குறித்த இளைஞனிடம் இருந்து, சிறிய வாள் ஒன்றினையும் காவல்துறையினா் மீட்டிருந்தனர்.
இந்நிலையில், குறித்த இளைஞனின் நண்பர்கள் தொடர்பில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், இன்றைய தினம் திங்கட்கிழமை ஒரு இளைஞனை காவல் நிலையம் அழைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , அவரது கையடக்க தொலைபேசியையும் காவல்துறையினா் சோதனையிட்டுள்ளனர் .
அதன் போது வாட்ஸ் அப் செயலியில் , இன்னுமொரு இளைஞன் , கைத்துப்பாக்கி மற்றும் , தான் கைத்துப்பாக்கியுடன் காணப்படும் படத்தினை அனுப்பி இருந்தமையை காவல்துறையினா் கண்டறிந்திருந்தனர்.
அது தொடர்பில் இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா் கைத்துப்பாக்கியுடன் காணப்பட்ட இளைஞன் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக