கரீபியன் கடலில் இருந்து இந்தியப் பெருங்கடல் வரை நீண்ட தூரம் இந்த கப்பலைப் பின்தொடர்ந்துச் சென்ற அமெரிக்க ராணுவம், வெற்றிகரமாக அதன் கட்டுப்பாட்டைத் தன்வசம் கொண்டு வந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து அமெரிக்கத் தரப்பு வெளியிட்ட அறிக்கையில், “அது தப்பியோடியது, நாங்கள் பின்தொடர்ந்தோம்…
எங்களை விட வேகமாக உங்களால் ஓட முடியாது, அதற்குள் உங்கள் எரிபொருள் தீர்ந்துவிடும்” என அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், வெனிசுலா மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில் முன்னெடுத்துள்ள ‘மரைடைம் குவாரன்டைன்’ (Maritime Quarantine) நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.
இக்கப்பல் சட்டவிரோதமாக எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டதாகவும், சர்வதேசப் பாதுகாப்பு விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் ‘மரைனேரா’ (Marinera) என்ற மற்றொரு ரஷ்யக் கொடி ஏந்திய கப்பல் அட்லாண்டிக் பகுதியில் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கை சர்வதேச எரிபொருள் சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதோடு, உலக நாடுகளுக்கிடையிலான அரசியல் உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக