கிரீன்லாந்து மற்றும் மேற்கு அண்டார்டிகா பனிப்பாறைகள் உருகுவது கடல் மட்டத்தை ஆபத்தான நிலைக்கு உயர்த்தும்.பூமியின் “நுரையீரல்” என்று அழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகள் வறட்சி மற்றும் காடழிப்பு காரணமாகக் கார்பன் டை ஒக்சைடை உறிஞ்சுவதற்குப் பதிலாக அதை வெளியேற்றத் தொடங்கலாம்.
(Collapse). வட துருவப் பகுதிகளில் உறைந்துள்ள நிலம் உருகுவதால், அதனுள் புதைந்துள்ள நச்சு மெத்தேன் வாயு வளிமண்டலத்தில் கலந்து வெப்பத்தை இன்னும் அதிகரிப்பதனால் போரியல் பெர்மாஃப்ரோஸ்ட் (Boreal Permafrost) ஏற்படலாம்
“தற்போதைய முயற்சிகள் போதுமானவை அல்ல” என விஞ்ஞானிகள் மிகவும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனா்.
“பூமியின் பல அங்கங்கள் நாம் நம்பியதை விட மிக நெருக்கமாகச் சீர்குலைந்து வருகின்றன. தற்போதைய காலநிலை உறுதிமொழிகள் (Climate Commitments) இந்த அழிவைத் தடுக்கப் போதுமானதாக இல்லை.” என அவா்கள் சுட்டிக்காட்டியுள்ளனா். இந்த ஆய்வு, உலக நாடுகள் வெறும் பேச்சுவார்த்தைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல், உடனடியாகக் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
காலநிலை மாற்றம் என்பது இனி வெறும் எச்சரிக்கை அல்ல, அது இலங்கை போன்ற தீவு நாடுகளுக்கு ஒரு நேரடி இருத்தலியல் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. 2026-ஆம் ஆண்டின் தற்போதைய தரவுகள் மற்றும் விஞ்ஞானிகளின் கணிப்புகளின்படி, இலங்கைக்குக் கடல் மட்ட உயர்வு அபாயம் காணப்படுகின்றது.
இலங்கை ஒரு தீவு நாடு என்பதால், உலகளாவிய பனிப்பாறைகள் உருகுவது நேரடியாக நமது கரைகளைப் பாதிக்கிறது. அத்துடன் 2050-ஆம் ஆண்டளவில் இலங்கையின் கடல் மட்டம் 0.2 முதல் 0.6 மீற்றர் வரை உயரக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நடந்தால், சுமார் 6,110 ஹெக்டேர் கரையோர நிலப்பரப்பு கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது.
குறிப்பாக கொழும்பு – காலி இடையிலான கரையோரப் போக்குவரத்துப் பாதை, யாழ்ப்பாணத்தின் தாழ்நிலப் பகுதிகள் மற்றும் முல்லைத்தீவு, மன்னார் போன்ற பகுதிகள் அதிக பாதிப்புக்குள்ளாகும். கடல் மட்டம் உயர்வதால், கரையோர நன்னீர் கிணறுகளில் உப்பு நீர் கலந்து குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும். ஏற்கனவே வடக்கின் பல பகுதிகளில் இது ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
வெறும் கடல் மட்ட உயர்வு மட்டுமல்லாமல், வானிலை முறைகளும் (Weather Patterns) முற்றாக மாறி வருகின்றன . இலங்கையைத் தாக்கிய டிட்வா சூறாவளி காட்டியது போல, இனி வரும் காலங்களில் மிகக் குறுகிய நேரத்தில் பெய்யும் அதீத மழைவீழ்ச்சி மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகள் அதிகரிக்கும். வெப்பநிலை அதிகரிப்பால் (Heatwaves) தெங்கு மற்றும் நெற்செய்கை 2050-ஆம் ஆண்டளவில் 12% முதல் 17% வரை வீழ்ச்சியடையக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த அழிவைத் தடுக்க உலகளாவிய ரீதியில் பின்வரும் மாற்றங்கள் அவசியம் என விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.
வளர்ந்த நாடுகள் தங்களின் கார்பன் வெளியேற்றத்தை 2050-க்குள் பூச்சியமாக்க வேண்டும், இலங்கை போன்ற வளரும் நாடுகள் காலநிலை அனர்த்தங்களில் இருந்து மீள, வளர்ந்த நாடுகள் நிதி உதவிகளை வழங்க வேண்டும்.
(சர்வதேச நாணய நிதியம் தற்போது இதில் கவனம் செலுத்தி வருகிறது). பவளப்பாறைகள் மற்றும் சதுப்புநிலக் காடுகளை (Mangroves) பாதுகாப்பதன் மூலம் கடல் அலைகளின் வேகத்தைக் குறைக்க முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக