ஞாயிறு, 30 மார்ச், 2025

யாழ் - திருச்சி நேரடி விமான சேவை

யாழ்ப்பாணம் (Jaffna) - திருச்சிராப்பள்ளி (திருச்சி) இடையிலான நேரடி விமான சேவை இன்று முதல் ஆரம்பமாகிறது. 47 ஆண்டுகளுக்குப் பின்னர் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை இயக்கப்படுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விமான சேவையை இண்டிகோ (Indigo) நிறுவனம் இயக்குகிறது.அதன்படி, திருச்சியில் இருந்து இன்று (30.03.2025) பிற்பகல் 1.25 மணிக்கு புறப்படும் விமானம் ஒரே ஒரு மணிநேரத்தில் பிற்பகல் 2.25 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும் என தெரிவிக்கப்படுகின்றது. 

அதேநேரம், யாழ்ப்பாணத்தில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 4.05 மணிக்கு திருச்சிக்கு வந்து சேரும் என கூறப்படுகின்றது.இதுவரை திருச்சியில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்குதான் நாள்தோறும் 2 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.

 அந்தவகையில், திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்வோர் இந்த விமான சேவைகளை பயன்படுத்தி வந்தனர். இதற்கு அதிகமான கட்டணமும் செலுத்தி வந்தனர்.இந்நிலையில், திருச்சி - யாழ்ப்பாணம் இடையேயான விமான கட்டணமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

விடுதலைப் புலிகள் முன்னாள் போராளி பிள்ளையான் கைது!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியும், இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந...