புதன், 12 மார்ச், 2025

அனுராதபுரம் பெண் வைத்தியா் பாலியல் வன்புணர்வு – சந்தேக நபர் கைது

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியா் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர், கிரிபந்தலகே நிலந்த மதுர ரத்நாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் கல்னேவவில் உள்ள நவநகரப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், ,இராணுவத்திலிருந்து தப்பி வந்ததன் பின்னர் 34 வயது சந்தேக நபர் இதற்கு முன்னதாக தேரராக இருந்ததாகவும் கூறப்படுகிறது..

கடந்த திங்கட்கிழமை (10) இரவு பயிற்சி பெற்று வந்த 32 வயது மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி விட்டு தப்பி ஓடிய நபரை கைது செய்வதற்கு பல காவல்துறைக் குழுக்கள் விசாரணையைத் தொடங்கிய நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் , பாதிக்கப்பட்ட மருத்துவரிடமிருந்து திருடிய அலைபேசியைப் பயன்படுத்தி அவரைக் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவத்திற்கு முந்தைய நாள் போதைப்பொருள் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த அவர் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

தலைவருக்கு வீரச்சாவு அறிவிக்க வந்துவிட்டார்கள் துரோகிகள்.

தலைவருக்கு வீரச்சாவு அறிவித்த புலம்பெயர் போலி புலிகளே உங்களில் முதுகெலும்பு உள்ளவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் தலைவரின் பாதுகாப்பு அணி...