திங்கள், 23 ஜூன், 2025

யாழில் பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து சேதம்!!

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று மாலை திடீரென கடும் காற்றுடனான மழை வீழ்ச்சி பதிவானது. கடும் காற்றால் பல இடங்களில் மரங்கள் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அத்துடன் மின்சாரமும் சில இடங்களில் தடைப்பட்டது. சுமார் ஒரு மணிநேரம் நீடித்த கடும் காற்றுடன் கூடிய மழையால் மக்கள் பெரும் சிரமங்களையும் பாதிப்புகளையும் எதிர்கொண்டனர். 

இதனிடையே நேற்றைய தினம் யாழ். நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியும் இடைநிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (23.06.2025) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

யாழில் பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து சேதம்!!

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று மாலை திடீரென கடும் காற்றுடனான மழை வீழ்ச்சி பதிவானது. கடும் காற்றால் பல இடங்களில் மரங்கள் மரக்கிளைகள் முறிந்த...