இலங்கைக்கு வழங்கப்பட்ட ஜிஎஸபி வரிச் சலுகையின் மீளாய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கை செல்லவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (15) நாடாளுமன்றத்தில் இதனைத் தொிவித்துள்ளாா்.
மேலும் சைப்ரஸில் உள்ள இலங்கை தூதரகம் மிக விரைவில் திறக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் இதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தொிவித்துள்ளாா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக