பயங்கரவாத தடைச் சட்டத்தினை நிறுத்தக்கோரியும் அத்தியாவசிய பொருட்கள் மீதான வற் வரியை நீக்க கோரியும் யாழில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்றைய தினம் (11.03.2025) மக்கள் பேரவை இயக்கத்தின் எற்பாட்டில் யாழ் (Jaffna). மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.
இந்த கையெழுத்து போராட்டத்தில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.இந்த போராட்டத்தில் மக்கள் பேரவை இயக்கத்தின் உறுப்பினர்களான வசந்த முதலிகே, ராஜ்குமார் ரஜீவ்காந், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுசன், பௌத்த தேரர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர்கள், மக்கள் பேரவை இயக்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக