ஞாயிறு, 8 ஜூன், 2025

டிரம்ப் மஸ்க் மோதல் மிகப்பெரிய நெருக்கடியில் நாசா - 40 திட்டங்கள்

டொனால்ட் டிரம்புக்கும் ஈலோன் மஸ்கிற்கும் இடையிலான மோதலின் எதிரொலி, நாசாவின் பட்ஜெட் மற்றும் அதன் எதிர்காலம் குறித்த பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. டிரம்பின் "பிக், பியூட்டிஃபுல்" மசோதா தொடர்பாக, அவருக்கும் ஈலோன் மஸ்க்கிற்கும் இடையிலான கருத்து வேறுபாடு மோதலாக மாறியுள்ளது. 

 நாசா தனது புதிய பட்ஜெட் திட்டத்தை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளது. இதில் அறிவியல் திட்டங்களுக்கான நிதி கிட்டத்தட்ட பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது மேம்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் அல்லது ஏற்கனவே விண்வெளியில் இருக்கும் அறிவியல் பயணங்கள் என கிட்டத்தட்ட நாற்பது திட்டங்கள் நிறுத்தப்பட உள்ளன. ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் உடனான அரசு ஒப்பந்தங்கள் திரும்பப் பெறப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பணியாளர்கள் மற்றும் பொருட்களை வழங்குவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட்களை நாசா நம்பியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட்டைப் பயன்படுத்தி சந்திரனுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. 

 ஓபன் யுனிவர்சிட்டியின் விண்வெளி விஞ்ஞானி முனைவர் சிமியோன் பார்பர், தற்போதைய நிச்சயமற்ற தன்மையின் தாக்கம் மனித விண்வெளித் திட்டத்தில் "எதிர்மறையான தாக்கத்தை" ஏற்படுத்தி வருவதாகக் கூறினார். "கடந்த வாரத்தில் நாம் பார்த்த வியக்கத்தக்க வார்த்தை பரிமாற்றங்கள், திடீர் முடிவுகள் மற்றும் யூ-டர்ன்கள், நமது லட்சியங்களைக் கட்டியெழுப்பும் அடித்தளத்தையே குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. 

 விண்வெளி அறிவியல் மற்றும் ஆய்வு போன்றவை, நீண்ட கால திட்டமிடல், அரசாங்கம், நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பைச் சார்ந்துள்ளது" என்று அவர் கூறுகிறார்.அமெரிக்க அதிபருக்கும் ஈலோன் மஸ்க்குக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தவிர, நாசாவின் பட்ஜெட்டை குறைக்குமாறு வெள்ளை மாளிகையில் இருந்து வரும் அழுத்தமும் கவலைகளை அதிகரித்துள்ளன. 

 செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் 100 மில்லியன் டாலர் திட்டத்தைத் தவிர, நாசாவின் அனைத்து திட்டங்கள் மற்றும் துறைகளுக்கான செலவினங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

நீர்கொழும்பு ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரிய இருவர் கைது!!

ஒரு கோடி ரூபாவை கப்பமாக கேட்டு, அதிலிருந்து 20 இலட்சம் ரூபாவை கப்பம் பெற்றதற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்...