திங்கள், 16 ஜூன், 2025

இரான் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில் ஏற்பட்ட சேதம்.

இஸ்ரேல் முழுவதும் திங்கட்கிழமை அதிகாலையில் இரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில் இதுவரை நிகழ்ந்த தாக்குதலில் இது பெரிதாக இருக்கலாம் என, ஜெருசலேமில் உள்ள பிபிசியின் மத்திய கிழக்கு பிராந்திய பிரிவுக்கு தலைமை வகிக்கும் ஜோ ஃப்ளோட்டோ தெரிவிக்கிறார். 

இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவ் மற்றும் துறைமுக நகரமான ஹைஃபா ஆகியவற்றில் நடைபெற்ற தாக்குதல்களில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஹைஃபா நகரில் இந்த தாக்குதலால் குடியிருப்பு கட்டடமும் கார்களும் சேதமடைந்ததாக இஸ்ரேலின் அவசர சேவையான மேகன் டேவிட் அடோம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தாக்கியதில் இரான் ஆயுதப் படைகளின் உளவுப் பிரிவு தலைவர் கொல்லப்பட்ட சிறிது நேரத்தில் இரான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. ஜி7 மாநாட்டுக்காக அதன் உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் கனடாவில் கூடியுள்ள நிலையில், இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

நீர்கொழும்பு ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரிய இருவர் கைது!!

ஒரு கோடி ரூபாவை கப்பமாக கேட்டு, அதிலிருந்து 20 இலட்சம் ரூபாவை கப்பம் பெற்றதற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்...