வெள்ளி, 19 ஜூன், 2026

யாழில் போடப்பட்ட அர்ச்சுனா எம்.பி செருப்பு மாலை..!

யாழில் (Jaffna) தனது பாதகைக்கு செருப்பு மாலை அணிவித்ருந்த பதாகையை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அதனை கிழித்து தனது காரில் எடுத்து செல்லும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் இன்றைய தினம் (19.06.2026) வெள்ளிக்கிழமை அர்ச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை வைக்கப்பட்டு, அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.

 யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தகாத வார்த்தை பிரயோகங்கள் , சபை நாகரீகமின்றி செயற்படுதல், கூட்டங்களை குழப்புதல் போன்ற செயல்களில் அர்ச்சுனா இராமநாதன் செயற்பட்டு வருவதாக பரவலாக நேற்றைய தினம் இடம்பெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் மிக மோசமான வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டு இருந்தமை தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.

குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் சில மர்ம நபர்களால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சில தரப்பினர் விமர்சித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் , அர்ச்சுனாவின் 10 அடி உயர பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு , பிரதான வீதியில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், காலை 10 மணியளவில் பதாகை வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு தனது காரில் வந்த அர்ச்சுனா இராமநாதன், பதாகையை கிழித்தெடுத்து தனது காரில் எடுத்து சென்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks