புதன், 11 பிப்ரவரி, 2026

தோட்டத் தொழிலாளர்களை சந்தித்த அநுர!

தோட்டத் தொழிலாளர்கள் சிலரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று காலை சந்தித்துள்ளார். நானுஓயா - ரதல்ல குறுக்கு வீதியில் வைத்து இந்த திடீர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


ஜனாதிபதி அவ்விடத்திற்கு வருகை தந்த போது, தோட்டத் தொழிலாளர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றதுடன், தமது சம்பளத்தை அதிகரித்தமைக்காக நன்றியையும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தோட்டத் தொழிலாளர்கள், "எமது சம்பளத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல், எமது பிரச்சினைகளை நேரில் வந்து கேட்டறிந்த ஒரே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள்தான்" எனத் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks