சின்னவெங்காயத்தில் கோ 1, 2, 3, 4, 5, எம்டி 1 ஆகிய இரகங்கள் சாகுபடி செய்ய ஏற்றவையாகக் கருதப்படுகின்றன.
பருவம்
ஏப்ரல்-மே மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வெங்காயத்தை சிறப்பாக பயிரிடலாம்.
மண்
மண்ணின் கார, அமிலத் தன்மை 6-7க்குள் இருக்க வேண்டும். நன்கு தண்ணீர் தேங்காத, செம்மண் நிலம் சாகுபடிக்கு உகந்தது.
நிலம் தயாரித்தல் ( How to prepare land)
நிலத்தை 2 முதல் 3 முறை உழுது, கடைசி உழவின்போது ஒரு எக்டருக்கு 25 டன் மக்கிய தொழு உரமிட வேண்டும். பின்பு 45 செ.மீ இடைவெளியில் பார் பாத்திகள் அமைத்து, நிலத்தை தயார் செய்யவேண்டும்.
விதையளவு
ஒரு ஹெக்டேருக்கு விதை வெங்காயம் 1,500 கிலோ தேவைப்படும்.
விதைத்தல் (Sowing)
10 செ.மீ இடைவெளியில், பார் பாத்திகளின் இருபுறங்களிலும் விதை வெங்காயத்தை ஊன்ற வேண்டியது அவசியம்.
நீர் நிர்வாகம் (Water Management)
விதை வெங்காயம் நட்டபின் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு 3 நாட்கள் கழித்து உயிர் நீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்னர் 5 முதல் 7 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்சினால் போதுமானது.
உரங்கள் (Fertilizers)
நடவுக்கு முன்பு பார் பாத்திகளின் இருபுறமும் அடி உரமாக, எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்தும், 60 கிலோ மணிச்சத்தும், 30 கிலோ சாம்பல் சத்தும் இட வேண்டும். பின்னர் நடவு செய்த 30 நாட்கள் கழித்து, 30 கிலோ தழைச் சத்தினை மேலுரமாக இட்டு மண்ணை அணைக்க வேண்டும்.
களை நிர்வாகம்
விதை வெங்காயம் நடவு செய்த 30 நாள் கழித்து களை எடுத்து, மேலுரமிட்டு மண் அணைத்து, நீர் பாய்ச்ச வேண்டும்.
Credit:AIIBiz
சாறு உறிஞ்சும் பூச்சி
சின்ன வெங்காயத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் பாதிப்பு பரவலாக காணப்படும். இதைக் கட்டுப்படுத்த னோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு சதவீதம் தெளிக்க வேண்டும்.
இலைப்புள்ளி நோய்
இலைப்புள்ளி நோய் தாக்கினால், இன்டோபில் எம் 45 என்ற மருந்தை 2 சதவீதம், தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
கீழ்த்தண்டு அழுகல் நோய்
கீழ்த்தண்டு அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, டிரைக்கோடெர்மா விரிடி 20 கிராம், 5 லிட்டர் கோமியம், 5 கிலோ சாணம் ஆகியவற்றைக் கலந்து நன்றாக வடிகட்டி, ஒட்டும் திரவத்துடன் வெங்காயத் தாள்கள் நன்கு நனையுமாறு காலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம், 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
இலைக் கருகல் நோய்
இலைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்த, ஆடோமோனாஸ் (0.6 சதம்) 500 கிலோவை, 100 லிட்டர் நீரில் கலந்து, ஒட்டும் திரவத்துடன் தெளிக்க வேண்டும்.
வளர்ச்சிப் பருவத்தில் அமிர்தக் கரைசல், பஞ்சகாவ்யா, தேங்காய் மோர் கரைசலில் ஏதாவது ஒன்றை 20 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்னர் 100 லிட்டருடன், 5 லிட்டர் புளித்த மோரைக் கலந்து தெளித்தால், காய் திரட்சியாக நல்ல நிறத்துடன் இருப்பதோடு, எடையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அறுவடை (Harvesting)
இலைகள் 75 சதவீதம் காய்ந்து விட்டால் பயிர் முதிர்ச்சி அடைந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். அறுவடைக்கு 7 நாட்கள் முன்பு நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சவேண்டும்.
பின்னர் கொத்து அல்லது மண் தோண்டி மூலம் தோண்டி வேர், இலைகளை பறித்து சுத்தம் செய்ய வேண்டும். அதன்பின் நிழலில் காயவைத்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
மகசூல் (Yield)
ஒரு ஹெக்டேருக்கு 15 முதல் 20 டன் சின்ன வெங்காயம் கிடைக்கும்.
Credit: Exporters India
பெரிய வெங்காயம் சாகுபடி
இரகங்கள் (Varieties)
அடர் சிகப்பு ரகங்களில் எண் – 53, அக்ரிபவுன்ட், வெளிர் சிகப்பு ரகங்களில் பூசா சிகப்பு, என்-2-4-1, அக்ரிபவுன்ட் ஆகிய இரகங்கள் உள்ளன.
பருவம் (Seasons)
தென்னிந்தியாவைப் பொறுத்த வரையில் மே – ஜூன் (கரீப் பருவம்) மாதங்களிலும், ஆகஸ்ட் – செப்டம்பர் (ரபி பருவம்) மாதங்களிலும் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. எனினும் குளிர் கால வெங்காய சாகுபடியில் தான் சிறந்த மகசூல் கிடைக்கும்.
மண் ( Sand)
இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள சமமான, வளம் நிறைந்த மண் தேவைப்படுகிறது. மண்ணின் கார அமிலத் தன்மை 7 முதல் 7.6 வரை இருக்க வேண்டும். களிமண் நிலங்களைத் தவிர்ப்பதே சிறந்தது.
விதையளவு (Seeds)
ஹெக்டேருக்கு 5 முதல் 6 கிலோ விதைகள் தேவைப்படும்.
விதைநேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 400 கிராம் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தை ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து 30 நிமிடம் நிழலில் உலர்த்தி, நாற்றங்காலில் விதைப்பது அவசியம்.
நாற்றங்கால் தயாரித்தல்
ஒரு ஹெக்டேருக்கு நடவு செய்ய சுமார் 5 செண்ட் நாற்றங்கால் இடவசதி தேவைப்படும். நிலத்தை நன்கு கொத்தி, 1 சதுர மீட்டருக்கு 1 கிலோ என்ற அளவில் விஏஎம் என்ற பூசணக் கலவையை இடவேண்டும். நாற்றங்காலில் விதைகளை அடர்த்தியாக விதைக்காமல், பரவலாக விதைக்கவேண்டும். அப்போது தான் நாற்றுகள், செழுமையாக 40-45 நாட்களிலிலேயே தயாராகிவிடும்.
நிலம் தயாரித்தல்
சாகுபடி செய்யும் நிலத்தை நன்றாக உழவு செய்ய வேண்டும். 45 செ.மீ மற்றும் 10 செ.மீ இடைவெளியில் 45 நாள் வயதுடைய நாற்றுகளை நட்டினால் நல்ல பலனை அடையலாம்.
நீர் நிர்வாகம் (Water Management)
வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். நீருடன் பஞ்சகாவ்யா கலந்தும் கொடுக்கலாம். இதனால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
உரங்கள் (Fertilizers)
அடியுரமாக கடைசி உழவில் எக்டருக்கு 10 டன் தொழு உரம், 20 கிலோ தழைச்சத்து தரவல்ல 45 கிலோ யூரியா, 60 கிலோ மணிச்சத்து தரவல்ல 375 கிலோ சூப்பர் பாஸ்பேட், 30 கிலோ சாம்பல் சத்து தரவல்ல 50 கிலோ பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இட வேண்டும்.
களை நிர்வாகம்
விதை வெங்காயம் நடவு செய்த 30 நாள் கழித்து களை எடுத்து, மேலுரமிட்டு மண் அணைத்து, நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் தேவைக்கு ஏற்ப களை எடுத்து நிலத்தை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும்.
தாக்கும் நோய்கள்
இலைப் புள்ளி நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு மாங்கோசெப் இரண்டு கிராம் அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு இரண்டரை கிராம் இவற்றில் ஒன்றை ஒட்டும் திரவமான டீப்பாலுடன், ஒரு லிட்டர் நீருக்கு அரை மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை
வெங்காயம் நடவு செய்த 140 முதல் 150 நாட்களில் அறுவடை செய்யலாம்.
மகசூல்
ஹெக்டேருக்கு 6 முதல் 7 டன் மகசூல் கிடைக்கும்.
மருத்துவப்பயன்கள்
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.
நான்கு அல்லது ஜந்து சின்னவெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
வெங்காயச் சாறு வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி படிப்படியாகக் குணமாகும்.
வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மற்றும் இழந்த சக்தியை மீட்டு தரும் தன்மை கொண்டது.
வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
இயற்கை வேளாண்மை
புதுக்கோட்டை ஆப்பிளும் புதுமையான உரமும்இயற்கை
இயற்கை வேளாண்மை பற்றிய கொள்கைகள் :
கோ.நம்மாழ்வார் அவர்களை அதிகம் ஈர்த்தவை ஜே.சி. குமரப்பாவின் கொள்கைகள் தான் J.C .KUmarappa அவர்கள் இந்தியாவில் இயந்திரத்தின் பயன்பாடுகளை அறிமிகம் செய்த பொழுது ‘‘ இயந்திர டிராக்டர் மிக நல்லாத்தான் உழும்; ஆனால் இயற்கை முறையில் விவசாயம் செய்ய சாணி போடாதே’’ என்று சொன்னதை மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் தனது ஒவ்வொரு கூட்டத்திலும் குறிப்பிடுவார் நம்மாழ்வார்.
மேலும் விவசாயிகளிடம் சென்று பப்பாளி, கொய்யா, வாழை, நாவல் போன்றவை பயிரிடுங்கள்.ஏன்னா ,, ‘‘ஆப்பிள் அரை கிலோ 60 ரூபாய். அதைவிட அதிகம் சத்து இருக்கிற கொய்யா அஞ்சு கிலோ அம்பது ரூபாய். எதைச் சாப்பிடப்போறீங்க?’’ என்று நமது நாட்டின் பாரம்பரியப் பழங்களையே வலியுறுத்துவார். மிக முக்கியமாய் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற அந்நியப் பழங்களைச் சாப்பிடுவதையும் இயன்றவரை தவிர்த்தே வந்தார்.
நைட்ரஜன் சத்து குறைபாடு :
இரசாயன உரங்களை கொண்டு நிலத்தில் ஏற்படும் நைட்ரஜன் சத்துக் குறைவுக்காக யூரியா போன்ற இரசாயன வேளாண்மை உரங்கள் மண்ணுக்குத் தேவை என்று படித்த பலரும் வாதிட்டபோது, பழ தலைமுறைகளாக நாம் செய்து வரும் பாரம்பரிய உழவு/ வேளாண்மை முறையான பயிர் சுழற்சி மற்றும் உழவு மூலம் இயல்பாகவே காற்றில் இருந்து கிடைக்கும் நைட்ரஜன் சத்து நமது மண்ணில் வளம் மற்றும் நைட்ரஜன் சத்து அளவை இயற்கையான முறையில் எந்த ரசாயனமும் இல்லாமல் அதிகரிக்கிறது என்று முதன்முதலாக பலருக்கு எடுத்துகாட்டி அனைவருக்கும் நிரூபித்துக்காட்டியவர் நம்மாழ்வார்.
இந்தியாவில் பசுமைப் புரட்சியின் காரணமாக மத்திய மாநில அரசு உரங்களை பயன்படுத்த விவசாயிகளை ஊக்குவித்துக்கொண்டிருந்த நேரத்தில் , நம்மாழ்வார் தமிழகத்தின் பல கிராமந்தோறும் சென்று விவசாயிகளைச் சந்தித்து , இரசாயன உரப் பயன்பாட்டால் மண்ணின் காரத்தன்மை எவ்வாறு கூடும், அப்படி கூடும் பொழுது அது அளவுக்கு அதிகமான தண்ணீரை எப்படி உறிஞ்சுகிறது என்பதை விவசாயிகள் புரியும் படி சிறிய செயல்விளக்கம் மூலம் நிரூபித்துக்காட்டுவார் .
இன்றைக்கு இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாயம்பற்றிய ( பஞ்சகாவியம் , பீஜமிர்தம் , அமிர்தகரைசல் )விழிப்புணர்வு தமிழகத்தில் அதிக அளவு புரிதல் இருபதற்கு அதற்கு நம்மாழ்வாரின் மிக முக்கிய பழ செயல்பாடுகளே காரணம்.
மண்டல வேளாண்மை ஆராய்ச்சி பணி :
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் , ஊரெங்கும் பசுமைப் புரட்சி பற்றிய கருத்துக்கள் அதி தீவிரமாகப் பரவிய காலகட்டத்தில், நம்மாழ்வார் அவர்கள் இயற்கை விவசாயதிற்கான தனது வாழ்நாள் பயணத்தைத் தொடங்கினார். அதே நேரம் இந்த வாழ்வியல் பயணதிருக்கு தான் பார்த்துவந்த அரசு பணியான “ மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம்” இருந்த தனது மத்திய அரசு பணியையும் உதறினார்.
இயற்கை வேளாண்மை கட்டுரை ஒட்டுரகவிதைகள் பற்றிய வழிகாட்டல் :
நம்மில் பலரும் நினைத்து கொண்டு இருபது போல நம்மாழ்வார் இன்றைய கால நவீனத் தொழில்நுட்பங்களுக்கு எதிரானவர் அல்ல.அவர் பயோடெக்னாலஜியின் அத்தனை விதமான பரிமாணங்களையும் எப்பொழுதும் மிகவும் ஆழமான விடயங்கள் தெரிந்து வைத்திருப்பார் .
அவரின் நேரடி வானகம் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்பவர்களுக்கு நன்கு தெரியும்.இருப்பினும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் கிடைக்கும் பயிர்களால் மண்ணுக்கு, மனிதனுக்கு அதிகமான கேடு ஏற்படும் என்ற காரணத்தை அறிந்து கொண்டு நம்மாழ்வார் அதனை எதிர்த்தார். நமது பாரம்பரிய விதைகளை கொண்டு உருவாக்கிய ஒட்டுரகங்களை ஆதரித்தார்.
இவரது வழிகாட்டுதலில் மூலம் ஒரு புதிய ஒட்டு எலுமிச்சை ரகத்தையே உருவாக்கினார் புளியங்குடி விவசாயி திரு .அந்தோணிசாமி அவர்கள். அதில் மிக பெரும் வெற்றியும் பெற்றுள்ளார் .இன்றும் இந்த எலுமிச்சை மிகவும் விரும்பி வாங்கி மக்கள் பயன்படுத்துகின்றனர்.
பி.டி ( Genetically Modified) கத்திரியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் எண்ணத்தில் அன்றைய மத்திய அரசின் சுற்றுச்சூழல்அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் நடத்திய கருத்துக்கேட்புக் கூட்டங்களில் , நம்மாழ்வார் தனது பிரதிநிதிகளை அனுப்பி பி.டி-க்கு எதிராகப் பேச செய்தார். அதேபோல் நம்மாழ்வாரின் நண்பர்களான அரச்சலூர் செல்வம், டாக்டர் சிவராமன் ஆகியோர் அன்றைய நமது மாநில முதல்வராக இருந்த கருணாநிதியிடம் நேரில் சென்று பி.டி-யின் கேடுகளை எடுத்துச் சொல்லி, தமிழகத்தில் BT கத்தரிக்கு தடை உத்தரவும் பெற்றனர்.
60 மற்றும் 70-களில் கலப்பின ரகங்கள் இந்தியாவுக்குள் ஊடுருவ பெரும் முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது இந்தவகையான கலப்பினங்களைப் பற்றிப் படித்தவர்கள், அனுபவம் வாய்ந்தவர்களிடம் ( சிறு ,குறு மற்றும் பேரு விவசாயிகள் ) கூடப் பெரிதாக விழிப்புணர்வு இல்லை. அந்த கால கட்டடத்தில் “கலப்பினம் மற்றும் வீரிய ரகங்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம் உற்பத்தியைப் பெருக்குவதற்காகன தோ அல்லது விவசாயிகளுக்கு பயன் தர கூடியதோ அல்ல.இவைகள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் ரசாயன உரங்களை விற்பனை இந்தியாவில் விற்பனை செய்வதற்கான உணவு அரசியலே,இதனை அரசு பசுமைப் புரட்சி பெயரில் கலப்பின ஊக்குவிப்பு” என்றார் .
இயற்கை வேளாண்மையில் ஒற்றை நெல் நாற்று நடவு :
ஆப்பிரிக்காவின் நாட்டின் மடகாஸ்கர் நெல் நடவு என்பது உலக அளவில் மிகப்பிரபலமானது. ஒற்றை நாற்று நடவு அல்லது செம்மை நெல் சாகுபடி என்றழைக்கப்படும். இந்த மடகாஸ்கர் நெல் நடவு பற்றிய பயன்கள் மற்றும் விளைச்சல் பற்றி 1960-களில் வெளியே தெரிந்தது. இந்த முறையில் விதை, நீர், நேரம் அனைத்தையும் குறைத்து, மகசூலை மட்டும் அதிகமாகக் கொடுத்த ஒற்றை நாற்றுநடவை உலகுக்கே அறிமுகப்படுத்தியது நமது முன்னோடி தமிழர்கள்தான் என்ற உண்மையை தக்க ஆதாரங்களுடன் உலகிற்கு எடுத்து கூறி நிருபித்தார் .இன்றைக்குத் நமது தமிழகத்தில் ஒற்றை நாற்று நடவு பிரபலமாகி, ஏக்கருக்கு 27 மூட்டைகள் வரை நெல் மகசூல் ஈட்ட முடிகிறது .இந்த பெருமையும் இவரையே சேரும் .
ஊடக விளம்பரங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பிரச்சாரங்கள் எனத் துரித உணவுக் கலாச்சாரம் இந்தியாவை மென்று தின்றுகொண்டிருந்தத காலத்தில் இத்தாலி நாட்டில் நடந்த அவசர ( Fast Food ) உணவுக்கு எதிரான ஒரு பயிற்சி முகாமில் கலந்துகொண்டு திரும்பிய நம்மாழ்வார் அவர்களால் இங்கு ஆரம்பித்து வைக்க பட்டது தான் இன்றைய ‘ஸ்லோ ஃபுட் மூவ்மெண்ட்’. இன்றைக்கு பல இடங்களில் கெலாக்ஸ்களுடன் நமது பாரம்பரியமான சிறுதானிய சாமையும் கம்பு உணவுகள் போட்டிபோட முடிகிறது .
கோழி வளர்ப்பு புத்தகம்
நாட்டுக்கோழி வளர்ப்பதை, நாகரிகம் கருதி கைவிட்டவர்கள்கூட இன்றைக்குப் போட்டி போட்டுக் கொண்டு வளர்ப்பதற்குக் காரணம், அதில் கிடைக்கும் வருமானம்தான். கணினியின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள்கூட பொழுதுபோக்காக _ பகுதிநேர வேலையாக நாட்டுக்கோழி, வான்கோழி, கின்னிக்கோழி, சேவல், வாத்து போன்ற பல்வேறு கால்நடைகளை வளர்த்து விற்பனை செய்பவர்களும் உண்டு. உலக அளவிலான பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க, இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் புறக்கடை முறையில் கோழிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.
அதிலும், நாட்டுக்கோழி வளர்ப்பில் நல்ல பலனைக் காண்போர் அதிகம். நாட்டுக்கோழி வகைகள், கோழி வளர்ப்பு முறைகள், கோழிக்குஞ்சுகளை உற்பத்தி செய்யும் முறை, கோழிகளுக்கும் குஞ்சுகளுக்குமான தீவன முறைகள், அலங்காரக்கோழிகளின் மூலம் அதிக வருவாய் பெறும் முறைகள், புறக்கடைக் கோழி வளர்ப்பில் அமெரிக்க முறை… என கோழி வளர்ப்பில் உள்ள ஏராளமான செயல்முறைகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஜி.பிரபு.
கால்நடை மருத்துவர்கள், கோழிப் பண்ணை முதலீட்டாளர்கள்… என பல்வேறு நிபுணர்களின் கோழி வளர்ப்பு அனுபவம் மற்றும் மருத்துவம் குறித்தக் கருத்துகளும், வருமானம் ஈட்டக்கூடிய வழிமுறைகளும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு உள்ளன. ‘கையில எப்பவும் பணம் புழங்கிக்கிட்டே இருக்கணும்’ என்று நினைப்பவர்களுக்கு, நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில் நிச்சயம் கை கொடுக்கும்.
செம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்
செம்மறியாடுகளுக்கு வெள்ளாடு வகைகளுக்கு அமைப்பது போல விலை அதிகம் செலவு செய்து எந்த விதமான பெரும் கொட்டகை அமைக்க வேண்டியது இல்லை .
குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்தே பராமரித்து கொள்ள இயலும்.
செம்மறி ஆட்டு பண்ணை அமைக்க மிகவும் குறைந்த அடிப்படை செலவுகள் போதுமானது .
சிறிய அளவில் தொடங்கி அதிலிருந்து செம்மறியாடு எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.
செம்மறியாடு நமக்கு இறைச்சியை கொடுக்கிறது. மேலும் சில வகை செம்மறி ஆடுகள் நாம் உடுத்த தேவையான உல்லன் நூல் உருவாக்க தேவையான ரோமத்தையும் தருகிறது.
இவை பெரும்பாலும் வேருடன் உண்டு விடுவதால் நிலத்தில் களைகள் கட்டுப்படுத்த படுகிறது .
மேய்ச்சல் முறையில் பல வகையான செடிகளை உண்டு வளருகின்றன.அதனால் நமக்கு இன்றல்ல இறைச்சி கிடைக்கிறது .இதன் காரணமானாக நமது நாட்டில் பலருக்கு ஆட்டுக்கறி விரும்பி உண்பதால் வேலைவாய்ப்பும் வருமானமும் கிடைக்கிறது .
இவ்வாறு வளர்த்தப்பதால் நமக்கு பல நன்மைகளுடன் வருமானம் தருகிறது.
நிலத்திற்கு தேவையான உரமும் கிடக்கிறது .ஆட்டு கிடை போடுவதால் நிலமும் நல்ல வளமடைகிறது .
அறுவடை காலங்களில் சிதறும் தானியங்கள் நாம் எடுக்க முடியாமல் சென்றாலும் இந்த வகை செம்மறி ஆடுகள் கொண்டுள்ள உதட்டு அமைப்பின் மூலம் அதனை உண்டு விடுகிறது .அதற்க்கு தீவனமும் ஆச்சு , குடவே நல்ல உரமும் ஆச்சு .
செம்மறியாட்டுக் குட்டி வளர ஒரு வருடம் அதாவது 12 மாதம் ஆகும்.
ஆண்டுக்கு 4 முறை தடுப்பூசிகள் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி அளிக்க வேண்டும்.
மார்ச் ஏப்ரல் மாதங்களில் கால் வாய் நோய்க்கான தடுப்பூசி
ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் பி பி ஆர் தடுப்பூசி
ஆகஸ்ட் மாதத்தில் கால் வாய் நோய் தடுப்பூசி
அக்டோபர் மாதத்தில் துள்ளுமாரி தடுப்பூசி ஆகியவற்றை போட வேண்டும்.
குடற்புழு மருந்துகளை பிறந்த 30 வது நாள், 2, 3, 4, 6, 9வது மாதங்களில் போட வேண்டும்.
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு மூலம் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு.
இனப்பெருக்கத்தில் குட்டிகளின் இறப்பு விகிதம் குறைவு.
குடற்புழு நீக்க அட்டவணை
ஆடுகளின்வயது
பரிந்துரைகள்
2வது மாதம்
நாடாப்புழுக்களுக்கான மருந்து
3வது மாதம்
நாடாப்புழுக்களுக்கான மருந்து
4வது மாதம்
நாடாப்புழுக்களுக்கான மருந்து
5வது மாதம்
உருண்டைப்புழுக்களுக்கான மருந்து
6வது மாதம்
உருண்டைப்புழுக்களுக்கான மருந்து
9வது மாதம்
உருண்டை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
12வது மாதம்
தட்டைப் புழுக்களுக்கான மருந்து
ஆறு மாதம் வரை ஆட்டுக்குட்டிகளுக்கு மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதாவது பருவமழைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு முறையும், பருவ மழையின் போது ஒரு முறையும், பருவ மழைக்குப்பின் இருமுறையும் கொடுக்க வேண்டும்.
மாதம்
பரிந்துரைகள்
ஜனவரி - மார்ச்
தட்டைப்புழுவிற்கான மருந்து
ஏப்ரல் - ஜீன்
உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
ஜீலை - செப்டம்பர்
தட்டைப் புழுவிற்கான மருந்து
அக்டோபர் - டிசம்பர்
உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை
ஆடுகளுக்கு தகுந்த குடற்புழு மருந்தைத் தேர்வு செய்யவேண்டும்.
தூள் மருந்தைப் பயன்படுத்தும் பொழுது வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது கரையாத மருந்துத் துகள்களும் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
அதிகாலையில், வெறும் வயிற்றுடன் உள்ள ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.
மருந்துக் கலவையை வாயின் வழியாக ஊற்றும் பொழுது புரையேறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
குடிநீரில் குடற்புழுநீக்க மருந்தும் நோய் எதிர்ப்பு மருந்தும் ஒன்றாக கலந்துக் கொடுக்கக்கூடாது.
குடற்புழுக்களின் வகைகளையும் முட்டைகளையும் அறிந்து மருந்து கொடுப்பது சிறந்தது.
தொடர்ந்து ஒரே மருந்தைக் கொடுக்காமல் மாற்றித் தருவது அவசியம்.
வெள்ளாடுகளுக்கான தடுப்பூசி அட்டவணை
வ.எண்
நோய்மற்றும்தடுப்பூசியின்பெயர்
முதல்தடுப்பூசி
தொடர்தடுப்பூசிகள்
சிறப்புக்கவனம்
1.
பிபிஆர் நோய் (பெஸ்ட்டெஸ்பெட்டிட்ஸ் ரூமினென்ட்ஸ்)
3-4 மாதம்
ஆண்டுக்கு ஒரு முறை
தகுந்த நோய்ப் பாதுகாப்பு நோய் கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள வேண்டும்.
2.
கோமாரி நோய் தடுப்பூசி (திசு வளர் கோமாரித் தடுப்பூசி)
2 மாத வயதில்
ஆண்டுக்கு ஒரு முறை
நோய்க்கிளர்ச்சியின் போது பாதிக்கப்படாத ஆடுகளுக்கும் அண்டைக் கிராமகால்நடைகளுக்கும் தடுப்பூசி அளித்தல் அவசியம்.
3.
துள்ளுமாரி நோய் தடுப்பூசி (துள்ளுமாரி நோய் தடுப்பூசி : துள்ளுமாரி டாக்சாய்டு ஊசி)
6 வார வயதில்
ஆண்டுக்கு ஒரு முறை
மழைக்காலத்திற்கு முன்னரும், குட்டி ஈனும் பருவங்களில் தாய் ஆடுகளுக்கும் தடுப்பூசி அளித்தல் அவசியம்.
தொண்டை அடைப்பான் தடுப்பூசி (பார்மலின் வழி செயலிழக்கப்பட்ட தொண்டை அடைப்பான் தடுப்பூசி)
6 மாத வயதில் நோய் காணும் பகுதிகளில் மட்டும்)
ஆண்டுக்கு ஒரு முறை
மழைக்காலத்திற்கு முன்னர் ஒரு தடுப்பூசி அளித்தல் அவசியம்.
கேள்வி பதில்
1. எந்தெந்த ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் அவசியம் என்பதை எப்படி அறிவது?
கண்ணின் உட்சவ்வு வெளிறி போயிருக்கும், மூக்கில் சளி, ஆட்டின் பின் பகுதியில் கழிச்சலினால் சாணம் ஒட்டிக் கொண்டிருக்கும். தாடையில் வீக்கம், உடல் மெலிந்து காணப்படும். இது போன்ற ஆடுகளுக்கு மட்டும் குடற்புழு நீக்கம் செய்தல் அவசியமானதாகும்.
2. ஏன் எல்லா ஆடுகளுக்கும் குடற்புழு நீக்கம் செய்தல் கூடாது?
தேவையில்லாமல் எல்லா ஆடுகளுக்கும் அடிக்கடி குடற்புழு நீக்கம் செய்தால் குடற்புழுக்களுக்கு எதிரான மருந்தின் எதிர்ப்புத்திறன் குறைகிறது. குடற்புழுக்களின் எண்ணிக்கை அதிகமாகி மற்ற ஆடுகளுக்கும் பரவுகிறது. ஆகையால், தேவையான ஆடுகளுக்கு மட்டும் குடற்புழு நீக்கம் செய்தால் போதுமானது.
3. பாமாச்சா அட்டை எதற்கு பயன்படுகிறது?
பாமாச்சா அட்டையை பயன்படுத்தி ஆட்டின் கண்ணின் உள்சவ்வைப் பார்த்து இரத்தசோகை அறியலாம்.
நமது பூமியின் வயது ஏறத்தாழ 460 கோடி ஆண்டுகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 100 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான். ஒரு செல் உயிரி தோன்றியிருக்கிறது. மனிதர்கள் தோன்றி 4.5 லட்சம் ஆண்டுகளே ஆகின்றன. நாம் ஏர் கட்டி விவசாயம் செய்ததெல்லாம் ஆறாயிரம் ஆண்டுகளாகத்தான். அதற்கு முன்னரும் இயற்கை செழிப்பாக இருந்திருக்கிறது.
அந்தக் காலங்களிலும், இப்போது நிலத்தை இடைவிடாமல் உழுது கொண்டிருப்பவை மண்ணிலுள்ள உயிரினங்களே.
உயிருள்ள மண் 3 தன்மைகளை கொண்டது.
இயற்பயில் தன்மை (எ.கா. பொலபொலப்புத் தன்மை)
உயிரியல் தன்மை (எ.கா. நுண்ணுயிரிகள், மண்புழுக்கள் இருப்பது)
இரசாயனத் தன்மை (எ.கா.ஊட்டச்சத்துகள் கொண்டிருப்பது)
இரசாயன உப்புகள் (உரம்) கடந்த 40 ஆண்டுகளாக இட்டதால் நிலம் முதலில் உயிரியல் தன்மையை இழந்தது. பின் இரசாயனத் தன்மையையும் இறுதியில் இயற்பியல் தன்மையும் இழந்து விட்டது. கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருந்த மண்ணின் உயிரோட்டம் 40 ஆண்டுகளில் அழிக்கப்பட்டு மண் மலடாக்கப்பட்டு விட்டது. நம் விளை நிலத்து மண்ணில் மீண்டும் உயிரோட்டம் ஏற்படுத்த வேண்டும். நுண்ணுயிரிகளை வளரச் செய்ய வேண்டும். மண்புழுக்களும், பிற மண்ணுயிர்களும் வாழும் வகையில் மண்ணை சரி செய்ய வேண்டும். இது நடக்கும் போது மென்மையான வேர் நுனி எளிதில் மண்ணுள் இறங்கும் வண்ணம் பொலப்பொலப்பானதாக மாறும். வேர் சுவாசிக்கத் தேவையான காற்று மண் துகள்களில் சிறிய துளைகளில் தங்கும். வேர் உறிஞ்ச தேவைப்படும் ஈரம் பெருந்துளைகளில் இருக்கும். ஈரமும் காற்றும் சம அளவில் அருகருகே இருக்கும். அரிய நிலையை மண் அடைந்தால் தான் மண் வளமானதற்கு அடையாளம், நலமானதற்கு அறிகுறி. அதற்குத் தாவரக் கழிவுகளையும், விலங்குக் கழிவுகளையும் மண்ணில் சேர்க்க வேண்டும். கெட்டுப்போன நிலத்தைப் பண்படுத்துவதற்கு நீண்டகாலம் ஆகும் என்பது பழைய நிலை. இப்போது கலவை எரு, மண்புழு எரு, உர உயிரிகள், பலபயிர் வளர்ப்பு, அமுதக் கரைசல் ஆகிய உத்திகள் மூலம் மண்ணை ஒரு வருடக காலத்திற்குள், இழப்புகள் இன்றி செய்ய முடியும் என்று தமிழகத்து விவசாயிகள் செய்து காட்டியுள்ளனர். வளமான, ஆரோக்கியமான மண்ணே வளமையான வேளாண்மைக்கு அடித்தளமாகும்.
அமுத கரைசல்
இன்று அமுத கரைசல் பற்றி யாராவது தெரியாமல் இருந்தால் தமிழகத்தில் செய்தி ஊடகங்களை கவனிக்காதவராக இருப்பார்கள். அமுத கரைசலை தெளிப்பான் கொண்டு தெளிக்கவும், பாயும் நீரில் கரைத்து விடவும் செய்யலாம்.
தேவைப்படும் பொருட்கள் :
பத்து லிட்டர் தண்ணீர்
ஒரு கிலோ சாணம்
ஒரு லிட்டர் மூத்திரம் 4.25 கிராம் நாட்டுச்சர்க்கரை.
ஒரு குடம் தண்ணீர் பிடிக்கும் பானை அல்லது குவளையில் மேலே சொன்னவைகளை இட்டு கலக்குதல் வேண்டும். ஒரு குச்சியால் வலப்புறம் 50 சுற்றும் இடப்புறம் 50 சுற்றும் சுற்ற வேண்டும். காலை, மதியம், மாலை என்று மூன்று வேளை கலக்க வேண்டும். ஒரு பகல் ஒரு இரவு ஆக, 24 மணிநேரத்தில் ஊட்டம் (டானிக்) தயாராகிவிடும்.
ஒரு லிட்டர் அமுத கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். இரண்டு நாட்களில் பயிர் பச்சை கொடுத்து வளரத் தொடங்கும். இன்னொரு வழியும் உண்டு. 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ சாணம், 20 லிட்டர் மூத்திரம், 2 கிலோ சர்க்கரை கலந்து மூன்று வேளை கலக்கி பாயும் நீருடன் கலந்து விட வேண்டும். வயல் பெரியதாக இருந்தால் ஒரே இடத்தில் வைப்பது போதாது. உள்ளே தள்ளித் தள்ளிக்கொண்டு போய் வைப்பது அவசியம். வயல் தூரத்தில் இருந்தால், தேனீர், காபி விற்பவர்கள் போல பைப்பு பொருந்திய குவளையில் எடுத்துச் சென்று வாய்மடையில் வைப்பது ஆக பொருந்தும். அமுத கரைசல் தயாரிப்பதும், பயன்படுத்துவதும் மிக எளிமையாக இருப்பதால் அன்றாடம் மாடு கொடுக்கும் கழிவுகளை அமுதமாக மாற்றி பயிர்களுக்கு அளிப்பது கடன்பட்ட உழவர்களை கரை சேர்க்கும் உத்தியாகும். பயிருக்கு மாட்டூட்டத்தையும். அமுதகரைசலையும் 10 நாட்கள் இடைவெளியில் தெளிப்பது செலவை குறைக்கும்.
மூலிகைப் பூச்சி விரட்டி
உழவர்கள் காலங்காலமாக கடைபிடித்து வந்த இயற்கை வழி சாகுபடி முறை பூச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பச்சைப் புரட்சியின் சாதனையாக ரசாயன நஞ்சுகளைப் பயன்படுத்தி பூச்சிகளைக் கொல்ல தொடங்கியதும் உணவு பண்டம் அனைத்தும் நஞ்சானது மட்டுமின்றி, பூச்சிகளும் சாகத் தயாராக இல்லை. இயற்கை வழியில் உழவர்கள் மூலிகைப் பூச்சிவிரட்டி தயாரித்து, பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர்.
மூலிகை பூச்சி விரட்டி வேலை செய்யும் விதம் எப்படி?
மூலிகை பூச்சி விரட்டிகள் மூன்று வகையான இலைகளைக் கொண்டு தயாரிக்கப்டுகிறது. ஒன்று, தொட்டால் வாசனையடிக்கக் கூடிய செடிகள், இரண்டு தின்றால் கசக்கக் கூடிய செடிகள், ஒடித்தால் பால் வரக்கூடிய செடிகள் எடுத்துக்காட்டாக ஆடாதொடை, ஆடுதீண்டாபாளை, ஊமத்தை, எருக்கு, தும்பை, துளசி, அத்தி, சோற்றுக் கற்றாழை, பெரண்டை, பீநாரி, பப்பாளி, சீதா, புங்கன், நொச்சி, வேம்பு, தழுதாளை, காட்டாமணக்கு, வேலிப்பருத்தி, வரிக்குமுட்டி, உண்ணிமுள் செடி, நித்தியகல்யாணி, உரக்கொளறை (கிளைரிசிடியா). இவற்றில் அடையாளம் தெரியாதவை இருந்தால் கவலைப்பட தேவையில்லை. தேவை நான்கு ஐந்து செடிகள் மட்டுமே. அவசியம் நெய்வேலி காட்டாமணக்கு செடி பயன்படுத்த வேண்டும்.
ஒரு சாக்கு இலைகளை கொண்டு வந்து உரலில் இடித்து மண் தொட்டி அல்லது சிமெண்ட் தொட்டியையும் பயன்படுத்தலாம். பானைக்குள் இருக்கும் மூலிகை சட்னி மூழ்கும் அளவுக்கு ஆடு அல்லது மாட்டுச் சிறுநீரை ஊற்றி நிரப்பவும்.
மேலே குறிப்பிட்ட கலவை பத்து நாட்களில் மூலிகைக் கரைசலில் இருந்து தாங்க முடியாத அளவுக்கு நெடி வரக்கூடும். பூச்சி விரட்டி தயாராகி விட்டதற்கு இதுவே அடையாளம். ஒரு லிட்டர் பூச்சி விரட்டியுடன் பத்து லிட்டர் தண்ணீர் கலந்து பயிர் மீது தெளிக்க வேண்டும்.
மூலிகை பூச்சி விரட்டி செயல்படும் விதம்
பூச்சிகள் எண்ணிக்கையில் மிகுந்தவை. ஆனால் உயிரினங்களில் இது சிற்றினம். இவை இயல்புத் தூண்டலால் குறிப்பிட்ட செடிகளில் இலையையோ, காயையோ தின்று உயிர் வாழ்கின்றன. இதற்காக இவை இலைகளில் தொட்டணர்ந்தே செடியை இனம் காணுகின்றன. பல வகை மணம் கொண்ட மூலிகைகளில் தயாரிக்கப்பட்ட பூச்சி விரட்டி பயிர்களின் வாசனையை மாற்றி விடுகிறது. இதனால் தாய்ப்பூச்சி பயிரின் மீது அமர்ந்து முட்டையிடுவது தவிர்க்கப்படுகிறது.
மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்
எல்லா பூச்சிகளும் பயிர்களின் விரோதிகள் அல்ல. பூச்சிகளை உண்ணும் தட்டான், பொறிவண்டு, மூக்கு வண்டு, சிலந்தி, கண்ணாடி சிறகி போன்றவை இருக்கவே செய்கின்றன. இத்தகைய நல்ல பூச்சி நண்பர்களை அடையாளம் கண்டு வைத்திருப்பது மிகவும் அவசியம். பூச்சிகளை பார்த்தவுடன் நஞ்சு தெளிப்பது கூடாது. பூச்சிகள் வந்த பின்பு தான் அவைகளை உண்ணும் இரையுண்ணிகள் நமது நிலத்திற்கு வரும். குறிப்பாக நூறுக்கும் மேற்பட்ட பறவைகள் பயிர் செடிகளை உண்ணும் பூச்சிகளை பிடித்து உண்ணுகின்றன. குச்சிகள் அல்லது தென்னை ஓலையின் அடிமட்டையைப் பயிர் நடுவே நட்டு வைத்தால் பறவைகள் அதில் வந்து அமர்ந்து பூச்சியை பிடித்து உண்ணும். சென்டிப் பூ போன்ற செடிகளை பயிர்களின் ஊடே நடவு செய்வதன் மூலம் தீய பூச்சியை விரட்டலாம். ஆமணக்கு, வெள்ளரி, தட்டை பயிறு போன்ற செடிகளை நிலத்தின் விளிம்பின் நான்கு திசையிலும் பயிர் செய்ய வேண்டும். இது பூச்சிகளைக் கவர்ந்து இழுத்து முக்கிய பயிர்களை காக்கிறது. தொடர்ந்து இயற்கை வழி வேளாண்மைக்கு மாறும் உழவர்கள் நான்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மூலிகை பூச்சி விரட்டிகள் கூடத் தெளிக்க தேவையிருக்காது.
கால்நடைகளில் மாட்டூட்டம்
ஆடு, மாடு, கோழி, நாய் என வளர்ப்பு விலங்குகள் அனைத்திலும் மாட்டூட்டத்தை பயன்படுத்தி நல்ல பலனை எட்டியிருக்கிறார்கள். மாடுகளுக்கு மடிவீக்கம், காம்பின் சீழ் வடிதல் போன்ற நோய்களைக் குணபடுத்த நாளும் 300 மில்லி என்ற வீதத்தில் ஒரு வாரம் கொடுக்க வேண்டும். சினைப் பிடிக்காத ஆடு, பசுக்களுக்கு இதை கொடுத்து நல்ல பலனைடைய முடியும். ஆடுகளுக்கு கொடுக்கும் போது 150 மில்லி கொடுக்க வேண்டும். கோழிக்கு குடிநீரில் கலந்து விடுவதால் நோய் தொற்றுவதை தடுக்கலாம். தவிடு, மாட்டூட்டம், இரண்டையும் கலந்து பிசைந்து கொடுப்பதால் கோழிக்குஞ்சின் எடை விரைவாக கூடும். நாய்களுக்கு மூச்சுப் பை நோய், தோல் நோய்கள் எளிதில் குணமாகும். விலங்கினங்களுக்கு ஊட்டும் போது தண்ணீர் கலப்பது இல்லை.
மீன் அமிலம்
உழவர்கள் கண்டுபிடிப்பில் தனிச்சிறப்பு வாய்ந்த வளாச்சி ஊக்கி மீன் அமிலம். மலிவாக மீன் கிடைத்தாலோ அல்லது மீன் கழிவு கிடைத்தாலோ, அது கொண்டு மீன் அமிலம் தயாரிக்கலாம். மீன் அல்லது மீன் கழிவை சம அளவில் வெல்லத்துடன் கலந்து பிசைந்து பிளாஸ்டிக் பாத்திரத்தில் இட்டு மூடி வைக்க வேண்டும். 25 நாட்கள் கடந்த பிறகு, மீன் அமிலம் தயார் பயிரில் கை ஸ்பிரேயருக்கு 300 தண்ணீருடன் தெளிக்கும் போது பயிர் பச்சை நிறம் பெற்று வளருகிறது.
முட்டை ரசம்
இயற்கை வழி வேளாண்மையில் பயிர் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு பல உத்திகள் உள்ளன. அதில் ஒன்று முட்டை ரசம் தயாரிப்பு. கீழே குவிந்தும் மேலே விரிந்தும் உள்ள ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அதில் 21 முட்டைகளை மூன்று நான்கு அடுக்குகளாக அடுக்கவும். அதற்கு முட்டையின் குறுகலான முனையை கீழ்நோக்கி வைத்தால் பொருத்தமாக இருக்கும். எலுமிச்சை பழங்களை பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும். பாத்திரத்தில் அடுக்கிய முட்டைகள் மேல், 2 எலுமிச்சை பழ சாற்றுடன் 200 கிராம் வெல்லத்தை கரைத்து வெல்லக் கரைசலையும், முட்டைகள் மீது ஊற்றவும். பின்பு மூடி வைக்கவும்.
10 நாட்கள் சென்ற பின்பு, திறந்து பார்த்தால் முட்டை ஓடு கெட்டியாக இல்லாமல் கூழ்ம வடிவில் இருக்கும். அவற்றை கையால் பிசைந்து மேலும் 200 மில்லி வெல்லச்சாறு ஊற்றி மூடி வைக்கவும். முட்டை ரசம் தயாரிக்கத் தொடங்கியதில் இருந்து 20 நாட்களுக்குள் பிறகு, பயிரில் தெளிக்க வேண்டும். அற்காக முட்டை, எலுமிச்கை, வெல்லக் கலவையை பிசைந்து வடிகட்ட வேண்டும். எஞ்சியுள்ள கழிவை மீண்டும் சிறிதளவு எலுமிச்சைச் சாறும் வெல்லக் கரைசலும் கலந்து மூடி வைத்தால் மீண்டும் ஒரு முறை தெளிப்பதற்கு நமக்கு முட்டை ரசம் கிடைக்கும்.
பாழ்நிலத்தை புதுப்பிக்கும் பலபயிர் சாகுபடி
ரசாயன உரம், ரசாயன பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தொடர்ந்து நிலத்தில் இட்டதால் உழவன் வறுமைப்பட்டான். நிலம் வலுவிழந்து, இப்போது மாற்று வழி நோக்கி உழவர் சிந்தனை செல்கிறது. சில நேரத்தில் இயற்கை வழி முறை நல்லதுதான். ஆனாலும் பழைய விளைச்சலை மீண்டும் எடுக்க குறைந்தது ஐந்து வருடமாவது வாங்கலாம். இப்படி செல்பவர்கள் இயற்கை வழி வேளாண்மையால் நாட்டு மக்களின் வறுமையை ஒழிக்க முடியாது என்று சொல்பவர்களை விடவும் தீங்கு செய்கிறார்கள்.
உரச் செடிகளை வளர்த்து தழை உரமாகப் பயன்படுத்துவது பற்றி கூறியிருந்தோம். இப்படி சிலவகைக் செடிகளை நிலத்திற்கு அளித்து எருவாக்கும் போது சில வகை ஊட்டங்களையே மண்ணில் சேர்க்க முடியும். நில வளத்தை முழுமையாக்க இது போதாது. பல வகை விதைகளையும் விதைத்து, வளர்த்து நிலத்தில் சேர்க்கும் போது பல வகை ஊட்டங்கள் மண்ணில் சேர்கிறது, வளம் கூடுகிறது. இதை இயற்கை விவசாயிகள் தமது நேரடி அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ளனர்.
பல பயிர் விதைப்பு என்பது தானியங்கள், பயறு வகைகள், பசுந்தாள் உரச்செடிகள், எண்ணெய் வித்துக்கள், வாசனைப் பியர்கள் ஆகிய ஐந்து வகை பயிர்களை வகைக்கு 4 வீதம் விதைத்து 60-70 நாட்கள் வளர்த்து மடக்கி உழுது மண்ணில் சேர்க்கும் முறையாகும். இப்பயிர்களின் இலைகள், தண்டு, வேர்களில் உள்ள பல வகை நுண் ஊட்டங்களில் மண்ணில் சேர்ந்து மண்ணை வளம் செய்வதுடன் இவைகளே மக்கி எருவாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகின்றன
பல பயிர் வதைகள்
தானிய விதைகள்சோளம் – 500 கிராம்
கம்பு – 100 கிராம்
தினை – 200 கிராம்
சாமை – 250 கிராம்
வரகு – 300 கிராம்
குதிரை வாலி – 250 கிராம்
பனிவரகு – 200 கிராம்
போன்றவற்றில் ஏதேனும் நான்குபயிறு வகைபாசிப்பயிறு – 2 கிலோ , உளுந்து – 2 கிலோ, கொள்ளு – 1 கிலோ, தட்டைப் பயிறு – 2 கிலோ, துவரை – 1 கிலோ, போன்றவற்றில் ஏதேனும் நான்கு.எண்ணெய் வித்துக்கள்எள் – 250 கிராம், நிலக்கடலை – 2 கிலோ , ஆமணக்கு – 3 கிலோ, சூரியகாந்தி – 1 கிலோ, துவரை – 1 கிலோ, சோயா – 2 கிலோ போன்றவற்றில் ஏதேனும் நான்கு. வாசனைப் பொருட்கள் சோம்பு – 100 கிராம், கடுகு -100 கிராம், வெந்தையம் -100 கிராம், மல்லி – 1 கிலோ உரச்செடிகள் சணப்பு – 2 கிலோ, தக்கை பூண்டு – 1 கிலோ, கொழுஞ்சி – 1 கிலோ, அகத்தி – 1 கிலோ, செம்பை – 1 கிலோ போன்றவற்றில் ஏதேனும் நான்கு.
மேற்கண்ட வகைகளில் ஒவ்வொன்றிலும் ஏதேனும் நான்கு விதைகள் வீதம் ஏக்கருக்கு 20 கிலோ தேவைப்படும். இந்த 20 வகை விதைகளையும் சேர்த்து (20 கிலோ இருந்தாலும் தவறல்ல) நெல் சாகுபடியின் போது முன்கூட்டியே விதைத்து 45 நாட்கள் வளர விட்டு மடக்கி உழுது விட்டு தொழி செய்து 10 நாட்கள் அழுகவிட்டு நாற்று நடவு செய்யலாம்.
கரும்பு, மஞ்சள், வாழை போன்றவற்றில் முதல் களை எடுக்கும்போது விதைத்து மூலப்பயிர்களின் இலைகளை மறைக்கும் வண்ணம் வளர்த்தவுடன் அறுத்து / பிடுங்கி 1 சால் விட்டு சாலில் மூடாக்காக இடலாம். தண்டுப்புழு போன்றவைகளை வளரும் பல பயிர்கள் ஈர்த்து முக்கிய பயிருக்கு நேரும் சேதத்தைக் குறைக்கிறது.
ஊட்டமேற்றிய தொழு உரம்
தேவைப்படும் பொருட்கள்
சாணம் : 100 கிலோ
கோமியம் : 25 லிட்டர்
புளித்த தயிர் : 5 லிட்டர்
நீர் : 100 லிட்டர்
கலந்த கலவை
செய்முறை: 4 அடி அகலம், தேவைக்கேற்ற நீளம், அரை அடி உயரத்திற்கு மக்கக்கூடிய அனைத்து பொருட்களையும் பரப்பிவிட்டு, 10 லிட்டர் கலவையுடன் 100 லிட்டர் நீர் சேர்த்து சலிக்கத் தெளிக்கவும். பின் சாணம் 3 அங்குல உயரத்திற்கு பரப்பிவிட்டு, இலை தழை, குச்சிகளைப் போட்டு அதன் மேல் 10% கரைசலை தெளிக்கவும்.
இதைப் போல் தொடர்ந்து 4 அடி உயரத்திற்கு அடுக்குகளை இட்டுப் பின்னர் சேறு கொண்டு நன்கு பூசி மெழுகிவிடவும். 100 நாட்கள் கழித்து எடுத்துப் பயன்படுத்தவும்.
தேங்காய் பால் + மோர்
இவைகளை சம அளவில் சேர்த்து சட்டி / பானையில் இட்டு குப்பைமேடு (அ) குழியில் பாதுகாப்பாக புதைத்து வைக்க வேண்டும். ஒரு வார காலத்தில் நொதித்து வளர்ச்சி ஊக்கியாக மாறும். நொதித்த ஒரு லிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு சுமார் 5 லிட்டர் தேங்காய்ப் பால், 5 லிட்டர் மோர் தேவைப்படும்.
பயிர் பாதுகாப்பு
நமது முன்னோர்கள் எலி, பறவை, ஆடு, மாடு போன்றவற்றிலிருந்து காப்பதையே பயிர் பாதுகாப்பாக செய்தனர். கடந்த 40 ஆண்டுகளாக பூச்சி, பொருட்களில் இருந்து காப்பதற்காக இரசாயன நஞ்சுகளைப் பயன்படுத்துகிறோம். வேளாண்மையில் இரசாயன வகை பயிர் பாதுகாப்பு வந்தபோது விவசாயிக்கு சுமை கூடியது. செலவு கூடியது.
பயிர்களைத் தின்னும் பூச்சிகள் கூட மற்ற பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும் உணவாகின்றன. எனவே, எல்லாப் பூச்சிகளும் நன்மை செய்பவையே. பயிரைக் காப்பது தான் நமது நோக்கமே தவிர பூச்சிகளை கொல்வதல்ல. தாய்ப்பூச்சிகள் பயிர்களில் முட்டையிடாமலும், உட்காராமலும் தடுப்பதும், இவைகளின் புழுக்கள் நம் பயிரை மேய்வதைத் தடுப்பதுமே நம் வேலை
பயிர் பாதுகாப்பு முறைகள்
மூலிகைப் பூச்சிவிரட்டி
உயிர் வழிக்கட்டுபாடு
பயிர் வழிக்கட்டுப்பாடு
ஈர்ப்புப் பயிர்கள்
ஒருங்கிணைந்த பயிர்க் காப்பு
மூலிகை பூச்சி விரட்டி
ஆடா தோடா, ஆடு தின்னா பாளை, ஊமத்தை, எருக்கு, துத்தி, உண்ணிச்செடி, காட்டாமணக்கு, நெய்வேலி, காட்டாமணக்க, வேம்பு, எட்டி, சீதா இலை. சீதாகொட்டை, அரளி விதை, (வெப்) பாலை, பீநாரி சங்கு, கற்றாழை, நொச்சி, தும்பை, துளசி, நாய்த்துளசி, சீமைக் கருவேல் என பல தாவரங்களில் பூச்சிகள் விரட்டும் தன்மை கொண்டவை.
ஆடு, மாடு தின்ன மறுக்கும் அனைத்து செடி, கொடிகளும் பூச்சிகள் விரட்டும் தன்மை உள்ளவை. உடைத்தால் பால் வரும் தன்மை உள்ள செடி, கொடிகளுக்கும் இதே தன்மை உண்டு.
இவைகளில் ஏதேனும் 5 வகைத் தாழைகளை வகைக்கு 2 கிலோ வீதம் எடுத்து இடித்து பானையில் இட வேண்டும். இடித்த இலை தழைகள் முழுகும் அளவு மாட்டு/ எருமை மூத்திரம் ஊற்ற வேண்டும். பிறகு கழுத்து வரைக்கும் தண்ணீர் ஊற்ற வேண்டும். 1 வாரம் – 10 நாட்கள் வைத்திருந்தால் ஊறல் நன்கு நொதித்து மூலிகைச் சாறு தெளிப்பதற்கு தயாராகும். 1 லிட்டர் சாறுக்கு 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்க வேண்டும். நன்கு ஒட்ட காதி சோப்பு வில்லை 2ஐக் கரைத்தல் நல்லது.
உடனடியாக தெளிக்க இடித்த இலை தழைகளை நிறைய தண்ணீர் விட்டு காய்ச்சவும். தண்ணீர் பாதியாக சுண்டும் போது எடுத்து வடிகட்டி 1 லிட்டர் கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்கலாம்.
பூச்சி விரட்டிகளை தேவைப்படும் பொழுதோ, பூச்சி வரும் காலத்திற்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பயன்படுத்தலாம்.
உயிரியல் கட்டுப்பாடு
உலகில் ஒவ்வொரு வகை உயிரினத்தையும் வேறு ஒரு உயிரினம் கட்டுப்படுத்துகிறது. இந்த உயிரியல் அடிப்படை உண்மையைக் கொண்டு சேதம் செய்யும் பூச்சிகளை அவைகளின் எதிர்ப் பூச்சிகள் கொண்டு கட்டுப்படுத்தும் முறையே உயிரியல் வழி பூச்சிக் கட்டுபாடு ஆகும். இதே அடிப்படையில் பயிர் நோய்கள் சிலவற்றையும் கட்டுப்படுத்தலாம்.
டிரைக்கோ டெர்மா விரிடி (பூசணம்) மற்றும் சூடோமோனாஸ் (பேக்டீரியம்) பருத்தி, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, பயறுகள், வாழை, மஞ்சள், இஞ்சி, தென்னை, நெல், கரும்பு, காய்கறிகள் ஆகியவற்றில் தோன்றும் வேர் அழுகல் கிழங்கழுகல், செவ்வழுகல் போன்ற பூசண நோய்கள் கட்டுப்படுத்தும் பயன்பாட்டு அளவு ஏக்கருக்கு 2-4 கிலோ வரை.
உயிரின வழிக் கட்டுப்பாடு
இயற்கையில் பாம்பு, ஆந்தை போன்றவை எலி பிடிக்கின்றன. சிலந்தி, தவளை, பல்லி, குருவிகள், காக்கை, மைனா போன்றவையும் பூச்சிகளைப் பிடித்து உண்ணுகின்றன. பறவைகள் வந்து போனால் வேறு கட்டுப்பாடு தேவைப்படாது.
பயிர் வழிக் கட்டுப்பாடு
சில செடிகள் தங்களது வேர்களில் சில வகை சுரப்புகளை வெளியேற்றுகின்றன. இச்சுரப்புகள் சில நோய் தரும் நுண்ணுயிர்களை கட்டுப்படுத்துகிறது. இந்த வகைத் தாவரங்களை நோய் வாய்ப்புள்ள பயிர்களுக்கு அருகில் வளர்க்கும் போது நோய் வருவதில்லை. எடுத்துக்காட்டாக சாமந்திப் பூச்செடி, தக்காளிச் செடி அருகிலும், வேர் அழுகல் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய பயிர்களுக்கு அருகிலும் வளர்க்கும் போது வேர் நோய்கள் வருவதில்லை. நோய் தரும் வேர்ப்புழுக்கள் எண்ணிக்கையை குறைக்கச் செய்கிறது.
ஈர்ப்புப் பயிர்கள்
சில செடிகள் பயிர்களை உண்ணும் பூச்சிகளை தன்னிடம் ஈர்த்துக் கொள்ளும். இவ்வகை செடிகளை பயிர்களை வயலில் வளர்க்கும் போது பயிர் உண்ணும் பூச்சிகளை தன்னிடம் ஈர்க்கும். விளை பயிர் காக்கப்படும். எ.கா.ஆமணக்கு, தட்டைப் பயிறு, கரும்பில் கம்பு, சோளம் குறுத்துப் புழுக்களை ஈர்க்கிறது.
முன்னோர்கள் ஒருபோதும் ஊரினப் பயிர்கள் வளர்த்ததில்லை. கலப்பு பயிர் முறையையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். இக்கலப்பு பயிர் முறை நோய்களைக் கட்டுப்படுத்தியது. ஈர்த்து அழிக்க உதவியது. மீண்டும் கலப்புப்பயிர் முறை நம் நிலத்தில் அறிமுகம் ஆகும் போது பயிர்ப் பாதுகாப்பு எளிதான ஒன்றாகும். மண் நலனும் மேம்படும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு உத்திகள்
பருவம் அறிந்து விதை விதைக்க வேண்டும்.
பயிர் சுழற்சி கடைபிடிக்க வேண்டும்.
கலப்புப் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.
அவ்வப்போது நிலத்தை தரிசு போட வேண்டும்.
பறவைகளை உள்ளே வரவழைக்க வேண்டும்.
விவசாயி வீட்டில் உள்ள விதைகளை விதைக்க வேண்டும்.
இயற்கை உயிர்க் கொல்லிகளை பயன்படுத்த வேண்டும்.
பூச்சிகளை கவரும் செடி கொடிகளை ஓரத்தில் வளர்க்க வேண்டும்.
கறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் கன்று, பால் உற்பத்தி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.எனவே, கறவை மாடுகளை உரிய முறையில் பராமரித்து விவசாயிகள் லாபம் அடையும் வழிமுறைகள்
விவரங்கள்
சினைப் பசுக்களை நன்றாக கவனித்து வளர்த்தால் தான் ஆரோக்கியமான கன்றுக் குட்டியை ஈனும், நல்ல பால் உற்பத்தியை பெருக்க முடியும்.
முக்கிய பராமரிப்பு உத்திகள்
சினை ஊசி போட்ட பசுக்களுக்கு 3 மாதத்தில் கால்நடை மருத்துவர் மூலம் உரிய சினைப் பரிசோதனையை செய்து உறுதிசெய்து தோராயமாகக் கன்று ஈனும் காலத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
சினை மாடுகளை அடிக்கடி அடித்துத் துன்புறுத்துதல், அதிக தொலைவு நடக்க வைத்தல் கூடாது. ஏழாவது மாதம் முடிந்த உடன் சினைப் பசுவை தனியாகப் பிரித்தெடுத்து கொட்டகையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். நாய்களை சினை மாடுகளின் அருகில் அண்ட விடக் கூடாது.
கருவில் வளரும் இளங்கன்றின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளையும், பால் உற்பத்திக்குத் தேவையான சத்துகளையும் உடலில் சேமித்து வைக்க வேண்டியுள்ளதால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சரிவிகித சத்தான உணவை வழங்க வேண்டும்.
ஏழாவது மாத சினை முடிந்தவுடன் பாலை வற்றச் செய்ய வேண்டும். பால் வற்றிய சினை மாட்டின் காம்புகளின் வழியே நுண்மக் கொல்லி (ஆன்டிபயாடிக்) மருந்தை டியூப் மூலம் செலுத்தினால் மடிவீக்க நோயை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
தீவனப் பராமரிப்பு
சினை மாடுகளுக்கு தீவனம் அளிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு கவனம் செலுத்தாவிடில் கீழ்க்கண்ட விளைவுகள் ஏற்படும்.
கன்று வீசுதல், குறைமாத கன்றுக் குட்டியை ஈனுதல், 20 கிலோவுக்கு குறைவாக உள்ள கன்று பிறக்கும். நஞ்சுக்கொடி விழாமல் கருப்பையில் தங்கிவிடும். கருப்பை வெளித்தள்ளுதல், பால் காய்ச்சல் போன்ற நோய்கள் வரும். பால் உற்பத்தி குறையும்.
இதைத் தடுக்க சரிவிகித தீவனம் கொடுக்க வேண்டும். ஒரு சினை மாட்டுக்கு 25 கிலோ பசுந்தீவனத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அளிக்க வேண்டும். கலப்புத் தீவனம் 8-வது மாத சினையில் தினமும் ஒன்று முதல் ஒன்றரை கிலோ வீதமும், 9-ஆவது மாதம் ஒன்றரை முதல் 2 கிலோ வீதமும் கன்று ஈனும் வரை வழங்க வேண்டும்.
இவற்றுடன் தாது உப்புக்கள் 25- 30 கிராம் தினமும் கொடுக்கலாம். கன்று ஈனுவதற்கு முன்னால் ஒரு கிலோ கோதுமைத் தவிடும் கொடுக்கலாம். மேலும் 450 கிராம் எப்சம் உப்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூள் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.
கன்று ஈனும்போது காணும் அறிகுறிகள்: நிறைமாத சினை ஆனவுடன் மாட்டின் வயிறு, மடி பெருத்துக் காணப்படும். மாட்டின் இடுப்பு, தொடைப் பகுதியில் உள்ள தசைகள் தளர்ந்து காணப்படும். வாலுக்கு அடியில் குழி உண்டாகும். இதைச் சட்டம் உடைதல், தட்டு உடைதல் அல்லது குழி விழுதல் எனக் கூறுவர். இந்த அறிகுறி தென்பட்ட 24 முதல் 48 மணி நேரத்தில் கன்று ஈனும்.
மாட்டில் சளி போன்ற திரவம் அதிகளவில் வடியும். மாடுகள் அடிக்கடி படுத்துக் கொண்டும், தலையை தோண்டிக் கொண்டு இருக்கும். சினைக் கிடேரிகள் வயிற்றில் உதைத்துக் கொள்ளும்.
இந்த அறிகுறிகள் ஏற்பட்டவுடன் மாட்டை சுத்தமான, சமமான இடத்தில் அழைத்துச் சென்று கட்ட வேண்டும். கன்று ஈனுவதற்கு முன் கலப்பின பசுக்களில் நெஞ்சில் இருந்து மடி வரை நீர் கோர்த்துக் காணப்படும். இதனால் எந்தத் தீங்கும் இல்லை. கன்று ஈன்றவுடன் தானாக அவை மறைந்து விடும்.
பனிக்குடம் உடைந்த ஒரு மணி நேரத்தில் மாடு கன்றை ஈன வேண்டும். கன்று ஈன்ற 6 மணி நேரத்தில் நஞ்சுக் கொடி விழ வேண்டும். இதுபோல் முறையாக சினைப் பசுவைப் பராமரிக்க வேண்டும்.
நோய்கள்
சினை மாடுகளில் கருச்சிதைவு நோய், கருப்பை அழற்ச்சி, கருப்பை வெளித்தள்ளுதல் போன்ற நோய்கள் குறித்த அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
இந்த முறைகளை விவசாயிகள் கையாண்டால் ஆரோக்கியமான கன்றுக் குட்டியையும், நல்ல பால் வளத்தையும் பெருக்க முடியும்
கேள்வி பதில்கள்
கேள்வி: மாடு கன்று போட்டு ஒரு மாதம் ஆகிறது. கன்று போட்ட நாள் முதல் பால் கறக்கவிட மாட்டேன் என்கிறது, உதைக்கிறது, காலை கட்டினாலும் துள்ளுகிறது. ஆனால் மடிவீக்கம் எதுவுமில்லை. பால் கறப்பதற்கு என்ன செய்யலாம்?
பதில்: மாட்டுக்கு இது முதல் கன்று என்பதால் கூச்சக்குணத்தால் இப்படி உதைக்கவும், பால் கறக்க விடாமல் செய்கிறது என்று நினைக்கிறேன். இது பிறவிக்குணமாகவோ இருக்கலாம். நாளாக நாளாக தான் இதை சரி செய்ய வேண்டும். இனிமேல் பால் கறக்கும் போது ஏதாவது ஒரு வகையில் மாட்டின் திசை திருப்பி விடும் வகையில் செய்து பால் கறக்க வேண்டும்.
கேள்வி: மாட்டுக்கு வயிறு பூசலாக இருக்கிறது. மூன்று நாளாக மூச்சு வாங்கிறது. என்ன செய்யலாம்?
பதில்: டிம்பால் என்ற மருந்து இருக்கிறது. தினமும் காலையில் 50 கிராம் என்ற விகிதத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு கொடுங்கள்.
ஆதாரம்: தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை.
நம் நாட்டில் வளர்ந்து வரும் மக்கள் தொகையின் உணவு மற்றும் ஊட்சத்திற்கான பாதுகாப்பை ஒருங்கிணைந்த கால்நடை வளா்ப்பு மூலம் பூர்த்தி செய்யலாம். பலதரப்பட்ட கால்நடை இனங்களில், பன்றி வளர்ப்பு, இறைச்சி உற்பத்திக்கான ஒரு முக்கியமான ஆதாரமாக கோழி வளர்ப்பிற்கு அடுத்து இடம் பிடிக்கிறது. இறைச்சி உற்பத்தி மட்டமல்லாமல், எருவும் தருகிறது. பன்றி வளா்ப்பினால் ஊரக உழவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தருகிறது. மற்றம் உபரி வருமானம் தருவதால் உழவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடிகிறது.
தீவனங்களை மாற்றும் திறன் பன்றிகளுக்கு அதிகளவு இருக்கிறது.
பன்றிகள் பலதரப்பட்ட உணவுகளை புற்கள், தீவனப்பயிர்கள், சேதமடைந்த தீவனங்களை, உண்டு அதிக மதிப்புள்ள இறைச்சியை தருகின்றன.
பன்றிகள் சிறிய இடைவெளியிலேயே தன் இனத்தைப் பெருக்கும். ஒரு பெண் பன்றி 8-9 மாதங்களிலேயே குட்டி ஈனும். ஒரு வருடத்திற்கு 2 முறை குட்டி ஈனும். ஒவ்வொரு இனப்பெருக்கத்தின் போது 8-12 பன்றிக்குட்டிகளை ஈனும்.
பன்றி வளர்பபிற்கு சிறிய முதலீட்டாலான கட்டடங்கள் மற்றும் உபரணங்கள் போதுமானது.
பன்றிகள் இறைச்சியை 65%க்கு குறையாமல் அளிக்கும்.
பன்றிக் கறியானது அதகி கொழுப்புடன், குறைவான நீர்ச் சத்துடன், அதிக சக்தி அளிக்கக் கூடிய ஒரு ஊட்டச்சத்து உணவாகும். இதில் தையாமின், நியாசின் ரிபோஃபிளேவின் என்ற விட்டமின்கள் அதிகளவில் உள்ளன.
பன்றி எரு வேளாண் பண்ணைகள் மற்றும் மீன் குட்டைகளில் உரமாக பயன்படுத்தப்படுகிறது.
பன்றிகளில் அதிகளவு கொழுப்பு இருப்பதால், கோழித் தீவனம், சோப், பெயின்டுகள் மற்றும் இதர வேதியியல் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
பன்றி வளர்ப்பினால் விரைவில் வருமானம் 6-8 மாதங்களிலிருந்து கிடைக்கிறது.
பன்றி இறைச்சியினால் உள்ளூர் மற்றும் வெளிநாடு ஏற்றுமதி சந்தைகளில் அதிகளவு சந்தை வாய்ப்பு உள்ளது.
பன்றி வளர்ப்பிற்குத் தேவையான மேலாண்மை முறைகள்
பன்றிக்குடில்மேலாண்மை
சற்று உயரமான இடத்தில் குடில் அமைக்க வேண்டும்.
நீர்தேங்காத, சொதசொதப்பான மற்றும் அதிக மழைபெறும் இடங்களைத் தவிர்க்க வேண்டும்.
குடிலின் பக்கச் சுவர்கள் 4-5 அடியிலும், மீதமுள்ள உயரத்திற்கு இரும்பு குழாய்கள் (அ) மரக்குச்சிகள் கொண்டு அமைக்க வேண்டும்.
சுவர்களில் ஈரம் உள்ளே கசியாதவாறு பூச்சிடவேண்டும்.
குடிலின் உள்ளே அறைகள் 8-10 அடி உயரத்துடன் இருக்க வேண்டும்.
நல்ல காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
தரைப்பகுதி திடமாக, வழுக்காதவாறு, சரிவாகவும், நீர் வடியுமாறு இருக்க வேண்டும்.
உண்ணும் கலனுக்கான இடம் 6-12 இந்த அளவுடன் இருக்க வேண்டும்.
எளிதாக சுத்தம் செய்வதற்காக உண்ணும் கலனின் மூலைகள், வடிகால் பகுதி, சுவர்களின் மூலைகள் மொழுமொழுப்பாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பன்றிக்கும் போதுமான அளவு இடம் ஒதுக்க வேண்டும்.
கோடைக் காலங்களில் நிழலும், குளிர்ந்த நீரும் குடிப்பதற்கு அளிக்க வேண்டும்.
சாணி மறறும் சிறுநீரை சுத்தமாக அகற்றி, சுத்தம் செய்ய வேண்டும்.
ஆண் பன்றி / பால் தரும் பெண் பன்றிக்கு என தனித்தனியே இடம் ஒதுக்கி தரவேண்டும்.
இனவிருத்திக்கான பன்றியைத் தேர்வு செய்தல்
வங்கியிலிருந்து கடன் தொகை பெற்றவுடன், அருகில் உள்ள கால்நடை பண்ணையிலிருந்து நல்ல தரமான பன்றி இனத்தை வாங்க வேண்டும்.
வர்த்தக முறையில் பன்றி வளர்ப்பு செய்வதாக இருந்தால், நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள கலப்பு இனம் (அ) வெளிநாட்டு இனத்தை வாங்க வேண்டும்.
இனவிருத்தி செய்யும் நிலையில் உள்ள பன்றிகளை வாங்க வேண்டும்.
புதிதாக வாங்கிய பன்றிகளுக்கு அடையாளக் குறியிட வேண்டும்.
நோய்களுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும்.
புதிதாக வாங்கிய பன்றிகளை முதல் 2 வாரங்களுக்கு நேரடி கண்காணிப்பில் வைத்திருந்து, பின் மற்ற பன்றிகளுடன் கலந்து விட வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட படி ஒரு குடிலுக்கு தேவையான அளவு பன்றிகளை வாங்க வேண்டும்.
மூன்று மாத இடைவெளி விட்டு 2 பிரிவுகளாக பன்றிகளை வாங்கவும்.
தேவையில்லாத, முதிர்ந்த பன்றிகளை தரப்பகுப்பு செய்ய வேண்டும்.
10-12 முறை இனப்பெருக்கம் செய்து குட்டி ஈன்ற முதிர்ந்த பன்றிகளை நீக்க வேண்டும்.
தீவன மேலாண்மை
பன்றிகளுக்கு சிறப்பான தீவன உணவை தர வேண்டும்.
அடர் தீவனங்களை தேவையான போது தரலாம்.
விட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களை போதுமான அளவு தரவும்.
போதுமான அளவு சுத்தமான நீரை பருகத் தரவும்.
பன்றிகளுக்கு போதுமான அளவு பயிற்சிகளைத் தரவும்.
கர்ப்பக் காலத்தில் பெண் பன்றிகளுக்கு அதிக ஊட்டச்சத்துள்ள தீவனங்களைத் தரவேண்டும்.
பெண் பன்றியின் வயது, எடை, அளவைப் பொறுத்து பெண் பன்றிகளுக்கு அளிக்கும் உணவின் அளவு மாறுபடும்.
வீட்டு சமையல் அறை/ஹோட்டல் /குளிர்பதன சேமிப்பு/சேமிப்புக் கிடங்கிலிருந்து வரும் கழிவை தீவனமாகப் பயன்படுத்தலாம்.
நோய்களுக்குஎதிராகபாதுகாப்பு
குறைந்த அளவு உணவு எடுத்துச் கொள்ளுதல், காய்ச்சல், மாறுபட்ட நடவடிக்கை போன்ற உடல்நிலை சரியில்லாத அறிகுறிகளைக் கவனித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தால் அருகில் உள்ள கால்நடை மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.
பொதுவான நோய்களுக்கு எதிராகப் பாதுகாப்பு தரவேண்டும்.
பெரிய அளவில் நோய் பாதிக்கப்பட்டால், ஆரோக்கியமாக உள்ள பன்றிகளிடமிருந்து நோய் தாக்கிய பன்றிகளை தனித்து வைக்க வேண்டும்.
பன்றிகளுக்கு சீராக வயிறு சுத்தம் செய்யும் மருந்துகளைத் தரவேண்டும்.
சுகாதாரத்தை பேண, பன்றிகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட படி தடுப்பூசி மருந்துகளைப் போட வேண்டும்.
இனப்பெருக்கக் கால கவனிப்பு
பன்றிகள் சாதாரணமாகவே அதிகளவில் தன் இனத்தை உற்பத்தி செய்யும். வருடத்திற்ககு 2 முறை இனப்பெருக்கம் செய்யும்.
10 பெண் பன்றிகளுக்கு 1 ஆண் பன்றி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இனப்பெருக்கத்தின் உச்சநிலையில் இருக்கும் போது இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்
கர்ப்பக்கால கவனிப்பு
ஓரிற்றுப் பன்றிக்குட்டிகளை ஈனும் ஒரு வாரத்திற்கு முன் உள்ள கர்ப்பமுள்ள பெண் பன்றிகளுக்கு போதுமான இடம், உணவு, தண்ணீர் போன்றவை கிடைக்குமாறு அதிக கவனிப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண் பன்றிகள் மற்றும் ஓரிற்றுப் பன்றிக்குட்டிகள் உள்ள கூடாரத்தை பன்றிக்குட்டிகளை ஈனும் தேதிக்கு முன்பே 3-4 நாட்களுக்கு நுண்ணுயிர் நீக்கம் செய்ய வேண்டும். பெண் பன்றிக் குட்டிகளை குட்டி ஈனும் கூடாரத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.
பன்றிக் குட்டிகளைக் கவனித்தல்
புதிதாகப் பிறந்த பன்றிக் குட்டிகளை அதிகக் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நஞ்சுக்கொடியை அறுத்த இடத்தில் அயோடின் கொண்டு நுண்ணுயிர் நீக்கம் செய்ய வேண்டும்.
முதல் 6-8 வாரங்களுக்குத் தாய்பால் தரவேண்டும்.
மோசமான காலநிலைகளில், குறிப்பாக 2 மாதங்கள் இருக்கும் போது பன்றிக்குட்டிகளைப் பாதுகாக்க வேண்டும்.
பிறந்த பிறகு ஊசிப் போன்ற பற்களை எடுத்து விட வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகளைப் போட வேண்டும்.
குட்டிகளுக்கு இரத்த சோகை ஏற்படாமல் இருக்க இரும்புச்சத்து அடங்கிய உணவை தர வேண்டும்.
ஆண் பன்றிக் குட்டிகளை இனப்பெருக்கம் செய்யாமல், இறைச்சிக்கு பயன்படுத்துவதாக இருந்தால், 3-4 வாரங்களில் விறைநீக்கம் செய்ய வேண்டும்.
பால் தரும் பெண் பன்றிக்கு கூடுதலாக உணவு தர வேண்டும்
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துதல்
நமது இந்திய நாட்டில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையால் நாம் உணவு உற்பத்தி செய்யும் கட்டாயத்தில் உள்ளோம். இந்தியாவில் விவசாயிகள் அதிகமாக வாழக்கூடிய கூடிய இடங்களில் அங்குள்ள மக்களுக்கான பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. ஆட்கள் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி, மழைக்காலங்களில் சரியாக மழை வராமல் இருத்தல், வன விலங்குகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் மக்களுக்கு வரும் பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன.
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, குறைவான எண்ணிக்கையில் ஆட்களைக் கொண்டு செய்யக்கூடிய விவசாய முறைதான் இன்றைய காலகட்டத்தில் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படிப்பட்ட நவீன தொழில்நுட்ப முறையில் பலவகையான விவசாயம் முறைகள் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் மண்ணில்லா விவசாய முறை சாத்தியம் என இந்திய தொழில்நுட்பம் நிரூபித்துள்ளது. மண் இல்லாத விவசாயமா? என்ற கேள்வி உங்கள் அனைவர் மனதிலும் எழுந்திருக்கும். மண் இல்லாத விவசாய முறைதான் "ஹைட்ரொபோனிக்ஸ் விவசாயம்" (ரசாயன உணவு கொண்டு நீரில் வளரும் செடிகள்) ஆகும். அதைப்பற்றி இப்போது காணலாம்.
இந்தியாவின் வேளாண் தொழில் : இந்தியாவின் "முதுகெலும்பு விவசாயமும் விவசாயிகளும்" தான். அனைத்து தொழில்களுக்கும் முன்னோடியாக விளங்குவது வேளாண் தொழில் ஆகும். இந்திய மக்கள் தொகையில் 60 சதவிகிதம் பேர் விவசாயத்தையும் விவசாயம் சார்ந்த தொழில்களையும் நம்பியுள்ளனர். விவசாயத்தைப் பொறுத்தவரை பல்வேறு தொழில்நுட்பங்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. விவசாயத்திற்கு மிகவும் அடிப்படையாக இருப்பது தண்ணீர் மற்றும் மண் ஆகும்.
ஆனால் தற்போது உள்ள நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மண்ணில்லாமல், நிலம் இல்லாமல் செடிகளை வளர்க்கும் முறை தான் "ஹைட்ரொபோனிக்ஸ் விவசாயம்" ஆகும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் தற்போது பலபேர் விவசாயம் தொடர்பான விழிப்புணர்வை அடைந்து வருகின்றனர்.
"ஹைட்ரொபோனிக்ஸ் விவசாயம்" என்றால் என்ன?
"ஹைட்ரொபோனிக்ஸ் விவசாயம்" என்பது புதிய அறிவியல் கண்டுபிடிப்பு பெயர் இல்லை. கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப் பின்பு பண்டைய கால மக்கள் ஏரி மற்றும் ஆறுகள் போன்ற நீர் நிரம்பிய இடங்களில் raft(குவியல்) அதாவது, படகு போன்று செய்து நெல் மூட்டை மற்றும் பயிறு வகை மூட்டைகளை படகின் மேல் வைத்து மிதக்க விடுவார்கள்.
அதன்பின் நெல் மூட்டைகள் நீரில் இருக்கும் உரத்தை(மருந்தாக) எடுத்துக்கொண்டு நெல் பயிராக வரும். அதுமட்டுமல்லாமல், "hanging gards babilon" என்னும் "Hanging Garden" கல்வெட்டுக்களில் நீரைப் பாய்ச்சி அதன் மூலம் பயிர்களை வளர்த்தனர் என அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது. கடந்த 15 மற்றும் 17 வருடங்களாக இந்த "ஹைட்ரொபோனிக்ஸ்" உபயோகப் படுத்திக் கொண்டிருக்கின்றனர். "ஹைட்ரொபோனிக்ஸ்" என்ற இந்த புதிய செயல்முறை வெளிநாடுகளில் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மண் இல்லாத விவசாயம் இந்த முறையில் சாத்தியமாகிறது.
பயிர்கள் தயாரிக்கும் முறை:
பயிர்களை நீர்மூலம் வளர்க்க முடியும். நீரில் ஆக்சிஜன், பொட்டன்ஷியல் ஹைட்ரஜன், மற்றும் பயிர் வளர்வதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நீரில் இருக்க வேண்டும். இவையே “ஹைட்ரோபோனிக்ஸ்” என கூறப்படுகிறது.
குறிப்பிட்ட இடத்தில்"poli house" அமைத்து அங்கு வரிசையாக பிளாஸ்டிக் பைப்புகளை அமைக்க வேண்டும். அதில் செடிகளுக்கு நீரோட்டம் பரவலாக செல்லுமாறு துளைகள் அமைக்க வேண்டும். அதன் பின்பு ஒரு சிறிய பிளாஸ்டிக் கப்பில் தேங்காய் துகள்களை நிரப்பி அதில் இரண்டு விதைகளை நிரப்பவேண்டும். விதை முதல்கட்டமாக இந்த இடத்தில்தான் 15 நாட்களில் வேர் பிடிக்க தொடங்குகிறது.
இந்த வேர் பிடிக்கும் காலகட்டத்தில் ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீர் மற்றும் ஒரே மாதிரியான தட்பவெப்ப வெப்பநிலை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு செடிகள் வேர் விட்டதும் இரண்டாவது கட்டமாக Net parts(நிகர பாகங்கள்) - க்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு மீண்டும் செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த நீர் பிளாஸ்டிக் பைப்புகள் வழியாக செலுத்தப்படுகிறது.
தேவையான ஈரப்பதத்தை தக்க வைக்க தேங்காய் நார் துகள்கள் இந்த செடிகளுக்கு பக்க பலமாக உள்ளது. அதன் பிறகு இறுதியாக செடிகள் மற்றும் கீழே கீரைகள் முழுமையான வளர்ச்சி அடைந்து விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்படுகிறது.
“ஹைட்ரோபோனிக்ஸ்” விவசாய முறையின் சிறப்பம்சங்கள்:
“ஹைட்ரோபோனிக்ஸ்” விவசாய முறையின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இதில் 90% நீரை நம்மால் சேமிக்க முடியும். ஏனென்றால் மூடப்பட்ட பைபிளில் இருக்கும் துளைகள் வழியே தான் செடிகள் வளர்கின்றன. அதனால் தண்ணீர் எளிதில் ஆவியாகும் பிரச்சனையும் இல்லை. மேலும், இதற்கு உரம் தேவையில்லை. இதனால் எந்தவித பூச்சி தாக்குதலும் மற்றும் மண் சார்ந்த நோய்களும் ஏற்படுவதில்லை. மேலும் பூமியில் வளர்க்கப்படும் செடிகளை விட வேகமாக இந்தச் செடிகள் வளரும். அத்துடன் இந்த கீரைகள் 100 சதவிகிதம் சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்கும்.
“ஹைட்ரோபோனிக்ஸ்” மூலம் வளர்க்கப்படும் பயிர்கள் :
இந்த மண்ணில்லா விவசாய முறை மூலம் பூச்செடிகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள், மூலிகைச்செடிகள் உள்ளிட்டவற்றை வளர்க்கலாம். காய்கறிகளில் தக்காளி, வெண்டைக்காய், புடலங்காய், உள்ளிட்ட காய்கறிகளையும் மற்றும் முதலில் செம்பருத்தி, ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பூக்களையும் வளர்க்க முடியும். மேலும் புதினா, கொத்தமல்லி போன்றவற்றையும் வளர்க்கலாம்.
“ஹைட்ரோபோனிக்ஸ்” விவசாய முறை எளிதாகவும் மற்றும் பயன் அளிப்பதாகும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இம்முறையில் விவசாயம் செய்தவர்கள் கூறுகின்றனர். மேலும் இதனால் 90 சதவிகிதம் வரை நீரை சேமிக்க முடிகிறது என்றும், பயிர்களுக்கு உரம் தேவையில்லை என்றும் அதிகமாக பூச்சி தாக்குதலும் ஏற்படுவதில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். மிக எளிதாக இப் பயிர்களை செய்ய முடிகிறது என்று விவசாயிகள் மகிழ்ச்சியாக கூறுகின்றனர்.
பாரம்பரிய நெல் ரகங்கள்
நாம் நிலத்தை பார்வையிடும் போது, பாரம்பரிய ரகமான கிச்சிலி சம்பா நெல்லை 10 ஏக்கரில் பயிர் செய்திருந்தார், இந்த நெல் சன்ன ரக அரிசியைத் தரக்கூடியது. கிச்சிலி சம்பா அரிசியைச் சமைத்து உண்ண பலம், தேகச் செழுமை முதலியவை உண்டாகும் என நமது சங்கப் பாடலில் விவரிக்கப் பட்டுள்ளது,
கருப்பு கவுனி நெல் ரகத்தை மூன்று ஏக்கரில் பயிர் செய்திருந்தார். இதன் வயது 140 நாட்களாகும், அந்த அரிசி அவல் செய்வதற்கும், இனிப்புப் பொங்கல் செய்வதற்கும் மிகவும் பிரசித்தி பெற்ற ரகமாகும். கருப்புக் கவுனி அரிசியால் செய்யப்பட்ட கஞ்சியை பருகுவதால் குதிகால் வலி நீங்கும் என்றும், நாய்க்கடி விஷம் நீங்குவதற்கும் பத்தியத்துடன் இந்த கஞ்சியை உண்ணலாம் என்றும் தெரிவித்தார்.
அவரது சொந்த உபயோகத்துக்காக 50 குழி நிலத்தில் மாப்பிள்ளை சம்பா நெல்லையும் பயிர் செய்து, 6 மூட்டை நெல்லை அறுவடை செய்துள்ளார். மாப்பிள்ளைச் சம்பா 180 நாள் பயிராக ஆடி மாதம் நாற்றுவிடப்பட்டு தைமாதம் அறுவடை செய்யப்படுகிறது. இவ்விதம் இப்பயிர் மழைக்காலம், குளிர்காலம், இளவெய்யில் காலம் என மூன்று பருவங்களையும் கடந்து வளர்கிறது. இதனால் பயிரில் நல்ல சத்து சேர்கிறது, இதனால் இந்த அரிசியை உண்ணும் போது நல்ல உடல் பலத்தை தருகிறது என்றும், தொடர்ந்து பயன்படுத்தும் போது சர்க்கரை நோய் கட்டுப்படுத்தக் கூடியது என்றும் தெரிவித்தார்.
“ஏனுங்க பாத்தீங்ளா... இந்த மாப்பிள்ள சம்பா, கருப்பு கவுனியெல்லாம் எந்தமாறி மகத்துவம் உள்ளது தெரியாம ஐ.ஆர் 8, ஐ.ஆர் 20னு ஒட்டு ரகத்த சாப்புட்டுபோட்டு, பொறவு சத்தில்லா சமுதாயமா இப்போ நிக்குறோமுங்க. ஏனுங்க நான் சொல்றது சரிதானுங்ளே?! புதுமாப்பிள்ளை பொலிவோட இருக்குறதுக்கு மாப்பிள்ள சம்பா வாங்கிப்போடு, சுறுசுறுப்பா களத்து வேலைய பாக்கனும்னா கருப்பு கவுனி கஞ்சி குடின்னு எங்க ஊரு பெரியவங்க சொல்லுவாங்கோ! இப்பவாச்சும் இந்த நெல்மணிகளோட அருமைய நாம புரிஞ்சக்கணுமுங்க!”
ஆலங்குடி பெருமாள் அவர்களின் ஒற்றை நாற்று நடவு வழிமுறையை பின்பற்றுகிறார். கிச்சிலி சம்பா சாகுபடிக்கு மொத்தமாக 7 கிலோ விதை நெல்லை மட்டும் பயன் படுத்தியுள்ளார். 7 கிலோ விதை நெல்லில் இருந்து பெறப்பட்ட நாற்றுகள் 12 ஏக்கரில் நடுவதற்கு போதுமானதாக இருந்ததாகவும், அவர் பண்ணையில் 10 ஏக்கரில் நாற்று நட்ட பின், இரண்டு ஏக்கர் நடுவதற்கு போதுமான நாற்றுக்கள் மீதம் இருந்ததாகவும் தெரிவித்தார்.
ஒற்றை நாற்றுநடவு முறை சிறந்த பலனைத் தருவதினால், அனைத்து பயிர்களையும் ஒற்றை நாற்று நடவு முறையிலேயே பயிர் செய்திருந்தார்.
ஒற்றை நாற்று நடவு முறையில் பயிர் செய்துள்ளதால் நாற்றுக்கு நாற்று 50 செ.மீ இடைவெளி விடப்பட்டுள்ளது. இடைவெளி போதுமான அளவு உள்ளதால் பயிர்கள் நுண்ணூட்ட சத்துகளுக்காகவும், காற்றுக்காகவும், ஒளிக்காகவும் ஒன்றுடன் ஒன்று போட்டியிடாமல் திடமாக வளர்கிறது என்றும், நாற்றுகள் நெருக்கமாக இருந்தால் நாற்று நீண்டு வளர்வது மட்டுமல்லாமல் அதிக தூர் வெடிக்காது, எனினும் பயிர் இடைவெளி பயிருக்கு பரிந்துரைக்கப் பட்ட அளவைவிட மேலும் அதிகரித்தாலும் மகசூலில் பாதிப்பு ஏற்படும் என்றும் தனது அனுபவத்தில் கவனித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
உதாரணமாக இவர் பயிரிட்ட கிச்சிலி சம்பாவில் 2 ஏக்கர் மட்டும் 50 செ.மீ சரியான இடைவெளியுடன் நட்டிருந்தார், இந்த பயிரில் 45 முதல் 50 தூர்கள் வரை வந்துள்ளது, இந்த இரண்டு ஏக்கரில் மட்டும், ஏக்கருக்கு 35 மூட்டை நெல்லை (62 கிலோ மூட்டை) அறுவடை செய்துள்ளார்.ஆனால் மீதியுள்ள 8 ஏக்கரில் இடைவெளி 50 செ.மீட்டரை விட அதிகமாக வைத்து நடவு செய்து விட்டதால் மகசூல் குறைந்துள்ளது, இந்த 8 ஏக்கரில், ஏக்கருக்கு 23 மூட்டை நெல் மட்டுமே கிடைத்துள்ளது.
ஒரு ஏக்கருக்கு தோராயமாக 13,500 ரூபாய் செலவு செய்து இந்த மகசூலை எடுத்துள்ளதாகவும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
* தண்டுப்பகுதிபெரும்பாலானசெடியினங்களில்மண்ணுக்குவெளியேகதிரவனின்வெளிச்சத்தைநோக்கிவளரும். ஆனால், வாழையில்அதுகிழங்குவடிவில்மண்ணுக்கடியில்மட்டுமேவளர்கிறது.
இம்மரமானது தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டது. பின்னர் 1560- 1565ம் ஆண்டில் போர்த்துக்கீசியரால் இந்தியாவில் உள்ள கோவாவிற்கு எடுத்து வரப்பட்டு, பின்னர் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை அடைந்தது.
முந்திரியில், முந்திரிப்பழம் என அழைப்பது, உண்மையில் பழமல்ல. அது போலிப்பழம் என அழைக்கப்படுகிறது. இது பூவின் சூலகப் பகுதியில் இருந்து உருவாவதில்லை. பூவின் அடிப்பகுதியில் உள்ள தடித்த பூக்காம்புப் பகுதியே இவ்வாறு பேரிக்காய் உருவத்தில் விருத்தியடைகின்றது. இது முந்திரி ஆப்பிள் எனவும் அழைக்கப்படுகிறது.
முந்திரியில், முந்திரி ஆப்பிளின் அடியில் சிறுநீரக வடிவில் உள்ள அமைப்பே உண்மையான பழம் ஆகும். இது உண்மையான பழமாக இருந்தாலும், இதன் உள்ளே இருக்கும் உண்ணக்கூடிய பகுதி முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகின்றது. அதாவது முந்திரியின் உண்மைப்பழமானது தனி ஒரு விதையைக் கொண்ட பழமாகும்.
இம்மரமானது இன்று வெப்பமண்டல நாடுகள் பலவற்றில் வளர்க்கப்படுகிறது. வியட்நாம், நைஜீரியா, இந்தியா, பிரேசில், இந்தோனீசியா ஆகிய நாடுகளில் இது அதிகம் பயிரிடப்படுகிறது.
எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :
வி.ஆர்.ஐ.1 (விருத்தாச்சலம்) வி.ஆர்.ஐ.2, வி.ஆர்.ஐ 3, வி.ஆர்.ஐ 4, வி.ஆர்.ஐ (CW) ஹெச் 1, வென்குர்லா 4, வென்குர்லா 7, பப்பட்லால் – 8 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்ற இரகங்கள் ஆகும்.
பருவம்
ஜுன் – டிசம்பர் மாதங்களில் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.
மண்
நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் பாங்கான நிலத்தில் நன்கு வளரும் தன்மை கொண்டது. இது வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. மழை அளவு 50 முதல் 250 செ.மீ வரை உள்ள இடங்களிலும் நன்கு வளரும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது, கட்டிகள் இல்லாமல் பண்படுத்த வேண்டும். பின் 45 செ.மீ நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழிகளுக்கும் இடையே உள்ள இடைவெளி 7 மீட்டர் இருக்குமாறு அமைத்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு குழியிலும் மேல் மண்ணுடன் 2 கிலோ தொழு உரம், ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.
விதையளவு
ஒட்டுக்கட்டுதல் மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கரில் நடவு செய்வதற்கு 200 கன்றுகள் தேவைப்படும்.
விதைத்தல்
தயார் செய்துள்ள குழிகளில் கன்றுகளை குழியின் மையப்பகுதியில் நடவு செய்ய வேண்டும். அடர் நடவு முறையில் 5 x 4 மீ இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு 500 மரங்கள் வீதம் நடவு செய்யலாம்.
நீர் நிர்வாகம்
செடிகள் ஓரளவுக்கு வளர்ந்து வரும் வரை தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க வேண்டும். பூக்கும் தருணத்திலும், காய் பிடிக்கும் தருணத்திலும் வறட்சியான சீதோஷ்ண நிலை நிலவினால் காய் பிடிப்பு அதிகரிக்கும். முந்திரியை பொதுவாக மானாவாரியாக பயிர் செய்யலாம்.
உரங்கள்
ஒரு வயதான மரம் ஒன்றிற்கு தொழு உரம் 10 கிலோ, தழைச்சத்து 70 கிராம், மணிச்சத்து 40 கிராம், சாம்பல்ச்சத்து 60 கிராம் கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்க வேண்டும். 4 வயது வரை கொடுக்கப்பட்டுள்ள உரங்களின் அளவை ஒவ்வொரு மடங்காக அதிகரிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு பிறகு தொழு உரம் 50 கிலோ, தழைச்சத்து 500 கிராம், மணிச்சத்து 200 கிராம், சாம்பல்ச்சத்து 300 கிராம் உரங்களை அளிக்க வேண்டும். உரங்களை இரண்டாகப் பிரித்து ஜுன் – ஜுலை மாதங்களில் ஒருமுறையும், அக்டோபர் – நவம்பர் மாதங்களில் ஒருமுறையும் அளிக்க வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். பின் வருடம் ஒருமுறை களை எடுக்க வேண்டும்.
மரத்தில் சுமார் ஒரு மீட்டர் உயரம் வரை பக்கக் கிளைகள் வராமல் வெட்டிவிட வேண்டும். ஒவ்வொரு வருடமும் காய்ந்து போன கிளைகளை நீக்கி சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் மரங்களுக்குக் கிடைக்குமாறு செய்ய வேண்டும். மேலும் ஒட்டுக்கட்டிய பகுதிக்குக் கீழ் வரும் தளிரை அவ்வப்போது கிள்ளிவிடவேண்டும். ஒட்டுச் செடியில் தோன்றும் பூக்களை நீக்கி விட வேண்டும்.
பயிர் பாதுகாப்பு தண்டுத் துளைப்பான்
இதன் தாக்குதல் மரத்தின் அடித்தண்டில் ஆண்டு முழுவதும் காணப்படும். இதனை கட்டுப்படுத்த கார்பரில் 50 சத நனையும் தூள் 0.1 சதம் மருந்தை தண்டுப்பகுதியில் சுமார் 1 மீட்டர் உயரம் வரை தடவி விடவேண்டும்.
5% வேப்ப எண்ணெய்யை ஜனவரி – பிப்ரவரி, மே -ஜூன் மற்றும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் அடி மரத்தில் பூச வேண்டும்.
தேயிலைக்கொசு
தேயிலைக் கொசுவைக் கட்டுப்படுத்த தழைப் பருவத்தில் 2 மிலி போசலான் 35 EC, மொட்டு விடும் பருவத்தில் 2 கிராம் கார்பரில் 50 WP மற்றும் கொட்டை உருவாகும் பருவத்தில் 2 மிலி மேனோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இலைத் துளைக்கும் புழு
இதனை கட்டுப்படுத்த 5% வேப்பங்கொட்டை சாறினை துளிர்விடும் பருவத்திலும், பூக்கும் பருவத்திலும் தெளிக்க வேண்டும்.
வேர்த் துளைப்பான்
ஒரு மரத்திற்கு மோனோகுரோட்டோபாஸ் 5 மில்லி மருந்துடன் 5 மில்லி தண்ணீர் கலந்த கலவையை புழு தாக்கிய துளைகளில் ஊற்றவேண்டும். இதை குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு முறை செய்ய வேண்டும்.
ஆந்தராக்னோஸ்
இதனை கட்டுப்படுத்த துளிர்விடும் பருவத்தில் 1% போர்டாக்ஸ் கலவையுடன் பெரஸ் சல்பேட்டை கலந்து தெளிக்க வேண்டும்.
நுனிக்கருகல்
நோய் தாக்கப்பட்ட கிளைகளை வெட்டி நீக்க வேண்டும். பிறகு அந்த இடத்தில் 1 சதவீதம் போர்டோக்கலவை மருந்தினை தடவி விடவேண்டும்.
அறுவடை
கன்றுகள் நட்ட மூன்றாவது வருடத்தில் காய்ப்புக்கு வந்து விடும். மார்ச் – மே மாதங்களில் அறுவடை செய்யலாம். நன்கு பழுத்த முந்திரிப் பழங்களிலிருந்து கொட்டைகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, வெய்யிலில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நன்கு உலர்த்தவேண்டும்.
மகசூல்
ஒரு வருடத்தில் ஒரு மரத்தில் இருந்து 3 முதல் 4 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
ஊடுபயிர்
கன்றுகள் நட்ட, மூன்று ஆண்டுகளுக்கு பின்பே, முந்திரியை சாகுபடி செய்ய முடியும். எனவே இடைப்பட்ட காலத்தில் உளுந்து, பச்சை பயறு, நிலக்கடலை போன்றவற்றை பயிரிடலாம்.
பயன்கள்
முந்திரியில் மாங்கனீசு, பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற கனிம தாதுக்கள் அதிக அளவில் உள்ளன.
முந்திரி பருப்பில் குறைந்த அளவிலான சியாசாந்தின் உள்ளது. இது கண்ணில் உள்ள கருவிழி படலத்தை பாதுகாக்க உதவுகிறது.
கையளவு முந்திரிப் பருப்புக்களை உட்கொள்வதால் பசியை நீண்ட நேரத்திற்கு கட்டுப்படுத்த முடியும்.
முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான ஒலியிக் மற்றும் பால்மிட்டோலெயிக் அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகிறது.
முந்திரி பருப்பில் அதிகமாக உள்ள செலினியம் ஊட்டச்சத்தானது உடலுக்கு நோய் எதிர்ப்பு திறனை தரவல்ல நொதிகளான குளுடாதயோன் பெராக்ஸிடேஸ் நொதிக்கு இணை காரணியாக செயல்படுகிறது.
தேமோர், அரப்பு மோர், மீன் கரைசல் தயாரிக்கும் முறை
தேமோர் கரைசல்
தேவையான பொருட்கள்
புளித்த மோர் – 5 லிட்டர்
தேங்காய்ப்பால் – 1 லிட்டர்
தேங்காய் துருவல் – 10 தேங்காய்
அழுகிய பழங்கள் – 10 கிலோ
தயாரிப்பு முறை
புளித்த மோர் மற்றும் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் இட்டு, நிழலான இடத்தில் வைக்க வேண்டும்.
இவற்றுடன் 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை பொட்டலம் போல் கட்டி அதில் போட வேண்டும்.
தினமும் கரைசலைக் கலக்கி வரவேண்டும்.
ஏழு நாட்களில் தேமோர்க் கரைசல் தயாராகி விடும். 8-ம் நாள், ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி தேமோர்க் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் செடிகளுக்குத் தெளிக்கலாம்.
நன்மைகள்
தேமோர்க் கரைசல் என்பது பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது.
பயிர்களில் பூ எடுக்கும் சமயத்தில் இக்கரைசலைத் தெளித்தால், பூக்கள் அதிகமாகப் பூக்கும்.
இக்கரைசல் தெளிக்கப்பட்டு விளைந்த காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும்.
அரப்பு மோர் கரைசல்
தேவையான பொருட்கள்
புளித்த மோர் – 5 லிட்டர்
இளநீர் – 1 லிட்டர்
அரப்பு இலைகள் – 1 முதல் 2 கிலோ
500 கிராம் பழ கழிவுகள் அல்லது பழ கழிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட 1 லிட்டர் சாறு.
தயாரிக்கும் முறை
அரப்பு இலைகளை நீருடன் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.
பின்னர் இதனுடன் புளித்த மோர், இளநீர் மற்றும் பழச்சாறு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்தக் கரைசல் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஒருவார காலத்திற்கு வைத்திருக்க வேண்டும். இந்த ஒருவார காலத்தில் நொதிக்க தொடங்கி விடும். இந்த நொதித்த கரைசலே அரப்பு மோர் கரைசல் ஆகும்.
அரப்பு இலைத் தூள் பயன்படுத்துவதாக இருந்தால், பழ கலவைகளுக்கு பதிலாக பழ சாறு பயன்படுத்த வேண்டும். நான்கு பொருட்களையும் கலந்து அதனை ஏழு நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும்.
ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.
நன்மைகள்
அரப்பு மோர் கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் தாக்குதல் இருக்காது.
இது தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் பூஞ்சை நோய்களுக்கு எதிர்ப்பு தன்மை உருவாகிறது.
அரப்பு மோர் கரைசலை பூப் பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறையப்பூக்கள் பூக்கும்.
அரப்பு மோர் கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால் பயிர்கள் குறைந்த காலத்தில் நன்கு வளர்ச்சியடைந்து, அதிக விளைச்சல் மற்றும் மகசூல் கிடைக்கும்.
மீன் கரைசல்
தேவையான பொருட்கள்
மீன் கழிவுகள் – 1 கிலோ
பனை வெல்லம் (அ) நாட்டு சர்க்கரை – 1 கிலோ
தயாரிக்கும் முறை
உணவுக்கு பயன்படாத மீன் கழிவுகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து கலக்க வேண்டும்.
இதனை ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும்.
நாற்பது நாட்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும். இந்த திரவத்திலிருந்து கெட்டை வாடை வீசாது. பழவாடை வீசும். இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்.
ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். தேவைப்படும் போது மீன் அமினோ அமிலத்தை எடுத்துக் கொண்டு பிளாஸ்டிக் வாளியை காற்று புகாமல் மூடி வைத்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.
பயன்கள்
மீன் அமினோ அமிலம் ஒரு முக்கிய வளர்ச்சி ஊக்கியாக செயல்படும் தன்மை கொண்டது.
தழைச்சத்துக்கு யூரியாவை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த அமிலத்தை பயன்படுத்தலாம்.
மீன் அமினோ அமிலத்தை பூக்கும் தருணத்தில் பயன்படுத்தும் போது பூக்கள் நன்றாக பூக்கும் மற்றும் காய்க்கும் திறன் அதிகரிக்கும். இந்த அமிலம் சுற்றுச்சூழலுக்கு எந்த விதமான பாதிப்புகளையோ, பக்கவிளைவுகளையோ ஏற்படுத்துவது கிடையாது.
E.M. என்னும் திற நுண்ணுயிரி
தேவையான பொருட்கள்
Effective Microorganisms என்பதின் சுருக்கமே E.M. ஜப்பான் நாட்டில் 1980களில் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த திற நுண்ணுயிரி. இன்று 120 நாடுகளில் விவசாயம், சுற்றுச்சூழல், கால்நடைப் பராமரிப்பு துறைகளில் பயன்படுகிறது. இது இயற்கை இடுபொருள் என Ecocert அமைப்பு சான்று தந்துள்ளது.
வகைகள்
E.M 1 திற நுண்ணுயிரி
E.M 2 திற நுண்ணுயிரி
E.M 1 திற நுண்ணுயிரி
E.M 1 என்பது உறங்கும் நிலையிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் தொகுப்பாகும். இது நொதித்த பிறகே பயன்படுத்தப்பட வேண்டும்.
E.M 2 திற நுண்ணுயிரி
E.M 2 தயார் செய்ய 1:1:20 என்ற விகிதத்தில் E.M 1 : வெல்லம்(அ)கரும்புச் சர்க்கரை: குளோரின் கலக்காத நீர் ஆகியவற்றை 5-10 நாட்கள் பிளாஸ்டிக் கலன்களில் காற்று புகாமல் நிழலில் வைக்க வேண்டும்.
இவ்வாறு வைக்கப்பட்ட கரைசல் நொதிக்க ஆரம்பிக்கும். உருவாகும் வாயுவை வெளியேற்ற தினமும் 1 நொடி மூடியை திறந்து மூட வேண்டும். இந்த கரைசலே E.M 2 ஆகும். நொதிக்க வைக்க கண்ணாடிக் கலன்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நன்மைகள்
இக்கரைசலை ஒரு மாத காலத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும். வீட்டின் சமையலறை, குளியலறை போன்ற இடங்களிலும் E.M 2 கரைசலை உபயோகப்படுத்தலாம். இவ்விடங்கள் விரைவாக உலர்ந்து, ஈரமின்றி இருப்பதுடன் ஈக்களும் வராது. துர்வாசனையும் நீங்கும்.
இது மிகச்சிறந்த இயற்கை ஈடுபொருள். கழிவுகளை இதனை கொண்டு மக்கச் செய்து மறுசுழற்சி செய்யலாம்.
தாவர வேர்களில் ஒட்டிக்கொண்டு வேரையும், மண்ணையும் இணைத்து மண்ணிலுள்ள பாஸ்பரஸை நேரடியாகவும், மறைமுகமாக மற்ற சத்துகளையும், நீரையும் எளிதாக உறிஞ்சி தாவரங்களுக்கு தரவல்லது. இது வேர்களை அதிக அளவில் உண்டாக்குவதால் விளைச்சல் அதிகரிக்க உதவுகிறது.
மண்ணிலுள்ள நோய் உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை ஆகியவை தாவரங்களை தாக்காமல் பாதுகாக்கிறது.
வேல்ஸ் திராட்சை. தாவர பண்புகள்: தோற்றம், பழங்கள்
வேல்ஸ் திராட்சை வகையின் விளக்கம்
Veles ஒரு திராட்சை, இது உக்ரைன் (Zaporozhye), Vitaliy Zagorulko ஒரு வளர்ப்பாளர் மூலம் வளர்க்கப்பட்டது. இது ரஸ்போல் மற்றும் சோபியாவின் கலப்பினமாகும். சில நேரங்களில் இந்த திராட்சையின் விளக்கத்தில் "பிங்க் சுல்தானா" என்ற வார்த்தையை நீங்கள் காணலாம். வளர்ப்பவரின் சேகரிப்பில் பல வகைகள் உள்ளன, ஆனால் வேல்ஸ் பல தோட்டக்காரர்களின் பெருமை.
இன்றுவரை, இந்த வகை மிகவும் நம்பிக்கைக்குரியது, தேவை மற்றும் தொழில் வல்லுநர்கள் மற்றும் அமெச்சூர்களால் வளர்க்கப்படுகிறது. முதன்முறையாக, இந்த வகை 2009 இல் பரந்த பார்வையாளர்களுக்கு விற்கப்பட்டது. அப்போதிருந்து, இந்த பழ புதரின் புகழ் குறையவில்லை. ஒரு ஆரோக்கியமான புதர் பெற எளிதான வழி ஒரு நாற்றங்கால் இருந்து ஒரு நாற்று வாங்க வேண்டும். வளர்ந்து வரும் அனுபவம் இல்லாமல், ஒரு வகை மாதிரியை வளர்ப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
கோடைகால குடியிருப்பாளர்களின் மன்றத்திலிருந்து வேல்ஸ் திராட்சைகளின் புகைப்படம்:
வேல்ஸ் ரஷ்யாவில் (மாஸ்கோ பிராந்தியம், யூரல்ஸ், காகசஸ்) மற்றும் உக்ரைன் (அனைத்து பகுதிகள்) மற்றும் அண்டை நாடுகளிலும் தீவிரமாக வளர்க்கப்படுகிறது. உறைபனி எதிர்ப்பு பண்புகள்: நடுத்தர அல்லது பலவீனமான. தங்குமிடம் வடிவில் குளிர்காலத்திற்கான உறைபனி பாதுகாப்பு பரிந்துரைக்கப்படுகிறது.
பல்வேறு நன்மைகள் மத்தியில்:
ஆரம்ப முதிர்வு;
பல்வேறு பாதுகாப்பின் உயர் பண்புகள்;
நடவு செய்த பிறகு, அது எளிதில் வேர் எடுக்கும், ஒன்றுமில்லாத தன்மை, நோய் எதிர்ப்பு;
தாவரத்தின் அதிக மகரந்தச் சேர்க்கை;
வளர்ப்பு குழந்தைகளின் உருவாக்கம், நல்ல வளர்ச்சி;
நடவு செய்த பிறகு திறந்த நிலத்தில் நாற்றுகளின் உயிர்வாழ்வு விகிதம்.
வேல்ஸ் தீமைகள்:
சிறந்த உறைபனி எதிர்ப்பு அல்ல;
வளர்ச்சி தூண்டுதல்களைப் பயன்படுத்தும் போது, பெர்ரி உதிர்வதைக் காணலாம், மழை பெய்யும் போது, பழங்கள் அழுகும்;
கவனிப்பைக் கோருகிறது.
தாவர பண்புகள்: தோற்றம், பழங்கள்
வேல்ஸ் திராட்சை ஒரு உன்னதமான இனிப்பு சுவை கொண்டது, இது சுல்தானா வகைகளுக்கு பொதுவானது. நம்பமுடியாத பெரிய நொறுங்கிய தூரிகைகளில் வேறுபடுகிறது (இதன் பொருள் கொத்துகளில் உள்ள பெர்ரி இறுக்கமாக உட்காரவில்லை). ஒரு கொத்து எடை 1,5 கிலோ வரை அடையலாம். கொடி சரியாக பழுக்க வைக்கும், கொத்துகளின் வடிவம் கூம்பு அல்லது சிலிண்டர் ஆகும். விதைகள் இல்லை, எப்போதாவது ஒரு அடிப்படை வடிவத்தில் வரும். பெர்ரி நிறம்: பணக்கார இளஞ்சிவப்பு, லேசான வெள்ளை பூச்சுடன். வலுவான முதிர்ச்சியுடன், பெர்ரிகளின் பிரகாசம் மிகவும் தீவிரமாக இருக்கும், சிவப்பு நிறம் வரை. புதர்கள் நடுத்தர அளவிலானவை, வளர்ச்சி மிதமானது. சாகுபடி வகை: தண்டு, குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி, ஹெட்ஜ்.
நடவு செய்வதற்கு ஒரு தளத்தைத் தேர்ந்தெடுப்பது, மண்ணின் வகையை கணக்கில் எடுத்துக்கொள்வது, நீர்ப்பாசனம் செய்வது
களிமண், களிமண் அல்லது மணல் மண் வேல்ஸுக்கு ஏற்றது. மற்ற திராட்சைகளைப் போலவே, இந்த பழ ஆலை ஒளி குறைபாட்டை பொறுத்துக்கொள்ளாது. குறைந்த வெளிச்சத்தில், பெர்ரி மிகவும் சிறியதாக வளரும் மற்றும் போதுமான இனிப்பு இல்லை. வேல்ஸ் திராட்சை ஒரு ஆதரவுடன் திறந்த பகுதியில் நடப்பட வேண்டும். அருகிலுள்ள கட்டிடத்தில் இருந்து தூரம் குறைந்தது 50 செ.மீ., இளம் நாற்றுகளுக்கு இடையே 1,5 மீட்டர் இடைவெளி காணப்படுகிறது. இலையுதிர் காலத்தில் நடவு செய்வதற்கான ஒரு முக்கியமான விதி: நாற்று தரையில் மாற்றப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு துளை தோண்டப்படுகிறது. மற்றும் நடவு செய்வதற்கான இரண்டாவது தேவை: தாவரத்தை பானை அல்லது பெட்டியிலிருந்து தரையில் மாற்றும்போது நாற்றுகளின் வேர் கழுத்தை ஆழப்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை. நடவு செய்த உடனேயே, தாவரங்கள் பாய்ச்சப்படுகின்றன, பின்னர் மண் தழைக்கூளம் செய்யப்படுகிறது, இதனால் ஈரப்பதம் மெதுவாக ஆவியாகும்.
பருவகால பராமரிப்பு, சீரமைப்பு மற்றும் கருத்தரித்தல்
வேல்ஸ் திராட்சையைப் பராமரிப்பதற்கான விரிவான திட்டம் எதுவும் இல்லை, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இது தோட்டக்காரரிடமிருந்து சிறிய சேர்த்தல்களுடன் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தரங்களுடன் இணங்குகிறது, எடுத்துக்காட்டாக, வசந்த காலத்தில் மட்டுமே சில கத்தரிக்காய், மற்றும் யாரோ இலையுதிர் கத்தரித்து பரிந்துரைக்கின்றனர். 4-5 கண்கள் (மொட்டுகள்) புதரில் இருக்கும் போது குறுகிய கத்தரித்தும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
உரங்களுடன் அனைத்து கையாளுதல்களும் பூக்கும் முன் செய்யப்படுகின்றன. குளிர்காலத்தில், புதரை அக்ரோஃபைபர் மூலம் மூடி வைக்கவும், இது வேர் அமைப்பு மற்றும் தளிர்களை உறைபனியிலிருந்து பாதுகாக்கும்.
தூய்மையானதரையில்சூரியவெப்பத்தில்காயவைக்கவேண்டும். மழையில்நனையவிடக்கூடாது.
ஒவ்வொருநாளும்மூன்றுஅல்லதுநான்குமுறைகிளறிவிட்டுசீராககாயவிடவேண்டும். தினமும்மாலையில்கிழங்குகளைஒன்றாகக்குவித்துதார்பாலினால்மூடிவிடவேண்டும். சுமார் 10 அல்லது 15 நாட்களில்மஞ்சள்காய்ந்துவிடும். கிழங்குகள்உறுதியாகமாறிவிடும்.
நடவுசெய்து 20வதுநாள்முதல்களைஎடுக்கவேண்டும். அப்பொழுதுமுளைக்காதகரணைகளுக்குபதில்புதியகரணைகளைநடவுசெய்துவிடவேண்டும். பிறகு
3ம்மாதம்களைஎடுத்துமண்அணைக்கவேண்டும்.
பலாமரமானதுஇந்தியா, பர்மா,
இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ்,
பிரேசில், கென்யாஆகியநாடுகளில்வளர்கிறது. தமிழ்நாட்டில்நீலகிரி, கீழ்ப்பழனிமலை, வயநாடு, குற்றாலம், ஆனைமலை,
கொல்லிமலைபகுதிகளில்விளைகிறது.
பலாப்பழம்ஊட்டச்சத்துமிக்கது. நார்சத்துஅதிகமுள்ளபலாப்பழம்செரிமானத்துக்குஉதவுகிறது. வைட்டமின் A , B , C , கால்சியம்உள்ளிட்டசத்துக்கள்நிறைந்தஇப்பழம்முதுமையைதடுக்கவல்லது.
பலாப்பிஞ்சினைசமைத்துஉண்டா
கோழி வளர்ப்பு
நாட்டுக்கோழி வளர்ப்பதை, நாகரிகம் கருதி கைவிட்டவர்கள்கூட இன்றைக்குப் போட்டி போட்டுக் கொண்டு வளர்ப்பதற்குக் காரணம், அதில் கிடைக்கும் வருமானம்தான். கணினியின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள்கூட பொழுதுபோக்காக _ பகுதிநேர வேலையாக நாட்டுக்கோழி, வான்கோழி, கின்னிக்கோழி, சேவல், வாத்து போன்ற பல்வேறு கால்நடைகளை வளர்த்து விற்பனை செய்பவர்களும் உண்டு. உலக அளவிலான பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க, இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் புறக்கடை முறையில் கோழிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.
அதிலும், நாட்டுக்கோழி வளர்ப்பில் நல்ல பலனைக் காண்போர் அதிகம். நாட்டுக்கோழி வகைகள், கோழி வளர்ப்பு முறைகள், கோழிக்குஞ்சுகளை உற்பத்தி செய்யும் முறை, கோழிகளுக்கும் குஞ்சுகளுக்குமான தீவன முறைகள், அலங்காரக்கோழிகளின் மூலம் அதிக வருவாய் பெறும் முறைகள், புறக்கடைக் கோழி வளர்ப்பில் அமெரிக்க முறை… என கோழி வளர்ப்பில் உள்ள ஏராளமான செயல்முறைகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஜி.பிரபு.
கால்நடை மருத்துவர்கள், கோழிப் பண்ணை முதலீட்டாளர்கள்… என பல்வேறு நிபுணர்களின் கோழி வளர்ப்பு அனுபவம் மற்றும் மருத்துவம் குறித்தக் கருத்துகளும், வருமானம் ஈட்டக்கூடிய வழிமுறைகளும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு உள்ளன. ‘கையில எப்பவும் பணம் புழங்கிக்கிட்டே இருக்கணும்’ என்று நினைப்பவர்களுக்கு, நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில் நிச்சயம் கை கொடுக்கும்.
செம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்
செம்மறியாடுகளுக்கு வெள்ளாடு வகைகளுக்கு அமைப்பது போல விலை அதிகம் செலவு செய்து எந்த விதமான பெரும் கொட்டகை அமைக்க வேண்டியது இல்லை .
குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்தே பராமரித்து கொள்ள இயலும்.
செம்மறி ஆட்டு பண்ணை அமைக்க மிகவும் குறைந்த அடிப்படை செலவுகள் போதுமானது .
சிறிய அளவில் தொடங்கி அதிலிருந்து செம்மறியாடு எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.
செம்மறியாடு நமக்கு இறைச்சியை கொடுக்கிறது. மேலும் சில வகை செம்மறி ஆடுகள் நாம் உடுத்த தேவையான உல்லன் நூல் உருவாக்க தேவையான ரோமத்தையும் தருகிறது.
இவை பெரும்பாலும் வேருடன் உண்டு விடுவதால் நிலத்தில் களைகள் கட்டுப்படுத்த படுகிறது .
மேய்ச்சல் முறையில் பல வகையான செடிகளை உண்டு வளருகின்றன.அதனால் நமக்கு இன்றல்ல இறைச்சி கிடைக்கிறது .இதன் காரணமானாக நமது நாட்டில் பலருக்கு ஆட்டுக்கறி விரும்பி உண்பதால் வேலைவாய்ப்பும் வருமானமும் கிடைக்கிறது .
இவ்வாறு வளர்த்தப்பதால் நமக்கு பல நன்மைகளுடன் வருமானம் தருகிறது.
நிலத்திற்கு தேவையான உரமும் கிடக்கிறது .ஆட்டு கிடை போடுவதால் நிலமும் நல்ல வளமடைகிறது .
அறுவடை காலங்களில் சிதறும் தானியங்கள் நாம் எடுக்க முடியாமல் சென்றாலும் இந்த வகை செம்மறி ஆடுகள் கொண்டுள்ள உதட்டு அமைப்பின் மூலம் அதனை உண்டு விடுகிறது .அதற்க்கு தீவனமும் ஆச்சு , குடவே நல்ல உரமும் ஆச்சு .
செம்மறியாட்டுக் குட்டி வளர ஒரு வருடம் அதாவது 12 மாதம் ஆகும்.
ஆண்டுக்கு 4 முறை தடுப்பூசிகள் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி அளிக்க வேண்டும்.
மார்ச் ஏப்ரல் மாதங்களில் கால் வாய் நோய்க்கான தடுப்பூசி
ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் பி பி ஆர் தடுப்பூசி
ஆகஸ்ட் மாதத்தில் கால் வாய் நோய் தடுப்பூசி
அக்டோபர் மாதத்தில் துள்ளுமாரி தடுப்பூசி ஆகியவற்றை போட வேண்டும்.
குடற்புழு மருந்துகளை பிறந்த 30 வது நாள், 2, 3, 4, 6, 9வது மாதங்களில் போட வேண்டும்.
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு மூலம் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு.
இனப்பெருக்கத்தில் குட்டிகளின் இறப்பு விகிதம் குறைவு.
குடற்புழு நீக்க அட்டவணை
ஆடுகளின்வயது
பரிந்துரைகள்
2வது மாதம்
நாடாப்புழுக்களுக்கான மருந்து
3வது மாதம்
நாடாப்புழுக்களுக்கான மருந்து
4வது மாதம்
நாடாப்புழுக்களுக்கான மருந்து
5வது மாதம்
உருண்டைப்புழுக்களுக்கான மருந்து
6வது மாதம்
உருண்டைப்புழுக்களுக்கான மருந்து
9வது மாதம்
உருண்டை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
12வது மாதம்
தட்டைப் புழுக்களுக்கான மருந்து
ஆறு மாதம் வரை ஆட்டுக்குட்டிகளுக்கு மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதாவது பருவமழைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு முறையும், பருவ மழையின் போது ஒரு முறையும், பருவ மழைக்குப்பின் இருமுறையும் கொடுக்க வேண்டும்.
மாதம்
பரிந்துரைகள்
ஜனவரி - மார்ச்
தட்டைப்புழுவிற்கான மருந்து
ஏப்ரல் - ஜீன்
உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
ஜீலை - செப்டம்பர்
தட்டைப் புழுவிற்கான மருந்து
அக்டோபர் - டிசம்பர்
உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை
ஆடுகளுக்கு தகுந்த குடற்புழு மருந்தைத் தேர்வு செய்யவேண்டும்.
தூள் மருந்தைப் பயன்படுத்தும் பொழுது வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது கரையாத மருந்துத் துகள்களும் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
அதிகாலையில், வெறும் வயிற்றுடன் உள்ள ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.
மருந்துக் கலவையை வாயின் வழியாக ஊற்றும் பொழுது புரையேறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
குடிநீரில் குடற்புழுநீக்க மருந்தும் நோய் எதிர்ப்பு மருந்தும் ஒன்றாக கலந்துக் கொடுக்கக்கூடாது.
குடற்புழுக்களின் வகைகளையும் முட்டைகளையும் அறிந்து மருந்து கொடுப்பது சிறந்தது.
தொடர்ந்து ஒரே மருந்தைக் கொடுக்காமல் மாற்றித் தருவது அவசியம்.
வெள்ளாடுகளுக்கான தடுப்பூசி அட்டவணை
வ.எண்
நோய்மற்றும்தடுப்பூசியின்பெயர்
முதல்தடுப்பூசி
தொடர்தடுப்பூசிகள்
சிறப்புக்கவனம்
1.
பிபிஆர் நோய் (பெஸ்ட்டெஸ்பெட்டிட்ஸ் ரூமினென்ட்ஸ்)
3-4 மாதம்
ஆண்டுக்கு ஒரு முறை
தகுந்த நோய்ப் பாதுகாப்பு நோய் கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள வேண்டும்.
2.
கோமாரி நோய் தடுப்பூசி (திசு வளர் கோமாரித் தடுப்பூசி)
2 மாத வயதில்
ஆண்டுக்கு ஒரு முறை
நோய்க்கிளர்ச்சியின் போது பாதிக்கப்படாத ஆடுகளுக்கும் அண்டைக் கிராமகால்நடைகளுக்கும் தடுப்பூசி அளித்தல் அவசியம்.
3.
துள்ளுமாரி நோய் தடுப்பூசி (துள்ளுமாரி நோய் தடுப்பூசி : துள்ளுமாரி டாக்சாய்டு ஊசி)
6 வார வயதில்
ஆண்டுக்கு ஒரு முறை
மழைக்காலத்திற்கு முன்னரும், குட்டி ஈனும் பருவங்களில் தாய் ஆடுகளுக்கும் தடுப்பூசி அளித்தல் அவசியம்.
தொண்டை அடைப்பான் தடுப்பூசி (பார்மலின் வழி செயலிழக்கப்பட்ட தொண்டை அடைப்பான் தடுப்பூசி)
6 மாத வயதில் நோய் காணும் பகுதிகளில் மட்டும்)
ஆண்டுக்கு ஒரு முறை
மழைக்காலத்திற்கு முன்னர் ஒரு தடுப்பூசி அளித்தல் அவசியம்.
கேள்வி பதில்
1. எந்தெந்த ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் அவசியம் என்பதை எப்படி அறிவது?
கண்ணின் உட்சவ்வு வெளிறி போயிருக்கும், மூக்கில் சளி, ஆட்டின் பின் பகுதியில் கழிச்சலினால் சாணம் ஒட்டிக் கொண்டிருக்கும். தாடையில் வீக்கம், உடல் மெலிந்து காணப்படும். இது போன்ற ஆடுகளுக்கு மட்டும் குடற்புழு நீக்கம் செய்தல் அவசியமானதாகும்.
2. ஏன் எல்லா ஆடுகளுக்கும் குடற்புழு நீக்கம் செய்தல் கூடாது?
தேவையில்லாமல் எல்லா ஆடுகளுக்கும் அடிக்கடி குடற்புழு நீக்கம் செய்தால் குடற்புழுக்களுக்கு எதிரான மருந்தின் எதிர்ப்புத்திறன் குறைகிறது. குடற்புழுக்களின் எண்ணிக்கை அதிகமாகி மற்ற ஆடுகளுக்கும் பரவுகிறது. ஆகையால், தேவையான ஆடுகளுக்கு மட்டும் குடற்புழு நீக்கம் செய்தால் போதுமானது.
3. பாமாச்சா அட்டை எதற்கு பயன்படுகிறது?
பாமாச்சா அட்டையை பயன்படுத்தி ஆட்டின் கண்ணின் உள்சவ்வைப் பார்த்து இரத்தசோகை அறியலாம்.
நமது பூமியின் வயது ஏறத்தாழ 460 கோடி ஆண்டுகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 100 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான். ஒரு செல் உயிரி தோன்றியிருக்கிறது. மனிதர்கள் தோன்றி 4.5 லட்சம் ஆண்டுகளே ஆகின்றன. நாம் ஏர் கட்டி விவசாயம் செய்ததெல்லாம் ஆறாயிரம் ஆண்டுகளாகத்தான். அதற்கு முன்னரும் இயற்கை செழிப்பாக இருந்திருக்கிறது.
அந்தக் காலங்களிலும், இப்போது நிலத்தை இடைவிடாமல் உழுது கொண்டிருப்பவை மண்ணிலுள்ள உயிரினங்களே.
உயிருள்ள மண் 3 தன்மைகளை கொண்டது.
இயற்பயில் தன்மை (எ.கா. பொலபொலப்புத் தன்மை)
உயிரியல் தன்மை (எ.கா. நுண்ணுயிரிகள், மண்புழுக்கள் இருப்பது)
இரசாயனத் தன்மை (எ.கா.ஊட்டச்சத்துகள் கொண்டிருப்பது)
இரசாயன உப்புகள் (உரம்) கடந்த 40 ஆண்டுகளாக இட்டதால் நிலம் முதலில் உயிரியல் தன்மையை இழந்தது. பின் இரசாயனத் தன்மையையும் இறுதியில் இயற்பியல் தன்மையும் இழந்து விட்டது. கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருந்த மண்ணின் உயிரோட்டம் 40 ஆண்டுகளில் அழிக்கப்பட்டு மண் மலடாக்கப்பட்டு விட்டது. நம் விளை நிலத்து மண்ணில் மீண்டும் உயிரோட்டம் ஏற்படுத்த வேண்டும். நுண்ணுயிரிகளை வளரச் செய்ய வேண்டும். மண்புழுக்களும், பிற மண்ணுயிர்களும் வாழும் வகையில் மண்ணை சரி செய்ய வேண்டும். இது நடக்கும் போது மென்மையான வேர் நுனி எளிதில் மண்ணுள் இறங்கும் வண்ணம் பொலப்பொலப்பானதாக மாறும். வேர் சுவாசிக்கத் தேவையான காற்று மண் துகள்களில் சிறிய துளைகளில் தங்கும். வேர் உறிஞ்ச தேவைப்படும் ஈரம் பெருந்துளைகளில் இருக்கும். ஈரமும் காற்றும் சம அளவில் அருகருகே இருக்கும். அரிய நிலையை மண் அடைந்தால் தான் மண் வளமானதற்கு அடையாளம், நலமானதற்கு அறிகுறி. அதற்குத் தாவரக் கழிவுகளையும், விலங்குக் கழிவுகளையும் மண்ணில் சேர்க்க வேண்டும். கெட்டுப்போன நிலத்தைப் பண்படுத்துவதற்கு நீண்டகாலம் ஆகும் என்பது பழைய நிலை. இப்போது கலவை எரு, மண்புழு எரு, உர உயிரிகள், பலபயிர் வளர்ப்பு, அமுதக் கரைசல் ஆகிய உத்திகள் மூலம் மண்ணை ஒரு வருடக காலத்திற்குள், இழப்புகள் இன்றி செய்ய முடியும் என்று தமிழகத்து விவசாயிகள் செய்து காட்டியுள்ளனர். வளமான, ஆரோக்கியமான மண்ணே வளமையான வேளாண்மைக்கு அடித்தளமாகும்.
அமுத கரைசல்
இன்று அமுத கரைசல் பற்றி யாராவது தெரியாமல் இருந்தால் தமிழகத்தில் செய்தி ஊடகங்களை கவனிக்காதவராக இருப்பார்கள். அமுத கரைசலை தெளிப்பான் கொண்டு தெளிக்கவும், பாயும் நீரில் கரைத்து விடவும் செய்யலாம்.
தேவைப்படும் பொருட்கள் :
பத்து லிட்டர் தண்ணீர்
ஒரு கிலோ சாணம்
ஒரு லிட்டர் மூத்திரம் 4.25 கிராம் நாட்டுச்சர்க்கரை.
ஒரு குடம் தண்ணீர் பிடிக்கும் பானை அல்லது குவளையில் மேலே சொன்னவைகளை இட்டு கலக்குதல் வேண்டும். ஒரு குச்சியால் வலப்புறம் 50 சுற்றும் இடப்புறம் 50 சுற்றும் சுற்ற வேண்டும். காலை, மதியம், மாலை என்று மூன்று வேளை கலக்க வேண்டும். ஒரு பகல் ஒரு இரவு ஆக, 24 மணிநேரத்தில் ஊட்டம் (டானிக்) தயாராகிவிடும்.
ஒரு லிட்டர் அமுத கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். இரண்டு நாட்களில் பயிர் பச்சை கொடுத்து வளரத் தொடங்கும். இன்னொரு வழியும் உண்டு. 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ சாணம், 20 லிட்டர் மூத்திரம், 2 கிலோ சர்க்கரை கலந்து மூன்று வேளை கலக்கி பாயும் நீருடன் கலந்து விட வேண்டும். வயல் பெரியதாக இருந்தால் ஒரே இடத்தில் வைப்பது போதாது. உள்ளே தள்ளித் தள்ளிக்கொண்டு போய் வைப்பது அவசியம். வயல் தூரத்தில் இருந்தால், தேனீர், காபி விற்பவர்கள் போல பைப்பு பொருந்திய குவளையில் எடுத்துச் சென்று வாய்மடையில் வைப்பது ஆக பொருந்தும். அமுத கரைசல் தயாரிப்பதும், பயன்படுத்துவதும் மிக எளிமையாக இருப்பதால் அன்றாடம் மாடு கொடுக்கும் கழிவுகளை அமுதமாக மாற்றி பயிர்களுக்கு அளிப்பது கடன்பட்ட உழவர்களை கரை சேர்க்கும் உத்தியாகும். பயிருக்கு மாட்டூட்டத்தையும். அமுதகரைசலையும் 10 நாட்கள் இடைவெளியில் தெளிப்பது செலவை குறைக்கும்.
மூலிகைப் பூச்சி விரட்டி
உழவர்கள் காலங்காலமாக கடைபிடித்து வந்த இயற்கை வழி சாகுபடி முறை பூச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பச்சைப் புரட்சியின் சாதனையாக ரசாயன நஞ்சுகளைப் பயன்படுத்தி பூச்சிகளைக் கொல்ல தொடங்கியதும் உணவு பண்டம் அனைத்தும் நஞ்சானது மட்டுமின்றி, பூச்சிகளும் சாகத் தயாராக இல்லை. இயற்கை வழியில் உழவர்கள் மூலிகைப் பூச்சிவிரட்டி தயாரித்து, பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர்.
மூலிகை பூச்சி விரட்டி வேலை செய்யும் விதம் எப்படி?
மூலிகை பூச்சி விரட்டிகள் மூன்று வகையான இலைகளைக் கொண்டு தயாரிக்கப்டுகிறது. ஒன்று, தொட்டால் வாசனையடிக்கக் கூடிய செடிகள், இரண்டு தின்றால் கசக்கக் கூடிய செடிகள், ஒடித்தால் பால் வரக்கூடிய செடிகள் எடுத்துக்காட்டாக ஆடாதொடை, ஆடுதீண்டாபாளை, ஊமத்தை, எருக்கு, தும்பை, துளசி, அத்தி, சோற்றுக் கற்றாழை, பெரண்டை, பீநாரி, பப்பாளி, சீதா, புங்கன், நொச்சி, வேம்பு, தழுதாளை, காட்டாமணக்கு, வேலிப்பருத்தி, வரிக்குமுட்டி, உண்ணிமுள் செடி, நித்தியகல்யாணி, உரக்கொளறை (கிளைரிசிடியா). இவற்றில் அடையாளம் தெரியாதவை இருந்தால் கவலைப்பட தேவையில்லை. தேவை நான்கு ஐந்து செடிகள் மட்டுமே. அவசியம் நெய்வேலி காட்டாமணக்கு செடி பயன்படுத்த வேண்டும்.
ஒரு சாக்கு இலைகளை கொண்டு வந்து உரலில் இடித்து மண் தொட்டி அல்லது சிமெண்ட் தொட்டியையும் பயன்படுத்தலாம். பானைக்குள் இருக்கும் மூலிகை சட்னி மூழ்கும் அளவுக்கு ஆடு அல்லது மாட்டுச் சிறுநீரை ஊற்றி நிரப்பவும்.
மேலே குறிப்பிட்ட கலவை பத்து நாட்களில் மூலிகைக் கரைசலில் இருந்து தாங்க முடியாத அளவுக்கு நெடி வரக்கூடும். பூச்சி விரட்டி தயாராகி விட்டதற்கு இதுவே அடையாளம். ஒரு லிட்டர் பூச்சி விரட்டியுடன் பத்து லிட்டர் தண்ணீர் கலந்து பயிர் மீது தெளிக்க வேண்டும்.
மூலிகை பூச்சி விரட்டி செயல்படும் விதம்
பூச்சிகள் எண்ணிக்கையில் மிகுந்தவை. ஆனால் உயிரினங்களில் இது சிற்றினம். இவை இயல்புத் தூண்டலால் குறிப்பிட்ட செடிகளில் இலையையோ, காயையோ தின்று உயிர் வாழ்கின்றன. இதற்காக இவை இலைகளில் தொட்டணர்ந்தே செடியை இனம் காணுகின்றன. பல வகை மணம் கொண்ட மூலிகைகளில் தயாரிக்கப்பட்ட பூச்சி விரட்டி பயிர்களின் வாசனையை மாற்றி விடுகிறது. இதனால் தாய்ப்பூச்சி பயிரின் மீது அமர்ந்து முட்டையிடுவது தவிர்க்கப்படுகிறது.
மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்
எல்லா பூச்சிகளும் பயிர்களின் விரோதிகள் அல்ல. பூச்சிகளை உண்ணும் தட்டான், பொறிவண்டு, மூக்கு வண்டு, சிலந்தி, கண்ணாடி சிறகி போன்றவை இருக்கவே செய்கின்றன. இத்தகைய நல்ல பூச்சி நண்பர்களை அடையாளம் கண்டு வைத்திருப்பது மிகவும் அவசியம். பூச்சிகளை பார்த்தவுடன் நஞ்சு தெளிப்பது கூடாது. பூச்சிகள் வந்த பின்பு தான் அவைகளை உண்ணும் இரையுண்ணிகள் நமது நிலத்திற்கு வரும். குறிப்பாக நூறுக்கும் மேற்பட்ட பறவைகள் பயிர் செடிகளை உண்ணும் பூச்சிகளை பிடித்து உண்ணுகின்றன. குச்சிகள் அல்லது தென்னை ஓலையின் அடிமட்டையைப் பயிர் நடுவே நட்டு வைத்தால் பறவைகள் அதில் வந்து அமர்ந்து பூச்சியை பிடித்து உண்ணும். சென்டிப் பூ போன்ற செடிகளை பயிர்களின் ஊடே நடவு செய்வதன் மூலம் தீய பூச்சியை விரட்டலாம். ஆமணக்கு, வெள்ளரி, தட்டை பயிறு போன்ற செடிகளை நிலத்தின் விளிம்பின் நான்கு திசையிலும் பயிர் செய்ய வேண்டும். இது பூச்சிகளைக் கவர்ந்து இழுத்து முக்கிய பயிர்களை காக்கிறது. தொடர்ந்து இயற்கை வழி வேளாண்மைக்கு மாறும் உழவர்கள் நான்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மூலிகை பூச்சி விரட்டிகள் கூடத் தெளிக்க தேவையிருக்காது.
கால்நடைகளில் மாட்டூட்டம்
ஆடு, மாடு, கோழி, நாய் என வளர்ப்பு விலங்குகள் அனைத்திலும் மாட்டூட்டத்தை பயன்படுத்தி நல்ல பலனை எட்டியிருக்கிறார்கள். மாடுகளுக்கு மடிவீக்கம், காம்பின் சீழ் வடிதல் போன்ற நோய்களைக் குணபடுத்த நாளும் 300 மில்லி என்ற வீதத்தில் ஒரு வாரம் கொடுக்க வேண்டும். சினைப் பிடிக்காத ஆடு, பசுக்களுக்கு இதை கொடுத்து நல்ல பலனைடைய முடியும். ஆடுகளுக்கு கொடுக்கும் போது 150 மில்லி கொடுக்க வேண்டும். கோழிக்கு குடிநீரில் கலந்து விடுவதால் நோய் தொற்றுவதை தடுக்கலாம். தவிடு, மாட்டூட்டம், இரண்டையும் கலந்து பிசைந்து கொடுப்பதால் கோழிக்குஞ்சின் எடை விரைவாக கூடும். நாய்களுக்கு மூச்சுப் பை நோய், தோல் நோய்கள் எளிதில் குணமாகும். விலங்கினங்களுக்கு ஊட்டும் போது தண்ணீர் கலப்பது இல்லை.
மீன் அமிலம்
உழவர்கள் கண்டுபிடிப்பில் தனிச்சிறப்பு வாய்ந்த வளாச்சி ஊக்கி மீன் அமிலம். மலிவாக மீன் கிடைத்தாலோ அல்லது மீன் கழிவு கிடைத்தாலோ, அது கொண்டு மீன் அமிலம் தயாரிக்கலாம். மீன் அல்லது மீன் கழிவை சம அளவில் வெல்லத்துடன் கலந்து பிசைந்து பிளாஸ்டிக் பாத்திரத்தில் இட்டு மூடி வைக்க வேண்டும். 25 நாட்கள் கடந்த பிறகு, மீன் அமிலம் தயார் பயிரில் கை ஸ்பிரேயருக்கு 300 தண்ணீருடன் தெளிக்கும் போது பயிர் பச்சை நிறம் பெற்று வளருகிறது.
முட்டை ரசம்
இயற்கை வழி வேளாண்மையில் பயிர் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு பல உத்திகள் உள்ளன. அதில் ஒன்று முட்டை ரசம் தயாரிப்பு. கீழே குவிந்தும் மேலே விரிந்தும் உள்ள ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அதில் 21 முட்டைகளை மூன்று நான்கு அடுக்குகளாக அடுக்கவும். அதற்கு முட்டையின் குறுகலான முனையை கீழ்நோக்கி வைத்தால் பொருத்தமாக இருக்கும். எலுமிச்சை பழங்களை பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும். பாத்திரத்தில் அடுக்கிய முட்டைகள் மேல், 2 எலுமிச்சை பழ சாற்றுடன் 200 கிராம் வெல்லத்தை கரைத்து வெல்லக் கரைசலையும், முட்டைகள் மீது ஊற்றவும். பின்பு மூடி வைக்கவும்.
10 நாட்கள் சென்ற பின்பு, திறந்து பார்த்தால் முட்டை ஓடு கெட்டியாக இல்லாமல் கூழ்ம வடிவில் இருக்கும். அவற்றை கையால் பிசைந்து மேலும் 200 மில்லி வெல்லச்சாறு ஊற்றி மூடி வைக்கவும். முட்டை ரசம் தயாரிக்கத் தொடங்கியதில் இருந்து 20 நாட்களுக்குள் பிறகு, பயிரில் தெளிக்க வேண்டும். அற்காக முட்டை, எலுமிச்கை, வெல்லக் கலவையை பிசைந்து வடிகட்ட வேண்டும். எஞ்சியுள்ள கழிவை மீண்டும் சிறிதளவு எலுமிச்சைச் சாறும் வெல்லக் கரைசலும் கலந்து மூடி வைத்தால் மீண்டும் ஒரு முறை தெளிப்பதற்கு நமக்கு முட்டை ரசம் கிடைக்கும்.
பாழ்நிலத்தை புதுப்பிக்கும் பலபயிர் சாகுபடி
ரசாயன உரம், ரசாயன பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தொடர்ந்து நிலத்தில் இட்டதால் உழவன் வறுமைப்பட்டான். நிலம் வலுவிழந்து, இப்போது மாற்று வழி நோக்கி உழவர் சிந்தனை செல்கிறது. சில நேரத்தில் இயற்கை வழி முறை நல்லதுதான். ஆனாலும் பழைய விளைச்சலை மீண்டும் எடுக்க குறைந்தது ஐந்து வருடமாவது வாங்கலாம். இப்படி செல்பவர்கள் இயற்கை வழி வேளாண்மையால் நாட்டு மக்களின் வறுமையை ஒழிக்க முடியாது என்று சொல்பவர்களை விடவும் தீங்கு செய்கிறார்கள்.
உரச் செடிகளை வளர்த்து தழை உரமாகப் பயன்படுத்துவது பற்றி கூறியிருந்தோம். இப்படி சிலவகைக் செடிகளை நிலத்திற்கு அளித்து எருவாக்கும் போது சில வகை ஊட்டங்களையே மண்ணில் சேர்க்க முடியும். நில வளத்தை முழுமையாக்க இது போதாது. பல வகை விதைகளையும் விதைத்து, வளர்த்து நிலத்தில் சேர்க்கும் போது பல வகை ஊட்டங்கள் மண்ணில் சேர்கிறது, வளம் கூடுகிறது. இதை இயற்கை விவசாயிகள் தமது நேரடி அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ளனர்.
பல பயிர் விதைப்பு என்பது தானியங்கள், பயறு வகைகள், பசுந்தாள் உரச்செடிகள், எண்ணெய் வித்துக்கள், வாசனைப் பியர்கள் ஆகிய ஐந்து வகை பயிர்களை வகைக்கு 4 வீதம் விதைத்து 60-70 நாட்கள் வளர்த்து மடக்கி உழுது மண்ணில் சேர்க்கும் முறையாகும். இப்பயிர்களின் இலைகள், தண்டு, வேர்களில் உள்ள பல வகை நுண் ஊட்டங்களில் மண்ணில் சேர்ந்து மண்ணை வளம் செய்வதுடன் இவைகளே மக்கி எருவாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகின்றன
பல பயிர் வதைகள்
தானிய விதைகள்சோளம் – 500 கிராம்
கம்பு – 100 கிராம்
தினை – 200 கிராம்
சாமை – 250 கிராம்
வரகு – 300 கிராம்
குதிரை வாலி – 250 கிராம்
பனிவரகு – 200 கிராம்
போன்றவற்றில் ஏதேனும் நான்குபயிறு வகைபாசிப்பயிறு – 2 கிலோ , உளுந்து – 2 கிலோ, கொள்ளு – 1 கிலோ, தட்டைப் பயிறு – 2 கிலோ, துவரை – 1 கிலோ, போன்றவற்றில் ஏதேனும் நான்கு.எண்ணெய் வித்துக்கள்எள் – 250 கிராம், நிலக்கடலை – 2 கிலோ , ஆமணக்கு – 3 கிலோ, சூரியகாந்தி – 1 கிலோ, துவரை – 1 கிலோ, சோயா – 2 கிலோ போன்றவற்றில் ஏதேனும் நான்கு. வாசனைப் பொருட்கள் சோம்பு – 100 கிராம், கடுகு -100 கிராம், வெந்தையம் -100 கிராம், மல்லி – 1 கிலோ உரச்செடிகள் சணப்பு – 2 கிலோ, தக்கை பூண்டு – 1 கிலோ, கொழுஞ்சி – 1 கிலோ, அகத்தி – 1 கிலோ, செம்பை – 1 கிலோ போன்றவற்றில் ஏதேனும் நான்கு.
மேற்கண்ட வகைகளில் ஒவ்வொன்றிலும் ஏதேனும் நான்கு விதைகள் வீதம் ஏக்கருக்கு 20 கிலோ தேவைப்படும். இந்த 20 வகை விதைகளையும் சேர்த்து (20 கிலோ இருந்தாலும் தவறல்ல) நெல் சாகுபடியின் போது முன்கூட்டியே விதைத்து 45 நாட்கள் வளர விட்டு மடக்கி உழுது விட்டு தொழி செய்து 10 நாட்கள் அழுகவிட்டு நாற்று நடவு செய்யலாம்.
கரும்பு, மஞ்சள், வாழை போன்றவற்றில் முதல் களை எடுக்கும்போது விதைத்து மூலப்பயிர்களின் இலைகளை மறைக்கும் வண்ணம் வளர்த்தவுடன் அறுத்து / பிடுங்கி 1 சால் விட்டு சாலில் மூடாக்காக இடலாம். தண்டுப்புழு போன்றவைகளை வளரும் பல பயிர்கள் ஈர்த்து முக்கிய பயிருக்கு நேரும் சேதத்தைக் குறைக்கிறது.
ஊட்டமேற்றிய தொழு உரம்
தேவைப்படும் பொருட்கள்
சாணம் : 100 கிலோ
கோமியம் : 25 லிட்டர்
புளித்த தயிர் : 5 லிட்டர்
நீர் : 100 லிட்டர்
கலந்த கலவை
செய்முறை: 4 அடி அகலம், தேவைக்கேற்ற நீளம், அரை அடி உயரத்திற்கு மக்கக்கூடிய அனைத்து பொருட்களையும் பரப்பிவிட்டு, 10 லிட்டர் கலவையுடன் 100 லிட்டர் நீர் சேர்த்து சலிக்கத் தெளிக்கவும். பின் சாணம் 3 அங்குல உயரத்திற்கு பரப்பிவிட்டு, இலை தழை, குச்சிகளைப் போட்டு அதன் மேல் 10% கரைசலை தெளிக்கவும்.
இதைப் போல் தொடர்ந்து 4 அடி உயரத்திற்கு அடுக்குகளை இட்டுப் பின்னர் சேறு கொண்டு நன்கு பூசி மெழுகிவிடவும். 100 நாட்கள் கழித்து எடுத்துப் பயன்படுத்தவும்.
தேங்காய் பால் + மோர்
இவைகளை சம அளவில் சேர்த்து சட்டி / பானையில் இட்டு குப்பைமேடு (அ) குழியில் பாதுகாப்பாக புதைத்து வைக்க வேண்டும். ஒரு வார காலத்தில் நொதித்து வளர்ச்சி ஊக்கியாக மாறும். நொதித்த ஒரு லிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு சுமார் 5 லிட்டர் தேங்காய்ப் பால், 5 லிட்டர் மோர் தேவைப்படும்.
பயிர் பாதுகாப்பு
நமது முன்னோர்கள் எலி, பறவை, ஆடு, மாடு போன்றவற்றிலிருந்து காப்பதையே பயிர் பாதுகாப்பாக செய்தனர். கடந்த 40 ஆண்டுகளாக பூச்சி, பொருட்களில் இருந்து காப்பதற்காக இரசாயன நஞ்சுகளைப் பயன்படுத்துகிறோம். வேளாண்மையில் இரசாயன வகை பயிர் பாதுகாப்பு வந்தபோது விவசாயிக்கு சுமை கூடியது. செலவு கூடியது.
பயிர்களைத் தின்னும் பூச்சிகள் கூட மற்ற பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும் உணவாகின்றன. எனவே, எல்லாப் பூச்சிகளும் நன்மை செய்பவையே. பயிரைக் காப்பது தான் நமது நோக்கமே தவிர பூச்சிகளை கொல்வதல்ல. தாய்ப்பூச்சிகள் பயிர்களில் முட்டையிடாமலும், உட்காராமலும் தடுப்பதும், இவைகளின் புழுக்கள் நம் பயிரை மேய்வதைத் தடுப்பதுமே நம் வேலை
பயிர் பாதுகாப்பு முறைகள்
மூலிகைப் பூச்சிவிரட்டி
உயிர் வழிக்கட்டுபாடு
பயிர் வழிக்கட்டுப்பாடு
ஈர்ப்புப் பயிர்கள்
ஒருங்கிணைந்த பயிர்க் காப்பு
மூலிகை பூச்சி விரட்டி
ஆடா தோடா, ஆடு தின்னா பாளை, ஊமத்தை, எருக்கு, துத்தி, உண்ணிச்செடி, காட்டாமணக்கு, நெய்வேலி, காட்டாமணக்க, வேம்பு, எட்டி, சீதா இலை. சீதாகொட்டை, அரளி விதை, (வெப்) பாலை, பீநாரி சங்கு, கற்றாழை, நொச்சி, தும்பை, துளசி, நாய்த்துளசி, சீமைக் கருவேல் என பல தாவரங்களில் பூச்சிகள் விரட்டும் தன்மை கொண்டவை.
ஆடு, மாடு தின்ன மறுக்கும் அனைத்து செடி, கொடிகளும் பூச்சிகள் விரட்டும் தன்மை உள்ளவை. உடைத்தால் பால் வரும் தன்மை உள்ள செடி, கொடிகளுக்கும் இதே தன்மை உண்டு.
இவைகளில் ஏதேனும் 5 வகைத் தாழைகளை வகைக்கு 2 கிலோ வீதம் எடுத்து இடித்து பானையில் இட வேண்டும். இடித்த இலை தழைகள் முழுகும் அளவு மாட்டு/ எருமை மூத்திரம் ஊற்ற வேண்டும். பிறகு கழுத்து வரைக்கும் தண்ணீர் ஊற்ற வேண்டும். 1 வாரம் – 10 நாட்கள் வைத்திருந்தால் ஊறல் நன்கு நொதித்து மூலிகைச் சாறு தெளிப்பதற்கு தயாராகும். 1 லிட்டர் சாறுக்கு 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்க வேண்டும். நன்கு ஒட்ட காதி சோப்பு வில்லை 2ஐக் கரைத்தல் நல்லது.
உடனடியாக தெளிக்க இடித்த இலை தழைகளை நிறைய தண்ணீர் விட்டு காய்ச்சவும். தண்ணீர் பாதியாக சுண்டும் போது எடுத்து வடிகட்டி 1 லிட்டர் கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்கலாம்.
பூச்சி விரட்டிகளை தேவைப்படும் பொழுதோ, பூச்சி வரும் காலத்திற்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பயன்படுத்தலாம்.
உயிரியல் கட்டுப்பாடு
உலகில் ஒவ்வொரு வகை உயிரினத்தையும் வேறு ஒரு உயிரினம் கட்டுப்படுத்துகிறது. இந்த உயிரியல் அடிப்படை உண்மையைக் கொண்டு சேதம் செய்யும் பூச்சிகளை அவைகளின் எதிர்ப் பூச்சிகள் கொண்டு கட்டுப்படுத்தும் முறையே உயிரியல் வழி பூச்சிக் கட்டுபாடு ஆகும். இதே அடிப்படையில் பயிர் நோய்கள் சிலவற்றையும் கட்டுப்படுத்தலாம்.
டிரைக்கோ டெர்மா விரிடி (பூசணம்) மற்றும் சூடோமோனாஸ் (பேக்டீரியம்) பருத்தி, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, பயறுகள், வாழை, மஞ்சள், இஞ்சி, தென்னை, நெல், கரும்பு, காய்கறிகள் ஆகியவற்றில் தோன்றும் வேர் அழுகல் கிழங்கழுகல், செவ்வழுகல் போன்ற பூசண நோய்கள் கட்டுப்படுத்தும் பயன்பாட்டு அளவு ஏக்கருக்கு 2-4 கிலோ வரை.
உயிரின வழிக் கட்டுப்பாடு
இயற்கையில் பாம்பு, ஆந்தை போன்றவை எலி பிடிக்கின்றன. சிலந்தி, தவளை, பல்லி, குருவிகள், காக்கை, மைனா போன்றவையும் பூச்சிகளைப் பிடித்து உண்ணுகின்றன. பறவைகள் வந்து போனால் வேறு கட்டுப்பாடு தேவைப்படாது.
பயிர் வழிக் கட்டுப்பாடு
சில செடிகள் தங்களது வேர்களில் சில வகை சுரப்புகளை வெளியேற்றுகின்றன. இச்சுரப்புகள் சில நோய் தரும் நுண்ணுயிர்களை கட்டுப்படுத்துகிறது. இந்த வகைத் தாவரங்களை நோய் வாய்ப்புள்ள பயிர்களுக்கு அருகில் வளர்க்கும் போது நோய் வருவதில்லை. எடுத்துக்காட்டாக சாமந்திப் பூச்செடி, தக்காளிச் செடி அருகிலும், வேர் அழுகல் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய பயிர்களுக்கு அருகிலும் வளர்க்கும் போது வேர் நோய்கள் வருவதில்லை. நோய் தரும் வேர்ப்புழுக்கள் எண்ணிக்கையை குறைக்கச் செய்கிறது.
ஈர்ப்புப் பயிர்கள்
சில செடிகள் பயிர்களை உண்ணும் பூச்சிகளை தன்னிடம் ஈர்த்துக் கொள்ளும். இவ்வகை செடிகளை பயிர்களை வயலில் வளர்க்கும் போது பயிர் உண்ணும் பூச்சிகளை தன்னிடம் ஈர்க்கும். விளை பயிர் காக்கப்படும். எ.கா.ஆமணக்கு, தட்டைப் பயிறு, கரும்பில் கம்பு, சோளம் குறுத்துப் புழுக்களை ஈர்க்கிறது.
முன்னோர்கள் ஒருபோதும் ஊரினப் பயிர்கள் வளர்த்ததில்லை. கலப்பு பயிர் முறையையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். இக்கலப்பு பயிர் முறை நோய்களைக் கட்டுப்படுத்தியது. ஈர்த்து அழிக்க உதவியது. மீண்டும் கலப்புப்பயிர் முறை நம் நிலத்தில் அறிமுகம் ஆகும் போது பயிர்ப் பாதுகாப்பு எளிதான ஒன்றாகும். மண் நலனும் மேம்படும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு உத்திகள்
பருவம் அறிந்து விதை விதைக்க வேண்டும்.
பயிர் சுழற்சி கடைபிடிக்க வேண்டும்.
கலப்புப் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.
அவ்வப்போது நிலத்தை தரிசு போட வேண்டும்.
பறவைகளை உள்ளே வரவழைக்க வேண்டும்.
விவசாயி வீட்டில் உள்ள விதைகளை விதைக்க வேண்டும்.
இயற்கை உயிர்க் கொல்லிகளை பயன்படுத்த வேண்டும்.
பூச்சிகளை கவரும் செடி கொடிகளை ஓரத்தில் வளர்க்க வேண்டும்.
சினைப் பசுக்களை நன்றாக கவனித்து வளர்த்தால் தான் ஆரோக்கியமான கன்றுக் குட்டியை ஈனும், நல்ல பால் உற்பத்தியை பெருக்க முடியும்.
முக்கிய பராமரிப்பு உத்திகள்
சினை ஊசி போட்ட பசுக்களுக்கு 3 மாதத்தில் கால்நடை மருத்துவர் மூலம் உரிய சினைப் பரிசோதனையை செய்து உறுதிசெய்து தோராயமாகக் கன்று ஈனும் காலத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
சினை மாடுகளை அடிக்கடி அடித்துத் துன்புறுத்துதல், அதிக தொலைவு நடக்க வைத்தல் கூடாது. ஏழாவது மாதம் முடிந்த உடன் சினைப் பசுவை தனியாகப் பிரித்தெடுத்து கொட்டகையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். நாய்களை சினை மாடுகளின் அருகில் அண்ட விடக் கூடாது.
கருவில் வளரும் இளங்கன்றின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளையும், பால் உற்பத்திக்குத் தேவையான சத்துகளையும் உடலில் சேமித்து வைக்க வேண்டியுள்ளதால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சரிவிகித சத்தான உணவை வழங்க வேண்டும்.
ஏழாவது மாத சினை முடிந்தவுடன் பாலை வற்றச் செய்ய வேண்டும். பால் வற்றிய சினை மாட்டின் காம்புகளின் வழியே நுண்மக் கொல்லி (ஆன்டிபயாடிக்) மருந்தை டியூப் மூலம் செலுத்தினால் மடிவீக்க நோயை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
தீவனப் பராமரிப்பு
சினை மாடுகளுக்கு தீவனம் அளிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு கவனம் செலுத்தாவிடில் கீழ்க்கண்ட விளைவுகள் ஏற்படும்.
கன்று வீசுதல், குறைமாத கன்றுக் குட்டியை ஈனுதல், 20 கிலோவுக்கு குறைவாக உள்ள கன்று பிறக்கும். நஞ்சுக்கொடி விழாமல் கருப்பையில் தங்கிவிடும். கருப்பை வெளித்தள்ளுதல், பால் காய்ச்சல் போன்ற நோய்கள் வரும். பால் உற்பத்தி குறையும்.
இதைத் தடுக்க சரிவிகித தீவனம் கொடுக்க வேண்டும். ஒரு சினை மாட்டுக்கு 25 கிலோ பசுந்தீவனத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அளிக்க வேண்டும். கலப்புத் தீவனம் 8-வது மாத சினையில் தினமும் ஒன்று முதல் ஒன்றரை கிலோ வீதமும், 9-ஆவது மாதம் ஒன்றரை முதல் 2 கிலோ வீதமும் கன்று ஈனும் வரை வழங்க வேண்டும்.
இவற்றுடன் தாது உப்புக்கள் 25- 30 கிராம் தினமும் கொடுக்கலாம். கன்று ஈனுவதற்கு முன்னால் ஒரு கிலோ கோதுமைத் தவிடும் கொடுக்கலாம். மேலும் 450 கிராம் எப்சம் உப்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூள் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.
கன்று ஈனும்போது காணும் அறிகுறிகள்: நிறைமாத சினை ஆனவுடன் மாட்டின் வயிறு, மடி பெருத்துக் காணப்படும். மாட்டின் இடுப்பு, தொடைப் பகுதியில் உள்ள தசைகள் தளர்ந்து காணப்படும். வாலுக்கு அடியில் குழி உண்டாகும். இதைச் சட்டம் உடைதல், தட்டு உடைதல் அல்லது குழி விழுதல் எனக் கூறுவர். இந்த அறிகுறி தென்பட்ட 24 முதல் 48 மணி நேரத்தில் கன்று ஈனும்.
மாட்டில் சளி போன்ற திரவம் அதிகளவில் வடியும். மாடுகள் அடிக்கடி படுத்துக் கொண்டும், தலையை தோண்டிக் கொண்டு இருக்கும். சினைக் கிடேரிகள் வயிற்றில் உதைத்துக் கொள்ளும்.
இந்த அறிகுறிகள் ஏற்பட்டவுடன் மாட்டை சுத்தமான, சமமான இடத்தில் அழைத்துச் சென்று கட்ட வேண்டும். கன்று ஈனுவதற்கு முன் கலப்பின பசுக்களில் நெஞ்சில் இருந்து மடி வரை நீர் கோர்த்துக் காணப்படும். இதனால் எந்தத் தீங்கும் இல்லை. கன்று ஈன்றவுடன் தானாக அவை மறைந்து விடும்.
பனிக்குடம் உடைந்த ஒரு மணி நேரத்தில் மாடு கன்றை ஈன வேண்டும். கன்று ஈன்ற 6 மணி நேரத்தில் நஞ்சுக் கொடி விழ வேண்டும். இதுபோல் முறையாக சினைப் பசுவைப் பராமரிக்க வேண்டும்.
நோய்கள்
சினை மாடுகளில் கருச்சிதைவு நோய், கருப்பை அழற்ச்சி, கருப்பை வெளித்தள்ளுதல் போன்ற நோய்கள் குறித்த அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
இந்த முறைகளை விவசாயிகள் கையாண்டால் ஆரோக்கியமான கன்றுக் குட்டியையும், நல்ல பால் வளத்தையும் பெருக்க முடியும்
கேள்வி பதில்கள்
கேள்வி: மாடு கன்று போட்டு ஒரு மாதம் ஆகிறது. கன்று போட்ட நாள் முதல் பால் கறக்கவிட மாட்டேன் என்கிறது, உதைக்கிறது, காலை கட்டினாலும் துள்ளுகிறது. ஆனால் மடிவீக்கம் எதுவுமில்லை. பால் கறப்பதற்கு என்ன செய்யலாம்?
பதில்: மாட்டுக்கு இது முதல் கன்று என்பதால் கூச்சக்குணத்தால் இப்படி உதைக்கவும், பால் கறக்க விடாமல் செய்கிறது என்று நினைக்கிறேன். இது பிறவிக்குணமாகவோ இருக்கலாம். நாளாக நாளாக தான் இதை சரி செய்ய வேண்டும். இனிமேல் பால் கறக்கும் போது ஏதாவது ஒரு வகையில் மாட்டின் திசை திருப்பி விடும் வகையில் செய்து பால் கறக்க வேண்டும்.
கேள்வி: மாட்டுக்கு வயிறு பூசலாக இருக்கிறது. மூன்று நாளாக மூச்சு வாங்கிறது. என்ன செய்யலாம்?
பதில்: டிம்பால் என்ற மருந்து இருக்கிறது. தினமும் காலையில் 50 கிராம் என்ற விகிதத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு கொடுங்கள்.
ஆதாரம்: தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை.
நம் நாட்டில் வளர்ந்து வரும் மக்கள் தொகையின் உணவு மற்றும் ஊட்சத்திற்கான பாதுகாப்பை ஒருங்கிணைந்த கால்நடை வளா்ப்பு மூலம் பூர்த்தி செய்யலாம். பலதரப்பட்ட கால்நடை இனங்களில், பன்றி வளர்ப்பு, இறைச்சி உற்பத்திக்கான ஒரு முக்கியமான ஆதாரமாக கோழி வளர்ப்பிற்கு அடுத்து இடம் பிடிக்கிறது. இறைச்சி உற்பத்தி மட்டமல்லாமல், எருவும் தருகிறது. பன்றி வளா்ப்பினால் ஊரக உழவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தருகிறது. மற்றம் உபரி வருமானம் தருவதால் உழவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடிகிறது.
தீவனங்களை மாற்றும் திறன் பன்றிகளுக்கு அதிகளவு இருக்கிறது.
பன்றிகள் பலதரப்பட்ட உணவுகளை புற்கள், தீவனப்பயிர்கள், சேதமடைந்த தீவனங்களை, உண்டு அதிக மதிப்புள்ள இறைச்சியை தருகின்றன.
பன்றிகள் சிறிய இடைவெளியிலேயே தன் இனத்தைப் பெருக்கும். ஒரு பெண் பன்றி 8-9 மாதங்களிலேயே குட்டி ஈனும். ஒரு வருடத்திற்கு 2 முறை குட்டி ஈனும். ஒவ்வொரு இனப்பெருக்கத்தின் போது 8-12 பன்றிக்குட்டிகளை ஈனும்.
பன்றி வளர்பபிற்கு சிறிய முதலீட்டாலான கட்டடங்கள் மற்றும் உபரணங்கள் போதுமானது.
பன்றிகள் இறைச்சியை 65%க்கு குறையாமல் அளிக்கும்.
பன்றிக் கறியானது அதகி கொழுப்புடன், குறைவான நீர்ச் சத்துடன், அதிக சக்தி அளிக்கக் கூடிய ஒரு ஊட்டச்சத்து உணவாகும். இதில் தையாமின், நியாசின் ரிபோஃபிளேவின் என்ற விட்டமின்கள் அதிகளவில் உள்ளன.
பன்றி எரு வேளாண் பண்ணைகள் மற்றும் மீன் குட்டைகளில் உரமாக பயன்படுத்தப்படுகிறது.
பன்றிகளில் அதிகளவு கொழுப்பு இருப்பதால், கோழித் தீவனம், சோப், பெயின்டுகள் மற்றும் இதர வேதியியல் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
பன்றி வளர்ப்பினால் விரைவில் வருமானம் 6-8 மாதங்களிலிருந்து கிடைக்கிறது.
பன்றி இறைச்சியினால் உள்ளூர் மற்றும் வெளிநாடு ஏற்றுமதி சந்தைகளில் அதிகளவு சந்தை வாய்ப்பு உள்ளது.
பன்றி வளர்ப்பிற்குத் தேவையான மேலாண்மை முறைகள்
பன்றிக்குடில்மேலாண்மை
சற்று உயரமான இடத்தில் குடில் அமைக்க வேண்டும்.
நீர்தேங்காத, சொதசொதப்பான மற்றும் அதிக மழைபெறும் இடங்களைத் தவிர்க்க வேண்டும்.
குடிலின் பக்கச் சுவர்கள் 4-5 அடியிலும், மீதமுள்ள உயரத்திற்கு இரும்பு குழாய்கள் (அ) மரக்குச்சிகள் கொண்டு அமைக்க வேண்டும்.
சுவர்களில் ஈரம் உள்ளே கசியாதவாறு பூச்சிடவேண்டும்.
குடிலின் உள்ளே அறைகள் 8-10 அடி உயரத்துடன் இருக்க வேண்டும்.
நல்ல காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
தரைப்பகுதி திடமாக, வழுக்காதவாறு, சரிவாகவும், நீர் வடியுமாறு இருக்க வேண்டும்.
உண்ணும் கலனுக்கான இடம் 6-12 இந்த அளவுடன் இருக்க வேண்டும்.
எளிதாக சுத்தம் செய்வதற்காக உண்ணும் கலனின் மூலைகள், வடிகால் பகுதி, சுவர்களின் மூலைகள் மொழுமொழுப்பாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பன்றிக்கும் போதுமான அளவு இடம் ஒதுக்க வேண்டும்.
கோடைக் காலங்களில் நிழலும், குளிர்ந்த நீரும் குடிப்பதற்கு அளிக்க வேண்டும்.
சாணி மறறும் சிறுநீரை சுத்தமாக அகற்றி, சுத்தம் செய்ய வேண்டும்.
ஆண் பன்றி / பால் தரும் பெண் பன்றிக்கு என தனித்தனியே இடம் ஒதுக்கி தரவேண்டும்.
இனவிருத்திக்கான பன்றியைத் தேர்வு செய்தல்
வங்கியிலிருந்து கடன் தொகை பெற்றவுடன், அருகில் உள்ள கால்நடை பண்ணையிலிருந்து நல்ல தரமான பன்றி இனத்தை வாங்க வேண்டும்.
வர்த்தக முறையில் பன்றி வளர்ப்பு செய்வதாக இருந்தால், நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள கலப்பு இனம் (அ) வெளிநாட்டு இனத்தை வாங்க வேண்டும்.
இனவிருத்தி செய்யும் நிலையில் உள்ள பன்றிகளை வாங்க வேண்டும்.
புதிதாக வாங்கிய பன்றிகளுக்கு அடையாளக் குறியிட வேண்டும்.
நோய்களுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும்.
புதிதாக வாங்கிய பன்றிகளை முதல் 2 வாரங்களுக்கு நேரடி கண்காணிப்பில் வைத்திருந்து, பின் மற்ற பன்றிகளுடன் கலந்து விட வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட படி ஒரு குடிலுக்கு தேவையான அளவு பன்றிகளை வாங்க வேண்டும்.
மூன்று மாத இடைவெளி விட்டு 2 பிரிவுகளாக பன்றிகளை வாங்கவும்.
தேவையில்லாத, முதிர்ந்த பன்றிகளை தரப்பகுப்பு செய்ய வேண்டும்.
10-12 முறை இனப்பெருக்கம் செய்து குட்டி ஈன்ற முதிர்ந்த பன்றிகளை நீக்க வேண்டும்.
தீவன மேலாண்மை
பன்றிகளுக்கு சிறப்பான தீவன உணவை தர வேண்டும்.
அடர் தீவனங்களை தேவையான போது தரலாம்.
விட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களை போதுமான அளவு தரவும்.
போதுமான அளவு சுத்தமான நீரை பருகத் தரவும்.
பன்றிகளுக்கு போதுமான அளவு பயிற்சிகளைத் தரவும்.
கர்ப்பக் காலத்தில் பெண் பன்றிகளுக்கு அதிக ஊட்டச்சத்துள்ள தீவனங்களைத் தரவேண்டும்.
பெண் பன்றியின் வயது, எடை, அளவைப் பொறுத்து பெண் பன்றிகளுக்கு அளிக்கும் உணவின் அளவு மாறுபடும்.
வீட்டு சமையல் அறை/ஹோட்டல் /குளிர்பதன சேமிப்பு/சேமிப்புக் கிடங்கிலிருந்து வரும் கழிவை தீவனமாகப் பயன்படுத்தலாம்.
நோய்களுக்குஎதிராகபாதுகாப்பு
குறைந்த அளவு உணவு எடுத்துச் கொள்ளுதல், காய்ச்சல், மாறுபட்ட நடவடிக்கை போன்ற உடல்நிலை சரியில்லாத அறிகுறிகளைக் கவனித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தால் அருகில் உள்ள கால்நடை மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.
பொதுவான நோய்களுக்கு எதிராகப் பாதுகாப்பு தரவேண்டும்.
பெரிய அளவில் நோய் பாதிக்கப்பட்டால், ஆரோக்கியமாக உள்ள பன்றிகளிடமிருந்து நோய் தாக்கிய பன்றிகளை தனித்து வைக்க வேண்டும்.
பன்றிகளுக்கு சீராக வயிறு சுத்தம் செய்யும் மருந்துகளைத் தரவேண்டும்.
சுகாதாரத்தை பேண, பன்றிகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட படி தடுப்பூசி மருந்துகளைப் போட வேண்டும்.
இனப்பெருக்கக் கால கவனிப்பு
பன்றிகள் சாதாரணமாகவே அதிகளவில் தன் இனத்தை உற்பத்தி செய்யும். வருடத்திற்ககு 2 முறை இனப்பெருக்கம் செய்யும்.
10 பெண் பன்றிகளுக்கு 1 ஆண் பன்றி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இனப்பெருக்கத்தின் உச்சநிலையில் இருக்கும் போது இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்
கர்ப்பக்கால கவனிப்பு
ஓரிற்றுப் பன்றிக்குட்டிகளை ஈனும் ஒரு வாரத்திற்கு முன் உள்ள கர்ப்பமுள்ள பெண் பன்றிகளுக்கு போதுமான இடம், உணவு, தண்ணீர் போன்றவை கிடைக்குமாறு அதிக கவனிப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண் பன்றிகள் மற்றும் ஓரிற்றுப் பன்றிக்குட்டிகள் உள்ள கூடாரத்தை பன்றிக்குட்டிகளை ஈனும் தேதிக்கு முன்பே 3-4 நாட்களுக்கு நுண்ணுயிர் நீக்கம் செய்ய வேண்டும். பெண் பன்றிக் குட்டிகளை குட்டி ஈனும் கூடாரத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.
பன்றிக் குட்டிகளைக் கவனித்தல்
புதிதாகப் பிறந்த பன்றிக் குட்டிகளை அதிகக் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நஞ்சுக்கொடியை அறுத்த இடத்தில் அயோடின் கொண்டு நுண்ணுயிர் நீக்கம் செய்ய வேண்டும்.
முதல் 6-8 வாரங்களுக்குத் தாய்பால் தரவேண்டும்.
மோசமான காலநிலைகளில், குறிப்பாக 2 மாதங்கள் இருக்கும் போது பன்றிக்குட்டிகளைப் பாதுகாக்க வேண்டும்.
பிறந்த பிறகு ஊசிப் போன்ற பற்களை எடுத்து விட வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகளைப் போட வேண்டும்.
குட்டிகளுக்கு இரத்த சோகை ஏற்படாமல் இருக்க இரும்புச்சத்து அடங்கிய உணவை தர வேண்டும்.
ஆண் பன்றிக் குட்டிகளை இனப்பெருக்கம் செய்யாமல், இறைச்சிக்கு பயன்படுத்துவதாக இருந்தால், 3-4 வாரங்களில் விறைநீக்கம் செய்ய வேண்டும்.
பால் தரும் பெண் பன்றிக்கு கூடுதலாக உணவு தர வேண்டும்
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துதல்
நமது இந்திய நாட்டில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையால் நாம் உணவு உற்பத்தி செய்யும் கட்டாயத்தில் உள்ளோம். இந்தியாவில் விவசாயிகள் அதிகமாக வாழக்கூடிய கூடிய இடங்களில் அங்குள்ள மக்களுக்கான பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. ஆட்கள் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி, மழைக்காலங்களில் சரியாக மழை வராமல் இருத்தல், வன விலங்குகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் மக்களுக்கு வரும் பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன.
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, குறைவான எண்ணிக்கையில் ஆட்களைக் கொண்டு செய்யக்கூடிய விவசாய முறைதான் இன்றைய காலகட்டத்தில் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படிப்பட்ட நவீன தொழில்நுட்ப முறையில் பலவகையான விவசாயம் முறைகள் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் மண்ணில்லா விவசாய முறை சாத்தியம் என இந்திய தொழில்நுட்பம் நிரூபித்துள்ளது. மண் இல்லாத விவசாயமா? என்ற கேள்வி உங்கள் அனைவர் மனதிலும் எழுந்திருக்கும். மண் இல்லாத விவசாய முறைதான் "ஹைட்ரொபோனிக்ஸ் விவசாயம்" (ரசாயன உணவு கொண்டு நீரில் வளரும் செடிகள்) ஆகும். அதைப்பற்றி இப்போது காணலாம்.
இந்தியாவின் வேளாண் தொழில் : இந்தியாவின் "முதுகெலும்பு விவசாயமும் விவசாயிகளும்" தான். அனைத்து தொழில்களுக்கும் முன்னோடியாக விளங்குவது வேளாண் தொழில் ஆகும். இந்திய மக்கள் தொகையில் 60 சதவிகிதம் பேர் விவசாயத்தையும் விவசாயம் சார்ந்த தொழில்களையும் நம்பியுள்ளனர். விவசாயத்தைப் பொறுத்தவரை பல்வேறு தொழில்நுட்பங்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. விவசாயத்திற்கு மிகவும் அடிப்படையாக இருப்பது தண்ணீர் மற்றும் மண் ஆகும்.
ஆனால் தற்போது உள்ள நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மண்ணில்லாமல், நிலம் இல்லாமல் செடிகளை வளர்க்கும் முறை தான் "ஹைட்ரொபோனிக்ஸ் விவசாயம்" ஆகும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் தற்போது பலபேர் விவசாயம் தொடர்பான விழிப்புணர்வை அடைந்து வருகின்றனர்.
"ஹைட்ரொபோனிக்ஸ் விவசாயம்" என்றால் என்ன?
"ஹைட்ரொபோனிக்ஸ் விவசாயம்" என்பது புதிய அறிவியல் கண்டுபிடிப்பு பெயர் இல்லை. கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப் பின்பு பண்டைய கால மக்கள் ஏரி மற்றும் ஆறுகள் போன்ற நீர் நிரம்பிய இடங்களில் raft(குவியல்) அதாவது, படகு போன்று செய்து நெல் மூட்டை மற்றும் பயிறு வகை மூட்டைகளை படகின் மேல் வைத்து மிதக்க விடுவார்கள்.
அதன்பின் நெல் மூட்டைகள் நீரில் இருக்கும் உரத்தை(மருந்தாக) எடுத்துக்கொண்டு நெல் பயிராக வரும். அதுமட்டுமல்லாமல், "hanging gards babilon" என்னும் "Hanging Garden" கல்வெட்டுக்களில் நீரைப் பாய்ச்சி அதன் மூலம் பயிர்களை வளர்த்தனர் என அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது. கடந்த 15 மற்றும் 17 வருடங்களாக இந்த "ஹைட்ரொபோனிக்ஸ்" உபயோகப் படுத்திக் கொண்டிருக்கின்றனர். "ஹைட்ரொபோனிக்ஸ்" என்ற இந்த புதிய செயல்முறை வெளிநாடுகளில் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மண் இல்லாத விவசாயம் இந்த முறையில் சாத்தியமாகிறது.
பயிர்கள் தயாரிக்கும் முறை:
பயிர்களை நீர்மூலம் வளர்க்க முடியும். நீரில் ஆக்சிஜன், பொட்டன்ஷியல் ஹைட்ரஜன், மற்றும் பயிர் வளர்வதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நீரில் இருக்க வேண்டும். இவையே “ஹைட்ரோபோனிக்ஸ்” என கூறப்படுகிறது.
குறிப்பிட்ட இடத்தில்"poli house" அமைத்து அங்கு வரிசையாக பிளாஸ்டிக் பைப்புகளை அமைக்க வேண்டும். அதில் செடிகளுக்கு நீரோட்டம் பரவலாக செல்லுமாறு துளைகள் அமைக்க வேண்டும். அதன் பின்பு ஒரு சிறிய பிளாஸ்டிக் கப்பில் தேங்காய் துகள்களை நிரப்பி அதில் இரண்டு விதைகளை நிரப்பவேண்டும். விதை முதல்கட்டமாக இந்த இடத்தில்தான் 15 நாட்களில் வேர் பிடிக்க தொடங்குகிறது.
இந்த வேர் பிடிக்கும் காலகட்டத்தில் ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீர் மற்றும் ஒரே மாதிரியான தட்பவெப்ப வெப்பநிலை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு செடிகள் வேர் விட்டதும் இரண்டாவது கட்டமாக Net parts(நிகர பாகங்கள்) - க்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு மீண்டும் செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த நீர் பிளாஸ்டிக் பைப்புகள் வழியாக செலுத்தப்படுகிறது.
தேவையான ஈரப்பதத்தை தக்க வைக்க தேங்காய் நார் துகள்கள் இந்த செடிகளுக்கு பக்க பலமாக உள்ளது. அதன் பிறகு இறுதியாக செடிகள் மற்றும் கீழே கீரைகள் முழுமையான வளர்ச்சி அடைந்து விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்படுகிறது.
“ஹைட்ரோபோனிக்ஸ்” விவசாய முறையின் சிறப்பம்சங்கள்:
“ஹைட்ரோபோனிக்ஸ்” விவசாய முறையின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இதில் 90% நீரை நம்மால் சேமிக்க முடியும். ஏனென்றால் மூடப்பட்ட பைபிளில் இருக்கும் துளைகள் வழியே தான் செடிகள் வளர்கின்றன. அதனால் தண்ணீர் எளிதில் ஆவியாகும் பிரச்சனையும் இல்லை. மேலும், இதற்கு உரம் தேவையில்லை. இதனால் எந்தவித பூச்சி தாக்குதலும் மற்றும் மண் சார்ந்த நோய்களும் ஏற்படுவதில்லை. மேலும் பூமியில் வளர்க்கப்படும் செடிகளை விட வேகமாக இந்தச் செடிகள் வளரும். அத்துடன் இந்த கீரைகள் 100 சதவிகிதம் சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்கும்.
“ஹைட்ரோபோனிக்ஸ்” மூலம் வளர்க்கப்படும் பயிர்கள் :
இந்த மண்ணில்லா விவசாய முறை மூலம் பூச்செடிகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள், மூலிகைச்செடிகள் உள்ளிட்டவற்றை வளர்க்கலாம். காய்கறிகளில் தக்காளி, வெண்டைக்காய், புடலங்காய், உள்ளிட்ட காய்கறிகளையும் மற்றும் முதலில் செம்பருத்தி, ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பூக்களையும் வளர்க்க முடியும். மேலும் புதினா, கொத்தமல்லி போன்றவற்றையும் வளர்க்கலாம்.
“ஹைட்ரோபோனிக்ஸ்” விவசாய முறை எளிதாகவும் மற்றும் பயன் அளிப்பதாகும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இம்முறையில் விவசாயம் செய்தவர்கள் கூறுகின்றனர். மேலும் இதனால் 90 சதவிகிதம் வரை நீரை சேமிக்க முடிகிறது என்றும், பயிர்களுக்கு உரம் தேவையில்லை என்றும் அதிகமாக பூச்சி தாக்குதலும் ஏற்படுவதில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். மிக எளிதாக இப் பயிர்களை செய்ய முடிகிறது என்று விவசாயிகள் மகிழ்ச்சியாக கூறுகின்றனர்.
பாரம்பரிய நெல் ரகங்கள்
நாம் நிலத்தை பார்வையிடும் போது, பாரம்பரிய ரகமான கிச்சிலி சம்பா நெல்லை 10 ஏக்கரில் பயிர் செய்திருந்தார், இந்த நெல் சன்ன ரக அரிசியைத் தரக்கூடியது. கிச்சிலி சம்பா அரிசியைச் சமைத்து உண்ண பலம், தேகச் செழுமை முதலியவை உண்டாகும் என நமது சங்கப் பாடலில் விவரிக்கப் பட்டுள்ளது,
கருப்பு கவுனி நெல் ரகத்தை மூன்று ஏக்கரில் பயிர் செய்திருந்தார். இதன் வயது 140 நாட்களாகும், அந்த அரிசி அவல் செய்வதற்கும், இனிப்புப் பொங்கல் செய்வதற்கும் மிகவும் பிரசித்தி பெற்ற ரகமாகும். கருப்புக் கவுனி அரிசியால் செய்யப்பட்ட கஞ்சியை பருகுவதால் குதிகால் வலி நீங்கும் என்றும், நாய்க்கடி விஷம் நீங்குவதற்கும் பத்தியத்துடன் இந்த கஞ்சியை உண்ணலாம் என்றும் தெரிவித்தார்.
அவரது சொந்த உபயோகத்துக்காக 50 குழி நிலத்தில் மாப்பிள்ளை சம்பா நெல்லையும் பயிர் செய்து, 6 மூட்டை நெல்லை அறுவடை செய்துள்ளார். மாப்பிள்ளைச் சம்பா 180 நாள் பயிராக ஆடி மாதம் நாற்றுவிடப்பட்டு தைமாதம் அறுவடை செய்யப்படுகிறது. இவ்விதம் இப்பயிர் மழைக்காலம், குளிர்காலம், இளவெய்யில் காலம் என மூன்று பருவங்களையும் கடந்து வளர்கிறது. இதனால் பயிரில் நல்ல சத்து சேர்கிறது, இதனால் இந்த அரிசியை உண்ணும் போது நல்ல உடல் பலத்தை தருகிறது என்றும், தொடர்ந்து பயன்படுத்தும் போது சர்க்கரை நோய் கட்டுப்படுத்தக் கூடியது என்றும் தெரிவித்தார்.
“ஏனுங்க பாத்தீங்ளா... இந்த மாப்பிள்ள சம்பா, கருப்பு கவுனியெல்லாம் எந்தமாறி மகத்துவம் உள்ளது தெரியாம ஐ.ஆர் 8, ஐ.ஆர் 20னு ஒட்டு ரகத்த சாப்புட்டுபோட்டு, பொறவு சத்தில்லா சமுதாயமா இப்போ நிக்குறோமுங்க. ஏனுங்க நான் சொல்றது சரிதானுங்ளே?! புதுமாப்பிள்ளை பொலிவோட இருக்குறதுக்கு மாப்பிள்ள சம்பா வாங்கிப்போடு, சுறுசுறுப்பா களத்து வேலைய பாக்கனும்னா கருப்பு கவுனி கஞ்சி குடின்னு எங்க ஊரு பெரியவங்க சொல்லுவாங்கோ! இப்பவாச்சும் இந்த நெல்மணிகளோட அருமைய நாம புரிஞ்சக்கணுமுங்க!”
ஆலங்குடி பெருமாள் அவர்களின் ஒற்றை நாற்று நடவு வழிமுறையை பின்பற்றுகிறார். கிச்சிலி சம்பா சாகுபடிக்கு மொத்தமாக 7 கிலோ விதை நெல்லை மட்டும் பயன் படுத்தியுள்ளார். 7 கிலோ விதை நெல்லில் இருந்து பெறப்பட்ட நாற்றுகள் 12 ஏக்கரில் நடுவதற்கு போதுமானதாக இருந்ததாகவும், அவர் பண்ணையில் 10 ஏக்கரில் நாற்று நட்ட பின், இரண்டு ஏக்கர் நடுவதற்கு போதுமான நாற்றுக்கள் மீதம் இருந்ததாகவும் தெரிவித்தார்.
ஒற்றை நாற்றுநடவு முறை சிறந்த பலனைத் தருவதினால், அனைத்து பயிர்களையும் ஒற்றை நாற்று நடவு முறையிலேயே பயிர் செய்திருந்தார்.
ஒற்றை நாற்று நடவு முறையில் பயிர் செய்துள்ளதால் நாற்றுக்கு நாற்று 50 செ.மீ இடைவெளி விடப்பட்டுள்ளது. இடைவெளி போதுமான அளவு உள்ளதால் பயிர்கள் நுண்ணூட்ட சத்துகளுக்காகவும், காற்றுக்காகவும், ஒளிக்காகவும் ஒன்றுடன் ஒன்று போட்டியிடாமல் திடமாக வளர்கிறது என்றும், நாற்றுகள் நெருக்கமாக இருந்தால் நாற்று நீண்டு வளர்வது மட்டுமல்லாமல் அதிக தூர் வெடிக்காது, எனினும் பயிர் இடைவெளி பயிருக்கு பரிந்துரைக்கப் பட்ட அளவைவிட மேலும் அதிகரித்தாலும் மகசூலில் பாதிப்பு ஏற்படும் என்றும் தனது அனுபவத்தில் கவனித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
உதாரணமாக இவர் பயிரிட்ட கிச்சிலி சம்பாவில் 2 ஏக்கர் மட்டும் 50 செ.மீ சரியான இடைவெளியுடன் நட்டிருந்தார், இந்த பயிரில் 45 முதல் 50 தூர்கள் வரை வந்துள்ளது, இந்த இரண்டு ஏக்கரில் மட்டும், ஏக்கருக்கு 35 மூட்டை நெல்லை (62 கிலோ மூட்டை) அறுவடை செய்துள்ளார்.ஆனால் மீதியுள்ள 8 ஏக்கரில் இடைவெளி 50 செ.மீட்டரை விட அதிகமாக வைத்து நடவு செய்து விட்டதால் மகசூல் குறைந்துள்ளது, இந்த 8 ஏக்கரில், ஏக்கருக்கு 23 மூட்டை நெல் மட்டுமே கிடைத்துள்ளது.
ஒரு ஏக்கருக்கு தோராயமாக 13,500 ரூபாய் செலவு செய்து இந்த மகசூலை எடுத்துள்ளதாகவும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
* தண்டுப்பகுதிபெரும்பாலானசெடியினங்களில்மண்ணுக்குவெளியேகதிரவனின்வெளிச்சத்தைநோக்கிவளரும். ஆனால், வாழையில்அதுகிழங்குவடிவில்மண்ணுக்கடியில்மட்டுமேவளர்கிறது.
இம்மரமானது தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டது. பின்னர் 1560- 1565ம் ஆண்டில் போர்த்துக்கீசியரால் இந்தியாவில் உள்ள கோவாவிற்கு எடுத்து வரப்பட்டு, பின்னர் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை அடைந்தது.
முந்திரியில், முந்திரிப்பழம் என அழைப்பது, உண்மையில் பழமல்ல. அது போலிப்பழம் என அழைக்கப்படுகிறது. இது பூவின் சூலகப் பகுதியில் இருந்து உருவாவதில்லை. பூவின் அடிப்பகுதியில் உள்ள தடித்த பூக்காம்புப் பகுதியே இவ்வாறு பேரிக்காய் உருவத்தில் விருத்தியடைகின்றது. இது முந்திரி ஆப்பிள் எனவும் அழைக்கப்படுகிறது.
முந்திரியில், முந்திரி ஆப்பிளின் அடியில் சிறுநீரக வடிவில் உள்ள அமைப்பே உண்மையான பழம் ஆகும். இது உண்மையான பழமாக இருந்தாலும், இதன் உள்ளே இருக்கும் உண்ணக்கூடிய பகுதி முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகின்றது. அதாவது முந்திரியின் உண்மைப்பழமானது தனி ஒரு விதையைக் கொண்ட பழமாகும்.
இம்மரமானது இன்று வெப்பமண்டல நாடுகள் பலவற்றில் வளர்க்கப்படுகிறது. வியட்நாம், நைஜீரியா, இந்தியா, பிரேசில், இந்தோனீசியா ஆகிய நாடுகளில் இது அதிகம் பயிரிடப்படுகிறது.
எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :
வி.ஆர்.ஐ.1 (விருத்தாச்சலம்) வி.ஆர்.ஐ.2, வி.ஆர்.ஐ 3, வி.ஆர்.ஐ 4, வி.ஆர்.ஐ (CW) ஹெச் 1, வென்குர்லா 4, வென்குர்லா 7, பப்பட்லால் – 8 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்ற இரகங்கள் ஆகும்.
பருவம்
ஜுன் – டிசம்பர் மாதங்களில் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.
மண்
நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் பாங்கான நிலத்தில் நன்கு வளரும் தன்மை கொண்டது. இது வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. மழை அளவு 50 முதல் 250 செ.மீ வரை உள்ள இடங்களிலும் நன்கு வளரும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது, கட்டிகள் இல்லாமல் பண்படுத்த வேண்டும். பின் 45 செ.மீ நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழிகளுக்கும் இடையே உள்ள இடைவெளி 7 மீட்டர் இருக்குமாறு அமைத்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு குழியிலும் மேல் மண்ணுடன் 2 கிலோ தொழு உரம், ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.
விதையளவு
ஒட்டுக்கட்டுதல் மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கரில் நடவு செய்வதற்கு 200 கன்றுகள் தேவைப்படும்.
விதைத்தல்
தயார் செய்துள்ள குழிகளில் கன்றுகளை குழியின் மையப்பகுதியில் நடவு செய்ய வேண்டும். அடர் நடவு முறையில் 5 x 4 மீ இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு 500 மரங்கள் வீதம் நடவு செய்யலாம்.
நீர் நிர்வாகம்
செடிகள் ஓரளவுக்கு வளர்ந்து வரும் வரை தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க வேண்டும். பூக்கும் தருணத்திலும், காய் பிடிக்கும் தருணத்திலும் வறட்சியான சீதோஷ்ண நிலை நிலவினால் காய் பிடிப்பு அதிகரிக்கும். முந்திரியை பொதுவாக மானாவாரியாக பயிர் செய்யலாம்.
உரங்கள்
ஒரு வயதான மரம் ஒன்றிற்கு தொழு உரம் 10 கிலோ, தழைச்சத்து 70 கிராம், மணிச்சத்து 40 கிராம், சாம்பல்ச்சத்து 60 கிராம் கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்க வேண்டும். 4 வயது வரை கொடுக்கப்பட்டுள்ள உரங்களின் அளவை ஒவ்வொரு மடங்காக அதிகரிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு பிறகு தொழு உரம் 50 கிலோ, தழைச்சத்து 500 கிராம், மணிச்சத்து 200 கிராம், சாம்பல்ச்சத்து 300 கிராம் உரங்களை அளிக்க வேண்டும். உரங்களை இரண்டாகப் பிரித்து ஜுன் – ஜுலை மாதங்களில் ஒருமுறையும், அக்டோபர் – நவம்பர் மாதங்களில் ஒருமுறையும் அளிக்க வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். பின் வருடம் ஒருமுறை களை எடுக்க வேண்டும்.
மரத்தில் சுமார் ஒரு மீட்டர் உயரம் வரை பக்கக் கிளைகள் வராமல் வெட்டிவிட வேண்டும். ஒவ்வொரு வருடமும் காய்ந்து போன கிளைகளை நீக்கி சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் மரங்களுக்குக் கிடைக்குமாறு செய்ய வேண்டும். மேலும் ஒட்டுக்கட்டிய பகுதிக்குக் கீழ் வரும் தளிரை அவ்வப்போது கிள்ளிவிடவேண்டும். ஒட்டுச் செடியில் தோன்றும் பூக்களை நீக்கி விட வேண்டும்.
பயிர் பாதுகாப்பு தண்டுத் துளைப்பான்
இதன் தாக்குதல் மரத்தின் அடித்தண்டில் ஆண்டு முழுவதும் காணப்படும். இதனை கட்டுப்படுத்த கார்பரில் 50 சத நனையும் தூள் 0.1 சதம் மருந்தை தண்டுப்பகுதியில் சுமார் 1 மீட்டர் உயரம் வரை தடவி விடவேண்டும்.
5% வேப்ப எண்ணெய்யை ஜனவரி – பிப்ரவரி, மே -ஜூன் மற்றும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் அடி மரத்தில் பூச வேண்டும்.
தேயிலைக்கொசு
தேயிலைக் கொசுவைக் கட்டுப்படுத்த தழைப் பருவத்தில் 2 மிலி போசலான் 35 EC, மொட்டு விடும் பருவத்தில் 2 கிராம் கார்பரில் 50 WP மற்றும் கொட்டை உருவாகும் பருவத்தில் 2 மிலி மேனோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இலைத் துளைக்கும் புழு
இதனை கட்டுப்படுத்த 5% வேப்பங்கொட்டை சாறினை துளிர்விடும் பருவத்திலும், பூக்கும் பருவத்திலும் தெளிக்க வேண்டும்.
வேர்த் துளைப்பான்
ஒரு மரத்திற்கு மோனோகுரோட்டோபாஸ் 5 மில்லி மருந்துடன் 5 மில்லி தண்ணீர் கலந்த கலவையை புழு தாக்கிய துளைகளில் ஊற்றவேண்டும். இதை குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு முறை செய்ய வேண்டும்.
ஆந்தராக்னோஸ்
இதனை கட்டுப்படுத்த துளிர்விடும் பருவத்தில் 1% போர்டாக்ஸ் கலவையுடன் பெரஸ் சல்பேட்டை கலந்து தெளிக்க வேண்டும்.
நுனிக்கருகல்
நோய் தாக்கப்பட்ட கிளைகளை வெட்டி நீக்க வேண்டும். பிறகு அந்த இடத்தில் 1 சதவீதம் போர்டோக்கலவை மருந்தினை தடவி விடவேண்டும்.
அறுவடை
கன்றுகள் நட்ட மூன்றாவது வருடத்தில் காய்ப்புக்கு வந்து விடும். மார்ச் – மே மாதங்களில் அறுவடை செய்யலாம். நன்கு பழுத்த முந்திரிப் பழங்களிலிருந்து கொட்டைகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, வெய்யிலில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நன்கு உலர்த்தவேண்டும்.
மகசூல்
ஒரு வருடத்தில் ஒரு மரத்தில் இருந்து 3 முதல் 4 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
ஊடுபயிர்
கன்றுகள் நட்ட, மூன்று ஆண்டுகளுக்கு பின்பே, முந்திரியை சாகுபடி செய்ய முடியும். எனவே இடைப்பட்ட காலத்தில் உளுந்து, பச்சை பயறு, நிலக்கடலை போன்றவற்றை பயிரிடலாம்.
பயன்கள்
முந்திரியில் மாங்கனீசு, பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற கனிம தாதுக்கள் அதிக அளவில் உள்ளன.
முந்திரி பருப்பில் குறைந்த அளவிலான சியாசாந்தின் உள்ளது. இது கண்ணில் உள்ள கருவிழி படலத்தை பாதுகாக்க உதவுகிறது.
கையளவு முந்திரிப் பருப்புக்களை உட்கொள்வதால் பசியை நீண்ட நேரத்திற்கு கட்டுப்படுத்த முடியும்.
முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான ஒலியிக் மற்றும் பால்மிட்டோலெயிக் அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகிறது.
முந்திரி பருப்பில் அதிகமாக உள்ள செலினியம் ஊட்டச்சத்தானது உடலுக்கு நோய் எதிர்ப்பு திறனை தரவல்ல நொதிகளான குளுடாதயோன் பெராக்ஸிடேஸ் நொதிக்கு இணை காரணியாக செயல்படுகிறது.
தேமோர், அரப்பு மோர், மீன் கரைசல் தயாரிக்கும் முறை
தேமோர் கரைசல்
தேவையான பொருட்கள்
புளித்த மோர் – 5 லிட்டர்
தேங்காய்ப்பால் – 1 லிட்டர்
தேங்காய் துருவல் – 10 தேங்காய்
அழுகிய பழங்கள் – 10 கிலோ
தயாரிப்பு முறை
புளித்த மோர் மற்றும் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் இட்டு, நிழலான இடத்தில் வைக்க வேண்டும்.
இவற்றுடன் 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை பொட்டலம் போல் கட்டி அதில் போட வேண்டும்.
தினமும் கரைசலைக் கலக்கி வரவேண்டும்.
ஏழு நாட்களில் தேமோர்க் கரைசல் தயாராகி விடும். 8-ம் நாள், ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி தேமோர்க் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் செடிகளுக்குத் தெளிக்கலாம்.
நன்மைகள்
தேமோர்க் கரைசல் என்பது பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது.
பயிர்களில் பூ எடுக்கும் சமயத்தில் இக்கரைசலைத் தெளித்தால், பூக்கள் அதிகமாகப் பூக்கும்.
இக்கரைசல் தெளிக்கப்பட்டு விளைந்த காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும்.
அரப்பு மோர் கரைசல்
தேவையான பொருட்கள்
புளித்த மோர் – 5 லிட்டர்
இளநீர் – 1 லிட்டர்
அரப்பு இலைகள் – 1 முதல் 2 கிலோ
500 கிராம் பழ கழிவுகள் அல்லது பழ கழிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட 1 லிட்டர் சாறு.
தயாரிக்கும் முறை
அரப்பு இலைகளை நீருடன் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.
பின்னர் இதனுடன் புளித்த மோர், இளநீர் மற்றும் பழச்சாறு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்தக் கரைசல் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஒருவார காலத்திற்கு வைத்திருக்க வேண்டும். இந்த ஒருவார காலத்தில் நொதிக்க தொடங்கி விடும். இந்த நொதித்த கரைசலே அரப்பு மோர் கரைசல் ஆகும்.
அரப்பு இலைத் தூள் பயன்படுத்துவதாக இருந்தால், பழ கலவைகளுக்கு பதிலாக பழ சாறு பயன்படுத்த வேண்டும். நான்கு பொருட்களையும் கலந்து அதனை ஏழு நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும்.
ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.
நன்மைகள்
அரப்பு மோர் கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் தாக்குதல் இருக்காது.
இது தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் பூஞ்சை நோய்களுக்கு எதிர்ப்பு தன்மை உருவாகிறது.
அரப்பு மோர் கரைசலை பூப் பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறையப்பூக்கள் பூக்கும்.
அரப்பு மோர் கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால் பயிர்கள் குறைந்த காலத்தில் நன்கு வளர்ச்சியடைந்து, அதிக விளைச்சல் மற்றும் மகசூல் கிடைக்கும்.
மீன் கரைசல்
தேவையான பொருட்கள்
மீன் கழிவுகள் – 1 கிலோ
பனை வெல்லம் (அ) நாட்டு சர்க்கரை – 1 கிலோ
தயாரிக்கும் முறை
உணவுக்கு பயன்படாத மீன் கழிவுகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து கலக்க வேண்டும்.
இதனை ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும்.
நாற்பது நாட்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும். இந்த திரவத்திலிருந்து கெட்டை வாடை வீசாது. பழவாடை வீசும். இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்.
ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். தேவைப்படும் போது மீன் அமினோ அமிலத்தை எடுத்துக் கொண்டு பிளாஸ்டிக் வாளியை காற்று புகாமல் மூடி வைத்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.
பயன்கள்
மீன் அமினோ அமிலம் ஒரு முக்கிய வளர்ச்சி ஊக்கியாக செயல்படும் தன்மை கொண்டது.
தழைச்சத்துக்கு யூரியாவை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த அமிலத்தை பயன்படுத்தலாம்.
மீன் அமினோ அமிலத்தை பூக்கும் தருணத்தில் பயன்படுத்தும் போது பூக்கள் நன்றாக பூக்கும் மற்றும் காய்க்கும் திறன் அதிகரிக்கும். இந்த அமிலம் சுற்றுச்சூழலுக்கு எந்த விதமான பாதிப்புகளையோ, பக்கவிளைவுகளையோ ஏற்படுத்துவது கிடையாது.
E.M. என்னும் திற நுண்ணுயிரி
தேவையான பொருட்கள்
Effective Microorganisms என்பதின் சுருக்கமே E.M. ஜப்பான் நாட்டில் 1980களில் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த திற நுண்ணுயிரி. இன்று 120 நாடுகளில் விவசாயம், சுற்றுச்சூழல், கால்நடைப் பராமரிப்பு துறைகளில் பயன்படுகிறது. இது இயற்கை இடுபொருள் என Ecocert அமைப்பு சான்று தந்துள்ளது.
வகைகள்
E.M 1 திற நுண்ணுயிரி
E.M 2 திற நுண்ணுயிரி
E.M 1 திற நுண்ணுயிரி
E.M 1 என்பது உறங்கும் நிலையிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் தொகுப்பாகும். இது நொதித்த பிறகே பயன்படுத்தப்பட வேண்டும்.
E.M 2 திற நுண்ணுயிரி
E.M 2 தயார் செய்ய 1:1:20 என்ற விகிதத்தில் E.M 1 : வெல்லம்(அ)கரும்புச் சர்க்கரை: குளோரின் கலக்காத நீர் ஆகியவற்றை 5-10 நாட்கள் பிளாஸ்டிக் கலன்களில் காற்று புகாமல் நிழலில் வைக்க வேண்டும்.
இவ்வாறு வைக்கப்பட்ட கரைசல் நொதிக்க ஆரம்பிக்கும். உருவாகும் வாயுவை வெளியேற்ற தினமும் 1 நொடி மூடியை திறந்து மூட வேண்டும். இந்த கரைசலே E.M 2 ஆகும். நொதிக்க வைக்க கண்ணாடிக் கலன்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நன்மைகள்
இக்கரைசலை ஒரு மாத காலத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும். வீட்டின் சமையலறை, குளியலறை போன்ற இடங்களிலும் E.M 2 கரைசலை உபயோகப்படுத்தலாம். இவ்விடங்கள் விரைவாக உலர்ந்து, ஈரமின்றி இருப்பதுடன் ஈக்களும் வராது. துர்வாசனையும் நீங்கும்.
இது மிகச்சிறந்த இயற்கை ஈடுபொருள். கழிவுகளை இதனை கொண்டு மக்கச் செய்து மறுசுழற்சி செய்யலாம்.
தாவர வேர்களில் ஒட்டிக்கொண்டு வேரையும், மண்ணையும் இணைத்து மண்ணிலுள்ள பாஸ்பரஸை நேரடியாகவும், மறைமுகமாக மற்ற சத்துகளையும், நீரையும் எளிதாக உறிஞ்சி தாவரங்களுக்கு தரவல்லது. இது வேர்களை அதிக அளவில் உண்டாக்குவதால் விளைச்சல் அதிகரிக்க உதவுகிறது.
மண்ணிலுள்ள நோய் உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை ஆகியவை தாவரங்களை தாக்காமல் பாதுகாக்கிறது.
வேல்ஸ் திராட்சை. தாவர பண்புகள்: தோற்றம், பழங்கள்
வேல்ஸ் திராட்சை வகையின் விளக்கம்
Veles ஒரு திராட்சை, இது உக்ரைன் (Zaporozhye), Vitaliy Zagorulko ஒரு வளர்ப்பாளர் மூலம் வளர்க்கப்பட்டது. இது ரஸ்போல் மற்றும் சோபியாவின் கலப்பினமாகும். சில நேரங்களில் இந்த திராட்சையின் விளக்கத்தில் "பிங்க் சுல்தானா" என்ற வார்த்தையை நீங்கள் காணலாம். வளர்ப்பவரின் சேகரிப்பில் பல வகைகள் உள்ளன, ஆனால் வேல்ஸ் பல தோட்டக்காரர்களின் பெருமை.
இன்றுவரை, இந்த வகை மிகவும் நம்பிக்கைக்குரியது, தேவை மற்றும் தொழில் வல்லுநர்கள் மற்றும் அமெச்சூர்களால் வளர்க்கப்படுகிறது. முதன்முறையாக, இந்த வகை 2009 இல் பரந்த பார்வையாளர்களுக்கு விற்கப்பட்டது. அப்போதிருந்து, இந்த பழ புதரின் புகழ் குறையவில்லை. ஒரு ஆரோக்கியமான புதர் பெற எளிதான வழி ஒரு நாற்றங்கால் இருந்து ஒரு நாற்று வாங்க வேண்டும். வளர்ந்து வரும் அனுபவம் இல்லாமல், ஒரு வகை மாதிரியை வளர்ப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
கோடைகால குடியிருப்பாளர்களின் மன்றத்திலிருந்து வேல்ஸ் திராட்சைகளின் புகைப்படம்:
வேல்ஸ் ரஷ்யாவில் (மாஸ்கோ பிராந்தியம், யூரல்ஸ், காகசஸ்) மற்றும் உக்ரைன் (அனைத்து பகுதிகள்) மற்றும் அண்டை நாடுகளிலும் தீவிரமாக வளர்க்கப்படுகிறது. உறைபனி எதிர்ப்பு பண்புகள்: நடுத்தர அல்லது பலவீனமான. தங்குமிடம் வடிவில் குளிர்காலத்திற்கான உறைபனி பாதுகாப்பு பரிந்துரைக்கப்படுகிறது.
பல்வேறு நன்மைகள் மத்தியில்:
ஆரம்ப முதிர்வு;
பல்வேறு பாதுகாப்பின் உயர் பண்புகள்;
நடவு செய்த பிறகு, அது எளிதில் வேர் எடுக்கும், ஒன்றுமில்லாத தன்மை, நோய் எதிர்ப்பு;
தாவரத்தின் அதிக மகரந்தச் சேர்க்கை;
வளர்ப்பு குழந்தைகளின் உருவாக்கம், நல்ல வளர்ச்சி;
நடவு செய்த பிறகு திறந்த நிலத்தில் நாற்றுகளின் உயிர்வாழ்வு விகிதம்.
வேல்ஸ் தீமைகள்:
சிறந்த உறைபனி எதிர்ப்பு அல்ல;
வளர்ச்சி தூண்டுதல்களைப் பயன்படுத்தும் போது, பெர்ரி உதிர்வதைக் காணலாம், மழை பெய்யும் போது, பழங்கள் அழுகும்;
கவனிப்பைக் கோருகிறது.
தாவர பண்புகள்: தோற்றம், பழங்கள்
வேல்ஸ் திராட்சை ஒரு உன்னதமான இனிப்பு சுவை கொண்டது, இது சுல்தானா வகைகளுக்கு பொதுவானது. நம்பமுடியாத பெரிய நொறுங்கிய தூரிகைகளில் வேறுபடுகிறது (இதன் பொருள் கொத்துகளில் உள்ள பெர்ரி இறுக்கமாக உட்காரவில்லை). ஒரு கொத்து எடை 1,5 கிலோ வரை அடையலாம். கொடி சரியாக பழுக்க வைக்கும், கொத்துகளின் வடிவம் கூம்பு அல்லது சிலிண்டர் ஆகும். விதைகள் இல்லை, எப்போதாவது ஒரு அடிப்படை வடிவத்தில் வரும். பெர்ரி நிறம்: பணக்கார இளஞ்சிவப்பு, லேசான வெள்ளை பூச்சுடன். வலுவான முதிர்ச்சியுடன், பெர்ரிகளின் பிரகாசம் மிகவும் தீவிரமாக இருக்கும், சிவப்பு நிறம் வரை. புதர்கள் நடுத்தர அளவிலானவை, வளர்ச்சி மிதமானது. சாகுபடி வகை: தண்டு, குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி, ஹெட்ஜ்.
நடவு செய்வதற்கு ஒரு தளத்தைத் தேர்ந்தெடுப்பது, மண்ணின் வகையை கணக்கில் எடுத்துக்கொள்வது, நீர்ப்பாசனம் செய்வது
களிமண், களிமண் அல்லது மணல் மண் வேல்ஸுக்கு ஏற்றது. மற்ற திராட்சைகளைப் போலவே, இந்த பழ ஆலை ஒளி குறைபாட்டை பொறுத்துக்கொள்ளாது. குறைந்த வெளிச்சத்தில், பெர்ரி மிகவும் சிறியதாக வளரும் மற்றும் போதுமான இனிப்பு இல்லை. வேல்ஸ் திராட்சை ஒரு ஆதரவுடன் திறந்த பகுதியில் நடப்பட வேண்டும். அருகிலுள்ள கட்டிடத்தில் இருந்து தூரம் குறைந்தது 50 செ.மீ., இளம் நாற்றுகளுக்கு இடையே 1,5 மீட்டர் இடைவெளி காணப்படுகிறது. இலையுதிர் காலத்தில் நடவு செய்வதற்கான ஒரு முக்கியமான விதி: நாற்று தரையில் மாற்றப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு துளை தோண்டப்படுகிறது. மற்றும் நடவு செய்வதற்கான இரண்டாவது தேவை: தாவரத்தை பானை அல்லது பெட்டியிலிருந்து தரையில் மாற்றும்போது நாற்றுகளின் வேர் கழுத்தை ஆழப்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை. நடவு செய்த உடனேயே, தாவரங்கள் பாய்ச்சப்படுகின்றன, பின்னர் மண் தழைக்கூளம் செய்யப்படுகிறது, இதனால் ஈரப்பதம் மெதுவாக ஆவியாகும்.
பருவகால பராமரிப்பு, சீரமைப்பு மற்றும் கருத்தரித்தல்
வேல்ஸ் திராட்சையைப் பராமரிப்பதற்கான விரிவான திட்டம் எதுவும் இல்லை, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இது தோட்டக்காரரிடமிருந்து சிறிய சேர்த்தல்களுடன் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தரங்களுடன் இணங்குகிறது, எடுத்துக்காட்டாக, வசந்த காலத்தில் மட்டுமே சில கத்தரிக்காய், மற்றும் யாரோ இலையுதிர் கத்தரித்து பரிந்துரைக்கின்றனர். 4-5 கண்கள் (மொட்டுகள்) புதரில் இருக்கும் போது குறுகிய கத்தரித்தும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
உரங்களுடன் அனைத்து கையாளுதல்களும் பூக்கும் முன் செய்யப்படுகின்றன. குளிர்காலத்தில், புதரை அக்ரோஃபைபர் மூலம் மூடி வைக்கவும், இது வேர் அமைப்பு மற்றும் தளிர்களை உறைபனியிலிருந்து பாதுகாக்கும்.
தூய்மையானதரையில்சூரியவெப்பத்தில்காயவைக்கவேண்டும். மழையில்நனையவிடக்கூடாது. ஒவ்வொருநாளும்மூன்றுஅல்லதுநான்குமுறைகிளறிவிட்டுசீராககாயவிடவேண்டும். தினமும்மாலையில்கிழங்குகளைஒன்றாகக்குவித்துதார்பாலினால்மூடிவிடவேண்டும். சுமார் 10 அல்லது 15 நாட்களில்மஞ்சள்காய்ந்துவிடும். கிழங்குகள்உறுதியாகமாறிவிடும்.
பலாமரமானதுஇந்தியா, பர்மா,
இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ்,
பிரேசில், கென்யாஆகியநாடுகளில்வளர்கிறது. தமிழ்நாட்டில்நீலகிரி, கீழ்ப்பழனிமலை, வயநாடு, குற்றாலம், ஆனைமலை,
கொல்லிமலைபகுதிகளில்விளைகிறது.
பலாப்பழம்ஊட்டச்சத்துமிக்கது. நார்சத்துஅதிகமுள்ளபலாப்பழம்செரிமானத்துக்குஉதவுகிறது. வைட்டமின் A , B , C , கால்சியம்உள்ளிட்டசத்துக்கள்நிறைந்தஇப்பழம்முதுமையைதடுக்கவல்லது.
அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.
நாற்றுகளை உருவாக்க குழித்தட்டுகள்
நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்
தொட்டிகள்
10 கிலோ கொள்ளளவு கொண்ட தொட்டி அல்லது பைகளில் 8 கிலோ வரை மண், மணல், தென்னை நார் கழிவு, மட்கிய குப்பை ஆகியவற்றை நிரப்பி தொட்டியை ஆற விட வேண்டும்.
நாற்றுகளை உண்டாக்க குழி தட்டில் தென்னை நார் கழிவுகளை நிரப்ப வேண்டும். அதன் அடியில் ஒரு துளை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
விதைத்தல்
தரமான விதைகளை தேர்வு செய்து குழி தட்டுகளில் குழிக்கு ஒரு விதை வீதம் விதைக்க வேண்டும். தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
தயார் செய்துள்ள தொட்டிகளில் 20 நாள் வயதான நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
நாற்று நட்டவுடன் நீர் ஊற்ற வேண்டும். இரு நாட்களுக்கு ஒருமுறை காலை அல்லது மாலை வேளையில் நீர் ஊற்ற வேண்டும்.
உரங்கள்
செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.
வேப்பம்புண்ணாக்கை ஊறவைத்து வடிகட்டிய நீருடன் வேப்ப எண்ணெய் 3 மிலி (ஒரு லிட்டர் தண்ணீரில்) கலந்து தெளிக்கும்போது பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும்.
பாதுகாப்பு முறைகள்
பஞ்சகாவ்யா உரத்தை மேல் தெளிப்பாக தெளிக்கலாம். மேலும் சமையலறை கழிவுகளை உரமாக இடலாம்.
இயற்கை பூச்சி விரட்டிகளான கற்றாழை சாறு, பூண்டு கரைசல் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மி.லி தெளித்து வர நன்மை தரும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
அறுவடை
120 நாட்களில் காய்களை அறுவடை செய்யலாம்.
முட்டைகோஸ் பயன்கள்:
இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது. கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும்.
மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.
சரும வறட்சியை நீக்கி சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும். வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.
எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.
நரம்புகளுக்கு வலு கொடுத்து நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.
ஒருஎக்டருக்குஅடியுரமாக 20 முதல் 30 கிலோதழைச்சத்து, 30 முதல்
50 கிலோமணிச்சத்து, 30 முதல் 40 கிலோசாம்பல்சத்தைஇடவேண்டும். மேலுரமாக 20 முதல் 30 கிலோதழைச்சத்தைபூபூக்கும்பருவத்தில்இடவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக