ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

கொழும்பு மற்றும் களுத்துறையில் துப்பாக்கிச் சூடு!!

கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் உள்ள அழகு கலை நிலையம் (Beauty Parlour) ஒன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில்: ஒருவர் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த நால்வர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடியமங்கட பகுதியில் இரவு 7.50 மணியளவில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 32 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு சம்பவங்கள் தொடர்பிலும் காவற்தறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான மோதலா அல்லது தனிப்பட்ட பகையா என்பது குறித்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லைகளுத்துறை - வஸ்கடுவ, வாடியமங்கட பகுதியில் நேற்று (15) இரவு, துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று பண்டாரகம பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 இந்த மோட்டார் சைக்கிள் இன்று (15) காலை பண்டாரகம - ஹொரன வீதியின் கொத்தலாவல சந்திக்கு அருகிலுள்ள வயல்வெளிக்கு அருகில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன் மீது கறுப்பு நிறத்தை ஒத்த தலைக்கவசம் ஒன்றும், மோட்டார் சைக்கிளுக்கு அருகில் தரையில் கறுப்பு நிறத் துணியால் தைக்கப்பட்ட புதிய ஜாக்கெட் ஒன்றையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். 

அதற்கு சில அடிகள் தூரத்தில் உள்ள வயல்வெளிக்கு அருகில், மஞ்சள் நிற அரிசிப் பையில் இடப்பட்டிருந்த சப்பாத்து ஜோடி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. குற்றத் தடயவியல் அதிகாரிகள் மற்றும் கைவிரல் அடையாளப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனைகளை முன்னெடுத்தனர். மோட்டார் சைக்கிள் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks