திங்கள், 30 மார்ச், 2026

தரைவழி அமெரிக்கப் படைகள் ‘சுறாக்களுக்கு இரை!!

வளைகுடாவில் எந்தவொரு தரைவழித் தாக்குதல்கள் மற்றும் சில தீவுகளை ஆக்கிரமிப்பதற்கும் எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ஈரானிய இராணுவம் மீண்டும் எச்சரிக்கை விடுத்தது. 

 அவ்வாறு அமெரிக்கப் படைகள் முயற்சித்தால், அவர்கள் “பாரசீக வளைகுடாவின் சுறாக்களுக்கு நல்ல உணவாகிவிடுவார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 ஈரானின் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளரும் பிரிகேடியர் ஜெனரலுமான இப்ராஹிம் ஸோல்ஃபகாரி, ஒரு காணொளி அறிக்கை மூலம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

எப்ஸ்டீன் வழக்கோடு ட்ரம்புக்கு உள்ள தொடர்புகள் காரணமாக, இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாடிடம் இருந்து அவர் அழுத்தத்தில் இருப்பதாகவும், மேலும் அவர் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 'கைப்பாவை' என்றும் ஸோல்ஃபகாரி விமர்சித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks