இக்கண்காட்சியை இக்கண்காட்சியில் சேதுபாஸ்கரா பள்ளியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், தாங்கள் சேகரித்து வைத்திருந்த 100க்கும் மேற்பட்ட பழங்கால வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் 13 முதல் 21ம் நூற்றாண்டு வரையிலான இந்திய நாணயங்களை காட்சிப்படுத்தி இருந்தனர்.
மேலும், இப்பள்ளியில் அஞ்சல் தலை சேகரிக்கும் பழக்கம் கொண்ட மாணவ-மாணவிகள், தங்களிடம் உள்ள கென்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, தான்சானியா, புருனே, ஐக்கிய அரபு எமிரேட் உள்பட பல்வேறு வெளிநாட்டு அஞ்சல் தலைகள் மற்றும் சிறப்பு வாய்ந்த இந்திய அஞ்சல் தலைகளையும் காட்சிப்படுத்தி இருந்தனர்.
மேலும், அப்பள்ளி மாணவர்கள் சேகரித்து வைத்திருந்த கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இந்திய மக்கள் பயன்படுத்திய தீப்பெட்டி அட்டைகளையும் காட்சிப்படுத்தி இருந்தனர்.
இவற்றை ஏராளமான மக்கள் மற்றும் பிற பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கண்டு ரசித்தனர். பின்னர் தலைமை போஸ்ட் மாஸ்டர் மோகன் பேசுகையில், அனைத்து பள்ளி மாணவ-மாணவிகளிடம் இதுபோன்ற பல்வேறு நாடுகளின் பழங்கால நாணயம், தபால்தலை சேகரிப்பை பெற்றோரும் ஆசிரியர்களும் ஊக்கப்படுத்த வேண்டும்.
இதன்மூலம் அவர்களின் ஞாபக சக்தி திறன் அதிகரித்து, பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதற்கு உதவும் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக