புதன், 15 ஏப்ரல், 2026

இராணுவ ஆட்சேர்ப்புக்காக பல்கலைக்கழக மாணவர்- ரஷ்யா

ரஷ்ய பல்கலைக்கழகங்களில் உள்ள உயர் அதிகாரிகள் அனைவரும் தற்போது மாணவர்களைப் போருக்குச் செல்லுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன. 

 பல்கலைக்கழகம் முழுவதும், ஆளில்லா விமானப் படைகளைப் பற்றிய சுவரொட்டிகள் எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு மாணவர்களின் அறிக்கைகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று விளக்கியுள்ளது.

குறித்த தகவல்களும், பெருகிவரும் பொது ஆதாரங்களும், மாணவர்களைத் தனது ஆளில்லா விமானப் படையில் சேர ஈர்ப்பதற்கும் அழுத்தம் கொடுப்பதற்கும் ரஷ்யா ஒரு பிரசாரத்தை அமைதியாகத் தீவிரப்படுத்தி வருவதைச் சுட்டிக்காட்டுகின்றன. 

இந்த நடவடிக்கை ரஷ்யாவின் கல்வி அமைப்பில் பதற்றங்களை உருவாக்கும் அபாயத்தைக் கொண்டிருப்பதுடன், உக்ரைனில் நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் போருக்கான ஆள்சேர்ப்பைத் தக்கவைப்பதில் மாஸ்கோ எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் சவால்களையும் வெளிப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்களை மையமாகக் கொண்ட இந்த நடவடிக்கை, மேலும் தீவிரமான ஆள்சேர்ப்பு உத்திகள் மீண்டும் அதிகரித்து வருவதற்கான பல அறிகுறிகளில் ஒன்றாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks