செவ்வாய், 12 மே, 2026

தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட விஜய் உத்தரவு!!

தமிழ்நாட்டில் 4,829 'டாஸ்மாக்' மதுகடைகள் இயங்கி வருகின்றன. மாதம் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது.

குறித்த அனைத்து கடைகளும் இரண்டு வாரங்களுக்குள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் தனது தேர்தல் வாக்குறுதியில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதையில்லா தமிழ்நாடு என்ற விடயங்களைத் தெரிவித்தார். இதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை அதிகாரிகளால் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தொடர்ச்சியாகச் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படும் மதுபான சாலைகள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் 717 மதுபானக் கடைகளை மூட முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் “தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. 

 அதில் வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks