தமிழ், மலையாளம், தெலுங்கு மட்டுமல்லாது உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளிலும் பாடியவர் ஜானகி. தன் கலை திறமைக்காக பல விருதுகளையும் பெற்றவர்.
'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் சேர்த்து 40,000 க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கும் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பல்லேபட்லா என்கிற கிராமத்தில் 1938-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி பிறந்தவர் எஸ்.ஜானகி. தனது 3 வயது முதல் பாடல்கள் பாடி வரும் இவர் 17 மொழிகளில் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
நடிகை ஸ்ரீதேவிக்கு மட்டும் 5 மொழிகளில் பின்னணி பாடியுள்ள இவர் 5 தலைமுறை கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.
சிங்கார வேலனே தேவா பாடலின் மூலம் ஜானகியின் புகழ் எங்கும் பரவியது. இந்த பாடலை தொடர்ந்து எக்கச்சக்கமான பாடல் வாய்ப்புகள் இவருக்கு வந்து குவிந்தது.
இளையராஜாவின் இசையில் எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார் ஜானகி. இளையராஜா, எம்.எஸ்.வி, ஏ.ஆர்.ரஹ்மான், அன்று தொடங்கி இன்றைய அனிருத் என தலைமுறை இசையமைப்பாளர் வரை பாடியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக