யாழ் செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் கண்டறியப்பட்டு அகழ்வு மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கை சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வதேச நியமங்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் புதைகுழி அகழ்வு நடவடிக்கையில் வெளிப்படைதன்மையை உறுதிசெய்யுமாறு கோரியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் .
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிட விரும்புவோர் , கண்காணிக்க விரும்புவோர் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் விண்ணப்பம் செய்யுமாறு நீதவான் தெரிவித்துள்ளார். செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை வரையில் இடம்பெற்ற அகழ்வு பணிகளின் போது 19 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் , இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 26ஆம் திகதியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் செம்மணி புதைகுழி தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிட விரும்புவோர் , கண்காணிக்க விரும்புவோர் சட்டத்தரணிகள் ஊடாக உரிய முறையில் நீதிமன்றை நாடி , அதற்கான அனுமதிகளை பெற முடியுமாம் என நீதவான் தெரிவித்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக