விவசாயம்

வெங்காயம் சாகுபடி மற்றும் மருத்துவப் பயன்கள்

முதன் முதலில் மத்திய ஆசியாவில் வெங்காயம் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னரே வெங்காயத்தை நம்முன்னோர்கள் உபயோகித்திருக்கிறார்கள்.


வெங்காயம் ஆசியாவிலிருந்து தான் உருவானதாக கருதப்பட்டாலும் கூட, வெங்காயம் காட்டுப் பயிராக, உலகின் மூலைமுடுக்கெல்லாம் முளைத்துள்ளது.

வெங்காயத்தை உணவாக மட்டுமல்ல, வழிபடும் பொருளாகவும் எகிப்தியர்கள் பார்த்திருக்கிறார்கள். பிரமிடுகளைக் கட்டிய தொழிலாளர்களுக்கு உணவாக வெங்காயத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி, மம்மியாக்குவதற்கும் வெங்காயத்தை பயன்படுத்தியுள்ளனர்.

எப்படி பயிரிடுவது…?

கோ 1, 2, 3, 4, 5 மற்றும் எம்டி 1 ஆகிய இரகங்கள் ஏற்றவை.

உச்சி முதல் பாதம் வரை உடலுக்கு பலவிதமானப் பயன்களை வழங்கும் வெங்காயத்தை பதமாக சாகுபடி செய்வதால், விவசாயிகள் நல்ல லாபத்தைப் பெற முடியும்.

பூர்வீகம்

முதன் முதலில் மத்திய ஆசியாவில் வெங்காயம் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும் வெங்காயம் காட்டுப் பயிராக, உலகின் மூலைமுடுக்கெல்லாம் முளைத்துள்ளது.

இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி, மம்மியாக்குவதற்கும் வெங்காயத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள் எகிப்தியர்கள்.

சின்ன வெங்காயம் சாகுபடி

சின்னவெங்காயத்தில் கோ 1, 2, 3, 4, 5, எம்டி 1 ஆகிய இரகங்கள் சாகுபடி செய்ய ஏற்றவையாகக் கருதப்படுகின்றன.

பருவம்

ஏப்ரல்-மே மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வெங்காயத்தை சிறப்பாக பயிரிடலாம்.

மண்

மண்ணின் கார, அமிலத் தன்மை 6-7க்குள் இருக்க வேண்டும். நன்கு தண்ணீர் தேங்காத, செம்மண் நிலம் சாகுபடிக்கு உகந்தது.

நிலம் தயாரித்தல் ( How to prepare land)

நிலத்தை 2 முதல் 3 முறை உழுது, கடைசி உழவின்போது ஒரு எக்டருக்கு 25 டன் மக்கிய தொழு உரமிட வேண்டும். பின்பு 45 செ.மீ இடைவெளியில் பார் பாத்திகள் அமைத்து, நிலத்தை தயார் செய்யவேண்டும்.

விதையளவு

ஒரு ஹெக்டேருக்கு விதை வெங்காயம் 1,500 கிலோ தேவைப்படும்.

விதைத்தல் (Sowing)

10 செ.மீ இடைவெளியில், பார் பாத்திகளின் இருபுறங்களிலும் விதை வெங்காயத்தை ஊன்ற வேண்டியது அவசியம்.

நீர் நிர்வாகம் (Water Management)

விதை வெங்காயம் நட்டபின் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு 3 நாட்கள் கழித்து உயிர் நீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்னர் 5 முதல் 7 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்சினால் போதுமானது.

உரங்கள் (Fertilizers)

நடவுக்கு முன்பு பார் பாத்திகளின் இருபுறமும் அடி உரமாக, எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்தும், 60 கிலோ மணிச்சத்தும், 30 கிலோ சாம்பல் சத்தும் இட வேண்டும். பின்னர் நடவு செய்த 30 நாட்கள் கழித்து, 30 கிலோ தழைச் சத்தினை மேலுரமாக இட்டு மண்ணை அணைக்க வேண்டும்.

களை நிர்வாகம்

விதை வெங்காயம் நடவு செய்த 30 நாள் கழித்து களை எடுத்து, மேலுரமிட்டு மண் அணைத்து, நீர் பாய்ச்ச வேண்டும்.

 Credit:AIIBiz

சாறு உறிஞ்சும் பூச்சி

சின்ன வெங்காயத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் பாதிப்பு பரவலாக காணப்படும். இதைக் கட்டுப்படுத்த னோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு சதவீதம் தெளிக்க வேண்டும்.

இலைப்புள்ளி நோய்

இலைப்புள்ளி நோய் தாக்கினால், இன்டோபில் எம் 45 என்ற மருந்தை 2 சதவீதம், தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

கீழ்த்தண்டு அழுகல் நோய்

கீழ்த்தண்டு அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, டிரைக்கோடெர்மா விரிடி 20 கிராம், 5 லிட்டர் கோமியம், 5 கிலோ சாணம் ஆகியவற்றைக் கலந்து நன்றாக வடிகட்டி, ஒட்டும் திரவத்துடன் வெங்காயத் தாள்கள் நன்கு நனையுமாறு காலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம், 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

இலைக் கருகல் நோய்

இலைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்த, ஆடோமோனாஸ் (0.6 சதம்) 500 கிலோவை, 100 லிட்டர் நீரில் கலந்து, ஒட்டும் திரவத்துடன் தெளிக்க வேண்டும்.

வளர்ச்சிப் பருவத்தில் அமிர்தக் கரைசல், பஞ்சகாவ்யா, தேங்காய் மோர் கரைசலில் ஏதாவது ஒன்றை 20 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்னர் 100 லிட்டருடன், 5 லிட்டர் புளித்த மோரைக் கலந்து தெளித்தால், காய் திரட்சியாக நல்ல நிறத்துடன் இருப்பதோடு, எடையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அறுவடை (Harvesting)

இலைகள் 75 சதவீதம் காய்ந்து விட்டால் பயிர் முதிர்ச்சி அடைந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். அறுவடைக்கு 7 நாட்கள் முன்பு நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சவேண்டும்.

பின்னர் கொத்து அல்லது மண் தோண்டி மூலம் தோண்டி வேர், இலைகளை பறித்து சுத்தம் செய்ய வேண்டும். அதன்பின் நிழலில் காயவைத்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

மகசூல் (Yield)

ஒரு ஹெக்டேருக்கு 15 முதல் 20 டன் சின்ன வெங்காயம் கிடைக்கும்.

 Credit: Exporters India

பெரிய வெங்காயம் சாகுபடி

இரகங்கள் (Varieties)

அடர் சிகப்பு ரகங்களில் எண் – 53, அக்ரிபவுன்ட், வெளிர் சிகப்பு ரகங்களில் பூசா சிகப்பு, என்-2-4-1, அக்ரிபவுன்ட் ஆகிய இரகங்கள் உள்ளன.

பருவம் (Seasons)

தென்னிந்தியாவைப் பொறுத்த வரையில் மே – ஜூன் (கரீப் பருவம்) மாதங்களிலும், ஆகஸ்ட் – செப்டம்பர் (ரபி பருவம்) மாதங்களிலும் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. எனினும் குளிர் கால வெங்காய சாகுபடியில் தான் சிறந்த மகசூல் கிடைக்கும்.

மண் ( Sand)

இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள சமமான, வளம் நிறைந்த மண் தேவைப்படுகிறது. மண்ணின் கார அமிலத் தன்மை 7 முதல் 7.6 வரை இருக்க வேண்டும். களிமண் நிலங்களைத் தவிர்ப்பதே சிறந்தது.

விதையளவு (Seeds)

ஹெக்டேருக்கு 5 முதல் 6 கிலோ விதைகள் தேவைப்படும்.

விதைநேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 400 கிராம் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தை ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து 30 நிமிடம் நிழலில் உலர்த்தி, நாற்றங்காலில் விதைப்பது அவசியம்.

நாற்றங்கால் தயாரித்தல்

ஒரு ஹெக்டேருக்கு நடவு செய்ய சுமார் 5 செண்ட் நாற்றங்கால் இடவசதி தேவைப்படும். நிலத்தை நன்கு கொத்தி, 1 சதுர மீட்டருக்கு 1 கிலோ என்ற அளவில் விஏஎம் என்ற பூசணக் கலவையை இடவேண்டும். நாற்றங்காலில் விதைகளை அடர்த்தியாக விதைக்காமல், பரவலாக விதைக்கவேண்டும். அப்போது தான் நாற்றுகள், செழுமையாக 40-45 நாட்களிலிலேயே தயாராகிவிடும்.

நிலம் தயாரித்தல்

சாகுபடி செய்யும் நிலத்தை நன்றாக உழவு செய்ய வேண்டும். 45 செ.மீ மற்றும் 10 செ.மீ இடைவெளியில் 45 நாள் வயதுடைய நாற்றுகளை நட்டினால் நல்ல பலனை அடையலாம்.

நீர் நிர்வாகம் (Water Management)

வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். நீருடன் பஞ்சகாவ்யா கலந்தும் கொடுக்கலாம். இதனால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

உரங்கள் (Fertilizers)

அடியுரமாக கடைசி உழவில் எக்டருக்கு 10 டன் தொழு உரம், 20 கிலோ தழைச்சத்து தரவல்ல 45 கிலோ யூரியா, 60 கிலோ மணிச்சத்து தரவல்ல 375 கிலோ சூப்பர் பாஸ்பேட், 30 கிலோ சாம்பல் சத்து தரவல்ல 50 கிலோ பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இட வேண்டும்.

களை நிர்வாகம்

விதை வெங்காயம் நடவு செய்த 30 நாள் கழித்து களை எடுத்து, மேலுரமிட்டு மண் அணைத்து, நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் தேவைக்கு ஏற்ப களை எடுத்து நிலத்தை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும்.

தாக்கும் நோய்கள்

இலைப் புள்ளி நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு மாங்கோசெப் இரண்டு கிராம் அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு இரண்டரை கிராம் இவற்றில் ஒன்றை ஒட்டும் திரவமான டீப்பாலுடன், ஒரு லிட்டர் நீருக்கு அரை மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

வெங்காயம் நடவு செய்த 140 முதல் 150 நாட்களில் அறுவடை செய்யலாம்.

மகசூல்

ஹெக்டேருக்கு 6 முதல் 7 டன் மகசூல் கிடைக்கும்.

மருத்துவப்பயன்கள்

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

நான்கு அல்லது ஜந்து சின்னவெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

வெங்காயச் சாறு வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி படிப்படியாகக் குணமாகும்.

வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மற்றும் இழந்த சக்தியை மீட்டு தரும் தன்மை கொண்டது.

வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.


இயற்கை வேளாண்மை 

புதுக்கோட்டை ஆப்பிளும் புதுமையான உரமும்இயற்கை 

இயற்கை வேளாண்மை பற்றிய கொள்கைகள் :

Pannaiyar_nammalvar_image

கோ.நம்மாழ்வார் அவர்களை அதிகம் ஈர்த்தவை ஜே.சி. குமரப்பாவின் கொள்கைகள் தான் J.C .KUmarappa  அவர்கள் இந்தியாவில் இயந்திரத்தின் பயன்பாடுகளை அறிமிகம் செய்த பொழுது ‘‘ இயந்திர டிராக்டர் மிக  நல்லாத்தான் உழும்; ஆனால் இயற்கை முறையில் விவசாயம் செய்ய சாணி போடாதே’’ என்று சொன்னதை மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் தனது ஒவ்வொரு கூட்டத்திலும் குறிப்பிடுவார் நம்மாழ்வார்.

 

மேலும் விவசாயிகளிடம் சென்று பப்பாளிகொய்யாவாழை, நாவல் போன்றவை பயிரிடுங்கள்.ஏன்னா ,, ‘‘ஆப்பிள் அரை கிலோ 60 ரூபாய். அதைவிட அதிகம் சத்து இருக்கிற கொய்யா அஞ்சு கிலோ அம்பது ரூபாய். எதைச் சாப்பிடப்போறீங்க?’’ என்று நமது நாட்டின்  பாரம்பரியப் பழங்களையே வலியுறுத்துவார். மிக முக்கியமாய் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற அந்நியப் பழங்களைச் சாப்பிடுவதையும் இயன்றவரை தவிர்த்தே வந்தார்.

நைட்ரஜன் சத்து குறைபாடு :

இரசாயன உரங்களை  கொண்டு நிலத்தில் ஏற்படும்  நைட்ரஜன் சத்துக் குறைவுக்காக  யூரியா போன்ற இரசாயன வேளாண்மை உரங்கள் மண்ணுக்குத் தேவை என்று படித்த பலரும் வாதிட்டபோது, பழ தலைமுறைகளாக நாம் செய்து வரும் பாரம்பரிய உழவு/ வேளாண்மை முறையான பயிர் சுழற்சி மற்றும்  உழவு மூலம் இயல்பாகவே காற்றில் இருந்து கிடைக்கும் நைட்ரஜன் சத்து நமது மண்ணில் வளம் மற்றும்  நைட்ரஜன் சத்து அளவை இயற்கையான முறையில் எந்த ரசாயனமும் இல்லாமல் அதிகரிக்கிறது என்று முதன்முதலாக பலருக்கு எடுத்துகாட்டி அனைவருக்கும் நிரூபித்துக்காட்டியவர் நம்மாழ்வார்.

இந்தியாவில் பசுமைப் புரட்சியின் காரணமாக மத்திய மாநில  அரசு உரங்களை பயன்படுத்த விவசாயிகளை ஊக்குவித்துக்கொண்டிருந்த நேரத்தில் , நம்மாழ்வார் தமிழகத்தின் பல  கிராமந்தோறும் சென்று விவசாயிகளைச் சந்தித்து , இரசாயன உரப் பயன்பாட்டால் மண்ணின் காரத்தன்மை எவ்வாறு கூடும், அப்படி கூடும் பொழுது  அது அளவுக்கு அதிகமான தண்ணீரை எப்படி உறிஞ்சுகிறது என்பதை விவசாயிகள் புரியும் படி சிறிய செயல்விளக்கம் மூலம் நிரூபித்துக்காட்டுவார் . 

இன்றைக்கு இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாயம்பற்றிய  ( பஞ்சகாவியம் , பீஜமிர்தம் , அமிர்தகரைசல் )விழிப்புணர்வு தமிழகத்தில்  அதிக அளவு புரிதல் இருபதற்கு அதற்கு நம்மாழ்வாரின் மிக முக்கிய பழ செயல்பாடுகளே காரணம்.

மண்டல வேளாண்மை ஆராய்ச்சி பணி :

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் , ஊரெங்கும்  பசுமைப் புரட்சி பற்றிய கருத்துக்கள் அதி தீவிரமாகப் பரவிய காலகட்டத்தில், நம்மாழ்வார் அவர்கள்  இயற்கை விவசாயதிற்கான தனது வாழ்நாள் பயணத்தைத் தொடங்கினார். அதே நேரம் இந்த வாழ்வியல் பயணதிருக்கு தான் பார்த்துவந்த அரசு பணியான “ மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம்” இருந்த தனது மத்திய அரசு  பணியையும் உதறினார்.

இயற்கை வேளாண்மை கட்டுரை  ஒட்டுரகவிதைகள் பற்றிய வழிகாட்டல் :

நம்மில் பலரும் நினைத்து கொண்டு இருபது போல  நம்மாழ்வார் இன்றைய கால நவீனத் தொழில்நுட்பங்களுக்கு எதிரானவர் அல்ல.அவர் பயோடெக்னாலஜியின் அத்தனை விதமான பரிமாணங்களையும் எப்பொழுதும் மிகவும் ஆழமான விடயங்கள் தெரிந்து  வைத்திருப்பார் . 

அவரின் நேரடி வானகம் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்பவர்களுக்கு நன்கு தெரியும்.இருப்பினும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் கிடைக்கும் பயிர்களால் மண்ணுக்கு, மனிதனுக்கு அதிகமான  கேடு ஏற்படும் என்ற காரணத்தை அறிந்து கொண்டு நம்மாழ்வார் அதனை எதிர்த்தார். நமது பாரம்பரிய விதைகளை கொண்டு உருவாக்கிய ஒட்டுரகங்களை ஆதரித்தார்.

இவரது வழிகாட்டுதலில் மூலம் ஒரு புதிய ஒட்டு எலுமிச்சை ரகத்தையே உருவாக்கினார் புளியங்குடி விவசாயி திரு .அந்தோணிசாமி அவர்கள். அதில் மிக பெரும் வெற்றியும் பெற்றுள்ளார் .இன்றும் இந்த எலுமிச்சை மிகவும் விரும்பி வாங்கி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

பி.டி ( Genetically Modified) கத்திரியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் எண்ணத்தில் அன்றைய மத்திய அரசின்  சுற்றுச்சூழல்அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் நடத்திய கருத்துக்கேட்புக் கூட்டங்களில் , நம்மாழ்வார் தனது பிரதிநிதிகளை அனுப்பி பி.டி-க்கு எதிராகப் பேச  செய்தார். அதேபோல் நம்மாழ்வாரின் நண்பர்களான அரச்சலூர் செல்வம், டாக்டர் சிவராமன் ஆகியோர் அன்றைய நமது மாநில முதல்வராக இருந்த கருணாநிதியிடம் நேரில் சென்று பி.டி-யின் கேடுகளை எடுத்துச் சொல்லி, தமிழகத்தில் BT கத்தரிக்கு  தடை உத்தரவும் பெற்றனர்.

60 மற்றும் 70-களில் கலப்பின ரகங்கள் இந்தியாவுக்குள் ஊடுருவ பெரும்  முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது இந்தவகையான கலப்பினங்களைப் பற்றிப் படித்தவர்கள், அனுபவம் வாய்ந்தவர்களிடம் ( சிறு ,குறு மற்றும் பேரு விவசாயிகள் ) கூடப் பெரிதாக விழிப்புணர்வு இல்லை. அந்த கால கட்டடத்தில் “கலப்பினம் மற்றும் வீரிய ரகங்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம் உற்பத்தியைப் பெருக்குவதற்காகன தோ அல்லது விவசாயிகளுக்கு பயன் தர கூடியதோ அல்ல.இவைகள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் ரசாயன உரங்களை விற்பனை இந்தியாவில் விற்பனை செய்வதற்கான உணவு அரசியலே,இதனை அரசு  பசுமைப் புரட்சி பெயரில் கலப்பின ஊக்குவிப்பு” என்றார் .

இயற்கை வேளாண்மையில்  ஒற்றை நெல் நாற்று நடவு :

இயற்கை வேளாண்மை கட்டுரை- கோ. நம்மாழ்வார்

ஆப்பிரிக்காவின் நாட்டின் மடகாஸ்கர் நெல் நடவு என்பது உலக அளவில் மிகப்பிரபலமானது. ஒற்றை நாற்று நடவு அல்லது செம்மை நெல் சாகுபடி என்றழைக்கப்படும். இந்த  மடகாஸ்கர் நெல் நடவு பற்றிய பயன்கள் மற்றும் விளைச்சல் பற்றி 1960-களில் வெளியே தெரிந்தது. இந்த முறையில் விதை, நீர், நேரம் அனைத்தையும் குறைத்து, மகசூலை மட்டும் அதிகமாகக் கொடுத்த ஒற்றை நாற்றுநடவை உலகுக்கே அறிமுகப்படுத்தியது நமது முன்னோடி தமிழர்கள்தான் என்ற உண்மையை தக்க ஆதாரங்களுடன் உலகிற்கு எடுத்து கூறி நிருபித்தார் .இன்றைக்குத் நமது தமிழகத்தில் ஒற்றை நாற்று நடவு பிரபலமாகி, ஏக்கருக்கு 27 மூட்டைகள் வரை நெல் மகசூல் ஈட்ட முடிகிறது .இந்த பெருமையும் இவரையே சேரும் .

ஊடக விளம்பரங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பிரச்சாரங்கள் எனத் துரித உணவுக் கலாச்சாரம் இந்தியாவை மென்று தின்றுகொண்டிருந்தத காலத்தில்  இத்தாலி நாட்டில் நடந்த அவசர  ( Fast Food ) உணவுக்கு எதிரான ஒரு பயிற்சி முகாமில் கலந்துகொண்டு திரும்பிய நம்மாழ்வார் அவர்களால்  இங்கு ஆரம்பித்து வைக்க பட்டது தான் இன்றைய  ‘ஸ்லோ ஃபுட் மூவ்மெண்ட்’. இன்றைக்கு பல இடங்களில்  கெலாக்ஸ்களுடன் நமது பாரம்பரியமான சிறுதானிய சாமையும் கம்பு உணவுகள் போட்டிபோட முடிகிறது .


கோழி வளர்ப்பு புத்தகம்

நாட்டுக்கோழி, வான்கோழி, கின்னிக்கோழி, சேவல், வாத்து போன்ற பல்வேறு கால்ந

 


நாட்டுக்கோழி வளர்ப்பதை, நாகரிகம் கருதி கைவிட்டவர்கள்கூட இன்றைக்குப் போட்டி போட்டுக் கொண்டு வளர்ப்பதற்குக் காரணம், அதில் கிடைக்கும் வருமானம்தான். கணினியின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள்கூட பொழுதுபோக்காக _ பகுதிநேர வேலையாக நாட்டுக்கோழி, வான்கோழி, கின்னிக்கோழி, சேவல், வாத்து போன்ற பல்வேறு கால்நடைகளை வளர்த்து விற்பனை செய்பவர்களும் உண்டு. உலக அளவிலான பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க, இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் புறக்கடை முறையில் கோழிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.

அதிலும், நாட்டுக்கோழி வளர்ப்பில் நல்ல பலனைக் காண்போர் அதிகம். நாட்டுக்கோழி வகைகள், கோழி வளர்ப்பு முறைகள், கோழிக்குஞ்சுகளை உற்பத்தி செய்யும் முறை, கோழிகளுக்கும் குஞ்சுகளுக்குமான தீவன முறைகள், அலங்காரக்கோழிகளின் மூலம் அதிக வருவாய் பெறும் முறைகள், புறக்கடைக் கோழி வளர்ப்பில் அமெரிக்க முறை… என கோழி வளர்ப்பில் உள்ள ஏராளமான செயல்முறைகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஜி.பிரபு. 

கால்நடை மருத்துவர்கள், கோழிப் பண்ணை முதலீட்டாளர்கள்… என பல்வேறு நிபுணர்களின் கோழி வளர்ப்பு அனுபவம் மற்றும் மருத்துவம் குறித்தக் கருத்துகளும், வருமானம் ஈட்டக்கூடிய வழிமுறைகளும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு உள்ளன. ‘கையில எப்பவும் பணம் புழங்கிக்கிட்டே இருக்கணும்’ என்று நினைப்பவர்களுக்கு, நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில் நிச்சயம் கை கொடுக்கும்.

 செம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும் 


  1. செம்மறியாடுகளுக்கு வெள்ளாடு வகைகளுக்கு அமைப்பது போல விலை அதிகம் செலவு செய்து எந்த விதமான பெரும் கொட்டகை அமைக்க வேண்டியது இல்லை .
  2. குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்தே பராமரித்து கொள்ள இயலும்.
  3. செம்மறி ஆட்டு பண்ணை அமைக்க மிகவும் குறைந்த அடிப்படை செலவுகள் போதுமானது .
  4. சிறிய அளவில் தொடங்கி அதிலிருந்து செம்மறியாடு எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.
  5. செம்மறியாடு நமக்கு இறைச்சியை கொடுக்கிறது. மேலும் சில வகை செம்மறி ஆடுகள் நாம் உடுத்த தேவையான உல்லன் நூல் உருவாக்க தேவையான ரோமத்தையும் தருகிறது.
  6. இவை பெரும்பாலும் வேருடன் உண்டு விடுவதால் நிலத்தில் களைகள் கட்டுப்படுத்த படுகிறது .
  7. மேய்ச்சல் முறையில் பல வகையான செடிகளை உண்டு வளருகின்றன.அதனால் நமக்கு இன்றல்ல இறைச்சி கிடைக்கிறது .இதன் காரணமானாக நமது நாட்டில் பலருக்கு ஆட்டுக்கறி விரும்பி உண்பதால் வேலைவாய்ப்பும் வருமானமும் கிடைக்கிறது .
  8. இவ்வாறு வளர்த்தப்பதால் நமக்கு பல நன்மைகளுடன் வருமானம் தருகிறது.
  9. நிலத்திற்கு தேவையான உரமும் கிடக்கிறது .ஆட்டு கிடை போடுவதால் நிலமும் நல்ல வளமடைகிறது .
  10. அறுவடை காலங்களில் சிதறும் தானியங்கள் நாம் எடுக்க முடியாமல் சென்றாலும் இந்த வகை செம்மறி ஆடுகள் கொண்டுள்ள உதட்டு அமைப்பின் மூலம் அதனை உண்டு விடுகிறது .அதற்க்கு தீவனமும் ஆச்சு , குடவே நல்ல உரமும் ஆச்சு .
  11. செம்மறியாட்டுக் குட்டி வளர  ஒரு வருடம் அதாவது 12 மாதம் ஆகும்.

  12. வெள்ளாடு வளர்ப்பு

  13. நம் நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள், நிலமற்றவர்களின் பொருளாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்படுத்துவதில்

  14. வெள்ளாடு ஒரு முக்கியமான அங்கமாக விளங்குகிறது. ஊரகப்பகுதிகளில் உள்ள பெரிய அளவிலான மக்களுக்கு வெள்ளாடு வளர்ப்பு என்பது ஒரு லாபகரமான தொழிலாக உள்ளது

  15. மிகவும் வளம் குன்றிய பகுதிகளில் உள்ள மோசமான சூழ்நிலையில் வளரும் செடிகள்  மற்றும் மரங்களை கொண்டு ஆடுகளை வளர்க்கலாம். இந்தியாவில் உள்ள மேய்ச்சல் மற்றும் வேளாண் சங்கங்கள், வெள்ளாடுகள் கூடுதல் வருமானம் தரக்கூடிய ஆதாரமாகவும், பேரழிவுகளுக்கு எதிராக காப்பீடு செய்யவும் முடியும் ஒரு ஆதாரமாக இருக்கிறது என்று கூறியுள்ளது. திருவிழாக் காலங்களில் கடவுள் முன், பலி கொடுக்க ஆடுகள் பயன்படுத்தப் படுகின்றன. மேலும், வெள்ளாடுகள் பலசமூகங்களில் மத ரீதியாக மிகவும் முக்கியத்துவம் தரப்படுகிறது.
  16. வெள்ளாடுகள் வளர்ப்பிற்கான நன்மைகள்

    வெள்ளாடு வளாப்புக்கு ஆரம்ப முதலீடு மிகவும் குறைவு.

    சிறிய உடலமைப்பு, மந்தமான இயல்பு கொண்டவையால், கொட்டில் அமைக்க தேவைப்படுகிறவையும், பராமரிக்கும் சிக்கல்களும் குறைவு.

    வெள்ளாடுகள் மக்களுடன் நண்பனாக உள்ள விலங்காக இருக்கிறது.

    வெள்ளாடுகள் தன் இனங்களை விரைவில் இன விருத்தி செய்யக் கூடியவை. வெள்ளாடுகளின் தாய்மைக் காலம் 10-12 மாதத்தில் தொடங்கி, 16-17 மாதங்களில் பால் தர தயாராகின்றன.

    வறட்சி நிலவும் பகுதிகளில், வெள்ளாடு வளர்ப்பு என்பது பிரச்னைகள் குறைவான ஒரு பண்ணைசார் தொழிலாக விளங்குகிறது.

    வணிக ரீதியாக உள்ள பண்ணைகளில், ஆண் மற்றும் பெண் ஆடுகள் இரண்டும் சரிசம மதிப்பு கொண்டவை.

    பல தரப்பட்ட புற்களை மேய வெள்ளாடுகள் தான் மிகவும் ஏற்றது. இவை பலதரப்பட்ட முட்களுடைய புதர்ச் செடிகள், களைகள், பயிர்க் குப்பைகள், மனித உணவிற்கும் போக உள்ள வேளாண் உபரி பொருட்கள் போன்றவைகளை உண்டே உயிர் வாழக் கூடியவை.

    சரியான பராமரிப்பு கொண்ட பண்ணைகளில், வெள்ளாடுகள் சரியான அளவில் புற்களை மேய்ந்து, சுற்றப்புற சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு இருக்கச் செய்கிறது.

    ஆடுகளை வெட்டி, இறைச்சிக்குப் பயன்படுத்துவதில், எந்த வித சமூகத்தின் எதிர்ப்போ () தடையோ நம்நாட்டில் இல்லை.

    சுற்றுப்புற சூழலுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாதவாறு ஆடு வெட்டுதல் மற்றும் சுத்தம் செய்தல், இறைச்சியை கொண்டு செல்லுதல் , ஆகிய செயல்கள் நடைபெறுகிறது.

    வெள்ளாட்டு இறைச்சி குறைந்த கொழுப்பு கொண்டது. வெயில் காலங்களில் குறைந்த அளவு சக்தி அளிக்கும் உணவாக மக்கள் விரும்புகிறார்கள். சில சமயங்களில்  அதிக மென்று உண்ணும் தன்மையை கொண்டு இருப்பதால் (ஆட்டு இறைச்சி செம்மறியாட்டு இறைச்சியை விட) மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது.

    வெள்ளாட்டுப் பால் எளிதில் ஜீரணமாகக் கூடியது.

    வெள்ளாட்டுப் பால் சாப்பிடும் உணவு மற்றும் ஜீரணச் சக்தியை அதிகப்படுத்துகிறது. பசும்பாலை விட வெள்ளாட்டுப்பால் அலர்ஜி எதுவும் தராது. இதில் பூஞ்சைக்கு எதிராகவும்) பாக்டீரியாவுக்கு எதிராகவும் உள்ள நன்மைகள் இருப்பதால் பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

    பகுதி வறண்ட நிலப்பகுதிகளில் செம்மறியாட்டை விட வெள்ளாடுகள் 2.5 அளவு அதகிமாக புற்களை உண்கின்றன.

    ஊரகப் பகுதிகளில் வாழும் ஏழைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.

    வெள்ளாடுகள் ஒரு நடமாடும் குளிர்ப்பதனப் பெட்டி என்று அழைக்கப்படுகிறது. ஒரு நாளில் அதிகளவு பால் தருபவையாகவும், சேமித்து வைக்கவும் முடிகிறது.

    வெள்ளாட்டு வளர்ப்பிற்கான வழிமுறைகள்

    கொட்டில் மேலாண்மை

    தரையிலிருந்து சற்றே உயரமான, உலர்வான இடத்தில், கொட்டில் அமைக்கப்படும்.

    நீர் தேங்காத, சொத சொதப்பான பகதிகளைத் தவிர்க்க வேண்டும்.

    தாழ்வான மற்றும் அதிக மழை பொழியும் பகுதிகளில், தரைப் பகுதி சற்றே உயர்வாக இருக்க வேண்டும்.

    குளிர்வான ஹிமாலாய பகுதிகளில் கொட்டிலின் தரைப்பகுதி மரத்தினால் அமைப்பது நல்லது

    கொட்டிலானது 10 அடி உயரத்தில் மற்றும் நல்ல காற்றோட்ட வசதி கொண்டதாக இருக்க வேண்டும்.

    ஆண் ஆடுகளை தனியாகக் கொட்டிலில் வைக்க வேண்டும்.

    பெண் ஆடுகளை குழுவாக, ஒரு கொட்டிலில் 60 என்ற அளவில் வைக்கலாம்.

    வெயில் காலங்களில் நிழலும், குளிர்ந்த நீரும் சரியான அளவில் தர வேண்டும்.

    ஆட்டுப் புழுக்கை மற்றும் சிறு நீரை சரியானபடி அகற்ற வேண்டும்.

    எல்லா ஆடுகளுக்கும் போதுமான அளவு இடம் ஒதுக்கித் தர வேண்டும்.

    அதிகப்படியான ஆடுகளை ஒரு கொட்டிலில் அடைக்கக் கூடாது.

    வெள்ளாட்டு இனங்களை தேர்வு செய்தல் மற்றும் அதன் மேலாண்மை

    வங்கி கடன் கிடைத்தவுடனேயே நல்ல நிலைமையில் சிறப்பாக உள்ள இனங்களை வாங்க வேண்டும்.

    நல்ல ஆரோக்கியத்துடன், நல்ல உடற்கட்டுன் உள்ள வெள்ளாடுகளை கால்நடை மருத்துவர் / வங்கி தொழில்நுட்ப அலுவலர் ஆலோசனை பெற்று வாங்க வேண்டும்.

    நல்ல இனவிருத்தி செய்யக் கூடிய தயார் நிலையில் உள்ள ஆடுகளை வாங்க வேண்டும்.

    புதிதாக வாங்கிய ஆடுகளை குறிப்பிட்ட அடையாளக் குறியிட வேண்டும்.

    புதிதாக வாங்கிய ஆடுகளுக்கு நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போட வேண்டும்.

    புதிதாக வாங்கிய ஆடுகளை தனியே 15 நாட்கள் கண்காணிப்பில் வைத்திருந்து, பின் கொட்டிலில் அடைக்க வேண்டும்.

    எதற்கும் பயன்படாத ஆடுகளை சரியாக கணித்து அகற்ற வேண்டும். அதற்குப் பதிலாக புதிதாக ஆடுகள் வாங்கி கொட்டிலில் அடைக்க வேண்டும்.

    அதிக உற்பத்திக்காக ஆடுகளை 8-9 மாத இடைவெளியில் இனவிருத்தி செய்யலாம்.

    6 வருடம் மற்றும் அதற்கு மேலாண வயதுடைய ஆடுகளை அகற்றிவிட வேண்டும்.

    வெயில் மற்றும் குளிர் காலங்களில் குட்டியிடுவதை தவிர்க்க வேண்டும்.

    தீவன மேலாண்மை

    மேய்ச்சலுக்கு புதர்ச்செடி / சிறுசெடிகளை பராமரிக்க வேண்டும்.

    தங்களுடைய பண்ணையிலிருந்து () சுற்றியிருக்கும் பண்ணையிலிருந்து பயிரிடப்பட்ட தீவனபயிர்களை மாற்றாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    நார்த்தீவனம் மூலம் 2/3 பகுதி என்ற அளவில் ஆடுகளுக்கு அளிக்க வேண்டும். நார்த்தீவனத்தின் பகுதி பயிறுவகையைச் சேர்ந்த பசும்தீவனமாகவும், பகுதி புற்கள் /இளம் பசும் இலைகளாகவும்  அளிக்கலாம்.

    நல்ல தரமான பசும் தீவனங்கள் கிடைக்காத பொழுது, அடர்தீவனங்களை மாற்றாக அளிக்கலாம்.

    5 வயதுடைய குட்டிகளுக்கு கொலஸ்ட்ரம் தரலாம். பின் குட்டிகளுக்கு ஆரம்ப உணவு அளிக்கலாம்.

    பயிறு வகையைச் சேர்ந்த பசும்தீவனத்தை 15 நாட்கள் முதல் தரலாம்.

    எல்லா நேரங்களிலும் உப்பு கலந்த நீரை குட்டிகளுக்குத் தரலாம்.

    இனப்பெருக்க காலத்தின் போது, பெண் மற்றும் ஆண் ஆடுகளுக்கு கூடுதல் அடர்தீவனம் தரவேண்டும்.

    பரிந்துரைக்கப்பட்ட படி, ஊட்டச் சத்து தேவைகளை அளிப்பதில்  மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு தருதல்

    குறைந்த அளவு உணவு எடுத்துக் கொள்ளுதல், அசாதாரணமாக நடந்து கொள்ளுதல் போன்றவை எல்லாம் ஆடுகள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதற்கான அறிகுறிகளாகும். அதைக் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

    ஏதாவது உடல்நிலை சாயில்லாதவாறு தெரிந்தால், உடனடியாக கால்நடை மருத்துவரின் உதவியை நாடவேண்டும்.

    நோய்கள் எதுவும் தாக்காதவாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

    ஏதும் பெரிய அளவில் நோய் தென்பட்டால், மற்ற ஆடுகளிடமிருந்து தனித்து வைத்திருக்க வேண்டும்.

    ஆடுகளுக்கு வயிறை சுத்தம் செய்யும் மருந்தை சீராக தந்து கவனிக்க வேண்டும்.

    சுத்தமான, மாசுபடாத உணவு மற்றும் நீரை தர வேண்டும்.

    தடுப்பூசி மருந்து அட்டவணைப்படி பரிந்துரைக்கப்பட்டவைகளை போட வேண்டும்.

    இனவிருத்தியின் போது கவனித்தல்

    2 வருட காலங்களில் 3 குட்டிகளை இடுமாறு திட்டமிட்டப்படி சூழ்நிலைகளை உருவாக்கித் தரவேண்டும்.

    25  பெண் ஆடுகளுக்கு ஒரு ஆண் ஆடு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இனவிருத்தி செய்ய முடியாத ஆடுகளைக் கண்டறிந்து, மருத்துவரின் ஆலோசனைப்படி அகற்றிவிட வேண்டும்.

    கர்ப்பக்கால கவனிப்பு

    கர்ப்பக்காலத்தின் முன்னேற்றக் காலத்தில், பெண் ஆடுகளை பிரசவிக்கும் கொட்டில் அல்லது கொட்டிலிலேயே அதற்கென ஒரு இடம் ஒதுக்கி வைக்க வேண்டும். குட்டி பிறந்தவுடன் 2 நாட்களுக்கு, பெண் ஆடுகளுக்கு இளம் சூடான உமித்தூள் பரப்பி வைத்திருக்க வேண்டும்.

    குட்டிகளை கவனித்தல்

    புதிதாகப் பிறந்த குட்டிகளை அதிகக் கவனிப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    நஞ்சுக் கொடியை அகற்றிய இடத்தில் அயோடின் கொண்டு தடவ வேண்டும்.

    முதல் 2 மாதங்களுக்கு, குட்டிகளை மோசமான காலநிலைகளிலிருந்து பாதுகாத்து வைக்க வேண்டும்.

    முதல் 2 வாரங்களுக்கு குட்டிகளுக்கு கொம்பை அகற்ற வேண்டும்.

    நல்ல மட்டன் உற்பத்திக்காக ஆண் குட்டிகளுக்கு விறைநீக்கம் செய்ய வேண்டும்.

    பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவணைப்படி குட்டிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.

    8 வாரம் இருக்கும் போது குட்டிகளை பால்குடி மறக்க செய்ய வேண்டும்.

    சந்தைப்படுத்துதல்

    சதைப்புள்ள, குண்டான குட்டி ஆடுகள், அதனுடைய புழுக்கை, வளர்ந்த ஆடுகளை விற்பனை செய்யலாம். ஆடு வெட்டுமிடம், தனிப்பட்ட இறைச்சி உண்ணும் நபர்கள் இருக்கும் இடங்கள், வேளாண் பண்ணைகளில் இவற்றை விற்கலாம். அதனால் ஆடு வெட்டுமிடம் வசதி, அல்லது உயிருடன் உள்ள ஆடுகளை வாங்கும் வியாபாரிகள் உள்ள இடத்தில் விற்கலாம். வேளாண் பண்ணைகளுக்கு ஆட்டின் புழுக்கையும் அதிகளவில் தேவைப்படுகிறது.

    ஆடுகளில் நோய் பராமரிப்பு

    ஆண்டுக்கு 4 முறை தடுப்பூசிகள் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி அளிக்க வேண்டும்.

    1. மார்ச் ஏப்ரல் மாதங்களில் கால் வாய் நோய்க்கான தடுப்பூசி
    2. ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் பி பி ஆர் தடுப்பூசி
    3. ஆகஸ்ட் மாதத்தில் கால் வாய் நோய் தடுப்பூசி
    4. அக்டோபர் மாதத்தில் துள்ளுமாரி தடுப்பூசி ஆகியவற்றை போட வேண்டும்.
    5. குடற்புழு மருந்துகளை பிறந்த 30 வது நாள், 2, 3, 4, 6, 9வது மாதங்களில் போட வேண்டும்.

    வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு மூலம் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு.

    இனப்பெருக்கத்தில் குட்டிகளின் இறப்பு விகிதம் குறைவு.

    குடற்புழு நீக்க அட்டவணை

    ஆடுகளின் வயது

    பரிந்துரைகள்

    2வது மாதம்

    நாடாப்புழுக்களுக்கான மருந்து

    3வது மாதம்

    நாடாப்புழுக்களுக்கான மருந்து

    4வது மாதம்

    நாடாப்புழுக்களுக்கான மருந்து

    5வது மாதம்

    உருண்டைப்புழுக்களுக்கான மருந்து

    6வது மாதம்

    உருண்டைப்புழுக்களுக்கான மருந்து

    9வது மாதம்

    உருண்டை / நாடாப்புழுக்களுக்கான மருந்து

    12வது மாதம்

    தட்டைப் புழுக்களுக்கான மருந்து

    ஆறு மாதம் வரை ஆட்டுக்குட்டிகளுக்கு மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதாவது பருவமழைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு முறையும், பருவ மழையின் போது ஒரு முறையும், பருவ மழைக்குப்பின் இருமுறையும் கொடுக்க வேண்டும்.

    மாதம்

    பரிந்துரைகள்

    ஜனவரி - மார்ச்

    தட்டைப்புழுவிற்கான மருந்து

    ஏப்ரல் - ஜீன்

    உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து

    ஜீலை - செப்டம்பர்

    தட்டைப் புழுவிற்கான மருந்து

    அக்டோபர் - டிசம்பர்

    உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து

    ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை

    1. ஆடுகளுக்கு தகுந்த குடற்புழு மருந்தைத் தேர்வு செய்யவேண்டும்.
    2. தூள் மருந்தைப் பயன்படுத்தும் பொழுது வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது கரையாத மருந்துத் துகள்களும் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
    3. அதிகாலையில், வெறும் வயிற்றுடன் உள்ள ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.
    4. மருந்துக் கலவையை வாயின் வழியாக ஊற்றும் பொழுது புரையேறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
    5. குடிநீரில் குடற்புழுநீக்க மருந்தும் நோய் எதிர்ப்பு மருந்தும் ஒன்றாக கலந்துக் கொடுக்கக்கூடாது.
    6. குடற்புழுக்களின் வகைகளையும் முட்டைகளையும் அறிந்து மருந்து கொடுப்பது சிறந்தது.
    7. தொடர்ந்து ஒரே மருந்தைக் கொடுக்காமல் மாற்றித் தருவது அவசியம்.

    வெள்ளாடுகளுக்கான தடுப்பூசி அட்டவணை

    . எண்

    நோய் மற்றும் தடுப்பூசியின் பெயர்

    முதல் தடுப்பூசி

    தொடர் தடுப்பூசிகள்

    சிறப்புக் கவனம்

    1.

    பிபிஆர் நோய் (பெஸ்ட்டெஸ்பெட்டிட்ஸ் ரூமினென்ட்ஸ்)

    3-4 மாதம்

    ஆண்டுக்கு ஒரு முறை

    தகுந்த நோய்ப் பாதுகாப்பு நோய் கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள வேண்டும்.

    2.

    கோமாரி நோய் தடுப்பூசி (திசு வளர் கோமாரித் தடுப்பூசி)

    2 மாத வயதில்

    ஆண்டுக்கு ஒரு முறை

    நோய்க்கிளர்ச்சியின் போது பாதிக்கப்படாத ஆடுகளுக்கும் அண்டைக் கிராமகால்நடைகளுக்கும் தடுப்பூசி அளித்தல் அவசியம்.

    3.

    துள்ளுமாரி நோய் தடுப்பூசி (துள்ளுமாரி நோய் தடுப்பூசி : துள்ளுமாரி டாக்சாய்டு ஊசி)

    6 வார வயதில்

    ஆண்டுக்கு ஒரு முறை

    மழைக்காலத்திற்கு முன்னரும், குட்டி ஈனும் பருவங்களில் தாய் ஆடுகளுக்கும் தடுப்பூசி அளித்தல் அவசியம்.

    4.

    ஆட்டம்மை தடுப்பூசி (வீரியம் குறைக்கப்பட்ட ஆட்டம்மை உயிர்த் தடுப்பூசி)

    3-6 மாத வயதில் (நோய் காணும் பகுதிகளில்)

    ஆண்டுக்கு ஒரு முறை (நோய்க் காணும் பகுதிகளில் மட்டும்)

    கோடைக்காலத்திற்கு முன்னர் நோய் காணும் பகுதிகளில் ஒரு தடுப்பூசி அவசியம்.

    5.

    அடைப்பான் நோய் தடுப்பூசி
    (அடைப்பான் ஸ்டோர் தடுப்பூசி)

    நோய்க் கிளர்ச்சியின் போது மட்டும் 6 மாத வயதில்

    நோய் அடிக்கடி தோன்றும் பகுதிகளில் வருடம் ஒரு முறை, மற்ற பகுதிகளில் தேவையில்லை.

    நோய்க்காணும் பகுதிகளில் மழைக்காலத்திற்கு முன்னர் தடுப்பூசி போடவேண்டும்.

    6.

    டெட்டனஸ் ஜன்னி
    தடுப்பூசி (டெட்டனஸ் டாக்சாய்டு தடுப்பூசி)

    குட்டி ஈன 6-8 வாரத்திற்கு ஒரு முறை

    -

    குட்டிகள் பிறந்து 48 மணி நேரத்திற்கு பின்.

    7.

    தொண்டை அடைப்பான் தடுப்பூசி (பார்மலின் வழி செயலிழக்கப்பட்ட தொண்டை அடைப்பான் தடுப்பூசி)

    6 மாத வயதில் நோய் காணும் பகுதிகளில் மட்டும்)

    ஆண்டுக்கு ஒரு முறை

    மழைக்காலத்திற்கு முன்னர் ஒரு தடுப்பூசி அளித்தல் அவசியம்.

    கேள்வி பதில்

    1. எந்தெந்த ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் அவசியம் என்பதை எப்படி அறிவது?

    கண்ணின் உட்சவ்வு வெளிறி போயிருக்கும், மூக்கில் சளி, ஆட்டின் பின் பகுதியில் கழிச்சலினால் சாணம் ஒட்டிக் கொண்டிருக்கும். தாடையில் வீக்கம், உடல் மெலிந்து காணப்படும். இது போன்ற ஆடுகளுக்கு மட்டும் குடற்புழு நீக்கம் செய்தல் அவசியமானதாகும்.

    2. ஏன் எல்லா ஆடுகளுக்கும் குடற்புழு நீக்கம் செய்தல் கூடாது?

    தேவையில்லாமல் எல்லா ஆடுகளுக்கும் அடிக்கடி குடற்புழு நீக்கம் செய்தால் குடற்புழுக்களுக்கு எதிரான மருந்தின் எதிர்ப்புத்திறன் குறைகிறது. குடற்புழுக்களின் எண்ணிக்கை அதிகமாகி மற்ற ஆடுகளுக்கும் பரவுகிறது. ஆகையால், தேவையான ஆடுகளுக்கு மட்டும் குடற்புழு நீக்கம் செய்தால் போதுமானது.

    3. பாமாச்சா அட்டை எதற்கு பயன்படுகிறது?

    பாமாச்சா அட்டையை பயன்படுத்தி ஆட்டின் கண்ணின் உள்சவ்வைப் பார்த்து இரத்தசோகை அறியலாம்.


நமது பூமியின் வயது ஏறத்தாழ 460 கோடி ஆண்டுகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 100 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான். ஒரு செல் உயிரி தோன்றியிருக்கிறது. மனிதர்கள் தோன்றி 4.5 லட்சம் ஆண்டுகளே ஆகின்றன. நாம் ஏர் கட்டி விவசாயம் செய்ததெல்லாம் ஆறாயிரம் ஆண்டுகளாகத்தான். அதற்கு முன்னரும் இயற்கை செழிப்பாக இருந்திருக்கிறது.

அந்தக் காலங்களிலும், இப்போது நிலத்தை இடைவிடாமல் உழுது கொண்டிருப்பவை மண்ணிலுள்ள உயிரினங்களே.

உயிருள்ள மண் 3 தன்மைகளை கொண்டது.

  1. இயற்பயில் தன்மை (எ.கா. பொலபொலப்புத் தன்மை)
  2. உயிரியல் தன்மை (எ.கா. நுண்ணுயிரிகள், மண்புழுக்கள் இருப்பது)
  3. இரசாயனத் தன்மை (எ.கா.ஊட்டச்சத்துகள் கொண்டிருப்பது)

இரசாயன உப்புகள் (உரம்) கடந்த 40 ஆண்டுகளாக இட்டதால் நிலம் முதலில் உயிரியல் தன்மையை இழந்தது. பின் இரசாயனத் தன்மையையும் இறுதியில் இயற்பியல் தன்மையும் இழந்து விட்டது. கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருந்த மண்ணின் உயிரோட்டம் 40 ஆண்டுகளில் அழிக்கப்பட்டு மண் மலடாக்கப்பட்டு விட்டது. நம் விளை நிலத்து மண்ணில் மீண்டும் உயிரோட்டம் ஏற்படுத்த வேண்டும். நுண்ணுயிரிகளை வளரச் செய்ய வேண்டும். மண்புழுக்களும், பிற மண்ணுயிர்களும் வாழும் வகையில் மண்ணை சரி செய்ய வேண்டும். இது நடக்கும் போது மென்மையான வேர் நுனி எளிதில் மண்ணுள் இறங்கும் வண்ணம் பொலப்பொலப்பானதாக மாறும். வேர் சுவாசிக்கத் தேவையான காற்று மண் துகள்களில் சிறிய துளைகளில் தங்கும். வேர் உறிஞ்ச தேவைப்படும் ஈரம் பெருந்துளைகளில் இருக்கும். ஈரமும் காற்றும் சம அளவில் அருகருகே இருக்கும். அரிய நிலையை மண் அடைந்தால் தான் மண் வளமானதற்கு அடையாளம், நலமானதற்கு அறிகுறி. அதற்குத் தாவரக் கழிவுகளையும், விலங்குக் கழிவுகளையும் மண்ணில் சேர்க்க வேண்டும். கெட்டுப்போன நிலத்தைப் பண்படுத்துவதற்கு நீண்டகாலம் ஆகும் என்பது பழைய நிலை. இப்போது கலவை எரு, மண்புழு எரு, உர உயிரிகள், பலபயிர் வளர்ப்பு, அமுதக் கரைசல் ஆகிய உத்திகள் மூலம் மண்ணை ஒரு வருடக காலத்திற்குள், இழப்புகள் இன்றி செய்ய முடியும் என்று தமிழகத்து விவசாயிகள் செய்து காட்டியுள்ளனர். வளமான, ஆரோக்கியமான மண்ணே வளமையான வேளாண்மைக்கு அடித்தளமாகும்.

அமுத கரைசல்

இன்று அமுத கரைசல் பற்றி யாராவது தெரியாமல் இருந்தால் தமிழகத்தில் செய்தி ஊடகங்களை கவனிக்காதவராக இருப்பார்கள். அமுத கரைசலை தெளிப்பான் கொண்டு தெளிக்கவும், பாயும் நீரில் கரைத்து விடவும் செய்யலாம்.

தேவைப்படும் பொருட்கள் :

  1. பத்து லிட்டர் தண்ணீர்
  2. ஒரு கிலோ சாணம்
  3. ஒரு லிட்டர் மூத்திரம் 4.25 கிராம் நாட்டுச்சர்க்கரை.

ஒரு குடம் தண்ணீர் பிடிக்கும் பானை அல்லது குவளையில் மேலே சொன்னவைகளை இட்டு கலக்குதல் வேண்டும். ஒரு குச்சியால் வலப்புறம் 50 சுற்றும் இடப்புறம் 50 சுற்றும் சுற்ற வேண்டும். காலை, மதியம், மாலை என்று மூன்று வேளை கலக்க வேண்டும். ஒரு பகல் ஒரு இரவு ஆக, 24 மணிநேரத்தில் ஊட்டம் (டானிக்) தயாராகிவிடும்.

ஒரு லிட்டர் அமுத கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். இரண்டு நாட்களில் பயிர் பச்சை கொடுத்து வளரத் தொடங்கும். இன்னொரு வழியும் உண்டு. 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ சாணம், 20 லிட்டர் மூத்திரம், 2 கிலோ சர்க்கரை கலந்து மூன்று வேளை கலக்கி பாயும் நீருடன் கலந்து விட வேண்டும். வயல் பெரியதாக இருந்தால் ஒரே இடத்தில் வைப்பது போதாது. உள்ளே தள்ளித் தள்ளிக்கொண்டு போய் வைப்பது அவசியம். வயல் தூரத்தில் இருந்தால், தேனீர், காபி விற்பவர்கள் போல பைப்பு பொருந்திய குவளையில் எடுத்துச் சென்று வாய்மடையில் வைப்பது ஆக பொருந்தும். அமுத கரைசல் தயாரிப்பதும், பயன்படுத்துவதும் மிக எளிமையாக இருப்பதால் அன்றாடம் மாடு கொடுக்கும் கழிவுகளை அமுதமாக மாற்றி பயிர்களுக்கு அளிப்பது கடன்பட்ட உழவர்களை கரை சேர்க்கும் உத்தியாகும். பயிருக்கு மாட்டூட்டத்தையும். அமுதகரைசலையும் 10 நாட்கள் இடைவெளியில் தெளிப்பது செலவை குறைக்கும்.

மூலிகைப் பூச்சி விரட்டி

உழவர்கள் காலங்காலமாக கடைபிடித்து வந்த இயற்கை வழி சாகுபடி முறை பூச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பச்சைப் புரட்சியின் சாதனையாக ரசாயன நஞ்சுகளைப் பயன்படுத்தி பூச்சிகளைக் கொல்ல தொடங்கியதும் உணவு பண்டம் அனைத்தும் நஞ்சானது மட்டுமின்றி, பூச்சிகளும் சாகத் தயாராக இல்லை. இயற்கை வழியில் உழவர்கள் மூலிகைப் பூச்சிவிரட்டி தயாரித்து, பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர்.

மூலிகை பூச்சி விரட்டி வேலை செய்யும் விதம் எப்படி?

மூலிகை பூச்சி விரட்டிகள் மூன்று வகையான இலைகளைக் கொண்டு தயாரிக்கப்டுகிறது. ஒன்று, தொட்டால் வாசனையடிக்கக் கூடிய செடிகள், இரண்டு தின்றால் கசக்கக் கூடிய செடிகள், ஒடித்தால் பால் வரக்கூடிய செடிகள் எடுத்துக்காட்டாக ஆடாதொடை, ஆடுதீண்டாபாளை, ஊமத்தை, எருக்கு, தும்பை, துளசி, அத்தி, சோற்றுக் கற்றாழை, பெரண்டை, பீநாரி, பப்பாளி, சீதா, புங்கன், நொச்சி, வேம்பு, தழுதாளை, காட்டாமணக்கு, வேலிப்பருத்தி, வரிக்குமுட்டி, உண்ணிமுள் செடி, நித்தியகல்யாணி, உரக்கொளறை (கிளைரிசிடியா). இவற்றில் அடையாளம் தெரியாதவை இருந்தால் கவலைப்பட தேவையில்லை. தேவை நான்கு ஐந்து செடிகள் மட்டுமே. அவசியம் நெய்வேலி காட்டாமணக்கு செடி பயன்படுத்த வேண்டும்.

ஒரு சாக்கு இலைகளை கொண்டு வந்து உரலில் இடித்து மண் தொட்டி அல்லது சிமெண்ட் தொட்டியையும் பயன்படுத்தலாம். பானைக்குள் இருக்கும் மூலிகை சட்னி மூழ்கும் அளவுக்கு ஆடு அல்லது மாட்டுச் சிறுநீரை ஊற்றி நிரப்பவும்.

மேலே குறிப்பிட்ட கலவை பத்து நாட்களில் மூலிகைக் கரைசலில் இருந்து தாங்க முடியாத அளவுக்கு நெடி வரக்கூடும். பூச்சி விரட்டி தயாராகி விட்டதற்கு இதுவே அடையாளம். ஒரு லிட்டர் பூச்சி விரட்டியுடன் பத்து லிட்டர் தண்ணீர் கலந்து பயிர் மீது தெளிக்க வேண்டும்.

மூலிகை பூச்சி விரட்டி செயல்படும் விதம்

பூச்சிகள் எண்ணிக்கையில் மிகுந்தவை. ஆனால் உயிரினங்களில் இது சிற்றினம். இவை இயல்புத் தூண்டலால் குறிப்பிட்ட செடிகளில் இலையையோ, காயையோ தின்று உயிர் வாழ்கின்றன. இதற்காக இவை இலைகளில் தொட்டணர்ந்தே செடியை இனம் காணுகின்றன. பல வகை மணம் கொண்ட மூலிகைகளில் தயாரிக்கப்பட்ட பூச்சி விரட்டி பயிர்களின் வாசனையை மாற்றி விடுகிறது. இதனால் தாய்ப்பூச்சி பயிரின் மீது அமர்ந்து முட்டையிடுவது தவிர்க்கப்படுகிறது.

மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்

எல்லா பூச்சிகளும் பயிர்களின் விரோதிகள் அல்ல. பூச்சிகளை உண்ணும் தட்டான், பொறிவண்டு, மூக்கு வண்டு, சிலந்தி, கண்ணாடி சிறகி போன்றவை இருக்கவே செய்கின்றன. இத்தகைய நல்ல பூச்சி நண்பர்களை அடையாளம் கண்டு வைத்திருப்பது மிகவும் அவசியம். பூச்சிகளை பார்த்தவுடன் நஞ்சு தெளிப்பது கூடாது. பூச்சிகள் வந்த பின்பு தான் அவைகளை உண்ணும் இரையுண்ணிகள் நமது நிலத்திற்கு வரும். குறிப்பாக நூறுக்கும் மேற்பட்ட பறவைகள் பயிர் செடிகளை உண்ணும் பூச்சிகளை பிடித்து உண்ணுகின்றன. குச்சிகள் அல்லது தென்னை ஓலையின் அடிமட்டையைப் பயிர் நடுவே நட்டு வைத்தால் பறவைகள் அதில் வந்து அமர்ந்து பூச்சியை பிடித்து உண்ணும். சென்டிப் பூ போன்ற செடிகளை பயிர்களின் ஊடே நடவு செய்வதன் மூலம் தீய பூச்சியை விரட்டலாம். ஆமணக்கு, வெள்ளரி, தட்டை பயிறு போன்ற செடிகளை நிலத்தின் விளிம்பின் நான்கு திசையிலும் பயிர் செய்ய வேண்டும். இது பூச்சிகளைக் கவர்ந்து இழுத்து முக்கிய பயிர்களை காக்கிறது. தொடர்ந்து இயற்கை வழி வேளாண்மைக்கு மாறும் உழவர்கள் நான்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மூலிகை பூச்சி விரட்டிகள் கூடத் தெளிக்க தேவையிருக்காது.

கால்நடைகளில் மாட்டூட்டம்

ஆடு, மாடு, கோழி, நாய் என வளர்ப்பு விலங்குகள் அனைத்திலும் மாட்டூட்டத்தை பயன்படுத்தி நல்ல பலனை எட்டியிருக்கிறார்கள். மாடுகளுக்கு மடிவீக்கம், காம்பின் சீழ் வடிதல் போன்ற நோய்களைக் குணபடுத்த நாளும் 300 மில்லி என்ற வீதத்தில் ஒரு வாரம் கொடுக்க வேண்டும். சினைப் பிடிக்காத ஆடு, பசுக்களுக்கு இதை கொடுத்து நல்ல பலனைடைய முடியும். ஆடுகளுக்கு கொடுக்கும் போது 150 மில்லி கொடுக்க வேண்டும். கோழிக்கு குடிநீரில் கலந்து விடுவதால் நோய் தொற்றுவதை தடுக்கலாம். தவிடு, மாட்டூட்டம், இரண்டையும் கலந்து பிசைந்து கொடுப்பதால் கோழிக்குஞ்சின் எடை விரைவாக கூடும். நாய்களுக்கு மூச்சுப் பை நோய், தோல் நோய்கள் எளிதில் குணமாகும். விலங்கினங்களுக்கு ஊட்டும் போது தண்ணீர் கலப்பது இல்லை.

மீன் அமிலம்

உழவர்கள் கண்டுபிடிப்பில் தனிச்சிறப்பு வாய்ந்த வளாச்சி ஊக்கி மீன் அமிலம். மலிவாக மீன் கிடைத்தாலோ அல்லது மீன் கழிவு கிடைத்தாலோ, அது கொண்டு மீன் அமிலம் தயாரிக்கலாம். மீன் அல்லது மீன் கழிவை சம அளவில் வெல்லத்துடன் கலந்து பிசைந்து பிளாஸ்டிக் பாத்திரத்தில் இட்டு மூடி வைக்க வேண்டும். 25 நாட்கள் கடந்த பிறகு, மீன் அமிலம் தயார் பயிரில் கை ஸ்பிரேயருக்கு 300 தண்ணீருடன் தெளிக்கும் போது பயிர் பச்சை நிறம் பெற்று வளருகிறது.

முட்டை ரசம்

  • இயற்கை வழி வேளாண்மையில் பயிர் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு பல உத்திகள் உள்ளன. அதில் ஒன்று முட்டை ரசம் தயாரிப்பு. கீழே குவிந்தும் மேலே விரிந்தும் உள்ள ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அதில் 21 முட்டைகளை மூன்று நான்கு அடுக்குகளாக அடுக்கவும். அதற்கு முட்டையின் குறுகலான முனையை கீழ்நோக்கி வைத்தால் பொருத்தமாக இருக்கும். எலுமிச்சை பழங்களை பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும். பாத்திரத்தில் அடுக்கிய முட்டைகள் மேல், 2 எலுமிச்சை பழ சாற்றுடன் 200 கிராம் வெல்லத்தை கரைத்து வெல்லக் கரைசலையும், முட்டைகள் மீது ஊற்றவும். பின்பு மூடி வைக்கவும்.
  • 10 நாட்கள் சென்ற பின்பு, திறந்து பார்த்தால் முட்டை ஓடு கெட்டியாக இல்லாமல் கூழ்ம வடிவில் இருக்கும். அவற்றை கையால் பிசைந்து மேலும் 200 மில்லி வெல்லச்சாறு ஊற்றி மூடி வைக்கவும். முட்டை ரசம் தயாரிக்கத் தொடங்கியதில் இருந்து 20 நாட்களுக்குள் பிறகு, பயிரில் தெளிக்க வேண்டும். அற்காக முட்டை, எலுமிச்கை, வெல்லக் கலவையை பிசைந்து வடிகட்ட வேண்டும். எஞ்சியுள்ள கழிவை மீண்டும் சிறிதளவு எலுமிச்சைச் சாறும் வெல்லக் கரைசலும் கலந்து மூடி வைத்தால் மீண்டும் ஒரு முறை தெளிப்பதற்கு நமக்கு முட்டை ரசம் கிடைக்கும்.

பாழ்நிலத்தை புதுப்பிக்கும் பலபயிர் சாகுபடி

ரசாயன உரம், ரசாயன பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தொடர்ந்து நிலத்தில் இட்டதால் உழவன் வறுமைப்பட்டான். நிலம் வலுவிழந்து, இப்போது மாற்று வழி நோக்கி உழவர் சிந்தனை செல்கிறது. சில நேரத்தில் இயற்கை வழி முறை நல்லதுதான். ஆனாலும் பழைய விளைச்சலை மீண்டும் எடுக்க குறைந்தது ஐந்து வருடமாவது வாங்கலாம். இப்படி செல்பவர்கள் இயற்கை வழி வேளாண்மையால் நாட்டு மக்களின் வறுமையை ஒழிக்க முடியாது என்று சொல்பவர்களை விடவும் தீங்கு செய்கிறார்கள்.

உரச் செடிகளை வளர்த்து தழை உரமாகப் பயன்படுத்துவது பற்றி கூறியிருந்தோம். இப்படி சிலவகைக் செடிகளை நிலத்திற்கு அளித்து எருவாக்கும் போது சில வகை ஊட்டங்களையே மண்ணில் சேர்க்க முடியும். நில வளத்தை முழுமையாக்க இது போதாது. பல வகை விதைகளையும் விதைத்து, வளர்த்து நிலத்தில் சேர்க்கும் போது பல வகை ஊட்டங்கள் மண்ணில் சேர்கிறது, வளம் கூடுகிறது. இதை இயற்கை விவசாயிகள் தமது நேரடி அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ளனர்.

பல பயிர் விதைப்பு என்பது தானியங்கள், பயறு வகைகள், பசுந்தாள் உரச்செடிகள், எண்ணெய் வித்துக்கள், வாசனைப் பியர்கள் ஆகிய ஐந்து வகை பயிர்களை வகைக்கு 4 வீதம் விதைத்து 60-70 நாட்கள் வளர்த்து மடக்கி உழுது மண்ணில் சேர்க்கும் முறையாகும். இப்பயிர்களின் இலைகள், தண்டு, வேர்களில் உள்ள பல வகை நுண் ஊட்டங்களில் மண்ணில் சேர்ந்து மண்ணை வளம் செய்வதுடன் இவைகளே மக்கி எருவாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகின்றன

பல பயிர் வதைகள்

  • தானிய விதைகள்சோளம் – 500 கிராம்
  • கம்பு – 100 கிராம்
  • தினை – 200 கிராம்
  • சாமை – 250 கிராம்
  • வரகு – 300 கிராம்
  • குதிரை வாலி – 250 கிராம்
  • பனிவரகு – 200 கிராம்

போன்றவற்றில் ஏதேனும் நான்குபயிறு வகைபாசிப்பயிறு – 2 கிலோ , உளுந்து – 2 கிலோ, கொள்ளு – 1 கிலோ, தட்டைப் பயிறு – 2 கிலோ, துவரை – 1 கிலோ, போன்றவற்றில் ஏதேனும் நான்கு.எண்ணெய் வித்துக்கள்எள் – 250 கிராம், நிலக்கடலை – 2 கிலோ , ஆமணக்கு – 3 கிலோ, சூரியகாந்தி – 1 கிலோ, துவரை – 1 கிலோ, சோயா – 2 கிலோ போன்றவற்றில் ஏதேனும் நான்கு. வாசனைப் பொருட்கள் சோம்பு – 100 கிராம், கடுகு -100 கிராம், வெந்தையம் -100 கிராம், மல்லி – 1 கிலோ உரச்செடிகள் சணப்பு – 2 கிலோ, தக்கை பூண்டு – 1 கிலோ, கொழுஞ்சி – 1 கிலோ, அகத்தி – 1 கிலோ, செம்பை – 1 கிலோ போன்றவற்றில் ஏதேனும் நான்கு.

மேற்கண்ட வகைகளில் ஒவ்வொன்றிலும் ஏதேனும் நான்கு விதைகள் வீதம் ஏக்கருக்கு 20 கிலோ தேவைப்படும். இந்த 20 வகை விதைகளையும் சேர்த்து (20 கிலோ இருந்தாலும் தவறல்ல) நெல் சாகுபடியின் போது முன்கூட்டியே விதைத்து 45 நாட்கள் வளர விட்டு மடக்கி உழுது விட்டு தொழி செய்து 10 நாட்கள் அழுகவிட்டு நாற்று நடவு செய்யலாம்.

கரும்பு, மஞ்சள், வாழை போன்றவற்றில் முதல் களை எடுக்கும்போது விதைத்து மூலப்பயிர்களின் இலைகளை மறைக்கும் வண்ணம் வளர்த்தவுடன் அறுத்து / பிடுங்கி 1 சால் விட்டு சாலில் மூடாக்காக இடலாம். தண்டுப்புழு போன்றவைகளை வளரும் பல பயிர்கள் ஈர்த்து முக்கிய பயிருக்கு நேரும் சேதத்தைக் குறைக்கிறது.

ஊட்டமேற்றிய தொழு உரம்

தேவைப்படும் பொருட்கள்

  • சாணம் : 100 கிலோ
  • கோமியம் : 25 லிட்டர்
  • புளித்த தயிர் : 5 லிட்டர்
  • நீர் : 100 லிட்டர்

கலந்த கலவை

செய்முறை: 4 அடி அகலம், தேவைக்கேற்ற நீளம், அரை அடி உயரத்திற்கு மக்கக்கூடிய அனைத்து பொருட்களையும் பரப்பிவிட்டு, 10 லிட்டர் கலவையுடன் 100 லிட்டர் நீர் சேர்த்து சலிக்கத் தெளிக்கவும். பின் சாணம் 3 அங்குல உயரத்திற்கு பரப்பிவிட்டு, இலை தழை, குச்சிகளைப் போட்டு அதன் மேல் 10% கரைசலை தெளிக்கவும்.

இதைப் போல் தொடர்ந்து 4 அடி உயரத்திற்கு அடுக்குகளை இட்டுப் பின்னர் சேறு கொண்டு நன்கு பூசி மெழுகிவிடவும். 100 நாட்கள் கழித்து எடுத்துப் பயன்படுத்தவும்.

தேங்காய் பால் + மோர்

இவைகளை சம அளவில் சேர்த்து சட்டி / பானையில் இட்டு குப்பைமேடு (அ) குழியில் பாதுகாப்பாக புதைத்து வைக்க வேண்டும். ஒரு வார காலத்தில் நொதித்து வளர்ச்சி ஊக்கியாக மாறும். நொதித்த ஒரு லிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு சுமார் 5 லிட்டர் தேங்காய்ப் பால், 5 லிட்டர் மோர் தேவைப்படும்.

பயிர் பாதுகாப்பு

நமது முன்னோர்கள் எலி, பறவை, ஆடு, மாடு போன்றவற்றிலிருந்து காப்பதையே பயிர் பாதுகாப்பாக செய்தனர். கடந்த 40 ஆண்டுகளாக பூச்சி, பொருட்களில் இருந்து காப்பதற்காக இரசாயன நஞ்சுகளைப் பயன்படுத்துகிறோம். வேளாண்மையில் இரசாயன வகை பயிர் பாதுகாப்பு வந்தபோது விவசாயிக்கு சுமை கூடியது. செலவு கூடியது.

பயிர்களைத் தின்னும் பூச்சிகள் கூட மற்ற பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும் உணவாகின்றன. எனவே, எல்லாப் பூச்சிகளும் நன்மை செய்பவையே. பயிரைக் காப்பது தான் நமது நோக்கமே தவிர பூச்சிகளை கொல்வதல்ல. தாய்ப்பூச்சிகள் பயிர்களில் முட்டையிடாமலும், உட்காராமலும் தடுப்பதும், இவைகளின் புழுக்கள் நம் பயிரை மேய்வதைத் தடுப்பதுமே நம் வேலை

பயிர் பாதுகாப்பு முறைகள்

  1. மூலிகைப் பூச்சிவிரட்டி
  2. உயிர் வழிக்கட்டுபாடு
  3. பயிர் வழிக்கட்டுப்பாடு
  4. ஈர்ப்புப் பயிர்கள்
  5. ஒருங்கிணைந்த பயிர்க் காப்பு

மூலிகை பூச்சி விரட்டி

  • ஆடா தோடா, ஆடு தின்னா பாளை, ஊமத்தை, எருக்கு, துத்தி, உண்ணிச்செடி, காட்டாமணக்கு, நெய்வேலி, காட்டாமணக்க, வேம்பு, எட்டி, சீதா இலை. சீதாகொட்டை, அரளி விதை, (வெப்) பாலை, பீநாரி சங்கு, கற்றாழை, நொச்சி, தும்பை, துளசி, நாய்த்துளசி, சீமைக் கருவேல் என பல தாவரங்களில் பூச்சிகள் விரட்டும் தன்மை கொண்டவை.
  • ஆடு, மாடு தின்ன மறுக்கும் அனைத்து செடி, கொடிகளும் பூச்சிகள் விரட்டும் தன்மை உள்ளவை. உடைத்தால் பால் வரும் தன்மை உள்ள செடி, கொடிகளுக்கும் இதே தன்மை உண்டு.
  • இவைகளில் ஏதேனும் 5 வகைத் தாழைகளை வகைக்கு 2 கிலோ வீதம் எடுத்து இடித்து பானையில் இட வேண்டும். இடித்த இலை தழைகள் முழுகும் அளவு மாட்டு/ எருமை மூத்திரம் ஊற்ற வேண்டும். பிறகு கழுத்து வரைக்கும் தண்ணீர் ஊற்ற வேண்டும். 1 வாரம் – 10 நாட்கள் வைத்திருந்தால் ஊறல் நன்கு நொதித்து மூலிகைச் சாறு தெளிப்பதற்கு தயாராகும். 1 லிட்டர் சாறுக்கு 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்க வேண்டும். நன்கு ஒட்ட காதி சோப்பு வில்லை 2ஐக் கரைத்தல் நல்லது.
  • உடனடியாக தெளிக்க இடித்த இலை தழைகளை நிறைய தண்ணீர் விட்டு காய்ச்சவும். தண்ணீர் பாதியாக சுண்டும் போது எடுத்து வடிகட்டி 1 லிட்டர் கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்கலாம்.
  • பூச்சி விரட்டிகளை தேவைப்படும் பொழுதோ, பூச்சி வரும் காலத்திற்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பயன்படுத்தலாம்.

உயிரியல் கட்டுப்பாடு

உலகில் ஒவ்வொரு வகை உயிரினத்தையும் வேறு ஒரு உயிரினம் கட்டுப்படுத்துகிறது. இந்த உயிரியல் அடிப்படை உண்மையைக் கொண்டு சேதம் செய்யும் பூச்சிகளை அவைகளின் எதிர்ப் பூச்சிகள் கொண்டு கட்டுப்படுத்தும் முறையே உயிரியல் வழி பூச்சிக் கட்டுபாடு ஆகும். இதே அடிப்படையில் பயிர் நோய்கள் சிலவற்றையும் கட்டுப்படுத்தலாம்.

உயிரியல் பூச்சி கட்டுப்பாடு

  • எதிரி பூச்சி
  • கட்டுப்படுத்தும் பூச்சி
  • டிரைக்கோகிரம்மா கைலோனிஸ்கரும்பு – இளங்குருத்துப்புழு, இடைக்கணு புழு
  • நெல் – இலை சுருட்டுப் புழு
  • பருத்தி – இளஞ்சிவப்பு காய்புழு, புள்ளிக்காய் புழுடிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் கரும்பு – நுனி குருத்துப்புழு
  • நெல் – குருத்துப்பூச்சி பிரகானிட்தென்னை – கருந்தலை புழுரெட் வீயூட் பக் (வண்டு)பல பயிர்களில் புழுக்களை அழிக்கும்.

நுண்ணுயிரிகள்

டிரைக்கோ டெர்மா விரிடி (பூசணம்) மற்றும் சூடோமோனாஸ் (பேக்டீரியம்) பருத்தி, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, பயறுகள், வாழை, மஞ்சள், இஞ்சி, தென்னை, நெல், கரும்பு, காய்கறிகள் ஆகியவற்றில் தோன்றும் வேர் அழுகல் கிழங்கழுகல், செவ்வழுகல் போன்ற பூசண நோய்கள் கட்டுப்படுத்தும் பயன்பாட்டு அளவு ஏக்கருக்கு 2-4 கிலோ வரை.

உயிரின வழிக் கட்டுப்பாடு

இயற்கையில் பாம்பு, ஆந்தை போன்றவை எலி பிடிக்கின்றன. சிலந்தி, தவளை, பல்லி, குருவிகள், காக்கை, மைனா போன்றவையும் பூச்சிகளைப் பிடித்து உண்ணுகின்றன. பறவைகள் வந்து போனால் வேறு கட்டுப்பாடு தேவைப்படாது.

பயிர் வழிக் கட்டுப்பாடு

சில செடிகள் தங்களது வேர்களில் சில வகை சுரப்புகளை வெளியேற்றுகின்றன. இச்சுரப்புகள் சில நோய் தரும் நுண்ணுயிர்களை கட்டுப்படுத்துகிறது. இந்த வகைத் தாவரங்களை நோய் வாய்ப்புள்ள பயிர்களுக்கு அருகில் வளர்க்கும் போது நோய் வருவதில்லை. எடுத்துக்காட்டாக சாமந்திப் பூச்செடி, தக்காளிச் செடி அருகிலும், வேர் அழுகல் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய பயிர்களுக்கு அருகிலும் வளர்க்கும் போது வேர் நோய்கள் வருவதில்லை. நோய் தரும் வேர்ப்புழுக்கள் எண்ணிக்கையை குறைக்கச் செய்கிறது.

ஈர்ப்புப் பயிர்கள்

சில செடிகள் பயிர்களை உண்ணும் பூச்சிகளை தன்னிடம் ஈர்த்துக் கொள்ளும். இவ்வகை செடிகளை பயிர்களை வயலில் வளர்க்கும் போது பயிர் உண்ணும் பூச்சிகளை தன்னிடம் ஈர்க்கும். விளை பயிர் காக்கப்படும். எ.கா.ஆமணக்கு, தட்டைப் பயிறு, கரும்பில் கம்பு, சோளம் குறுத்துப் புழுக்களை ஈர்க்கிறது.

முன்னோர்கள் ஒருபோதும் ஊரினப் பயிர்கள் வளர்த்ததில்லை. கலப்பு பயிர் முறையையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். இக்கலப்பு பயிர் முறை நோய்களைக் கட்டுப்படுத்தியது. ஈர்த்து அழிக்க உதவியது. மீண்டும் கலப்புப்பயிர் முறை நம் நிலத்தில் அறிமுகம் ஆகும் போது பயிர்ப் பாதுகாப்பு எளிதான ஒன்றாகும். மண் நலனும் மேம்படும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு உத்திகள்

  1. பருவம் அறிந்து விதை விதைக்க வேண்டும்.
  2. பயிர் சுழற்சி கடைபிடிக்க வேண்டும்.
  3. கலப்புப் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.
  4. அவ்வப்போது நிலத்தை தரிசு போட வேண்டும்.
  5. பறவைகளை உள்ளே வரவழைக்க வேண்டும்.
  6. விவசாயி வீட்டில் உள்ள விதைகளை விதைக்க வேண்டும்.
  7. இயற்கை உயிர்க் கொல்லிகளை பயன்படுத்த வேண்டும்.
  8. பூச்சிகளை கவரும் செடி கொடிகளை ஓரத்தில் வளர்க்க வேண்டும்.
  9. மூலிகை பூச்சி விரட்டிகளை பயன்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.

பசுமாடுகள் 

கறவை இனங்கள்

பசுமாடுகள் பல இனங்கள் உள்ளன சாஹிவால், கிர், தார்பர்கர், சிவப்பு சிந்து, ஓங்கோல், ஹரியானா, கங்ரெஜ், டியோனி ஆகியவை கறவைக்கு பயன்படும் இனங்கள் ஆகும்.

பண்ணை வேலைக்கான இனங்கள்

அம்ரித்மஹால், ஹல்லிகார், காங்கேயம் ஆகிய இரகங்கள் பண்ணை வேலைக்கு பயன்படுகின்றன.

கறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் கன்று, பால் உற்பத்தி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.எனவே, கறவை மாடுகளை உரிய முறையில் பராமரித்து விவசாயிகள் லாபம் அடையும் வழிமுறைகள்

விவரங்கள்

சினைப் பசுக்களை நன்றாக கவனித்து வளர்த்தால் தான் ஆரோக்கியமான கன்றுக் குட்டியை ஈனும், நல்ல பால் உற்பத்தியை பெருக்க முடியும்.

முக்கிய பராமரிப்பு உத்திகள்

  • சினை ஊசி போட்ட பசுக்களுக்கு 3 மாதத்தில் கால்நடை மருத்துவர் மூலம் உரிய சினைப் பரிசோதனையை செய்து உறுதிசெய்து தோராயமாகக் கன்று ஈனும் காலத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
  • சினை மாடுகளை அடிக்கடி அடித்துத் துன்புறுத்துதல், அதிக தொலைவு நடக்க வைத்தல் கூடாது. ஏழாவது மாதம் முடிந்த உடன் சினைப் பசுவை தனியாகப் பிரித்தெடுத்து கொட்டகையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். நாய்களை சினை மாடுகளின் அருகில் அண்ட விடக் கூடாது.
  • கருவில் வளரும் இளங்கன்றின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளையும், பால் உற்பத்திக்குத் தேவையான சத்துகளையும் உடலில் சேமித்து வைக்க வேண்டியுள்ளதால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சரிவிகித சத்தான உணவை வழங்க வேண்டும்.
  • ஏழாவது மாத சினை முடிந்தவுடன் பாலை வற்றச் செய்ய வேண்டும். பால் வற்றிய சினை மாட்டின் காம்புகளின் வழியே நுண்மக் கொல்லி (ஆன்டிபயாடிக்) மருந்தை டியூப் மூலம் செலுத்தினால் மடிவீக்க நோயை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.

தீவனப் பராமரிப்பு

  • சினை மாடுகளுக்கு தீவனம் அளிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு கவனம் செலுத்தாவிடில் கீழ்க்கண்ட விளைவுகள் ஏற்படும்.
  • கன்று வீசுதல், குறைமாத கன்றுக் குட்டியை ஈனுதல், 20 கிலோவுக்கு குறைவாக உள்ள கன்று பிறக்கும். நஞ்சுக்கொடி விழாமல் கருப்பையில் தங்கிவிடும். கருப்பை வெளித்தள்ளுதல், பால் காய்ச்சல் போன்ற நோய்கள் வரும். பால் உற்பத்தி குறையும்.
  • இதைத் தடுக்க சரிவிகித தீவனம் கொடுக்க வேண்டும். ஒரு சினை மாட்டுக்கு 25 கிலோ பசுந்தீவனத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அளிக்க வேண்டும். கலப்புத் தீவனம் 8-வது மாத சினையில் தினமும் ஒன்று முதல் ஒன்றரை கிலோ வீதமும், 9-ஆவது மாதம் ஒன்றரை முதல் 2 கிலோ வீதமும் கன்று ஈனும் வரை வழங்க வேண்டும்.
  • இவற்றுடன் தாது உப்புக்கள் 25- 30 கிராம் தினமும் கொடுக்கலாம். கன்று ஈனுவதற்கு முன்னால் ஒரு கிலோ கோதுமைத் தவிடும் கொடுக்கலாம். மேலும் 450 கிராம் எப்சம் உப்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூள் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.
  • கன்று ஈனும்போது காணும் அறிகுறிகள்: நிறைமாத சினை ஆனவுடன் மாட்டின் வயிறு, மடி பெருத்துக் காணப்படும். மாட்டின் இடுப்பு, தொடைப் பகுதியில் உள்ள தசைகள் தளர்ந்து காணப்படும். வாலுக்கு அடியில் குழி உண்டாகும். இதைச் சட்டம் உடைதல், தட்டு உடைதல் அல்லது குழி விழுதல் எனக் கூறுவர். இந்த அறிகுறி தென்பட்ட 24 முதல் 48 மணி நேரத்தில் கன்று ஈனும்.
  • மாட்டில் சளி போன்ற திரவம் அதிகளவில் வடியும். மாடுகள் அடிக்கடி படுத்துக் கொண்டும், தலையை தோண்டிக் கொண்டு இருக்கும். சினைக் கிடேரிகள் வயிற்றில் உதைத்துக் கொள்ளும்.
  • இந்த அறிகுறிகள் ஏற்பட்டவுடன் மாட்டை சுத்தமான, சமமான இடத்தில் அழைத்துச் சென்று கட்ட வேண்டும். கன்று ஈனுவதற்கு முன் கலப்பின பசுக்களில் நெஞ்சில் இருந்து மடி வரை நீர் கோர்த்துக் காணப்படும். இதனால் எந்தத் தீங்கும் இல்லை. கன்று ஈன்றவுடன் தானாக அவை மறைந்து விடும்.
  • பனிக்குடம் உடைந்த ஒரு மணி நேரத்தில் மாடு கன்றை ஈன வேண்டும். கன்று ஈன்ற 6 மணி நேரத்தில் நஞ்சுக் கொடி விழ வேண்டும். இதுபோல் முறையாக சினைப் பசுவைப் பராமரிக்க வேண்டும்.

நோய்கள்

சினை மாடுகளில் கருச்சிதைவு நோய், கருப்பை அழற்ச்சி, கருப்பை வெளித்தள்ளுதல் போன்ற நோய்கள் குறித்த அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

இந்த முறைகளை விவசாயிகள் கையாண்டால் ஆரோக்கியமான கன்றுக் குட்டியையும், நல்ல பால் வளத்தையும் பெருக்க முடியும்

கேள்வி பதில்கள்

கேள்வி: மாடு கன்று போட்டு ஒரு மாதம் ஆகிறது. கன்று போட்ட நாள் முதல் பால் கறக்கவிட மாட்டேன் என்கிறது, உதைக்கிறது, காலை கட்டினாலும் துள்ளுகிறது. ஆனால் மடிவீக்கம் எதுவுமில்லை. பால் கறப்பதற்கு என்ன செய்யலாம்?

பதில்: மாட்டுக்கு இது முதல் கன்று என்பதால் கூச்சக்குணத்தால் இப்படி உதைக்கவும், பால் கறக்க விடாமல் செய்கிறது என்று நினைக்கிறேன். இது பிறவிக்குணமாகவோ இருக்கலாம். நாளாக நாளாக தான் இதை சரி செய்ய வேண்டும். இனிமேல் பால் கறக்கும் போது ஏதாவது ஒரு வகையில் மாட்டின் திசை திருப்பி விடும் வகையில் செய்து பால் கறக்க வேண்டும்.

கேள்வி: மாட்டுக்கு வயிறு பூசலாக இருக்கிறது. மூன்று நாளாக மூச்சு வாங்கிறது. என்ன செய்யலாம்?

பதில்: டிம்பால் என்ற மருந்து இருக்கிறது. தினமும் காலையில் 50 கிராம் என்ற விகிதத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு கொடுங்கள்.

ஆதாரம்: தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை.

நம் நாட்டில் வளர்ந்து வரும் மக்கள் தொகையின் உணவு மற்றும் ஊட்சத்திற்கான பாதுகாப்பை ஒருங்கிணைந்த கால்நடை வளா்ப்பு மூலம் பூர்த்தி செய்யலாம். பலதரப்பட்ட கால்நடை இனங்களில், பன்றி வளர்ப்பு, இறைச்சி உற்பத்திக்கான ஒரு முக்கியமான ஆதாரமாக கோழி வளர்ப்பிற்கு அடுத்து இடம் பிடிக்கிறது. இறைச்சி உற்பத்தி மட்டமல்லாமல், எருவும் தருகிறது. பன்றி வளா்ப்பினால்  ஊரக உழவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தருகிறது. மற்றம் உபரி வருமானம் தருவதால் உழவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடிகிறது.

சினை நிற்காமல் போன கால்நடைகள் சினை நிற்க இயற்கை மருத்துவம்.

இன்னைக்கு இருக்குற அவசர உலகத்துல மாடு சினை நிக்கலைனா உடனே விற்க போயிடுறோம்அது என்ன பண்ணும் பாவம்எல்லாமே இரசாயனம் தெளிச்ச தீணி தான் போடுறோம்தீவணம் ன்னு வெளிய பெருக்கான் கழிவு மாறி எதையோ வாங்கி போடுறோம்அதெல்லாம் எதுல செய்யுறாங்க என்னென்னா கூட சேர்க்குறாங்க ன்னு நிஜமா நமக்கு தெரியுமா

பண்றதெல்லாம் தப்பு நாம தான்இதனால தான் மாட்டுக்கு தற்காலிக மலட்டுத்தன்மை வருதுஇன்னைக்கு இருக்குற நிலைல தீணி பெரும் பாடு தான்இருந்தாலும் புதுசா கறவை மாடு வாங்குறதுக்கு கொஞ்ச காலம் தட்ட போட்டு மாட்டை இந்த சிகிச்சையை செஞ்சு அதோட தற்காலிக மலட்டு தன்மையை சரி செஞ்சுரலாம். 

தேவையான பொருட்கள்:

1. வெள்ளை முள்ளங்கி.
2.. கற்றாளை துண்டு
3. முருங்கை இலை
4. பிரண்டை (தண்டு)
5. கறிவேப்பிலை
6. மஞ்சள் கிழங்கு

சிகிச்சை அளிக்க வேண்டிய நெறிமுறைகள்:

சினை நிற்கவில்லை என்று உறுதியாக தெரிந்ததும்அன்றிலிருந்தோ அல்லது அடுத்த நாள் முதலோ சிகிச்சையை துவங்க வேண்டும்.

1. முதல் ஐந்து நாட்களுக்கு தினமும் ஒரு வேலை முழு வெள்ளை முள்ளங்கியை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரைஉப்பும் தடவி கொடுக்கவும்.
(நாள் 1 -5)

2. அடுத்த ஆறாவது நாள் முதல் நான்கு நாட்களுக்கு அதவாது ஒன்பதாவது நாள் வரைகற்றாழையை முட்களை சீவிவிட்டுதினமும் ஒரு வேலை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரைஉப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 6 -9)

3. அடுத்த நான்கு நாட்களுக்கு பத்தாவது நாள் முதல் பதிமூன்றாவது நாள் வரை , நான்கு கை அளவு அப்போது பறித்த முருங்கை இலையை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரைஉப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 10 -13)

4. அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கை அளவு அப்போது பறித்த பிரண்டையை ( தண்டு மட்டும்வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரைஉப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 14 -17)

5. இறுதியாக அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கை அளவு அப்போது பறித்த கறிவேப்பிலை உடன் மஞ்சள் ஒரு ஓரிரு கிழங்கு (பெரியாத இருப்பின் ஒன்றுசிறியது எனில் இரண்டுகடையில்வாங்கிய பொடியை எக்காரணம் கொண்டும் உபயோகிக்க வேண்டாம்வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரைஉப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 18 -21).

மேற்சொன்ன அனைத்தையும் ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டுமே கொடுக்க வேண்டும்நேரடியாக உண்ண கொடுக்க வேண்டும்கட்டாயம் மாடு சினை நிற்கும்இல்லை எனில் மேலும் ஒரு முறை இதை ஓரிரு நாட்கள் இடைவெளிக்கு பிறகு தொடரவும்கட்டாயம் மலடு நீங்கி சினை நிற்கும்.

பேராசிரியர் திரு.புண்ணியமூர்த்தி


பன்றி வளர்ப்பின் பயன்கள்

  1. தீவனங்களை மாற்றும் திறன் பன்றிகளுக்கு அதிகளவு இருக்கிறது.
  2. பன்றிகள் பலதரப்பட்ட உணவுகளை புற்கள், தீவனப்பயிர்கள், சேதமடைந்த தீவனங்களை, உண்டு அதிக மதிப்புள்ள இறைச்சியை தருகின்றன.
  3. பன்றிகள் சிறிய இடைவெளியிலேயே தன் இனத்தைப் பெருக்கும். ஒரு பெண் பன்றி 8-9 மாதங்களிலேயே குட்டி ஈனும். ஒரு வருடத்திற்கு 2 முறை குட்டி ஈனும். ஒவ்வொரு இனப்பெருக்கத்தின் போது 8-12  பன்றிக்குட்டிகளை ஈனும்.
  4. பன்றி வளர்பபிற்கு சிறிய முதலீட்டாலான கட்டடங்கள் மற்றும் உபரணங்கள் போதுமானது.
  5. பன்றிகள் இறைச்சியை 65%க்கு குறையாமல் அளிக்கும்.
  6. பன்றிக் கறியானது அதகி கொழுப்புடன், குறைவான நீர்ச் சத்துடன், அதிக சக்தி அளிக்கக் கூடிய ஒரு ஊட்டச்சத்து உணவாகும். இதில் தையாமின், நியாசின் ரிபோஃபிளேவின் என்ற விட்டமின்கள் அதிகளவில் உள்ளன.
  7. பன்றி எரு வேளாண் பண்ணைகள் மற்றும் மீன் குட்டைகளில் உரமாக பயன்படுத்தப்படுகிறது.
  8. பன்றிகளில் அதிகளவு கொழுப்பு இருப்பதால், கோழித் தீவனம், சோப், பெயின்டுகள் மற்றும் இதர வேதியியல் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
  9. பன்றி வளர்ப்பினால் விரைவில் வருமானம் 6-8 மாதங்களிலிருந்து கிடைக்கிறது.
  10. பன்றி இறைச்சியினால் உள்ளூர் மற்றும் வெளிநாடு ஏற்றுமதி சந்தைகளில் அதிகளவு சந்தை வாய்ப்பு உள்ளது.

பன்றி வளர்ப்பிற்குத் தேவையான மேலாண்மை முறைகள்

பன்றிக்குடில் மேலாண்மை

  1. சற்று உயரமான இடத்தில் குடில் அமைக்க வேண்டும்.
  2. நீர்தேங்காத, சொதசொதப்பான மற்றும் அதிக மழைபெறும் இடங்களைத் தவிர்க்க வேண்டும்.
  3. குடிலின் பக்கச் சுவர்கள் 4-5 அடியிலும், மீதமுள்ள உயரத்திற்கு இரும்பு குழாய்கள் (அ) மரக்குச்சிகள் கொண்டு அமைக்க வேண்டும்.
  4. சுவர்களில் ஈரம் உள்ளே கசியாதவாறு பூச்சிடவேண்டும்.
  5. குடிலின் உள்ளே அறைகள் 8-10 அடி உயரத்துடன் இருக்க வேண்டும்.
  6. நல்ல காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
  7. தரைப்பகுதி திடமாக, வழுக்காதவாறு, சரிவாகவும், நீர் வடியுமாறு இருக்க வேண்டும்.
  8. உண்ணும் கலனுக்கான இடம் 6-12 இந்த அளவுடன் இருக்க வேண்டும்.
  9. எளிதாக சுத்தம் செய்வதற்காக உண்ணும் கலனின் மூலைகள், வடிகால் பகுதி, சுவர்களின் மூலைகள் மொழுமொழுப்பாக இருக்க வேண்டும்.
  10. ஒவ்வொரு பன்றிக்கும் போதுமான அளவு இடம் ஒதுக்க வேண்டும்.
  11. கோடைக் காலங்களில் நிழலும், குளிர்ந்த நீரும் குடிப்பதற்கு அளிக்க வேண்டும்.
  12. சாணி மறறும் சிறுநீரை சுத்தமாக அகற்றி, சுத்தம் செய்ய வேண்டும்.
  13. ஆண் பன்றி / பால் தரும் பெண் பன்றிக்கு என தனித்தனியே இடம் ஒதுக்கி தரவேண்டும்.

இனவிருத்திக்கான பன்றியைத் தேர்வு செய்தல்

  1. வங்கியிலிருந்து கடன் தொகை பெற்றவுடன், அருகில் உள்ள கால்நடை பண்ணையிலிருந்து நல்ல தரமான பன்றி இனத்தை வாங்க வேண்டும்.
  2. வர்த்தக முறையில் பன்றி வளர்ப்பு செய்வதாக இருந்தால், நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள கலப்பு இனம் (அ) வெளிநாட்டு இனத்தை வாங்க வேண்டும்.
  3. இனவிருத்தி செய்யும் நிலையில் உள்ள பன்றிகளை வாங்க வேண்டும்.
  4. புதிதாக வாங்கிய பன்றிகளுக்கு அடையாளக் குறியிட வேண்டும்.
  5. நோய்களுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும்.
  6. புதிதாக வாங்கிய பன்றிகளை முதல் 2 வாரங்களுக்கு நேரடி கண்காணிப்பில் வைத்திருந்து, பின் மற்ற பன்றிகளுடன் கலந்து விட வேண்டும்.
  7. பரிந்துரைக்கப்பட்ட படி ஒரு குடிலுக்கு தேவையான அளவு பன்றிகளை வாங்க வேண்டும்.
  8. மூன்று மாத இடைவெளி விட்டு 2 பிரிவுகளாக பன்றிகளை வாங்கவும்.
  9. தேவையில்லாத, முதிர்ந்த பன்றிகளை தரப்பகுப்பு செய்ய வேண்டும்.
  10. 10-12 முறை இனப்பெருக்கம் செய்து குட்டி ஈன்ற முதிர்ந்த பன்றிகளை நீக்க வேண்டும்.

தீவன மேலாண்மை

  1. பன்றிகளுக்கு சிறப்பான தீவன உணவை தர வேண்டும்.
  2. அடர் தீவனங்களை தேவையான போது தரலாம்.
  3. விட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களை போதுமான அளவு தரவும்.
  4. போதுமான அளவு சுத்தமான நீரை  பருகத் தரவும்.
  5. பன்றிகளுக்கு போதுமான அளவு பயிற்சிகளைத் தரவும்.
  6. கர்ப்பக் காலத்தில் பெண் பன்றிகளுக்கு அதிக ஊட்டச்சத்துள்ள தீவனங்களைத் தரவேண்டும்.
  7. பெண் பன்றியின் வயது, எடை, அளவைப் பொறுத்து பெண் பன்றிகளுக்கு அளிக்கும் உணவின் அளவு மாறுபடும்.
  8. வீட்டு சமையல் அறை/ஹோட்டல் /குளிர்பதன சேமிப்பு/சேமிப்புக் கிடங்கிலிருந்து வரும் கழிவை தீவனமாகப் பயன்படுத்தலாம்.

நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு

  1. குறைந்த அளவு உணவு எடுத்துச் கொள்ளுதல், காய்ச்சல், மாறுபட்ட நடவடிக்கை போன்ற உடல்நிலை சரியில்லாத அறிகுறிகளைக் கவனித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
  2. உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தால் அருகில் உள்ள கால்நடை மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.
  3. பொதுவான நோய்களுக்கு எதிராகப் பாதுகாப்பு தரவேண்டும்.
  4. பெரிய அளவில் நோய் பாதிக்கப்பட்டால், ஆரோக்கியமாக உள்ள பன்றிகளிடமிருந்து நோய் தாக்கிய பன்றிகளை தனித்து வைக்க வேண்டும்.
  5. பன்றிகளுக்கு சீராக வயிறு சுத்தம் செய்யும் மருந்துகளைத் தரவேண்டும்.
  6. சுகாதாரத்தை பேண, பன்றிகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
  7. பரிந்துரைக்கப்பட்ட படி தடுப்பூசி மருந்துகளைப் போட வேண்டும்.

இனப்பெருக்கக் கால கவனிப்பு

  1. பன்றிகள் சாதாரணமாகவே அதிகளவில் தன் இனத்தை உற்பத்தி செய்யும். வருடத்திற்ககு 2 முறை இனப்பெருக்கம் செய்யும்.
  2. 10 பெண் பன்றிகளுக்கு 1 ஆண்  பன்றி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  3. இனப்பெருக்கத்தின் உச்சநிலையில் இருக்கும் போது இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்

கர்ப்பக்கால கவனிப்பு

ஓரிற்றுப் பன்றிக்குட்டிகளை ஈனும் ஒரு வாரத்திற்கு முன் உள்ள கர்ப்பமுள்ள பெண் பன்றிகளுக்கு போதுமான இடம், உணவு, தண்ணீர் போன்றவை கிடைக்குமாறு அதிக கவனிப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண் பன்றிகள் மற்றும் ஓரிற்றுப் பன்றிக்குட்டிகள் உள்ள கூடாரத்தை பன்றிக்குட்டிகளை ஈனும் தேதிக்கு முன்பே 3-4 நாட்களுக்கு நுண்ணுயிர் நீக்கம் செய்ய வேண்டும். பெண் பன்றிக் குட்டிகளை குட்டி ஈனும் கூடாரத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.

பன்றிக் குட்டிகளைக் கவனித்தல்

    1. புதிதாகப் பிறந்த பன்றிக் குட்டிகளை அதிகக் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.
    2. நஞ்சுக்கொடியை அறுத்த இடத்தில் அயோடின் கொண்டு நுண்ணுயிர் நீக்கம் செய்ய வேண்டும்.
    3. முதல் 6-8 வாரங்களுக்குத் தாய்பால் தரவேண்டும்.
    4. மோசமான காலநிலைகளில், குறிப்பாக 2 மாதங்கள் இருக்கும் போது பன்றிக்குட்டிகளைப் பாதுகாக்க வேண்டும்.
    5. பிறந்த பிறகு ஊசிப் போன்ற பற்களை எடுத்து விட வேண்டும்.
    6. பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகளைப் போட வேண்டும்.
    7. குட்டிகளுக்கு இரத்த சோகை ஏற்படாமல் இருக்க இரும்புச்சத்து அடங்கிய உணவை தர வேண்டும்.
    8. ஆண் பன்றிக் குட்டிகளை இனப்பெருக்கம் செய்யாமல், இறைச்சிக்கு பயன்படுத்துவதாக இருந்தால், 3-4 வாரங்களில் விறைநீக்கம் செய்ய வேண்டும்.
    9. பால் தரும் பெண் பன்றிக்கு கூடுதலாக உணவு தர வேண்டும்
    1. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துதல்
        நமது இந்திய நாட்டில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையால் நாம் உணவு உற்பத்தி செய்யும் கட்டாயத்தில் உள்ளோம். இந்தியாவில் விவசாயிகள் அதிகமாக வாழக்கூடிய கூடிய இடங்களில் அங்குள்ள மக்களுக்கான பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. ஆட்கள் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி, மழைக்காலங்களில் சரியாக மழை வராமல் இருத்தல், வன விலங்குகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் மக்களுக்கு வரும் பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன.

        தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, குறைவான எண்ணிக்கையில் ஆட்களைக் கொண்டு செய்யக்கூடிய விவசாய முறைதான் இன்றைய காலகட்டத்தில் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படிப்பட்ட நவீன தொழில்நுட்ப முறையில் பலவகையான விவசாயம் முறைகள் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் மண்ணில்லா விவசாய முறை சாத்தியம் என இந்திய தொழில்நுட்பம் நிரூபித்துள்ளது.
         மண் இல்லாத விவசாயமா? என்ற கேள்வி உங்கள் அனைவர் மனதிலும் எழுந்திருக்கும். மண் இல்லாத விவசாய முறைதான் "ஹைட்ரொபோனிக்ஸ் விவசாயம்" (ரசாயன உணவு கொண்டு நீரில் வளரும் செடிகள்) ஆகும். அதைப்பற்றி இப்போது காணலாம்.

இந்தியாவின் வேளாண் தொழில் :
         இந்தியாவின் "முதுகெலும்பு விவசாயமும் விவசாயிகளும்" தான். அனைத்து தொழில்களுக்கும் முன்னோடியாக விளங்குவது வேளாண் தொழில் ஆகும். இந்திய மக்கள் தொகையில் 60 சதவிகிதம் பேர் விவசாயத்தையும் விவசாயம் சார்ந்த தொழில்களையும் நம்பியுள்ளனர். விவசாயத்தைப் பொறுத்தவரை பல்வேறு தொழில்நுட்பங்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. விவசாயத்திற்கு மிகவும் அடிப்படையாக இருப்பது தண்ணீர் மற்றும் மண் ஆகும்.

       ஆனால் தற்போது உள்ள நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மண்ணில்லாமல், நிலம் இல்லாமல் செடிகளை வளர்க்கும் முறை தான் "ஹைட்ரொபோனிக்ஸ் விவசாயம்" ஆகும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் தற்போது பலபேர் விவசாயம் தொடர்பான விழிப்புணர்வை அடைந்து வருகின்றனர்.

 "ஹைட்ரொபோனிக்ஸ் விவசாயம்" என்றால் என்ன?

      "ஹைட்ரொபோனிக்ஸ் விவசாயம்" என்பது புதிய அறிவியல் கண்டுபிடிப்பு பெயர் இல்லை. கிட்டத்தட்ட  நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப் பின்பு பண்டைய கால மக்கள் ஏரி மற்றும்  ஆறுகள் போன்ற நீர் நிரம்பிய இடங்களில் raft(குவியல்) அதாவது, படகு போன்று செய்து நெல் மூட்டை மற்றும் பயிறு வகை மூட்டைகளை படகின் மேல் வைத்து  மிதக்க விடுவார்கள். 

      அதன்பின் நெல் மூட்டைகள் நீரில் இருக்கும் உரத்தை(மருந்தாக) எடுத்துக்கொண்டு நெல் பயிராக வரும். அதுமட்டுமல்லாமல், "hanging gards babilon" என்னும் "Hanging Garden" கல்வெட்டுக்களில் நீரைப்  பாய்ச்சி அதன் மூலம் பயிர்களை வளர்த்தனர் என அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது. கடந்த 15 மற்றும் 17 வருடங்களாக இந்த "ஹைட்ரொபோனிக்ஸ்" உபயோகப் படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
      "ஹைட்ரொபோனிக்ஸ்" என்ற இந்த புதிய செயல்முறை வெளிநாடுகளில் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மண் இல்லாத விவசாயம் இந்த முறையில் சாத்தியமாகிறது.

பயிர்கள் தயாரிக்கும் முறை

          பயிர்களை நீர்மூலம்  வளர்க்க முடியும். நீரில் ஆக்சிஜன், பொட்டன்ஷியல் ஹைட்ரஜன், மற்றும் பயிர் வளர்வதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நீரில் இருக்க வேண்டும்.  இவையே “ஹைட்ரோபோனிக்ஸ்” என  கூறப்படுகிறது.

          குறிப்பிட்ட இடத்தில்"poli house" அமைத்து அங்கு வரிசையாக பிளாஸ்டிக் பைப்புகளை அமைக்க வேண்டும். அதில் செடிகளுக்கு நீரோட்டம் பரவலாக செல்லுமாறு துளைகள் அமைக்க வேண்டும். அதன் பின்பு ஒரு சிறிய பிளாஸ்டிக் கப்பில் தேங்காய் துகள்களை நிரப்பி அதில் இரண்டு விதைகளை நிரப்பவேண்டும். விதை முதல்கட்டமாக இந்த இடத்தில்தான் 15 நாட்களில்  வேர் பிடிக்க தொடங்குகிறது.

          இந்த வேர் பிடிக்கும் காலகட்டத்தில் ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீர் மற்றும் ஒரே மாதிரியான தட்பவெப்ப வெப்பநிலை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.  பிறகு செடிகள் வேர் விட்டதும் இரண்டாவது கட்டமாக Net parts(நிகர பாகங்கள்) - க்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு மீண்டும் செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த நீர் பிளாஸ்டிக் பைப்புகள் வழியாக செலுத்தப்படுகிறது.

         தேவையான ஈரப்பதத்தை தக்க வைக்க தேங்காய் நார் துகள்கள் இந்த செடிகளுக்கு பக்க பலமாக உள்ளது. அதன் பிறகு இறுதியாக செடிகள் மற்றும் கீழே கீரைகள் முழுமையான வளர்ச்சி அடைந்து விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்படுகிறது.

ஹைட்ரோபோனிக்ஸ்” விவசாய முறையின் சிறப்பம்சங்கள்:

         “ஹைட்ரோபோனிக்ஸ்” விவசாய முறையின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இதில் 90% நீரை நம்மால் சேமிக்க முடியும்.  ஏனென்றால் மூடப்பட்ட பைபிளில் இருக்கும் துளைகள் வழியே தான் செடிகள் வளர்கின்றன. அதனால் தண்ணீர் எளிதில் ஆவியாகும் பிரச்சனையும் இல்லை. மேலும், இதற்கு உரம் தேவையில்லை. இதனால் எந்தவித பூச்சி தாக்குதலும் மற்றும் மண் சார்ந்த நோய்களும் ஏற்படுவதில்லை. மேலும் பூமியில் வளர்க்கப்படும் செடிகளை விட வேகமாக இந்தச் செடிகள் வளரும். அத்துடன் இந்த கீரைகள் 100 சதவிகிதம் சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்கும்.

ஹைட்ரோபோனிக்ஸ்” மூலம் வளர்க்கப்படும் பயிர்கள் :

          இந்த மண்ணில்லா விவசாய முறை மூலம்  பூச்செடிகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள், மூலிகைச்செடிகள் உள்ளிட்டவற்றை வளர்க்கலாம். காய்கறிகளில் தக்காளி, வெண்டைக்காய், புடலங்காய், உள்ளிட்ட காய்கறிகளையும் மற்றும்  முதலில் செம்பருத்தி, ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பூக்களையும் வளர்க்க முடியும். மேலும் புதினா, கொத்தமல்லி போன்றவற்றையும் வளர்க்கலாம்.

    “ஹைட்ரோபோனிக்ஸ்” விவசாய முறை எளிதாகவும் மற்றும்  பயன் அளிப்பதாகும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இம்முறையில் விவசாயம் செய்தவர்கள் கூறுகின்றனர். மேலும் இதனால் 90 சதவிகிதம் வரை நீரை சேமிக்க முடிகிறது என்றும், பயிர்களுக்கு உரம் தேவையில்லை என்றும் அதிகமாக பூச்சி தாக்குதலும் ஏற்படுவதில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். மிக எளிதாக இப் பயிர்களை செய்ய முடிகிறது என்று விவசாயிகள் மகிழ்ச்சியாக கூறுகின்றனர்.

பாரம்பரிய நெல் ரகங்கள்

நாம் நிலத்தை பார்வையிடும் போது, பாரம்பரிய ரகமான கிச்சிலி சம்பா நெல்லை 10 ஏக்கரில் பயிர் செய்திருந்தார், இந்த நெல் சன்ன ரக அரிசியைத் தரக்கூடியது. கிச்சிலி சம்பா அரிசியைச் சமைத்து உண்ண பலம், தேகச் செழுமை முதலியவை உண்டாகும் என நமது சங்கப் பாடலில் விவரிக்கப் பட்டுள்ளது,

நாட்டிற் பயிராகும் நற்கிச்சிலிச் சம்பா
வாட்டமறவே சமைத்து வாயினிக்க - வீட்டினிலே
உண்ணப் பலம்உண்டாம் ஒண்டொடியே! மெய்பெருக்கம்
வண்ணமிகு மேனி வழுத்து.

கருப்பு கவுனி நெல் ரகத்தை மூன்று ஏக்கரில் பயிர் செய்திருந்தார். இதன் வயது 140 நாட்களாகும், அந்த அரிசி அவல் செய்வதற்கும், இனிப்புப் பொங்கல் செய்வதற்கும் மிகவும் பிரசித்தி பெற்ற ரகமாகும். கருப்புக் கவுனி அரிசியால் செய்யப்பட்ட கஞ்சியை பருகுவதால் குதிகால் வலி நீங்கும் என்றும், நாய்க்கடி விஷம் நீங்குவதற்கும் பத்தியத்துடன் இந்த கஞ்சியை உண்ணலாம் என்றும் தெரிவித்தார்.

அவரது சொந்த உபயோகத்துக்காக 50 குழி நிலத்தில் மாப்பிள்ளை சம்பா நெல்லையும் பயிர் செய்து, 6 மூட்டை நெல்லை அறுவடை செய்துள்ளார். மாப்பிள்ளைச் சம்பா 180 நாள் பயிராக ஆடி மாதம் நாற்றுவிடப்பட்டு தைமாதம் அறுவடை செய்யப்படுகிறது. இவ்விதம் இப்பயிர் மழைக்காலம், குளிர்காலம், இளவெய்யில் காலம் என மூன்று பருவங்களையும் கடந்து வளர்கிறது. இதனால் பயிரில் நல்ல சத்து சேர்கிறது, இதனால் இந்த அரிசியை உண்ணும் போது நல்ல உடல் பலத்தை தருகிறது என்றும், தொடர்ந்து பயன்படுத்தும் போது சர்க்கரை நோய் கட்டுப்படுத்தக் கூடியது என்றும் தெரிவித்தார்.

“ஏனுங்க பாத்தீங்ளா... இந்த மாப்பிள்ள சம்பா, கருப்பு கவுனியெல்லாம் எந்தமாறி மகத்துவம் உள்ளது தெரியாம ஐ.ஆர் 8, ஐ.ஆர் 20னு ஒட்டு ரகத்த சாப்புட்டுபோட்டு, பொறவு சத்தில்லா சமுதாயமா இப்போ நிக்குறோமுங்க. ஏனுங்க நான் சொல்றது சரிதானுங்ளே?! புதுமாப்பிள்ளை பொலிவோட இருக்குறதுக்கு மாப்பிள்ள சம்பா வாங்கிப்போடு, சுறுசுறுப்பா களத்து வேலைய பாக்கனும்னா கருப்பு கவுனி கஞ்சி குடின்னு எங்க ஊரு பெரியவங்க சொல்லுவாங்கோ! இப்பவாச்சும் இந்த நெல்மணிகளோட அருமைய நாம புரிஞ்சக்கணுமுங்க!”

ஆலங்குடி பெருமாள் அவர்களின் ஒற்றை நாற்று நடவு வழிமுறையை பின்பற்றுகிறார். கிச்சிலி சம்பா சாகுபடிக்கு மொத்தமாக 7 கிலோ விதை நெல்லை மட்டும் பயன் படுத்தியுள்ளார். 7 கிலோ விதை நெல்லில் இருந்து பெறப்பட்ட நாற்றுகள் 12 ஏக்கரில் நடுவதற்கு போதுமானதாக இருந்ததாகவும், அவர் பண்ணையில் 10 ஏக்கரில் நாற்று நட்ட பின், இரண்டு ஏக்கர் நடுவதற்கு போதுமான நாற்றுக்கள் மீதம் இருந்ததாகவும் தெரிவித்தார்.

ஒற்றை நாற்றுநடவு முறை சிறந்த பலனைத் தருவதினால், அனைத்து பயிர்களையும் ஒற்றை நாற்று நடவு முறையிலேயே பயிர் செய்திருந்தார்.

ஒற்றை நாற்று நடவு முறையில் பயிர் செய்துள்ளதால் நாற்றுக்கு நாற்று 50 செ.மீ இடைவெளி விடப்பட்டுள்ளது. இடைவெளி போதுமான அளவு உள்ளதால் பயிர்கள் நுண்ணூட்ட சத்துகளுக்காகவும், காற்றுக்காகவும், ஒளிக்காகவும் ஒன்றுடன் ஒன்று போட்டியிடாமல் திடமாக வளர்கிறது என்றும், நாற்றுகள் நெருக்கமாக இருந்தால் நாற்று நீண்டு வளர்வது மட்டுமல்லாமல் அதிக தூர் வெடிக்காது, எனினும் பயிர் இடைவெளி பயிருக்கு பரிந்துரைக்கப் பட்ட அளவைவிட மேலும் அதிகரித்தாலும் மகசூலில் பாதிப்பு ஏற்படும் என்றும் தனது அனுபவத்தில் கவனித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

உதாரணமாக இவர் பயிரிட்ட கிச்சிலி சம்பாவில் 2 ஏக்கர் மட்டும் 50 செ.மீ சரியான இடைவெளியுடன் நட்டிருந்தார், இந்த பயிரில் 45 முதல் 50 தூர்கள் வரை வந்துள்ளது, இந்த இரண்டு ஏக்கரில் மட்டும், ஏக்கருக்கு 35 மூட்டை நெல்லை (62 கிலோ மூட்டை) அறுவடை செய்துள்ளார்.ஆனால் மீதியுள்ள 8 ஏக்கரில் இடைவெளி 50 செ.மீட்டரை விட அதிகமாக வைத்து நடவு செய்து விட்டதால் மகசூல் குறைந்துள்ளது, இந்த 8 ஏக்கரில், ஏக்கருக்கு 23 மூட்டை நெல் மட்டுமே கிடைத்துள்ளது.

ஒரு ஏக்கருக்கு தோராயமாக 13,500 ரூபாய் செலவு செய்து இந்த மகசூலை எடுத்துள்ளதாகவும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

நெல் (Paddy)

நெல் என்பது புல்வகையை சேர்ந்த ஒருவகை தாவரமாகும். தென்கிழக்கு ஆசிய நாடுகள் தான் இதன் பூர்விகம் ஆகும். இது ஈர நிலங்களில் வளரும் தாவரமாகும். இன்றளவும் இந்தியாவில் பயிரிடப்படும் தானியங்களில் நெல் முதலிடத்தில் உள்ளது. தென் இந்தியர்களின் அன்றாட உணவுகளில் அரிசியின் பங்கு அதிகம்.

உலக அளவில் தானிய உற்பத்தியில் நெல் மூன்றாம் இடம் வகிக்கிறது. சோளம்,கோதுமைக்கு அடுத்து அதிகம் பயிராகும் தானியம் நெல் ஆகும்.

நெல்லின் மேலுள்ள தோல் உமி என்று அழைக்கப்படுகிறது. இது கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. நெல்லின் உமி ஆல்கஹால் தொழிற்ச்சாலைகளில் பதப்படுத்தப்பட்ட பானமாக பயன்படுத்தப்படுகிறது. கோழி பண்ணைகளில் கோழி தீவனமானாகும் பயன்படுகிறது.

மேலுறை நீக்கப்பட்ட நெல்லானது அரிசி என்று அழைக்கப்படுகிறது. அரிசியைத்தான் உணவு பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

ரகங்களுக்கு ஏற்றவாறு நெல்லின் விளைச்சல் காலம் மாறுபடும். 30 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை வளரும் ரகங்கள் உள்ளன. நெல் உற்பத்திக்கு வண்டல் மண் சிறந்தது.

நாற்றங்கால் தயாரிக்கும் முறை:

1 ஏக்கர் நிலத்திற்கு 30 – 40 கிலோ விதை நெல் போதுமானதாகும். ரகங்களுக்கு ஏற்றவாறு தரமான விதைகளை அரசாங்க களஞ்சியத்தில் வாங்கியோ அல்லது முந்தய சாகுபடி நெல்லையோ பயன்படுத்தலாம்.

1 சென்ட் நிலத்தை நன்கு ஏர் உழுது நீர் பாய்த்து அதில் இலை சத்துக்கள் மற்றும் தொழுவுரம் போட்டு இரண்டு நாட்கள் ஊற வைக்க வேண்டும்.

விதை நெல்லை சுமார் 8 – 10 மணி நேரம் ஊறவைத்து அதை ஒரு ஈரமான கோணிப்பையில் போட்டு முளைப்போட வேண்டும்.

அடுத்த நாள், மறுபடியும் அந்த நிலத்தை உழுது நீர் பாய்த்து சமன்படுத்தி சிறிது நேரம் தெளியவிட வேண்டும். பின்பு முளைகட்டிய விதையை அந்த நிலத்தில் சீராக தூவ வேண்டும்.

முதல் ஒரு வாரத்திற்கு அதிகப்படியான நீர் விடாமல் தேவையான அளவு நீர் விட்டு ஈரமாக பராமரிக்க வேண்டும். நாற்றுகள் முளைக்க ஆரம்பித்தவுடன் அதன் அளவுக்கு ஏற்ப நீர் பாய்ச்சலாம்.

30 நாட்களுக்கு பின் நாற்றுகள் 10 செ.மீ நீளம் வளர்ந்த பின்பு அதனை பிடுங்கி பயிரிடப்போகும் நிலத்தில் நடலாம்.

பயிரிடும் முறை:

நாற்றுகள் 20 நாட்கள் வளர்ந்த பின்பு பயிரிட போகும் நிலத்தை உழுது அதில் தேவையான அளவு தழை சத்து மற்றும் தொழுவுரம் போட்டு நீர் பாய்ச்சி ஒரு வாரம் நன்கு மக்கும் வரை நீர் பாய்ச்ச வேண்டும்.

நாற்றுகள் 30 நாட்கள் ஆனா பின்பு மறுபடியும் நிலத்தை நன்கு உழுது நீர் பாய்ச்சி சமன்படுத்தி கொள்ள வேண்டும். பின்பு நாற்றுகளை பிடுங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

பிடுங்கி வைத்துள்ள நாற்றுகளை ஒன்றுக்கொன்று 10 செ.மீ இடைவெளிகளில் இரண்டு அல்லது மூன்று நாற்றுகளை ஒன்றாக சேர்த்து 3 செ.மீ ஆழத்திற்கு நடவேண்டும்.

பின்பு 30 நாட்கள் வாரத்திற்கு மூன்று முறை நீர் பாய்ச்ச வேண்டும். அதிலுள்ள தேவையற்ற களைகளை நீக்க வேண்டும்.

சீராக நீர் பாய்த்து பராமரித்தால் 180 நாட்களில் அறுவடைக்கு தயாராகும்.

நெற்பயிரின் நோய்கள்:

1) குலை நோய்: (பைரிகுலேரியா ஒரைசா)

அறிகுறிகள்:

பயிரின் எல்லா வளரும் நிலைகளிலும், எல்லாக் காற்றுவெளி பாகங்களையும் தாக்கும் தன்மையுடையது.

இலை மற்றும் கழுத்துப் பகுதிகளிலும் (கதிர் காம்பு) தாக்கம் அதிகமாக இருக்கும்.

இலைகளில் ஆங்காங்கே மேலெழுந்த புள்ளிகள் உருவாகும். அவை நாளடைவில் நூற்புக்கதிர் வடிவம் (மனிதனின் கண்போன்ற வடிவம்) பெறும்.

சிறுசிறு புள்ளிகள் தோன்றும் பின்னர் அவை ஒன்றிணைந்து வடிவம் பெறும்.

அதிகப்படியாக தண்டு சாய்தல் ஏற்படலாம்.

2) கதிர்க்காம்பு குலை நோய்:

கழுத்து (கதிர்க்காம்பு) கருமையடைந்து, சுருங்கிவிடும் கதிரின் காம்பு உடைந்து தொங்கும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர்களான பென்னா, பிரபாட் டிக்கானா, ‚ரங்கா, சிம்மபுரி, பல்குணா, சுவர்ணமுகி, சுவாதி, .ஆர் – 36, எம்.டி.யூ 9992, எம்.டி.யூ 1005, எம்.டி.யூ 7414.

அறுவடை செய்த பின்பு, அடித்தண்டு மற்றும் மீதமிருக்கும் வைக்கோல் புற்களை எரித்து விடவேண்டும்.

3) பாக்டீரியா ஏற்படுத்தும் இலை கருகல் நோய்:

அறிகுறிகள்:

நாற்று வாடல்.

மஞ்சள் நிற கோடுகள் இலைகளில் காணப்படும். அவை இலைக் காம்பிலிருந்து உள்நோக்கி வளரும்.

ஆரம்பத்தில் புள்ளிகளிலிருந்து அதிகாலையில், பால்போன்ற அல்லது நிறமற்ற திரவம் வெளியேறுவதைக் காணலாம்.

புள்ளிகள் மஞ்சள் நிறமாக மாறும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

நோயில்லா வித்துக்களை வாங்கவேண்டும்.

நாற்றங்காலினை தனி இடத்தில் வளர்க்க வேண்டும்.

வயலில் உள்ள அதிகப்படியான நீரை வடிகட்டவும்.

பாதிக்கப்பட்ட பயிர்கள் இருக்கும் இடத்திலிருந்து நீர் ஆரோக்கியமான பயிர்கள் உள்ள இடத்திற்கு நீர் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எதிர்ப்புத்திறன் கொண்ட பயிரை வளர்க்கவும்சுவர்ணா, அஜயா, தீப்தி, பத்வா மசூரி, எம்.டி.யூ 9192.

4) கதிர் உறை அழுகல் நோய்:

அறிகுறிகள்:

ஒழுங்கற்ற புள்ளிகள் தோன்றும் அவற்றின் நடுப்பகுதி சாம்பல் நிறத்திலும், ஓரங்கள் அரக்கு நிறத்துடனும் காணப்படும்.

இலையின் நிறம் மங்கிக் காணப்படும்.

புள்ளிகள் தோன்றி பின்னர் ஒன்றிணைந்து இலையின் பெரும்பகுதியை ஆட்க்கொள்ளும்.

முளைக்காத நெல் குருத்துகள் அழுகிக் காணப்படும்.

பூக்கள் அரக்கு சிவப்பாக மாறிவிடும்.

வெள்ளைநிற பொடி போன்று படர்தலைக் காணலாம்.

நெற்கதிர்கள் ஆம்பிப் போய் காணப்படும். நெல் மணிகள் ஆரோக்கியமாக இராது.

தடுப்பு:

பாதிக்கப்பட்ட பயிர்களை அழித்திடல் வேண்டும்.

5) செம்புள்ளி நோய்:

அறிகுறிகள்:

நாற்ற்ஙகால் மற்றும் பயிரைத் தாக்கும்.

நாற்றுகளில் குலைநோய் ஏற்படுத்திடும்.

இலைகளில் புள்ளிகளை ஏற்படுத்தும்.

வித்துக்களும் பாதிக்கப்படும்.

நெற்கதிரில் செம்மை நிறம் படரும்.

இந்நோய் 50 சதவிகித இழப்பை ஏற்படுத்தும்.

தடுப்பு முறை:

இந்த பூஞ்சானை அழிக்க 10-12 நிமிடத்திற்கு வெந்நீரில் வத்துகளை, 53-540 சி-யில், போட்டுவைத்து பின்னர் உபயோகிக்க வேண்டும்.

6) நெற்பழம் நோய்:

அறிகுறிகள்:

நெல் மணிகள் தாக்கப்பட்டு மஞ்சள் நிறமாக மாறிவிடும் அவற்றலிருந்து பூஞ்சான் வளரும்.

பட்டுபோன்ற வளர்ச்சி காணப்படும்.

முதிர் நிலையில் இந்த பூஞ்சானின் வித்துக்கள் மஞ்சளிலிருந்து பச்சைகருமை நிறமாக மாறிவிடும்.

கதிரில் சில நெல் மணிகள் மட்டுமே பாதிக்கப்படும் மற்றவை நன்றாக இருக்கும்.

தடுப்பு:

காய்ந்த பயிர் பாகம் மற்றும் அடிதண்டுகளை அழித்திட வேண்டும்.

7) நெல் துங்ரோ நச்சுயிரி:

அறிகுறிகள்:

வளர்ச்சி நின்று விடும். அதனால் கட்டுடையாக நெற்பயிர்கள் காணப்படும். கதிர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

இலைகள், துரு நிறத்தில் காணப்படும்.

தாமதமாக பூ பூக்கும் கதிர்கள் சிறியதாக காணப்படும்.

நெல் மணிகள், கதிரில், குறைவாகக் காணப்படும்.

தடுப்பு:

தடுப்பு சக்தி கொண்ட பயிர்கள்எம்.டி.யூ 9992, எம்.டி.யூ 1002, எம்.டி.யூ 1005, சுரேகா, விக்ரமர்யா, பரணி, .அர்.36.

பயிறு வகைகள் மற்றும் எண்ணெய் விதைச் செடிகளை பயிர் சுழற்சிக்கு பயன்படுத்தலாம்.

அரிசியின் பயன்கள்:

அரிசியில் அதிகஅளவு கார்போஹைட்ரெட் உள்ளது. இது உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்தாகும்.

உடல் மெலிந்து காணப்படுபவர்கள் பச்சரிசி சாப்பிட்டால் கொழுப்பு சக்தி அதிகமாக கிடைக்கும். இதனால் உடல் எடை கூடும்.

சிகப்பு அரிசியில் அதிக அளவு பைபர் உள்ளதால் ரத்தத்தில் கொழுப்பு சேருவதை தடுக்கிறது.

வாழை மரம்

 பொதுப்பண்புகள் :

  * ஓர் வித்திலைச் செடியான வாழையில் வேர்த்தொகுதி நார்க்கொத்தைப் போல, ஆழமாகச் செல்லாமல் பரவி நிற்கும்.

 * இவை இருவித்திலைச் செடிகளில் உள்ளதைப்போல ஆணிவேரைக் கொண்டிருக்காது. 

 * இதனால் வலுவான காற்றடிக்கும்போது வாழைச்செடிகள் சாய்ந்துவிடக் கூடியவை.

 * வாழை முதன்மையாக அதன் பழங்களுக்காகப் பயிரிடப்படுகிறது. எனினும் சிலவேளைகளில் அலங்காரச்செடியாகவும், நார் பெறுவதற்காகவும், வேறு தேவைகளுக்காகவும் வாழை பயிரிடப்படுகிறது.

 * சில இன வாழைகள் 8 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. அதன் பெரிய இலைகள் 3.5 மீட்டர் நீளம் வரை இருக்கும்.

* தண்டுப்பகுதி பெரும்பாலான செடியினங்களில் மண்ணுக்கு வெளியே கதிரவனின் வெளிச்சத்தை நோக்கி வளரும். ஆனால், வாழையில் அது கிழங்கு வடிவில் மண்ணுக்கடியில் மட்டுமே வளர்கிறது.

 * வெளியில், செங்குத்தாக வளர்ந்து நிற்கும் தண்டு போன்ற பகுதி இலைக்காம்புகளின் அடிப்பகுதிகள் ஒன்றன்மேல் ஒன்று பற்றி நிற்பதால் உருவாகிய பகுதியாகும்.

 பயன்கள் :

 * இரவு சாப்பாட்டிற்கு பிறகு ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் பல் வலி, பல் ஈறு வீக்கம், பல்லில் இரத்தக் கசிவுப் போன்ற நோய்கள் வராது.

 * வாழை தண்டு சாறு குடித்து வந்தால் உடல் பெருக்கம் குறையும், உடல் அழகு பெறும்.

  * வாழை தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவினால் தீப்புண், சீழ் வடிதல் மற்றும் காயங்கள் குணமாகும்.

* வாழைப் பட்டையை தீயில் காட்டி சூடேற்றி பிழிந்து காதில் விட்டால் காது வலி குணமாகும்.

 * வாழை பூ பொரியல் செய்து சாப்பிடுவதினால் அஜிரணம், நீரிழிவு நோய் குணமாகும்.

 * இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், ஹீமோகுளோபினை அதிகரித்து, ரத்த சோகை வராமல் தடுக்கிறது.

  * வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது. அதுபோல மூளையின் செயல்படும் ஆற்றலையும் அதிகப்படுத்துகிறது. மலச்சிக்கலுக்கு வாழைப்பழம் எடுத்துக்கொள்வது நல்ல தீர்வாக அமையும்.

 ஆப்பிளை விட 4 மடங்கு அதிகமான புரோட்டீன் சத்தும், 2 மடங்கு அதிகமான கார்போஹைட்ரேட் சத்தும், 3 மடங்கிற்கு அதிகமான பாஸ்பரஸ், 5 மடங்கு வைட்டமின் மற்றும் இரும்புச் சத்தும் உள்ளது.

 * வாழைப்பழத்தோல் விவசாயத்திற்கு உரமாகவும் பயன்படுத்தப்படு

* பாம்பு கடித்தால் முதலில் வாழைச்சாறு பருகினால் நச்சு முறிந்துவிடும்.

 * வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

 வளர்ப்பு முறைகள் :

 * ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரை ஒரு பருவம், செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ஒரு பருவம், டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை ஒரு பருவம் என வாழைக்கு மூன்று பருவங்கள் உள்ளன. இருப்பினும் ஜூன் மாதத்தில் நடவு செய்த வாழை நல்ல வீரியத்துடன் வேகமாக வளரும்.

 * வாழை நடவு செய்யும் முன் நிலத்தில் சணப்பை, தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரங்களை பயிரிட்டு பூக்கும் சமயத்தில் மடக்கி உழவேண்டும். பின் நிலத்தை இரண்டு முறை உழுது பிறகு கடைசி உழவிற்கு முன் தொழு உரம் இட்டு நிலத்தை நன்கு உழவேண்டும்.

 * 1 அடி நீளம், அகலம், ஆழம் உள்ள குழி எடுத்து, அதில் அரை கிலோ மண்புழு உரம் மற்றும் வேப்பம் கொட்டை கரைசல் 100 மில்லியை இடவேண்டும். பிறகு வாழைக்கன்றை குழியில் வைத்து மண்ணைப் இட்டு நன்றாக மிதித்து விடவேண்டும்.

 * ரொபஸ்டா ரகத்திற்கு 6 அடி இடைவெளி, மோரிஸ் ரகத்திற்கு 5.5 அடி இடைவெளி, செவ்வாழைக்கு 8 அடி இடைவெளி, பூவன் மற்றும் மொந்தனுக்கு 7 அடி இடைவெளி, ரஸ்தாளிக்கு - 7 அல்லது 6 அடி இடைவெளி விட வேண்டும்.

 * நடவு செய்த 3-ம் நாளில் உயிர் தண்ணீர் விட வேண்டும். அதன் பிறகு நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து பாசனம் செய்தால் போதுமானது.

  * 15 நாட்களுக்கு ஒரு முறை மேம்படுத்தப்பட்ட அமிர்தக்கரைசலை பாசன நீரோடு கலந்துவிடலாம்.

* மாதம் ஒரு முறை ஜீவாமிர்தம் கரைசலை நீர்பாசனம் வழியாக கொடுப்பதன் மூலம் நுண்ணுயிரி பெருக்கம் அதிகரிக்கும். இதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கும்.

 நோய் தடுக்கும் முறைகள் :

* கூன்வண்டு தாக்குதல் ஏற்பட்டால் ஒரு லிட்டர் தண்ணிரில், 100 மில்லி அக்னி அஸ்திரத்தை கலந்து வேர் பாகம் நனையும் படி ஊற்ற வேண்டும்.

 * இனக்கவர்ச்சிப் பொறியை ஏக்கருக்கு 2 என்ற விகிதத்தில் வைப்பதால் இதனைக் கட்டுப்படுத்தலாம்.

 * கண்ணாடி இறக்கை பூச்சி தாக்குதலுக்கு பொன்னீம் கரைசல் 20 மில்லியை, 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். 

  * தசகாவ்யா கரைசலை தெளிப்பதன் மூலம் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 

   * அசுவினி பூச்சி தாக்குதலுக்கு 100 லிட்டர் நீரில், இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரம், 3 லிட்டர் கோமியம் ஆகியவற்றை கலந்து 1 ஏக்கருக்கு தெளிக்கலாம். மாதம் 2 முறை தெளிப்பதன் மூலம் அசுவனி பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். 

  * வாடல் நோய்க்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு, சூடோமோனஸ் 5 கிராம் என்ற அளவில் கலந்து வயலில் லேசான ஈரம் இருக்கும் பொழுது வாழை கட்டையின் தூர் பகுதியில் ஒரு மரத்திற்கு 2 லிட்டர் வீதம் ஊற்றவேண்டும். 

 * இலைக் கருகல் நோய்க்கு 1 லிட்டர் தண்ணீருக்கு, 20 மில்லி பொன்னீம் கரைசல் சேர்த்து இலையில் தெளிக்க வேண்டும். 

* கிழங்கு அழுகல் நோய்க்கு டிரைக்கோடெர்மா விரிடியை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் கலந்து கன்று ஒன்றுக்கு ஒரு லிட்டர் வீதம் கன்று நன்கு நனையுமாறு ஊற்ற வேண்டும்.


வெற்றிலை

சுப நிகழ்ச்சிகளிலும் கோவில் பூஜைகளிலும் கமகமக்கும் வெற்றிலைக்கு முக்கியப் பங்கு உண்டு. முதியோர்கள் பலரைப் போலவே, கிராமத்து இளைஞர்களிடமும் வெற்றிலை போடும் பழக்கம் இருந்துவருகிறது. சித்த வைத்தியத்திலும் வெற்றிலை பயன்படுத்தப்பட்டுவருகிறது. இப்படிப் பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிலை, தேனி மாவட்டத்தில் பரவலாகச் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.


சப்பை தண்ணீரில்

வெற்றிலையில் இரண்டு வகை உண்டு. முதல் வகையான திருச்சி கொடி வெற்றிலை வெள்ளை நிறத்தில் இருக்கும், இரண்டாவது வகையான நாட்டு வெற்றிலை, கறுப்பு நிறத்தில் இருப்பதால் கறுப்பு வெற்றிலை என்று அழைக்கப்படுகிறது.

வெள்ளை வெற்றிலை சாகுபடிக்கு நல்ல தண்ணீர் மட்டுமே தேவைப்படும். சப்பை தண்ணீரில் விளைச்சல் இருக்காது. ஆனால் நாட்டு வெற்றிலைக்குச் சப்பை தண்ணீரே போதும் என்கிறார் சின்னமனூர் வெற்றிலை விவசாயி பாப்புராஜ். கடந்த 25ஆண்டுகளுக்கு மேலாக நாட்டு வெற்றிலை சாகுபடி செய்துவரும் இவர், வெற்றிலை சாகுபடிக்குக் கரம்பை மண் ஏற்றது என்கிறார். வெற்றிலை சாகுபடி நுட்பங்கள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டது:

அகத்தி மரத்துடன்

முதலில் அகத்தி விதையை விதைத்துச் செடி வளர்க்க வேண்டும். 60 நாட்கள் கழித்துச் செடி சுமார் அரை அடி உயரம்வரை வளர்ந்த பின், வெற்றிலை கொடி பதியம் போட்டு ஒவ்வொரு அகத்திச் செடிக்கும் ஒரு அடி இடைவெளியில் இயற்கை உரம் இட்டு நடவு செய்ய வேண்டும். கடுமையான வெயில் அடித்தால் வெற்றிலைக் கொடி கருகிவிடும். காற்று பலமாக வீசினாலும் கொடி சேதமடைந்துவிடும். அதனால் கொடி நன்கு வளர்ந்து அகத்தி மரத்தின் மீது படரும்வரை, வெற்றிலை கொடிக்காலைத் (தோட்டம்) சுற்றிச் சூரிய ஒளி மற்றும் காற்று புகாதவாறு தென்னங்கீற்றால் வேலி அமைக்க வேண்டும்.

ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 120 நாட்கள் கழித்துக் கிள்ளத் (பறிக்க) தொடங்கிவிடலாம். மூன்று ஆண்டுகள்வரை 30 நாட்களுக்கு ஒருமுறை பறித்துக்கொண்டே இருக்கலாம். நோய் தாக்காமல் இருக்க, ஒவ்வொரு முறை பறித்த பின் பூச்சிக்கொல்லி தெளிக்க வேண்டும்.

அகத்தி மரம் வளர்ந்த பின் அகத்திக் கீரையை வெட்டி வெற்றிலை கொடிக்கு உரமாக இடலாம். அது மண்ணில் மக்கி இயற்கை உரமாக மாறிவிடும். மேலும் ஊடுபயிராக வாழை, பச்சை மிளகாய் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்ய ரூ. 2.50 லட்சம் செலவு ஆகிறது. நடவு செய்த பின்னர் 30 நாட்களுக்கு ஒருமுறை ஆயிரத்து 500 கிலோவரை வெற்றிலை பறிக்க முடியும்.

சராசரியாக ஒரு கிலோ நாட்டு வெற்றிலை ரூ.60-க்கும், வெள்ளை வெற்றிலை ரூ.100-க்கும் விற்பனையாகிறது. முகூர்த்தக் காலங்களில் இன்னும் கூடுதலாக விலை கிடைக்கும். செலவு செய்தது போக மாதத்துக்கு ரூ. 70 ஆயிரம்வரை லாபம் கிடைக்கும். பல மாவட்டங்களில் சப்பை தண்ணீர் மட்டுமே கிடைப்பதால், நாட்டு வெற்றிலை சாகுபடி சிறந்தது. 

மிளகு 

சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே மிளகு தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மிளகின் தாயகம் இந்தியா ஆகும்.


ஆனால் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே எகிப்து நாட்டிற்கு மிளகு பண்டமாற்றாகக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

மிளகு என்பது செடி அல்ல, அது ஒரு கொடி. சிவப்பு, இளஞ்சிவப்பு, பச்சை, கறுப்பு, வெள்ளை என்று வெவ்வேறான வண்ணங்களில் கிடைக்கிறது. பழுக்காத மிளகை பறித்தால் பச்சையாக இருக்கும். நன்கு பழுத்து காய்ந்தது கறுப்பு நிறமாக வரும். இப்படி பறிக்கும் நாட்களைப் பொறுத்து அதன் வண்ணங்கள் மாறுபடுகின்றன.

முற்காலத்தில் ஒருவரிடம் இருந்த மிளகின் அளவை வைத்து அவர் செல்வந்தரா, ஏழையா? என்பதையும் கணக்கிட்டுள்ளார்கள். பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டில் கூட உண்ணலாம் என்பது பழமொழி. மிளகின் விஷ முறிவு தன்மைக்காக இவ்வாறும் சொல்லப்படுகிறது.

எப்படி பயிரிடுவது…?,

இரகங்கள்

கிரிமுண்டா, கொட்ட நாடன், சுபகாரா, பஞ்சமி, பெளர்ணமி, ஒட்டப்பிளாக்கல் 1, கல்லுவள்ளி, பாலன்கொட்டா, ஐஐஏஸ்ஆர் சக்தி, ஐஐஏஸ்ஆர்தேவம், ஐஐஏஸ்ஆர் மலபார் எக்செல், உதிரன் கொட்டா மற்றும் பன்னியூர் 1,2,3,4,5 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

பன்னயூர் 5 இரகம் நிழலைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது. இது பொதுவாக பாக்குத் தோப்புகளில் வளர்க்க ஏற்றது. பன்னயூர் 1 மற்றும் கிரிமுண்டா இரகங்கள் வறட்சியை தாங்கி வளரக்கூடியது.

பருவம்

ஜீன்டிசம்பர் மாதங்களில் மிளகு பயிரிடலாம். இதனை மானாவாரியாகவும் பயிர் செய்யலாம்.

மண்

நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண்ணில் நன்கு வளரும். களிமண் பூமியிலும், மணற்பாங்கான நிலங்களிலும் இப்பயிர் நன்கு வளராது. மண்ணின் கார அமிலத் தன்மை 4.5 முதல் 6.6 வரை இருந்தால் நல்லது. கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரம் வரையுள்ள அனைத்து மலைப்பகுதிகளிலும் இப்பயிர் நன்கு வளரும்.

விதைகள்

மிளகு பயிர் கொடிதுண்டுகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. ஒரு மீட்டர் நீளமுள்ள ஒரு கொடியினை தாய்ச்செடியிலிருந்து எடுத்து 2 அல்லது 3 கணுக்களுடன் கூடிய சிறு துண்டுகளாக வெட்டி பாலித்தீன் பைகளில் நடவு செய்ய வேண்டும். வேர் பிடித்த பின்பு இந்த துண்டுகளை நடவிற்குப் பயன்படுத்தலாம் அல்லது நாற்றங்கால் மூலம் நடவு செய்யலாம்.

நாற்றங்கால் தயாரிப்பு

நல்ல நிழலுடன், தண்ணீர் தேங்காமல் இருக்கும் பகுதிகளில் 1 மீட்டர் அகலம் மற்றும் 5.6 மீட்டர் அளவு நீளமும் கொண்ட உயரப் பாத்திகள் அமைக்க வேண்டும். மண்ணை நன்கு கொத்தி பின்பு ஒரு பாத்திக்கு 12 கிலோ தொழு உரம், 5 கிலோ மண்புழு உரம், 250 கிராம் உயிர் உரங்கள், 5 கிலோ மணல் மற்றும் 5 கிலோ செம்மண் கலந்து பாத்திகளைச் சீராக்க வேண்டும்.

நல்ல ஆரோக்கியமான தாய் கொடிகளின் அடிப்பகுதியில் வளரும் ஓடு கொடிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட துண்டுகளின் அருகில் ஒரு குச்சியை நட்டு ஓடு கொடிகளை மண்ணில் வேர்விடாமல் குச்சியில் சுருளுமாறு கட்டிவைக்க வேண்டும். பிப்ரவரி, மார்ச் மாதத்தில் 2 மீட்டர் நீளம் கொண்ட இத்தகைய ஓடுகொடிகளை தாய்க் கொடியில் இருந்து வெட்டி நீக்க வேண்டும். பின்பு ஓடுகொடியின் மேற்பகுதியில் மூன்றில் ஒரு பகுதியையும், கீழ்ப்பகுதியில் மூன்றில் ஒரு பகுதியையும் தவிர்த்து விட்டு நடுப்பகுதியை தண்டுத்துண்டுகள் (Cuttings) தயாரிப்பதற்காக தேர்ந்தெடுக்க வேண்டும். இளம் ஓடு கொடிகளையும், முதிர்ந்த ஓடு கொடிகளையும் தவிர்க்க வேண்டும்.

பின்னர் ஓடு கொடியிலிருந்து 2-3 கணுக்களை கொண்ட தண்டுத் துண்டுகளை சீராக கத்தியால் வெட்டி தயாரிக்க வேண்டும். இத்தகைய தண்டுத் துண்டுகளின் அடிப்பகுதியை பஞ்சகாவ்யா 3 சதம் கரைசலில் 30 நிமிடம் நனைத்து பின்பு பாத்திகளிலோ அல்லது பாலித்தீன் பைகளிலோ நட வேண்டும்

பாலித்தீன் பைகளில் (7×5 அங்குல அளவு) ஒரு பாகம் வளமான மேல் மண், ஒரு பாகம் ஆற்று மணல், ஒரு பாகம் தொழுஉரம் மற்றும் ஒரு பாகம் மண்புழு உரம் கலந்த கலவையை நிரப்ப வேண்டும். அதில் ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றங்கால் பாத்திகளில் 250 கிராம் அசோஸ்பைரில்லம், 250 கிராம் பாஸ்போ பாக்டீரியா போன்றவற்றை நன்கு கலக்க வேண்டும்

உரக்கலவையை இடுவதற்கு முன்னரே தேவையான சிறிய துளைகளை பைகளில் இட வேண்டும். பாத்திகளிலும், பாலித்தீன் பைகளிலும் தண்டு துண்டுகளை நட்ட பின்னர் போதிய நீர் விட்டு நிழலில் வைக்க வேண்டும். இரு முறை தேவையான அளவு நீரை பூவாளியால் ஊற்ற வேண்டும்

வளரும் சிறு பதியன்கள் 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகாவ்யா என்ற அளவில் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை ஊற்ற வேண்டும். பந்தல் அல்லது மூங்கில் தப்பைகள், பாலித்தீன் உறைகளை கொண்டு கூடாராம் அமைத்து அதில் பாலித்தீன் பைகளை வரிசையாக அடுக்க வேண்டும். பாலித்தீன் பையில் நடப்பட்ட துண்டுகள் மூன்றாம் வாரத்தில் வேர்விடத் தொடங்கி நடுவதற்கு தயாராகிவிடும்.

நிலம் தயாரித்தல்

இதற்கு நிழல் மிகவும் அவசியம். எனவே இதனை தனி பயிராக சாகுபடி செய்ய முடியாது. தென்னை, பாக்கு தோட்டங்களில் இதனை வளர்க்கலாம். ஆகவே இதற்கான நிலம் தயாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

நடவு செய்தல்

தென்னை மரம் என்றால், ஒரு மரத்துக்கு இரு கன்றுகள் வீதமும், பாக்கு என்றால் ஒரு மரத்துக்கு ஒரு கன்று வீதமும் மிளகை நடவு செய்ய வேண்டும். மிளகுக் கொடிகள் இந்த மரங்களைப் பற்றிக் கொண்டு வளர்ந்துவிடும். தென்னையின் அடிப்பகுதியில் வேர்கள் இறுக்கமாக இருக்கும் என்பதால், மரத்திலிருந்து இரண்டரை முதல் மூன்று அடி தூரம் தள்ளி மிளகுக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். அதேசமயம் கொடிகள் மரத்தை எட்டிப் பிடிக்க, ஏதுவாக சிறு குச்சிகளை அருகில் ஊன்றி வைக்க வேண்டும். கொடிகள் தென்னை மரத்தில் படர ஆரம்பித்தபின் அவற்றை எடுத்துவிட்டு, தரையோடு தரையாகக் கொடியை வைத்து, மண்ணால் மூடி மரத்துக்கு அருகில் இருந்தே கொடி முளைத்து ஏறுவது போல் செய்ய வேண்டும். இதனால் மண்ணுக்குள் இருக்கும் கொடிப்பகுதியில் புதிய வேர்கள் உருவாகும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் நீர்ப் பாய்ச்ச வேண்டும். பின்னர் வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தண்ணீர் அதிகம் பாய்ச்சுவதும் ஆபத்தானது. ஏனெனில் கொடிகள் செழிப்பாக வளர்ந்தால் காய்க்கும் திறன் குறைவாக இருக்கும். இது நிழல் பகுதியில் வளர்வதால் தண்ணீர் தேவையை உணர்ந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்

கொடிகள் நன்கு வளர்ந்த பின்பு ஒரு வருடத்திற்கு, ஒரு கொடிக்கு நன்கு மட்கிய தொழு உரம் 5 கிலோ மற்றும் மண்புழு உரம் 5 கிலோ என்ற அளவில் மேஜீன் மற்றும் அக்டோபர்நவம்பர் மாதங்களில் மண்ணில் இட வேண்டும். உதிர்ந்த இலைகளை மூடாக்காக போட வேண்டும். அதுவே சிறந்த உரமாக மாறிவிடும்.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கொடிக்கு 500 கிராம் சுண்ணாம்பு அல்லது டாலமைட் இட வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

கொடிகள் நன்கு வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். ஜீன்ஜீலை மற்றும் அக்டோபர்நவம்பர் மாதங்களில் இரண்டு முறை களை எடுக்க வேண்டும்.

கவாத்து செய்தல்

மிளகுக் கொடிகளின் நுனியைக் கிள்ளி விடுவதன் மூலம் பக்கக் கிளைகள் அதிகமாக வளரும். முதல் இரு வருடங்களில் மிளகுக் கொடியில் காய்க்கும் அனைத்து பூங்கொத்துக்களையும் உருவி நீக்கிவிட வேண்டும். அத்துடன் மிகுதியான பக்கக் கிளைகளை உருவாக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இலைகளையும் கிள்ளிவிட வேண்டும். மிளகுக் கொடி படர் மரங்களின் உயரத்தைத் தொடும் அளவிற்கு வந்தவுடன், மேலும் பற்றிப்படர படர் மரம் இல்லாததால் கொடிகள் கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருக்கும். அவற்றை அப்புறப்படுத்தி, தண்டுகளை நாற்றுக்களாக உற்பத்தி செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

பயிர் பாதுகாப்பு
பூச்சி மற்றும் வண்டு தாக்குதல்

பொல்லு வண்டு, இலை சுருட்டு தத்துப் பூச்சி மற்றும் இலைப்பேன் தாக்குதல் உள்ள இடங்களில் ஜீலை மற்றும் அக்டோபர் மாதங்களில் காய்ப்பிடிக்கும் போது வேப்ப எண்ணெயை (400 மி.லியை 100 லிட்டர்) நீரில் கரைத்து தெளிக்க வேண்டும். மேலும் பஞ்சகாவ்யா 3 சத கரைசலை 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.

நூற்புழுக்கள்

ஒரு செடிக்கு 100 கிராம் என்ற அளவில் வேப்பம் புண்ணாக்கினை, தொழு உரத்துடன் கலந்து இட்டு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

அடி அழுகல் நோய்

டிரைக்கோடெர்மா, சூடோமோனாஸ் கலவையை வருடத்திற்கு ஒரு கொடிக்கு, 50 கிராம் என்ற அளவில் இடுவதன் மூலம் இந்நோயை கட்டுப்படுத்தலாம்.

அறுவடை

மிளகு நட்ட மூன்றாம் ஆண்டில் காய்க்கத் தொடங்கி ஆறு ஆண்டுகளில் கொடிகள் நல்ல மகசூல் கொடுக்கத் துவங்கும். மிளகு பூக்க ஆரம்பித்த பின் 6 முதல் 7 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். சமவெளிப் பகுதிகளில் அறுவடைக்காலம் நவம்பர் முதல் ஜனவரி வரை இருக்கும். மலைப்பகுதிகளில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இருக்கும். நன்கு முற்றிய மிளகுக் காய்களை பழுப்பதற்கு முன்பே அறுவடை செய்ய வேண்டும். கைகளினால் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்த காய்களை துளையிடப்பட்ட அலுமினியப் பாத்திரம் (அல்லது) மூங்கில் கூடையில் வைத்து, 80 சென்டிகிரேடு கொதி நீரில் 1 நிமிடம் மூழ்கவைத்து பின்னர் 7-10 நாட்கள் சூரிய ஒளியில் உலர்த்த வேண்டும். காய்களை அவ்வப்போது கிளறி விட வேண்டும். காய்களை கிளறாமல் விட்டால் பூஞ்சாண வளர்ச்சி ஏற்படும்.

மகசூல்

ஒரு வருடத்திற்கு ஒரு கொடியிலிருந்து 2 முதல் 3 கிலோ உலர்ந்த மிளகு கிடைக்கும்.

பயன்கள்

மிளகுடன் பனை வெல்லம் கலந்து காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைப்பாரம், தலைவலி போன்றவை குணமாகும்.

10 மிளகை தூளாக்கி அரை லிட்டர் நீர் விட்டு காய்ச்சி கசாயமாக செய்து குடிக்க கோழை மற்றும் இருமல் தீரும்.

மிளகு சேர்க்கப்பட்ட உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியேற்றுவதுடன், எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது.

அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அமிலச்சுரப்பு போன்றவற்றை மிளகு தடுக்கிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

கருப்பு மிளகை நன்றாக பொடி செய்து ஒரு கப் தயிருடன் கலந்து அந்தக் கலவையை தலையில் பரவலாகத் தடவ தலையில் உள்ள பொடுகு ஒழியும்.

கருமிளகு மனச்சோர்வையும், களைப்பையும் போக்குகிறது. மூளையின் அறிதல் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது.

மிளகாய் செடி 

 மிளகாய் செடியை பொருத்த வரையில் வளர்ப்பது கொஞ்சம் சிரமமான காரியம் தான். இந்தச் செடியில் நோய் தாக்குதல், பூச்சி தாக்குதல் போன்றவை அதிக அளவில் இருக்கும். இந்த வீட்டுத் தோட்டம் குறித்த பதிவில் உள்ள குறிப்புகள் கண்டிப்பாக உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த குறிப்புகளை தெரிந்து கொண்டால், நல்ல முறையில் செடியை வளர்ந்து அதிக விளைச்சலை பார்க்க முடியும். வாங்க அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்


மிளகாய் செடியை பொறுத்த வரையில் பயிரிடும் காலம் மிகவும் முக்கியம். அதிகமான வெப்பம் இருக்கும் காலத்தில் இதை பயிரிட்டால் செடிகள் தழைத்து வளராது. எனவே ஜூன் மாதத்திற்கு பிறகு டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் இதை பயிரிட்டால் சரியாக இருக்கும். அடுத்து இந்த செடியை நடவு செய்வதற்கு முன்பு விதையை, விதை நேர்த்தி செய்து நட வேண்டும். அதாவது விதையை ஏதேனும் ஒரு உரத்தில் அரைமணி நேரம் வரை ஊற வைத்து அதன் பிறகு வெயிலில் காய வைத்த பிறகு நட வேண்டும் இதற்கு பஞ்ச காவியா, மீன் அமிலம் போன்ற உரங்களை பயன்படுத்தினால் நல்லது

அடுத்து விதைகள் நடும் போது அதிக இடைவெளி விட்டு நட வேண்டும். ஏனென்றால் இந்த செடிக்கு காற்றோட்டம் மிகவும் முக்கியம். காற்றோட்டம் குறைவாக இருந்தாலும், செடிகளை நெருக்கமாக நட்டாலும் கண்டிப்பாக இலை அழுகல், பூச்சி தாக்குதல் வந்து செடியின் வளர்ச்சி பாதித்து விடும்

இதற்கு அடி உரமாக மண் புழு உரம், கிச்சன் கழிவுகளை மட்டும் சேர்த்தால் கூட போதும். வாரத்திற்கு ஒரு முறை புளித்த மோரை ஊற்றி வந்தாலும் சரி அல்லது தேமோர் கரைச்சலை தெளித்து வந்தாலும் சரி, அதுவே இந்த செடி செழித்து வளர உதவி செய்யும். இவற்றுடன் கடலை புண்ணாக்கு கிடைத்தால் அதையும் நன்றாக கரைத்து திப்பி இல்லாமல் வடிகட்டி அதை செடிகளுக்கு உரமாக கொடுத்து வந்தாலும் அதிக அளவில் காய்கள் காய்க்கும்.

 வீட்டுத்தோட்டத்தில் பச்சை மிளகாய் வளர்ப்பவர்கள் நாற்றாங்கால் தொடங்கி காய்க்கும் பருவம் வரை கவனமாய் பார்த்துக்கொள்ளவேண்டும் என்கின்றனர் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள்

ஏனெனில் மிளகாய் செடிகளை தாக்கும் நோய்களையும்பூச்சிகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே மிளகாய் செடியில் நல்ல மகசூலை பெறமுடியும் என்கின்றனர் அவர்கள்

தரமான மிளகாய் செடி வளர்ப்பு பற்றி தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்பயிரிடும் பருவம் சிம்பிளான மாலை நேர ஸ்நாக்ஸ்... பொரி பக்கோடா பச்சை மிளகாய் ஆண்டுக்கு மூன்று பருவங்களில் பயிரிடலாம்ஜனவரி – பிப்ரவரிஜூன் – ஜூலைசெப்டம்பர் – அக்டோபர் ஆகிய மாதங்கள் பயிரிடலாம்மிளகாய் வளர மித வெப்பமான பருவமே ஏற்றது அதிக குளிரோஅதிக வறட்சியோ ஏற்றதல்லஎனவே சூரிய வெப்பம் நிலத்தில் இருந்து அதிக தண்ணீரை உறிஞ்சாத பருவமாக இருந்தால் பச்சை மிளகாய் வளர்ச்சி அபரிமிதமாய் இருக்கும்அதேபோல் அதிக தண்ணீர் ஊற்றி நிலம் களிமண்ணாக இருந்தாலும் ஏற்றதல்ல என்கின்றனர் வேளாண்துறையினர்.


முட்டைகோஸ்

 

முட்டைகோஸ் வெறுமனே இலைகளால் ஆன ஒரு காயாகும்.

மனித இனத்துக்கு முதலில் அறிமுகமான காய்கறிகளில் ஒன்று முட்டைகோஸ்.


கி.மு. 200-ம் ஆண்டில் கிரேக்கர்களும், ரோமானியர்களும் முட்டைகோஸை பல்வேறு காரணங்களுக்கு பயன்படுத்தியுள்ளனர்.

சீனா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட முட்டைகோஸ் 1794-ம் ஆண்டில்தான் இந்திய மக்களுக்கு அறிமுகமானது.

உலகளவில் அதிகமாக முட்டைகோஸ் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இமாச்சல பிரதேசம், தமிழகம் ஆகிய இடங்களில் முட்டைகோஸ் அதிகமாக பயிரிடப்படுகிறது.

முட்டைகோஸ் எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :
மலைப்பகுதி ரகங்கள்

செப்டம்பர் எக்லிப்ஸ், பூசா ஒண்டர், பிரைடு ஆஃப் இந்தியா, ஏர்லி ஒண்டர், பூசா ட்ரம்ஹெட், .எஸ் இராஸ் போன்றவை மலைப் பகுதிக்கான இரகங்கள் ஆகும்.

சமவெளி பகுதி இரகங்கள்

ஏர்லி ஆட்டம் ஜெயண்ட், லார்ஜ் சாலிட், லேட் ட்ரம்ஹெட், கோல்டன் ஏக்கர், ஜெயின், மகாராணி போன்ற ரகங்கள் சமவெளியில் பயிரிட ஏற்றவை.

மண்

இது பொதுவாக குளிர் கால பருவங்களில் பயிரிடப்படுகிறது. சமவெளி பகுதிகளில் இது குளிர்காலப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. வடிகால் வசதி மிகவும் அவசியம். வண்டல், செம்மண் நிலங்களிலும் நன்றாக வளரும். மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 6.5 வரை உள்ள நிலங்கள் ஏற்றவை.

பருவம்

மலைப்பகுதி: ஜனவரி-பிப்ரவரி, ஜீலை-ஆகஸ்ட் மாதங்கள் ஏற்றது. சமவெளிப்பகுதி: ஆகஸ்ட்செப்டம்பர் மாதங்களில் சாகுபடி செய்யலாம்.

விதையளவு

ஒரு எக்டருக்கு 650 கிராம் விதைகள் தேவைப்படும்.

நாற்றங்கால்

நாற்றங்கால் போடுவதற்கு 100 சதுர அடி நிலம் இருந்தாலே போதுமானது. 15 செ.மீ. உயரம், 1 மீ அகலம், தேவையான அளவு நீளம் கொண்டு விதைப்படுக்கையை உருவாக்கலாம். 2 கிலோ தொழு உரம், 200 கிராம் மண்புழு உரம், 40 கிராம் வி..எம் போன்றவற்றை ஒரு சதுர அடிக்கு அளிக்க வேண்டும். விதைப் படுக்கைகளில் 10 செ.மீ இடைவெளி விட்டு விதைகளை விதைக்க வேண்டும் .

நிலம் தயாரித்தல்

நிலத்தை பண்பட உழ வேண்டும். மலைப்பகுதிகளில் 40 செ.மீ. இடைவெளி விட்டு குழி தோண்ட வேண்டும். சமவெளிப்பகுதிகளில் 45 செ.மீ அளவுள்ள பார் அமைக்க வேண்டும்.

விதைத்தல்

மலைப்பகுதிகளுக்கு 40X40 செ.மீ இடைவெளியிலும், சமவெளிப்பகுதிகளுக்கு 45X30 செ.மீ இடைவெளியிலும் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

தொடர்ந்து மண் ஈரப்பதமாக இருக்குமாறு பாசனம் செய்ய வேண்டும்.

முட்டைகோஸ் உரங்கள்:

மலைப்பகுதிகளுக்கு அடியுரமாக தலா 90 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரங்களை அளிக்க வேண்டும். மேலுரமாக நட்ட 30-45 நாட்கள் கழித்து தலா 45 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரங்களை அளிக்க வேண்டும்.

சமவெளிப்பகுதிகளுக்கு அடியுரமாக 50 கிலோ தழைச்சத்து, 125 கிலோ மணிச்சத்து மற்றும் 22 சாம்பல் சத்து உரங்களை அளிக்க வேண்டும். மேலுரமாக நட்ட 30-45 நாட்கள் கழித்து 50 கிலோ தழைச்சத்து உரங்களை அளிக்க வேண்டும்.

பஞ்சகாவ்யாவை (3%) பயிரிட்ட ஒரு மாதம் கழித்து 10 நாட்கள் இடைவெளியில் தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும். வெர்மிவாஷ் 10 சதவிகிதம் பயிரிட்ட ஒரு மாதம் கழித்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

பயிரிட்ட பின் ஆழமாக தோண்டுவது மற்றும் களை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

முட்டைகோஸ் பாதுகாப்பு முறைகள்:

களை நிர்வாகம்

செடிகள் வளரும் பருவத்தில் களை இல்லாமல் பராமரிக்க வேண்டும்.

வெட்டுப் புழுக்கள்

விளக்குப் பொறியை கோடைக் காலத்தில் வயலில் பொருத்துவதால் தாய் அந்துப் பூச்சியை அழிக்கலாம். பைரித்ரம் கொல்லி, கோதுமைத் தவிடு, கரும்பு சர்க்கரை (2:1:1) என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்தலாம்.

அசுவினிகள்

வேப்ப எண்ணெய் 3% தெளிக்க வேண்டும். வேப்ப இலை சாற்றை 10% பயிரிட்ட 45, 60, 75 வது நாளில் தெளிக்கலாம். இனக்கவர்ச்சி பொறியை ஒரு எக்டருக்கு 20 என்ற எண்ணிக்கையில் வயலில் பொருத்தலாம்.

வேர்முடிச்சு நோய்

நோயற்ற விதை/நாற்றுக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். சூடோமோனஸ் ப்ளுரோசென்ஸ் ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து நாற்றுக்களை நனைத்து விதை நேர்த்தி செய்யலாம்.

டோலமைட் ஒரு எக்டருக்கு 10 கிலோ என்ற அளவில் அளிப்பதால் மண்ணின் கார அமிலத் தன்மையை அதிகரிக்கலாம்.

இலைப்புள்ளி நோய்

5% மஞ்சூரியன் தேயிலைச் சாற்றை பயிரிட்ட ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு மாத இடைவெளி விட்டு 3 முறை தெளிக்க வேண்டும். பஞ்சகாவ்யா 3 சதவிகிதம் பயிரிட்ட ஒரு மாதம் கழித்து 10 நாட்கள் இடைவெளி விட்டு தழைத் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்.

இலைக் கருகல் நோய்

200 கிராம் அக்ரி ஹோட்ரா சாம்பலை ஒரு லிட்டர் மாட்டுக் கோமியத்தில் கரைத்து 15 நாட்கள் ஊற வைத்து, 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். விதைத்த ஒரு மாதத்திலிருந்து ஒரு மாத இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.

கருப்பு அழுகல் நோய்

கருப்பு அழுகல் நோயை கட்டுப்படுத்த ஸ்டரப்டோமைசின் 100 பிபி.எப் பயிரிட்ட பிறகு 2 முறை தெளிக்க வேண்டும்.

அறுவடை

நட்ட 75 வது நாளில் அறுவடைக்கு வந்து விடும். கடினமான இலைகள் வளர்ந்தால் பயிர் முற்றிவிட்டதற்கான அறிகுறி ஆகும். ஒன்று அல்லது இரண்டு முற்றிய இலைகளுடன் அறுவடை செய்யவேண்டும். 120 நாட்களில் சுமார் எட்டு முறை வளர்ச்சியடைந்த முட்டைக்கோசுகளைப் பறிக்கலாம். முட்டைக்கோஸ் நன்றாக வளர்ச்சி பெற்று முற்றாமல் இருக்கும் தருவாயில் அறுவடை செய்யவேண்டும்.

மகசூல்

மலைப்பகுதிகளில் 150 நாட்களில் ஒரு எக்டருக்கு 70-80 டன்கள் கிடைக்கும். சமவெளிப்பகுதிகளில் 120 நாட்களில் ஒரு எக்டருக்கு 25-35 டன்கள் கிடைக்கும்.

முட்டைகோஸ் பயன்கள்:

இதில் உள்ள வைட்டமின் சத்து கண் பார்வைக்கு சிறந்தது. கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும்.

மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.

சரும வறட்சியை நீக்கி சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும். வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.

எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

நரம்புகளுக்கு வலு கொடுத்து நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.

துளசி

லத்தீன் மொழியில் ஓசிமம் சாங்டம் (Ocimum Sanctum) என்று அழைக்கப்படும் துளசியின் தாவரவியல் பெயர், ஓசிமம் டென்யூஃப்ளோரம் (Ocimum Tenuiflorum).


லேமியேசியே (Lamiaceae) குடும்பத்தைச் சேர்ந்த செடி வகைத் தாவரம். துளசி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது. பஞ்சாப், ஆந்திரா உட்பட பல மாநிலங்களிலும் கூட பயிரிடப்படுகிறது.

துளசி மாலைகள் சில கோயில்களில் சிறப்பிடம் பெற்று இருக்கிறது. இதற்காக துளசி பெரும்பாலும் மலர்ச் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. பூ வியாபாரிகளும் மற்ற பூக்களுடன் துளசியையும் விற்பனை செய்கிறார்கள். இந்த தேவை தவிர சில வகை மருந்து தயாரிப்பிலும், அழகுப் பொருட்கள் தயாரிப்பிலும், மணப் பொருட்கள் தயாரிப்பிலும், சோப் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ் நாட்டைப் பொறுத்த வரை கோவையில் இருந்து கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது

இதனால் மற்ற மல்லிகை, செவ்வந்தி, சாமந்தி, மரிக்கொழுந்து போன்ற மலர் வேளாண்மையில் ஈடுபட்டு இருக்கும் விவசாயிகள் துளசியைப் பயிரிடுவதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக மதுரை நிலக்கோட்டை, திருவள்ளூர் பகுதிகளில் உள்ள மலர் விவசாயிகள் அதிக அளவில் பயிரிடுகிறார்கள்

துளசி பொதுவாக எல்லா மண் வகைகளிலும் வளரும் தன்மை படைத்தது. சாலை ஓரங்களில், வரப்பு ஓரங்களில், காட்டுப் பகுதிகளில் தானாகவே புதர் போல வளர்ந்து இருப்பதைக் காண முடியும். அப்படி வளர்ந்து இருக்கும் துளசியை சேகரித்து மருந்து செய் நிலையங்களுக்கு விற்பவர்களும் இருக்கிறார்கள்.

துளசி எப்படி பயிரிடப்படுகிறது?

ஒரு ஏக்கருக்கு நூற்றைம்பது கிராம் விதைகள் தேவைப்படும். விதைகள் மிகவும் சிறியவை என்பதால் நான்கு பங்கு மணலுடன் ஒரு பங்கு விதைகள் என்று கலந்து கொள்ள வேண்டும். சுமார் பதினைந்து அடி நீளம், நான்கு அடி அகலத்தில் நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும். மண்ணை நன்றாக பொலபொலவென்று வருமாறு மண்வெட்டியால் நன்றாக கொத்தி சமன் செய்த பிறகு மணலுடன் கலந்து வைத்து இருக்கும் விதைகளைத் தூவி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆறு அல்லது ஏழு வாரங்களில் மூன்று முதல் ஐந்து இலைகளுடன் நாற்று, நடுவதற்கு தயாராக வளர்ந்து விடும்

ஏற்கெனவே துளசி பயிரிடுபவர்கள் விதை இல்லாத முறையிலும் நாற்றுகளை வளர்த்து நடுகிறார்கள். இதற்கு அவர்கள் துளசி செடிகளின் முனைப் பகுதிகளை எட்டு முதல் பத்து கணுக்கள் இருக்குமாறு சுமார் பத்து முதல் பதினைந்து சென்டி மீட்டர் உயரத்துக்கு வெட்டி நாற்றங்காலில் நட்டு விடுகிறார்கள். அல்லது பாலிதீன் பைகளில் நட்டு வளர்க்கிறார்கள். நான்கு முதல் ஆறு வாரங்களில் வயலில் நடுவதற்கு தயாராக நாற்றுகள் வளர்ந்து விடுகின்றன

நிலத்தை இரண்டு முறை டிராக்டரால் நன்றாக உழுது மண்ணை பதமாக்கிய பின் இயற்கை முறையில் வேளாண்மை செய்ய விரும்பினால் சுமார் பன்னிரெண்டு டன் தொழு உரம் போட வேண்டும். நாற்பது சென்டி மீட்டர் இடை வெளியில் பாத்திகளை அமைக்க வேண்டும்.நாற்பது சென்டி மீட்டர் இடைவெளியில் நாற்றுகளை நட வேண்டும். தொழு உரம் கிடைக்கவில்லை என்றால் ஏக்கருக்கு நாற்பத்தெட்டு கிலோ நைட்ரஜன், இருபத்து நான்கு கிலோ பாஸ்பரஸ், இருபத்து நான்கு கிலோ பொட்டாசியம் உரங்களைப் போட வேண்டி இருக்கும்.

நாற்று நட்டபின் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். உரங்களைப் பொறுத்தவரை முதலில் பாஸ்பரஸ் உரத்தையும், பொட்டாசியம் உரத்தையும் முழுமையாகப் போட்டு விட வேண்டும். நைட்ரஜன் உரத்தை மட்டும் பாதியை முதலில் போட வேண்டும். மீதியை இரண்டாகப் பிரித்து முதல் அறுவடையை ஒட்டி ஒரு பாதியையும், அடுத்த அறுவடையின் போது மீதி பாதியையும் போட வேண்டும். மூன்றாவது மாதத்தில் இருந்து அறுவடை செய்யலாம். பிறகு ஒரு மாதத்துக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு. மூன்று ஆண்டுகளுக்கு இவ்வாறு அறுவடை செய்யலாம். ஒரு முறை அறுவடைக்கு சுமார் நானூறு கிலோ கிடைக்கும்

முதலில் வாரத்துக்கு இருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப இருபது நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நாற்று நட்ட ஒரு மாதத்தில் ஒரு முறையும், இரண்டாம் மாதம் ஒரு முறையும் களை எடுத்தால் போதும்

நேரடியாக மலர்ச் சந்தைகளில் விற்பனை செய்யலாம். கோயம்பேடு, தோவாளை போன்ற மலர்ச் சந்தைகளில் துளசியும் குவித்து வைக்கப்பட்டு இருப்பதைக் காணலாம். இம்ப்காப்ஸ், எஸ்கேஎம், டாம்ப்கால் போன்ற சித்த, ஆயுர்வேத மருந்துகள் செய் நிறுவனங்களும், பெருய பார்மசூட்டிகல் நிறுவனங்களும் துளசியை வாங்குகின்றன.

துளசியின் இலைக் கொழுந்து, விதைகள், உலர்த்தப்பட்ட வேர்களுக்கு சந்தை வாய்ப்பு இருக்கிறது. உலர்த்தப்பட்ட துளசி இலைகளும் வாங்கப்படுகின்றன.துளசியில் இருந்து வடிக்கப்படும் யூஜெனால் (Eugenol) எண்ணெய் மருந்து தயாரிப்பில் மட்டும் அல்லாமல் சோப்பு தயாரிப்பு போன்ற வேறு தொழில்களிலும் பயன்படுத்தப்படுகிறது. துளசிப் பொடியை தேநீர் தயாரிப்புக்கும் பயன்படுத்துகிறார்கள். வேறு மூலிகைத் தேநீர் உடன் கூடுதலாக துளசிப் பொடியும் சேர்க்கப்படுகிறது

ஒரு முறை முதலீடு; 4 ஆண்டுகள் பலன்அதோடு, ஒருமுறை முதலீடு செய்து பயிரிட்டால் மறுதாம்பு முறையில் 4 ஆண்டுகளுக்கு தொடர்ந்து அறுவடை செய்ய முடியும். இதுபோன்ற காரணங்களால் விவசாயிகளின் விருப்பப் பயிராகவும் துளசி மாறி வருகிறது. திருவள்ளூர் பகுதியில் ஆயலூர், பிஞ்சிவாக்கம், கிளாம்பாக்கம், கோயம்பாக்கம், வதட்டூர், பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பெருமளவில் துளசி சாகுபடி நடைபெற்று வருகிறது.

துளசி ஒரு மூலிகைச் செடி என்பதோடு, மூலிகைகளின் அரசி எனவும் அழைக்கப்படுகிறது. இப்பயிர் செய்ய உகந்த பருவம் மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் ஆகும். எல்லாவிதமான மண் வகைகளிலும் துளசி வளரும் என்பதால் வடிகால் வசதியுள்ள செம்மண் மற்றும் செம்பொறை மண் மிகவும் ஏற்றதாகும்.

புதிதாக துளசி சாகுபடியில் இறங்குபவர்கள், ஏற்கெனவே துளசி பயிரிட்டு இருக்கும் இடங்களை நேரடியாகப் பார்த்து மேலும் தகவல்களை அறிந்து செயல்படலாம். துளசியை வாங்குபவர்களிடமும் விலை முதலான செய்திகளை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.

முந்திரி சாகுபடி முறை மற்றும் பயன்கள்


 

இம்மரமானது தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டது. பின்னர் 1560- 1565ம் ஆண்டில் போர்த்துக்கீசியரால் இந்தியாவில் உள்ள கோவாவிற்கு எடுத்து வரப்பட்டு, பின்னர் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை அடைந்தது.

முந்திரியில், முந்திரிப்பழம் என அழைப்பது, உண்மையில் பழமல்ல. அது போலிப்பழம் என அழைக்கப்படுகிறது. இது பூவின் சூலகப் பகுதியில் இருந்து உருவாவதில்லை. பூவின் அடிப்பகுதியில் உள்ள தடித்த பூக்காம்புப் பகுதியே இவ்வாறு பேரிக்காய் உருவத்தில் விருத்தியடைகின்றது. இது முந்திரி ஆப்பிள் எனவும் அழைக்கப்படுகிறது.

முந்திரியில், முந்திரி ஆப்பிளின் அடியில் சிறுநீரக வடிவில் உள்ள அமைப்பே உண்மையான பழம் ஆகும். இது உண்மையான பழமாக இருந்தாலும், இதன் உள்ளே இருக்கும் உண்ணக்கூடிய பகுதி முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகின்றது. அதாவது முந்திரியின் உண்மைப்பழமானது தனி ஒரு விதையைக் கொண்ட பழமாகும்.

இம்மரமானது இன்று வெப்பமண்டல நாடுகள் பலவற்றில் வளர்க்கப்படுகிறது. வியட்நாம், நைஜீரியா, இந்தியா, பிரேசில், இந்தோனீசியா ஆகிய நாடுகளில் இது அதிகம் பயிரிடப்படுகிறது.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :

வி.ஆர்.ஐ.1 (விருத்தாச்சலம்) வி.ஆர்.ஐ.2, வி.ஆர்.ஐ 3, வி.ஆர்.ஐ 4, வி.ஆர்.ஐ (CW) ஹெச் 1, வென்குர்லா 4, வென்குர்லா 7, பப்பட்லால் – 8 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்ற இரகங்கள் ஆகும்.

பருவம்

ஜுன் – டிசம்பர் மாதங்களில் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.

மண்

நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் பாங்கான நிலத்தில் நன்கு வளரும் தன்மை கொண்டது. இது வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. மழை அளவு 50 முதல் 250 செ.மீ வரை உள்ள இடங்களிலும் நன்கு வளரும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது, கட்டிகள் இல்லாமல் பண்படுத்த வேண்டும். பின் 45 செ.மீ நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழிகளுக்கும் இடையே உள்ள இடைவெளி 7 மீட்டர் இருக்குமாறு அமைத்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு குழியிலும் மேல் மண்ணுடன் 2 கிலோ தொழு உரம், ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.

விதையளவு

ஒட்டுக்கட்டுதல் மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கரில் நடவு செய்வதற்கு 200 கன்றுகள் தேவைப்படும்.

விதைத்தல்

தயார் செய்துள்ள குழிகளில் கன்றுகளை குழியின் மையப்பகுதியில் நடவு செய்ய வேண்டும். அடர் நடவு முறையில் 5 x 4 மீ இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு 500 மரங்கள் வீதம் நடவு செய்யலாம்.

நீர் நிர்வாகம்

செடிகள் ஓரளவுக்கு வளர்ந்து வரும் வரை தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க வேண்டும். பூக்கும் தருணத்திலும், காய் பிடிக்கும் தருணத்திலும் வறட்சியான சீதோஷ்ண நிலை நிலவினால் காய் பிடிப்பு அதிகரிக்கும். முந்திரியை பொதுவாக மானாவாரியாக பயிர் செய்யலாம்.

உரங்கள்

ஒரு வயதான மரம் ஒன்றிற்கு தொழு உரம் 10 கிலோ, தழைச்சத்து 70 கிராம், மணிச்சத்து 40 கிராம், சாம்பல்ச்சத்து 60 கிராம் கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்க வேண்டும். 4 வயது வரை கொடுக்கப்பட்டுள்ள உரங்களின் அளவை ஒவ்வொரு மடங்காக அதிகரிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு பிறகு தொழு உரம் 50 கிலோ, தழைச்சத்து 500 கிராம், மணிச்சத்து 200 கிராம், சாம்பல்ச்சத்து 300 கிராம் உரங்களை அளிக்க வேண்டும். உரங்களை இரண்டாகப் பிரித்து ஜுன் – ஜுலை மாதங்களில் ஒருமுறையும், அக்டோபர் – நவம்பர் மாதங்களில் ஒருமுறையும் அளிக்க வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். பின் வருடம் ஒருமுறை களை எடுக்க வேண்டும்.

மரத்தில் சுமார் ஒரு மீட்டர் உயரம் வரை பக்கக் கிளைகள் வராமல் வெட்டிவிட வேண்டும். ஒவ்வொரு வருடமும் காய்ந்து போன கிளைகளை நீக்கி சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் மரங்களுக்குக் கிடைக்குமாறு செய்ய வேண்டும். மேலும் ஒட்டுக்கட்டிய பகுதிக்குக் கீழ் வரும் தளிரை அவ்வப்போது கிள்ளிவிடவேண்டும். ஒட்டுச் செடியில் தோன்றும் பூக்களை நீக்கி விட வேண்டும்.

பயிர் பாதுகாப்பு
தண்டுத் துளைப்பான்

இதன் தாக்குதல் மரத்தின் அடித்தண்டில் ஆண்டு முழுவதும் காணப்படும். இதனை கட்டுப்படுத்த கார்பரில் 50 சத நனையும் தூள் 0.1 சதம் மருந்தை தண்டுப்பகுதியில் சுமார் 1 மீட்டர் உயரம் வரை தடவி விடவேண்டும்.

5% வேப்ப எண்ணெய்யை ஜனவரி – பிப்ரவரி, மே -ஜூன் மற்றும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் அடி மரத்தில் பூச வேண்டும்.

தேயிலைக்கொசு

தேயிலைக் கொசுவைக் கட்டுப்படுத்த தழைப் பருவத்தில் 2 மிலி போசலான் 35 EC, மொட்டு விடும் பருவத்தில் 2 கிராம் கார்பரில் 50 WP மற்றும் கொட்டை உருவாகும் பருவத்தில் 2 மிலி மேனோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

இலைத் துளைக்கும் புழு

இதனை கட்டுப்படுத்த 5% வேப்பங்கொட்டை சாறினை துளிர்விடும் பருவத்திலும், பூக்கும் பருவத்திலும் தெளிக்க வேண்டும்.

வேர்த் துளைப்பான்

ஒரு மரத்திற்கு மோனோகுரோட்டோபாஸ் 5 மில்லி மருந்துடன் 5 மில்லி தண்ணீர் கலந்த கலவையை புழு தாக்கிய துளைகளில் ஊற்றவேண்டும். இதை குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு முறை செய்ய வேண்டும்.

ஆந்தராக்னோஸ்

இதனை கட்டுப்படுத்த துளிர்விடும் பருவத்தில் 1% போர்டாக்ஸ் கலவையுடன் பெரஸ் சல்பேட்டை கலந்து தெளிக்க வேண்டும்.

நுனிக்கருகல்

நோய் தாக்கப்பட்ட கிளைகளை வெட்டி நீக்க வேண்டும். பிறகு அந்த இடத்தில் 1 சதவீதம் போர்டோக்கலவை மருந்தினை தடவி விடவேண்டும்.

அறுவடை

கன்றுகள் நட்ட மூன்றாவது வருடத்தில் காய்ப்புக்கு வந்து விடும். மார்ச் – மே மாதங்களில் அறுவடை செய்யலாம். நன்கு பழுத்த முந்திரிப் பழங்களிலிருந்து கொட்டைகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, வெய்யிலில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நன்கு உலர்த்தவேண்டும்.

மகசூல்

ஒரு வருடத்தில் ஒரு மரத்தில் இருந்து 3 முதல் 4 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

ஊடுபயிர்

கன்றுகள் நட்ட, மூன்று ஆண்டுகளுக்கு பின்பே, முந்திரியை சாகுபடி செய்ய முடியும். எனவே இடைப்பட்ட காலத்தில் உளுந்து, பச்சை பயறு, நிலக்கடலை போன்றவற்றை பயிரிடலாம்.

பயன்கள்
  • முந்திரியில் மாங்கனீசு, பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற கனிம தாதுக்கள் அதிக அளவில் உள்ளன.
  • முந்திரி பருப்பில் குறைந்த அளவிலான சியாசாந்தின் உள்ளது. இது கண்ணில் உள்ள கருவிழி படலத்தை பாதுகாக்க உதவுகிறது.
  • கையளவு முந்திரிப் பருப்புக்களை உட்கொள்வதால் பசியை நீண்ட நேரத்திற்கு கட்டுப்படுத்த முடியும்.
  • முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான ஒலியிக் மற்றும் பால்மிட்டோலெயிக் அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகிறது.
  • முந்திரி பருப்பில் அதிகமாக உள்ள செலினியம் ஊட்டச்சத்தானது உடலுக்கு நோய் எதிர்ப்பு திறனை தரவல்ல நொதிகளான குளுடாதயோன் பெராக்ஸிடேஸ் நொதிக்கு இணை காரணியாக செயல்படுகிறது.
ஜீவாமிர்தம்,தேமோர், அரப்பு மோர், மீன் கரைசல் தயாரிக்கும் முறை

தேமோர், அரப்பு மோர், மீன் கரைசல் தயாரிக்கும் முறை



தேமோர் கரைசல்

தேவையான பொருட்கள்

புளித்த மோர் – 5 லிட்டர்

தேங்காய்ப்பால் – 1 லிட்டர்

தேங்காய் துருவல் – 10 தேங்காய்

அழுகிய பழங்கள் – 10 கிலோ

தயாரிப்பு முறை

புளித்த மோர் மற்றும் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் இட்டு, நிழலான இடத்தில் வைக்க வேண்டும்.

இவற்றுடன் 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை பொட்டலம் போல் கட்டி அதில் போட வேண்டும்.

தினமும் கரைசலைக் கலக்கி வரவேண்டும்.

ஏழு நாட்களில் தேமோர்க் கரைசல் தயாராகி விடும். 8-ம் நாள், ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி தேமோர்க் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் செடிகளுக்குத் தெளிக்கலாம்.

நன்மைகள்

தேமோர்க் கரைசல் என்பது பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது.

பயிர்களில் பூ எடுக்கும் சமயத்தில் இக்கரைசலைத் தெளித்தால், பூக்கள் அதிகமாகப் பூக்கும்.

இக்கரைசல் தெளிக்கப்பட்டு விளைந்த காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும்.


அரப்பு மோர் கரைசல்

தேவையான பொருட்கள்

புளித்த மோர் – 5 லிட்டர்

இளநீர் – 1 லிட்டர்

அரப்பு இலைகள் – 1 முதல் 2 கிலோ

500 கிராம் பழ கழிவுகள் அல்லது பழ கழிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட 1 லிட்டர் சாறு.

தயாரிக்கும் முறை

அரப்பு இலைகளை நீருடன் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.

பின்னர் இதனுடன் புளித்த மோர், இளநீர் மற்றும் பழச்சாறு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் கரைசல் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஒருவார காலத்திற்கு வைத்திருக்க வேண்டும். இந்த ஒருவார காலத்தில் நொதிக்க தொடங்கி விடும். இந்த நொதித்த கரைசலே அரப்பு மோர் கரைசல் ஆகும்.

அரப்பு இலைத் தூள் பயன்படுத்துவதாக இருந்தால், பழ கலவைகளுக்கு பதிலாக பழ சாறு பயன்படுத்த வேண்டும். நான்கு பொருட்களையும் கலந்து அதனை ஏழு நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும்.

ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.

நன்மைகள்

அரப்பு மோர் கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் தாக்குதல் இருக்காது.

இது தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் பூஞ்சை நோய்களுக்கு எதிர்ப்பு தன்மை உருவாகிறது.

அரப்பு மோர் கரைசலை பூப் பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறையப்பூக்கள் பூக்கும்.

அரப்பு மோர் கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால் பயிர்கள் குறைந்த காலத்தில் நன்கு வளர்ச்சியடைந்து, அதிக விளைச்சல் மற்றும் மகசூல் கிடைக்கும்.


மீன் கரைசல்

தேவையான பொருட்கள்

மீன் கழிவுகள் – 1 கிலோ

பனை வெல்லம் (அ) நாட்டு சர்க்கரை – 1 கிலோ

தயாரிக்கும் முறை

உணவுக்கு பயன்படாத மீன் கழிவுகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து கலக்க வேண்டும்.

இதனை ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும்.

நாற்பது நாட்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும். இந்த திரவத்திலிருந்து கெட்டை வாடை வீசாது. பழவாடை வீசும். இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்.

ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். தேவைப்படும் போது மீன் அமினோ அமிலத்தை எடுத்துக் கொண்டு பிளாஸ்டிக் வாளியை காற்று புகாமல் மூடி வைத்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.

பயன்கள்

மீன் அமினோ அமிலம் ஒரு முக்கிய வளர்ச்சி ஊக்கியாக செயல்படும் தன்மை கொண்டது.

தழைச்சத்துக்கு யூரியாவை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த அமிலத்தை பயன்படுத்தலாம்.

மீன் அமினோ அமிலத்தை பூக்கும் தருணத்தில் பயன்படுத்தும் போது பூக்கள் நன்றாக பூக்கும் மற்றும் காய்க்கும் திறன் அதிகரிக்கும். இந்த அமிலம் சுற்றுச்சூழலுக்கு எந்த விதமான பாதிப்புகளையோ, பக்கவிளைவுகளையோ ஏற்படுத்துவது கிடையாது.


E.M. என்னும் திற நுண்ணுயிரி

தேவையான பொருட்கள்

Effective Microorganisms என்பதின் சுருக்கமே E.M. ஜப்பான் நாட்டில் 1980களில் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த திற நுண்ணுயிரி. இன்று 120 நாடுகளில் விவசாயம், சுற்றுச்சூழல், கால்நடைப் பராமரிப்பு துறைகளில் பயன்படுகிறது. இது இயற்கை இடுபொருள் என Ecocert அமைப்பு சான்று தந்துள்ளது.

வகைகள்

E.M 1 திற நுண்ணுயிரி

E.M 2 திற நுண்ணுயிரி

E.M 1 திற நுண்ணுயிரி

E.M 1 என்பது உறங்கும் நிலையிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் தொகுப்பாகும். இது நொதித்த பிறகே பயன்படுத்தப்பட வேண்டும்.

E.M 2 திற நுண்ணுயிரி

E.M 2 தயார் செய்ய 1:1:20 என்ற விகிதத்தில் E.M 1 : வெல்லம்(அ)கரும்புச் சர்க்கரை: குளோரின் கலக்காத நீர் ஆகியவற்றை 5-10 நாட்கள் பிளாஸ்டிக் கலன்களில் காற்று புகாமல் நிழலில் வைக்க வேண்டும்.

இவ்வாறு வைக்கப்பட்ட கரைசல் நொதிக்க ஆரம்பிக்கும். உருவாகும் வாயுவை வெளியேற்ற தினமும் 1 நொடி மூடியை திறந்து மூட வேண்டும். இந்த கரைசலே E.M 2 ஆகும். நொதிக்க வைக்க கண்ணாடிக் கலன்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

நன்மைகள்

இக்கரைசலை ஒரு மாத காலத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும். வீட்டின் சமையலறை, குளியலறை போன்ற இடங்களிலும் E.M 2 கரைசலை உபயோகப்படுத்தலாம். இவ்விடங்கள் விரைவாக உலர்ந்து, ஈரமின்றி இருப்பதுடன் ஈக்களும் வராது. துர்வாசனையும் நீங்கும்.

இது மிகச்சிறந்த இயற்கை ஈடுபொருள். கழிவுகளை இதனை கொண்டு மக்கச் செய்து மறுசுழற்சி செய்யலாம்.

தாவர வேர்களில் ஒட்டிக்கொண்டு வேரையும், மண்ணையும் இணைத்து மண்ணிலுள்ள பாஸ்பரஸை நேரடியாகவும், மறைமுகமாக மற்ற சத்துகளையும், நீரையும் எளிதாக உறிஞ்சி தாவரங்களுக்கு தரவல்லது. இது வேர்களை அதிக அளவில் உண்டாக்குவதால் விளைச்சல் அதிகரிக்க உதவுகிறது.

மண்ணிலுள்ள நோய் உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை ஆகியவை தாவரங்களை தாக்காமல் பாதுகாக்கிறது.

வேல்ஸ் திராட்சை. தாவர பண்புகள்: தோற்றம், பழங்கள்

 

வேல்ஸ் திராட்சை வகையின் விளக்கம்

Veles ஒரு திராட்சை, இது உக்ரைன் (Zaporozhye), Vitaliy Zagorulko ஒரு வளர்ப்பாளர் மூலம் வளர்க்கப்பட்டது. இது ரஸ்போல் மற்றும் சோபியாவின் கலப்பினமாகும். சில நேரங்களில் இந்த திராட்சையின் விளக்கத்தில் "பிங்க் சுல்தானா" என்ற வார்த்தையை நீங்கள் காணலாம். வளர்ப்பவரின் சேகரிப்பில் பல வகைகள் உள்ளன, ஆனால் வேல்ஸ் பல தோட்டக்காரர்களின் பெருமை.

 

இன்றுவரை, இந்த வகை மிகவும் நம்பிக்கைக்குரியது, தேவை மற்றும் தொழில் வல்லுநர்கள் மற்றும் அமெச்சூர்களால் வளர்க்கப்படுகிறது. முதன்முறையாக, இந்த வகை 2009 இல் பரந்த பார்வையாளர்களுக்கு விற்கப்பட்டது. அப்போதிருந்து, இந்த பழ புதரின் புகழ் குறையவில்லை. ஒரு ஆரோக்கியமான புதர் பெற எளிதான வழி ஒரு நாற்றங்கால் இருந்து ஒரு நாற்று வாங்க வேண்டும். வளர்ந்து வரும் அனுபவம் இல்லாமல், ஒரு வகை மாதிரியை வளர்ப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

கோடைகால குடியிருப்பாளர்களின் மன்றத்திலிருந்து வேல்ஸ் திராட்சைகளின் புகைப்படம்:

வேல்ஸ் ரஷ்யாவில் (மாஸ்கோ பிராந்தியம், யூரல்ஸ், காகசஸ்) மற்றும் உக்ரைன் (அனைத்து பகுதிகள்) மற்றும் அண்டை நாடுகளிலும் தீவிரமாக வளர்க்கப்படுகிறது. உறைபனி எதிர்ப்பு பண்புகள்: நடுத்தர அல்லது பலவீனமான. தங்குமிடம் வடிவில் குளிர்காலத்திற்கான உறைபனி பாதுகாப்பு பரிந்துரைக்கப்படுகிறது.

 

பல்வேறு நன்மைகள் மத்தியில்:

  • ஆரம்ப முதிர்வு;
  • பல்வேறு பாதுகாப்பின் உயர் பண்புகள்;
  • நடவு செய்த பிறகு, அது எளிதில் வேர் எடுக்கும், ஒன்றுமில்லாத தன்மை, நோய் எதிர்ப்பு;
  • தாவரத்தின் அதிக மகரந்தச் சேர்க்கை;
  • வளர்ப்பு குழந்தைகளின் உருவாக்கம், நல்ல வளர்ச்சி;
  • நடவு செய்த பிறகு திறந்த நிலத்தில் நாற்றுகளின் உயிர்வாழ்வு விகிதம்.

வேல்ஸ் தீமைகள்:

  • சிறந்த உறைபனி எதிர்ப்பு அல்ல;
  • வளர்ச்சி தூண்டுதல்களைப் பயன்படுத்தும் போது, ​​பெர்ரி உதிர்வதைக் காணலாம், மழை பெய்யும் போது, ​​பழங்கள் அழுகும்;
  • கவனிப்பைக் கோருகிறது.

தாவர பண்புகள்: தோற்றம், பழங்கள்

வேல்ஸ் திராட்சை ஒரு உன்னதமான இனிப்பு சுவை கொண்டது, இது சுல்தானா வகைகளுக்கு பொதுவானது. நம்பமுடியாத பெரிய நொறுங்கிய தூரிகைகளில் வேறுபடுகிறது (இதன் பொருள் கொத்துகளில் உள்ள பெர்ரி இறுக்கமாக உட்காரவில்லை). ஒரு கொத்து எடை 1,5 கிலோ வரை அடையலாம். கொடி சரியாக பழுக்க வைக்கும், கொத்துகளின் வடிவம் கூம்பு அல்லது சிலிண்டர் ஆகும். விதைகள் இல்லை, எப்போதாவது ஒரு அடிப்படை வடிவத்தில் வரும். பெர்ரி நிறம்: பணக்கார இளஞ்சிவப்பு, லேசான வெள்ளை பூச்சுடன். வலுவான முதிர்ச்சியுடன், பெர்ரிகளின் பிரகாசம் மிகவும் தீவிரமாக இருக்கும், சிவப்பு நிறம் வரை. புதர்கள் நடுத்தர அளவிலானவை, வளர்ச்சி மிதமானது. சாகுபடி வகை: தண்டு, குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி, ஹெட்ஜ்.

நடவு செய்வதற்கு ஒரு தளத்தைத் தேர்ந்தெடுப்பது, மண்ணின் வகையை கணக்கில் எடுத்துக்கொள்வது, நீர்ப்பாசனம் செய்வது

களிமண், களிமண் அல்லது மணல் மண் வேல்ஸுக்கு ஏற்றது. மற்ற திராட்சைகளைப் போலவே, இந்த பழ ஆலை ஒளி குறைபாட்டை பொறுத்துக்கொள்ளாது. குறைந்த வெளிச்சத்தில், பெர்ரி மிகவும் சிறியதாக வளரும் மற்றும் போதுமான இனிப்பு இல்லை. வேல்ஸ் திராட்சை ஒரு ஆதரவுடன் திறந்த பகுதியில் நடப்பட வேண்டும். அருகிலுள்ள கட்டிடத்தில் இருந்து தூரம் குறைந்தது 50 செ.மீ., இளம் நாற்றுகளுக்கு இடையே 1,5 மீட்டர் இடைவெளி காணப்படுகிறது. இலையுதிர் காலத்தில் நடவு செய்வதற்கான ஒரு முக்கியமான விதி: நாற்று தரையில் மாற்றப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு துளை தோண்டப்படுகிறது. மற்றும் நடவு செய்வதற்கான இரண்டாவது தேவை: தாவரத்தை பானை அல்லது பெட்டியிலிருந்து தரையில் மாற்றும்போது நாற்றுகளின் வேர் கழுத்தை ஆழப்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை. நடவு செய்த உடனேயே, தாவரங்கள் பாய்ச்சப்படுகின்றன, பின்னர் மண் தழைக்கூளம் செய்யப்படுகிறது, இதனால் ஈரப்பதம் மெதுவாக ஆவியாகும்.

 

பருவகால பராமரிப்பு, சீரமைப்பு மற்றும் கருத்தரித்தல்

வேல்ஸ் திராட்சையைப் பராமரிப்பதற்கான விரிவான திட்டம் எதுவும் இல்லை, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இது தோட்டக்காரரிடமிருந்து சிறிய சேர்த்தல்களுடன் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தரங்களுடன் இணங்குகிறது, எடுத்துக்காட்டாக, வசந்த காலத்தில் மட்டுமே சில கத்தரிக்காய், மற்றும் யாரோ இலையுதிர் கத்தரித்து பரிந்துரைக்கின்றனர். 4-5 கண்கள் (மொட்டுகள்) புதரில் இருக்கும் போது குறுகிய கத்தரித்தும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

உரங்களுடன் அனைத்து கையாளுதல்களும் பூக்கும் முன் செய்யப்படுகின்றன. குளிர்காலத்தில், புதரை அக்ரோஃபைபர் மூலம் மூடி வைக்கவும், இது வேர் அமைப்பு மற்றும் தளிர்களை உறைபனியிலிருந்து பாதுகாக்கும்.

கத்தரித் தோட்டம்

 இயற்கை முறையில் கத்தரிச் செடி பூக்களுடன் மிக சிறந்ததாக விளங்குகிறது. தோட்டத்திற்கு தேவையான விளக்கு பொறி இவரே தயார் செய்து மிக குறைந்த செலவில் வைத்திருக்கிறார்.


மேலும்கத்திரியில் வரும் வேரழுகல் பூஞ்சாண நோய்களை கட்டுப்படுத்த இவர் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

அதாவது இஞ்சி பூண்டு மிளகாய் கரைசலுடன் ஒரு லிட்டர் கோமியம் எடுத்துக்கொண்டு இதனை சரி பங்காக ஆக்கிக்கொண்டு கத்தரிச் செடியின் வேரைச் சுற்றி 200ml ஊட்டி விடுகிறார்.

இதன் மூலம் வேர் அழுகல் நோய் இவரது செடியை அண்ட வில்லை என்று ஆணித்தரமாக கூறுகிறார் .

இதனால் தனது தோட்டத்தில் வேரழுகல் பூஞ்சான நோய் எதுவுமே இல்லை என்று கூறுகிறார் .

கத்தரிக்கு குறைந்தபட்சம் 8 மருந்துகள் ஆவது அடிப்பார்கள் ,அதற்கு சுமார் ஒரு ஏக்கருக்கு எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை செலவு பிடிக்கும் ,ஆனால் நானே இயற்கை முறையில் மதுபாலன் சார் ஆலோசனையில் ,பஞ்சகாவியா | தேமோர் கரைசல், அமுத கரைசல் |கற்பூர கரைசல் | 3ஜி கரைசல் | மீன் அமிலம்,தயார் செய்து எப்பொழுதும் ரெடியாகவே எனது தோட்டத்தில் வைத்திருக்கிறேன் என்கிறார்.

நேற்று இவரது தோட்டத்திற்குச் சென்று, கத்தரி செடியில் இருக்கும் பூக்கள் நிலைத்து இருப்பதற்கு, கீழ்க்கண்ட ஆலோசனைகளை தெரிவித்தேன்.

ஒன்று மீன் அமிலம் தரை வழியாகவும், தெளிப்பான் மூலம் கொடுக்க சொல்லி இருக்கிறேன். ஐந்து நாட்கள் கழித்து தேமோர் கரைசல் அத்துடன் பெருங்காயத்தை கலந்து தெளிக்க சொல்லியிருக்கிறேன் .

அதன்பின்பு பே விரியா பேசியானா என்னும் திரவத்தை 10 லீட்டர் தண்ணீர்க்கு50 எம்எல் கலந்து செடி முழுவதும் நனையுமாறு அடிக்கச் சொல்லி இருக்கிறேன். ஏனென்றால் காய் புழுக்கள் வரக்கூடிய சமயம் .

அடுத்தபடியாக பஞ்சகாவியா வை லிட்டருக்கு 30 மில்லி என்ற விகிதத்தில் கலந்து செடி நனையுமாறு கொடுக்க சொல்லி இருக்கிறேன்.

இப்படி 15 நாட்களுக்கு கத்திரி செடிக்கு செய்ய வேண்டிய வேலைகளை அட்டவணைப்படுத்தி கொடுத்து உள்ளேன் .

மேலும் மஞ்சள் வண்ண அட்டையை ஏக்கருக்கு 10 முதல் 15 அட்டைகளை வாங்கி வைக்கச் சொல்லி இருக்கிறேன் .

இவை அனைத்தும் பூச்சிகளைக் கவர்ந்து இழுத்துவிடும்.

காய் இன்னும் பத்து பதினைந்து நாட்களில் திரட்சியாக வந்துவிடும்.

கத்தரிக்காய் செடியில் தாறுமாறான அறுவடை எடுக்க  பத்து டிப்ஸ்கள்!!

 கத்தரிக்காய்களில் அதிகளவு மருத்துவ குணங்கள் உண்டு. ஐரோப்பியர்கள் இதனை egg plant என்று கூறுவார்கள். விதையோடு சதைப்பகுதியில், ஆன்தோசையனின் மற்றும் ஃப்ளேவோனாய்டட்ஸ் என்ற, இரண்டாம் நிலை வேதிக் கூறுகள் இருக்கின்றன. இத்தகைய வேதிக்கூறுகள் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடியவை! கத்தரிக்காய் தோலில் பொட்டசியம் மெக்னீசியம், நார்ச்சத்துக்கள், ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன

மனித உடலில் புற்றுநோய் காரணமாக இருக்கும், ஃபிரீரேடிக்கிள் என்ற திசுக்களை கட்டுப்படுத்த கூடிய ஆற்றல், கத்தரிக்காயில் உள்ள, பிளோலிக் அமிலத்தில் உள்ளது! பிளோலிக் அமிலம் மற்ற காய்கறிகள் பழங்களில் இருந்தாலும், புற்றுநோய் கிருமிகள் தொற்றாமல் தடுக்கக்கூடிய ஆற்றல் மட்டுமே பிற காய்கறிகளில் உள்ளது. ஆனால், புற்றுநோய் தாக்கிய பிறகும், புற்றுநோய் கிருமிகள் பரவாமல் தடுக்க கூடிய ஆற்றல், கத்தரிக்காயில் உள்ள பிளோலிக் அமிலத்திற்க்கு உண்டுகத்திரிக்காயில் உள்ள அந்தோனாசைனின், என்கின்ற பொருள் சீரான ரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது

இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த கத்தரிக்காய் செடியை வளர்ப்பது ரொம்பவும் சவாலான விஷயம்தான்! ஆனால் இந்த பதிவில்  கூறியிருக்கும் பத்து டிப்ஸ்களை நீங்கள் செய்தாலே போதும்! கத்தரிக்காய் செடியை நாமும் மாடித்தோட்டம், அல்லது வீட்டு தோட்டத்தில், மிகச்சுலபமாக வளர்த்து விடலாம் 

 

பருவம் பார்த்து பயிர்செய்:

 

மாடித் தோட்டம் அல்லது வீட்டுத் தோட்டத்தில்  வருடத்தின் அனைத்து மாதங்களும் கத்தரிக்காய் செடிகளை பயிரிடலாம். டிசம்பர் ஜனவரி முதல் மே மாதம் வரை

இருந்தாலும் ஆடிப்பட்டத்தில் தான் கத்தரிக்காய் செடிகள் அதிக காய்களை கொடுக்கிறது. எனவே கத்திரிக்காய் செடிகளை ஆடிப்பட்டத்தில் பயிரிடுவது சாலச்சிறந்தது

முடிந்தவரை கோடைகாலத்தில் கத்திரிக்காய் செடிகளை பயிரிடுவதை தவிர்ப்பது நல்லது. கோடைகாலத்தில் மாவுப் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும்

செடியில்  கத்தரிக்காய்கள் சிறிய வடிவத்திலேயே  வரும். ஏனென்றால் மழைக்காலத்தில் கத்தரிக்காய் செடிகளுக்குத் தேவையான ஊட்டசத்துக்கள் மழை நீரிலேயே இருக்கும். ஆனால் கோடைகாலத்தில் மழைநீர் கத்திரிக்காய் செடிகளுக்கு கிடைக்காமல் போவதால் கத்திரிக் காய்கள் சிறிய வடிவிலேயே காய்க்கின்றன.

கோடைகாலத்தில் கத்தரிக்காய்கள் கசப்புத் தன்மை உடையதாக இருக்கும். இது பொட்டாசியம் ஊட்டச்சத்து குறைபாட்டினால் வருவதுதான். அதற்கு சாம்பல் அல்லது வாழைப்பழத் தோலை தண்ணீரில் ஊறவைத்து செடிகளுக்கு கொடுப்பதினால் பொட்டாசியம் சத்து குறைபாடு நீங்கும்.

முடிந்தவரை கோடை காலத்தை தவிர்த்து மீதி உள்ள காலங்களில் கத்திரிக்காய் செடிகளை பயிரிடுவது சிறந்தது.

 

விதை விதைத்தல்/விதைநேர்த்தி:

 

     கத்திரிக்காய் நாற்றுவிட்டு, பிடுங்கி எடுத்து நடக்கூடிய தாவரவகையை சார்ந்ததாகும். அதனால், குழித்தட்டில் விதைநேர்த்தி செய்து விதைக்கலாம். விதைநேர்த்தி செய்யும் போது டிரைக்கோடெர்மா விரிடி உயிர்-உரங்கள், அல்லது பஞ்சகவ்யா இவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்வது மிகவும் சிறப்பானது. கத்தரிக்காயின் விதைகள் மிகவும் சிறிய அளவில் இருப்பதினால் விதை நேர்த்தி செய்வதில் சிரமமாக இருக்கும். எனவே மண் கலவையிலேயே உயிர் உரங்களான டிரைக்கோடெர்மா விரிடி சூடோமோனஸ் இவற்றை கலந்து கத்தரிக்காய் விதைகளை விதைக்கலாம். கத்தரிக்காய் செடிகளின் விதைகளை விதை நேர்த்தி செய்வதினால் வேர் அழுகல் நோய் தண்டு அழுகல் நோய் பூஞ்சான்கள் இவைகள் வருவதை தடுத்து ஆரோக்கியமான கத்தரிக்காய் செடிகளை உருவாக்கலாம்

கத்திரிக்காய் செடிகளை விதை நேர்த்தி செய்து விதைப்பதால் கத்தரிக்காய் செடியில் வரும் நோய் தாக்குதல், பூச்சி தாக்குதல் இவைகளை தவிர்த்து நல்ல விளைச்சலை சுலபமாக எடுக்கலாம்.

 

மண்கலவை தயாரித்தல்:

   கத்தரிக்காய் செடிக்கு மண் கலவை என்று எடுத்துக்கொண்டால்,

 வண்டல்மண்

களிமண் கலந்த வண்டல் மண்

செம்மண் சிறந்தது.  

முக்கியமாக சிறந்த வடிகால் வசதியுடைய மண்ணாக இருப்பது சிறப்பம்சம். மண் கலவையுடன் வேப்பம் புண்ணாக்கு, மற்றும் உயிர்-உரங்கள் அசோஸ்பைரில்லம் பாஸ்போபாக்டீரியா சூடோமோனஸ் டிரைக்கோடெர்மா விரிடி, பொட்டாஷ் பாக்டீரியா சேர்ப்பது மிகவும் அவசியம். இயற்கை உரங்கள் மண்புழு உரம் அல்லது தொழு உரம் அல்லது இலை மக்கு உரம் அல்லது காய்கறி கழிவில் இருந்து கிடைக்கும் உரம் சேர்த்துக்கொள்ளலாம். மண் கலவையில் உயிர் உரங்களை சேர்ப்பதனால் கத்திரிக்காய் செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து எளிதாக கரைத்து  கொடுக்கும். வேப்பம் புண்ணாக்கு கத்தரிக்காய் செடிகளுக்கு கொடுப்பதினால் வேர் அழுகல் நோய், வேரில் வரும் பூச்சிகள், தண்டு அழுகல் நோய், இலைகளில் வரும் இலைப்பேன்கள், செம்பேன்கள் கம்பளிப்புழு, பச்சை புழுக்கள் காய்த்துளைப்பான் தண்டுதுளைப்பான் இவைகளை கட்டுப்படுத்தலாம். கத்திரிக்காய் செடிகளை நாற்று விட்டு, ஜான் அளவுக்கு வளர்ந்த பின்னர், பிடுங்கி நட வேண்டும். தோராயமாக 25 நாள் முதல் 30 நாட்கள் வரை பிடிங்கி நடலாம். 

கத்திரிக்காய் செடியினை பாதிக்கும் பூச்சிகள்/புழுக்கள்:

 

 கத்தரிச்செடியில்  முப்பது முதல் நாற்பது நாட்களில் பக்கக் கிளைகள் வரும்போது, தண்டு துளைப்பான், கம்பளி பூச்சி தொல்லைகள் இருக்கும். அப்பொழுது வேப்ப எண்ணெயுடன், இயற்கை சோப்பு கரைசல் கலந்து தெளிக்கவேண்டும். வாரம் ஒரு முறை வேப்ப எண்ணெய் தவறாமல் தெளித்து வருவது சிறந்த பலனை தரும்

அடுத்தது விளக்குப் பொறி (Pest Control) வைக்க வேண்டும். விளக்குப்பொறி வைப்பதினால் அந்த வெளிச்சத்தில் பூச்சிகள் கவர்ந்து இழுத்து விளக்குப்பொறி அடியில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரில் [எண்ணெய் கலந்த தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில்] விழுந்து, அதனால் பறக்க முடியாமல் இறந்துவிடும். முடிந்தவரை பாத்திரத்தில் விழுந்து கிடக்கும், பூச்சிகளை அடிக்கடி அகற்றி விடுவது நல்லது

கத்தரிக்காய் செடிகளில் வரும் தண்டுப்புழு, காய்த்துளைப்பான், தண்டுதுளைப்பான், தத்துப் பூச்சிகள் இவைகளை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி வைக்கலாம். இனக்கவர்ச்சிப் பொறி வைப்பதினால் பூச்சிகளைக் கவர்ந்து இழுத்து அழிக்கலாம். இனக்கவர்ச்சிப் பொறியில் உள்ள பூச்சிகளை உடனுக்குடன் எடுத்து அழித்து விடுவது நல்லது.

 அசுஉனி, இலைப்பேன், மாவுப்பூச்சிகள் தொல்லைகள் இருக்கும். இதற்கு இஞ்சி, பூண்டு, மிளகாய், கரைசல் மிகவும் நல்லது. அசுஉனி பூச்சிகளுக்கு, சாம்பல் இலைகளின் மீது காலைவேளைகளில் தூவி விடலாம்., அல்லது சாம்பல் கரைசலையும் பயன்படுத்தலாம்.

உரங்கள்: 

 கத்தரிக்காய் செடியில் நாற்பத்தைந்து நாட்களில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் கத்திரிக்காய் செடிகளுக்கு அமிலத்தன்மை கொடுப்பதினால் பூக்கள் நிறைய பூக்க ஆரம்பிக்கும். இச்சமயங்களில் புளித்த மோருடன் தேங்காய்ப்பால் கலந்து தயாரிக்கப்படுகின்ற, தேமோர் கரைசல், மீன் அமினோ அமிலம், அரப்பு மோர் கரைசல், மோர் பெருங்காயத்தூள் கரைசல், இவற்றில் உங்களிடம் உள்ள கரைசலை தெளிக்கலாம்.

 

இவ்வாறு பூக்கள் பூக்கின்ற நேரத்தில் தெளிப்பதால் பூக்கள் அனைத்தும் காய்கறிகளாக மாறும். காய்கறிகள் அனைத்தும் மிகவும் சுவையாக இருக்கும். மேலும் பூச்சி தாக்குதலும் குறையும். இந்த நேரத்தில் வீட்டிலேயே இருக்கும் காய்கறி கழுவிய தண்ணீர், அரிசி கழுவிய தண்ணீர் இவைகளோடு தண்ணீர் கலந்து செடிகளின் வேர் பகுதியில் ஊற்றி வரலாம். மண்புழு உரம் வேர்ப்பகுதியில் போட்டு கிளறி விடுவதனால் பூக்கள் உதிர்வு பிரச்சனைகள் சரியாகும். 

கடலை புண்ணாக்கு / வேப்பம் புண்ணாக்கு கரைசல்: 

 கத்திரி செடியில் பூக்கள் பூக்கும் போது, வேர் வழியாக கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கும் கலந்த கரைசலை ஊற்றினால் கத்திரிக்காய்கள் பெரியதாக, திரட்சியாக வரும். கடலை புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு கரைசல் தயாரிக்கும் போது புழுக்கள் வராமல் இருப்பதற்கு 75% கடலை புண்ணாக்கு 25% வேப்பம் புண்ணாக்கும் சேர்ந்து தண்ணீரில் ஊறவைத்து, முதலில் அந்தக் கரைசலில் மேல் படிந்திருக்கும் தண்ணீரை எடுத்து, சரிபாதி தண்ணீர் கலந்து செடிகளுக்கு ஊற்றி வரலாம். மீண்டும் அந்தக் கரைசலை கலக்கி விட்டு, மறுநாள் மேலே படிந்திருக்கும் தண்ணீரை எடுத்து ஊற்றி வரலாம். இதேபோல் தினமும் கரைசலை நன்றாக கலக்கிவிட்டு அந்த கரைசலின் மேல் படிந்திருக்கும் தண்ணீரை உபயோகப்படுத்தினால் புழுக்கள், எறும்புகள் போன்றவை செடிகளில் வருவதை தவிர்க்கலாம்.

 

கடலைப்புண்ணாக்கில்

 

தழைச்சத்து-7.60 

மணிச்சத்து-1.50, 

சாம்பல்சத்து-1.30 விழுக்காடும்

வேப்பம் புண்ணாக்கில்,

தழைச்சத்தும்,-5.20 விழுக்காடு

 மணிச்சத்து-1.90 விழுக்காடும்

சாம்பல் சத்து-1.5 விழுக்காடும் உள்ளது.


 கத்தரிக்காயில் அதிக காய்கள் காய்க்க  வைப்பதற்கு இந்த சத்துக்கள் உதவுகிறது.

மழைக்கால பராமரிப்பு:

மழைக்காலம், பனிக் காலங்களில், கத்தரிக்காய்களுக்கு அடியில் அழுகல் நோய் வரும். இந்த அழுகல் நோய், மழை பெய்யும் போது அல்லது பனி பொழிவின்போது தண்ணீர் கத்திரிக்காயின் அடியில் நின்று விடுவதினால் வருகிறது. கத்திரிக்காய் அழுகலை  சரிசெய்யசோற்றுக்கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீரில் கலந்து நன்றாக வடிகட்டி, அதை தெளிப்பான்கள் மூலம் கத்தரிக்காய்செடியின் பிஞ்சுகள், காய்கள், இலைகள் இவைகள் மேல் தெளித்து வருவதினால், கத்தரிக்காயில் வரும் கத்தரிக்காய் அழுகல் நோயை சரிசெய்யலாம், சோற்றுக் கற்றாழை திரவம் கத்திரிக்காயின் அழுகல் நோயை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கத்திரிக்காய் செடிகளில் வரும் பூச்சித்தாக்குதலையும், கட்டுப்படுத்துகிறது

 

சோற்றுக்கற்றாழை திரவம் சிறந்த வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது. சோற்றுக்கற்றாழை திரவத்தை கத்திரிக்காயின் வேர்ப்பகுதியில் ஊற்றுவதால், கத்திரிக்காய் செடியின் வேரில் வரும் பூச்சிகள், வேர் அழுகல் நோய், தண்டு அழுகல் நோய் இவைகளை சரிசெய்து கத்திரிக்காய் செடி ஆரோக்கியமாக வளர்ந்து அதிக காய்களை தருவதற்கு உதவி செய்கிறது 

கத்திரிக்காய் கசப்புதன்மை நீங்க :  

 கத்தரிக்காய்கள் காய்க்கும் பருவத்தில், சாம்பல், அல்லது வாழைப்பழத்தோல் தண்ணீரில் கரைத்து ஊற்றி வந்தால், காய்கள் பெரியதாக வருவதுடன், காய்கள் கசப்புத்தன்மை இருக்காது. வேர்கள் நன்கு வளர்ச்சி பெறும் 

கத்தரிக்காய் செடியிலிருந்து வரும் கத்தரிக்காய்கள் பொட்டாசியம் சத்து குறைபாட்டினால் சிறியதாக இருக்கும் போதே முற்றி விடுகிறது. கசப்புத் தன்மையோடு இருக்கிறது. மழை நாட்களில் இந்தப் பிரச்சினைகள் அதிகம் வராது. ஏனென்றால் மழை நீரிலேயே அதிக சத்துக்கள் இருக்கின்றன

சாம்பல் தண்ணீரில் கரைக்கும் பொழுது ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 50 கிராம் சாம்பல் தண்ணீரில் கரைத்து கத்தரிக்காய் செடிகளின் வேர்ப்பகுதியில் ஊற்றி விடலாம். அல்லது வாழைப்பழத் தோலை எடுத்துக் கொண்டோமானால், ஐந்து வாழைப்பழத்தோல் 5 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து, அந்தத் தண்ணீரை வடிகட்டி அதனோடு சம அளவு தண்ணீர் சேர்த்து செடிகளின் வேர்ப்பகுதியில் ஊற்றி வரலாம்.

தொடர் பராமரிப்பு வேலைகள்:

 கத்தரிச் செடி 6 மாதம் வரை நன்றாக காய்க்கும். அதற்கு பின்னர், (காய்த்து முடிந்தவுடன்), தேவையற்ற இலைகள் கிளைகளை அகற்றிவிட்டு திரும்பவும் தேமோர் கரைசல், கடலை புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு கரைசல், செடிகளுக்கு கொடுத்துவந்தால்நன்கு விளைச்சல் எடுக்கலாம். கடலைப் புண்ணாக்கு கரைசல் கொடுக்கும் போது, கண்டிப்பாக வேப்பம் புண்ணாக்கும் சேர்த்து தான் கொடுக்க வேண்டும்., இல்லை என்றால் புழுக்கள், எறும்புகள் கண்டிப்பாக வரும். எனவே கடலை புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கும் கலந்த கரைசலில் நாம் செடிகளுக்கு கொடுக்க வேண்டும். இந்தக் கரைசலோடு தொழுஉரம் அல்லது மண்புழு உரம் அல்லது காய்கறி கழிவு உரம் அல்லது இலை மக்கு உரம் இவற்றில் ஏதேனும் ஒன்றை நாம் கத்திரிக்காய் செடிகளுக்கு கொடுப்பதினால் கத்தரிக்காய் செடியிலிருந்து கத்தரிக்காயில் அதிக அளவில் அறுவடை செய்யலாம்.

விதை சேகரிப்பு :

 

கத்தரிச்செடியில் ஒருமுறை  விளைச்சல் எடுக்கும் போதே, கத்திரிக்காய் செடியிலிருந்து இருந்து விதைகளை சேமித்து கொள்ளலாம். அடுத்த சீசனுக்கு விதைக்க, கடைகளில் வாங்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது. உங்களுக்கு  எந்த வகையினைச் சார்ந்த, கத்தரிக்காய் மிகவும் பிடிக்கிறதோ, அதனுடைய விதைகளை சேகரித்து வைத்து ஒவ்வொரு சீசனுக்கும், அதை வைத்து பயன்பெறலாம். கத்தரிக்காய் விதைகளை சேமிக்கும் போது, கவனமாக சேமிக்க வேண்டும்., இல்லையென்றால் விதைகளை சாப்பிடும் வண்டுகள் வந்து, கத்தரிக்காய் விதைகளை சேதப்படுத்தி விடும் கத்தரிக்காய் விதைகளை சாம்பல் சேர்த்து, சேமித்து வைப்பதினால் விதைகளை சாப்பிடும் பூச்சிகளின் தொல்லையில் இருந்து, கத்தரிக்காய் விதைகளை சுலபமாக பாதுகாக்கலாம்.


மிளகாய்த் தோட்டம்

 மிளகாய்க்கு, வத்தலில் இருக்கும் விதைகளை உதிர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை சிறு பைகளில் அல்லது குழி தட்டுகளில் விதைத்து நீர் தெளிக்க வேண்டும். 20 முதல் 25 நாட்கள் ஆன நாற்றுகளை பைகளுக்கு மாற்ற வேண்டும்.


நாற்றுகளாக இருந்தால் அப்படியே பைகளில் நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நாற்றுகளை நட்டவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். நீர் ஊற்றும்போது மண் காய்ந்த பின் ஊற்ற வேண்டும்.

உரங்கள்

செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.

வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

பஞ்சகாவ்யா உரத்தை மேல் தெளிப்பாக தெளிக்கலாம். மேலும் சமையலறை கழிவுகளை உரமாக இடலாம். காய் கழுவிய தண்ணீர், அரிசி கழுவிய தண்ணீர் ஆகியவற்றை செடிகளுக்கு ஊற்றலாம்.

பாதுகாப்பு முறைகள்

செடியைச் சுற்றி அடி மண்ணை வாரம் ஒரு முறை கொத்தி விட வேண்டும். மண்ணை கொத்தி விடாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவது பயன் அளிக்காது.

அறுவடை

காய்கள் திரண்டவுடன் பச்சை மிளகாய்களை அறுவடை செய்யலாம். வற்றல் மிளகாய்களுக்கு, பழங்களை பழுக்கவிட்டு அறுவடை செய்ய வேண்டும்.

கறிவேப்பிலை

இந்தியாதான் கறிவேப்பிலையின் தாயகம் ஆகும். இதன் தாவரவியல் பெயர் முறையா கோயிங்கி ஆகும். கறிவேப்பிலை தென்னிந்திய மற்றும் இலங்கை உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.


கறிவேம்பு அல்லது கருவேப்பிலை என்று அழைக்கப்படும் இது பல மருத்துவ குணங்கள் கொண்ட தாவரம் ஆகும்.

பயிரிடும் முறை:

ஜூலைஆகஸ்ட் மாதம் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.

கருவேப்பிலை பொதுவாக எல்லா வகையான மண் வகைகளிலும் வளர்ந்து மகசூல் கொடுக்கும் தன்மை உடையது. ஆனால் ஊட்டமிக்க செம்மண் வகை நிலங்கள் மிகவும் ஏற்றது. பொதுவாக நீர் தேங்காத மண் வகையாக இருந்தால் நன்றாக வளரும் தன்மை உடையது.

கருவேப்பிலை பொதுவாக விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. நன்கு பழுத்த பழங்களை பறித்து உடனே தோல் நீக்கி அல்லது அப்படியே நில மேடை பாத்திகளில் வரிசையாக ஊன்ற வேண்டும், விதைத்த 20 நாட்கள் கழித்து முளைக்க ஆரம்பிக்கும். பின்பு இரண்டு அல்லது மூன்று மாத நாற்றுகளை எடுத்து கலவை மண் நிரப்பிய பொலித்தீன் பைகளில் நட்டு, பாதுகாக்க வேண்டும். ஒரு ஆண்டு முதல் இரண்டு ஆண்டு வயதுடைய நாற்றுகளையே நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.

நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை நன்றாக உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் பொது 5 டன் தொழு உரம் இட வேண்டும். பெரிய செடிகளாக வளர்க்க 2 . 5 மீட்டர் இடைவெளி தேவைப்படும்.குத்துக் செடிகளாக வளர்க்க 1 . 2 மீட்டர் இடைவெளி வேண்டும். அதிக மகசூல் பெற 60 செ.மீ இடைவெளியில் குழிகளை எடுக்க வேண்டும்.

தயார் செய்துள்ள குழிகளில் ஒன்று முதல் இரண்டு வயதுடைய நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். தேர்வு செய்யும் நாற்றுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.

நாற்றுகளை நட்டவுடன் நீர் பாய்ச்சுதல் அவசியமாகும். பின்பு நட்ட மூன்று நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்னர் வாரம் ஒரு முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

உரமிடும் முறை :

1 அடி ஆழத்தில் சதுர குழிதோண்டி நாற்றுகளை சுற்றி மக்கிய தொழுஉரம் இட வேண்டும். பின்னர் உரத்தை மண்ணுடன் சேர்த்து கிளறி விட வேண்டும். ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் ஒரு செடிக்கு 20 கிலோ தொழுஉரம் இட வேண்டும்.

வருடம் ஒரு மரத்திற்கு 15 முதல் 20 கிலோ வரை தொழுஉரம் அல்லது மண்புழு உரம் இட வேண்டும். மேலும் 150 கிராம் தழைச்சத்து, 25 கிராம் மணிச்சத்து 50 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இட்டு மண் அணைக்க வேண்டும். அதன்பின் தேவைக்கேற்ப வருடத்திற்கு வருடம் உர அளவினை அதிகப்படுத்த வேண்டும். 100 ம் நாள் ஒவ்வொரு செடியின் வேர்ப்பகுதியிலும் 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கை வைக்க வேண்டும்.

பொதுவாக கறிவேப்பிலை தோட்டத்தில் களைகள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஆகையால் செடியை சுற்றியுள்ள களைகளை வெட்டி சுத்தம் செய்து வட்டம் போட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

செடிகள் 1 மீட்டர் வளர்ந்தவுடன் நுனிக்கொழுந்தினை கிள்ளி விட வேண்டும். இவ்வாறு செய்வதினால் பக்க கிளைகள் வளர்ச்சி அதிகரிக்கும். ஒரு செடிக்கு 5 – 6 கிளைகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

நடவு செய்த 6 – ம் மாதத்தில் இருந்து அறுவடை செய்யலாம். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். பூமியில் இருந்து 10 செ.மீ உயரம் விட்டு அறுக்கடை செய்ய வேண்டும்.

ஒரு ஆண்டு கழித்து, ஒரு ஏக்கர் நிலத்தில் 400 கிலோ கருவேப்பிலை கிடைக்கும். ஐந்து வருடம் கழித்து 3500 – 5000 கிலோ வரை நல்ல மகசூல் கிடைக்கும்.

பயன்கள்:

பித்தத்தை தனித்து உடல் சூட்டை ஆற்றும் தன்மை உடையது. அதோடு கருவேப்பிலை கீரை மனதுக்கு உற்சாகத்தை தரக்கூடியது.

குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாள்பட்ட காய்ச்சல் ஆகியவற்றை கருவேப்பிலை குணப்படுத்துகிறது. பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தை குணப்படுத்த கருவேப்பிலை உதவுகின்றது.

வாந்தி, நாக்கு ருசியற்று போகுதல், பசியற்ற நிலை, சளி ஆகியவற்றை கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமல் இருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.

கறிவேப்பிலை சாறு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை பலப்படுத்தும். பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலை சேர்த்துக்கொள்வது நல்லது.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் முடி நன்றாக வளரும்.

மஞ்சள் 

மஞ்சள் ஒரு வெப்ப மண்டலப்பயிர் ஆகும்.

தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து, மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு.


இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருளாகும். இதனை இந்துக்கள் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள்.

மஞ்சள் தமிழ் நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்த மருத்துவத்தின் பிரதான பகுதியாக பயன்படுத்தப்பட்டது.

இது முதலில் வண்ணச் சாயம் எடுப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டது.

இந்தியாவில் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் அதிக அளவு மஞ்சள் விளைவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவு மஞ்சள் விளைவதால் ஈரோட்டிற்கு மஞ்சள் மாநகர் என்ற பெயரும் உண்டு.

மஞ்சள் எப்படி பயிரிடுவது…?

கோ 1, பிஎஸ்ஆர் 1,2 (பவானிசாகர் 1,2) ரோமா, ஸ்வெர்ணா, சுதர்ஷனா, ரங்கா, ராஷ்மி, ராஜேந்திர சோனியா, கிருஷ்ணா, சுகுணா, சுகந்தம், சுரோமா, ஆலப்புழா, விரலி மஞ்சள், ஐஐஎஸ்ஆர் பிரபா, ஐஐஎஸ்ஆர் பிரதீபா, ஐஐஎஸ்ஆர் அலப்பி சுப்ரீம் மற்றும் ஐஐஎஸ்ஆர் கெடாரம் ஆகிய இரகங்கள் உள்ளன. இதில் கோ 1, பிஎஸ்ஆர் 1, 2 ஆகியவை தமிழ் நாட்டு இரகங்கள் ஆகும்.

மஞ்சள் சாகுபடிக்கு வைகாசி முதல் ஆனி பட்டம் வரை சிறந்த பருவம் ஆகும்.

நல்ல வடிகால் வசதியுடைய செம்மண் மற்றும் இருமண்பாட்டு நிலம் மஞ்சள் சாகுபடிக்கு ஏற்றது.

முதலில் நிலத்தை களை இல்லாமல் குறுக்கு-நெடுக்காக இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது எக்டருக்கு 10 டன் மக்கிய தொழு உரம் இட்டு மண்ணுடன் நன்கு கலக்கவேண்டும். பின்பு, நான்கு அடி அகலத்துக்கு மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும். பாத்தியின் நீளத்தை இடத்துக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம்.

தாய் கிழங்கு மற்றும் விரலி கிழங்குகளை கொண்டு பயிர்ப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரு எக்டருக்கு 2000 கிலோ விதை கிழங்குகள் தேவைப்படுகின்றன.

விதைப்பதற்கு முன் விதை கிழங்குகளை எமிசான் மருந்து கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும். ஒரு கிராம் எமிசான் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து, அதில் விதை மஞ்சளை 10 நிமிடம் ஊறவைத்து, பின் நிழலில் உலர்த்தி விதைக்கவேண்டும். இதனால் கிழங்கு அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

நீரை நிலத்தில் பாய்ச்சி விதை மஞ்சளைப் பார்களின் ஓரத்தில் 15 முதல் 20 செ.மீ இடைவெளியில் 4 செ.மீ ஆழத்தில் நடவு செய்யவேண்டும்.

மஞ்சள் நடவுக்கு முன்பு, நடவு செய்த மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்சவேண்டும். பின்பு மண்ணின் தன்மைக்கேற்ப வாரம் ஒரு முறை நீர்ப்பாய்ச்சவேண்டும்.

200 கிலோ வேப்பம் () கடலை புண்ணாக்கு, 25:60:108 கிலோ NPK, 30 கிலோ பெரஸ் சல்பேட் மற்றும் 15 கிலோ ஜிங்க் சல்பேட், 10 கிலோ அசோஸ்பைரில்லம், 10 கிலோ பாஸ்போபாக்டீரியா போன்றவற்றை நடவின் போது இட வேண்டும்.

மேலுரமாக எக்டருக்கு 25:108 கிலோ தழை மற்றும் சாம்பல்சத்தினை நட்ட 30, 60, 120 மற்றும் 150வது நாளில் இட வேண்டும்.

நுண்ணூட்டச் சத்து கலவையை இலை வழி தெளிக்கவேண்டும். அதற்கு சூப்பர் பாஸ்பேட் 15 கிலோவை 25 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஒரு நாள் இரவு ஊறவைக்கவேண்டும். மறுநாள் காலை அந்நீரில் இரும்பு சல்பேட் 375 கிராம், துத்தநாக சல்பேட் 375 கிராம், போராக்ஸ் 375 கிராம், யூரியா 375 கிராம் சேர்த்து 250 லிட்டர் தண்ணீர் ஊற்றி, இலைகளின் மேல் தெளிக்கவேண்டும்.

நட்ட மூன்றாவது நாளில் பேஸலின் களைக்கொல்லி 2 லிட்டர் என்ற அளவில் தெளிக்கவேண்டும். நடவு செய்த 30வது நாளில் முதல் களையும், பின் 50, 120 மற்றும் 150 நாட்களிலும் களை எடுக்கவேண்டும். மேலுரம் இடும்போது மண் அணைக்கவேண்டும்.

பயிர் மஞ்சள் நிறமாக மாறுதல், சாய்தல், உலர்ந்துவிடுதல் போன்றவை அறுவடைக்கான அறிகுறியாகும். கிழங்குகளை மண்வெட்டி அல்லது குழிதோண்டும் கருவி கொண்டு தோண்டி எடுக்க வேண்டும்.

ஒரு எக்டருக்கு பதப்படுத்தப்படாத கிழங்குகள் 25-30 டன்கள் கிடைக்கும். பதப்படுத்தப்பட்ட கிழங்குகள் 5-6 டன்கள் வரை கிடைக்கும்.

வரப்பு ஓரங்களில் வெங்காயம் பயிர் செய்யலாம்.

கிழங்கு பாதுகாப்பு முறைகள்

கிழங்குகளை வேகவைக்க சாண நீர் பயன்படுத்தக் கூடாது. சுத்தமான நீரில் தான் வேக வைக்க வேண்டும். கிழங்குகளைச் சரியான அளவு வேகவைக்கவேண்டும். அதிகமாக வேகவைத்தால் நிறம் மங்கிவிடும். குறைவாக வேக வைத்தால் கிழங்குகள் காயும் போது நொறுங்கி உடைந்து விடும். நீர் கொதிக்க ஆரம்பித்த பின்னர் சுமார் 45 முதல் 60 நிமிடங்களில் கிழங்குகள் நன்றாக வெந்துவிடும். இதனை சில குறிப்புகள் மூலம் கண்டறிலாம். முதலாவது நல்ல மஞ்சள் வாசனை வீசும். இரண்டாவது நீர் கொதிக்கும் போது நுரை தள்ளும். மூன்றாவது கிழங்கினை இலேசாக அமுக்கும்போது நெகிழ்ந்து கொடுக்கும். நன்கு வெந்த கிழங்கினுள் சிறு குச்சியினை நுழைத்தால் அது எளிதில் உள்ளே செல்லும். மஞ்சளை உடைத்துப் பார்த்தால் உட்பாகம் ஆரஞ்சு நிறம் மாறி மஞ்சள் நிறமாக இருக்கும். இந்த சமயத்தில் கிழங்குகளை எடுத்து ஆறவிடவேண்டும்.

தூய்மையான தரையில் சூரிய வெப்பத்தில் காய வைக்கவேண்டும். மழையில் நனைய விடக்கூடாது. ஒவ்வொரு நாளும் மூன்று அல்லது நான்கு முறை கிளறி விட்டு சீராக காயவிடவேண்டும். தினமும் மாலையில் கிழங்குகளை ஒன்றாகக் குவித்து தார்பாலினால் மூடிவிடவேண்டும். சுமார் 10 அல்லது 15 நாட்களில் மஞ்சள் காய்ந்துவிடும். கிழங்குகள் உறுதியாக மாறிவிடும்.

காய்ந்த மஞ்சளைப் பெரிய உருளைகளில் போட்டு மெருகூட்டலாம். இந்த உருளைகள் கையாலோ அல்லது மின்சாரத்தாலோ சுற்றப்படுகின்றன. மெருகூட்டும் போது மஞ்சள் கிழங்குகளின் மீதுள்ள செதில்கள், சிறு வேர்கள் நீங்கி மேற்புறம் பளபளப்பும் மெருகும் சேர்க்கிறது. இவ்வாறு மெருகூட்டும் போது நிறமிடுதல் செய்யவேண்டும். நிற மூட்டுவதற்கு இரசாயனங்களையோ, இதர பொருட்களையோ பயன்படுத்தக் கூடாது. நல்ல சுத்தமான உலர்ந்த மஞ்சள் பொடியினைச் சேர்த்து நிறமூட்டலாம்.

பதப்படுத்தப்பட்ட மஞ்சளைப் பாலித்தீன் உட்கொடுக்கப்பட்ட கோணிச் சாக்குகளில் அடைக்கவேண்டும். ஈரமற்ற தரைகளில் வைக்கவேண்டும். அவற்றிலிருந்து சுமார் ஒரு அடிக்கும் கூடுதலாக இடைவெளி விட்டு மஞ்சள் சிப்பங்களை அடுக்கவேண்டும். எலி, அணில், பறவைகள் உள்ளே நுழைய விடக்கூடாது. அவ்வப்போது சிப்பங்களை சூரிய வெளிச்சத்தில் காட்டுவதால் மஞ்சளின் சேமிப்பைக் கூட்ட முடியும். பூச்சி மருந்துகளை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.

மஞ்சள் பயன்கள்

மஞ்சள், வேப்பிலை ஆகியவற்றைச் சம எடையாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப் போட்டு வந்தால் அம்மை கொப்புளங்கள், சேற்றுப் புண் ஆகியவை குணமாகும்.

மஞ்சளைச் சுட்டு புகையை நுகர்ந்தால் தலைநீரேற்றம், மூக்கடைப்பு குணமாகும்.

மஞ்சளை அரைத்து, இரவில் முகத்தில் பூசி காலையில் கழுவி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடி உதிரும். இது ஒரு பாரம்பரிய முறையாக நமது மருத்துவத்தில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது.

சளியினால் தொண்டை அடைப்பு ஏற்பட்டால் தேனுடன் மஞ்சள் தூள் கலந்து காலையும் மாலையும் இரண்டு வேளை சாப்பிட்டால் சளி அடைப்பு சரியாகி விடும்.

சளித் தொல்லையில் இருந்து விடுபட நன்றாக காய்ச்சிய பாலில் மஞ்சள் தூள் கலந்து சாப்பிட வேண்டும்.

மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாகும்.

மரவள்ளி கிழங்கு 

மரவள்ளி கிழங்கு குச்சிக் கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு, மரச்சினி கிழங்கு எனக் கூறுவார்கள்.


தென் அமெரிக்காவையும், மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்ட இச்செடி இன்று ஆப்பிரிக்காவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.

மரவள்ளி கிழங்கு இந்தியாவில் 17-ஆம் நூற்றாண்டில் போர்துகீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைசீரியாவே இன்று உலகின் மிகப்பெரிய மரவள்ளி உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது.

வெப்பவலய, துணைவெப்பவலயப் பகுதிகளில் ஆண்டுப் பயிராகப் பயிரிடப்படும் மரவள்ளியிலிருந்து உணவுக்குப் பயன்படக்கூடிய கிழங்கு பெறப்படுகின்றது.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள்

கோ 2, முள்ளுவாடி, தாய்லாந்து, பர்மா, குங்குமரோஸ், எச் 226, ஏத்தாப்பூர் 1 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

பருவம்

பாசனவசதி இருந்தால் வருடம் முழுவதும் எந்த மாதத்திலும் நடவு செய்யலாம். மானாவாரியில் செப்டம்பர்அக்டோபர் மாதம் நடவு செய்ய வேண்டும்.

மண்

செம்மண், கரிசல் மண் சாகுபடிக்கு ஏற்றது. மண்ணில் தழைச்சத்து அதிகம் இருக்கவேண்டும். களிமண், வண்டல் மண்ணில் சாகுபடி செய்ய இயலாது. நல்ல காற்றோட்ட வசதியும், தண்ணீர் தேங்காமலும் இருக்கவேண்டும். மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 7.0க்குள் இருக்க வேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று தடவைகள் நன்றாக உழுது பண்படுத்தவேண்டும். கடைசி உழவின்போது 25 டன் தொழுஉரம் இட்டு மண்ணுடன் நன்கு கலக்கச் செய்யவேண்டும். பிறகு 75 செ.மீ இடைவெளியில் பார் அமைக்க வேண்டும்.

விதையளவு

ஒரு எக்டருக்கு 1900-2500 கிலோ கிழங்குகள் நடுவதற்கு தேவைப்படும்.

விதைநேர்த்தி

ஒவ்வொரு கரணையும் அரை அடி நீளத்துடன் 8-10 கணுக்களுடன் இருப்பது நல்லது. விதைக்கரணைகளை பூசண மருந்துக் கரைசலில் ஊற வைத்து நடவு செய்வதால் நோய் தாக்குதலைத் தடுக்கலாம். மானாவாரி மற்றும் பாசனப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வறட்சியைத் தாங்கும் விதமாக ஊட்டச்சத்துக் கரைசலில் கரணை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைத்தல்

பாசன சாகுபடிக்கு இரண்டரை அடி இடைவெளியில் பார்பிடித்து அதே அளவு இடைவெளியில் பாரில் வரிசையாக நடவு செய்ய வேண்டும். வளமான நிலங்களுக்கு 3X3 இடைவெளி போதுமானது. மானாவாரியில் 2X2 இடைவெளிப் பார்கள் அமைத்து நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நடவின்போது முதல் பாசனமும், மூன்றாவது நாள் உயிர்தண்ணீரும் விடவேண்டும். அதன் பிறகு 3 மாதங்கள் வரை 7 முதல் 10 நாள் இடைவெளியில் பாசனம் செய்ய வேண்டும். அதற்கு மேல் 8 வது மாதம் வரை 20 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதுமானது. சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பது மிகச் சிறந்த யுக்தியாகும். இதனால் நீர் சேமிக்கப்படும்.

உரங்கள்

ஒரு எக்டருக்கு 4 கிலோ அசோஸ்பைரில்லம் 40 கிலோ மணலுடன் கலந்து நடவு செய்த 30வது நாளில் இடவேண்டும். ஒரு எக்டருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே 80:225:160 கிலோ தேவைப்படும். இவற்றில் அடியுரமாக ஏக்கருக்கு 40 கிலோ யூரியா, 225 கிலோ சூப்பர் பாஸ்பேட், 80 கிலோ பொட்டாஷ் உரங்களை இட வேண்டும். அடியுரமாக ஏக்கருக்கு 100 கிலோ ஜிப்சம் இட வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

நடவு செய்து 20வது நாள் முதல் களை எடுக்க வேண்டும். அப்பொழுது முளைக்காத கரணைகளுக்கு பதில் புதிய கரணைகளை நடவு செய்து விடவேண்டும். பிறகு 3ம் மாதம் களை எடுத்து மண் அணைக்க வேண்டும்.

நட்டு 60-வது நாளில் செடிக்கு இரண்டு கிளைப்புகளை மட்டும் விட்டுவிட்டு மீதியை அகற்றி விடவேண்டும்.

பயிர் பாதுகாப்பு
வெள்ளை

வெள்ளை மரவள்ளியைத் தாக்கும் முக்கியமான பூச்சியாகும். மேலும் மாவுப்பூச்சி, சிவப்பு சிலந்தி பேன் ஆகியவையும் மரவள்ளியை தாக்கும். இதற்கு 5% வேப்பங்கொட்டைச் சாறு (100 லிட்டர் தண்ணீருக்கு 5 கிலோ வேப்பங்கொட்டை பொடி) தெளிக்கலாம். இதனால் வெள்ளை கட்டுப்படுத்தப்படும் அல்லது ஒரு ஏக்கருக்கு அசிரோபேகஸ் பப்பாயே என்ற ஒட்டுண்ணியை 100 என்ற எண்ணிக்கையில் விட வேண்டும்.

அறுவடை

இலைகள் மஞ்சள் நிறம் கலந்த பழுப்பு நிறமாகி உதிர ஆரம்பிக்கும். நிலத்தில் வெடிப்புகள் உண்டாகும். இவையே அறுவடைக்கான அறிகுறியாகும்.

மகசூல்

240 நாட்களில் எக்டருக்கு 15-20 டன் கிழங்குகள் வரை கிடைக்கும்.

ஊடுபயிர்

வரப்பு ஓரங்களில் ஆமணக்கு, துவரை ஆகியவற்றை பயிர் செய்யலாம்.

பயன்கள்

இத்தாவர கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருள் பருத்தி மற்றும் சணல் ஆடைகள் தயாரிப்பிலும், காகிதம் மற்றும் கடினமான அட்டைகள் தயாரிப்பிலும் பயன்படுகின்றது.

இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க பயன்படுகிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

இதிலுள்ள நார்ச்சத்தானது இதய நோய்கள், பெருங்குடல் மற்றும் புற்றுநோய் ஆபத்துகளை குறைப்பதுடன் நீரழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

இக்கிழங்குகள் உட்கொள்வதால் கர்ப்ப காலத்தில் குழந்தைகளுக்கு பிறவி ஊனம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.

வாரம் ஒரு முறையாவது ஏதாவது விதத்தில் மரவள்ளிக் கிழங்கை சேர்த்துக் கொண்டால் எலும்பின் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கலாம்.

சட்டிக்கரனை-- சேனைக்கிழங்கு

 சேனைக்கிழங்கு இதனை பெரிய கரணை என்றும் கூறுவார்கள்.

ஏனெனில் இதன் செடியும், இலைகளும் கருணைக்கிழங்குக்கு உள்ளது போலவே இருக்கும்.


சேனைக்கிழங்குச் செடி ஒன்றரை மீட்டர் உயரம் வளரும், ஒன்பது மாதப் பயிராகும்.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள்

இதில் இரண்டு வகைகள் உண்டு.

மிருதுவான கிழங்கு :

இது மிகுந்த காரம் உடையது. சாப்பிடும் போது வாய், தொண்டை முதலியவற்றில் ஒரு வித அரிப்பு ஏற்படும். ஆனால் அதிக மகசூல் கொடுக்கவல்லது.

கெட்டியான கிழங்கு :

இவ்வகை கிழங்குகள் கெட்டியானவை. இதில் காரத்தன்மை கிடையாது. சதையின் நிறம் வெள்ளையாக அல்லது இளம் சிவப்பாக இருக்கும்.

பருவம்

மாசிபங்குனி மாதங்கள் சாகுபடிக்கு ஏற்ற பருவம் ஆகும்.

மண்

தண்ணீர் தேங்காத செம்மண் மற்றும் இரு மண்பாங்கான மண் வகைகள் சாகுபடிக்கு ஏற்றவை. மண்ணின் கார அமிலத் தன்மை 5.5 முதல் 6.5 வரை இருத்தல் நல்லது.

நிலம் தயாரித்தல்

சேனைக்கிழங்கு நடவு செய்வதற்கு முன்பு, நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக உழுது பின்பு 75 செ.மீ இடைவெளியில் ஒன்றரை அடி ஆழம், அகலம், நீளத்தில் குழி எடுக்க வேண்டும். அதன்பின் குழிகளில் நன்கு மக்கிய தொழு உரம் இட்டு நடவுக்கு தயார் செய்ய வேண்டும்.

விதையளவு

சேனைக்கிழங்கு பொதுவாக கிழங்குகள் மூலமாகவே இனவிருத்தி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 1,400 கிலோ விதைக்கிழங்குகள் தேவைப்படும்.

விதைத்தல்

நடவுக்கு பெரிய கிழங்குகளை சிறுசிறு துண்டுகளாகவோ அல்லது முளைவுடன் கூடிய கிழங்குகளாகவோ பயன்படுத்தலாம். தேர்வு செய்த கிழங்குகளை பூஞ்சாண மருந்துக் கலவையில் கலக்கி எடுத்து, குழியின் நடுவில் 20 செ.மீ ஆழத்தில் ஊன்ற வேண்டும்.

நீர் நிர்வாகம்

நடவு செய்தவுடன் தண்ணீர் விட வேண்டும். பின்பு மூன்றாவது நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின்பு ஒருவார இடைவெளியில் மண்ணின் ஈரப்பதத்தை பொறுத்து நீர்ப்பாய்ச்ச வேண்டும். காய்ந்த இலைகளை பயன்படுத்தி நிலப்போர்வை அமைப்பதால் மண்ணின் ஈரப்பதம் காப்பதோடு, கிழங்கிலிருந்து துளிர்விடுவதும் அதிகரிக்கப்படுகிறது.

உரங்கள்

நடுவதற்கு முன்பு ஒரு எக்டருக்கு 40 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து மற்றும் 100 கிலோ சாம்பல்சத்துக்களை அடியுரமாக இட வேண்டும். இரண்டு மாதத்திற்கு பிறகு மேலுரமாக 40 கிலோ தழைச்சத்தினை இட்டு மண் அணைக்க வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

இரண்டு மாத இடைவெளியில் களைகள் எடுத்து வயலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு
கழுத்து அழுகல் நோய்

சேனைக்கிழங்கில் கழுத்து அழுகல் நோய் காணப்படும். அதனை கட்டுப்படுத்த 2 கிராம் காப்டான் என்ற மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணில் ஊற்ற வேண்டும். இவ்வாறு மண்ணில் ஊற்றுவதால் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.

அறுவடை

சேனைக்கிழங்கு நட்டு 7 முதல் பத்து மாதங்கள் கழித்து அறுவடைக்கு தயாராகிவிடும். கிழங்கு முற்றிய செடியில் இலைகள் மஞ்சளாக மாறி கீழே தொங்கிவிடும். கிழங்குகள் முதிர்ச்சியடைந்தவுடன் வெட்டி எடுத்து சுத்தப்படுத்தி காற்றோட்டமுள்ள அறைகளில் வைக்க வேண்டும். கிழங்குகளை நீண்ட நாட்களுக்கு கெடாமல் பராமரிக்க முடியும்.

மகசூல்

நன்கு பராமரிக்கப்பட்ட நிலத்தில் ஒரு எக்டருக்கு 60 டன் முதல் 80 டன் வரை மகசூல் கிடைக்கும்.

சேனைக்கிழங்கு பயன்கள்

இதில் மாவு மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. அத்துடன் வைட்டமின்களும் உள்ளன.

100 கிராம் கிழங்கில் 330 கலோரி சக்தி கிடைக்கிறது. மேலும், சேனையில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் அதிகம் உள்ளன.

கீல்வாதம், நீரிழிவு, தொழுநோய், மூலநோய், உடம்பு வறட்சி, உடல் பலவீனம், ஆஸ்துமா முதலியவற்றை இக்கிழங்கு குணமாக்குகிறது. இது உடலை வலுவடையச் செய்யும்.

இக்கிழங்கினை உட்கொண்டால் உணவு செரிமானம் ஆகி நன்கு பசி எடுக்கும்.

இதில் உள்ள கால்சியச்சத்து வயதானவர்களின் எலும்பு பலவீனமடைந்து விடாதபடி பாதுகாக்கிறது. பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் முதலியவற்றையும் இது குணமாக்குகிறது.

 

 பலா

பலாமரத்தின் தாயகம் தென்கிழக்கு ஆசியாவாகும். பலா பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. வெப்ப நாடுகளில் நன்கு வளரும் இயல்பை உடையது. முக்கனிகளுள் ஒன்றான பலாப்பழம், மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழமாகும்.


பலா மரமானது இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில் வளர்கிறது. தமிழ்நாட்டில் நீலகிரி, கீழ்ப்பழனிமலை, வயநாடு, குற்றாலம், ஆனைமலை, கொல்லிமலை பகுதிகளில் விளைகிறது.

பயிரிடுவது எப்படி:

ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரை நடவு செய்யலாம்.

வண்டல் செம்மண்ணில் பலா சிறப்பாக விளையும் . ஆனால் நிலம் அழமாகவும், நல்ல வடிகால் வசதி உள்ளதாகவும் இருக்க வேண்டும்.

நிலத்தை நன்றாக உழுது பின்பு 1 மிட்டர் அகலம், 1 மிட்டர் அழம் உள்ள குழிகளை எடுக்க வேண்டும். பின்பு ஒவ்வெரு குழிகளிலும் செடிகள் நடுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு நடவுக் குழியில் 75% தொழுஉரம் , 15% மண்புழு, 5% செம்மண் 5% வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றறைக் கலந்து குழியை நிரப்பி, லேசாக தண்ணிர் ஊற்றி ஆற விடவேண்டும்.

விதை முலம் உற்பத்தி செய்த கன்றை, நல்ல காய்ப்புள்ள தாய்மரத்தில் ஒட்டுக் கட்டி, நடவு செய்ய வேண்டும்.

ஒரு மாதம் வரை வாரம் இரு முறையும், அதன் பிறகு வாரம் ஒரு முறையும் தண்ணிர் கொடுக்க வேண்டும். இரண்டாவது ஆண்டு, 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணிர் கொடுத்தால் போதுமானது. மூன்றாம் ஆண்டு, கடும்கோடையாக இருந்தால் மட்டுமே தண்ணிர் தர வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் பருவ மழையே போதும் தண்ணிர் பாய்ச்ச வேண்டியதில்லை.

மரம் ஒன்றிற்கு ஒரு வருடத்திற்கு தொழுஉரம் 10 கிலோ , தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து கலந்து 1 கிலோ கொடுக்க வேண்டும். வருட வருடம் ஒரு மடங்கு சேர்த்து கொடுக்க வேண்டும். ஆறு வருடங்களுக்கு பிறகு ஒவ்வொரு மரத்திற்கும் 50 கிலோ அளவு தொழு உரமும் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து கலந்து 2 கிலோ அளவும் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்களை மே, ஜூன் மாதங்களில் ஒரு முறையும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஒரு முறை என இரண்டு முறை பிரித்து இட வேண்டும்.

செடிகள் வளரும் வரை களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மரங்களுக்கு நன்கு சூரிய ஒளி கிடைக்குமாறு பக்கவாட்டு கிளைகளை வெட்டி பராமரிக்க வேண்டும்.

ஒரு கொத்தில் இரண்டு காய்கள் மட்டும் இருந்தால் தான் நல்ல தரமான பெரிய பழங்கள் கிடைக்கும். அதனால் கொத்துக்கு இரண்டு காய்களை மட்டும் விட்டுவிட்டு கூடுதலாக உள்ள பிஞ்சுகளை அகற்றிவிட வேண்டும்.

விதைகள் மூலம் வளர்ந்த செடிகள் 8 வருடங்களில் காப்புக்கு வரும். ஆனால் ஒட்டு கட்டப்பட்ட செடிகள் ஐந்து வருடங்களில் காய்க்க தொடங்கும். காயில் உள்ள முள்ளை வெட்டி பார்த்தால் தண்ணீர் போன்ற திரவம் வர வேண்டும். அப்பொழுதுதான் அந்த காய் அறுவடைக்கு தயாரான காய், பால் போன்ற திரவம் வந்தால் அந்த காயை பறிக்க கூடாது. காயில் உள்ள முட்கள் நன்கு அகன்று விரிந்து இருக்கும் நிலையை அடைந்த பின் அறுவடை செய்யலாம்.

ஒரு வருடத்தில் ஒரு ஏக்கரில் இருந்து 40 டன் பலன்களை பெறலாம். ஊடு பயிராக உளுந்து, பச்சைப்பயிறு ஆகியவற்றை பயிரிடலாம்.

பயன்கள் :

பலாச்சுளைகளை தேனில் நனைத்து சாப்பிட்டால் நன்கு ஜீரணமாகும்.

பலாக்கொட்டை நல்லதொரு உணவாகும். இதன் கொட்டைகளை மாவாக்கி உணவாக உண்ணலாம்.

கார்போஹைட்ரெட், பொட்டாசியம், கால்சியம், புரதசத்து ஆகிய சத்துக்கள் பலாப்பழத்தில் உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி பலாப்பழத்திற்கு உண்டு.

பலா இலையின் கொழுந்தை அரைத்து சிரங்கின் மீது பூசினால் சிரங்கு விரைவில் ஆறும்.

பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது. நார்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்துக்கு உதவுகிறது. வைட்டமின் A , B , C , கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்க வல்லது.

பலாப்பிஞ்சினை சமைத்து உண்டா  


கோழி வளர்ப்பு 

நாட்டுக்கோழி, வான்கோழி, கின்னிக்கோழி, சேவல், வாத்து போன்ற பல்வேறு கால்ந

 


நாட்டுக்கோழி வளர்ப்பதை, நாகரிகம் கருதி கைவிட்டவர்கள்கூட இன்றைக்குப் போட்டி போட்டுக் கொண்டு வளர்ப்பதற்குக் காரணம், அதில் கிடைக்கும் வருமானம்தான். கணினியின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள்கூட பொழுதுபோக்காக _ பகுதிநேர வேலையாக நாட்டுக்கோழி, வான்கோழி, கின்னிக்கோழி, சேவல், வாத்து போன்ற பல்வேறு கால்நடைகளை வளர்த்து விற்பனை செய்பவர்களும் உண்டு. உலக அளவிலான பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க, இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் புறக்கடை முறையில் கோழிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.

அதிலும், நாட்டுக்கோழி வளர்ப்பில் நல்ல பலனைக் காண்போர் அதிகம். நாட்டுக்கோழி வகைகள், கோழி வளர்ப்பு முறைகள், கோழிக்குஞ்சுகளை உற்பத்தி செய்யும் முறை, கோழிகளுக்கும் குஞ்சுகளுக்குமான தீவன முறைகள், அலங்காரக்கோழிகளின் மூலம் அதிக வருவாய் பெறும் முறைகள், புறக்கடைக் கோழி வளர்ப்பில் அமெரிக்க முறை… என கோழி வளர்ப்பில் உள்ள ஏராளமான செயல்முறைகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஜி.பிரபு. 

கால்நடை மருத்துவர்கள், கோழிப் பண்ணை முதலீட்டாளர்கள்… என பல்வேறு நிபுணர்களின் கோழி வளர்ப்பு அனுபவம் மற்றும் மருத்துவம் குறித்தக் கருத்துகளும், வருமானம் ஈட்டக்கூடிய வழிமுறைகளும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு உள்ளன. ‘கையில எப்பவும் பணம் புழங்கிக்கிட்டே இருக்கணும்’ என்று நினைப்பவர்களுக்கு, நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில் நிச்சயம் கை கொடுக்கும்.

 செம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும் 


  1. செம்மறியாடுகளுக்கு வெள்ளாடு வகைகளுக்கு அமைப்பது போல விலை அதிகம் செலவு செய்து எந்த விதமான பெரும் கொட்டகை அமைக்க வேண்டியது இல்லை .
  2. குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்தே பராமரித்து கொள்ள இயலும்.
  3. செம்மறி ஆட்டு பண்ணை அமைக்க மிகவும் குறைந்த அடிப்படை செலவுகள் போதுமானது .
  4. சிறிய அளவில் தொடங்கி அதிலிருந்து செம்மறியாடு எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.
  5. செம்மறியாடு நமக்கு இறைச்சியை கொடுக்கிறது. மேலும் சில வகை செம்மறி ஆடுகள் நாம் உடுத்த தேவையான உல்லன் நூல் உருவாக்க தேவையான ரோமத்தையும் தருகிறது.
  6. இவை பெரும்பாலும் வேருடன் உண்டு விடுவதால் நிலத்தில் களைகள் கட்டுப்படுத்த படுகிறது .
  7. மேய்ச்சல் முறையில் பல வகையான செடிகளை உண்டு வளருகின்றன.அதனால் நமக்கு இன்றல்ல இறைச்சி கிடைக்கிறது .இதன் காரணமானாக நமது நாட்டில் பலருக்கு ஆட்டுக்கறி விரும்பி உண்பதால் வேலைவாய்ப்பும் வருமானமும் கிடைக்கிறது .
  8. இவ்வாறு வளர்த்தப்பதால் நமக்கு பல நன்மைகளுடன் வருமானம் தருகிறது.
  9. நிலத்திற்கு தேவையான உரமும் கிடக்கிறது .ஆட்டு கிடை போடுவதால் நிலமும் நல்ல வளமடைகிறது .
  10. அறுவடை காலங்களில் சிதறும் தானியங்கள் நாம் எடுக்க முடியாமல் சென்றாலும் இந்த வகை செம்மறி ஆடுகள் கொண்டுள்ள உதட்டு அமைப்பின் மூலம் அதனை உண்டு விடுகிறது .அதற்க்கு தீவனமும் ஆச்சு , குடவே நல்ல உரமும் ஆச்சு .
  11. செம்மறியாட்டுக் குட்டி வளர  ஒரு வருடம் அதாவது 12 மாதம் ஆகும்.

  12. வெள்ளாடு வளர்ப்பு

  13. நம் நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள்நிலமற்றவர்களின் பொருளாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்படுத்துவதில்

  14. வெள்ளாடு ஒரு முக்கியமான அங்கமாக விளங்குகிறதுஊரகப்பகுதிகளில் உள்ள பெரிய அளவிலான மக்களுக்கு வெள்ளாடு வளர்ப்பு என்பது ஒரு லாபகரமான தொழிலாக உள்ளது

  15. மிகவும் வளம் குன்றிய பகுதிகளில் உள்ள மோசமான சூழ்நிலையில் வளரும் செடிகள்  மற்றும் மரங்களை கொண்டு ஆடுகளை வளர்க்கலாம்இந்தியாவில் உள்ள மேய்ச்சல் மற்றும் வேளாண் சங்கங்கள்வெள்ளாடுகள் கூடுதல் வருமானம் தரக்கூடிய ஆதாரமாகவும்பேரழிவுகளுக்கு எதிராக காப்பீடு செய்யவும் முடியும் ஒரு ஆதாரமாக இருக்கிறது என்று கூறியுள்ளதுதிருவிழாக் காலங்களில் கடவுள் முன்பலி கொடுக்க ஆடுகள் பயன்படுத்தப் படுகின்றனமேலும்வெள்ளாடுகள் பலசமூகங்களில் மத ரீதியாக மிகவும் முக்கியத்துவம் தரப்படுகிறது.
  16. வெள்ளாடுகள் வளர்ப்பிற்கான நன்மைகள்

    வெள்ளாடு வளாப்புக்கு ஆரம்ப முதலீடு மிகவும் குறைவு.

    சிறிய உடலமைப்புமந்தமான இயல்பு கொண்டவையால்கொட்டில் அமைக்க தேவைப்படுகிறவையும்பராமரிக்கும் சிக்கல்களும் குறைவு.

    வெள்ளாடுகள் மக்களுடன் நண்பனாக உள்ள விலங்காக இருக்கிறது.

    வெள்ளாடுகள் தன் இனங்களை விரைவில் இன விருத்தி செய்யக் கூடியவைவெள்ளாடுகளின் தாய்மைக் காலம் 10-12 மாதத்தில் தொடங்கி, 16-17 மாதங்களில் பால் தர தயாராகின்றன.

    வறட்சி நிலவும் பகுதிகளில்வெள்ளாடு வளர்ப்பு என்பது பிரச்னைகள் குறைவான ஒரு பண்ணைசார் தொழிலாக விளங்குகிறது.

    வணிக ரீதியாக உள்ள பண்ணைகளில்ஆண் மற்றும் பெண் ஆடுகள் இரண்டும் சரிசம மதிப்பு கொண்டவை.

    பல தரப்பட்ட புற்களை மேய வெள்ளாடுகள் தான் மிகவும் ஏற்றதுஇவை பலதரப்பட்ட முட்களுடைய புதர்ச் செடிகள்களைகள்பயிர்க் குப்பைகள்மனித உணவிற்கும் போக உள்ள வேளாண் உபரி பொருட்கள் போன்றவைகளை உண்டே உயிர் வாழக் கூடியவை.

    சரியான பராமரிப்பு கொண்ட பண்ணைகளில்வெள்ளாடுகள் சரியான அளவில் புற்களை மேய்ந்துசுற்றப்புற சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு இருக்கச் செய்கிறது.

    ஆடுகளை வெட்டிஇறைச்சிக்குப் பயன்படுத்துவதில்எந்த வித சமூகத்தின் எதிர்ப்போ (தடையோ நம்நாட்டில் இல்லை.

    சுற்றுப்புற சூழலுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாதவாறு ஆடு வெட்டுதல் மற்றும் சுத்தம் செய்தல்இறைச்சியை கொண்டு செல்லுதல் , ஆகிய செயல்கள் நடைபெறுகிறது.

    வெள்ளாட்டு இறைச்சி குறைந்த கொழுப்பு கொண்டதுவெயில் காலங்களில் குறைந்த அளவு சக்தி அளிக்கும் உணவாக மக்கள் விரும்புகிறார்கள்சில சமயங்களில்  அதிக மென்று உண்ணும் தன்மையை கொண்டு இருப்பதால் (ஆட்டு இறைச்சி செம்மறியாட்டு இறைச்சியை விடமக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது.

    வெள்ளாட்டுப் பால் எளிதில் ஜீரணமாகக் கூடியது.

    வெள்ளாட்டுப் பால் சாப்பிடும் உணவு மற்றும் ஜீரணச் சக்தியை அதிகப்படுத்துகிறதுபசும்பாலை விட வெள்ளாட்டுப்பால் அலர்ஜி எதுவும் தராதுஇதில் பூஞ்சைக்கு எதிராகவும்பாக்டீரியாவுக்கு எதிராகவும் உள்ள நன்மைகள் இருப்பதால் பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

    பகுதி வறண்ட நிலப்பகுதிகளில் செம்மறியாட்டை விட வெள்ளாடுகள் 2.5 அளவு அதகிமாக புற்களை உண்கின்றன.

    ஊரகப் பகுதிகளில் வாழும் ஏழைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.

    வெள்ளாடுகள் ஒரு நடமாடும் குளிர்ப்பதனப் பெட்டி என்று அழைக்கப்படுகிறதுஒரு நாளில் அதிகளவு பால் தருபவையாகவும்சேமித்து வைக்கவும் முடிகிறது.

    வெள்ளாட்டு வளர்ப்பிற்கான வழிமுறைகள்

    கொட்டில் மேலாண்மை

    தரையிலிருந்து சற்றே உயரமானஉலர்வான இடத்தில்கொட்டில் அமைக்கப்படும்.

    நீர் தேங்காதசொத சொதப்பான பகதிகளைத் தவிர்க்க வேண்டும்.

    தாழ்வான மற்றும் அதிக மழை பொழியும் பகுதிகளில்தரைப் பகுதி சற்றே உயர்வாக இருக்க வேண்டும்.

    குளிர்வான ஹிமாலாய பகுதிகளில் கொட்டிலின் தரைப்பகுதி மரத்தினால் அமைப்பது நல்லது

    கொட்டிலானது 10 அடி உயரத்தில் மற்றும் நல்ல காற்றோட்ட வசதி கொண்டதாக இருக்க வேண்டும்.

    ஆண் ஆடுகளை தனியாகக் கொட்டிலில் வைக்க வேண்டும்.

    பெண் ஆடுகளை குழுவாகஒரு கொட்டிலில் 60 என்ற அளவில் வைக்கலாம்.

    வெயில் காலங்களில் நிழலும்குளிர்ந்த நீரும் சரியான அளவில் தர வேண்டும்.

    ஆட்டுப் புழுக்கை மற்றும் சிறு நீரை சரியானபடி அகற்ற வேண்டும்.

    எல்லா ஆடுகளுக்கும் போதுமான அளவு இடம் ஒதுக்கித் தர வேண்டும்.

    அதிகப்படியான ஆடுகளை ஒரு கொட்டிலில் அடைக்கக் கூடாது.

    வெள்ளாட்டு இனங்களை தேர்வு செய்தல் மற்றும் அதன் மேலாண்மை

    வங்கி கடன் கிடைத்தவுடனேயே நல்ல நிலைமையில் சிறப்பாக உள்ள இனங்களை வாங்க வேண்டும்.

    நல்ல ஆரோக்கியத்துடன்நல்ல உடற்கட்டுன் உள்ள வெள்ளாடுகளை கால்நடை மருத்துவர் / வங்கி தொழில்நுட்ப அலுவலர் ஆலோசனை பெற்று வாங்க வேண்டும்.

    நல்ல இனவிருத்தி செய்யக் கூடிய தயார் நிலையில் உள்ள ஆடுகளை வாங்க வேண்டும்.

    புதிதாக வாங்கிய ஆடுகளை குறிப்பிட்ட அடையாளக் குறியிட வேண்டும்.

    புதிதாக வாங்கிய ஆடுகளுக்கு நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போட வேண்டும்.

    புதிதாக வாங்கிய ஆடுகளை தனியே 15 நாட்கள் கண்காணிப்பில் வைத்திருந்துபின் கொட்டிலில் அடைக்க வேண்டும்.

    எதற்கும் பயன்படாத ஆடுகளை சரியாக கணித்து அகற்ற வேண்டும்அதற்குப் பதிலாக புதிதாக ஆடுகள் வாங்கி கொட்டிலில் அடைக்க வேண்டும்.

    அதிக உற்பத்திக்காக ஆடுகளை 8-9 மாத இடைவெளியில் இனவிருத்தி செய்யலாம்.

    வருடம் மற்றும் அதற்கு மேலாண வயதுடைய ஆடுகளை அகற்றிவிட வேண்டும்.

    வெயில் மற்றும் குளிர் காலங்களில் குட்டியிடுவதை தவிர்க்க வேண்டும்.

    தீவன மேலாண்மை

    மேய்ச்சலுக்கு புதர்ச்செடி / சிறுசெடிகளை பராமரிக்க வேண்டும்.

    தங்களுடைய பண்ணையிலிருந்து (சுற்றியிருக்கும் பண்ணையிலிருந்து பயிரிடப்பட்ட தீவனபயிர்களை மாற்றாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    நார்த்தீவனம் மூலம் 2/3 பகுதி என்ற அளவில் ஆடுகளுக்கு அளிக்க வேண்டும்நார்த்தீவனத்தின் பகுதி பயிறுவகையைச் சேர்ந்த பசும்தீவனமாகவும்பகுதி புற்கள் /இளம் பசும் இலைகளாகவும்  அளிக்கலாம்.

    நல்ல தரமான பசும் தீவனங்கள் கிடைக்காத பொழுதுஅடர்தீவனங்களை மாற்றாக அளிக்கலாம்.

    வயதுடைய குட்டிகளுக்கு கொலஸ்ட்ரம் தரலாம்பின் குட்டிகளுக்கு ஆரம்ப உணவு அளிக்கலாம்.

    பயிறு வகையைச் சேர்ந்த பசும்தீவனத்தை 15 நாட்கள் முதல் தரலாம்.

    எல்லா நேரங்களிலும் உப்பு கலந்த நீரை குட்டிகளுக்குத் தரலாம்.

    இனப்பெருக்க காலத்தின் போதுபெண் மற்றும் ஆண் ஆடுகளுக்கு கூடுதல் அடர்தீவனம் தரவேண்டும்.

    பரிந்துரைக்கப்பட்ட படிஊட்டச் சத்து தேவைகளை அளிப்பதில்  மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு தருதல்

    குறைந்த அளவு உணவு எடுத்துக் கொள்ளுதல்அசாதாரணமாக நடந்து கொள்ளுதல் போன்றவை எல்லாம் ஆடுகள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதற்கான அறிகுறிகளாகும்அதைக் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

    ஏதாவது உடல்நிலை சாயில்லாதவாறு தெரிந்தால்உடனடியாக கால்நடை மருத்துவரின் உதவியை நாடவேண்டும்.

    நோய்கள் எதுவும் தாக்காதவாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

    ஏதும் பெரிய அளவில் நோய் தென்பட்டால்மற்ற ஆடுகளிடமிருந்து தனித்து வைத்திருக்க வேண்டும்.

    ஆடுகளுக்கு வயிறை சுத்தம் செய்யும் மருந்தை சீராக தந்து கவனிக்க வேண்டும்.

    சுத்தமானமாசுபடாத உணவு மற்றும் நீரை தர வேண்டும்.

    தடுப்பூசி மருந்து அட்டவணைப்படி பரிந்துரைக்கப்பட்டவைகளை போட வேண்டும்.

    இனவிருத்தியின் போது கவனித்தல்

    வருட காலங்களில் 3 குட்டிகளை இடுமாறு திட்டமிட்டப்படி சூழ்நிலைகளை உருவாக்கித் தரவேண்டும்.

    25  பெண் ஆடுகளுக்கு ஒரு ஆண் ஆடு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இனவிருத்தி செய்ய முடியாத ஆடுகளைக் கண்டறிந்துமருத்துவரின் ஆலோசனைப்படி அகற்றிவிட வேண்டும்.

    கர்ப்பக்கால கவனிப்பு

    கர்ப்பக்காலத்தின் முன்னேற்றக் காலத்தில்பெண் ஆடுகளை பிரசவிக்கும் கொட்டில் அல்லது கொட்டிலிலேயே அதற்கென ஒரு இடம் ஒதுக்கி வைக்க வேண்டும்குட்டி பிறந்தவுடன் 2 நாட்களுக்குபெண் ஆடுகளுக்கு இளம் சூடான உமித்தூள் பரப்பி வைத்திருக்க வேண்டும்.

    குட்டிகளை கவனித்தல்

    புதிதாகப் பிறந்த குட்டிகளை அதிகக் கவனிப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    நஞ்சுக் கொடியை அகற்றிய இடத்தில் அயோடின் கொண்டு தடவ வேண்டும்.

    முதல் 2 மாதங்களுக்குகுட்டிகளை மோசமான காலநிலைகளிலிருந்து பாதுகாத்து வைக்க வேண்டும்.

    முதல் 2 வாரங்களுக்கு குட்டிகளுக்கு கொம்பை அகற்ற வேண்டும்.

    நல்ல மட்டன் உற்பத்திக்காக ஆண் குட்டிகளுக்கு விறைநீக்கம் செய்ய வேண்டும்.

    பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவணைப்படி குட்டிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.

    வாரம் இருக்கும் போது குட்டிகளை பால்குடி மறக்க செய்ய வேண்டும்.

    சந்தைப்படுத்துதல்

    சதைப்புள்ளகுண்டான குட்டி ஆடுகள்அதனுடைய புழுக்கைவளர்ந்த ஆடுகளை விற்பனை செய்யலாம்ஆடு வெட்டுமிடம்தனிப்பட்ட இறைச்சி உண்ணும் நபர்கள் இருக்கும் இடங்கள்வேளாண் பண்ணைகளில் இவற்றை விற்கலாம்அதனால் ஆடு வெட்டுமிடம் வசதிஅல்லது உயிருடன் உள்ள ஆடுகளை வாங்கும் வியாபாரிகள் உள்ள இடத்தில் விற்கலாம்வேளாண் பண்ணைகளுக்கு ஆட்டின் புழுக்கையும் அதிகளவில் தேவைப்படுகிறது.

    ஆடுகளில் நோய் பராமரிப்பு

    ஆண்டுக்கு 4 முறை தடுப்பூசிகள் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி அளிக்க வேண்டும்.

    1. மார்ச் ஏப்ரல் மாதங்களில் கால் வாய் நோய்க்கான தடுப்பூசி
    2. ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் பி பி ஆர் தடுப்பூசி
    3. ஆகஸ்ட் மாதத்தில் கால் வாய் நோய் தடுப்பூசி
    4. அக்டோபர் மாதத்தில் துள்ளுமாரி தடுப்பூசி ஆகியவற்றை போட வேண்டும்.
    5. குடற்புழு மருந்துகளை பிறந்த 30 வது நாள், 2, 3, 4, 6, 9வது மாதங்களில் போட வேண்டும்.

    வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு மூலம் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு.

    இனப்பெருக்கத்தில் குட்டிகளின் இறப்பு விகிதம் குறைவு.

    குடற்புழு நீக்க அட்டவணை

    ஆடுகளின் வயது

    பரிந்துரைகள்

    2வது மாதம்

    நாடாப்புழுக்களுக்கான மருந்து

    3வது மாதம்

    நாடாப்புழுக்களுக்கான மருந்து

    4வது மாதம்

    நாடாப்புழுக்களுக்கான மருந்து

    5வது மாதம்

    உருண்டைப்புழுக்களுக்கான மருந்து

    6வது மாதம்

    உருண்டைப்புழுக்களுக்கான மருந்து

    9வது மாதம்

    உருண்டை / நாடாப்புழுக்களுக்கான மருந்து

    12வது மாதம்

    தட்டைப் புழுக்களுக்கான மருந்து

    ஆறு மாதம் வரை ஆட்டுக்குட்டிகளுக்கு மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதாவது பருவமழைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு முறையும், பருவ மழையின் போது ஒரு முறையும், பருவ மழைக்குப்பின் இருமுறையும் கொடுக்க வேண்டும்.

    மாதம்

    பரிந்துரைகள்

    ஜனவரி - மார்ச்

    தட்டைப்புழுவிற்கான மருந்து

    ஏப்ரல் - ஜீன்

    உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து

    ஜீலை - செப்டம்பர்

    தட்டைப் புழுவிற்கான மருந்து

    அக்டோபர் - டிசம்பர்

    உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து

    ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை

    1. ஆடுகளுக்கு தகுந்த குடற்புழு மருந்தைத் தேர்வு செய்யவேண்டும்.
    2. தூள் மருந்தைப் பயன்படுத்தும் பொழுது வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது கரையாத மருந்துத் துகள்களும் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
    3. அதிகாலையில், வெறும் வயிற்றுடன் உள்ள ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.
    4. மருந்துக் கலவையை வாயின் வழியாக ஊற்றும் பொழுது புரையேறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
    5. குடிநீரில் குடற்புழுநீக்க மருந்தும் நோய் எதிர்ப்பு மருந்தும் ஒன்றாக கலந்துக் கொடுக்கக்கூடாது.
    6. குடற்புழுக்களின் வகைகளையும் முட்டைகளையும் அறிந்து மருந்து கொடுப்பது சிறந்தது.
    7. தொடர்ந்து ஒரே மருந்தைக் கொடுக்காமல் மாற்றித் தருவது அவசியம்.

    வெள்ளாடுகளுக்கான தடுப்பூசி அட்டவணை

    . எண்

    நோய் மற்றும் தடுப்பூசியின் பெயர்

    முதல் தடுப்பூசி

    தொடர் தடுப்பூசிகள்

    சிறப்புக் கவனம்

    1.

    பிபிஆர் நோய் (பெஸ்ட்டெஸ்பெட்டிட்ஸ் ரூமினென்ட்ஸ்)

    3-4 மாதம்

    ஆண்டுக்கு ஒரு முறை

    தகுந்த நோய்ப் பாதுகாப்பு நோய் கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள வேண்டும்.

    2.

    கோமாரி நோய் தடுப்பூசி (திசு வளர் கோமாரித் தடுப்பூசி)

    2 மாத வயதில்

    ஆண்டுக்கு ஒரு முறை

    நோய்க்கிளர்ச்சியின் போது பாதிக்கப்படாத ஆடுகளுக்கும் அண்டைக் கிராமகால்நடைகளுக்கும் தடுப்பூசி அளித்தல் அவசியம்.

    3.

    துள்ளுமாரி நோய் தடுப்பூசி (துள்ளுமாரி நோய் தடுப்பூசி : துள்ளுமாரி டாக்சாய்டு ஊசி)

    6 வார வயதில்

    ஆண்டுக்கு ஒரு முறை

    மழைக்காலத்திற்கு முன்னரும், குட்டி ஈனும் பருவங்களில் தாய் ஆடுகளுக்கும் தடுப்பூசி அளித்தல் அவசியம்.

    4.

    ஆட்டம்மை தடுப்பூசி (வீரியம் குறைக்கப்பட்ட ஆட்டம்மை உயிர்த் தடுப்பூசி)

    3-6 மாத வயதில் (நோய் காணும் பகுதிகளில்)

    ஆண்டுக்கு ஒரு முறை (நோய்க் காணும் பகுதிகளில் மட்டும்)

    கோடைக்காலத்திற்கு முன்னர் நோய் காணும் பகுதிகளில் ஒரு தடுப்பூசி அவசியம்.

    5.

    அடைப்பான் நோய் தடுப்பூசி
    (அடைப்பான் ஸ்டோர் தடுப்பூசி)

    நோய்க் கிளர்ச்சியின் போது மட்டும் 6 மாத வயதில்

    நோய் அடிக்கடி தோன்றும் பகுதிகளில் வருடம் ஒரு முறை, மற்ற பகுதிகளில் தேவையில்லை.

    நோய்க்காணும் பகுதிகளில் மழைக்காலத்திற்கு முன்னர் தடுப்பூசி போடவேண்டும்.

    6.

    டெட்டனஸ் ஜன்னி
    தடுப்பூசி (டெட்டனஸ் டாக்சாய்டு தடுப்பூசி)

    குட்டி ஈன 6-8 வாரத்திற்கு ஒரு முறை

    -

    குட்டிகள் பிறந்து 48 மணி நேரத்திற்கு பின்.

    7.

    தொண்டை அடைப்பான் தடுப்பூசி (பார்மலின் வழி செயலிழக்கப்பட்ட தொண்டை அடைப்பான் தடுப்பூசி)

    6 மாத வயதில் நோய் காணும் பகுதிகளில் மட்டும்)

    ஆண்டுக்கு ஒரு முறை

    மழைக்காலத்திற்கு முன்னர் ஒரு தடுப்பூசி அளித்தல் அவசியம்.

    கேள்வி பதில்

    1. எந்தெந்த ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் அவசியம் என்பதை எப்படி அறிவது?

    கண்ணின் உட்சவ்வு வெளிறி போயிருக்கும், மூக்கில் சளி, ஆட்டின் பின் பகுதியில் கழிச்சலினால் சாணம் ஒட்டிக் கொண்டிருக்கும். தாடையில் வீக்கம், உடல் மெலிந்து காணப்படும். இது போன்ற ஆடுகளுக்கு மட்டும் குடற்புழு நீக்கம் செய்தல் அவசியமானதாகும்.

    2. ஏன் எல்லா ஆடுகளுக்கும் குடற்புழு நீக்கம் செய்தல் கூடாது?

    தேவையில்லாமல் எல்லா ஆடுகளுக்கும் அடிக்கடி குடற்புழு நீக்கம் செய்தால் குடற்புழுக்களுக்கு எதிரான மருந்தின் எதிர்ப்புத்திறன் குறைகிறது. குடற்புழுக்களின் எண்ணிக்கை அதிகமாகி மற்ற ஆடுகளுக்கும் பரவுகிறது. ஆகையால், தேவையான ஆடுகளுக்கு மட்டும் குடற்புழு நீக்கம் செய்தால் போதுமானது.

    3. பாமாச்சா அட்டை எதற்கு பயன்படுகிறது?

    பாமாச்சா அட்டையை பயன்படுத்தி ஆட்டின் கண்ணின் உள்சவ்வைப் பார்த்து இரத்தசோகை அறியலாம்.


நமது பூமியின் வயது ஏறத்தாழ 460 கோடி ஆண்டுகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 100 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான். ஒரு செல் உயிரி தோன்றியிருக்கிறது. மனிதர்கள் தோன்றி 4.5 லட்சம் ஆண்டுகளே ஆகின்றன. நாம் ஏர் கட்டி விவசாயம் செய்ததெல்லாம் ஆறாயிரம் ஆண்டுகளாகத்தான். அதற்கு முன்னரும் இயற்கை செழிப்பாக இருந்திருக்கிறது.

அந்தக் காலங்களிலும், இப்போது நிலத்தை இடைவிடாமல் உழுது கொண்டிருப்பவை மண்ணிலுள்ள உயிரினங்களே.

உயிருள்ள மண் 3 தன்மைகளை கொண்டது.

  1. இயற்பயில் தன்மை (எ.கா. பொலபொலப்புத் தன்மை)
  2. உயிரியல் தன்மை (எ.கா. நுண்ணுயிரிகள், மண்புழுக்கள் இருப்பது)
  3. இரசாயனத் தன்மை (எ.கா.ஊட்டச்சத்துகள் கொண்டிருப்பது)

இரசாயன உப்புகள் (உரம்) கடந்த 40 ஆண்டுகளாக இட்டதால் நிலம் முதலில் உயிரியல் தன்மையை இழந்தது. பின் இரசாயனத் தன்மையையும் இறுதியில் இயற்பியல் தன்மையும் இழந்து விட்டது. கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருந்த மண்ணின் உயிரோட்டம் 40 ஆண்டுகளில் அழிக்கப்பட்டு மண் மலடாக்கப்பட்டு விட்டது. நம் விளை நிலத்து மண்ணில் மீண்டும் உயிரோட்டம் ஏற்படுத்த வேண்டும். நுண்ணுயிரிகளை வளரச் செய்ய வேண்டும். மண்புழுக்களும், பிற மண்ணுயிர்களும் வாழும் வகையில் மண்ணை சரி செய்ய வேண்டும். இது நடக்கும் போது மென்மையான வேர் நுனி எளிதில் மண்ணுள் இறங்கும் வண்ணம் பொலப்பொலப்பானதாக மாறும். வேர் சுவாசிக்கத் தேவையான காற்று மண் துகள்களில் சிறிய துளைகளில் தங்கும். வேர் உறிஞ்ச தேவைப்படும் ஈரம் பெருந்துளைகளில் இருக்கும். ஈரமும் காற்றும் சம அளவில் அருகருகே இருக்கும். அரிய நிலையை மண் அடைந்தால் தான் மண் வளமானதற்கு அடையாளம், நலமானதற்கு அறிகுறி. அதற்குத் தாவரக் கழிவுகளையும், விலங்குக் கழிவுகளையும் மண்ணில் சேர்க்க வேண்டும். கெட்டுப்போன நிலத்தைப் பண்படுத்துவதற்கு நீண்டகாலம் ஆகும் என்பது பழைய நிலை. இப்போது கலவை எரு, மண்புழு எரு, உர உயிரிகள், பலபயிர் வளர்ப்பு, அமுதக் கரைசல் ஆகிய உத்திகள் மூலம் மண்ணை ஒரு வருடக காலத்திற்குள், இழப்புகள் இன்றி செய்ய முடியும் என்று தமிழகத்து விவசாயிகள் செய்து காட்டியுள்ளனர். வளமான, ஆரோக்கியமான மண்ணே வளமையான வேளாண்மைக்கு அடித்தளமாகும்.

அமுத கரைசல்

இன்று அமுத கரைசல் பற்றி யாராவது தெரியாமல் இருந்தால் தமிழகத்தில் செய்தி ஊடகங்களை கவனிக்காதவராக இருப்பார்கள். அமுத கரைசலை தெளிப்பான் கொண்டு தெளிக்கவும், பாயும் நீரில் கரைத்து விடவும் செய்யலாம்.

தேவைப்படும் பொருட்கள் :

  1. பத்து லிட்டர் தண்ணீர்
  2. ஒரு கிலோ சாணம்
  3. ஒரு லிட்டர் மூத்திரம் 4.25 கிராம் நாட்டுச்சர்க்கரை.

ஒரு குடம் தண்ணீர் பிடிக்கும் பானை அல்லது குவளையில் மேலே சொன்னவைகளை இட்டு கலக்குதல் வேண்டும். ஒரு குச்சியால் வலப்புறம் 50 சுற்றும் இடப்புறம் 50 சுற்றும் சுற்ற வேண்டும். காலை, மதியம், மாலை என்று மூன்று வேளை கலக்க வேண்டும். ஒரு பகல் ஒரு இரவு ஆக, 24 மணிநேரத்தில் ஊட்டம் (டானிக்) தயாராகிவிடும்.

ஒரு லிட்டர் அமுத கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். இரண்டு நாட்களில் பயிர் பச்சை கொடுத்து வளரத் தொடங்கும். இன்னொரு வழியும் உண்டு. 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ சாணம், 20 லிட்டர் மூத்திரம், 2 கிலோ சர்க்கரை கலந்து மூன்று வேளை கலக்கி பாயும் நீருடன் கலந்து விட வேண்டும். வயல் பெரியதாக இருந்தால் ஒரே இடத்தில் வைப்பது போதாது. உள்ளே தள்ளித் தள்ளிக்கொண்டு போய் வைப்பது அவசியம். வயல் தூரத்தில் இருந்தால், தேனீர், காபி விற்பவர்கள் போல பைப்பு பொருந்திய குவளையில் எடுத்துச் சென்று வாய்மடையில் வைப்பது ஆக பொருந்தும். அமுத கரைசல் தயாரிப்பதும், பயன்படுத்துவதும் மிக எளிமையாக இருப்பதால் அன்றாடம் மாடு கொடுக்கும் கழிவுகளை அமுதமாக மாற்றி பயிர்களுக்கு அளிப்பது கடன்பட்ட உழவர்களை கரை சேர்க்கும் உத்தியாகும். பயிருக்கு மாட்டூட்டத்தையும். அமுதகரைசலையும் 10 நாட்கள் இடைவெளியில் தெளிப்பது செலவை குறைக்கும்.

மூலிகைப் பூச்சி விரட்டி

உழவர்கள் காலங்காலமாக கடைபிடித்து வந்த இயற்கை வழி சாகுபடி முறை பூச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பச்சைப் புரட்சியின் சாதனையாக ரசாயன நஞ்சுகளைப் பயன்படுத்தி பூச்சிகளைக் கொல்ல தொடங்கியதும் உணவு பண்டம் அனைத்தும் நஞ்சானது மட்டுமின்றி, பூச்சிகளும் சாகத் தயாராக இல்லை. இயற்கை வழியில் உழவர்கள் மூலிகைப் பூச்சிவிரட்டி தயாரித்து, பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர்.

மூலிகை பூச்சி விரட்டி வேலை செய்யும் விதம் எப்படி?

மூலிகை பூச்சி விரட்டிகள் மூன்று வகையான இலைகளைக் கொண்டு தயாரிக்கப்டுகிறது. ஒன்று, தொட்டால் வாசனையடிக்கக் கூடிய செடிகள், இரண்டு தின்றால் கசக்கக் கூடிய செடிகள், ஒடித்தால் பால் வரக்கூடிய செடிகள் எடுத்துக்காட்டாக ஆடாதொடை, ஆடுதீண்டாபாளை, ஊமத்தை, எருக்கு, தும்பை, துளசி, அத்தி, சோற்றுக் கற்றாழை, பெரண்டை, பீநாரி, பப்பாளி, சீதா, புங்கன், நொச்சி, வேம்பு, தழுதாளை, காட்டாமணக்கு, வேலிப்பருத்தி, வரிக்குமுட்டி, உண்ணிமுள் செடி, நித்தியகல்யாணி, உரக்கொளறை (கிளைரிசிடியா). இவற்றில் அடையாளம் தெரியாதவை இருந்தால் கவலைப்பட தேவையில்லை. தேவை நான்கு ஐந்து செடிகள் மட்டுமே. அவசியம் நெய்வேலி காட்டாமணக்கு செடி பயன்படுத்த வேண்டும்.

ஒரு சாக்கு இலைகளை கொண்டு வந்து உரலில் இடித்து மண் தொட்டி அல்லது சிமெண்ட் தொட்டியையும் பயன்படுத்தலாம். பானைக்குள் இருக்கும் மூலிகை சட்னி மூழ்கும் அளவுக்கு ஆடு அல்லது மாட்டுச் சிறுநீரை ஊற்றி நிரப்பவும்.

மேலே குறிப்பிட்ட கலவை பத்து நாட்களில் மூலிகைக் கரைசலில் இருந்து தாங்க முடியாத அளவுக்கு நெடி வரக்கூடும். பூச்சி விரட்டி தயாராகி விட்டதற்கு இதுவே அடையாளம். ஒரு லிட்டர் பூச்சி விரட்டியுடன் பத்து லிட்டர் தண்ணீர் கலந்து பயிர் மீது தெளிக்க வேண்டும்.

மூலிகை பூச்சி விரட்டி செயல்படும் விதம்

பூச்சிகள் எண்ணிக்கையில் மிகுந்தவை. ஆனால் உயிரினங்களில் இது சிற்றினம். இவை இயல்புத் தூண்டலால் குறிப்பிட்ட செடிகளில் இலையையோ, காயையோ தின்று உயிர் வாழ்கின்றன. இதற்காக இவை இலைகளில் தொட்டணர்ந்தே செடியை இனம் காணுகின்றன. பல வகை மணம் கொண்ட மூலிகைகளில் தயாரிக்கப்பட்ட பூச்சி விரட்டி பயிர்களின் வாசனையை மாற்றி விடுகிறது. இதனால் தாய்ப்பூச்சி பயிரின் மீது அமர்ந்து முட்டையிடுவது தவிர்க்கப்படுகிறது.

மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்

எல்லா பூச்சிகளும் பயிர்களின் விரோதிகள் அல்ல. பூச்சிகளை உண்ணும் தட்டான், பொறிவண்டு, மூக்கு வண்டு, சிலந்தி, கண்ணாடி சிறகி போன்றவை இருக்கவே செய்கின்றன. இத்தகைய நல்ல பூச்சி நண்பர்களை அடையாளம் கண்டு வைத்திருப்பது மிகவும் அவசியம். பூச்சிகளை பார்த்தவுடன் நஞ்சு தெளிப்பது கூடாது. பூச்சிகள் வந்த பின்பு தான் அவைகளை உண்ணும் இரையுண்ணிகள் நமது நிலத்திற்கு வரும். குறிப்பாக நூறுக்கும் மேற்பட்ட பறவைகள் பயிர் செடிகளை உண்ணும் பூச்சிகளை பிடித்து உண்ணுகின்றன. குச்சிகள் அல்லது தென்னை ஓலையின் அடிமட்டையைப் பயிர் நடுவே நட்டு வைத்தால் பறவைகள் அதில் வந்து அமர்ந்து பூச்சியை பிடித்து உண்ணும். சென்டிப் பூ போன்ற செடிகளை பயிர்களின் ஊடே நடவு செய்வதன் மூலம் தீய பூச்சியை விரட்டலாம். ஆமணக்கு, வெள்ளரி, தட்டை பயிறு போன்ற செடிகளை நிலத்தின் விளிம்பின் நான்கு திசையிலும் பயிர் செய்ய வேண்டும். இது பூச்சிகளைக் கவர்ந்து இழுத்து முக்கிய பயிர்களை காக்கிறது. தொடர்ந்து இயற்கை வழி வேளாண்மைக்கு மாறும் உழவர்கள் நான்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மூலிகை பூச்சி விரட்டிகள் கூடத் தெளிக்க தேவையிருக்காது.

கால்நடைகளில் மாட்டூட்டம்

ஆடு, மாடு, கோழி, நாய் என வளர்ப்பு விலங்குகள் அனைத்திலும் மாட்டூட்டத்தை பயன்படுத்தி நல்ல பலனை எட்டியிருக்கிறார்கள். மாடுகளுக்கு மடிவீக்கம், காம்பின் சீழ் வடிதல் போன்ற நோய்களைக் குணபடுத்த நாளும் 300 மில்லி என்ற வீதத்தில் ஒரு வாரம் கொடுக்க வேண்டும். சினைப் பிடிக்காத ஆடு, பசுக்களுக்கு இதை கொடுத்து நல்ல பலனைடைய முடியும். ஆடுகளுக்கு கொடுக்கும் போது 150 மில்லி கொடுக்க வேண்டும். கோழிக்கு குடிநீரில் கலந்து விடுவதால் நோய் தொற்றுவதை தடுக்கலாம். தவிடு, மாட்டூட்டம், இரண்டையும் கலந்து பிசைந்து கொடுப்பதால் கோழிக்குஞ்சின் எடை விரைவாக கூடும். நாய்களுக்கு மூச்சுப் பை நோய், தோல் நோய்கள் எளிதில் குணமாகும். விலங்கினங்களுக்கு ஊட்டும் போது தண்ணீர் கலப்பது இல்லை.

மீன் அமிலம்

உழவர்கள் கண்டுபிடிப்பில் தனிச்சிறப்பு வாய்ந்த வளாச்சி ஊக்கி மீன் அமிலம். மலிவாக மீன் கிடைத்தாலோ அல்லது மீன் கழிவு கிடைத்தாலோ, அது கொண்டு மீன் அமிலம் தயாரிக்கலாம். மீன் அல்லது மீன் கழிவை சம அளவில் வெல்லத்துடன் கலந்து பிசைந்து பிளாஸ்டிக் பாத்திரத்தில் இட்டு மூடி வைக்க வேண்டும். 25 நாட்கள் கடந்த பிறகு, மீன் அமிலம் தயார் பயிரில் கை ஸ்பிரேயருக்கு 300 தண்ணீருடன் தெளிக்கும் போது பயிர் பச்சை நிறம் பெற்று வளருகிறது.

முட்டை ரசம்

  • இயற்கை வழி வேளாண்மையில் பயிர் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு பல உத்திகள் உள்ளன. அதில் ஒன்று முட்டை ரசம் தயாரிப்பு. கீழே குவிந்தும் மேலே விரிந்தும் உள்ள ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அதில் 21 முட்டைகளை மூன்று நான்கு அடுக்குகளாக அடுக்கவும். அதற்கு முட்டையின் குறுகலான முனையை கீழ்நோக்கி வைத்தால் பொருத்தமாக இருக்கும். எலுமிச்சை பழங்களை பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும். பாத்திரத்தில் அடுக்கிய முட்டைகள் மேல், 2 எலுமிச்சை பழ சாற்றுடன் 200 கிராம் வெல்லத்தை கரைத்து வெல்லக் கரைசலையும், முட்டைகள் மீது ஊற்றவும். பின்பு மூடி வைக்கவும்.
  • 10 நாட்கள் சென்ற பின்பு, திறந்து பார்த்தால் முட்டை ஓடு கெட்டியாக இல்லாமல் கூழ்ம வடிவில் இருக்கும். அவற்றை கையால் பிசைந்து மேலும் 200 மில்லி வெல்லச்சாறு ஊற்றி மூடி வைக்கவும். முட்டை ரசம் தயாரிக்கத் தொடங்கியதில் இருந்து 20 நாட்களுக்குள் பிறகு, பயிரில் தெளிக்க வேண்டும். அற்காக முட்டை, எலுமிச்கை, வெல்லக் கலவையை பிசைந்து வடிகட்ட வேண்டும். எஞ்சியுள்ள கழிவை மீண்டும் சிறிதளவு எலுமிச்சைச் சாறும் வெல்லக் கரைசலும் கலந்து மூடி வைத்தால் மீண்டும் ஒரு முறை தெளிப்பதற்கு நமக்கு முட்டை ரசம் கிடைக்கும்.

பாழ்நிலத்தை புதுப்பிக்கும் பலபயிர் சாகுபடி

ரசாயன உரம், ரசாயன பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தொடர்ந்து நிலத்தில் இட்டதால் உழவன் வறுமைப்பட்டான். நிலம் வலுவிழந்து, இப்போது மாற்று வழி நோக்கி உழவர் சிந்தனை செல்கிறது. சில நேரத்தில் இயற்கை வழி முறை நல்லதுதான். ஆனாலும் பழைய விளைச்சலை மீண்டும் எடுக்க குறைந்தது ஐந்து வருடமாவது வாங்கலாம். இப்படி செல்பவர்கள் இயற்கை வழி வேளாண்மையால் நாட்டு மக்களின் வறுமையை ஒழிக்க முடியாது என்று சொல்பவர்களை விடவும் தீங்கு செய்கிறார்கள்.

உரச் செடிகளை வளர்த்து தழை உரமாகப் பயன்படுத்துவது பற்றி கூறியிருந்தோம். இப்படி சிலவகைக் செடிகளை நிலத்திற்கு அளித்து எருவாக்கும் போது சில வகை ஊட்டங்களையே மண்ணில் சேர்க்க முடியும். நில வளத்தை முழுமையாக்க இது போதாது. பல வகை விதைகளையும் விதைத்து, வளர்த்து நிலத்தில் சேர்க்கும் போது பல வகை ஊட்டங்கள் மண்ணில் சேர்கிறது, வளம் கூடுகிறது. இதை இயற்கை விவசாயிகள் தமது நேரடி அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ளனர்.

பல பயிர் விதைப்பு என்பது தானியங்கள், பயறு வகைகள், பசுந்தாள் உரச்செடிகள், எண்ணெய் வித்துக்கள், வாசனைப் பியர்கள் ஆகிய ஐந்து வகை பயிர்களை வகைக்கு 4 வீதம் விதைத்து 60-70 நாட்கள் வளர்த்து மடக்கி உழுது மண்ணில் சேர்க்கும் முறையாகும். இப்பயிர்களின் இலைகள், தண்டு, வேர்களில் உள்ள பல வகை நுண் ஊட்டங்களில் மண்ணில் சேர்ந்து மண்ணை வளம் செய்வதுடன் இவைகளே மக்கி எருவாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகின்றன

பல பயிர் வதைகள்

  • தானிய விதைகள்சோளம் – 500 கிராம்
  • கம்பு – 100 கிராம்
  • தினை – 200 கிராம்
  • சாமை – 250 கிராம்
  • வரகு – 300 கிராம்
  • குதிரை வாலி – 250 கிராம்
  • பனிவரகு – 200 கிராம்

போன்றவற்றில் ஏதேனும் நான்குபயிறு வகைபாசிப்பயிறு – 2 கிலோ , உளுந்து – 2 கிலோ, கொள்ளு – 1 கிலோ, தட்டைப் பயிறு – 2 கிலோ, துவரை – 1 கிலோ, போன்றவற்றில் ஏதேனும் நான்கு.எண்ணெய் வித்துக்கள்எள் – 250 கிராம், நிலக்கடலை – 2 கிலோ , ஆமணக்கு – 3 கிலோ, சூரியகாந்தி – 1 கிலோ, துவரை – 1 கிலோ, சோயா – 2 கிலோ போன்றவற்றில் ஏதேனும் நான்கு. வாசனைப் பொருட்கள் சோம்பு – 100 கிராம், கடுகு -100 கிராம், வெந்தையம் -100 கிராம், மல்லி – 1 கிலோ உரச்செடிகள் சணப்பு – 2 கிலோ, தக்கை பூண்டு – 1 கிலோ, கொழுஞ்சி – 1 கிலோ, அகத்தி – 1 கிலோ, செம்பை – 1 கிலோ போன்றவற்றில் ஏதேனும் நான்கு.

மேற்கண்ட வகைகளில் ஒவ்வொன்றிலும் ஏதேனும் நான்கு விதைகள் வீதம் ஏக்கருக்கு 20 கிலோ தேவைப்படும். இந்த 20 வகை விதைகளையும் சேர்த்து (20 கிலோ இருந்தாலும் தவறல்ல) நெல் சாகுபடியின் போது முன்கூட்டியே விதைத்து 45 நாட்கள் வளர விட்டு மடக்கி உழுது விட்டு தொழி செய்து 10 நாட்கள் அழுகவிட்டு நாற்று நடவு செய்யலாம்.

கரும்பு, மஞ்சள், வாழை போன்றவற்றில் முதல் களை எடுக்கும்போது விதைத்து மூலப்பயிர்களின் இலைகளை மறைக்கும் வண்ணம் வளர்த்தவுடன் அறுத்து / பிடுங்கி 1 சால் விட்டு சாலில் மூடாக்காக இடலாம். தண்டுப்புழு போன்றவைகளை வளரும் பல பயிர்கள் ஈர்த்து முக்கிய பயிருக்கு நேரும் சேதத்தைக் குறைக்கிறது.

ஊட்டமேற்றிய தொழு உரம்

தேவைப்படும் பொருட்கள்

  • சாணம் : 100 கிலோ
  • கோமியம் : 25 லிட்டர்
  • புளித்த தயிர் : 5 லிட்டர்
  • நீர் : 100 லிட்டர்

கலந்த கலவை

செய்முறை: 4 அடி அகலம், தேவைக்கேற்ற நீளம், அரை அடி உயரத்திற்கு மக்கக்கூடிய அனைத்து பொருட்களையும் பரப்பிவிட்டு, 10 லிட்டர் கலவையுடன் 100 லிட்டர் நீர் சேர்த்து சலிக்கத் தெளிக்கவும். பின் சாணம் 3 அங்குல உயரத்திற்கு பரப்பிவிட்டு, இலை தழை, குச்சிகளைப் போட்டு அதன் மேல் 10% கரைசலை தெளிக்கவும்.

இதைப் போல் தொடர்ந்து 4 அடி உயரத்திற்கு அடுக்குகளை இட்டுப் பின்னர் சேறு கொண்டு நன்கு பூசி மெழுகிவிடவும். 100 நாட்கள் கழித்து எடுத்துப் பயன்படுத்தவும்.

தேங்காய் பால் + மோர்

இவைகளை சம அளவில் சேர்த்து சட்டி / பானையில் இட்டு குப்பைமேடு (அ) குழியில் பாதுகாப்பாக புதைத்து வைக்க வேண்டும். ஒரு வார காலத்தில் நொதித்து வளர்ச்சி ஊக்கியாக மாறும். நொதித்த ஒரு லிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு சுமார் 5 லிட்டர் தேங்காய்ப் பால், 5 லிட்டர் மோர் தேவைப்படும்.

பயிர் பாதுகாப்பு

நமது முன்னோர்கள் எலி, பறவை, ஆடு, மாடு போன்றவற்றிலிருந்து காப்பதையே பயிர் பாதுகாப்பாக செய்தனர். கடந்த 40 ஆண்டுகளாக பூச்சி, பொருட்களில் இருந்து காப்பதற்காக இரசாயன நஞ்சுகளைப் பயன்படுத்துகிறோம். வேளாண்மையில் இரசாயன வகை பயிர் பாதுகாப்பு வந்தபோது விவசாயிக்கு சுமை கூடியது. செலவு கூடியது.

பயிர்களைத் தின்னும் பூச்சிகள் கூட மற்ற பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும் உணவாகின்றன. எனவே, எல்லாப் பூச்சிகளும் நன்மை செய்பவையே. பயிரைக் காப்பது தான் நமது நோக்கமே தவிர பூச்சிகளை கொல்வதல்ல. தாய்ப்பூச்சிகள் பயிர்களில் முட்டையிடாமலும், உட்காராமலும் தடுப்பதும், இவைகளின் புழுக்கள் நம் பயிரை மேய்வதைத் தடுப்பதுமே நம் வேலை

பயிர் பாதுகாப்பு முறைகள்

  1. மூலிகைப் பூச்சிவிரட்டி
  2. உயிர் வழிக்கட்டுபாடு
  3. பயிர் வழிக்கட்டுப்பாடு
  4. ஈர்ப்புப் பயிர்கள்
  5. ஒருங்கிணைந்த பயிர்க் காப்பு

மூலிகை பூச்சி விரட்டி

  • ஆடா தோடா, ஆடு தின்னா பாளை, ஊமத்தை, எருக்கு, துத்தி, உண்ணிச்செடி, காட்டாமணக்கு, நெய்வேலி, காட்டாமணக்க, வேம்பு, எட்டி, சீதா இலை. சீதாகொட்டை, அரளி விதை, (வெப்) பாலை, பீநாரி சங்கு, கற்றாழை, நொச்சி, தும்பை, துளசி, நாய்த்துளசி, சீமைக் கருவேல் என பல தாவரங்களில் பூச்சிகள் விரட்டும் தன்மை கொண்டவை.
  • ஆடு, மாடு தின்ன மறுக்கும் அனைத்து செடி, கொடிகளும் பூச்சிகள் விரட்டும் தன்மை உள்ளவை. உடைத்தால் பால் வரும் தன்மை உள்ள செடி, கொடிகளுக்கும் இதே தன்மை உண்டு.
  • இவைகளில் ஏதேனும் 5 வகைத் தாழைகளை வகைக்கு 2 கிலோ வீதம் எடுத்து இடித்து பானையில் இட வேண்டும். இடித்த இலை தழைகள் முழுகும் அளவு மாட்டு/ எருமை மூத்திரம் ஊற்ற வேண்டும். பிறகு கழுத்து வரைக்கும் தண்ணீர் ஊற்ற வேண்டும். 1 வாரம் – 10 நாட்கள் வைத்திருந்தால் ஊறல் நன்கு நொதித்து மூலிகைச் சாறு தெளிப்பதற்கு தயாராகும். 1 லிட்டர் சாறுக்கு 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்க வேண்டும். நன்கு ஒட்ட காதி சோப்பு வில்லை 2ஐக் கரைத்தல் நல்லது.
  • உடனடியாக தெளிக்க இடித்த இலை தழைகளை நிறைய தண்ணீர் விட்டு காய்ச்சவும். தண்ணீர் பாதியாக சுண்டும் போது எடுத்து வடிகட்டி 1 லிட்டர் கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்கலாம்.
  • பூச்சி விரட்டிகளை தேவைப்படும் பொழுதோ, பூச்சி வரும் காலத்திற்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பயன்படுத்தலாம்.

உயிரியல் கட்டுப்பாடு

உலகில் ஒவ்வொரு வகை உயிரினத்தையும் வேறு ஒரு உயிரினம் கட்டுப்படுத்துகிறது. இந்த உயிரியல் அடிப்படை உண்மையைக் கொண்டு சேதம் செய்யும் பூச்சிகளை அவைகளின் எதிர்ப் பூச்சிகள் கொண்டு கட்டுப்படுத்தும் முறையே உயிரியல் வழி பூச்சிக் கட்டுபாடு ஆகும். இதே அடிப்படையில் பயிர் நோய்கள் சிலவற்றையும் கட்டுப்படுத்தலாம்.

உயிரியல் பூச்சி கட்டுப்பாடு

  • எதிரி பூச்சி
  • கட்டுப்படுத்தும் பூச்சி
  • டிரைக்கோகிரம்மா கைலோனிஸ்கரும்பு – இளங்குருத்துப்புழு, இடைக்கணு புழு
  • நெல் – இலை சுருட்டுப் புழு
  • பருத்தி – இளஞ்சிவப்பு காய்புழு, புள்ளிக்காய் புழுடிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் கரும்பு – நுனி குருத்துப்புழு
  • நெல் – குருத்துப்பூச்சி பிரகானிட்தென்னை – கருந்தலை புழுரெட் வீயூட் பக் (வண்டு)பல பயிர்களில் புழுக்களை அழிக்கும்.

நுண்ணுயிரிகள்

டிரைக்கோ டெர்மா விரிடி (பூசணம்) மற்றும் சூடோமோனாஸ் (பேக்டீரியம்) பருத்தி, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, பயறுகள், வாழை, மஞ்சள், இஞ்சி, தென்னை, நெல், கரும்பு, காய்கறிகள் ஆகியவற்றில் தோன்றும் வேர் அழுகல் கிழங்கழுகல், செவ்வழுகல் போன்ற பூசண நோய்கள் கட்டுப்படுத்தும் பயன்பாட்டு அளவு ஏக்கருக்கு 2-4 கிலோ வரை.

உயிரின வழிக் கட்டுப்பாடு

இயற்கையில் பாம்பு, ஆந்தை போன்றவை எலி பிடிக்கின்றன. சிலந்தி, தவளை, பல்லி, குருவிகள், காக்கை, மைனா போன்றவையும் பூச்சிகளைப் பிடித்து உண்ணுகின்றன. பறவைகள் வந்து போனால் வேறு கட்டுப்பாடு தேவைப்படாது.

பயிர் வழிக் கட்டுப்பாடு

சில செடிகள் தங்களது வேர்களில் சில வகை சுரப்புகளை வெளியேற்றுகின்றன. இச்சுரப்புகள் சில நோய் தரும் நுண்ணுயிர்களை கட்டுப்படுத்துகிறது. இந்த வகைத் தாவரங்களை நோய் வாய்ப்புள்ள பயிர்களுக்கு அருகில் வளர்க்கும் போது நோய் வருவதில்லை. எடுத்துக்காட்டாக சாமந்திப் பூச்செடி, தக்காளிச் செடி அருகிலும், வேர் அழுகல் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய பயிர்களுக்கு அருகிலும் வளர்க்கும் போது வேர் நோய்கள் வருவதில்லை. நோய் தரும் வேர்ப்புழுக்கள் எண்ணிக்கையை குறைக்கச் செய்கிறது.

ஈர்ப்புப் பயிர்கள்

சில செடிகள் பயிர்களை உண்ணும் பூச்சிகளை தன்னிடம் ஈர்த்துக் கொள்ளும். இவ்வகை செடிகளை பயிர்களை வயலில் வளர்க்கும் போது பயிர் உண்ணும் பூச்சிகளை தன்னிடம் ஈர்க்கும். விளை பயிர் காக்கப்படும். எ.கா.ஆமணக்கு, தட்டைப் பயிறு, கரும்பில் கம்பு, சோளம் குறுத்துப் புழுக்களை ஈர்க்கிறது.

முன்னோர்கள் ஒருபோதும் ஊரினப் பயிர்கள் வளர்த்ததில்லை. கலப்பு பயிர் முறையையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். இக்கலப்பு பயிர் முறை நோய்களைக் கட்டுப்படுத்தியது. ஈர்த்து அழிக்க உதவியது. மீண்டும் கலப்புப்பயிர் முறை நம் நிலத்தில் அறிமுகம் ஆகும் போது பயிர்ப் பாதுகாப்பு எளிதான ஒன்றாகும். மண் நலனும் மேம்படும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு உத்திகள்

  1. பருவம் அறிந்து விதை விதைக்க வேண்டும்.
  2. பயிர் சுழற்சி கடைபிடிக்க வேண்டும்.
  3. கலப்புப் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.
  4. அவ்வப்போது நிலத்தை தரிசு போட வேண்டும்.
  5. பறவைகளை உள்ளே வரவழைக்க வேண்டும்.
  6. விவசாயி வீட்டில் உள்ள விதைகளை விதைக்க வேண்டும்.
  7. இயற்கை உயிர்க் கொல்லிகளை பயன்படுத்த வேண்டும்.
  8. பூச்சிகளை கவரும் செடி கொடிகளை ஓரத்தில் வளர்க்க வேண்டும்.
  9. மூலிகை பூச்சி விரட்டிகளை பயன்படுத்த வேண்டும்.

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.



கறவை மாடு
கறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் கன்று, பால் உற்பத்தி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.எனவே, கறவை மாடுகளை உரிய முறையில் பராமரித்து விவசாயிகள் லாபம் அடையும் வழிமுறைகள்

விவரங்கள்

சினைப் பசுக்களை நன்றாக கவனித்து வளர்த்தால் தான் ஆரோக்கியமான கன்றுக் குட்டியை ஈனும், நல்ல பால் உற்பத்தியை பெருக்க முடியும்.

முக்கிய பராமரிப்பு உத்திகள்

  • சினை ஊசி போட்ட பசுக்களுக்கு 3 மாதத்தில் கால்நடை மருத்துவர் மூலம் உரிய சினைப் பரிசோதனையை செய்து உறுதிசெய்து தோராயமாகக் கன்று ஈனும் காலத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
  • சினை மாடுகளை அடிக்கடி அடித்துத் துன்புறுத்துதல், அதிக தொலைவு நடக்க வைத்தல் கூடாது. ஏழாவது மாதம் முடிந்த உடன் சினைப் பசுவை தனியாகப் பிரித்தெடுத்து கொட்டகையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். நாய்களை சினை மாடுகளின் அருகில் அண்ட விடக் கூடாது.
  • கருவில் வளரும் இளங்கன்றின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளையும், பால் உற்பத்திக்குத் தேவையான சத்துகளையும் உடலில் சேமித்து வைக்க வேண்டியுள்ளதால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சரிவிகித சத்தான உணவை வழங்க வேண்டும்.
  • ஏழாவது மாத சினை முடிந்தவுடன் பாலை வற்றச் செய்ய வேண்டும். பால் வற்றிய சினை மாட்டின் காம்புகளின் வழியே நுண்மக் கொல்லி (ஆன்டிபயாடிக்) மருந்தை டியூப் மூலம் செலுத்தினால் மடிவீக்க நோயை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.

தீவனப் பராமரிப்பு

  • சினை மாடுகளுக்கு தீவனம் அளிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு கவனம் செலுத்தாவிடில் கீழ்க்கண்ட விளைவுகள் ஏற்படும்.
  • கன்று வீசுதல், குறைமாத கன்றுக் குட்டியை ஈனுதல், 20 கிலோவுக்கு குறைவாக உள்ள கன்று பிறக்கும். நஞ்சுக்கொடி விழாமல் கருப்பையில் தங்கிவிடும். கருப்பை வெளித்தள்ளுதல், பால் காய்ச்சல் போன்ற நோய்கள் வரும். பால் உற்பத்தி குறையும்.
  • இதைத் தடுக்க சரிவிகித தீவனம் கொடுக்க வேண்டும். ஒரு சினை மாட்டுக்கு 25 கிலோ பசுந்தீவனத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அளிக்க வேண்டும். கலப்புத் தீவனம் 8-வது மாத சினையில் தினமும் ஒன்று முதல் ஒன்றரை கிலோ வீதமும், 9-ஆவது மாதம் ஒன்றரை முதல் 2 கிலோ வீதமும் கன்று ஈனும் வரை வழங்க வேண்டும்.
  • இவற்றுடன் தாது உப்புக்கள் 25- 30 கிராம் தினமும் கொடுக்கலாம். கன்று ஈனுவதற்கு முன்னால் ஒரு கிலோ கோதுமைத் தவிடும் கொடுக்கலாம். மேலும் 450 கிராம் எப்சம் உப்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூள் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.
  • கன்று ஈனும்போது காணும் அறிகுறிகள்: நிறைமாத சினை ஆனவுடன் மாட்டின் வயிறு, மடி பெருத்துக் காணப்படும். மாட்டின் இடுப்பு, தொடைப் பகுதியில் உள்ள தசைகள் தளர்ந்து காணப்படும். வாலுக்கு அடியில் குழி உண்டாகும். இதைச் சட்டம் உடைதல், தட்டு உடைதல் அல்லது குழி விழுதல் எனக் கூறுவர். இந்த அறிகுறி தென்பட்ட 24 முதல் 48 மணி நேரத்தில் கன்று ஈனும்.
  • மாட்டில் சளி போன்ற திரவம் அதிகளவில் வடியும். மாடுகள் அடிக்கடி படுத்துக் கொண்டும், தலையை தோண்டிக் கொண்டு இருக்கும். சினைக் கிடேரிகள் வயிற்றில் உதைத்துக் கொள்ளும்.
  • இந்த அறிகுறிகள் ஏற்பட்டவுடன் மாட்டை சுத்தமான, சமமான இடத்தில் அழைத்துச் சென்று கட்ட வேண்டும். கன்று ஈனுவதற்கு முன் கலப்பின பசுக்களில் நெஞ்சில் இருந்து மடி வரை நீர் கோர்த்துக் காணப்படும். இதனால் எந்தத் தீங்கும் இல்லை. கன்று ஈன்றவுடன் தானாக அவை மறைந்து விடும்.
  • பனிக்குடம் உடைந்த ஒரு மணி நேரத்தில் மாடு கன்றை ஈன வேண்டும். கன்று ஈன்ற 6 மணி நேரத்தில் நஞ்சுக் கொடி விழ வேண்டும். இதுபோல் முறையாக சினைப் பசுவைப் பராமரிக்க வேண்டும்.

நோய்கள்

சினை மாடுகளில் கருச்சிதைவு நோய், கருப்பை அழற்ச்சி, கருப்பை வெளித்தள்ளுதல் போன்ற நோய்கள் குறித்த அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

இந்த முறைகளை விவசாயிகள் கையாண்டால் ஆரோக்கியமான கன்றுக் குட்டியையும், நல்ல பால் வளத்தையும் பெருக்க முடியும்

கேள்வி பதில்கள்

கேள்வி: மாடு கன்று போட்டு ஒரு மாதம் ஆகிறது. கன்று போட்ட நாள் முதல் பால் கறக்கவிட மாட்டேன் என்கிறது, உதைக்கிறது, காலை கட்டினாலும் துள்ளுகிறது. ஆனால் மடிவீக்கம் எதுவுமில்லை. பால் கறப்பதற்கு என்ன செய்யலாம்?

பதில்: மாட்டுக்கு இது முதல் கன்று என்பதால் கூச்சக்குணத்தால் இப்படி உதைக்கவும், பால் கறக்க விடாமல் செய்கிறது என்று நினைக்கிறேன். இது பிறவிக்குணமாகவோ இருக்கலாம். நாளாக நாளாக தான் இதை சரி செய்ய வேண்டும். இனிமேல் பால் கறக்கும் போது ஏதாவது ஒரு வகையில் மாட்டின் திசை திருப்பி விடும் வகையில் செய்து பால் கறக்க வேண்டும்.

கேள்வி: மாட்டுக்கு வயிறு பூசலாக இருக்கிறது. மூன்று நாளாக மூச்சு வாங்கிறது. என்ன செய்யலாம்?

பதில்: டிம்பால் என்ற மருந்து இருக்கிறது. தினமும் காலையில் 50 கிராம் என்ற விகிதத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு கொடுங்கள்.

ஆதாரம்: தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை.

நம் நாட்டில் வளர்ந்து வரும் மக்கள் தொகையின் உணவு மற்றும் ஊட்சத்திற்கான பாதுகாப்பை ஒருங்கிணைந்த கால்நடை வளா்ப்பு மூலம் பூர்த்தி செய்யலாம். பலதரப்பட்ட கால்நடை இனங்களில், பன்றி வளர்ப்பு, இறைச்சி உற்பத்திக்கான ஒரு முக்கியமான ஆதாரமாக கோழி வளர்ப்பிற்கு அடுத்து இடம் பிடிக்கிறது. இறைச்சி உற்பத்தி மட்டமல்லாமல், எருவும் தருகிறது. பன்றி வளா்ப்பினால்  ஊரக உழவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தருகிறது. மற்றம் உபரி வருமானம் தருவதால் உழவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடிகிறது.

சினை நிற்காமல் போன கால்நடைகள் சினை நிற்க இயற்கை மருத்துவம்.

இன்னைக்கு இருக்குற அவசர உலகத்துல மாடு சினை நிக்கலைனா உடனே விற்க போயிடுறோம்அது என்ன பண்ணும் பாவம்எல்லாமே இரசாயனம் தெளிச்ச தீணி தான் போடுறோம்தீவணம் ன்னு வெளிய பெருக்கான் கழிவு மாறி எதையோ வாங்கி போடுறோம்அதெல்லாம் எதுல செய்யுறாங்க என்னென்னா கூட சேர்க்குறாங்க ன்னு நிஜமா நமக்கு தெரியுமா

பண்றதெல்லாம் தப்பு நாம தான்இதனால தான் மாட்டுக்கு தற்காலிக மலட்டுத்தன்மை வருதுஇன்னைக்கு இருக்குற நிலைல தீணி பெரும் பாடு தான்இருந்தாலும் புதுசா கறவை மாடு வாங்குறதுக்கு கொஞ்ச காலம் தட்ட போட்டு மாட்டை இந்த சிகிச்சையை செஞ்சு அதோட தற்காலிக மலட்டு தன்மையை சரி செஞ்சுரலாம். 

தேவையான பொருட்கள்:

1. வெள்ளை முள்ளங்கி.
2.. கற்றாளை துண்டு
3. முருங்கை இலை
4. பிரண்டை (தண்டு)
5. கறிவேப்பிலை
6. மஞ்சள் கிழங்கு

சிகிச்சை அளிக்க வேண்டிய நெறிமுறைகள்:

சினை நிற்கவில்லை என்று உறுதியாக தெரிந்ததும்அன்றிலிருந்தோ அல்லது அடுத்த நாள் முதலோ சிகிச்சையை துவங்க வேண்டும்.

1. முதல் ஐந்து நாட்களுக்கு தினமும் ஒரு வேலை முழு வெள்ளை முள்ளங்கியை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரைஉப்பும் தடவி கொடுக்கவும்.
(நாள் 1 -5)

2. அடுத்த ஆறாவது நாள் முதல் நான்கு நாட்களுக்கு அதவாது ஒன்பதாவது நாள் வரைகற்றாழையை முட்களை சீவிவிட்டுதினமும் ஒரு வேலை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரைஉப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 6 -9)

3. அடுத்த நான்கு நாட்களுக்கு பத்தாவது நாள் முதல் பதிமூன்றாவது நாள் வரை , நான்கு கை அளவு அப்போது பறித்த முருங்கை இலையை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரைஉப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 10 -13)

4. அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கை அளவு அப்போது பறித்த பிரண்டையை ( தண்டு மட்டும்வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரைஉப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 14 -17)

5. இறுதியாக அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கை அளவு அப்போது பறித்த கறிவேப்பிலை உடன் மஞ்சள் ஒரு ஓரிரு கிழங்கு (பெரியாத இருப்பின் ஒன்றுசிறியது எனில் இரண்டுகடையில்வாங்கிய பொடியை எக்காரணம் கொண்டும் உபயோகிக்க வேண்டாம்வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரைஉப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 18 -21).

மேற்சொன்ன அனைத்தையும் ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டுமே கொடுக்க வேண்டும்நேரடியாக உண்ண கொடுக்க வேண்டும்கட்டாயம் மாடு சினை நிற்கும்இல்லை எனில் மேலும் ஒரு முறை இதை ஓரிரு நாட்கள் இடைவெளிக்கு பிறகு தொடரவும்கட்டாயம் மலடு நீங்கி சினை நிற்கும்.

பேராசிரியர் திரு.புண்ணியமூர்த்தி

கால்நடைகளுக்கு மாற்றுத் தீவனமாக அசோலா

கால்நடைகளின் தீவனப் பற்றாக்குறையைச் சமாளிக்க அசோலா செடிகளை மாற்றுத் தீவனமாகப் பயன்படுத்துமாறு, கால்நடைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ஈரோட்டில் உள்ள கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியர்கள் கவிதா, யசோதை ஆகியோர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

 தமிழகத்தில் பருவமழை மாற்றத்தால் வறட்சி நிலவுகிறது. மேலும், விவசாயம், மேய்ச்சல் நிலங்களின் பரப்பளவும் குறைந்து கொண்டே வருவதால் தீவனப் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதனால், மாற்றுத் தீவனமான அசோலாவைப் பயன்படுத்தி தீவனச் செலவு மற்றும் தீவனத் தட்டுப்பாட்டைக் குறைக்கலாம்.

அசோலா, பெரணி வகையைச் சார்ந்த மிதவைச் செடியாகும்.

இவை நீரின் மேற்பரப்பில் வேகமாக வளரும்.

அசோலாவை கால்நடைகளுக்குப் பச்சையாகவோ, உலர் நிலையிலோ கொடுக்கலாம்.

அசோலாவில் 50 முதல் 60 சதவீதம் வரை புரதச்சத்து, பீட்டா கரோட்டின், அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புகள் உள்ளன.

அசோலாவை கறவை மாடுகளுக்கு மாற்றுத் தீவனமாகப் பயன்படுத்தினால் பாலின் கொழுப்புச் சத்து 10 சதவீதமும், கொழுப்பு அல்லாத திடப்பொருளின் அளவு 3 சதவீதமும் அதிகரிக்கும்.

மேலும், பாலின் உற்பத்தி 10 முதல் 20 சதவீதம் அதிகரிக்கிறது.

அசோலாவை கோழிகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தும்போதுகோழிகள் விரைவாக வளரும்.

அசோலா சிறந்த உரமாகவும் பயன்படுகிறது.

அசோலாவை நன்றாகக் கழுவிய பின் கறவை மாடுகளுக்கு அளிக்க வேண்டும்.

முதன்முதலில் அசோலாவைப் பயன்படுத்தும்போது அடர் தீவனம் ஒருபங்கு, அசோலா ஒருபங்கு வீதம் கொடுக்க வேண்டும்.

நன்கு பழக்கப்பட்ட பின் அசோலாவை தனியாகவே கொடுக்கலாம்.

பசுந் தீவனப் பற்றாக்குறையை ஈடுசெய்ய புரதச்சத்து மிகுந்த அசோலாவை உற்பத்தி செய்து நிரந்தர மாற்றுத்தீவனமாகப் பயன்படுத்தலாம்.

        பன்றி 

  1. தீவனங்களை மாற்றும் திறன் பன்றிகளுக்கு அதிகளவு இருக்கிறது.
  2. பன்றிகள் பலதரப்பட்ட உணவுகளை புற்கள், தீவனப்பயிர்கள், சேதமடைந்த தீவனங்களை, உண்டு அதிக மதிப்புள்ள இறைச்சியை தருகின்றன.

  3. பன்றிகள் சிறிய இடைவெளியிலேயே தன் இனத்தைப் பெருக்கும். ஒரு பெண் பன்றி 8-9 மாதங்களிலேயே குட்டி ஈனும். ஒரு வருடத்திற்கு 2 முறை குட்டி ஈனும். ஒவ்வொரு இனப்பெருக்கத்தின் போது 8-12  பன்றிக்குட்டிகளை ஈனும்.
  4. பன்றி வளர்பபிற்கு சிறிய முதலீட்டாலான கட்டடங்கள் மற்றும் உபரணங்கள் போதுமானது.
  5. பன்றிகள் இறைச்சியை 65%க்கு குறையாமல் அளிக்கும்.
  6. பன்றிக் கறியானது அதகி கொழுப்புடன், குறைவான நீர்ச் சத்துடன், அதிக சக்தி அளிக்கக் கூடிய ஒரு ஊட்டச்சத்து உணவாகும். இதில் தையாமின், நியாசின் ரிபோஃபிளேவின் என்ற விட்டமின்கள் அதிகளவில் உள்ளன.
  7. பன்றி எரு வேளாண் பண்ணைகள் மற்றும் மீன் குட்டைகளில் உரமாக பயன்படுத்தப்படுகிறது.
  8. பன்றிகளில் அதிகளவு கொழுப்பு இருப்பதால், கோழித் தீவனம், சோப், பெயின்டுகள் மற்றும் இதர வேதியியல் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
  9. பன்றி வளர்ப்பினால் விரைவில் வருமானம் 6-8 மாதங்களிலிருந்து கிடைக்கிறது.
  10. பன்றி இறைச்சியினால் உள்ளூர் மற்றும் வெளிநாடு ஏற்றுமதி சந்தைகளில் அதிகளவு சந்தை வாய்ப்பு உள்ளது.

பன்றி வளர்ப்பிற்குத் தேவையான மேலாண்மை முறைகள்

பன்றிக்குடில் மேலாண்மை

  1. சற்று உயரமான இடத்தில் குடில் அமைக்க வேண்டும்.
  2. நீர்தேங்காத, சொதசொதப்பான மற்றும் அதிக மழைபெறும் இடங்களைத் தவிர்க்க வேண்டும்.
  3. குடிலின் பக்கச் சுவர்கள் 4-5 அடியிலும், மீதமுள்ள உயரத்திற்கு இரும்பு குழாய்கள் (அ) மரக்குச்சிகள் கொண்டு அமைக்க வேண்டும்.
  4. சுவர்களில் ஈரம் உள்ளே கசியாதவாறு பூச்சிடவேண்டும்.
  5. குடிலின் உள்ளே அறைகள் 8-10 அடி உயரத்துடன் இருக்க வேண்டும்.
  6. நல்ல காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
  7. தரைப்பகுதி திடமாக, வழுக்காதவாறு, சரிவாகவும், நீர் வடியுமாறு இருக்க வேண்டும்.
  8. உண்ணும் கலனுக்கான இடம் 6-12 இந்த அளவுடன் இருக்க வேண்டும்.
  9. எளிதாக சுத்தம் செய்வதற்காக உண்ணும் கலனின் மூலைகள், வடிகால் பகுதி, சுவர்களின் மூலைகள் மொழுமொழுப்பாக இருக்க வேண்டும்.
  10. ஒவ்வொரு பன்றிக்கும் போதுமான அளவு இடம் ஒதுக்க வேண்டும்.
  11. கோடைக் காலங்களில் நிழலும், குளிர்ந்த நீரும் குடிப்பதற்கு அளிக்க வேண்டும்.
  12. சாணி மறறும் சிறுநீரை சுத்தமாக அகற்றி, சுத்தம் செய்ய வேண்டும்.
  13. ஆண் பன்றி / பால் தரும் பெண் பன்றிக்கு என தனித்தனியே இடம் ஒதுக்கி தரவேண்டும்.

இனவிருத்திக்கான பன்றியைத் தேர்வு செய்தல்

  1. வங்கியிலிருந்து கடன் தொகை பெற்றவுடன், அருகில் உள்ள கால்நடை பண்ணையிலிருந்து நல்ல தரமான பன்றி இனத்தை வாங்க வேண்டும்.
  2. வர்த்தக முறையில் பன்றி வளர்ப்பு செய்வதாக இருந்தால், நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள கலப்பு இனம் (அ) வெளிநாட்டு இனத்தை வாங்க வேண்டும்.
  3. இனவிருத்தி செய்யும் நிலையில் உள்ள பன்றிகளை வாங்க வேண்டும்.
  4. புதிதாக வாங்கிய பன்றிகளுக்கு அடையாளக் குறியிட வேண்டும்.
  5. நோய்களுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும்.
  6. புதிதாக வாங்கிய பன்றிகளை முதல் 2 வாரங்களுக்கு நேரடி கண்காணிப்பில் வைத்திருந்து, பின் மற்ற பன்றிகளுடன் கலந்து விட வேண்டும்.
  7. பரிந்துரைக்கப்பட்ட படி ஒரு குடிலுக்கு தேவையான அளவு பன்றிகளை வாங்க வேண்டும்.
  8. மூன்று மாத இடைவெளி விட்டு 2 பிரிவுகளாக பன்றிகளை வாங்கவும்.
  9. தேவையில்லாத, முதிர்ந்த பன்றிகளை தரப்பகுப்பு செய்ய வேண்டும்.
  10. 10-12 முறை இனப்பெருக்கம் செய்து குட்டி ஈன்ற முதிர்ந்த பன்றிகளை நீக்க வேண்டும்.

தீவன மேலாண்மை

  1. பன்றிகளுக்கு சிறப்பான தீவன உணவை தர வேண்டும்.
  2. அடர் தீவனங்களை தேவையான போது தரலாம்.
  3. விட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களை போதுமான அளவு தரவும்.
  4. போதுமான அளவு சுத்தமான நீரை  பருகத் தரவும்.
  5. பன்றிகளுக்கு போதுமான அளவு பயிற்சிகளைத் தரவும்.
  6. கர்ப்பக் காலத்தில் பெண் பன்றிகளுக்கு அதிக ஊட்டச்சத்துள்ள தீவனங்களைத் தரவேண்டும்.
  7. பெண் பன்றியின் வயது, எடை, அளவைப் பொறுத்து பெண் பன்றிகளுக்கு அளிக்கும் உணவின் அளவு மாறுபடும்.
  8. வீட்டு சமையல் அறை/ஹோட்டல் /குளிர்பதன சேமிப்பு/சேமிப்புக் கிடங்கிலிருந்து வரும் கழிவை தீவனமாகப் பயன்படுத்தலாம்.

நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு

  1. குறைந்த அளவு உணவு எடுத்துச் கொள்ளுதல், காய்ச்சல், மாறுபட்ட நடவடிக்கை போன்ற உடல்நிலை சரியில்லாத அறிகுறிகளைக் கவனித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
  2. உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தால் அருகில் உள்ள கால்நடை மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.
  3. பொதுவான நோய்களுக்கு எதிராகப் பாதுகாப்பு தரவேண்டும்.
  4. பெரிய அளவில் நோய் பாதிக்கப்பட்டால், ஆரோக்கியமாக உள்ள பன்றிகளிடமிருந்து நோய் தாக்கிய பன்றிகளை தனித்து வைக்க வேண்டும்.
  5. பன்றிகளுக்கு சீராக வயிறு சுத்தம் செய்யும் மருந்துகளைத் தரவேண்டும்.
  6. சுகாதாரத்தை பேண, பன்றிகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
  7. பரிந்துரைக்கப்பட்ட படி தடுப்பூசி மருந்துகளைப் போட வேண்டும்.

இனப்பெருக்கக் கால கவனிப்பு

  1. பன்றிகள் சாதாரணமாகவே அதிகளவில் தன் இனத்தை உற்பத்தி செய்யும். வருடத்திற்ககு 2 முறை இனப்பெருக்கம் செய்யும்.
  2. 10 பெண் பன்றிகளுக்கு 1 ஆண்  பன்றி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  3. இனப்பெருக்கத்தின் உச்சநிலையில் இருக்கும் போது இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்

கர்ப்பக்கால கவனிப்பு

ஓரிற்றுப் பன்றிக்குட்டிகளை ஈனும் ஒரு வாரத்திற்கு முன் உள்ள கர்ப்பமுள்ள பெண் பன்றிகளுக்கு போதுமான இடம், உணவு, தண்ணீர் போன்றவை கிடைக்குமாறு அதிக கவனிப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண் பன்றிகள் மற்றும் ஓரிற்றுப் பன்றிக்குட்டிகள் உள்ள கூடாரத்தை பன்றிக்குட்டிகளை ஈனும் தேதிக்கு முன்பே 3-4 நாட்களுக்கு நுண்ணுயிர் நீக்கம் செய்ய வேண்டும். பெண் பன்றிக் குட்டிகளை குட்டி ஈனும் கூடாரத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.

பன்றிக் குட்டிகளைக் கவனித்தல்

    1. புதிதாகப் பிறந்த பன்றிக் குட்டிகளை அதிகக் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.
    2. நஞ்சுக்கொடியை அறுத்த இடத்தில் அயோடின் கொண்டு நுண்ணுயிர் நீக்கம் செய்ய வேண்டும்.
    3. முதல் 6-8 வாரங்களுக்குத் தாய்பால் தரவேண்டும்.
    4. மோசமான காலநிலைகளில், குறிப்பாக 2 மாதங்கள் இருக்கும் போது பன்றிக்குட்டிகளைப் பாதுகாக்க வேண்டும்.
    5. பிறந்த பிறகு ஊசிப் போன்ற பற்களை எடுத்து விட வேண்டும்.
    6. பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகளைப் போட வேண்டும்.
    7. குட்டிகளுக்கு இரத்த சோகை ஏற்படாமல் இருக்க இரும்புச்சத்து அடங்கிய உணவை தர வேண்டும்.
    8. ஆண் பன்றிக் குட்டிகளை இனப்பெருக்கம் செய்யாமல், இறைச்சிக்கு பயன்படுத்துவதாக இருந்தால், 3-4 வாரங்களில் விறைநீக்கம் செய்ய வேண்டும்.
    9. பால் தரும் பெண் பன்றிக்கு கூடுதலாக உணவு தர வேண்டும்
    1. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துதல்
        நமது இந்திய நாட்டில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையால் நாம் உணவு உற்பத்தி செய்யும் கட்டாயத்தில் உள்ளோம். இந்தியாவில் விவசாயிகள் அதிகமாக வாழக்கூடிய கூடிய இடங்களில் அங்குள்ள மக்களுக்கான பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. ஆட்கள் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி, மழைக்காலங்களில் சரியாக மழை வராமல் இருத்தல், வன விலங்குகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் மக்களுக்கு வரும் பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன.

        தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, குறைவான எண்ணிக்கையில் ஆட்களைக் கொண்டு செய்யக்கூடிய விவசாய முறைதான் இன்றைய காலகட்டத்தில் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படிப்பட்ட நவீன தொழில்நுட்ப முறையில் பலவகையான விவசாயம் முறைகள் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் மண்ணில்லா விவசாய முறை சாத்தியம் என இந்திய தொழில்நுட்பம் நிரூபித்துள்ளது.
         மண் இல்லாத விவசாயமா? என்ற கேள்வி உங்கள் அனைவர் மனதிலும் எழுந்திருக்கும். மண் இல்லாத விவசாய முறைதான் "ஹைட்ரொபோனிக்ஸ் விவசாயம்" (ரசாயன உணவு கொண்டு நீரில் வளரும் செடிகள்) ஆகும். அதைப்பற்றி இப்போது காணலாம்.

இந்தியாவின் வேளாண் தொழில் :
         இந்தியாவின் "முதுகெலும்பு விவசாயமும் விவசாயிகளும்" தான். அனைத்து தொழில்களுக்கும் முன்னோடியாக விளங்குவது வேளாண் தொழில் ஆகும். இந்திய மக்கள் தொகையில் 60 சதவிகிதம் பேர் விவசாயத்தையும் விவசாயம் சார்ந்த தொழில்களையும் நம்பியுள்ளனர். விவசாயத்தைப் பொறுத்தவரை பல்வேறு தொழில்நுட்பங்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. விவசாயத்திற்கு மிகவும் அடிப்படையாக இருப்பது தண்ணீர் மற்றும் மண் ஆகும்.

       ஆனால் தற்போது உள்ள நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மண்ணில்லாமல், நிலம் இல்லாமல் செடிகளை வளர்க்கும் முறை தான் "ஹைட்ரொபோனிக்ஸ் விவசாயம்" ஆகும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் தற்போது பலபேர் விவசாயம் தொடர்பான விழிப்புணர்வை அடைந்து வருகின்றனர்.

 "ஹைட்ரொபோனிக்ஸ் விவசாயம்" என்றால் என்ன?

      "ஹைட்ரொபோனிக்ஸ் விவசாயம்" என்பது புதிய அறிவியல் கண்டுபிடிப்பு பெயர் இல்லை. கிட்டத்தட்ட  நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப் பின்பு பண்டைய கால மக்கள் ஏரி மற்றும்  ஆறுகள் போன்ற நீர் நிரம்பிய இடங்களில் raft(குவியல்) அதாவது, படகு போன்று செய்து நெல் மூட்டை மற்றும் பயிறு வகை மூட்டைகளை படகின் மேல் வைத்து  மிதக்க விடுவார்கள். 

      அதன்பின் நெல் மூட்டைகள் நீரில் இருக்கும் உரத்தை(மருந்தாக) எடுத்துக்கொண்டு நெல் பயிராக வரும். அதுமட்டுமல்லாமல், "hanging gards babilon" என்னும் "Hanging Garden" கல்வெட்டுக்களில் நீரைப்  பாய்ச்சி அதன் மூலம் பயிர்களை வளர்த்தனர் என அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது. கடந்த 15 மற்றும் 17 வருடங்களாக இந்த "ஹைட்ரொபோனிக்ஸ்" உபயோகப் படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
      "ஹைட்ரொபோனிக்ஸ்" என்ற இந்த புதிய செயல்முறை வெளிநாடுகளில் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மண் இல்லாத விவசாயம் இந்த முறையில் சாத்தியமாகிறது.

பயிர்கள் தயாரிக்கும் முறை

          பயிர்களை நீர்மூலம்  வளர்க்க முடியும். நீரில் ஆக்சிஜன், பொட்டன்ஷியல் ஹைட்ரஜன், மற்றும் பயிர் வளர்வதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நீரில் இருக்க வேண்டும்.  இவையே “ஹைட்ரோபோனிக்ஸ்” என  கூறப்படுகிறது.

          குறிப்பிட்ட இடத்தில்"poli house" அமைத்து அங்கு வரிசையாக பிளாஸ்டிக் பைப்புகளை அமைக்க வேண்டும். அதில் செடிகளுக்கு நீரோட்டம் பரவலாக செல்லுமாறு துளைகள் அமைக்க வேண்டும். அதன் பின்பு ஒரு சிறிய பிளாஸ்டிக் கப்பில் தேங்காய் துகள்களை நிரப்பி அதில் இரண்டு விதைகளை நிரப்பவேண்டும். விதை முதல்கட்டமாக இந்த இடத்தில்தான் 15 நாட்களில்  வேர் பிடிக்க தொடங்குகிறது.

          இந்த வேர் பிடிக்கும் காலகட்டத்தில் ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீர் மற்றும் ஒரே மாதிரியான தட்பவெப்ப வெப்பநிலை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.  பிறகு செடிகள் வேர் விட்டதும் இரண்டாவது கட்டமாக Net parts(நிகர பாகங்கள்) - க்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு மீண்டும் செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த நீர் பிளாஸ்டிக் பைப்புகள் வழியாக செலுத்தப்படுகிறது.

         தேவையான ஈரப்பதத்தை தக்க வைக்க தேங்காய் நார் துகள்கள் இந்த செடிகளுக்கு பக்க பலமாக உள்ளது. அதன் பிறகு இறுதியாக செடிகள் மற்றும் கீழே கீரைகள் முழுமையான வளர்ச்சி அடைந்து விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்படுகிறது.

ஹைட்ரோபோனிக்ஸ்” விவசாய முறையின் சிறப்பம்சங்கள்:

         “ஹைட்ரோபோனிக்ஸ்” விவசாய முறையின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இதில் 90% நீரை நம்மால் சேமிக்க முடியும்.  ஏனென்றால் மூடப்பட்ட பைபிளில் இருக்கும் துளைகள் வழியே தான் செடிகள் வளர்கின்றன. அதனால் தண்ணீர் எளிதில் ஆவியாகும் பிரச்சனையும் இல்லை. மேலும், இதற்கு உரம் தேவையில்லை. இதனால் எந்தவித பூச்சி தாக்குதலும் மற்றும் மண் சார்ந்த நோய்களும் ஏற்படுவதில்லை. மேலும் பூமியில் வளர்க்கப்படும் செடிகளை விட வேகமாக இந்தச் செடிகள் வளரும். அத்துடன் இந்த கீரைகள் 100 சதவிகிதம் சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்கும்.

ஹைட்ரோபோனிக்ஸ்” மூலம் வளர்க்கப்படும் பயிர்கள் :

          இந்த மண்ணில்லா விவசாய முறை மூலம்  பூச்செடிகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள், மூலிகைச்செடிகள் உள்ளிட்டவற்றை வளர்க்கலாம். காய்கறிகளில் தக்காளி, வெண்டைக்காய், புடலங்காய், உள்ளிட்ட காய்கறிகளையும் மற்றும்  முதலில் செம்பருத்தி, ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பூக்களையும் வளர்க்க முடியும். மேலும் புதினா, கொத்தமல்லி போன்றவற்றையும் வளர்க்கலாம்.

    “ஹைட்ரோபோனிக்ஸ்” விவசாய முறை எளிதாகவும் மற்றும்  பயன் அளிப்பதாகும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இம்முறையில் விவசாயம் செய்தவர்கள் கூறுகின்றனர். மேலும் இதனால் 90 சதவிகிதம் வரை நீரை சேமிக்க முடிகிறது என்றும், பயிர்களுக்கு உரம் தேவையில்லை என்றும் அதிகமாக பூச்சி தாக்குதலும் ஏற்படுவதில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். மிக எளிதாக இப் பயிர்களை செய்ய முடிகிறது என்று விவசாயிகள் மகிழ்ச்சியாக கூறுகின்றனர்.

பாரம்பரிய நெல் ரகங்கள்

நாம் நிலத்தை பார்வையிடும் போது, பாரம்பரிய ரகமான கிச்சிலி சம்பா நெல்லை 10 ஏக்கரில் பயிர் செய்திருந்தார், இந்த நெல் சன்ன ரக அரிசியைத் தரக்கூடியது. கிச்சிலி சம்பா அரிசியைச் சமைத்து உண்ண பலம், தேகச் செழுமை முதலியவை உண்டாகும் என நமது சங்கப் பாடலில் விவரிக்கப் பட்டுள்ளது,

நாட்டிற் பயிராகும் நற்கிச்சிலிச் சம்பா
வாட்டமறவே சமைத்து வாயினிக்க - வீட்டினிலே
உண்ணப் பலம்உண்டாம் ஒண்டொடியே! மெய்பெருக்கம்
வண்ணமிகு மேனி வழுத்து.

கருப்பு கவுனி நெல் ரகத்தை மூன்று ஏக்கரில் பயிர் செய்திருந்தார். இதன் வயது 140 நாட்களாகும், அந்த அரிசி அவல் செய்வதற்கும், இனிப்புப் பொங்கல் செய்வதற்கும் மிகவும் பிரசித்தி பெற்ற ரகமாகும். கருப்புக் கவுனி அரிசியால் செய்யப்பட்ட கஞ்சியை பருகுவதால் குதிகால் வலி நீங்கும் என்றும், நாய்க்கடி விஷம் நீங்குவதற்கும் பத்தியத்துடன் இந்த கஞ்சியை உண்ணலாம் என்றும் தெரிவித்தார்.

அவரது சொந்த உபயோகத்துக்காக 50 குழி நிலத்தில் மாப்பிள்ளை சம்பா நெல்லையும் பயிர் செய்து, 6 மூட்டை நெல்லை அறுவடை செய்துள்ளார். மாப்பிள்ளைச் சம்பா 180 நாள் பயிராக ஆடி மாதம் நாற்றுவிடப்பட்டு தைமாதம் அறுவடை செய்யப்படுகிறது. இவ்விதம் இப்பயிர் மழைக்காலம், குளிர்காலம், இளவெய்யில் காலம் என மூன்று பருவங்களையும் கடந்து வளர்கிறது. இதனால் பயிரில் நல்ல சத்து சேர்கிறது, இதனால் இந்த அரிசியை உண்ணும் போது நல்ல உடல் பலத்தை தருகிறது என்றும், தொடர்ந்து பயன்படுத்தும் போது சர்க்கரை நோய் கட்டுப்படுத்தக் கூடியது என்றும் தெரிவித்தார்.

“ஏனுங்க பாத்தீங்ளா... இந்த மாப்பிள்ள சம்பா, கருப்பு கவுனியெல்லாம் எந்தமாறி மகத்துவம் உள்ளது தெரியாம ஐ.ஆர் 8, ஐ.ஆர் 20னு ஒட்டு ரகத்த சாப்புட்டுபோட்டு, பொறவு சத்தில்லா சமுதாயமா இப்போ நிக்குறோமுங்க. ஏனுங்க நான் சொல்றது சரிதானுங்ளே?! புதுமாப்பிள்ளை பொலிவோட இருக்குறதுக்கு மாப்பிள்ள சம்பா வாங்கிப்போடு, சுறுசுறுப்பா களத்து வேலைய பாக்கனும்னா கருப்பு கவுனி கஞ்சி குடின்னு எங்க ஊரு பெரியவங்க சொல்லுவாங்கோ! இப்பவாச்சும் இந்த நெல்மணிகளோட அருமைய நாம புரிஞ்சக்கணுமுங்க!”

ஆலங்குடி பெருமாள் அவர்களின் ஒற்றை நாற்று நடவு வழிமுறையை பின்பற்றுகிறார். கிச்சிலி சம்பா சாகுபடிக்கு மொத்தமாக 7 கிலோ விதை நெல்லை மட்டும் பயன் படுத்தியுள்ளார். 7 கிலோ விதை நெல்லில் இருந்து பெறப்பட்ட நாற்றுகள் 12 ஏக்கரில் நடுவதற்கு போதுமானதாக இருந்ததாகவும், அவர் பண்ணையில் 10 ஏக்கரில் நாற்று நட்ட பின், இரண்டு ஏக்கர் நடுவதற்கு போதுமான நாற்றுக்கள் மீதம் இருந்ததாகவும் தெரிவித்தார்.

ஒற்றை நாற்றுநடவு முறை சிறந்த பலனைத் தருவதினால், அனைத்து பயிர்களையும் ஒற்றை நாற்று நடவு முறையிலேயே பயிர் செய்திருந்தார்.

ஒற்றை நாற்று நடவு முறையில் பயிர் செய்துள்ளதால் நாற்றுக்கு நாற்று 50 செ.மீ இடைவெளி விடப்பட்டுள்ளது. இடைவெளி போதுமான அளவு உள்ளதால் பயிர்கள் நுண்ணூட்ட சத்துகளுக்காகவும், காற்றுக்காகவும், ஒளிக்காகவும் ஒன்றுடன் ஒன்று போட்டியிடாமல் திடமாக வளர்கிறது என்றும், நாற்றுகள் நெருக்கமாக இருந்தால் நாற்று நீண்டு வளர்வது மட்டுமல்லாமல் அதிக தூர் வெடிக்காது, எனினும் பயிர் இடைவெளி பயிருக்கு பரிந்துரைக்கப் பட்ட அளவைவிட மேலும் அதிகரித்தாலும் மகசூலில் பாதிப்பு ஏற்படும் என்றும் தனது அனுபவத்தில் கவனித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

உதாரணமாக இவர் பயிரிட்ட கிச்சிலி சம்பாவில் 2 ஏக்கர் மட்டும் 50 செ.மீ சரியான இடைவெளியுடன் நட்டிருந்தார், இந்த பயிரில் 45 முதல் 50 தூர்கள் வரை வந்துள்ளது, இந்த இரண்டு ஏக்கரில் மட்டும், ஏக்கருக்கு 35 மூட்டை நெல்லை (62 கிலோ மூட்டை) அறுவடை செய்துள்ளார்.ஆனால் மீதியுள்ள 8 ஏக்கரில் இடைவெளி 50 செ.மீட்டரை விட அதிகமாக வைத்து நடவு செய்து விட்டதால் மகசூல் குறைந்துள்ளது, இந்த 8 ஏக்கரில், ஏக்கருக்கு 23 மூட்டை நெல் மட்டுமே கிடைத்துள்ளது.

ஒரு ஏக்கருக்கு தோராயமாக 13,500 ரூபாய் செலவு செய்து இந்த மகசூலை எடுத்துள்ளதாகவும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

நெல் (Paddy)

நெல் என்பது புல்வகையை சேர்ந்த ஒருவகை தாவரமாகும்தென்கிழக்கு ஆசிய நாடுகள் தான் இதன் பூர்விகம் ஆகும்இது ஈர நிலங்களில் வளரும் தாவரமாகும்இன்றளவும் இந்தியாவில் பயிரிடப்படும் தானியங்களில் நெல் முதலிடத்தில் உள்ளதுதென் இந்தியர்களின் அன்றாட உணவுகளில் அரிசியின் பங்கு அதிகம்.

உலக அளவில் தானிய உற்பத்தியில் நெல் மூன்றாம் இடம் வகிக்கிறதுசோளம்,கோதுமைக்கு அடுத்து அதிகம் பயிராகும் தானியம் நெல் ஆகும்.

நெல்லின் மேலுள்ள தோல் உமி என்று அழைக்கப்படுகிறதுஇது கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறதுநெல்லின் உமி ஆல்கஹால் தொழிற்ச்சாலைகளில் பதப்படுத்தப்பட்ட பானமாக பயன்படுத்தப்படுகிறதுகோழி பண்ணைகளில் கோழி தீவனமானாகும் பயன்படுகிறது.

மேலுறை நீக்கப்பட்ட நெல்லானது அரிசி என்று அழைக்கப்படுகிறதுஅரிசியைத்தான் உணவு பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

ரகங்களுக்கு ஏற்றவாறு நெல்லின் விளைச்சல் காலம் மாறுபடும். 30 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை வளரும் ரகங்கள் உள்ளனநெல் உற்பத்திக்கு வண்டல் மண் சிறந்தது.

நாற்றங்கால் தயாரிக்கும் முறை:

ஏக்கர் நிலத்திற்கு 30 – 40 கிலோ விதை நெல் போதுமானதாகும்ரகங்களுக்கு ஏற்றவாறு தரமான விதைகளை அரசாங்க களஞ்சியத்தில் வாங்கியோ அல்லது முந்தய சாகுபடி நெல்லையோ பயன்படுத்தலாம்.

சென்ட் நிலத்தை நன்கு ஏர் உழுது நீர் பாய்த்து அதில் இலை சத்துக்கள் மற்றும் தொழுவுரம் போட்டு இரண்டு நாட்கள் ஊற வைக்க வேண்டும்.

விதை நெல்லை சுமார் 8 – 10 மணி நேரம் ஊறவைத்து அதை ஒரு ஈரமான கோணிப்பையில் போட்டு முளைப்போட வேண்டும்.

அடுத்த நாள்மறுபடியும் அந்த நிலத்தை உழுது நீர் பாய்த்து சமன்படுத்தி சிறிது நேரம் தெளியவிட வேண்டும்பின்பு முளைகட்டிய விதையை அந்த நிலத்தில் சீராக தூவ வேண்டும்.

முதல் ஒரு வாரத்திற்கு அதிகப்படியான நீர் விடாமல் தேவையான அளவு நீர் விட்டு ஈரமாக பராமரிக்க வேண்டும்நாற்றுகள் முளைக்க ஆரம்பித்தவுடன் அதன் அளவுக்கு ஏற்ப நீர் பாய்ச்சலாம்.

30 நாட்களுக்கு பின் நாற்றுகள் 10 செ.மீ நீளம் வளர்ந்த பின்பு அதனை பிடுங்கி பயிரிடப்போகும் நிலத்தில் நடலாம்.

பயிரிடும் முறை:

நாற்றுகள் 20 நாட்கள் வளர்ந்த பின்பு பயிரிட போகும் நிலத்தை உழுது அதில் தேவையான அளவு தழை சத்து மற்றும் தொழுவுரம் போட்டு நீர் பாய்ச்சி ஒரு வாரம் நன்கு மக்கும் வரை நீர் பாய்ச்ச வேண்டும்.

நாற்றுகள் 30 நாட்கள் ஆனா பின்பு மறுபடியும் நிலத்தை நன்கு உழுது நீர் பாய்ச்சி சமன்படுத்தி கொள்ள வேண்டும்பின்பு நாற்றுகளை பிடுங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

பிடுங்கி வைத்துள்ள நாற்றுகளை ஒன்றுக்கொன்று 10 செ.மீ இடைவெளிகளில் இரண்டு அல்லது மூன்று நாற்றுகளை ஒன்றாக சேர்த்து 3 செ.மீ ஆழத்திற்கு நடவேண்டும்.

பின்பு 30 நாட்கள் வாரத்திற்கு மூன்று முறை நீர் பாய்ச்ச வேண்டும்அதிலுள்ள தேவையற்ற களைகளை நீக்க வேண்டும்.

சீராக நீர் பாய்த்து பராமரித்தால் 180 நாட்களில் அறுவடைக்கு தயாராகும்.

நெற்பயிரின் நோய்கள்:

1) குலை நோய்: (பைரிகுலேரியா ஒரைசா)

அறிகுறிகள்:

பயிரின் எல்லா வளரும் நிலைகளிலும்எல்லாக் காற்றுவெளி பாகங்களையும் தாக்கும் தன்மையுடையது.

இலை மற்றும் கழுத்துப் பகுதிகளிலும் (கதிர் காம்புதாக்கம் அதிகமாக இருக்கும்.

இலைகளில் ஆங்காங்கே மேலெழுந்த புள்ளிகள் உருவாகும்அவை நாளடைவில் நூற்புக்கதிர் வடிவம் (மனிதனின் கண்போன்ற வடிவம்பெறும்.

சிறுசிறு புள்ளிகள் தோன்றும் பின்னர் அவை ஒன்றிணைந்து வடிவம் பெறும்.

அதிகப்படியாக தண்டு சாய்தல் ஏற்படலாம்.

2) கதிர்க்காம்பு குலை நோய்:

கழுத்து (கதிர்க்காம்புகருமையடைந்துசுருங்கிவிடும் கதிரின் காம்பு உடைந்து தொங்கும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர்களான பென்னாபிரபாட் டிக்கானா, ‚ரங்காசிம்மபுரிபல்குணாசுவர்ணமுகிசுவாதி.ஆர் – 36, எம்.டி.யூ 9992, எம்.டி.யூ 1005, எம்.டி.யூ 7414.

அறுவடை செய்த பின்புஅடித்தண்டு மற்றும் மீதமிருக்கும் வைக்கோல் புற்களை எரித்து விடவேண்டும்.

3) பாக்டீரியா ஏற்படுத்தும் இலை கருகல் நோய்:

அறிகுறிகள்:

நாற்று வாடல்.

மஞ்சள் நிற கோடுகள் இலைகளில் காணப்படும்அவை இலைக் காம்பிலிருந்து உள்நோக்கி வளரும்.

ஆரம்பத்தில் புள்ளிகளிலிருந்து அதிகாலையில்பால்போன்ற அல்லது நிறமற்ற திரவம் வெளியேறுவதைக் காணலாம்.

புள்ளிகள் மஞ்சள் நிறமாக மாறும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

நோயில்லா வித்துக்களை வாங்கவேண்டும்.

நாற்றங்காலினை தனி இடத்தில் வளர்க்க வேண்டும்.

வயலில் உள்ள அதிகப்படியான நீரை வடிகட்டவும்.

பாதிக்கப்பட்ட பயிர்கள் இருக்கும் இடத்திலிருந்து நீர் ஆரோக்கியமான பயிர்கள் உள்ள இடத்திற்கு நீர் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எதிர்ப்புத்திறன் கொண்ட பயிரை வளர்க்கவும் – சுவர்ணாஅஜயாதீப்திபத்வா மசூரிஎம்.டி.யூ 9192.

4) கதிர் உறை அழுகல் நோய்:

அறிகுறிகள்:

ஒழுங்கற்ற புள்ளிகள் தோன்றும் அவற்றின் நடுப்பகுதி சாம்பல் நிறத்திலும்ஓரங்கள் அரக்கு நிறத்துடனும் காணப்படும்.

இலையின் நிறம் மங்கிக் காணப்படும்.

புள்ளிகள் தோன்றி பின்னர் ஒன்றிணைந்து இலையின் பெரும்பகுதியை ஆட்க்கொள்ளும்.

முளைக்காத நெல் குருத்துகள் அழுகிக் காணப்படும்.

பூக்கள் அரக்கு சிவப்பாக மாறிவிடும்.

வெள்ளைநிற பொடி போன்று படர்தலைக் காணலாம்.

நெற்கதிர்கள் ஆம்பிப் போய் காணப்படும்நெல் மணிகள் ஆரோக்கியமாக இராது.

தடுப்பு:

பாதிக்கப்பட்ட பயிர்களை அழித்திடல் வேண்டும்.

5) செம்புள்ளி நோய்:

அறிகுறிகள்:

நாற்ற்ஙகால் மற்றும் பயிரைத் தாக்கும்.

நாற்றுகளில் குலைநோய் ஏற்படுத்திடும்.

இலைகளில் புள்ளிகளை ஏற்படுத்தும்.

வித்துக்களும் பாதிக்கப்படும்.

நெற்கதிரில் செம்மை நிறம் படரும்.

இந்நோய் 50 சதவிகித இழப்பை ஏற்படுத்தும்.

தடுப்பு முறை:

இந்த பூஞ்சானை அழிக்க 10-12 நிமிடத்திற்கு வெந்நீரில் வத்துகளை, 53-540 சி-யில்போட்டுவைத்து பின்னர் உபயோகிக்க வேண்டும்.

6) நெற்பழம் நோய்:

அறிகுறிகள்:

நெல் மணிகள் தாக்கப்பட்டு மஞ்சள் நிறமாக மாறிவிடும் அவற்றலிருந்து பூஞ்சான் வளரும்.

பட்டுபோன்ற வளர்ச்சி காணப்படும்.

முதிர் நிலையில் இந்த பூஞ்சானின் வித்துக்கள் மஞ்சளிலிருந்து பச்சைகருமை நிறமாக மாறிவிடும்.

கதிரில் சில நெல் மணிகள் மட்டுமே பாதிக்கப்படும் மற்றவை நன்றாக இருக்கும்.

தடுப்பு:

காய்ந்த பயிர் பாகம் மற்றும் அடிதண்டுகளை அழித்திட வேண்டும்.

7) நெல் துங்ரோ நச்சுயிரி:

அறிகுறிகள்:

வளர்ச்சி நின்று விடும்அதனால் கட்டுடையாக நெற்பயிர்கள் காணப்படும்கதிர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

இலைகள்துரு நிறத்தில் காணப்படும்.

தாமதமாக பூ பூக்கும் கதிர்கள் சிறியதாக காணப்படும்.

நெல் மணிகள்கதிரில்குறைவாகக் காணப்படும்.

தடுப்பு:

தடுப்பு சக்தி கொண்ட பயிர்கள் – எம்.டி.யூ 9992, எம்.டி.யூ 1002, எம்.டி.யூ 1005, சுரேகாவிக்ரமர்யாபரணி.அர்.36.

பயிறு வகைகள் மற்றும் எண்ணெய் விதைச் செடிகளை பயிர் சுழற்சிக்கு பயன்படுத்தலாம்.

அரிசியின் பயன்கள்:

அரிசியில் அதிகஅளவு கார்போஹைட்ரெட் உள்ளதுஇது உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்தாகும்.

உடல் மெலிந்து காணப்படுபவர்கள் பச்சரிசி சாப்பிட்டால் கொழுப்பு சக்தி அதிகமாக கிடைக்கும்இதனால் உடல் எடை கூடும்.

சிகப்பு அரிசியில் அதிக அளவு பைபர் உள்ளதால் ரத்தத்தில் கொழுப்பு சேருவதை தடுக்கிறது.

வாழை மரம்

 பொதுப்பண்புகள் :

  * ஓர் வித்திலைச் செடியான வாழையில் வேர்த்தொகுதி நார்க்கொத்தைப் போலஆழமாகச் செல்லாமல் பரவி நிற்கும்.

 * இவை இருவித்திலைச் செடிகளில் உள்ளதைப்போல ஆணிவேரைக் கொண்டிருக்காது. 

 * இதனால் வலுவான காற்றடிக்கும்போது வாழைச்செடிகள் சாய்ந்துவிடக் கூடியவை.

 வாழை முதன்மையாக அதன் பழங்களுக்காகப் பயிரிடப்படுகிறதுஎனினும் சிலவேளைகளில் அலங்காரச்செடியாகவும்நார் பெறுவதற்காகவும்வேறு தேவைகளுக்காகவும் வாழை பயிரிடப்படுகிறது.

 சில இன வாழைகள் 8 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியதுஅதன் பெரிய இலைகள் 3.5 மீட்டர் நீளம் வரை இருக்கும்.

தண்டுப்பகுதி பெரும்பாலான செடியினங்களில் மண்ணுக்கு வெளியே கதிரவனின் வெளிச்சத்தை நோக்கி வளரும்ஆனால்வாழையில் அது கிழங்கு வடிவில் மண்ணுக்கடியில் மட்டுமே வளர்கிறது.

 வெளியில்செங்குத்தாக வளர்ந்து நிற்கும் தண்டு போன்ற பகுதி இலைக்காம்புகளின் அடிப்பகுதிகள் ஒன்றன்மேல் ஒன்று பற்றி நிற்பதால் உருவாகிய பகுதியாகும்.

 பயன்கள் :

 * இரவு சாப்பாட்டிற்கு பிறகு ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் பல் வலிபல் ஈறு வீக்கம்பல்லில் இரத்தக் கசிவுப் போன்ற நோய்கள் வராது.

 வாழை தண்டு சாறு குடித்து வந்தால் உடல் பெருக்கம் குறையும்உடல் அழகு பெறும்.

  * வாழை தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவினால் தீப்புண்சீழ் வடிதல் மற்றும் காயங்கள் குணமாகும்.

வாழைப் பட்டையை தீயில் காட்டி சூடேற்றி பிழிந்து காதில் விட்டால் காது வலி குணமாகும்.

 வாழை பூ பொரியல் செய்து சாப்பிடுவதினால் அஜிரணம்நீரிழிவு நோய் குணமாகும்.

 இரும்புச்சத்து அதிகம் உள்ளதால்ஹீமோகுளோபினை அதிகரித்துரத்த சோகை வராமல் தடுக்கிறது.

  * வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறதுஅதுபோல மூளையின் செயல்படும் ஆற்றலையும் அதிகப்படுத்துகிறதுமலச்சிக்கலுக்கு வாழைப்பழம் எடுத்துக்கொள்வது நல்ல தீர்வாக அமையும்.

 ஆப்பிளை விட 4 மடங்கு அதிகமான புரோட்டீன் சத்தும், 2 மடங்கு அதிகமான கார்போஹைட்ரேட் சத்தும், 3 மடங்கிற்கு அதிகமான பாஸ்பரஸ், 5 மடங்கு வைட்டமின்  மற்றும் இரும்புச் சத்தும் உள்ளது.

 வாழைப்பழத்தோல் விவசாயத்திற்கு உரமாகவும் பயன்படுத்தப்படு

பாம்பு கடித்தால் முதலில் வாழைச்சாறு பருகினால் நச்சு முறிந்துவிடும்.

 * வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல்நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

 வளர்ப்பு முறைகள் :

 * ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரை ஒரு பருவம்செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ஒரு பருவம்டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை ஒரு பருவம் என வாழைக்கு மூன்று பருவங்கள் உள்ளனஇருப்பினும் ஜூன் மாதத்தில் நடவு செய்த வாழை நல்ல வீரியத்துடன் வேகமாக வளரும்.

 வாழை நடவு செய்யும் முன் நிலத்தில் சணப்பைதக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரங்களை பயிரிட்டு பூக்கும் சமயத்தில் மடக்கி உழவேண்டும்பின் நிலத்தை இரண்டு முறை உழுது பிறகு கடைசி உழவிற்கு முன் தொழு உரம் இட்டு நிலத்தை நன்கு உழவேண்டும்.

 * 1 அடி நீளம்அகலம்ஆழம் உள்ள குழி எடுத்துஅதில் அரை கிலோ மண்புழு உரம் மற்றும் வேப்பம் கொட்டை கரைசல் 100 மில்லியை இடவேண்டும்பிறகு வாழைக்கன்றை குழியில் வைத்து மண்ணைப் இட்டு நன்றாக மிதித்து விடவேண்டும்.

 ரொபஸ்டா ரகத்திற்கு 6 அடி இடைவெளிமோரிஸ் ரகத்திற்கு 5.5 அடி இடைவெளிசெவ்வாழைக்கு 8 அடி இடைவெளிபூவன் மற்றும் மொந்தனுக்கு 7 அடி இடைவெளிரஸ்தாளிக்கு - 7 அல்லது 6 அடி இடைவெளி விட வேண்டும்.

 * நடவு செய்த 3-ம் நாளில் உயிர் தண்ணீர் விட வேண்டும்அதன் பிறகு நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து பாசனம் செய்தால் போதுமானது.

  * 15 நாட்களுக்கு ஒரு முறை மேம்படுத்தப்பட்ட அமிர்தக்கரைசலை பாசன நீரோடு கலந்துவிடலாம்.

மாதம் ஒரு முறை ஜீவாமிர்தம் கரைசலை நீர்பாசனம் வழியாக கொடுப்பதன் மூலம் நுண்ணுயிரி பெருக்கம் அதிகரிக்கும்இதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கும்.

 நோய் தடுக்கும் முறைகள் :

கூன்வண்டு தாக்குதல் ஏற்பட்டால் ஒரு லிட்டர் தண்ணிரில், 100 மில்லி அக்னி அஸ்திரத்தை கலந்து வேர் பாகம் நனையும் படி ஊற்ற வேண்டும்.

 * இனக்கவர்ச்சிப் பொறியை ஏக்கருக்கு 2 என்ற விகிதத்தில் வைப்பதால் இதனைக் கட்டுப்படுத்தலாம்.

 * கண்ணாடி இறக்கை பூச்சி தாக்குதலுக்கு பொன்னீம் கரைசல் 20 மில்லியை, 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். 

  * தசகாவ்யா கரைசலை தெளிப்பதன் மூலம் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 

   * அசுவினி பூச்சி தாக்குதலுக்கு 100 லிட்டர் நீரில்இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரம், 3 லிட்டர் கோமியம் ஆகியவற்றை கலந்து 1 ஏக்கருக்கு தெளிக்கலாம்மாதம் 2 முறை தெளிப்பதன் மூலம் அசுவனி பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். 

  * வாடல் நோய்க்கு ஒரு லிட்டர் தண்ணீருக்குசூடோமோனஸ் 5 கிராம் என்ற அளவில் கலந்து வயலில் லேசான ஈரம் இருக்கும் பொழுது வாழை கட்டையின் தூர் பகுதியில் ஒரு மரத்திற்கு 2 லிட்டர் வீதம் ஊற்றவேண்டும். 

 * இலைக் கருகல் நோய்க்கு 1 லிட்டர் தண்ணீருக்கு, 20 மில்லி பொன்னீம் கரைசல் சேர்த்து இலையில் தெளிக்க வேண்டும். 

கிழங்கு அழுகல் நோய்க்கு டிரைக்கோடெர்மா விரிடியைஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் கலந்து கன்று ஒன்றுக்கு ஒரு லிட்டர் வீதம் கன்று நன்கு நனையுமாறு ஊற்ற வேண்டும்.


வெற்றிலை

சுப நிகழ்ச்சிகளிலும் கோவில் பூஜைகளிலும் கமகமக்கும் வெற்றிலைக்கு முக்கியப் பங்கு உண்டுமுதியோர்கள் பலரைப் போலவேகிராமத்து இளைஞர்களிடமும் வெற்றிலை போடும் பழக்கம் இருந்துவருகிறதுசித்த வைத்தியத்திலும் வெற்றிலை பயன்படுத்தப்பட்டுவருகிறதுஇப்படிப் பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிலைதேனி மாவட்டத்தில் பரவலாகச் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.

சப்பை தண்ணீரில்

வெற்றிலையில் இரண்டு வகை உண்டுமுதல் வகையான திருச்சி கொடி வெற்றிலை வெள்ளை நிறத்தில் இருக்கும்இரண்டாவது வகையான நாட்டு வெற்றிலைகறுப்பு நிறத்தில் இருப்பதால் கறுப்பு வெற்றிலை என்று அழைக்கப்படுகிறது.

வெள்ளை வெற்றிலை சாகுபடிக்கு நல்ல தண்ணீர் மட்டுமே தேவைப்படும்சப்பை தண்ணீரில் விளைச்சல் இருக்காதுஆனால் நாட்டு வெற்றிலைக்குச் சப்பை தண்ணீரே போதும் என்கிறார் சின்னமனூர் வெற்றிலை விவசாயி பாப்புராஜ்கடந்த 25ஆண்டுகளுக்கு மேலாக நாட்டு வெற்றிலை சாகுபடி செய்துவரும் இவர்வெற்றிலை சாகுபடிக்குக் கரம்பை மண் ஏற்றது என்கிறார்வெற்றிலை சாகுபடி நுட்பங்கள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டது:

அகத்தி மரத்துடன்

முதலில் அகத்தி விதையை விதைத்துச் செடி வளர்க்க வேண்டும். 60 நாட்கள் கழித்துச் செடி சுமார் அரை அடி உயரம்வரை வளர்ந்த பின்வெற்றிலை கொடி பதியம் போட்டு ஒவ்வொரு அகத்திச் செடிக்கும் ஒரு அடி இடைவெளியில் இயற்கை உரம் இட்டு நடவு செய்ய வேண்டும்கடுமையான வெயில் அடித்தால் வெற்றிலைக் கொடி கருகிவிடும்காற்று பலமாக வீசினாலும் கொடி சேதமடைந்துவிடும்அதனால் கொடி நன்கு வளர்ந்து அகத்தி மரத்தின் மீது படரும்வரைவெற்றிலை கொடிக்காலைத் (தோட்டம்சுற்றிச் சூரிய ஒளி மற்றும் காற்று புகாதவாறு தென்னங்கீற்றால் வேலி அமைக்க வேண்டும்.

ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 120 நாட்கள் கழித்துக் கிள்ளத் (பறிக்கதொடங்கிவிடலாம்மூன்று ஆண்டுகள்வரை 30 நாட்களுக்கு ஒருமுறை பறித்துக்கொண்டே இருக்கலாம்நோய் தாக்காமல் இருக்கஒவ்வொரு முறை பறித்த பின் பூச்சிக்கொல்லி தெளிக்க வேண்டும்.

அகத்தி மரம் வளர்ந்த பின் அகத்திக் கீரையை வெட்டி வெற்றிலை கொடிக்கு உரமாக இடலாம்அது மண்ணில் மக்கி இயற்கை உரமாக மாறிவிடும்மேலும் ஊடுபயிராக வாழைபச்சை மிளகாய் சாகுபடி செய்யலாம்ஒரு ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்ய ரூ. 2.50 லட்சம் செலவு ஆகிறதுநடவு செய்த பின்னர் 30 நாட்களுக்கு ஒருமுறை ஆயிரத்து 500 கிலோவரை வெற்றிலை பறிக்க முடியும்.

சராசரியாக ஒரு கிலோ நாட்டு வெற்றிலை ரூ.60-க்கும்வெள்ளை வெற்றிலை ரூ.100-க்கும் விற்பனையாகிறதுமுகூர்த்தக் காலங்களில் இன்னும் கூடுதலாக விலை கிடைக்கும்செலவு செய்தது போக மாதத்துக்கு ரூ. 70 ஆயிரம்வரை லாபம் கிடைக்கும்பல மாவட்டங்களில் சப்பை தண்ணீர் மட்டுமே கிடைப்பதால்நாட்டு வெற்றிலை சாகுபடி சிறந்தது. 

மிளகு 

சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே மிளகு தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்து வருகிறதுமிளகின் தாயகம் இந்தியா ஆகும்.

ஆனால் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே எகிப்து நாட்டிற்கு மிளகு பண்டமாற்றாகக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

மிளகு என்பது செடி அல்லஅது ஒரு கொடிசிவப்புஇளஞ்சிவப்புபச்சைகறுப்புவெள்ளை என்று வெவ்வேறான வண்ணங்களில் கிடைக்கிறதுபழுக்காத மிளகை பறித்தால் பச்சையாக இருக்கும்நன்கு பழுத்து காய்ந்தது கறுப்பு நிறமாக வரும்இப்படி பறிக்கும் நாட்களைப் பொறுத்து அதன் வண்ணங்கள் மாறுபடுகின்றன.

முற்காலத்தில் ஒருவரிடம் இருந்த மிளகின் அளவை வைத்து அவர் செல்வந்தராஏழையாஎன்பதையும் கணக்கிட்டுள்ளார்கள்பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டில் கூட உண்ணலாம் என்பது பழமொழிமிளகின் விஷ முறிவு தன்மைக்காக இவ்வாறும் சொல்லப்படுகிறது.

எப்படி பயிரிடுவது…?,

இரகங்கள்

கிரிமுண்டாகொட்ட நாடன்சுபகாராபஞ்சமிபெளர்ணமிஒட்டப்பிளாக்கல் 1, கல்லுவள்ளிபாலன்கொட்டாஐஐஏஸ்ஆர் சக்திஐஐஏஸ்ஆர்தேவம்ஐஐஏஸ்ஆர் மலபார் எக்செல்உதிரன் கொட்டா மற்றும் பன்னியூர் 1,2,3,4,5 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

பன்னயூர் 5 இரகம் நிழலைத் தாங்கி வளரும் தன்மை கொண்டதுஇது பொதுவாக பாக்குத் தோப்புகளில் வளர்க்க ஏற்றதுபன்னயூர் 1 மற்றும் கிரிமுண்டா இரகங்கள் வறட்சியை தாங்கி வளரக்கூடியது.

பருவம்

ஜீன் – டிசம்பர் மாதங்களில் மிளகு பயிரிடலாம்இதனை மானாவாரியாகவும் பயிர் செய்யலாம்.

மண்

நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண்ணில் நன்கு வளரும்களிமண் பூமியிலும்மணற்பாங்கான நிலங்களிலும் இப்பயிர் நன்கு வளராதுமண்ணின் கார அமிலத் தன்மை 4.5 முதல் 6.6 வரை இருந்தால் நல்லதுகடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரம் வரையுள்ள அனைத்து மலைப்பகுதிகளிலும் இப்பயிர் நன்கு வளரும்.

விதைகள்

மிளகு பயிர் கொடிதுண்டுகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறதுஒரு மீட்டர் நீளமுள்ள ஒரு கொடியினை தாய்ச்செடியிலிருந்து எடுத்து 2 அல்லது 3 கணுக்களுடன் கூடிய சிறு துண்டுகளாக வெட்டி பாலித்தீன் பைகளில் நடவு செய்ய வேண்டும்வேர் பிடித்த பின்பு இந்த துண்டுகளை நடவிற்குப் பயன்படுத்தலாம் அல்லது நாற்றங்கால் மூலம் நடவு செய்யலாம்.

நாற்றங்கால் தயாரிப்பு

நல்ல நிழலுடன்தண்ணீர் தேங்காமல் இருக்கும் பகுதிகளில் 1 மீட்டர் அகலம் மற்றும் 5.6 மீட்டர் அளவு நீளமும் கொண்ட உயரப் பாத்திகள் அமைக்க வேண்டும்மண்ணை நன்கு கொத்தி பின்பு ஒரு பாத்திக்கு 12 கிலோ தொழு உரம், 5 கிலோ மண்புழு உரம், 250 கிராம் உயிர் உரங்கள், 5 கிலோ மணல் மற்றும் 5 கிலோ செம்மண் கலந்து பாத்திகளைச் சீராக்க வேண்டும்.

நல்ல ஆரோக்கியமான தாய் கொடிகளின் அடிப்பகுதியில் வளரும் ஓடு கொடிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்தேர்ந்தெடுக்கப்பட்ட துண்டுகளின் அருகில் ஒரு குச்சியை நட்டு ஓடு கொடிகளை மண்ணில் வேர்விடாமல் குச்சியில் சுருளுமாறு கட்டிவைக்க வேண்டும்பிப்ரவரிமார்ச் மாதத்தில் 2 மீட்டர் நீளம் கொண்ட இத்தகைய ஓடுகொடிகளை தாய்க் கொடியில் இருந்து வெட்டி நீக்க வேண்டும்பின்பு ஓடுகொடியின் மேற்பகுதியில் மூன்றில் ஒரு பகுதியையும்கீழ்ப்பகுதியில் மூன்றில் ஒரு பகுதியையும் தவிர்த்து விட்டு நடுப்பகுதியை தண்டுத்துண்டுகள் (Cuttings) தயாரிப்பதற்காக தேர்ந்தெடுக்க வேண்டும்இளம் ஓடு கொடிகளையும்முதிர்ந்த ஓடு கொடிகளையும் தவிர்க்க வேண்டும்.

பின்னர் ஓடு கொடியிலிருந்து 2-3 கணுக்களை கொண்ட தண்டுத் துண்டுகளை சீராக கத்தியால் வெட்டி தயாரிக்க வேண்டும்இத்தகைய தண்டுத் துண்டுகளின் அடிப்பகுதியை பஞ்சகாவ்யா 3 சதம் கரைசலில் 30 நிமிடம் நனைத்து பின்பு பாத்திகளிலோ அல்லது பாலித்தீன் பைகளிலோ நட வேண்டும்

பாலித்தீன் பைகளில் (7×5 அங்குல அளவுஒரு பாகம் வளமான மேல் மண்ஒரு பாகம் ஆற்று மணல்ஒரு பாகம் தொழுஉரம் மற்றும் ஒரு பாகம் மண்புழு உரம் கலந்த கலவையை நிரப்ப வேண்டும்அதில் ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றங்கால் பாத்திகளில் 250 கிராம் அசோஸ்பைரில்லம், 250 கிராம் பாஸ்போ பாக்டீரியா போன்றவற்றை நன்கு கலக்க வேண்டும்

உரக்கலவையை இடுவதற்கு முன்னரே தேவையான சிறிய துளைகளை பைகளில் இட வேண்டும்பாத்திகளிலும்பாலித்தீன் பைகளிலும் தண்டு துண்டுகளை நட்ட பின்னர் போதிய நீர் விட்டு நிழலில் வைக்க வேண்டும்இரு முறை தேவையான அளவு நீரை பூவாளியால் ஊற்ற வேண்டும்

வளரும் சிறு பதியன்கள் 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகாவ்யா என்ற அளவில் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை ஊற்ற வேண்டும்பந்தல் அல்லது மூங்கில் தப்பைகள்பாலித்தீன் உறைகளை கொண்டு கூடாராம் அமைத்து அதில் பாலித்தீன் பைகளை வரிசையாக அடுக்க வேண்டும்பாலித்தீன் பையில் நடப்பட்ட துண்டுகள் மூன்றாம் வாரத்தில் வேர்விடத் தொடங்கி நடுவதற்கு தயாராகிவிடும்.

நிலம் தயாரித்தல்

இதற்கு நிழல் மிகவும் அவசியம்எனவே இதனை தனி பயிராக சாகுபடி செய்ய முடியாதுதென்னைபாக்கு தோட்டங்களில் இதனை வளர்க்கலாம்ஆகவே இதற்கான நிலம் தயாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

நடவு செய்தல்

தென்னை மரம் என்றால்ஒரு மரத்துக்கு இரு கன்றுகள் வீதமும்பாக்கு என்றால் ஒரு மரத்துக்கு ஒரு கன்று வீதமும் மிளகை நடவு செய்ய வேண்டும்மிளகுக் கொடிகள் இந்த மரங்களைப் பற்றிக் கொண்டு வளர்ந்துவிடும்தென்னையின் அடிப்பகுதியில் வேர்கள் இறுக்கமாக இருக்கும் என்பதால்மரத்திலிருந்து இரண்டரை முதல் மூன்று அடி தூரம் தள்ளி மிளகுக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும்அதேசமயம் கொடிகள் மரத்தை எட்டிப் பிடிக்கஏதுவாக சிறு குச்சிகளை அருகில் ஊன்றி வைக்க வேண்டும்கொடிகள் தென்னை மரத்தில் படர ஆரம்பித்தபின் அவற்றை எடுத்துவிட்டுதரையோடு தரையாகக் கொடியை வைத்துமண்ணால் மூடி மரத்துக்கு அருகில் இருந்தே கொடி முளைத்து ஏறுவது போல் செய்ய வேண்டும்இதனால் மண்ணுக்குள் இருக்கும் கொடிப்பகுதியில் புதிய வேர்கள் உருவாகும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் நீர்ப் பாய்ச்ச வேண்டும்பின்னர் வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்தண்ணீர் அதிகம் பாய்ச்சுவதும் ஆபத்தானதுஏனெனில் கொடிகள் செழிப்பாக வளர்ந்தால் காய்க்கும் திறன் குறைவாக இருக்கும்இது நிழல் பகுதியில் வளர்வதால் தண்ணீர் தேவையை உணர்ந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்

கொடிகள் நன்கு வளர்ந்த பின்பு ஒரு வருடத்திற்குஒரு கொடிக்கு நன்கு மட்கிய தொழு உரம் 5 கிலோ மற்றும் மண்புழு உரம் 5 கிலோ என்ற அளவில் மே – ஜீன் மற்றும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் மண்ணில் இட வேண்டும்உதிர்ந்த இலைகளை மூடாக்காக போட வேண்டும்அதுவே சிறந்த உரமாக மாறிவிடும்.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கொடிக்கு 500 கிராம் சுண்ணாம்பு அல்லது டாலமைட் இட வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

கொடிகள் நன்கு வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும்ஜீன் – ஜீலை மற்றும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இரண்டு முறை களை எடுக்க வேண்டும்.

கவாத்து செய்தல்

மிளகுக் கொடிகளின் நுனியைக் கிள்ளி விடுவதன் மூலம் பக்கக் கிளைகள் அதிகமாக வளரும்முதல் இரு வருடங்களில் மிளகுக் கொடியில் காய்க்கும் அனைத்து பூங்கொத்துக்களையும் உருவி நீக்கிவிட வேண்டும்அத்துடன் மிகுதியான பக்கக் கிளைகளை உருவாக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இலைகளையும் கிள்ளிவிட வேண்டும்மிளகுக் கொடி படர் மரங்களின் உயரத்தைத் தொடும் அளவிற்கு வந்தவுடன்மேலும் பற்றிப்படர படர் மரம் இல்லாததால் கொடிகள் கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருக்கும்அவற்றை அப்புறப்படுத்திதண்டுகளை நாற்றுக்களாக உற்பத்தி செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

பயிர் பாதுகாப்பு
பூச்சி மற்றும் வண்டு தாக்குதல்

பொல்லு வண்டுஇலை சுருட்டு தத்துப் பூச்சி மற்றும் இலைப்பேன் தாக்குதல் உள்ள இடங்களில் ஜீலை மற்றும் அக்டோபர் மாதங்களில் காய்ப்பிடிக்கும் போது வேப்ப எண்ணெயை (400 மி.லியை 100 லிட்டர்நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்மேலும் பஞ்சகாவ்யா 3 சத கரைசலை 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.

நூற்புழுக்கள்

ஒரு செடிக்கு 100 கிராம் என்ற அளவில் வேப்பம் புண்ணாக்கினைதொழு உரத்துடன் கலந்து இட்டு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

அடி அழுகல் நோய்

டிரைக்கோடெர்மாசூடோமோனாஸ் கலவையை வருடத்திற்கு ஒரு கொடிக்கு, 50 கிராம் என்ற அளவில் இடுவதன் மூலம் இந்நோயை கட்டுப்படுத்தலாம்.

அறுவடை

மிளகு நட்ட மூன்றாம் ஆண்டில் காய்க்கத் தொடங்கி ஆறு ஆண்டுகளில் கொடிகள் நல்ல மகசூல் கொடுக்கத் துவங்கும்மிளகு பூக்க ஆரம்பித்த பின் 6 முதல் 7 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும்சமவெளிப் பகுதிகளில் அறுவடைக்காலம் நவம்பர் முதல் ஜனவரி வரை இருக்கும்மலைப்பகுதிகளில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இருக்கும்நன்கு முற்றிய மிளகுக் காய்களை பழுப்பதற்கு முன்பே அறுவடை செய்ய வேண்டும்கைகளினால் அறுவடை செய்ய வேண்டும்அறுவடை செய்த காய்களை துளையிடப்பட்ட அலுமினியப் பாத்திரம் (அல்லதுமூங்கில் கூடையில் வைத்து, 80 சென்டிகிரேடு கொதி நீரில் 1 நிமிடம் மூழ்கவைத்து பின்னர் 7-10 நாட்கள் சூரிய ஒளியில் உலர்த்த வேண்டும்காய்களை அவ்வப்போது கிளறி விட வேண்டும்காய்களை கிளறாமல் விட்டால் பூஞ்சாண வளர்ச்சி ஏற்படும்.

மகசூல்

ஒரு வருடத்திற்கு ஒரு கொடியிலிருந்து 2 முதல் 3 கிலோ உலர்ந்த மிளகு கிடைக்கும்.

பயன்கள்

மிளகுடன் பனை வெல்லம் கலந்து காலையும்மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைப்பாரம்தலைவலி போன்றவை குணமாகும்.

10 மிளகை தூளாக்கி அரை லிட்டர் நீர் விட்டு காய்ச்சி கசாயமாக செய்து குடிக்க கோழை மற்றும் இருமல் தீரும்.

மிளகு சேர்க்கப்பட்ட உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியேற்றுவதுடன்எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது.

அஜீரணம்வயிற்றுப்போக்குமலச்சிக்கல்அமிலச்சுரப்பு போன்றவற்றை மிளகு தடுக்கிறதுஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

கருப்பு மிளகை நன்றாக பொடி செய்து ஒரு கப் தயிருடன் கலந்து அந்தக் கலவையை தலையில் பரவலாகத் தடவ தலையில் உள்ள பொடுகு ஒழியும்.

கருமிளகு மனச்சோர்வையும்களைப்பையும் போக்குகிறதுமூளையின் அறிதல் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது.

மிளகாய் செடி 

 மிளகாய் செடியை பொருத்த வரையில் வளர்ப்பது கொஞ்சம் சிரமமான காரியம் தான்இந்தச் செடியில் நோய் தாக்குதல்பூச்சி தாக்குதல் போன்றவை அதிக அளவில் இருக்கும்இந்த வீட்டுத் தோட்டம் குறித்த பதிவில் உள்ள குறிப்புகள் கண்டிப்பாக உங்களுக்கு உதவியாக இருக்கும்இந்த குறிப்புகளை தெரிந்து கொண்டால்நல்ல முறையில் செடியை வளர்ந்து அதிக விளைச்சலை பார்க்க முடியும்வாங்க அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்


மிளகாய் செடியை பொறுத்த வரையில் பயிரிடும் காலம் மிகவும் முக்கியம்அதிகமான வெப்பம் இருக்கும் காலத்தில் இதை பயிரிட்டால் செடிகள் தழைத்து வளராதுஎனவே ஜூன் மாதத்திற்கு பிறகு டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் இதை பயிரிட்டால் சரியாக இருக்கும்அடுத்து இந்த செடியை நடவு செய்வதற்கு முன்பு விதையைவிதை நேர்த்தி செய்து நட வேண்டும்அதாவது விதையை ஏதேனும் ஒரு உரத்தில் அரைமணி நேரம் வரை ஊற வைத்து அதன் பிறகு வெயிலில் காய வைத்த பிறகு நட வேண்டும் இதற்கு பஞ்ச காவியாமீன் அமிலம் போன்ற உரங்களை பயன்படுத்தினால் நல்லது

அடுத்து விதைகள் நடும் போது அதிக இடைவெளி விட்டு நட வேண்டும்ஏனென்றால் இந்த செடிக்கு காற்றோட்டம் மிகவும் முக்கியம்காற்றோட்டம் குறைவாக இருந்தாலும்செடிகளை நெருக்கமாக நட்டாலும் கண்டிப்பாக இலை அழுகல்பூச்சி தாக்குதல் வந்து செடியின் வளர்ச்சி பாதித்து விடும்

இதற்கு அடி உரமாக மண் புழு உரம்கிச்சன் கழிவுகளை மட்டும் சேர்த்தால் கூட போதும்வாரத்திற்கு ஒரு முறை புளித்த மோரை ஊற்றி வந்தாலும் சரி அல்லது தேமோர் கரைச்சலை தெளித்து வந்தாலும் சரிஅதுவே இந்த செடி செழித்து வளர உதவி செய்யும்இவற்றுடன் கடலை புண்ணாக்கு கிடைத்தால் அதையும் நன்றாக கரைத்து திப்பி இல்லாமல் வடிகட்டி அதை செடிகளுக்கு உரமாக கொடுத்து வந்தாலும் அதிக அளவில் காய்கள் காய்க்கும்.

 வீட்டுத்தோட்டத்தில் பச்சை மிளகாய் வளர்ப்பவர்கள் நாற்றாங்கால் தொடங்கி காய்க்கும் பருவம் வரை கவனமாய் பார்த்துக்கொள்ளவேண்டும் என்கின்றனர் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள்

ஏனெனில் மிளகாய் செடிகளை தாக்கும் நோய்களையும்பூச்சிகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே மிளகாய் செடியில் நல்ல மகசூலை பெறமுடியும் என்கின்றனர் அவர்கள்

தரமான மிளகாய் செடி வளர்ப்பு பற்றி தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்பயிரிடும் பருவம் சிம்பிளான மாலை நேர ஸ்நாக்ஸ்... பொரி பக்கோடா பச்சை மிளகாய் ஆண்டுக்கு மூன்று பருவங்களில் பயிரிடலாம்ஜனவரி – பிப்ரவரிஜூன் – ஜூலைசெப்டம்பர் – அக்டோபர் ஆகிய மாதங்கள் பயிரிடலாம்மிளகாய் வளர மித வெப்பமான பருவமே ஏற்றது அதிக குளிரோஅதிக வறட்சியோ ஏற்றதல்லஎனவே சூரிய வெப்பம் நிலத்தில் இருந்து அதிக தண்ணீரை உறிஞ்சாத பருவமாக இருந்தால் பச்சை மிளகாய் வளர்ச்சி அபரிமிதமாய் இருக்கும்அதேபோல் அதிக தண்ணீர் ஊற்றி நிலம் களிமண்ணாக இருந்தாலும் ஏற்றதல்ல என்கின்றனர் வேளாண்துறையினர்.


முட்டைகோஸ்

 

முட்டைகோஸ் வெறுமனே இலைகளால் ஆன ஒரு காயாகும்.

மனித இனத்துக்கு முதலில் அறிமுகமான காய்கறிகளில் ஒன்று முட்டைகோஸ்.


கி.மு. 200-ம் ஆண்டில் கிரேக்கர்களும்ரோமானியர்களும் முட்டைகோஸை பல்வேறு காரணங்களுக்கு பயன்படுத்தியுள்ளனர்.

சீனா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட முட்டைகோஸ் 1794-ம் ஆண்டில்தான் இந்திய மக்களுக்கு அறிமுகமானது.

உலகளவில் அதிகமாக முட்டைகோஸ் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இமாச்சல பிரதேசம்தமிழகம் ஆகிய இடங்களில் முட்டைகோஸ் அதிகமாக பயிரிடப்படுகிறது.

முட்டைகோஸ் எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :
மலைப்பகுதி ரகங்கள்

செப்டம்பர் எக்லிப்ஸ்பூசா ஒண்டர்பிரைடு ஆஃப் இந்தியாஏர்லி ஒண்டர்பூசா ட்ரம்ஹெட்.எஸ் இராஸ் போன்றவை மலைப் பகுதிக்கான இரகங்கள் ஆகும்.

சமவெளி பகுதி இரகங்கள்

ஏர்லி ஆட்டம் ஜெயண்ட்லார்ஜ் சாலிட்லேட் ட்ரம்ஹெட்கோல்டன் ஏக்கர்ஜெயின்மகாராணி போன்ற ரகங்கள் சமவெளியில் பயிரிட ஏற்றவை.

மண்

இது பொதுவாக குளிர் கால பருவங்களில் பயிரிடப்படுகிறதுசமவெளி பகுதிகளில் இது குளிர்காலப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறதுவடிகால் வசதி மிகவும் அவசியம்வண்டல்செம்மண் நிலங்களிலும் நன்றாக வளரும்மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 6.5 வரை உள்ள நிலங்கள் ஏற்றவை.

பருவம்

மலைப்பகுதிஜனவரி-பிப்ரவரிஜீலை-ஆகஸ்ட் மாதங்கள் ஏற்றதுசமவெளிப்பகுதிஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் சாகுபடி செய்யலாம்.

விதையளவு

ஒரு எக்டருக்கு 650 கிராம் விதைகள் தேவைப்படும்.

நாற்றங்கால்

நாற்றங்கால் போடுவதற்கு 100 சதுர அடி நிலம் இருந்தாலே போதுமானது. 15 செ.மீஉயரம், 1 மீ அகலம்தேவையான அளவு நீளம் கொண்டு விதைப்படுக்கையை உருவாக்கலாம். 2 கிலோ தொழு உரம், 200 கிராம் மண்புழு உரம், 40 கிராம் வி..எம் போன்றவற்றை ஒரு சதுர அடிக்கு அளிக்க வேண்டும்விதைப் படுக்கைகளில் 10 செ.மீ இடைவெளி விட்டு விதைகளை விதைக்க வேண்டும் .

நிலம் தயாரித்தல்

நிலத்தை பண்பட உழ வேண்டும்மலைப்பகுதிகளில் 40 செ.மீஇடைவெளி விட்டு குழி தோண்ட வேண்டும்சமவெளிப்பகுதிகளில் 45 செ.மீ அளவுள்ள பார் அமைக்க வேண்டும்.

விதைத்தல்

மலைப்பகுதிகளுக்கு 40X40 செ.மீ இடைவெளியிலும்சமவெளிப்பகுதிகளுக்கு 45X30 செ.மீ இடைவெளியிலும் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

தொடர்ந்து மண் ஈரப்பதமாக இருக்குமாறு பாசனம் செய்ய வேண்டும்.

முட்டைகோஸ் உரங்கள்:

மலைப்பகுதிகளுக்கு அடியுரமாக தலா 90 கிலோ தழைச்சத்துமணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரங்களை அளிக்க வேண்டும்மேலுரமாக நட்ட 30-45 நாட்கள் கழித்து தலா 45 கிலோ தழைச்சத்துமணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரங்களை அளிக்க வேண்டும்.

சமவெளிப்பகுதிகளுக்கு அடியுரமாக 50 கிலோ தழைச்சத்து, 125 கிலோ மணிச்சத்து மற்றும் 22 சாம்பல் சத்து உரங்களை அளிக்க வேண்டும்மேலுரமாக நட்ட 30-45 நாட்கள் கழித்து 50 கிலோ தழைச்சத்து உரங்களை அளிக்க வேண்டும்.

பஞ்சகாவ்யாவை (3%) பயிரிட்ட ஒரு மாதம் கழித்து 10 நாட்கள் இடைவெளியில் தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்வெர்மிவாஷ் 10 சதவிகிதம் பயிரிட்ட ஒரு மாதம் கழித்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

பயிரிட்ட பின் ஆழமாக தோண்டுவது மற்றும் களை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

முட்டைகோஸ் பாதுகாப்பு முறைகள்:

களை நிர்வாகம்

செடிகள் வளரும் பருவத்தில் களை இல்லாமல் பராமரிக்க வேண்டும்.

வெட்டுப் புழுக்கள்

விளக்குப் பொறியை கோடைக் காலத்தில் வயலில் பொருத்துவதால் தாய் அந்துப் பூச்சியை அழிக்கலாம்பைரித்ரம் கொல்லிகோதுமைத் தவிடுகரும்பு சர்க்கரை (2:1:1) என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்தலாம்.

அசுவினிகள்

வேப்ப எண்ணெய் 3% தெளிக்க வேண்டும்வேப்ப இலை சாற்றை 10% பயிரிட்ட 45, 60, 75 வது நாளில் தெளிக்கலாம்இனக்கவர்ச்சி பொறியை ஒரு எக்டருக்கு 20 என்ற எண்ணிக்கையில் வயலில் பொருத்தலாம்.

வேர்முடிச்சு நோய்

நோயற்ற விதை/நாற்றுக்களை தேர்ந்தெடுக்க வேண்டும்சூடோமோனஸ் ப்ளுரோசென்ஸ் ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து நாற்றுக்களை நனைத்து விதை நேர்த்தி செய்யலாம்.

டோலமைட் ஒரு எக்டருக்கு 10 கிலோ என்ற அளவில் அளிப்பதால் மண்ணின் கார அமிலத் தன்மையை அதிகரிக்கலாம்.

இலைப்புள்ளி நோய்

5% மஞ்சூரியன் தேயிலைச் சாற்றை பயிரிட்ட ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு மாத இடைவெளி விட்டு 3 முறை தெளிக்க வேண்டும்பஞ்சகாவ்யா 3 சதவிகிதம் பயிரிட்ட ஒரு மாதம் கழித்து 10 நாட்கள் இடைவெளி விட்டு தழைத் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்.

இலைக் கருகல் நோய்

200 கிராம் அக்ரி ஹோட்ரா சாம்பலை ஒரு லிட்டர் மாட்டுக் கோமியத்தில் கரைத்து 15 நாட்கள் ஊற வைத்து, 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்விதைத்த ஒரு மாதத்திலிருந்து ஒரு மாத இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.

கருப்பு அழுகல் நோய்

கருப்பு அழுகல் நோயை கட்டுப்படுத்த ஸ்டரப்டோமைசின் 100 பிபி.எப் பயிரிட்ட பிறகு 2 முறை தெளிக்க வேண்டும்.

அறுவடை

நட்ட 75 வது நாளில் அறுவடைக்கு வந்து விடும்கடினமான இலைகள் வளர்ந்தால் பயிர் முற்றிவிட்டதற்கான அறிகுறி ஆகும்ஒன்று அல்லது இரண்டு முற்றிய இலைகளுடன் அறுவடை செய்யவேண்டும். 120 நாட்களில் சுமார் எட்டு முறை வளர்ச்சியடைந்த முட்டைக்கோசுகளைப் பறிக்கலாம்முட்டைக்கோஸ் நன்றாக வளர்ச்சி பெற்று முற்றாமல் இருக்கும் தருவாயில் அறுவடை செய்யவேண்டும்.

மகசூல்

மலைப்பகுதிகளில் 150 நாட்களில் ஒரு எக்டருக்கு 70-80 டன்கள் கிடைக்கும்சமவெளிப்பகுதிகளில் 120 நாட்களில் ஒரு எக்டருக்கு 25-35 டன்கள் கிடைக்கும்.

முட்டைகோஸ் பயன்கள்:

இதில் உள்ள வைட்டமின்  சத்து கண் பார்வைக்கு சிறந்ததுகண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும்கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும்.

மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும்அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.

சரும வறட்சியை நீக்கி சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்வியர்வைப் பெருக்கியாக செயல்படும்சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.

எலும்புகளுக்கு வலு கொடுக்கும்இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

நரம்புகளுக்கு வலு கொடுத்து நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.

துளசி

லத்தீன் மொழியில் ஓசிமம் சாங்டம் (Ocimum Sanctum) என்று அழைக்கப்படும் துளசியின் தாவரவியல் பெயர்ஓசிமம் டென்யூஃப்ளோரம் (Ocimum Tenuiflorum). லேமியேசியே (Lamiaceae) குடும்பத்தைச் சேர்ந்த செடி வகைத் தாவரம்துளசி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பயிரிடப்படுகிறதுபஞ்சாப்ஆந்திரா உட்பட பல மாநிலங்களிலும் கூட பயிரிடப்படுகிறது.

துளசி மாலைகள் சில கோயில்களில் சிறப்பிடம் பெற்று இருக்கிறதுஇதற்காக துளசி பெரும்பாலும் மலர்ச் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றனபூ வியாபாரிகளும் மற்ற பூக்களுடன் துளசியையும் விற்பனை செய்கிறார்கள்இந்த தேவை தவிர சில வகை மருந்து தயாரிப்பிலும்அழகுப் பொருட்கள் தயாரிப்பிலும்மணப் பொருட்கள் தயாரிப்பிலும்சோப் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றனதமிழ் நாட்டைப் பொறுத்த வரை கோவையில் இருந்து கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது

இதனால் மற்ற மல்லிகைசெவ்வந்திசாமந்திமரிக்கொழுந்து போன்ற மலர் வேளாண்மையில் ஈடுபட்டு இருக்கும் விவசாயிகள் துளசியைப் பயிரிடுவதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள்குறிப்பாக மதுரை நிலக்கோட்டைதிருவள்ளூர் பகுதிகளில் உள்ள மலர் விவசாயிகள் அதிக அளவில் பயிரிடுகிறார்கள்

துளசி பொதுவாக எல்லா மண் வகைகளிலும் வளரும் தன்மை படைத்ததுசாலை ஓரங்களில்வரப்பு ஓரங்களில்காட்டுப் பகுதிகளில் தானாகவே புதர் போல வளர்ந்து இருப்பதைக் காண முடியும்அப்படி வளர்ந்து இருக்கும் துளசியை சேகரித்து மருந்து செய் நிலையங்களுக்கு விற்பவர்களும் இருக்கிறார்கள்.

துளசி எப்படி பயிரிடப்படுகிறது?

ஒரு ஏக்கருக்கு நூற்றைம்பது கிராம் விதைகள் தேவைப்படும்விதைகள் மிகவும் சிறியவை என்பதால் நான்கு பங்கு மணலுடன் ஒரு பங்கு விதைகள் என்று கலந்து கொள்ள வேண்டும்சுமார் பதினைந்து அடி நீளம்நான்கு அடி அகலத்தில் நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும்மண்ணை நன்றாக பொலபொலவென்று வருமாறு மண்வெட்டியால் நன்றாக கொத்தி சமன் செய்த பிறகு மணலுடன் கலந்து வைத்து இருக்கும் விதைகளைத் தூவி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்ஆறு அல்லது ஏழு வாரங்களில் மூன்று முதல் ஐந்து இலைகளுடன் நாற்றுநடுவதற்கு தயாராக வளர்ந்து விடும்

ஏற்கெனவே துளசி பயிரிடுபவர்கள் விதை இல்லாத முறையிலும் நாற்றுகளை வளர்த்து நடுகிறார்கள்இதற்கு அவர்கள் துளசி செடிகளின் முனைப் பகுதிகளை எட்டு முதல் பத்து கணுக்கள் இருக்குமாறு சுமார் பத்து முதல் பதினைந்து சென்டி மீட்டர் உயரத்துக்கு வெட்டி நாற்றங்காலில் நட்டு விடுகிறார்கள்அல்லது பாலிதீன் பைகளில் நட்டு வளர்க்கிறார்கள்நான்கு முதல் ஆறு வாரங்களில் வயலில் நடுவதற்கு தயாராக நாற்றுகள் வளர்ந்து விடுகின்றன

நிலத்தை இரண்டு முறை டிராக்டரால் நன்றாக உழுது மண்ணை பதமாக்கிய பின் இயற்கை முறையில் வேளாண்மை செய்ய விரும்பினால் சுமார் பன்னிரெண்டு டன் தொழு உரம் போட வேண்டும்நாற்பது சென்டி மீட்டர் இடை வெளியில் பாத்திகளை அமைக்க வேண்டும்.நாற்பது சென்டி மீட்டர் இடைவெளியில் நாற்றுகளை நட வேண்டும்தொழு உரம் கிடைக்கவில்லை என்றால் ஏக்கருக்கு நாற்பத்தெட்டு கிலோ நைட்ரஜன்இருபத்து நான்கு கிலோ பாஸ்பரஸ்இருபத்து நான்கு கிலோ பொட்டாசியம் உரங்களைப் போட வேண்டி இருக்கும்.

நாற்று நட்டபின் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்உரங்களைப் பொறுத்தவரை முதலில் பாஸ்பரஸ் உரத்தையும்பொட்டாசியம் உரத்தையும் முழுமையாகப் போட்டு விட வேண்டும்நைட்ரஜன் உரத்தை மட்டும் பாதியை முதலில் போட வேண்டும்மீதியை இரண்டாகப் பிரித்து முதல் அறுவடையை ஒட்டி ஒரு பாதியையும்அடுத்த அறுவடையின் போது மீதி பாதியையும் போட வேண்டும்மூன்றாவது மாதத்தில் இருந்து அறுவடை செய்யலாம்பிறகு ஒரு மாதத்துக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம்பராமரிப்புச் செலவு மிகவும் குறைவுமூன்று ஆண்டுகளுக்கு இவ்வாறு அறுவடை செய்யலாம்ஒரு முறை அறுவடைக்கு சுமார் நானூறு கிலோ கிடைக்கும்

முதலில் வாரத்துக்கு இருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்பின்னர் நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப இருபது நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்நாற்று நட்ட ஒரு மாதத்தில் ஒரு முறையும்இரண்டாம் மாதம் ஒரு முறையும் களை எடுத்தால் போதும்

நேரடியாக மலர்ச் சந்தைகளில் விற்பனை செய்யலாம்கோயம்பேடுதோவாளை போன்ற மலர்ச் சந்தைகளில் துளசியும் குவித்து வைக்கப்பட்டு இருப்பதைக் காணலாம்இம்ப்காப்ஸ்எஸ்கேஎம்டாம்ப்கால் போன்ற சித்தஆயுர்வேத மருந்துகள் செய் நிறுவனங்களும்பெருய பார்மசூட்டிகல் நிறுவனங்களும் துளசியை வாங்குகின்றன.

துளசியின் இலைக் கொழுந்துவிதைகள்உலர்த்தப்பட்ட வேர்களுக்கு சந்தை வாய்ப்பு இருக்கிறதுஉலர்த்தப்பட்ட துளசி இலைகளும் வாங்கப்படுகின்றன.துளசியில் இருந்து வடிக்கப்படும் யூஜெனால் (Eugenol) எண்ணெய் மருந்து தயாரிப்பில் மட்டும் அல்லாமல் சோப்பு தயாரிப்பு போன்ற வேறு தொழில்களிலும் பயன்படுத்தப்படுகிறதுதுளசிப் பொடியை தேநீர் தயாரிப்புக்கும் பயன்படுத்துகிறார்கள்வேறு மூலிகைத் தேநீர் உடன் கூடுதலாக துளசிப் பொடியும் சேர்க்கப்படுகிறது

ஒரு முறை முதலீடு; 4 ஆண்டுகள் பலன்அதோடுஒருமுறை முதலீடு செய்து பயிரிட்டால் மறுதாம்பு முறையில் 4 ஆண்டுகளுக்கு தொடர்ந்து அறுவடை செய்ய முடியும்இதுபோன்ற காரணங்களால் விவசாயிகளின் விருப்பப் பயிராகவும் துளசி மாறி வருகிறதுதிருவள்ளூர் பகுதியில் ஆயலூர்பிஞ்சிவாக்கம்கிளாம்பாக்கம்கோயம்பாக்கம்வதட்டூர்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பெருமளவில் துளசி சாகுபடி நடைபெற்று வருகிறது.

துளசி ஒரு மூலிகைச் செடி என்பதோடுமூலிகைகளின் அரசி எனவும் அழைக்கப்படுகிறதுஇப்பயிர் செய்ய உகந்த பருவம் மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் ஆகும்எல்லாவிதமான மண் வகைகளிலும் துளசி வளரும் என்பதால் வடிகால் வசதியுள்ள செம்மண் மற்றும் செம்பொறை மண் மிகவும் ஏற்றதாகும்.

புதிதாக துளசி சாகுபடியில் இறங்குபவர்கள்ஏற்கெனவே துளசி பயிரிட்டு இருக்கும் இடங்களை நேரடியாகப் பார்த்து மேலும் தகவல்களை அறிந்து செயல்படலாம்துளசியை வாங்குபவர்களிடமும் விலை முதலான செய்திகளை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.

முந்திரி சாகுபடி முறை மற்றும் பயன்கள்


 

இம்மரமானது தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டது. பின்னர் 1560- 1565ம் ஆண்டில் போர்த்துக்கீசியரால் இந்தியாவில் உள்ள கோவாவிற்கு எடுத்து வரப்பட்டு, பின்னர் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை அடைந்தது.

முந்திரியில், முந்திரிப்பழம் என அழைப்பது, உண்மையில் பழமல்ல. அது போலிப்பழம் என அழைக்கப்படுகிறது. இது பூவின் சூலகப் பகுதியில் இருந்து உருவாவதில்லை. பூவின் அடிப்பகுதியில் உள்ள தடித்த பூக்காம்புப் பகுதியே இவ்வாறு பேரிக்காய் உருவத்தில் விருத்தியடைகின்றது. இது முந்திரி ஆப்பிள் எனவும் அழைக்கப்படுகிறது.

முந்திரியில், முந்திரி ஆப்பிளின் அடியில் சிறுநீரக வடிவில் உள்ள அமைப்பே உண்மையான பழம் ஆகும். இது உண்மையான பழமாக இருந்தாலும், இதன் உள்ளே இருக்கும் உண்ணக்கூடிய பகுதி முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகின்றது. அதாவது முந்திரியின் உண்மைப்பழமானது தனி ஒரு விதையைக் கொண்ட பழமாகும்.

இம்மரமானது இன்று வெப்பமண்டல நாடுகள் பலவற்றில் வளர்க்கப்படுகிறது. வியட்நாம், நைஜீரியா, இந்தியா, பிரேசில், இந்தோனீசியா ஆகிய நாடுகளில் இது அதிகம் பயிரிடப்படுகிறது.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :

வி.ஆர்.ஐ.1 (விருத்தாச்சலம்) வி.ஆர்.ஐ.2, வி.ஆர்.ஐ 3, வி.ஆர்.ஐ 4, வி.ஆர்.ஐ (CW) ஹெச் 1, வென்குர்லா 4, வென்குர்லா 7, பப்பட்லால் – 8 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்ற இரகங்கள் ஆகும்.

பருவம்

ஜுன் – டிசம்பர் மாதங்களில் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.

மண்

நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் பாங்கான நிலத்தில் நன்கு வளரும் தன்மை கொண்டது. இது வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. மழை அளவு 50 முதல் 250 செ.மீ வரை உள்ள இடங்களிலும் நன்கு வளரும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது, கட்டிகள் இல்லாமல் பண்படுத்த வேண்டும். பின் 45 செ.மீ நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழிகளுக்கும் இடையே உள்ள இடைவெளி 7 மீட்டர் இருக்குமாறு அமைத்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு குழியிலும் மேல் மண்ணுடன் 2 கிலோ தொழு உரம், ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.

விதையளவு

ஒட்டுக்கட்டுதல் மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கரில் நடவு செய்வதற்கு 200 கன்றுகள் தேவைப்படும்.

விதைத்தல்

தயார் செய்துள்ள குழிகளில் கன்றுகளை குழியின் மையப்பகுதியில் நடவு செய்ய வேண்டும். அடர் நடவு முறையில் 5 x 4 மீ இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு 500 மரங்கள் வீதம் நடவு செய்யலாம்.

நீர் நிர்வாகம்

செடிகள் ஓரளவுக்கு வளர்ந்து வரும் வரை தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க வேண்டும். பூக்கும் தருணத்திலும், காய் பிடிக்கும் தருணத்திலும் வறட்சியான சீதோஷ்ண நிலை நிலவினால் காய் பிடிப்பு அதிகரிக்கும். முந்திரியை பொதுவாக மானாவாரியாக பயிர் செய்யலாம்.

உரங்கள்

ஒரு வயதான மரம் ஒன்றிற்கு தொழு உரம் 10 கிலோ, தழைச்சத்து 70 கிராம், மணிச்சத்து 40 கிராம், சாம்பல்ச்சத்து 60 கிராம் கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்க வேண்டும். 4 வயது வரை கொடுக்கப்பட்டுள்ள உரங்களின் அளவை ஒவ்வொரு மடங்காக அதிகரிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு பிறகு தொழு உரம் 50 கிலோ, தழைச்சத்து 500 கிராம், மணிச்சத்து 200 கிராம், சாம்பல்ச்சத்து 300 கிராம் உரங்களை அளிக்க வேண்டும். உரங்களை இரண்டாகப் பிரித்து ஜுன் – ஜுலை மாதங்களில் ஒருமுறையும், அக்டோபர் – நவம்பர் மாதங்களில் ஒருமுறையும் அளிக்க வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். பின் வருடம் ஒருமுறை களை எடுக்க வேண்டும்.

மரத்தில் சுமார் ஒரு மீட்டர் உயரம் வரை பக்கக் கிளைகள் வராமல் வெட்டிவிட வேண்டும். ஒவ்வொரு வருடமும் காய்ந்து போன கிளைகளை நீக்கி சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் மரங்களுக்குக் கிடைக்குமாறு செய்ய வேண்டும். மேலும் ஒட்டுக்கட்டிய பகுதிக்குக் கீழ் வரும் தளிரை அவ்வப்போது கிள்ளிவிடவேண்டும். ஒட்டுச் செடியில் தோன்றும் பூக்களை நீக்கி விட வேண்டும்.

பயிர் பாதுகாப்பு
தண்டுத் துளைப்பான்

இதன் தாக்குதல் மரத்தின் அடித்தண்டில் ஆண்டு முழுவதும் காணப்படும். இதனை கட்டுப்படுத்த கார்பரில் 50 சத நனையும் தூள் 0.1 சதம் மருந்தை தண்டுப்பகுதியில் சுமார் 1 மீட்டர் உயரம் வரை தடவி விடவேண்டும்.

5% வேப்ப எண்ணெய்யை ஜனவரி – பிப்ரவரி, மே -ஜூன் மற்றும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் அடி மரத்தில் பூச வேண்டும்.

தேயிலைக்கொசு

தேயிலைக் கொசுவைக் கட்டுப்படுத்த தழைப் பருவத்தில் 2 மிலி போசலான் 35 EC, மொட்டு விடும் பருவத்தில் 2 கிராம் கார்பரில் 50 WP மற்றும் கொட்டை உருவாகும் பருவத்தில் 2 மிலி மேனோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

இலைத் துளைக்கும் புழு

இதனை கட்டுப்படுத்த 5% வேப்பங்கொட்டை சாறினை துளிர்விடும் பருவத்திலும், பூக்கும் பருவத்திலும் தெளிக்க வேண்டும்.

வேர்த் துளைப்பான்

ஒரு மரத்திற்கு மோனோகுரோட்டோபாஸ் 5 மில்லி மருந்துடன் 5 மில்லி தண்ணீர் கலந்த கலவையை புழு தாக்கிய துளைகளில் ஊற்றவேண்டும். இதை குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு முறை செய்ய வேண்டும்.

ஆந்தராக்னோஸ்

இதனை கட்டுப்படுத்த துளிர்விடும் பருவத்தில் 1% போர்டாக்ஸ் கலவையுடன் பெரஸ் சல்பேட்டை கலந்து தெளிக்க வேண்டும்.

நுனிக்கருகல்

நோய் தாக்கப்பட்ட கிளைகளை வெட்டி நீக்க வேண்டும். பிறகு அந்த இடத்தில் 1 சதவீதம் போர்டோக்கலவை மருந்தினை தடவி விடவேண்டும்.

அறுவடை

கன்றுகள் நட்ட மூன்றாவது வருடத்தில் காய்ப்புக்கு வந்து விடும். மார்ச் – மே மாதங்களில் அறுவடை செய்யலாம். நன்கு பழுத்த முந்திரிப் பழங்களிலிருந்து கொட்டைகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, வெய்யிலில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நன்கு உலர்த்தவேண்டும்.

மகசூல்

ஒரு வருடத்தில் ஒரு மரத்தில் இருந்து 3 முதல் 4 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

ஊடுபயிர்

கன்றுகள் நட்ட, மூன்று ஆண்டுகளுக்கு பின்பே, முந்திரியை சாகுபடி செய்ய முடியும். எனவே இடைப்பட்ட காலத்தில் உளுந்து, பச்சை பயறு, நிலக்கடலை போன்றவற்றை பயிரிடலாம்.

பயன்கள்
  • முந்திரியில் மாங்கனீசு, பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற கனிம தாதுக்கள் அதிக அளவில் உள்ளன.
  • முந்திரி பருப்பில் குறைந்த அளவிலான சியாசாந்தின் உள்ளது. இது கண்ணில் உள்ள கருவிழி படலத்தை பாதுகாக்க உதவுகிறது.
  • கையளவு முந்திரிப் பருப்புக்களை உட்கொள்வதால் பசியை நீண்ட நேரத்திற்கு கட்டுப்படுத்த முடியும்.
  • முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான ஒலியிக் மற்றும் பால்மிட்டோலெயிக் அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகிறது.
  • முந்திரி பருப்பில் அதிகமாக உள்ள செலினியம் ஊட்டச்சத்தானது உடலுக்கு நோய் எதிர்ப்பு திறனை தரவல்ல நொதிகளான குளுடாதயோன் பெராக்ஸிடேஸ் நொதிக்கு இணை காரணியாக செயல்படுகிறது.
ஜீவாமிர்தம்,தேமோர், அரப்பு மோர், மீன் கரைசல் தயாரிக்கும் முறை

தேமோர், அரப்பு மோர், மீன் கரைசல் தயாரிக்கும் முறை



தேமோர் கரைசல்

தேவையான பொருட்கள்

புளித்த மோர் – 5 லிட்டர்

தேங்காய்ப்பால் – 1 லிட்டர்

தேங்காய் துருவல் – 10 தேங்காய்

அழுகிய பழங்கள் – 10 கிலோ

தயாரிப்பு முறை

புளித்த மோர் மற்றும் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் இட்டு, நிழலான இடத்தில் வைக்க வேண்டும்.

இவற்றுடன் 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை பொட்டலம் போல் கட்டி அதில் போட வேண்டும்.

தினமும் கரைசலைக் கலக்கி வரவேண்டும்.

ஏழு நாட்களில் தேமோர்க் கரைசல் தயாராகி விடும். 8-ம் நாள், ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி தேமோர்க் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் செடிகளுக்குத் தெளிக்கலாம்.

நன்மைகள்

தேமோர்க் கரைசல் என்பது பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது.

பயிர்களில் பூ எடுக்கும் சமயத்தில் இக்கரைசலைத் தெளித்தால், பூக்கள் அதிகமாகப் பூக்கும்.

இக்கரைசல் தெளிக்கப்பட்டு விளைந்த காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும்.


அரப்பு மோர் கரைசல்

தேவையான பொருட்கள்

புளித்த மோர் – 5 லிட்டர்

இளநீர் – 1 லிட்டர்

அரப்பு இலைகள் – 1 முதல் 2 கிலோ

500 கிராம் பழ கழிவுகள் அல்லது பழ கழிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட 1 லிட்டர் சாறு.

தயாரிக்கும் முறை

அரப்பு இலைகளை நீருடன் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.

பின்னர் இதனுடன் புளித்த மோர், இளநீர் மற்றும் பழச்சாறு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் கரைசல் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஒருவார காலத்திற்கு வைத்திருக்க வேண்டும். இந்த ஒருவார காலத்தில் நொதிக்க தொடங்கி விடும். இந்த நொதித்த கரைசலே அரப்பு மோர் கரைசல் ஆகும்.

அரப்பு இலைத் தூள் பயன்படுத்துவதாக இருந்தால், பழ கலவைகளுக்கு பதிலாக பழ சாறு பயன்படுத்த வேண்டும். நான்கு பொருட்களையும் கலந்து அதனை ஏழு நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும்.

ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.

நன்மைகள்

அரப்பு மோர் கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் தாக்குதல் இருக்காது.

இது தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் பூஞ்சை நோய்களுக்கு எதிர்ப்பு தன்மை உருவாகிறது.

அரப்பு மோர் கரைசலை பூப் பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறையப்பூக்கள் பூக்கும்.

அரப்பு மோர் கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால் பயிர்கள் குறைந்த காலத்தில் நன்கு வளர்ச்சியடைந்து, அதிக விளைச்சல் மற்றும் மகசூல் கிடைக்கும்.


மீன் கரைசல்

தேவையான பொருட்கள்

மீன் கழிவுகள் – 1 கிலோ

பனை வெல்லம் (அ) நாட்டு சர்க்கரை – 1 கிலோ

தயாரிக்கும் முறை

உணவுக்கு பயன்படாத மீன் கழிவுகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து கலக்க வேண்டும்.

இதனை ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும்.

நாற்பது நாட்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும். இந்த திரவத்திலிருந்து கெட்டை வாடை வீசாது. பழவாடை வீசும். இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்.

ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். தேவைப்படும் போது மீன் அமினோ அமிலத்தை எடுத்துக் கொண்டு பிளாஸ்டிக் வாளியை காற்று புகாமல் மூடி வைத்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.

பயன்கள்

மீன் அமினோ அமிலம் ஒரு முக்கிய வளர்ச்சி ஊக்கியாக செயல்படும் தன்மை கொண்டது.

தழைச்சத்துக்கு யூரியாவை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த அமிலத்தை பயன்படுத்தலாம்.

மீன் அமினோ அமிலத்தை பூக்கும் தருணத்தில் பயன்படுத்தும் போது பூக்கள் நன்றாக பூக்கும் மற்றும் காய்க்கும் திறன் அதிகரிக்கும். இந்த அமிலம் சுற்றுச்சூழலுக்கு எந்த விதமான பாதிப்புகளையோ, பக்கவிளைவுகளையோ ஏற்படுத்துவது கிடையாது.


E.M. என்னும் திற நுண்ணுயிரி

தேவையான பொருட்கள்

Effective Microorganisms என்பதின் சுருக்கமே E.M. ஜப்பான் நாட்டில் 1980களில் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த திற நுண்ணுயிரி. இன்று 120 நாடுகளில் விவசாயம், சுற்றுச்சூழல், கால்நடைப் பராமரிப்பு துறைகளில் பயன்படுகிறது. இது இயற்கை இடுபொருள் என Ecocert அமைப்பு சான்று தந்துள்ளது.

வகைகள்

E.M 1 திற நுண்ணுயிரி

E.M 2 திற நுண்ணுயிரி

E.M 1 திற நுண்ணுயிரி

E.M 1 என்பது உறங்கும் நிலையிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் தொகுப்பாகும். இது நொதித்த பிறகே பயன்படுத்தப்பட வேண்டும்.

E.M 2 திற நுண்ணுயிரி

E.M 2 தயார் செய்ய 1:1:20 என்ற விகிதத்தில் E.M 1 : வெல்லம்(அ)கரும்புச் சர்க்கரை: குளோரின் கலக்காத நீர் ஆகியவற்றை 5-10 நாட்கள் பிளாஸ்டிக் கலன்களில் காற்று புகாமல் நிழலில் வைக்க வேண்டும்.

இவ்வாறு வைக்கப்பட்ட கரைசல் நொதிக்க ஆரம்பிக்கும். உருவாகும் வாயுவை வெளியேற்ற தினமும் 1 நொடி மூடியை திறந்து மூட வேண்டும். இந்த கரைசலே E.M 2 ஆகும். நொதிக்க வைக்க கண்ணாடிக் கலன்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

நன்மைகள்

இக்கரைசலை ஒரு மாத காலத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும். வீட்டின் சமையலறை, குளியலறை போன்ற இடங்களிலும் E.M 2 கரைசலை உபயோகப்படுத்தலாம். இவ்விடங்கள் விரைவாக உலர்ந்து, ஈரமின்றி இருப்பதுடன் ஈக்களும் வராது. துர்வாசனையும் நீங்கும்.

இது மிகச்சிறந்த இயற்கை ஈடுபொருள். கழிவுகளை இதனை கொண்டு மக்கச் செய்து மறுசுழற்சி செய்யலாம்.

தாவர வேர்களில் ஒட்டிக்கொண்டு வேரையும், மண்ணையும் இணைத்து மண்ணிலுள்ள பாஸ்பரஸை நேரடியாகவும், மறைமுகமாக மற்ற சத்துகளையும், நீரையும் எளிதாக உறிஞ்சி தாவரங்களுக்கு தரவல்லது. இது வேர்களை அதிக அளவில் உண்டாக்குவதால் விளைச்சல் அதிகரிக்க உதவுகிறது.

மண்ணிலுள்ள நோய் உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை ஆகியவை தாவரங்களை தாக்காமல் பாதுகாக்கிறது.

வேல்ஸ் திராட்சை. தாவர பண்புகள்: தோற்றம், பழங்கள்

 

வேல்ஸ் திராட்சை வகையின் விளக்கம்

Veles ஒரு திராட்சை, இது உக்ரைன் (Zaporozhye), Vitaliy Zagorulko ஒரு வளர்ப்பாளர் மூலம் வளர்க்கப்பட்டது. இது ரஸ்போல் மற்றும் சோபியாவின் கலப்பினமாகும். சில நேரங்களில் இந்த திராட்சையின் விளக்கத்தில் "பிங்க் சுல்தானா" என்ற வார்த்தையை நீங்கள் காணலாம். வளர்ப்பவரின் சேகரிப்பில் பல வகைகள் உள்ளன, ஆனால் வேல்ஸ் பல தோட்டக்காரர்களின் பெருமை.

 

இன்றுவரை, இந்த வகை மிகவும் நம்பிக்கைக்குரியது, தேவை மற்றும் தொழில் வல்லுநர்கள் மற்றும் அமெச்சூர்களால் வளர்க்கப்படுகிறது. முதன்முறையாக, இந்த வகை 2009 இல் பரந்த பார்வையாளர்களுக்கு விற்கப்பட்டது. அப்போதிருந்து, இந்த பழ புதரின் புகழ் குறையவில்லை. ஒரு ஆரோக்கியமான புதர் பெற எளிதான வழி ஒரு நாற்றங்கால் இருந்து ஒரு நாற்று வாங்க வேண்டும். வளர்ந்து வரும் அனுபவம் இல்லாமல், ஒரு வகை மாதிரியை வளர்ப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

கோடைகால குடியிருப்பாளர்களின் மன்றத்திலிருந்து வேல்ஸ் திராட்சைகளின் புகைப்படம்:

வேல்ஸ் ரஷ்யாவில் (மாஸ்கோ பிராந்தியம், யூரல்ஸ், காகசஸ்) மற்றும் உக்ரைன் (அனைத்து பகுதிகள்) மற்றும் அண்டை நாடுகளிலும் தீவிரமாக வளர்க்கப்படுகிறது. உறைபனி எதிர்ப்பு பண்புகள்: நடுத்தர அல்லது பலவீனமான. தங்குமிடம் வடிவில் குளிர்காலத்திற்கான உறைபனி பாதுகாப்பு பரிந்துரைக்கப்படுகிறது.

 

பல்வேறு நன்மைகள் மத்தியில்:

  • ஆரம்ப முதிர்வு;
  • பல்வேறு பாதுகாப்பின் உயர் பண்புகள்;
  • நடவு செய்த பிறகு, அது எளிதில் வேர் எடுக்கும், ஒன்றுமில்லாத தன்மை, நோய் எதிர்ப்பு;
  • தாவரத்தின் அதிக மகரந்தச் சேர்க்கை;
  • வளர்ப்பு குழந்தைகளின் உருவாக்கம், நல்ல வளர்ச்சி;
  • நடவு செய்த பிறகு திறந்த நிலத்தில் நாற்றுகளின் உயிர்வாழ்வு விகிதம்.

வேல்ஸ் தீமைகள்:

  • சிறந்த உறைபனி எதிர்ப்பு அல்ல;
  • வளர்ச்சி தூண்டுதல்களைப் பயன்படுத்தும் போது, ​​பெர்ரி உதிர்வதைக் காணலாம், மழை பெய்யும் போது, ​​பழங்கள் அழுகும்;
  • கவனிப்பைக் கோருகிறது.

தாவர பண்புகள்: தோற்றம், பழங்கள்

வேல்ஸ் திராட்சை ஒரு உன்னதமான இனிப்பு சுவை கொண்டது, இது சுல்தானா வகைகளுக்கு பொதுவானது. நம்பமுடியாத பெரிய நொறுங்கிய தூரிகைகளில் வேறுபடுகிறது (இதன் பொருள் கொத்துகளில் உள்ள பெர்ரி இறுக்கமாக உட்காரவில்லை). ஒரு கொத்து எடை 1,5 கிலோ வரை அடையலாம். கொடி சரியாக பழுக்க வைக்கும், கொத்துகளின் வடிவம் கூம்பு அல்லது சிலிண்டர் ஆகும். விதைகள் இல்லை, எப்போதாவது ஒரு அடிப்படை வடிவத்தில் வரும். பெர்ரி நிறம்: பணக்கார இளஞ்சிவப்பு, லேசான வெள்ளை பூச்சுடன். வலுவான முதிர்ச்சியுடன், பெர்ரிகளின் பிரகாசம் மிகவும் தீவிரமாக இருக்கும், சிவப்பு நிறம் வரை. புதர்கள் நடுத்தர அளவிலானவை, வளர்ச்சி மிதமானது. சாகுபடி வகை: தண்டு, குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி, ஹெட்ஜ்.

நடவு செய்வதற்கு ஒரு தளத்தைத் தேர்ந்தெடுப்பது, மண்ணின் வகையை கணக்கில் எடுத்துக்கொள்வது, நீர்ப்பாசனம் செய்வது

களிமண், களிமண் அல்லது மணல் மண் வேல்ஸுக்கு ஏற்றது. மற்ற திராட்சைகளைப் போலவே, இந்த பழ ஆலை ஒளி குறைபாட்டை பொறுத்துக்கொள்ளாது. குறைந்த வெளிச்சத்தில், பெர்ரி மிகவும் சிறியதாக வளரும் மற்றும் போதுமான இனிப்பு இல்லை. வேல்ஸ் திராட்சை ஒரு ஆதரவுடன் திறந்த பகுதியில் நடப்பட வேண்டும். அருகிலுள்ள கட்டிடத்தில் இருந்து தூரம் குறைந்தது 50 செ.மீ., இளம் நாற்றுகளுக்கு இடையே 1,5 மீட்டர் இடைவெளி காணப்படுகிறது. இலையுதிர் காலத்தில் நடவு செய்வதற்கான ஒரு முக்கியமான விதி: நாற்று தரையில் மாற்றப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு துளை தோண்டப்படுகிறது. மற்றும் நடவு செய்வதற்கான இரண்டாவது தேவை: தாவரத்தை பானை அல்லது பெட்டியிலிருந்து தரையில் மாற்றும்போது நாற்றுகளின் வேர் கழுத்தை ஆழப்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை. நடவு செய்த உடனேயே, தாவரங்கள் பாய்ச்சப்படுகின்றன, பின்னர் மண் தழைக்கூளம் செய்யப்படுகிறது, இதனால் ஈரப்பதம் மெதுவாக ஆவியாகும்.

 

பருவகால பராமரிப்பு, சீரமைப்பு மற்றும் கருத்தரித்தல்

வேல்ஸ் திராட்சையைப் பராமரிப்பதற்கான விரிவான திட்டம் எதுவும் இல்லை, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இது தோட்டக்காரரிடமிருந்து சிறிய சேர்த்தல்களுடன் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தரங்களுடன் இணங்குகிறது, எடுத்துக்காட்டாக, வசந்த காலத்தில் மட்டுமே சில கத்தரிக்காய், மற்றும் யாரோ இலையுதிர் கத்தரித்து பரிந்துரைக்கின்றனர். 4-5 கண்கள் (மொட்டுகள்) புதரில் இருக்கும் போது குறுகிய கத்தரித்தும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

உரங்களுடன் அனைத்து கையாளுதல்களும் பூக்கும் முன் செய்யப்படுகின்றன. குளிர்காலத்தில், புதரை அக்ரோஃபைபர் மூலம் மூடி வைக்கவும், இது வேர் அமைப்பு மற்றும் தளிர்களை உறைபனியிலிருந்து பாதுகாக்கும்.

கத்தரித் தோட்டம்

 இயற்கை முறையில் கத்தரிச் செடி பூக்களுடன் மிக சிறந்ததாக விளங்குகிறதுதோட்டத்திற்கு தேவையான விளக்கு பொறி இவரே தயார் செய்து மிக குறைந்த செலவில் வைத்திருக்கிறார்.


மேலும்கத்திரியில் வரும் வேரழுகல் பூஞ்சாண நோய்களை கட்டுப்படுத்த இவர் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

அதாவது இஞ்சி பூண்டு மிளகாய் கரைசலுடன் ஒரு லிட்டர் கோமியம் எடுத்துக்கொண்டு இதனை சரி பங்காக ஆக்கிக்கொண்டு கத்தரிச் செடியின் வேரைச் சுற்றி 200ml ஊட்டி விடுகிறார்.

இதன் மூலம் வேர் அழுகல் நோய் இவரது செடியை அண்ட வில்லை என்று ஆணித்தரமாக கூறுகிறார் .

இதனால் தனது தோட்டத்தில் வேரழுகல் பூஞ்சான நோய் எதுவுமே இல்லை என்று கூறுகிறார் .

கத்தரிக்கு குறைந்தபட்சம் 8 மருந்துகள் ஆவது அடிப்பார்கள் ,அதற்கு சுமார் ஒரு ஏக்கருக்கு எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை செலவு பிடிக்கும் ,ஆனால் நானே இயற்கை முறையில் மதுபாலன் சார் ஆலோசனையில் ,பஞ்சகாவியா | தேமோர் கரைசல்அமுத கரைசல் |கற்பூர கரைசல் | 3ஜி கரைசல் | மீன் அமிலம்,தயார் செய்து எப்பொழுதும் ரெடியாகவே எனது தோட்டத்தில் வைத்திருக்கிறேன் என்கிறார்.

நேற்று இவரது தோட்டத்திற்குச் சென்றுகத்தரி செடியில் இருக்கும் பூக்கள் நிலைத்து இருப்பதற்குகீழ்க்கண்ட ஆலோசனைகளை தெரிவித்தேன்.

ஒன்று மீன் அமிலம் தரை வழியாகவும்தெளிப்பான் மூலம் கொடுக்க சொல்லி இருக்கிறேன்ஐந்து நாட்கள் கழித்து தேமோர் கரைசல் அத்துடன் பெருங்காயத்தை கலந்து தெளிக்க சொல்லியிருக்கிறேன் .

அதன்பின்பு பே விரியா பேசியானா என்னும் திரவத்தை 10 லீட்டர் தண்ணீர்க்கு50 எம்எல் கலந்து செடி முழுவதும் நனையுமாறு அடிக்கச் சொல்லி இருக்கிறேன்ஏனென்றால் காய் புழுக்கள் வரக்கூடிய சமயம் .

அடுத்தபடியாக பஞ்சகாவியா வை லிட்டருக்கு 30 மில்லி என்ற விகிதத்தில் கலந்து செடி நனையுமாறு கொடுக்க சொல்லி இருக்கிறேன்.

இப்படி 15 நாட்களுக்கு கத்திரி செடிக்கு செய்ய வேண்டிய வேலைகளை அட்டவணைப்படுத்தி கொடுத்து உள்ளேன் .

மேலும் மஞ்சள் வண்ண அட்டையை ஏக்கருக்கு 10 முதல் 15 அட்டைகளை வாங்கி வைக்கச் சொல்லி இருக்கிறேன் .

இவை அனைத்தும் பூச்சிகளைக் கவர்ந்து இழுத்துவிடும்.

காய் இன்னும் பத்து பதினைந்து நாட்களில் திரட்சியாக வந்துவிடும்.

கத்தரிக்காய் செடியில் தாறுமாறான அறுவடை எடுக்க  பத்து டிப்ஸ்கள்!!

 இன்றைய பதிவில் கத்திரிக்காய் செடியில் அதிக அறுவடையை எடுக்க சுலபமான சில  டிப்ஸ்களை பற்றி தெரிந்து கொள்வோம்கத்தரிக்காய்களில் அதிகளவு மருத்துவ குணங்கள் உண்டுஐரோப்பியர்கள் இதனை egg plant என்று கூறுவார்கள்விதையோடு சதைப்பகுதியில்ஆன்தோசையனின் மற்றும் ஃப்ளேவோனாய்டட்ஸ் என்றஇரண்டாம் நிலை வேதிக் கூறுகள் இருக்கின்றனஇத்தகைய வேதிக்கூறுகள் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடியவைகத்தரிக்காய் தோலில் பொட்டசியம் மெக்னீசியம்நார்ச்சத்துக்கள்ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன

மனித உடலில் புற்றுநோய் காரணமாக இருக்கும்ஃபிரீரேடிக்கிள் என்ற திசுக்களை கட்டுப்படுத்த கூடிய ஆற்றல்கத்தரிக்காயில் உள்ளபிளோலிக் அமிலத்தில் உள்ளதுபிளோலிக் அமிலம் மற்ற காய்கறிகள் பழங்களில் இருந்தாலும்புற்றுநோய் கிருமிகள் தொற்றாமல் தடுக்கக்கூடிய ஆற்றல் மட்டுமே பிற காய்கறிகளில் உள்ளதுஆனால்புற்றுநோய் தாக்கிய பிறகும்புற்றுநோய் கிருமிகள் பரவாமல் தடுக்க கூடிய ஆற்றல்கத்தரிக்காயில் உள்ள பிளோலிக் அமிலத்திற்க்கு உண்டுகத்திரிக்காயில் உள்ள அந்தோனாசைனின்என்கின்ற பொருள் சீரான ரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது

இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த கத்தரிக்காய் செடியை வளர்ப்பது ரொம்பவும் சவாலான விஷயம்தான்ஆனால் இந்த பதிவில்  கூறியிருக்கும் பத்து டிப்ஸ்களை நீங்கள் செய்தாலே போதும்கத்தரிக்காய் செடியை நாமும் மாடித்தோட்டம்அல்லது வீட்டு தோட்டத்தில்மிகச்சுலபமாக வளர்த்து விடலாம்  

பருவம் பார்த்து பயிர்செய்: 

மாடித் தோட்டம் அல்லது வீட்டுத் தோட்டத்தில்  வருடத்தின் அனைத்து மாதங்களும் கத்தரிக்காய் செடிகளை பயிரிடலாம்டிசம்பர் ஜனவரி முதல் மே மாதம் வரை

இருந்தாலும் ஆடிப்பட்டத்தில் தான் கத்தரிக்காய் செடிகள் அதிக காய்களை கொடுக்கிறதுஎனவே கத்திரிக்காய் செடிகளை ஆடிப்பட்டத்தில் பயிரிடுவது சாலச்சிறந்தது

முடிந்தவரை கோடைகாலத்தில் கத்திரிக்காய் செடிகளை பயிரிடுவதை தவிர்ப்பது நல்லதுகோடைகாலத்தில் மாவுப் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும்

செடியில்  கத்தரிக்காய்கள் சிறிய வடிவத்திலேயே  வரும்ஏனென்றால் மழைக்காலத்தில் கத்தரிக்காய் செடிகளுக்குத் தேவையான ஊட்டசத்துக்கள் மழை நீரிலேயே இருக்கும்ஆனால் கோடைகாலத்தில் மழைநீர் கத்திரிக்காய் செடிகளுக்கு கிடைக்காமல் போவதால் கத்திரிக் காய்கள் சிறிய வடிவிலேயே காய்க்கின்றன.

கோடைகாலத்தில் கத்தரிக்காய்கள் கசப்புத் தன்மை உடையதாக இருக்கும்இது பொட்டாசியம் ஊட்டச்சத்து குறைபாட்டினால் வருவதுதான்அதற்கு சாம்பல் அல்லது வாழைப்பழத் தோலை தண்ணீரில் ஊறவைத்து செடிகளுக்கு கொடுப்பதினால் பொட்டாசியம் சத்து குறைபாடு நீங்கும்.

முடிந்தவரை கோடை காலத்தை தவிர்த்து மீதி உள்ள காலங்களில் கத்திரிக்காய் செடிகளை பயிரிடுவது சிறந்தது. 

விதை விதைத்தல்/விதைநேர்த்தி: 

     கத்திரிக்காய் நாற்றுவிட்டுபிடுங்கி எடுத்து நடக்கூடிய தாவரவகையை சார்ந்ததாகும்அதனால்குழித்தட்டில் விதைநேர்த்தி செய்து விதைக்கலாம்விதைநேர்த்தி செய்யும் போது டிரைக்கோடெர்மா விரிடி உயிர்-உரங்கள்அல்லது பஞ்சகவ்யா இவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்வது மிகவும் சிறப்பானதுகத்தரிக்காயின் விதைகள் மிகவும் சிறிய அளவில் இருப்பதினால் விதை நேர்த்தி செய்வதில் சிரமமாக இருக்கும்எனவே மண் கலவையிலேயே உயிர் உரங்களான டிரைக்கோடெர்மா விரிடி சூடோமோனஸ் இவற்றை கலந்து கத்தரிக்காய் விதைகளை விதைக்கலாம்கத்தரிக்காய் செடிகளின் விதைகளை விதை நேர்த்தி செய்வதினால் வேர் அழுகல் நோய் தண்டு அழுகல் நோய் பூஞ்சான்கள் இவைகள் வருவதை தடுத்து ஆரோக்கியமான கத்தரிக்காய் செடிகளை உருவாக்கலாம்

கத்திரிக்காய் செடிகளை விதை நேர்த்தி செய்து விதைப்பதால் கத்தரிக்காய் செடியில் வரும் நோய் தாக்குதல்பூச்சி தாக்குதல் இவைகளை தவிர்த்து நல்ல விளைச்சலை சுலபமாக எடுக்கலாம். 

மண்கலவை தயாரித்தல்:

       கத்தரிக்காய் செடிக்கு மண் கலவை என்று எடுத்துக்கொண்டால்,

 வண்டல்மண்

களிமண் கலந்த வண்டல் மண்

செம்மண் சிறந்தது.  

முக்கியமாக சிறந்த வடிகால் வசதியுடைய மண்ணாக இருப்பது சிறப்பம்சம்மண் கலவையுடன் வேப்பம் புண்ணாக்குமற்றும் உயிர்-உரங்கள் அசோஸ்பைரில்லம் பாஸ்போபாக்டீரியா சூடோமோனஸ் டிரைக்கோடெர்மா விரிடிபொட்டாஷ் பாக்டீரியா சேர்ப்பது மிகவும் அவசியம்இயற்கை உரங்கள் மண்புழு உரம் அல்லது தொழு உரம் அல்லது இலை மக்கு உரம் அல்லது காய்கறி கழிவில் இருந்து கிடைக்கும் உரம் சேர்த்துக்கொள்ளலாம்மண் கலவையில் உயிர் உரங்களை சேர்ப்பதனால் கத்திரிக்காய் செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து எளிதாக கரைத்து  கொடுக்கும்வேப்பம் புண்ணாக்கு கத்தரிக்காய் செடிகளுக்கு கொடுப்பதினால் வேர் அழுகல் நோய்வேரில் வரும் பூச்சிகள்தண்டு அழுகல் நோய்இலைகளில் வரும் இலைப்பேன்கள்செம்பேன்கள் கம்பளிப்புழுபச்சை புழுக்கள் காய்த்துளைப்பான் தண்டுதுளைப்பான் இவைகளை கட்டுப்படுத்தலாம்கத்திரிக்காய் செடிகளை நாற்று விட்டுஜான் அளவுக்கு வளர்ந்த பின்னர்பிடுங்கி நட வேண்டும்தோராயமாக 25 நாள் முதல் 30 நாட்கள் வரை பிடிங்கி நடலாம். 

கத்திரிக்காய் செடியினை பாதிக்கும் பூச்சிகள்/புழுக்கள்: 

 கத்தரிச்செடியில்  முப்பது முதல் நாற்பது நாட்களில் பக்கக் கிளைகள் வரும்போதுதண்டு துளைப்பான்கம்பளி பூச்சி தொல்லைகள் இருக்கும்அப்பொழுது வேப்ப எண்ணெயுடன்இயற்கை சோப்பு கரைசல் கலந்து தெளிக்கவேண்டும்வாரம் ஒரு முறை வேப்ப எண்ணெய் தவறாமல் தெளித்து வருவது சிறந்த பலனை தரும்

அடுத்தது விளக்குப் பொறி (Pest Control) வைக்க வேண்டும்விளக்குப்பொறி வைப்பதினால் அந்த வெளிச்சத்தில் பூச்சிகள் கவர்ந்து இழுத்து விளக்குப்பொறி அடியில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரில் [எண்ணெய் கலந்த தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில்விழுந்துஅதனால் பறக்க முடியாமல் இறந்துவிடும்முடிந்தவரை பாத்திரத்தில் விழுந்து கிடக்கும்பூச்சிகளை அடிக்கடி அகற்றி விடுவது நல்லது

கத்தரிக்காய் செடிகளில் வரும் தண்டுப்புழுகாய்த்துளைப்பான்தண்டுதுளைப்பான்தத்துப் பூச்சிகள் இவைகளை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி வைக்கலாம்இனக்கவர்ச்சிப் பொறி வைப்பதினால் பூச்சிகளைக் கவர்ந்து இழுத்து அழிக்கலாம்இனக்கவர்ச்சிப் பொறியில் உள்ள பூச்சிகளை உடனுக்குடன் எடுத்து அழித்து விடுவது நல்லது.

 அசுஉனிஇலைப்பேன்மாவுப்பூச்சிகள் தொல்லைகள் இருக்கும்இதற்கு இஞ்சிபூண்டுமிளகாய்கரைசல் மிகவும் நல்லதுஅசுஉனி பூச்சிகளுக்குசாம்பல் இலைகளின் மீது காலைவேளைகளில் தூவி விடலாம்., அல்லது சாம்பல் கரைசலையும் பயன்படுத்தலாம்.

உரங்கள்: 

 கத்தரிக்காய் செடியில் நாற்பத்தைந்து நாட்களில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்இந்த நேரத்தில் கத்திரிக்காய் செடிகளுக்கு அமிலத்தன்மை கொடுப்பதினால் பூக்கள் நிறைய பூக்க ஆரம்பிக்கும்இச்சமயங்களில் புளித்த மோருடன் தேங்காய்ப்பால் கலந்து தயாரிக்கப்படுகின்றதேமோர் கரைசல்மீன் அமினோ அமிலம்அரப்பு மோர் கரைசல்மோர் பெருங்காயத்தூள் கரைசல்இவற்றில் உங்களிடம் உள்ள கரைசலை தெளிக்கலாம். 

இவ்வாறு பூக்கள் பூக்கின்ற நேரத்தில் தெளிப்பதால் பூக்கள் அனைத்தும் காய்கறிகளாக மாறும்காய்கறிகள் அனைத்தும் மிகவும் சுவையாக இருக்கும்மேலும் பூச்சி தாக்குதலும் குறையும்இந்த நேரத்தில் வீட்டிலேயே இருக்கும் காய்கறி கழுவிய தண்ணீர்அரிசி கழுவிய தண்ணீர் இவைகளோடு தண்ணீர் கலந்து செடிகளின் வேர் பகுதியில் ஊற்றி வரலாம்மண்புழு உரம் வேர்ப்பகுதியில் போட்டு கிளறி விடுவதனால் பூக்கள் உதிர்வு பிரச்சனைகள் சரியாகும். 

கடலை புண்ணாக்கு / வேப்பம் புண்ணாக்கு கரைசல்:

 

 கத்திரி செடியில் பூக்கள் பூக்கும் போதுவேர் வழியாக கடலை புண்ணாக்குவேப்பம் புண்ணாக்கும் கலந்த கரைசலை ஊற்றினால் கத்திரிக்காய்கள் பெரியதாகதிரட்சியாக வரும்கடலை புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு கரைசல் தயாரிக்கும் போது புழுக்கள் வராமல் இருப்பதற்கு 75% கடலை புண்ணாக்கு 25% வேப்பம் புண்ணாக்கும் சேர்ந்து தண்ணீரில் ஊறவைத்துமுதலில் அந்தக் கரைசலில் மேல் படிந்திருக்கும் தண்ணீரை எடுத்துசரிபாதி தண்ணீர் கலந்து செடிகளுக்கு ஊற்றி வரலாம்மீண்டும் அந்தக் கரைசலை கலக்கி விட்டுமறுநாள் மேலே படிந்திருக்கும் தண்ணீரை எடுத்து ஊற்றி வரலாம்இதேபோல் தினமும் கரைசலை நன்றாக கலக்கிவிட்டு அந்த கரைசலின் மேல் படிந்திருக்கும் தண்ணீரை உபயோகப்படுத்தினால் புழுக்கள்எறும்புகள் போன்றவை செடிகளில் வருவதை தவிர்க்கலாம். 

கடலைப்புண்ணாக்கில் 

தழைச்சத்து-7.60 

மணிச்சத்து-1.50, 

சாம்பல்சத்து-1.30 விழுக்காடும்

வேப்பம் புண்ணாக்கில்,

தழைச்சத்தும்,-5.20 விழுக்காடு

 மணிச்சத்து-1.90 விழுக்காடும்

சாம்பல் சத்து-1.5 விழுக்காடும் உள்ளது.


 கத்தரிக்காயில் அதிக காய்கள் காய்க்க  வைப்பதற்கு இந்த சத்துக்கள் உதவுகிறது.

மழைக்கால பராமரிப்பு:

மழைக்காலம்பனிக் காலங்களில்கத்தரிக்காய்களுக்கு அடியில் அழுகல் நோய் வரும்இந்த அழுகல் நோய்மழை பெய்யும் போது அல்லது பனி பொழிவின்போது தண்ணீர் கத்திரிக்காயின் அடியில் நின்று விடுவதினால் வருகிறதுகத்திரிக்காய் அழுகலை  சரிசெய்யசோற்றுக்கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீரில் கலந்து நன்றாக வடிகட்டிஅதை தெளிப்பான்கள் மூலம் கத்தரிக்காய்செடியின் பிஞ்சுகள்காய்கள்இலைகள் இவைகள் மேல் தெளித்து வருவதினால்கத்தரிக்காயில் வரும் கத்தரிக்காய் அழுகல் நோயை சரிசெய்யலாம்சோற்றுக் கற்றாழை திரவம் கத்திரிக்காயின் அழுகல் நோயை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல்கத்திரிக்காய் செடிகளில் வரும் பூச்சித்தாக்குதலையும்கட்டுப்படுத்துகிறது 

சோற்றுக்கற்றாழை திரவம் சிறந்த வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறதுசோற்றுக்கற்றாழை திரவத்தை கத்திரிக்காயின் வேர்ப்பகுதியில் ஊற்றுவதால்கத்திரிக்காய் செடியின் வேரில் வரும் பூச்சிகள்வேர் அழுகல் நோய்தண்டு அழுகல் நோய் இவைகளை சரிசெய்து கத்திரிக்காய் செடி ஆரோக்கியமாக வளர்ந்து அதிக காய்களை தருவதற்கு உதவி செய்கிறது 

கத்திரிக்காய் கசப்புதன்மை நீங்க :  

 கத்தரிக்காய்கள் காய்க்கும் பருவத்தில்சாம்பல்அல்லது வாழைப்பழத்தோல் தண்ணீரில் கரைத்து ஊற்றி வந்தால்காய்கள் பெரியதாக வருவதுடன்காய்கள் கசப்புத்தன்மை இருக்காதுவேர்கள் நன்கு வளர்ச்சி பெறும் 

கத்தரிக்காய் செடியிலிருந்து வரும் கத்தரிக்காய்கள் பொட்டாசியம் சத்து குறைபாட்டினால் சிறியதாக இருக்கும் போதே முற்றி விடுகிறதுகசப்புத் தன்மையோடு இருக்கிறதுமழை நாட்களில் இந்தப் பிரச்சினைகள் அதிகம் வராதுஏனென்றால் மழை நீரிலேயே அதிக சத்துக்கள் இருக்கின்றனஇதைப் பற்றி முன்பே நான் கூறியிருந்தேன்சாம்பல் தண்ணீரில் கரைக்கும் பொழுது ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 50 கிராம் சாம்பல் தண்ணீரில் கரைத்து கத்தரிக்காய் செடிகளின் வேர்ப்பகுதியில் ஊற்றி விடலாம்அல்லது வாழைப்பழத் தோலை எடுத்துக் கொண்டோமானால்ஐந்து வாழைப்பழத்தோல் 5 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்துஅந்தத் தண்ணீரை வடிகட்டி அதனோடு சம அளவு தண்ணீர் சேர்த்து செடிகளின் வேர்ப்பகுதியில் ஊற்றி வரலாம்.

தொடர் பராமரிப்பு வேலைகள்:

 கத்தரிச் செடி 6 மாதம் வரை நன்றாக காய்க்கும்அதற்கு பின்னர், (காய்த்து முடிந்தவுடன்), தேவையற்ற இலைகள் கிளைகளை அகற்றிவிட்டு திரும்பவும் தேமோர் கரைசல்கடலை புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு கரைசல்செடிகளுக்கு கொடுத்துவந்தால்,  நன்கு விளைச்சல் எடுக்கலாம்கடலைப் புண்ணாக்கு கரைசல் கொடுக்கும் போதுகண்டிப்பாக வேப்பம் புண்ணாக்கும் சேர்த்து தான் கொடுக்க வேண்டும்., இல்லை என்றால் புழுக்கள்எறும்புகள் கண்டிப்பாக வரும்எனவே கடலை புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கும் கலந்த கரைசலில் நாம் செடிகளுக்கு கொடுக்க வேண்டும்இந்தக் கரைசலோடு தொழுஉரம் அல்லது மண்புழு உரம் அல்லது காய்கறி கழிவு உரம் அல்லது இலை மக்கு உரம் இவற்றில் ஏதேனும் ஒன்றை நாம் கத்திரிக்காய் செடிகளுக்கு கொடுப்பதினால் கத்தரிக்காய் செடியிலிருந்து கத்தரிக்காயில் அதிக அளவில் அறுவடை செய்யலாம்.

விதை சேகரிப்பு : 

கத்தரிச்செடியில் ஒருமுறை  விளைச்சல் எடுக்கும் போதேகத்திரிக்காய் செடியிலிருந்து இருந்து விதைகளை சேமித்து கொள்ளலாம்அடுத்த சீசனுக்கு விதைக்ககடைகளில் வாங்க வேண்டும் என்ற அவசியம் இருக்காதுஉங்களுக்கு  எந்த வகையினைச் சார்ந்தகத்தரிக்காய் மிகவும் பிடிக்கிறதோஅதனுடைய விதைகளை சேகரித்து வைத்து ஒவ்வொரு சீசனுக்கும்அதை வைத்து பயன்பெறலாம்கத்தரிக்காய் விதைகளை சேமிக்கும் போதுகவனமாக சேமிக்க வேண்டும்., இல்லையென்றால் விதைகளை சாப்பிடும் வண்டுகள் வந்துகத்தரிக்காய் விதைகளை சேதப்படுத்தி விடும் கத்தரிக்காய் விதைகளை சாம்பல் சேர்த்துசேமித்து வைப்பதினால் விதைகளை சாப்பிடும் பூச்சிகளின் தொல்லையில் இருந்துகத்தரிக்காய் விதைகளை சுலபமாக பாதுகாக்கலாம்.


மிளகாய்த் தோட்டம்

 மிளகாய்க்குவத்தலில் இருக்கும் விதைகளை உதிர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்இதனை சிறு பைகளில் அல்லது குழி தட்டுகளில் விதைத்து நீர் தெளிக்க வேண்டும். 20 முதல் 25 நாட்கள் ஆன நாற்றுகளை பைகளுக்கு மாற்ற வேண்டும்.


நாற்றுகளாக இருந்தால் அப்படியே பைகளில் நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நாற்றுகளை நட்டவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும்நீர் ஊற்றும்போது மண் காய்ந்த பின் ஊற்ற வேண்டும்.

உரங்கள்

செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.

வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும்இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும்இதுவே அடி உரமாகவும்பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

பஞ்சகாவ்யா உரத்தை மேல் தெளிப்பாக தெளிக்கலாம்மேலும் சமையலறை கழிவுகளை உரமாக இடலாம்காய் கழுவிய தண்ணீர்அரிசி கழுவிய தண்ணீர் ஆகியவற்றை செடிகளுக்கு ஊற்றலாம்.

பாதுகாப்பு முறைகள்

செடியைச் சுற்றி அடி மண்ணை வாரம் ஒரு முறை கொத்தி விட வேண்டும்மண்ணை கொத்தி விடாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவது பயன் அளிக்காது.

அறுவடை

காய்கள் திரண்டவுடன் பச்சை மிளகாய்களை அறுவடை செய்யலாம்வற்றல் மிளகாய்களுக்குபழங்களை பழுக்கவிட்டு அறுவடை செய்ய வேண்டும்.

கறிவேப்பிலை

இந்தியாதான் கறிவேப்பிலையின் தாயகம் ஆகும்இதன் தாவரவியல் பெயர் முறையா கோயிங்கி ஆகும்கறிவேப்பிலை தென்னிந்திய மற்றும் இலங்கை உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.


கறிவேம்பு அல்லது கருவேப்பிலை என்று அழைக்கப்படும் இது பல மருத்துவ குணங்கள் கொண்ட தாவரம் ஆகும்.

பயிரிடும் முறை:

ஜூலை – ஆகஸ்ட் மாதம் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.

கருவேப்பிலை பொதுவாக எல்லா வகையான மண் வகைகளிலும் வளர்ந்து மகசூல் கொடுக்கும் தன்மை உடையதுஆனால் ஊட்டமிக்க செம்மண் வகை நிலங்கள் மிகவும் ஏற்றதுபொதுவாக நீர் தேங்காத மண் வகையாக இருந்தால் நன்றாக வளரும் தன்மை உடையது.

கருவேப்பிலை பொதுவாக விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறதுநன்கு பழுத்த பழங்களை பறித்து உடனே தோல் நீக்கி அல்லது அப்படியே நில மேடை பாத்திகளில் வரிசையாக ஊன்ற வேண்டும்விதைத்த 20 நாட்கள் கழித்து முளைக்க ஆரம்பிக்கும்பின்பு இரண்டு அல்லது மூன்று மாத நாற்றுகளை எடுத்து கலவை மண் நிரப்பிய பொலித்தீன் பைகளில் நட்டுபாதுகாக்க வேண்டும்ஒரு ஆண்டு முதல் இரண்டு ஆண்டு வயதுடைய நாற்றுகளையே நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.

நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை நன்றாக உழவு செய்ய வேண்டும்கடைசி உழவின் பொது 5 டன் தொழு உரம் இட வேண்டும்பெரிய செடிகளாக வளர்க்க 2 . 5 மீட்டர் இடைவெளி தேவைப்படும்.குத்துக் செடிகளாக வளர்க்க 1 . 2 மீட்டர் இடைவெளி வேண்டும்அதிக மகசூல் பெற 60 செ.மீ இடைவெளியில் குழிகளை எடுக்க வேண்டும்.

தயார் செய்துள்ள குழிகளில் ஒன்று முதல் இரண்டு வயதுடைய நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்தேர்வு செய்யும் நாற்றுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.

நாற்றுகளை நட்டவுடன் நீர் பாய்ச்சுதல் அவசியமாகும்பின்பு நட்ட மூன்று நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்அதன் பின்னர் வாரம் ஒரு முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

உரமிடும் முறை :

அடி ஆழத்தில் சதுர குழிதோண்டி நாற்றுகளை சுற்றி மக்கிய தொழுஉரம் இட வேண்டும்பின்னர் உரத்தை மண்ணுடன் சேர்த்து கிளறி விட வேண்டும்ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் ஒரு செடிக்கு 20 கிலோ தொழுஉரம் இட வேண்டும்.

வருடம் ஒரு மரத்திற்கு 15 முதல் 20 கிலோ வரை தொழுஉரம் அல்லது மண்புழு உரம் இட வேண்டும்மேலும் 150 கிராம் தழைச்சத்து, 25 கிராம் மணிச்சத்து 50 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இட்டு மண் அணைக்க வேண்டும்அதன்பின் தேவைக்கேற்ப வருடத்திற்கு வருடம் உர அளவினை அதிகப்படுத்த வேண்டும். 100 ம் நாள் ஒவ்வொரு செடியின் வேர்ப்பகுதியிலும் 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கை வைக்க வேண்டும்.

பொதுவாக கறிவேப்பிலை தோட்டத்தில் களைகள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்ஆகையால் செடியை சுற்றியுள்ள களைகளை வெட்டி சுத்தம் செய்து வட்டம் போட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

செடிகள் 1 மீட்டர் வளர்ந்தவுடன் நுனிக்கொழுந்தினை கிள்ளி விட வேண்டும்இவ்வாறு செய்வதினால் பக்க கிளைகள் வளர்ச்சி அதிகரிக்கும்ஒரு செடிக்கு 5 – 6 கிளைகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

நடவு செய்த 6 – ம் மாதத்தில் இருந்து அறுவடை செய்யலாம்தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்பூமியில் இருந்து 10 செ.மீ உயரம் விட்டு அறுக்கடை செய்ய வேண்டும்.

ஒரு ஆண்டு கழித்துஒரு ஏக்கர் நிலத்தில் 400 கிலோ கருவேப்பிலை கிடைக்கும்ஐந்து வருடம் கழித்து 3500 – 5000 கிலோ வரை நல்ல மகசூல் கிடைக்கும்.

பயன்கள்:

பித்தத்தை தனித்து உடல் சூட்டை ஆற்றும் தன்மை உடையதுஅதோடு கருவேப்பிலை கீரை மனதுக்கு உற்சாகத்தை தரக்கூடியது.

குமட்டல்சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல்நாள்பட்ட காய்ச்சல் ஆகியவற்றை கருவேப்பிலை குணப்படுத்துகிறதுபித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தை குணப்படுத்த கருவேப்பிலை உதவுகின்றது.

வாந்திநாக்கு ருசியற்று போகுதல்பசியற்ற நிலைசளி ஆகியவற்றை கறிவேப்பிலை குணப்படுத்தும்கண்கள் ஒளி பெறவும்முடி நரைக்காமல் இருக்கவும்மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.

கறிவேப்பிலை சாறு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை பலப்படுத்தும்பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலை சேர்த்துக்கொள்வது நல்லது.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் முடி நன்றாக வளரும்.

மஞ்சள் 

மஞ்சள் ஒரு வெப்ப மண்டலப்பயிர் ஆகும்.

தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்துமண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு.


இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருளாகும்இதனை இந்துக்கள் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள்.

மஞ்சள் தமிழ் நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்த மருத்துவத்தின் பிரதான பகுதியாக பயன்படுத்தப்பட்டது.

இது முதலில் வண்ணச் சாயம் எடுப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டது.

இந்தியாவில் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் அதிக அளவு மஞ்சள் விளைவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவு மஞ்சள் விளைவதால் ஈரோட்டிற்கு மஞ்சள் மாநகர் என்ற பெயரும் உண்டு.

மஞ்சள் எப்படி பயிரிடுவது…?

கோ 1, பிஎஸ்ஆர் 1,2 (பவானிசாகர் 1,2) ரோமாஸ்வெர்ணாசுதர்ஷனாரங்காராஷ்மிராஜேந்திர சோனியாகிருஷ்ணாசுகுணாசுகந்தம்சுரோமாஆலப்புழாவிரலி மஞ்சள்ஐஐஎஸ்ஆர் பிரபாஐஐஎஸ்ஆர் பிரதீபாஐஐஎஸ்ஆர் அலப்பி சுப்ரீம் மற்றும் ஐஐஎஸ்ஆர் கெடாரம் ஆகிய இரகங்கள் உள்ளனஇதில் கோ 1, பிஎஸ்ஆர் 1, 2 ஆகியவை தமிழ் நாட்டு இரகங்கள் ஆகும்.

மஞ்சள் சாகுபடிக்கு வைகாசி முதல் ஆனி பட்டம் வரை சிறந்த பருவம் ஆகும்.

நல்ல வடிகால் வசதியுடைய செம்மண் மற்றும் இருமண்பாட்டு நிலம் மஞ்சள் சாகுபடிக்கு ஏற்றது.

முதலில் நிலத்தை களை இல்லாமல் குறுக்கு-நெடுக்காக இரண்டு முறை உழவு செய்ய வேண்டும்கடைசி உழவின் போது எக்டருக்கு 10 டன் மக்கிய தொழு உரம் இட்டு மண்ணுடன் நன்கு கலக்கவேண்டும்பின்புநான்கு அடி அகலத்துக்கு மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும்பாத்தியின் நீளத்தை இடத்துக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம்.

தாய் கிழங்கு மற்றும் விரலி கிழங்குகளை கொண்டு பயிர்ப்பெருக்கம் செய்யப்படுகிறதுஒரு எக்டருக்கு 2000 கிலோ விதை கிழங்குகள் தேவைப்படுகின்றன.

விதைப்பதற்கு முன் விதை கிழங்குகளை எமிசான் மருந்து கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்ஒரு கிராம் எமிசான் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்துஅதில் விதை மஞ்சளை 10 நிமிடம் ஊறவைத்துபின் நிழலில் உலர்த்தி விதைக்கவேண்டும்இதனால் கிழங்கு அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

நீரை நிலத்தில் பாய்ச்சி விதை மஞ்சளைப் பார்களின் ஓரத்தில் 15 முதல் 20 செ.மீ இடைவெளியில் 4 செ.மீ ஆழத்தில் நடவு செய்யவேண்டும்.

மஞ்சள் நடவுக்கு முன்புநடவு செய்த மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்சவேண்டும்பின்பு மண்ணின் தன்மைக்கேற்ப வாரம் ஒரு முறை நீர்ப்பாய்ச்சவேண்டும்.

200 கிலோ வேப்பம் (கடலை புண்ணாக்கு, 25:60:108 கிலோ NPK, 30 கிலோ பெரஸ் சல்பேட் மற்றும் 15 கிலோ ஜிங்க் சல்பேட், 10 கிலோ அசோஸ்பைரில்லம், 10 கிலோ பாஸ்போபாக்டீரியா போன்றவற்றை நடவின் போது இட வேண்டும்.

மேலுரமாக எக்டருக்கு 25:108 கிலோ தழை மற்றும் சாம்பல்சத்தினை நட்ட 30, 60, 120 மற்றும் 150வது நாளில் இட வேண்டும்.

நுண்ணூட்டச் சத்து கலவையை இலை வழி தெளிக்கவேண்டும்அதற்கு சூப்பர் பாஸ்பேட் 15 கிலோவை 25 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஒரு நாள் இரவு ஊறவைக்கவேண்டும்மறுநாள் காலை அந்நீரில் இரும்பு சல்பேட் 375 கிராம்துத்தநாக சல்பேட் 375 கிராம்போராக்ஸ் 375 கிராம்யூரியா 375 கிராம் சேர்த்து 250 லிட்டர் தண்ணீர் ஊற்றிஇலைகளின் மேல் தெளிக்கவேண்டும்.

நட்ட மூன்றாவது நாளில் பேஸலின் களைக்கொல்லி 2 லிட்டர் என்ற அளவில் தெளிக்கவேண்டும்நடவு செய்த 30வது நாளில் முதல் களையும்பின் 50, 120 மற்றும் 150 நாட்களிலும் களை எடுக்கவேண்டும்மேலுரம் இடும்போது மண் அணைக்கவேண்டும்.

பயிர் மஞ்சள் நிறமாக மாறுதல்சாய்தல்உலர்ந்துவிடுதல் போன்றவை அறுவடைக்கான அறிகுறியாகும்கிழங்குகளை மண்வெட்டி அல்லது குழிதோண்டும் கருவி கொண்டு தோண்டி எடுக்க வேண்டும்.

ஒரு எக்டருக்கு பதப்படுத்தப்படாத கிழங்குகள் 25-30 டன்கள் கிடைக்கும்பதப்படுத்தப்பட்ட கிழங்குகள் 5-6 டன்கள் வரை கிடைக்கும்.

வரப்பு ஓரங்களில் வெங்காயம் பயிர் செய்யலாம்.

கிழங்கு பாதுகாப்பு முறைகள்

கிழங்குகளை வேகவைக்க சாண நீர் பயன்படுத்தக் கூடாதுசுத்தமான நீரில் தான் வேக வைக்க வேண்டும்கிழங்குகளைச் சரியான அளவு வேகவைக்கவேண்டும்அதிகமாக வேகவைத்தால் நிறம் மங்கிவிடும்குறைவாக வேக வைத்தால் கிழங்குகள் காயும் போது நொறுங்கி உடைந்து விடும்நீர் கொதிக்க ஆரம்பித்த பின்னர் சுமார் 45 முதல் 60 நிமிடங்களில் கிழங்குகள் நன்றாக வெந்துவிடும்இதனை சில குறிப்புகள் மூலம் கண்டறிலாம்முதலாவது நல்ல மஞ்சள் வாசனை வீசும்இரண்டாவது நீர் கொதிக்கும் போது நுரை தள்ளும்மூன்றாவது கிழங்கினை இலேசாக அமுக்கும்போது நெகிழ்ந்து கொடுக்கும்நன்கு வெந்த கிழங்கினுள் சிறு குச்சியினை நுழைத்தால் அது எளிதில் உள்ளே செல்லும்மஞ்சளை உடைத்துப் பார்த்தால் உட்பாகம் ஆரஞ்சு நிறம் மாறி மஞ்சள் நிறமாக இருக்கும்இந்த சமயத்தில் கிழங்குகளை எடுத்து ஆறவிடவேண்டும்.

தூய்மையான தரையில் சூரிய வெப்பத்தில் காய வைக்கவேண்டும்மழையில் நனைய விடக்கூடாதுஒவ்வொரு நாளும் மூன்று அல்லது நான்கு முறை கிளறி விட்டு சீராக காயவிடவேண்டும்தினமும் மாலையில் கிழங்குகளை ஒன்றாகக் குவித்து தார்பாலினால் மூடிவிடவேண்டும்சுமார் 10 அல்லது 15 நாட்களில் மஞ்சள் காய்ந்துவிடும்கிழங்குகள் உறுதியாக மாறிவிடும்.

காய்ந்த மஞ்சளைப் பெரிய உருளைகளில் போட்டு மெருகூட்டலாம்இந்த உருளைகள் கையாலோ அல்லது மின்சாரத்தாலோ சுற்றப்படுகின்றனமெருகூட்டும் போது மஞ்சள் கிழங்குகளின் மீதுள்ள செதில்கள்சிறு வேர்கள் நீங்கி மேற்புறம் பளபளப்பும் மெருகும் சேர்க்கிறதுஇவ்வாறு மெருகூட்டும் போது நிறமிடுதல் செய்யவேண்டும்நிற மூட்டுவதற்கு இரசாயனங்களையோஇதர பொருட்களையோ பயன்படுத்தக் கூடாதுநல்ல சுத்தமான உலர்ந்த மஞ்சள் பொடியினைச் சேர்த்து நிறமூட்டலாம்.

பதப்படுத்தப்பட்ட மஞ்சளைப் பாலித்தீன் உட்கொடுக்கப்பட்ட கோணிச் சாக்குகளில் அடைக்கவேண்டும்ஈரமற்ற தரைகளில் வைக்கவேண்டும்அவற்றிலிருந்து சுமார் ஒரு அடிக்கும் கூடுதலாக இடைவெளி விட்டு மஞ்சள் சிப்பங்களை அடுக்கவேண்டும்எலிஅணில்பறவைகள் உள்ளே நுழைய விடக்கூடாதுஅவ்வப்போது சிப்பங்களை சூரிய வெளிச்சத்தில் காட்டுவதால் மஞ்சளின் சேமிப்பைக் கூட்ட முடியும்பூச்சி மருந்துகளை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.

மஞ்சள் பயன்கள்

மஞ்சள்வேப்பிலை ஆகியவற்றைச் சம எடையாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப் போட்டு வந்தால் அம்மை கொப்புளங்கள்சேற்றுப் புண் ஆகியவை குணமாகும்.

மஞ்சளைச் சுட்டு புகையை நுகர்ந்தால் தலைநீரேற்றம்மூக்கடைப்பு குணமாகும்.

மஞ்சளை அரைத்துஇரவில் முகத்தில் பூசி காலையில் கழுவி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடி உதிரும்இது ஒரு பாரம்பரிய முறையாக நமது மருத்துவத்தில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது.

சளியினால் தொண்டை அடைப்பு ஏற்பட்டால் தேனுடன் மஞ்சள் தூள் கலந்து காலையும் மாலையும் இரண்டு வேளை சாப்பிட்டால் சளி அடைப்பு சரியாகி விடும்.

சளித் தொல்லையில் இருந்து விடுபட நன்றாக காய்ச்சிய பாலில் மஞ்சள் தூள் கலந்து சாப்பிட வேண்டும்.

மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாகும்.

 பலா

பலாமரத்தின் தாயகம் தென்கிழக்கு ஆசியாவாகும். பலா பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. வெப்ப நாடுகளில் நன்கு வளரும் இயல்பை உடையது. முக்கனிகளுள் ஒன்றான பலாப்பழம், மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழமாகும்.


பலா மரமானது இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில் வளர்கிறது. தமிழ்நாட்டில் நீலகிரி, கீழ்ப்பழனிமலை, வயநாடு, குற்றாலம், ஆனைமலை, கொல்லிமலை பகுதிகளில் விளைகிறது.

பயிரிடுவது எப்படி:

ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரை நடவு செய்யலாம்.

வண்டல் செம்மண்ணில் பலா சிறப்பாக விளையும் . ஆனால் நிலம் அழமாகவும், நல்ல வடிகால் வசதி உள்ளதாகவும் இருக்க வேண்டும்.

நிலத்தை நன்றாக உழுது பின்பு 1 மிட்டர் அகலம், 1 மிட்டர் அழம் உள்ள குழிகளை எடுக்க வேண்டும். பின்பு ஒவ்வெரு குழிகளிலும் செடிகள் நடுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு நடவுக் குழியில் 75% தொழுஉரம் , 15% மண்புழு, 5% செம்மண் 5% வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றறைக் கலந்து குழியை நிரப்பி, லேசாக தண்ணிர் ஊற்றி ஆற விடவேண்டும்.

விதை முலம் உற்பத்தி செய்த கன்றை, நல்ல காய்ப்புள்ள தாய்மரத்தில் ஒட்டுக் கட்டி, நடவு செய்ய வேண்டும்.

ஒரு மாதம் வரை வாரம் இரு முறையும், அதன் பிறகு வாரம் ஒரு முறையும் தண்ணிர் கொடுக்க வேண்டும். இரண்டாவது ஆண்டு, 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணிர் கொடுத்தால் போதுமானது. மூன்றாம் ஆண்டு, கடும்கோடையாக இருந்தால் மட்டுமே தண்ணிர் தர வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் பருவ மழையே போதும் தண்ணிர் பாய்ச்ச வேண்டியதில்லை.

மரம் ஒன்றிற்கு ஒரு வருடத்திற்கு தொழுஉரம் 10 கிலோ , தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து கலந்து 1 கிலோ கொடுக்க வேண்டும். வருட வருடம் ஒரு மடங்கு சேர்த்து கொடுக்க வேண்டும். ஆறு வருடங்களுக்கு பிறகு ஒவ்வொரு மரத்திற்கும் 50 கிலோ அளவு தொழு உரமும் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து கலந்து 2 கிலோ அளவும் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்களை மே, ஜூன் மாதங்களில் ஒரு முறையும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஒரு முறை என இரண்டு முறை பிரித்து இட வேண்டும்.

செடிகள் வளரும் வரை களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மரங்களுக்கு நன்கு சூரிய ஒளி கிடைக்குமாறு பக்கவாட்டு கிளைகளை வெட்டி பராமரிக்க வேண்டும்.

ஒரு கொத்தில் இரண்டு காய்கள் மட்டும் இருந்தால் தான் நல்ல தரமான பெரிய பழங்கள் கிடைக்கும். அதனால் கொத்துக்கு இரண்டு காய்களை மட்டும் விட்டுவிட்டு கூடுதலாக உள்ள பிஞ்சுகளை அகற்றிவிட வேண்டும்.

விதைகள் மூலம் வளர்ந்த செடிகள் 8 வருடங்களில் காப்புக்கு வரும். ஆனால் ஒட்டு கட்டப்பட்ட செடிகள் ஐந்து வருடங்களில் காய்க்க தொடங்கும். காயில் உள்ள முள்ளை வெட்டி பார்த்தால் தண்ணீர் போன்ற திரவம் வர வேண்டும். அப்பொழுதுதான் அந்த காய் அறுவடைக்கு தயாரான காய், பால் போன்ற திரவம் வந்தால் அந்த காயை பறிக்க கூடாது. காயில் உள்ள முட்கள் நன்கு அகன்று விரிந்து இருக்கும் நிலையை அடைந்த பின் அறுவடை செய்யலாம்.

ஒரு வருடத்தில் ஒரு ஏக்கரில் இருந்து 40 டன் பலன்களை பெறலாம். ஊடு பயிராக உளுந்து, பச்சைப்பயிறு ஆகியவற்றை பயிரிடலாம்.

பயன்கள் :

பலாச்சுளைகளை தேனில் நனைத்து சாப்பிட்டால் நன்கு ஜீரணமாகும்.

பலாக்கொட்டை நல்லதொரு உணவாகும். இதன் கொட்டைகளை மாவாக்கி உணவாக உண்ணலாம்.

கார்போஹைட்ரெட், பொட்டாசியம், கால்சியம், புரதசத்து ஆகிய சத்துக்கள் பலாப்பழத்தில் உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி பலாப்பழத்திற்கு உண்டு.

பலா இலையின் கொழுந்தை அரைத்து சிரங்கின் மீது பூசினால் சிரங்கு விரைவில் ஆறும்.

பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது. நார்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்துக்கு உதவுகிறது. வைட்டமின் A , B , C , கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்க வல்லது.

பலாப்பிஞ்சினை சமைத்து உண்டால் பித்தமும், நீர் வேட்கையும் நீங்கும்.

பலா இலையை காயவைத்து இடித்து பொடியாக்கி, அதனை தேனில் கலந்து, காலை வேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப் புண் ஆறும்.

பலா மரத்தில் வரும் பாலினை எடுத்து நெறிக்கட்டிகள், நெடுநாள் உடையாமல் இருக்கும் கட்டிகள் மீது தடவி வர அவை பழுத்து உடையும். 

மாம்பழம்


மாம்பழத்தின் தாயகம் இந்தியா ஆகும், கி மு 4000 ஆண்டிலேயே மாம்பழங்கள் அதிக அளவு பயன்படுத்தி இருக்கிறார்கள். தெற்கு ஆசியாவில் தான் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. மாம்பழ உற்பத்தியில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது. உலக மொத்த உற்பத்தியில் 63 சதவிகிதம் இந்தியாவில் இருந்து தான் உற்பத்தியாகின்றது.

ரகங்கள்:




இந்தியாவில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் மாம்பழங்களில் நீலம், பெங்களூரா, பங்கனப்பள்ளி, சிந்து, அல்போன்சா, மல்கோவா ஆகிய ரகங்கள் மிகவும் பிரபலமானவை.

பயிரிடும் முறை :

ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும். நல்ல வடிகால் வசதி உள்ள செம்மண் நிலம் மாம்பழ உற்பத்திக்கு ஏற்ற மண் ஆகும். மண்ணின் கார அமில தன்மை 6 – 8 வரை இருக்க வேண்டும்.

பயிரிடும் நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்ய வேண்டும். பின்பு ஒவ்வொரு செடிக்கும் 8 முதல் 10 மீட்டர் இடைவெளி இருக்குமாறு மூன்று அடி ஆழமுள்ள குழிகளை எடுக்க வேண்டும். பின்னர் ஒவ்வொரு குழிக்கும் 5 கிலோ தொழு உரம் இட்டு குழிகளை நன்கு ஆறவிட்டு வேண்டும்.

பின்பு தேர்ந்தெடுக்கப்பட்ட செடிகளை குழிகளின் மத்தியில் வைத்து நடவு செய்ய வேண்டும். அக்குழியை மண்ணை கொண்டு நிரப்ப வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட கன்றுகளை உடனே நடாமல் பயிர் செய்யப்போகும் நிலத்தின் மண்ணை அச்செடிகளின் வேர்பகுதிகளில் வைத்து புதிய தளிர்களை வரவைத்து பின் நடுவதினால் செடிகளின் இறப்பு விகிதத்தை அதிகப்படியாக குறைக்கலாம். இவ்வாறு செய்வதினால் கன்றுகள் பட்டுபோகாமல் தடுக்கலாம்.

கன்றுகளை நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். இளங்கன்றுகள் மண்ணில் வேர் பிடிக்கும் வரை அடிக்கடி நீர் பாய்ச்சுவது நல்லது.

அதேநேரத்தில் தண்டுப்பகுதியில் அதிக அளவிலான நீர் தேக்கத்தை தடுக்க வேண்டும்.

சொட்டுநீர் பாசனத்தை உபயோகிப்பதினால் செடிகள் ஈரப்பதத்தோடு வளருவதுடன் நீர் வீணாவத்தையும் தடுக்கலாம்.

அடிக்கடி தொழுவுரம் மற்றும் தழைசத்துக்களை வைப்பதினால் நல்ல வளர்ச்சியும் நல்ல மகசூலும் கிடைக்கும்.

 

மாம்பழத்தின் பயன்கள்:

மாம்பலத்தில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்து இருப்பதினால் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைப்பதற்கும் பயன்படுகிறது.

தோல் பளபளக்க மாம்பழத்தை தொடர்ந்து உண்ண வேண்டும்.

தோல்வறட்சியை தடுக்கவும் தோல் பளபளக்கவும் மாம்பழ துண்டுகளை கொண்டு அந்த இடத்தில தேய்க்கவும்.

முட்டைகோஸ் பயிரிடும் முறை 

தேவையான பொருட்கள்

Grow Bags அல்லது Thotti

அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.

நாற்றுகளை உருவாக்க குழித்தட்டுகள்


நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்

தொட்டிகள்

10 கிலோ கொள்ளளவு கொண்ட தொட்டி அல்லது பைகளில் 8 கிலோ வரை மண், மணல், தென்னை நார் கழிவு, மட்கிய குப்பை ஆகியவற்றை நிரப்பி தொட்டியை ஆற விட வேண்டும்.

நாற்றுகளை உண்டாக்க குழி தட்டில் தென்னை நார் கழிவுகளை நிரப்ப வேண்டும். அதன் அடியில் ஒரு துளை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

விதைத்தல்

தரமான விதைகளை தேர்வு செய்து குழி தட்டுகளில் குழிக்கு ஒரு விதை வீதம் விதைக்க வேண்டும். தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

தயார் செய்துள்ள தொட்டிகளில் 20 நாள் வயதான நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நாற்று நட்டவுடன் நீர் ஊற்ற வேண்டும். இரு நாட்களுக்கு ஒருமுறை காலை அல்லது மாலை வேளையில் நீர் ஊற்ற வேண்டும்.

உரங்கள்

செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.

வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

வேப்பம்புண்ணாக்கை ஊறவைத்து வடிகட்டிய நீருடன் வேப்ப எண்ணெய் 3 மிலி (ஒரு லிட்டர் தண்ணீரில்) கலந்து தெளிக்கும்போது பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும்.

பாதுகாப்பு முறைகள்

பஞ்சகாவ்யா உரத்தை மேல் தெளிப்பாக தெளிக்கலாம். மேலும் சமையலறை கழிவுகளை உரமாக இடலாம்.

இயற்கை பூச்சி விரட்டிகளான கற்றாழை சாறு, பூண்டு கரைசல் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மி.லி தெளித்து வர நன்மை தரும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அறுவடை

120 நாட்களில் காய்களை அறுவடை செய்யலாம்.

முட்டைகோஸ் பயன்கள்:

இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது. கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும்.

மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.

சரும வறட்சியை நீக்கி சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும். வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.

எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

நரம்புகளுக்கு வலு கொடுத்து நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.

 

புடலங்காய்

புடலங்காய் கொடிவகையான காய்கறி வகையைச் சேர்ந்த ஒரு வெப்ப மண்டலப் பயிராகும்.

வீட்டுத் தோட்டங்களில் தொங்கும் புடலங்காயின் தாயகம் இந்தியா. இதன் தாவர விஞ்ஞானப் பெயர், டிரிச்சோசன்தீன் ஆங்கினா என்பதாகும்.

இவற்றின் காய்கள் நீண்டு பச்சையாக தொங்கும்.


புடலங்காயில் கொத்துப்புடல், நாய்ப்புடல், பன்றிப்புடல், பேய்ப்புடல் என பலவகை உள்ளது.

பன்றிப்புடல் கொடியாக இருந்தாலும் நீளமாக இல்லாமல் நீளம் குறைவாக இருக்கும்.

பேய்புடல் மிகவும் கசப்பானது. அதனால் இதனை சமையலுக்கு பயன்படுத்த மாட்டார்கள்.

புடலங்காய் எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :

கோ 1, கோ 2, பி.கே.எம். 1, எம்.டி.யூ. 1, பி.எல்.ஆர்.(எஸ்.ஜி.) 1, பி.எஸ்.எஸ். 694, மைக்கோ குட்டை ஆகிய இரகங்கள் உள்ளன.

மண்

புடலங்காய் ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இதன் சாகுபடிக்கு 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படும். இருமண் பாங்கான மண் வகைகள் குறிப்பாக மணற்சாரி வண்டல் மண் சாகுபடிக்கு ஏற்றது. மேலும் மித வெப்ப மண்டலப் பகுதிகளிலும் சாகுபடி செய்யலாம்.

பருவம்

ஜூன்ஜூலை மாதங்களும், டிசம்பர்ஜனவரி மாதங்களும் சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்றாக 3 அல்லது 4 முறை உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது 20 டன் மக்கிய தொழு உரத்தை இட்டு 2 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீட்டர் அகலத்தில் வாய்க்கால் எடுத்து நிலம் தயாரிக்க வேண்டும். அந்த வாய்க்காலில் 1.5 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீட்டர் நீளம், ஆழம், அகலம் கொண்ட குழிகளை எடுத்து தொழு உரத்துடன், மேல் மண் கலந்து நிரப்பி வைக்க வேண்டும்.

விதை

ஒரு எக்டருக்கு 1.5 முதல் 2 கிலோ விதையளவு தேவைப்படும்.

விதைநேர்த்தி

விதைகளை நாட்டு மாட்டு சாணம் மற்றும் கோமியத்தில் 24 மணி நேரம் ஊற வைத்த பின்பு நடவு செய்யவேண்டும் .

விதைத்தல்

ஒரு குழிக்கு 5 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும். விதை நட்ட 8 முதல் 10 நாட்களில் முளைக்கத் தொடங்கிவிடும்.

நீர் நிர்வாகம்

விதை ஊன்றியவுடன் குடம் அல்லது பூவாளி வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். நன்கு வளர்ந்தவுடன் வாரம் ஒரு முறை வாய்க்கால் மூலமாக தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும்.

புடலங்காய் உரங்கள்:

ஒரு எக்டருக்கு அடியுரமாக 20 முதல் 30 கிலோ தழைச்சத்து, 30 முதல் 50 கிலோ மணிச்சத்து, 30 முதல் 40 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும். மேலுரமாக 20 முதல் 30 கிலோ தழைச்சத்தை பூ பூக்கும் பருவத்தில் இட வேண்டும்.

வளர்ச்சி ஊக்கி

இரண்டு இலைப் பருவத்தில் எத்ரல் 250 பிபிஎம் என்ற வளர்ச்சி ஊக்கியை தெளித்தால் பெண் பூக்கள் அதிகளவில் உற்பத்தியாகும். இதே வளர்ச்சி ஊக்கியை ஒரு வாரத்துக்கு 3 முறை தெளிக்க வேண்டும். செடிகளை 18 லிருந்து 20 நாட்களுக்குள் களை செய்து 2 நாள் பூமியை உலர வைக்க வேண்டும். ஜீவாமிர்தம் தயார் செய்து அதனுடன் 20 கிலோ பிண்ணாக்கு நீர் கலந்து செடிகளுக்கு ஊற்ற வேண்டும்.

70வது நாளில் குழிக்கு, மட்கிய தொழு உரம் 1 கிலோ போட வேண்டும். இதனால் மண்ணில் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

புடலங்காய் பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

செடி நன்கு வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். ஒரு குழியில் நன்கு வளர்ந்த 3 செடிகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற நாற்றுகளை பிடுங்கி விட வேண்டும். புடலைக் கொடி வளர்ந்து படருவதற்கு இரும்புக் கம்பிகளை வைத்து பந்தல் போடுவது அவசியமாகும். விதை முளைத்து கொடி வரும்போது, கொடியை மூங்கில் குச்சியோ அல்லது மற்ற குச்சிகளை வைத்தோ ஊன்று கொடுத்து பந்தலில் படர விட வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

15 முதல் 20 நாட்கள் இடைவெளியில் பஞ்சகாவ்யா தெளிக்க வேண்டும். தினமும் காலையில் நான்கு விளக்கு பொறிகளில் உள்ள பூச்சிகளை வடிகட்டி எடுத்து குழியில் புதைத்து விடவும். நல்ல பெண் பூக்கள் மலர அறப்பு மோர் கரைசல் பெளர்ணமி தினம் அன்று காலையில் தெளிக்க வேண்டும். வேப்ப எண்ணெய், புங்க எண்ணெய் உடன் சோப்பு கரைசல் கலந்து 20 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். அதிக வெப்பமும், குளிர் காற்றும் மாறி மாறி வந்தால் புளித்த மோரும், நடுப்பதம் உள்ள இளநீர் கலந்து தெளிக்க வேண்டும். விளக்கு பொறி, இனக்கவர்ச்சியினால் தாய் பூச்சிகள் அழிந்துவிடும். KNOX(Bio மருந்து) 60 நாள் வரை 8 – 10 மில்லி 10 லிட்டர் தண்ணீரில் கலந்து 12 முதல் 15 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

பூசணி வண்டின் தாக்குதல்

இதைக் கட்டுப்படுத்த 2 கிராம் செவின் அல்லது கார்பரில் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பழ தாக்குதல்

பழ ஈயின் தாக்குதலைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 1 சதவீதம் தெளிக்க வேண்டும்.

சாம்பல் நோய்

சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி டினோகாப் அல்லது அரை கிராம் கார்பன்டாசிம் மருந்துகளில் ஒன்றை தெளிக்கலாம்.

அடிச்சாம்பல் நோய்

அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு இரண்டு கிராம் மாங்கோசெப் அல்லது குளோரோதலானில் மருந்துகளில் ஒன்றை 10 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

அறுவடை

விதை ஊன்றிய 80 நாட்கள் கழித்து முதல் அறுவடை தொடங்கும். பின்னர் ஒரு வார இடை வெளியில் 6 முதல் 8 அறுவடை செய்யலாம்.

மகசூல்

ஒரு எக்டருக்கு 20 முதல் 25 டன் மகசூல் பெறலாம்.

புடலங்காய் பயன்கள்:

புடலங்காய் சற்று நீரோட்டமுள்ள காய், இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.

தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.

அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் ஜீரணமாக்கும். நன்கு பசியைத் தூண்டும்.

வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.

இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கும். மூலநோய்க்காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும்.

நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும். சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும். உடல் தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும். கண் பார்வையை தூண்டும்.

இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றும் தன்மை கொண்டது.

பாகற்காய் சாகுபடி முறைகள்

கொடி வகையைச் சேர்ந்த பாகற்காய் வெப்பப்பிரதேச காயாகும். பாகற்காயானது கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைப்படும். இதன் சுவை கசப்பாக இருந்தாலும், எண்ணற்ற மருத்துவ குணங்களை அடங்கியுள்ளது.


முதலில் இது தன்னிச்சையாக வளர்ந்து கிடந்தது. வறட்சி காலத்தில் வேறு உணவு கிடைக்காதபோது இதை உண்டனர்.

பாகற்காய் முற்றிப் பழுக்க ஆரம்பித்ததும் மஞ்சளாகி பின் சிவப்பாக மாறும். முற்றியதும் காய் வெடித்து தோல் மூன்று பாகங்களாகி மேல்நோக்கி சுருண்டிருக்கும். செராசி என்ற காட்டு பாகற்காயில் ஒருவகை பிசின் இருக்கும். அதை மெழுகுவர்த்தி செய்யப் பயன்படுத்துவார்கள். இக்கொடி வெள்ளரிக்காய், பூசணிக்காய், முதலான நிலைத்திணை வகைகளை உள்ளடக்கிய குக்குர்பிட்டேசியே என்னும் கொடி குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

பாகற்காயின் தாயகம் இந்தியா ஆகும். இந்தியாவிலிருந்து, சீனாவிற்கு 14 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப் பட்டது.

பாகற்காய் எப்படி பயிரிடுவது…?

§  கோ 1, எம்.டி.யூ. 1, அர்காஹரித், ப்ரியா, பிரீத்தி, கோபிஜிஎச்1, என்.எஸ். 244, என்.எஸ். 453, யு.எஸ் 6214, யு.எஸ். 390, அபிஷேக் ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு உகந்தவை.

§  ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலம் சாகுபடிக்கு ஏற்ற பருவமாகும்.

§  அங்ககச் சத்து கொண்ட, கார அமிலத்தன்மை கொண்ட நல்ல மண் கொண்ட மணற்சாரி வண்டல் மண் ஏற்றது.

§  தேர்வு செய்த நிலத்தை மூன்று முறை நன்கு உழுது, கட்டிகள் இல்லாமல் நிலத்தை நன்கு சமன்படுத்தி கொள்ள வேண்டும். கடைசி உழவின் போது அடியுரமாக தொழு உரம் இட்டு உழவு செய்ய வேண்டும்.

§  பாகற்காயைப் பொருத்தவரை ஏக்கருக்கு 1 கிலோ 800 கிராம் விதை தேவைப்படும்.

§  ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் ப்ளுரோசன்ஸ் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

§  வரிசைக்கு வரிசை 2 மீட்டர், குழிக்கு குழி 1.5 மீட்டர் இடைவெளி விட்டு குழிக்கு 5 விதைகள் ஊன்ற வேண்டும்.

§  நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் வாரம் ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது.

§  ஏக்கருக்கு 10 கிலோ தொழு உரம், 15 கிராம் யூரியா, 75 கிராம் சூப்பர் பாஸ்பேட், 20 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை கலந்து குழிக்கு அடியுரமாக இடவேண்டும். விதைத்த 30-ஆம் நாள் குழிக்கு 20 கிராம் யூரியா மேலுரமாக இடவேண்டும்.

§  குழிக்கு 2 செடிகள் விட்டு 15-ஆம் நாள் கலைத்துவிட வேண்டும். கொடிகள் படர கல்தூண்கள், கம்பிகள் கொண்டு இரண்டு மீட்டர் உயரத்தில் முறையாகப் பந்தல் அமைக்க வேண்டும். செடி வளரும் பருவத்தில் மூன்று முறை தவறாமல் களை எடுக்க வேண்டும்.

§  விதைத்த 60-65 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். அதன் பிறகு வாரம் ஒருமுறை அறுவடை செய்யலாம். விதைகள் முதிர்ச்சியடைய ஆரம்பிக்கும் முன்பே காய்களை அறுவடை செய்யவேண்டும்.

§  எக்டருக்கு 140 – 150 நாட்களில் 14 டன் காய்கள் வரை கிடைக்கும்.

§  பந்தல் முறையில் பீர்க்கங்காய், புடலங்காய் ஆகியவற்றை ஊடுபயிராக பயிர் செய்யலாம்.

§   

பாகற்காய் பயன்கள்:

§  பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாக உண்டாகும் அரிப்பு மற்றும் இரத்த கோளாறு போன்றவற்றிற்கு பாகற்காய் சிறந்த மருந்தாகும்.

§  ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்டிருக்கும் காலரா மற்றும் வாந்தி பேதியை போக்க இரண்டு டீஸ்பூன் பாகற்காய் இலையின் சாறு, இரண்டு டீஸ்பூன் டீத்தூள், வெங்காயச்சாறு இரண்டு டீஸ்பூன், எலுமிச்சசாறு இரண்டு டீஸ்பூன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காலராவினால் ஏற்பட்ட வாந்தி பேதி குணமாகும். காலரா குணமாகும் வரை சாப்பிடவேண்டும்.

§  பழுத்த பாகற்காய் இரத்தம் மற்றும் சீறுநீரில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.

§  தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தவும் பாகற்காய் சிறந்ததாகும்.

கைகளில் ஏற்படும் அரிப்பு, கால்களில் ஏற்படும் பூஞ்சை, தோல் தடிப்பு,சொரியாஸிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்க பாகற்காயை ஜீஸ் சாப்பிட வேண்டும்.

 

பாலக்கீரை சாகுபடி முறை

பாலக்கீரை ஒரு கீரை வகையைச் சேர்ந்த மூலிகைச்செடியாகும்.

இக்கீரையின் தாயகம் ஐரோப்பாவாகும்.


பின் வட ஆப்ரிக்கா, ஆசியா, இந்தியா போன்ற நாடுகளுக்குப் பரவியது.

தென் ஐரோப்பாவில் இதன் வேரிலிருந்து சர்க்கரை எடுக்கிறார்கள்.

ஸ்பெயின் நாட்டில் பாலக்கீரையை அதிகம் சாகுபடி செய்கிறார்கள்.

இது வீட்டில் வளர்க்க ஏற்ற கீரையாகும்.

உரங்கள்

ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விடவேண்டும். இதனால் நோய் தாக்குதல் குறைந்து கீரைகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

ஒரு வார காலத்தில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். 10 – 15 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். பின்னர் களைகள் அதிகம் வளராதபடி களைகளை கட்டுப்படுத்த வேண்டும். முதல் களை எடுக்கும் பொழுது பயிரின் எண்ணிக்கையைப் பொறுத்து பயிர் களைதல் வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

இக்கீரைகளில் பூச்சிகளைச் சமாளிக்க நொச்சி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து, ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும். அதனை 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி கரைசல் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

30 வது நாளிலிருந்து இலைகளை வெளிப்பக்கத்திலிருந்து வெட்டி உபயோகப்படுத்தலாம். 6-8 முறை அறுவடை செய்யலாம். இலைகளை பூ விடும் முன்பு பறித்து விட வேண்டும்.

பயன்கள்

வைட்டமின் A அதிக அளவில் உள்ளதால் மாலைக்கண் மற்றும் கண்களில் அரிப்பு ஏற்படுதல் போன்றவற்றை வராமல் தடுக்க உதவுகிறது.

இதில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், போலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன.

போலிக் அமிலம் அதிகளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது மற்றும் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும் இதனை சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்க உதவுகிறது.

மெக்னீசியம், காப்பர் மற்றும் வைட்டமின் கே அதிகளவில் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகிறது.

இக்கீரை இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதால் அனிமீயா நோய் வராமல் இருக்க உதவுகிறது.

இதன் சாற்றை வடிகட்டி 3 துளி காதில் விட்டால் காதில் இரைச்சல் இருப்பதைக் குணப்படுத்தும்.

மரிக்கொழுந்து பயிரிடும் முறை 

தவனம் என்றழைக்கப்படும் மரிக்கொழுந்து ஒரு நறுமணத் தாவரமாகும்.

இச்செடிகள் இவற்றின் மணமுள்ள இலைகளுக்காகவும், அதிலிருந்து தயாரிக்கக் கூடிய நறுமண எண்ணெய்க்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது.


மாலைகளிலும், மலர் செண்டுகளிலும் இதன் இலைகள் அவற்றின் நறுமணத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கேக், புகையிலை மற்றும் பானங்களுக்கு நறுமணமூட்ட அதிக அளவில் உபயோகிக்கப்படுகிறது.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :

சின்னமனூர், பி கே எம்-1 ஆகிய இரகங்கள் உள்ளன.

பருவம்

ஜீன், ஜீலை மாதங்களில் நடவு செய்ய வேண்டும்.

மண்

இப்பயிர் வளம் செறிந்த செம்மண் நிலங்களிலும், நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் நிலங்களிலும் நன்கு வளரும். மிதமான மழை, நல்ல சூரிய ஒளி, காலை பனி ஆகியவை நல்ல விளைச்சல் கிடைக்க உதவுகின்றன.

விதையளவு

மரிக்கொழுந்து செடிகள் விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு ஏக்கரில் விதைக்க 1.50 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும். ஓராண்டுக்கு மேலான பழைய விதைகள் முளைப்புத் தன்மையை இழந்து விடுவதால் முந்தின பருவத்து பயிரிலிருந்து எடுக்கப்பட்ட விதைகளை பயன்படுத்த வேண்டும்.

விதைநேர்த்தி

1 கிலோ விதைக்கு 50 கிராம் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

நாற்றங்கால் தயாரித்தல்

நாற்றங்கால் பாத்திகள் 2 மீட்டர் நீளமும், 1 மீட்டர் அகலமும் உடையதாக அமைக்க வேண்டும். ஒரு பாத்திக்கு 5 கிலோ மக்கிய தொழுஉரம், 2 கிலோ வேப்பம் புண்ணாக்கு வீதம் இட்டு மண்ணோடு நன்றாக கலக்க வேண்டும். விதைகளை 10 கிலோ மணலுடன் கலந்து, சுமார் 3 கிராம் விதை 1 சதுர மீட்டர் பரப்பளவில் விழுமாறு தூவி விதைக்க வேண்டும். பின்பு விதைகளை மணல் தூவி மூடவேண்டும். பூவாளி கொண்டு ஒரு நாளைக்கு இருமுறை தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைத்த 3-4 நாட்களில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும்.

விதைகளை ஈரத்துணியில் 48 மணி நேரம் ஊறவைத்து, முளைக்கட்டியும் விதைக்கலாம்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது ஏக்கருக்கு 15 டன் தொழு உரம் இட்டு, சமன் செய்து கொள்ள வேண்டும். பின் 2 x 2 மீட்டர் அளவில் பாத்திகள் அமைத்துக் கொள்ளவேண்டும்.

விதைத்தல்

விதைத்த 30 நாட்கள் ஆன நாற்றுக்களை செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளியும், வரிசைக்கு வரிசை 15 செ.மீ இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

செடிகளை நட்ட முதல் மாதத்தில் வாரம் இரு முறையும் பிறகு வாரம் ஒரு முறையும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

உரங்கள்

ஒரு ஏக்கருக்கு 15 டன் நன்கு மக்கிய தொழு உரம், 125 கிலோ தழைச்சத்து, 125 கிலோ மணிச்சத்து மற்றும் 75 கிலோ சாம்பல்ச் சத்து உரங்களை அளிக்க வேண்டும். தொழு உரம், மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தினை அடியுரமாகவும், 50 கிலோ தழைச்சத்தினை நடவு செய்த 25வது நாளில் முதல் மேலுரமாகவும், பின்னர் 25 கிலோ தழைச்சத்தினை ஒவ்வொரு முறையும் அறுவடை செய்த பின்னர் மேலுரமாக இடவேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

செடிகள் நட்ட 30 நாட்களில் முதல் களை எடுக்க வேண்டும். பின்னர் தேவைப்படும் போது களை எடுக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

அழுகல் நோய்

இதனைக் கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸிக் குளோரைடு இரண்டு கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேரின் அருகில் ஊற்ற வேண்டும்.

சாறு உறிஞ்சும் பூச்சி

சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் தென்பட்டால் அதனை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீரில் 2 மில்லி டைமீத்தோயேட் பூச்சி கொல்லியினை கலந்து மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.

அறுவடை

விதைத்த 5 – 6 மாதங்கள் வரை இப்பயிரை அறுவடை செய்யலாம். விதைத்த 45 வது நாளில் முதல் அறுவடையும், அதன் பின் 30 – 40 நாட்கள் இடைவெளியில் தொடர்ச்சியாக அறுவடை செய்ய வேண்டும்.
எண்ணெய் உற்பத்திக்கு, செடிகளில் அதிகளவு பூக்கள் வெடிக்கின்ற தருணத்தில் அதாவது பிப்ரவரி மாதத்தில் தரையிலிருந்து 10 செ.மீ உயரத்தில் அறுத்து எடுக்க வேண்டும்.

மகசூல்

ஒரு ஏக்கருக்கு 9,000 முதல் 10,000 கிலோ உலர்ந்த இலைகளும், 10-12 கிலோ வாசனை எண்ணெயும் மகசூலாகக் கிடைக்கும்.

பயன்கள்:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடியின் நிறம் மாறும்.

மாலை, கதம்பம் இவற்றில் வாசனைக்காக மரிக்கொழுந்து சேர்க்கப்படுகிறது.

மரிக்கொழுந்துகள் அழகு சாதனைகள், நறுமணபொருட்கள், புகையிலை மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுகின்றன.

திருநீற்றுப் பச்சிலை பயிரிடும் முறை 

 

திருநீற்றுப் பச்சிலை, தெற்கு ஆசியாவை பிறப்பிடமாகக் கொண்ட மூலிகையாகும்.

தற்போது பிரான்ஸ், இந்தோனேஷியா, மொராக்கோ, அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் சில இடங்களில் வணிக ரீதியாகப் பயிர் செய்யப்படுகிறது.

திருநீற்றுப் பச்சிலை என்னும் மூலிகையானது, திருநீற்றுப்பத்திரி என்ற பெயராலும் அழைக்கப்படுகின்

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :

ஐரோப்பிய வகை, ரீயூனியன் வகை, சின்னமேட் வகை மற்றும் யூஜினால் ஆகிய இரகங்கள் உள்ளன.

பருவம்

மார்ச்ஏப்ரல் மாதங்களில் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.

மண்

மணல் தவிர்த்து நல்ல வடிகால் வசதியுடன் உள்ள மண் வகைகளில் நன்கு வளரும் தன்மை உடையது.

விதையளவு

ஒரு ஏக்கருக்கு விதைக்க 5 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.

நாற்றங்கால் தயாரித்தல்

நன்கு உழது சமன் செய்யப்பட்ட நிலத்தில் 10 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 10-15 செ.மீ உயரமுள்ள பாத்திகளை அமைக்க வேண்டும். விதைகளை வரிசையில் 2 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். விதைத்த பிறகு நன்கு சலித்த மணல் கொண்டு மேல்பரப்பை மூட வேண்டும். விதைகளை விதைக்கும் முன் மற்றும் விதைத்த பின் நீர் தெளிக்க வேண்டும். தினமும் பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைகள் 10-15 நாட்களுக்குள் முளைத்து விடும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது ஏக்கருக்கு 20 டன் தொழு உரம் இட்டு, சமன் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் தேவையான அளவில் பாத்திகளை அமைக்கவேண்டும்.

விதைத்தல்

தயார் செய்துள்ள நடவு வயலில் 20 நாட்கள் வயதுடைய நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். வரிசைகளுக்கிடையே 75 செ.மீ இடைவெளியும், செடிகளுக்கிடையே 30 செ.மீ இடைவெளியும் இருக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பிறகு மண்ணின் ஈரப்பதத்திற்கு ஏற்ப வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்

செடிகளின் சீரான வளர்ச்சிக்கு ஒரு ஏக்கருக்கு 50 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய உரத்தை அடியுரமாக இட வேண்டும். மூன்றாவது மாதத்தில் 50 கிலோ தழைச்சத்து உரத்தை மேலுரமாக இட வேண்டும். ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் உரமிட வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

செடிகள் நட்ட 20 முதல் 25 நாட்களில் முதல் களை எடுக்க வேண்டும். பின்னர் குறிப்பிட்ட இடைவெளியில் களை எடுக்க வேண்டும்.

நாற்றுகளின் நுனியை அதாவது முதல் பூவைக் கிள்ளி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் செடியின் பக்க வளர்ச்சி அதிகரிக்கும்.

பயிர் பாதுகாப்பு

இந்த மூலிகை செடியில் பொதுவாக பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காணப்படுவது இல்லை.

அறுவடை

நடவு செய்த மூன்றாவது மாதத்தில் இருந்து இலைகளை அறுவடை செய்ய வேண்டும். ஒரு ஆண்டிற்கு மூன்று அல்லது நான்கு முறை அறுவடை செய்யலாம். அறுவடை செய்த இலைகளை நிழலில் உலர்த்தி பின்பு சேமித்து வைக்கவோ, எண்ணெய் எடுக்கவோ பயன்படுத்தலாம்.

மகசூல்

ஒரு ஏக்கருக்கு 13-14 டன் இலைகள் மகசூலாக கிடைக்கும்.

பயன்கள்

பீட்டா கரோட்டீன் மற்றும் விட்டமின் சத்தும் இதில் அதிகம் காணப்படுகிறது. குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ள திருநீற்றுப் பச்சிலையில் பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புகள் அடங்கி உள்ளன.

காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு இதன் இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.

இதன் இலையை கசக்கி அதன் சாறை பருவின் மீது தடவி வந்தால் பரு மறையும். புரையோடி சீழ்வைத்த பருக்கள், விஷப்பருக்கள் கூட மறைந்துவிடும்.

நறுமணம் வீசும் இந்தச் செடியின் இலைகளை அரைத்துப் பூசினால் கட்டிகள் கரையும். வெறுமனே இலையை முகர்ந்து பார்த்தால் தலைவலி, இதயநடுக்கம், தூக்கமின்மை சரியாகும்.

இலைச்சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்புவலி, இருமல், வயிற்று வாயு பிரச்சனைகள் குணமாகும்.

 

சர்க்கரை கொல்லி சாகுபடி முறை

சர்க்கரை கொல்லி யானது சர்க்கரைக்கு எதிரான ஒரு முக்கிய மூலிகையாகும். இவை இனிப்பு உண்ண வேண்டும் என்ற உணர்வை கட்டுப்படுத்துகிறது.

இவை பரவலாக ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மலேஷியாவில் வளர்கிறது.


இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் பீகார் காடுகளில் காணப்படுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக காணப்படுகிறது.

சர்க்கரை கொல்லி எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :

இதன் இரகங்கள் ஆனது இலையின் அளவைப் பொருத்து இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

சிறிய இலை வகை: 1.0-3.5 செ.மீ நீளம் மற்றும் 1.5-2.5 செ.மீ அகலமும் கொண்டது. மென்மையான இப்பயிரானது வறண்ட பகுதிகளில் காணப்படும்.

அடர்ந்த மற்றும் மெல்லிய ரோமங்களை கொண்ட வகை: 3-6 செ.மீ நீளம் மற்றும் 3.5 -5 செ.மீ அகலமும் கொண்டது. இவை கரும் பச்சை நிறத்திலும், மெல்லிய ரோமங்களையும் கொண்டது.

பருவம்

ஜீன் மற்றும் ஜீலை மாதங்கள் சாகுடி செய்ய ஏற்ற மாதங்கள் ஆகும்.

மண்

செம்மண் மற்றும் களிமண் நிலங்களில் நன்கு வளரும் தன்மை கொண்டது. நீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது 5 டன் தொழு உரம் இட்டு மண்ணுடன் கலக்க வேண்டும். பின்னர் 45x45x45மீ அளவுள்ள குழிகளை 2.5 மீ வரிசை இடைவெளி விட்டு எடுக்க வேண்டும்.

தயார் செய்துள்ள குழிகளை இலைகளால் நிரப்ப வேண்டும் மற்றும் மண்ணின் மேற்பரப்பில் குழிக்கு 2கிகி நன்கு மக்கிய உரம் இட வேண்டும். குழிகளில் பாசனம் செய்து ஒரு வாரம் ஆற விட வேண்டும்.

விதையளவு

விதைகள் அல்லது தாவரத் துண்டுகள் மூலம் நடவிற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஒரு எக்டருக்கு 2-3 கிகி விதைகள் தேவைப்படும்.

இனப்பெருக்க முறைகள்

நவம்பர்டிசம்பர் மாதங்களில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட பழங்களிலிருந்து விதைகளை சேகரிக்க வேண்டும். இரவு முழுவதும் விதைகளை நீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் மணலுடன் கலந்த மண்ணில் தொட்டியில் நடவு செய்து தினமும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைகள் 15 நாட்களில் முளைத்து விடும். 40-50 நாட்களுக்குப் பிறகு விதைகளை மணல், மண் மற்றும் தொழுவுரத்தை சமமான அளவு கலந்து வைக்கப்பட்ட பாலித்தீன் பையில் நடவு செய்ய வேண்டும். 90 நாட்கள் ஆன பின் வயலில் நடவு செய்ய வேண்டும். இது விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் முறையாகும்.

தண்டுகள் மூலம் இனப்பெருக்கம் செய்வதற்கு முதிர்ந்த தண்டுகளில் 15 செ.மீ நீளத்திற்கு வெட்டி அவற்றை 500 பிபிஎம் இன்டோல் ப்யூரிக் அமிலத்தில் 18 மணி நேரம் நேர்த்தி செய்ய வேண்டும். பிறகு இவற்றை மணல், மண் மற்றும் தொழுவுரத்தை சமமான அளவு கலந்து வைக்கப்பட்ட பாலித்தீன் பையில் நடவு செய்ய வேண்டும். தினமும் பாசனம் செய்ய வேண்டும். 90 நாட்களில் வேர்கள் உருவாகும்.

விதைத்தல்

90 நாட்கள் ஆன நாற்றுகளை நடவு செய்ய பயன்படுத்த வேண்டும். தாவரங்களுக்கு இடையே 1.75 மீ இடைவெளி இருக்குமாறு தயார் செய்துள்ள குழிகளில் நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நடவு செய்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின் 5-6 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். வெயில் காலங்களில், நீர்ப் பாய்ச்சுவதை அதிகரிக்க வேண்டும்.

சர்க்கரை கொல்லி உரங்கள்:

ஒரு ஏக்கருக்கு தழைச்சத்து 95 கிகி, மணிச்சத்து 45 கிகி மற்றும் சாம்பல் சத்து 35 கிகி கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை அளிக்க வேண்டும். இந்த உரங்களை இரண்டாக பிரித்தும் அளிக்கலாம். அடியுரமாக ஒரு பங்கும், நடவு செய்த முப்பது நாட்கள் கழித்து ஒரு பங்கு உரத்தை மேலுரமாகவும் இட வேண்டும்.

சர்க்கரை கொல்லி பாதுகாப்பு முறைகள்:

களை நிர்வாகம்

நடவு செய்த ஒரு மாதத்திற்குள் ஒரு களை எடுக்க வேண்டும். அதன் பின் களைகளின் வளர்ச்சியை பொறுத்து கைக்களை எடுக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

இலைப்பேன்

இலைப்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்த டைமெத்தோயேட் 2 மிலி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பச்சை

இதனை கட்டுப்படுத்த மோனோகுரோடோபாஸ் 1மிலி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

சாம்பல் நோய் மற்றும் இலைப்புள்ளி நோய்

இதனைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகம் 3கி அல்லது மேன்கோசேப் 2கி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, 10-15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

அறுவடை

சர்க்கரைக்கொல்லியானது நடவு செய்த இரண்டு வருடத்தில் அறுவடைக்குத் வந்துவிடும். இலைகள் ஜீன் கடைசி வாரம் அல்லது ஜீலை முதல் வாரத்தில் பூக்க ஆரம்பித்தவுடன் அறுவடை செய்ய வேண்டும். இலைகளை பூக்களுடன் சேர்த்து கைகளால் அல்லது கத்தியால் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்யப்பட்ட இலைகளை நிழலில் 7-8 நாட்கள் உலர்த்த வேண்டும். சூரிய ஒளியில் உலர வைப்பதை தவிர்க்க வேண்டும்.

மகசூல்

ஒரு ஏக்கரில் 3-4 வருட பயிரில் இருந்து 10,000-15,000 உலர் இலைகளை அறுவடை செய்யலாம். நல்ல முறையில் பராமரிக்கப்படும் பயிரிலிருந்து ஒரு வருடத்திற்கு 10-15 டன் மகசூல் கிடைக்கும்.

சர்க்கரை கொல்லி பயன்கள்:

வாரம் இருமுறை குறிஞ்சாக் கீரையை உணவில் சேர்த்து உண்டு வந்தால் உடல் சூடு தணியும்.

உடல் மேல் வரும் தடிப்பு, பத்து, படை, இவைகளுக்கு இதன் இலையை அரைத்து பூசி வர அவை மறைந்துவிடும்.

எத்தகைய விஷக்கடியாக இருந்தாலும் குறிஞ்சாக் கீரையை கடிபட்ட இடத்தில் வைத்து கட்டியும், கீரையை கஷாயம் செய்து சாப்பிட்டால் விஷம் விரைவில் முறியும்.

சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நெய்யில் குழைத்து சாப்பிட்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளடைவில் நோய் முற்றிலும் குணமடைந்து விடும்.

குறிஞ்சாக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோயின் தாக்குதல் இருக்காது.

இக்கீரையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி நெறிகட்டிய இடத்தில் வைத்து கட்டினால் வலி குறையும்.

திப்பிலி பயிரிடும் முறை மற்றும் பயன்கள்

திப்பிலி எனும் பல பருவத்தாவரமானது பைபிரேசியே (Piperaceae) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் கொடி ஆகும்.


இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இது அதிகமாக பழத்திற்காகவே பயிரிடப்படுகிறது. பொதுவாக அப்பழத்தை உலர்த்தி, மசாலா மற்றும் சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது.

திப்பிலி பல மிகச்சிறிய பழங்களை கொண்டது. அவை கூர்முனைக் கொம்பு போன்ற ஒரு பூவின் மேற்பரப்பில் நெருக்கமாக பதிக்கப்பட்டிருக்கும்.

கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரட்டீஸ் இதை ஓர் மசாலாவாக அல்லாமல் மருந்தாக விவாதித்தபோதிலும், இது கி.மு ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில் கிரேக்கம் வரை சென்றடைந்தது.

ஐரோப்பியர்கள் அமெரிக்க கண்டங்களை கண்டுபிடிக்கும் முன்னதாக, கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களிடையே திப்பிலி ஒர் முக்கியமான மற்றும் நன்கு அறியப்பட்ட மசாலாவாக திகழ்ந்தது.

திப்பிலி எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் :

விஸ்வம் திப்பிலி, ஏற்காடு பி.எல் 9 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

பருவம்

ஜுன்ஜுலை அல்லது செப்டம்பர்அக்டோபர் மாதங்களில் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.

மண்

செம்மண் அல்லது இருமண் கலந்த பொறை மண் வகைகள் சாகுபடிக்கு மிகவும் ஏற்றவை.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்றாக உழுது ஒரு ஏக்கருக்கு 20 டன் தொழு உரம் இட்டுப் மண்ணை பண்படுத்தவேண்டும். மலைப்பகுதிகளில் சோலை மண் உள்ள இடங்களில் 10 டன் தொழு உரம் போதுமானது. மலைப்பகுதிகளில் 2 மீ x 2 மீ அளவிலான பாத்திகள் அமைக்க வேண்டும். சமவெளிப் பகுதிகளில் மூன்று அடி இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். குறிப்பாகத் தண்ணீர் வசதி இருக்கின்ற இடங்களை நடவிற்குத் தேர்வு செய்யவேண்டும்.

விதை

திப்பிலியை ஓரிரு கணுக்களுடைய தண்டுகள் மூலம் பயிர்ப்பெருக்கம் செய்யலாம். கணுக்கள் எளிதாக வேர்ப்பிடிக்கும் தன்மை உடையவை. திப்பிலிக் கொடிகளின் ஓரிரு கணுக்களை உடைய தண்டுகளைப் பதித்தால் 60 நாட்களில் வேர்கள் முழுவதும் பிடித்துவிடும். வேர்ப்பிடித்த தண்டுகளை நடவிற்குப் பயன்படுத்தலாம்.

விதைத்தல்

செடிகளை 15 செ.மீ ஆழத்தில், செடிக்குச் செடி 60 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். தென்னந்தோப்புகளில் நடவு செய்வதாக இருந்தால் மூன்று அடி இடைவெளியில் பார்களை அமைத்து செடிகளை ஓர் அடி இடைவெளியில் நெருக்கமாக நடவேண்டும்.

திப்பிலிக் கொடிகளின் வளர்ச்சிக்கு நிழல் ஓரளவு இருப்பது அவசியம். சமவெளிப்பகுதிகளில் தென்னந்தோப்பு மற்றும் பாக்குத் தோப்புகளிலும், மலைச்சரிவுகளில் வாழை, சவுக்கு போன்ற மரங்கள் உள்ள இடங்களையும் தேர்வு செய்து அவற்றினுள் செடிகளை நடவு செய்யவேண்டும்.

நீர் நிர்வாகம்

நடவு செய்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். சமவெளி மற்றும் மலைப்பகுதிகளில் வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்

ஒரு ஏக்கருக்கு 60 கிலோ தழைச்சத்து மற்றும் 80 கிலோ சாம்பல் சத்து தரவல்ல உரங்களை ஆண்டுக்கு இருமுறை சம அளவில் பிரித்து இடவேண்டும். முதலில் பாதியை அடியுரமாகவும் மீதியை செடிகள் நட்ட ஆறு மாதங்கள் கழித்தும் இடவேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

செடிகள் நட்ட ஒரு மாதத்தில் முதல் களை எடுத்து சுற்றி மண் அணைக்க வேண்டும். செடிகளை நட்ட முதல் மூன்று மாதங்களுக்கு அதாவது கொடிகள் படரும் வரை களைகள் வராத வண்ணம் பராமரிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

இலைப்புள்ளி நோய்

இதனைக் கட்டுப்படுத்த இரண்டு கிராம் மேன்கோசெப் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

சாம்பல் நோய்

சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகம் 0.3 சதவிகிதம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

செடிகளை நட்ட முதல் ஆண்டில் குறைந்த அளவிலான காய்கள் கிடைக்கும். நன்றாக விளைந்த கரும்பச்சை நிறமுடைய காய்களை காம்புகள் நீக்க அறுவடை செய்ய வேண்டும்.

திப்பிலி பயிரை வேர்களுக்காவும் அறுவடை செய்யலாம். வேர்களை அறுவடை செய்வதற்கு 18 முதல் 24 மாதங்கள் வயதுடைய கொடிகளை வேரோடு பிடுங்கி எடுக்கவேண்டும். எனினும் நல்ல தரமுடைய வேர்கள் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வயதுடைய கொடிகளில் தான் கிடைக்கும். வேர்களைச் சேதமின்றி பிடுங்கி 2.5 முதல் 5.0 செ.மீ நீளமாக வெட்டி அவற்றின் பருமனைப் பொறுத்து விற்பனை செய்யலாம்.

மகசூல்

முதல் ஆண்டில் 750 கிலோ உலர்ந்த காய்களும், இரண்டாவது ஆண்டிலிருந்து சராசரியாக 1500 கிலோ காய்களும் மகசூலாகக் கிடைக்கும். வேர்களுக்குகாக பயிர் செய்தால் செடிகளை நட்ட இரண்டாவது ஆண்டில் 5 முதல் 7 டன் உலர்ந்த வேர்களும், மூன்றாவது ஆண்டில் 6 முதல் 8 டன் உலர்ந்த வேர்களும் கிடைக்கும்.

பயன்கள்

திப்பிலிப் பொடியை பசுவின் பாலில் விட்டு காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாய்வுத் தொல்லை நீங்கும்.

திப்பிலியைத் தூள் செய்து அரை தேக்கரண்டியளவு எடுத்து தேன் கலந்து 2 வேளையாக 1 மாதம் சாப்பிட்டு வர தேமல் குணமாகும்.

திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும்.

திப்பிலியானது பசியை தூண்டும் தன்மை கொண்டது. இருமல், ஜுரம், தோல் நோய்கள், மூட்டு வலி, மூல தொந்தரவு, கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கங்களை நீக்க உதவுகின்றது.

திப்பிலி உடலில் ஏற்படும் தசை வலி, வயிற்றுப்போக்கு, தொழு நோய் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. முக்கியமாக இருமல், கபம், சுவாசக்குழல் அடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

 

 இஞ்சி

தேவையான பொருட்கள்

அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா.

விதைக்கரணைகள்


பூவாளி தெளிப்பான்

தொட்டிகள்

இதற்கு தொட்டி அல்லது பைகளை எந்த வடிவமாக இருந்தாலும் பயன்படுத்தலாம். அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.

கிழங்கு வகையை சேர்ந்ததால் தென்னை நார்க்கழிவு சேர்க்க வேண்டும். அப்பொழுது தான் இஞ்சி வளர எளிதாக இருக்கும். மண் இறுகிப்போகும் பிரச்னை இருக்காது.

விதைத்தல்

இஞ்சி கரணைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நேரடியாகவே நடவு செய்யலாம். ஒவ்வொரு செடிக்கும் அரை அடி இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

உரங்கள்

காய்கறி கழிவுகள், டீத்தூள், முட்டை ஓடு ஆகியவற்றை மக்கச்செய்து உரமாக போடலாம்.

மண்புழு உரத்தை மாதம் ஒருமுறை இட்டு கிளறி விட வேண்டும்.

பஞ்சகாவ்யா 10 மில்லியை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை பைகளில் ஊற்ற வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

இலைகளில் பூச்சி தாக்குதல், இலை சுருண்டு காணப்பட்டால் வேப்பந்தூளை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். இது சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படும்.

அறுவடை

பொதுவாக ஆறு மாதத்தில் அறுவடை செய்ய வேண்டும்.

பயன்கள்:

ஜலதோஷத்தின் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது. தலைவலியைப் போக்குகிறது.

இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.

தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும்.

இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர உதவுகிறது. உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது.

பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள். இஞ்சியின் மருத்துவ குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் ஜீரணத்தை துரிதப்படுத்துவது ஆகும்.

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு சம்பந்தமான நோய்கள் தீரும்.


வடக்கு ஆந்திரா பூமியில் குழி தோண்டி நெல்லை சேமிக்கும் மக்கள்: ஏன் ?

வடக்கு ஆந்திரா, ஒடிசா மாநிலங்களை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்கள் வீட்டின் முன் பெரிய குழியைத் தோண்டி அதில் நெல்லை சேமிக்கின்றனர்.

தங்களின் முன்னோர் காலத்தில் இருந்து இந்த முறையை பின்பற்றி வருவதாக அவர்கள் கூறுகின்றனர். ஆந்திராவின் இச்சாபுரம், தெக்கலி, பலாசா, பதப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இந்த வழக்கம் அதிகமாக உள்ளது.


நெல் அறுவடை செய்யப்பட்டதும் அவர்கள் குழிகளை தோண்டுகின்றனர். தண்ணீர் குழிக்குள் வராமல் இருக்க வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். செம்மண், மாட்டு சாணம் ஆகியவற்றை கொண்டு மூடப்பட்ட அந்த குழியில் அவர்கள் நெல்லை சேமித்து வைக்கின்றனர். ஈரப்பதம், பூச்சி தொல்லையில் இருந்து நெல்லை பாதுகாப்பதற்கு இது சிறந்த வழியாக இருக்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.

இந்த அரிசியில் செய்யப்படும் உணவு இரண்டு நாட்களுக்கு கெட்டுப்போகாது என்று கூறும் மக்கள்.


1. மண்வளத்தினை அதிகப்படுத்துதல்
வேதியியல் பொருட்களை வேளாண் உற்பத்திக்கு உபயோகப்படுத்தாமல் இருத்தல், பயிர் உப பொருட்களை உபயோகப்படுத்துதல், கரிம மற்றும் உயிர் உரங்களை பயன்படுத்துதல், பயிற்சுழற்சி முறை மற்றும் பல்வேறு பயிர்களை பயிரிடுதல், அதிகமாக மண்ணினை தோண்டாமல், மண்ணின் மீது பசுந்தாழ் உரங்கள் மற்றும் உயிர் பொருட்களை இடுதல்

2. வெப்பநிலை மேலாண்மை செய்தல்

மண்ணின் மீது பசுந்தாழ் உரங்களை போட்டு மூடி வைத்தல் மற்றும் வரப்புகளில் மரங்கள் மற்றும் புதர் வகை தாவரங்களை நடுதல்

3. மண் மற்றும் மழைநீரினை சேகரித்தல்

மழைநீரினை சேகரிக்க சேகரிப்பு தொட்டிகளை கட்டுதல், சரிவான நிலங்களில் மழை நீரினை சேகரிக்க வரப்பு போன்ற அமைப்புகளை நிறுவதல், சரிவான இடங்களில் வரிசையாக மரங்களை நடுதல், பண்ணைக்குட்டைகளை தோண்டுதல், குறைந்த உயரமுடைய செடிகளை வரப்புகளில் நடுதல்

4. சூரிய ஆற்றலை சேகரித்தல்

பல்வேறு வகை பயிர்களை நடுவதன் மூலம் வருடம் முழுவதும் பசுமையினை வயல்களில் பராமரித்தல்

5. இடுபொருட்கள் தேவை பூர்த்தி செயவதில் தன்னிறைவு


உற்பத்தி செய்த விதைகளை உபயோகித்தல், பண்ணையிலேயே உரத்தினை உற்பத்தி செய்தல், மண்புழு உரம், திரவ உரம், தாவர கழிவுகளை உபயோகித்தல்

6. உயிராதாரங்களை பராமரித்தல்

உயிரினங்கள் வாழ்வதற்கு போதுமான, தகுந்த வாழ்விடங்களை உருவாக்குதல், பூச்சிக்கொல்லிகளை எப்பொழுதும் உபயோகிக்காமல் இருத்தல், பல்வேறு பட்ட உயிரனங்களை பெருக்குதல்

7. விலங்குகளை ஒருங்கிணைத்தல்

இயற்கை வேளாண்மையின் மிக முக்கியமான அம்சம் கால்நடைகளாகும். இவை அவற்றின் உற்பத்தி பொருட்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல், சாணம், மற்றும் சிறுநீர் போன்ற மண் உரங்களையும் அளிக்கின்றன.

8. புதுப்பிக்கவல்ல ஆற்றலை உபயோகித்தல்

சூரிய ஆற்றல், சாண எரிவாயு, காளைகளின் மூலம் நீர் இறைக்கும் பம்புகள், ஜெனரேட்டர் மற்ற இதர இயந்திரங்களை உபயோகித்தல்.



இயற்கை வேளாண் பண்ணையினை உருவாக்குதல்
இயற்கை முறை வேளாண்மை மேலாண்மை ஒரு ஒருங்கிணைந்த முறையாகும். சில இயற்கை வேளாண்மை வழி முறைகளை பின்பற்றினால் மட்டும் குறிப்பிடத்தக்க விளைச்சலை பெற இயலாது. வேளாண் உற்பத்தியினை அதிகரிக்க தேவையான எல்லா அம்சங்களும் முறையாக செயல்படுத்தப்படவேண்டும். இந்த வழிமுறைகளாவன. 1.வாழ்விடத்தினை உருவாக்குதல் 2. வேளாண் இடுபொருட்களை தயாரிக்க பண்ணையில் வசதிகளை ஏற்படுத்திடல் 3. பயிற்சுழற்சி மற்றும் பல பயிர் சாகுபடிக்கு திட்டமிடுதல் 4. 3-4 வருட அளவிலான பயிற்சுழற்சி முறை 5. புவி அமைப்பு, மண், சீதோஷ்ண நிலைக்கேற்றவாறு பயிரிடுதல்



இயற்கை வேளாண் பண்ணையினை உருவாக்குதல்
இயற்கை முறை வேளாண்மை மேலாண்மை ஒரு ஒருங்கிணைந்த முறையாகும். சில இயற்கை வேளாண்மை வழி முறைகளை பின்பற்றினால் மட்டும் குறிப்பிடத்தக்க விளைச்சலை பெற இயலாது. வேளாண் உற்பத்தியினை அதிகரிக்க தேவையான எல்லா அம்சங்களும் முறையாக செயல்படுத்தப்படவேண்டும். இந்த வழிமுறைகளாவன. 1.வாழ்விடத்தினை உருவாக்குதல் 2. வேளாண் இடுபொருட்களை தயாரிக்க பண்ணையில் வசதிகளை ஏற்படுத்திடல் 3. பயிற்சுழற்சி மற்றும் பல பயிர் சாகுபடிக்கு திட்டமிடுதல் 4. 3-4 வருட அளவிலான பயிற்சுழற்சி முறை 5. புவி அமைப்பு, மண், சீதோஷ்ண நிலைக்கேற்றவாறு பயிரிடுதல்
i. உள்கட்டமைப்பு

பண்ணையில் 3-5% சதவிகித இடத்தினை, மாடுகள், மண்புழு உரத்தயாரிப்பு, உர உற்பத்தி கிடங்கு, போன்றவற்றிற்கேற்றவாறு ஒதுக்கிடவேண்டும்
மழைநீரினை சேமிக்க, 7X3X3 மீட்டர் அளவிற்கு குழிகளை வெட்டி மழைநீரினை சேகரிக்க வேண்டும். இவ்வாறான குழிகளை ஒரு ஹெக்டேருக்கு ஒரு குழி என்ற விகிதத்தில் சறுக்கலாக அதிக மழைநீர் சேகரிக்கும் இடங்களில் தோண்டவும்.
முடியுமானால், 20 மீட்டருக்கு 10 மீட்டர் என்ற அளவிலான பண்ணைக்குட்டையினை நிறுவலாம்
திரவ உரத்தினை தயாரிக்க ஒரு ஏக்கருக்கு ஒரு 200 லிட்டர் கொள்ளளவு உள்ள தொட்டியினை நிறுவ வேண்டும். மற்றும் சில தொட்டிகள் தாவர கழிவுகளை போடுவதற்கும் நிறுவ வேண்டும்.
5 ஏக்கர் அளவுள்ள நிலத்திற்கு 1-2 மண்புழு தயாரிப்பு படுக்கைகள், NADEP கம்போஸ்ட் தொட்டி, 2-3 உரத்தொட்டிகள் போன்றவற்றை நிறுவ வேண்டும்.

இவ்விடங்களில், தண்ணீர் பாய்ச்ச கிணறு மற்றும் பம்ப் போன்றவற்றையும் நிறுவலாம்.


ii. வாழ்விடம்

கிளைரிசிடியா, மர அகத்தி, சுபாபுல், கேசியா டோரா மற்றும் இதர மண்ணில் உயிர் நைட்ரஜன் தக்க செய்யும் மரங்களை வரப்புகளில் நடவ வேண்டும் (5 ஏக்கர் நில அளவுள்ள பண்ணைக்கு, 1.5 மீட்டர் அகலத்திற்கு, 800-1000மீ நீலம் அளவுக்கு மர வளர்ப்பு தேவை)
சில இடங்களில் கீழ்க்கண்ட மரங்கள் அல்லது புதர்செடிகளை நட வேண்டும். எடுத்துக்காட்டாக, வேம்பு -3-4 மரங்கள், புளிய மரம்ஒன்று, அத்தி மரம் 1-2, இலந்தை புதர்கள் 8-10, நெல்லி -1-2, சீதாப்பழ மரம் அல்லது முருங்கை 2-3 மற்றும் 2-3 பழ மரங்கள்
கிளைரிசிடியா மர வரிசைகளுக்கு இடையில் பூச்சிக்கொல்லித்திறன் வாய்ந்த அடொதோடா, நொச்சி, எருக்கு, நெய்வேலி காட்டமணி, ஊமத்தை போன்ற தாவரங்களை நடவும்.
பொது உபயோக இடத்திலுள்ள மரங்களை முழுவதும் வளர்வதற்கு அனுமதிக்கவேண்டும். பண்ணை வரப்பிலுள்ள மரங்களையும், புதர் செடிகளையும் குறிப்பிட்ட இடைவெளி விட்டு நடுதல் வேண்டும். பின்பு, குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை வெட்டிவிட வேண்டும்.
கிளைரிசிடியா மரக்கன்றுகளை பெரிய வரப்புகளில் நெருக்கமாக பண்ணையினை சுற்றிலும் நடவேண்டும். இவை உயிர் வேலியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மண்ணில் நைட்ரஜன் சத்தினை நிலைநிறுத்தவும் பயன்படுகின்றன.
400 மீட்டர் நீளமுள்ள கிளைரிசிடியா செடிகள், மானாவாரி சூழ்நிலையில், நட்ட மூன்றாம் வருடத்திற்கு பின்பு ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு 22.5 கிலோ நைட்ரஜனை ஒரு வருடத்திற்கு தரவல்லது. நட்ட 7 வருடத்திற்கு பின்பு, ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு 77 கிலோ நைட்ரஜனைத் தரவல்லவை. நீர்பாய்ச்சும் நிலங்களில் இந்த நைட்ரஜன் அளவு 75-100 சதவிகிதம் அதிகரிக்கும். நீர் பாய்ச்சும் தருணங்களில் வருடத்திற்கு 3-4 முறையும், நீர் பாய்ச்சாத தருணங்களில் 2 முறையும் அறுவடை செய்யலாம். கிளைரிசிடியா செடிகளை 5.5 அடி உயரத்திற்கு மேல் வளரவிடக் கூடாது, ஏனெனில் இந்த உயரத்திற்கு மேல் அவை வளர்ந்தால் நிலத்தில் நிழல் அதிகம் விழும். இதன் இலைகளை பசுந்தாழ் இலை உரமாக பயன்படுத்தலாம் இவற்றை அறுவடை செய்து மண்ணுடன் கலந்து விதை விதைப்பதற்கு முன்பு உரமாக பயன்படுத்தலாம்



10 ஏக்கர் அளவிலான இயற்கை வேளாண்மை பண்ணையின் வரைபடம்




இயற்கை வேளாண்மைக்கு மண்ணை தயாரித்தல்
. குறைந்த இடுபொருளுக்கான மாற்று வழிமுறை

. குறைந்த இடுபொருளுக்கான மாற்று வழிமுறை (Low input alternative)

முதல் வருடத்தில், ஒரே சமயத்தில் பல்வேறு வயதுடைய பயறு வகை பயிர்களை - அதாவது, முதல் 60 நாட்கள் பயிர், பின் 90-120 நாட்கள் பயிர், பின்பு 120 நாட்கள் பயிர் ஆகியவற்றை, வரிசையாக பயிரிடலாம். தானியங்களை/பச்சை காய்களை உருவி எடுத்து விட்டு, பின் எல்லா செடிகளையும் களைச்செடிகளுடன் சேர்த்து பசுந்தாழ் உரமாகப் பயன்படுத்தலாம்.
இரண்டாம் பருவத்தில் ஒரு ஹெக்டேருக்கு 2.5 டன் என்ற விகிதத்தில் இயற்கை உரத்தினை நிலத்தில் இடவும். பின்பு தானியங்களுடன் பயறு வகைகளையும் ஒன்றாக, ஊடுபயிர் அல்லது தொடர் பயிராகவோ பயிரிடலாம். அறுவடைக்குப்பின் இந்த செடிகளை பசுந்தாழ் உரமாகப் பயன்படுத்த வேண்டும்
தண்ணீர் பாய்ச்சும் வசதிகள் இருந்தால் வெயில் காலத்தில் வளரும் பயறு வகை பயிரினை, காய்கறிகளுடன் சேர்த்து பயரிடலாம். அறுவடைக்கு பின்பு இந்த இரண்டு செடிகளையும் சேர்த்து பசுந்தாழ் உரமாகப் பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு பயிரிடும் தருணத்திலும் திரவ உரத்தினை வயல்களில் 3-4 முறை இடவும்
. அதிக இடுபொருளுக்கான மாற்று முறை

மண்ணில் 2.5 டன் தொழுஉரம் அல்லது மண்புழு உரம், 500 கிலோ எண்ணெய் பிண்ணாக்கு, 500 கிலோ ராக் பாஸ்பேட், 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் 5 கிலோ பாஸ்போபாக்டீரியா உயிர் உரம் போன்றவற்றை இடவும்
3-4 வகையான வேறுபட்ட பயிர்களை வரிசையாக விதைக்கவும். இதில் 40 சதவிகிதம் பயறு வகைகளாக இருக்கவேண்டும். அறுவடைக்குப்பின் அடுத்த விதைப்புக்கு முன் எல்லா செடிகளையும் பசுந்தாழ் உரமாக பயன்படுத்தவும். இரண்டாம் விதைப்பு பருவத்திலும் இதே போன்று உரங்களைப் பயன்படுத்தவும்

திரவ உரத்தினை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற அளவுக்கு 3-4 முறை பயிரிடும் தருணத்தில் நீருடன் கலந்து வயல்களுக்குப் பாய்ச்சவும்.
12-18 மாதங்களுக்குப் பிறகு இந்த மண் இயற்கை முறை வேளாண்மைக்கு எந்த பயிர்களையும் இணைத்து பயிரிடுவதற்கு ஏற்றதாக இருக்கும். அடுத்த 2-3 வருடங்களுக்கு எந்த பயிரிடுடனும் பயறு வகைப் பயிர்களை ஊடு பயிராகவோ அல்லது இணைப்பயிராகவோ பயிரிடலாம். பயறு வகைப் பயிர்களுக்கு குறைந்தது 30 சதவிகிதம் வரை பயிர்க்கழிவுகளாக இருக்கமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். பின்பு இப்பயிர்க்கழிவுகளுடன் திரவ உரத்தினை சேர்த்து அடி உரமாக மண்ணில் இடலாம்.




iv. பலவகையான பயிர்களை பயிரிடுதல் அல்லது சுழற்சி முறையில் பயிரிடுதல்

இயற்கை முறை வேளாண்மையில், ஒரு தனிப்பட்ட பயிர் பயிரிடும் முறை பயன்படுத்தப்படமாட்டாது.
முழுப்பண்ணையிலும் 8-10 பயிர்கள் எல்லா சமயத்திலும் கண்டிப்பாக பயிரிடப்பட்டிருக்கவேண்டும்
ஒவ்வொரு வயலிலும் குறைந்தது 2-4 வகையிலான பயிர்கள் பயிரிடப்பட்டிருக்கவேண்டும். அவற்றுள் ஒன்று கட்டாயாமாக பயறு வகை தாவரமாக இருக்கவேண்டும்
சில சமயத்தில் ஒரு வயலில் ஒரு விதமான பயிர் மட்டுமே பயிரிடப்பட்டு இருப்பின், அடுத்த வயலில் வெவ்வேறு விதமான பயிர்களை பயிரிடவேண்டும்
மூன்று அல்லது நான்கு வருட பயிற்சுழற்சி முறையினை பின்பற்ற வேண்டும்
அதிக சத்துகள் தேவைப்படும் தாவரத்திற்கு முதலில் பயிரிட்டு பின்பு பயறு வகை பயிர்களை பயிரிடவேண்டும்.
பல்வேறு விதமான தாவரங்களைப் பயிரிடுவதற்கும், பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கும், 50-150 காய்கறி செடிகளை தோராயமாக வீட்டு உபயோகத்திற்காகவும், கேந்தி எனப்படும் துளுக்க சாமந் தி செடிகளை நூறு செடிகள் ஒரு ஏக்கருக்கு என்ற விகிதத்திலும் பயிரடவேண்டும்.
பயறு வகை மற்றும் காய்கறி பயிர்களுடன் அதிக சத்துகள் தேவைப்படும் கரும்பு போன்ற பயிர்களையும் போதுமான உற்பத்திக்கு பயன்படுத்தலாம்.


v. 5. உயிருள்ள அதிக சத்து மிகுந்த இயற்கை மண்

வளமுள்ள, உயிர்ச்சத்து மிகுந்த மண்ணில் கரிம கார்பனின் அளவு, குறைந்தது 0.8-1.5% சதவிகிதம் இருக்கவேண்டும்
நுண்ணிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்ளின் உபயோகத்திற்காக எந்த சமயத்திலும் போதுமான அளவு உலர்ந்த, பாதி மக்கிய அல்லது முழுவதும் மக்கிய கரிமபொருள் மண்ணில் இருக்கவேண்டும்
ஒரு கிராம் மண்ணில் 1 x 108 என்ற எண்ணிக்கையில் நுண்ணுயிர்களான பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஆக்டினோமைசிட்டிஸ் போன்றவை கட்டாயமாக இருக்கவேண்டும்
சிறிய உயிரனங்களும், பூச்சிகளும், எறும்புகளும் கட்டாயமாக போதுமான எண்ணிக்கையில் இருக்கவேண்டும்


vi. மண்ணில் உரமிடுதல் மற்றும் மண்ணை வளப்படுத்துதல்

கிளைரிசிடியா மற்றும் இதர வரப்புகளில் வளர்த்தப்பட்ட மரங்களின் கிளைகள், பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட தொழுஉரம், மண்புழு உரம், சாணம் மற்றும் சிறுநீர், பயிர்க்கழிவுகள் போன்றவற்றை பயன்படுத்தி மண்ணின் சத்தினை அதிகப்படுத்தலாம்
உயிர்உரங்கள் மற்றும் அடர்த்தியான உரங்களான தூளாக்கப்பட்ட எண்ணெய் பிண்ணாக்குகள், கோழி எரு, காய்கறிகழிவுகள், மற்ற இதர தயாரிக்கப்பட்ட உரங்களை தகுந்த விகிதத்தில் கலந்து போதுமான அளவுகளில் உபயோகிக்கவேண்டும்
அதிக அளவிலான தொழுஉரத்தினை உபயோகிப்பதைத் தவிர்க்கவேண்டும்
பயிற்சுழற்சி முறையினை மாற்றியமைத்தல், பல்வேறு விதமான பயிர்களைப் பயிரிடுதல் போன்ற யுக்திகளைப் பயன்படுத்தி இடுபொருட்களை நன்றாக உபயோகப்படுத்தவேண்டும்
பயிரின் வகை மற்றும் பயிருக்குத் தேவைப்படும் சத்துகளின் தேவைக்கேற்ப பண்ணையின் வெளியில் இருந்து வாங்கி உபயோகப்படுத்தப்படும் இடுபொருட்களின் தேவையினை அறியலாம்
மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் மற்றும் இதர உயிர்ப்பொருட்களின் செயல்திறனை பராமரிக்க திரவ உரங்களை மண்ணில் இடுவது அவசியமாகும். எல்லா விதமான பயிர்களுக்கும் 3-4 முறை திரவ உரத்தினை இடலாம்
மண்புழு உரம், கம்போஸ்ட் டீ, மாட்டின் சிறுநீர் போன்றவை தெளிப்பாக உபயோகப்படுத்தப்படும் போது பயிர்களின் வளர்ச்சியினை அதிகரிக்கும் தன்மையுடையவை. பயிரினை விதைத்து 25-30 நாட்கள் கழித்து 3-5 முறை இவற்றை தெளிப்பதால் பயிர் உற்பத்தி அதிகரிக்கும்.
வெரிமிவாஷ், பசுமாட்டு சிறுநீர் மற்றும் இயற்கை எருக்களின் கரைசல் ஆகியவை மண்ணின் உயிரினங்கள் வளர பெரிதும் உதவுகிறது. விதைத்த 25 - 30 நாட்கள் கழித்து, 3-5 முறை இவற்றை தெளித்தல் அதிக விளைச்சலை கொடுக்கும்.
இயற்கை முறை வேளாண் மேலாண்மை ஒரு ஒருங்கிணைந்த செயல் முறையாகும். எல்லா அம்சங்களும் ஒன்றிணைக்கப்பட்ட, தனியாக செயல்படும் திறன் வாய்ந்தவை. ஒரு தனிப்பயிர் ஒரு சமயத்தில் வளர்க்கப்படாததால், ஒரு பயிருக்கான சத்து மேலாண்மையினை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாகும். சத்து மேலாண்மை முறையின் ஒரு உதாரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தானிய மற்றும் பயறுவகை பயிர்களை ஒன்றாக பயிரிடல்

ஆடி பருவத்தில் சோளம், கம்பு அல்லது மக்காச்சோளம் அல்லது பருத்தி போன்றவற்றை பயறு வகைகளுடன் சேர்த்து பயிரிடலாம். தானிய வகை செடிகள் மொத்த பயிரிடும் இடத்தில் 60 சதவிகித இடத்தையும், பயறு வகை செடிகள் மொத்த பயிரிடும் இடத்தில் 40 சதவிகித இடத்திலும் வரிசையாக பயிர் செய்யப்படவேண்டும். இந்நிலத்தில் 1.5-2 டன் தொழுஉரம், 500 கிலோ மண்புழு உரம், 100 கிலோ ராக் பாஸ்பேட் போன்றவற்றை ஒன்றாக கலந்து அடியுரமாக இடவேண்டும். உயிர் உரங்கள் விதை மற்றும் மண் நேர்த்திக்கு பயன்படுத்தலாம். முன்பு பயிர் செய்யப்பட்ட பயிர்களின் கழிவுகளை திரவ உரத்துடன் சேர்த்து மண்ணின் மேற்பரப்பு முழுவதும் விதைப்புக்கு பின் உடனே இடவேண்டும். களைகளை கையால் எடுக்கவேண்டும். களைகளையும் உரமாக பயன்படுத்திடலாம். 200 லிட்டர் திரவ உரத்தினை ஒரு ஏக்கர் என்ற விகிதத்தில் 3-4 முறை நீர் பாய்ச்சும்போது கலந்து உபயோகிக்கலாம் அல்லது ஒரு ஏக்கர் நிலம் முழுவதிலும் சமமாக மழை பெய்யும்போது தெளிக்கவேண்டும். உயிர் டைனமிக் தயாரிப்புகளான மண் சாண குழி அல்லது .எம் தயாரிப்புகள் போன்றவற்றையும் தொழு உரத்திற்கு பதிலாக உபயோகிக்கலாம். மண்புழு உர திரவ கழிவு அல்லது மாட்டின் சிறுநீர் போன்றவற்றை அல்லது இவை இரண்டும் 1:1 என்ற விகிதத்தில் கலந்த கலவையினை 2-3 முறை தெளிப்பதால் பயிர் உற்பத்தியினை அதிகரிக்கலாம்.


 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொலிஸில் முறைப்பாடு செய்ய பொலிஸ் நிலையம் தேவையில்லை!

ஒன்லைன் தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்கள் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தி, முறைப்பாடு செய்யும் நபர் இருக்கும...