ஜோதிடம்

‘கலர் சைக்காலஜி’

மனிதர்களின் உணர்வுகளோடு மிகுந்த நெருக்கம்கொண்டவை. அதனால்தான் மனிதர்கள் மகிழ்ச்சியோடு வாழ விரும்பும் அவர்களது வீடுகளில், எந்தெந்த அறைகளில் எந்தெந்த நிற பெயிண்ட்களை பூசவேண்டும் என்றெல்லாம் முடிவு செய்கிறோம்.

வாங்கும் வாகனங்களில்கூட வண்ணம் எப்படி இருக்கவேண்டும் என்றும் தீர்மானிக்கிறோம். இப்போது 'கலர் சைக்காலஜி', என்பது பிரபலமாக இருந்துகொண்டிருக்கிறது. அதனை இளம்பெண்கள் அதிகம் நம்பு கிறார்கள். தனக்கான நண்பனையோ, காதலனையோ தேர்ந்தெடுக்கும்போது அவர்களுக்கு தெரியாமலே அவர்களுக்கு பிடித்த கலரை அடையாளங்காணுகிறார்கள். 

அந்த கலரைவைத்து, அவர் குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து, அதற்கு தக்கபடி காய்நகர்த்துகிறார்கள். உங்கள் காதலருக்கு எந்த நிறம் பிடிக்கும் என்பதை முதலில் கண்டுபிடியுங்கள். அந்த நிறத்திற்கு ஏற்ப அவரது குணாதிசயமும், காதல் உணர்வுகளும் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். (காதலிகளுக்கு பிடித்த நிறத்தைவைத்து அவர்களது காதல் உணர்வுகளை காதலர்களும் தெரிந்துகொள்ளலாம்தான்!) 

சிவப்பு: 

காதல் உணர்வு அதிகம்கொண்டவர்கள் பட்டியலில் இந்த நிறத்தை விரும்புபவர்களை சேர்க்கலாம். அவ்வப்போது காதல் உணர்வில் நீந்தத்தொடங்கிவிடுவார்கள். கற்பனையில் நினைப்பதை எல்லாம் காதலில் நிறைவேற்ற துடிப்பார்கள். இவர்கள் ஆசைப்பட்ட பெண்ணை (அல்லது ஆணை) அடையாமல் விடமாட்டார்கள். அளவிட முடியாத ஆசைகளைக் கொண்டிருப்பார்கள். இவர் விரும்பும் ஜோடிக்கும் பிடித்த நிறம் சிவப்பு என்றால், இவர்கள் வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவிப்பார்கள். ஆனால் காதல் விஷயத்தில் இவர்களின் பிடிவாத குணம், சில நேரங்களில் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிவிடும். இவர்கள் காதலில் மிதவாதிகளாக இருக்க முயற்சிக்கவேண்டும். அதுதான் வாழ்க்கைக்கு நல்லது. 

மஞ்சள்: 

காதலில் இவர்கள் ரொம்ப வெளிப்படையானவர்களாக இருப்பார்கள். காதல் இல்லாவிட்டால் இந்த உலகமே இல்லை என்று தத்துவமும் பேசுவார்கள். சில நேரங்களில் இவர்களது காதல் ஆசைகள் முரண்பாடுகொண்டதாக இருக்கும். அத்தனை ஆசைகளையும் இவர்களது காதல் இணையால் நிறைவேற்ற முடியாது. 'இப்படியுமா ஆசைப்படுவீர்கள் சே..' என்று சொல்லும்படி ஆகிவிடும். காதலுக்காக உயிரைக்கூட கொடுப்பேன் என்பார்கள். ஆனால் பர்சில் இருக்கும் பணத்தைக்கூட செலவழிக்க யோசிப்பார்கள். அதனால் இந்த நிற மனிதர் களின் காதலுக்கு ஜோடி கிடைப்பது கஷ்டம். ஆனால் இவர்கள் அறிவாளியாகவும், கொள்கையில் பிடிப்பு கொண்டவர்களாகவும் இருப்பதால் கல்யாண வாழ்க்கை என்று வந்து விட்டால், தனது ஜோடியை எல்லா விதத்திலும் சந்தோஷப்படுத்துவார்கள். காதலில் இவர்கள் காட்டாற்று வெள்ளம். கல்யாணமாகிவிட்டால் சலசலக்கும் அழகான நீரோடை. 

பிங்க்: 

இவர்கள் கட்டுங்கடங்காத காதல் போராளிகள். எளிதாக திருப்திகொள்ளமாட்டார்கள். புதிதுபுதிதாக இவர்களது விழிகள் எதையாவது தேடிக்கொண்டே இருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக அடுத்தடுத்து காதல் பார்வை பார்த்து ரசிப்பார்கள். காதல் விஷயங்களை படிப்பதிலும், அதை செயல்படுத்திப்பார்த்து உண்மையா, பொய்யா என்று கண்டறிவதிலும் மெனக்கெடுவார்கள். தங்கள் காதல் இணையை ரொம்பவும் புகழ்ந்து, கனவு காணவைத்து தான் நினைப்பதை சாதிக்க முயற்சிப்பார்கள். இவர்களை அவ்வளவு எளிதாக நம்பிவிடக்கூடாது. ஏன்என்றால் கொள்கை, கோட்பாடு, நம்பிக்கை இவர்களிடம் குறைவாக இருக்கும். பிங்க் ரசிக்கவைக்கும் அழகு நிறைந்தது. ஆனால் வாழ்க்கையை ருசிக்கும்போது நெருடல் ஏற்படலாம். அதனால் கவனம்தேவை.

 பர்பிள்: 

இவர்கள் தனித்துவமிக்கவர்களாக தங்களை நிலைநிறுத்திக்கொள்ள போராடுவார்கள். அந்த போராட்டத்திலே சிலர் தங்கள் இளமைக் காலத்தை இழந்துவிடுவார்கள். இவர்களிடம் சுயநல எண்ணம் அதிகம் இருக்கும். காதல் என்றாலும், கல்யாணம் என்றாலும் தனது எதிர்காலத்திற்கு அதன் மூலம் எவ்வளவு கிடைக்கும் என்று கணக்கு போடுவார்கள். அதனால் இவர்கள் எளிதாக காதல் வலையில் விழமாட்டார்கள். கல்யாணத்திற்கு பெண் பார்த்தாலும் அவளிடம் தனியாகப் பேசி தன் எதிர்பார்ப்புகளை எல்லாம் 'டன்' கணக்கில் கொட்டு வார்கள். அதைக் கேட்டு அதிர்ந்துபோகும் பெண், 'அவரோடு தன்னால் வாழ்க்கை நடத்த முடியாது' என்று கூறிவிடுவாள். அதனால் இந்த நிறத்தை விரும்புகிறவர்களுக்கு காதல் மட்டுமல்ல, கல்யாணமும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும். பர்பிளிடம் நெருங்கும் முன்னால் நேசம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று உரசிப்பார்த்துக்கொள்ளவேண்டும். 

கறுப்பு: 
இவர்கள் காதலில் இருந்து சற்று விலகி இருக்க முயற்சிப்பார்கள். வெளிப்பார்வைக்கு இறுக்கமான மனிதர்களாக காட்சியளிப்பார்கள். யாரிடமும் மனம்விட்டுப்பேச மாட்டார்கள். அதனால் இவர்கள் காதல் பார்வை பார்த்தாலும், எதிர்பாலினம் நம்பிக்கை கொள்ளாமல் நழுவிச்சென்றுவிடும். மன அழுத்தம் இவர்களிடம் அதிகம் உண்டு. விரைவில் திருமணம் முடிக்க ஆசைப்படுவார்கள். காதல் இவர்களுக்கு பெரும்பாலும் கைகூடாது. கறுப்புக்கு காதல் கரும்பல்ல, இரும்பு. 

பச்சை:
 காதலில் கசிந்துருகுவது பச்சை. இவர்கள் காதல்வசப்பட்டுவிட்டால், 'சோறு தண்ணி எல்லாம் அதுக்கு அப்புறந்தாய்யா' என்று காதலே கதி என்று கிடப்பார்கள். பச்சையை விரும்பும் பெண்களிடம் காதல் உணர்வு அதிகம் இருக்கும். காதலரே கணவர் ஆனாலும் காலம் முழுக்க அவரோடு காதல் கொள்ள துடிப்பார்கள். முத்த மழையில் குளிப்பாட்டிவிடுவார்கள். இந்த நிறத்தை விரும்பும் பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிவது கடினம். இவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். காதல் உணர்வுகளையும் எளிதாக வெளிப்படுத்தமாட்டார்கள். காதலில் பச்சையை மொத்தமாய் நம்பலாம். 
நீலம்: 
இவர்கள் காதல் தத்துவஞானிகள். நீல நிறத்தை விரும்புகிறவர்களிடம் காதல் உணர்வு அதிகமிருக்கும். ஆனால் தனக்கும் காதலுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல் நடந்துகொள்வார்கள். பெண்கள் என்றால் நாலைந்து ஆண்களை ஆராய்ந்து, இறுதியில் அதில் ஒருவரை தேர்வு செய்து காதலிப்பார்கள். 'தாம்பத்ய' விஷயத்திலும் இவர்கள் புதுமை விரும்பிகளாக இருப்பார்கள். நீல நிறத்திற்குரிய ஆண்களிடமும் இதே இயல்புகள் இருக்கும். நீலம் காதலைவிட கல்யாணத்திற்கு மிகவும் ஏற்றது. 

வெள்ளை: 

இவர்கள் மென்மையானவர்கள். காதலை வெளிப்படுத்தக்கூட பயப்படுவார்கள். அதனால் காதலை மறைத்தபடியே காலத்தை கடத்திவிடுவார்கள். பெரும்பாலும் இவர்கள் ஒருதலைக்காதலால் அவஸ்தைப்படுவார்கள். உள்ளே காதலை மூடிவைத்துக்கொண்டு வெளியே, 'காதலாவது கத்தரிக்காயாவது..' என்று காதலுக்கு எதிராக பேசிக்கொண்டிருப்பார்கள்.

காதலிப்பவர்களை தூற்றவும் செய்வார்கள். ஆனால் குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். வெள்ளை பெரும்பாலும் காதலுக்கு தொல்லை. 

ஆரஞ்ச்: 

இந்த நிறத்தை விரும்புகிறவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இவர்களிடம் வசீகரம் இருக்கும். மற்றவர்கள் இவர்களை காதலுடன் சுற்றிச்சுற்றி வந்தாலும், இவர் களுக்கு காதல் வராது. ஆரஞ்ச் மனிதர்கள் ஆன்மிக ரசிகர்கள். காதலை ரசிக்கத் தெரியாதவர்கள்!

இருவரின் ராசி

இருவரின் ராசி அதிபதிகளும் நட்பு கிரகமாக இருந்தாலும் பெண் ராட்சச கணம் சேர்க்கலாம் என்பர். ஒற்றுமையும், மங்கலமும் தரும் கணப்பொருத்த விவரம்!

தேவகணம் - மனித கணம் - ராட்சச கணம் அசுவினி - பரணி - கார்த்திகை மிருகசீரிஷம் - ரோகிணி - ஆயில்யம் புனர்பூசம் - திருவாதிரை - மகம் பூசம் - பூரம் - சித்திரை ஹஸ்தம் - உத்திரம் - விசாகம் சுவாதி பூராடம் - கேட்டை அனுஷம் - உத்திராடம் - மூலம் திருவோணம் - பூரட்டாதி - அவிட்டம் ரேவதி - உத்திரட்டாதி - சதயம் வரன்கள் ஜாதகத்தில், 'தசாபுத்தி சந்திப்பு' இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.

ஏதேனும் தோஷங்கள் உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.செவ்வாய் தோஷம், சனி தோஷம் சர்ப்ப தோஷம் மற்றும் கிரக தோஷங்கள் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். அவற்றைப் பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்ய முடியுமானால் அதைப் பின்பற்றலாம். இந்தப் பத்துப் பொருத்தங்கள் நீங்கலாக மற்ற பொருத்தங்களையும் தம்பதியர்கள் இருவருடைய ஜாதகத்தையும் வைத்துப் பார்த்து தசாபுத்தியறிந்து பிறகு திருமணம் செய்ய முடிவு செய்தால் முத்தான வாழ்க்கை மலரும்.


ஆண்களே இந்த ராசியில் திருமணத்திற்கு பெண்கள் கிடைத்தால் நீங்கள் யோகக்காரர்கள்!

திருமண பந்தம் என்பது ஆண்டவன் தீர்மானிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. நாம் என்ன தான் முண்டியடித்து குட்டிக்கரணம் போட்டாலும் நம் தலையில் என்ன எழுதி இருக்கிறதோ! அது தான் நடக்கும்.

ஆசை ஆசையாக திருமண பந்தத்தில் இணையும் தம்பதிகள் பலரும் முதலில் துவங்கிய அதே நாள் போல் கடைசி வரை இருப்பதில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை. நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து திருமணம் செய்தாலும், பல திருமணங்கள் தோல்வியில் முடிந்து போவதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஒவ்வொரு ராசியில் பிறந்த பெண்களும், ஆண்களும் தனித்துவமான குணாதிசயங்களை கொண்டு இருப்பார்கள். அந்த வரிசையில் இந்த 4 ராசியில் பிறந்த பெண்கள் திருமணத்திற்கு வாரனாக அமைந்தால் ஆண்களுக்கு யோகம் தான். அப்படியான ராசிக்காரர்கள் யாரெல்லாம்? அவர்களின் குணாதிசயங்கள் என்ன? உங்களுடைய ராசி இவ்வரிசையில் இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்:

நீங்கள் வரன் பார்க்க செல்லும் பொழுது பத்து பொருத்தமும் பக்காவாக பொருந்தி, அவர்கள் மேஷ ராசியில் பிறந்த பெண்களாக அமைந்து விட்டால் நீங்கள் யோகக்காரர் தான். மேஷ ராசியை சூரியன், சுக்கிரன், கேது போன்ற கிரகங்கள் ஆதிக்கம் செலுத்துவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதனால் மேஷ ராசியில் பிறந்த பெண்கள் நியாயமான விஷயத்திற்கு அதிக கோபத்தை காட்டுவார்கள். அதே சமயத்தில் இவர்களுடைய அன்புக்கு ஈடு இணையே கிடையாது. இவர்கள் கோபப்பட்டாலும் அந்த இடத்தில் அக்கறை அதிகமாக இருக்கும். இவர்களைப் புரிந்து கொண்டு நடந்தால் அந்த வாழ்க்கை சொர்க்கமாக மாறும்.

மிதுனம்:


எந்த ராசியில் பிறந்த ஆண்களாக இருந்தாலும் உங்களுடைய ராசிக்கு மிதுன ராசிக்கார பெண்கள் கிடைத்தால், ஜாதக பொருத்தமும் சேர்ந்து அமைந்து விட்டால் நீங்களும் யோகக்காரர் தான். மிதுன ராசியில் பிறந்த பெண்கள் ராகு, செவ்வாய், குரு ஆகியோரின் ஆட்சிக்கு கீழ் இருப்பதால் இவர்களிடம் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கும். ஒரே விஷயத்தில் இவர்களுடைய கவனம் எப்போதும் இருப்பதில்லை. எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து தெரிந்து வைத்திருப்பார்கள். அறிவில் சிறந்தவர்களாக விளங்கும் இவர்கள் உங்களுடைய வாழ்க்கை துணையாக கிடைத்தால் உங்களுடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வந்து சேரும் என்பது மட்டும் உறுதி.

சிம்மம்:

ஜாதக பொருத்தம் சரியாக அமைந்து உங்களுக்கு சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் வாரனாக அமைந்தால், வேண்டாம் என்று தட்டிக் கழித்து விடாதீர்கள். பொதுவாகவே சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் தலைமைப் பண்பு கொண்டிருப்பார்கள். குடும்பப் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு நீங்கள் ஜாலியாக இருக்கலாம். சுக்கிரன், சூரியன், கேது ஆகிய கிரகங்களின் ஆளுகைக்கு கீழ் இருக்கும் சிம்ம ராசி பெண்களிடம் நேர்மையும், தன்னம்பிக்கையும் அதிகம் நிறைந்திருக்கும். இவர்களுடைய நம்பிக்கைக்கு ஒருமுறை பாத்திரமாக மாறி விட்டால் போதும். கடைசி வரை அவர்களுக்கு உண்மையாகவும், அன்புடனும் நடந்து கொள்வார்கள்.

மீனம்:

மீன ராசியில் பிறந்த பெண்கள் சனி பகவான், குரு பகவான் மற்றும் புத பகவானின் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பதால் இவர்கள் மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்களாக விளங்குவார்கள். மிகவும் சாந்தமான குணம் கொண்டவர்களாக இருக்கும் இவர்கள், உங்களுக்கு ஜாதகப் பொருத்தத்துடன் கொண்டு வரனாக அமைந்தால் விட்டு விடாதீர்கள். பொதுவாக ஆண்கள் விரும்பும் சாத்வீக குணம், மீன ராசி பெண்களுக்கு அதிகமாகவே இருக்கும். இவர்களை மனைவியாக பெற்றவர்கள் தவம் செய்பவர்கள் தான் என்றால் அது மிகையாகாது.



முன்னேற்றம் கிடைக்கும். பத்துப்பொருத்தங்கள் எவை எவை?

 1. தினம்,
2. கணம்,
3. மகேந்திரம்,
4. ஸ்தீரி தீர்க்கம்,
5. யோனி,
6. ராசி,
7. ராசி அதிபதி,
8. வசியம்,
9. ரஜ்ஜூ,
10. வேதை பெண்ணின் நட்சத்திரம் கார்த்திகை 2, 3, 4-ம் பாதம் (ரிஷப ராசி) வ. ஆணின் நட்சத்திரம், - ராசி அமையும் - மொத்தப் பொருத்தங்கள் பொருத்தம் .

1. அஸ்வினி (மேஷம்) 1, 4, 5, 6, 7, 9, 10 - 7

 2. பரணி (மேஷம்) 1, 4, 5, 6, 7, 9, 10 - 7

3. கார்த்திகை 1-ம் பாதம் (மேஷம்) பொருத்தம் உண்டு - 7

4. கார்த்திகை 2, 3, 4-ம் பாதம் (ரிஷபம்) பொருத்தம் உண்டு - 7

5. ரோஹிணி (ரிஷபம்) 1, 5, 6, 7, 9, 10 - 6

6. மிருகசீரிஷம் 1, 2-ம் பாதம் (ரிஷபம்) 5, 6, 7, 9, 10 - 5

7. மிருகசீரிஷம் 3, 4-ம் பாதம் (மிதுனம்) 5, 7, 9, 10 - 4

8. திருவாதிரை (மிதுனம்) 1, 3, 5, 7, 9, 10 - 6

9. புனர்பூசம் 1, 2, 3-ம் பாதம் (மிதுனம்) ரஜ்ஜூ தட்டும்.

10. புனர்பூசம் 4-ம் பாதம் (கடகம்) ரஜ்ஜு தட்டும்

11. பூசம் (கடகம்) 1, 5, 8, 9, 10 - 5

12. ஆயில்யம் (கடகம்) 2, 3, 5, 8, 9, 10 - 6

13. மகம் (சிம்மம்) 1, 2, 4, 5, 9, 10 - 6

 14. பூரம் (சிம்மம்) 1, 4, 5, 9, 10 - 5

15. உத்திரம் 1-ம் பாதம் (சிம்மம்) ரஜ்ஜு தட்டும் - 16. உத்திரம் 2,3,4-ம் பாதம் (கன்னி) ரஜ்ஜூ தட்டும் -

17. ஹஸ்தம் (கன்னி) 1, 4, 5, 7, 9, 10 - 6

18. சித்திரை 1, 2-ம் பாதம் (கன்னி) 2, 4, 5, 7, 9, 10 - 6

19. சித்திரை 3,4-ம் பாதம் (துலாம்) 2, 4, 5, 6, 7, 8, 9,10 - 8

20. சுவாதி (துலாம்) 1, 3, 4, 5, 6, 7, 9, 10 - 8

21. விசாகம் 1,2,3-ம் பாதம் (துலாம்) ரஜ்ஜூ தட்டும்.

22. விசாகம் 4-ம் பாதம் (விருச்சிகம்) ரஜ்ஜூ தட்டும் .

23. அனுஷம் (விருச்சிகம்) 1, 4, 5, 6, 7, 9, 10 - 7

24. கேட்டை (விருச்சிகம்) 2, 3, 4, 5, 6, 7, 9,10 - 8

25. மூலம் (தனுசு) 1, 2, 4, 5, 7, 9, 10 - 7

26. பூராடம் (தனுசு) 1, 4, 7, 9, 10 - 5

27. உத்ராடம் 1-ம் பாதம் (தனுசு) ரஜ்ஜூ தட்டும்.

28. உத்ராடம் 2,3,4-ம் பாதம் (மகரம்) ரஜ்ஜூ தட்டும் .

29. திருவோணம் (மகரம்) 1, 4, 6, 7, 9, 10 - 6

30. அவிட்டம் 1, 2-ம் பாதம் (மகரம்) 2, 4, 5, 6, 7, 9, 10 - 7

31. அவிட்டம் 3,4-ம் பாதம் (கும்பம்) 2, 4, 5, 6, 7, 9, 10 - 7

32. சதயம் (கும்பம்) 1, 2, 3, 4, 5, 7, 9, 10 - 9

33. பூரட்டாதி 1, 2, 3-ம் பாதம் (கும்பம்) ரஜ்ஜூ தட்டும்

34. பூரட்டாதி 4-ம் பாதம் (மீனம்) ரஜ்ஜூ தட்டும்

35. உத்திரட்டாதி (மீனம்) 1, 4, 5, 6, 7, 9, 10 - 7

36 ரேவதி (மீனம்) 3, 4, 5, 6, 7, 9, 10 - 7

ஜோதிடம்


பிறந்த தேதி தெரியாதவர்கள் தங்கள் பெயரிலுள்ள ஆங்கில முதல் எழுத்தின் அடிப்படையில் பலன்களை பார்க்கலாம்.

1,10,19,28 A,I,J,Q,Y

* மனதில் ஆன்மிக எண்ணம் மேலோங்கும்.
* எதிர்பார்த்த கடனுதவி தாமதமாக கிடைக்கும்.
* ஆடை, ஆபரணத்தில் ஆர்வம் கொள்வீர்கள்.
* எதிர்பாலினத்தவரால் நன்மை ஏற்பட வாய்ப்புண்டு.
* எதிர்பாராத விதமாக நண்பர்களைச் சந்திப்பீர்கள்
* வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.


2,11,20,29 - B,K,R

* திட்டமிட்ட செயல்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
* தாய் வழியில் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.
* உறவினர்கள் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவர்.
* ஆன்மிகப் பெரியோர்களை சந்திக்க வாய்ப்புண்டு.
* குடும்பத்தில் வீண் சண்டைகளைத் தவிர்க்கவும்.
* உடல்நிலை சீராகும். மருத்துவச் செலவு குறையும்.


3,12,21,30 - C,G,L,S

* நீண்ட நாள் எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறும்.
* பெரிய மனிதர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும்.
* வாகன வகையில் மராமத்துச் செலவு ஏற்படும்.
* உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவை.
* பள்ளிக்கூட நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
* விடாமுயற்சியால் தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும்.


4,13,22,31 D,M,T

* நீங்கள் சார்ந்த துறையில் சாதனை புரிவீர்கள்.
* அறிமுகம் இல்லாதவரிடம் பேசிப் பழக வேண்டாம். .
* உறவினர்களின் விஷயத்தில் விட்டுக் கொடுப்பீர்கள்.
* பிள்ளைகள் விஷயத்தில் பொறுமை தேவைப்படும்.
* பழைய கடனில் ஒருபகுதியை அடைப்பீர்கள்.
* பணியாளர்கள் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர்.


5,14,23- E,H,N,X

* குடும்ப வாழ்வில் சந்தோஷம் அதிகரிக்கும்.
* கலைத்துறையினர் அந்தஸ்து, புகழ் பெறுவர்.
* தொழிலில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு கிடைக்கும்.
* உடல்நலனில் அக்கறையும், ஆர்வமும் கூடும்.
* பிள்ளைகள் வகையில் திருமணம் நிச்சயமாகும்.
* அலுவலகத்தில் பணிச்சுமை நாளுக்குநாள் கூடும்.


6,15,24- U,V,W

* திட்டமிட்ட செயல்கள் உடனுக்குடன் நிறைவேறும்.
* உடல்நலனில் அக்கறை தேவை. மருத்துவச் செலவு ஏற்படலாம்.
* தாய் வழி உறவினர்களுடன் நெருங்கிப் பழகுவீர்கள்.
* நண்பர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு மறையும்.
* நேரகாலம் தெரியாமல் பணியில் மூழ்கி விடுவீர்கள்.
* வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும்.


7,16, 25

* வெளியூர் பயணம் செல்லும் சூழ்நிலை உருவாகும்.
* பெற்றோரின் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.
* மாமன், மைத்துனர் வகையில் திடீர் செலவு வரலாம்.
* பெண்கள் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவர்.
* தொழிலில் சாதனை புரிந்து பாராட்டு காண்பீர்கள்.
* நற்செயலில் ஈடுபட்டு பிள்ளைகள் பெருமை தேடித் தருவர்.


8,17,26- F,P

* சேமிக்கும் விதத்தில் கையில் பணம் புழங்கும்.
* மனைவியின் உடல்நலனில் அக்கறை தேவை.
* வியாபாரத்தில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும்.
* மேலதிகாரி பாராட்டும் விதத்தில் பணியாற்றுவீர்கள்.
* பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேறுவர்.
* புதிய நண்பரின் அறிமுகம் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

9,18,27
* புதிய விஷயங்கள் கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.
* நவீன இயந்திரம் மூலம் தொழிலை மேம்படுத்துவீர்கள்.
* பெற்றோர் கருத்துக்கு மதிப்பளிப்பது நல்லது
* வீடு, வாகன வகையில் நவீன மாற்றம் செய்வீர்கள்.
* வெளிநாட்டு உறவினர் மூலம் சுபசெய்தி கிடைக்கும்.
* இருந்த இடம் தெரியாமல் எதிரிகள் காணாமல் போவர்.


பிறந்த தேதி தெரியாதவர்கள் தங்கள் பெயரிலுள்ள ஆங்கில முதல் எழுத்தின் அடிப்படையில் பலன்களை பார்க்கலாம்.

1, 10, 19, 28 A, I, J, Q, Y
நினைத்து செயலுக்கு வராத பல விசயங்கள் வெற்றிகளைக் குவிக்க உள்ளது.
அரசாங்க அலுவலர்கள் பதவி உயர்வு கிடைக்கும்
அரசியல்வாதிகள் திடீர் பதவி மாற்றங்களால் செல்வாக்கு பெறுவர். உணவகங்கள், தொழிற்சாலைகள், வாகன தொழில் புரிவோர் அதிக ஆதாயம் பெறுவர்.
ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றம் நிச்சயம்.
ஏற்பட்ட பல குழப்பங்கள் முடிவுக்கு வந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

எண்: 1, 3, 4, 5, 9
உதாரணம்: 1414 =10-1
நிறம்: ஆரஞ்ச், அரக்கு

2, 11, 20, 29 B, K, R
அன்பு, அடக்கம், பணிவு கொண்ட உங்களுக்கு நற்பலன்களாகவே நடக்கும்.
உணவுக் கட்டுப்பாடு அவசியம்.
அரசுப் பதவியினருக்கு அதிகாரிகளின் நட்பு அதிகரிக்கும். இடமாற்றங்களும் உண்டு.
அரசியல்வாதிகள் கூடுதல் செயல்பாடுகளால் பதவி கிடைக்கும்
உணவகங்கள், ஜவுளி, நகை, குளிர்பானம், கலைத்துறை சார்ந்த தொழில்கள் ஏற்றம் தரும்.
ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல நேரம் தான்
உடல்நிலையில் உணவுக் கட்டுப்பாடு மூலம் பயன் பெறுவீர்கள்.
பெண்களால் நன்மை உண்டு.

எண்: 5, 7
திசை: கிழக்கு, மேற்கு
நிறம் : வெள்ளை, மஞ்சள்.

3, 12, 21, 30 C, G, L, S
கட்டுப்பாடு மிகுந்த தங்கள் நடவடிக்கை மற்றவர்களுக்குப் பிடிக்காமல் போகலாம்.
இலவச ஆலோசனைகளை நிறுத்திவிடுங்கள்.
அரசு பதவியினர் நற்பெயர் பெறுவது நல்லது.
அரசியல்வாதிகள் தலைமையிடம் அடக்கமாக நடந்து கொண்டால் பதவி நீடிக்கும்.
நகைக்கடை, ஜவுளி, ஓட்டல்கள் துறையினர் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்லவும்
உடல்நிலையில் சிறிய உபாதைகள் ஏற்படலாம்.

எண்: 1, 9
திசை : கிழக்கு, தெற்கு
நிறம்: ஆரஞ்ச், சிவப்பு

4, 13, 22, 31 D, M, T
இந்த ஆண்டு அளப்பரிய அளவில் அதிர்ஷ்டம் வரப்போகிறது.
எதிர்பார்த்த உயர்வுகள் அரசாங்க அதிகாரிகள் பெறுவர்.
அடிமட்டத் தொண்டன்கூட, அசாத்திய உயர்வைப் பெறுவார்.
அரசியலில், வாய்பேச்சால் வம்புகளும் வரலாம் உஷார்
வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி களை கட்டும். வருமானம் பெருகும்.
அயல் தேச பயணங்களால் ஆனந்தம் அடைவர்.
இரும்பு, மருந்து, உணவுப் பொருட்கள், டெக்ஸ்டைல்ஸ் துறையினர் ஏற்றங்களைப் பெறுவர்

எண்: 1, 5, 9
திசை: கிழக்கு, வடக்கு, தெற்கு
நிறம் : அரக்கு, பச்சை, சிவப்பு.

5, 14, 23 E, H, N, X
ஆண்டு ஆரம்பமே அமர்க்களம்தான்.
சென்ற ஆண்டில் திட்டம் போட்டு திணறியவைகள் தீர்க்கமான நல்ல முடிவு வரும்
ரியல் எஸ்டேட், டிராவல்ஸ், பலசரக்கு, ஜவுளி தொழில் புரிவோர் அதிக லாபம் பெறுவர்
அரசாங்க அலுவலர்களின் பதவி உயர்வு நிச்சயம்.
அரசியல்வாதிகள் தங்கள் திறமையைக் காண்பிக்க சரியான தருணம்.
உயர்வான உடல்நிலை, பெற்றோர்கள் நலம்.
குழந்தைகளும் நல்ல நிலை என எல்லாமே மகிழ்ச்சி தான்.

எண்: 1, 2, 4
திசை: கிழக்கு, வடக்கு
நிறம்: வெள்ளை, மெரூன்.

6, 15, 24 U, V, W
ஆண்டு நல்ல துவக்கமாகவே இருக்கும்.
வெளிநாடு சென்று பணத்தைக் குவிக்கலாம்.
லாட்டரி, ரேஸ் போன்றவைகளால் திடீர் பணம் வரலாம்
பெண்களால் மகிழ்வும், சற்று சிரமமும் வரலாம்.
அரசாங்கத்தில் எதிர்பார்த்த நன்மைகள் வந்து சேரும்.
அரசியல்வாதிகள் தலைமையுடன் சுமூகமாகப் போவதே நல்லது.
திரைப்படத் துறையினர் வெகுவாக லாபம் பெறலாம்.
ஓட்டல்கள், ஆபரணம், ஜவுளி தொழில் புரிவோர் கூடுதல் லாபம் பெறுவர்
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்படும்

எண்: 2, 9
திசை: தெற்கு, மேற்கு
நிறம்: பச்சை, வெள்ளை, சிவப்பு

7, 16, 25 O, Z
இவ்வாண்டு, நினைத்தவை நடக்கும்
அடிக்கடி ஆனமீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
உணவகங்கள், எலக்ட்ரானிக்ஸ், கடல் சார்ந்த துறையினர் நிறைவான வாழ்வைப் பெறலாம்
அரசுத் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்அரசியல்துறையினரும் கடும் முயற்சியால் புது பதவிகள் பெறலாம்
எண்: 2, 5, 6
திசை: வடக்கு, மேற்கு
நிறம்: வெள்ளை, மற்றும் வெளிறிய நிறங்கள்

8, 17, 26 F, P
திருமண காரியங்கள் கைகூடிவரும்
பெண் குழந்தைகளால் பெருமையும் புகழும் வந்து சேரும்.
இரும்பு, எலக்ட்ரிகல், கெமிகல், கிரானைட் துறையினர் எதிர்பாராத திருப்பங்கள் பெறலாம்.
அரசாங்க ஊழியர்கள் பெருமை சேர்ப்பர்.
அரசியல்வாதிகள் தலைமைக்கு மிகவும் நேசமாக நடந்து கொள்வர்.
உடல் நலம் பெறும். பல நாள் வியாதிகள் பறந்தோடும்.
வெளிநாடுகள் பயணம் செய்ய வாய்ப்புள்ளது.
தடுமாற்றம் அடைந்து பல விசயங்கள் நல்ல தீர்வாக அமைந்திடும்.
எண்: 2, 5, 6
திசை : வடக்கு
நிறம்: பச்சை, வெள்ளை

9, 18, 27
கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்
உணவகங்கள், இரும்பு, எலக்ட்ரிகல் துறையினர் நல்வாய்ப்புகளை பெறலாம்
அடக்குமுறைகளால் எதையும் பெற இயலாது
உஷ்ணம் அதிகரித்தாலும் உணவுக் கட்டுப்பாட்டினால் உயர்வு பெறலாம்.
பக்திமார்க்கம் பரவசமூட்டும்.
பெண்களால் நன்மை உண்டு.
அரசாங்க ஆதரவு அதிகரிக்கும்.

எண்: 1, 4, 9.
திசை: கிழக்கு, தெற்கு
நிறம்: சிவப்பு, அரக்கு.

.   ஆங்கில எழுத்துக்கு உங்கள் பலன்கள்

2.     A-DIGITY மேன்மை

3.     B-SENSITIVE உணர்ச்சி

4.     C-CREATIVE சாதனை

5.     D-COURAGEOUS- துணிவு

6.     E-ADJUSTABLE சூழ்நிலைக்கு ஒத்துப்போதல்

7.     F-OUARISOME சச்சரவு

8.     G-OVER CONEIDENCE மிகமிஞ்சிய  நம்பிக்கை

9.     H-SUCCESSFUL PLANNER ஜனவசியம்

10  I-PERSENVERANCE விடா  முயற்ச்சி

11.J-ADMINISTRATVIE நிர்வாகம்

12.K-FRIENDLY தோழமை

13.L-KINDHEARTED கருனை

14.M-HARD LABOUR உளைப்பாளி

15.N-FRIENDLY தோழமை

16.0-PHILANTROPIST லோபகாரி

17.P-PHILOSPHER வேதாந்தி

18.Q-EIEVATE உதவும் ,தூக்கிவிடும் சுபாவம்

19.R-AMBITIOUS ஆர்வம்

20.S-INTELLIGENT தீவிர  அபிப்பிராயம்

21.T- CONNSONNSOLLOR புத்திமான்

22.U-SUCCESSFUL வெற்றிகரமான  சிந்தனை

23.V-ACTIVE சுறுசுறுப்பானவர்

24.W-AMBITIOUS ஆர்வம்

25.X-TACTFULL சாமத்தியம்

26.Y-GIGNITY மேன்மை


சுட்டெண் சாஸ்த்திரம்

  1. மேன்மை
  2. மென்மை
  3. போதனை
  4. பகைமை
  5. தோழமை
  6. ரசனை
  7. சோதனை
  8. வேதனை
  9. சாதனை


உங்கள் கையிலுள்ள திருமண ரேகை  திருமணத்தைப் பற்றி என்ன சொல்கிறது !!
ஒவ்வொருவருக்கும் தங்களது எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். அதில் எவ்வளவு நாள் வாழப் போகிறோம் என்பதாகட்டும், தொழிலாகட்டும், திருமணமாகட்டும் அனைவரும் அதை தெரிந்து கொள்ள விரும்புவோம்.
குறிப்பாக அதில் பெரும்பாலானோர் காதல் மற்றும் திருமண வாழ்க்கைக் குறித்து தெரிந்து கொள்ள விரும்புவார்கள். இம்மாதிரியான விஷயங்களை நம்முடைய ஜாதகம், கைரேகை போன்றவை சொல்லும்.
இங்கு தமிழ் போல்ட்ஸ்கை உங்கள் திருமணம் மற்றும் திருமண வாழ்க்கை பற்றி உங்கள் கையில் உள்ள திருமண ரேகை என்ன சொல்கிறது என்று கொடுத்துள்ளது. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சுண்டு விரலுக்கும், இதய ரேகைக்கும் இடையே உள்ள ரேகைகள் தான் திருமண ரேகைகள். இப்போது திருமண ரேகைகள் குறித்த சில தகவல்களைக் காண்போம்.
இதய ரேகையில் இருந்து சுண்டுவிரலின் அடித்தளம் வரை 50 வருடங்களாக கருதப்படுகிறது. இதைக் கொண்டு தான் திருமணம் எந்த வயதில் நடைபெறும் என்று சொல்லப்படுகிறநது. அதாவது திருமண ரேகையானது இதய ரேகைக்கு அருகில் இருந்தால் 20 வயதிலும், நடுவில் இருவில் இருந்தால் 25-30 வயதிற்குள்ளும், சுண்டுவிரலுக்கு அருகில் இருந்தால் 35 வயதிற்கு மேலும் திருமணம் நடைபெறுமாம்.

உங்கள் கையில் சுண்டுவிரலுக்கும், இதய ரேகைக்கும் இடையே ஒரு ரேகை நீளமாகவும், ஒரு ரேகை குட்டையாகவும் அடர்த்தியாகவும் இருந்தால், அதில் நீளமான ரேகை திருமணத்தையும், குட்டையானது காதல் முறிவையும் குறிக்கும்.
அடர்த்தியான மற்றும் ஒரே நீளமுள்ள இரண்டு திருமண ரேகைகள் இருந்தால், அத்தகையவர்களுக்கு இரண்டு திருமணம் நடைபெறும் வாய்ப்புள்ளது.


திருமண ரேகை சுண்டுவிரலுக்கு அருகில் இருந்து, நீங்கள் சீக்கிரமாக 20-25 வயதிலேயே திருமணம் செய்து கொண்டால், அதனால் உங்கள் திருமண வாழ்க்கை பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
திருமண ரேகைக்கு குறுக்கே சிறு ரேகை சென்றால், அதுவும் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் வருவதைக் குறிக்கும். ஏன், விவாகரத்து வரை கூட கொண்டு செல்லும்.
ஒருவேளை திருமண ரேகைகள் 4-5 இருந்தால், உடனே 4-5 திருமணம் ஆகுமா என்று நினைக்க வேண்டாம். இத்தகையவர்கள் மிகவும் ரொமான்டிக்கானவர்கள் மற்றும் நிறைய முறை காதலில் விழுந்து தோல்வியை சந்திப்பார்கள்.

திருமண ரேகைகள் எப்போது திருமணம் நடைபெறும் என்பதைப் பற்றி மட்டுமின்றி, நமக்கு துணையாக வருவோரின் ஆரோக்கியத்தைப் பற்றியும் கூறும்.
நிறைய ரேகைகள் இருந்து அதில் திருமண ரேகை மற்ற ரேகைகளை விட நீளமாகவோ அல்லது குட்டையாகவோ இருந்தால், கலப்பு திருமணம் நடைபெறும் வாய்ப்புள்ளது என்பதைக் குறிக்கும்.
திருமண ரேகையின் முடிவில் கிளைகள் இருந்தால், அது உங்கள் துணை ஆரோக்கிய பிரச்சனையால் அடிக்கடி அவஸ்தைப்படக்கூடும் என்பதைக் குறிக்குமாம்.
திருமண ரேகைக்கிடையே விரிசல் இருந்தால், அது திருமணத்திற்கு பின் சிறு பிரச்சனையால் இருவரும் சிறிது காலம் பிரிந்து இருக்கக்கூடும் என்பதைக் குறிக்கும். அதுவும் நிரந்தரமாக அல்ல, தற்காலிகமாகத் தான்.

ஒருவேளை உங்களுக்கு திருமண ரேகைகள் இல்லாமலோ அல்லது அந்த ரேகை மேல் நோக்கி வளைந்து சுண்டுவிரலை தொடுமாறு இருந்தாலோ, அது வாழ்நாள் முழுவதும் சந்நியாசியாக வாழ வேண்டியதைக் குறிக்கிறது.
திருமண ரேகை கீழ் நோக்கி வளைந்து இருந்தால், வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதுவே திருமணமானவருக்கு இருந்தால், அவர்கள் எந்த ஒரு பிரச்சனையையும் துணையுடன் உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் பிரிவை சந்திக்க நேரிடும்.
உங்களுக்கு ஒரே ஒரு நீளமான திருமண ரேகை இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். உங்கள் திருமண வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் மிகவும் சந்தோஷமாக நீடித்து நிலைக்கும்.
குணம் சொல்லும் கை!

கையின் மேல் பகுதியை வைத்து, கை அமைப்பைப் பாகுபடுத்தி, பஞ்சாங்குலி சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட சில உண்மைகளைப் பார்த்தோம். இப்போது உள்ளங்கை அமைப்பைப் பற்றிப் பார்ப்போம்.
உள்ளங்கையின் நீள, அகலங்கள், தடிப்பு, மென்மைத் தன்மை, நிறம் ஆகியவற்றை வைத்து சில விபரங்களை அறியலாம்.
பெருவிரல் நுனி முதல் மணிக்கட்டு வரை உள்ள இடைவெளி, உள்ளங்கை நீளம் என்பதைக் குறிக்கும். கட்டை விரல் முதல் சுண்டு விரல் வரையிலும் உள்ள இடைவெளி, உள்ளங்கையின் அகலத்தைக் குறிக்கும். இந்த அகலத்தை வைத்து கை அமைப்பை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
மிக அகலமான உள்ளங்கை: நீளம் குறைவாகவும், மிக அதிக அகலம் உள்ளதாகவுமான உள்ளங்கையைக் கொண்டவர்களுக்கு ஸ்திர புத்தி இருக்காது. அடிக்கடி முடிவுகளை மாற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். திட்டமிட்டு செயல்படமாட்டார்கள். ஒரே நேரத்தில் பல காரியங்களில் ஈடுபட்டு, எதிலும் வெற்றி பெறாமல் தோல்வியையும் அபவாதத்தையும் ஏற்கும் நிலை ஏற்படும்.
அகலமான கை: உள்ளங்கையின் நீளத்துக்குத் தகுந்த அகலம் கொண்ட உள்ளங்கையை பெற்றிருப்பவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள். திட்டமிட்டு செயல்படுவார்கள். கொள்கையில் உறுதி கொண்டவர்கள். இவர்களின் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும். எதையும் செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள்.
குறுகலான கை: மிக நீளமாக அமைந்து, அகலம் குறைவாகத் திகழும் உள்ளங்கையைப் பெற்றவர்கள், மிகவும் பலவீனமானவர்கள். சுயநலம் மிக்கவர்கள். எல்லோரையும் சந்தேகிப்பவர்கள். இவர்களால் எதையும் சாதிக்க முடியாது. தங்கள் தோல்விக்குப் பிறரை குறை சொல்வார்கள்.
உள்ளங்கையைத் தொட்டுப் பார்த்து, அதன் கடினத்தன்மை, மென்மைத்தன்மையை வைத்து, சில உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம். இதன்படி உள்ளங்கைகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
மென்மையான உள்ளங்கை: உள்ளங்கை பஞ்சு போல் இருந்தால், அவர்கள் மென்மையானவர்கள். கற்பனை வளம் கொண்டவர்கள். வாழ்க்கையை நிறைவாக அனுபவிப்பார்கள். பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். பொதுவாக பெண்களுக்கு இந்த அமைப்பு உண்டு. ஆண்களின் கை இதுபோல் இருந்தால், அந்த நபரிடம் உயர் பண்பும், மென்மையும் மேலோங்கியிருக்கும். திறமைசாலியாகவும், அறிவாளியாகவும் திகழ்வார்.
கடினமான உள்ளங்கை: உள்ளங்கை கடினமாக இருந்தால், முரட்டு சுபாவம் கொண்டவர்களாகவும், பிடிவாதம், கர்வம், மற்றும் சுயநலம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சிற்றின்பத் தில் நாட்டம் இருக்கும். மூளையைவிட உடல் பலத்தில் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். உடல் உழைப்பு சார்ந்த தொழில் செய்வார்கள்.
மிக பலவீனமான அல்லது மிகக் கடினமான உள்ளங்கை: மேற்கூறிய இரண்டு பாகுபாடுகள் தவிர, மிக பலவீனமான உள்ளங்கையோ மிகவும் கடினமான உள்ளங்கையோ இருந்தால், அவர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். கோழைகள், கொடியவர்கள், குற்றவாளிகள் ஆகியோருக்கு இத்தகைய உள்ளங்கை அமைப்பு இருக்கும்.
மென்மைக்கும், கடினத்துக்கும் இடைப்பட்டது: இப்படியான உள்ளங்கை அமைப்பு பலருக்கு இருக்கும். இவர்கள் புத்தி, பலம் இரண்டையும் கொண்டு பிழைப்பவர்கள். கட்டுப்பாடு மிகுந்தவர்கள். எடுத்த காரியத்தை தாமாகவே விரைந்து  முடிப்பார்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள்.
இனி, உள்ளங்கையின் வண்ணத்தை வைத்து சில தன்மைகளைப் பார்க்கலாம்.
ஒருவர் கறுப்பாகவோ, சிவப்பாகவோ இருக்கலாம். அவர்கள் உள்ளங்கையைப் பொறுத்தவரை, வண்ண அமைப்பில் சிவப்பு, அதிக சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள் ஆகிய நான்கு பிரிவுகளாக ரேகை சாஸ்திரம் பிரிக்கிறது. உடலில் உள்ள பல்வேறு ரத்த நாளங்கள், தந்துகிகள் ஆகியவை உள்ளங்கையில் சிலந்தி வலை போல பின்னியுள்ளன. ரத்தம் எல்லோருக்குமே சிவப்பு தான். அதை வைத்தே இந்தப் பிரிவு அமைகிறது. மேல்தோல் கறுப்பாக உள்ளவர்களின் உள்ளங்கையில் சிவப்பு என்பது சற்றுக் கருஞ்சிவப்பாக இருக்கலாம். அதை வைத்துப் பிரிவுகளை நிர்ணயிக்க வேண்டும்.
ஆழ்ந்த சிவப்பு நிற உள்ளங்கை:  இந்த நிறம் கொண்டவர்கள், சுயநலவாதிகள். சிற்றின்பப் பிரியர்கள். பணத்திலும், பதவியிலும் ஈடுபாடு உடையவர்கள். கடுமையான சுபாவம்  உடையவர்கள். மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். சுய நலத்துக்காக எதையும் செய்வார்கள். அகம்பாவிகள்.
சிவப்பு நிற உள்ளங்கை: குங்குமம் போன்ற சாதாரண சிவப்பு நிறமுடைய உள்ளங்கை உடையவர்கள், கோபதாபங்கள் கொண்டவராக இருப்பார். ஆனால், பற்றும் பாசமும் உடையவர்கள். நினைத்ததை முடிக்கும் திறன் கொண்டவர்கள். ஆனால், அவசரக்காரர்கள். சற்று குறுகிய மனப்பான்மை உடையவர்கள். நல்லவர்களுக்கு நல்லவர்கள். கெட்டவர்களுக்குக் கெட்டவர்கள்.
இளஞ்சிவப்பு நிற உள்ளங்கை: ரோஜா இதழைப் போல இளஞ்சிவப்பு நிற உள்ளங்கை உடையவர்கள், ஆரோக்கியமான தேகமும், மனமும் உடையவர்கள். நிதானமும் கட்டுப்பாடும் உள்ளவர்கள். அறிவாளிகள். திறமைசாலிகள். பிறருக்காகவும் வாழக்கூடியவர்கள். நேர்மை, நாணயம், ஒழுக்கம் உள்ளவர்கள். எல்லோராலும் விரும்பப்படுவார்கள். நம்பத்தகுந்தவர்கள்.
மஞ்சள் நிற உள்ளங்கை: இவர்கள், ஆரோக்கியக் குறைவு, பயம், பீதி உள்ளவர்கள். மனோபலம் இல்லாதவர்கள். பலவீனமானவர்கள். அறிவாற்றல் குறைந்தவர்கள். சோம்பேறிகள், தன்னம்பிக்கை இல்லாதவர்கள். எவரையும் நம்பாதவர்கள், தோல்வியும் துயரமும் வாழ்க்கையில் கொண்டவர்கள்.
அடுத்து, விரல்கள், நகங்களின் அமைப்பை வைத்து, கையை பாகுபடுத்தும் விபரங்களைக் காண்போம்.
கைகளில் விரல்களின் அமைப்பும், நகங்களின் அமைப்பும்கூட ஒருவருடைய குணாதிசயங்களைத் தெரிவித்துவிடும் என்கிறது பஞ்சாங்குலி சாஸ்திரம். நகத்தை நீளமாக வளர்த்தாலும் சரி, குட்டையாக வெட்டிக் கொண்டாலும் சரி, நகங்கள் அமைவதற்காக விரல்களின் மேல் அமைந்துள்ள பகுதியின் வடிவத்தைப் பொறுத்தே இந்த விளக்கங்கள் தரப்படுகின்றன. ஒருவரது கைகளைப் பரிசீலிக்கும் போது நகங்களையும், நகக் கண்களையும் கூடச் சோதிக்க வேண்டும். மனித உடலில் உற்பத்தி யாகும் காந்த சக்தியானது நகக்கண்கள் மூலமே வெளிப்படுகின்றன. வெளியில் உள்ள காந்த சக்தியும் நகக் கண்கள் மூலமே ஈர்க்கப்படுகின்றன. இந்த சக்தியைப் பாதுகாக்கும் மூடியாக, நகங்கள் உதவுகின்றன.
சிலர் மனக்கலக்கமாக இருக்கும்போதும், சந்திக்கும் போதும் நகத்தைக் கடிப்பதற்குக் காரணம், அந்த காந்த சக்தியை நெருடி, பலத்தை பெருக்குவதற்குத்தான். அல்லது, தன்னை சமாதானப்படுத்திக் கொள்வதற்குத்தான்.
மெஸ்மரிஸம், ஹிப்னாடிஸம் முதலானவற்றில் கையிலுள்ள நகக்கண்கள் மூலமும், விரல் நுனி மூலமும், காந்த அலைகளைச் செலுத்தித்தான் ஒருவரை ஹிப்னாடிஸ நிலைக்குக் கொண்டு வருகிறார்கள். மேலும், நகங்கள் நல்ல மின்கடத்திகள், சூழ்நிலையில் உள்ள மின்சக்திகளை உடலில் கடத்தி, உடலின் சக்தியை சமநிலைப்படுத்துவது நகமும், நகக்கண்களும், விரல் நுனிகளுமேயாகும்.
நகங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்வதும் அழகாக வைத்துக் கொள்வதும், நகக் கண்களில் அழுக்கு படியாமல் வைத்திருப்பதும் நல்ல ஆரோக்கியமான அறிகுறி.
நகங்களில் கறுப்பு, வெள்ளைப் புள்ளிகள் தோன்றுவது, வாழ்க்கையில் ஏற்படும் திடீர் முன்னேற்றங்களைக் கெடுக்கும். பல்வேறு விதமான நக அமைப்புகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. நகக்கண்கள் என்று சொல்லப்படும் இவற்றின் வடிவமைப்பையும் அதற்கேற்ற தன்மையையும் பின்வருமாறு குறிப்பிடலாம்.
மிகச் சிறியது: குறுகிய மனப்பான்மை, சுயநலம் கொண்டவர்கள்.
மிகக் குறுகிய, வெளிறிய தன்மை: சந்தர்ப்பவாதிகள். காரியவாதிகள். நம்ப முடியாதவர்கள். தன்னம்பிக்கை இல்லாதவர்கள். பிறரை நம்பாதவர்கள்.
சிறிய, செவ்வக வடிவம்: பலவீனமான இதயம் உள்ளவர்கள். பயந்த சுபாவக்காரர்கள்.
சிறிய மிக அகலமான வடிவம்: பிடிவாதக் காரர்கள். சண்டையிடுகிற குணம் உண்டு்.
கடினமான, அகலக் குறைவான வடிவம்: நினைத்ததைச் சாதிப்பவர்கள். நன்மை தீமை என பகுத்தறியாதவர்கள்.
சதுரமான வடிவம்: கோழைகள். பயந்த சுபாவம் கொண்டவர்கள். தன்னம்பிக்கை இல்லாதவர்கள்.
சிறிய முக்கோண வடிவம்: மேலே அகலமாகவும், கீழ்ப்பாகம் குவிந்தும் அமைந்த முக்கோண வடிவம் இது. தனித் தன்மை கொண்டவர்கள். தனிமை விரும்பிகள். கொஞ்சம் சோம்பேறித்தனமும் இருக்கும்!
நீளத்தைவிட அகலம் அதிகமான வடிவம்: கோபப்படக் கூடியவர்கள். உணர்ச்சிவசப்படுவார்கள்.
முனையில் அர்த்த சந்திர வடிவில் வளைந்த வட்டம்: ஸ்திர புத்தி மிக்கவர்கள்.  விரைவில் முடிவெடுக்கும் தன்மை கொண்டவர்கள்.
விரலை விட சிறியதான நீண்ட வடிவம்: தானாகச் சிந்திக்கும் திறனில்லாதவர்கள். பிறரை நம்பியே இருப்பார்கள். தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள்.
நீளமான, மேலே கூராக உள்ள வடிவம்: அழகிலும் வசதியிலும் ஈடுபாடு உடையவர்கள். சிற்றின்பப் பிரியர்கள்.
அகலத்தைவிட நீளம் அதிகமாக இருந்து கீழே வளைந்து மேலேயும் வளைந்த முட்டை வடிவம் :  பூரணமான மனிதர்கள். எதிலும் நிறைவு காண்பவர்கள்.


பண்டைகால நூல்களில் ஒன்றான சிவபுராணத்தில் ஒரு மனிதனுக்கு மரணம் நிகழ போகிறதென்றால், சில அறிகுறிகள் தென்படும் என்று சொல்லியுள்ளது.
அந்த அறிகுறிகள் நம்முடைய உடலில் இருந்தே தொடங்குவதாகவும் சிவபுராணம் கூறியுள்ளது. அதாவது, முக்கிய உடலுறுப்புகளான வாய், காது மற்றும் கண் செயலிழக்க ஆரம்பித்து விடுமாம். அதன்பிறகு, அடுத்த ஆறு மாதங்களில் மரணம் ஏற்படும் எனவும் சிவபுராணங்களில் கூறப்பட்டுள்ளதாம்.
மேலும், சாதரண நிறத்தில் இருக்கக்கூடிய ஒருவரின் உடல் திடீரென வெள்ளையாகவோ அல்லது மஞ்சளாகவோ மாறி வருகிறதென்றால், அதிலிருந்து, ஆறு மாதங்களில் அவரின் இறப்பு நிகழும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேப்போன்று, நாக்கு மற்றும் தொண்டை பகுதிகளில் ஒருவருக்கு வறட்சியாகவும் மற்றும் அது அதிகரித்து கொண்டே இருந்தால் அந்த நபர் வெகு விரைவில் உயிரிழப்பார் எனவும் அர்த்தமாகும்.
ஒரு மனிதனுக்கு தன் இடது கை பயத்தின் காரணமாக தொடர்ந்து விடாமல் நடுங்கினால் அந்த மனிதரானவர் ஒரு மாதத்தில் இறந்து விடுவார் எனவும் சிவபுராணம் சொல்கிறது.
எந்த ஒரு நபரால் நிலா மற்றும் நட்சத்திரங்களை கண்களால் சரியாக பார்க்க முடியவில்லையோ அந்த நபரை எமன் நெருங்கி கொண்டிருக்கிறான் என அர்த்தமாகும்.
கருடன், காகம், புறா யார் தலையில் வந்து அமர்கிறதோ அது அவர்களுக்கான மரண அறிகுறி என்கிறது சிவ புராணம்!
எண்ணெய் மற்றும் தண்ணீரில் ஒரு பிரதிபலிப்பு தோன்றுமல்லவா? அது ஒருவரின் கண்களுக்கு தெரியவில்லை என்றால் அவருக்கு ஆறு மாதத்தில் உயிரழப்பு ஏற்படலாம்.
எந்தவொரு விடயத்தையும், முக்கியமாக ஒருவரால் நெருப்பை தெளிவாக பார்க்க முடியவில்லை என்றால் அவர் வீட்டு வாசல் கதவை எமன் தட்ட போகிறான் என சிவபுராணம் சொல்கிறது.
சொர்க்கம் மற்றும் நரகம் என்று இருந்தால், மனிதனுக்கு மரணம் என்பதும் இருக்கத்தான் செய்யும். இது தான் இயற்கையின் நியதி. பண்டைகால நூல்களில் ஒன்றான சிவபுராணத்தில் ஒரு மனிதனுக்கு மரணம் நிகழ போகிறதென்றால், சில அறிகுறிகள் தென்படும் என்று சொல்லியுள்ளது.
அந்த அறிகுறிகள் நம்முடைய உடலில் இருந்தே தொடங்குவதாகவும் சிவபுராணம் கூறியுள்ளது. அதாவது, முக்கிய உடலுறுப்புகளான வாய், காது மற்றும் கண் செயலிழக்க ஆரம்பித்து விடுமாம். அதன்பிறகு, அடுத்த ஆறு மாதங்களில் மரணம் ஏற்படும் எனவும் சிவபுராணங்களில் கூறப்பட்டுள்ளதாம்.
மேலும், சாதரண நிறத்தில் இருக்கக்கூடிய ஒருவரின் உடல் திடீரென வெள்ளையாகவோ அல்லது மஞ்சளாகவோ மாறி வருகிறதென்றால், அதிலிருந்து, ஆறு மாதங்களில் அவரின் இறப்பு நிகழும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேப்போன்று, நாக்கு மற்றும் தொண்டை பகுதிகளில் ஒருவருக்கு வறட்சியாகவும் மற்றும் அது அதிகரித்து கொண்டே இருந்தால் அந்த நபர் வெகு விரைவில் உயிரிழப்பார் எனவும் அர்த்தமாகும்.
ஒரு மனிதனுக்கு தன் இடது கை பயத்தின் காரணமாக தொடர்ந்து விடாமல் நடுங்கினால் அந்த மனிதரானவர் ஒரு மாதத்தில் இறந்து விடுவார் எனவும் சிவபுராணம் சொல்கிறது.
எந்த ஒரு நபரால் நிலா மற்றும் நட்சத்திரங்களை கண்களால் சரியாக பார்க்க முடியவில்லையோ அந்த நபரை எமன் நெருங்கி கொண்டிருக்கிறான் என அர்த்தமாகும்.
கருடன், காகம், புறா யார் தலையில் வந்து அமர்கிறதோ அது அவர்களுக்கான மரண அறிகுறி என்கிறது சிவ புராணம்!
எண்ணெய் மற்றும் தண்ணீரில் ஒரு பிரதிபலிப்பு தோன்றுமல்லவா? அது ஒருவரின் கண்களுக்கு தெரியவில்லை என்றால் அவருக்கு ஆறு மாதத்தில் உயிரழப்பு ஏற்படலாம்.
எந்தவொரு விடயத்தையும், முக்கியமாக ஒருவரால் நெருப்பை தெளிவாக பார்க்க முடியவில்லை என்றால் அவர் வீட்டு வாசல் கதவை எமன் தட்ட போகிறான் என சிவபுராணம் சொல்கிறது.
ஓம் நமசிவாய


உங்கள் கையில் இது போன்ற X வடிவிலான ரேகை உள்ளதா. ?



உலகில் எல்லாருக்கும் ஒரே மாதிரியான கைரேகை இருப்பதில்லை. ஆனால், கை ரேகையில் ஒரு சில விஷயங்கள் பொதுவாக ஒரு சிலருக்கு மத்தியில் மட்டும் அமையலாம்.
இரண்டு உள்ளங்கை ரேகையிலும் X போன்ற குறி இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள், அவர்களுடைய சிறப்பு குணாதிசயங்கள் என்னென்ன என்று இனி காண்போம்..கிரேட் அலெக்சாண்டர்! பண்டைய காலத்தில் ராஜ ஜோதிடர்களே இதை பற்றி கூறியிருப்பதாகவும். கிரேட் அலெக்சாண்டர் மிகப்பெரிய அரசராக விளங்குவார் என்று அவரது இரண்டு கைகளில் இருந்த X குறியை வைத்து கூறி இருந்தார்களாம்.
ரஷ்ய பல்கலைக்கழகம்! இதுப்பற்றி ரஷ்ய எஸ்.டி.ஐ பல்கலைகழகம் கைரேகையில் X குறி இருப்பவர்கள் பற்றி ஒரு ஆய்வும் நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் உலகில் இரண்டு கோடி மக்களுக்கு இந்த X விதி பொருந்தும் என ஆய்வறிக்கை அவர்கள் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
தனிதன்மை! இரண்டு உள்ளங்கை ரேகைகளிலும் இந்த X குறி உள்ளவர்கள் தனித்தன்மை வாய்ந்து இருப்பதாக அவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது ரஷ்ய அதிபர் புடின் மற்றும் ஆபிரகாம் லிங்கனுக்கும் பொருந்துகிறது என கூறுகிறார்கள்.
வலுமையான குணம்! கைரேகையில் இந்த X குறி உள்ளவர்கள் வலிமை பொருந்திய குணம் கொண்டிருப்பதாககும். அவர்கள் விதி சிறந்ததாகவே அமைந்திருப்பதாகவும் இவர்கள் கூறியுள்ளனர்.
தந்திரம்! எந்நாளும் வெற்றி என்ற பாதையில் பயணிக்கும் இவர்கள் வெற்றிக்கு இதுதான் தந்திரம் என்று எதையும் பின்பற்றுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இவர்கள் மனம் சொல்வதை கேட்டு பயணிப்பவர்களாக இருப்பார்கள்.

பொய், துரோகம்! X குறி ரேகை உள்ளவர்களிடம் பொய் கூறி தப்பிப்பதும், துரோகம் செய்வதும் மிகவும் கடினம். மேலும், அவர்களது விதி மிகவும் வலுவாக இருக்கும். மன ரீதியாக மட்டுமின்றி, உடல் ரீதியாகவும் இவர்கள் வலிமையாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.தீர்க்கதரிசன குணங்கள்! இந்த X குறி கொண்டுள்ளவர்கள் மத்தியில் காணப்படும் தீர்க்கதரிசன குணங்கள், பயன் மிகுந்தவர்கள்! அனைத்திலும் தெளிவான பார்வை கொண்டவர்கள்! பெரிய தலைவர்கள்! இறந்த பிறகும் மக்களால் மறக்க முடியாத நிலை பெறும்.

ஜோதிட ரீதியாக இருபத்தேழு நட்சத்திரங்களுக்கு உரிய இருபத்தேழு பரிகார விருட்சங்கள் உண்டு, அவை
              
               1. அஸ்வினி - எட்டி,
               2. பரணி - நெல்லி,
               3. க்ருத்திகை - அத்தி,
               4. ரோஹிணி - நாவல்,
               5. ம்ருகசீர்ஷம் - கருங்காலி,
               6. திருவாதிரை - செங்கரு,
               7. புனர்பூசம் - மூங்கில்,
               8. பூசம்  - அரசு,
               9. ஆயில்யம் - புன்னை,
               10. மகம் - ஆலம்,
               11. பூரம்  - பலா,
               12. உத்திரம் - அரளி,
               13. ஹஸ்தம் - வேல்,
               14.  சித்திரை -  வில்வம்,
               15. ஸ்வாதி - மருதை,
               16. விசாகம் - விளா,
               17. அனுஷம் - மகிழம்,
               18. கேட்டை - பிராய்,
               19. மூலம் - மாமரம்,
               20. பூராடம் - வஞ்சி,
               21. உத்ராடம் - பலா,
               22. திருவோணம் - எருக்கு,
               23. அவிட்டம் - வன்னி,
               24. சதயம் - கடம்பு,
               25. பூரட்டாதி - தேமா,
               26. உத்திரட்டாதி - வேம்பு,
               27. ரேவதி - இலுப்பை.
         


                               உலக மக்கள்தொகை எத்தனை ஆயினும் அத்தனை பேரும் இருபத்தேழு நட்சத்திரத்துக்குள் அடக்கம். உங்கள்  பிறந்த நட்சத்திரம் என்பது உங்கள் உயிரினை போன்றது. ஜோதிட ரீதியாக உங்கள் நட்சத்திரத்திற்க்கு உரிய மரங்களை (பரிகார விருட்சங்கள்) வணங்கினாலே சகல தோஷங்களும் விலகும் என்பதனை அறிந்த நம் முன்னோர் ஒவ்வொரு ஆலயங்களிலும் தலவிருட்சம் என்ற பெயரில் இந்த  மரங்களை நட்டு பராமரித்து வந்தனர்.
           
                                   இந்த ஒவ்வொரு விருட்சமும் மனித வாழ்வில் என்னற்ற பலன்களை தருகின்றன. இதன் மருத்துவ குணங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவை. இந்த விருட்சங்களின்  ஈர்ப்பு சக்தியும், காந்த சக்தியும், தெய்வீகத் தன்மையும் அளப்பறியது.
            

                                 இயற்கையோடு இணைந்து  வாழ்வது என்பது இறைவனுடன் இணைந்து வாழ்வதாகும், இந்த விருட்சங்கள் வெளியிடும் காற்றை சுவாசித்தாலே  உடலில் உள்ள நோய்கள் நீங்கும். இவ்விருட்சங்களின் கீழ் அமர்ந்து தியானித்தாலே மனம் ஒடுங்கி தியானம் கைக்கூடும். சர்வ சித்திகளும் அடையலாம். புத்தர் போதி  மரத்தடியில் ஞானம் பெற்றார் என்பதும், அரச மரத்தினடியில் வினாயகர் அமர்ந்திருப்பதும் இவ்வுண்மையை விளக்குவதாகும்.
            

                             அவர்கள் அமர்ந்த அந்த ஒரு மரத்திற்கே (விருட்சம்) அற்புத சக்திகள் உண்டென்றால், இந்த இருபத்தேழு அற்புத விருட்சமும் ஓரிடத்தில் இருந்தால் அவ்விடம் மாபெரும் அற்புத சக்திகள்  தரும் இறைபீடமாகும். இந்த இருபத்தேழு அற்புத விருட்சமும் ஓரிடத்தில் அமையப்பெற்ற ஒரு அற்புத பரிகார ஸ்தலம் தான் நமது "சர்வ சக்தி விருட்ச பீடம்"

 நட்சத்திர  தோஷ விருட்ச பரிகாரம் :

                                                                                  உங்கள் ஜெனன நட்சத்திரத்திற்கு முதல் நாள்  இரவு நவதானியத்தை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை ஊறவைத்த தண்ணீரை விருட்சத்திற்கு ஊற்றி பரிகாரம்  செய்து, பின் ஊறிய தானியத்தை வெல்லம் போட்டு அறைத்து பசுவுக்கு கோபூஜை செய்து உண்ண கொடுத்து பசுவை மூன்று முறை வலம் வந்து வணங்க தோஷங்கள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

 




1. வீட்டுமனை சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ அமைய வேண்டும்.

2. வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம்.

3. மழைநீர் ஈசானிய மூலை வழியாக வெளியேற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது.

4. வீட்டுக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லது.

5. வீட்டுக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் ஓடை, கால்வாய், ஏரி, ஆறு இருப்பது நல்லது.

6. மனையில் வீடு கட்டும் போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில் கிணறு அல்லது பம்ப் அமைத்து நீர் எடுத்து பயன்படுத்த வேண்டும். வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில் அமையும் கிணறு, பம்ப் தீய பலன்களைத் தரும்.

7. வீட்டின் தெற்கும், மேற்க்கும் குறைந்த இடமும், வடக்கு, கிழக்கில் அதிக இடமும் விட்டு கட்ட வேண்டும்.

8. வீடு கட்ட கடைக்கால் தோண்டும் போது முதலில் ஈசானியத்தில் ஆரம்பித்து கடைசியில் தென்மேற்கே தோண்டி முடிக்க வேண்டும். வீடு கட்டுமானப் பணியின் போது முதலில் தென்மேற்கில் ஆரம்பித்து ஈசானியத்தில் முடிக்க வேண்டும்.

9. தென்மேற்கு மூலை 90 டிகிரி சரியாக இருக்க வேண்டும்.

10. வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க வேண்டும்.

11. பஞ்சபூத ஆற்றல் கிடைக்க ஈசானிய மூலை காலியாக இருக்க வேண்டும். மாலையில் விளக்கேற்ற சுபிட்சமுண்டாகும்.

12. வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள், ஜன்னல்கள் அமைய வேண்டும். வீட்டிற்கு ஜன்னல், கதவுகள் இரட்டைப்படையில் இருப்பதே நல்லது.

13. கழிவுநீர் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி செல்ல வேண்டும். கழிப்பிடம் தெற்கு அல்லது வடக்கு நோக்கி அமருமாறு அமைய வேண்டும். செப்டிக் டேங்க் வடமேற்கு அல்லது தென்கிழக்கே காம்பவுண்டு சுவரை தொடாமல் கட்ட வேண்டும்.

14. தென் மேற்கு அல்லது வடமேற்கு மூலையில் நீர் உபயோகத் தொட்டி அமைய வேண்டும்.

15. அலமாரிகள் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் அமைவது நல்லது.

16. வீடு மற்றும் காம்பவுண்டின் வடகிழக்கு மூலை வளைவாக இருக்க கூடாது.

17. மாடிப்படி தென்மேற்கு அல்லது வடமேற்கு மூலையில் அமைய வேண்டும்.

18. வீட்டிற்கு தெற்கு மேற்கு உயர்ந்து இருக்க வேண்டும்.

19. வடகிழக்கில் குடிநீர் குழாய் இருத்தல் வேண்டும்.

20. ஈசானிய மூலையில் மண் அமைத்து அருகம்புல், துளசி வளர்ப்பது நல்லது. உயரமான துளசி மாடம் கட்டக்கூடாது. ஈசானிய மூலையில் மாடிப்படி கூடாது. ஈசானிய மூலையில் சமையல் அறை கூடாது. ஈசானிய மூலையில் குப்பை கூளங்களை குவித்தல் கூடாது.

21. ஆட்டுக்கல், அம்மி, தெற்கு, மேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு பகுதிகளில் அமைக்கலாம். வடகிழக்கு பகுதிகளில் அமைக்கக் கூடாது.

22. பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற மின்சாதனப் பொருள்கள் அறையின் தென்கிழக்கில் அமைக்கலாம்.

23. அக்னி மூலையில் படுக்கை அறை கூடாது.

24. தெற்கு பார்த்து சமைக்காதீர். மருத்துவ செலவுகளுக்கு வழி கோலும்.

25. உண்ணல், படித்தல் கிழக்கு நோக்கி இருப்பது தான் நல்லது.

26. வடக்கே தலை வைத்து படுக்கை அமைப்பது கூடாது.

27. வீட்டின் வடக்கே, கிழக்கே உயரமாக வளரும். நிழல் தரும் மரங்கள் வளர்க்க கூடாது.

28. வீட்டின் தெற்கு அல்லது மேற்கே உள்ள உயரமான மரங்களை வெட்டக் கூடாது.

29. வீட்டின் வடகிழக்கில் நீர்தேக்கத் தொட்டி அமைக்கக் கூடாது.

30. வீட்டின் வடகிழக்கு தென்மேற்கு மூலையில் கழிவறை மற்றும் செப்டிக் டேங்க் அமைக்கக் கூடாது.

31. வீட்டுத் திண்ணைகள் வடக்கேயும், கிழக்கேயும் உயரமாக அமைக்கக் கூடாது.

32. வடக்கு, கிழக்கு காம்பவுண்டு சுவரின் மேல் பூந்தொட்டி வைக்கக் கூடாது.

33. வீட்டின் தென்மேற்கு மூலையின் மெயின்கேட், போர்டிகோ தலைவாசல் மற்றும் கிணறு அமைந்திருந்தால் வேதனைகளும் சோதனைகளுமே வரும்.

34. வாசலுக்கு எதிரே கிணறோ, குழியோ இருக்கலாகாது.

35. வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள காலிமனை நிலங்களை வாங்கலாம்.

36. வீட்டின் தெற்கு, மேற்கு பகுதியில் உள்ள காலிமனை நிலங்களை இனாமாகக் கூட வாங்கி சேர்க்கக் கூடாது.

37. ஒரு வீட்டினை இருவருக்கு பங்கிட்டு பாகப்பிரிவினைச் செய்ய கூடாது.

38. ஒரே மனையில் 2 வீடுகள் கட்ட விரும்பினால் முதலில் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் கட்ட வேண்டும். பிறகு தான் வடக்கு அல்லது கிழக்கிலுள்ள காலி மனையில் வீடு கட்டலாம்.

39. ஓரே மனையில் 2 வீடுகள் கட்டினால் தெற்கிலுள்ள வீட்டை விட வடக்கில் உள்ள வீடு தாழ்வாகவும், மேற்கில் உள்ள வீட்டை விட கிழக்கில் உள்ள வீடு தாழ்வாகவும் இருக்க வேண்டும்.

40. ஒரு வீட்டு மனையின் எதிரே ஒரு தெரு முடிவதையே தெருக்குத்து அல்லது வீதி சூலம் எனலாம், வடக்கு ஈசானிய தெருக்குத்தும் கிழக்கு ஈசானிய தெருக்குத்தும் வீட்டிற்கு நன்மை தருவனவாம்.

41. தெற்கு அக்னி மூலைத் தெருகுத்து வியாபாரத்திற்கு ஏற்றது.

42. மேற்கு வாயு மூலைத்தெருக்குத்து சட்ட நுணுக்கங்களுக்கு ஏற்றது.

43. வடக்கு வாயு மூலை தெருக்குத்து பிரச்சினைகள் தரும். கிழக்கு அக்னி மூலை தெருக்குத்து பிரச்சசனைகள் தரும். மேற்கு நைருதி மூலை தெருக்குத்தும் பிரச்சனைகள் தரும்.

44. ஒரு மனைக்கு வடக்கிலும் கிழக்கிலும் பாதை இருந்தாலும், 4 திசைகளிலும் பாதை இருந்தாலும் சிறப்புடையது.

45. வீடு கட்ட ஆரம்பிக்கும் முன் அல்லது செப்பனிட ஆரம்பிக்கும் முன் சரியான நேரத்தில் அருகம்புல், துளசி கொண்டு மனையின் ஈசானியத்தில் வாஸ்து பூஜை (பூமி பூஜை) செய்தல் மிக நல்லது.

46. வீட்டை செப்பனிடும் முன் வாஸ்து நிபுணர்களைக் கொண்டு தீர நிதானமாக ஆராய்ந்த பின் பழுது பார்க்கும் பணியை வேகமாகவும் கவனமாகவும் செய்ய முடிக்க வேண்டும்.

47. வீடு பழுது பார்க்கும் பணிகளை மெதுவாகச் செய்தாலும் பரவாயில்லை. பாதியில் நிறுத்தவேக் கூடாது.

48. முறையான கணக்குகளுடன் செய்யப்பட்ட பிரமிடுகளை வீட்டில் உபயோகப்படுத்தி மூப்பினை அகற்றலாம். மேலும், மனஉலைச்சல், பல்வேறு பிரச்சனைகளை நீக்கி நிம்மதியாக நம்மை வாழவும் வைக்கின்றது.

49. வீட்டில் தினந்தோறும் சூரியோதம் சூரியன் மறைவு நேரத்தில் செய்யப்படும். அக்னி ஹோத்திரம் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வு அமையவும் உதவும். வீட்டில் நாமே செய்யும் யாகமே அக்னி ஹோத்திரம்.

50. வீட்டில் தலைவாசல் அமைக்கும் போது கட்டிடத்தின் முன்பக்கத்தினை அளந்து அதை 9 சம பாகங்களாக்கி 4, 5, 6வது பாகங்களில் தகுதியான இடத்தில் தலைவாசல் அமைக்கலாம்.

51. வீட்டின் தென்மேற்கு சேமிப்பு அறை, படுக்கை அறை, பீரோ, பெட்டி வைக்கவும்.

52. வீட்டின் தெற்கில் படுக்கை அறை இருப்பது நல்லது.

53. வீட்டின் தென்கிழக்கில் தான் சமையல் கிழக்கே பார்த்து சமைக்கும் படியாக இருத்தல் வேண்டும்.

54. வீட்டின் கிழக்கில் தான் குளியல் அறை அமைத்தல் வேண்டும்.

55. வீட்டில் சாப்பிடுமிடம் மேற்கிலும் சாப்பிடும் போது கிழக்கு திசை பார்த்து சாப்பிட வேண்டும்.

56. வீட்டின் வடமேற்கில் தான் தானியக் கிடங்கு இருத்தல் வேண்டும்.

57. வீட்டின் வடக்கில் தான் பணம் வரவு வைத்தல் எடுத்தல் வேண்டும்.

58. வீட்டின் வடகிழக்கு திசையில் தான் இறைவழிபாடு, தியானம் செய்தல் உயர்வானது.

59. வீட்டின் நடுவில் சந்திப்புக் கூடம் இருத்தல் வேண்டும்.

60. வீட்டின் உள்ளே சூரிய ஒளி விழுதல் மிக மிக உயர்வானது.

61. எதிர்வீட்டின் தலைவாசலுக்கு எதிரில் நம் வீட்டு தலைவாசல் இருக்கவே கூடாது.

62. தினமும் பூஜையறையில் தெய்வ பிரார்த்தனை செய்தல் வேண்டும். விளக்கு ஏற்ற வேண்டும். நறுமண பத்தி உபயோகப்படுத்துங்கள்.

63. தலைவாசல், கடைவாசல் நேர் எதிரில் சூரிய ஒளிபடியுமிடமான முற்றத்தில் துளசி மடம் அமைத்து வழிபடுதல் நல்லது.

64. வீட்டின் முன்புறம் பூச்செடிகளும், பின்புறம் பலன் தரும் மரங்களும் இருப்பது மிக மிக நல்லது.

65. வீட்டு எஜமானன் நீடித்த ஆயுளோடு இருக்க மனைப் பொருத்தத்தில் சூத்திரத்திப் பொருத்தத்தில் மரண சூத்திரம் வரக்கூடாது.

66. மேற்குத் திசை உயரமாகவும், கிழக்குத் திசை பள்ளமாகவும் இருந்தால் செல்வந்தராக்கி விடும். கிழக்கு மேடாகவும், மேற்கு பள்ளமாகவும் இருந்தால், ஏழையாக்கி விடும். தரித்திரம் ஏற்படும். வடக்கு மேடாகவும், தெற்கு பள்ளமாகவும் இருந்தால், வீட்டுத் தலைவனுக்கு மிகத் தீயதைக் கொடுக்கும். கண்டங்கள் ஏற்படும். தெற்கு உயரமாகவும், வடக்கு பள்ளமாகவும் இருந்தால், செல்வ வளர்ச்சியைக் கொடுக்கும்.

67. ஈசான்யம் உயரமாகவும், கன்னி மூலை பள்ளமாகவும் இருந்தால் பல துயரங்களில் ஆழ்த்தி விடும். சந்ததிகளுக்குக் கண்டங்கள் உண்டாகும். அக்னி மூலை மேடாகவும், வாயு மூலை பள்ளமாகவும் இருந்தால், நல்லவை நடக்கும். பெண்களுக்கு ஆரோக்கியம் ஏற்படும். வாயு மூலை மேடாகவும், அக்னி மூலை பள்ளமாகவும் இருந்தால், அவ்வீட்டில் தீ விபத்து, திருட்டு போன்றவை ஏற்படும். கன்னி மூலை உயரமாகவும்,ஈசான்யம் பள்ளமாகவும் இருந்தால், மிக்கசெல்வ வளர்ச்சியும், புகழும் உண்டாகும். ஆரோக்கியம் கூடும்.

68. கிழக்கு, அக்னி மூலை ஆகியவை உயரமாகவும், வாயு மூலையும் மேற்கும் பள்ளமாகவும் இருந்தால், துயரத்திலும், சிக்கலிலும் ஆழ்த்தி விடும்.

69. அக்னி மூலையும், தெற்கும் உயரமாகவும், வாயுமூலையும், வடக்கும் பள்ளமாகவும் இருந்தால் பல வகை இலாபங்கள் ஏற்படும்.

70. தெற்கும், தென்மேற்கும் உயரமாகவும், வடக்கும், ஈசான்யமும் பள்ளமாகவும் ஆனால் அவ்வீட்டில் இருப்பவரை லட்சாதிபதியாக்கி விடும். நீண்ட ஆயுள், சந்தானம் விருத்தி ஏற்படும்.

71. தென்மேற்கும் (கன்னி) மேற்கும், உயரமாகவும் இருந்தால் பல வழிகளில் நன்மைகள் உண்டாகும்.

72. வாயுமூலையும், மேற்கும் உயர்ந்து, அக்னி மூலையும் கிழக்கும் தாழ்ந்து இருந்தாலும், பகைவரையும் துயரத்தையும் ஏற்படுத்தும். தீ அபாயங்களை ஏற்படுத்தும்.

73. வடக்கும், வடமேற்கும் உயர்ந்தும், தெற்கும், அக்னி மூலையும், பள்ளமாகவும் இருந்தால் நோய்கள் வாட்டும். நீண்ட கால வியாதிகள் தோன்றும்.

 
























ஜோதிடம் என்றால் என்ன ? ஜோதிடம் என்பது வானமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் கூறும் செய்திகள் என்று பொருள். அவைகள் வருங்காலத்தைப் பற்றிக் கூறுகின்றன. நமக்குத் தேவையான செய்திகளையெல்லாம் கூறுகின்றன. அவைகள் கூறும் செய்திகளை தெரிந்துகொள்ள நமக்கு நட்சத்திரங்களின் மொழி தெரிய வேண்டும். அந்த நட்சத்திர மொழி தான் ஜோதிடம்.

சரி ! நட்சத்திரங்கள் எப்படிக் கூறுகின்றன, அவை 9 கிரகங்கள் மூலமாகக் கூறுகின்றன. அந்த 9 கிரகங்கள்.


1. சூரியன்
2. சந்திரன்
3. செவ்வாய்
4. புதன்
5. குரு
6. சுக்கிரன்
7. சனி
8. ராகு
9. கேது

இந்த 9 கிரகங்களையும் பார்க்கமுடியுமா ? முடியாது. ஏழு கிரகங்களைத்தான் பார்க்க முடியும். ராகு கேதுக்களைப் பார்க்க முடியாது. அவைகள் நிழல் கிரகங்கள் என்று பெயர். முதல் எழு கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளை நாம் நமது கண்களால் 'டெலஸ்கோப்' உதவியுடன்தான் பார்க்க இயலும்.

அடுத்த கேள்வி, இந்த கிரகங்களுக்கும், மனித உயிர்களுக்கும் என்ன தொடர்பு ? தொடர்பு நிறைய இருக்கிறது. சூரிய ஒளி இல்லை என்றால் மனித உயிர்கள், தாவரங்கள் எதுவும் வாழ முடியாது. சூரிய நமஸ்காரம் ஏன் செய்கிறோம் ? சூரிய ஒளி நம் கண்களில் பட்டால் அது நமது கண்களுக்கு நல்லது என்பதால் தானே ! ஆக சூரிய ஒளி மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவை என்பது விளங்குகின்றது அல்லவா ? அதே போன்று மனநிலை சரியில்லாதவர்களைப் பாருங்கள்! அமாவாசை, பௌர்ணமி காலங்களில் அவர்கள் மனநிலை மிகுந்த பாதிப்புக்குள்ளாவதைப் பார்க்கலாம், அவர்களின் ஆர்ப்பாட்டங்களும் அதிகமாகின்றன. இதே போன்று மற்ற கிரகங்களும் மனித வாழ்க்கையோடு உறவு கொண்டு பல மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. இப்போது நவகிரகங்கள் என அழைக்கப்படும் 9 கிரகங்களும் மனித வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ளன எனத் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா?

சரி ! மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள்? ஆகாயத்திலே சூரியனைச் சுற்றி பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன். சூரியனை மையமாக வைத்து நீளவட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நீளவட்டமான பாதைதான் ராசி மண்டலம் என அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை நம் முன்னோர் 27 பாகங்காளகப் பிரித்து உள்ளனர். இந்த 27 பாகங்களுக்கும் பெயர்கள் உண்டு. அந்தப் பெயரால்தான் அந்த நட்சத்திரக் கூட்டம் அழைக்கப்படுகின்றது.


1. அஸ்வினி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோகினி
5. மிருகசீரிஷம்
6. திருவாதரை
7. புனர்ப்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. ஹஸ்தம்
14. சித்திரை
15. ஸ்வாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி

நாம் என்ன தெரிந்து கொண்டோம் ? ஆகாயமண்டலத்தில் நீள வட்ட வடிவமான பாதையில் 27 நட்சத்திரக்கூட்டங்கள் இருக்கின்றன. நாம் இனிமேல் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன எனக் கூறுவோம். இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வேகத்தில் மாறுவிடுகின்றன, சந்திரனுக்கு இந்த ஆகாய மண்டலத்தைச்சுற்றி வர ஒரு மாதம் ஆகிறது. சூரியனுக்கு ஒரு வருடம், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டுகள், ராகு கேதுவிற்கு 18 ஆண்டுகள், சனிக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன.

இந்த ஒன்பது கிரகங்களில் சந்திரன்தான் மிக வேகமாகச் சுற்றுகிறார். சனி மெதுவாகத்தான் சுற்றுகிறார். அதனால்தான் அவர் பெயர் "மந்தன்" எனக்கூறப்படுவதுண்டு. சனிக்கு ஒருகால் கிடையாது. அவர் நொண்டி ஆகவேதான் அவர் மெதுவாக வலம் வருகிறார். சனி நொண்டியானதற்கு ஒரு கதை உண்டு. இராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினான். அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றே. ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்துவிடுகிறான். ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்கும். அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாது. இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டான்.

தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனர். ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே! அப்புறம் உலகத்தில் அநீதிதான் இருக்கும், என்ன செய்வது என்றறியாது கலங்கினர். அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, "உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்க முடியும், ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டும் கொண்டார்.

சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்குகிணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டார். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகும். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டார், மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தன. இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தான், சனி 12ம் இடத்தில் காணப்பட்டார். தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டான். உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டான். இது தான் சனிபகவான் முடமான கதை. ஆகவேதான் அவர் நொண்டி நொண்டி மெதுவாக 30 ஆண்டுகளில் வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருகிறார்.

இதுவரை நீங்கள் 27 நட்சத்திரங்கள் யாவை, நவக்கிரகங்கள் யாவை, அவை வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வரும் காலம் பற்றி தெரிந்துகொண்டீர்கள். நாம் முதலில் ஜாதகத்தை எப்படிக் கணிப்பது என சொல்லிக் கொடுக்க இருக்கிறோம். அதற்குப்பின் எப்படி பலன் சொல்வது என்பது விளக்குவோம். ஜாதகக் கணிதம் செய்ய ஓரளவிற்குக் கணிதம் தெரிய வேண்டும். கணிதம் என்றால் எதோ கல்லூரியிலே பயிலுகிற கணிதமோ என அஞ்ச வேண்டாம். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்ற அடிப்படைக் கணிதம் தெரிந்தால் போதும்.

நாம் முன்பு கூறியது போல் மிகக் குறைந்த கல்வியறிவு உள்ளவர்களுக்கும் புரிய வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு மிக எளிய முறையில் எழுதி இருக்கிறோம். அத்தோடு நமது புராணங்களில் வருகின்ற உபகதைகளையும் சேர்த்துக் கொண்டால் புரிந்து கொள்வது மிக எளிதாக இருக்கும்.

நாம் தற்போது காலத்தை எப்படிக் கணக்கிடுகின்றோம் ? இன்று 1/23/2002, நாம் ஜனவரி மாதம் 23ம் நாள், 2002 ஆண்டு எனக் கூறுகின்றோம். இது நமக்கு ஆங்கிலேயர் கற்றுக் கொடுத்த முறை. நமது பண்டைய முறை அப்படி அல்ல. நாம் கணிதம் செய்ய வேண்டியது எல்லாம் நமது பண்டைய முறைபடித்தான். நமது கலாச்சாரப்படி மொத்தம் 4 யுகங்கள் உண்டு.

1. கிருதயுகம்.
2. திரேதாயுகம்
3. துவாபரயுகம்
4. கலியுகம்.

இந்த நான்கு யுகங்களைக் கொண்டது ஒரு சதுர்யுகம். ஒரு சதுர்யுகம் என்பது 43, 20, 000 ஆண்டுகள் கொண்டதாகும். நாம் இப்பொது 3 யுகங்கள் முடிந்து கலியுகத்தில் இருக்கின்றோம். கலியுகத்தில் தற்போது 5094 ஆண்டுகள் முடிந்துவிட்டன.

ஒரு ஆண்டு என்பது 365 1/4 நாட்கள் கொண்டவை என்பது எல்லோருக்கும் தெரியும். அதாவது சூரியன் இந்த வான மண்டலத்தை ஒருமுறை சுற்றி வரும் காலம் ஆகும். சூரியன் ஒருமுறை வானமண்டலத்தைச் சுற்றிவிட்டால் ஒர் ஆண்டு முடிந்து விடுகிறது. இந்த வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது எனக் கூறுகின்றோம். அதாவது சூரிய பகவான் வானமண்டலத்தை சுற்றி முடித்து அடுத்த சுற்று அன்று ஆரம்பம் செய்கின்றார். வானவெளி மண்டலத்தின் ஆரம்ப இடம் எது ? இது இருந்தால்தானே அங்கிருந்து ஆரம்பம் செய்ய முடியும். அது தெரிந்து கொள்ள நாம் வானமண்டலத்தின் படத்தைப் போடுவோம். வானமண்டலம் நீள வட்ட வடிவமான பாதையாக் இருக்கிறது என மேலே கூறியுள்ளோம். நாம் நீளவட்டம்மாகப் போடாமல் சதுரமாகவே போடுவோம். அதுதான் எளிது. வானமண்டலத்தைச் சதுரமாகப் போட்டு அதை 12 பகுதிகளாக அதுவும் சம பகுதியாக போடுவோம். அது கீழே காட்டியுள்ளபடி இருக்கும்.




நாம் மேலே வானமண்டலத்தின் படத்தைப் போட்டு 12 பகுதியாகப் போட்டு இருக்கிறோம். இந்த வானமண்டலத்தின் ஆரம்ப இடம் ஒன்று என்று இலக்கம்மிட்ட கட்டம்தான். அதன் ஆரம்பப் பகுதியை 2 கோடுகள் போட்டுக் காட்டியுள்ளோம். இந்த இடத்திலிருந்துதான் சூரியன் சுற்ற ஆரம்பிக்கின்றது. இந்த ஏப்ர 14ம் தேதி ஆரம்பித்தால் அடுத்த ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி முடிய சுற்றும். இந்தம்காலம் தான் ஒராண்டாகும். இந்த ஆண்டுக்கும் பெயர் வைத்து இருக்கிறோம். வருகின்ற ஆண்டின் பெயர் "விஷ¤" ஆண்டாகும். இது தமிழ் ஆண்டு. இதே போன்று ஒவ்வொரு ஆண்டிற்கும் பெயர் உண்டு. 60 ஆண்டுகள் முடிந்த பின்பு திரும்ப முதலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.


1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிரமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கீரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷ¤
16. சித்ரபானு
17.சுபாணு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வகித்து
22.சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. ஜய
29. மன்மத்
30. துர்முகி
31. ஹேவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36. சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தாத்திரி
54. ரௌத்திரி.
55. துன்பதி
56. துந்துபி
57. ருத்ரோகாரி
58. ரக்தாஷி
59. குரோதன
60. அக்ஷய





8'-ம் எண்


எண் கணிதப்படி '8' என்ற எண், பொதுவாக ராசியில்லாத எண்ணாக கருதப்படுகிறது. ஒரு சிலர் 8-ம் நம்பர் வீடு நல்லதல்ல என்றும், கூட்டு எண் 8 வந்தாலும், அது தரித்திரம் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். கூட்டு எண் 8-ஆக இருக்கும் பட்சத்தில், பெயரைக் கூட மாற்றம் செய்கிறார்கள். ஆனால் பொதுவாக ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது

வாழ்க்கையில் எட்டு வைத்து முன்னேறும் போது தான், அனைத்து காரியங்களும் நடைபெறுகிறது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஓட்டுனர் உரிமம் வாங்க வேண்டுமென்றால், நாம் '8' போட்டு (வாகனத்தை '8' எண் வடிவ பாதையில் ஓட்டிக் காண்பித்து) தான் ஆக வேண்டும். 8-ம் எண், சனியின் ஆதிக்கம் பெற்றது. சனி என்றாலே பிரச்சினைதான் என்ற பொதுவான கருத்தும், இந்த எண்ணை பலரும் தவிர்ப்பதற்கு காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு தனிச்சிறப்பு இருப்பது போல, 8-ம் எண்ணிற்கும் தனிச்சிறப்பு இருக்கிறது. 'அஷ்டோத்திரம்' என்று சொல்லக்கூடிய மந்திரம், அஷ்ட லட்சுமிகள், அஷ்ட ஐஸ்வர்யங்கள், அஷ்டமா சித்திகள் போன்றவை எட்டாம் எண்ணின் படி அமைந்துள்ளதைக் காணலாம்.

அதாவது 'அஷ்ட' என்றால் 'எட்டு' என பொருள்படும். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட 8-ம் எண்ணும் வலிமையானது தான். நவக்கிரகங்களிலேயே சனி பகவானுக்கு மட்டும்தான், 'ஈஸ்வர' பட்டம் கிடைத்திருக்கிறது. இதனால் அவரை 'சனீஸ்வரன்' என்று போற்றுகிறோம். அப்படிப்பட்ட சனிக்குரிய எட்டாம் எண்ணை, எண் கணிதப்படி பார்ப்பது எப்படி என்று பார்ப்போம். ஒருவரின் பிறந்த தேதியின்படி, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், 8-ம் எண் ஆதிக்கம் கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள். பிறந்த தேதியின் கூட்டு எண் எட்டாக வந்தால், அவர்கள் சனியின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளவர்களே. உதாரணமாக ஒருவர் பிறந்த தேதி '25.2.1988' என்று வைத்துக்கொள்வோம்

அதன் மொத்த எண்களையும் கூட்டி (2+5+2+1+9+8+8 = 35= 3+5= 8), 8 என்ற எண் வந்தாலும், அவர் சனியின் 8-ம் எண் ஆதிக்கத்திற்கு உரியவர்தான். 8-ம் எண்ணுக்குரிய குண நலன்கள் நேர்மையுடன் இருப்பவர்கள் பலரும், 8-ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள் என்று சொல்லலாம். யார் தவறு செய்தாலும் அவர்களை தண்டிக்கும் அதிகாரம் படைத்தவர், சனி பகவான். அதனால் அவரை 'நீதிமான்' என்றும் கூறுவர். அதே போல் 8-ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களும், நீதியின் பக்கம் நிற்பவர்களாக இருப்பர். மேலும் இந்த எண்ணில் பிறந்தவர்கள், கடுமையான உழைப்பாளிகளாகவும், கீழ் நிலையில்இருந்து மேல் நிலைக்கு உயர்ந்தவர்களாக வும் இருப்பார்கள்.

பார்ப்பதற்கு சுறுசுறுப்பு இல்லாதவர்கள் போல் தென்பட்டாலும், அடிப்படையில் இவர்கள் உழைப்புக்கு அஞ்சாதவர்கள். இரவு பகல் பாராது பணியாற்றுபவர்கள். எந்த சூழ்நிலையிலும் இவர்கள் பொறுமையைக் கைவிடாமல் நிதானமுடன் செயல்படுபவர்கள். தன்னை நம்பி வந்தவர்களை விட்டுக் கொடுக்காதவர்கள். ராசிப்படி பார்த்தாலும் சனியின் ஆதிக்கம் பெற்ற மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்களிடமும் இந்த பண்பைக் காண முடியும். வள்ளுவரின் 'மெய் வருத்தக் கூலிதரும்' என்ற கூற்றுப்படி, உழைப்பிற்கு அடுத்தபடியாக தெய்வத்தை நம்புபவர்கள்.

கடின உழைப்பால் முன்னேறி இருப்பதால் அவர்களது உயர்வு, என்றும் தாழ்ந்த நிலைக்கு திரும்பாதபடி இருக்கும். மற்றவர்களின் குணாதிசயங்களை கூர்ந்து கவனிப்பதிலும், அவர்களை எடை போடுவதிலும் இவர்கள் திறமைசாலிகள். அநியாயம் எங்கு நடந்தாலும், அவற்றை தட்டிக்கேட்கும் பண்பு கொண்டவர்கள். இவர்கள், தங்களின் வாழ்வில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் வேதனை கொள்ள மாட்டார்கள்

அதனை எதிர்த்து போராடும் மன தைரியம் எப்போதும் உண்டு. மக்கள் செல்வாக்கினை எளிதில் பெறும் சக்தி படைத்தவர்கள். ஒரு கட்சிக்கோ அல்லது ஒரு துறைக்கோ தலைமை வகிக்கும் அளவிற்கு அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்வதில் கெட்டிக்காரர்கள்

இவர்கள் பொறுமையாக பேசுபவர்கள் என்றாலும், அந்தப் பேச்சில் உறுதித் தன்மை இருக்கும். 8-ம் எண் ஆதிக்கத்தின் கீழ் உள்ளவர்களுக்கு கை, கால், மூட்டுகளின் இணைப்பில் வலி ஏற்படும். வாத நோய் கொண்டவர்களாக இருப்பார்கள். நீதிபதி, வக்கீல், ராணுவ அதிகாரி, ரெயில்வே அதிகாரி, இரும்பு உருக்குதல், பத்திரிகையாளர், பதிப்பாளர், இயந்திரங்கள் உற்பத்தி செய்தல், இயந்திரங்கள் பழுது பார்க்கும் பணிகளான என்ஜினீயர், மெக்கானிக், பொது நலப் பிரிவான அரசியல் போன்றவை, இவர்களுக்கு ஏற்ற பணிகளாக இருக்கும். இவ்வளவு சிறப்பு மிக்க 8-ம் எண்ணை நாம் ஒதுக்குவது நல்லதல்ல.

ஜோதிடச்சுடர் .ஞானரதம்,

சென்னை.

திருமணத் தடை செய்யும் தோஷங்களும்... அதற்கான பரிகாரங்களும்... 

சிலருக்கு பல்வேறு காரணங்களால் திருமணம் தாமதமாகிறது. தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது. மேலும் படிக்க திருமண விஷயத்தில் ஒருவரின் சுய ஜாதக கிரக அமைப்புக்கு முக்கிய பங்கு உண்டு.சில வகையான தோஷங்கள், சில கிரக சேர்க்கைகள், சில தசா, புத்திகள், கோட்ச்சார நிலை போன்ற பல்வேறு காரணங்களால் திருமணம் தாமதமாகிறது


இது போன்ற காரணங்களால் திருமணம் தாமதமானால் என்ன செய்வது? அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? என்பது பலருக்கும் வரும் சந்தேகம். தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது. திருமணத் தடை செய்யும் தோஷங்களையும் அதற்கான பரிகாரங்களையும் இந்த கட்டுரையில் காணலாம்.

செவ்வாய் தோஷம் ஜாதக தோஷங்களில் மிக பிரபலமாக அனைவருக்கும் தெரிந்த தோஷம் "செவ்வாய் தோஷம்'' ஜாதக கட்டத்தில் லக்னம், ராசி மற்றும் சுக்கிரனுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். இதில் சுக்கிரனுக்கு செவ்வாய் தோஷம் பார்ப்பது நடைமுறையில் சரிவர வில்லை . சுக்கிரனும் செவ்வாயும் ஒன்றை ஒன்று ஈர்க்கும் கிரகம் என்பதால் தோஷம் ஏற்பட வாய்ப்பில்லை. பாவக ரீதியாக செவ்வாய் நின்ற இடத்திற்கு ஏற்ப தோஷத்தினால் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.பல்வேறு விதி விலக்குகளால் சிலருக்கு தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும் கூட 2,7,8-ம்மிடத்தில் உள்ள செவ்வாய்க்கு 2,7,8-ல் செவ்வாய் உள்ள ஜாதகத்தையும் 4,12-ம் இடத்தில் உள்ள செவ்வாய்க்கு 4,12ல் செவ்வாய் உள்ள தோஷத்தையும் சேர்க்க வேண்டும்.

பொதுவாக செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடையை சந்திப்பவர்கள் செவ்வாய் கிழமை ராகு வேளையில் சுப்ரமணியரை சிவப்பு அரளி சாற்றி வழிபட்டால் திருமணம் நல்ல முறையில் நடக்கும். ராகு - கேது தோஷம் செவ்வாய் தோஷத்திற்கு அடுத்தபடியாக அனைவரும் அறிந்தது சர்ப்ப தோஷம். நிழல் கிரகம், சர்ப்பங்கள் எனப்படும் ராகு கேதுக்கள் 1, 2, 5, 7, 8, 12 ஆகிய இடங்களில் அமர்ந்தால் திருமணத் தடையை சிலருக்கு உருவாக்குகிறது

1,7-2,8 மிட சர்ப்ப தோஷத்தின் வீரியம் அதிகம். எனவே இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். 5-ல் சர்ப்ப கிரகம் உள்ள ஜாதகத்திற்கு 5, 11-ல் சர்ப்பங்கள் இல்லாத ஜாதகத்தை இணைப்பது சிறப்பு. சர்ப்ப தோஷத்தால் திருமணத் தடையை சந்திப்பவர்கள் ராகு வேளையில் துர்க்கை அல்லது காளியை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும். கால சர்ப்ப தோஷம் லக்னம் உள்பட அனைத்து கிரகங்களும் ராகு-கேதுவின் பிடியில் அடைபட்ட நிலையில் இருப்பது காலசர்ப்ப தோஷம்.இத்தகைய அமைப்பை பெற்ற ஜாதகருக்கு 33 வயது வரை வாழ்க்கை போராட்ட களமாக இருக்கும். திருமணம், குழந்தை, தொழில் என எல்லா பாக்கியமும் காலம் தாழ்த்தியே ஏற்படும்.

காலதாமதமாக திருமணம் செய்வதே நல்ல தீர்வு. தசாபுத்திகள் சாதகமாக இருந்தால் திருமணம் தடைபடாது. பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். திருமணம் தடைபடுபவர்கள் நாகர்கோவில் ஸ்ரீ நாகராஜா கோவில் சென்று வருவது சிறப்பு. கிரகண தோஷம் பூமியில் கிரகணம் சம்பவிக்கும் நாளுக்கு முன், பின் 7 நாட்கள் பிறக்கும் குழந்தைகளின் வினைப் பதிவு மிகவும் கடுமையாக உள்ளது. ராகு-கேது, சூரியன்-சந்திரனுடன் செவ்வாய், சனி சம்பந்தம் பெறுபவர்கள் அசுப பலனையும், குரு மற்றும் லக்ன சுபரின் சாரம் பெற்றவர்கள் எதையும் வென்று வெற்றி வாகை சூடுபவர்களாக இருக்கிறார்கள். லக்னம் 7-ம் இடம் சுப வலிமை பெற்று தசா புத்திகள் சாதகமாக இருந்தால் திருமணம் தடைபடாது. 1,7-2,8-ம் இடத்திற்கு கிரகண தோஷ பாதிப்பு இருந்து திருமணம் தடைபட்டால் ராம நாமம் பாராயணம் செய்ய வேண்டும் அல்லது எழுத வேண்டும். சனி தோஷம் கர்மகாரகன் மற்றும் ஆயுட்காரகனாகிய சனி பகவான் மண வாழ்வில் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் தரக்கூடிய 1, 2, 5, 7, 8 மற்றும் 12-ல் அமர்ந்தால் திருமணம் காலதா மதமாக நடைபெறும். இத்துடன் அசுப கிரகங்களான சூரியன், செவ்வாய், ராகு-கேது இணைந்தால் தோஷம் இரட்டிப்பாகும்.

சனிக்கு திரிகோணாபதிகள் மற்றும் குரு தொடர்பு இருப்பின் தோஷம் குறையும்.1, 2, 7, 8, 12-ல் உள்ள சனிக்கு இதே அமைப்புள்ள ஜாத கத்தையும், 5-ல் உள்ள சனிக்கு 5-ல் சனியில்லாத ஜாதகத்தையும் இணைத்தல் சிறப்பு. மேலும் தொடர்ந்து சிவ வழிபாடு செய்து வந்தால் திருமணத் தடை அகன்று மங்கலம் உண்டாகும். சூரிய தோஷம் ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். 2-ல் அமர்ந்த சூரியன், குடும்பம் அமைவதை காலதாமதப் படுத்துகிறது 7-ல் அமர்ந்த சூரியன் களத்தரத்திற்கு தோஷத்தை ஏற்படுத்துகிறது. 8-ல் அமர்ந்த சூரியன் திருமணத் தடையை ஏற்படுத்தும். மகர, கும்ப லக்னத்தாருக்கு 7, 8-ல் அமர்ந்த சூரியன் விதிவிலக்கு பெறும்.

ஞாயிற்று கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரையான சூரிய ஓரையில் 1 கிலோ கோதுமை தானம் தருவதுடன் 6 வாரம் சிவ வழிபாடு செய்ய வேண்டும். சுக்கிர தோஷம் களத்திரகாரகரான சுக்ரன் 7-ல் அமர்வது காரகோ பாவக நாஸ்த்தி. சிலருக்கு திருமணத்தை தாமதப்படுத்துகிறது. இந்த தோஷம் பெண்களை விட ஆண்களை மிகவும் பாதிக்கிறது. வெள்ளிக்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவ வழிபாடு செய்ய வேண்டும். களத்திர தோஷம் ஜனன கால ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவ களங்களான 1,27,8 ஆகிய பாவகங்களில் இயற்கை பாவ கிரகங்கள் அமர்வது அல்லது 7-ம் பாவகாதிபதி நீசம் அஸ்தமனம் அடைவது போன்றவை களத்திர தோஷத்தை ஏற்படுத்தும்.


இந்த தோஷம் அமையப் பெற்ற ஜாதகருக்கு திருப்தியற்ற மணவாழ்க்கை , காலதாமத திருமணம் , களத்தரத்தின் மூலம் பெருமளவு ஆதாயமின்மை, தம்பதியரிடம் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்படும். இவர்கள் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9 மண வரை சுக்ர ஓரையில் அர்த்தநாதீஸ்வரரை வழிபட வேண்டும். புத்திர தோஷம் ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ஆண் ஜாதகமாயின் லக்னத்திற்கு 5ம் இடத்தை கொண்டும் பெண் ஜாதகமாயின் லக்னத்திற்கு 5, 9-ம் இடத்தை கொண்டும் குருவின் வலிமையை கொண்டும் புத்திர பாக்கியத்தை தீர்மானிக்கலாம்.

 5-ம் அதிபதி அல்லது 5-ம்மிடஅதிபதி நீசம், வக்ரம், அஸ்தங்கம், பகை வீட்டில் தஞ்சம் 6, 8.12 ல் மறைவு, 5-ல் நின்ற குரு ஆகியவை புத்திர தோஷத்தை ஏற்படுத்தும். புத்திர தோஷம் உள்ள ஜாதகத்திற்கு புத்திர தோஷமற்ற ஜாதகத்தை இணைப்பதே. 5-ம்மிட வலிமை குறைவால் திருமணத் தடையை சந்திப்பவர்கள் பஞ்சமி திதியில் மீனாட்சி அம்மனை வழிபட வேண்டும். புனர் பூ தோஷம் சனி, சந்திரன் சம்பந்தத்தால் உருவாகும் கடுமையான கருணையற்ற தோஷம். தாலி கட்டும் நேரத்தில் கூட திருமணத்தை நிறுத்தும் வல்லமை படைத்த தோஷம். திங்கள் தோறும் அம்பிகை வழிபாடு மற்றும் பச்சரிசி தானம் செய்ய வேண்டும். மாங்கல்ய தோஷம் இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும். 8-ம் பாவகம் மாங்கல்ய ஸ்தானமாகும்

இதுவே ஆயுஸ் ஸ்தானம் அதாவது லக்னத்துக்கு 8-ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இது திருமணத் தடையை மிகைப்படுத்தும் தோஷ அமைப்பாகும். 8-ம் இடத்தில் நீச, அஸ்தங்கம் பெற்ற கிரகம் அமர்வது மாங்கல்ய தோஷத்தைக் கொடுக்கும். இதில் 8-ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தாலும் 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி. வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் சுக்கிர ஓரையில் வயதான சுமங்கலிப் பெண்களிடம் மங்கலப் பொருட்கள் தந்து ஆசி பெற வேண்டும். கிரக இணைவுகள் தரும் தோஷம் சிறப்பான மணவாழ்வை தடை செய்வதில் கிரக இணைவுகள் பெரும் பங்கு வகிக்கிறது. சில குறிப்பிட்ட கிரக இணைவுகள் மண வாழ்வையே முறிக்கும் வல்லமை படைத்தவைகள்.

 6,7,8 ஆகிய பாவக அதி பதிகள் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் பெறுவது. சூரியனுடன் சுக்கிரன், செவ்வாய் இணைவு சந்திரன்-கேது, சுக்கிரன்-கேது, செவ்வாய்-கேது இணைவு பெறுதல். இதே போன்ற கிரக இணைவு பெற்று திருமணம் தடைபடுபவர்கள் அஷ்டமி திதியில் பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். திதி சூன்ய பாதிப்பு அமாவாசை, பவுர்ணமி தவிர்த்து ஏனைய திதிகளில் பிறந்தவர்களுக்கு சூரிய ஒளிக்கதிர் ஜனன ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவகங்களுக்கு கிடைக்காமல் இருந்தால் திதி சூன்ய பாதிப்பு ஏற்படுகிறது. திதி சூன்ய பாதிப்பு இருப்பவர்கள் திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் தோஷம் விலகும். பிரம்மஹத்தி தோஷம் ஜனன ஜாதகத்தில் குருவும், சனியும் அஷ்டம, பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெற்று பிரம்மஹத்தி தோஷத்தை உருவாக்கும். இதனால் வறுமை, நிம்மதியற்ற வாழ்க்கை , திருமணத் தடை , குழந்தை பேரின்மை போன்ற பல்வேறு பிரச்சினை உருவாகும்

விஷ கன்னிகா தோஷம் ஜனன கால ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 7,8 ஆகிய பாவகங்கள் முழுவதும் கெட்டு பாவக அதிபதிகளும் , சுக்கிரனும் வலிமையற்று இருந்தால் அந்த ஜாதகம் விஷ கன்னிகா தோஷமுடையதாகும். இந்த தோஷமுடைய ஜாதகருக்கு திருமணம் நடைபெறாது. திருமணம் நடந்தாலும் வெகு நாட்களுக்கு நிலைக்காது. இத்தகைய தோஷம் ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.

இவர்கள் திருமணம் செய்யாமல் இருப்பதே சிறப்பு. 2-வது திருமணமோ வாழ்க்கை இழந்த நபரை திருமணம் செய்யும் போதோ தோஷத்தின் வீரியம் குறையும். எப்படிப்பட்ட திருமண தோஷமாக இருந்தாலும் எந்த விளைவாக இருந்தாலும் தசாபுத்தி கோட்ச்சார கிரகங்கள் தொடர் பெறும் காலங்களில் மட்டுமே சுப-அசுப விளைவுகள் ஏற்படும். ராகு-கேது, செவ்வாய் மட்டுமே திருமணத்தை தடை செய்யும் என்ற பொதுவான மூட நம்பிக்கையை கை கழுவி தடைக்கான காரணத்தை கண்டறிந்து உரிய பரிகாரம் செய்து பயன்பெற வாழ்த்துக்கள்.


ஜூலை மாதத்தில் பிறந்தவர்களுக்கென சில தனிப்பட்ட குணங்கள் உள்ளது, இவை உங்களுக்கு மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். அதேசமயம் இவர்களின் சில குணங்கள் வேடிக்கையானதாகவும் இருக்கும். வாழ்க்கை மீதான அவர்களின் அணுகுமுறை எப்பொழுதும் அன்பை அடிப்படையாக கொண்டிருக்கும்

மற்றவர்களை எப்படி நடத்த வேண்டும், எப்படி மதிப்பிட வேண்டும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள். மனிதனாக பிறந்த அனைவரிடமும் நல்ல குணங்களும், கெட்ட குணங்களும் கலந்துதான் இருக்கும். இந்த பதிவில் ஜூலை மாதத்தில் பிறந்தவர்களின் நல்ல குணங்கள் மற்றும் கெட்ட குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்புக்கு ஒருபோதும் அஞ்சமாட்டார்கள். கடின உழைப்பாளியாக இருந்தாலும் திட்டமிடுவதில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்

செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் திட்டமிட்டே இவர்கள் செய்வார்கள். இவர்கள் எதையும் சொன்ன நேரத்தில் செய்து முடிக்க கூடியவர்கள். அதனால் எப்பொழுதும் பாராட்டை பெறுபவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாய் இவர்கள் இருப்பார்கள். ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் அதிகப்படியான உணர்ச்சிகரமான அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறார்கள், இதை நாம் மனநிலை மாற்றங்கள் என்றும் அழைக்கலாம். இவர்கள் மிகவும் தனிப்பட்ட நபராக இருப்பவர்கள், நெருக்கமானவர்களுக்கு கூட தங்கள் மனதில் இருப்பதை இவர்கள் வெளிப்படையாக கூறமாட்டார்கள்

இதனால் மற்றவர்களுக்கு இவர்களிடம் நெருங்குவதோ அல்லது இவர்களை புரிந்து கொள்வதோ மிகவும் கடினமானதாக இருக்கும். இவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பதால் தான் செய்யும் அனைத்து வேலையும் நூறு சதவீதம் சரியானதாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். தான் செய்யும் அனைத்துமே சிறந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பும் இவர்களின் குணம் சிலசமயம் ஆச்சரியத்தையும், சிலசமயம் எரிச்சலையும் ஏற்படுத்தும். அனைத்தையும் திட்டமிட்டு செய்யக்கூடிய இவர்கள் தன்னுடைய எதிர்காலத்தை பற்றியும், தன்னுடைய குடும்பத்தின் எதிர்காலம் பற்றியும் எப்போதும் சிந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள்

அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் ரிஸ்க் எடுக்க தயங்கினாலும் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் எச்சரிக்கையாக எடுத்து வைப்பார்கள். ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் கடக ராசிக்காரர்களாக இருப்பார்கள். அதிக உணர்ச்சிவசப்படக்கூடிய இவர்கள் குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். சிலசமயம் இவர்களின் அதீத அக்கறை தவறானதாக தெரிந்தாலும் அது இவர்களின் நல்ல குணங்களில் ஒன்றுதான்

இவர்களுடன் இருக்கும்போது இவர்களின் குடும்பத்தினர் மிகவும் பாதுகாப்பாக உணருவார்கள் ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் அன்பானவர்களாகவும், அமைதியானவர்களாகவும் இருப்பார்கள். மேலும் அனைவரையும் புரிந்து கொள்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் உணவர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் இவர்களின் குணம் இவர்களை அதிக இரக்கமுள்ளவர்களாக மாற்றும். நெருக்கமானவர்களின் உணர்வுகள் மட்டுமின்றி புதிய நபர்களின் உணர்வுகளை கூட இவர்களால் புரிந்து கொள்ள இயலும்.

ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் தனக்கானவர்கள் என்று வரும்போது அதிக உணர்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அனைத்தையுமே இவர்கள் கொஞ்சம் தீவிரமாகவும், தனிப்பட்டரீதியாகவும் எடுத்துக்கொள்வார்கள். இதனால் இவர்களின் இதயம் எளிதில் நொறுங்கிவிடக்கூடும். மேலும் இவர்கள் அதிலிருந்து மீண்டு வர நீண்ட காலம் எடுத்துக்கொள்வார்கள். இவர்கள் காயப்படுத்தியவர்களை மன்னித்தாலும் அதனை ஆயுள் முழுவதும் மறக்கமாட்டார்கள்.

ஜாதக கட்டம் - முதல் கட்டம்:  


இது முதலாம் வீடு. லக்னம் என்று அழைக்கப்படும்.  அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல லக்னத்தை வைத்து ஒரு  நபரின் அனைத்து செயல்பாடுகளையும் நாம் அறிய முடியும். லக்னம் உயிர் ஸ்தானம் என்று அழைக்கபடும்.  இதன் மூலம் ஒருவரின் தனிப்பட்ட அங்க அடையாளங்கள் அதாவது உடலின் நிறம், உலடலின் அமைப்பு, மற்றும் ஆளுமை திறன், செல்வாக்கு, ஆயுள், பலம், பலவீனம், திறமைகள், மரியாதை, அறிவு, வலிமை மற்றும் அந்த நபரின் குணாதிசயங்களைப் பற்றி நாம் அறிய முடியும். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு,  இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு  அவற்றின் நிலை, தன்மை  மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள்  ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய பலனைக் கூறலாம்

ஜாதக கட்டம்இரண்டாம் கட்டம்:

இது இரண்டாம் வீடு ஆகும். இந்த இடத்தை தனஸ்தானம் என்றும் வாக்கு ஸ்தானம் என்றும், குடும்ப ஸ்தானம் என்றும் கூறுவார்கள். இந்த பெயர்களை வைத்தே இந்த இரண்டாம் கட்டத்தின் பலனை நாம் அறியலாம். அதாவது இதன் வாயிலாக ஒரு ஜாதகரின் பணம், பணம் வரும் வழி, குடும்பம், பேச்சு, வாக்கு வன்மை, ஆகியவற்றைப் பற்றி நாம் அறிய இயலும். மேலும் இந்த வீட்டின் மூலம் கல்வி, வாய்,  உண்ணும் உணவு, கோபம்,வலது கண் ஆகியவற்றைப் பற்றி அறியலாம். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு,  இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை,  தன்மை   மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள்  ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய  பலனைக் கூறலாம்

ஜாதக கட்டம்மூன்றாம் கட்டம்  :

இது மூன்றாம் வீடு ஆகும், மூன்றாம் கட்டம் என்பது  தைரிய வீரிய ஸ்தானம் என்றும், சகோதர ஸ்தானம் என்றும் கூறப்படும். இந்த கட்டத்தின் மூலம் உங்கள் இளைய உடன்பிறப்பு, உங்கள் வேலையாட்கள், வெற்றி, இசை, தைரியம், பூமி, கழுத்து, பாதம், சாமர்த்தியம், போர், அண்டை வீட்டார், பயணம், தகவல் தொடர்பு, இடமாற்றம், வீடு மாற்றம் போன்றவற்றை பற்றி அறிய இயலும். . இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு,  இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை,  தன்மை   மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள்  ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய பலனைக் கூறலாம்

ஜாதக கட்டம்நான்காம் கட்டம்  :

இது நான்காம் வீடு ஆகும். இந்த வீடு மாத்ரு ஸ்தானம் என்றும் சுக போக ஸ்தானம் என்றும் கூறப்படும். நான்காம் கட்டம் தாயாரை குறிக்கும். கல்வி, வீடு, வாகனம், சொத்துக்கள், பொது வாழ்க்கை போன்றவற்றை குறிக்கும். மேலும் இந்த கட்டம். வித்தை, தொழில் திறமை, வாகனம், வீடு, நிலம்,வியாபாரம், பசு, பால், மருந்து வகைகள், புதையல், வேடிக்கை, நீர், விரதங்கள் மற்றும் கனவு போன்றவற்றைக் குறிக்கும். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு,  இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை,  தன்மை   மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய  பலனைக் கூறலாம்

ஜாதக  கட்டம்ஐந்தாம் கட்டம் :

இது ஐந்தாம் வீடு. ஐந்தாம் கட்டமானது புத்திர ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கப்படும். குழந்தை பாக்கியம் பற்றியும்  குழந்தை நல்லவரா? கெட்டவரா?  என்பதைப் பற்றியும். முன் ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியங்களை பற்றியும் குறிக்கும். காதல் திருமணமா? என்பதை கூறிவிடும். கலைத்துறை மற்றும் ஆன்மீக நாட்டம் முதலியவற்றை குறிப்பது. பொழுதுபோக்கு, நிர்வாகத் திறமை,தந்தையின் தந்தை, புத்திக்கூர்மை, நீதி சாஸ்திரம், வேதங்கள் பற்றிய கல்வி, ஊக வணிகம் பொதுக் கூட்டப் பேச்சு, முதலியவற்றையும் பற்றி அறியலாம். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு,  இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை,  தன்மை   மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள்  ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய  பலனைக் கூறலாம்

ஜாதக கட்டம் -  ஆறாம் கட்டம்  :

இது ஆறாம் வீடு ஆகும். இது ருண ரோக, சத்ரு ஸ்தானம் ஆகும். ருணம் என்றால் கடன், ரோக என்றால் நோய்  சத்ரு என்றால் எதிரி. எனவே  ஆறாம் கட்டம் மூலம் நோய், கடன், எதிரிகள் போன்றவற்றைப் பற்றி அறியலாம்.  தாய் மாமன், கவலைகள், தொழில், எதிரிகள் போன்றவற்றை பற்றியும், பொருள் இழப்பு, திருட்டு பயம், நீரினால் ஏற்படும் ஆபத்து, தீயவரின் நட்பு,, பிறரை நிந்தனை செய்தல், உயிர் ஆபத்து, சிறை வாசம், காயம் போன்றவற்றை இந்த கட்டத்தின் மூலம் அறியலாம். குறிக்கும். மேலும் முக்கியமாக வேலை, வேலையில் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றையும் இந்த கட்டத்தின் மூலம் அறியலாம். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு,  இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை,  தன்மை   மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள்  ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய  பலனைக் கூறலாம்

ஜாதக கட்டம்ஏழாம் கட்டம்  :

இது ஏழாம் வீடு ஆகும். இந்த இடம் களத்திர ஸ்தானம் என்று அழைக்கப்படும்.  ஏழாம் கட்டமானது திருமணம், வியாபாரம்,  போன்றவற்றை குறிப்பன. திருமணக் காலம், வாழ்க்கைத்துணை, வெகுமதிகள், வியாபாரக் கூட்டாளிகள்  கணவன் மனைவியின் போக சக்தி ஆகியவற்றை இந்த கட்டத்தின் மூலம் அறியலாம்.   இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு,  இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை,  தன்மை   மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள்  ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய  பலனைக் கூறலாம்

ஜாதக கட்டம்எட்டாம் கட்டம் :

இது எட்டாம் வீடு ஆகும். இந்த கட்டத்தை அஷ்டம ஸ்தானம் என்றும்,  ஆயுள் ஸ்தானம் என்றும் கூறுவார்கள்.  ஆயுள், அவமானம், கண்டம் போன்றவற்றை குறிக்கும். நீதிமன்ற வழக்குகள், காரிய தடங்கல்கள், மாங்கல்ய பலம், செலவுகளால் துன்பம், வீண் அலைச்சல் திடீர் அதிர்ஷ்டம், எதிர்பாராத பணம்,போன்றவற்றை இந்த கட்டத்தின் மூலம் அறியலாம். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு,  இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை,  தன்மை   மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள்  ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய  பலனைக் கூறலாம்.

ஜாதக கட்டம்ஒன்பதாம் கட்டம்  :

இது ஒன்பதாம் வீடு. பாக்கிய ஸ்தானம் என்று அழைக்கப்படும். ஒன்பதாம் கட்டம் தந்தையை குறிக்கும். தருமம், திருப்பணி, குருவின் உபதேசம், சந்ததி விருத்தி, ஆலய தரிசனங்கள், அதிர்ஷ்டம் ஆகியவற்றை இந்த கட்டத்தின் மூலம் அறியலாம். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு,  இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை,  தன்மை   மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள்  ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய  பலனைக் கூறலாம்.

ஜாதக கட்டம் -  பத்தாம் கட்டம்  :

இது பத்தாம் வீடு ஆகும். பத்தாம் கட்டம் கர்மஸ்தானம் ஆகும். கௌரவம், ஜீவனம், மரியாதை, கண்ணியம், புகழ், பதவி போன்றவற்றை குறிப்பது. ஒருவரின் தொழில் வலிமையை இந்த கட்டத்தின் மூலம் அறியலாம். முன்னோருக்குச் செய்யும் கடமை, தெய்வ வழிபாடு, புகழ், மானம், வெளிநாட்டுச் செய்திகள், ஆட்சி, அதிகாரம், அதிகாரம் மிக்க பதிவிகள் போன்றவற்றை இந்த கட்டத்தின் மூலம் அறியலாம். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு,  இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை,  தன்மை   மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள்  ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய  பலனைக் கூறலாம்.

ஜாதக கட்டம்பதினொன்றாம் கட்டம்  :

இது பதினோராம் வீடு ஆகும்.  இந்த கட்டம் லாப ஸ்தானம் என்றும் மூத்த சகோதர ஸ்தானம் என்றும் கூறப்படும்.பொதுத் தொண்டு புரிவோர், தனது திறமை மூலம் லானம் பெறுதல், வாகன வசதி, கௌரவம், சாஸ்திர அதிகாரம், வெளிநாட்டுப் பிரயாணம் ஆகியவற்றை இந்த கட்டத்தின் மூலம்  அறியலாம். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு,  இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை,  தன்மை   மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள்  ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய  பலனைக் கூறலாம்.

ஜாதக கட்டம் -  பன்னிரண்டாம் கட்டம்  :

இது பன்னிரண்டாம் வீடு ஆகும். இது விரய  ஸ்தானம் என்றும்  மோட்சஸ்தானம் என்றும் அழைக்கப்படும். இது அயன சயன போக ஸ்தானம் என்றும் கூறப்படும்.  விரயம், நஷ்டம், ஜெயில் தண்டனை, மறைமுக எதிரிகள் போன்றவற்றை குறிக்கும்.  இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு,  இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை,  தன்மை   மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள்  ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய  பலனைக் கூறலாம்.





8

9





10







 
12


13


1

2

3

4


5

6


7


8

9





10



11



 
12


13





1

2

3

4


5

6


7


8

9





10







 
12


13


1

2

3

4


5

6


7


8

9





10



11



 
12


13





1

2

3

4


5

6


7


8

9





10







 
12


13


1

2

3

4


5

6


7


8

9





10



11



 
12


13





1

2

3

4


5

6


7


8

9





10







 
12


13


1

2

3

4


5

6


7


8

9





10



11



 
12


13





1

2

3

4


5

6


7


8

9





10







 
12


13


1

2

3

4


5

6


7


8

9





10



11



 
12


13





1

2

3

4


5

6


7


8

9





10







 
12


13


1

2

3

4


5

6


7


8

9





10



11



 
12


13

தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஊடக அடக்குமுறைக்கு வன்மையான கண்டனங்கள்!

ஜனநாயகத்தின் குரலான #வலம்புரிப் #பத்திரிகையில் கைவைப்பதையோ ஆசிரியரை அச்சுறுத்துவதற்காக விசாரணைகளை முன்னெடுப்பதையோ வெறுமனே பார்த்துக்கொண்டிரு...