கூட்டத்தினரிடம் பேசிய ரஷ்யத் தலைவர், உக்ரேனில் நடக்கும் போரில் போராடும் தனது வீரர்களுக்கு ஆதரவைத் திரட்டுவதற்காக இரண்டாம் உலகப் போரின் தியாகங்களை நினைவு கூர்ந்தார். "வெற்றியாளர்களின் தலைமுறையின் மாபெரும் சாதனை, இன்று சிறப்பு இராணுவ நடவடிக்கையின் பணிகளை மேற்கொள்ளும் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது," என்று அவர் கூறினார்.
உக்ரேன் மீதான தனது படையெடுப்பைக் குறிக்க கிரெம்ளின் விரும்பும் நயமான சொல்லாடலைப் பயன்படுத்தி அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
"முழு நேட்டோ கூட்டமைப்பின் ஆயுதங்கள் மற்றும் ஆதரவுடன் கூடிய ஒரு ஆக்கிரமிப்பு சக்திக்கு எதிராக அவர்கள் நிற்கிறார்கள்.
இருந்தபோதிலும், நமது நாயகர்கள் முன்னோக்கிச் செல்கிறார்கள். வெற்றி எப்போதுமே எங்களுடையதாக இருந்துள்ளது, எப்போதும் எங்களுடையதாகவே இருக்கும்."
இந்த நம்பிக்கையான பேச்சுக்கள் இருந்தபோதிலும், இந்த ஆண்டு அணிவகுப்பு ரஷ்ய அதிபரின் கடுமையான பலவீனத்தின் ஒரு தருணத்தை வெளிப்படுத்தியது.
சனிக்கிழமையன்று மாஸ்கோவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன், நகரம் முழுவதும் இணையச் சேவைகள் முடக்கப்பட்டிருந்தன.
உக்ரைன் தொலைதூர ஆளில்லா விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் கிரெம்ளினைத் தொடர்ந்து அச்சுறுத்தியதால், ஏற்பாட்டாளர்கள் அந்த நிகழ்வின் வழக்கமான கோலாகலங்களைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக