தெற்கு ஸ்பெயினில் ஒரு குக்கிராமத்தை நாசம் செய்துள்ள கொடூரமான காட்டுத்தீயை தீயணைப்பு வீரர்கள் அணைக்கப் போராடி வருகின்றனர்.
அல்மேரியா மாகாணத்தின் பெடார் பகுதியில் பன்னிரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், இறந்தவர்களில் சிலர் வாகனங்களில் கண்டெடுக்கப்பட்டனர் என்று பிராந்திய அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு, மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கலவரத்தில் ஈடுபட்ட கைதிகளே இந்த மரண அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அச்சுறுத்தலில் "உன்னை எங்காவது கண்டால் கொன்றுவிடுவோம். வெளியே சிக்கும் போது உன்னை விடமாட்டோம், கொன்றுவிடுவோம்" என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரிக்குஎதிராக விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலைத் தொடர்ந்து, அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
குறித்த அதிகாரி, டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அன்று ஏற்பட்ட அவசர நிலைமையைக் கருத்திற்கொண்டு கடமைக்குச் சமூகமளித்திருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரியைப் பாதுகாக்குமாறு, சக அதிகாரிகள் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலை வழங்க அமமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “அரசியல் கட்சியின் பரப்புரையில் ஏற்பட்ட துயர சம்பவத்திற்காக அரசின் நிரந்தர பணியிடங்களை இழப்பீடாக வழங்குவது ஏற்க முடியாத அணுகுமுறையாகும்.
இடைத்தேர்தலை மனதில் வைத்து இதுபோன்ற அரசுப் பணி நியமனங்களை வழங்குவது நிர்வாக மற்றும் சம வாய்ப்பு கொள்ளைக்கு எதிரானது” அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "கரூரில் தவெக தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதாக அறிவித்திருப்பது, அரசின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயலும், ஆபத்தான முன்னுதாரணமும் ஆகும்.
முறையான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடைபெற்ற தவெக தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் அரசின் முடிவு, அரசுப் பணியை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கும் இரவு பகலாக உழைத்து தயாராகி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரத்திற்கு அந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சியே முழுப் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணமும் உதவிகளும் வழங்க வேண்டும். ஆனால், அரசின் அதிகாரத்தையும் பொதுமக்களின் வரிப்பணத்தால் இயங்கும் நிர்வாகத்தையும் பயன்படுத்தி, வரவிருக்கும் இடைத்தேர்தலை மனதில் கொண்டு இதுபோன்ற அரசு பணி நியமனங்களை வழங்குவது நிர்வாக நெறிமுறைகளுக்கும் சம வாய்ப்புக் கொள்கைக்கும் எதிரானதாகும்.
யாழில் புற்றுநோய் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.
கொழும்புத்துறையைச் சேர்ந்த தங்கவடிவேலு பிரபாகரன் (வயது 42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாகச் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நோயின் வீரியம் தாங்க முடியாமல், கச்சேரிக்கு முன்பாக உள்ள ரயில் கடவைக்குச் சென்று, அநுராதபுரத்தில் இருந்து வந்த யாழ்ராணி ரயில் முன் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.
பின்னர் அவரது சடலமானது ரயிலில் எடுத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகக் கடத்தப்பட்ட 60,448-க்கும் அதிகமான கடல் அட்டைகளுடன் 26 சந்தேக நபர்கள் மற்றும் 12 டிங்கி படகுகள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
நேற்று (09) வடமத்திய கடற்படை கட்டளைக்குச் சொந்தமான 'இலங்கை கடற்படைக் கப்பல் கஜபா' நிறுவனத்தினால், மன்னார் சவுத்பார் கடல் மற்றும் கடற்கரைப் பகுதியை உள்ளடக்கியதாக நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான சில டிங்கி படகுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகக் கரைக்குக் கடத்தப்பட்டுக் கொண்டிருந்த குறித்த கடல் அட்டைத் தொகுதி கடற்படையினரால் கண்டறியப்பட்டு, சட்டத்தின் கீழ் பொறுப்பேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இங்கு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 26 சந்தேக நபர்களும் 21 முதல் 64 வயதுக்கு இடைப்பட்ட, மன்னார் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள், கடல் அட்டைத் தொகுதி மற்றும் 12 டிங்கி படகுகள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி மீனவப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஈராக்கில் ஊர்வலங்கள் திட்டமிடப்பட்ட நேரத்தை விட நீடித்ததால், அயதுல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வலம் தாமதமானது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில் இது நிகழ்ந்துள்ளது