செவ்வாய், 4 மார்ச், 2025

இந்தியா முழுவதும் 1,000 பேரை பணிநீக்க ஓலா முடிவு .

மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி 1000 பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளது என்றும் நிறுவனத்தின் நஷ்டத்தை குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கையை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது என்றும் தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் கிருஷ்ணகிரியில் உற்பத்தி ஆலையை கொண்டுள்ளது. 

உற்பத்தி பிரிவில் தான் அதிக பணி நீக்கம் இருக்கும் என்று தெரிகிறது கடந்த ஆண்டும் இந்த நிறுவனம் 500 பேரை பணியிலிருந்து நீக்கி இருந்தது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 4000 விற்பனை மற்றும் சேவை நிலையங்கள் உள்ளன. கடந்த 2024 டிசம்பர் உடன் முடிந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர நஷ்டம் ரூபாய் 564 கோடியாக இருந்தது. அதற்கு முந்தைய காலாண்டில் நஷ்டம் ரூபாய் 376 கோடியாகும்.

தொடக்கத்தில் ஓலா மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை சிறப்பாக இருந்தது. ஆனால் வாகனத்தில் அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகள் முக்கியமாக பேட்டரி தீப்பற்றுவது, விற்பனைக்கு பிந்தைய சேவையில் வாடிக்கையாளரின் நன்மதிப்பை பெறாதது, போன்றவற்றால் நிறுவனம் பின்னடைவை சந்திக்க தொடங்கியது. நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்துக்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மீது 10,644 புகார்கள் வந்துள்ளன எனினும் இதில் 99.1 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

நேருக்கு நேர் மோதியதால் உக்ரைன் அதிபரை நீக்க அமெரிக்கா முயற்சி !!

ரஷ்யா உடனான போரில் உக்ரைனுக்கு 3 ஆண்டுகளாக அமெரிக்கா செய்த நிதியுதவிக்குப் பதிலாக, உக்ரைனில் உள்ள அரியவகை கனிம வளங்களின் உரிமையை காலவரையில்ல...