திங்கள், 23 ஜூன், 2025

யாழ்ப்பாணம் - செம்மணியில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட தமிழர்கள்!!

யாழ்ப்பாணம் - செம்மணியில் எலும்புக் கூடுகளாக மீட்கப்படும் உறவுகளுக்கு நீதி வேண்டி அணையா விளக்கு ஏற்றப்பட்டு முன்னெடுக்கப்படும் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. 
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் செம்மணி மண்ணில் புதையுண்டுபோன உறவுகளுக்கு, நீதி வேண்டிய ''அணையா விளக்கு" என்ற பெயரில் 23,24,25 ஆகிய 3 நாட்களுக்கு இரவு பகலாக விளக்கு ஏற்றி அகிம்சை வழியில் உணவு தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது. 

இந்தப் போராட்டத்தில் மதத்தலைவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஐக்கிய நாடுகள் உயர் அதிகாரியின் பார்வைக்கு, குறித்த பிரச்சினையின் ஆழத்தை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

யாழில் பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து சேதம்!!

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று மாலை திடீரென கடும் காற்றுடனான மழை வீழ்ச்சி பதிவானது. கடும் காற்றால் பல இடங்களில் மரங்கள் மரக்கிளைகள் முறிந்த...