திங்கள், 31 மார்ச், 2025

சற்றுமுன்னர் சிஐடியில் முன்னிலையான டிரான் அலஸ்!!

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CID) முன்னிலையாகியுள்ளார். 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கொழும்பு குற்றப்பிரிவில் (CCD) பணியாற்றிய ஒரு காவல்துறை உத்தியோகத்தர் இறந்தமை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று (31) காலை முன்னியலையாகினார். 

இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய முன்னாள் அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக நேற்று (30) குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.வழக்கு தொடர்பான விபரங்கள் முன்னாள் அமைச்சருக்குத் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக அந்த அதிகாரி மேலும் சுட்டிக்காட்டினார்.

டிசம்பர் 31, 2023 அன்று, மாத்தறை வெலிகமவின் பெலேனா பகுதியில் உள்ள W15 ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த ஒரு காவல்துறை உத்தியோகத்தர் உயிரிழந்திருநதார். இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

காசா ரஃபாவில் ஐ.டி.எஃப் தரைவழி நடவடிக்கையைத் தொடங்கியது

ஐ.டி.எஃப் துருப்புக்கள் ரஃபாவில் தரைவழி நடவடிக்கையைத் தொடங்கின, அதனுடன் பல மணி நேரங்கள் தொடர்ந்த ஏராளமான வான்வழித் தாக்குதல்களும் நடந்தன. அ...