திங்கள், 27 ஜூலை, 2026

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள்- உச்சநீதிமன்றம் கண்டனம்!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடித் தாக்குதலுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அமைதியான முறையில் போராடுவதற்கு மாணவர்களுக்குக் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை எவ்விதக் கட்டுப்பாடுகளும் விதித்துத் தடுக்கக் கூடாது என்றும், வெறும் போராட்டங்களை மட்டுமே காரணம் காட்டி காவல்துறை தடியடி நடத்துவதை நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டம் என்ற பெயரில் சமூக விரோதச் செயல்கள் அல்லது வன்முறைகள் நிகழ்ந்தால் மட்டுமே காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதை விடுத்து மாணவர்கள் மீது அதிகப்படியான பலத்தைப் பிரயோகிப்பதை ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. 

டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் தொடர்பான அனைத்து மனுக்களையும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks