செவ்வாய், 1 ஏப்ரல், 2025

படகுகளை இழந்த மீனவர்களுக்கு என்ன நிவாரணம்-கனிமொழி

தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி பேசினார். அப்போது; இலங்கை அரசால் கைப்பற்றப்பட்ட 200 படகுகள் நாட்டுடைமையாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? 

மீனவர்களுக்கு நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை ஒன்றிய அரசு விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு எம்.பி.; தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என இலங்கை அதிபர் கூறினார், 

ஆனால் உண்மை நிலை வேறு மாதிரியாக உள்ளது. மீனவர்கள் விவகாரத்தில் ஒரு நிரந்தர தீர்வை எட்டும் வகையில் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். 

இந்த தீர்மானத்தின் மீது பதிலளித்த ஒன்றிய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதால்தான் அவர்களது உடைமைகளை இலங்கை அரசு பறிமுதல் செய்கிறது எனக் குறிப்பிட்டார். இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் லோக்சபாவில் இருந்து தமிழக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

டிரம்பிற்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் பேரணி !!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு சீனா பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையன்று பங்குச் சந்தை ...