ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

யாழ் புத்தூர் குளத்தில் இருந்து சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 


வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு முன்பாக உள்ள குளமொன்றில் சடலம் மிதப்பதாக அச்சுவேலி காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

 சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 50 வயது மதிக்க தக்கவர் எனவும் , அடையாளம் காண உதவுமாறும் காவல்துறையினா் கோரியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks