செவ்வாய், 31 மார்ச், 2026

இந்தியாவில் உணவகங்கள் மற்றும் விடுதிகள் மூடப்படும்!!

மாத இறுதியில் தொடங்கிய அமெரிக்க – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் சூழலால், சர்வதேச எரிசக்தி விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியா முழுவதும் உள்ள உணவகங்கள் மற்றும் விடுதிகள் போதிய சமையல் எரிவாயு (LPG) கிடைக்காமல் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈரானுடனான மோதல் காரணமாக, உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் எரிவாயு இறக்குமதி பெருமளவு குறைந்துள்ளது. 

தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசாங்கம் வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு விநியோகத்திற்கு முதலிடம் வழங்கியுள்ளது. இதனால் வணிக ரீதியிலான (Commercial) சிலிண்டர்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக உணவக அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

பெங்களூரு, சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் ஏற்கனவே 20 சதவீதத்திற்கும் அதிகமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எஞ்சிய உணவகங்கள் இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே போதுமான இருப்பைக் கொண்டுள்ளன. 

எரிபொருள் தட்டுப்பாட்டால் சமையல் எண்ணெய் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால், உணவக உரிமையாளர்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். 

இந்தத் திகதி வரை நிலைமை சீரடையாததால், மத்திய அரசு இதற்காகத் தனிக்குழுவை அமைத்துத் தீர்வு காண முயன்று வருகிறது. நிலைமை நீடித்தால் பொதுமக்களின் அன்றாட உணவுத் தேவைகள் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks