திங்கள், 11 மே, 2026

மலையகம் தொடர்ந்து மூடப்படும் சில பாடசாலைகள்...!

தெனியாய கல்வி வலயத்துக்குட்பட்ட நான்கு பாடசாலைகளை தொடர்ந்தும் மூடி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொட தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, தெனியாய மத்திய கல்லூரி, தெனியாய ராஜபக்ச மகா வித்தியாலயம், தெனியாய புனித மத்தேயு இரு மொழிக் கல்லூரி மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகியவை இன்று மற்றும் நாளை மூடப்பட்டிருக்கும் என என அவர் தெரிவித்துள்ளார். 

 இந்த நான்கு பாடசாலைகளும் 7 மற்றும் 8 ஆம் திகதிகளிலும் நோய் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாடசாலை மாணவர்களிடையே நோய் பரவுவது குறித்து சந்தேகம் கொண்டுள்ள சுகாதார அதிகாரிகள், இது Meningitis எனப்படும் மூளைக்காய்ச்சல் மூளைக் காய்ச்சலாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

 அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், தங்கள் பிள்ளைகளை எவ்வித தாமதமுமின்றி உடனடி மருத்துவ சிகிச்சைக்கு அனுப்புமாறு பெற்றோர்களுக்கு சிறப்பு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks