ஞாயிறு, 30 நவம்பர், 2025

திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பெடுத்தது!!

திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பை அடுத்து ஏற்பட் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சேருவல, சோமபுர, மாவில் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக்; கொண்ட 55 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (30) இதுவரை விமானம் மூலம் மீட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த இடர் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது. 

இவ்வாறு வெள்ளத்தில் இருந்து விமானம் ஊடாக மீட்கப்பட்டவர்கள் சீனா பே விமான படை தளத்திற்கும் சேருவல மகாவலி விளையாட்டு மைதானத்திற்கும் கொண்டுவரப்பட்டனர். 

 இதேவேளை மேலும் 22 பேர் விமானம் மூலம் மீட்க பட்டு வருகின்றதுடன் கடல் மற்றும் விமான மூலம் தொடர்ந்து மீட்கும் பணி இடம்பெற்று வருகின்றது தெரிவித்தார்.மாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு 13 இடங்களில் உடைப்பெடுத்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. 

 இதன்காரணமாக, குறித்த பகுதியில் உள்ள மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, சேருவில ரஜமஹா விகாரை ஒரு பாதுகாப்பான இடமாகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks