைத் தயிருடன் கொடுக்க பெரும்பாடு தீரும்.
இலையுடன் மாம்பருப்பும் சமன் அரைத்து பால்சர்கரை சேர்த்து காலைமாலை கொடுக்க பேதி தீரும்கஞ்சி ஆகாரம் மட்டும் கொடுக்கவும்.
சிறுதளவு வேரும்ஒரு துண்டு சுக்கு, 4 மிளகுடன் காய்ச்சிக் கொடுக்க வாதவலிவாத நோய்கீல் நோய் தீரும்.
இலைச்சாற்றை சர்கரை கலந்து நீரில் வைத்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும்இதை அதிகாலையில் சாப்பிட்டுவர வெள்ளைவெட்டைசீதக் கழிச்சல் ஆகியவை தீரும்.

கட்டுக்கொடி வேரையும்கழற்சிப் பருப்பையும் இழைத்து விழுதாக்கிக் கலந்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்கக் குழந்தைகளுக்குக் காணும் வயிற்றுவலி தீரும்.கென்யாவில் இதன் இலையை வயிற்று வலிக்குப் பயன் படுத்துகிறார்கள்பாக்கிஸ்தானிலும் இந்தியாவிலும் நரம்புத் தழர்ச்சிக்காகப் பயன் படுத்துகிறார்கள் சைனாவில் வேரை உடல் பருமனைக் குறைக்கப் பயன் படுத்துகிறார்கள்

ராஜஸ்த்தானில் இலையை சமைத்து மாலைக்கண் உண்டாவதைக் குணப்படுத்துகிறார்கள்இதன் இரு கொடிகளையும் பிலிப்பையின்ஸ் மற்றும் ஆப்பிரிக்காவில் கூடைகள் செய்யவும் பயன் படுத்திகிறார்கள்தமிழ் நாட்டில் இந்தக் கொடியை பிரமணை செய்வதற்கும்சிம்மாடு செயவதற்கும் பயன் படுத்துகிறார்கள்.

கறிவேப்பிலை


கறிவேப்பிலை 100 கிராம் எடுத்து சுக்கு 25 கிராம், கடுக்காய்த்தோல் 50 கிராம் இவற்றை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி ஒரு சிட்டிகை பொடியை வெந்நீரில் இரு வேலை குடித்து வர அழிந்துப் போன சுரப்பிகள் புதுப்பிக்கப்பட்டு ருசியில்லாத நாக்கில் ருசி ஏற்படும்.வயிற்றில் உளைச்சலைக் கொடுத்தால் அதைச் சமப்படுத்தும். வாத, பித்தங்கள், உடலில் எங்காவது ஒலிந்துக் கொண்டு
இருந்தால் அவற்றைப் வெளியேற்றும்.

கறிவேப்பிலை இலையைக் கைப்பிடி அளவு, மிளகாய் 2 இவற்றை நெய்யில் வதக்கி பழம்புளி, வறுத்த உப்பு சேர்த்து துவையல் செய்து சாப்பிடும் போது முதல்
வாய் உணவுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட குமட்டல், வாந்தி, அசீரணபேதி, சீதபேதி, செரியா மந்தம், வயிற்றுக் கோளாறு குணமாகும்.

கறிவேப்பிலை இலை, மருதாணி இலை, கரிசலாங்கண்ணி இலையின் தண்டு, கைப்பிடி அளவுடன் சேர்த்து அரைத்து தலையில் தடவி வர பித்தநரை, இளநரை
மாறும்.

கறிவேப்பிலை, சுக்கு, மிளகு, சீரகம், இந்துப்பு, பொரித்த பெருங்காயம் சம அளவாக எடுத்து நிழலில் உலர்த்தி இடித்துப் பொடியாக்கி ஒரு சிட்டிகை பொடியை நெய்விட்டு பிசைந்து சுடுசோறுடன் கலந்து உண்ண மலச்சிக்கல், பேதி நிற்கும். குடல் பலவீனத்தால் ஏற்படுகின்ற பேதியும் நிற்கும்.

கறி வேப்பிலையை தொடர்ந்து உணவில் உபயோகித்துவர சளி, கபநீர்க்கட்டு அடங்கும். கறிவேப்பிலை, ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 20 கிராம எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி,
வடிகட்டி நான்கு வேலை 50 மில்லி வீதம் குடித்து வர சளி, இருமல், காய்ச்சல், வாதக் காய்ச்சல் குணமாகும்.
உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. 

கறிவேப்பிலையில் வைட்டமின் , பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். 

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர். 

கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம்.


கற்றாழை


கற்றாழை உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும்மருத்துவத்திற்க்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது


இதில் சிறு கற்றாழை மருத்துவத்திற்கும்காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பிலும் முதலிடம் பெறுகிறதுசிறு கற்றாழை சோற்றுக் கற்றாழை என வழங்கப்படுகிறது.

சோற்றுக்கற்றாழை மடல்களைப் பிளந்து நுங்குச்சுளை போல உள்ள சதைப் பகுதியைசிறு சிறு துண்டுகளாக வெட்டி நன்நீரில் 7 - 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்த வேண்டும்

 கற்றாழையைக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள்கழுவிச் சுத்தம் செய்தால்கற்றாழையின் வெறுட்டல் குணமும்கசப்பும் குறைந்துவிடும்.

சோற்றுக்கற்றாழை வேர்களை வெட்டிசிறு துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்துஇட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்துநன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டுதினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால்தாம்பத்திய உறவு மேம்படும்

 தாம்பத்திய உறவுக்கு சக்தி கொடுக்கும் நிகரற்ற மருந்தாகும்.

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்துஅதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்திருந்தால்சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும்இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டுதினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும்நல்ல தூக்கம் வரும்.

கண்களில் அடிபட்டதாலோஇதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும்மூன்று தினங்களில் நோய் குணமாகும்.

 கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்துஒரு துணியில் முடிச்சுக் கட்டிதொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதை சேகரித்து வைத்துக்கொண்டுஇதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால்கண்நோய்கள்கண்களில் அரிப்புகண் சிவப்பு மாறும்.

 

மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்கசோற்றுக் கற்றாழையின் சோற்றுப் பகுதியை அரை கிலோவும்ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்

எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும்இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டுகுளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சி தரும் ஆயில் ஆகும்.

 முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

 ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம்தீக்காயங்களுக்கும் கூட கற்றாழைச்சாறு பயன்படும். 

 உடலுக்கு பல பலன்களை கொட்டிக் கொடுக்கும் கற்றாழை...

கெட்ட கொலஸ்டிராலை விரட்டி இதயத்தை காக்கும்..!

இது இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும்இதனால் இதயத்துக்கு தூய்மையான இரத்தம் கிடைக்கும்

 இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைப்பதால் நம் இதயமும் ஆரோக்கியமாகத் துடிக்கும்

கற்றாழையில் ஆண்டி வைரல்பூஞ்சை எதிர்ப்பு பொருள்அழற்சி எதிர்ப்பு பொருள் என பல நன்மை செய்யும் பொருள்கள் இருக்கின்றனஇது நம் உடலில் உள்ள நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலையும் ஜிம்மென்று ஆக்கும்.

கற்றாழையை ஜீஸ் போட்டு குடித்து வந்தால் நம் பல் இடுக்குகளில் படிந்திருக்கும் நீண்டகால கரைஅழுக்குகள்  ஆகியவை மறையும்

குடல் புண்ணுக்கும் கற்றாழை சாறு நல்ல ஒரு மருந்து.

இதேபோல் நம் உடலுக்கு கேடு செய்யும் தீமை செய்யும் கெட்ட கொலஸ்டிராலை கற்றாழை கரைக்கும்

இது உடலின் மெட்டபாலிசம் மற்றும் ஜீரணசக்தியை அதிகரிக்கும்உடல் எடையையும் கட்டுக்குள் வைக்கும்கற்றாழை சாறை தினமும் குடித்து வந்தால் நம் உடலை சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப மாற்றும்தாங்கும் வல்லமையும் தரும்.

கற்றாழை மிக முக்கியமாக நம் உடலில் நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கிறதுகாரணம் கற்றாழை ஜெல்லில் இரத்த வெள்ளை உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு

இது நம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

கற்றாழை ஜெல்லில் கால்சியம்மக்னீசியம்செலினியம்காப்பர் போன்ற தாதுக்கள் உள்ளதுஇது நம் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

கற்றாழை கீழ்வாத நோயாளிகளுக்கு மிகவும் நல்லதுஇதிலுள்ள அமினோ அமிலமான பிராடிகைனாஸ் மூட்டுகளில் ஏற்படும் அலற்சியை சரி செய்யும்இதில் உள்ள சாலிசைலிக் அமிலம் மூட்டுகளில் அழற்சி உருவாகாமல் காக்கும்.

இனி உங்க வீட்டில் எந்த செடி இருக்கிறதோ இல்லையோ கற்றாழை செடி இருக்கட்டும்..

 முகஅழகு

பெண்கள் அனைவருமே தங்களின் முக தோற்றம் பொலிவுடன் இருக்க இன்றைய காலத்தில் தீமை உண்டாக்கும் ரசாயனங்கள் அதிகமுள்ள அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகின்றனர்தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தோல் நீக்கிய கற்றாழை தண்டுகளை நன்கு அரைத்துமுகம் முழுவதும் பூசி கால் மணிநேரம் அல்லது அரைமணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகத்தில் இருக்கும் எண்ணெய் தன்மை நீங்கி முகம் பொலிவு பெறும்

 முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள்வடுக்கள் மறையும்பற்கள் மற்றும் ஈறுகள் நமது உடலில் மற்ற உறுப்புகளை போலவே மிகவும் முக்கியமான உறுப்புக்கள் பற்கள் மற்றும் ஈறுகள்ஈறுகள் மற்றும் பற்கள் சுத்தமாகவும்ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியமாகும்தோல் நீக்கிய கற்றாழை தண்டுகளை சிறிதளவு மென்று சாப்பிட்டு வந்தால் ஈறுகள் பலம் பெறும்

பற்களில் சொத்தை ஏற்படுத்தும் கிருமிகளை அழிப்பதிலும் கற்றாழை உதவுகிறதுமலச்சிக்கல் தினசரி மலம் கழிப்பவர்களுக்கு உடலில் நோய்கள் ஏதும் ஏற்படாது.

தினமும் காலையில் சிறிதளவு தோல் நீக்கிய கற்றாழையை ஜூஸ் போட்டோ அல்லது அப்படியே மென்று சாப்பிட்டு வந்தாலோ மலச்சிக்கல் நீங்கும்வயிறுகுடல்கள் போன்ற ஜீரண உறுப்புகளில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்

நச்சுநீக்கி கற்றாழை பல்லாண்டுகளாகவே சிறந்த மருத்துவ மூலிகையாக நமது சித்தஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

கற்றாழையில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் நச்சுத்தன்மை நிறைந்த ரசாயனங்களை செயலிழக்கச் செய்யும் தன்மை கொண்டதாகும்கற்றாழையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளில் தேங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல்நலத்தை மேம்படுத்துகிறது

நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகிய இரண்டு தரப்பினரும் உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்த அளவில் பெற்றவர்கள் ஆகின்றனர்

கற்றாழை இருக்கும் சத்துக்கள் உடலில் நைட்ரிக் ஆக்சைட்சைட்டோகைனின் போன்ற வேதிப்பொருட்களின் உற்பத்தியை நமது உடலில் அதிகரித்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதுகுழந்தைகள்முதியவர்கள் சரியான விகிதத்தில் கற்றாழை பயன்படுத்துவது அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

உடல் குளிர்ச்சி கோடைகாலங்களில் பலருக்கும் உடலில் வெப்பம் அதிகரித்து அவர்களுக்கு உடல் அசதியை ஏற்படுத்துகிறதுகற்றாழை தண்டுகளை தோல் நீக்கிமிக்சியில் போட்டு நன்கு அடித்து கற்றாழைஜீஸ் தயாரித்துஅதில் சிறிதளவு நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிடுவதால் உடல் வெப்பம் தணியும்சிலருக்கு கோடைகாலங்களில் ஏற்படும் நீர்சுருக்கு அல்லது மூத்திரசுருக்கு போன்ற பிரச்சனைகளும் நீங்கும்உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்

நீரிழிவு நோய் அமெரிக்க நாட்டில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளின் படி கற்றாழை தண்டுகளை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது சாப்பிட்டு வந்ததில் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

நம் நாட்டில் நெடுங்காலமாகவே நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை சாறு மருந்தாக உட்கொள்ள நமது பாரம்பரிய மருத்துவத்தில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறதுபுற்று நோய் கற்றாழை நச்சுத்தன்மைகளை எதிர்த்து போராடி அவற்றை அழிப்பதில் சிறப்பாக செயலாற்றுகிறது என்பதை நாம் ஏற்கனவே அறிந்து கொண்டோம்

மனிதர்களுக்கு பல காரணங்களால் அவர்களின் உடலில் உண்டாகும் புற்று நோய் செல்கள் மீண்டும்மீண்டும் வளரக்கூடியவை.

இத்தகைய தீமையான செல்களை அழித்துஆரோக்கியமான செல்களை உடலில் வளர்ச்சி பெற செய்யும் ஆற்றல் கற்றாழைக்கு உண்டு

எனவே புற்று நோய் ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்களும்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கற்றாழையை மருத்துவ உணவாக பயன்படுத்துவது நல்லது. 

 செங்கற்றாழை

 

செங்கற்றாழையை ஏழு முறை நீரில் நன்கு அலசி விட்டுபின் அதனை திரிகடுக (சுக்குமிளகுதிப்பிலி)  தூளில் பிரட்டி மென்று உண்ண  வேண்டும்காலைமாலை 48 நாள் உண்டு வந்தால் தீராத நோய் தீரும்குழந்தையின்மைக்கு இது ஒரு சிறந்த உபாயம் என்றும்  கூறப்படுகிறது. 


செங்கற்றாழையை உட்கொள்ளும் போது நமது உடலானது பல பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுபடும்உடலில் கஸ்தூரி மணம்  வீசும்உடலில் இருந்து வியர்வை வெளியேறாது.

 

தலை முடி கருக்கும்பார்வைத்திறன் அதிகரிக்கும். (நரைதிரைமாறும்உடலில் முழுதும் பிராணன் நிரம்பும்.

உண்மையில் சிவப்பு கற்றாழையை முறைப்படி கற்பம் செய்து சாப்பிட்டால் முதுமையான தோற்றம் படிப்படியாக மறையும்வெளுவெளுப்பான முடிகள் கூட கருப்பாக உடலில் நல்ல பலமும் ஆண்மை விருத்தியும் ஏற்படும்உடம்பு தங்கம் போல ஜொலிக்கும் . 

ஒரே மாதத்தில் தளர்ந்து தொங்கும் மார்பகங்களை சிக்கென்று மாற்ற இத ட்ரை பண்ணுங்க

 

பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் அது தொங்கி அசிங்கமாக காணப்படுவதுமார்பகங்கள் தொங்குவதால் பெண்களால் எந்த ஒரு விருப்பமான உடையையும் அணிய முடியாமல் தவிப்பார்கள்சரிமார்பகங்கள் ஏன் தொங்குகின்றன என்று தெரியுமாஎவை மார்பகங்களைத் தளர்ந்து தொங்கச் செய்கின்றன என்று தெரியுமா?

மார்பகங்கள் வயது அதிகரித்தால்உடல் பருமன் அதிகரித்தால்புகைப்பிடித்தால்கருத்தரித்தால் தொங்க ஆரம்பிக்கும்இப்படி தொங்கும் மார்பகங்களை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் சிக்கென்று மாற்ற முடியும்இங்கு அந்த வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

நல்ல நிலைகூன் போட்டு குனிந்து உட்கார்ந்தவாறு இருந்தால்அது மார்பகங்களைப் பாதிக்கும்எனவே கூன் போட்டு உட்காராமல் எப்போதும் நேரான நிலையில் இருக்க வேண்டும்இதனால் மார்பகங்கள் சிக்கென்று நேராக இருக்கும்.

ஐஸ கட்டி மசாஜ்தொங்கும் மார்பகங்களின் அழகை அதிகரிக்கதினமும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு 1 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும்.

கற்றாழ ஜெல்கற்றாழை ஜெல்லைக் கொண்டு மார்பகங்களை மசாஜ் செய்தால்அது அப்பகுதியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் இணைப்புத்திசுக்களை வலிமையாக்கும்அதற்கு தினமும் 15 நிமிடம் கற்றாழை ஜெல்லை மார்பகங்களில் தடவி மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும்.

ஆலிவ் ஆயில் மசாஜ்ஆலிவ் ஆயிலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதுஇது மார்பக திசுக்களைப் பாதிக்கும் ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து நல்ல பாதுகாப்பை வழங்குவதுடன்பாதிக்கப்பட்ட மார்பக திசுக்களைப் புதுபிக்கும்ஆகவே தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மார்பகங்களை 15 நிமிடம் மசாஜ் செய்து வரஒரே மாதத்தில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வெள்ளரிக்காய மாஸ்க்வெள்ளரிக்காயை துருவிஅத்துடன் சிறிது வெண்ணெய்மில்க் க்ரீம் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து கலந்துஇரவி முழுவதும் ஊற வைத்துமறுநாள் காலையில் மார்பகங்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும்.

முட்ட வெள்ளைக்கருமுட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்துஅதனை மார்பகங்களில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்துகழுவ வேண்டும்இப்படி தினமும் செய்து வந்தால்முட்டையில் உள்ள புரோட்டீன்மார்பக செல்களுக்கு ஊட்டமளிக்கும்.

உடற்பயிற்சிதொங்கும் மார்பகங்களை சிக்கென்று மாற்ற உதவும் சிறப்பான மற்றொரு வழி தான் உடற்பயிற்சிதினமும் பெண்கள் புஷ்-அப்செஸ்ட் பிரஸ் போன்ற பயிற்சிகளை தினமும் செய்து வந்தால்மார்பக திசுக்கள் இறுக்கமடையும்.

 கிராம்பு

 

கிராம்பு என்பது சிசீஜியம் அரோமாட்டிகம் மரத்தின் உலர்ந்த பூ மொட்டுகள்பல ஆண்டுகளாககிராம்பு ஒரு மசாலாவாக மட்டுமல்லாமல் பல நோய்களுக்கான மருந்தாகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறதுஇது பாரம்பரியமாக பல் சிதைவுசெரிமான பிரச்சினைகள்கெட்ட மூச்சு மற்றும் ஒரு பாலுணர்வைக் குணப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது.

கிராம்பின் ஆரோக்கிய நன்மைகள்


செரிமானத்தை ஊக்குவிக்கிறது:

கிராம்பு நொதி சுரப்பைத் தூண்டுவதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் செரிமான இயக்கத்தை அதிகரிக்கிறதுவாய்வுஇரைப்பை எரிச்சல்டிஸ்ஸ்பெசியா மற்றும் குமட்டல் ஆகியவற்றை எளிதாக்க கிராம்பு சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது:

உயர் இரத்த சர்க்கரை அளவு உள்ளவர்களுக்கு கிராம்பு சிறந்ததுகிராம்பு இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதாகவும்இன்சுலின் திறமையான செயல்பாட்டில் உதவுகிறது என்றும் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு நல்லது:

எலும்புகளில் எலும்பு அடர்த்தி மற்றும் தாதுப்பொருட்களை அதிகரிக்க உதவுகின்ற யூஜெனோல் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஹைட்ரோ-ஆல்கஹால் சேர்மங்களால் கிராம்பு நிரம்பியுள்ளதுபலவீனமான எலும்புகள் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளவர்கள் கிராம்புகளை தவறாமல் எடுத்துக்கொள்வதன் மூலம் பயனடைவார்கள்.

நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது:

அற்புதமான மூலப்பொருள்கிராம்பில் உள்ள யூஜெனோல் பல தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாபூஞ்சை மற்றும் வைரஸுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கும்கிராம்பின் வைரஸ் எதிர்ப்பு மற்றும் இரத்த சுத்திகரிப்பு திறன் இரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையைக் குறைத்துவெள்ளை இரத்த அணுக்களைத் தூண்டுவதன் மூலம் நோய்களுக்கு எதிரான எதிர்ப்பை அதிகரிக்கும்.

அடிக்கடி உணவில் பாகற்காய் சேர்த்துக்கொண்டால் கிடைக்கும் பயன்கள்!..

உடல் வலி மற்றும் அழற்சியைக் குறைக்கிறது:

கிராம்புகளில் உள்ள யூஜெனோல் வலுவான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் உடலில் வலி ஏற்பிகளைத் தூண்டுவதன் மூலம் வலியைக் குறைக்க உதவுகிறதுகிராம்பு எண்ணெய் அல்லது சாறு கீல்வாதம்வீக்கம் மற்றும் பொதுவாக எந்தவொரு வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

பல் வலி:

கிராம்பு எண்ணெய் அதன் கிருமி நாசினிகள் காரணமாக பல்வலிபுண் ஈறுகள் மற்றும் வாய் புண்களுக்கு ஒரு சிறந்த தீர்வாகும்அமெரிக்க பல் சங்கத்தின் படி கிராம்பு எண்ணெய் பல் மயக்க மருந்தாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயைத் தடுக்கிறது:

புற்றுநோயிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கு அதிக கிராம்புகளை சாப்பிடுங்கள்ஏனெனில் கிராம்பில் உள்ள யூஜெனோல் வலுவான ஆன்டிகார்சினோஜெனிக் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் நுரையீரல் புற்றுநோய்மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோயை அதன் ஆரம்ப கட்டங்களில் கட்டுப்படுத்த உதவுகிறது.

 
            மல்பெரி செடி

அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஆசியா கண்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள முதன்மை மருத்துவ நிறுவனங்கள் மல்பெரி செடியின் (பட்டுப் பூச்சி) இலையினை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அதில் அதிக ஆற்றல் வாய்ந்த இயற்கையான மருத்துவக் குணங்கள் நிறைந்து காணப்படுகிறது என்று கூறுகின்றனர். 

அது மட்டுமல்லாது இந்த இலையானது பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது எனவும் கூறியுள்ளனர்.இந்த இலையினைப் பற்றி 5 வருடங்கள் ஆராய்ச்சி செய்து பார்த்ததில், அதனுடைய மருத்துவக் குணமானது பல்வேறு நோய்களிலிருந்து நமது உடலை பாதுகாக்கவும் மற்றும் நம்முடைய உடலின் எடையை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ளவும் இது பெரிதும் உதவியாக இருக்கிறது.
இந்த இலையின் பயன்கள்:
நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.
உடல் எடையை குறைப்பதற்கும் மற்றும் எடையை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
உடலில் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும்.
கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை வலுவடையச் செய்கிறது.
எலும்பு வலுவடைவதற்கு பயன்படுகிறது.
தோல் வியாதிகளை குணப்படுத்தும்.
ஜீரணக்கோளாறுகளை சரிசெய்யும்.
இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது, மற்றும் நரம்பு தளர்ச்சியை கட்டுப்படுத்தும்.

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கிறது.கல்லீரல் புற்றுநோய் உள்ளவர்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் புற்றுநோயின் தாக்கம் குறையும்.அமினோ அமிலங்கள், தாது உப்புக்கள், மற்றும் வைட்டமின் ஏ, சி, பி, புரதச்சத்து அதிகம் உள்ளது.இயற்கை கொடுத்த பல்வேறு வகையான வியக்கத்தக்க பரிசுகளில் இந்த இலையும் ஒன்று. இந்த இலையில் காமா அமினோ பியூத்திரிக் அமிலம் காணப்படுவதால் குறைவான இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு ஒரே சீரான இரத்த ஓட்டத்தை அளிக்கிறது.இந்த இலையைப்பற்றி ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இதில் 15% முதல் 28% வரை புரதம் அடங்கிய அமினோ அமிலங்கள் மற்றும் பல்வேறு வகையான மருத்துவக்குணங்கள் கொண்டதாக உள்ளது.

 மேலும் இது பச்சை தேனீரைக் (கிரீன் டீ) காட்டிலும் 6 வகையான சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) கொண்டது 25 முறை பால் குடிப்பதில் உள்ள சத்தைக் காட்டிலும் அதிக சத்து நிறைந்தது. அது மட்டுமல்லாது தற்போதைய மிகப்பெரிய பிரச்சனையான நீரிழிவு நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 மஞ்சள்


* வயிற்றுப் புண்ணை மஞ்சள் ஆற்றும்.
* உடலின் எந்த இடத்தில் கட்டி இருந்தாலும், அதன் மீது மஞ்சள் பூசி, ஒரு இரவு ஊறினால், கட்டி பழுத்து, சீழ் வெளியேறி விடும்.
* ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குணமும் மஞ்சளுக்கு உண்டு. * உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது.

* மிகச் சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது.
* மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் சுவாசித்தால், மூக்கடைப்பு விலகி, சளி நீங்கும்.
மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சள் தென்னிந்திய சமையலில் இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளது. பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் பலவகையான நோய்களுக்கு எதிர்பொருளாக மஞ்சள் செயலாற்றுகிறது. இதன் காரணமாக, பலவகையான அழகுசாதன பொருள்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், துணிகளுக்கு சாயமேற்றுவதிலும் மஞ்சள் பயன்படுத்தப்படுவதால் சந்தையில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
ரகங்கள்:
கோ- 1, கோ- 2, பி.எஸ்.ஆர் 1, பி.எஸ்.ஆர் 2, ஈரோடு உள்ளூர் ரகம், சேலம் உள்ளூர் ரகம் ஆகியவை தமிழகத்தில் சாகுபடி செய்ய உகந்த ரகங்கள்.
பருவம்:
கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர் உயரம் வரையிலும், 20- 30 செல்சியஸ் வெப்ப நிலையும், ஆண்டு மழையளவு 1,500 மி.மீ வரையுள்ள வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் மஞ்சள் சாகுபடி செய்யலாம். ஏப்ரல் மாத இறுதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை மஞ்சள் நடவு செய்யலாம். எனினும், ஜூன் மாதத்தில் நடவு மேற்கொண்டால் அதிக மகசூல் பெறமுடியும்.
மண்: நல்ல வடிகால் வசதிகொண்ட அங்ககச் சத்து நிறைந்த இரும்பொறை மண் மிகவும் ஏற்றது. பொல பொலப்புத் தன்மை வாய்ந்த செம்மண், வண்டல் மண் மற்றும் களிமண் நிலங்களிலும் வளரும் தன்மைகொண்டது.
அமில காரநிலை 6- 7 இருக்கும் நிலங்களில் பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூல் நன்றாக இருக்கும். அதிகமாக நீர் தேங்கும் நிலங்களிலும், காரத்தன்மை வாய்ந்த நிலங்களிலும் பயிர் வெகுவான பாதிப்பிற்குள்ளாகும். கரடு முரடான மற்றும் கற்கள் நிறைந்த நிலங்களில் கிழங்கின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
மஞ்சள் கிழங்கு நேர்த்தி:
தரமான மஞ்சள் கிழங்கைத் தேர்வுசெய்து, அவற்றை 1 லிட்டர் நீருக்கு கார்பெண்டாசிம் பூஞ்சாணக்கொல்லி 2 கிராம் மற்றும் மோனோகுரோட்டோபாஸ் பூச்சிக்கொல்லி 1.5 மில்லி என்ற அளவில் கலந்த கரைசலில் 20 நிமிடங்கள் நனைத்து வைக்கவேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் கிழங்கு அழுகல் நோய் ஏற்படுத்தக் கூடிய பூஞ்சை மற்றும் செதில் பூச்சி தாக்குதலிலிருந்து பயிரை பாதுகாக்க முடியும்.
குழித்தட்டு நாற்று உற்பத்தி:
காய்கறி மற்றும் கரும்பு பயிர்களைப் போல மஞ்சள் கிழங்கையும் குழித்தட்டுகளைப் பயன்படுத்தி நாற்று உற்பத்தி செய்து நடவு செய்யலாம். இதற்கு நேர்த்தி செய்யப்பட்ட கிழங்குகளை சிறு, சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். ஒவ்வொரு துண்டும் 2 வளையங்கள் ஒரு கணுவைக் கொண்டிருக்குமாறு நறுக்க வேண்டும்.

இவ்வாறு நறுக்கப்படும் மஞ்சள் துண்டுகளின் எடை தோராயமாக 5 கிராம் என்ற அளவில் இருக்கும். 50 குழிகள் கொண்ட குழித்தட்டுகளை மஞ்சள் நாற்று உற்பத்திசெய்ய பயன்படுத்தலாம்.
1 ஏக்கருக்கு தேவையான மஞ்சள் நாற்றுகள் உற்பத்தி செய்ய சுமார் 600 குழித்தட்டுகள் தேவைப்படும். மட்கிய தென்னை நாருடன் டிரைக்கோடெர்மாவிரிடி மற்றும் சூடோமோனாஸ் புரசன்ஸ் உயிரிகட்டுப்பாட்டு பொருள்களை ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் கலந்து குழித்தட்டுகளில் உள்ள குழிகளில் பாதி அளவு நிரப்பி நறுக்கபபட்ட மஞ்சள் துண்டுகளை கணுப்பகுதி மேல் நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.

பிறகு, இதன்மீது தென்னை நார் கலவையை இட்டு நிரப்பி நிழலான இடத்தில் அடுக்கி வைக்க வேண்டும்.
பூவாளி கொண்டோ அல்லது கைத்தெளிப்பான் பயன்படுத்தியோ ஒரு நாளைக்கு ஒருமுறை நீர் தெளிக்க வேண்டும். அனைத்து குழிகளிலும் ஒரு இலை வெளிவந்த பிறகு ஹியூமிக் அமிலத்தை 1 லிட்டர் நீருக்கு 5 மி.லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். 4-வது நாளில் நாற்றைப் பிடுங்கி நடவு செய்யலாம். குழித்தட்டுகளை நீரில் கழுவி நிழலில் பாதுகாப்பாக வைத்திருந்தால் 3 ஆண்டுகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குழித்தட்டு நாற்று முறையின் நன்மைகள்: விதைக் கிழங்கு தேவை குறைவு (150 கிலோ, ஏக்கர்) நடவு வயலில் இருக்கும் காலம் குறைவதால், கணிசமான அளவு நீர் மற்றும் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. ஒருமுறை களை எடுப்பதற்கான செலவு குறைகிறது. சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.
நிலம் தயாரிப்பு மற்றும் நடவு:
உழவிற்கு முன்பாக நிலத்தில் ஏக்கருக்கு 4 டன் என்ற அளவில் தொழு உரம் இட்டு அல்லது ஆடு மாடுகள் கொண்டு கிடைகட்டி உழவு செய்யவேண்டும். மண் நன்கு பொடியாகும் வரை 3 முதல் 4 முறை ஒரு அடி ஆழம் வரை உழவுசெய்ய வேண்டும். 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைத்து நீர் பாய்ச்சி ஈரம் இருக்கும்போது, 30 செ.மீ இடைவெளியில் மஞ்சள் நாற்றுகளை நடவுசெய்ய வேண்டும். டிரைக்கொடெர்மா ஹார்சியானம் எனும் எதிர் உயிர் பூஞ்சாணத்தை, ஏக்கருக்கு 1 கிலோ என்றஅளவில் எருவுடன் கலந்து நிலத்தில் ஈரம் இருக்கும்போது தூவி விடலாம்.
ஊடுபயிர்:
வெங்காயம், கத்திரி, மிளகாய் உள்ளிட்ட பயிர்களை மஞ்சளில் ஊடு பயிராகப் பயிரிடலாம். மஞ்சள் ஒரு நிழல் விரும்பும் பயிர். ஆனால், அதிக நிழல் கிழங்கின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதால், வரப்பு ஓரங்களில் ஆமணக்கு, அகத்தி, துவரை ஆகிய பயிர்களைப் பயிரிடலாம்.
நீர் நிர்வாகம்:
மண்ணின் நீர்பிடிப்புத் தன்மை மற்றும் காலநிலையைப் பொருத்து 5 முதல் 9 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சலாம். களிமண் பாங்கான நிலங்களுக்கு 15- 20 முறையும், மணற்பாங்கான நிலங்களுக்கு 30- 35 முறையும் நீர் பாய்ச்ச வேண்டும். கிழங்குகள் உருவாகும் சமயத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உர மேலாண்மை:
அடியுரமாக ஏக்கருக்கு 80 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 22 கிலோ யூரியா, 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 12 கிலோ பொட்டாஷ் உரங்களை பார் அமைப்பதற்கு முன்பாக இட வேண்டும். பார் அமைத்த பிறகு 12 கிலோ பெரஸ்சல்பேட், 6 கிலோ துத்தநாக சல்பேட் உரங்களை பார்களின் மீது தூவி விட வேண்டும். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை, ஏக்கருக்கு 4 கிலோ அளவில் நிலத்தில் ஈரம் இருக்கையில் தூவி விட வேண்டும். நடவு செய்த 30, 60, 90 மற்றும் 120-வது நாள்களில் ஏக்கருக்கு 22 கிலோ யூரியா மற்றும் 12 கிலோ பொட்டாஷ் உரங்களை இட வேண்டும்.
நுண்ணூட்ட மேலாண்மை:
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் மஞ்சள் பயிருக்கென்று பிரத்யேமாக நுண்ணூட்டக் கலவையைத் தயார் செய்து வழங்கி வருகிறது. ஐ.ஐ.எஸ்.ஆர் பவர் மிக்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நுண்ணூட்டக் கலவையை, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் அளவில் நடவு செய்த 60 மற்றும் 90-வது நாள்களில் இலைவழியாகத் தெளிப்பதன் மூலம் நுண்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்து, 10 முதல் 15 சதவீத கூடுதல் மகசூல் பெறலாம். மேலும், கிழங்குகளின் தரமும் நன்றாக இருக்கும்.
கிழங்கு அழுகல் நோய்:
நன்கு வளர்ந்த நிலையில், இலைகள் முழுவதும் காய்ந்துவிடுவதோடு, கிழங்குகள் அழுகி மட்கிவிடும். பாதிப்புக்குள்ளான செடிகளை கிழங்குடன் நிலத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்திலும், அதைச் சுற்றியுள்ள செடிகளுக்கும் காப்பர் ஆக்சிகுளோரைடு மருந்தை 1 லிட்டர் நீருக்கு 2.5 கிராம் கலந்து ஊற்றலாம். டிரைக்கோடெர்மா ஹார்சியானம் எதிர் உயிர் பூஞ்சாணத்தை எருவுடன் கலந்து நிலத்தில் தூவலாம்.
இலைப்புள்ளி நோய்:
இளம் இலைகளின் மேற்பரப்பில் பழுப்புநிற புள்ளிகள் தோன்றும். ஒழுங்கற்ற வடிவிலிருக்கும் இப்புள்ளிகளின் மையப்பகுதி வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும். நாளடைவில் இப்புள்ளிகள் ஒன்றிணைந்து பெரிய புள்ளிகளாக இலை முழுதும் பரவி இலை மடிந்துவிடும். இந்நோயைக் கட்டுப்படுத்த புரோபிகோனசோல் பூஞ்சாணக் கொல்லியை 1 லிட்டர் நீருக்கு 1 மில்லி அளவில் கலந்து தெளிக்கலாம்.
இலைத் தீயல் நோய்: நீள் உருளை வடிவ அல்லது செவ்வக வடிவ பழுப்புநிற புள்ளிகள் இலைகளின் இருபுறமும் காணப்படும். தாக்குதல் தீவிரமடையும் நிலையில் புள்ளிகள் அடர் பழுப்பு நிறத்திற்கு மாறி இலைகள் மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாகிவிடும். முறையான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், செடியில் உள்ள அனைத்த கிளைகளுக்கும் பரவி செடியே மடிந்துவிடும். கிழங்கு உருவாவது வெகுவாக பாதிக்கப்படும். இதைக் கட்டுப்படுத்த பாதிப்பிற்குள்ளான இலைகளை செடியிலிருந்து அகற்றி தீயிட்டுக் கொளுத்த வேண்டும். பின்னர், அசாஸிஸ்ட்ரோபின் மற்றும் டைபென்கோனசோல் கலவை பூஞ்சாணக் கொல்லியை 1 லிட்டர் நீருக்கு 1 மி.லி அளவில் கலந்துதெளிக்கலாம்.


அறுவடை மற்றும் மகசூல்: ரகத்தைப் பொறுத்து நடவு செய்த 7- 9 மாதங்களில் மஞ்சள் அறுவடைக்குத் தயாராகும். இச்சமயத்தில் தரைக்கு மேலுள்ள அனைத்து பாகமும் காய்ந்து மடிந்துவிடும். இவற்றை அரிவாள் கொண்டு அறுத்து அப்புறப்படுத்தி விட்டு தேவை எற்பட்டால் நீர்பாய்ச்சி உலரவிட்டு, பின்னர் மஞ்சள் கொத்தும் கருவி கொண்டு கிழங்கைத் தோண்டி எடுக்கலாம்.

டிராக்டரில் பொருத்தி இயங்கக்கூடிய மஞ்சள் அறுவடைக் கருவியைப் பயன்படுத்தியும் கிழங்குகளைத் தோண்டி எடுக்கலாம். தோண்டி எடுக்கப்பட்ட மஞ்சளிலிருந்து மண்ணை அப்புறப்படுத்தி விட்டு, பின்னர் பதப்படுத்தலாம்.
ஒரு ஏக்கருக்கு 8- 10 டன் பச்சை கிழங்கு மகசூலாகக் கிடைக்கும் என தெரிவித்தார் பெரம்பலூர் மாவட்டம்,

வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ஜே. கதிரவன்.

சுக்கு,மிளகு,திப்பிலி:இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும்.
மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்லி காபி தினமும் ஒரு வேளை அருந்தி வரவேண்டும்.இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்படுத்தப்படும்.

இஞ்சி: தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடல் வலியோ செரிமானக் கோளாறோ ஏற்படாது.வயதானவர்கள் பசியில்லை என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளும் நன்கு சாப்பிடுவார்கள்.

புளி: சாம்பாரிலும் இரசத்திலும் சேரும் புளியில் வைட்டமின் பி மற்றும் சி,டார்டாரிக் அமிலம்,கால்சியம் முதலியன உள்ளன. இந்த டார்டாரிக் அமிலம், அதிக மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே,காய்ச்சல், ஜலதோஷம் முதலியவை தாக்கினால் மிளகு, பூண்டு,புளி சேர்த்த இரசம் தவறாமல் ஒரு டம்ளராவது அருந்துங்கள்.சாம்பார் தினமும் இடம் பெறட்டும்.

துளசி: துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.

பேரிக்காய், காரட்: இவற்றில் புற்று நோயை குணமாக்கும் போரான் என்ற உப்பு இருக்கிறது.மூட்டுகளில் வலி இருந்தால் கொஞ்ச நாளைக்காவது மூலிகை நன்கு சேர்த்து வரவும்.

நன்னாரி:உலர்ந்த நன்னாரி வேரை இடித்து வைத்துக் கொள்ளவும்.தினமும் 30 கிராம் அளவு வேரை தேனீராகவோ அல்லது சர்பத்தாகவோ தயாரித்து அருந்தி வந்தால் உடலுக்குச் சத்து கிடைக்கும்.இரத்தம் சுத்தமாகும்.எல்லா உறுப்புகளும் சீரகச் செயல்படும்.காய்ச்சலின் போது நன்னாரி டீ அருந்தினால் உடனே உடல் வியர்த்து காய்ச்சல் பறந்து விடும்.

சோற்றுக் கற்றாழை: சோற்றுக் கற்றாழை இலையின் சாறு மந்தமான சிந்தனை சக்தி,மலட்டுத் தன்மை,கல்லீரல் கோளாறுகள் மற்றும் குழந்தைகளின் குடலில் உள்ள பூச்சிகளுக்கு நல்ல மருந்தாகும்.

சோம்பு:உணவில் சேரும் சோம்பு கண் கோளாறுகளைத் தடுக்கிறது.சோம்புக் கஷாயம் மாதவிலக்குக் கோளாறுகளை ஆஸ்துமாவுக்கு போடும் ஊசி போல உடனே மட்டுப்படுத்துகிறது.

சுரைக்காய்,பூசணிக்காய்: இவை சிறுநீரகக் கோளாறுகளை குணமாக்குகிறது.நீரிழிவு நோய்களும்,கொழுத்த சரீரம் உள்ளவர்களும் தினமும் இவற்றைச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

விளாம்பழம்:வயிற்றுப் பொருமல்,தொந்தி முதலியவற்றை விளாம்பழம் எளிதில் குணப்படுத்துகிறது.

அமுக்கிரா கிழங்கு: இதய நோயாளிகளும்,சோர்வானவர்களும் இரண்டு கிராம் அமுக்கிரா கிழங்குத் தூளைப் பாலில் கலந்து சாப்பிடவும்.புதுமணத் தம்பதிகள் நான்கு கிராம் பவுடரை பாலில் கலந்து அருந்தவும்.

கரிசலாங்கண்ணி கீரை,கீழாநெல்லி: கல்லீரல் கோளாறுகள் கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறால் எளிதில் குணமாகும்.
குடிப்பழக்கமும்,மஞ்சள் காமாலையுமிருந்தால் கரிசலாங்கண்ணிக் கீரையுடன் கீழாநெல்லியையும் சேர்த்து அரைத்து ஒரு நாட்டு நெல்லிக்காய் அளவு எடுத்து மோரில் கலந்து குடித்து வரவும்.கரிசலாங்கண்ணிக் கீரைப் பொடி தோல் நோய்களை படிப்படியாகக் குணப்படுத்தும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு அருகம்புல் சாறும்,வாத நோயாளிகளுக்கு சிற்றாமுட்டி வேர்த் தைலமும் கெட்டிச் சளிக்கு ஆடா தொடைச் சாறை தேனுடன் சேர்த்து சாப்பிடுவதும் கைகண்ட மூலிகை மருந்துகளாகும்.

சங்கன்

தமிழ்ப் பெயர்   தாவரவியல் பெயர்
சங்கன் குப்பி     CLERODENDRUM INERME
முள் சங்கன்      AZIMA TETRACANTHA 
சங்குப்பூ              CLITORIA TERNATEA 
வ்வொரு தாவரமும் ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர் இன்ன தாவரம், இன்ன வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். சங்கன் குப்பி, முள் சங்கன், சங்குப்பூ ஆகிய மூலிகைகள் குறித்துப் பார்ப்போம்.


சங்கன் குப்பி


படர்ந்து வளரக்கூடிய புதர்த் தாவரம் இது. பூங்காக்களில் அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது. மதில் சுவர்போல இச்செடிகளை வெட்டி அழகுபடுத்தி வளர்ப்பார்கள். இதன் இலைகள், வெகுட்டலான மணம் கொண்டிருப்பதால் பீச்சங்கன், பீநாறிச்சங்கன் என்று இதை அழைக்கிறார்கள். சென்னை, மெரினா கடற்கரையில் சாலையோரத் தடுப்புச் சுவர் தாவரமாக வளர்க்கப்பட்டுள்ளது. இது மணற்பாங்கான நிலத்தில் செழித்து வளரும். ஆடு மாடுகள் இதைச் சாப்பிடுவதில்லை. அடர்ந்த புதர்த் தாவரமாக வளர்வதால், உயிர்வேலி அமைக்க ஏற்றது. இதன் இலை, வேர் ஆகிய இரண்டுமே சிறந்த மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கின்றன.
இதை, ‘தோல் நோய் மருத்துவர்’ என்று கூடச் சொல்லலாம். கரப்பான், காளாஞ்சகப்படை (சொரியாசிஸ்), விஷக்கடி, ஊறல், தடிப்புகள் போன்ற அனைத்துவிதமான தோல் நோய்களுமே ‘அலர்ஜி’யால்தான் வருகின்றன என்று ஆங்கில மருத்துவத்தில் காரணம் சொல்வார்கள். பாரம்பர்ய மருத்துவத்தில், இவை விஷத்தால் உண்டாகிறது எனக் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், சங்கன் குப்பி இலைகளைப் பறித்துச் சிறிது மோர் அல்லது நீராகாரம் விட்டுத் துவையல்போல அரைத்து, 40 நாள்கள் வரை தினமும் காலையில் மட்டும் வெறும் வயிற்றில் சிறு நெல்லிக்காயளவு உண்டுவந்தால் ரத்தம் சுத்தமாகி தோல் நோய்கள் குணமாகத் தொடங்கும். ‘அகத்தியர் குழம்பு’ எனும் சித்த மருந்தைச் சங்கன் குப்பி இலைத்துவையலோடு சேர்த்து மூன்று நாள்கள் சாப்பிட்டால் பேதியாகும். இப்படிப் பேதியான பிறகு மருந்து எடுத்துக்கொள்வது சிறப்பாக இருக்கும்.

வாதமலாது மேனி கெடாதுஎன்பது சித்தர்களின் அறிவியல் கோட்பாடு. கேடடைந்த வாதக்குற்றத்தைத் தன்னிலைப்படுத்த, ‘பேதியால் வாதந்தாழும்எனும் கோட்பாட்டுக்கிணங்க, பேதிக்கு மருந்து எடுத்துக்கொண்டு, பிறகு மருந்து உட்கொள்வது நலம்.
சங்கன் குப்பி இலைகளைப் பச்சையாக அரைத்துக் கரப்பான், படைகள் மீது பூசி, அரை மணி நேரம் கழித்துக் கடலைமாவு அல்லது பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளித்து வந்தால் குணமாகும்.
சங்கன் குப்பி இலைகளைத் தண்ணீரில் போட்டுச் சூடுபடுத்தி மிதமான சூட்டில் குளித்து வந்தால், உடலில் ஏற்படும் சொறி, எரிச்சல் ஆகியவை குணமாகும். தினமும் சங்கன் குப்பி இலையைத் தேடிச் சென்று பறிக்க இயலாத வர்கள், இந்த இலைச் சாற்றுடன் சமஅளவு சிற்றாமணக்கு எண்ணெயைச் சேர்த்துத் தைலமாகக் காய்ச்சி வைத்து இரவு படுக்கப்போகும் முன் 5 மில்லி அளவு குடித்து, தோல் நோய்களைக் குணப்படுத்திக் கொள்ளலாம்.

சங்கன் குப்பிச் செடியின் இலை, தண்டு ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து  100 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு லிட்டர் தண்ணீரில் இட்டு, கால் லிட்டராகச் சுண்டும் வரை காய்ச்சி ஒரு ஃப்ளாஸ்கில் ஊற்றி வைத்துக்கொள்ள வேண்டும். இக்கஷாயத்தை நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்துவந்தால் நாள்பட்ட காய்ச்சல், விட்டுவிட்டு வரும் காய்ச்சல் ஆகியவை குணமாகும்.
சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் விப்புருதி எண்ணெய், மதனகாமேதவர இளகம், சித்தவல்லாதி இளகம், மாந்த எண்ணெய், கருவளர்க்கும் எண்ணெய், மேகாரி தைலம், பூவரசங்காய் எண்ணெய், இடிவல்லாதி மெழுகு, பேய்ச்சொறி சூரணம்என நூற்றுக்கணக்கான மருந்துகளில் சங்கன் குப்பி இலை மற்றும் வேர் சேர்க்கப்படுகின்றன.

முள் சங்கன்
இதுவும் அனைத்து பக்கங்களிலும் கிளை பரப்பி உயரமாகவும் படர்ந்து வளரக்கூடியதாகவும் உள்ள புதர்த் தாவரம். ஒவ்வோர் இலைக் கோணத்திலும் நான்கு முள்கள் இருக்கும். எனவேதான்டெட்ராகேன்தாஎன்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதுவும் மிகச்சிறந்த வேலித் தாவரம். இதைக்கொண்டு வேலி அமைத்துவிட்டால், எவரும் உள்ளே நுழைய முடியாது. அந்தளவுக்கு அடர்த்தியாகவும், முள்கள் நிறைந்த புதராகவும் காணப்படும். இதன் இலை, வேர், வேர்ப்பட்டை ஆகியவை சிறந்த மருத்துவப் பயன் வாய்ந்தவை. இதன் இலைகள், சளி சம்பந்தமான கப நோய்களை முழுவதுமாகக் குணமாக்குகின்றன. முள் சங்கன் இலை, தூதுவளை இலை ஆகிய இரண்டிலும் கைப்பிடியளவு எடுத்து நன்கு அரைத்து ஐந்து கிராம் அளவு உட்கொண்டு வந்தால், நாள்பட்ட சளி நோய்கள் குணமாகின்றன. இந்த இலைகளை அம்மைப் புண்கள் மீது பூசினால், எரிச்சல் குணமாகும். கரப்பான் புண்கள் மீது பூசி வர, புண்ணில் உள்ள செதில்கள் நீங்கும்.REPORT THIS AD

பிரசவித்த நாள் தொடங்கி ஏழு நாள்கள் வரை முள் சங்கன் இலை, வேப்பிலை ஆகிய இரண்டையும் ஒரு கைப்பிடியளவு பறித்து வந்து, நன்கு அரைத்து ஐந்து கிராம் அளவு வெறும் வயிற்றில் காலை, மாலை என இரு வேளைகள் சாப்பிட்டு, வெந்நீர் குடித்து வந்தால், கர்ப்பாசய அழுக்குகள் தடையின்றி நீங்கும். தாய்க்கு ஜன்னி இழுப்பு வராது

இம்மருத்துவமுறை, நரிக்குறவ மக்களிடம் இன்று வரை புழக்கத்தில் உண்டு. இயற்கையோடு இணைந்து வாழ்ந்துவரும் அம்மக்களில் குழந்தை பிரசவித்த மூன்று மணி நேரத்திலேயே வழக்கமான வாழ்க்கை முறைக்குத் திரும்பி விடுகிற பழக்கம் உள்ளது.
முள் சங்கன் இலை, வேர்ப்பட்டை ஆகியவற்றைச் சம எடையளவு எடுத்துத் தண்ணீர் விட்டு அரைத்து, சுண்டைக் காயளவு மாத்திரையாக உருட்டி நிழலில் காய வைத்துக் கொள்ள வேண்டும். காலை, இரவு உணவுக்குப் பிறகு ஒரு மாத்திரை வீதம் உண்டு வந்தால், பக்கவாத நோயால் உறுப்புகளில் ஏற்படும் விறைப்புத்தன்மை குறையும்.

முள் சங்கன் வேர்ப்பட்டையைக் குடிநீர் செய்து நல்லெண்ணெயுடன் காய்ச்சி தைலமாக வைத்துகொண்டு தலையில் தேய்த்தால், தலையில் ஏற்படும் காளாஞ்சகப்படை, தலைமுடி உதிர்தல், புழுவெட்டு, செம்பட்டை முடி ஆகியவை குணமாகும். பக்கவாதம், சரவாங்கிவாதம் போன்ற பெரும் வாத நோயாளிகளின் உடல் முழுவதும் ஒரு மதமதப்பு, எரிச்சல், திமிர் காணப்படும். இதனால் சில நோயாளிகள் கண்ணீர் விட்டு அழுவதும் உண்டு

முள் சங்கன் வேர்ப்பட்டையை நன்கு அரைத்து மூன்று முதல் ஐந்து கிராம் அளவு எடுத்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடித்துவர இந்த நோய்கள் குணமாகும். கன்னப்புற்றுநோயைக் குணமாக்கும் சித்திரமூலக் குளிகை தயாரிக்க, முள் சங்கன் இலைச்சாறு பயன்படுத்தப்படுகிறது. உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து வாதநோய்கள், தோல்நோய்கள், மகப்பேறு நோய்கள், காசநோய், தலையில் தோன்றும் நோய்கள் ஆகியவற்றில் சேர்க்கப்படுகிற முள் சங்கன் தாவரம் இன்று அழிவின் விளிம்பில் உள்ளது. இயற்கை உயிர்வேலிகள் அமைக்க இவற்றைப் பயன்படுத்தினால் இத்தாவரத்தைக் காப்பாற்ற முடியும்.

 சங்குப்பூ

கோயில் நந்தவனங்கள், வேலிச்செடிகள் ஆகியவற்றில் பரவலாகக் காணப்படும் கொடி இது. சங்கு வடிவில் பூக்கள் காணப்படுவதால் சங்குப்பூ என்று அழைக்கப்படுகிறது. வெள்ளை நிறத்தில் பூப்பூக்கும் இனத்தைசெருவிளைஎன்றும் நீல நிறத்தில் பூப்பதைகருவிளைஎன்றும் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. மருத்துவ நூல்களில் காக்கணம், காக்கணத்தி என்ற பெயர்களில் இது வழங்கப்படுகிறது. இதன் இலை, விதை, வேர் மூன்றும் சிறந்த மருத்துவப் பயன் உடையவை. நீல நிறப்பூவைவிட வெண்ணிறப்பூ பூக்கும் தாவரமே மருத்துவத்துக்குச் சிறந்தது என மூத்த மருத்துவ அறிஞர்கள் கருதுகின்றனர்.


பெருவாரியாகப் பயன்படுத்திப் பார்க்கையில் இவையிரண்டுமே மிகச் சிறப்பாகத்தான் உள்ளன. இதன் இலைகளுடன் உப்பு சேர்த்து அரைத்து, நெரிக்கட்டிகள் மீது பூசி வந்தால் வீக்கம் கரையும். யானைக்கால் நோயின் தொடக்க நிலைகளில் இதன் இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டினால் வீக்கம் குறையும். இதன் வேரை, பால் ஆவியில் அவித்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு, இரண்டு கிராம் அளவு காலை, மாலை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல் ஆகியவை குணமாகும். 15 நாள்கள் முதல் 40 நாள்கள் வரை சாப்பிட வேண்டியிருக்கும்..


குழந்தைகளின் வலிப்பு நோய்க்கு இதன் விதைப்பொடி சூரணம் நல்ல மருந்து. இதன் விதைகளைச் சேகரித்துப் பசு நெய்யில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு 300 மில்லி கிராம் முதல் 500 மில்லி கிராம் அளவு வரை எடுத்துத் தேனில் கலந்து, ஆண்டுக்கணக்கில் கொடுத்துவர வலிப்பு நோய் குணமாகும்

ஆங்கில மருந்து எடுத்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு இம்மருந்தையும் சேர்த்துக் கொடுத்தால் விரைவில் பலன் தெரியும்.
சங்குப்பூ விதைத்தூள் 140 கிராம், இந்துப்பு 140 கிராம், சுக்குத்தூள் 20 கிராம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

யானைக்கால் நோயின் தொடக்கக் காலத்தில் (ஆறு மாதங்களுக்குள்) இப்பொடியை மூன்று கிராம் அளவு சாப்பிட வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒரு கிராம் அளவு மருந்தின் அளவைக் கூட்டிக்கொள்ள வேண்டும். இப்படிச் சாப்பிட்டு வந்தால், நன்கு பேதியாகி யானைக்கால் வீக்கம், நெரிக்கட்டி வீக்கம் ஆகியவை குறையும்.


கஞ்சா

 

கஞ்சாவை மருத்துவப் பயன்பாடுகளுக்கு  பயன்படுத்த சட்டப்பூர்வமாகப் அனுமதிக்கலாம்' என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி பரிந்துரைத்துள்ளார். சில கட்டுப்பாடுகளோடு அந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள இந்தியா மத்திய அரசும் முடிவெடுத்திருக்கிறது

"கஞ்சா,  கன்னபியஸ் (Cannabias) என்ற குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரம்.  மூன்று முதல் ஏழு அடி வரை வளரக்கூடியது   இதில் உள்ள டி.ஹெச்.எல் (Tetrahydrocannabinol) என்னும் வேதிப்பொருள்களே  போதைக்குக் காரணமாகின்றது.


அறுவை சிகிச்சை மருந்து பண்டைய எகிப்தில் கண் வீக்கம் போக்கவும், கருப்பையினை குளிர வைக்கவும், கஞ்சா பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் இலைகளின் வடிசாறு அல்லது இலைகளை வலிபோக்கும் மருந்தாக அறுவை சிகிச்சையின் பொழுது பயன்படுத்தினர்.

 

வலி நிவாரணி 19ஆம் நூற்றாண்டில் தீவிர ஆய்வுகளுக்குப் பின்னர் வலி போக்கும் மருந்தாக பரவலாக சிபாரிசு செய்யப்பட்டது. விக்டோரியா மகாராணி வலி நிவாரணியாக இத்தாவரத்தினை பயன்படுத்தியுள்ளார் என்று தெரிகிறது.

மூன்று வகை மருந்துகள் பாங், கஞ்சா, சரஸ் போன்ற மூன்று வகையான மருந்துகள் இத்தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. உலர்த்தப்பட்ட இலைகள் பாங் எனப்படும். இது கரும்பச்சை வண்ணத்தில் காணப்படும். பெண் தாவரங்களின் மலர்கள் அல்லது கனிகள் கொண்ட பிசின் அகற்றப்படாத நுனிப்பகுதிகள் கஞ்சா எனப்படும். இது குறிப்பிட்ட வாசனை கொண்டது.

பசியை தூண்டும் பாங் மற்றும் கஞ்சா பசியை தூண்டுகிறது. நரம்பு செயல்களையும் தூண்டுகிறது. இது மலமிளக்கியாகவும் தரப்படுகின்றன. இலைகளை கசக்கி அதிலிருந்து பெறப்பட்ட பிசின் போன்ற பொருளே சரஸ் எனப்படும். இது கரும்பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும்.

மனநோய்க்கு மருந்து மனமாறாட்டம், மனநோய், ஆகியவற்றிர்க்கு மருந்தாக சரஸ் சிபாரிசு செய்யப்படுகிறது. இது ஆஸ்துமா, டெட்டனஸ் போன்ற நோய்களுக்கு மருந்தாகிறது. உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கிறது. மனச்சோர்வு போக்கும். தூக்கத்தை தூண்டுவதாக இது பயன்படுகிறது.

மலச்சிக்கலை போக்குகிறது இலைகளின் சாறு பூச்சிகளை அழிக்கின்றது. விதைகள் சிறந்த மலமிளக்கி. குறிப்பாக முதியவர்களின் மலச்சிக்கலை போக்க வல்லது. இத்தாவரம் கிளாக்கொமா, உயர் ரத்த அழுத்தம், போக்க பயன்படுகிறது. தாவரத்தின் கசாயம் இரத்த வயிற்றுப்போக்கினைத் தடுக்கிறது.

புற்றுநோய்க்கு மருந்தாகும் கஞ்சா அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் நோய்க்கு மருந்தாக கஞ்சா பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே வரிசையில் இந்தியாவிலும் கஞ்சாவை மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். குறிப்பாக புற்றுநோய் குணப்படுத்துவதில் கஞ்சா முக்கிய பங்கு வகிக்கிறது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் மேனகா காந்தி.


அகோரிகளில் தொடங்கி சாமியார்கள் வரைக்கும் கஞ்சா எடுத்துக்கொள்வதை கேள்விப்பட்டிருப்போம். அக்காலத்தில் பக்தி வழிபாட்டுடன் தொடர்புடையாக மூலிகையாக ஞ்சா விளங்கியது. இது சிவனின் மூலிகை என்று அழைக்கப்பட்டதன் பின்னணியில், கோரக்கர் சித்தரின் பங்கும் உண்டு. இந்த மூலிகையை முதலில் கண்டுபிடித்தவர் கோரக்கர் சித்தர். தெய்வீக நிலையை அடையும் உணர்வை கொடுப்பதால், கடவுளுடன் தொடர்புபடுத்தி, சிவபானமாக பிற்காலத்தில் அறியப்பட்டது.

 சாம்பிராணி மர இலைகள்

இந்தியா முழுவதும் குறிப்பாக ராஜஸ்தான், தென்னிந்தியாவிலும், காடுகசாம்பிராணிச் செடியானது சிறிய செடியாக எளிதில் உடையும் தண்டுடன் இருக்கும்இதன் இலைகள் வெளிர்பச்சையாக வெற்றிலை வடிவத்தில் இருக்கும்இலை இரண்டு மில்லிமீட்டர் கனம் உள்ளதாக இருக்கும்இலையின் மேலும்கீழும் நுண்ணிய துணை இலைகள் படர்ந்திருக்கும்இந்த இலையைக் கசக்கினால் நல்ல வாசனை வரும். 


ளிலும் வளர்கிறது. இதன் இலைகள் மருத்துவத்தில் அதிகம் பயன்படுகின்றன. கை வைத்தியமாகவும், மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பித்தப்பை கல் உண்டாவதைத் தடுக்கும் குணம் கொண்டது. தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். நாள்பட்ட இருமல், செரிமானக்கோளாறு, வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு நல்ல மருந்தாக இலைச்சாறு பயன் தருகிறது. கண் அழற்சிக்கு இதன் சாறு மேல் பூச்சாக தடவ பயன்படும். 

மருத்துவத் துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரி செய்யவும், சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது. தேமல் உள்ள இடங்களில் காலையும், மாலையும் வெந்நீரால் கழுவிச் சுத்தம் செய்து அதன் மேல் சாம்பிராணி இலைச் சாற்றைத் தேய்த்து வந்தால் தேமல் மறையும். தலைவலி தோன்றிய நேரத்தில் சாம்பிராணி இலையைக் கசக்கி அதன் சாறை நெற்றிப் பொட்டில் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குணமாகும். 

இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட சாம்பிராணி இலைகளை நீரில் போட்டு ஊறவைத்துக் குளித்தால் ஜலதோசம், இருமல், சளி, தலைவலி ஆகிய நோய்கள் அண்டாது என்பதுடன் குளித்தபின் நல்ல வாசனையாகவும் இருக்கும். மேலும் தேமல் போன்ற தோல் நோய்களும் குணமாகும் என்பதால் தான் ஔவையார் சாம்பிராணி இலைகளை ஊறப்போட்ட நீரில் நாள்தோறும் குளிக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். சாம்பிராணி இலைகள் அடித்தட்டு மக்களாலும் வாங்கப் படக்கூடியது என்பது செய்தி.

 18 வகை மூலிகை சாம்பிராணி தயாரிக்கத் தேவையான பொருட்கள்

1.சாம்பிராணி 2.விலாமிச்சை வேர்

3.தும்பை 4.தேவதாறு

5.அருகம்புல் 6.குங்கிலியம்

7.வேப்ப இலை 8.நொச்சி இலை

9.வில்வ இலை 10.வெண்கடுகு

11.கருங்காலி 12.நன்னாரி

13.வெட்டிவேர் 14.நாய்க்கடுகு

15.ஆலங்குச்சி 16.அரசங்குச்சி

17.நாவல் குச்சி 18.மருதாணி விதை

போன்ற 18 வகையான மூலிகைகளை தனித்தனியாகப் பொடித்து சம அளவு எடுத்து கலந்து காற்று புகாத பாத்திரத்தில் சேமித்து வைத்து உபயோகப்படுத்தலாம்.

இந்த மூலிகை கலவையை கொண்டு தூபம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் (சிவனடியார் கூறியது, சோதித்து பார்க்கப்பட்டது மேலும் பரிசோதனைக்கு உட்பட்டது)

1.கணபதி மற்றும் நவ கிரக ஹோமம் செய்த பலனை எளிமையாக பெறலாம் (தடைகள் விலகும், எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும், நவ கிரக தோஷங்கள் நீங்கிவிடும், எதிரிகள் தொல்லை, இறந்தவர்களின் சாபம் போன்றவை போய் விடும்)

2.கடை மட்டும் தொழில் நிலையங்களில் உபயோகப்படுத்த வியாபாரம் பெருகும், எதிரிகள் தொல்லை விலகும்.

3.வீட்டில் நல்ல சக்திகள் நிலை பெறும், வீண் சண்டை, அமைதி இன்மை, தூக்கமின்மை போன்றவை அகலும்.

4.நோய் தொல்லை நீங்கும், எந்த விஷ கிருமிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டில் தங்காது.

 செப்புக்குடம்

வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும்.மாசம் நூற்றுக்கணக்கான ரூபாய் மிச்சமாகும். சித்தர்கள் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா?

செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரைவைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு

ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை என்று அந்த நிறுவனம் அறிவித்தது

இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்து தான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கின்ற தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் 'மினரல் வாட்டர்' மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம். செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும்.

மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகளில் செம்புக்குடம்தான். இன்றைக்கும் சில கிராமங்களில் செம்பு குடத்தில் தான் தண்ணிர் குடிக்கிறார்கள்.

தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும். பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம்.

தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையில் அறிவியல்

சார்ந்த உண்மை ஏதேனும் உள்ளதா? வாங்க பார்க்கலாம்!

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! இந்திய பண்பாட்டின் படி, தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது.

 அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும். இயற்கை தந்த வரப்பிரசாதமான இளநீரில் நிறைந்துள்ள நன்மைகள்!!! அறிவியலின் பார்வையில், தாமிரம் என்பது உடலுக்கு தேவையான தாமிரமாகும்.

இதுப்போக, தண்ணீர் மக்கி போகாமல் இருக்க தாமிரம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக செயல்படும். அதனால் தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர், நாட்கணக்கில் நற்பதத்துடன் விளங்கும். தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் பல்வேறு உடல் நல பயன்கள் கீழ்வருமாறு:

1) பாக்டீரியாக்களை கொல்லும் தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது தாமிரம். முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் -கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும். அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும்.

2) தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் தாமிரம் என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது.பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.

3) கீல்வாத வலியை குணப்படுத்தும் தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.

4) புண்களை வேகமாக குணப்படுத்தும் புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும்.

5) மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது. இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும்.

6) செரிமானத்தை மேம்படுத்தும் வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.

7) இரத்த சோகையை எதிர்க்கும் நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.

8) கர்ப்ப காலத்தின் போது: கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.

9) புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும் தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.

10) வயதாகும் செயல்முறை குறையும் தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.

 124 பிற்காலச் சோழர் சரித்திரம் அதற்கு இராசராசேச்சுரம் என்று பெயரிட்டு நாள் வழி பாட்டிற்கும் விழாக்களுக்கும் நிவந்தங்கள் வழங்கிச் சிறப்பித் துள்ளான். அம்மாடக்கோயில் பிற்காலச் சோழர் காலத்துச் சிற்பத்திறத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இராசராசனது பெருமைக்கும் புகழுக்கும் சிவபத்திக்கும் ஒரு கலங்கரை விளக்காகவும் கண்டோர் யாவரும் வியக்குமாறு வானளாவ நின்று நிலவுவது யாவரும் அறிந்ததொன்றாம்.பாண்டிய குலாசனி வள நாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பித்த திருக்கற்றளி இராஜராஜேச்வரம்' என்னுங் கல்வெட்டுப் பகுதியினால் 2 இராசராசன் கோயில் எடுப்பித்த இடமும் அக்கோயிலின் பெயரும் அஃது அமைந்துள்ள நாடும் வள நாடும் நன்கு புலனாகும். இனி, இவன் எடுப்பித்த இராசராசேச்சுரம் என்னும் அக்கோயில் 793 அடி நீளமும் 397 அடி அகலமும் உடையது'.

அதன்கண் அமைந்துள்ள நடுவிமானம் 216 அடி உயரம் உடையது . அதன் உச்சியில் போடப்பெற்றிருப் பது ஒரே கருங்கல். அஃது ஏறக்குறைய எண்பது டன் எடையுள்ளது என்றும் விமானத்தின்மேல் அமைக்கப் பெற்றுள்ள செப்புக்குடம் 3083 பலம் நிறையுடையது என்றும் அக்குடத்தின் மேல் போடப்பட்டுள்ள பொற்றகடு 2926) கழஞ்சு கொண்டது என்றும் அவற்றை ஆராய்ந்த அறிஞர்கள் கூறுகின்றனர்.

செருப்படை
செருப்படை முழுத் தாவரமும் கார்ப்புச் சுவையையும், வெப்பத் தன்மையும் கொண்டது. உடல் வெப்பத்தை அதிகரிக்ச் செய்யும். மலம், சிறுநீர் ஆகியவற்றை பெருக்கும். சளியை முற்றிலும் குணப்படுத்தும்.
தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி. சொர சொரப்பான தாவரம். இலைகள் நீள் வட்டம் அல்லது முட்டை வடிவமானவை. மெழுகு பூசினாற் போன்றவை. மலர்கள் சிறியவை.
இந்தியா முழுவதும் பரவலாக சமவெளிகள் கடற்கரையோரங்கள், தரிசு நிலங்கள், பாழ் நிலங்கள், ஆற்றுப் படுகைகளில் களைச் செடியாக காணப்படும். பயிர் செய்யப்பட்ட நிலங்களில் அறுவடைக்கு பின்னர் அபரிதமாக வளரும்.
இதற்கு பெரியசெருப்படை, பெருஞ்செருப்படை போன்ற பெயர்களும் உண்டு. முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படும்.
சிரங்கு கட்டுபட செருப்படைச் சாறு, வெள்ளை வெங்காயச் சாறு ஆகியவை வகைக்கு 30 மிலி உடன் சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து வடிகட்டி காலையில் மட்டும் குடிக்க வேண்டும். 4 நாள்கள் இவ்வாறு செய்ய வேண்டும்.
வெள்ளைப்படுதல், சிறு நீர் எரிச்சல் ஆகியவை குணமாக செருப்படை முழுத் தாவரத்தையும் சேகரித்து நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு 20கிராம் அளவு நசுக்கி 4 டம்ளர் நீரில் இட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனை வேளைக்கு 30 மிலி அளவாக தேவையான அளவில் பனை வெல்லம் சேர்த்து தினமும் இரண்டு வேளைகள் குடித்து வரவேண்டும்.

நாவறட்சி, விக்கல் ஆகியவை தீர-செருப்படை, மிளகு, திப்பிலி ஆகியவற்றை தனித்தனியாக சுட்டு அவற்றின் சாம்பலைச் சம அளவாக ¼ தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து ஒரு மணிக்கு ஒரு முறை நாக்கில் தடவ வேண்டும்.


பூனை மீசை


இதன் பூக்கள் பூனை மீசை போன்று இருப்பதால் இந்த மூலிகைக்கு பூனை மீசைஎன்று பெயர் வந்தது. இதன் இலைகளுடன் மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து காலை, மாலை சாப்பிட்டு வர சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் தீரும்.இது சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், சிறுநீரக செயல் இழப்பு , கல்லீரல் புகார்கள், சிறுநீரக கோளாறுகள் போன்ற நோய்களுக்கான அற்புத மூலிகை பூனை மீசை மூலிகை. கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய், கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிறப்பாகசெயல்படுகிறது

தேவை இல்லாத உடலில் உள்ள கெட்ட நீரை வெளியற்றுகிறது. சிறுநீரகத்தின் செயல் திறனை அதிகபடுத்துகிறது.சர்க்கரை நோய் , இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும்  காலை,மாலை வேளைகளில் இதன் சாறு அருந்துவதன் மூலம் கட்டுக்குள் கொண்டுவரலாம்.இந்த கசாயம் தயாரிக்க, பூனை மீசை மூலிகையை  நல்ல நீரில் காய்ச்சி ஒரு குவளை கால் குவளையாக வரும் வரை செய்து குடிக்க வேண்டும்.சிறுநீரக செயல் இழப்பு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள யூரியா அளவு அதிகமாயிருந்தால் சராசரி அளவை நோக்கி குறைந்து வரும் .அதாவது உப்பு சத்தின் அளவு இரத்ததில் அளவு  குறையும். சிறுநீரக கற்களை கரைப்பதில் சிறந்தது .நுரையீரலை சுத்தம் செய்யும் ஆரோக்கிய பானம்!!

நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிசனை உள் எடுத்துக்கொள்வதற்கும் கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. மனித உடலுறுப்புகளில் முக்கியமான ஒன்று நுரையீரல்.

புகைப்பிடிப்பதால் ஆக்ஸிஜனோடு சேர்த்து நச்சுப் பொருட்களான நிக்கோடின், தார் மற்றும் காட்மியம் போன்றவையும் உள்ளே சென்று நுரையீரலின் உள்ளே தங்கிவிடும். இவையெல்லாம் அதிகமாக சேரும் போது நுரையீரல் கருப்பாக மாறுகிறது.

அப்படிப்பட்ட நச்சுப் பொருட்களில் இருந்து உங்களது நுரையீரலிலை காப்பாற்றி, நுரையீரல் புற்றுநோயில் இருந்தும் காப்பாற்றி  உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்த பானத்தை தயாரித்து குடித்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
 * ஒரு பெரியத் துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கியது
* 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
* 4 வெங்காயத்தைப் பொடியாக நறுக்கியது
* 250 கிராம் சர்க்கரை

* ஒரு லிட்டர் தண்ணீர்
 இஞ்சியில் நோய் தொற்றுகளை நீக்கும் பண்பும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் அதிக அளவில் உள்ளது. நோய் தொற்றுகளை நீக்கும் பண்பு உள்ளது. இது பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழிக்கக்கூடியது. வெங்காயத்தில் புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் அதிகம் இருக்கிறது. இவை நுரையீரலில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றிவிடும்.

செய்முறை:
 ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். அதில் நறுக்கிய இஞ்சியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடுங்கள். அடுத்ததாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து சற்று நேரம் கொதிக்க  விடுங்கள். பின்னர் மஞ்சள் தூளை சேர்த்து மிதமான தீயில் அடுப்பில் வைத்திருங்கள். ஊற்றிய நீரின் அளவு பாதியாக குறைந்ததும் அடுப்பை நிறுத்தி விடுங்கள். இறுதியாக கொதிக்க வைத்ததை எடுத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில்  பதப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

அதிலும் உங்கள் நுரையீரலை மூன்றே நாட்களில் சுத்தம் செய்யும் வழிமுறை

1-மூலிகை தேநீர் நுரையீரலை சுத்தம் செய்யும் முந்தைய நாள் இரவு படுக்கும் முன் ஒரு கப் மூலிகை தேநீர் குடிக்க வேண்டும். இதனால் குடலில் இருந்து அனைத்து வகையான டாக்ஸின்களும் வெளியேறும். மேலும் நுரையீரலுக்கும் உடலுக்கும் போதிய ஓய்வு அளிக்க வேண்டும். அதற்கு இந்நாட்களில் அதிகப்படியான கடுமையான வேலைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.


2-எலுமிச்சை நீர் நுரையீரலை சுத்தம் செய்யும் முதல் நாளன்று காலை உணவிற்கு முன் 2 எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து, 300 மிலி நீரில் கலந்து குடிக்க வேண்டும்.

3-அன்னாசி ஜூஸ் 1 மணிநேரம் கழித்து, அன்னாசி ஜூஸ் 300 மிலி குடிக்க வேண்டும். இந்த ஜூஸில் சுவாச மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது.


4-கேரட் ஜூஸ் காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் 300 மிலி சர்க்கரை சேர்க்காத கேரட் ஜூஸ் குடிக்க வேண்டும். கேரட் ஜூஸானது இரத்தத்தை இந்த மூன்று நாட்களும் அமிலத் தன்மையில் இருந்து காரத்தன்மைக்கு மாற்றி பராமரிக்கும்.

5-பொட்டாசியம் அதிகம் நிறைந்த ஜூஸ் மதிய உணவின் போது 400 மிலி பொட்டாசியம் அதிகம் நிறைந்த ஜூஸ் ஒன்றை குடிக்க வேண்டும். இது மிகவும் சிறப்பான நுரையீரலை சுத்தப்படுத்தும் டானிக் போன்று செயல்படும். பொட்டாசியம் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களாவன பீட்ரூட், தக்காளி, அவகேடோ போன்றவை குறிப்பிடத்தக்கவை.

6-கிரான்பெர்ரி ஜூஸ் இரவு படுக்கும் முன் 400 மிலி கிரான்பெர்ரி ஜூஸ் குடிக்க வேண்டும். இவை நுரையீரலில் தொற்றுக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும். கிரான் பெர்ரி கிடைக்காவிட்டால், சிவப்பு திராட்சை அல்லது ஆரஞ்சு ஜூஸை நீர் மற்றும் சர்க்கரை சேர்க்காமல் குடிக்கவும்.

உடற்பயிற்சி மேற்கூறியவற்றை மூன்று நாட்கள் பின்பற்றும் போது, தவறாமல் உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும். அதிலும் வியர்வை நன்கு வெளியேறும் படி குறைந்தது 20 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இதனால் வியர்வையின் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
வெதுவெதுப்பான நீர் குளியல் தினமும் 20 நிமிடம் வெதுவெதுப்பான நீரினால் குளியலை மேற்கொள்ள வேண்டும்.
ஆவி பிடிக்கவும் கொதிக்கும் நீரில் 5-10 துளிகள் யூகலிப்டஸ் எண்ணெய் ஊற்றி, நீர் குளிரும் வரை ஆவி பிடிக்க வேண்டும். அப்படி ஆவி பிடிக்கும் போது, அந்நீராவியை சுவாசிக்க வேண்டும். இதனால் மூச்சுக்குழாயில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும். மேலும் ஆவி பிடித்த பின் சுத்தமான துணியால் முகத்தை துடைத்தால், முகமும் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.

மேற்கூறியவற்றை மூன்று நாட்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தால், ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி, மூச்சுத்திணறல், சைனஸ் போன்றவை விரைவில் குணமாகும்.

மூக்குத்தி பூச்செடி


மூக்குத்தி பூச்செடி என்றால் பல பேருக்கு தெரியாது. தாத்தா தலைவெட்டி பூ என்றால் எல்லோருக்கும் தெரியும்.


இந்த செடியில் இருக்கும் காய்க்கு விஷத்தன்மை உண்டு என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கட்டாயம் இந்தச் செடியில் இருக்கும் காயை சாப்பிட கூடாது என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த மூக்குத்திப்பூ செடியானது மஞ்சள் நிறப் பூ, வெள்ளை நிறப் பூ, ஊதா நிற பூ என்ற மூன்று விதமான நிறங்களில் பூக்கும் செடிகள் மூன்று வகையில் உள்ளது.

தலைவலிக்கு நிவாரணம்: இந்த மூக்குத்திப் பூ செடி இலைகளை பறித்து நன்றாக கழுவி, மிளகு ரசத்தில் போட்டு ஒரு கொதிவிட்டு, அந்த ரசத்தை குடித்தால் உடம்பில் இருக்கும் சீத்தளத்தை வெளியேற்றி விடும். அதாவது சளி பிரச்சனை, தலை பாரம், தலையில் நீர் கோர்த்தல், இப்படிப் பட்ட பிரச்சினைக்கு நிவாரணமாக இந்த ரசம் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இரத்த காயத்திற்கு மருந்து: நம்முடைய உடலில் கீழே விழுந்தாலோ அல்லது ஏதாவது வெட்டு காயம் பட்டு ரத்தம் இடைவிடாமல் வந்துகொண்டே இருக்கும் சமயத்தில், இந்த மூக்குத்தி பூவின் செடியின் இலையை பறித்து உள்ளங்கைகளை வைத்து கசக்கினால் சாறு வரும். அந்த சாறை காயத்தின் மீது போட்டால் ரத்தம் உடனடியாக நிற்கும்.

உங்களை அழகாகமாற்றப்போகும் இயற்கை குளியல் பொடியை தயார் செய்வது எப்படி?

உங்களுடைய சருமமானது அடுத்தவர்கள் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு மாறவேண்டும் என்றால், செயற்கையான சோப்புகளை தவிர்த்துவிட்டு, இயற்கையாகவே அழகு தரும் பொருட்களைப் பயன்படுத்தி குளிப்பது மிகவும் நல்லது. அப்படி ஒரு பொடியை தயார் செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் பொடியை தயார் செய்ய தேவைப்படும் பொருட்கள்: பச்சைப்பயறு-1/2 kg கஸ்தூரி மஞ்சள்-100g பூலாங்கிழங்கு-100g ஆவாரம்பூ-100g காய்ந்த ரோஜா இதழ்கள்-100g வெட்டி வேர்-100g


இதில் பச்சை பயிறு மட்டும் மளிகைக் கடையிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். மற்ற பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உங்கள் வீட்டில் ரோஜா பூ இருந்தால் அல்லது நீங்களே கடையிலிருந்து ரோஜா பூவை வாங்கி உலர வைத்தும் பயன்படுத்திக்கொள்ளலாம். வெட்டிவேரை வாங்கி வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு இவை அனைத்தையும் ரைஸ் மில்லில் கொடுத்து நைசாக அரைத்து தரும்படி வாங்கிக் கொள்ளவும்.

உங்கள் வீட்டில் எலுமிச்சை பழத் தோலை சேகரிக்க முடிந்தால், சேகரித்து, காய வைத்து  பத்திலிருந்து பதினைந்து எலுமிச்சை தோள்களையும் இந்த கலவையோடு சேர்த்துக் அரைத்துக் கொண்டால் இன்னும் நல்லது. நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த பொடியினை காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை கண்ணாடி பாட்டிலிலோ, எவர்சில்வர் டப்பாவிலோ சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைக்க வேண்டாம்.

தினம்தோறும் குளிக்க செல்லும் போது ஒரு ஸ்பூன் குளியல் பவுடரை சிறிய கிண்ணத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து குழைத்துக் கொள்ள வேண்டும். அந்த விழுதை உடம்பு முழுவதும் உள்ளங் கைகளால் நன்றாக மசாஜ் செய்து 5 நிமிடம் ஊற வைத்து குளித்தால் போதும். பிறந்த குழந்தையில் இருந்தே இந்த குளியல் பவுடரை பயன்படுத்தலாம். எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படுத்தாது. சருமம் பளபளப்பாக மாறும்.

இதில் தேவையற்ற முடிகளை பெண் பிள்ளைகளுக்கு வளரவிடாமல் தடுக்கும் பூலாங்கிழங்கு சேர்க்கப்பட்டுள்ளது. வியர்வை நாற்றம் வரவே வராது. சென்ட் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியமே இருக்காது. ஒரு மாதம் மட்டும் தொடர்ந்து இந்த தூளை பயன்படுத்தி, குளித்து வந்தால் நல்ல வித்தியாசத்தை உணரமுடியும். சோப்பை தள்ளிவைத்துவிட்டு இதை பயன்படுத்தி தான் பாருங்களேன்!

கேரட் எண்ணெய்


.

இது கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முடியின் அடர்த்தியையும் உறுதிப்படுத்துகிறது. வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு ஷாம்பு தேய்த்து குளிப்பதற்கு முன்னால் கேரட் எண்ணெயை நன்றாக தலையில் தேய்த்து ஊறவைத்து பிறகு குளித்தால் முடி ஸ்மூத்தாக இருக்கும்.அழகான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசையா? அதனுடன் சேர்த்து உங்கள் சருமமும் பொலிவாக இருக்க வேண்டுமா? அப்படி என்றால் நீங்கள் கேரட் எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். இந்த கேரட் எண்ணெய்யைப் பயன்படுத்துவதால் நீங்கள் இளமையாகவும் தோன்ற முடியும்.

கேரட் எண்ணெய், வறண்ட சேதமடைந்த கூந்தலுக்கு ஒரு இயற்கையான புத்துணர்ச்சியைத் தருகிறது. மேலும் இதில் பல வித நன்மைகளும் உள்ளன. கேரட் எண்ணெயில் வைட்டமின் ஈ, வைடமின் ஏ, பீட்டா கரோடின் மற்றும் இதர ஊட்டச்சத்துகள் இருப்பதால் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள், புண் போன்றவை மறைகின்றது. இந்த பல்வேறு ஊட்டச்சத்துகள் வயது முதிர்விற்கான அறிகுறிகளைக் குறைக்கிறது, பல்வேறு சரும பிரச்சனைகளையும் போக்க உதவுகிறது.

கேரட் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள் :

கேரட் அல்லது ஆர்கானிக் கேரட் - 2 அல்லது 3.
ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் .

செய்முறை:

கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். . துருவிய கேரட்டை ஒரு பேன் அல்லது கிராக் பாட்டில் போடவும். . உங்களுக்கு விருப்பமான ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை சேர்க்கவும். . கேரட் துருவல் முழுவதும் மூழ்கும் அளவிற்கு எண்ணெயை ஊற்றவும். . இப்படி செய்வதால் கேரட் முழுவதும் எண்ணெயில் ஊறி அடியில் தங்கி விடும். 

இருபது நிமிடம் குறைந்த வெப்பநிலையில் சூடாக்கவும். அலுமீனியச் சட்டி உபயோகிக்காமல் இருப்பது நல்லது. நன்றாக ஊறியவுடன் கேரட் மிகவும் மென்மையாக மாறி, அந்த எண்ணெய் முழுவதும் ஆரஞ்சு நிறமாக மாறி விடும். அப்போது அடுப்பை நிறுத்திவிட்டு ஆற விடவும். . அடுத்த 24 மணி நேரம் இந்த கேரட் எண்ணெயிலேயே ஊறட்டும். . ஆறியவுடன், ஒரு வடிகட்டி பயன்படுத்தி எண்ணெய்யை வடிகட்டிக் கொள்ளவும். . பிறகு அதனை ஒரு கண்ணாடி குடுவையில் ஊற்றி வைக்கவும்.

இப்படி தயாரிக்கும் கேரட் எண்ணெய் கூந்தலுக்கு பல அற்புதங்களை செய்கிறது. தலைக்கு ஷாம்பூ தேய்த்து குளிப்பதற்கு முன்னால் இந்த எண்ணெய்யை தலையில் தடவிக் கொள்ளலாம். இப்படி செய்வதால் உங்கள் கூந்தல் எண்ணெய்யை உறிஞ்சி, தலை முடிக்கு ஈரப்பதம் அளித்து, அழகாக்குகிறது. இந்த கேரட் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோடின் போன்றவை சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஈ சத்து, உங்கள் கூந்தல் மற்றும் உச்சந்தலையை சேதங்களில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இது முடி உதிர்வைத் தடுத்து, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

குழந்தை பாக்கியம் தரும் - துரியன்




குன்னூர் பர்லியார் தோட்டக்கலைப் பண்ணையில் மருத்துவ குணம் கொண்ட துரியன் பழ சீசன் துவங்கியுள்ளது. குன்னூர் பர்லியார் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் துரியன் பழ மரங்கள் உள்ளன. ஆண்டு தோறும் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் முதல் சீசன் துவங்கும்.

இப்பழங்கள் குழந்தை பாக்கியம் தரும் ஆற்றலை கொண்டது என நம்பப்படுகிறது. உள்ளூர் மட்டுமல்லாமல், பிற மாவட்டம், வெளி மாநிலங்களை சேர்ந்த பலரும் முன்பதிவு செய்து துரியன் பழத்தை வாங்கி செல்கின்றனர். 

தற்போது, பர்லியார் பழப்பண்ணையில் உள்ள 33 மரங்களிலும் துரியன் பழங்கள் காய்க்க துவங்கியுள்ளன; இவற்றில் 13 மரங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த சீசனில் சுமார் 500 கிலோ பழங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிலோ 300 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

உங்கள் குழந்தை
    1மாதத்தில்- வாந்தி
    2மாதத்தில்-மகிழ்ச்சி
    3மாதத்தில்-மயக்கம்


    4மாதத்தில்-புளிப்பு
    5மாதத்தில்-தலைவலி
    6மாதத்தில்-வயிற்றுவலி
    7மாதத்தில்-வளை ஓசை
    8மாதத்தில்-சோர்வு 
    9மாதத்தில்- பயமும்
    10மாதத்தில்-மறுபிறவியுடன் சேயுடன் தாய்.

    உங்கள் குழந்தையின் G குழாய் அல்லது GJ குழாய் தற்செயலாக வெளியே இழுக்கப்பட்டால் என்ன செய்வது என்று அறியவும்.


    உங்கள் குழந்தையின் G குழாய் அல்லது GJ குழாய் தற்செயலாக வெளியேற்றப்பட்டால், நீங்கள் விரைவில் ஒரு ஃபோலே வடிகுழாயை அந்தப் பாதையில் செருக வேண்டும்.

    எல்லா நேரங்களிலும் உங்கள் குழந்தையுடன் அவசரகாலப் பொருட்களை வைத்திருக்க வேண்டும்.
    ஃபோலே வடிகுழாய் உங்கள் குழந்தையின் G குழாய் அல்லது GJ குழாயை விட ஒரு அளவு சிறியதாக இருக்க வேண்டும்.

    உங்கள் குழந்தையின் குழாய் முதன்முதலில் வைக்கப்பட்ட 8 வாரங்களுக்குள் தற்செயலாக வெளியேற்றப்பட்டால், ஃபோலே வடிகுழாயைச் செருகவும், ஆனால் உணவூட்டங்கள், மருந்துகள் அல்லது திரவங்களுக்கு வடிகுழாயைப் பயன்படுத்த வேண்டாம். ஃபோலே வடிகுழாயின் பலூனை நிரப்ப வேண்டாம்.

    உங்கள் குழந்தையின் குழாய் முதன்முதலில் போடப்பட்ட 8 வாரங்களுக்குப் பின்னர் தற்செயலாக வெளியேற்றப்பட்டால், ஃபோலே வடிகுழாயைச் செருகவும். ஃபோலே வடிகுழாய் வயிற்றில் இருப்பதை நீங்கள் சரிபார்த்தவுடன், ஃபோலே வடிகுழாயின் பலூனை ஊதி, அதை உணவூட்டங்கள், மருந்துகள் அல்லது திரவத்திற்குப் பயன்படுத்தவும்.

    உங்கள் பிள்ளைக்கு வயிற்றில் வாயு, கடுமையான வயிற்று வலி, வாந்தி, கசப்பு, அதிக காய்ச்சல், சுவாசிப்பதில் சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு இருந்தால் ஃபோலே வடிகுழாய் மூலம் உணவூட்டுவதை நிறுத்தவும்.

    நீங்கள் ஃபோலே வடிகுழாயைச் செருக முடியாவிட்டால், உங்கள் G குழாய் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும் அல்லது உங்கள் அருகிலுள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும்.

    காஸ்ட்ரோஸ்டமி குழாய்கள் (G குழாய்கள்) மற்றும் காஸ்ட்ரோஜெஜுனோஸ்டமி குழாய்கள் (GJ குழாய்கள்) ஆகியவை உணவூட்டல் சாதனங்களாகும். ஒரு G குழாயானது திரவ ஊட்டச்சத்து, மருந்து மற்றும் பிற திரவங்களை நேரடியாக இரைப்பைக்குள் செலுத்துகின்றது. 

    GJ குழாய் ஒன்று திரவ ஊட்டச்சத்து, மருந்து மற்றும் பிற திரவங்களை நேரடியாக சிறுகுடலுக்குள் (ஜெஜூனம்) செலுத்துகின்றது. G குழாய்கள் மற்றும் GJ குழாய்கள் இரண்டும் வயிற்றில் ஒரு சிறிய திறப்பு வழியாக வைக்கப்படுகின்றன. இந்தத் திறப்பு "ஸ்டோமா" என்று அழைக்கப்படுகிறது. உடலின் வெளிப்புறத்திலிருந்து இரைப்பை வரையுள்ள உணவுப் பாதை "பாதை" என்று அழைக்கப்படுகின்றது.

    உங்கள் பிள்ளைக்கு பலூன் வகை G குழாய் இருந்தால், அது தற்செயலாக வெளியே இழுக்கப்பட்டிருந்தால், பலூன் உடைந்துவிட்டதா என்று பார்க்கவும். பலூன் உடைக்கப்படாவிட்டால், அதை எப்படி செருகுவது என்று நீங்கள் கற்றுக்கொண்டிருந்தால், பலூன் வகை G குழாயை நீங்கள் மீண்டும் செருகலாம்.

    உங்கள் பிள்ளைக்கு பலூன்அற்ற G குழாய் அல்லது GJ குழாய் இருந்து அது தற்செயலாக வெளியே இழுக்கப்பட்டால், ஸ்டோமா மற்றும் உணவுப் பாதை மூடப்படுவதைத் தவிர்ப்பதற்கு ஒரு ஃபோலே வகைக் குழாயை இயலுமானளவு விரைவிலே அப்பாதையில் செருகுவது முக்கியம்.
    ஃபோலே வகை வடிகுழாய் உங்கள் குழந்தையின் G அல்லது GJ குழாயை விட ஒரு அளவு சிறியதாக இருக்க வேண்டும். உதாரணமாக, உங்கள் பிள்ளைக்கு 16 FR குழாய் இருந்தால், ஃபோலே வடிகுழாய் 14 FR ஆக இருக்க வேண்டும்.

    ஃபோலே வடிகுழாயை எவ்வளவு விரைவில் நீங்கள் செருகுகின்றீர்களோ, அவ்வளவுக்கு செருகுவது எளிதாக இருக்கும். குழாய் தற்செயலாக வெளியே இழுக்கப்படக் கூடுமாகையால், எல்லா நேரங்களிலும் ஃபோலே வடிகுழாய் மற்றும் அவசரகாலப் பொருட்களை உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
    உங்களுக்குப் பின்வரும் அவசரகாலப் பொருட்கள் தேவைப்படும்:

    உங்கள் குழந்தையின் குழாயை விட ஒரு அளவு சிறிய ஃபோலே வடிகுழாய்
    ஒரு கழுவும் துணி, சோப்பு மற்றும் நீர்
    வளவளப்பாக்கும் நீர் சார்ந்த ஜெல்லி
    ஒட்டுநாடா
    தொற்று நீக்கிய அல்லது கொதிக்க வைத்து வடிகட்டிய நீர்
    5 மிலி ஸ்லிப்-டிப் ஊசிக்குழல்கள் 3, பலூனை நிரப்ப நீரினால் நிரப்பப்பட்ட 1, pH ஐ சரிபார்க்க வெறுமையாக உள்ள 1 , குழாயை அலசிக்கழுவ நீரினால் நிரப்பப்பட்ட 1
    pH கீற்றுகள்
    வண்ண pH குறிப்பு வழிகாட்டி
    ஒரு அடாப்டர் அல்லது இணைப்புத் தொகுப்பு
    G அல்லது GJ குழாய் தற்செயலாக வெளியே இழுக்கப்பட்ட பிறகு ஃபோலே வடிகுழாயை எவ்வாறு செருகுவது என்பதை அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.
    G குழாய் வழிமுறைகள்
    GJ குழாய் வழிமுறைகள்
    முக்கிய குறிப்புகள்
    உணவூட்டல் குழாய்கள் என்றால் என்ன?
    G குழாய் ஒன்று தற்செயலாக வெளியே இழுக்கப்பட்ட பின்னர் ஃபோலே வடிகுழாயைச் செருகுதல்



    உங்கள் குழந்தையின் G குழாய் புதியதா அல்லது சிறிது காலம் வைத்திருந்ததா என்பதனைப் பொறுத்து ஃபோலே வடிகுழாயைச் செருகுவதற்கான படிமுறைகள் வேறுபட்டவை.


    G குழாயைப் பெற்ற எட்டு வாரங்களுக்குள்
    உங்கள் குழந்தையின் G குழாய் முதன்முதலில் வைக்கப்பட்ட எட்டு வாரங்களுக்குள் தற்செயலாக வெளியிழுக்கப்பட்டால், பின்வருவனவற்றைச் செய்யவும்.

    1. உங்கள் ஃபோலே வடிகுழாய் மற்றும் உங்கள் அவசரகாலப் பொருட்கள் அனைத்தையும் சேகரிக்கவும்.
    2. சோப்பு மற்றும் நீரினால் உங்கள் குழந்தையின் உணவூட்டல் குழாயைச் சுற்றியுள்ள சருமத்தையும் உங்கள் கைகளையும் கழுவ வேண்டும்.
    3. ஃபோலே வடிகுழாயின் நுனியை மசகு ஜெல்லி கொண்டு வழுக்கக் கூடியதாக்கவும். உங்களிடம் மசகு ஜெல்லி இல்லையென்றால், ஃபோலே வடிகுழாயின் நுனியைத் தண்ணீரில் நனைத்து ஈரலிப்பாக்கலாம்.
    4. உங்கள் ஆள்காட்டி விரல் கொண்டு ஃபோலே வடிகுழாயை அளவிடவும். உங்கள் பிள்ளையின் எடை 3 கிலோவுக்குக் (6.6 இறா.) குறைவாக இருந்தால், 3 முதல் 4 செ.மீ நீளத்துக்கு அளவிடவும். இது உங்கள் ஆள்காட்டி விரலின் பாதி நீளமாகும். உங்கள் பிள்ளையின் எடை 3 கிலோவுக்கு மேல் இருந்தால், குழாயை 4 முதல் 6 செ.மீ வரை அளவிட வேண்டும். இது உங்கள் ஆள்காட்டி விரலின் முழு நீளமாகும்.
    5. நீங்கள் அதிகமாகப் பயன்படுத்தும் கையால், நீங்கள் அளவிட்ட நீளத்தில் ஃபோலேயை ஸ்டோமாவுக்குள் செருகவும். ஃபோலே வடிகுழாயின் நுனி வயிற்றை அடைய இந்த நீளம் போதுமானதாக இருக்க வேண்டும்.
    6. உங்கள் குழந்தையின் அடிவயிற்றில் ஃபோலே வடிகுழாயைக் கட்டவும்.
    உங்கள் குழந்தையின் குழாய் முதன் முதலில் செருகப்பட்ட பிறகு குணமடைய எட்டு வாரங்கள் ஆகும். இந்தப் பாதை முழுவதுமாகக் குணமடையாததால், ஃபோலே வடிகுழாய் இரைப்பையில் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது.
    எனவே, உங்கள் பிள்ளைக்கு உணவூட்டங்கள், திரவங்கள் அல்லது மருந்துகளைக் கொடுக்க ஃபோலே வடிகுழாயைப் பயன்படுத்த வேண்டாம்.
    உங்கள் பிள்ளைக்கு வாயால் சாப்பிடவோ குடிக்கவோ முடியாவிட்டால், நீங்கள் ஒரு மூக்கு-இரைப்பைக் குழாயை, அதனைச் செய்ய உங்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தால், நாசித்துவாரத்தின் வழியாகச் செலுத்தலாம்.
    நீங்கள் ஃபோலே வடிகுழாயைச் செருகியவுடன் உங்கள் G குழாய் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும்.
    அவர்களைக் கிட்டவில்லை என்றால், விரைவில் அருகிலுள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும்.

    குழாயைப் பெற்ற எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாரங்களுக்குப் பிறகு

    உங்கள் குழந்தையின் G குழாய் முதலில் போடப்பட்ட எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாரங்களுக்குப் பிறகு வெளியே இழுக்கப்பட்டால், பின்வருவனவற்றைச் செய்யவும்.
    1. உங்கள் ஃபோலே வடிகுழாய் மற்றும் உங்கள் அவசரகாலப் பொருட்கள் அனைத்தையும் சேகரிக்கவும்.
    2. சோப்பு மற்றும் நீரினால் உங்கள் குழந்தையின் உணவூட்டல் குழாயைச் சுற்றியுள்ள சருமத்தையும் உங்கள் கைகளையும் கழுவ வேண்டும்.
    3. ஃபோலே வடிகுழாயின் நுனியை மசகு ஜெல்லி கொண்டு வழுக்கக் கூடியதாக்கவும். உங்களிடம் மசகு ஜெல்லி இல்லையென்றால், ஃபோலே வடிகுழாயின் நுனியைத் தண்ணீரில் நனைத்து ஈரலிப்பாக்கலாம்.
    4. உங்கள் ஆள்காட்டி விரல் கொண்டு ஃபோலே வடிகுழாயை அளவிடவும். உங்கள் பிள்ளையின் எடை 3 கிலோவுக்குக் (6.6 இறா.) குறைவாக இருந்தால், 3 முதல் 4 செ.மீ நீளத்துக்கு அளவிடவும். இது உங்கள் ஆள்காட்டி விரலின் பாதி நீளமாகும். உங்கள் பிள்ளையின் எடை 3 கிலோவுக்கு மேல் இருந்தால், குழாயை 4 முதல் 6 செ.மீ வரை அளவிட வேண்டும். இது உங்கள் ஆள்காட்டி விரலின் முழு நீளமாகும்.
    5. 5. நீங்கள் அதிகமாகப் பயன்படுத்தும் கையால், நீங்கள் அளவிட்ட நீளத்தில் ஃபோலேயை ஸ்டோமாவுக்குள் செருகவும். ஃபோலே வடிகுழாயின் நுனி வயிற்றை அடைய இந்த நீளம் போதுமானதாக இருக்க வேண்டும்.
    6. உங்கள் குழந்தையின் அடிவயிற்றில் ஃபோலே வடிகுழாயைக் கட்டவும்.
    7. ஃபோலே வடிகுழாயின் முடிவில் இருந்து வயிற்று உள்ளடக்கங்கள் வருவதை அனேகமாக நீங்கள் காண்பீர்கள். ஃபோலே வடிகுழாய் இரைப்பையில் இருப்பதற்கு இது ஒரு நல்ல அடையாளமாகும்.
    8. இரைப்பை உள்ளடக்கங்கள் ஃபோலேயில் இருந்து வெளியேறுவதை நீங்கள் காணவில்லையெனில், ஃபோலே இரைப்பையில் இருப்பதை சரிபார்க்க உங்களுக்கு வேறு வழி தேவைப்படும். இதைச் செய்ய, ஃபோலே வடிகுழாயின் முடிவில் ஒரு ஊசிக்குழலை இணைத்துப் பின்புறமாக உறிஞ்சி இழுக்கவும். ஃபோலே வடிகுழாயுடன் ஊசிக்குழலை இணைக்க நீங்கள் ஒரு அடாப்டர் அல்லது இணைப்பைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம்.
    9. ஊசிக்குழலில் உள்ள வயிற்று உள்ளடக்கங்களின் pH -ஐச் (அமிலத்தன்மை) சரிபார்த்து ஃபோலேக் குழாய் இரைப்பையில் இருப்பதை உறுதிப்படுத்தவும். பின்வருவன மூலம் ஃபோலே வடிகுழாய் இரைப்பையில் இருப்பதை நீங்கள் உறுதிப்படுத்தலாம்:
      • வயிற்று உள்ளடக்கங்களின் pH அளவீடு 6.0 அல்லது அதற்கும் குறைவாக உள்ளதா என சோதித்தல் (pH ஐ எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதைக் கீழே காண்க)
      • ஊசிக்குழலில் உள்ளவை வயிற்று உள்ளடக்கங்களைப் போல உள்ளனவா என அவதானித்தல்
    10. ஃபோலே நன்றாக வேலை செய்கிறது என்பதை உறுதிப்படுத்த 5 மிலி நீரினால் குழாயை அலசவும்.
    11. குழாயின் பலூன் வாயிலினூடாகப் பரிந்துரைக்கப்பட்ட அளவு நீர் கொண்டு ஃபோலே வடிகுழாயின் பலூனை நிரப்பவும். தொற்று நீக்கிய அல்லது காய்ச்சி வடிகட்டிய நீரை மட்டுமே பயன்படுத்தவும். நீங்கள் உங்கள் பிள்ளைக்கு உணவூட்டுவதற்கு ஃபோலேக் குழாயை உரிய இடத்தில் வைக்க இது உதவும்.
    12. ஃபோலே வடிகுழாயை, வடிகுழாயின் செருகி (plug), ஊசிக்குழலின் அழுத்தி அல்லது இணைப்புத் தொகுப்பு ஒன்றினைக் கொண்டு மூடவும்.

    ஃபோலே வடிகுழாய் சரியான இடத்தில் இருப்பதை உறுதிப்படுத்தும் வரை திரவங்கள் அல்லது மருந்துகளை ஊட்டவோ அல்லது கொடுக்கவோ அதனைப் பயன்படுத்த வேண்டாம்.

    பின்வரும் சந்தர்ப்பங்களில், உணவளிப்பதற்கு முன்னர் உங்கள் G குழாய் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும்:
    • ஃபோலே வடிகுழாயிலிருந்து நீங்கள் இரைப்பை உள்ளடக்கங்களை திரும்பப் பெற முடியாதுவிடின்
    • இரைப்பை உள்ளடக்கங்களின் pH அளவீடு 6.0 ஐ விட அதிகமாக உள்ளது எனில்
    • ஃபோலேயில் இருந்து நீங்கள் உறிஞ்சி எடுப்பது இரைப்பை உள்ளடக்கங்களைப் போல இல்லை எனில்

    இரைப்பை உள்ளடக்கங்களின் pH ஐ சரிபார்ப்பது எப்படி

    புதிதாக மாற்றப்பட்ட குழாய்களை, உணவூட்டங்கள் மற்றும் மருந்துகளுக்குப் பயன்படுத்துவதற்கு முன்பு, குழாய் மூலம் உறிஞ்சி இழுக்கப்படும் உள்ளடக்கங்களின் pH ஐச் சோதித்து அது வயிற்றில் இருக்கிறதா என்பதனை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.

    PH ஐ எவ்வாறு சோதித்தறிவது

    உங்களுக்குத் தேவைப்படுவன:
    • 5 மிலி வெறுமையான ஸ்லிப் டிப் ஊசிக்குழல் ஒன்று
    • pH கீற்றுகள்
    • வண்ண pH குறிப்பு வழிகாட்டி
    என்ன செய்ய வேண்டும்:
    1. ஃபோலே வடிகுழாயுடன் 5 மிலி ஊசிக்குழலை இணைக்கவும். ஃபோலேயுடன் ஊசிக்குழலை இணைக்க நீங்கள் ஒரு அடாப்டர் அல்லது இணைப்பைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம்.
    2. வயிற்று உள்ளடக்கங்களைப் பெறப் பின்னோக்கி உறிஞ்சி இழுக்கவும். வயிற்று உள்ளடக்கங்களை உங்களால் பெற முடியாவிட்டால், உங்கள் குழந்தையைப் பக்கப்பாடாக நகர்த்தவும் அல்லது நிமிர்ந்து உட்கார வைக்கவும்.
    3. ஊசிக்குழலில் இருந்து வயிற்று உள்ளடக்கங்களை ஒரு pH கீற்றில் இடவும்.
    4. pH கீற்றில் உள்ள நிறங்களை குறிப்பு வழிகாட்டியில் உள்ள நிறங்களுடன் ஒப்பிடவும்.
    pH அளவீடு 6.0 க்கும் குறைவாக இருந்தால், குழாய் இரைப்பையில் உள்ளது, நீங்கள் குழாயை அலசிக் கழுவி விட்டு, உணவு மற்றும் மருந்துகளுக்குப் பயன்படுத்தலாம்.
    PH அளவீடு 6.0 அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால், குழாய் இரைப்பையில் இல்லாதிருக்கக் கூடும்.
    மருந்துகள் மற்றும் சமீபத்திய உணவூட்டங்கள் pH ஐப் பாதிக்கலாம்.
    உங்கள் குழந்தையின் GJ குழாய் தற்செயலாக வெளியேற்றப்பட்டால், பின்வருவனவற்றைச் செய்யவும்.
    1. உங்கள் ஃபோலே வடிகுழாய் மற்றும் உங்கள் அவசரகாலப் பொருட்கள் அனைத்தையும் சேகரிக்கவும்.
    2. சோப்பு மற்றும் நீரினால் உங்கள் குழந்தையின் உணவூட்டல் குழாயைச் சுற்றியுள்ள சருமத்தையும் உங்கள் கைகளையும் கழுவ வேண்டும்.
    3. ஃபோலே வடிகுழாயின் நுனியை மசகு ஜெல்லி கொண்டு வழுக்கக் கூடியதாக்கவும். உங்களிடம் மசகு ஜெல்லி இல்லையென்றால், ஃபோலே வடிகுழாயின் நுனியைத் தண்ணீரில் நனைத்து ஈரலிப்பாக்கலாம்.
    4. உங்கள் ஆள்காட்டி விரல் கொண்டு ஃபோலே வடிகுழாயை அளவிடவும். உங்கள் பிள்ளையின் எடை 3 கிலோவுக்குக் (6.6 இறா.) குறைவாக இருந்தால், 3 முதல் 4 செ.மீ நீளத்துக்கு அளவிடவும். இது உங்கள் ஆள்காட்டி விரலின் பாதி நீளமாகும். உங்கள் பிள்ளையின் எடை 3 கிலோவுக்கு மேல் இருந்தால், குழாயை 4 முதல் 6 செ.மீ வரை அளவிட வேண்டும். இது உங்கள் ஆள்காட்டி விரலின் முழு நீளமாகும்.
    5. நீங்கள் அதிகமாகப் பயன்படுத்தும் கையால், நீங்கள் அளவிட்ட நீளத்தில் ஃபோலேயை ஸ்டோமாவுக்குள் செருகவும். ஃபோலே வடிகுழாயின் நுனி வயிற்றை அடைய இந்த நீளம் போதுமானதாக இருக்க வேண்டும்.
    6. உங்கள் குழந்தையின் அடிவயிற்றில் ஃபோலே வடிகுழாயைக் கட்டவும்.
    உங்கள் பிள்ளைக்கு உணவூட்டங்கள், திரவங்கள் அல்லது மருந்துகளைக் கொடுக்க ஃபோலே வடிகுழாயைப் பயன்படுத்த வேண்டாம். 
    உங்கள் G குழாய் நிபுணரை அழைக்கவும்.அவர்களைக் கிட்டவில்லை என்றால், விரைவில் அருகிலுள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும்.
    ஃபோலே வடிகுழாயைச் செருக உங்களால் முடியாவிட்டால், உங்கள் G குழாய் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும் அல்லது அருகிலுள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும்.
    ஃபோலே வடிகுழாய் உரிய இடத்தில அமைந்தவுடன், உங்கள் குழந்தையின் அசல் G அல்லது GJ குழாய் மாற்றப்படுவதற்கு நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
    உங்கள் பிள்ளைக்கு G குழாய் அல்லது GJ குழாய் பொருத்தப்பட்ட காலம் 8 வாரங்களுக்கும் குறைவாக இருந்தால், அவற்றின் அசல் குழாயை இயலுமான அளவு விரைவில் மாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும். 
    அலுவலக நேரங்களின்போது, உங்கள் G குழாய் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும். அலுவலக நேரங்களுக்குப் பின்னர், வார இறுதியில் அல்லது விடுமுறை நாட்களில், உங்கள் பிள்ளையின் குழாயைக் கவனிக்கும் மருத்துவமனையின் அருகிலுள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும்.
    உங்கள் குழந்தையின் G குழாய் வைக்கப்பட்டு எட்டு வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால், இது அவசர நிலைமை அல்ல; அடுத்த அலுவலக நாளில் உங்கள் G குழாய் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும். ஃபோலே வடிகுழாயைப் பயன்படுத்தி ஒரு மாதம் வரை உணவூட்டங்கள், திரவம் மற்றும் மருந்துகளை நீங்கள் வழங்கலாம்.
    எப்போது மருத்துவ உதவியை பெற்றுக்கொள்வது?
    பின்வரும் சந்தர்ப்பங்களில், உங்கள் G குழாய் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும் அல்லது அருகிலுள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும்:
    • ஒரு குழாய் தற்செயலாக வெளியே இழுக்கப்பட்ட பின்னர் உங்களால் ஃபோலே வடிகுழாயைச் செருக முடியாது இருப்பின்
    • ஃபோலே வடிகுழாய் இரைப்பையில் இருப்பதை உங்களால் நிச்சயப்படுத்த முடியாது இருப்பின்
    • ஃபோலே வடிகுழாயைச் செருகிய பின்னர் உங்கள் பிள்ளைக்கு அதிக வலி இருப்பின்
    ஃபோலே வடிகுழாய் செருகப்பட்ட பிறகு உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் மற்றும் அறிகுறிகள் ஏதாவது இருந்தால் உணவூட்டுவதை நிறுத்திவிட்டு மருத்துவ உதவியைப் பெற்றுக் கொள்ளவும்:


    கொய்யாபழம் 


    1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.

    2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.

    3. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது.

    4. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.


    5. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம்.

    6. கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.

    7. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்துகிறது.

    8. மதுப் பழக்கமுடையோர், தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் ஆசை அகன்றுவிடும்.

    9. அல்சரைக் கொய்யாப்பழம் குணப்படுத்திவிடும்.

    10. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகிறது..

                                        தும்பை




    பெருந்தும்பை,கவிழ் தும்பை.
    பெருந்தும்பை
     குழந்தைகளுக்கு பல் முளைக்கும்போது கழிச்சல் உண்டாகும். மேலும் குழந்தைகள் ஆறாம் மாதத்தில் தவழும் போதும், எட்டாம் மாதத்தில் எழுந்து நடக்கும் போதும் அருகில் கண்களில் படும் ஒற்றடை, தூசி, இறந்து போன பூச்சிகள், கொசுக்கள், ரோமங்கள் போன்றவற்றை துருதுருவென்ற தங்கள் கண்களால் கண்டுபிடித்து உட்கொண்டு விடுவது குழந்தைகளின் வழக்கம். இதனால் குழந்தைகளின் செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு வாந்தி, பேதி, சுரம் அதை தொடர்ந்து வலிப்பு, இருமல் உண்டாவதுடன் திடீர் திடீரென வீறிட்டு அழ ஆரம்பிக்கும். மேலும் தோல் வறட்சியடைந்து, சுருங்கி சவலைப் பிள்ளைப் போல் தேறாமல் காணப்படும். 

    இதைக்கண்டு பயந்து போகும் பெற்றோர் பேய், பூதம் என பலவாறாக கற்பனை செய்து கோயில்களிலும், பிற வழிபாட்டு தலங்களிலும் நேர்த்திகளை செய்கின்றனர். இன்னும் சிலரோ முதியோர்களையும், இறையன்பர்களையும் அணுகி, குழந்தையின் பயத்தை போக்க, மந்திரிக்கும்படி கூறுகின்றனர். அவர்களும் கயிறு போன்ற சில பொருட்களை கொடுத்து குழந்தையின் மணிக்கட்டு, இடுப்பு, கழுத்து மற்றும் கால்களில் தாயத்து போல் கட்டிவிடுகின்றனர். இவ்வாறு கட்டும் பொருட்களில் பெரும்பாலும் மூலிகை வேர்களே அடங்கியுள்ளன. 


    இந்த மூலிகை வேர் நிறைந்த தாயத்துகளை குழந்தை வாயிலிட்டு சப்பும்போதும், மூக்கால் உறிஞ்சும்போதும் அவற்றின் மருத்துவ குணத்தால் குழந்தையின் உபாதைகள் நீங்குகின்றன.
    குழந்தைகளுக்கு தோன்றும் இது போன்ற நோய்களை கட்டுப்படுத்தி, உடலை நன்னிலைப்படுத்தும் அற்புத மூலகை பேய்மிரட்டி என்ற பெருந்தும்பை. அனிசோமீல்ஸ் மலபாரிக்கா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லேமியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகளின் வேரில் பீட்டா சைட்டோஸ்டீரால், லுட்டுலினிக் அமிலம், ஓவாடியோலிட், அனிசோமிக் அமிலம், ஜெரானிக் அமிலம் ஆகியன உள்ளன. இவை செரிமானத்தை தூண்டி, குடலின் இயங்கு தன்மையை கட்டுப்படுத்துகின்றன.

    பெருந்தும்பை இலைகள்-5 எடுத்து சிறு,சிறு துண்டுகளாக வெட்டி, 200 மி.லி., நீரில் போட்டு கொதிக்க வைத்து, 50 மி.லி.,யாக சுண்டியப்பின். வடிக் கட்டி காலை, மாலை குழந்தைகளுக்கு கொடுத்து வர பேதி, செரிமானமின்மை நீங்கி தெளிவுறும், 5 அல்லது 10 சொட்டுகள் இந்த இலைச்சாற்றை தேனுடன் குழப்பிக் கொடுக்க, பல் முளைக் கும் காலங்களில் தோன்றும் பிள்ளைக்கழிச்சல் நீங்கும். 

    இதன் வேரை சுத்தம் செய்து உலர்த்தி, நூலில் சுற்றி மணிக்கட்டில் காப்பு போல் கட்டிவர குழந்தைகள் விரல் சப்பும் பொழுது இதன் மருத்துவச் சத்துக்கள் உள்ளிறங்கி, குழந்தைகளுக்கு வயிற்றில் தோன்றும் பலவித வயிற்று உபாதைகள், பயம் ஆகியவற்றை நீக்கி குழந்தையை தேறச் செய்யும்.
    பெருந்தும்பை என்னும் இந்த மூலிகை குழந்தைகளின் மாந்தம் எனப்படும் வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்தும். 

    அல்சர் நோய்க்கும் நல்ல மருந்து. இதனைச் சாறு எடுத்து குடிக்க வேண்டும். இதற்கு ஜோதிபத்ரம் என்ற பெயரும் உண்டு. இதன் இலைகளை பச்சையாக சுருட்டி விளக்கிற்கு திரியாக பயன்படுத்தலாம். ரத்தக் கழிச்சல் மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டு கால்நடை மருத்துவரால் பிழைக்காது என்று கைவிடப்பட்ட ஒரு நாய்க்குட்டிக்கு இந்த மூலிகைச் சாற்றை ஒரு வேளை கொடுத்ததிலேயே குணமாகி விட்டது.

     தனலட்சுமி செடி என்ற பெயர் இதற்கு உண்டு. இதை வணங்குவதால் பிறரால் நமக்கு வரும் எதிர்ப்புகள் தீயசெயல்கள் அகலும்.
    வகைகள் -: தும்பை, பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, பேய்தும்பை, கழுதைத்தும்பை, கசப்புத்தும்பை, கவிழ்தும்பை, மற்றும் மஞ்சள்தும்பை. 
     தாவர அமைப்பு -: தும்பைக்கு எல்லாவகை மண்ணும் ஏற்றது. இந்தச்செடி வறண்ட நிலங்களில் கடல் மட்டத்திலிருந்து சுமார் மூவாயிரம் அடி உயரம் வரை உள்ள இடங்களில் நன்கு வளரும் தாவரம். ஒரு அடிமுதல் மூன்று அடி உயரம் வரை வளரும். இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்த தனி இலைகளை உடையது. 

    கணுக்குருத்து இரு கிளைகளாக இலைக்கோணத்தில் பிரிந்திருக்கும். இலைகள் நீளமாகவும் இலைகளுக்கு மேலும் கீழும் பூக்களும் அமைந்திருக்கும். மலர்கள் தூய வெள்ளை நிறமாக ஒரே இதழ்விட்டு ஒரு சிறிய மொட்டு இதழின் நேராக நிற்கும். ஐந்து இதழ்களை உடையது. அடியில் இவை இணைந்து குழல் வடிவமாயிருக்கும் மகரந்த வட்டம் தாதிழைகளை உடையது இதில் இரண்டு உயரமானவை.

    சூல் தண்டு நீண்டது. சூலக வட்டம் நான்கு பிரிவானது. இலைக்குத் தனிவாசனை உண்டு. நட்ட ஆறுமாத த்தில் பூத்து வடும். இவை விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
     முக்கிய வேதியப் பொருட்கள் -: இரண்டு ஸ்டீரால்கள், இரண்டு ஆல்கலாய்டுகள், காளக்டோஸ், ஒலியனாவிக் அமிலம், உர்காலிக் அமிலம் மற்றும் பீட்டா சிட்டோஸ்டீரால்.
    மருத்துவப் பயன்கள் -:
    அதிகாலையில் தும்பைப் பூவைப் பசும்பால் விட்டு அரைத்து உட்க்கொள்ள
     விக்கல் நீங்கும்.
    தும்பை இலையை யையும் தேள் கொடுக்கு இலையையும் அரைத்துத் தரத் தேள் கடி விசம் நீங்கும்.
     தும்பை வேரையும், மருக்காரை வேரையும் அரைத்து உடலில் பூசிக் குளிக்க வசம் இறங்கும்.
    தும்பைப் பூவையும், ஆடுதீண்டாப் பாலை விதையையும் அரைத்துக் கொடுத்துப் பசும் பால் பருகிவர ஆண்மை அதிகரிக்கும்.
     தும்பை.
    தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு, வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத் தனித்தனியே ஆறவைத்து உலர்த்திச் சூரணம் செய்து கொடுத்து வர இதயப் பலவீனம் நீங்கும். சுரத்திற்குப் பின் ஏற்பட்ட சோர்வு தீரும். பசி அதிகரிக்கும். காமாலை குணமாகும். பித்த மயக்கம், வாந்தி குணமாகும். நினைவாற்றல் அதிகரிக்கும்.
     தும்பைச் சாறு 200 மி.லி. வெங்காயச் சாறு 100 மி.லி. பசு நெய் 150 மி லி. ஆமணுக்கு நெய் 150 மி.லி. கலந்து காய்ச்சி வடிகட்டிக் குழந்தைகளுக்குக் கால் உச்சிக் கரண்டியளவு கொடுத்து வர மாந்தம், கணை தீரும். இருமல், இளைப்பு மாறும். மலர்ச்சிக்கல் நீங்கும். வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளிப்படும். உடல் சூடுதணிந்து குழந்தை ஆரோக்கியமாய் வளரும்.
    பெருந்தும்பைச் சாறு மோரில் கலந்து தரச் செரியாமை, கழிச்சல், மந்தம் நீங்கும்.

     தும்பைப் பூவையும், ஊமத்தம் பூவையும் அரைத்துப் புங்கு நெய்யில் கலந்து காய்ச்சி வடித்துக் காதிற்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தி வரக்காதுப் புண், காதில் சீழ் வடிதல், காது இரைச்சல் தீரும்.
     தும்பைப் பூவையும், பெருங்காயத்தையிம் அரைத்துக் கடுகெண்ணெய்யில் கலந்து காய்ச்சி வடித்து வைத்ததுக் கொண்டு சொட்டு மருந்தாகக் காதிற்கு விட்டு வரக் காதில் சீழ்வடிதல் குணமாகும்.
     தும்பைச் சாற்றைத் தேனில் கலந்து சுட வைத்துக் குழந்தைகளுக்குப் புகட்ட இசிவு நீங்கும்.

    தும்பைச்சாறு 200 மி.லி. கழுதை மூத்திரம் 100 மி.லி. பசுநெய் 200 மி.லி. கலந்து காய்ச்சி மெழுகு பதத்தில் வடித்து உச்சிக் கரண்டியளவு உள்ளுக்குக் கொடுத்து, வெளியிலும் பூசிவரக் கிராந்தி புண் குணமாகும்.
     தும்பை இலைச்சாறு 10 மி.லி. எலுமிச்சம் பழச்சாறு 10 மி.லி. வெங்காயச்சாறு 5 மி.லி. எண்ணெய் 5 மி.லி. கலந்து காலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வரப் பெரும்பாடு நீஙுகும்.
    தும்பை இலை, உத்தாமணி இலை சம அளவு எடுத்து அரைத்துக் கோலிக் காயளவு பசும்பாலில் கொடுத்து வர மாத விலக்கினால் ஏற்படும் குறைபாடுகள் நீங்கும்.
    தும்பைப் பூவை வெள்ளாட்டுப் பாலில் கலந்து காயச்சி வடிகட்டிப் பாலைமட்டும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து நாற்பது நாள் கொடுத்துவரக் கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
    தும்பைப் பூவையும், ஒருமிளகையும் அரைத்து நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை நீங்கும்.
    தும்பைச் சாற்றையும்,பழச்சாற்றையும் சம அளவு எடுத்துக் கலந்து கொடுத்து வர ஆனந்த வாயு தீரும்.
    கழுதைத்தும்பை வேரை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூச அரையாப்பு குணமாகும்.
    தும்பைச்சாற்றைக் கண், காது, மூக்கில் நசியமாய்ப் பயன்படுத்தி உள்ளுக்கும் கொடுத்துக் கடிவாயிலும் பூசப் பாம்புக் கடி நஞ்சு தீரும்.
    கவிழ்தும்பைச் சாற்றைப் பசும் பாலில் கலந்து தர இரத்தக் கழிச்சல், சீதக் கழிச்சல், மூலக் கடுப்பு தீரும்.
     தும்பை இலையை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூச்ச் செய்யான் கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும்.
    தும்பை இலை, அவுரி இலை, மிளகு ஆகிய இவற்றைச்சேர்த்து அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, உடல் முழுவதும் பூசிவர எந்தக் கடிவிடமும் மாறும்.
    தும்பைப் பூ, நந்தியாவட்டப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி, ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து மாறும். கண் பார்வை தெளிவடையும்.
    தும்பைச்சாறு 500 மி.லி. தேங்காய்எண்ணெய் 500 மி.லி.இரண்டையும் கலந்து காய்ச்சி வெளிப் பிரயோகமாகப் பயன்படுத்த வெட்டுக் காயம், ஆறாத இரண்ங்கள் ஆறும்.
    தும்பை வேர், சுண்டைவேர் சூரணம், இலப்பைப் பிண்ணாக்கு சுட்ட சாம்பல் மூன்றையும் சன்னமாய் சலித்து எடுத்து மூக்கில் பொடியாய் பயன் படுத்ததலைபாரம், தலைவலி, மூக்கு நீர்பாய்தல், தலையில் உள்ள ரோகங்கள் எல்லாம் மாறும்.
    தும்பை, குப்பைமேனி, கையான்தகரையைச்சூரண்ம் செய்து தொடர்ந்து கற்ப முறையில் சாப்பிட்டுவர உடலில் ஏற்படுகின்ற நோய்களும், மன விகாரமும் தீரும். நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும். நோயின்றி வாழலாம். 

     ஔவை,
    ‘வாக்குண்டாம்;நல்ல மணமுண்டாம் மாமலராள்
    நோக்குண்டாம் மேனி நுடங்காது
    துப்பார்…திரு மேனி தும்பை கையான் துணை’ என்றார்.

    திரு மேனி என்கின்ற குப்பைமேனியும், துரோணபுஷ்பம் என்னும் தும்பையும்,கைகேகி எனப்படும் கையானும் மருந்தாகத் துணையாக இருக்கும் போது வாக்குத் தெளிவுண்டாகும். நல்ல மனமுண்டாகும். மாமலரால் கலைமகளின் கடைக்கண் பார்வை கிட்டும். அதனால் கல்வி அறிவு உண்டாகும். இந்த உடல் முடங்கிப் போகாது;எப்போது? திருமேனியும், தும்பையும், கையானும்மருந்தாகித் துணை நிற்கும் போது என்கிறார். இம்மூன்றில் பொற்றலைக்கையான் என்னும் மஞ்சள் கரிசாலையை மருந்தாக்க் கொள்ளும்போது….
     தும்பை வேர், சாரணைவேர், நாய்வேளை வேர், சித்துர மூல வேர், மிளகு, கழற்சுப் பருப்ப், கருஞ்சீரகம், பறங்கிப் பட்டை, பூண்டு ஆகிய இவற்றை ஓர் அளவாய் எடுத்துச் சூரணித்துத் தும்பைச் சாற்றில் பாவனை செய்து உலர்த்திப் பொடித்து ஒரு கிராம் அளவு பாலுல் அனுபானித்துத் தரச் சூலை, வாதம், முடக்கு வாதம், அண்டவாதம், வாயுக்குத்து, வயிற்றுப் பெருமல் தீரும்.




    நாயுருவி 


    சிறுநீர் பெருக்குதல், நோய்நீக்கி உடல் தேற்றுதல். சதை நரம்பு இவற்றைச் சுருங்கச் செய்தல் ஆகியவை இதன் பொது மருத்துவ கணங்களாகும்.

    நாயுருவிச் செடியின் இலையையும், காராமணிப் பயிரையும் சம அளவு எடுத்து மைய அரைத்து நீர்க்கட்டு உள்ளவர்களிடையே தொப்புள் மீது பற்றுப் போட நீர் கட்டு நீங்கி குணமாகும்.

    நாயுருவிச்செடியின் இலைகளை இடுத்துச் சாறு எடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.

    கதிர்விடாத இதன் இலையை இடித்துச் சாறு பிழிந்து சம அளவில் நீர் கலந்து காய்ச்சி நாளும் மூன்று வேளை 3 மி.லி. அளவு 5-6 நாள் சாப்பிட்டு பால் அருந்தவும். இதனால் தடைபட்ட சிறுநீர் கழியும். சிறுநீரகம் நன்கு செயல்படும். சிறுநீர்த் தாரை எரிச்சல் இருக்காது. சூதகக்கட்டு-மாதவிலக்கு தடைபடுவது நீங்கும். பித்த பாண்டு, உடம்பில் நீர் கோத்தல், ஊதுகாமாலை, குருதி மூலம் ஆகியன குணமாகும்.

    இதன் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத் தயிரில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தமூலம் குணமாகும். மேக நோய், சிறுநீரில் வெள்ளை ஒழுக்கு, பேதி குணமாகும்.

    ஆறாத புண்-ராஜ பிளவை, விடக்கடி ஆகியவற்றிக்கு இதன் இலையை அரைத்துக் கட்டி வர குணமாகும்.

    இதன் இலையைப் பருப்புடன் சேர்த்து சமைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வர நுரையீரல் பற்றிய சளி, இருமல் குணமாகும்.

    விட்டுவிட்டு வரும் சுரத்திற்கு நாயுருவி இலைகளுடன் மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து மாத்திரைகளாக உருட்டி, உலர்த்திக் கொடுக்கக்குணமாகும்.

    மூல நோய்க்கு நாயுருவி இலைக் கொழுந்தைப் பறித்து அதனுடன் சிறிது மஞ்சள் கலந்து அரைத்து மூலத்தில் வைத்துக் கட்டி வர இதம் தரும்.

    இதன் இலைச்சாறு 100 மி.லி.+100 மி.லி.எள் நெய் சேர்த்துக் காய்ச்சி சாறு சுண்டியவுடன் வடித்து வைக்கவும். காதில் வலி, எழுச்சி, புண், செவிடு ஆகியன குணமாக இதனைச் சொட்டு மருந்தாக இரு வேளை காதில் விடவும். மூக்கில் சளி, புண்ணுக்கும் இச்சொட்டு மருந்தினைப் பயன் படுத்தலாம்.

    இதன் இலைச் சாறு பிழிந்து 30-50 மி.லி.அளவு குடித்து 7 நாள் உப்பில்லாப் பத்தியம் இருக்க வெறி நாய்கடி, பாம்புக்கடி விடம் தீரும். அரைத்துக் கடிவாயில் வைத்துக் கட்டலாம்.

    இதன் இலையுடன் சம அளவில் துளசி சேர்த்து அரைத்து நெல்லியளவு இருவேளை கொடுக்க வண்டு, பிற பூச்சிக்கடி குணமாகும்.

    நாட்பட்ட மலர்ச்சிக்கல் உடையவர்கள் நாயுருவி இலைகளை குடிநீரிட்டு அருந்தி வந்தால் பேதியாகும்.

    துத்திக் கீரை வதக்கலில் நாயுருவி விதைச் சூரணம் 20 கிராம் கலந்து உணவில் சேர்துண்ண மூலம் அனைத்தும் தீரும்.

    விதையைச் சோறு போல் சமைத்து உண்ணப் பசி இராது. ஒரு வாரம் ஆயாசமின்றி இருக்கலாம். மிளகு, சீரகம் வறுத்துக் குடிநீர் காய்ச்சிக் குடிக்கப் பசி உண்டாகும்.

    நாயுருவி வேரால் பல் துலக்கப் பல் தூய்மையாகி முக வசீகரம் உண்டாகும் மனோசக்தி அதிகமாகும், நினைத்தவை நடக்கும், ஆயுள் மிகும், காப்பி, டீ, புகை, புலால் கூடாது.

    நாயுருவிச் சாம்பல், ஆண் பனை பூ பாளை சாம்பல் சம அளவு சேர்த்து நல்ல நீர் விட்டுக் கரைத்து 1 பொழுது ஓய்வாய் வைத்திருக்க நீர் தெளிந்திருக்கும். அதை அடுப்பேற்றிக் காய்ச்ச உப்பு கிடைக்கும். இவ்வுப்பில் 2 அரிசி எடை தேன், நெய், மோர், வெண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றில் கொடுக்க என்புருக்கி, நீரேற்றம், குன்மம், பித்தப்பாண்டு, ஆஸ்துமா ஆகியவை தீரும். தூதுவேளை, கண்டங்கத்திரி, ஆடாதொடை இவற்றின் குடிநீர்களை துணை மருந்தாகக் கொள்ளலாம்.

    இதன் சாம்பலுடன் கடுகெண்ணையும் சிறிது உப்பும் சேர்த்துப் பல் துலக்கினால் பல் பலம் பெரும் வலியிருந்தால் குறையும். இதன் சாம்பலில் பொட்டாஸ் உள்ளதால் இதை அழுக்குத் துணி துவைக்கப் பயன் படுத்திவர்.

    இதனை எரித்த சாம்பல் 5 கிராம் தேனில் காலை கொடுக்க மாத விலக்குத்தடை நீங்கும் விலக்காகும்.

    இதன் இலைச்சாற்றில் ஏழுமுறை துணியைத் தோய்த்து உலர்த்தி திரி சுற்றி விளக்குத்திரியாகப் போட்டு நெய் தடவி எரியும் புகையை அதில் படிய பிடிக்கவும், புகைக் கரியை ஆமணக்கு நெய் விட்டு மத்தித்து கண்ணில் தீட்ட கண் பார்வைக் கோளாறு தீரும். குளிர்ச்சி தரும்.

    வயிற்றுவலி, அஜீரணம், புளித்த ஏப்பம், உடல் வீக்கம் உடையவர்கள் நாயுருவி வேரைக் காசாயமிட்டு அருந்தி வருவது நல்லது.

    சிறுநீர் அடைப்பு உள்ளவர்கள் நாயுருவி சமூலத்தைக் குடிநீரிட்டு 60 மி.லி. முதல் 120 மி.லி. வீதம் அருந்தி வர சிறுநீரைப் பெருக்கும். 

    சீரகம் தரும் வரம் தினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை எடை குறைக்க முடியும்...!!! 
    கண் பிரச்சனைகளை தீர்க்கும் நந்தியாவட்டை!! 

     

    பயன் தரும் பாகங்கள் -: பூ மற்றும் வேர். நந்தியாவட்ட வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு நீங்கும். இதன் பூக்கள் வாசனையூட்டும் பொருளாகப் பயன்படுகின்றது. நந்தியாவட்டப் பூ 50 கிராம், களாப் பூ 50 கிராம் 1 பாட்டிலில் போட்டு நல்லெண்ணெயை மூழ்க ஊற்றி 20 நாள்கள் வெயிலில் வைத்து வடிகட்டி ஓரிரு துளி காலை மாலை கண்ணில் விட்டி வரப் பூ, சதைவளர்ச்சி, பல வித கண் படலங்கள், பார்வை மந்தம் நீங்கும்.
     இதில் ஒற்றைப் பூ இரட்டைப் பூ என்கின்ற இரண்டு இனமுண்டு. இரண்டும் ஒரே குணமுடையவை. கண்களில் உண்டான கொதிப்புக்கு இதை கண்களை மூடிக்கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுக்கக் கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும் இதன் வேரை வாயிலிட்டு மென்று துப்பி விட பல் வலி நீங்கும்.


    இதன் பூவும் தேள் கொடுக்கிலையும் ஓர் நிறையாகக் கசக்கிக் கண்களில் இரண்டொரு துளி விட்டுக் கொண்டு வர சில தினத்தில் கண்களில் காணும் பூ எடுபடும்.1.செண்பகப்பூ 60, கார் எள்ளுப்பூ 100, நந்தியாவட்டப் பூ 100 இவற்றைச் சுத்தமாக  இதழ்களைச் சுத்தமான கல்வத்தில் போட்டு அதனுடன் துளசி வேர், சங்குப் பொடி, மண்டைஓட்டுப் பொடி வகைக்குக் கழஞ்சி மயில் துத்தமை கழஞ்சி
    கூட்டிப் புளியம் பூச் சாற்றில் எலுமிச்சம் பழச்சாற்றிலுமாக அடைத்துப் பல்பக் குச்சை போல் திரட்டி நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு தாய்பாலில் உரைத்துக் கண்களுக்குத் தீட்டி வரக் கண்வலி, பூவீழ்தல், சதைவாங்கி முதலியன பிரச்சனைகள் தீரும்.

    1.நந்தியாவட்டப்பூ காம்பு நீக்கியது பலம்.சிறு களாப்பூ பலம்

    2, இவை இரண்டையும் ஒரு சுத்தமான வெள்ளைப் புட்டியில் போட்டு இந்தப் பூக்கள் மூழ்க நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்த எள்ளைச் செக்கிலாட்டியெடுத்து நல்லெண்ணை

    3 சேர் விட்டுப் புதிய சடை கார்க்கால் அழுத்தமாக அடைத்து உள்ளே சலம் செல்லாமல் மெழுகினால் சீலை செய்து மண் தரையான பசுவின் தொழுவத்தில் ஓரடி ஆழத்தில் 40 நாள் புதைத்து வைத்து எடுத்து முகத்தில் 21 நாள்கள் வைத்த பின்னர் வடிகட்டி வைத்துக் கொள்க. இந்த தைலத்தைக் கண்களுக்கு 1 - 2 துளி வீதம் தினம் இரண்டு வேளை காலை, மாலை, விட்டுக் கொண்டு வர கண்களில் உண்டாகும் பூ, சதை வளர்ச்சி, பலவித கண்படலம் ரோகங்களுக்கு இன்றியமையாததாகும்.



    நித்ய கல்யாணி



    நம்முடைய பாரம்பரிய வைத்தியமான சித்த வைத்தியத்தில்புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடிய மருந்துப்பொருட்களைத் தயாரிக்க உதவும்  மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    இதன் அருமையை உணர்ந்த வெளிநாட்டினர்தற்போது அதிகளவிலான நித்ய கல்யாணியைத்  தங்கள் நாடுகளில் இறக்குமதி செய்கிறார்கள்தங்கள் நாட்டிலேயே வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    கேசவர்த்தினி
    பெயரிலேயே புரியும்தலைமுடிக்கு உகந்தது இந்த கேசவர்த்தினிமுடிக்கு கறுப்பு நிறம் தரும்கேசவர்த்தினிமருதாணிகரிசலாங்கண்ணி போன்ற  மூலிகைகளின் சாறினை சம அளவில் சுத்தமான பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்பின்னர் அதனுடன் தேவையான அளவுக்கு தேங்காய்  எண்ணெய் கலந்து தேய்த்து வந்தால் நிரந்தர பலன் கிடைக்கும்.

    சர்க்கரைக் கொல்லி

    சர்க்கரை நோய் அதிகரித்து வரும் சூழலில் வீட்டில் அவசியமாக இருக்க வேண்டிய செடி இதுரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள்  வைக்க இதன் இலைகள் உதவும்.
    இம்மூலிகையை உட்கொள்ள நேரக் கட்டுப்பாடு எதுவும் கிடையாதுவாய்ப்பு கிடைக்கும்போது எந்த நேரமும்  உண்ணலாம்சர்க்கரைக் கொல்லி மூலிகை சாப்பிட்ட பிறகு 3 மணி நேரம் வரை எதுவும் சாப்பிடக் கூடாது.
    அப்போதுதான் இம்மூலிகையின் பலன்  முழுதாகக் கிடைக்கும்சர்க்கரைக் கொல்லி பயன்படுத்தும்போது டீகாபி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

    மருத்துவ குணம் நிறைந்த இந்த  மூலிகையின் அனைத்துப் பயன்களையும் ஒருவர் பெறஅலோபதி முறையில் வேறு ஏதேனும் சிகிச்சை பெறாதவராக இருக்க வேண்டும்.
    நித்ய கல்யாணி

    நம்முடைய பாரம்பரிய வைத்தியமான சித்த வைத்தியத்தில்புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடிய மருந்துப்பொருட்களைத் தயாரிக்க உதவும்  மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறதுஇதன் அருமையை உணர்ந்த வெளிநாட்டினர் தற்போது அதிகளவிலான நித்ய கல்யாணியைத்  தங்கள் நாடுகளில் இறக்குமதி செய்கிறார்கள்.
    தங்கள் நாட்டிலேயே வளர்ப்பதிலும் ஆர்வம் காடதம்பட்டி 

    முருங்கை

    வழக்கமாக நாம் பயன்படுத்தும் முருங்கையைப் போல  உணவுப்பண்டங்களில் சுவை மற்றும் நறுமணத்தைக் கூட்டுகிற குணம் மட்டும் இதற்கு  இல்லைஆனால்குறுமர வகையைச் சேர்ந்த இந்த தம்பட்டி முருங்கைக்கு விந்தணுக்களை உற்பத்தி செய்தல் உட்பட முருங்கையின் மற்ற மருத்துவ குணங்கள் கட்டாயம் உண்டு.

    அம்மான் பச்சரிசி

    இதனுடைய மருத்துவ குணம் நாம் அனைவரும் நன்றாக அறிந்த ஒன்றுதான்கீழாநெல்லியைப் போலவே மஞ்சள் காமாலைக்கு ஏற்ற மருந்து  இதுவாகும்இதன் இலையை அரைத்துசுத்தமான பசுந்தயிருடன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரநாள்பட்ட மஞ்சள் காமாலையும் விரைவில் குணமாகும்.

    கல்லுரிக்கி


    கல்லூரிக்கி  பூண்டானது   பாறையை  பலவீனமாக்கும்  இன்னும் ரத்தக்கட்டு ,ரணங்கள் ,சொறி ,கிரந்தி ,பிரமேகம் ,ஷார்ப்பவிஷம் இவைகளை  போக்கும்  மேலும் இரும்பை  சுத்தி செய்யும் .

    வழுக்கை தலையில் முடிவளர சித்தவைத்திய முறை!!

     சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும். முடி உதிர்வது மற்றும் நரை போக்க:

     1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

     2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

     3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்யக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

     4) சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

     5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.


    நீர்நொச்சி

    பொதுவாக நீர்நிலைகளுக்கு அருகாமையில் இருக்கிற 3 இலைகளைக் கொண்ட நீர்நொச்சி, 5 இலைகளைக் கொண்ட நொச்சி, கரிய நிற இலைகளைக் கொண்ட நொச்சி ஆகிய வகைகள் காணப்படுகின்றன. மூன்றாம் வகையான கருப்பு இலைகளைக் கொண்ட நொச்சி வேறு இனத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் கரு நொச்சி என்றே அழைக்கப்படுகிறது.


    தமிழில் ‘நொச்சி’ என்று சொல்கிற இந்த தாவரம் Vitex negundo என்று தாவரவியலில் குறிப்பிடப்படுகிறது. நொச்சி இலை தொடர்புடைய நீல நொச்சி Vitex agnas-castus என்ற பெயரில் இருக்கிற மற்றொரு தாவரமாகும். நொச்சி குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு தாவரங்களும் ஒரு சிறப்பான நறுமண எண்ணெயைத் தத்தம் இலைகளில் கொண்டிருக்கும். நொச்சியில் இருக்கிற இந்த நறுமண எண்ணெய் நம்முடைய சுவாசப் பாதையில் இருக்கிற சளி கடினப்பட்டு விடாமல் அதனை நெகிழ்த்தி, கிருமிகளையும் கொன்று அதன் மூலமாக சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.

    இதற்காகவே சுவாசம் எளிதாக வெறும் தண்ணீரை கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம் என்று சொல்கிறார்கள். முதியவர்களுக்குக் கொஞ்சம் துளசி இலை மற்றும் நொச்சி இலையைப் போட்டு ஆவி பிடித்தல் உதவியாய் இருக்கும். சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் வெப்பம் அளித்தல் என்பதும் முக்கியமான ஒரு முறை. அதாவது உடலில் இருந்து வியர்வையை ஏற்படுத்துகிற நிலை. உடலில் சேரும் வேண்டாத அசுத்தங்களை வெளியேற்றுவதற்கு, உடலை எளிதாக ஆக்குவதற்கு இது உதவும். கிருமிகள், வேண்டாத அசுத்தங்கள், எண்ணெய் பசையினால் ஏற்படும் கரும் புள்ளிகளைத் தவிர்ப்பதற்கும் நொச்சியில் இருக்கிற நறுமண எண்ணெய் உதவுகிறது.

    முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை அகற்றுவதற்கும் தோலில் இருக்கிற எண்ணெய் பசையைத் தவிர்ப்பதற்கும் முகத்திற்கு ஆவி பிடிப்பது உதவும். ஒரு மூட்டில் வலி வீக்கம் இருக்கிறபோது, அது நீர் கோர்த்ததால் உருவான வீக்கமாக இருந்தால் மூட்டில் மட்டும் இந்த வேர்வை சிகிச்சை அளிக்கலாம். மூக்கடைப்பு இருந்தால் அதற்கு சுவாசப்பாதை சரியாக நொச்சி இலை ஆவியை சுவாசிப்பதும் தீர்வாக அமையும். ஒத்தடம் கொடுப்பதற்கும் மசாஜ் செய்வதற்கும் நொச்சியிலையை ஒரு கட்டி பயன்படுத்துவது சித்த, ஆயுர்வேதத்தில் இருக்கிற ஒரு வழிமுறை.

    இதனை பொட்டனம் என்றும் ‘இலைகிழி’ என்றும் அழைப்பார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கிற ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நொச்சி இலை மற்றும் மிளகை ஒரு மாத்திரையாக உருட்டி, வைரஸால் ஏற்படும் மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல் ஆகிய நோய்களுக்கு முதல் மருந்தாக தருகின்றனர். இந்தியாவிலும் இம்மாத்திரை வீக்கம், வலி போக்குவதற்கு உள்ளுக்கு சாப்பிடும் மருந்தாக, ஆயுர்வேத சித்த மருந்துகளில் முக்கிய பங்காற்றுகிறது. இதனை வெளிப்பிரயோகமாக மட்டும் பயன்படுத்தாமல் மாத்திரைகளுக்கும் பயன்படுத்துவது வழக்கத்தில் இருக்கிறது.

    சித்த மருத்துவத்தில் நொச்சித் தைலத்தை மூக்கடைப்பிற்கும், தலைவலிக்கும், மூட்டுவலிக்கும் வெளிப்பிரயோகமாகப் பயன்படுத்தும் முறை இன்றைக்கும் இருக்கிறது. பொதுவாக எந்த வகை தாவரமாக இருந்தாலும் அதில் நறுமண எண்ணெய் இருக்கிறது. அது பெரும்பாலும் கிருமிகளைக் கொல்லக் கூடிய சக்தியும் குருதிச் சுற்றோட்டத்தை அதிகப்படுத்தும் திறன் கொண்டு இருக்கும். இந்த காரணத்தால் சிறு காயம் அல்லது வீக்கம் ஏற்பட்டாலும் அந்தப் பகுதியில் மிக அதிகமான குருதிச் சுற்றோட்டத்தை ஏற்படுத்தி வீக்கம், வலி குறைவதற்கு ஆதாரமாய் இருக்கும்.

    இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். அதனால் நொச்சி ஒரு வீக்கமுறுக்கியாக, வலி நிவாரணியாக, உடல் அசைவுகளை, மூட்டுக்களின் அசைவுகளை கட்டுப்படுத்துகிற தன்மையிலிருந்து விடுவிப்பதாக தசைகளில் ஏற்படுகிற விறைப்பு நீக்கியாக பயன்படுகிறது. பிண்ட சுவேதனம் என்பது உடல் முழுவதும் வேர்வை ஏற்படுத்துகிற வழிமுறை. உடல் முழுவதும் இருக்கிற வேண்டாத அசுத்தங்களை, குறிப்பாக தோல் பகுதிகளில் சேர்கிற நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதற்காக உடல் முழுமைக்கும் வேது பிடித்தல் முக்கிய பழக்கமாக இருக்கிறது.

    நொச்சியிலையை நீரில் கொதிக்க வைத்து. ஓர் அறையில் உட்கார வைத்து வேது பிடித்தல் செய்யப்படுகிறது. உடல் முழுவதற்கும் தரப்படும் இந்த சிகிச்சை முறைக்கு ‘பிண்ட சுவேதனம்’ என்று பெயர். பிண்ட சுவேதனம் சிகிச்சையை ரத்த அழுத்தம் உள்ளவர்கள் செய்கிறபோது மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அந்த அறைக்குள் நேரடியாக போய் உட்காரும் நேரத்தை மிகக் குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும். ரத்த உறைதலைத் தவிர்க்கும் மாத்திரைகளை உட்கொள்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    நீல நொச்சி கருப்பை நோய்களுக்கு சிறந்தது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் இச்செடியில் மலர்கள் பூக்கும்போது கொத்துக்கொத்தாக அடர்ந்த கத்திரி பூ நிறத்தில் பூத்திருக்கும். இந்த பூக்களில் உற்பத்தியாகிற தேனுக்கு உடல் வலியை, வீக்கத்தைப் போக்குகிற தன்மை உண்டு. ஒரு கிளையை வெட்டி வைத்தால் கூட நன்றாக வளரக்கூடிய நொச்சி, பல்வேறு சிகிச்சைகளை செய்வதற்கு உதவியாக இருக்கும். நொச்சியினை நாம் வளர்க்க வேண்டியது அவசியம். மிக எளிதாக வளரும். வெளிப்பயிராக வளர்க்கலாம்.

    கொசுவை விரட்டும் நொச்சி

    இன்று கொசுக்கள் காரணமாக ஏற்படும் டெங்கு உள்ளிட்ட பல நோய்களும் நமக்கு பெரிய சவாலாக இருந்து வருகிறது. இதற்கு நொச்சி சரியான நிவாரணமாக இருக்கும். இந்த நறுமண வாசனை காரணமாக கொசுக்கள் வீட்டைச்சுற்றி அண்டாது. நொச்சி கொசுக்களை ஒழிப்பது இல்லை. இருக்கும் இடத்தில் கொசுக்களை அண்ட விடாமல் தடுக்கும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் மழைக்காலங்களில் நொச்சியில் உள்ள நறுமண அளவு கொஞ்சம் குறைவாகவே இருக்கும். அந்த மழை பருவத்தில் நொச்சி இலைகளை உலர வைத்து அதனைப் புகைபோட்டால் கொசுக்களை விரட்டலாம்.





    காஞ்சோண்டி
    சிலிக்கான், வைட்டமின் சி, ஆர்கானிக் அமிலங்கள் மற்றும் பல வைட்டமின்கள் தொட்டால் எரிச்சலூட்டுகிற ஒருவகை செட்டில் சேர்க்கப்படுவதால், இது பொதுவாக மனித நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் விளைவை ஏற்படுத்தும் - தாங்க வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள், வெளிப்புற பாதகமான காரணிகள், ஆக்ஸிஜன் குறைபாடு.+
    வைட்டமின் கே மூலிகையை இரத்தப்போக்கு நிறுத்தவும், இரத்த உறைதலை மேம்படுத்தவும், காயங்களை இன்னும் தீவிரமாக குணப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.இலைகளில் உள்ள குளோரோபில், ஆலை ஒரு டானிக் ஆகவும், உடலில் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை நிறுவவும், குடல் இயக்கத்தை மேம்படுத்தவும் அனுமதிக்கிறது.
    மூலிகையில் சிறுநீர் மற்றும் கொலரெடிக் பண்புகள் உள்ளன. அதன்படி, சிறுநீரகம், கல்லீரல் மற்றும் பித்தநீர் நோய்களுக்கு எதிராக போராட தொட்டால் எரிச்சலூட்டுகிற ஒருவருக்கு அறிவுறுத்தப்படுகிறது.
    இந்த மூலிகையின் அடிப்படையில் நிதியைப் பயன்படுத்துவது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது, ஏனெனில் இது ரகசியம் போன்ற ஒரு பொருளின் கலவையில் உள்ளது.
    துத்தநாகம்

    ஒரு தனிமம். இது நீலம் கலந்த வெண்ணிறமுடைய வேதி உலோகம். இதன் வேதிக்குறியீடு Zn இதன் அணு எண் 30. ஆசியா, ஆத்திரேலியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா முதலிய நாடுகளில் இது அதிகம் கிடைக்கிறது.உலகம் முழுவதும் 1. 9 கோடி டன்கள் அளவில் துத்தநாகம் காணப்படுவதாகக் கண்டறிந்துள்ளனர்.இது பூஞ்சைகளைக் கொல்ல வல்லது. வேதியியல் ஆய்வகங்களில் வேதி வினைகளை செயல்முறை செய்து காட்ட இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. 
    துத்தநாகத்தின் தாதுக்களுள் ஒன்று துத்தநாக கார்பனேட் அடங்கிய காலமைன் ஆகும். கால்சியனேற்றம் செய்து இதிலிருந்து துத்தநாக ஆக்சைடைப் பெறலாம். இது கண் நோய்களுக்குப் பழங்காலத்திலிருந்தே ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. துத்தநாக ஆக்சைடு குளிர்ச்சியாக இருக்கும் போது வெண்மையாகவும் சூடாக இருக்கும் போது மஞ்சளாகவும் இருக்கின்றது. 
    இதை வெள்ளை நிறமியாகப் பயன்படுத்துகின்றார்கள். துத்தநாகக் கனிமம் பித்தளை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது.துத்தநாகம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக உற்ற தனிமம் ஆகும்.வளரும் நாடுகளில் உள்ள ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் துத்தநாகக் குறைபாட்டு நோயினால் பாதிப்படைந்துள்ளனர்.இக்குறைபாட்டால் ஏற்படும் நோயினால் வயிற்றுப் போக்கு அதிகரித்து உலகம் முழுவதும் சுமார் 800,000 குழந்தைகள் இறந்துள்ளனர்.
    துத்தநாகக் கனிமத்தை வறுக்க ஆக்சைடுகள் கிடைக்கின்றன. இதைக் கரித்தூளுடன் உயர் வெப்பநிலைக்குச் சூடுபடுத்தி ஆக்சிஜனீக்கம் செய்து வெளியேறும் துத்தநாக ஆவியைச் சுருக்கி துத்தநாக உலோகத்தைப் பெறலாம்.
    இன்றைக்கு 90 விழுக்காடு தூய துத்தநாக உலோக உற்பத்தி பெரும்பாலும் மின்னாற்பகுப்பு வழிமுறைகளினால் பெறப்படுகின்றது தூய துத்தநாக சல்பேட்டு கரைசல் அல்லது கந்தக அமிலத்தில் கரைக்கப்பட்ட துத்தநாக ஆக்சைடுகள் மின்னாற் பகு பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டு அலுமினியத் தண்டை எதிர்மின் வாயாகவும் ஈயக் கலப்பு உலோகத் தண்டை நேர்மின் வாயாகக் கொண்டு மின்னாற்பகுப்பு செய்யப்படுகின்றது. அப்போது துத்தநாகம் எதிர் மின் வாயில் படியும். அதை அவப்போது அகற்றி சேகரித்துக் கொள்கின்றார்கள். துத்தநாகம் 1746 ல் ஐரோப்பாவில் மார்க் கிராப் என்பவரால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இது பூமியின் மேலோட்டுப் பகுதியில் 0.007 விழுக்காடு உள்ளது.
    பண்புகள்
    Zn என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய துத்தநாகத்தின் அணுவெண் 30, அணு நிறை 65.37, அடர்த்தி 7140 கிகி /கமீ. இதன் உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 692.7, 1180 K ஆகும். துத்தநாகம் உலோகப் பொலிவும், நீலம் கலந்த வெண்ணிறமும் கொண்டது.சாதாரண வெப்பநிலையில் உடைந்து நொறுங்கக் கூடியதாக இருக்கின்றது. ஆனால் 100-150 டிகிரி C வெப்பநிலை நெடுக்கையில் தகடாக அடிக்கலாம்.இது மின்சாரத்தை ஓரளவு சிறப்பாகக் கடத்துகின்றது.காற்று வெளியில் பழுக்கக் காய்ச்சினால் வெண்புகையை உமிழ்ந்து எரிகின்றது. புவியில் இதன் செறிவு 0.0075% ஆகும். புவி மேலோட்டில் கிடைக்கும் கனிமங்களில் இது 24 ஆவது இடத்தில் உள்ளது.துத்தநாகம் பொதுவாக செம்பு மற்றும் ஈயத் தாதுக்களுடன் கலந்தே காணப்படுகிறது.
    பயன்கள்
    துத்தநாகம் பல உலோகங்களுடன் சேர்ந்து கலப்பு உலோகங்களைத் தருகின்றது. பித்தளையில் செம்பு 60-40 %, துத்தநாகம் 40-10 % வரையும் கலந்திருக்கும். இவை தவிர மிக நுண்ணிய அளவில் டின், மாங்கனீசு, அலுமினியம், இரும்பு, ஆண்டிமணி, பிஸ்மத், கோபால்ட்,தங்கம், நிக்கல், டெல்லுரியம், சோடியம் ஈயம் போன்ற உலோகங்களையும் சிறப்புப் பயன்பாடு கருதிச்சேர்ப்பார்கள்.[16] பித்தளையின் பட்டறைப் பயன் செம்பைக் காட்டிலும் மேன்மையானது. மேலும் இதன் உருகுநிலை அதில் கலந்துள்ள செம்பு மற்றும் துத்தநாகத்தைக் காட்டிலும் குறைவாக உள்ளது.
    தங்கம் போன்று தோற்றம் தருகின்ற 'போலி' நகைகளைச் செய்வதற்கு பிரஞ்சுத் தங்கம் பயன்படுகின்றது.இதில் 90:10 என்ற விகிதத்தில் செம்பும், துத்தநாகமும் சேர்ந்திருக்கின்றது. இது செம்பைவிடக் கடினத் தன்மை மிக்கது. சிலைகள் வடிக்க ஆணி, திருகு, மரைகள், பட்டறைக் கருவிகள், கைப்பிடிகள், பெயர்ப் பலகைகள், நகைகள் செய்ய இது பயன்படுகின்றது.
    நிக்கல் வெள்ளி, ஜெர்மன்வெள்ளி, அலுமினியப் பற்றாசு (Solder), மென் பற்றாசு போன்றவை துத்தநாகக் கலப்பு உலோகங்களில் முக்கியமான சிலவாகும். பெருமளவு துத்தநாகம் துருப்பிடிக்காத கூரைத் தகடுகள் செய்யவும், வார்ப்பச்சுகள் தயாரிக்கவும், போக்குவரத்து வாகனங்கள், மின் துறையில் பயன்படும் பல விதமான சாதனங்கள் மற்றும் கனரகப் பொருட்கள் தயாரிக்கவும் பயன் தருகின்றன. பிரஸ்டல் (Prestal) என்ற கலப்பு உலோகம் 78 % துத்தநாகமும் 22 % அலுமினியமும் கொண்டது. இது எஃகைப் போல உறுதி கொண்டது. நெகிழ்மத்தைப் போல் வார்ப்படம் செய்யவும் முடிகின்றது. இது மிகை நெகிழ்மத்தன்மையை (Super plasticity) வெளிப்படுத்துகின்றது.
    இரும்பு துருப் பிடிப்பதைத் தவிர்க்க எதிர் மின் முனைமக் காப்பு (Cathodic protection) மூலம் துத்தநாகத்தைப் பயன்படுத்துகின்றார்கள். கப்பல்களில் மரத்துண்டுகள் உப்பு நீரால் அரிக்கப்பட்டு சிதைந்துபோய்விடாமல் இருக்கப் பயன்படுத்தும் செம்புத்தகடுகளுக்குத் துத்தநாகப் பூச்சிட்டால் செம்புத் தகடுகள் கடலுப்பின் அரிப்பிலிருந்து தடுக்கப்படுகின்றது. துத்தநாகப் பூச்சிட்ட இரும்பைக் கால்வனைஸ்டு இரும்பு என்பர். சிர்கோனியமும், துத்தநாகமும் பெரோகாந்தப் பண்பற்றவை. ஆனால் சிர்கோனிய துத்தநாகம் 35 டிகிரி K வெப்பநிலைக்குக் கீழே பெரோகாந்தப் பண்பைக் கொண்டுள்ளது.
    தொழில் துறைகளில் துத்தநாகச் சேர்மங்களின் பயன்பாடு விரிவடைந்து கொண்டே வருகின்றது. துத்தநாக ஆக்சைடானது நிலைமின் நகலியில்(Xerox) உணர்தாளில் பயன்படுகின்றது. இது வர்ணங்கள், இரப்பர் பொருட்கள், அச்சிட உதவும் மைகள், சோப்புகள், சேம மின்கலங்கள், நெசவுத் துணிகள், மின்னியல் சாதனங்கள் போன்ற பலதரப்பட்ட உற்பத்திப் பொருட்களில் பயன் தருகின்றது. துத்தநாக சல்பைடு ஒரு நிறமியாகக் கொள்ளப்படுகின்றது. இது அணு ஆய்வுக் கருவிகளில் ஒளிர்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது. கதிர்வீச்சு இதில் விழும் போது உடனொளிர்வும் (Fluorescence) நின்றொளிர்வும் (phosphorescence) ஏற்படுவதால் கதிர்வீச்சின் தன்மையை ஆராய முடிகின்றது.
    உயிரினகளுக்கு துத்தநாகம் முக்கியச் சத்தாகும். வளரூக்கிகள், நொதிமங்கள் வினையாற்றும் வழிமுறைகளில் முக்கியப் பங்கேற்றுள்ளன. துத்தநாகச் சத்து குறையும் போது வளர்ச்சி குன்றிப் போவதோடு தோலுக்குப் பாதுகாப்பான மயிரின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகின்றது. சுவை மற்றும் மணமறி உணர்வான்களையும் சேதப்படுத்தி விடுகின்றது. சராசரி மனிதனின் உடலில் 1.5 லிருந்து 2.5 கிராம் துத்தநாகம் காணப்படுகின்றது.
    இதில் 20 % தோலில் படிந்திருக்கின்றது. எலும்பும்,பல்லும் குறிப்பிட்ட அளவு துத்தநாகத்தைப் பெற்றிருக்கின்றன. இன்சுலின் மூலக்கூறுகளுக்கு துத்தநாகம் இன்றியமையாத கட்டமைப்புக் கூறாக உள்ளது. வைட்டமின் A இன் வளர்சிதை மாற்றத்தில் துத்தநாகம் தொடர்புடையதாக இருக்கின்றது. உடலில் ஏற்பாடும் வெட்டுக் காயங்களை ஆற்றுவதில் துத்தநாகத்திற்குப் பங்குள்ளதாகக் கண்டறிந்துள்ளனர். துத்தநாக சல்பேட் குடல் புண்களை ஆற்றுகின்றது.

    பெரு நெருஞ்சில் 




    அல்லது யானை நெருஞ்சில் என்று அழைக்கப்படும். பெரு நெருஞ்சில் இலையை ஒரு கைப்பிடி அளவு  எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டால் ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால் பாகு போன்று ஒரு திரவம் நீரில் கலந்து  இருப்பதைப் பார்க்கலாம். அதைத் தனியாக எடுத்து சிறிது கற்கண்டு சேர்த்து குடித்து வர உடல்சூடு, தாது இழப்பு குணமாகும்.நெருஞ்சில் இலைச்சாறு 50 மில்லியளவு எடுத்து ஒரு டம்ளர் பால் அல்லது மோருடன் குடித்து வர சிறுநீருடன் இரத்தம்  போவது நிற்கும்.பெரு நெருஞ்சிலைப் பிடுங்கி நீரில் ஒரு மணி நேரம் ஊறவிடவும். இந்த நீரில் பட்டு, நூல் துணிகளை ஊற வைத்து எடுக்க  அழுக்கு, கறை அகலும்.

    நெருஞ்சில் செடியை வேருடன் பிடுங்கி நீரில் அலசி பிறகு, புளித்த கஞ்சி தண்ணீரில் இதனை 10 நிமிடம்வரை மூழ்கும்படி  செய்ய வேண்டும். இதனை வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும். இவ்வாறு குடிப்பதால், சிறுநீரகக் கல் கரைந்து சிறுநீர் வழியாக  வெளியேறும்,பெரு நெருஞ்சில் இலையை, அருகம்புல் சமூலம் ஒன்றையும் சேர்த்து ஒன்றரை லிட்டர் நீரில் போட்டு முக்கால் லிட்டராகச்  சுண்டக் காய்ச்சி வடிகட்டி, அதில் திப்பிலி குங்குமப்பூ, ஒரு சிட்டிகை சேர்த்து மறுபடியும், கால் லிட்டர் அளவிற்கு சுண்டக்
    காய்ச்சி வடிகட்டி 3 நாள்களுக்கு 2 வேளை குடித்து வர உடல் சூடு, நீர் வடிதல், கண் எரிச்சல், சொறுக்கு மூத்திரம், நீரிழிவு,  வேகமின்றி அடைப்பட்டதுபோல சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.


    நெருஞ்சில் இலையை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி, அதேயளவு அருகம்புல் எடுத்து நிழலில்  உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி இரண்டையும் கலக்க வேண்டும். இந்தப் பொடியை அரை தேக்கரண்டி அளவு  எடுத்து ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்து வர வெட்டை, இரத்தப்போக்கு குணமாகும்.

    நெருஞ்சில் விதையினை பாலில் அவித்து நிழலில் உலர்த்திப் பொடி செய்து ஒரு சிட்டிகையளவு வெந்நீரில் சாப்பிட்டு வர தாது  விருத்தியாகும். இதையே இளநீரில் சாப்பிட்டு வர சிறுநீர்க் கட்டு, சதையடைப்பு, கல்லடைப்பு குணமாகும்.

    நெருஞ்சில் காயைப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர நீரடைப்பு  சதையடைப்பு, வெட்டை, எலும்புருக்கி குணமாகும்.

    நெருஞ்சில் முள்ளை வெந்நீரில் ஊற வைத்து வடிகட்டி நீரை மட்டும் குடிக்க சிறுநீரைப் பெருக்கும்.

    மல்லிகையின் மருத்துவ பயன்கள்



    1.மல்லிகையின் இலையை வாயிலிட்டு மெல்ல,வாய்ப்புண் தீரும்.
    2.இலைச்சாறு அல்லது இலையிலிருந்து எடுக்கும் எண்ணெய் காது நோய்க்கு நல்லது.
    3. இலைச்சாறு,காலாணியை நீக்கும்.
    4.இலையை நெய்யில் வறுத்து பின் ஒற்றடமிட தொண்டை நோய் தீரும்.
    5.மல்லிகையின் பூவுடைய எண்ணெய்,தலையில் தேய்த்து முழுகினால்,உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.
    6. மல்லிகை எண்ணெய் தலையில்தேய்த்து முழுகிவர தலைவலி,தோலை பற்றிய நோய்கள்
    கண்னெரிச்சல் தீரும்.
    7. பூவை அரைத்து பூச,வீக்கம் குறையும்.
    8. பூவை மார்பில் வைத்துக்கட்ட,பால் சுரப்பு நிற்கும்.
    9. பூவை அல்லது இலையை அரைத்து,தொடையிடுக்கு,குறி உறுப்புகளில் பற்றிட கலவி இன்பம் பெருகும்.

    10.மல்லிகை வேர்த்தூளையும்.வசம்புத்தூளையும் பழச்சாறு கலந்து பூச தோல் நோய்கள் தீரும்.

    முருங்கை


    முருங்கையின் பூ,பட்டை,வேர்,இலை,காய்,பிஞ்சு,பிசின் அனைத்தும் மருத்துவ குணம் உள்ளது.


    முருங்கை இலை:
                வெந்து கெட்டது அகத்தி கீரை வேகாமல் கெட்டது முருங்கைக்கீரை- இது பழமொழி.முருங்கை கீரையை நன்றாக வேக வைத்தே உண்ண வேண்டும்,வேகவில்லையென்றால் செரிமான கோளாறை உண்டாக்கும்.

    முருங்கை இலையின் சத்துப்பொருட்கள்;
    இதில்,ஆரஞ்சில் உள்ள விட்டமின் சி விட,7 மடங்கு
    கேரட்டில் உள்ள விட்டமின் ஏ விட,4 மடங்கு
    பாலில் உள்ள கால்சியம் அளவை விட,4 மடங்கு
    வாழைபழத்தில் உள்ள பொட்டாசிய அளவை விட,3 மடங்கு
    ஷ்பைனக் கீரையில் உள்ள இரும்பு அளவை விட,3 மடங்கு
    பாதாம் பருப்பில் உள்ள விட்டமின் இ விட,3 மடங்கு
    இத்துனை,சத்துப்பொருட்களைக் கொண்டுள்ளது.

     குறிப்பு: சிறு நீரகக் கல்லடைப்பு நோயாளிகள், கால்சியம் அளவு அதிகம் உள்ளதால் அவர்கள் இக்கீரையை சாப்பிடக்கூடாது.

    முருங்கை இலையின் மருத்துவ பயன்கள்:
    1.முருங்கை இலையோடு,2திரி பூண்டு,மஞ்சள்,உப்பு,மிளகு சேர்த்தரைத்து உண்ண நாய்க்கடி தீருகிறது
    2.இலைச்சாறு கண்ணில் விட,கண்வலி தீரும்.
    3.இலைச்சாற்றில்,சிறிது வெடியுப்பு சேர்த்துத் தர,சிறு நீர் பெறுகும்.
    4.இலைச்சாறு+மிளகு சேர்த்து தலைவலிக்கு நெற்றியில் பற்றிட தீர்கிறது.
    5.இலைச்சாறை பூசினால் வீக்கம் குறையும்.
    இலைச்சாறை நாட்பட்ட புண்களுக்கு பூச விரைவில் ஆறி விடும்.
    முருங்கை பட்டை
    முருங்கை பட்டையை நன்றாக பொடித்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து கட்டினால் வீக்கம் குறையும். சிறுநீரை தெளிய வைக்கும்.
     
    முருங்கை இலை காம்பு
    முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன வெங்காயம், மிளகு போன்றவற்றை சேர்த்து சூப் வைத்து அருந்தினால், நரம்புகள் வலிமை பெறும். தலையில் கோர்த்துள்ள-நீர்கள் வெளியாகும். வறட்டு இருமல் போகும்.
     
    முருங்கை விதை
    முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து லேசாக நெய்யில் வதக்க வேண்டும் , பிறகு அதை பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், நரம்புகள் பலப்படும், உடல் சூடு குறையும் , ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும் . உடல் வலுவடையும்.
     
    முருங்கை காய்
    முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் மூல நோய்க்கு மிக சிறந்த மருந்தாகவும் . சளியைப் போக்கும் தன்மைகொண்டதாகவும் இருக்கிறது. முருங்கைக்காய் பொதுவாக அதிக சத்துக்களை கொண்டது. முருங்கைக் காய் பொரியல் அனைவருக்கும் பிடித்த உணவு ஆகும், தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
     
    முருங்கை பிஞ்சு
    முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சம்மந்தமான அனைத்து நோய்களும் சரியாகும் . இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகமாகும். முருங்கை பிஞ்சில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது , இது எலும்புகளுக்கு வலுவை அளிக்கின்றது . எலும்பு மஞ்ஜைகளை வலுபடுத்துகிறது.
     
    முருங்கை பூ
    முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது.முருங்கை பூவை பாலில் வேகவைத்து- பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
     
    முருங்கை கீரை
    முருங்கை இலையை சமைத்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமாகும் . முருங்கை கீரையில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் கல்சியம் உள்ளது எனவே இதை சாப்பிட்டால் இரத்த சோகை நோய் நீங்கும்.


    முருங்கைபிசின்   மருத்துவ குணங்கள்  
    முருங்கை மரம்  தரக்கூடிய அத்தனை பொருட்களும் மருத்துவ குணம் கொண்டது  மற்றும்  சுவைமிகுந்த பொருள்களாகும்முருங்கை மரம் கற்பகதரு என்றும் அழைக்கப்படுகிறதுஒரு முருங்கை மரம் வீட்டில் இருந்தால் ,.அந்த வீட்டில்  உள்ளவர்கள் அனைத்துவிதமான சத்துக்களையும் பெறுவார்கள் என்று சொல்லலாம்இது தரக்கூடிய   பொருட்கள் முருங்கைக்காய், முருங்கை இலை  முருங்கை பிசின், முருங்கைப்பூ ஆகியவை சத்து மிகுந்தது .

    முருங்கை பிசின் என்பது  முருங்கை மரத்திலிருந்து வெளிவரும் கருஞ்சிவப்பு நிறமான பொருள்இதில் கால்சியம், சுண்ணாம்பு சத்து உள்ளது.  இது உடலை வலுப்படுத்தவும் கட்டுக்கோப்பாக வைக்கவும்  பயன்படுகிறது .முருங்கைப் பிசினை எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
    பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.

     இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தலைமுடி நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும். 

    எலிக்காது


    ஆங்காங்கே இலையடியில் வேர் விட்டு இறுக்கமாக பிடித்திருக்கும்.
    நுனியைப் பிடித்து இழுத்தால் முதியோர் கூந்தல்போல அடிவரை வராது.
    இலைகளின் இடையே பட்டாணி நிறத்திலும் அளவிலும் சிறிய மஞ்சள் பூக்களும்…..
    பட்டாணி அளவான கொத்துக்காய்களும் இதன் அடையாளம்.
    எலிகாது போலவே உள்வாக்கில் குவிந்த அரையிதயம் இதன் சாயல்.
    எலிக்காது மூலிகை என்று அழைப்பதை விட எலிக்காதுக்கீரை என்றே அழைக்கலாம்.

    உணவில் எலிக்காதுக்கீரை :
    கூட்டு,பொறியல்,சூப் என…… நம் தேவைக்கு ஏற்ப சமைத்துக்கொள்ளலாம் .

    மருத்துவப் பயன்கள் :
    இது பால்வினை நோய்களுக்கான அருமருந்து. பெண்களின் வெள்ளைப்படுதல் நீர்ச்சுறுக்கு சூடு போன்றவை போக்கும்.
    ஆண்களின் தாது விருத்தியாக்கும் எளிய வயாகரா!
    சர்க்கரை நோயால் வந்த தாம்பத்ய இழப்பை சரிசெய்யும்.
    வெட்டுக்காயங்களில் அரைத்துக்கட்ட ஆறும்.
    முள்…கம்பி…கண்ணாடிச்சில்லு..
    எதுவானாலும் குத்தி உள் தங்கிவிட்டால் லேசாக களைந்து இந்த இலையை அரைத்து வைத்துக்கட்ட வெளியேறும்.
    சுரம் போக்கும்.சர்க்கரையால் வந்த வறட்சி தாகம் தீர்க்கும்.
    எலிக்காது மூலிகையை பறித்துப் பயன்படுத்தி பலநாள் நோயின்றி வாழ்வோம்…

    மருதோன்றி இலை - மருதாணி இலை


    பெண்கள் அழகிற்காக பயன்படுத்தப்படும் இயற்கை அழகு சாதனப் பொருட்களில் மைலாஞ்சியும் ஒன்று. இது வேற ஒண்ணுமில்லைங்க, நம்ம மருதாணியை தான் மைலாஞ்சி என்றும் அழைப்பார்கள். தலைமுடியை கருமை நிறமாக மாற்றுவதற்கு மருதாணி பெருமளவில் உதவி புரிகிறது. இயற்கை முறையில் மருதாணியை வைத்து ஹேர்-டை செய்து போட்டால் முடி நன்கு கருமையாக வளர தொடங்கும். சரி இளநரையை தடுக்க இயற்கையான முறையில் ஹேர்-டை செய்வது எப்படி என்பதை இதில் காண்போம்.

    மருதாணி முடிக்கு கருஞ்சிவப்பு நிறத்தையும், அவுரி இலை கூந்தலுக்கு கருநீல நிறத்தையும் தரும். இவை இரண்டும் சேர்ந்து கிடைக்கும் கருமை நிறம், நீண்ட நாட்களுக்கு முடியில் தங்கியிருக்கும்.

    அவுரி பொடி:
    அவுரி பொடி கூந்தலுக்கு நீல நிறத்தை தருவதால், இளநரை பிரச்சனைக்கு தற்போது இதை முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    மருதாணி பொடி:
    முற்காலம் முதலே மருதாணி பொடியை இளநரையை தடுக்க பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது.

    இதை எப்படி கூந்தலுக்கு பயன்படுத்துவது?
    முதலில் கூந்தலை நன்கு எண்ணெய் போக அலசிக் கொள்ள வேண்டும். எண்ணெய் இல்லாமல் இருந்தால் தான் இந்த பொடியை தலைக்கு அப்ளை செய்வதில் நல்ல பலன் கிடைக்கும். கூந்தலை நன்கு காய வைத்துக் கொள்ளுங்கள்.
    பின்பு தேவையான அளவு மருதாணி பொடியை எடுத்து தண்ணீரில் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். மருதாணி பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இல்லையெனில் நீங்கள் மருதாணி இலைகளை தனியாக உறுவி காய வைத்து, நைசாக அரைத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்து உபயோகிக்கலாம். வீட்டில் தயாரிக்கும் மருதாணி பவுடரை நீங்கள் மூன்று மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்.

    இப்போது மருதாணி கலவையை உங்கள் கூந்தல் முழுவதுமாக அப்ளை செய்ய வேண்டும். ஒவ்வொரு கொத்து முடியாக எடுத்து இளநரை இருக்கும் அனைத்து இடங்களிலும் இதை தடவ வேண்டும். ஒரு மணி நேரம் வரை கூந்தலை ஊற வைத்து, பின்பு முடியை அலசிக் கொள்ளலாம்.அடுத்தநாள் அவுரி பவுடரை தண்ணீரில் கரைத்து கூந்தல் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும்.

    அவுரி பவுடரும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.இதையும் கூந்தலின் அனைத்து இடங்களிலும் தடவ வேண்டும். பின்பு முடியை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு கூந்தலை அலசிக் கொள்ளலாம். இப்போது உங்களுக்கு கூந்தலின் நிறம் மாறியிருக்கும். மருதாணி கூந்தலுக்கு அடர் சிவப்பு நிறத்தையும், அவுரி அடர் நீல நிறத்தையும் தருவதால், இந்த இரண்டு கலவையும் சேர்ந்து கூந்தலுக்கு அடர் கருமை நிறத்தை தரும்.
    இதை வாரத்திற்கு ஒருமுறை என தொடர்ந்து ஒரு மாதம் பயன்படுத்தி வந்தால் கூந்தல் நிரந்தரமாக கருமை நிறத்தில் மாறிவிடும். இதை நீங்களும் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் தோழிகளே, உங்களுக்கு மருதாணி மற்றும் அவுரி சேர்ந்த கலவை நல்ல பலனை தருவதாக அமையும்.
    கரந்தை

    கரந்தை செடிகளில் சிவகரந்தை, கொட்டைக்கரந்தை, செங்கரந்தை, வெண்கரந்தை, கருங்கரந்தை எனப் பலவுண்டு.


    பற்களுள்ள நறுமணமுடைய இலைகளை மாற்றடுக்கில் கொண்ட மிகச்சிறுசெடி. சிறிய பந்து போன்ற உருண்டையான செந்நிற பூங்கொத்தினை உடையது. செடி முழுமையும் மருத்துவப் பண்புடையது. இது ஒரு காயகற்ப ரசவாத மூலிகையாகும்.

    பூக்காத செடிகளை பிடுங்கி நிழலில் உலர்த்திப் பொடி செய்து 5 கிராம் சிறிது கற்கண்டுப்பொடி கலந்து சாப்பிட்டு வர வெள்ளை, உள்ரணம், கிராணி, கரப்பான் ஆகியவை குணமாகும். நீண்ட நாள் சாப்பிட்டு வர இதயம், நரம்பு பலம் பெறும்.

    சித்தர் பாடல் :
    காணவே நாறுகின்ற கரந்தை தன்னைக்
    கலங்காமல் சமூலந்தான் பிடுங்கி வந்து
    ஊணவே நிழலுலர்த்தா யுலர்த்திக் கொண்டு
    உகந்துமே யிடித்து நன்றாய்ச் சூரணமே செய்து
    பாணவே பால் நெய்யில் தேனிற் கொள்ள
    பாங்கான திங்கள்ஒன்றில் சடநாற்றம் போம்
    வாணவே திங்களிரண்டில் வாதம் போம்
    மருவுகின்ற மூன்று திங்கள் பித்தம் போம்.

    போகுமே நான்கு திங்கள் குட்டமெல்லாம்
    புகழான ஐந்து திங்கள் வன்னி மீதும்
    நாகுமே யாறுதிங்கள் ஞான மீறும்
    நலமான ஏழு திங்கள் தேகம் பொன்னாம்
    யேருமே எட்டுதனிற் சட்டைப் போகும்
    யேற்றமா யொன்பதிலே கவனங் கொள்ளும்
    பாகுமே பரமசிவன் சடையில் வைத்தார்
    பாங்கை யெல்லாங் கண்டுரைத்த படிதானென்றே

    என்றான கரந்தையைத் தான் கொண்டு வந்து
    யடித்துமே படிசாறு வடிகட்டிக் கொண்டு
    கண்டான கரண்டிதனைத் துப்புரவாய் விளக்கிக்
    களிம்பகற்றிச் சூதத்தை யதிலே போட்டு
    தன்றான கரியோட்டில் வைத்து ஊதி
    சாறுதான் சுருக்கிட்டு நாலு சாமம்
    பன்றாகக் கட்டியது வெண்ணை யாகும்
    பாங்கான வெண்ணை யெல்லாம் வாங்கிக்கொள்வாங்கியே உருண்டை போல் வைத்துக் கொண்டு
    மறுபடியும் யிலையரைத்துக் கவசங் கட்டித்
    தாங்கியே பத்தெருவிற் புடத்தைப் போட்டு
    தப்பாமல் மறுபடியு மிலைய ரைத்துத்
    தேங்கியே பத்து விசை புடத்தைப் போடத்
    திரண்டுமே மணிபோலக் கரியிலாடும்
    ஓங்கியே உருண்டைதனைக் குகையிலிட்டு
    உருகையிலே நாளிலொன்று தங்கம் போடே

    தங்கத்தி னெடையொக்க நாகமே போடு
    தாக்கியே கலந்தொன்றா யுருக்கி வாங்கி
    பங்கத்தின் கல்வத்தி லிதனை யிட்டு
    பாங்காக பொடித்திட்டு பொடிக்குப் பாதி
    லிங்கத்தைக் கூட்டியே தாளகமுங் கெந்தி
    நேரான சிலையொரு கால்வாசி கூட்டி
    அங்கத்தில் கரந்தை யொன்ற சாறு தன்னால்
    அரத்துமே பொடியாக்கி மேருக் கேத்தே

    ஏத்தியே பனிரெண்டு சாமந்த்தீயை
    எழிலான கதிராலே கிண்டிப் பாரு
    மாத்தியே மாதளம்பூ போலே நிற்கும்
    மாசற்ற நவலோகம் நூற்றுக் கொன்று
    கோத்தியே கொடுத்தாக்கால் கனக மாகுங்
    கூர்ந்து பண விடைதன்னை கரந்தையிலே யுன்னு
    தேத்தியே மண்டலந்தா னுண்டாயானால்
    சிவந்தெழுந்த சூரியன் போல் முகமாந்த் தேறே

    தேறியே சங்குநிற மாங்கரந்தை
    தேடியே பாக்களவு பாலிலுண்ணு
    மாரியே மண்டலந்தா னுண்டா யானால்
    மாசற்ற சந்திரன் போல் முகமுமாமே
    வீரியே வெள்ளைமயிர் காகயிறகாகும்
    மேனியுமே ரசிக்கென்று சிவந்து மின்னும்
    மூரியே யமிர்தந்தான் யோகத்திற் பரந்து
    உத்தமனே அமிர்தத்தை உண்ணு உண்ணே.
    மேற்கண்ட பொடியுடன் கரிசலாங்கன்னிப்பொடி சமமாகக்கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர இளநரை நீங்கும், உடல் பலம் பெறும்.

    கொட்டைக்கரந்தை செடிகள் பூப்பூப்பதற்கு முன்பாக அவற்றைப் பிடுங்கி, நிழலில் உலரவைத்துப் பொடியாக்கி, ஐந்து கிராம் அளவுக்கு எடுத்து, கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல், உள்ரணம் மற்றும் தோல் நோய்கள் சரியாகும். இதே பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்கு எடுத்து, பால், கற்கண்டுடன் சேர்த்துத் தொடர்ந்து ஆறு மாதங்கள் வரை இரவில் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலப்படும். தினமும் ஒன்று முதல் இரண்டு கிராம் அளவு எடுத்துத் தேனுடன் சேர்த்துச் சாப்பிட, நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிப்பதோடு பார்வைத்திறன் அதிகரிக்கும். 

    கொட்டைக்கரந்தைப் பொடியுடன் அதே அளவு கரிசலாங்கண்ணிப் பொடியைச் சேர்த்துத் தேனுடன் குழைத்துச் சாப்பிட்டுவந்தால், இளநரை விலகுவதோடு உடல் பலம்பெறும். உடல் உறுப்புகளுக்கு வலிமை தரும் இந்த மூலிகை, பல்வேறு மருத்துவத்துக்கும் பயன்படுகிறது. கொட்டைக்கரந்தையின் பட்டையை அரைத்து மோருடன் கலந்து சாப்பிட்டுவந்தால், மூலம் குணமாகும்.

    .
    தோல் நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் இதன் இலை களைக் காயவைத்துப் பொடியாக்கி ஒரு வேளைக்கு அரை டீஸ்பூன் வீதம் தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கொட்டைக்கரந்தை இலைச்சாற்றுடன் சமஅளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி, தலைக்குத் தேய்த்து வந்தால் கூந்தல் கருகருவென வளரும்.

    சப்போட்டா பழத்தின் மருத்துவப் பயன்கள்



    சப்போட்டா பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தோலின் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது. சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நாம் நீண்ட நாட்களுக்கு இளமையான தோற்றத்தை பெறலாம். பொடுகு தொல்லை நீங்க சப்போட்டா விதைகளை விழுது போல நன்றாக அரைத்து அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து பின்பு இரவில் படுக்கும் போது மண்டையோட்டில் நன்றாக படும்படி தேய்த்து பின்பு மறுநாள் காலையில் தலைக்கு குளித்து விட வேண்டும். இது தலைமுடிக்கு மென்மையை தருவதோடு பொடுகையும் நீக்கும்.

    கூர்மையான கண் பார்வைக்கு சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வயது முதிர்ந்த காலத்திலும் நல்ல கண் பார்வையை பெறலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ சத்தானது நம் கண்களை ஆரோக்கியமாக வைப்பதோடு கண்பார்வையை குறையாமல் பார்த்துக் கொள்கிறது. ஆரோக்கியமான எலும்புகள் பெற கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் இந்த சப்போட்டாவில் அதிக அளவு உள்ளது. சத்துக்களின் குறைபாட்டின் காரணமாக நம் எலும்புகளானது ஆற்றலை இழக்கின்றது. சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சக்தி அதிகரிக்கப்பட்டு எலும்புகள் வலுவடைகிறது. மலச்சிக்கல் நீங்க சப்போட்டாவின் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலின் குடல் ஆரோக்கியத்தை அதிகரித்து உடலை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.

    நம் குடலானது ஆரோக்கியமாக செயல்படும் போது மலச்சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. கர்ப்பிணி பெண்களுக்கு சப்போட்டாவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் மற்ற சத்துக்கள் அதிகளவு உள்ளதால் கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களும் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நம் உடலிற்கு இயற்கையாகவே ரத்தத்தை உறையவைக்கும் சக்தி வந்துவிடும். மன அழுத்தம் நீங்க நம் உடலில் இருக்கும் நரம்புகளை அமைதிப்படுத்தும் தன்மையானது சப்போடாவிற்க்கு உள்ளது.

    இந்த சப்போட்டாவை தொடர்ந்து உண்டு வந்தால் தூக்கமின்மை, பதட்டம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.

    சிறியா நங்கை 





    நீரிழிவுக்கு அருமையான மருந்து. பாம்புக்கும் கீரிக்கும் சண்டை ஏற்பட்டு, பாம்பைக் கடித்துக் கொன்றபின் கீரிப்பிள்ளை இதன் செடியில் புரண்டு எழுந்து தமது புண்களை ஆற்றிக்கொள்ளும் என்பர்.

    வீடுகளின் வேலியில் சிறியாநங்கை செடியை வளர்த்து வந்தால் பாம்பு எட்டிப்பார்க்காது. அதாவது சிறியாநங்கை இலை மீது பரவி வரும் காற்று பாம்பின் மீது பட்டால் அதன் செதில்கள் சுருங்கி விரியாது. இதனால் பாம்பால் செயல்பட முடியாமல் போய்விடுமாம்.

    பாம்புக்கடி, தேள் கடி முதலிய விஷக்கடிகளுக்கு இதன் இலையை அரைத்து விழுங்கச் சொல்வார்கள். இதனால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மை நீங்கும்.

    சிறியாநங்கையின் இலை மற்றும் வேர்ப் பகுதிகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. அக்காலத்தில், வேட்டைக்கு செல்லும் வேடர்கள் சிறியாநங்கை செடியின் வேரை, கடை வாயில்வைத்து கடித்துக் கொண்டு செல்வார்கள். அவ்வாறு செல்லும்போது வேறு எந்த விஷப்பூச்சி கடித்தாலும் அவர்களை தாக்காது.

    தோல்நோய்களுக்கு சிறியா நங்கை மிகவும் நல்லது. ஆனால் பத்தியத்திற்கு கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது. நீரிழிவு நோய்க்கும், அலர்ஜிக்கும் சிறியாநங்கையைப் பயன்படுத்துகிறார்கள்.

    மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து. மலேரியா, மற்றும் விஷ காய்ச்சலுக்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.

    சிறியாநங்கை இலைகளை, எலுமிச்சை சாறு விட்டு நன்கு அரைத்து வீக்கம் மேல் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும்
    .


    முடக்கறுத்தான் (முடக்கொத்தான்)


    குழந்தை பிரசவிக்கும் பெண்களின் அடிவயிற்றினில் முடக்கறுத்தான் இலை கொண்டு கனமாக பற்று போட பிரசவ வலி இல்லாமல் பதினைந்து நிமிடத்தில் சுகமாக குழந்தை பிறக்கும்.மாற்றடுக்கில் அமைந்த பல்லுள்ள இலைகளையும் கோணங்களில் இறகுள்ள காய்களையும் உடைய ஏறு கொடி. மழைக் காலத்தில் எல்லா இடங்களிலும் தானே வளரும். இதன் இலை, வேர் மருத்துவ குணமுடையது.


    பெண்களின் கூந்தல் நீண்டு வளர முடக்கத்தான் வேர் கூட்டு பொருளாக பயன்படுகிறது.

    வாயுவை போக்கவும், முடக்கு வாதத்தை நீக்குவதற்கு அருமருந்தாக முடக்கறுத்தான் பயன்படுகிறது.

    பாரிசவாயு குணமாக, முடக்கறுத்தான் இலையுடன் வேலிப்பருத்தி இலை மற்றும் ஆவாரை இலையும் சேர்த்து இடித்து சாறு எடுத்து காலை வேலை மட்டும் ஏழு நாள் சாப்பிட வேண்டும்.

    இலையை அவித்துச் சாறு எடுத்து ரசமாக்கி உணவோடு வாரம் ஒரு உட்கொள்ள மலச்சிக்கல் தீரும். வாயு கலையும். இலையை அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட உடம்பு வலி தீரும். வேர் ஒரு பிடி நல்ல நீரில் காய்ச்சி ஒரு குவளை கால் குவளையாக வரும் வரை செய்து காலையிலும், மாலையிலும் 21 நாட்கள் சாப்பிட்டு ஒரு வாரம் இடைவெளி விட்டு மீண்டும் 21 நாட்கள் சாப்பிட மூலம் தீரும். காரம் நீக்கவும்.


    துளசி



    துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது. வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.

    இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும். இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 நாட்களில் காது மந்தம் தீரும். விதைச் சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது கட்டும். மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
    துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.
    துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.

    குணமாகும் வியாதிகள்.
    1.உண்ட விஷத்தை முறிக்க. 
    2.விஷஜுரம்குணமாக. 
    3.ஜன்னிவாத ஜுரம் குணமாக. 
    4.வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க. 
    5.காது குத்துவலி குணமாக. 
    6.காது வலி குணமாக. 
    7.தலைசுற்றுகுணமாக. 
    8.பிரசவ வலி குறைய. 
    9.அம்மை அதிகரிக்காதிருக்க. 
    10.மூத்திரத் துவாரவலி குணமாக. 
    11.வண்டுகடி குணமாக. 
    12.வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக. 
    13. எந்த வியாதியும் உண்டாகமலிருக்க. 
    14.தோல் சம்பந்தமான நோய் குணமாக. 
    15.மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற. 
    16.அஜீரணம் குணமாக. 
    17.கெட்டரத்தம் சுத்தமாக. 
    18.குஷ்ட நோய் குணமாக. 
    19.குளிர் காச்சல் குணமாக. 
    20.மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக. 
    21.விஷப்பூச்சியின் விஷம் நீங்க. 
    22.பாம்பு விஷத்தை முறித்து உயிர்பிழைக்க. 
    23.காக்காய்வலிப்புக் குணமாக. 
    24.ஜலதோசம் குணமாக. 
    25.ஜீரண சக்தி உண்டாக. 
    26.தாதுவைக் கட்ட. 
    27.சொப்பன ஸ்கலிதம் குண்மாக. 
    28.இடிதாங்கியாகப் பயன்பட 
    29.தேள் கொட்டு குணமாக. 
    30.சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக. 
    31.கண்ணில் விழுந்த மண்,தூசியை வெளியேற்ற. 
    32.வாதரோகம் குணமாக. 
    33.காச்சலின் போது தாகம் தணிய. 
    34.பித்தம் குணமாக. 
    35.குழந்தைகள் வாந்தியை நிறுத்த. 
    36.குழந்தைகள் வயிற்றுப் போக்கை நிறுத்த. 
    37.சகல விதமான வாய்வுகளும் குணமாக. 
    38.மாலைக்கண் குணமாக. 
    39.எலிக்கடி விஷம் நீங்க. 
    40. காச்சல் வரும் அறிகுறிதோன்றினால். 
    41இரணத்தில் இரத்தம் ஒழுகினால் நிறுத்த. 
    42.வாந்தியை நிறுத்த. 
    43.தனுர்வாதம் கணமாக. 
    44.வாதவீக்கம் குணமாக. 
    45.மலேரியாக் காய்ச்சல் குணமாக. 
    46.வாய்வுப் பிடிப்பு குணமாக. 
    47.இருமல் குணமாக. 
    48.இன்புளூயன்சா காய்ச்சல் குண்மாக. 
    49.காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை நிறுத்த. 
    50.இளைப்பு குணமாக. 
    51.பற்று, படர்தாமரை குணமாக. 
    52.சிரங்கு குணமாக. 
    53.கோழை, கபக்கட்டு நீங்க.
    54.சகல காய்ச்சல் மாத்திரை




    மாதவிடாய் கோளாறுகள் நீங்க
    மூலிகை மருத்துவத்தால் நலம் பெறலாம்
    இவ்வகை நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்தில் சிறந்த மருத்துவம் இருக்கின்றன. ஆயுர்வேத, சித்த மருத்துவம், அவற்றிற்கு உரிய தனித்தன்மையில், நோயின் காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்குத் தகுந்தவாறு செயல்பட்டு நோயின் அடிப்படைக் காரணத்தை விலக்கி நோயிலிருந்து விடுதலை அளிக்கும்.
    மாதவிடாய் கோளாறுகள்
    பெண்களை பாடாய்படுத்துகிறது. அவர்களுடைய ஆரோக்கியத்தை உறுதி செய்வதாக இந்நிகழ்வு நடைபெற்றாலும் கூட, அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நிலைகளில் பெண்கள் படும் வேதனை சொல்லி மாளாது. ஒரு பெண் பருவமடைந்த பின்னர் பூப்பு எனப்படும் மாதவிலக்கு அவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தினாலும் உடல், மன ரீதியாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
    இதன் காரணமாகவே அந்நிகழ்வின் போது பெண்கள் வெறுப்படைகின்றனர்.
    பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் காலக்கட்டத்திற்கு 14 நாட்களுக்கு முன்னரே உடல் மற்றும் மனதளவில் சில பாதிப்புகள் ஏற்படுகின்றன. பிஎம்எஸ் எனப்படும் குறிகுணம் பெண்களுக்கு சோர்வை ஏற்படுத்துகின்றன. இந்நாட்களில் ஒருவித எரிச்சல் உணர்வும் பதற்றமும் ஏற்படுகிறது.
    மேலும் தலைவலி, தூக்கமின்மை, மகிழ்ச்சியின்மை, மன இறுக்கம், மன அழுத்தம் போன்றவையும் ஏற்பட்டு உதிரப்போக்குக்கு பின்னர் தானாகவே மறைந்து விடுகின்றன.
    மாதவிடாய் என்றாலே அதை ஒரு சுமையாகவே பெரும்பாலான பெண்கள் கருதுகின்றனர்.
    அந்த மூன்று நாட்களை நினைத்து கவலைப்படாத இளம் பெண்களே இருக்கமாட்டார்கள் என்றே கூறலாம். ஆனால் இந்த மாதவிடாய் உபாதையைக் கொடுத்தாலும் பெண்ணின் உடலமைப்பில் மிக முக்கியமான பணியாக விளங்குகிறது. பெண்ணின் உடலைத் தூய்மைப்படுத்த இயற்கை அளித்த வரப்பிரசாதம் தான் இந்த மாதவிடாய்.
    சிலர் பருமனைக் குறைக்கிறேன் என்கிற பெயரில் சராசரியை விடவும் மிகக் குறைவான எடைக்கு வருவார்கள். அது அவர்களது ஹார்மோன் அளவுகளைப் பெரிதும் பாதித்து, அதன் விளைவாக மாதவிடாய் வராமல் செய்யும்.அதே போல அளவுக்கதிமாக உடற்பயிற்சி செய்கிறவர்களும் இந்த நிலையை சந்திக்கலாம்.
    மிகக் குறைவான உடல் கொழுப்பு, அளவுகடந்த உடல் உழைப்பு, மன அழுத்தம் போன்ற காரணங்களால்தான் விளையாட்டுத் துறையில் ஈடுபடுகிற பெரும்பாலான பெண்கள் இந்தப் பிரச்சனையை சந்திக்கிறார்கள்.
    நிறைய பெண்கள் மாதவிடாய் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    இவையே பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுள் முதன்மையானது. சிலருக்கு மாதவிடாய் சுழற்சியானது சற்று தாமதமாக ஏற்படும். ஆனால் அந்த தாமதம் சிலருக்கு 2 மாதங்கள் தள்ளிக் கூட போகும்.
    இத்தகைய பிரச்சனையால், பிற்காலத்தில், அவர்களுக்கு குழந்தை பெறுவதில் பிரச்சனை ஏற்படுகிறது.
    பொதுவாக மாதவிடாய் சுழற்சியானது 28-30 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறும். ஆனால் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுகள், அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி, தேவையில்லாமல் மருந்துக்கள் உட்கொள்வது போன்றவை மாதவிடாய் சுழற்சிக்கு தடையை ஏற்படுத்துகின்றன.
    அதிலும் அவ்வாறு தாமதமாக மாதவிடாய் சுழற்சி நடைபெறும் போது, சில சமயங்களில் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இரத்தப் போக்கு ஏற்படுவதோடு, கடுமையான வயிற்று வலியும் ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சனைகளை…வேத, சித்த மருத்துவம், அவற்றிற்கு உரிய தனித்தன்மையில், நோயின் காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்குத் தகுந்தவாறு செயல்பட்டு நோயின் அடிப்படைக் காரணத்தை விலக்கி நோயிலிருந்து விடுதலை அளிக்கும்.

    ஆயுர்வேத, சித்த மருந்துகள் இயற்கையான மூலப் பொருட்களிலிருந்து தயாரிக்கப் படுவதால் அவை எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் நோயிலிருந்து நூறு சதவிகிதம் விடுதலை அளிக்கின்றன. பயன்படுத்திப் பயன் பெறுங்கள்.
    சித்த மருத்துவத்தில் மாதவிடாய் கோளாறுகள் நீங்க
    2 மாதங்கள் முதல் ஒரு 5 மாதங்கள் வரை சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.





    சீரகம்

    உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.

    அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
    சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.
    * சீரக தண்ணீர்
    2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
    * சீரகப் பொடி மற்றும் தயிர்
    மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
    * சீரகப் பொடி மற்றும் தேன்
    1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
    * சூப்புடன் சீரகப் பொடி
    உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
    * எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
    எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை. அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
    * தொப்பையைக் குறைக்கும் சீரகம்
    சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
    * சீரகத்தின் வேறுசில நன்மைகள்
    மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.

    தலைமுடியைக் கறுமையாக்கும் கரிசாலை



    வ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால் நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த
    புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள விஷயங்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். இந்த இதழில் நாம் பார்க்க இருக்கும் மூலிகை ‘கரிசாலை’.

    விழியில் கரைந்து, ஈரலில் நுழைந்துஉடலையும் உயிரையும் வலுவாக்கும் மூலிகைகளில் ஒன்று ‘கரிசாலை’. இதன் இலக்கியப் பெயர்   ‘கரிசலாங்கண்ணி’. இதை கிராமப்புறங்களில் ‘கரப்பாந்தழை’, ‘கரிப்பான்’, ‘கையாந்தழை’ என்று குறிப்பிடுவார்கள். கேரள மக்கள் ‘கைதோணி’, ‘கையுண்ணி’ என்கிறார்கள். இதன் சாறு கறுமை நிறத்தில் இருப்பதால், பெயர்கள் அனைத்தும் கறுமையைக் குறிக்கும் விதத்தில் அமைந்துள்ளன.
     இது, கண்களுக்குக் குளிர்ச்சியூட்டி கண்ணோய்களை அண்டவிடாமல் தடுக்கும் ஆற்றலுடையது. ஈரலை வலுவாக்கி செரிமானத் தன்மையைச் செம்மைப்படுத்தும். தவிர, மஞ்சள் காமாலை நோய்க்கு நல்ல மருந்து. தலை முடியைக் கறுகறுவென வளரச்செய்யும் தன்மை கொண்ட மூலிகை இது.பல நன்மைகள் கொண்ட இம்மூலிகையைத் தேடியலையத் தேவையில்லை. நெல் வயல்களிலும், காடுகளிலும் குறிப்பாகத் தண்ணீர் பாயும் இடங்களிலெல்லாம் தன்னிச்சையாகச் செழிப்பாக வளர்ந்து கிடக்கும் ஒரு மூலிகைதான் கரிசாலை.
    தமிழகத்தில், வெள்ளைக் கரிசலாங்கண்ணி, மஞ்சள் கரிசலாங்கண்ணி என இரண்டு வகைகள் உள்ளன. வெள்ளை நிறப் பூப் பூக்கும் செடியை வெள்ளைக் கரிசலாங்கண்ணி என்பர். இதன் தாவரவியல் பெயர் ‘எக்லிப்டா ப்ரோஸ்ட்ராட்டா (எல்) லின்’ (Eclipta prostrata (L) Linn). இதுதான் அனைத்து இடங்களிலும் காணக்கிடைக்கும்.

    மஞ்சள் நிறத்தில் பூ பூப்பதை மஞ்சள் கரிசலாங்கண்ணி என்பர். இதைப் பொற்றலைக்கையான் என்றும் சொல்வார்கள். இதன் தாவரவியல் பெயர் ‘வேடெலியா சினேஸிஸ் (ஒஸ்பெக்) மெர்’ (Wedelia Chinensis (Osbeck) Merr ). இதை நாம் நடவு செய்துதான் வளர்க்க வேண்டும். இதுதான் அறிவு வளர்ச்சிக்காகச் சித்தர்களால் பாடப்பட்டுள்ள மூலிகை.
    நடைமுறையில் கரிசாலை என்பது, இரண்டு வகைகளையுமே குறிக்கிறது. உடலின் உள்பகுதிகளுக்குச் சாப்பிடும் மருந்துகள் மஞ்சள் கரிசாலையிலும்; வெளிப்பகுதிகளுக்கு உபயோகப்படுத்தும் மருந்துகள் வெள்ளைக் கரிசாலையிலும் தயாரிக்கப்படுகின்றன. சித்த மருந்துகளில் உயர் மருந்துகளான செந்தூரங்கள் தயாரிக்க மஞ்சள் கரிசாலையே சிறப்பாக உள்ளது. கரிசாலையை வடமொழியில் ‘பிருங்கராஜ்’ என அழைக்கிறார்கள். அதனால், ‘பிருங்க’ என்று பெயரால் வழங்கப்படும் அனைத்து மருந்துகளிலும் கரிசாலை சேர்க்கப்பட்டிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

    கரிசலாங்கண்ணி  


    முழுத்தாவரம் கைப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. கரிசலாங்கண்ணி சிறு செடி வகையைச் சார்ந்தது. இலைகள், எதிரெதிராக அமைந்தவை. அகலத்தில் குறுகியவை, நீண்டவை, சொரசொரப்பானவை. மலர்கள், சிறியவை, வெண்மையானவை, சூரியகாந்தி மலர் போன்ற தோற்றம் கொண்டவை. கிளைகளின் நுனியில் காணப்படும்.

    வாய்க்கால் மற்றும் வயல் வரப்புகள், சாலையோரங்கள், ஆற்றங்கரைகளில் கரிசலாங்கண்ணி களைச்செடியாக வளர்ந்து, மிகவும் செழிப்பாகக் காணப்படும். கரிசாலை, கையான், கரிப்பான், பிருங்கராஜம், யாந்தகரை ஆகிய முக்கியமான மாற்றுப் பெயர்கள் கரிசாலைக்கு உள்ளது.

    முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படும்.மஞ்சள் காமாலை தீர பசுமையான கரிசலாங்கண்ணி இலைகளைச் சுத்தம் செய்து, பசையாக அரைத்து, கொட்டைப்பாக்கு அளவு, ஒரு டம்ளர் மோரில் கலந்து, உள்ளுக்கு சாப்பிட்டுவர வேண்டும். காலை, மாலை வேளைகளில், 7 நாட்கள் வரை இவ்வாறு செய்ய வேண்டும். இந்தக் காலத்தில், உணவில் உப்பு, புளி நீக்கி பத்தியத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

    மார்பில் கட்டிய கோழை இளகி வெளிப்பட தேவையான அளவு பசுமையான கரிசாலை இலைகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். இதனை, நன்றாகக் கழுவி, பசையாக அரைத்துக்கொள்ள வேண்டும். இத்துடன், 2 பங்கு தண்ணீர் சேர்த்துக் குழைத்து 2 பங்கு நல்லெண்ணெயில் கலந்து, அடுப்பில் வைத்து, நீர் வற்றுமளவிற்கு காய்ச்சி, காற்றுப்புகாத கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்த வேண்டும். 

    இதனை ரு தேக்கரண்டி அளவு, 100 மி.லி. காய்ச்சிய பாலில் கலந்து, குடித்துவர வேண்டும். தினமும் இரண்டு வேளைகள் இவ்வாறு செய்ய வேண்டும்.கண் பார்வை தெளிவடைய கரிசலாங்கண்ணித் தைலம்: கரிசலாங்கண்ணி இலைச் சாற்றுடன், சோற்றுக் கற்றாழை, நெல்லிக்காய் ஆகியவற்றின் சாறுகளையும் சம அளவாகச் சேர்த்து, அவற்றின் மொத்த அளவிற்குத் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, சுண்டவைத்து, வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தைலத்தால் தலைமுழுகிவர வேண்டும். மேலும், தலைவலி, உடல்வலி, உடல் அசதி ஆகியவையும் தீரும். மலச்சிக்கல் தீர தினமும், காலையில் 5 பசுமையான இலைகளை மென்று சாப்பிட்டுவர வேண்டும்.
    தாமரை 

    தாமரை மலர்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தாமரை மலர்களில் லினோலிக் அமிலம், புரோட்டீன், பாஸ்பரஸ், இரும்புசத்து, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகின்றன.

    மூலிகைகளின் பலனை அறிய  ஒரு சின்ன எளிய வழி கூட இயற்கை காட்டியிருக்கிறது . ஒரு மூலிகை வடிவில்  மனித உறுப்பில் இதை ஒத்து இருக்கிறதோ அந்த உறுப்புக்கு அந்த மூலிகை நிவாரணமாக பயன் படும் .இது பெருவாரியாக ஒத்து வரும் .அதேப்போல் மூடிய தாமரை ஒத்திருக்கும் இதயத்தை தாமரை வலுவாக்கும் தாமரை தண்டுகள் நார்சத்து நிரம்பியவை   விட்டமின் சி பொட்டசியம்  பாஸ்பராஸ் விட்டமின்  B  6     தாமிர   சத்து  இவைகளுடன்

    மாங்கனீஸ்இவைகள் அடங்கியது .இதில் மிக முக்கியமானது இதில் சக்கரையும் கொழுப்பும் சிறிது கூட இல்லை

    தாமரை மலர்களின் இதழ்களை நிழலில் காயவைத்து  அவைகளை கஷாயம் செய்து சாப்பிட்டால் இதய மைகள் கட்டுப்படும் .

    தாமரை மலரின் நடுவில் இருக்கும் மகரந்த பகுதியை உடைத்துப்பார்த்தால் அதனுள்

    விதைகள் காணப்படும் .இவைகள் மிகப்படினமாக இருக்கும் .இந்த விதிகளை உடைத்து அதில் இருக்கும் பருப்பை சாப்பிட இதய நோய் தீரும் .இதயம் பலப்படும் .

    சிறுநீரகங்களை  வலுப்படுத்தும்.

    ஞாபக சக்தியைத் தூண்டும்மூளைக்கும், நரம்புகளுக்கும் புத்துணர்வூட்டும்.

    வயிற்றுப் புண்ணை ஆற்றும்சரும எரிச்சலைப் போக்கும்.

    இதயத்தைப் பாதுகாக்கும்இதய தசைகளை வலுப்படுத்தும்இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புச்சத்தைக் குறைக்கும்.

    தாமரைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பனை வெல்லத்துடன் கலந்து பாகுபோல் காய்ச்சி சாப்பிட்டு வந்தால், இருமல், அதிக உதிரப் போக்கு போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கும்.

    வெண்தாமரைப் பூ மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறதுஞாபக சக்தியைத் தூண்டுகிறதுநரம்புகளுக்கு பலம் கொடுக்கிறது என சித்தர்கள் பலர் கூறியுள்ளனர்.

    தாமரைப் பூவின் மகரந்தப் பொடியுடன் தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவுபெறும்காது கேளாமை நீங்கும்ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்.

    மருந்துகளால் சிலருக்கு ஒவ்வாமை உண்டானால் அது பலவகைகளில் பாதிப்பை உண்டுபண்ணும்அப்பாதிப்புகளைக் குறைக்க தாமரைப்பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து குடிநீராக தினமும் அரை அவுன்ஸ் அளவு அருந்தி வந்தால் ஒவ்வாமையால் உண்டான  பாதிப்பு குறையும்.

    1. தாமரை விதைகள் அல்சரை குணப்படுத்தும்.
    2. தாமரை விதைகள் கொழுப்பு செல்கள் உருவாவதை தடுக்கும்
    3. தாமரை விதைகள் நரம்புகள் மற்றும் தசைகளைத் தளர்வடையச் செய்து தூக்கத்தை ஊக்கப்படுத்துகின்றன.
    4. தாமரை விதைகள் முதுமை மற்றும் அறிவாற்றல் குறைபாட்டைக் குறைக்கும்.
    5. தாமரை விதைகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தலாம். 
    6. தாமரை விதையை உட்கொள்ள உடல் உபாதைகள் தீரும்.
    7. தாமரை விதைகள் மன அழுத்தத்தை விலக்கி மனதை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
    8. தாமரை விதைகளுடன் பன்னிரை சேர்த்து அரைத்து பூசி வந்தால் உடலில் பளபளப்பு கூடும்.
    9. தாமரை விதையை உட்கொள்வது ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது,மற்றும் பெண்களில் கருவுறுதலை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது
    10. தாமரை விதைகளில் அதிகளவு மக்னீசியம் உள்ளதால் ரத்த ஓட்டமும் ஆக்சிஜன் சப்ளையும் மேம்படுகிறது. 
    11. தாமரை விதையை உட்கொள்ள வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்
    12. தாமரை விதைகள் நினைவாற்றலை மேம்படுத்தலாம்.
    13. தாமரை விதையை உட்கொள்ள தூங்கும் நேரத்தை அதிகரிக்கலாம். நல்ல தூக்கம் மன அழுத்தத்தை சமாளிக்க உதவும்.
    14. தாமரை விதைகளில் அதிகளவில் பொட்டாசியமும் குறைந்தளவு சோடியமும் உள்ளன. எனவே, இவை ரத்த நாளங்களை எளிதில் தளர்வடையச் செய்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, ஆரோக்கியமான நிலையில் வைக்கின்றன.
    15.  

    16.  விதைகள் அல்சரை குணப்படுத்தும்.
    17. தாமரை விதைகள் கொழுப்பு செல்கள் உருவாவதை தடுக்கும்
    18. தாமரை விதைகள் நரம்புகள் மற்றும் தசைகளைத் தளர்வடையச் செய்து தூக்கத்தை ஊக்கப்படுத்துகின்றன.
    19. தாமரை விதைகள் முதுமை மற்றும் அறிவாற்றல் குறைபாட்டைக் குறைக்கும்.
    20. தாமரை விதைகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தலாம். 
    21. தாமரை விதையை உட்கொள்ள உடல் உபாதைகள் தீரும்.
    22. தாமரை விதைகள் மன அழுத்தத்தை விலக்கி மனதை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
    23. தாமரை விதைகளுடன் பன்னிரை சேர்த்து அரைத்து பூசி வந்தால் உடலில் பளபளப்பு கூடும்.
    24. தாமரை விதையை உட்கொள்வது ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது,மற்றும் பெண்களில் கருவுறுதலை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது
    25. தாமரை விதைகளில் அதிகளவு மக்னீசியம் உள்ளதால் ரத்த ஓட்டமும் ஆக்சிஜன் சப்ளையும் மேம்படுகிறது. 
    26. தாமரை விதையை உட்கொள்ள வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்
    27. தாமரை விதைகள் நினைவாற்றலை மேம்படுத்தலாம்.
    28. தாமரை விதையை உட்கொள்ள தூங்கும் நேரத்தை அதிகரிக்கலாம். நல்ல தூக்கம் மன அழுத்தத்தை சமாளிக்க உதவும்.
    29. தாமரை விதைகளில் அதிகளவில் பொட்டாசியமும் குறைந்தளவு சோடியமும் உள்ளன. எனவே, இவை ரத்த நாளங்களை எளிதில் தளர்வடையச் செய்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, ஆரோக்கியமான நிலையில் வைக்கின்றன.

     



    துத்தி


    இதய வடிவ இலைகளையும், மஞ்சள் நிற சிறு பூக்களையும், தோடு வடிவக் காய்களையும் உடைய செடி. இலையில் மென்மையான கணையுண்டு. உடலில் பட்டால் சற்றே அரிக்கும். இது 4 அடி வரை வளரக் கூடியது. பூக்கள், அச்சு முறுக்கு அல்லது தாமரைப் பூ போன்று அமைந்திருக்கும். துத்தியின் இரண்டு காய்ந்த காய்களை ஒன்றோடு ஒன்று இரு தலையையும் அழுத்தினால் ஒட்டிக்கொள்ளும். இலை, பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவக் குணம் உடையவை. 

    தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் மழைக் காலத்தில் தானாகவே இது வளரும். இதன் பூ இரத்தப் போக்கை நிறுத்தவும். காமம் பெருக்கியாகவும் செயல்படக் கூடியது. விதை உடலுக்கு பலத்தைக் கொடுக்கும் குணம் உடையது. துத்தியில் பலவகைகள் இருந்தாலும் பசும் துத்தி, ஐந்து இதழ் துத்தி மற்ற துத்திகளை விட சிறந்த மருத்துவக் குணம் கொண்டது.

    வேறு பெயர்கள்: ஆனைக் கன்று, இயாகதம், ஐ இதழ், பணியார துத்தி.
    வகைகள்: ஐந்து இதழ் துத்தி, ஒட்டுத் துத்தி, சிறு துத்தி, பசும் துத்தி, கருந்துத்தி, நிலத்துத்தி, எலிக்காது துத்தி, முடக்கு துத்தி, நாம துத்தி, ராத்துத்தி, பெரும்துத்தி, வயிற்றுத் துத்தி, ரண துத்தி.
    ஆங்கிலத்தில்:Abutilon indicum; G.Don;
    மருத்துவக் குணங்கள்
    ஐந்து பெரிய துத்தி இலைகளை எந்தக் கீரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும், ஆண், பெண் இருவருக்கும் உள்ள வெள்ளை வெட்டை நீங்கும்.
    துத்தி இலையை காரமின்றி பொரியலாகச் செய்து உணவுடன் உண்டு வர 120 நாள்களில் மூல நோய் முற்றிலும் குணமாகும். (புளி, காரம், புகை, புலால் நீக்க வேண்டும்)

    துத்தியிலையை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டி பொடியை வெந்நீரிலோ அல்லது 1 டம்ளர் பாலிலோ 2 வேளை சாப்பிட்டு வர மூல நோய் கட்டுப்படும்.
    துத்தியிலையையும், வேலிப் பருத்தி இலையையும் சம அளவாக எடுத்து அனைத்து சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து வாயில் நன்றாக வைத்துக் கொப்பளித்து துப்பிவிடவேண்டும். இப்படிச் செய்வதால் பல் வலி, கூச்சம் போன்றவை குணமாகும்.

    துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளம் சூட்டில் கட்டி வர, இரத்த மூலம், சீழ் மூலம் குணமாகும்.
    துத்தியிலையின் பூவை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி அதேயளவு சர்க்கரை கலந்து அரைத் தேக்கரண்டியளவு எடுத்து 1 டம்ளர் பாலில் கலந்து 2 வேளை குடித்து வர காசம், நுரையீரல் கபம், இரைப்பு, இரத்த வாந்தி குணமாகும்.

    துத்தியின் விதையை நிழலில் காயவைத்து இடித்துப் பொடியாக்கி 5 கிராம் எடுத்து, கற்கண்டு பொடி 5 கிராம் சேர்த்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர கருமேகம், வெண்மேகம், உடல் சூடு, மேக அனல் குணமாகும்.
    துத்தியின் விதையைப் பசுவின் பால் விட்டு அரைத்து நெல்லிக் காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்து வர, கை, காலில் படர்கின்ற கருமேகம், குட்டம், வெப்பு குணமாகும்.


    துத்தியிலையைக் கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது பாலும், சர்க்கரையும் சேர்த்து காப்பி குடிப்பது போலக் குடித்து வர, மேகச் சூடு தணியும்.
    துத்தியிலையில் வெங்காயம், சிறு பயிறு சேர்த்து சமைத்து உண்ண மலச்சிக்கல் நீங்கும். மூலச் சூடு தணியும்.

    துத்தி வேர் 60 கிராம், திராட்சை 30 கிராம் இவற்றைச் சிதைத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது நெய் சேர்த்துச் சாப்பிட நீர்ச் சுருக்கு நீங்கும்.
    துத்தியிலையை அரைத்து பருக்கள் மீது தடவி வர அல்லது துத்தியிலையில் காடி சேர்த்து அரைத்து பருக்கள் மீது கட்டி வர பருக்கட்டிகள் உடைந்து குணமாகும். 

    வெற்றிலை

    நமது நாட்டின் பாரம்பரியத்தில் எந்த ஒரு விருந்து நிகழ்ச்சியிலும் இறுதியாக ‘வெற்றிலை’ சாப்பிடும் பழக்கம் பல காலமாக பின்பற்றப்படுகிறது. வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும்.

    * வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச்சத்தும், 0.8% கொழுப்புச்சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயாமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் ‘சி’ உள்ளது. 

    வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட சவிக்கால் என்னும் பொருள் உள்ளது.

    * வெற்றிலை உமிழ்நீர் பெருக்கும். நாடி நரம்பை உரமாக்கும். வாய் நாற்றம் போக்கும்.

    * வெற்றிலைச்சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச் சாற்றுடன் நீர் கலந்த பாலை தேவையான அளவு கலந்து பருகி வர சிறுநீர் நன்கு பிரியும்.

    * வெற்றிலையை அனலில் வாட்டி அதனுடன் ஐந்து துளசி இலையை வைத்து கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து சிறு குழந்தைகளுக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.

    * அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையைப் போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும், வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சொறி, சிரங்கு, படைக்கு தடவி வர குணமாகும்.

    * வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத்திணறல் மற்றும் இருமலுக்கு நிவாரணம் கிடைக்கும்.

    * வயிற்றுக்கோளாறு நீங்க, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.

    * வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கு வைத்துக்கட்ட நல்ல பலன் தரும்.

    நம் முன்னோர்கள் மிகக் கொடிய நோய் நொடிகள் ஏதுமின்றி வாழ காரணமாக இருந்தது அவர்களின் சிறந்த உணவுப் பழக்கம் தான் முதன்மையான காரணம். உணவு சாப்பிடும் போது அதனுடன் சேர்த்து சில மருத்துவ குணமிக்க மூலிகைகள் அல்லது மூலிகை பொருட்கள் உட்கொண்டனர். 

    * குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையுடன் சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக்கட்டி வர தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

    பழம்பாசி

    பழம்பாசி என்ற செடியும் பல மருத்துவக் குணங்களைக் கொண்டது. இந்தச் செடியின் இலையையும் நன்றாக அரைத்து கூழாக்கி, தலையில் தேய்த்து குளிப்பதன் மூலம் உடலின் சூட்டை குறைத்து முக அழகுக்கும் வழி வகுக்கிறது. மேலும், உடல் வெப்பத்தைச் சம நிலையிலும் வைக்கிறது.

    இதன் வேரும் சேகரிக்கப்பட்டு, தகுந்த மருத்துவச் சாலைகளுக்கு அனுப்பப்பட்டுக் கஷாயமாகத் தயாரிக்கப்படுகிறது. 

    இந்தக் கஷாயங்கள் மருத்துவச் சாலைகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு மருந்து கடைகளில் விற்பனைக்கு வைக்கப்படுகிறது என்றாலும், தமிழகத்தில் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் இந்த மூலிகை.

    மூளையைப் பாதிக்கும் 10 காரணம்.!
    1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பதுகாலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
    2.மிக அதிகமாகச் சாப்பிடுவதுஇது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
    3. புகை பிடித்தல்
    4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
    நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது
    5. மாசு நிறைந்த காற்றுமாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
    6.தூக்கமின்மைநல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
    7.தலையை மூடிக்கொண்டு தூங்குவதுதலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

    8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பதுஉடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

    9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பதுமூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

    10. பேசாமல் இருப்பதுஅறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.


    உங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள்..!!!!




    உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் என இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
    கட்டை விரல்
    உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
    கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.
    ஆள்காட்டி விரல்
    உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.
    உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.
    நடுவிரல்
    நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.
    நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.
    மோதிரவிரல்
    ஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம்.
    மேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.
    சிறுவிரல்
    சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.
    மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.
    உள்ளங்கை
    மன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.
    மேலும், இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    தேங்காய்ப்பூக்கீரை"

     

     கோடைகாலம் ஆரம்பித்தவுடன் உடலில் ஏற்படுவது நீர் இழப்பு இதற்கு காரணம் அதிக வெயிலால் தோல் எனது உடலின் வெப்பதற்பத்தை சீர் செய்யும் போது தோல் அதிக வியர்வை வெளியேற்றி சீர் செய்யும். இன் நிலையில் சிறுநீரகத்தில் நீர் விழுக்காடு ஏற்பட்டு இதனால் நீர்ச்செறிவு ஏற்பட்டு நீர் அடத்தி ஏற்படும் அதனால் சிறுநீரக்கற்கள் உண்டாவதுடன் சிறுநீரகம் கிருமித்தொத்துக்கு உண்டாகி பாதிக்கப்படலாம். அதை தடுக்க கோடைக்காலத்தில் அதிகளவு நீர் அருந்தும் தேவை உண்டு.



            சிறுநீரகக் கற்கள் பொதுவாக சிறுநீரகத்துக்குள்ளும் அல்லது சிறுநீரகத்தில் “வெல்விஸ்” பகுதியிலும், சிறுநீர் வருகின்றபாதையிலும், சிறுநீர்குழாயிலும், தங்கியும் தோன்றலாம்.
         சிறுநீரகக் கற்கள் பொதுவாக ஐந்து வகையாக வகைப்படுத்தியுள்ளனர்
    1. “கல்சியம் ஒட்சியேற்” வகையான கற்கள்
    2. “கல்சியம் பஸ்ரேட்”  வகையான கற்கள்.
    3. “சுவைட்” வகையான கற்கள். சிறுநீரக தொற்று கிருமிகளின் தாக்குதலால் ஏற்படுகின்றமெக்நீசியமும் அமோனியாவும்”; சேர்ந்து ஒருவகையான கற்களை உருவாக்குகின்றன இவ்வகையான கற்கள் “சுவைட்” வகையான கற்கள் ஆகும்.
    4. “யூறிக் அமிலக் கற்கள்” இது மிகக் குறைவான அளவிலே வருகின்ற யூறிக்கமிலம் அடர்த்திகூடுவதனால் உருவாகும் கற்கள்.
    5. “செங்டோன் கற்கள்” “சிஸ்டின்என்ற அமிலோ அமிலத்தால் உண்டாகும் கற்கள்.
    இவ்வாறு சிறுநீரகக் கற்கள் உருவாகுகின்றன. இக் கற்களை அகற்ற நவீன மருத்துவம் பலமுறைகளைக் கையாழுகின்றன. அவைகள்.
    1. “லித்தோடிஸ்சி” என்ற ஒருமுறை கதிர்களைப் பயன்படுத்தி கற்களை உடைத்து சிதைத்து சிறுநீர்ப்பாதை வழியாக வெளியேற்றுதல். இது கிரேக்க நாட்டு முறைலித்தேஎன்பது கல். “திப்சிஎன்பது உடைத்தல் எனப் பொருள்படும்
    2.  “டனல் சேசறீ” முதுகுப் பகுதியில் துளையிட்டு அதன் வழியாக கற்களை அகற்றுதல்.
    3. “யூரட்டோ கொப்பி” சிறுநீரகச் சிறுநீர் வரும்பாதையின் வழியாக “பிரோவல்” என்ற குழாயைச் செலுத்தி அதன் மூலம் சிறுநீரகக் கற்களை அகற்றுதல்
                      இவ்வாறான முறைகளை நவீன மருத்துவம் பயன்படுத்த தமிழ் மருத்துவம் கற்களை கரைத்து அது மீண்டும் உருவாகுவதைத் தடுப்பதுடன் கற்கள் உண்டாகாதவர்களுக்கு உண்டாகாமல் தடுக்கும் வல்லமை உள்ள மூலிகைகளை கண்டனர் சித்தர்கள். அம் மூலிகையை கற்பேதி அதாவது கல்லை கரைத்து அதை பேதியாக்கி விடும் சக்தி வாய்ந்தது அந்த மூலிகை அதற்கு சிறுகண்பேளை, சிறுபேளை, சின்னப்புளைச் செடி, தேங்காப்பூக் கீரை என்றெல்லாம் அழைப்பர். இக்கீரையை சிறுநீர்ப் பெருக்கியாகப் பயன்படுத்துகின்றனர்.
           தாவரவியல் பெயர் : “எர்வால் லெனட்டா
     தேரையார் தனது பதார்த்த குண சிந்தாமணியில் 
            “ பாண்டு பெரும்பாடு பகர் மூத்திரக்கிரீச்சம்
             பூண்ட திரிதோடி மிவை போக்குல் காண் - தாண்டி
             புதிய வேலைத் துரத்தும் பார்ரவக் 
             சிறிய கிளைக்குச்ச கண்ணாய் சிதைந்து” என்று ஒரு பாடலிலும் இன்னுமோர் பாடலில்
           “ நீடடைப்புக் கல்லடைப்பு நீங்கா குடல் சூலை 
            பேதீ டறிர் ரத்த கணம் போக்கும் கான்- வாரிருக்கும்
            பூண்முலையாய் கேளாய் கிறு பினையாகிது
            கற்பேதி பென்றறி” என்றார்.
     இவ்வாறு இருபாடல்களில் “கற்பேதி” மூலிகையின் மருத்துவக் குணத்தை பாவில் இயம்பியுள்ளார். இங்கு முதல் பாடலில்
    1. “ பாண்டு”:  பாண்டு என்பது உடலில்  நீர்க்கொர்த்திருக்கும் நோய் முழங்கால் கனுக்காலின் பின்புறம் வயிற்றின் கீழ்ப்புறம் போன்ற இடங்களில் நீர் கோருத்து வலுனில் நீரை விட்டால் இருப்பது போல தெரிவது. இன் நோயை போக்க வல்லது இந்த மூலிகை
    2. “பெரும்பாடு”: பெண்களுக்கு  வருகின்ற மாதவிடாயி நீடித்து அதிநாட்கள் நீர் இறைப்புப் போல் உதிரம் போகின்ற நிலையாகும். மாதவிடாய் சாதாரணமாக மூன்று நாட்கள் நீடிக்கும் ஆனால் இந்த நிலையில் பத்து பதினைந்து நாட்கள் கூடநீடிக்கலாம். இன் நோயை போக்க வல்லது இந்த மூலிகை


    3. “பகர் மூத்திரக்கிரீச்சம்” : சிறுநீர் கழிக்க சென்றால் கழிக்முடியாது சொட்டுச் சொட்டாக எரிச்சலுடன் வேதனையும் தரும். சிறுநீரகத்தில் கிருமி த்தாக்குதலால் ஏற்படுவது இதனையூறினல் இன்பஸ்கன்என்பர். இன் நோயை போக்க வல்லது இந்த மூலிகை
    4.  “பூண்ட திரிதோடி” : வாத பித்த கபத்தை உடலில் சீர் செய்து அதனால் ஏற்படக்கூடிய நோய்களைக் கடுப்படுத்தும் வல்லமை இம் மூலிகைக்கு உண்டு. எனக் கூறுகின்றார்.
    என பாம்பைப் போல கூர்மையான கண்ணுடைய பெண்ணே எனக் கூறுகின்றார். அடுத்த பாடலிலே
     “ நீடடைப்புக் கல்லடைப்பு நீங்கா குடல் சூலை 
            பேதீ டறிர் ரத்த கணம் போக்கும் கான்- வாரிருக்கும்
            பூண்முலையாய் கேளாய் கிறு பினையாகிது
            கற்பேதி பென்றறி
    1. “ நீடடைப்புக்” :  என்பது முதல் பாடலில் செல்லப்பட்ட பாண்டு என்னும் நோய் ஆகும்.
    2. “கல்லடைப்பு” : என்பது சிறுநீரகக்கற்கள் இக்கற்களை கரைத்து பேதியாகி சிறுநீருடன் அற்றும் ஆற்றல் மிக்கது இம் மூலிகை
    3. “நீங்கா குடi; சூலை”: வேதனையுடன் கூடிய குடலில் ஏற்படும் வலி இது சூரத்தால் முத்துவது போல ஏற்படும் வலியை போக்க வல்லது இந்த மூலிகை.
    4. “பேதீ டறிர் ரத்த கணம்” : பெரிய இடரைத்தரும் இரத்த கணம் என்பது இரத்தழுத்தத்தை இங்கு கருதுகின்றர். இதையே இரத்தபித்தம் என்றும் சித்தமருத்துவத்தில் பயன்படுத்துவர். அழுத்தத்ததை குறைத்து அதற்கா தடையை நீக்கி நரம்பை பலப்படுத்தி வலுவுட்டும் தன்மை இந்த மூலிகைக்குண்டு.
     பாவில் கூறப்பட்ட நோய்களுக்கெல்லாம் அருமருந்து தேங்காய்பூ கீரை என்று குறியுள்ளார். அதன் பூக்கள் தேங்காப்பூ போல இருப்பதால தேங்காப்பூக் கீரை என்றும் அழைக்கின்றனர்
            சிறுநீரக கற்களையும் சிறுநீரகக் கிருமித்தாக்கத்தால் உண்டாகும் நோய்களுக்கும் அருமருந்தாக அமைவதுடன் “புரஸ்ரகோளம்” என்னும் ஆண்குறின் இயக்கத்துக்குரிய கிளான் ஒன்று உண்டு இது வீங்கும் போது சிறுநீர்கழிப்பது தடைப்படுவதுடன் வேதனையும் எரிச்சலும் ஏற்படும் அதை குணப்படுத்தி அக் கிளான்டை புதுப்பித்து இயக்க வல்ல மூலிகை ஒன்று உண்டு அதுதான் நெருஞ்சியின் வித்து
                நெருஞ்சில் அல்லது சிறுநீர் பெருக்கி என்பதின் மருத்துவ பாகம் பற்றி தேரையர் பதார்த்த குணசிந்தாமணியில் குறிப்பிடுகையில்
    சொல்ல வொன்னா நீர்கட்டு துன்பமாமிசருக்கி 
    கல்லடைப் பெனும் பிணிகள் கண்டக்கால்
    கருஞ்சின கண்மாதே நல்ல
    நெருஞ்சினறு கித்தே நினை” இங்கு மேல் சொன்ன கல்லடைப்பு, நீர்க்ட்டு; என்பனவற்றுடன் விசேடமாகதுன்பமாமிசருக்கிஇது “புரஸ்ரகோளம்” என்னும் கிளான் தனது நிலை மருவி வீங்கியிருக்கும் இதனால் சிறுநீர் களிப்பதும் கடினமாக இருப்பதுடன் சிறுநீர் வெளியேறும் குழாயை அழுத்தி சிறுநீர் கழிப்பதை  தடை செய்து வேதனைக்குள்ளாக்கும் இந்த நிலையிலிருந்து வீக்கத்தை வத்தவைத்து சீர்செய்து இயல்பான நிலைக்கு கொண்டு வந்து இயல்பு நிலைய தொடர்ந்து பாதுகாக்கும் வல்லமை நெருஞ்சியின் நன்கு விளைந்த நல்வித்துக்கு உண்டு.  

     தொட்டால் சிணுங்கி



    தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் ஈரப்பதமான இடங்களில் தானே வளரக் கூடியது. இது தரையில் படர்ந்து 5 அடி வரை படரும் சிறு செடி வகையைச் சார்ந்தது. ஆற்று ஓரங்களில் அதிகமாகக் காணப்படும். சிறு முட்கள் இருக்கும். இலைகள் ஜோடியாக எதிர் அடுக்கில் கூட்டாக இருக்கும். ஒவ்வொரு கிளைக்கும் சுமார் 10-25 எதிர் அடுக்கு இலைகள் உள் நோக்கி இருக்கும். இலைகள் இடையில் ஊதா நிறப் பூக்கள் மேலே சிவப்பாகவும் அடியில் ஊதா நிறத்திலும் இருக்கும்.

    பூவில் குச்சிகள் ஒரு செ.மீ. நீளத்தில் சிலிர்த்துள்ளது போல் இருக்கும். காய்கள் 2.5 மி.மி. நீளத்தில் இருக்கும். பூக்கள் காற்று மூலமும் பூச்சிகள் மூலமும் மகரந்தச் சேர்க்கை ஏற்படும். இதன் இலைகள் மாலைக்கு மேல் உட்பக்கமாக மூடிக்கொள்ளும். சூரிய உதையத்தின் போது மறுபடியும் தெளிந்து கொள்ளும். மனிதர்கள் தொட்டாலும், அதிர்வு ஏற்பட்டாலும் தொடர்ச்சியாக இலைகள் மூடிக்கொள்ளும். இதனை ஆங்கிலத்தில் ‘Touch-me-not’  என்றும் சொல்வார்கள். மூடிய இலைகள் பகலில் அரை மணி நேரம் கடந்து விரிந்து கொள்ளும். இதன் பூர்வீகம் வட அமரிக்கா மற்றும் மத்திய அமரிக்கா. பின் இது தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, பசிபிக் தீவுகள், ஆஸ்திரேலியா, நைஜீரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் பரவியது. இது விதை மூலம் இனப் பெருக்கும் செய்யப்படுகிறது.

    மருத்துவப்பயன்கள்-:

    நமஸ்காரிஎன்ற இந்த மூலிகை காந்த சக்தி உடையது. தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகுமாம். இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் -15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும்.

    சூடு பிடித்தால் சிறுநீர்த் தாரை எரியும். இதற்கு இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். ஆண்மை பெருக இரவு பாலில் 15 கிராம் கலந்து சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும் . வயிற்றுப்புண்ணும் ஆறும். 

     ‘சிறுகண் பீளை’ (பொங்கல் பூ)
    பசுமைப் புரட்சிக்குப் பிறகு அதிகளவில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவதால், உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டுப் பல நோய்களுக்கு ஆளாகியிருக்கிறோம். 

    அவற்றில் முக்கியமானது, சிறுநீரகப் பாதிப்பு. ஏனெனில் உடலுக்குள் சேரும் நஞ்சை வெளியேற்றும் முக்கியமான வேலையைச் செய்பவை, சிறுநீரகங்கள்தான். அதே நேரத்தில் நாம் உண்ணும் இயற்கைக்கு முரணான உணவு, எடுத்துக்கொள்ளும் மருந்துகள் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுபவையும் சிறுநீரகங்கள்தான்.

    செம்பருத்தி

    மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவில் ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன. இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும். 




    தேங்காய் எண்ணெயில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும். இங்கிலாந்தை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்த தகவல்கள் இவை. இதை நேரடியாகவோ மறைமுகமாகவோ உட்கொண்டால் கிடைக்கும் பலன் மற்றும் பயன்களை பட்டியலிட்டுள்ளனர். 

    உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது இரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும்.

    உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது. இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அதன்

    உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது. இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது

     

    செம்பருத்தி

        ஆயுர்வேதத்தில் இது ஜபா புஸ்பா, ருத்ர புஷ்ப, ரக்த கார்பாச என்றும் அழைக்கப்படுகிறது
    இதோட பூக்கள் இரண்டு வகையா இருக்கும். ஒரு வகை பூக்கள் அடுக்கடுக்கா காட்சியளிக்கும். இன்னொரு வகை, தனித்தனியா அகலமா காட்சியளிக்கும்.
    இதுதான் மருத்துவ ரீதியில் சிறந்தது
    இத்தாவரங்களில் அமிலங்கள், குளுக்கோசைடுகள், ரிபோபிளேவின், கரோட்டின் என பல வேதிப் பொருட்கள் காணப்படுகின்றன.

     

    இலைகள் தசைவலியைப் போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் கொண்டவை. இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாகவும் உதவுகிறது. மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை. சருமத்திற்கு இதமும், சுகமும் அளிப்பவை.

    மாதவிடாயைத் தூண்டக் கூடியது.இலைகளை அரைத்து  குளிக்கும் பொது ஷாம்பூ மாதிரி உபயோகிக்கலாம் .உடலுக்கு குளிர்ச்சி .முடிக்கு நல்லது .இதழ்களின் வடிசாறு . சிறுநீர்ப் போக்கு வலியை நீக்கும்இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் மருந்தாகிறது.

    கூந்தல் வளாச்சிக்கான தைல தயாரிப்பில் இலைகளும், பூக்களும் பெரும் பங்கு வகிக்கிறது.

    காலை எழுந்ததும் 5 முதல் 6 பூக்களின் இதழ்களை மென்று தின்று சிறிது நீர் அருந்தி வர வயிற்றுப்புண் ஆறும். வெள்ளைப் படுதல் நிற்கும். இரத்தம் சுத்தமாகும். இதயம் வலுப்பெறும்.
    400
    மில்லி நல்ல எண்ணெயில் 100 கிராம் செம்பருத்தி இதழ்களைப் போட்டு கலந்த பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடிக் கட்டி பத்து நாட்கள் வெயிலில் வைத்து காலை - மாலை எண்ணெயை கலக்கிவிட்டு மூடவும். பிறகு எண்ணெயை வடிகட்டி சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து பத்திப்படுத்திக் கொண்டு தைலத்தை தினமும் தலையில் தேய்த்து தலை வாரி வரவும். இது ஒரு சிறந்த கூந்தல் தைலம்.

     

    இப்பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்க வல்லது. செம்பருத்திச் செடி வீட்டில் மருத்துவர் இருப்பதற்குச் சமம். பெண்கள் வீட்டுக்கு விலக்காகும் காலத்தில் அதிக உதிரப் போக்கு இருந்தால் இரண்டு, மூன்று மலர்களை நெய்யில் வதக்கிக் தின்பது குணப்படுத்தும்.

    காய்ந்த மலர் இதழ்கள், வெட்டி வேர், துளசி விதைகளை, சுத்தமான தேங்காயெண்ணெயில் ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வர பேன், பொடுகு அகலும். ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைஞ்சுடும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.

    பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும்.

     

    செம்பருத்திப் பூவை 250 கிராம் கொண்டு வந்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் மாலையில் எடுத்துப் பிசையவும். அப்போது சிவப்பான சாறு வரும். அந்தச் சாறை ஒரு சட்டியில் ஊற்றி சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
    இதிலிருந்து காலை_மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும்.

    செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று_நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும்.

     இயற்கையின் அரிய படைப்புகளில் இந்த பூக்கள்தான் எத்தனை அழகு?

    வீட்டின் முன்பும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும் அழகு சேர்க்கும் . செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை  அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.

    நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு செம்பருத்திப் பூவின் கஷாயம் மருந்தாகிறது. தஙகச்சத்து இப்பூவில் இருப்பதால் தாதுவிருத்திக்கு மிகவும் சிறந்ததாகும். தினமும் 10 பூவினை மென்று தின்று பால்அருந்தினால் நாற்பது நாளில் தாது விருத்தி ஏற்படும்
    இச்செடியின் பூக்கள் தலை முடி அழகுக்காக பல வழிகளில் பயன்படுகிறது.
    இதனை பசிபிக் தீவுகளில் உணவாகவும் மக்கள் உட்கொள்கின்றனர்.
    சீன மருத்துவ முறைகளிலும் இந்தப் பூ பயன்படுகிறது.

    இந்தியாவின் பல பகுதிகளில் அழகுப்பொருளாகவும், தலையில் சூடிக்கொள்ளவும், கடவுளை வழிபடவும் இந்த செடியின் பூ பயன்படுகிறது.
    காலணிகளை பொலிவூட்டவும் இந்த பூவின் இதழ்களை பயன்படுத்தலாம்.
    ஜமாய்க்காவில் இந்தப் பூவை வயிற்றில் உண்டான கருவை கலைக்கவும் பயன்படுத்துகின்றனர்.
    பூக்கள் பல நிறங்களிலும், பல அடுக்கு இதழ்களை கொண்டதாகவும் காணப்படுகின்றன.இது தவிர கலப்புப் பிறப்பாக்கம் மூலமும் பல்நிற பூக்களை உருவாக்க முடியும்.

      இப்பூவில் தங்கச்சத்து உள்ளதுஇரத்த சிவப்பணுக்களுக்கு இது பெரும் துணை புரிவதாகும்.

    இம்மலர் தின்பதற்கு சற்று வழவழப்பாக இருக்கும்
    தினமும் ஐந்து செம்பருத்திப் பூக்களை 48 நாட்கள்
    ஓர் ஆண் தின்று வந்தால், இழந்த சக்தியையும்
    பலத்தையும் பெறுவான்.
     
    பெண்கள் இம்மலரை உண்டுவந்தால் வெள்ளை ,
    வெட்டை ,இரத்தக்குறைவு, பலவீனம் ,மூட்டு வலி ,
    இடுப்புவலி ,மாதவிடாய் கோளாறுகள் நீங்குவதுடன்
    கண்களுக்கு நல்ல ஒளியும் தரும்.
    பெண்மை வளரும்.
    பிள்ளைகள் இம்மலரை உண்டு வந்தால் ஞாபக சக்தி
    நினைவாற்றல்,புத்திக்கூர்மை, மூளை பலம் ஏற்படும்.
    சிறுவர்கள் சாப்பிடும்பொழுது இப்பூவிலுள்ள மகரந்தக்காம்பை
    நீக்கி விட வேண்டும்.

    செம்பருத்தி இலைகளை அரைத்து சீயக்காய்த் தூளுடன்
    சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் முடி கொட்டுதல் ,
    பொடுகு யாவும் தீரும். ஒருநாள்விட்டு மறுநாள் இவ்விதம்

    நாலைந்து முறை குளிக்க வேண்டும். செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.
    வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணமாக்கும். (பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.)
    கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. (செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.)

    மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கு செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.
    வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணமாக்கும். (பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.)
    கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. (செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.)

    மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். (செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும்.)
    வெள்ளைப்படுதலைக் குணமாக்கும். (செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும

     (செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும்.)
    வெள்ளைப்படுதலைக் குணமாக்கும். (செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகு செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.
    வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணமாக்கும். (பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.)
    கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. (செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.)

    மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். (செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும்.)
    வெள்ளைப்படுதலைக் குணமாக்கும். (செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்
    .
    செம்பருத்தி இலை

    செம்பருத்தி இலைகளில் இன்னும் பல உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளது. செம்பருத்தி இலைகளை சூடான அல்லது குளிர்ந்த தேநீரிலும் கலந்து குடிக்கலாம். இது நம் உடலுக்கு மிகவும் நல்லதாக விளங்குகிறது. இரத்தக் கொதிப்பு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இது உதவுகிறது. 

    மேலும் உணவிற்கு நிறத்தை சேர்க்கும் பொருளாகவும் இது சந்தையில் விற்கப்படுகிறது. செம்பருத்தி இலைகளால் செய்யப்படும் தேநீர் நம் உடலுக்கு மிகவும் நல்லது. புற்று நோயை எதிர்த்து போராடுவதால், முக்கியமான உடல்நல பயனாக இது பார்க்கப்படுகிறது. அதற்கு இந்த இலைகளை வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதன் இலைகளை கொண்டு பேஸ்ட் செய்து புற்று நோயால் ஏற்பட்ட புண்களின் மீதும் தடவலாம். 

    செம்பருத்தி இலையில் வைட்டமின் சி வளமையாக உள்ளது. சளி, இருமல் மற்றும் காய்ச்சலை குணமாக்க உதவுகிறது. செம்பருத்தி இலை உங்கள் ஆற்றல் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் மாதவிடாய் காலத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் காய்ச்சல் போன்ற வெப்பத்தை தணிக்கவும் இது பெரிதும் உதவுகிறது. 

    உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, உடலிலுள்ள தட்பவெப்ப நிலையை மேம்படுத்த உதவுவது செம்பருத்தி இலையின் மற்றொரு உடல்நல பயனாகும். செம்பருத்தி இலை கலந்த தேநீர் நம் உடலுக்கு மிகவும் நன்மையானது. செம்பருத்தி இலையால் கிடைக்கும் ஊட்டச்சத்து பயன்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் தேநீரை பருகுவதற்கு முன்பாக, அது இரசாயன முறைப்படி தயாரிக்கப்பட்டுள்ளதா, பதப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதா, நல்ல தரத்துடன் பதப்படுத்தப்பட்டதா போன்றவைகளை கவனமாக இருங்கள். 

    சிறுநீரக பிரச்சனை மற்றும் செரிமான பிரச்சனை உள்ள நோயாளிகள் செம்பருத்தி இலை கலந்த தேநீரை பருகலாம். சிறுநீரக தொற்றுக்களை சரி செய்து, இரத்த கொதிப்பை குறைக்கவும் இது உதவும். செம்பருத்தி இலைகளை சீரான முறையில் மென்று வந்தால், மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு வரும் வலி போகும்
     

     

    செங்காந்தள் மலர்



    செங்காந்தள் செடியின் கிழங்கு ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருந்துகளில் பல்வேறு விதமாகப் பயன்படுத்தப்படுகிறது.

    செங்காந்தள் பாம்புக்கடி, தேள்கடி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. பாம்பு கடித்தவர்கள் இந்தச் செடியின் வேருடன் குப்பைமேனி வேர், நீலி வேர் சேர்த்து அரைத்து, அரை நெல்லிக்காய் அளவு தினமும் காலை,மாலை என மூன்று நாள்கள் சாப்பிட்டுவந்தால், விஷம் இறங்கும். உப்பில்லா பத்தியம் அவசியம். சிறிய பாம்புகள் கடித்தாலோ, வண்டு கடித்தாலோ இதன் இலையை அரைத்துப் பூசி சீயக்காய் தேய்த்துக் குளித்தால் விஷம் இறங்கிவிடும்.செங்காந்தள் வேரில் செய்யப்பட்ட தைலத்தை வாரம் ஒருநாள் தலையில் தேய்த்துக் குளித்துவந்தால் எலி, வண்டு, பூரான், சாரைப்பாம்பு கடிபட்டவர்களுக்கு விஷத்தன்மை குறைந்துவிடும்.


    பிரசவத்தின்போது நஞ்சுக்கொடி இறங்காமல் அவதிப்படும் பெண்களுக்கு பச்சை செங்காந்தள் வேர்க்கிழங்கை அரைத்து தொப்புள், அடிவயிறு, உள்ளங்கை, உள்ளங்கால் போன்ற இடங்களில் தடவுவார்கள். உடனடியாக நஞ்சுக்கொடி இறங்கிவிடும்.செங்காந்தள் மலரில் தேன் அதிகமாகக் காணப்படுவதால், எப்போதும் வண்டுகளும் தேனீக்களும் வட்டமிட்டுக்கொண்டிருக்குமாம். 

    பொதுவாக, மலர்கள் அனைத்துமே பூத்து உதிரக்கூடியவை. ஆனால், செங்காந்தள் மலர் மட்டும் வாடினாலும் உதிர்வதில்லை.இந்தப் பூவை உற்றுப்பார்த்தால், கண்வலி வரும் என்று சொல்கிறார்கள், அதனால் இதை `கண்வலிப்பூ’ என்றும் அழைக்கிறார்கள். வாதநோய், மூட்டுவலி, தொழுநோயைக் குணப்படுத்துவதுடன் பால்வினை நோய், வெண்குஷ்டம் போன்றவற்றைக் குணப்படுத்தவும் இது பயன்படுகிறது.


    மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி !

    இதயத்திற்கு வலிமையை வழங்கும் நெல்லிக்கனியை உண்டு தண்ணீரை குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும்.


    * தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக்காக இருக்கும். தொற்று நோய்கள் எதவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும்.

    * ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.

    * நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும்.
    * ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு ஸ்பூன் நாவல்பழப் பொடி, ஒரு ஸ்பூன் பாகற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வரவே வராது.
    * அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும், நெல்லிக்காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும், தலை பளபளப்பாகவும், கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும்.

    * நெல்லிக்காயின் சாறு இருக்கிறதே அதையும் தேனையும் சேர்த்துக் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் பலம் கிடைக்கும், குடலுக்கும் பலம் கிடைக்கும். மூளை இருதயம் கல்லீரல் முதலிய உறுப்புகளுக்கும் பலம் கிடைக்கும்.

    இவ்வாறான வழிகளில் நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால், மரணத்தை கூட தள்ளிப்போடலாம்.

    வல்லாரை

     

    2. தாவரப் பெயர் -: CENTELLA ASIATICA

    HYDROCOTOYLE ASIATICA.

    3. தாவரக்குடும்பம் -: APIACEAE.


     

    8. மருத்துவப்பயன்கள் -:

    உடல் தேற்றி, உரமாக்கி, சிறுநீர் பெருக்கி, வெப்பமுண்டாக்கி, ருது உண்டாக்கி. வாதம், வாய்வு, அண்டவீக்கம், யானைக்கால், குட்டம், நெரிகட்டி, கண்டமாலை, மேகப்புண், பைத்தியம், சூதக் கட்டு, மூளைவளர்ச்சிக்கும், சுறுசுறுப்பிற்கும் ஏற்றது.

    முற்றிய வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து இதில் காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட்டு வர வேண்டும். 48-96 நாள் சாப்பிடவும். மேலே கூறப்பட்ட எல்லா நோய்களும் குணமாகும். உடல் நோய் எதிர்ப்பாற்றல் பெறும். ஒரு வருசம் சாப்பிட்டால் நரை, திரை மாறும்.

    வல்லாரை+ தூதுவிளை இரண்டையும் சம அளவில் இடித்துப் பிழிந்த சாற்றை 5 மி.லி. சாப்பிடவும். நோய்க் கேற்றவாறு காலம் நீடித்து சாப்பிட சயரோகம், இருமல் சளி குணமாகும்.

    இதன் இலைச்சாறு நாளும் 5 மி.லி.காலை மாலை சாப்பிட்டு வரவும். யானைக்கால், விரை வாதம், அரையாப்பு, கண்டமால் குணமாகும். ஆமணக்கெண்ணையில் இலையை வதக்கி மேலே பற்றிடவேண்டும். கட்டிகளும் கரையும். அரைத்துப் பூச புண்களும் ஆறும்.

    வல்லாரை, உத்தாமணி, மிளகு சமன் கூட்டி அரைத்துக் குண்டுமணி அளவு மாத்திரை செயுது காலை, மாலை 1 மாத்திரை வெந்நீரில் கொடுக்க அனைத்து வகையான காச்சலும் தீரும்.

    கீழாநெல்லி, வல்லாரை சமன் அரைத்து சுண்டக்காயளவு காலை மட்டும் தயிரில் கொள்ள நீர் எரிச்சல் தீரும்.

    வல்லாரை சாற்றில் 7 முறை ஊறவைத்து உலர்த்தியரிசித் திப்பிலி மூளைசுறுசுறுப்பாக இயங்கவும், தொண்டைக் கரகரப்பு நீங்கவும் நல்ல சாரீரம் கொடுக்கவும் பயன் படும்.

    பெண்களுக்கு உதிரத்தடை ஏற்படும். மாதவிலக்கு தள்ளிப்போகும். இதனால் இடுப்பு, அடிவயிறு கடுமையாக வலிக்கும். இதற்கு வல்லாரை+உத்தாமணி இலையை சம அளவில் அரைத்து 20-30 கிராம் அளவு காலை, மாலை நான்கு நாள் சாப்பிட வேண்டும். குணமாகும். உடன் வலக்கேற்படும்.

    வல்லாரயை நிழலில் இலர்த்தி சூரணம் செய்து கொள்ளவும். பரங்கிச் சக்கையையும் இதே போல் சூரணம் செய்து, இரண்டையும் சம அளவில் சேர்த்து 5-10 கிராம் காலை, மாலை பசும் வெண்ணெயில் சாப்பிட வேண்டும். நோய்க்கேற்ப 6-12 மாதம் சாப்பிட வேண்டும். மோர் பாலில் தான் உணவு சாப்பிட வேண்டும். புளி, காரம் இனிப்புக் கூடாது. புலால், புகை, மது கூடாது. குட்டம் குணமாகிவிடும்.



    வெங்காயம் - பாதம் வைத்தியம் !




    நறுக்கிய வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து உடல் சோர்வு போக்கலாம்.வெங்காயம் நச்சுக்களை உறிஞ்சும் தன்மை உடையது.

    இங்கிலாந்தில் பிளேக் நோய் வந்த போது, காற்றில் இருக்கும் நச்சுக்களை எடுக்கவும்...அந்த நோயிலிருந்து விடுபடவும் வெங்காயத்தை அதிகம் உபயோகித்தனர்.

    வெங்காயத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உபயோகிக்கதிர்கள். அதில் உள்ள அனைத்து நட்சுக்களையும் வெங்காயம் உறிஞ்சிக்கொள்ளும்.மேலும் அதனை நீங்கள் உட்கொண்டால் நச்சுக்களை உண்பதற்கு சமம்.நறுக்கிய வெங்காயத்தை நீங்கள் படுக்கும் படுக்கையை சுற்றிலும் வைத்துக்கொண்டால் இரவு உறக்கம் மற்றும் சுவாசிக்கும் காற்று சுத்தமானதாக இருக்கும். உடல் நலம் இல்லாதவர்கள் விரைவில் குணமடைவார்கள்.

    வெங்காயம் மற்றும் வெள்ளைபூண்டு ஒரு சிறந்த நுண்ணுயிர் கொல்லியாகவும்,பாக்டீரியா எதிர்ப்பாகவும் செயல்படுகிறது.

    நறுக்கிய வெங்காயத்தை உங்கள் பாதத்தின் அடியில் மற்றும் நடுவினில் வைத்து படுத்து தூங்கும்போது அதன் செயல் நேரடியாக நமது உடம்பில் வினை புரியும். உங்கள் இரத்தத்தை நன்கு சுத்தம் செய்யும் மற்றும் உங்கள் வயற்றில் இருக்கும் நட்சுக்களையும் உறிஞ்சிவிடும்.(வெள்ளைபூண்டயும் இது போல் உபயோகிக்கலாம்).


    முக அழகு

    வெளியில் அலைந்துவிட்டு வரும் ஆண்கள் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும், இல்லையென்றால் ஐஸ் கட்டியினை ஒரு துணியில் போட்டு முகத்தில் ஓத்தடம் கொடுக்கவும்.இதனால் முகம் தெளிவடையும். இதனை தினமும் செய்யுங்கள்.

    சில ஆண்களுக்கு முகம் உலர்ந்து சொரசொரப்பாக இருக்கும் அவர்கள்,முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து அதில் பாலாடையும், பன்னீரையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவிடவும். பிறகு இளஞ்சூடான வெந்நீரில் அலசினால் சில நாட்களில் தோல் மிருதுவாக மாறி பளபளப்பாக மாறிவிடும். இதனை மாதம் 2 முறை செய்யவும்.

    முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாறுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கரும்புள்ளிகள் மாயமாக மறைந்துவிடும்.

    வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

    1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

    2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

    3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

    4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

    5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

    6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

    7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

    8. வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

    9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

    10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

    11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

    12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

    13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.

    14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

    15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

    16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

    17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

    18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

    19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

    20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

    21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

    22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

    23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

    24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

    25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

    26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

    27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

    28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

    29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

    30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

    31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

    32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

    33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

    34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

    35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

    36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

    37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

    38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

    39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

    40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

    41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

    42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

    43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

    44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

    45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

    46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

    47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

    48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

    49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

    50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.
     


    இரவில் தொப்புள் பகுதியில் எண்ணெய் வைத்து

     தூங்கினால், உடலில் ஏற்படும் அதிசய சக்தி!


    பொதுவாகவே நம் உடல் சூடாகி விட்டது என்றால் நம் வீட்டில் இருக்கும் பாட்டிமார்கள் தொப்புளை சுற்றி எண்ணெய் வைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். இதற்கு காரணம் உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளின் மையப்புள்ளியாக கருதப்படுவது தொப்புள் தான். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு

     இந்த தொப்புள் பகுதியில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு, தொப்புளை சுற்றி ஒரு அங்குலம் வரை வட்ட வடிவில், மசாஜ் செய்வதன் மூலம் பல பிரச்சினைகள் தீருவதாக மருத்துவ குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது. 

    எந்த எண்ணெயை தொப்புளில் விட்டு, மசாஜ் செய்தால் என்ன பிரச்சினைகள் எல்லாம் தீரும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.தொப்புளில் எண்ணெய் வைப்பதால் இத்தனை பிரச்சனைகள் குணமாகுமா? என்ற ஆச்சர்யம் நம்மில் பல பேருக்கு இருக்கும். 

    அப்படிப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கக் கூடியதுதான் இந்த வைத்தியம். உடல் சூடு, கண் வறட்சி, மூட்டுவலி, சோம்பல், முழங்கால் வலி, சரும வறட்சி, தலைமுடி உதிர்தல், பாத வெடிப்பு, போன்ற பலவகையான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் இந்த வைத்தியத்தை எந்த எண்ணெயில் செய்வது? எப்படி செய்வது என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

    கீழே கொடுக்கப்பட்டிருக்கும் எல்லா வகையான பிரச்சனைக்கும், இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக, தொப்புளில், அந்த குறிப்பிட்ட எண்ணையை 1/2 ஸ்பூன் அளவு விட்டு, வலப்புறமாகவும் இடப் புறமாகவும், வட்டவடிவில் லேசான முறையில் மசாஜ் செய்து வரவும்.

    நல்லெண்ணெய்:

    உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலிக்கு நல்லெண்ணையை அரை ஸ்பூன் அளவு தொப்புளில் விட்டு, இடது புறமாகவும் வலது புறமாகவும் சுற்றி தேய்த்தால் விரைவாக வயிற்றுவலி குறையும் குறைந்துவிடும்.

    கடுகு எண்ணெய்:

    கடுகு எண்ணையை தொப்புளில் விட்டு தேய்த்துவந்தால் நரம்பு தளர்ச்சி சரியாகும். உடல் நடுக்கம் குறையும். உடல் வறட்சியினால் ஏற்படும் உதடு வெடிப்பு சரியாகும். சருமம் வறட்சியில் இருந்து விடுபடும். முழங்கால் வலியிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.

    வேப்ப எண்ணெய்: 

    சரும பிரச்சனையான முகப்பரு, தேமல், சொறி, படை போன்ற பிரச்சனைக்கு வேப்ப எண்ணையை தொப்புளில் விட்டு தேய்த்து வரவேண்டும். கண்ணுக்குத் தெரியாத நோய்க் கிருமிகளால் தோலில் ஏற்படும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் இந்த வேப்பெண்ணை சரிசெய்துவிடும்.

    நெய்: 

    நெய்யை தொப்புளில் விட்டு தடவி வர முகத்தின் அழகு கூடும். உடல் வறட்சி தன்மை நீங்கும்.

    தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில்: 

    இந்த இரண்டு எண்ணையின் ஏதாவது ஒன்றை தொப்புளில் விட்டு தேய்த்துவர ஆண் பெண் மலட்டுத்தன்மை நீங்கும். குழந்தை இல்லாமல் தவித்து வரும் பெண்களுக்கு இது ஒரு நல்ல வைத்தியமாக இருக்கும். கூடிய விரைவிலேயே நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். 

    குறிப்பாக கருச்சிதைவு இருக்கும் பெண்கள் தினம்தோறும் ஆலிவ் எண்ணையை தொப்புளை சுற்றி தடவிக்கொண்டு படுப்பது மிகவும் நல்லது. இதுதவிர, ஆலிவ் ஆயிலை தொப்புளில் தொடர்ந்து தேய்த்து வர, முடி வளர்ச்சி அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    விளக்கெண்ணை: 

    விளக்கெண்ணையை தொப்புளில் தடவி வர மூட்டுவலி குணமடையும். உடம்பில் உள்ள எலும்புகள் அனைத்துமே வலிமை பெறும்.


    மேலாநெல்லி.

    இயற்கையின் படைப்புகளில், மூலிகைகளுக்கு தனி இடம் உண்டு, அதில் ஒரே குடும்பத்தில் உள்ள சில மூலிகைகள், பெயரில் வேறுபட்டாலும், அவற்றின் செயல் தன்மைகளில் ஒன்றுபட்டே காணப்படுகின்றன.

     

    இறைவனுக்குப் படைக்கும் மருத்துவ மூலிகையான துளசியில், காட்டுத்துளசி, சீனித்துளசி போன்ற பல்வேறு வகைகள் காணப்படுகின்றன. ஈசனை வணங்க, ஒரு வில்வம் போதுமென்பார்கள். அத்தகைய பேறுபெற்ற, மருத்துவ குணமிக்க வில்வத்தில், சர்க்கரை வில்வம் எனும் வகையும் உண்டு என்பதும், அது, சர்க்கரை பாதிப்பைத் தீர்க்கும் அருமருந்து, என்பதும், நம்மில் பலரும் அறியாத ஒன்றாகவே, இருக்கும்.

    அந்த வரிசையில், மஞ்சள் காமாலை வியாதியைப் போக்கும் அற்புத மூலிகையான, கல்லீரலைக் காக்கும் மூலிகை டானிக்காக மருந்தகங்கள், நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் கீழாநெல்லியின் மகத்துவத்தை நாம் அறிந்திருப்போம். கீழாநெல்லியின் குடும்பத்தில் உள்ள மற்றவகைச் செடிதான், மேலாநெல்லி. இதுவும், அரிய மருத்துவ குணங்கள் நிறைந்து, மனிதர்களின் வியாதிகளைத் தீர்க்கும் வல்லமை பெற்றது.

    வில்வம்




    சிவ மூலிகைகளின் சிகரம் என அழைக்கப்படும் வில்வத்திற்கென்று பல சிறப்புகள் உண்டு. சிவ பூஜையில் முக்கிய இடம் வகிப்பது வில்வம். 

    பக்தி மார்க்கத்தைத் தாண்டி, சித்த மருத்துவத்திலும் வில்வத்திற்கு சிறப்பான இடம் உண்டு. வில்வத்தின் அத்தனை பாகங்களும் நம் உடற்பாகங்களுக்கு அருமருந்தாகும்’ என்கிறார் சித்த மருத்துவர் சாய் சதீஷ்.

    * வில்வமானது கூவிளம், சிவத்துருமம், மாதுரம், நின்மலி, குசாபி என்ற வேறு பெயர்களிலும் குறிப்பிடுவதுண்டு. Aegle marmelos என்பது வில்வத்தின் தாவரவியல் பெயராகும்.

    * வில்வத்தின் இலை, பூ, காய், கனி, வேர், பிசின், பட்டை, ஓடு என வில்வத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை.

    * வில்வத்தினை காய், இலை, வேர் இவற்றை மணப்பாகு செய்து ஊறுகாய், குடிநீர் என பல வகைகளிலும் உட்கொள்ளலாம். வில்வத்தை தைல முறையிலும் தலைக்குத் தேய்க்கப் பயன்படுத்தலாம்.

    * வில்வத்தின் இலை, பிஞ்சு, காய் இவை துவர்ப்பு சுவையில் இருக்கும். கனி துவர்ப்புடன் இனிப்பு கலந்த சுவையில் இருக்கும்.

    * வில்வம் அழகையும் உடல் வலிமையையும் தரும். வில்வ வேரைக் கொண்டு செய்யும் வில்வாதித் தைலமானது உடல் உஷ்ணத்தைத் தணிக்கும் தன்மை உடையது.

    * வில்வ மரத்தின் பூவானது வாய் துர்நாற்றத்தைப் போக்கி விஷத்தையும் முறிக்கும் குணம் கொண்டது என்பது மற்றோர் சிறப்பு.

    * வில்வத்தின் இளம் பிஞ்சை அரைத்து 2-6 கிராம் எருமைத்தயிரில் கலந்து கொடுக்க அல்சர், வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு நிற்கும். இந்த முறை சிறுபிள்ளைகளுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

    * வில்வத்தின் பூக்கள் மந்தத்தைப் போக்கும். புதிய வில்வப்பூக்களை குடிநீராகச் செய்து 40 லிருந்து 80 மில்லி அளவோ அல்லது காய்ந்த வில்வப்பூக்களை பொடி செய்து 260 லிருந்து 1040 மில்லி அளவோ கொடுத்தால் மந்தம் போகும்.
    * அல்சர், ரத்த சோகை, கபத்தால் உண்டாகும் நீர் வேட்கை, காய்ச்சல், தலையில் நீர்க்கோர்த்துக் கொள்ளுதல், உடல் சூடு மற்றும் வாதம், பித்தம், கபம் இவற்றினால் ஏற்படும் நோய்கள் (முப்பிணி) போன்றவற்றை நீக்கும்.
    * வில்வ வேரை மருத்துவ முறைப்படி எடுத்துக் கொண்டால் பசியின்மை, சுவையின்மை, பெருங்கழிச்சல், விக்கல், பித்த சுரம்(அழல் சுரம்), இடை
    விடாத வாந்தி, உடல் இளைத்தல் ஆகியவை நீங்கும்.

    * வில்வப் பத்திரி வேர், சிற்றாமுட்டி வேர், சுக்கு மூன்றையும் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி, எட்டில் ஒரு பங்காக நீர் சுருங்கிய பின் அதனை வடிகட்டி அத்துடன் தேன் கலந்து அருந்த கொடிய முப்பிணி, வாந்தி தீரும்.

    * வில்வ வேர், விளாவேர், நன்னாரி வேர், சிறுபயறு, நெல்பொரி, வெல்லம் இவற்றை 11 லிட்டர் நீர் விட்டு கொதிக்கவிட்டு, அந்த நீர் ஒரு லிட்டராக சுருங்கிய பின் அதனை அருந்த வாந்தியும் காய்ச்சலும் நீங்கும்.

    * இரண்டிலிருந்து நான்கு கிராம் அளவு, நாள் ஒன்றுக்கு இரண்டு, மூன்று முறை கொடுத்து வர, காச நோயில் ஏற்படும் கண் சூடு குறையும். குருதிப் போக்கு, கழிச்சல், சீதக்கழிச்சல் போகும்.  

    * இலைச்சாற்றைப் பிழிந்து அத்துடன் சிறிதளவு மிளகுத்தூள் கலந்து கொடுக்க சோகை, மஞ்சள் காமாலை தீரும். இலைச்சாற்றுடன் நீர் அல்லது தேன் கலந்து கொடுக்க மூக்கில் நீர் வடிதல் மற்றும் காய்ச்சல் நீங்கும். இலைச்சாற்றுடன் கோமியம் கலந்து  80 லிருந்து 170 மில்லி வீதம் கொடுக்க ரத்தசோகை, வீக்கம் நீங்கும்.

    சுண்டவேர்

    சாலை ஓரங்களில் கிடைக்கும் வேர்களான சுண்ட வேர், பழம்பாசி வேர் போன்றவைகளில் சுண்ட வேர் என்பது முட்கள் கொண்ட செடி. இந்தச் செடியின் மொத்த பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டது. இலை உடலில் ஏற்படும் வெட்டுக்காயங்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இந்த இலையைப் பறித்துக் குறைந்த அளவில் நீர் விட்டு சுண்ணாம்புடன் சேர்த்து கசக்கிப் பிழிந்து கசக்கிய இலையைக் காயத்துடன் சேர்த்துக் கட்டுவார்கள். இதனால், காயத்தின் விஷம் முறிக்கப்பட்டு வேகமாகக் குணமடைகிறது.



    இந்தச் செடியின் காயும், கனியும் பல் வலிக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பழுத்த கனியை பூச்சிப்பல் கொண்டவர்கள், பல் வலியால் அவதிப்படுபவர்கள் வலி உள்ள பல்லில் வைத்து அழுத்தவேண்டும். இப்படிக் கடிப்பதின் மூலம் மிகவும் கசப்பு வாய்ந்த அந்தச் சாறு பல்லினுள் இறங்கி பூச்சியைக் கொல்வதுடன் பல் வலியையும் குணப்படுத்தும்.

    இதன் வேர், ஒவ்வொரு வருடமும் சேகரிக்கப்பட்டுக் குறிப்பிட்ட நபர்களின் மூலம் கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலை, கோயம்புத்தூர் பார்மசி போன்ற கேரள மூலிகை மருத்துவச் சாலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குப் பல வழிமுறைகளின் மூலம் மருத்துவக் கஷாயமாகத் தயாரிக்கப்படுகிறது.
    பற்பாடகம்
    பற்பாடகம் என்னும் மூலிகைக்குக் கபவாதசுரம், பித்ததாக நோய், உளமாந்தம், பித்த தோஷம் ஆகியவன போகும்.
    விழிகளுக்குக் குளிர்ச்சியுண்டாக்கும். உடலின் காங்கை, எரிச்சல், தாகம் இவைகளைச் சாந்தப்படுத்தும்.பன்றி காய்ச்சல் மற்றும் இதர அனைத்து வித காய்ச்சல் குணமாக மருந்து.
    குழந்தைகளுக்கு காணும் சீதபேதி, மற்றும் சுரம் ஆகியவை கட்டுக்குள் வரும்.




    இந்த ஆலை நன்மைகள் பற்றி சில வார்த்தைகள்
    மூலிகை முனிவர் மற்றொரு விட பயனுள்ளஎனவேநிபுணர்கள் இந்த மூலிகை பின்வரும் சந்தர்ப்பங்களில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று சொல்கின்றன.

    மேல் சுவாசக்குழாய் நோய்கள்போன்ற பாரிங்கிடிஸ்ஸுடன்குரல்வளைஅடிநா அழற்சி அடிநா இந்த பிரச்சினைகள்.
    சிறந்த இந்த ஆலை பல்வேறு பல் நோய்கள் உதவுகிறதுஅது ஈறு எரிச்சல் மற்றும் வாய்ப்புண் சமாளிக்க முடியும்.
    முனிவர் மற்றும் தோல் நோய்கள் பல்வேறு உதவுகிறதுஎனவேஅவர் எக்ஸிமா, neurodermatitis, சொரியாசிஸ் மற்றும் தீக்காயங்கள் மற்றும் frostbite போராடிக்கொண்டு.
    மருத்துவ மூலிகை முனிவர்மற்றும் குறைந்த முதுகு வலிமுடக்கு வாதம்மற்றும் சிதைகின்ற புண்கள் போன்ற கூட்டு பிரச்சினைகள்உடையவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
    அது குறைந்த அமிலத்தன்மை கொண்ட மருத்துவ ஆலை மற்றும் புண்மற்றும் இரைப்பை அழற்சி உதவுகிறது.
    பிடிப்புகள்வாய்வுஇரைப்பை குடல் தொடர்புடைய சீர்கேடுகள் பல்வேறு மணிக்கு பயனுள்ள சால்வியா.

    மேலும் நேர்மறை ஆலை காய்ச்சல் நிலையில் உடல் பாதிக்கிறது உள்ளதுமுதலில்அது வியர்த்தல் குறைக்கிறது.

    பாதாம் பருப்பு

    பாதாம் மரம் வாதுமை மரம் என்று அழைக்கபடுகிறது. பாதாம் பருப்பை வாதுமை பருப்பு எனவும் கூறுவர். வாதுமை கொட்டைகளை ‘வலாங்கொட்டை’ எனவும் கூறுவர். இக்கொட்டைகள் சுவைமிக்கவை. பாதாம் மரங்கள் மத்திய கிழக்கு நாடுகளை பூர்வீகமாகக் கொண்டவை. இவை ஆசியாவின் வெப்ப மண்டல நாடுகளில் வளர்கின்றன. 

    பாதாமில் உள்ள சத்துக்கள்


    பாதாம் பருப்பானது உடலை செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கியமான உணவாகும். பாதாம் பருப்பில் வைட்டமின்களும், தாதுச்சத்துக்களும் அதிகமாக உள்ளன. பாதாமில் இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகமாகவும், உடலுக்கு கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் உள்ளது. பாதாமில் காணப்படும் நார்ச்சத்துகளும், ஆன்டிஆக்ஸிடன்டுகளும் புற்று நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி கொண்டவை என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 

    பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், மற்றும் தாது உப்புகளும், குளுட்டாமிக் அமிலமும் உள்ளது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதை தோல் நீக்கி சாப்பிட வேண்டும்.

    பாதாமில் கால்சியம் சத்து அதிகம் இருக்கிறது. அதோடு சேர்த்து, புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் - பி 17 என்ற சத்தும் பாதாம் பருப்பில் உள்ளது. இதனால் மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், சருமக் கோளாறுகள், முடி சம்பந்தமான பிரச்சினைகள், சோரியாசிஸ், பல் பாதுகாப்பு, ரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சினைகளைக் களைவதிலும் பாதாம் பருப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

    பாதாமின் மருத்துவ குணங்கள்

    இதய ஆரோக்கியம் மேம்படும்

    பாதாம் பருப்பின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்புகளாகும். இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக்  குறையுமாம். பாதாமிலுள்ள நல்ல கொழுப்புதான் அதற்கு காரணம்.

    எடை குறையும்

    எவ்வளவு முயற்சி செய்தும் எடையை குறைக்க முடியவில்லை என நினைப்பவர்கள், வாரத்திற்க்கு 2 முறை குறைந்தது 5 பாதாம் பருப்பை எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம். 

    மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கும்

    பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும்  மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்கிறது, இவை புத்திக்கூர்மைக்கு உதவும் நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது.


    ஞாபக மறதி

    முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோய் இப்போது சிறுவயதினரையும் விட்டுவைப்பதில்லை. இந்த ஞாபக மறதி வியாதியை தடுப்பதில்  பாதாம் பருப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. படிக்கிற பிள்ளைகளுக்குப் படித்த பாடங்கள் மறக்காமலிருக்க பாதாம் பருப்பு சாப்பிட வேண்டும். போதுமான அளவு பாதாம் பருப்பு சாப்பிடுகிற குழந்தைகளின்  மூளையானது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்..

     இதயத்தை பாதுகாக்கும்

    கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகிறது. பாதாம் பருப்பில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்புகள் அறவே இல்லை. எனவே பாதாமை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

    மலச்சிக்கல்

    உடலிற்கு ஒவ்வாத உணவுகளையும் நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளையும் அதிகம் உண்பதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. பாதாம் பருப்பில் உணவை செரிமானம் செய்யும் வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன. பாதாமை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு குடல் சார்ந்த அத்தனை பிரச்னைகளும் நீங்கும். 

    சருமத்தை பாதுகாக்கும்

    பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் இருக்கும்.

    இத்தனை சிறப்பு வாய்ந்த பாதாமை நாம் சாப்பிடுவதன் மூலம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வதுடன், நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளிருந்து நம்மை காக்கலாம்.


    ஆங்கிலப் பெயர்: 'ப்ளாக்ஸ்' (Flax)

      தாவரவியல் பெயர்: 'லினம் உசிடாடிஸிமம்' (Linum Usitatissimum)
      தாவரவியல் குடும்பம்: 'லினாசியே' (Linaceae)
      ஆளி, ஆண்டுக்கு ஒருமுறை பூத்துக்காய்க்கும் செடி. மத்தியத் தரைக்கடல் பகுதியில் இருந்து இந்தியா வரையிலான நிலப்பரப்பைத் தாயகமாகக் கொண்டது. 1 முதல் 2 மீட்டர் உயரம் வரை வளரும். மெல்லிய ஊசி வடிவில் நீலப் பச்சை நிற இலைகளும், நீல நிற இதழ்களுடன் கருஞ்சிவப்பு இழையோடும் மலரையும், உருண்டையான விதைகள் கொண்ட காயும் உடையது. 
      இந்தச் செடி வளர குளிர்ந்த சூழல் தேவைப்படுகிறது. தண்டு மஞ்சள் நிறமாக மாறத் தொடங்குகையில், நார்களுக்காகவும், நன்கு முற்றிக் காய்ந்த பின் விதைகளுக்காகவும் இவை அறுவடை செய்யப்படுகின்றன. காய்ந்த செடிகளை அடித்துக் காய்களை உதிர்த்து விதைகளைச் சேகரிக்கின்றனர்.

      'லினன்' (Linen) துணிகள் நெய்வதற்கான தரமான நூலிழைகள் ஆளி செடியின் தண்டுகளிலிருந்து எடுக்கப்படுகிறது. பழங்காலப் பாய்மரக் கப்பல்களில் பயன்பட்ட துணிகள் இதைக் கொண்டே நெய்யப்பட்டன. எகிப்தியர்கள் லினன் துணிகளைப் பெரிதும் விரும்பி பயன்படுத்தியதற்கு சான்றுகள் உள்ளன. 
      இயந்திரங்களால் அறுவடை செய்யப்படும் நார்களின் தரம் குறைவாக இருப்பதால், பெரும்பாலும் இவை கைகளால் வேருடன் பிடுங்கி எடுக்கப்பட்டே அறுவடை செய்யப்படுகிறது.

      நார்களைப் பிரித்தெடுக்க இச்செடி ஓடும் ஆற்றிலும் ஓடைகளிலும் பல நாட்களுக்கு ஊற வைக்கப்படுகிறது. பின் உலர்த்தப்பட்டு நார்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. 
      நார்களிலிருந்து மிக நுண்ணிய இழைகளாக உருவாக்கப்படும் லினன் உறுதியாகவும், நீடித்து உழைக்கும் தன்மையுடனும், நல்ல தரத்துடனும் இருப்பவை.மனித இனம் உட்கொண்ட மிகவும் பழமையான உணவு வகைகளில் ஒன்று ஆளி விதை. மருத்துவ குணங்கள் நிறைந்த ஆளி விதை தங்க மஞ்சள், காவி ஆகிய நிறங்களில் இருக்கும். லினன் விதைகள் அல்லது ஃப்ளாக்ஸ் விதைகள் எனப்படும்.
      ஆளி விதை மற்றும் அதன் எண்ணெயில்தான் தாவர உணவுப்பொருட்களிலேயே ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிக அளவில் உள்ளது. ஆளிச் செடியின் பல்வேறு பகுதிகள், சாயம், மருந்துகள், மீன் வலை, சோப் தயாரிக்கப் பயன்படுகிறது. ஆளி விதை எண்ணெய் மரத்தை மெருகேற்றுவதற்கும் பயன்படுகிறது. அயர்லாந்து, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் ஆளி பரவலாகப் பயிரிடப்படுகிறது.
      கோவைக்கொடி


    புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளரும் கோவைக்கொடியின் முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை. வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்த இந்த எளிமையான காய்கறி கொடியினத்தை சேர்ந்தது இந்தியாவில் எங்கும் கிடைக்கும்.
    கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும். இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப் பொருட்களோடு கலந்து நீரிழிவு நோய், வீங்கிய சுரப்பிகள், தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும்.

    நீரிழிவை கட்டுப்படுத்தும்
    கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை.
    பல வருடங்களுக்கு முன்பே, அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பள்ளியில் நடத்திய ஆய்வில் கோவைக்காய் நீரிழிவு வியாதியை குறைக்கும் குணமுடையது என்பது சொல்லப்பட்டது. நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று பெங்களூரில் நடத்திய ஆராய்ச்சியிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

    வாய்ப்புண் குணமாகும்
    கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுப்பொடி, சீரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவுதான் கோவைக்காய் பச்சடி தயார். இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.

    தோல்நோய்களை குணமாக்கும்
    இலை மற்றும் தண்டு - கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு, கஷாயம் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும். இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும்.
    கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் ஜீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.
    வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும்
    கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும். கோவை இலைச் சாறு, பித்தம், ஷயம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும். கரம் மசாலா அல்லது உஷ்ணத்தைத் தரும் மருந்துகள் கோவைக்காயால் ஏற்படும் தீமைகளுக்கு நல்ல
    மாற்றாகும்.

    விராலி

     தாவரப்பெயர் :- HYMENODICTYON EXCLSUM.

     தாவரக்குடும்பம் :- RUBIACEAE.

    இது வளர்ச்சியைத் தாங்கி வளரக் கூடியது. இதை விவசாயிகள் விராலிமாறு என்று சொல்வர். இது காம்புள்ள சாறற்ற மேல் நோக்கிய இலைகளையும் சிறகுள்ள விதைகளையும் கசப்பான பட்டையும் கொண்ட குறுஞ்செடு. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

     மருத்துவப்பயன்கள் :- விராலி, காச்சல் தணித்தல், உடல் உரமாக்கல், வீக்கம் கட்டிகளைக் கரைத்தல் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தல் ஆகிய பயன்களையுடையது.

    20 கிராம் விராலி இலையை இடித்துக் கால் லிட்டர் நீரிலிட்டு ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டியதில் 20 மில்லியைச் சிறிது பால் கலந்து சாப்பிட்டு வர நுரையீரல் நோய்கள், கணச்சூடு, இருமல், சளி ஆகியவை தீரும். விராலி இலையை வதக்கிக் கட்டிகள் மீது கனமாக வைத்துக்கட்டி வரக் கட்டி அமுங்கி விடும் அல்லது உடைந்து விரைவில் ஆறும். வீக்கம் கரையும்.

    விராலிப் பட்டையை உலர்த்திப் பொடித்து ஒரு தேக் கரண்டி தேனில் குழைத்து உண்டுவரச் சளி, சளிக்காச்சல், மூறைக்காச்சல், மலேரியா முதலிய நோய்கள் தீரும்.

    விராலிப் பட்டையை அரைத்துப் பற்றிட வீக்கங்கள்


    வாழை

     வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது. பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி எனற எதுவும் வீணாகாது.வாழை ஆசியாவில் தோன்றியது என்றாலும், அது மற்ற வெப்ப மண்டலக்கண்டங்களான ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா போன்றவற்றுக்குப் 

    பரவியது.

    வாழைப்பழ வகைகள்


    1.              செவ்வாழை

    2.              ரசுதாளி

    3.              தேன் வாழை

    4.              மலை வாழை

    5.              பேயன் வாழை

    6.              பச்சை வாழை

    7.              மொந்தன் வாழை

    8.              பூவன் வாழை

    9.              கதலி வாழை

    10.            ஏலரிசி வாழை

    11.            மோரீஸ் வாழை 

    12.            வாழையின் பயன்கள்:

     

    நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த வாழை இலைம்முடைய பண்பாடு மற்றும் உணவு முறையில் பெரும் பங்கு வகிக்கும் இந்த வாழை இலையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நம்மில் பலருக்கு தெரியாது. 

    வாழை மரத்தில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஏதேனும் ஒரு வகையில் நமக்கு நன்மை தருகிறது. வாழை மரத்தில் உள்ள வாழை இலை,வாழைப் பழம், வாழை பூ, மற்றும் வாழை தண்டு என அதனுடைய அனைத்து உறுப்புகளும் நமக்கு மருத்துவ குணங்களை தருகிறது.

     

    நாம் உட்கொள்ளும் உணவை வாழை இலையில் பரிமாறும் போது நமக்கு ஏராளமான ஊட்ட சத்துக்கள் கிடைக்கின்றன. இதற்க்கு காரணம் நாம் சூடாக உணவுகளை பரிமாறும் போது வாழை இலையில் உள்ள ஊட்ட சத்துக்களை உணவு பொருட்கள் உறிஞ்சுகின்றன. 

    நாம் தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் நமக்கு கண் பிரச்சனைகள் வராமல் பார்த்து கொள்ளலாம். இதில் உள்ள ஊட்ட சத்துகள் நமக்க  தேவையான வைட்டமின்களை தருகிறது. எனவே நமக்கு மாலை கண் வரும் அபாயம் தடுக்க படுகிறது. 

    குழந்தையை அதிகாலையில் சூரிய ஒளியில் காட்டும் போது வாழை இலையில் இன்ஜி எண்ணையை தடவி சூரிய ஒளி படும்படி வைப்பதால் குழந்தைக்கு தேவையான வைட்டமின் டி சத்துக்கள் கிடைக்கின்றன. எனவே இதனை தவறாமல் செய்வதால் குழந்தையின்  சரும பிரச்சனைகள் நீங்கும். 

    வாழை இழையில்  சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி நம்முடைய சருமத்தில் அரிப்பு ஏற்படும் இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம் தோல் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். இதனை 

    தொடர்ந்து செய்வதால் நமக்கு தோல் அரிப்பு ஏற்படுவது தடுக்க படுகிறது. 

    தீக்காயம் ஏற்பட்டால் வாழை இலையில் தான் படுக்கவைப்பார்கள். இதற்க்கு காரணம் வாழை இலையில் உள்ள குளிர்ச்சி சக்தி தான். வாழை இலை வெப்பத்தை வெளிப்படுத்தமல் இருக்கும். எனவே வாழை இலையில் இன்ஜி எண்ணையை ஊற்றி நம்முடைய தீக்காயம் உள்ள இடத்தில் வைத்தால் நமக்கு விரைவில் காயம் சரியாகும். 

    நாம் தினமும் வாழை இலையில் உணவுகளை உண்பதால் நமக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் எளிதில் கிடைக்கின்றன.இதனால் இளம் வயத்தில் ஏற்படும் இளநரை பிரச்சனை நீங்கும். மேலும் முடி உதிர்தலும் தடுக்கப்படும். 

    வாழை இலையில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் உள்ளது. எனவே தினமும் வாழை  இலையில் உணவு உண்பது நல்லது.

    வாழை இலையில் உணவுகளை கட்டி எடுத்து செல்வதால் நம்முடைய உணவு கெட்டு போகாமல் இருக்கும்.இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்கள் இருப்பதால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

    செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின்சிஅதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. மேலும் இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது. 

    நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும். 

    மாலைக்கண்நோய் கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை  பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். 

    பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும். 

    சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும். 

    வாழைத்தண்டின் சாற்றில் இத்தனை பயன்கள் உள்ளதா...?

    வைட்டமின் மற்றும் சி நிறைந்த வாழைத்தண்டு, தோல் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது 

     
    வாழைத் தண்டு பித்தத்தைத் தணித்து தேவையற்ற கபத்தை நீக்கும் வல்லமை பெற்றது. கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். 

    சிறுநீர் எரிச்சலைப் போக்கும். சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருப்பவர்களுக்கு மிகச் சிறந்தது. நமது உடலில் நோய்கள் தோன்றக்கூடிய காரணங்களில் ஒன்று  உடல் பருமன். இது அளவுக்கு அதிகமான உணவை உண்பதாலும், உடலுக்குத் தேவையான உழைப்பு இல்லாததாலும் ஏற்படுகிறது. 

    வாழைத் தண்டிலுள்ள நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் அதிகப் படியான சதையைக் குறைத்து உடலை சிக்கென மாற்றும். இதிலுள்ள வைட்டமின் பி6, ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது. இதிலுள்ள பொட்டாசியம் இதய தசைகளை வலுவடையச் செய்கிறது. 

    இருமல், காது நோய், கர்ப்பப்பை நோய்கள், மஞ்சள் காமாலை, விஷக்கடிகளால் ஏற்படும் வலி மற்றும் இதர நோய்களுக்கு வாழைத்தண்டு மிகச் சிறந்த மருந்தாகத்  திகழ்கிறது. 

    சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. வாழைத் தண்டின் சாற்றை வடிகட்டாமல் குடித்தால், நார்சத்து அதிகமாகக் கிடைக்கும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவு  உயர்வதைத் தடுக்கும் 

    வாழைத்தண்டு சாற்றுடன், எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடிக்கலாம். வாழைத்தண்டில் பொட்டாசியம் உள்ளது. எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இவை இரண்டும் இணைந்து சிறுநீரகத்தில் கால்சியம் கற்கள் உருவாவதைத் தடுக்கும் 

     ** வெள்ளைக் குங்கிலியம் **

    " Vateria indica "

    குங்கிலிய மரத்தை 'டாமர்என்பார்கள். இது மலேய மொழிச் சொல். 'எரியும் பொருள்என்று அர்த்தம். குங்கிலியத்தில் சீமைக் குங்கிலியம், கருங்குங்கிலியம், வெள்ளைக் குங்கிலியம், பூனைக் கண் குங்கிலியம் எனப் பல வகைகள் உண்டு. அவற்றில் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் அதிகம் காணப்படுவது வெள்ளைக் குங்கிலியம்தான். அதிகமான மருத்துவப் பயன்களை உடையது இது. இதுவே நாட்டுக் குங்கிலியம். 100 அடி உயரம்வரை வளரக்கூடிய பசுமை மாறாத மர இனம் இது.


    கோயில்களிலும் வீடுகளிலும் கமகம என்று மணக்கும் புகை எழுப்பும் சாம்பிராணி இந்த மரத்தின் பட்டையில் இருந்து கிடைக்கும் கோந்தில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. காய்களுக்குள் இருக்கும் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்தி சோப், மெழுகுவர்த்தி போன்றவை தயாரிக்கிறார்கள்.

    ''வெள்ளைக் குங்கிலிய மரப் பட்டையைக் கீறி சேகரிக்கப்பட்ட கோந்து வெள்ளை நிறத்தில் பளிங்குத் துண்டுகள் போல இருக்கும்.

    குடலில் சேரும் வாயுவை அகற்றுவதற்கும்,கபத்தை வெளியேற்றுவதற்கும், மூலம், வயிற்றுப்போக்கு போன்றவற்றைப் போக்குவதற்கும், வாதங்கள் மற்றும் கட்டிகளைக் குணப்படுத்துவற்காகவும் வெள்ளைக் குங்கிலியம் பயன்படுத்தப்படுகிறது. டானிக் போலவும் செயல்படும் திறன் இதற்கு உண்டு.

    வெள்ளைக் குங்கிலியக் கோந்தைப் பொடி செய்து நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி, மூட்டுகளில் பூசிவந்தால் மூட்டு வலி குணமாகும். நெய்விட்டுப் பொரித்து, தண்ணீர்விட்டு நன்றாகக் குழைத்து, பாதி தேக்கரண்டி அளவு உள்ளுக்குக் கொடுக்க வெள்ளைப்படுதல் குணமாகும். பசு வெண்ணெய் அல்லது நெய்யிலும் கலந்து கொடுக்கலாம்.

    கோந்துத் தூளை 1 கிராம் எடுத்து 1 கோப்பைப் பாலில் கலந்து குடித்தால் இருமல், மார்புச்சளி, ரத்த மூலம் ஆகியவை கட்டுப்படும்.

    1 கிராம் கோந்துத் தூளுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து உள்ளுக்குக் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் சீதக்கழிச்சல் குணமாகும்.

    10 கிராம் கோந்த்துத் தூளுடன், 20 கிராம் மாம்பருப்புத் தூள், 8 கிராம் இலவம் பிசின் தூள், 20 கிராம் சாதிக்காய்த் தூள் ஆகியவற்றை ஒன்றாக 130 மி.லி. நீரில் கலந்து கொடுக்க வயிற்றுப்போக்கு குணமாகும்.

    குங்கிலியத்தூள், மெழுகு ஆகியவற்றை எடுத்துத் தீயில் உருக்கி நல்லெண்ணெய் சேர்த்துச் சூடாக இருக்கும்போதே வடிகட்டி, துணியில் தடவிப் புண்கள் மீது பற்றுப்போட்டால் விரைவில் ஆறும். தூள், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். பாலில் கலந்து குடித்தால் உடல் வலிமை பெறும்.

    குங்கிலியத்தைக் கொண்டு குங்கிலிய வெண்ணெய், குங்கிலியப் பற்பம், குங்கிலியத் தைலம் என மருந்தாக்கலாம்.

    குங்கிலிய வெண்ணெய் மேகப் புண், அக்கி, மூலப் புண், தீக்காயங்கள் ஆகியவற்றிற்கு வெளிப் பூச்சாகப் பயன்படுத்தலாம்.

    குங்கிலியத் தைலம் வாத நோயைக் குணப்படுத்தும். அரை முதல் 1 கிராம் குங்கிலியப் பற்பம் எடுத்து அரை டம்ளர் இளநீரில் கலந்து தினமும் 3 வேளை கொடுத்தால் நீர்க்கடுப்பு குணமாகும்.

    குங்கிலியப் பற்பத்தை முள்ளங்கிச் சாற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக் கற்கள் கரைந்து வெளியேறும்.

    பட்டையிருந்து தயாரிக்கப்படும் கஷாயத்துக்கு வீக்கத்தைக் குணமாக்கும் தன்மை உண்டு. இதன் வாழிடமான காடுகள் அழிக்கப்படுவதாலும், அதிக அளவில் வெட்டப்படுவதாலும், இந்த மரங்கள் குறைந்துவருகின்றது.

    ஜாதிக்காய்

    ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீரணத்தை தூண்டவல்லது. தசை வலியினைப் போக்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி பக்கவாதம் ஆகியவற்றிற்கு பயன்படுகிறது. காலரா நோயின் பொழுது ஏற்படும் தசைப்பிடிப்பு வலியினை போக்க மேல் பூச்சாக உதவுகிறது. 




    இதனுடைய வடிநீர் காலரா நோயாளிகளின் தண்ணீர் தாகத்தினைச் சரிப்படுத்தும். ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும். ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள்

    மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். 

    ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது. அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

    ஜாதிக்காயின் விதைகளின் மேல் சூழ்ந்துள்ள சிவப்பு நிற திசு ஜாதிபத்ரி எனப்படுகிறது. ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்ரி வயிற்றுப் போக்கு, உப்புசம், குடல்வலி, ஆகியவற்றினை போக்க உதவுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க ஜாதிக்காய் விதையை அரைத்து குடிக்க கொடுப்பார்கள். ஜாதிக்காய், சுக்கு மற்றும் ஓமம் மூன்றின் பொடி ஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகும்.
    விந்து முந்துதலை தவிர்க்க மூலிகைகள் பல உள்ளன, அதில் மிக எளிதாக மிகவும் பயனுள்ள மூலிகை ஜாதிக்காய்.  தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும்.

    ஜாதிக்காய் இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.

    ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும் பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்புதளர்ச்சியை போக்கும். நீர்த்துப் போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

    ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது. ஜாதிபத்ரியிலும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன. இவை ஜாதிக்காயில் காணப்படும் அதே எண்ணெய் வகைகள் என்றாலும் இவற்றில்  மிர்ட்டிசின் அதிக அடர்த்தியாக உள்ளது.

    ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும். முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது.

    அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

    காதுவலிக்கு

     

    முறை;1

    நல்லெண்ணை 100 மில்லி.

    பொன் ஊமத்தை இலை.2

    வலம்புரிக்காய்.6

    சிறுதீயாக எரித்து ஊமத்தை இலையை அப்பளம் பொரிப்பதுபோல் பொரித்து எடுத்துவிடவும்.

    பிறகு வலம்புரிக்காய் சுழியை பிரித்து இரண்டு மூன்றாக உடைத்து எண்ணையில் போடவும்.

    கடுகு வெடித்து பொரிவதுபோல் வெடிக்கும் கவனம் தேவை.

    புகையாக கிளம்பி கருகி வரும்போது அடுப்பில் இருந்து எண்ணையினை கீழே இறக்கிவிடவும்.

    எண்ணையினை ஆறவைத்து 10 மில்லி பாட்டிலில் பதனபடுத்தவும்.

    காதினை நன்கு இளம் சுடுநீர்விட்டு கழுவிவிட்டு நன்கு துடைத்து சுத்தம் செய்தபிறகு இரண்டு காதிலும் மூன்று முதல் ஏழு நாட்கள் ஊற்றிவர தீரும்.

    முறை;2

    கஸ்தூரி மஞ்சள் 7கிராம்

    வலம்புரிகாய் 5 எண்ணம்.

    கடல்நுரை 10 கிராம்

    நல்லெண்ணை 100 மில்லி.

    மேற்சொன்ன முறைப்படியே காய்ச்சவும்.

    இதில் கஸ்தூரி மஞ்சளும்,கடல் நுரையும் முதலில் எண்ணையில் கலந்து பொங்கி எண்ணையுடன் உறவானபிறகு வலம்புரிக்காயை உடைத்து போட்டு காய்ச்சி சூட்டுடனே வடிகட்டிவிடவும்.

    இதனையும் 3 முதல் 7 நாட்கள் காதில் விட்டு வர வலிதீரும்.

    முறை;3

    நல்லெண்ணை 100 மில்லி.

    வரமிளகாய் 3 காம்புடன்

    வெள்ளைபூண்டு பல் 1 பெரியது.

    அனைத்தும் ஒன்றாக அடுப்பில் சிறுதீயில் வைத்து எரித்து எடுக்கவும்.

    நுரை அடங்கியவுடன் இறக்கி வடிகட்டவும்.

    இதனை தேகபலம் அறிந்து மூன்று முதல் ஏழுநாட்கள் காதில் விடவும்.

    காதில் ஏற்படும் காற்று அடைப்பினால் ஏற்படும் வலி,சளியினால் ஏற்படும் காதடைப்பு,காது குத்தல்,குடைச்சல்,இரைச்சல்,உறுத்தல்,அரிப்பு,காந்தல்,காதில் ஏற்படும் சிடுசிடுப்பு,காதில் சீல்வடிதல்,அதனால் ஏற்ப்பட்ட புண்,அலர்ஜி,போன்ற பலவகையான காது சம்மந்தமான நோய்கள் தீரும்.இன்றுவரை இது எமது அனுபவத்தில் கைகண்ட எளியமுறை.

    பலருக்கு ஆப்ரேசன் செய்யவேண்டும் என்று ஆங்கிலமருத்துவர்கள் சொல்லி ஆப்ரேசனே இல்லாமல் தீர்வு கண்டமுறை

     

    போஜன குடோரி மாத்திரை

     

    தேவையான பொருட்கள்;

    இஞ்சி,சுக்கு,மிளகு,பெருங்காயம்,சீரகம்,இந்துப்பு,

    இவை அனைத்தும் சமஅளவு.

    தேவைக்கேற்ப்ப எலும்பிச்சம்பழசாறு.

    செய்முறை;

    மேற்கண்ட சரக்குகளை முறையாக சுத்தி செய்து பொரிக்க வேண்டியதனை பொரித்து வறுக்க வேண்டியதனை வறுத்து,அரைத்து தனித்தனியாக சலித்து எடுத்து சூரணம் செய்து கொண்டு பிறகு கல்வத்தில் உறவுபட கலக்கி எலும்பிச்சம்பழச்சாறு விட்டு நன்கு உறவுபட அரைத்து மாத்திரை உருட்ட தேவையான பதத்தில் எடுத்து சுண்டைக்காய் அளவு மாத்திரையாக உருட்டி நிழலில் காயவைத்து கண்ணாடி புட்டியில் பத்திரப்படுத்தவும்.

    தீரும் நோய்கள்;

    உடலில் அக்னிக்குறைவினால் ஏற்படும் அக்கினி மந்தம்,

    செரிமானம்மின்மை,

    உஷ்ணக்குறைவினால் ஏற்படும் மந்த தன்மை தீரும்.

    வயிற்றுவலி,குன்மம்,புளித்த ஏப்பம்,நெஞ்செரிச்சல்,

    இதுபோன்ற ஜீரண உறுப்புகள் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.

    வசம்பு.


     

    பெயர் சொல்லகூடாத பொருள் என்று சொல்வார்கள். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடியது. பிறந்த பிள்ளை இருக்கும் வீட்டில் வசம்பு கண்டிப்பாக இருக்கும். பிறந்த குழந்தைக்கு 15 நாட்களுக்கு பிறகு வசம்பு பயன்படுத்துவதுண்டு. குழந்தைகளுக்கு வசம்பு பயன்படுத்தும் போது அதை விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் தோய்த்து அகல் விளக்கில் சுட்டு கருப்பாக்கி அதை தாய்ப்பாலில் குழைத்து கொடுப்பார்கள். வசம்பை தனியாக எடுக்காமல் உரை மருந்தில் கலந்தும் கொடுப்பார்கள்.

     

    இதை குழந்தையின் வயிற்றிலும் உள்ளங்காலிலும் தடவி விடுவார்கள். உள்ளுக்கு கொடுப்பது போன்று வசம்பை பொடியாக்கி குழந்தையின் கையில் காப்பு போன்று கட்டிவிடுவார்கள்.

     குழந்தைக்கு வசம்பு பயன்படுத்தும் போது அவர்களது வயிற்றுகோளாறுகள் சரியாக கூடும். குழந்தை வளர்ந்த பிறகு வசம்பு பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் தடவினால் குழந்தைக்கு பேச்சு சீக்கிரம் வளரும் என்று சொல்வதுண்டு.

    குழந்தைகள் போன்று பெரியவர்களுக்கும் வசம்பு பயன்படுத்துவதுண்டு. செரிமான பிரச்சனைகள் இருக்கும் போது வசம்புவை நசுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதை குடித்து வந்தால் வயிறு கோளாறுகள் சரியாகும்.

     குளிர்காலங்களில் வசம்பு பொடி சிட்டிகை சேர்த்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் ஜலதோஷம் தொண்டைக்கட்டு விரைவில் சரியாக கூடும். வாந்தி மற்றும் குமட்டல் இருக்கும் போதும் பயணங்களின் போது சிட்டிகை வசம்புவை நீரில் சேர்த்து குடித்தால் குமட்டல் இருக்காது.

     காக்கை வலிப்பு இருப்பவர்களுக்கு மூலிகை பொடியுடன் வசம்புவையும் சேர்த்து கொடுப்பார்கள். இது கடுமையான விஷத்தையும் முறீக்கும் தன்மை கொண்டதால் இதன் நன்மையை உணர்ந்து பயன்படுத்தியவர்கள் நம் முன்னோர்கள்.

    நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வசம்பு பிள்ளை வளர்த்தி என்றும் அழைக்கப்படுகிறது. இதை பெயர் சொல்லாத பொருள் என்றும் பெரியவர்கள் சொல்வதுண்டு.

    பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு அருமருந்தாக பயன்படுத்தப்படும் வசம்பு இருந்தால் பிறந்த குழந்தையை வளர்த்துவிடலாம் என்று சொல்வார்கள். வசம்புவை குழந்தைக்கு எப்படி கொடுக்கலாம் என்பதை முன்னரே பார்த்திருக்கிறோம். அதிகப்படியாக வசம்புவை எடுத்துகொள்ளும் போது என்ன மாதிரியான பக்கவிளைவுகள் உண்டாகும் என்பதை பார்க்கலாம்.

    பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதே நேரம் தாய்ப்பாலுடன் சேர்த்து மருந்து என்றால் அது குழந்தைக்கு வசம்பு மட்டும் தான். இது காரச்சுவையும் வெப்பத்தன்மையும் கொண்டிருக்கும். இது வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளை போக்க கூடியது.

    பல்வேறு நன்மைகளை கொண்ட வசம்பிற்கு, பிள்ளைவளர்த்தி என்ற பெயர் உண்டு. இது குழந்தைகளின் நரம்புகள் பலம்பெற்று மூளை சிறப்பாக செயல்பட  உதவுகிறது.

    வீடுகளில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு. காரணம் குழந்தை சாப்பிடும்  உணவாலோ அல்லது அலர்ஜியோ விஷத்தன்மையோ குழந்தைக்கு பரவக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படும். 

    வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு  மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

     வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம். வசம்பை  விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் உள்ளிருக்கும் விஷம் முழுக்க வெளியே வந்து விடும்.

     வசம்பை பயன்படுத்தி சளி, இருமல், செரிமான பிரச்னைகளை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் வசம்பு பொடி கால் ஸ்பூன் எடுக்கவும்இதனுடன் சிறிது கடுக்காய் பொடி, சுக்குப்பொடி, மிளகுப்பொடி, திப்பிலி பொடி, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்க்கவும். பின்னர், ஒரு டம்ளர் நீர்விட்டு  கொதிக்க வைக்கவும். இதைவடிக்கடி குடிப்பதால், நெஞ்சக கோளாறு, சளி, விட்டுவிட்டு வரும் இருமல் குணமாகும். செரிமானம் சீராகும்

     வயிறு உப்புசம், நரம்புக்கு பலம் தரக்கூடியது. வயிற்றில் உள்ள காற்றை வெளித்தள்ளும். வயிற்று வலியை போக்கும். அல்சரை ஆற்றக்கூடியது. நெஞ்சக  சளியை போக்க கூடிய மருந்தாகிறது. வசம்பை அதிகமாக எடுத்துக் கொண்டால் குமட்டல் ஏற்படும். அளவோடு பயன்படுத்தினால் மிகுந்த நன்மையை தரும்.

    பிறந்த குழந்தைக்கு1 வயதாகும் வரை வசம்பு பயன்படுத்துவார்கள். வாரம் ஒரு முறை சுத்தமான தேனில் வசம்பை குழைத்து குழந்தையின் நாக் கில் 3 சொட்டுகள் வைத்தால் குழந்தைக்கு பேச்சுத்திறன் விரைவாக கிடைக்கும்.

    குழந்தை அவ்வப்போது வயிறு உபாதையால் அழுதுகொண்டே இருக்கும் அப்போது வசம்பை தாய்ப்பாலில் குழைத்து வயிற்றின் தொப்புள் பகுதி களில் தடவி வந்தால் வயிறு உபாதை கட்டுப்படும். சுத்தமான தேங்காய் எண்ணெயுடன் வசம்பை குழைத்தும் பூசி வரலாம்

    தாய்ப்பால் குடிக்கும்குழந்தைகள் மீது பால்வாசம்இருக்கும். இந்த வாசனைபிடித்து பூச்சிகள் நெருங்கும்.அதை விரட்டியடிக்க வசம்பை குழைத்து நெற்றியில் பூசலாம்.

    குழந்தை பால் கக்கினால், நெஞ்சுசளி இருந்தால்,வயிறு அழுத்திப் பார்த்தால் சற்றே இறுகினாற் போல் இருந்தால் வசம்பைத்தாய்ப்பாலில் குழைத்து கொடுக்கலாம்

    பிறந்த குழந்தை இருக்கும் வீடுகளில் பூச்சிகளின் நடமாட்டம் இருந்தால் அறைகளின் மூலையில் வசம்பு பொடியை தூவி வைத்தால் பூச்சிகளின் நடமாட்டம் இருக்காது

    அதே நேரம் அளவுக்கு அதிகமாகவோ அல்லது தினமும் வசம்பு கொடுப்பதோ  குழந்தைக்கு அதிக உஷ்ணத்தை உண்டாக்கிவிடும்.

    பெரியவர்களும் வசம்பு பயன்படுத்தலாமா?
    பயணங்களின் போது சிலருக்கு குமட்டல் உண்டாகும்.வசம்பை நன்றாக பொடி செய்து மெல்லிய சூட்டில் கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் நிற்கும்.

    வளர்ந்த பிள்ளைகளுக்கு பசியின்மை இருந்தால் வசம்பை சுட்டு பொடியாக்கி ஒரு டீஸ்பூன் தேனில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். செரிமானத்தைத் தூண்டி  பசியை அதிகரிக்கும். வயிற்றுப்புழுக்களை அழிக்கும்.

    மூட்டுவலிகள் இருப்பவர்கள் வசம்பை நீரில் தேய்த்து மூட்டுபகுதிகளில் தடவி வர வலி குறையும். வாதம், கீல்வாதம் போன்றவற்றையும் தீர்க் கும் வசம்பு. விஷ பூச்சிகள் கடித்த இடத்தில் வசம்பு பொடியை நீரில் குழைத்து வைத்தால் விஷங்கள் இறங்கும்.

    திக்குவாயால் அவதிப்படுபவர்கள் மருத்துவசிகிச்சை மேற்கொள்ளும் போது கூடவே வசம்பை தேனில் குழைத்து  தடவி வந்தால் திக்குவாய் குணமாகும். உங்கள் வீட்டிலும்  வசம்பு இருக்குதானே இல்லையென்றால் முதலில் நாட்டுமருந்து கடைகளுக்கு சென்று வாங்குங்கள்...

    தாழை மரம் (Pandanus Odoratissimus)

     

    நீர் தெளிக்காமல் நீரோடைகளில், ஆறுகளில், கேட்பாரின்றிப் புதராக வளர்ந்து இன்மணம் பரப்புவதுடன் மலடு நீங்க மருத்துவம் தருகிறது. இதனை ஆங்கிலத்தில் Fragrant Screwpine இப்படியும் அழைப்பர். வடக்கில் வேரைப் பயன்படுத்துகின்றனர். தாழைமரத்தின் வேரை - வேர்க்கிழங்கை எடுத்துவந்து அதை அரைத்துப் பசும்பாலில் (நாட்டுப்பசு) கலந்து

    வடிகட்டாமலேயே தரலாம். தாய்மை ஏற்படுவது மட்டுமல்ல; ஏற்கனவே உருவான கரு கலையும் ஆபத்தையும் தடுக்குமாம்.
    தாழம்பூவுக்குச் சற்று வணிக முக்கியத்துவம் இருப்பினும் தாழையை நாடும் மக்கள் குறைவு. மருத்துவக் களஞ்சியத்தில் தாழையானது, வாதம், கபம், மேகம் சார்ந்த பிணியகற்றும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, முற்காலத்தில் பிரமேகம் என்ற நோய் வந்தால் தாழை வைத்தியம் செய்யப்படும். மேகநோய் என்பது உடல் வெப்பம் ஏறிச் சூட்டால் ஏற்படும் பல பிரச்சினைகள். உடல் ரணமாகும். இப்படி வரும்போது உப்பில்லாப் பத்தியம் இருந்து கொண்டு பின்வரும் வைத்தியம் செய்யலாம்.

    தாழையின் பரவலான பயன், தாழம்பூ சென்ட். இப்போது பாரீஸிலிருந்து விதம்விதமான உயர்ந்த ரக சென்டுகள் வருகின்றன. தாழையில் சிவப்பு வெள்ளை என இரண்டு வகை உண்டு. இரண்டிலும் மணம் ஒன்றே. ஆடி, ஆவணியில் வெண் தாழம்பூ மடல் விரிக்கும். செந்தாழம்பூ என்றால் செக்கச் செவேலென்று இருக்காது. மஞ்சள் நிறத்தைத்தான் செந்தாழம்பூ என்று கூறுகின்றனர். இது பனிக்காலம் தாண்டி மடல் விரிக்கும். மாசி, பங்குனி மாதங்களில் செந்தாழம்பூ கிட்டும்.

    தாழம்பூ மணத்தை மட்டுமல்ல மருத்துவ குணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. தாழம்பூவின் நறுமணம் உடலுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடியது. கோடைகாலத்தில் உடல் உஷ்ணம் ஏற்படுவது இயல்பு. உடல் உஷ்ணத்தினால் நீர்க்கடுப்பு, பித்தம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இதுபோன்ற காலங்களில் தாழம்பு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.

    ரத்தம் சுத்தமடைய:

    உடலில் சில சமயங்களில் பித்த நீர் இரத்ததில் கலந்துவிடுகிறது. இதனால் ரத்தம் அசுத்தம் அடைகிறது. அசுத்தம் அடைந்த ரத்தத்தை சுத்தப்படுத்த தாழம் பூவை காயவைத்து பொடி செய்து நீரில் ஊறவைத்து அருந்தி வந்தால் ரத்தம் சுத்தமடையும்.

    பசியை தூண்டக்கூடியது:

    ஒரு சிலர் உடல் நிலையை பார்த்தால் மிகவும் மெலிந்து காணப்படுவார்கள் இவர்கள் தாழம்பூவை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் 1 தேக்கரண்டி அளவு பொடியை நீரில் இட்டு கொதிக்க வைத்து அருந்தி வந்தால் நன்கு பசி எடுக்கும்.

    வயிற்றுப் பெருமல் நீங்க:

    உணவின் மாறுபாட்டாலும் நேரம், காலம் கடந்து உணவு உண்பதாலும் வயிற்றில் வாயுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்று பெருமலை உண்டாக்குகிறது. இதை போக்க தாழம் பூவை நிழலில் உலர்த்தி அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்வயிற்று பெருமல் குணமாகும்.

    ரத்த சோகை நீங்க:

    ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் மெலிந்து காணப்படுவார்கள். சுறுசுறுப்பு இல்லாமல் எப்போதும் இருப்பார்கள். இந்தக்குறையை போக்க தாழம்பூவை நீரில் கொதிக்க வைத்து அருந்தினால் குணமாகும்.

    உடல்சூடு தணிய:

    தாழம் பூ செடியின் வேரை இடித்து சாறுபிழிந்து அதனுடன் வெல்லம் கலந்து ட்கொண்டு வர வெப்ப நோய்கள் ணியும். தாழம் இலையின்விழுதை இடித்து சாறுபிழிந்து நெய்யுடன் கலந்து காய்ச்சி 5 ‌மில்லி அளவு ட்கொண்டு வரநீர்க்கடுப்பு, ‌நீர்ச்சுருக்கு குணமாகும் அல்லது பூவை மணப்பாகு செய்து குடித்து வந்தால் உடல்சூடு குணமாகும்.

    வெக்கை தீவிரமாயிருந்தால் தாழங்கிழங்கு 2 தோலா எடைக்கு (ஒரு வெள்ளி ரூபாய் எடை) நறுக்கி அரைத்துச் சீனி சேர்த்து ஜூஸை ஒரு வாரம் வெறும் வயிற்றில் தரலாம்; அல்லது தாழம்பூவையும் இதே அளவு கொழுந்தாக அரைத்துச் சீனியுடன் சீரகம் சேர்த்துத் தரலாம். இரண்டு தாழம்பூவைக் குறுக்கே அரிந்து ஒரு லிட்டர் நீரில், ஒரு நாள் ஊறல் போட்டுச் சாற்றைக் கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு கிலோ சீனாக் கற்கண்டு கலந்து தேன் பதமாகக் காய்ச்சி சிரப் செய்துகொண்டு சற்று நீர் கலந்து குடித்துவந்தாலும் வெப்பம் அகலும்.

    தாழம்பு மணப்பாகு

    தாழம்பூவை துண்டு துண்டாக வெட்டிநீரில் ட்டு காய்ச்ச வேண்டும். ‌நீர் ன்கு கொதித்து பூவிதழ்கள் வதங்கியபின் வடிகட்டி, தேவையான ர்க்கரை கூட்டி பாகுபதமாய் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.

    இதுவே தாழம்பு மணப்பாகு. இதனை ஒருதேக்கரண்டி அளவுநீரில் கலந்து இருவேளை குடித்து வர உடல் ்ணத்தைத் ணிக்கும்.

    அம்மை நோய்க்கு

    தாழம்பூ சர்பத் அம்மையை குணப்படுத்தவும், குடும்பத்தில் மற்றவர்க்கு பரவாமல் தடுப்பு மருந்தாகவும் பயன்தர வல்லது.

    தோல் நோய்களுக்கு

    தாழம்பூ தோல்நோய்களை குணமாக்கும். மணப்பாகை தாழம்பூ வேரினைப் பயன்படுத்தி செய்து வைத்துக் கொண்டு ட்கொண்டு வர சொறி, ‌சிரங்கு, ‌தினவு, தோல் நோய்கள் குணமாகும்.

    காது வலிக்கு

    தாழம்பூவை நெருப்புத் தணலில் காட்டி கசக்கி சாறு ி‌‌ழிந்து தில்சில துளிகளை காதில்விட்டால் காது லி, காதில் தோன்றும் ட்டி கியவை குணமாகும். தாழம்பூ சாம்பலை காயங்களின் மீது பூச புண்கள் குணமாகும்.

    தலைவலிக்கு & உடல்வலி

    தாழம்பூ தைலம் நல்லெண்ணெய்யில் காய்ச்சி எடுக்கப்படுகிறது. இது தலைவலிக்கு நல்லது. இந்த தைலம் தலைவலி, உடல் வலி உள்ளவர்களுக்கு மேல் பூச்சாக தடவினால் உடல் வலி தலைவலி நீங்கும்.

    தொண்டை வலி & காக்காய் வலிப்பு

    தாழம்பூ மூக்குப்பொடி, தாழம்பூ பீடி எல்லாம் நாசி, தொண்டை நோய் மருந்து என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

    பூசணி விதை

    100 கிராம் பூசணி விதைகள் நமக்கு 600 கலோரிகளைக் கொடுக்கின்றன, இதில் சராசரியாக 49.05 கிராம் கொழுப்பு உள்ளது. இது தினசரி நமது உணவில் பரிந்துரைக்கப்பட்ட கொழுப்பை விட 164% அதிகம். 


    பூசணிக்காய் என்றாலே நம் அனைவருக்கும் அதன் வித்தியாசமான தோற்றமும், திருஷ்டி சுற்றி உடைப்பது தான் நியாபகம் வரும். அப்படித்தான் நம்மை சுற்றி இருப்பவர்கள் பழக்கப்படுத்தி வைத்துள்ளார்கள். வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா என வல்லரசு நாடான அமெரிக்காவில் அதிகம் பயிரிடப்படும் காய்கறிகளில் ஒன்று பூசணி என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

    பூசணிக்காய் என்றவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது திருஷ்டிக்காக, அது தெருவில் உடைந்துகிடக்கும் காட்சிதான். அதேபோல பூசணிக்காயை பலர் உணவில் பயன்படுத்துவதும் குறைவு. பூசணிக்காய் மகிமை நிறைந்தது. அதிலும் பூசணி விதைகளுக்கு எக்கச்சக்க மருத்துவக் குணங்கள் உள்ளன. இது தெரியாமல் பலர், சமைக்கும்போது பூசணிக்காயை நறுக்கியவுடனேயே அதனுள்ளே இருக்கும் மொத்தப் பூசணி விதைகளையும் அப்படியே வழித்தெடுத்து, வெளியே கொட்டிவிடுவார்கள்.

    வட அமெரிக்கா, தென் அமெரிக்கா , மத்திய அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிகமாகப் பயிரிடப்படும் காய்கறிகளில் ஒன்று பூசணி. உலகமெங்கும் சுமார் 40-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன . சிவப்பு, மஞ்சள், பச்சை நிறங்களில் இருக்கும் பூசணிக்காய், அண்டார்டிகாவைத் தவிர உலகின் எல்லா கண்டங்களிலும் பயிரிடப்படுகிறது.

    இந்தியாவைப் பொறுத்தவரை, மருந்துத் தயாரிப்புகளில்தான் பூசணி விதை அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. ஆனால் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளில் உணவிலும் இவற்றை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். நாமோ அந்த அளவுக்கு இன்னும் பூசணி

    விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ளப் பழகவில்லை.

    `பூசணியின் காய் மட்டுமல்ல, அதன் விதைகளும் தூக்கி எறியக்கூடிய பொருளல்ல என்பதை நினைவில் வைத்திருந்தால் போதும். இவற்றின் மருத்துவக் குணங்கள் அபாரமானவைஎன்கிறார் சித்த மருத்துவர் ரமேஷ். பூசணி விதைகளில் உள்ள சத்துகளையும், நம் ஆரோக்கியத்துக்கு அள்ளி வழங்கும் நலன்களையும் பட்டியலிடுகிறார்...

    சத்துகள்

    இதில் நார்ச்சத்து, புரதம் , இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளைப் பெறலாம்.

    இதயம் காக்கும்

    இவற்றில் உள்ள மக்னீசியச் சத்துகள் நமது உடம்பில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தைக் காக்கும். ஒரு கப் பூசணி விதைகளைச் சாப்பிட்டால், அன்றைய நாள் முழுமைக்கும் தேவையான மக்னீசியம் கிடைத்துவிடும். மக்னீசியம் ரத்த அழுத்தம் மற்றும் `சடர்ன் கார்டியாக் அரெஸ்ட்’ (Sudden Cardiac Arrest) எனப்படும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்க உதவும்.

    நோய் எதிர்ப்புச் சக்தி

    இவற்றில் உள்ள துத்தநாகச் சத்துகள், நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். ஒரு அவுன்ஸ் பூசணி விதையில் 2 மிலி என்ற அளவில் துத்தநாகம் உள்ளது. இது செல்களின் வளர்ச்சிக்கு உதவும். துத்தநாகச் தாதுசத்து குறைபாட்டால் சளி மற்றும் காய்ச்சல், நாள்பட்ட சோர்வு, மனஅழுத்தம், முகப்பரு, குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, இந்தக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு மிகச் சிறந்த உணவு இந்த விதைகள்.

    சர்க்கரைநோய் தடுக்கும்

    தாவர உணவுகள் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா-3 அமிலம் பூசணி விதைகளில் அதிகளவில் உள்ளன. இந்த அமிலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரைநோய் வராமல் தடுக்கும்.

    கல்லீரல் நலம் காக்கும்

    ஆரோக்கியமான கொழுப்பு விதைகளில் நிறைந்துள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்டுகள் கல்லீரல் இயக்கத்தைச் சீராக்கும். இதனுடன் ஆளி விதைகளைச் சேர்த்து உண்டால் பலன் மேலும் அதிகரிக்கும்.

    ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்!

    இந்த விதைகளில் உள்ள டிரிப்தோபான் (Tryptophan) என்னும் அமினோ அமிலங்கள் தூக்கத்தைத் தூண்டும் `செரொட்டோனின்’ (serotonin) என்ற ஹார்மோன் சுரக்க உதவும். இதனால் தூங்குவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்னர் இந்த விதைகளைச் சாப்பிட்டால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

    உள்காயங்களைச் சரியாக்கும்

    இந்த விதைகளில் உள்ள ஆன்டி இன்ஃப்ளாமேட்டரி பொருள்கள் உள்காயங்களை ஆற்றும் தன்மைகொண்டவை.

    உடல் வலிமை தரும்

    இந்த விதைகளைக் காயவைத்து, பொடி செய்து, அந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட்டால், உடல் வலிமை அதிகரிக்கும்.

    மாதவிடாய்க் கோளாறு நீக்கும்

    பெண்கள், இந்த விதைகளை நெய்யில் வறுத்து, அதை தினமும் சாப்பிட்டுவந்தால், மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

    உஷ்ணம் குறைக்கும்!

    ஆண்களின் பாலியல் ஹார்மோன்களைத் தூண்டி, ஆண்மைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். இந்த விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து குடித்தால், உடல் உஷ்ணம் குறையும். விந்தணுக்களின் திறன் அதிகரிக்கும்.

     செவ்வாழையின் சிறப்பு



     

    வாழைகளில் செவ்வாழை மிகவும் அற்புதமான பல மருத்துவக் குணங்கள் கொண்ட பழம். செவ்வாழைப்பழம் ஒன்று சாப்பிட்டால் போதும், வயிறு நிறைந்த உணர்வு நமக்கு ஏற்படும். வைரஸ் கிருமிகளால் நம் உடல் பாதிப்பு அடையாமல் இருக்கத் தினந்தோறும் காலையில் ஒரு செவ்வாழைப் பழத்தைச் சாப்பிட்டு வந்தாலே போதும்.

    கண் பார்வை மங்குதல், கண் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஆகியவைகளுக்கு செவ்வாழைப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். செவ்வாழைப் பழத்தை நாள் தோறும் சாப்பிட்டு வந்தால் குளுகோமா என்ற கண் பார்வை இழப்பு எனும் கொடிய வியாதியைப் போக்கி விடலாம். இரண்டு மாதங்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

    செவ்வாழைப்பழத்தைச் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி விடும். உடலுக்கு நல்ல பலத்தைத் தந்து உற்சாகத்தை ஊட்டும். தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகள் அதிக அளவில் வலுவடையும்.

    ஆண்மை இழந்தவருக்கு ஆண்மையை உண்டாக்கிக் குழந்தைப் பேற்றை உண்டாக்கும். இவர்கள் தொடர்ந்து ஒரு வருடமாவது செவ்வாழைப் பழத்தைச் சாப்பிட்டு வர வேண்டும். ஆண்மை  எழுச்சி  பெறுவதுடன் குழந்தைப் பேறும் கிட்டும்.

    செவ்வாழைப் பழத்தைச் சாப்பிட்ட பின்பு, ஒரு தேக்கரண்டி தேனை அருந்த வேண்டும். பல் தொடர் புள்ள பல்வேறு பிரச்னைகள் அனைத்தையும் செவ்வாழைப் பழம் தீர்த்து வைக்கும். பல் வலி பஞ்சாய் பறந்து போகும். செவ்வாழைப் பழம் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கிறது. உடம்பை விரைவாகத் தேற்றுகிறது. ஆண்மையைப் பெருக்குகிறது. நரம்புத் தளர்ச்சியைப் போக்குகிறது.

    செவ்வாழை சக்தி நிறைந்த பரிபூரண உணவு ஆகும். இப்பழத்தில் உள்ள மக்னீசியம் மாரடைப்பு வராமல் தடுக்கும் சக்தி உடையதாகக் கருதப்படுகிறது. வைட்டமின் A, B1, B2, புரதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், தையமின், மக்னீசியம், ரிபோபிளேவின், நியாசின் என்று எல்லாச் சத்துக்களும் உள்ளன. 

    பாகற்காய்

    நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆரோக்கியத்துடன் வாழ இயற்கை அளித்த அருமருந்து தான் பாகற்காய். அதில் உள்ள மருத்துவ குணங்களும் பயன்படுத்தும் முறையும் கீழே தரப்பட்டுள்ளது. பாகற்காயின் இலையை சிறிது சாறு எடுத்து ஓர்

    அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ காய்ச்சல் நின்று விடும்.


    பாகற்காயின் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது. பாகற்காயின் இலைச் சாற்றில் காசிக் கட்டியை (கத்தைக் காம்பு) உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தமாகி சிரங்கு உதிர்ந்து விடும்.

    ஒரு பிடி கொடுப்பாகற்காயின் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும். பாகற்காயின் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு கடித்த விஷம் நீங்கும். அதே இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

    நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை தொடர்ந்து ஓர் அவுன்ஸ் பாகற்காயின் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். சர்க்கரை வியாதிக்கு மிகச் சிறந்த மருந்தாகும். ஓர் அவுன்ஸ் பாகற்காயின் இலைச் சாற்றுடன் சமபங்கு ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை கட்டுப்படுத்தலாம்.

    நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.

    1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

    2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

    3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.

    4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

    5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

    6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.

    7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

    8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

    9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.

    10.பொதுவாக மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது. பாகற்காயின் இலையைக் கொதிக்க வைத்து சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

    11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

    12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.

    13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.

    14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.

         கம்பு

     

    கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம்கால்சியம்பாஸ்பரம்இரும்புச் சத்து என பல உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதலிடம்  வகிக்கிறது. 

    தோலிற்கும்கண்பார்வைக்கும் அவசியமான வைட்டமின் A உருவாக்குவதற்குமுக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளது..


      

    வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி கம்பு உணவை சேர்க்க வேண்டும்வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும்சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும் 

    கம்பு உணவை காலைமதிய வேளைகளில் உண்டு வந்தால் உடல் வலுவடைந்து உடல் சூடு குறையும்அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்நம் முன்னோர்கள் கம்பு தானியத்தில் கம்புசாதம் அல்லது கம்பஞ்சோறுகம்பங்கூழ் மட்டுமே  செய்து வந்தார்கள் 

    அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளதுகம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் வைட்டமின் அதிகமாக இருப்பதால் வைட்டமின் சத்துக் குறைவால் உடலில் தோன்றும் வியாதிகளை இதை உண்பதன் மூலம் சரி பண்ணலாம்

    தானியங்களிலேயே அதிக அளவாக 11.8 சதவிதம் புரோட்டீன் கம்பில்தான் உள்ளது.

    100 கிராம் கம்பில்,

    42 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது.

    11 முதல் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது.

    பி 11 வைட்டமின் சத்து 0.38 மில்லி கிராம் உள்ளது.

    ரைபோபிளேவின் 0.21 மில்லி கிராம் உள்ளது.

    நயாசின் சத்து 2.8 மில்லி கிராம் உள்ளது.

    வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிதம் எண்ணெய் உள்ளதுஇந்த எண்ணெயில் 70 சதவிதம் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளதுஇது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்.

    கம்பு சேமிப்பு முறை]

    நன்கு உலர வைத்த கம்பு தானியம் சுமார் 3 முதல் 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்பின்னர் மீண்டும் ஒருமுறை வெயிலில் காயவைத்து எடுத்து வைத்தால் மேலும் 6 மாதங்கள் கெடாமல் இருக்கும்நொச்சி இலையை கம்புடன் கலந்து சேமித்தால்பூச்சி தாக்குதல் கட்டுப்படும்.

    பாரம்பரிய முறையில் கம்பு சமையல்]

    முதலில் கம்பை எடுத்துத் தண்ணீரில் ஊற வைக்கவும்.

    ஊறிய பின்னர் தண்ணீரை வடித்து விட்டுப் பின்னர் அந்தக் கம்பைத் தூய்மையான துணியில் பரப்பி வைத்து விடவும்.

    மேற்பரப்பிலுள்ள ஈரம் போனபின் கம்பை எடுத்து உரலில் இட்டு இலேசாகக் குத்தவும்.

    அதில் உமி நீங்கியதும் அதை முறத்தில் இட்டுப் புடைக்கவும்.

    பின்னர் மீண்டும் உரலிலிட்டு நன்கு குத்தவும்.

    அதிலிருந்து பெரிய குருணைசிறிய குருணைமாவு ஆகியவற்றைத் தனித்தனியே பிரிக்கவும்.

    பின்னர் அடுப்பில் உலை வைத்து முதலில் பெரிய குருணையை இட்டு வேக வைக்கவும்.

    அது வேகக் கொஞ்சம் நேரம் அதிகமாகும்அது வெந்தபின் சிறிய குருணையை அதனுடன் சேர்த்துக் கலக்கி வேக வைக்கவும்.

    அதுவும் வெந்தபின்னர் மாவினைப் போட்டுக் கலக்கவும்.

    குறிப்பிட்ட பதத்திற்கு வெந்தபின்னர் அடுப்பை அணைத்துவிட்டுப் பாத்திரத்தை அப்படியே சிறிது நேரம் மூடிவைக்கவும்.

    பின்பு கெட்டியாக ஆகிவிட்ட கம்பஞ்சோற்றினைக் கரண்டியில் எடுத்து உருண்டைகளாகத் தட்டில் இட்டு அதனுடன் குழம்புரசம்மோர் சேர்த்து உண்ணலாம்.

    மீதமாகி விட்டால் சிறுசிறு உருண்டைகளாக்கிப் பாத்திரத்திலிட்டு நல்ல நீரை ஊற்றி வைத்துவிட்டால் இரண்டு நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

    தொன்று தொட்டுக் கம்பில் செய்யப்பட்டு வருவது கம்பஞ்சோறு ஆகும்கம்பங்கூழ்கம்பு ஊறவைத்த நீர் ஆகியவையும் கம்பின் பழைய உணவு வகைகள்.

    உடனடி உணவுக் கலவை[

    தற்காலத்தில் கம்பு உணவு அதிகம் சமைக்கப் படாததற்குக் காரணம்கம்பை உணவாக்குவதற்கு நிறைய வேலை செய்ய வேண்டியிருப்பதும்அதற்கு அதிக நேரம் தேவைப்படுவதும்தான்இக்குறைகளைப் போக்கிஎளிதாகக் கம்பு உணவினைத் தயாரிக்ககோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் உடனடி கம்மஞ்சோற்றுக் கலவை ஒன்றை உருவாக்கி அதற்குக் காப்புரிமை பெற்றுள்ளது.

    கம்பின் பயன்பாடு

    கம்பிலிருந்து கூழ் தயாரிக்கப்படுகிறது.

    கம்பை இடித்து அதில் கம்பங்களி செய்யலாம்.

    கம்பைப் பயன்படுத்தி அடை செய்யலாம்.

    மருத்துவ பயன்கள்

    உடல் உஷ்ணமடைய செய்வதை குறைக்கிறது.

    வயிற்றுப்புண் மலச்சிக்கலை தவிர்க்க வல்ல

    கற்பூரவள்ளி

    வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் மணி பிளானட் போல் , கற்பூரவள்ளியும் தொட்டிகளில் வளர்க்கப்படும் ஒரு கொடிவகை சிறு செடியாகும் .


    அது வீட்டுக்கு மட்டும் அழகை தருவதில்லை மனித உடலுக்கும் காசம் எனும் நோய் போன்ற மூச்சு குழாய் நோய்களில் இருந்து காத்து உடம்பிற்கும் அழகை தருகிறது . சும்மா சீந்திகிட்டே இருந்தால் அழகா இது அதில் இருந்து விடுதலை அளிக்கும்.

    கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தின

    நற்பாலர் நோயெலா நாசமா யகலுமே

    இது தேரையர் குணபாடம் கூறுவது.

    இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.

    இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும்.

    இதன் இலை தடித்து காணப்படும்.இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. இதன் இலைகள் சொரசொரப்பாக இருக்கும். இதன் இலைகளை ஒடித்தாலோ அல்லது கிள்ளி எடுத்தாலோ நல்ல தைல வாசனை வரும். இது 2 அடிவரை வளரக்கூடியது. வேர்கள் அதிக ஆழம் செல்லாமல் கொத்து வேராக இருக்கும். இலையே மருத்துவக் குணம் உடையது. தமிழகமெங்கும் தானாகவே வளர்கின்றது.

    இது முக்கியமாக வீடுகளில் வளர்க்கக் காரணம் , இது குழந்தைகளுக்கு வரும் சளி முதலிய நோய்களுக்கு கை கண்ட மருமத்து .

    பிறந்த சிறிய குழந்தைக்கு கூட நம்பி இதன் சாரை கொடுப்பதை இன்னும் காணலாம் .

    காச இருமல் கதித்தம சூரியயையம்

    பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் -வீசுசுரங்

    கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும்போங்

    கற்பூர வள்ளிதனைக் கண்டு

    (அகத்தியர் குணபாடம்)

    சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை உண்டாக்கிவிடும்.

    கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.

    தாவர பெயர் Coleus Aromaticus.

    வேறு பெயர் ஓம வள்ளி

    இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வாட்டி வதைக்கும் நோய்களில் ஆஸ்துமாவும் முக்கியமானது . இந்து இயற்க்கை கெடுவதால் காற்றின் தூய்மை கெடுவதால் வருவது .. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படும். இளைப்பு நோய் உருவாகும். மேலும் இருமலும் ஏற்படும்.

    இவர்கள் தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையலாம்.

    மூக்கில் நீர் வடிந்து அது சில நாட்களில் சளியாக மாறி இருமலை ஏற்படுத்திவிடும். இவர்கள் கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

    காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

    இதை இந்திய மருந்து கழகம் ஆராய்ந்து முடிவை தந்திருக்கிறது .

    Based on these results, it could be suggested that Coleus aromaticus stabilizes mast cells in the rat mesenteric tissue. As mast cells play a major role in Type I hypersensitivity-mediated diseases like allergic asthma and rhinitis, [7] studies are under way to evaluate the efficacy of Coleus aromaticus due to its mast stabilization property in these animal allergic models.

    கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். வீட்டிலும் சுற்றுப்புறத்தை காக்கும் . சித்தர்கள்களுக்கு இந்த வல்லி எனும் பெயர் மேல் ஒரு ஆசை உண்டு. அமிர்த வள்ளி , கற்பூரவள்ளி என பல மூலிகைக்கு பெயர் வைத்துள்ளனர். வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம்.

    இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும். இதன் இலை தடித்து காணப்படும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.

    கற்பூரவள்ளி இலையைப் பறித்து சாறு பிழிந்து சங்களவு எடுத்து அத்துடன் கோரோசனை சிறிது இழைத்துப்போட குழந்தைகளுக்குக் காணும் மாந்தம் செரியாமை, காய்ச்சல் குணமாகும்.

    கற்பூரவள்ளியிலைச் சாறு 100 மில்லியளவு எடுத்து சிறிது கற்கண்டை பொடி செய்து கலந்து குடித்து வர தொண்டைக் கமறல் நீங்கும். இன்னும் உருளை கிழங்கு வாழை காய் பஜ்ஜி செய்து சாப்பிட்டு வாயுத் தொல்லையில் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுவதை விட, கற்பூரவள்ளி இலையை உபயோகித்து சுவையான பஜ்ஜி செய்யலாம்.

     டைப் 2 நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும் றுப்பு அரிசி தோசை

     


    கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. குறைவான அளவில் கலோரிகள், கொழுப்பு உள்ளது. அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. 

    தேவையான பொருட்கள் : கருப்பு அரிசி - ஒரு கப், உளுந்து - கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கருப்பு அரிசி, உளுந்து, வெந்தயத்தை சேர்த்து 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். நன்றாக ஊறியதும் மிக்சியில் போட்டு அரைத்து, தேவையான உப்பு சேர்த்து 8 மணிநேரம் புளிக்க விடவும். (அல்லது ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருந்து பயன்படுத்தலாம்). 

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மாவை தோசைகளாக வார்த்து, சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும். சட்னியுடன் பரிமாறவும். இப்போது சூப்பரான கருப்பு அரிசி தோசை ரெடி. இந்த இட்லி, புட்டு போன்ற ஆரோக்கிய உணவுகளை தயார் செய்யலாம்.

    முடக்கத்தான் கீரை பிடி கொழுக்கட்டை

     

    முடக்கத்தான் கீரை உடலில் ஏற்படும் வாய்வு பிரச்சனைகளை விரட்டி அடிக்கும் அருமருந்தாகும்.

    முடக்கத்தான் கீரை மூட்டு வலி, முடக்கு வாதம், கைகால் குடைச்சலை தீர்க்கும்.

     

    தேவையான பொருட்கள்: முடக்கத்தான் கீரை இலை - 3

    கைப்பிடி பச்சரிசி - கால் கிலோ சிவப்பு மிளகாய் - 6 மிளகு தூள் - 1 டீஸ்பூன் தேங்காய் - அரை மூடி நெய் - தேவையான அளவு பாசிப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிக்க: கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்

    செய்முறை: முடக்கத்தான் கீரை இலையை நன்கு கழுவி, பொடியாய் நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவிக்கொள்ளவும். பச்சரியை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த பச்சரியுடன் தேங்காய் துருவல், சிவப்பு மிளகாய் சேர்த்து கரகரப்பாய் அரைத்துகொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சூடானதும் முடக்கத்தான் கீரை இலையை போட்டு நன்றாக வதக்கவும். அரைத்த மாவில் வதக்கிய கீரை, மிளகு தூள், உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து, கலந்து வைத்த மாவைப் போட்டு நிறம் மாறும்வரை வதக்கவும்.

    கைவிடாமல் கிளறி விடவும். மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கி ஆற வைக்கவும். மாவு நன்றாக ஆறியதும் மாவை நெய்யைத் தொட்டுக்கொண்டு பிடி கொழுக்கட்டைகளாக பிடித்து வைக்கவும். இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் இட்லி தட்டில் செய்து வைத்த பிடி கொழுக்கட்டைகளை அடுக்கி வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான முடக்கத்தான் கீரை பிடி கொழுக்கட்டை ரெடி. இந்த கொழுக்கட்டை மூட்டு வலி, வாய்வு பிடிப்புக்கு மிகவும் நல்லது. ஆவியில் வேக வைப்பதால் இதன் மருத்துவத்தன்மை முழுமையாய் கிடைக்கும்.

    சளி மற்றும் மூக்கடைப்பு போக்கும் 22 வகை வீட்டு மருத்துவம்

    தேவையான பொருள்கள்:

    • இலவங்கப்பட்டை

    செய்முறை:

    இலவங்கப்பட்டை தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.

    இஞ்சி, வறண்ட இருமலை எளிதில் நீக்கக்கூடியது. ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதில் சிறிது உப்பைத் தூவவும். உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும். இஞ்சியோடு துளசி இலையையும் சேர்த்துக்கொண்டால், சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

    நான்கு அல்லது ஐந்து பூண்டுப் பற்களை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து எடுக்கவும். சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். சளி, இருமலை இயற்கைவழியில் நீக்கும்.

    கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும். ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். இதை அப்படியே மூடிவைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம்.

    சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும். பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருட்கள் உள்ளன. பொதுவாகவே, சளி போன்ற பாதிப்புகள் இல்லாத நாள்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்றது மஞ்சள் பால்.

    ஒரு வெங்காயத்தை உரித்து நன்றாக நசுக்கிக்கொள்ளவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளவும். சூடு ஆறிய பிறகு இதனைக் குடிக்கலாம். வெங்காயம் சளி, இருமலுக்கு மிக நல்ல மருந்து. வெங்காயத்தில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் நிறமி, சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகச் செயல்படும் தன்மைகொண்டது.

    சளி மற்றும் தலைபாரம் குறைய

    கிராம்பைத் தண்ணீர் விட்டு மைய அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் பலன் கிடைக்கும்.

    குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக்க

    ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயுடன் கற்பூரத்தையும் போட்டு கிண்ணத்தைச் சூடேற்றி எண்ணெயை மார்மீதும், முதுகுபுறமும் தடவ சளி, இருமல் குறையும். சிறிது குணம் தெரிந்தவுடன் விட்டு விட கூடாது. தொடர்ந்து தடவி வந்தால் நாள் பட்ட நெஞ்சு சளியையும் குணபடுத்தி விடலாம்.

    மூக்கில் சளி ஒழுகாமல் இருக்க

    மூக்கில் இடைவிடாது சளி ஒழுகிக் கொண்டே இருக்கும் நபர்கள் வெற்றிலைச் சாறு இரண்டு சொட்டு மூக்கில் விட சளி ஒழுகுதல் நிற்கும்.

    குழந்தைகளுக்கு சளி பிடித்து விட்டால்

    முருங்கைக் கீரையும், உப்பையும் கசக்கி 3 ஸ்பூன் அளவு கொடுத்தால் வாந்தியாக வெளியே வந்துவிடும்.

    சிறு குழந்தைகளுக்கு சளி பிடித்து மூக்கடைத்துக் கொள்ளும்போது சுத்தமான துணி அல்லது பஞ்சு கொண்டு சுடுநீரில் உப்புக் கலந்துதொட்டுத் துடைக்கலாம். மூக்கடைப்பு நீங்கும்.

    குழந்தைகளுக்கு சளி பிடித்து விட்டால், குப்பைமேனி இலையையும், உப்பையும் கசக்கி 5 ஸ்பூன் அளவு வெறும் வயிற்றில் கொடுத்தால் வாந்தியாக வெளியே வந்துவிடும்.

    சுக்கை சுட்டு பொடி செய்து தேனில் குழைத்து சாப்பிட உடலிலுள்ள சளி விரைவில் வெளியேறிவிடும்.

    எலுமிச்சை சாரை சுடு நீரில் விட்டு நன்கு கலக்கி பின் தேன் சிறிது சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரையும். மிளகுத் தூளையும், மஞ்சஐயும் பாலுடன் கலந்து ஒரு வாரம் குடித்து வர நெஞ்சு சளி கரையும்.

    நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும். புதினா இலை, மிளகு இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.

    சளிகட்டு நீங்க

    தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை, கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு, சளிகட்டு நீங்கும்.

    மார்புச்சளி நீங்க

    ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச்சளி குணமாகும்.

    சளி பிடித்திருக்கும் போது, பூண்டை பச்சையாக உட்கொண்டு வந்தால், சளி தொல்லையில் இருந்து விடுதலைப் பெறலாம்.

    பூண்டை தேனுடன் சேர்த்து கலந்து சாப்பிட்டால் சளி தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதிலும் 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை தேனுடன் சேர்த்து தினமும் இரண்டு முறை உட்கொண்டு வர வேண்டும்

    2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் குடித்து வர, சளி தொல்லை அகலும்.

    ஆரஞ்சு ஜூஸில் பூண்டை சேர்த்து எடுத்து வர, சளி பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும். அதற்கு 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸில் போட்டு, இரவில் படுக்கும் முன் குடித்து வர, உடலின் வெப்பநிலை அதிகரித்து, சளியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

    சளி பிடித்திருக்கும் போது பூண்டு டீ செய்து குடித்து வர, விரைவில் சளி குணமாகும். பூண்டு டீ செய்யும் போது, அத்துடன் எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி சேர்த்தும் குடிக்கலாம். இதனால் டீயின் சுவை அதிகரிப்பதோடு, உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

    2-3 பூண்டு பற்களுடன், 2 தக்காளியை நறுக்கி, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, அதில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து குடித்து வர, சளியில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும். இச்செயலை சளி நீங்கும் வரை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.

    மழைக்காலத்தில் பூண்டு சூப்பைக் குடித்து வந்தால், சளி, இருமல் போன்றவை தாக்காமல் பார்த்துக் கொள்ளலாம். அதிலும் உங்களுக்கு சளி பிடிப்பது போன்று இருந்தால், ஒரு நாளைக்கு 2 -3 முறை பூண்டு சூப் குடித்து வந்தால், சளியை அப்படியே விரட்டிவிடலாம். மேலும் பூண்டு சூப் உடலுக்கு ஆற்றலை வழங்கும்.

    இருமலை போக்கும் வீட்டு மருத்துவம்
    சிற்றிருமல்

    நீங்கள் நன்றாகக் காய்ச்சிய பசும் பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் சிறிது மிளகுத்தூளையும் சேர்த்துக் கலக்கி அருந்த இருமல் தணியும்.

    இரைப்பு இருமலுக்கு

    இஞ்சிச் சாறு, ஈர வெங்காயச் சாறு, எலுமிச்சம்பழச்சாறு இவைகளை சம அளவு எடுத்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் சாந்தியாகும். இருமல் அதிகமாயிருந்தால் ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிடலாம்.

    கோழை இருமல்

    நாய் துளசியைக் கொண்டு வந்து தினம் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால் கோழை இருமல் போன்ற குறைகளை அகற்றும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல போஷாக்கு பெறும்.

    வறட்டு இருமல்

    வறட்டு இருமல் ஏற்பட்டிருந்தால், ஆழாக்களவு பசும்பாலுடன் அரைத் தேக்கரண்டியளவு மிளகை உடைத்துப் போட்டுக் கொதி வரும் வரைக் கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி, சிறிதளவு பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கிப் படுக்கப் போகுமுன் குடித்துவிட வேண்டும். இது போல மூன்று நாள் சாப்பிட்டால் போதும், வறட்டு இருமல் குணமாகும்.

    உடல் சூட்டினால் இருமல்

    உடல் சூட்டினால் ஏற்படும் இருமலைத்தான் இந்த மருத்துவம் கண்டிக்கும். மிளகுத் தூளையும் பனை வெல்லத்தையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொண்டு ஒரு சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், இரண்டொரு நாட்களில் சூட்டு இருமல் சரியாகும்.

    எந்த வகையான இருமலுக்கும்

    பொதுவாக எந்த வகையான இருமலையும் சீரகம் குணப்படுத்திவிடும். 10 கிராம் சீரகத்தைச் சுத்தம் பார்த்து அதை இலேசாக வறுத்து எடுத்து அம்மியில் வைத்துத் தூள் செய்து அது எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு கற்கண்டைத் தூள் செய்து அத்துடன் கலந்து, ஒரு சீசாவில் வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க ஐந்தே நாளில் இருமல் குணமாகும்.

    கக்குவான் இருமலுக்கு

    கக்குவான் இருமலின்போது வெள்ளைப் பூண்டை உரித்து அதை நெய்யில் வதக்கி வைத்துக்கொண்டு சாதத்துடன் சுமார் இரண்டு கிராம் எடை வீதம் சேர்த்துக் கொடுத்து வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.

    ஜலதோஷம் காரணமாக இருமல்

    ஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தால் ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டியைக் காயவிட்டு அதில் இரண்டு தேக்கரண்டியளவு மிளகைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு வறுபட்டு சிவந்து வருகி, அதில் தீப்பொறி பறக்கும் சமயம் ஆழாக்குத் தண்ணீரை அதில் விட்டு மூடி நன்றாகக் கொதிக்க விட வேண்டும்.

    கொதித்தபின் இறக்கி அதில் பாதியை மட்டும் ஒரு டம்ளரில் இறுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்துக் காலையில் குடித்துவிட வேண்டும். மறுபகுதியை மிளகுடன் வைத்திருந்து மாலையில் குடித்துவிட வேண்டும். இருமல் குணமாகும்.


    காய்ச்சலுக்கான வீட்டு மருத்துவம்

    காய்ச்சல் குணமாக மிளகு மருந்து

    காய்ச்சல் குணமாக மிளகை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு அதை வாணலியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும்.

    மிளகு நன்கு வறுபட்டு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் இறக்கி மத்தை வைத்து முடிந்த அளவு கடைந்து மீண்டும் அடுப்பில் வைத்து அதில் இரண்டு டம்ளர் குடிநீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து வற்றி பாதியானது இறக்கி விடலாம்.

    இந்த மிளகு கஷாய நீரை ஆற வைத்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கால் டம்ளர் குடித்தால் காய்ச்சல் குணமாகும். ஒவ்வொரு முறை குடிக்கும் முன் லேசாக சுட வைத்து இளஞ்சூட்டில் குடித்தல் நல்லது. இந்த மருத்துவத்தை மொத்தமாக செய்து வைத்துக் குடிக்காமல் தினம் தினம் புதிதாக தயார் செய்து குடித்து வந்தால் நலம்.

    இரண்டே நாட்களில் காய்ச்சல் குணமாகும். மிளகின் காரம் அதிகம் இருந்தால் அதில் சிறிது சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.

    காய்ச்சல் குணமாக சீரகம், மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை மருந்து

    காய்ச்சல் குணமாக சீரகம் அரைத் தேக்கரண்டி, மிளகு அரை தேக்கரண்டி, இஞ்சித்துண்டு அரை தேக்கரண்டி அளவு எடுத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையுடன் கறிவேப்பிலை ஒரு கையளவு சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும்.

    அரைத்த கலவை மை போன்று இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த காய்ச்சல் மருந்தை ஒரு சிறிய நெல்லிக்கனி அளவு எடுத்து காலையும் மாலையும் வாயில் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீர் குடித்து வர காய்ச்சல் குணமாகும்.

    காய்ச்சல் குணமாக வல்லாரை, மிளகு, துளசி மருந்து

    வல்லாரை இலை, துளசி இலை மற்றும் மிளகு ஆகியவற்றை ஒரு கைப்பிடி வீதம் எடுத்துக் கொண்டு நன்கு அரைக்க வேண்டும். மை போல் அரைத்த பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நிழலில் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின் காய்ச்சல் உள்ளவர்களுக்கு வேளைக்கு ஒரு உருண்டை வீதம் வாயில் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை அருந்தச் செய்தால் காய்ச்சல் குணமாகும்.

    காய்ச்சல் குணமாக துளசி, இஞ்சி மருந்து

    காய்ச்சல் குணமாக துளசி இலை சாறும், இஞ்சி சாறும் சரி பங்கில் கலந்து வேளைக்கு கால் டம்ளர் வீதம் குடித்து வர காய்ச்சல் குணமாகும்.

    காய்ச்சல் குணமாக பார்லி அரிசி, பால் மருந்து

    காய்ச்சல் குணமாக பார்லி அரிசி வாங்கி சாதம் வைப்பது போல் தண்ணீருக்கு பதில் பாலில் வேக வைத்து கொடுக்கலாம். காய்ச்சல் அடிக்கும் போது நாவில் ருசி அவ்வளவாக இருக்காது. சாப்பாடும் சாப்பிட தோன்றாது. அந்த மாதிரி சமயங்களில் இந்த பார்லி பால் சாதம் கை குடுக்கும்.

    காய்ச்சல் – சாதாரண ஜூரத்திற்கு

    இருபது கிராம் மிளகை எடுத்து சட்டியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு அனைத்தும் நன்கு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் மத்தைக் கொண்டு கடைந்துவிட்டு அதில் 200 மில்லி நீர் விட்டு, 100 மில்லியளவுக்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை மாலை கொடுத்து வர வேண்டும். இரண்டே நாட்களில் குணமாகிவிடும்.

    காய்ச்சல் குணமாக

    சீரகம் அரைத் தேக்கரண்டி, மிளகு அரை தேக்கரண்டி, இஞ்சித்துண்டு அரை தேக்கரண்டி அளவு எடுத்து அம்மியில் வைத்து, சுத்தம் பார்த்து கறிவேப்பிலையில் கைப்பிடியளவில் பாதியளவு எடுத்து இத்துடன் வைத்து மை போல அரைத்து, இரண்டு கழற்சிக்காயளவு எடுத்து வாயில் போட்டு தண்ணீணீர் குடிக்க வேண்டும். காலையிலும் மாலையிலும் இவ்விதம் சாப்பிட்டு வந்தால் எந்த விதமான காய்ச்சலும் குணமாகும்.

    காய்ச்சல்

    காய்ச்சல் என்ற நிலை ஆரம்பித்தவுடனேயே மிளகுக் கஷாயம் போட்டுக் கொடுத்துவிட்டால் எந்த வகையான காய்ச்சலும் குணமாகும். ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டி காய்ந்தவுடன் மூன்று தேக்கரண்டியளவு மிளகை எடுத்துச் சட்டியில் போட்டு வறுக்க வேண்டும். மிளகு நன்றாக வறுபட்டு சிவந்து கருகி அதில் தீப்பெ¡றி பறக்கும் வரை வறுத்து அதில் இரண்டு ஆழாக்களவு தண்ணீரை விட்டு, நன்றாகக் கொதிக்க விட வேண்டும்.

    கொதித்தபின் இறக்கி ஆறவிட்டு தாங்கக்கூடிய அளவு வந்ததும் இறுத்து கொஞ்சம் சர்க்கரைச் சேர்த்துக் குடித்துவிட வேண்டும். இதில் பாதியளவு கஷாயத்தை வைத்துக்கொண்டு மறுபடியும் கொதிக்க வைத்து மறுவேளைக்குக் குடிக்க வேண்டும். இந்த விதமாக காலை மட்டும் மூன்று நாளைக்கு சாப்பிட்டு வந்தால் எந்தக் காய்ச்சலும் குணமாகும்.

    எந்த விதமான காய்ச்சலும் குணமாக

    வல்லாரை இலையுடன், மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு சுடுநீரில் சாப்பிட்டால் காய்ச்சல் என்ன காரணத்தால் ஏற்பட்டிருந்தாலும் சரியாகும்.

    குளிர்காய்ச்சல்

    நடுங்க வைக்கும் குளிருடன் காய்ச்சலும் இருக்கும்போது, சிறிது மிளகைத் தட்டிப்போட்டு, அத்துடன் கொஞ்சம் பனை வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கி கொடுத்து வர குணமாகும்.

    ஒன்றோடொன்று பேசிக்கொள்ளும் மனித உடல் உறுப்புகள்

    மனித பிறப்பில் எத்தனையோ அதிசயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதில் ஒன்றுதான் மனித உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள் நலம் விசாரித்துக்கொள்ளும் என்பதாகும். இதனை நாம் அறிவியல் பூர்வமாக அறிந்துகொள்ள முடியாவிட்டாலும் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் படைத்துள்ள படைப்புகள் வாயிலாக இந்த அரிய செயல்களை உணர்ந்து வருகிறோம். அந்த வகையில் சென்னை ..டி.யின் உயிரியல் துறை பிரிவின் ஆராய்ச்சியாளர் மணிகண்ட நாராயணன், மல்ட்டிசென்ஸ் என்ற தலைப்பில் ஒரு மருத்துவ ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.


    அதில் மனித உடலுறுப்புகள் ஒன்றோடொன்று சமிக்ஞைகள் வாயிலாக பேசிக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக வயிற்றில் பசி ஏற்படும்போது, இந்த பசியை ஒரு வகையான ஜீன் மூலம் மூளைக்கு தூண்டப்பட்டு உணவு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மூளையின் இந்த தூண்டுதலால் வயிறு நிரம்புகிறது. இதனால் மூளை மற்றும் வயிறு ஒன்றோடொன்று ஜீன் மூலம் பேசிக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உடலை பொறுத்தவரை சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜீன்கள் உள்ளன. இந்த ஜீன்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வேலை செய்வதில்லை.

    அது ஒவ்வொரு உறுப்பின் தேவைகளை அறிந்து தங்களது பணிகளை செய்கின்றன. இதன்மூலம் அனைத்து உடல் உறுப்புகளும் வேண்டிய சக்தியை பெற்று மனித இயக்கத்திற்கு உதவி செய்கிறது. ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கும் தேவையான சமிக்ஞைகளை அனுப்பும் பொறுப்பு புரோட்டின்களுக்கு உண்டு. இந்த புரோட்டின்கள் மூலம் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் தங்கள் தகவல் பரிமாற்றங்களை செய்து கொள்கின்றன. மேலும், மனித செயல்பாடுகளில் முக்கியத்துவம் பெற்ற ஜீன்கள் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் பாலமாக செயல்பட்டு முக்கிய தகவல் பரிமாற்றங்களை செய்கிறது. இந்த பணி மனித உடல் முழுமைக்கும் ஜீன்கள் திசுக்கள் மூலம் மேற்கொள்வதால் மனித உடல் ஆரோக்கியமாக அமைய வழிவகுக்கிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    இதுதவிர, தகவல் பரிமாற்றத்திற்கு மனித உடலில் உள்ள மூலக்கூறு கட்டமைப்புகளும் உதவி செய்வதாக தெரியவந்துள்ளது. மனித உடலின் உள்ளுறுப்புகளில் இந்த தகவல் தொடர்பு நெட்வொர்க் சிறப்பாக செயலாற்றுகிறது. மேலும், தட்பவெப்பம், மனித உடலுக்கு தேவையான ஆற்றல் உருவாக்கம் உள்ளிட்ட பணிகளையும் இந்த மூலக்கூறு கட்டமைப்புகள் ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கும் தக்கவாறு செய்துவருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலமே மனித உடல் முழுமையும் நலமாகவும், வளமாகவும் இருப்பதாக இந்த மருத்துவ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    இதுதவிர ஆராய்ச்சியாளர்கள் டாக்டர்கள் தருண்குமார், சங்கமித்ரா, பேராசிரியர் பாலராமன் ரவீந்திரன், ராமநாதன், சேதுராமன் ஆகியோரும் மனித உடலில் மூலக்கூறுகளின் கட்டமைப்புகள் ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கும் தகவல் தொடர்பாளர்களாக செயல்படுவதாக கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் மனித உடல் உறுப்புகளின் வளர்ச்சியும் அமைவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் நன்றாக இருந்தால்தான் மனிதன் ஆரோக்கியமாக வாழமுடியும். இதற்காகவே ஒவ்வொரு உடல் உறுப்புகளும் தங்களுக்குள்ளே சமிக்ஞைகள் வாயிலாக பேசி நோயற்ற வாழ்வுக்கு வழிகாட்டியாக செயல்படுகிறது. இதை உணர்ந்து மனிதர்களாகிய நாமும் உடலை சுத்தமாக, ஆரோக்கியமாக பேணுவோம், நலம்பெறுவோம் என்பதுதான் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

    அலுமினியப் பாத்திர சமையலில் உள்ள ஆபத்துகள்

    தமிழ் மக்களின் தேசியத் திருநாட்களில் ஒன்றாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் இயற்கையைப் போற்றுகின்ற ஒரு பண்பாட்டுப் பெருவிழாவாகும். தொன்றுதொட்டு இவ்விழாவில் இயற்கைக்கு இசைவான மண்பானைகளிலேயே பொங்கல் இடம்பெற்று வந்துள்ளது.ஆனால், மண்பானைகளின் இடத்தை இப்போது அலுமினியப் பானைகள் ஆக்கிரமித்து வருகின்றன. அலுமினியப் பானைகள் இயற்கையைப் போற்றுகின்ற ஒரு விழாவுக்குப் பொருத்தமற்றது என்பதோடு, உடல் நலத்துக்குக் கேடானதாகவும் உள்ளன.

    தமிழர் பண்பாடும் உடல் நலமும் பங்கமில்லாத வாழ்வுபெறப் பொங்கலை மண்பானையில் கொண்டாடுவோம்.
    அலுமினியம் மிகவும் இலேசானது. உலோகம் ஆகையால் இலகுவில் வெப்பத்தைக் கடத்த வல்லது. இதனால், சமையலை விரைந்து முடிக்க வல்லது. நெளிந்து வளைந்தாலும் உடைந்துவிடாது, ஒப்பீட்டளவில் விலை மலிவானது. இவை போன்ற காரணங்களால் சமையல் அறைகளில் பிரதான பாத்திரங்களாக அலுமினியப் பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன.

    அலுமினியப் பாத்திரங்களில் உணவு சமைக்கும்போது அலுமினியம் உணவுடன் சேர்வதைத் தவிர்க்கும் பொருட்டுப் பாத்திரத்தின் உட்பகுதியில் அலுமினியம் ஒட்சைட்டுப் படலம் இடப்படுகிறது.
    அலுமினியப் பாத்திரங்களைத் தேய்த்துச் சுத்தம் செய்யும்போது பாதுகாப்புப்படலம் தேய்வடைந்து உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடுகிறது.

    மேலும்,சமைக்கப்படும் உணவுப் பொருளின் அமிலகார இயல்பு, சேர்க்கப்படும் உப்பு சமையல் வெப்பநிலை ஆகியனவற்றைப் பொறுத்து அலுமினியம் கரைந்து உணவுடன் கலப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. உடலுடன் சேரும் அலுமினியம் மூளை நரம்புகளைப் பாதிப்பதுடன் ஏற்கனவே சிறுநீரக நோயுடையவர்களின் சிறுநீரகங்களை மேலும் பாதிப்படையவும் செய்கிறது என மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

    மட்பாத்திரங்கள் அவற்றின் மேற்பரப்பில் இயற்கையாகவே உள்ள நுண்துளைகள் ஊடாக வெப்பத்தைப் பரவி உணவைச் சீராக வேகவைக்கிறது. மெதுவாகவே சூடுபடுத்துவதால் உணவில் போசணைப்பொருட்களின் அழிவு தவிர்க்கப்படுகிறது. மண் கார இயல்பு கொண்டதால் உணவில் அமிலத் தன்மையை சமன் செய்கிறது.
    சமைக்கும்போது மண்ணிலிருந்து கனியுப்புகள் உணவிற்கு விடுவிக்கப்படுவதால் உணவு கூடுதல் போசணைப்பெறுமானம் பெறுகிறது. மேலும் உணவின் வாசனையுடன் மண்ணின் வாசனையும் சேர்ந்து உணவுக்குக் கூடுதல் சுவையையும் தருகிறது.

    எதனையுமே அவசரகதியில் செய்துவிடத் துடிக்கும் நாம் உடல் ஆரோக்கியத்தைப் பேண வேண்டிய சமையலையும் அவ்வாறே விரைந்து முடிக்கத் தலைப்பட்டு உலோகப் பாத்திரங்களை நாடியுள்ளோம். இதன் விளைவாக நோயின் வாய்ப்பட்டும் வருகிறோம். மட்பாண்டங்களுக்கு முழுமையாகத் திரும்புதல் இயலாததாக இருக்கலாம். எனினும் தமிழ் மக்களின் இயற்கையைப் போற்றும் தைப்பொங்கல் திருநாளிலாவது மண்பானைகளில் பொங்கல் இடுவோம். இது நலிவடைந்துள்ள மட்பாண்டக் கைவினைஞர்களது வாழ்வு வளம்பெறவும் உதவும்.

    – பொ.ஐங்கரநேசன்

             

     குதிரைவாலி(அல்லது)புல்லுச்சாமை, தினை



    சிறுதானியங்களை நோக்கி, சமூகம் திரும்பி கொண்டிருக்கிறது.. அந்தவகையில், அரிசி மற்றும் கோதுமை உணவுகளுடன் ஒப்பிடுகையில் அதிக சத்துக்களை கொண்டது குதிரைவாலி.. கோதுமையில் உள்ள நார்ச்சத்தின் அளவை விட 6 மடங்கு நார்ச்சத்து இந்த குதிரைவாலி அரிசியில் இருக்கிறது என்றால் பாருங்களேன். குதிரைவாலி அரிசியில் வைட்டமின் A, B, C, D, K, இரும்புச்சத்துக்கள், மெக்னீஷியம், காப்பர் போன்ற சத்துகள் நிறைந்திருக்கின்றன.. உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், பி கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், தயமின், ரிபோஃப்ளேவின் என ஏகப்பட்ட சத்துக்கள் அடங்கி உள்ளன.
    இத்தானியத்தில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளது. இந்தப் புன்செய்ப் பயிரை 90 நாட்களில் மானாவாரியாகப் பயிரிட்டு அறுவடை செய்யலாம்

    இது மூதாதையர் காலத்திலிருந்து உணவாகப்பயன்படுத்தப்பட்டு வரப்படுகிது, ஆனால் இதன் பூர்வீகம் எது என்று தெரியவில்லை. நெல் போன்ற பயிர்கள் விளையாத நிலங்களில் இவை அதிகமாகப்பயிரிடப்படுகிறது. இதன் அரிசியை வேகவைத்தும், தண்ணீரில் ஊறவைத்தும் சாப்பிடும் பழக்கம் உள்ளது. இதிலிருந்து கிடைக்கும் விதையை ஊறவைத்து பியர் செய்கிறார்கள். தமிழர்களின் உணவில் இப்பயிர் மிக முக்கிய பங்கு வகித்தது[4]


    மருத்துவப்
    பயன்கள்[

    உடலைச் சீராக வைக்க உதவுகிறது.

    சர்க்கரை அளவினை குறைக்க வல்லது.

    ஆண்டி ஆக்ஸிடன்ட் ஆக வேலை செய்கிறது.


    மூலிகை குண அட்டவணை


    1. சீந்தில் - காயசித்தி

    2. மருள் - விரணாரி

    3. காஞ்சொறி - கபாரி

    4. பெருங்காஞ்சொறியு மது

    5. ஆடாதோடை - சுராரி

    6. கருங்காலி - குஷ்டாரி

    7. வெண் கருங்காலி - நாகமணி பந்தனி

    8. வேம்பு - பித்தாரி

    9. பெருவேம்பு - வாதாரி

    10. நிலவேம்பு - சுராரிசூதகநாசிவாயுகாரி

    11. சர்க்கரை வேம்பு - காயசித்தி

    12. கோரைக்கிழங்கு - தோஷாரி

    13. பற்பாடகம் - சக்ஷாப்தம்

    14. வெட்டிவேர் - தாபாரி

    15. விலாமிச்சம்வேர் - பித்தாரி

    16. பேய்ப்புடல் - பித்தாரி

    17. வட்டத்திரிப்பி - பேதி மர்த்தனி

    18. குமிள் - சன்னி மர்த்தனி

    19. பெருங்குமிழ் - சுர மர்த்தனி

    20. கண்டங்கத்தரி - சுவாச மர்த்தனி

    21. சிறுவழுதலை - சுவாசகாச மர்த்தனி

    22. வழுதலை - சிலேட்டும மர்த்தனி

    23. நெரிஞ்சில் - மூத்திரகிரிச்ச மர்த்தனி

    24. வில்வம் - சத்தி மர்த்தனி

    25. முன்னை - மேகமர்த்தனி

    26. கழற்கொடி - விரைவாத மர்த்தனி

    27. வெண்கழற் கொடி - குன்ம மர்த்தனி

    28. கொட்டைக்கரந்தை - வாக்குதாரி

    29. நாறுங்கரந்தை - காயசித்தி

    30. நன்னாரி - தேகசித்தி

    31. பேய்ப்பீர்க்கு - கெந்தகத்தைலம்

    32. மற்றைப் பீர்க்கு - வாதசமனம்

    33. பழுப்பாகல் - லிங்கபந்தனி

    34. முள் வெள்ளரி - கிரிச்சாரி

    35. நிலவுகாய் - சத்திறக்கி

    36. வெண் கிலுகிலுப்பை - சூதபற்பி

    37. கோவை - ஜலக் கழிச்சலாற்றி

    38. தீங்கோவை - பரவிந்து பந்தனி

    39. கொன்றை - கிருமி மர்த்தனி

    40. எலிச்செவி - நீர்ச்சுருங்கி

    41. சதுரக்கள்ளி - பாஷாண மைனி

    42. சிவதை - விரோசனி

    43. பிரசூதிகை - வாயுஹாரி

    44. நாயுருவி - மந்தாரி , குன்மகாரி

    45. மேற்படி லவணம் - சருவ வுபரச மர்த்தனி மேற்படி கட்டுமேற்படி களங்கு

    46. செஞ்சதுரக்கள்ளி - தங்க தாம்பரி

    47. சாறடை - திமிர்வாத மர்த்தனி

    48. மூக்குறட்டை - பீனிச மர்த்தனி

    49. செம்முள்ளி - சிலேட்டும மர்த்தனி

    50. சித்தாமுட்டி - சுர மர்த்தனிசூத பந்தனி

    51. பேராமுட்டி - சர்வ சுர மர்த்தனி

    52. பாளை - சுளுக்குப் போக்கி

    53. திருநாமப்பாலை - பித்தாரி

    54. குட சப்பாலை - அதிசார மர்த்தனி

    55. வெட்பாலை - அயவங்கிசூத சிந்தூரி

    56. பழப்பாலை - பித்தாரி

    57. முதியார் கூந்தல் - காரீய பற்பி

    58. வெள்ளையாமணக்கு - வாதம் போக்கி

    59. செவ்வாமணக்கு - காதிலிங்க பந்தனி

    60. மாதளை - அயமுருக்கி

    61. கொம்மட்டி மாதளை - சத்தி போக்கி

    62. விளா - பித்தம் போக்கி

    63. குட்டிவிளா - தாக மடக்கி

    64. சர்க்கரை - தாகம் போக்கிமயக்கம் போக்கி

    65. கரும்பு - கல்லடைப்புப் போக்கி

    66. வெண்கரும்பு - க்ஷயம் போக்கி

    67. அமுக்கிறா - க்ஷயம் போக்கிவாயுபோக்கிவங்க நாக சிந்தூரி

    68. பிரமி - வீக்கம் போக்கிவிரோசனிவாத மாற்றி

    69. பூனைக்காஞ்சொறி - சிலேட்டும மர்த்தனி

    70. பூனைக்காலிப் பருப்பு - தம்பனிசுக்கில பந்தனி

    71. சிறுபூனைக்காலி - நீரிறக்கிநீரிளக்கி

    72. மந்தாரை - பாஷாண மைனி

    73. கொக்கிறகு - சாதிலிங்க மைனி

    74. அழிஞ்சில் - விஷ மர்த்தனி

    75. மேற்படி மூல தைலம் - விரோசனிலிங்க பந்தனி

    76. பாகல் - பாஷாண தோஷ மர்த்தனி

    77. காட்டத்தி - கிராணி நீக்கிகிரகிணி நீக்கி

    78. சரளம் - தங்க நீற்றி

    79. முள்முள்ளிக்கீரை - சர்வசரக்கு கட்டொடத்திதங்கச்சுன்னி

    80. முசுமுசுக்கை - க்ஷயமர்த்தனிபவழ பற்பி

    81. புன்னை - கிரந்தி போக்கி

    82. கீழாநெல்லி - காமாலை போக்கிபித்தம் போக்கி

    83. கருங்கொள் - உருக்கினமாதல்

    84. கூகைநீறு - உஷ்ணம் போக்கி

    85. தேற்று - சலமலினாரி

    86. தகரை - மாந்தம் போக்கி

    87. ஊமத்தை - சூதவெண்ணெ யிறுக்கி

    88. சேவகனார் கிழங்கு - கடிகை போக்கி

    89. கரிசாலை - பாண்டு மர்த்தனிக்ஷய மர்த்தனிவசீகரி

    90. பொற்றலை - காயசித்திசிந்துராதி

    91. எருக்கு - சன்னி போக்கிக்ஷீரம்...ணம் போக்கி

    92. வெள்ளெருக்கு - சாரங் கட்டி

    93. மணத்தக்காளி - தணலாற்றி

    94. கருந்தக்காளி - கெந்தி கட்டி

    95. குன்றி மணி - காரங்கட்டி

    96. பெருமுள்ளங்கி - கிரிச்சரம் போக்கி

    97. சிறுமுள்ளங்கி - கெந்தி கட்டி

    98. ஆற்றுமுள்ளங்கி - சிலேட்டுமம் போக்கி

    99. சுவர் முள்ளங்கி - நாக பற்பிஉப்புக் கட்டி

    100. முருங்கை - கண் விரணம் போக்கி

    101. மேற்படி பூ - விந்து கட்டிதாம்பர சுத்தி

    102. மேற்படி மூலம் - கட்டுடாத்தி

    103. மேற்படி பிசின் - விந்து கட்டி

    104. மேற்படி பத்திரி - மலம் போக்கி

    105. ஈர்க்கு - வாயு மர்த்தனி

    106. மேற்படி வேர்ப்பட்டை - வங்க பற்பி

    107. புனல்முருங்கை - நாகங்கட்டி

    108. துளசி - தோஷம் போக்கி

    109. கருந்துளசி - செந்தூரத் தாதி

    110. நீர்த்திப்பிலி - சன்னி போக்கி

    111. வெள்ளுள்ளி - வாதம் போக்கிதேக வலுவிமூலம் போக்கி

    112. ஈருள்ளி - வேகம் போக்கிபித்த நாசிசீதளி.

    113. நொச்சில் - கடுப்புப் போக்கி

    114. மேற்படி மூல தைலம் - லிங்க பந்தனி

    115. மேற்படி பத்திரி - நீர் மர்த்தனி

    116. கருநொச்சி - கறப்பான் போக்கிவங்க பற்பி

    117. பேயன் வாழை - காயசித்தி

    118. மேற்படி கிழங்கு - வழலை போக்கி

    119. மேற்படி பூ - சிந்தூரத்தாதிவசிகரி

    120. மேற்படி பத்திரி - உபரச பந்தனி

    121. மேற்படி தண்டு - சர்வவிஷநாசி

    122. மேற்படி பனி - உபரசாதி பவுதிக பந்தனி

    123. மேற்படி லவணம் - சர்வபவுதிக பந்தனி

    124. மேற்படி பழம் - ஜீரணகாரிமலம் போக்கி

    125. மேற்படி காய் - குற்றம் போக்கி

    126. மேற்படி பூ - சுக்கில பந்திசுரோணித பந்திமல பந்தி

    127. மேற்படி மூலம் - மதநாசி

    128. இதர வாழைப்பூ - பெரும்பாடு போக்கி

    129. வாழை - பெரும்பாடு போக்கி

    130. வாழைக்கிழங்கு - உழலை போக்கி

    131. மேற்படிகளின் மூல சலம் - சர்வ வுபசர பந்தனி

    132. தென்னை - மருக்ஷ போக்கி

    133. மேற்படி பூ - உபரச பந்தனிமலபந்தனி சுரோணித பந்தனி உஷ்ண மர்த்தனி

    134. மேற்படி கேரம் - காயசித்தி

    135. மேற்படி பழம் - ஈடு முறித்தல்அறிவு விருத்தி

    136. பனைக்கிழங்கு - வறுத்தி

    137. பனை - வறுத்தி

    138. மேற்படி பூ - கப நாசி

    139. மேற்படி குருத்து - க்ஷயம் போக்கி

    140. மேற்படி மூலரசம் - சூத பற்பி

    141. மேற்படி கிழங்கு - வறுப்பில் பற்பி

    142. நிலப்பனை - பாலையாம்க்ஷயம்போக்கி கரண ரோக மர்த்தனி

    143. வெள்ளைக்காக்கணான் - விரோசனிதங்கச் சுன்னி

    144. முடக்கொத்தான் - வாதம் போக்கி

    145. கசம்பை - தினவுசுரம் போக்கி

    146. சங்கங்குப்பி - குஷ்டம் போக்கிகறப்பான் போக்கி

    147. பொரும்பில் - விரணம் போக்கி

    148. கறுப்பறுகு - காசம் போக்கி

    149. வெள்ளறுகு - மேகம் நீக்கிசுரம் போக்கி

    150. பவளவறுகு - சுவாசம் போக்கி

    151. புளியாரை - காயசித்திபித்த மர்த்தனிலவண சிந்தூரிஅப்பிரேக சிந்தூரி

    152. தாமரை - கண்குளிர்ச்சி

    153. தாமரை வளையம் - நஞ்சு முறிச்சி

    154. தாமரை மணி - வசிகரி

    155. மேற்படி தாது - மேகம் போக்கி

    156. மேற்படி கிழங்கு - ஆண்மை உண்டாக்கிசூத பந்தனி

    157. செங்கழுநீர் - திரிதோஷம் போக்கிவசீகரி

    158. அரக்காம்பல் - சிவேட்டுமம் போக்கி

    159. கற்றாமரை - லோகச் செம்பி

    160. வெண்டாமரை - சூத பந்தனி

    161. குளிரி - உப்புக்கட்டி

    162. மல்லிகை - எண்ணெய் போக்கி

    163. கொடிமல்லிகை - தார பற்பி

    164. ஆத்திமல்லிகை - மேனி அழகி

    165. முல்லை - சோபந் தீரி

    166. முல்லைப்பேதம் - முத்தோஷம் போக்கி

    167. நந்தியாவட்டம் - கண்ணுக்காம்

    168. இருவாட்சி - ரத்த பித்தம் போக்கி

    169. செண்பகம் - மருக்கள் போக்கி, (பருக்கள் போக்கி)

    170. சிறு செண்பகம் - பித்தம் போக்கி

    171. செவ்வந்தி - சித்தப்பிரமை போக்கி

    172. குங்குமவந்தி - கோழை போக்கி

    173. எலுமிச்சை - பித்தம் போக்கி

    174. சித்தீஞ்சில் - சிரதோஷம் போம்

    175. பேரீஞ்சில் - சுரங்கள் போம்

    176. முந்திரிப்பழம் - தோஷம் போக்கி

    177. புளிமுந்திரி - திரிதோஷம் போக்கி

    178. இலந்தை - கடுப்புப் போக்கி

    179. இலுப்பை - விரணம் போக்கி

    180. மலையிலுப்பை - வாதம் போக்கி

    181. பலாசு - பேதி யாற்றி

    182. முட்பலாசு - அரிதார நீறு

    183. ஆலுக்கு - புழுக்கள் போம்

    184. அரசுக்கு - புத்தி வர்த்தினி

    185. இச்சில் - குஷ்டம் போக்கி

    186. நாவல் - விரணம் போக்கிவங்க பற்பி

    187. அத்தி - பெரும்பாடு போக்கிஉஷ்ண சமனி

    188. பேயத்தி - தம்பனை

    189. பூவரசு - சகல விஷ குஷ்டம் போக்கி

    190. அலரி - நடுக்கல் போக்கி

    191. வன்னி - அயத் தாம்பரிலவண சிந்தூரி

    192. நீர்க்கடம்பு - நாக பந்தனம்

    193. கடம்பு - பாஷாண பந்தனம்

    194. வெண் கடம்பு - சூதபந்தனம்

    195. வாகை - விரண நீக்கம்

    196. கருவாகை - கெந்தி பந்தனம்

    197. வேங்கை - கடி நீக்கம்

    198. ஒட்டை - புதரி நீக்கம்

    199. இலவு - அதிசார நீக்கம்

    200. இலவம் பிசின் - சுக்கிலங் கட்டும்

    201. மாமரம் - வாந்தி நிற்கும்

    202. பொன்னாங்கண்ணி - கண்ணொளிஉஷ்ணசமனி

    203. மாவிலிங்கை - சன்னி நீக்கம்

    204. லோத்திரம் - கண்ணுக்கினிது

    205. வெள்ளிலோத்திரம் - துரிசு குரு

    206. வஞ்சிக்கு - இடுப்புறுதி

    207. ஆற்று மருது - வழலை போக்கி

    208. மாட்டுச் செவி மருது - வெள்வங்க பற்பி

    209. குதிரைச் செவி மருது - கருவங்க பற்பி

    210. இமிற் கிழங்கு - இகுளை நீக்கி

    211. பாலிறில் - பாஷாணங்கட்டும்

    212. தேட்கடை - சிரங்கு நீக்கி

    213. நெய்ச்சிட்டி - சீதசுரம் போக்கிகுன்ம நாசி

    214. சிறுவிடுகொள்ளு - தண்­ர் கட்டு

    215. பெருவிடு கொள்ளு - சாரநாசி

    216. தண்­ர் மிட்டான் - சிங்கி செம்பு

    217. காகோளி - சலங்கணீக்கி

    218. சீகக்ஷகாகோளி - திறமுண்டாக்கி

    219. சீவகம் - கல்லுப்புக் கட்டு

    220. மயிடவகம் - கெவுரிக் கட்டு

    221. பேராமல்லி - சுரங்கள் போக்கி

    222. சித்தாமல்லி - சலவை போக்கி

    223. சிறுபுள்ளடி - கெணங்கள் போம்

    224. அஷ்டிமதுகம் - பிரமியங்கள் போம்

    225. பேர்சாரிபாதி - சூத பந்தனம்

    226. பதுமுகம் - பாலையாம்

    227. பிரபுணரிகம் - அப்பிரக சத்து

    228. மேதை - மகாதோஷம் போம்

    229. மாமேதை - துஷ்டசுரம் போம்

    230. தேக்கு - சிரங்கு நீக்கி

    231. ஞாழல் - தினவு போக்கி

    232. பால்விழி - அய வங்கம்

    233. பெருங்குறும்பை - பிறிவுக்காம்

    234. குறுஞ்சூலி - அண்டமெழுகு

    235. நறுமுருங்கை - நாகரச பந்தனம்

    236. பெருங்குறிஞ்சி - கடுப்புப்போம்

    237. ஆயில் - வாதம் போம்

    238. புங்கு - சூலை போம்

    239. மேற்படி பால் - ரண மாற்றி

    240. வலம்புரி - குளிதோஷம் போம்

    241. மருக்காரை - நசியத்துக்காம்

    242. பாற்பை - சவ்வீரங் கட்டும்

    243. இருள் - குடாரம் போக்கி

    244. பாலிருள் - சூத பந்தனம்

    245. இருள் வீடு - காந்த சத்து

    246. களாவிழுது - வெடியுப்பு கட்டு

    247. மராமரம் - சூடங் கட்டு

    248. குமுகு - பற்குறுதி

    249. தழுதாழை - வாதம் போக்கி

    250. தெற்கை - கிரிச்சம் போக்கிசுளுக்கு போக்கி

    251. ஆதண்டை - பீனிசம் போக்கிசிரநீர் போக்கி

    252. குழலாதண்டை - சரக்கெல்லாம் கட்டும்

    253. செவ்வாதண்டை - சூதவங்கி

    254. நாணல் - துன் மாங்கிஷம் போக்கி

    255. திமிசு - சாரங் கட்டு

    256. பூசபத்திரி - வசீகரி

    257. விடத்தேற்கு - சூதபற்பி

    258. நெட்டி - நீரைக் கட்டும்

    259. நளந்துவயம் - நாக செந்தூரி

    260. பெருவாழை - ஈய செந்தூரி

    261. உத்தாமணி - மாந்தம் போக்கிபவள பற்பிஅயசிந்தூரி

    262. பிராமுட்டி - சாரஞ் சாம்

    263. குறிஞ்சி - மயிலிறகு சத்தாம்

    264. தந்தசகுரி - இரும்புருக்கி

    265. செப்பு நெருஞ்சில் - சிறுநீர் உஷ்ணம் போகும்

    266. கணம்பு - சிலைமெழுகாம்

    267. கல்புகு வெள்ளி - காயசித்தி

    268. முளிகாக்கு - கல்லுப்புக் கட்டு

    269. அசோகுக்கு - குன்மம் போகும்

    270. வாலுகம் - கடிகள் போகும்

    271. முத்தக்காசு - சுரதோஷம் போம்

    272. அதிங்கு - கைகால் நோய் நீக்கம்

    273. வெள்ள நாகணத்தி - விரோசனி

    274. நேர்வாளம் - பேதிபரநாசி

    275. குறட்டை - கோழை பீனிஸம் போம்

    276. கஞ்சாங்கோரை - குளிர் போம்

    277. மருவகம் - தாகம் போம்

    278. இங்குணம் - லிங்க மிறுகும்

    279. இடுகாட்டுத் துளசி - இரைப்பு நீக்கி

    280. திப்பிலி - தாது விருத்தி

    281. சாசி - பாம்பு பக்ஷி கடி போக்கி

    282. அனிச்சை - சொறி போக்கி

    283. தாழை - சூத சுத்தி

    284. குப்பை மேனி - உப்புக்கட்டு

    285. செருப்படி - சிலேட்டுமம் போம்மேகம் போம்

    286. ஆடுதின்னாப்பாளை - நாக பந்தனம்புழுக்கொல்லி

    287. வெற்றிலை - நாகநீற்றிஜீர்ணகாரிசூத சுத்தி

    288. ஆகாசகருடன் - சூத பந்தனம்அண்ட வெண்கரு

    289. ரத்தமண்டலி - இரும்புருக்கிபூரங் கட்டி

    290. காட்டாமணக்கு - அயலோக வங்கி

    291. மருதணி - அயச்செம்பிகெந்தி கட்டி

    292. கஞ்சா - யோகி

    293. நிலவாகை - புழுக்கள் போக்கி

    294. கட்டுக்கொடி - உப்புக்கட்டுசூதவெண்ணெய்க் கட்டு

    295. புரண்டை - வைரநீற்றிசூதவெண்ணெய் பந்தனி

    296. வல்லாரை - உடலந்தேற்றிகாமநாசி

    297. மயூரசிகை - நாக பந்தனம்

    298. தாம்பரசிகை - சூத பந்தனம்

    299. கானல்மா - பித்தளை நீறும்

    300. தில்லை - பாஷாணஞ் சாம்

    301. மலைமா - குடவ நீறும்

    302. கப்பட்டி - குதிரைப் பல் மெழுகு

    303. புளிச்ச சிறுக்கீரை - சூத பந்தனம்தாம்பர சிந்தூரி

    304. நீரரளி - அயச் செம்பி

    305. செவ்வறளி - தங்கச் செம்பி

    306. சத்திச் சாரணை - காரீய பற்பிவாத நாசி

    307. தும்பை - சுரங்கள் போக்கிசில் விஷம் போக்கிசிரோரோகம் போக்கி

    308. பேய்த்தும்பை - தோஷம் போக்கி

    309. பேய்க்கொள்ளு - சகல சத்துமாம்

    310. பேய்க்கடலை - கெந்தி தைலம்

    311. பேய்த்துவரை - தாளக தைலம்

    312. அழுகண்ணி - சூத பந்தனம்

    313. தொழுகண்ணி - துணித்த சதை கூடும்

    314. முடவாட்டுக்கால் - சவ்வீரங் கட்டும்

    315. நாகசிங்கி - நாக பந்தனம்

    316. இருப்பவல் - மாகட்டி

    317. பொன்மத்தை - சூத பந்தனம்

    318. கருமத்தை - கெந்தி பந்தனம்

    319. நச்சுப் பூலா - செந்தூர குருவாம்

    320. நான் முகப்புல் - ஈய பற்பி

    321. காவட்டம்புல் - மந்தம் போக்கி

    322. சுனைமரம் - சூத பந்தனம்

    323. எருமைக்கனைச்சான் - தேகசித்தி

    324. ரோமவிருட்சி - சகலசித்தி

    325. செந்தாடுபாவை - தங்கச் செம்பு

    326. முண்டிளி - சித்து

    327. சாயாமரம் - மாவேதை

    328. கருநெல்லி - சகலசித்தி

    329. கல்லாரை - சூதங் கல்லாம்

    330. கல்ச்செம்பு - சூத குரு

    331. கல்லறளி - தங்கச் செம்பு

    332. மூவிலைக்குருத்து - சூத மணி

    333. முத்துருக்கன்செவி - சூத பந்தனி

    334. செந்திராய் - சூதச் செம்பு

    335. செம்பல்லி - சூதங் கட்டும்

    336. செவ்வகத்தி - சாதிலிங்க மைனி

    337. நிலச்சோதிக்கு - கண்டர் வெளுப்பு

    338. நிலக்கடம்பு - அப்பிரகஞ் சத்து

    339. பிறங்கைநாரிக்கு - கெவுரிக் கட்டு

    340. பூதணக்கு - மால்தேவிக் கட்டு

    341. செருந்தி - பாஷாணங் கட்டும்

    342. கொத்தான் - பித்தம் போக்கி

    343. வறச்சுண்டி - நீரைக் கட்டும்

    344. ஆமிரம் - வெடியுப்புக் கட்டும்

    345. கட்டுமா - தாபம் போக்கும்

    346. அம்பளங்காய் - கல்லுப்புக் கட்டு

    347. புனம்பிளி - சாரங் கட்டும்

    348. இதளை - சூலை போம்

    349. தும்பி - சூத பற்பி

    350. சிறுதும்பி - சோகம் தீர்க்கும்

    351. சோனகப்பூ - பாதரஸமாம்

    352. திராய் - சன்னி போக்கும்

    353. பேய்த்துமிட்டி - பாஷாணங்கட்டும்

    354. பெருங்கம்பி - வெள்ளீய பற்பி

    355. மரிதுடாரி - மால்தேவி பற்பி

    356. (மறிதொடரி - மால்தேவி பற்பி)

    357. தேவதாளி - சூத பற்பி

    358. தாளி - இரைப்பு இருமல் மூர்ச்சை போக்கும்

    359. நறுந்தாளி - சிலேட்டுமம் போம்

    360. நாகதாளி - நாகங் கட்டும்

    361. பேய்ச்சுரை - விஷம் போம்

    362. பேய்ப்பீர்க்கு - கெந்தி தயிலம்

    363. சற்பாக்ஷி - பாம்பு விஷம் போம்

    364. பைசாசப் பீர்க்கு - விஷம் போம் பேதி

    365. சுவசற் பாக்ஷி - இங்குலிகங் கட்டும்

    366. விட்டுணு காந்தி - சுரங்கள் போம்

    367. நாகபாலை - தாம்பர செந்தூரம்

    368. நீர்க்கடம்பு - ஈயச் செந்தூரம்

    369. ஈகை - தாளக செந்தூரம்

    370. நறுவெளி - நாக்குப் புண்ணாறும்

    371. புளிவஞ்சி - நாக ரஸம்

    372. சிறுகல்லு - கல்லுப்பு கட்டு

    373. வெட்புலா - உஷ்ணம் போம்

    374. நீர்ப்புலா - போகமிக்காம்

    375. தலைச்சூடு வள்ளி - ரசங் கட்டும்

    376. பிரமதண்டி - சூதங் கட்டும்

    377. பொடுதலை - வயிறுகடுப்புப் போம்வெட்டை போம்நீரொழுக்குப் போம்

    378. கோடகசாலை - வயிறு புழுப்போம்

    379. இடுகொள்ளு - சத்து ஆம்

    380. காட்டுக்கொள்ளு - காரங் கட்டும்

    381. நாட்டுக்கொள்ளு - சாரங் கட்டும்

    382. கரும்பு - பசாசு போம்

    383. தின்பு - சிலை கட்டு

    384. துரும்பு - சூத பற்பி

    385. முட்பலா - ஆண்மை

    386. வன்மறை - அரிதார வெள்ளை

    387. வெள்வேல் - விரணம் போக்கி

    388. கருவேல் - பல்லிறுக்கி

    389. காஞ்சிரம் - காயசித்தி

    390. மலையத்தி - பேதி கட்டும்

    391. சடைச்சி - விரியன் விஷம் போம்

    392. கப்புச்சடைச்சி - கண்டர் வெள்ளை

    393. தமனகம் - தம்பனை

    394. சத்துகம் - உப்புக் கட்டு

    395. மாஞ்சரோணி - கண் புகைச்சல் தீரும்

    396. மூங்கிலரிசி - தோஷம் போம்

    397. மூங்கில் குருத்து - ரத்தம் போம்வங்க வட்டைவங்கபற்பி

    398. செவ்விறகு - அயச் செம்பு

    399. செம்மரம் - தங்கச் செம்பு

    400. ஒருகொம்பு - ரஜிதச் செம்பு

    401. நீர்விளா - பைத்தியம் போகும்

    402. கழுதை மான் புள்ளி - வெள்ளீயங் கட்டும்

    403. நெய்ம்மரம் - அரிதாரங் கட்டும்

    404. பொன்வண்ணச்சாலி - தங்கமாம்

    405. செழுமலர்க்கொன்றை - புழு நீக்கும்

    406. பெருமலர்க்கொன்றை - கிருமி போக்கும்

    407. ஓமை - தினவு போக்கும்

    408. சிறுநிலக்கு - நரைகள் போம்

    409. குறிதிமாறிக்கு - துரிசுச் செம்பு

    410. புளிநறளை - திமிர் போக்கி

    411. பேய்க் கும்மட்டி - லிங்கங் கட்டும்

    412. சுண்டைக்காய் - சுரங்கள் போம்

    413. காரெள்ளு - திலகமாம்

    414. பித்தரோகணி - கண்டுறந்தி

    415. நெல்லி - கெந்திச் செம்பு

    416. சின்னக்கை - தைலத்தாதி

    417. ஆவாரை - ஈயச் செந்தூரி

    418. காட்டுக்கருணை - கெந்தி வெள்ளை

    419. ருதந்தி - சிலை தைலம்

    420. ஆதளைக் காய் - சூதஞ் சாம்

    421. நரிமுருக்கு - க்ஷயம் போம்

    422. கிளிமுருக்கு - அயச் செந்தூரம்

    423. நெபத்திகை - காய சித்தி

    424. மஞ்சிபத்திரம் - காந்தச் செம்பு

    425. நாய்வேளை - மலங் கட்டும்

    426. பச்சைநாவி - சூதங் கட்டும்

    427. மாகாளி - மயக்கம் போம்

    428. தாளிப்பனை - சலங்கள் போம்

    429. விறுத்தி - சவுக்கார சுண்ணம்

    430. ஓரிலைத்தாமரை - அழத்தி போம்

    431. நீர் முள்ளி - வீக்கம் போம்

    432. வெள்ளை நீர்முள்ளி - செம்பு குருவாகும்

    433. நல்லாரை - சூதவெண்ணெ யிறுகும்

    434. கசப்புப் பசளை - சூதங் கட்டும்

    435. இருவேலி - தாபத்தைப் போக்கும்

    436. பருத்தி - பெரும்பாடு போக்கும்

    437. செம்பருத்தி - பித்தம் போம்

    438. அகத்தி - வேக்காடு போம்

    439. அரைக்கீரை - சுரம் போக்கும்கருவங்கபற்பி

    440. கொடிதும்பை - சூதங் கட்டும்

    441. வனமிட்டி - சாரங் கட்டும்

    442. பூசனி - ஊறல் போக்கும்வசீகரி

    443. கக்கரி - நீர் பெருக்கும்

    444. கொம்மட்டி - வாதமாற்றும்

    445. இரும்பிலி - கெந்தி தைலம்

    446. முளகரணை - கிரந்தி போம்

    447. அவிரிக்கு - லிங்கங் கட்டும்சகல விஷம்போம்

    448. களவு தும்பை - மூலம் போக்கும்

    449. பிறங்கு நாரி - வெடியுப்புக் கட்டும்பொட்டிலுப்பு கட்டும்

    450. செங்கத்தாரி - அயச் செம்பி

    451. காட்டுத்தி - கண்டர் வெளுப்பாம்

    452. புல்லூரி - கருங்குட்டம் போம்

    453. திலகம் - தொட்டிச் சிந்தூரம்

    454. உச்சிச்சில் - குதிரைப் பல் கட்டும்

    455. பாவட்டை - வாதம் போக்கும்

    456. கொடிக் கொத்தான் - பாஷாணங் கட்டும்

    457. ஒடமெட்டி - காயமுறுதி

    458. செம்பரத்தை - சாதிலிங்க மைனம்

    459. கொடிக்கள்ளி - பாஷாணக் கட்டுநாகமணல்நாகபஸ்பம்

    460. இலைக்கள்ளி - பாஷாணஞ் சாம்

    461. திருகுகள்ளி - கெவுரி கட்டும்

    462. மான்செவிக்கள்ளி - நாகபற்பிதாளகந்தனை மெழுகு

    463. மலை பொன்னாவாரை - வீர மெழுகு

    464. பொன்னாவாரை - ஈய செந்தூரி

    465. ஒதி - விரண மாற்றும்

    466. புன்னை - விரண மாற்றும்

    467. சுரபுன்னை - அரிதாரங் கட்டும்

    468. நறும்பிசின் - நாகங் கட்டும்

    469. சன்னை - சிலை கட்டும்

    470. உகாய் - அப்பிரகஞ் சத்து

    471. சிவப்பு நெல்லி - காயமுத்தும்

    472. காட்டுவெந்தியம் - தாம்பர தங்க பற்பி

    473. தூதுளை - கபநாசிஅறிவு விருத்தி

    474. மஞ்சணாத்தி - உப்புக் கட்டி

    475. கற்றாழை - வங்க சிந்தூரி

    476. செங்கற்றாழை - சிந்தூரத் தாதி

    477. கருங்காந்தள் - அறுத்த துண்ட மொன்றும்

    478. முத்துப்பூடு - மிர்தபட்சி சீவிக்கும்

    479. குளுந்த கொள்ளி - குக்குடாண்ட ஜனிதி

    480. கருநாயுருவி - கர்ப்பார்த்த பிரஸவம்

    481. கொடிவேலி - சீதபேதி கட்டும்

    482. மேற்படி மூல தைலம் - லிங்கங் கட்டும்

    483. செங் கொடி வேலி - செந்தூராதி

    484. நாகக்கொட்டைத் தைலம் - நாகங் கட்டும்

    485. துளசி - மேற்படி நாகத்தைச் சுன்னிக்கும்.

    மூலிகை குண அட்டவணை முற்றிற்று.

    புற்றுநோய் அறிகுறி

    1. காரணமில்லாத உடல் எடை இழப்பு

    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் ஒரு கட்டத்தில் உடல் எடையை இழக்கின்றனர்.

    எந்தக் காரணமும் இல்லாமல் உடல் எடை 5 கிலோ அல்லது அதற்கு மேற்பட்டு குறைந்தால், அது புற்றுநோயின் முதல் அறிகுறியாக இருக்கலாம்.

    கணையம், வயிறு, உணவுக்குழாய் அல்லது நுரையீரல் புற்றுநோய்களால் இது அடிக்கடி நிகழ்கிறது. 

    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒரு கட்டத்தில் காய்ச்சலை அனுபவிப்பார்கள்

    2. அடிக்கடி காய்ச்சல்

    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காய்ச்சல் வருவது மிகவும் பொதுவானது. புற்றுநோய் தொடங்கிய இடத்திலிருந்து பரவ ஆரம்பித்தப் பிறகு இது அடிக்கடி நிகழ்கிறது.

    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒரு கட்டத்தில் காய்ச்சலை அனுபவிப்பார்கள். புற்றுநோய் அல்லது அதன் சிகிச்சைகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிப்பதால் இது நிகழ்கிறது.

    பொதுவாக, காய்ச்சல், ரத்தப் புற்றுநோய் (leukemia) அல்லது நிணநீர்க்குழியப் புற்றுநோய் (lymphoma) போன்ற புற்றுநோய்களில் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். 

    ஓய்வெடுத்தாலும் தீராத தீவிரமான உடல் சோர்வும் ஒரு புற்றுநோய் அறிகுறி

    3. தீவிரமான உடல் சோர்வு

    ஓய்வெடுத்தாலும் தீராத தீவிரமான உடல் சோர்வும் ஒரு அறிகுறி.

    புற்றுநோய் பரவும்போது இது ஒரு முக்கியமான அறிகுறியாக இருக்கலாம்.

    லுகேமியா போன்ற சில புற்றுநோய்களில், முதலில் சோர்வு ஏற்படலாம்.

    சில பெருங்குடல் அல்லது வயிற்றுப் புற்றுநோய்கள் வெளிப்படையாகத் தெரியாத இரத்த இழப்பை ஏற்படுத்தும். அதனாலும் உடல் சோர்வு ஏற்படலாம்.

    4. தோலில் ஏற்படும் மாற்றங்கள்

    தோல் புற்றுநோய்களுடன், வேறு சில புற்றுநோய்களும் வெளிப்படையாகத் தெரியும் தோல் மாற்றங்களை ஏற்படுத்தும்.

    இதற்கான அறிகுறிகள்:

    • சருமம் கருமையாகுதல் (hyperpigmentation)
    • தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல் (jaundice)
    • தோல் சிவத்தல் (erythema), அரிப்பு (pruritus)
    • அதிகப்படியான முடி வளர்ச்சி 

    மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு அல்லது உங்கள் மலத்தின் அளவு நீண்ட காலமாக மாறுவது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்

    5. மலம் அல்லது சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் மாற்றங்கள்

    மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு அல்லது உங்கள் மலத்தின் அளவு நீண்ட காலமாக மாறுவது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

    மறுபுறம், சிறுநீர் கழிக்கும் போது வலி, சிறுநீரில் இரத்தம் அல்லது சிறுநீர்ப்பை செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் (அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சிறுநீர் கழிப்பது போன்றவை) சிறுநீர்ப்பை அல்லது புரோஸ்டேட் புற்றுநோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

    6. ஆறாத காயங்கள்

    மச்சங்கள்குறிப்பாக வளரும், வலி ஏற்படுத்தும், அல்லது இரத்தம் கசியும் மச்ச்சங்கள் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம் என்பது பலருக்கும் தெரியும்.

    ஆனால் நான்கு வாரங்களுக்கு மேல் குணமடையாத சிறிய காயங்கள் குறித்தும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

    ஆறாத வாய்ப் புண் வாய்ப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

    நீண்ட காலமாக ஆறாத வாயில் ஏற்படும் எந்த மாற்றமும் உடனடியாக ஒரு மருத்துவர் அல்லது பல் மருத்துவரால் பரிசோதிக்கப்பட வேண்டும்.

    ஆண்குறி அல்லது பெண்ணுறுப்பில் ஏற்படும் புண்கள், தொற்று அல்லது ஆரம்ப நிலை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இவையும் ஒரு மருத்துவரால் பரிசோதிக்கப்பட வேண்டும். 

    புற்றுநோயுடன் ஆரம்ப அல்லது மேம்பட்ட நிலைகளில் அசாதாரண இரத்தப்போக்கு ஏற்படலாம்

    7. இரத்தப்போக்கு

    புற்றுநோயுடன் ஆரம்ப அல்லது மேம்பட்ட நிலைகளில் அசாதாரண இரத்தப்போக்கு ஏற்படலாம்.

    இருமும் போது இரத்தம் வருவது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

    மறுபுறம், மலத்தில் இரத்தம் தோன்றினால் (இது மிகவும் கருமையான நிறத்தில் இருக்கலாம்) அது பெருங்குடல் புற்றுநோய் அல்லது மலக்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

    கர்ப்பப்பையின் உட்பரப்பின் புற்றுநோயால், கருப்பையிலிருந்து அசாதாரண ரத்தப்போக்கு ஏற்படலாம்.

    மேலும், சிறுநீரில் இரத்தம் வருவது சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

    முலைக் காம்பிலிருந்து இரத்தம் தோய்ந்த கசிவு வெளிவருவது மார்பகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

    8. உடலில் தடிப்பு அல்லது கட்டிகள்

    பல புற்றுநோய்களை தோலில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் உணர முடியும்.

    இந்தப் புற்றுநோய்கள் முக்கியமாக மார்பகங்கள், விரை, நிணநீர் கணுக்கள் (சுரப்பிகள்) மற்றும் உடலின் மென்மையான திசுக்களில் ஏற்படுகின்றன.

    தடிப்பு அல்லது கடினமாக்குதல் புற்றுநோயின் ஆரம்ப அல்லது மேம்பட்ட நிலையின் அறிகுறியாக இருக்கலாம்.

    9. விழுங்குவதில் சிரமம்

    தொடர்ந்து அஜீரணம் அல்லது விழுங்குவதில் சிரமம் இருந்தால் அது உணவுக்குழாய், வயிறு அல்லது குரல்வளை (தொண்டை) புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

    இருப்பினும், இந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலான அறிகுறிகளைப் போலவே, அவை பெரும்பாலும் புற்றுநோயைத் தவிர வேறு காரணங்களாலும் ஏற்படுகின்றன.

    தொண்டை கரகரப்பு குரல்வளை அல்லது தைராய்டு சுரப்பிப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்

    10. தொடர் இருமல் அல்லது தொண்டை கரகரப்பு

    தொடர் இருமல் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

    மூன்று வாரங்களுக்கு மேல் இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது.

    தொண்டை கரகரப்பு குரல்வளை அல்லது தைராய்டு சுரப்பிப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்..


     உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு சித்த மருத்துவநிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா) பதில்

    கேள்வி: அடிக்கடி வயிற்று புண் வந்து அவதிப்படுகிறேன். இதிலிருந்து விடுபட உங்கள் ஆலோசனை தேவை. (செல்லம், வேளாங்கண்ணி) 

    பதில்: வயிற்றுப்புண் குணமடைய நேரம் தவறாமல் உணவு சாப்பிடுங்கள். காரமான, புளிப்பான உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள். இரவு நெடுநேரம் கண்விழித்து டி.வி, மொபைல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும், மனச்சோர்வு, மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். சுகாதாரமான உணவுகளை சாப்பிட வேண்டும், சுகாதாரமற்ற தண்ணீர், உணவுகளால் ஹெச்.பைலோரை பாக்டீரியா தொற்றினாலும் குடல் புண் வரும்.

     இதற்கான சித்த மருந்துகள்: வில்வாதி லேகியம், சீரக வில்வாதி லேகியம் இவைகளில் ஒன்றை காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிடுங்கள். அடுத்து, ஏலாதி சூரணம் ஒரு கிராம், சங்கு பற்பம் 200 மி.கி. எடுத்து மூன்று வேளை, நெய்யுடன் கலந்து சாப்பிட வேண்டும். மேலும், குன்ம குடோரி மெழுகு கால் டீ ஸ்பூன் (250 மி.கி) காலை, இரவு உணவுக்குப் பின்பு சாப்பிடுங்கள். உணவில் மோர், தயிர், பிரண்டைத் தண்டு துவையல், மணத்தக்காளி கீரை, சுண்டை வற்றல் குழம்பு மற்றும் பழைய சாதத்துடன் சின்ன வெங்காயம், இஞ்சி, மோர் கலந்து சாப்பிடுங்கள். பழங்களில் மாதுளம்பழம், செவ்வாழைப்பழம், ஆப்பிள் சாப்பிடுங்கள். 

    கேள்வி: சில வருடங்களுக்கு முன்பு எனது வலது காலில் ஆபரேசன் செய்யப்பட்டது. அதற்காக நான் பலவிதமான மாத்திரைகளை உட்கொண்டேன். தற்போது, எனது முகத்தில் அங்கும் இங்குமாக பல இடத்தில் கரும் திட்டுகள் உள்ளது. இதற்கு சித்தமருந்துகள் உள்ளதா? (ஜே. சரவணவேலு, திண்டுக்கல்). 

    பதில்: முகத்தில் உள்ள கருமை நிறத் திட்டுகள் நீங்க உதவும் சித்த மருந்து குங்குமாதி லேபம். இதை இரவு நேரங்களில் முகத்தில் பூசி வர வேண்டும். அடுத்து, ஒரு ஜாதிக்காய், 2 பாதாம் பருப்பு எடுத்து நன்றாக பொடி செய்து அரைத்து அதை கருந்திட்டு உள்ள இடத்தில் பூசி வர வேண்டும். ஜாதிக்காயிலுள்ள 'மிரிஸ்டிசின்' என்னும் சத்து, தோல் கருமை, தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து, முதுமையிலும் இளமையான தோற்றத்தை தரும். வாரம் இருமுறை சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் எலுமிச்சைச் சாறு கலந்து, முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். 

    இது முகத்திற்கு இயற்கை சூரிய எதிர்ப்பு கவசமாகத் திகழும். இதனால் முகத்தில் ஏற்படும் கருந்திட்டுகள் மறையும். 100 மில்லி அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் குங்குமப்பூ ஒரு கிராம் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். சூரியக்கதிர்கள் உடலில் படும் இடங்களான முகம், கழுத்து, கை, கால்களில் இதை தினமும் தடவி வர வேண்டும்.

     இதன்மூலம் சூரியக் கதிரினால் வரும் கருமையை நீக்கி தோலுக்கு இளமையான வசீகரத்தைப்பெறலாம். வைட்டமின் ஏ சத்துள்ள உணவுகள் தோலின் கொலாஜன் மற்றும் எலாஸ்டிக் தன்மையை அதிகப்படுத்தும். இவற்றிலுள்ள ரெட்டினாய்டுகள் தோலுக்கு பளபளப்பைக் கொடுக்கும். ஆகவே, வைட்டமின் ஏ சத்து நிறைந்த மாம்பழம், பப்பாளி, கேரட், முருங்கைக்காய், கீரை, முட்டை, மீன், இறைச்சி, பால் மற்றும் தர்ப்பூசணி பழம், வெள்ளரிக்காய் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முகத்தை அடிக்கடி தண்ணீரில் கழுவி வர வேண்டும். 

    கேள்வி: எனக்கு வெரிகோஸ் வெய்ன் பிரச்சினை வெகு வருடமாக உள்ளது. 2015-ம் வருடம் அறுவை சிகிச்சை செய்தேன். தற்போது பயங்கர வலி, காலில் புண்ணும் வருகிறது. வேலைக்கு செல்ல முடியவில்லை, சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளதா? (சதீஷ் ராஜா) 

    பதில்: வெரிகோஸ் வெய்ன் பிரச்சினை என்பது பெரும்பாலும் கால்களில் தோலுக்கு அருகிலுள்ள ரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் ஒழுங்காக செயல்படாமல் இருப்பது, அல்லது செயலற்று போவதால் ரத்தம் கீழ்நோக்கி தேங்கி, நாளங்கள் வீங்கி, சுருண்டு காணப்படும் நோயாகும். இது பெரும்பாலும் நின்றுகொண்டே வேலை பார்ப்பவர்களுக்கும், உடல் பருமனுள்ளவர்களுக்கும் அதிகமாக வருகிறது. 

    இந்நோயில் ரத்தம் தேங்கி நிற்பதால் நிற மாற்றமடைந்து நீலம் கலந்த கருப்பு நிறத்தில் காணப்படும், அரிப்பு, புண்கள் எளிதில் வருகிறது. இதற்கான சித்த மருந்துகள்: அமுக்கரா சூரணம் 1 கிராம், முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி., நாக பற்பம் 100 மி.கி., எடுத்து தேன், பால் அல்லது வெந்நீரில் மூன்று வேளை சாப்பிடலாம். பாதிக்கப்பட்ட பகுதியில் எட்டித் தைலம் தேய்க்கலாம். அரிப்பு இருந்தால் அருகன் தைலமும், புண் இருந்தால் பச்சை எண்ணெய்யும் அந்த இடத்தில் போடலாம். அவுரியை அரைத்து வெரிகோஸ் வெய்ன் பிரச்சினை உள்ள இடத்தில் கட்டலாம். சிறப்பு சிகிச்சையாக "அட்டை விடுதல் சிகிச்சை" செய்யலாம். இது சித்தர் பெருமான் அகத்தியர் அருளியது. 

    இந்த சிகிச்சையில் வலி இருக்காது. தொடர்ந்து அட்டை விடும் போது இந்த வெரிகோஸ் வெய்ன் பிரச்சினை நன்றாக சரியாகிவிடும். இது ஒரு பாதிப்பில்லாத எளிய சிகிச்சை முறை. பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவமனையில் இந்த சிகிச்சை இலவசமாக கிடைக்கும். வெரிகோஸ் வெய்ன் பாதிப்புள்ளவர்கள் நெடுந்தூரம் நடக்கும் போது அல்லது வெகு நேரம் நிற்கும் போது பாதிக்கப் பட்ட இடத்தில் இறுக்கமாக துணி அல்லது பேண்டேஜ் கட்டுவது நல்லது. 

    கேள்வி: என் வயது 73. சில நாட்களாக என் வலது கால், இடுப்பிலிருந்து பாதம் வரை ஒரே குடைச்சல் வலியாக உள்ளது. வலி இல்லாமல் இருக்க சித்த மருந்துகள் எவை, எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்? (இரா.பாலசுப்பிரமணியன், சென்னை) 

    பதில்: சயாட்டிகா நரம்பு அழற்சி அல்லது முதுகுத் தண்டு வடத்தின் எல் 4, எல் 5, எஸ் 1 தண்டுவட டிஸ்க் பாதிப்புகள் மற்றும் வைட்டமின் டி, கால்சியம் குறைபாட்டால் இதுபோன்ற வலிகள் வரவாய்ப்பு உள்ளது. சித்த மருத்துவத்தில், அமுக்கரா சூரணம் 1 கிராம், பவள பற்பம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி. வீதம் காலை, மதியம், இரவு மூன்று வேளை சாப்பிட வேண்டும். அடுத்து, சிவப்பு குக்கில் தைலம், கற்பூராதி தைலம் இவைகளை சேர்த்து இடுப்பிலிருந்து கால் பாதம் வரை, நன்றாகத் தேய்த்து, ஒரு மணி நேரம் சென்ற பின் வெந்நீரில் குளிக்க வேண்டும். 

    கேள்வி: எனது வலது பக்க விரை வீங்கியுள்ளது. இதற்கான சித்த மருந்து என்ன? 

    (ஜான்சன் ஜான்) பதில்: விரை வீக்கம் என்பது விதைப் பைக்குள்ளே நீர் கோர்ப்பதால் வரும், (ஹைட்ரோசில்) நாளச்சுருள் நோய்களால் வரும் (வெரிக்கோசில்), மேலும், இங்குனல் ஹெர்னியா போன்ற காரணங்களால் வருகிறது. இதற்கு சித்த மருந்துகள், கழற்சி விதைப் பொடி 500 மி.கி., மிளகு பொடி 50 மி.கி. எடுத்து தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும். மேலும், தனி கழற்சி விதைப் பொடியை முட்டை வெண்கருவில் குழைத்து இரவு நேரத்தில் வீக்கம் உள்ள விரைகளில் பூச வேண்டும், காலையில் வெந்நீர் வைத்து கழுவ வேண்டும். 

    மயோசிடிஸ் நோய் -முடக்கு வாதம் 

    நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் நோய் எதிர்ப்புத்திறன் பாதிப்பு இருப்பதாக கூறி, சிகிச்சை பெற்றுக் கொண்டே டப்பிங் பணியில் ஈடுபடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    முடக்கு வாதம் என்றால் என்னமுடக்கு வாதம் (RA) என்பது ஒரு நாள்பட்ட சிதைவுற்ற தன்னுடல் எதிர்ப்பு அழற்சி நோயாகும், இது நோயெதிர்ப்பு அமைப்பு மூட்டுகளின் புறணி திசுக்களைத் தாக்கும் போது ஏற்படுகிறது, இது ஒரு வெளிநாட்டு உடலாகக் கருதுகிறது, இதன் விளைவாக வலி, விறைப்பு, சிவத்தல், வீக்கம் மற்றும் மூட்டுகளில் வெப்பம் ஏற்படுகிறது.சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்கிற நோயால் நான் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. நோயின் பாதிப்பு தணிந்த பிறகு அனைவரிடமும் இதைப் பகிர்ந்து கொள்ளலாம் என இருந்தேன். ஆனால் நான் நினைத்ததை விடவும் குணமாக இன்னும் நாள் ஆகும் எனத் தெரிகிறது என்று அதில் உருக்கமாக எழுதியிருந்தார். இந்த மயோசிடிஸ் நோயைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    மயோசிடிஸ் என்றால் என்ன?மயோசிடிஸ் (Myositis) என்பது தசையின் வீக்கத்தைக் குறிக்கிறது. இது அடிப்படையில் ஒரு ஆட்டோ இம்யூன் கோளாறு ஆகும், அங்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வெளியில் இருந்து ஒரு தசையை காயப்படுத்தலாம் அல்லது வீக்கமடைந்து காயத்தை ஏற்படுத்தும்.




    இதன் ஆரம்ப கட்டங்களில், ஒருவர் நடக்க சிரமப்படுவார், ஆனால் அதை விட, உட்கார்ந்து எழுவதில் அல்லது படுக்கையில் தூங்கும் நிலையை மாற்றுவதில் அதிக சிரமம் இருக்கும்.  நோயாளிகள் தங்கள் முழங்கைகளை உயர்த்த முடியாது, சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது உடலின் மற்ற தசைகளையும் பாதிக்கும்.

    நோயாளிகள் திடமான பொருட்களை விழுங்குவதில் சிரமப்படுவார்கள். இந்த நோய் சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால் சுவாச மண்டலத்தையும் பாதிக்கலாம், மேலும் சுவாச பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.



    அதன் வகைகள் என்ன?மயோசிடிஸ் அடிப்படையில் இரண்டு முதல் மூன்று வகைகள் உள்ளன. தோல் சம்பந்தப்பட்டிருந்தால், இந்த நிலையை டெர்மடோ-மயோசிடிஸ் என்று அழைக்கிறோம், இதன் அறிகுறிகள் தோல் அரிப்புகளுடன் தொடர்புடையவை, அவை அடிப்படையில் மேல் கண்ணிமை மற்றும் நெற்றியில் காணப்படுகின்றன.

    இரண்டாவது வகை தசைகளுடன் மட்டுமே தொடர்புடையது மற்றும் மூன்றாவது இன்க்லூஷன் பாடி மயோசிடிஸ் (IBM) என்று அழைக்கப்படுகிறது, இது தொடை தசைகள், முன்னங்கை தசைகள் மற்றும் முழங்காலுக்கு கீழே உள்ள தசைகளை பாதிக்கிறது. இந்த வகை மயோசிடிஸ் மிகவும் அரிதானது.

    மயோசிடிஸ் என்பது முடக்கு வாதத்தின் இரண்டாம் நிலை விளைவு ஆகும்.

    அதற்கு என்ன காரணம்? அடிப்படையில், ஒரு பொதுவான வைரஸ் தொற்று கூட சில வகையான மயோசிடிஸைத் தூண்டும். சில பாக்டீரியாக்கள் மற்றும் சில இருதய மருந்துகள், தசை மயோசிடிஸைத் தூண்டும். வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகளும் இதில் அடங்கும். அதிகமாக மது அருந்துதல் மற்றும் கோகோயின் உட்கொள்வது இந்த நிலையைத் தூண்டும்.

    அதை தடுக்க வழிகள் உள்ளதா?: மயோசிடிஸைத் தடுக்க எந்த வழியும் இல்லை. மேலே குறிப்பிட்டுள்ள தூண்டுதல்களை ஒருவர் நிச்சயமாக தவிர்க்கலாம். ஆனால் இது ஒரு ஆட்டோ இம்யூன் கோளாறு என்பதால், அங்கு உண்மையான காரணம் தெளிவாக இல்லை. எனவே, இந்த நிலையைத் தடுப்பது சாத்தியமில்லை. மது மற்றும் கோகோயின் உட்கொள்வதைத் தவிர்ப்பது மட்டுமே ஒருவர் எடுக்கக்கூடிய தடுப்பு நடைமுறைகள்.

    மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்? : இந்த நிலை பெண்களிடையே அதிகமாக இருப்பதால், அவர்கள் ஆரம்ப அறிகுறிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்கு தொடை அல்லது தோள்பட்டை தசைகளில் ஏதேனும் பலவீனம் ஏற்பட்டால், அந்த நபர் சாதாரணமாக உட்கார்ந்த நிலையில் இருந்து எழுந்திருக்க முடியாமல் போனால், அவர்கள் உடனடியாக வாத நோய் நிபுணரை (rheumatologist) அணுக வேண்டும். இந்த வகையான ஆட்டோ இம்யூன் நிலைமைகளைக் கையாளும் வல்லுநர்கள் இவர்கள்.

    ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த அறிகுறிகளை அனுபவிக்கும் ஒரு நோயாளி எலும்பியல், பொது மருத்துவர் அல்லது நரம்பியல் நிபுணரிடம் பரிந்துரைக்கப்படுகிறார். அதனால், சிகிச்சை தாமதமாகிறது. தீவிர நிகழ்வுகளில், இதயம் மற்றும் நுரையீரலின் தசைகள் பாதிக்கப்படும்.

    சிகிச்சை செய்ய முடியுமா? ஆம், இந்த நிலைக்கு சிகிச்சையளிப்பது சாத்தியமாகும். பொதுவாக, நோயாளி ஆரம்ப நிலையில் உதவிக்கு வந்தால், ஸ்டெராய்டுகள் கொண்டு முதல் சிகிச்சை அளிக்கப்படும். இதனால் நோயாளி சில நாட்களுக்குள் குணமடைய முடியும்.

    எவ்வாறாயினும், அவசரகால சூழ்நிலைகளில், நோயாளிக்கு பெரிய சுவாசப் பிரச்சனைகள் அல்லது விழுங்க முடியாத சந்தர்ப்பங்களில், நாங்கள் அவர்களுக்கு ஸ்டீராய்டு சிகிச்சையை வழங்குகிறோம். இதற்குப் பிறகும் நோயாளி குணமடையவில்லை என்றால், அவருக்கு IVIG சிகிச்சை அளிக்கப்படும்.



    ஒரு குறிப்பிட்ட வயதினரோ அல்லது பாலினமோ இதற்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றனரா?

    இந்த நிலை எந்த குறிப்பிட்ட வயதினருக்கும் மட்டும் அல்ல. குழந்தைகள் மற்றும் 16 வயதுக்குட்பட்டவர்களிடம் கூட இதைப் பார்த்திருக்கிறோம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இது இளம் மயோசிடிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது 25 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைய மக்களிடையேயும் காணப்படுகிறது.

    இந்த பாதிப்புகளில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேருக்கு புற்றுநோய் இருக்கலாம், இது தசை பயாப்ஸி, எம்ஆர்ஐ மற்றும் குறிப்பிட்ட சோதனைகள் மூலம் மதிப்பிடப்படலாம். இந்த நிலைக்கு குறிப்பிட்ட வயது வரம்பு இல்லை.

    உடல் சிகிச்சைகள் : நோயாளி மருந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு உடல் சிகிச்சைகள் (physical therapies) முக்கிய பங்கு வகிக்கின்றன.

    தசைகள் சோர்வாக இருப்பதால் நோயாளிக்கு உடல் சிகிச்சை தேவைப்படும். தசைகள் நீண்ட காலத்திற்கு ஓய்வு நிலையில் இருப்பதால், சிகிச்சையின் பின்னர் இயக்கத்தை மீண்டும் கொண்டு வருவது கடினமாகிறது.

    சில சந்தர்ப்பங்களில், நோயாளிகள் தங்கள் பாதிப்பை பொறுத்து மாதங்களுக்கு நீடித்த சிகிச்சையைப் பெறலாம். எனவே, இந்த நேரத்தில் ஸ்டீராய்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நிச்சயமாக, பக்க விளைவுகள் காரணமாக ஸ்டெராய்டுகள் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன.

    1. குழந்தைக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டால்... ஒரு டீஸ்பூன் கிரைப்வாட்டரில் இஞ்சி சாறு ஐந்து துளி, இந்தக் கலவையோடு சம அளவு தேன் கலந்து கொடுத்தால் கோளாறு சரியாகும்

    2. குழந்தைக்கு சளி தொந்தரவு ஏற்பட்டால்... ஆடாதொடா இலை மூன்று எடுத்து அதை ஆவியில் வேகவைத்து, பின்பு சுத்தமான வெள்ளைத்துணியில் அதைக் கட்டி சாறு பிழியவும். இந்த சாறில் ஐந்து துளியை ஐந்து துளி தேனில் கலந்து கொடுத்தால் பிரச்னை தீரும்

    3. குழந்தைக்கு மலச்சிக்கல் இருந்தால் உலர்ந்த திராட்சையில் ஐந்து எடுத்து, அதை நன்றாகக் கழுவிவிட்டு இருபது மில்லி தண்ணீரில் முதல்நாள் ஊறவைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் அந்தத் தண்ணீரைக் குழந்தைக்கு கொடுக்க மலச்சிக்கல் தீரும்

    4. இஞ்சிசாறு கூட சளிக்கு சிறந்த மருந்துதான். இஞ்சியைக் கழுவி, தோல் சீவிச் சுத்தமாக்கி, துண்டுகளாக வெட்டி, சுத்தமான ஒரு மெல்லிய துணியில் கட்டி, நன்றாக அடித்து நசுக்க வேண்டும். பின்னர் அந்த துணியைப் பிழிந்து சாறு எடுக்க வேண்டும். இந்த இஞ்சிச் சாற்றில் ஐந்து துளி எடுத்து, அதனுடன் சம அளவு தேன் கலந்து குழந்தைக்கு தரவேண்டும் இஞ்சியில் இருக்கும் காரத்தைத் தேன் கணிசமாக குறைந்துவிடும். ஜலதோஷம், இருமல் இரண்டுக்குமே இது நல்ல மருந்து

    5. மாதுளம் பழத் தோலை காயவைத்து பொடியாக்கி, அதில் ஐந்து கிராம் அளவுக்கு எடுத்து, தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் தடவினால் போதும்... சிறிது நேரத்தில் பேதி நின்றுவிடும்.

     

    6. ஜாதிபத்ரி பொடியை ஐந்து கிராம் எடுத்து தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் வைத்தாலும் பேதி நிற்கும்.80 வயதிலும் 20 வயது நபரை போல் துள்ளி குதிக்க இந்த ஒரு ட்ரிங்க் போதும்!!

    தற்பொழுது வயதானவர்களை அதிகம் பாதிக்கும் நோய்களில் ஒன்றாக இந்த முடக்கு வாதம் இருக்கின்றது.இவை ஒரு வகை முழங்கால் மூட்டு வலி நோயாகும்.இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த தவறினால் ஆபத்தை சந்திக்க நேரிடும்.இந்த முடக்கு வாத வலி நாளடைவில் அதிக படியான சோர்வு,எடை இழப்பு,மூட்டு எழும்புகளில் வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.இவற்றை இயற்கை முறையில் சரி செய்ய எளிய வழிகள் பல இருக்கின்றது.இவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடக்கு வாதம்,எலும்பு வலி முற்றிலும் குணமாகிவிடும்.

    தேவையான பொருட்கள்:-

    பசு நெய் -1 ஸ்பூன்

    கசகசா -1 ஸ்பூன்

    சோம்பு -1 ஸ்பூன்

    கொப்பரை தேங்காய் -சிறிய துண்டு (காய வைத்தது)

    கற்கண்டு -தேவைக்கேற்ப

    பால் – 1 டம்ளர்

    செய்முறை:-

    முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாய் வைத்து கொள்ள வேண்டும்.அதில் 1 ஸ்பூன் பசு நெய் ஊற்றி மிதமான தீயில் கசகசாவை சேர்க்க வேண்டும்.பிறகு 1 டம்ளர் பால் ஊற்றி அதில் சோம்பு,தேங்காய் போன்றவற்றை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு கற்கண்டு சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.சர்க்கரை நோயாளிகள் கற்கண்டை சேர்க்காமல் இருப்பது நல்லது.பிறகு இவை சூடு தணிந்த பிறகு ஒரு டம்ளருக்கு மாற்றி பருக வேண்டும்.தொடர்ந்து இந்த ட்ரிங்க்கை எடுத்து வருவதன் மூலம் வலுவிழந்த மூட்டு மற்றும் எலும்புகள் இரும்பு போல் வலுப்பெறும்.

    * கசகசாவில் நார்ச்சத்து,மாங்கனீசு,கால்சியம்,ஒமேகா 3 கொழுப்பு அமிலம் போன்றவை இருக்கின்றது.

    *சோம்பில் பொட்டாசியம்,கால்சியம்,அயன்,மெக்னீசியம்,செலினியம் அதிகளவு இருக்கின்றது.

    *கொப்பரை தேங்காயில் வைட்டமின்,மினரல்ஸ்,அயன் போன்றவை இருப்பதினால் முழங்காலில் வலி ஏற்படுவதை தடுக்கின்றது.

    *கற்கண்டு குளிர்ச்சி நிறைந்த பொருளாகும்.இவை சளி,தொண்டை பிரச்சனைகளை சரி செய்ய உதவுகின்றது.

    கொரியாவின் அழகு சாதனப் பொருட்கள்

     

    கொரியாவின் அழகு சாதனப் பொருட்கள் இந்திய பெண்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

    கொரியாவின் பாடல்கள், உடைகள், கே-சீரிஸ் மற்றும் அதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் இந்திய இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக இருப்பதும் இதற்கு முக்கியக் காரணம்.

    கொரியா மக்களைப் போன்ற பளபளக்கும் கண்ணாடி போன்ற சருமம் (Glass Skin) வேண்டும் என்பதற்காக கொரியாவின் அழகு சாதன பொருட்களைப் பலரும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

    கொரிய மக்களின் சருமம் எப்படி இவ்வளவு பளபளப்பாக இருக்கிறது என சமீபத்தில் இந்தியர்கள் பலரும் சமூக ஊடகங்களில் பேசி வந்த நிலையில், தற்போது கொரியாவின் சருமப் பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தியும் அதைப் பற்றி சமூக ஊடகங்களில் பேசி வருகின்றனர்.

    கண்ணாடி போன்ற சருமம் கொண்ட கொரிய மக்கள்

    முகப்பரு, தழும்புகள் இல்லாத தோல் கொரிய மக்களிடையே பிரபலமாக உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவமான சருமம் இருக்கும்.

    அது அவர்களுடைய சரும பராமரிப்பு, சுற்றுச்சுழல், உணவு, பரம்பரையாக வரும் மரபணு போன்றவற்றைச் சார்ந்து அமையும். அப்படி கொரிய மக்களின் தோல், அந்நாட்டில் நிலவும் குளிர் மற்றும் வறண்ட காலநிலைக்கு மிகவும் மீள்தன்மையுடனும், பொருந்தக் கூடியதாகவும் இருக்கிறது.

    எனவே கொரிய நாட்டின் தோல் பராமரிப்புப் பொருட்கள் முதன்மையாக கொரிய மக்களின் சருமத்தைப் பராமரிக்க ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    மேலும், கொரிய மக்கள் தங்கள் சருமத்தின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்கின்றனர்.

    டோன்னிங்(Tonning), கிலென்சிங்(Cleansing), எசென்ஸ் ஸ்பிரே(Essence Spray), ஸ்லீப்பிங் மாஸ்க் (Sleeping Mask) என சரும பராமரிப்பு தொடர்பாக தினமும் 10 முதல் 20 வழிமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர்.

    இது மட்டுமின்றி இயற்கை சார்ந்தும் பல வழிமுறைகளை அவர்கள் பின்பற்றுகின்றனர். குறிப்பாக, முகப்பொலிவுக்காக தர்பூசணி பழத்தின் சிவப்புப் பகுதிக்கும் தோலுக்கும் இடையிலான வெள்ளைப் பகுதியை (Rind) தங்கள் முகத்தில் தேய்த்துக்கொள்கின்றனர்.

    கொரிய மக்களைப் பொருத்தவரை பெண்களுக்கு நிகராக ஆண்

    கொரிய அழகு சாதன பொருட்களில் என்ன உள்ளன?

    கொரியாவின் அழகு சாதன பொருட்கள் முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த பொருட்களால் நிறைந்தவை. சரும எரிச்சல், ரத்த ஓட்டத்தை மேம்படுத்த, இறந்த செல்கள் மீண்டும் புத்துயிர் பெற , பிற தோல் நோய்களை அகற்றுவது போன்றவற்றில் கொரிய அழகுசாதனங்கள் அந்நாட்டு மக்களுக்கு சிறந்த பலனை தருகின்றன என்று கூறப்படுகிறது.

    கொரியாவில் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் பொருட்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

    நத்தை திரவம்

    தற்போது பல அழகு சாதன நிறுவனங்களும் நத்தை திரவத்தை பிரதானமாக வைத்து தங்களது பொருட்களைத் தயாரிக்கின்றன. இதைக் கேட்க உங்களுக்கு வியப்பாக இருக்கலாம்.

    நத்தைகளில் சுரக்கும் தெளிவான, மெல்லிய, பிசுபிசுப்பான திரவம் சருமத்தைப் பிரகாசமாக்கவும், சருமத்தின் வயதாகும் தன்மையைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த திரவத்தை வயது, பாலின வித்தியாசம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

    தேனீ பசை

    தேனீக்களில் இருந்து கிடைக்கும் இந்தப் பிசினை ஆங்கிலத்தில் ப்ரோபோலிஸ் (propolis) என்று குறிப்பிடுகின்றனர். தோலின் சுருக்கத்தை நிவர்த்தி செய்வதோடு, பாக்டீரியா பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு, முகப்பரு பாதிப்புக்குள்ளான தோல், தோல் வெடிப்புகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு மூலப்பொருளாகவும் புரோபோலிஸ் உள்ளது.

    இதில், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக இருப்பதால், புரோபோலிஸ் தோல் எரிச்சலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

    புரோபோலிஸ் சருமத்தில் ஒரு நுட்பமான பளபளப்பை ஏற்படுத்துகிறது. இதைத் தொடர்ந்து தடவி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி இளமையான தோற்றத்தைப் பெற முடியும் என்றும் கருதப்படுகிறது.

    முத்து

    முத்துகள் நீண்டகாலமாகவே கொரிய அழகு சாதனப் பொருட்களில் அத்தியாவசியமான பொருளாக இருந்து வருகின்றன.

    முகப்பருவை சமாளிக்க உதவுவதோடு, முகத்தில் விரிவடைந்து காணப்படும் துளைகளைக் குறைக்கவும் முத்துக்கள் உதவுகின்றன. மேலும் சருமம் மூப்படைவதையும் தடுக்கிறது.

    தேனீ விஷம்

    தேனீக்களின் விஷம் அமில தன்மையுடையது. தாங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது அவற்றை தேனீக்கள் வெளியேற்றும். பல தோல் பராமரிப்பு நிறுவனங்கள் சீரம் மற்றும் மாய்ஸ்சரைசர் போன்ற பொருட்களில் தேனீ விஷத்தைச் சேர்க்கத் தொடங்கியுள்ளன.

    இந்த மூலப்பொருள் தோல் ஆரோக்கியத்தைப் பல வழிகளில் மேம்படுத்துகின்றன. இதில் வீக்கத்தைக் குறைத்தல், பாக்டீரியா எதிர்ப்பு விளைவுகளை வழங்குதல் மற்றும் சுருக்கங்களைக் குறைத்தல் ஆகிய பண்புகள் உள்ளன.

    இதேபோல் மூங்கில், யூசா( ஒரு வகை பழம்), சென்டெல்லா ஆசியாட்டிகா (centella asiatica), பிர்ச் (birch) என்ற மரத்தின் சாறு போன்ற பல பொருட்கள் கொரிய அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன.

    உதடு வெடிப்புக்கு

    சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

    வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தாலும், உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

    பல் ஈறு நோய்களுக்கு…..

    எலுமிச்சம் பழச்சாறு அரை பாகம், தக்காளிப் பழச்சாறு ஒரு பாகம். சுத்தமான தேன் கால் பாகம் கலந்து காலை மாலை உண்டு வந்தால் கல்லீரல் பாதுகாக்கப்பட்டு, ரத்த ஓட்டம் சீராகவும், பலம் பெறவும் உதவும். நல்ல காபிப்பொடியில் தயாரிக்கப்பட்ட காபியில் குடிக்கும் பதத்தில் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு உடனே சாப்பிட்டு விடவேண்டும். இவ்வாறு மூன்று தினங்கள் செய்தால் தீராத தலை வலி நீங்கும். பல் ஈறுகளில் ஏற்படும் பல் வலிக்கும் ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கும், பயோரியாவுக்கும் எலுமிச்சம் பழச்சாற்றை உள்ளுக்கு சாப்பிட்டும், பல், ஈறுகளில் படும்படி தேய்த்தும் வந்தால் மேற்கண்ட நோய்கள் தீரும்.

    எலுமிச்சம் பழச்சாற்றில் சீனி கலந்து தினம் சாப்பிட்டால் வாந்தி நிற்கும். வயிற்றுக்கடுப்பு உள்ளவர்கள் சுத்தமான தண்ணீ­ர் சமஅளவு கலந்து 60 மில்லியளவில் நான்கு மணிக்கு ஒரு முறை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு உடனே நீங்கும். எலுமிச்சம்பழச் சாறு 1 லிட்டருக்கு 1.5 கிலோ சீனி சேர்த்து சர்பத் தயாரித்து தினமும் 15 மில்லிக்குக் குறையாமல் சாப்பிட்டால் உடல் களைப்பு நீங்கும், உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

    எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும். நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சைப் பழத்தில் துளையிட்டு, விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.

    அருமருந்தான அருகம் புல்….

    இந்த அருகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டி செய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்த நீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தளர்ச்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும்.

    கருத்தரிக்க உதவும்

    அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50லிருந்து 100 கிராம் வரை எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

    கட்டி கரைய….

    கடுக்காய், சிவப்பு சந்தனம் ரெண்டயும் தண்ணி விட்டு அரைச்சு குழம்பு போல ஆக்கி கட்டிமேல பூசிக்கிட்டு வா.. கட்டி தானாக் கரைஞ்சிடும்.

    ”ஓமம், கருஞ்சீரகம், வெந்தயம்” பல நோய்கள் குணமாகுமா?

    வெந்தயம், கருஞ்சீரகம், ஓமம் மூன்றையும் ஒன்றாக கலந்து எடுத்துக் கொண்டால் பல  நோய்களை எளிதில் சரிசெய்யும்.
    இதற்கு வெந்தயம்- 200 கிராம், ஓமம்- 100 கிராம், கருஞ்சீரகம்- 100 கிராம் என அனைத்தையும் லேசாக வறுத்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
    இந்த பொடியை காற்று புகாத டப்பாவில் போட்டுவைக்க வேண்டும், தினமும் படுக்கச்செல்லும் முன் ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்துவிடவேண்டும், இதற்கு பின் எந்த உணவையும் எடுத்துக் கொள்ளக்கூடாது.
    3 மாதங்கள் தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தால் பல நோய்களை குணப்படுத்துமாம்.



    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வவுனியா பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் நுழைந்த மர்ம நபர் .

    வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுழைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது. குறித்த ச...