மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் செம்மணி மண்ணில் புதையுண்டுபோன உறவுகளுக்கு, நீதி வேண்டிய ''அணையா விளக்கு" என்ற பெயரில் 23,24,25 ஆகிய 3 நாட்களுக்கு இரவு பகலாக விளக்கு ஏற்றி அகிம்சை வழியில் உணவு தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் மதத்தலைவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஐக்கிய நாடுகள் உயர் அதிகாரியின் பார்வைக்கு, குறித்த பிரச்சினையின் ஆழத்தை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக