வேளாண்மைக்காக நிலத்தை தயார் செய்யும் போது குண்டுகளை அவதானித்த காணி உரிமையாளர் தமக்கு தகவல் அளித்ததாக தெரிவித்த காவல்துறையினா் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட உத்தரவின் பேரில், காவல்துறை விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழப்பு பிரிவு குறித்த இடத்தை ஆய்வு செய்தபோது இவ்வாறு மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொிவித்துள்ளனா்.
மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் குறித்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனா்.
நீதிமன்ற உத்தரவின் பேரில், காவல்துறை விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினால் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் செயலிழக்க செய்யப்படவுள்ள நிலையில் சம்பவம் குறித்து பளை காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக