வியாழன், 19 பிப்ரவரி, 2026

குடும்ப வன்முறைக்கு ஆப்கானிஸ்தானில் அங்கீகாரம்!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பின் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்ஸடா (Hibatullah Akhundzada) வெளியிட்டுள்ள புதிய சட்ட உத்தரவு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

குடும்பத் தகராறுகளின் போது கணவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளை உடல் ரீதியாகத் தாக்க இந்த புதிய சட்டம் அனுமதி அளிக்கிறது. 

தாக்குதலின் போது எலும்புகள் உடையக் கூடாது என்றும், வெளிப்படையாக ரத்தம் வரும் அளவிற்கோ அல்லது தழும்புகள் ஏற்படும் அளவிற்கோ காயங்கள் இருக்கக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விசித்திரமான மற்றும் சர்ச்சைக்குரிய சட்ட விதிமுறைகளுக்கு தாலிபான் தலைவர் முறைப்படி கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளார். 

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் பெண்களின் உரிமைகள் கடுமையாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும், பூங்காக்களுக்குச் செல்லவும் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது குடும்ப வன்முறையை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அனுமதிக்கும் இந்த சட்டம் மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது. 

இது பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதுடன், வீடுகளுக்குள்ளேயே அவர்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்குவதாக அமையும் என அஞ்சப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks