இதனால், கசகஸ்தானிலிருந்து வரும் எண்ணெய் வழங்கல் ஐரோப்பாவுக்கு பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இத்திட்டமிட்ட மூடல் குறிப்பாக ஜெர்மனிக்கு பெரிய சவாலாக இருக்கிறது. அங்கு உள்ள PCK ரிஃபைனரி (PCK refinery) செயல்படுத்தும் மொத்த மூல எண்ணெயில் சுமார் 17% இந்த குழாயின் மூலம் கிடைக்கிறது.
மேலும், அந்த ரிஃபைனரி போ்லின் நகரில் பயன்படுத்தப்படும் எரிபொருளில் சுமார் 90% வழங்குகிறது. எனவே, இந்த நடவடிக்கை ஜெர்மனியின் எரிபொருள் விநியோகத்திலும், போக்குவரத்து துறையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதனுடன், ஈரான் போரால் ஏற்பட்டுள்ள உலகளாவிய வழங்கல் சிக்கல்களும் ஐரோப்பாவின் ஆற்றல் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக