ஞாயிறு, 15 ஜூன், 2025

உத்தராகண்ட் மாநிலத்தின் குப்தகாசியில் உலங்குவானூா்தி விபத்தில் ஐவா் பலி!!

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் குப்தகாசியில் இருந்து விமானி உட்பட 7 பேருடன் கேதார்நாத்துக்கு சென்ற உலங்குவானூா்தி ஒன்று கவுரிகுந்த் வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் 5 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது . 

இன்று ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை 5.17 மணி அளவில் குப்தகாசியில் இருந்து கேதர்நாத்துக்கு புறப்பட்ட ஆரியன் ஏவியேஷன் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான குறித்த உலங்குவானூா்தி , மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதாக தொிவிக்கப்பட்டுள்ளது. 

 சம்பவ இடத்தில் மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது கடந்த 40 நாட்களில் மட்டும் உத்தராகண்ட் மாநிலத்தில் இந்த விபத்தோடு சேர்த்து 5-வது முறையாக உலங்குவானூா்தி விபத்தில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

நீர்கொழும்பு ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரிய இருவர் கைது!!

ஒரு கோடி ரூபாவை கப்பமாக கேட்டு, அதிலிருந்து 20 இலட்சம் ரூபாவை கப்பம் பெற்றதற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்...