திங்கள், 27 ஜூலை, 2026

புத்தளம் பிக்கு கைது - தோளில் தொங்கிய ஹெரோயின் பை

ஹெரோயின் போதைப்பொருளுடன் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு - தனியார் பேருந்து நிலையத்தின் 04 ஆவது நடைமேடைக்கு அருகில் உள்ள மலசலக்கூடத்திற்கு அருகில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.


இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் புத்தளம் பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் பிக்கு ஆவார்.ஊழல் ஒழிப்பு சோதனைக் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை குழுவிற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பிக்குவைச் சோதனையிட்ட போது, அவரது தோளில் தொங்கவிடப்பட்டிருந்த பயணப் பையின் ஒளிபுகும் பொலித்தீனால் பொதியப்பட்டு காகிதத்தால் மூடப்பட்ட பொதி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பொதியைச் சோதித்தபோது, அதற்குள் போதைப்பொருள் இருப்பது தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks