இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் வைத்தியசாலை ஊழியர்கள், மாநகர சபை தீயணைப்புப் படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
தீ பரவிய போதிலும், ஒரு தொகுதி மருந்துகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளன.
தற்போது சேதமடைந்த மருந்துகளின் விபரங்கள் மற்றும் அதன் பெறுமதி குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்தினால் நோயாளர்களுக்கான மருந்து விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது.
உள்நாட்டு மருந்து களஞ்சியம் மற்றும் கிளினிக் பகுதிகளில் உள்ள மருந்தகங்கள் பாதிக்கப்படாததால் வழக்கம் போல் மருந்து விநியோகம் தொடரும்.தட்டுப்பாட்டைத் தவிர்க்க, மத்திய சுகாதார அமைச்சு மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஊடாக மேலதிக மருந்துகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக