சனி, 28 மார்ச், 2026

யாழ்ப்பாணத்தில் வேலை செய்த வீட்டில் பணிப்பெண் கைவரிசை

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த பெண் வீட்டில் நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , களவாடப்பட்ட நகைகளையும் அப்பெண்ணிடம் இருந்து காவல்துறையினா் மீட்டுள்ளனர். 



கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு செல்வதனால் , வீட்டு வேலைக்கு என 54 வயதுடைய பெண்ணொருவரை பணிக்கு அமர்த்தியுள்ளனர்.

அந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்த 14 பவுண் நகை காணாமல் போயுள்ளது. அதனை அடுத்து யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தம்பதியினர் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா் , நேற்றைய தினம் வியாழக்கிழமை குறித்த வீட்டின் பணிப்பெண்ணை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த வீட்டில் இருந்து களவாடப்பட்ட 14 பவுண் நகைகளையும் காவல்துறையினா் மீட்டுள்ளனர். 

அதேவேளை , குறித்த பெண் முன்னர் தான் பணியாற்றிய வீட்டிலும் நகைகளை களவாடியதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளார். குறித்த பணிப்பெண்ணை காவல்துறையினா் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks