இந்த விமானத்தில் சென்ற குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் விபத்தில் உயிரிழந்தார். 11 ஏ என்ற இருக்கையில் பயணித்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
விபத்தில் மருத்துவ விடுதி மாணவர்கள், அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் என மொத்தம் 270 பலியாகி விட்டனர். விமானம் தீப்பிடித்து எரிந்ததில் உடல்கள் கருகி இருப்பதால், டிஎன்ஏ(மரபணு) சோதனை மூலம் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இதுவரை டிஎன்ஏ பரிசோதனையில் 87 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் 41 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் விமானிகள் அறையின் குரல் பதிவுக் கருவி மீட்கப்பட்டிருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடைசி நேரத்தில் விமானத்திற்கு என்ன நேர்ந்தது என்பது, விமானிகளின் உரையாடல் மூலம் தெரிய வரும் என்பதால், இந்த குரல் பதிவுக் கருவி மீட்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் பார்க்கப்படுகிறது.
முன்னதாக, விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக