அரசர் அடெடோகுன்னுக்கு அரசியல் அதிகாரம் இல்லை. அவர் பெரும்பாலும் சச்சரவுகளை தீர்ப்பது மற்றும் சடங்குகளை செய்வதில் மட்டுமே ஈடுபடுகிறார். கற்பிப்பது போன்ற அவரின் தினசரி பணிகள் மன்னருக்கு உண்டான மரியாதைக்கு கீழானதாக பார்க்கப்படுகிறது.
"முதல் முறை நான் வகுப்புக்கு சென்றபோது எனக்கு முன்பு பாடம் எடுத்தவரின் மகன் என்னிடம் வந்து, 'கபியேசி, நீங்கள் செய்வது சரியில்லை,' என்று கூறினார். நான் அவரை வெளியேற்றி விட்டேன். கடவுளின் மகிமையால் நான் அப்போது கற்பித்த குழந்தைகளுள் ஓரிரு மாணவர்கள் தற்போது முனைவர் பட்டப் படிப்பை முடித்துள்ளனர்." என்கிறார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக