வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

நூறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை !!

ஊழல் பற்றிய முறைப்பாடுகளை புலனாய்வு செய்யும் ஆணையத்தின் அறிவிப்பின்படி, சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கத் தவறிய 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், சுமாா் நூறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளார். 


சொத்து மற்றும் பொறுப்புச் சட்டத்தின்படி, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ஆம் திகதி வரை வைத்திருக்கும் அனைத்து சொத்துக்களின் விவரங்களையும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் சபாநாயகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். 


மேலும் , ஜூன் 30 ஆம் திகதிக்குள் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளைச் சமர்ப்பிக்கத் தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், ஜூலை 1 முதல் ஓகஸ்ட் 31 வரை சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளைச் சமர்ப்பிக்கத் தவறிய நாடா ளுமன்ற உறுப்பினர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் தொிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks