வெள்ளி, 10 ஜூலை, 2026

கரூர் பலியான குடும்பங்களுக்கு நல உதவி வழங்க அமமுக எதிர்ப்பு!!

கரூர் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலை வழங்க அமமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “அரசியல் கட்சியின் பரப்புரையில் ஏற்பட்ட துயர சம்பவத்திற்காக அரசின் நிரந்தர பணியிடங்களை இழப்பீடாக வழங்குவது ஏற்க முடியாத அணுகுமுறையாகும்.

 இடைத்தேர்தலை மனதில் வைத்து இதுபோன்ற அரசுப் பணி நியமனங்களை வழங்குவது நிர்வாக மற்றும் சம வாய்ப்பு கொள்ளைக்கு எதிரானது” அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "கரூரில் தவெக தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதாக அறிவித்திருப்பது, அரசின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயலும், ஆபத்தான முன்னுதாரணமும் ஆகும். 

முறையான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடைபெற்ற தவெக தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் அரசின் முடிவு, அரசுப் பணியை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கும் இரவு பகலாக உழைத்து தயாராகி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரத்திற்கு அந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சியே முழுப் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணமும் உதவிகளும் வழங்க வேண்டும். ஆனால், அரசின் அதிகாரத்தையும் பொதுமக்களின் வரிப்பணத்தால் இயங்கும் நிர்வாகத்தையும் பயன்படுத்தி, வரவிருக்கும் இடைத்தேர்தலை மனதில் கொண்டு இதுபோன்ற அரசு பணி நியமனங்களை வழங்குவது நிர்வாக நெறிமுறைகளுக்கும் சம வாய்ப்புக் கொள்கைக்கும் எதிரானதாகும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks