இலங்கையில் விடுதலைப் புலிகள் ஒரு தனி தேசத்திற்கே உரிய (De-facto State) அனைத்துக் கட்டமைப்புகளையும் கொண்டிருந்தனர்.
குறிப்பாக, அவர்கள் உருவாக்கிய ‘தமிழீழ வைப்பகம்’ (Bank of Tamil Eelam) மற்றும் அவர்களின் தன்னாட்சிப் பொருளாதாரம் உலக வங்கியியல் ஒழுங்கிற்கு (Central Banking System) பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது.
இன்று உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளின் மத்திய வங்கிகள் ஒரு குறிப்பிட்ட வங்கியியல் முறையின் கீழேயே (Central Banking System) இயங்குகின்றன. உலக வர்த்தகம் என்பது Petro-Dollar எனப்படும் அமெரிக்க டாலரிலேயே நடக்க வேண்டும்.
யாராவது ஒரு தலைவர் தனது நாட்டு வளங்களை டாலருக்கு மாற்றாகத் தங்கம் (Gold Standard) அல்லது வேறு ஒரு பொது நாணயத்தில் வர்த்தகம் செய்ய முயன்றால், அவர் உலக வங்கியியல் கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறார்.
அவர்கள் உடனடியாக ‘மனிதகுல எதிரியாக’ ஊடகங்கள் மூலமாக சித்தரிக்கப்படுவார்கள்.
டாலருக்கு மிரட்டலாகவும் அல்லது தடையாக யாராவது இருந்தாலும் அவர்கள் ‘சர்வாதிகாரிகள்’ என்றும் ‘பயங்கரவாதிகள்’ என்றும் முத்திரை குத்தப்பட்டு அழிக்கப்படுவார்கள்.
ஈராக்கிய எண்ணெயை டாலருக்குப் பதிலாக ‘யூரோ’ (Euro) நாணயத்தில் விற்பனை செய்யத் துணிந்தார் சதாம். விளைவு? பேரழிவு ஆயுதங்கள் (WMD) வைத்திருப்பதாகப் பொய் சொல்லி ஈராக் தரைமட்டமாக்கப்பட்டது.
ஆப்பிரிக்கக் கண்டம் முழுமைக்கும் தங்கம் மற்றும் வெள்ளியை அடிப்படையாகக் கொண்ட Gold Dinar என்ற பொது நாணயத்தைக் கொண்டுவர முயன்றார் கடாபி. இது டாலரின் உலகளாவிய ஆதிக்கத்திற்குச் சவப்பெட்டி அடிக்கும் செயல் என்பதால், லிபியா சிதைக்கப்பட்டு அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
வெனிசுலாவின் அபரிமிதமான எண்ணெய் வளங்களை அமெரிக்க டாலர் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து,
‘பெட்ரோ’ (Petro) போன்ற மாற்று வழிகளைத் தேடுவதால், இன்று மதுரோ குறிவைக்கப்பட்டுள்ளார்.
அவர் விரைவில் தூக்கிலிடப்படலாம் அல்லது மின்சாரக்கதிர் ஏற்றப்படலாம் என்ற அச்சுறுத்தல் நீடிக்கிறது.
விடுதலைப் புலிகள் உருவாக்கிய தமிழீழ வைப்பகம் (Bank of Tamil Eelam) உலக வங்கியின் கட்டுப்பாடுகள் இன்றி இயங்கியது.
டாலரின் ஆதிக்கத்தைப் புறக்கணித்துத் தமக்கென ஒரு நாணய முறையையோ அல்லது பண்டமாற்று முறையையோ புலிகள் முன்னெடுத்திருந்தால், அது ஆசியாவில் ஒரு ‘பொருளாதார முன்னுதாரணமாக’ மாறிவிடும் என சர்வதேச சக்திகள் அஞ்சின.
குறிப்பாக, மத்திய வங்கிகளின் (Central Banks) வட்டி மற்றும் கடன் பிடிக்குள் சிக்காத ஒரு நிர்வாகம் உருவாவதை டாலர் ஏகாதிபத்தியம் ஒருபோதும் விரும்பாது.
டாலருக்கு அச்சுறுத்தலாக வளரும் எந்த ஒரு ‘நிழல் பொருளாதாரத்தையும்’ முளையிலேயே கிள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது.
சிங்கள ராணுவம் மட்டும் புலிகளை அழித்தது என்பது வெறும் புறத்தோற்றம் மட்டுமே.
உண்மை என்னவென்றால், Rothschilds வங்கியியல் முறையை மீறிச் செயல்பட்ட ஒரு அமைப்பை வேரோடு பிடுங்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது.
அதனாலேயே அமெரிக்காவின் உத்தரவின் பேரில், ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியுடன், இந்தியா, சீனா, பாகிஸ்தான், பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ஆயுதம், தொழில்நுட்பம் மற்றும் இராணுவ உதவிகளை வழங்கி விடுதலைப் புலிகளை அழித்தொழித்தனர்.
விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு உண்மையான காரணம் அவர்களின் ராணுவ பலவீனம் அல்ல, அவர்களின் பொருளாதாரத் தன்னுரிமை. ‘தமிழீழ வைப்பகம்’ என்ற அமைப்பு, சர்வதேச வங்கி மேலாதிக்கத்திற்கு (Rothschilds Control) எதிராக டாலர் கட்டமைப்பிற்கு வெளியே இயங்கியதே புலிகளின் அழிவுக்கு முக்கிய காரணியாக அமைந்தது.
யாரெல்லாம் டாலரின் ஆதிக்கத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறார்களோ, அவர்கள் அனைவரும் அழித்து ஒழிக்கப்படுவார்கள் என்பதே தற்போதைய கசப்பான உலக நியதி.
மதுரோவின் தற்போதைய நிலைமையும் இதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.
அமெரிக்கா எப்போதுமே தங்களின் ‘டாலர்’ நிலைத்தன்மைக்காக (Stability) எந்தவொரு இனத்தையும் காவு கொடுக்கத் தயங்காது.
எங்கள் இனத்தின் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்காததற்குக் காரணம்,
நீதிபதிகளே குற்றவாளிகளுடன் கைகோர்த்திருப்பதுதான்.
விடுதலைப் புலிகளின் ‘தமிழீழ வைப்பகம்’ முதல் மதுரோவின் ‘பெட்ரோ’ வர்த்தகம் வரை அனைத்தும் இந்த அதிகாரப் போட்டிக்கு இரையானவையே.
-முகிந்தன் துரைராஜசிங்கம்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக