வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

பிரித்தானியா புதிய EU எல்லை விதிகள் !!

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதைத் (Brexit) தொடர்ந்து, பிரித்தானியப் பிரஜைகள் இப்போது “மூன்றாம் நாட்டுப் பிரஜைகளாக” (Third-country nationals) கருதப்படுகிறார்கள். இதனால், கடவுச்சீட்டில் முத்திரை குத்தும் பழைய முறைக்கு பதிலாக, டிஜிட்டல் முறையில் உயிரியளவியல் (Biometric) தரவுகளைப் பதிவு செய்யும் புதிய முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

தல்முறை ஐரோப்பாவிற்குள் நுழையும் போது, ஒவ்வொரு பயணிகளும் தங்களது விரல் அடையாளங்கள் (Fingerprints) மற்றும் முக அடையாளத்தை (Facial scan) பதிவு செய்ய வேண்டும். இதற்கு தலா 2 முதல் 5 நிமிடங்கள் வரை ஆகலாம். ஏற்கனவே ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் விமான நிலையங்களில் 2 முதல் 3 மணிநேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

கோடைகால விடுமுறை போன்ற நெரிசலான காலங்களில் இது 5 மணிநேரம் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. டோவர் (Dover) துறைமுகம், யூரோடனல் (Eurotunnel) மற்றும் யூரோஸ்டார் (Eurostar) நிலையங்களில் பிரெஞ்சு எல்லைச் சோதனைகள் பிரித்தானியாவிலேயே நடைபெறுவதால், அங்கேயே வாகன நெரிசல் மற்றும் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

இந்த முறை 2025 ஒக்டோபர் 12 முதல் கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட போதும் மு 2026 ஏப்ரல் 10 முதல் அனைத்து எல்லைகளிலும் இது கட்டாயமாக்கப்படும். விமானம் அல்லது கப்பல் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 3 மணிநேரத்திற்கு முன்னதாகவே செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். 

ஒருமுறை பதிவு செய்யப்பட்ட உயிரியளவியல் தரவுகள் 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன் பிறகு அடுத்தடுத்த பயணங்களின் போது வேகம் அதிகரிக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தில் வதிவிட அனுமதி (Residency permit) உள்ளவர்கள் அல்லது ஐரோப்பிய கடவுச்சீட்டு (EU Passport) வைத்திருப்பவர்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது. புதிய ‘Entry-Exit’ (EES) முறைக்கு மேலதிகமாக, வரும் காலங்களில் பிரித்தானியர்கள் ஐரோப்பாவிற்குள் நுழைய ETIAS எனப்படும் புதிய அனுமதியைப் பெற வேண்டியிருக்கும்.

ETIAS (European Travel Information and Authorisation System) என்பது ஒரு விசா அல்ல, ஆனால் அமெரிக்காவின் ‘ESTA’ போன்ற ஒரு டிஜிட்டல் பயண அனுமதி ஆகும். இது 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முழுமையாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 18 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் 7 யூரோ (€7) கட்டணம் செலுத்த வேண்டும். (குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இலவசம்). ஒருமுறை அனுமதி பெற்றால் அது 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். 

இணையம் மூலம் அல்லது கைபேசி செயலி வழியாக 10 முதல் 20 நிமிடங்களில் விண்ணப்பிக்கலாம். தரைவழியாக கார் அல்லது பேருந்துகளில் செல்பவர்கள் EES விதிகளால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.உயிரியளவியல் (Fingerprints & Photo) பதிவுக்காக பயணிகள் வாகனத்திலிருந்து இறங்கி ஒரு ‘கியோஸ்க்’ (Kiosk) இயந்திரத்தில் தரவுகளைப் பதிவு செய்ய வேண்டியிருக்கும். டோவர் துறைமுகத்தில் தாமதம் ஏற்பட்டால், அது சுற்றியுள்ள நெடுஞ்சாலைகளில் (M20, M2) வாகன நெரிசலை உருவாக்கும். எனவே, பயணத்திற்கு முன் ‘Operation Brock’ போன்ற போக்குவரத்து மேலாண்மை அறிவிப்புகளைச் சரிபார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks